சனி, 4 ஜூலை, 2015

மனதால் உயர்வோம்
♡ வெளியுலக அறிவுக்கு துணை நிற்பது விஞ்ஞானம்.உள் உலகமாகிய உண்மைக்கு வழிகாட்டுவது மெய்ஞானம்.
♤ திருமந்திரத்தில் அன்பே சிவம் என்கிறார் திருமூலர்.அறிவான தெய்வமே என்று இறைவனைக் குறிப்பிடுகிறார் தாயுமானவர்.அன்பையும் அறிவையும் நாம் ஒவ்வொருவரும் பெற முயற்சிக்க வேண்டும்.
♡ இந்த உலகை விட்டுச் செல்லும் முன்"என்னிடம் பாவமே இல்லை'என்று சொல்லும் நிலையை அடைய வேண்டும்.
♤ மனிதன் மனதால் உயர்நிலையை அடைய வேண்டும்.அப்போது மனிதன் வாழ்க்கையை நடத்திச் செல்வது சிரமமாகவே இருக்காது.
♡ மனதை கீழ்நிலைக்குச் செலுத்தாமல் மேல்நிலைக்கு உயர்த்தினால் தெய்வநிலையை அடையலாம். கடவுளின் திருவடியை கெட்டியாக பிடித்துக் கொண்டால் தான் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
♤ காஞ்சி மஹா பெரியவா

ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர்

{இச் செய்தி கொஞ்சம் பெரியது தான் இருந்தாலும் முழுமையாக படிக்கவும் நண்பர்களே
}
ஆன்மிக உலகில் விடை தெரியாத புதிர்கள் ஏராளம் இருக்கத்தான் செய்கின்றன.செந்தனலைக் கக்கி வானத்தில் வலம் வரும் நம்மால் தினமும் வணங்கப்படும் நவகோள்களுள் ஒன்றான சூரியனின் வெப்பத்தையே தாங்க முடியவில்லை.கோடைக்காலத்தில் குமுறிப் போகிறோம்.ஆனால் மெய்ஞானமும் விஞ்ஞானமும் என்ன சொல்கிறது தெரியுமா?சூரியனையும் தாண்டிய பரவெளியில் சூரியனை விடவும் அதிக சக்தி வாய்ந்த நட்சத்திரங்கள் ஏராளமாக இருக்கின்றனவாம்.
ஆன்மிகத்தை அறிவதே ஆனந்தம்.ஆராய்ச்சியில் இறங்கினால் ஆண்டுகள் போதாது.பரவெளியில் புதைந்து கிடக்கும் பிரமாண்ட ரகசியங்களைப் போன்றது தான் சித்தர்கள் வாழ்க்கையும்.மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரரும் ஷீரடி அவதார புருஷர் ஸ்ரீசாய்பாபாவும் பல ஆண்டுகளுக்கு முன்னேயே சமாதி கொண்டிருந்தாலும் அவர்களை நம்பித் தொழும் பக்தர்களுக்கு இன்றைக்கும் தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்கள்.இது போன்ற சித்த புருஷர்களுள் ஒருவர்தான் ஒட்டன்சத்திரம் ராமசாமி சித்தர்.1980-களின் துவக்கத்தில் இவர் சமாதி கொண்டார்.ஒட்டன்சத்திரத்தில் நாகனம்பட்டி ரோட்டில் இவரது ஜீவ சமாதி இருக்கிறது.சுமார் 550 வருடங்கள் இவர் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.இவர் சமாதி ஆகி சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலும்.இன்றைக்கும் கேராளவில் ஒரு குக்கிராமத்தில் ராமசாமி சித்தரைத் தரிசித்த பழநிவாசிகள் இருக்கிறார்கள்.ஒட்டன்சத்திரத்துல எல்லா பயலுகளும் நல்லா இருக்கானுங்களா?என்கிற விசாரிப்பைக் கேட்ட பக்தர்களுக்கும் உண்டு.திண்டுக்கல் பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம்.அதாவது திண்டுக்கலில் இருந்தும் பழநியில் இருந்தும் ஒட்டன்சத்திரம் 30 கி.மீ. தொலைவில் மையமாக இருக்கிறது.தமிழ்நாட்டில் பல ஊர்களுக்குக் காய்கறிகளை சப்ளை செய்து கொண்டிருக்கும் ஊர் இது. வர்த்தகர்கள் அதிகம்.எல்லாம் இருந்தும் ஒரே ஒரு குறை...ஒட்டன்சத்திரத்தில் உள்ள ராமசாமி சித்தரின் சமாதி கவனிப்பார் இல்லாமல் முறையான வழிபாடு இல்லாமல் காணப்படுவது பல பக்தர்களின் மனதைப் பிசைகிறது.இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்தர்கள் எப்போதாவது இங்கே வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.மற்றபடி இங்கே எந்த நடமாட்டமும் இருக்காது.எண்ணற்ற அற்புதங்களையும் ஸித்து விளையாட்டுகளையும் நிகழ்த்திய ஒரு மகான் ஒட்டன்சத்திரத்தில் குடி கொண்டிருக்கிறார் என்பது உள்ளூர்க்காரர்கள் பலருக்குக்கூடத் தெரியவில்லை.போகட்டும்...வேளை வரும்போது எல்லாமே வெளிப்படும் என்று நம்புவோம்.
ராமசாமி சித்தர் எங்கே பிறந்தார் பெற்றோர் யார்.எப்படி ஒட்டன்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே குடி கொண்டார் என்பது போன்ற தகவல்கள் தெரியவில்லை.தான் ஒட்டன் சத்திரத்தில் வாழ்ந்த காலத்தில் மெயின் ரோட்டில் உள்ள சகுந்தலா பாத்திரக் கடை வாசலில் வசித்து வந்திருக்கிறார்.இதற்கு அருகில் உள்ள ஒரு அசைவ உணவகத்தில் இருந்து அவ்வப்போது டீயும் பிரியாணி பொட்டலமும் வந்துவிடும்.சித்தர்கள் பிரியாணி சாப்பிடுவாரா என்று தோன்றலாம் அவர்கள் அசைவம் சாப்பிடுவது என்பது அதை ரசித்து உண்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.தன்னை நாடிவரும் பக்தர்களின் பிணியைத் தீர்ப்பதற்கு.வருபவர்களிடமே பிரியாணி பொட்டலம் வாங்கி வா என்று அனுப்பி அதை சாப்பிடுவது போல் செய்து பிணியை அறுத்திருக்கிறார்கள்.அசைவம் சாப்படுவது என்பது ஒரு பாவனைதான் பசி அல்ல.
ஒரு முறை கோழி பிரியாணியை சாப்பிட்டு முடித்த பின் எந்தக் கோழி வயிற்றுக்குள் சென்றதோ அதே கோழியை உயிருடன் தட்டில் வரவழைத்துத் துரத்தி அனுப்பினார் ராமசாமி சித்தர்.ஆக ராமசாமி சித்தர் பிரியாணி சாப்பிட்டார் என்று சொல்ல முடியுமா?இனி ராமசாமி சித்திரைப் பற்றி பார்ப்போம்.இவரது பெயர் ராமசாமி என்பது.ஒரு முறை ரிஷிகேஷத்தில் இருந்து அறியப்பட்டது.அதுவரை உள்ளூர்க்காரர்களால் பெரியவர்.சாமீ சித்தர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்தார்.ராமசாமி என்று இவர் அழைக்கக் காரணமான அந்த நிகழ்வைப் பார்ப்போம்.ஒட்டன் சத்திரத்தில் வசித்து வரும் சுமார் அறுபது பேர் வட இந்தியயாத்திரை புறப்பட்டார்கள்.உள்ளூர் வர்த்தக பிரமுகரான சோமசுந்தரம் பிள்ளை என்பவர் தலைமையில் இந்தக் குழு புறப்பட்டது.காசி ரிஷிகேஷ் ஹரித்வார் பத்ரிநாத் என்று அவர்களது பயணப் பட்டியல் இருந்தது.விடிகாலை மூன்று மணிக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் பயணத்தைத் துவக்கினர்.புறப்படும்போது வழியில் இருந்த ராமசாமி சித்திரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.போங்கடா...போயிட்டு என்கிட்டதானே எல்லாரும் வருவீஙக...என்று தனக்குள் சொல்லி மானசீகமாக வாழ்த்தி அனுப்பினார்.
ரிஷிகேஷை அடைந்த ஒட்டன்சத்திரத்து பிரமுகர்கள் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென வந்த ஒரு குரல் இவர்கள் அனைவரையும் ஈர்த்தது.ஒட்டன்சத்திரத்தில் இருந்து வந்தவன்லாம் இங்க வாங்கடா என்று அதிகாராமாகக் கூப்பிட்டது அந்தக் குரல்.ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் திடுக்கிட்டார்கள்.பாஷையே புரியாத இந்த ஊரில் யார் நம்மை அதிகாரமாகக் கூப்பிடுவது என்று அவர்கள் திரும்பிப் பார்த்தால் ஒற்றைக் காலில் நின்றபடி தவக் கோலத்தில் சாது ஒருவர் இருந்தார்.வாங்கடா ஒட்டன் சத்திரத்து ஆளுங்களா...உங்களை எல்லாம் நான்தான் கூப்பிட்டேன்...ராமசாமி சித்தர் எப்படி இருக்கான் ஊர்ல?என்றார்(அதுவரை சித்தர் பெரியவர் என்றே அழைக்கப்பட்ட வந்த ராமசாமி சித்தரின் பெயர் அதன் பிறகுதான் பலருக்கும் தெரிய வந்ததாம்)யார் சாமீ...நீங்க சொல்ற பேர்ல யாரும் எங்க ஊர்ல இல்லியே?என்றனர் ஊர்க்காரர்கள். அடேய்...பாத்திரக் கடை வாசல்ல எந்நேரமும் உக்காந்திருப்பானே...அவன்தான் ராமசாமி சித்தர்.அவனுக்கு வயசு என்ன தெரியுமா?ஐந்நூத்தி ஐம்பது.சரி ஊருக்குப் போனதும்.அவன்கிட்ட போய் ரிஷிகேஷ்ல நடராஜ சாமீ ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க என்றார்.தொடர்ந்து தவத்தில் இறங்கி விட்டார்.
ராமசாமி சித்தரின் வயதைக் கேட்டு ஒட்டன் சத்திரத்துக்காரர்கள் ஆடிப் போனார்கள்.தென்னிந்தியாவில் இருந்து வடக்கே வந்த நம்மை அடையாளம் கண்டுகொண்டு.நம்மூர் சித்தரை இவர் விசாரிக்கிறாரே என்று வியந்து பேசிக் கொண்டார்கள்.அங்கிருந்து அகன்றார்கள்.ஒரு வழியாக ஒட்டன் சத்திரத்துக்காரர்கள் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு இருபது நாட்களுக்குப் பிறகு ஊர் திரும்பினார்கள்.தாங்கள் புறப்பட்ட இடத்தில் யாத்திரையை முடித்தவர்கள்.மெள்ளக் கலையை முற்படும்போது ரிஷிகேஷ் போனவன்லாம் இங்க வாங்கடா என்று பாத்திரக்கடை வாசலில் இருந்த ராமசாமி சித்தார் ஓங்கிக் குரல் கொடுத்தார்.அப்போதுதான் சோமசுந்தரம் பிள்ளைக்கு நினைவு வந்தது ரிஷிகேஷில் நடராஜ சாமீ சொன்ன விஷயம்.அனைவரும் சித்தருக்கு முன்னால் பவ்யமாக நின்றனர். ஒட்டன்சத்திரத்தில் சாதாரணமாக அதுவரை அவர்களுக்குத் தெரிந்த ராமசாமி சித்தரின் மகிமை இப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது.ஏண்டா...அங்கே ஒத்தக்கால்ல தவம் செய்யுற நடராஜ சாமீ என்னை விசாரிச்சான்ல...ஏண்டா என்கிட்ட சொல்லாம போறீங்க?என்று ராமசாமி சித்தர் கோபமாகக் கேட்கவும் சற்று முன்னால் வந்தார் சோமசுந்தரம் பிள்ளை.சாமி எங்களை எல்லாம் மன்னிக்கணும்.அவசரத்தல மறந்துட்டோம் என்று சொல்ல...சிரித்தார் சித்தர்.போங்கடா.எல்லாரும் நல்லா இருப்பீங்க என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.பழநியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் சங்கரன்.மிகவும் ஆசாரமான அந்தணர் குடும்பம்.பூஜை புனஸ்கரம் என்று எந்நேரமும் இறைவழிபாட்டிலும்.மகான்கள் தரிசனத்திலும் திளைப்பவர்.மகான்களின் அதிஷ்டானங்களைத் தேடித் தேடித் தரிசிப்பார்.பழநியைச் சுற்றி உள்ள பகுதிகளில் எங்காவது மகான்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிந்தால் அடுத்த கணமே அங்கு பயணப்பட்டு விடுவார்.இப்படித்தான் ஒரு முறை ஒட்டன் சத்திரம் ராமசாமி சித்தர் பற்றிக் கேள்விப்பட்டார்.
பழநியில் இருந்து புறப்பட்டு சித்தர் எப்போதும் காணப்படும் பாத்திரக் கடைக்கு வந்தார்.அங்கே படிக்கட்டில் சித்தர் அமர்ந்திருந்தார்.ராஜம்மாள் அங்கு வந்ததுமே வாம்மா...உன்னைத்தான் தேடுகிறேன் வா என்றார் சித்தர்.மனம் நெகிழ்ந்தபடியே அவரைப் பணிந்து வணங்கினார் ராஜம்மாள்.பிறகு பக்கத்துல ஒட்டல் இருக்கு.அங்கே போய் ஒரு பிரியாணி பொட்டலம் வாங்கிட்டு வா என்றார்.அந்தணர் வீட்டுப் பெண்மணி திகைத்தார்.பிரியாணி என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே அவருக்கு வாந்தி வரும் போல் இருந்தது.தயங்கியவாறே நின்றிருந்தார்.என்னம்மா...பிரியாணி வாங்கிட்டு வானு சொன்னேன்...அப்படியே நிக்கறே...பொறப்படு என்றார் சித்தர்.பிறகு நான் வேணா காசு தர்றேன் யாரையாவது அனுச்சு வாங்கிட்டு வரச் சொல்லலாமா?என்று குரல் கம்மக் கேட்டார் ராஜம்மாள்.அதெல்லாம் வேலைக்கு ஆகாதும்மா.நீயே கடைக்குப் போய் வாங்கிட்டு வா.சீக்கிரம் என்று அவசரப்படுத்தினார் சித்தர்.ஒட்டல் வாசலில் தயக்கத்துடன் நின்றார் ராஜம்மாள்.இவரைப் பார்த்தவுடனேயே புரிந்து கொண்ட ஒட்டல் உரிமையாளர்.என்னமா...ராமசாமி சித்தர் பிரியாணிப் பொட்டலம் வாங்கிட்டு வரச் சொன்னாரா?யாகக்காரப் பொம்பளைம்மா நீ...உனக்கு இன்னிக்கு என்னென்ன அதிசயங்கள் காத்திருக்கோ என்று சொல்லி உள்ளே பிரியாணி பொட்டலத்தை பார்சல் செய்யச் சொன்னார்.காசைக் கொடுத்து விட்டு அந்தப் பொட்டலத்தை வாங்கிய ராஜம்மாள் ரொம்பவும் கூசிப் போனார்.ஐயர் வீட்டுப் பெண்மணியை அசைவப் பொட்டலத்தை சுமக்க வைத்து விட்டாரே என்று சித்திரைப் பற்றி சிந்தித்துக் கொண்டே அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தார்.பொட்டலத்தை அவர் அருகே வைத்து விட்டு அதன் நெடி உடலுக்கு ஒவ்வாததால் சற்றே நகர்ந்து நின்றார்.
பொட்டலத்தை இப்படி வெச்சிட்டா எப்படி?நீயே பிரி என்று சித்தர் சொன்னதும் அடுத்த இடி இறங்கியது ஐயர் வீட்டு அம்மணிக்கு.சித்தரின் குணத்தைப் பற்றி அறிந்தால்.இவரால் மறுக்கவும் முடியவில்லை. அழுகை உள்ளுக்குள் பொங்க...கண்களை மூடியபடி பழநி ஆண்டவரை மனதுக்குள் பிரார்த்தித்தபடி. பொட்டலம் சுற்றப்பட்டிருந்த நூலை மெள்ளப் பிரித்தார்.பிரியாணியின் சுவாசம் உள்ளுக்குள் போய் குமைச்சல் ஏற்படும் என்பதால்.அந்த வேளையில் சுவாசிக்கவும் மறந்தார்.பொட்டலம் முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டு விட்டது.இந்தாங்க சாமீ...என்று கண்களை மூடிய நிலையிலேயே குத்துமதிப்பாக சித்தர் இருக்கும் திசை நோக்கிப் பொட்டலத்தை நீட்டினார்.நீயே கண்ணைத் திறந்து பாரம்மா உன் கையில் இருக்கிற பொட்டலம் எந்த அளவுக்கு மணம் வீசுகிறதுன்னு.அதன் பிறகு என்னிடம் கொடு என்றார் சித்தர்.மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு கண்களைத் திறந்து தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பார்த்த ராஜம்மாளுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சிரியம்.காரணம் பொட்டலத்தில் இப்போது இருப்பது பிரியாணி அல்ல...நெய் வடியும் சர்க்கரைப் பொங்கல்.சித்தரின் அருள் திறனை எண்ணி விம்மினார் ராஜம்மாள். முந்திரியும் திராட்சைகளும் ஏலமும் கலந்து சர்க்கரைப் பொங்கலின் மணம் ராஜம்மாளின் மூக்கைத் துளைத்தது.தன் கையில் இருந்த சர்க்கரைப் பொங்கலை கோயில் பிரசாதம் போல் மணக்கும் பொங்கலை நம்பவே முடியாமல் மீண்டும் மீண்டும் பார்த்தார் ராஜம்மாள்.சாப்பிடும்மா...எடுத்துச் சாப்பிடு.ஐயர் வீட்டுப் பொம்பளைக்கு அசைவம் தருவேனாம்மா என்ற சித்தர் தானும் ராஜம்மாளின் கையால் ஒரு கவளம் வாங்கிச் சாப்பிட்டார்.
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சிக்கு அந்த லாரி ஒட்டன் சத்திரம் வழியாகப் போய்க் கொண்டிருந்தது.அந்த லாரி முழுக்கக் கருவாடு லோடு செய்யப்பட்டிருந்தது.அப்போது ராமசாமி சித்தர் பாத்திரைக் கடை வாசலில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார்.இவரது இடத்தைக் கடக்கும்போது அந்த லாரியில் இருந்து ஒரிரண்டு துண்டு கருவாடு சாலையில் விழுந்தது.ஜீவகாருண்யத்தை(அசைவம் சாப்பிடாதவர்கள்)எப்போதும் கடைபி டித்து வரும் உள்ளூர் அன்பர் ஒருவர் யதேச்சையாக அந்தப் பகுதியைக் கடந்தார்.சாலையில் சிதறிக் கிடக்கும் ஓரிரு கருவாட்டுத் தூண்டுகளைப் பார்த்து முகம் சுளித்தார்.ஓரமாக நடந்தார்.படிக்கட்டில் அமர்ந்திருந்த ராமசாமி சித்தர் இதைப் பார்த்தார்.டேய் இங்கே வாடா என்று அவரை அழைத்தார்.யாரோ ஒரு சாது போலும் என்கிற நினைப்பில் சித்திரை நெருங்கிய அன்பர் என்ன சாமீ?என்று கேட்டார்.கிழே விழுந்து கிடக்கிற கருவாட்டுத் துண்டை எடுத்துச் சாப்பிடுடா என்று அதிகாரமாகச் சொன்னார் அவ்வளவுதான்!முகம் கொதித்துப் போனார் அன்பர்.இத்தனை ஆண்டுகளாக ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடித்து என்னைப் பார்த்தா கருவாடு சாப்பிட்டுச் சொல்கிறீர்?நான் செத்தாலும் சாவேனே தவிர கருவாடு சாப்பிடவே மாட்டேன் என்று சொல்லிப்போயே விட்டார்.
சித்தர் மெதுவாகச் சொன்னார்:ஆமாடா...இன்னிக்கு சாயங்காலம் நீ சாகத்தான் போறே...உன்னைக் காப்பாத்தலாம்னு நினைச்சேன்...விதிதான்டா இன்னிக்கு ஜெயிச்சிருக்கு போடா...போய்ச் சேரு.ஆம்! அன்று மாலை சுமார் நாலேமுக்கால் மணிக்கு அந்த அன்பருக்குத் திடீர் மாரடைப்பு வந்து இறந்து போனார்.ஒருவேளை சித்தர் சொல்லி இருந்தபடி கருவாட்டுத் துண்டுகளை அவர் எடுத்துச் சாப்பிட்டிருந்தால் பிரியாணியை சர்க்கரைப் பொங்கலாக மாற்றியது மாதிரி இதையும் ஒரு சைவ பொருளாக சித்தர் மாற்றி இருக்கக் கூடும்.இதை உண்ட பலனால் அவரது ஆயுள் பலம் கூடி இருக்கலாம்.விதி ஜெயித்து விட்டது போலும்!பழநி கல்லுரியில் பேராசிரியராகப் பணி புரிந்த கண்ணன் என்பவர் சித்தர்கள் தரிசனத்தில் நெகிழ்பவர் பழநியில் இருந்து பல ஸித்துக்களைப் புரிந்த தங்கவேல் சுவாமிகளை அடிக்கடி சந்தித்து ஆன்ம ஞானம் பெற்றவர்.ராமசாமி சித்தர் சமாதி ஆனபோது அப்போது அவருடன் இருந்தவர் இவர்.
{இனி கண்ணன் சொல்லும் அனுபவத்தைப் பார்ப்போம்.}
ராமசாமி சித்தர் மாபெரும் மகான் என்பதை ஒட்டன்சத்திரத்துக்காரர்கள் பல காலம் வரை உணரவில்லை.அவ்வப் போது செட்டிநாட்டில் இருந்து ப்ளைமவுத் காரில் இவருக்கு சாப்பாடு கொண்டுவருவார்கள் சிலர்.யார் என்பது தெரியாது.பக்தர்கள் சிலர் கொடுக்கும் உணவுப் பொருட்களை விரும்பி ஏற்றுக் கொள்வார் சித்தர்.வேண்டாம் என்றால் தட்டி விட்டு விடுவார்.சில சமயங்களில் சிலரை கல் வீசி எறிந்து துரத்துவார்.1977-ஆம் வருடம் என்று நினைக்கிறேன்.நான் என் மனைவி இரு குழந்தைகள் ஆகியோர் முதல் முறையாக சித்தரைப் பார்க்கப் பழநியில் இருந்து ஒட்டன்சத்திரம் சென்றோம்.சித்தர் எங்கள் குடும்பத்தை ஊடுருவிப் பார்த்தார்.பிறகு நாலு டீ வாங்கி வருமாறு எனக்கு உத்தரவிட்டார்.உடனே பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு ஓடிச் சென்று வாங்கி வந்து சித்தரிடம் கொடுத்தேன்.எங்கள் நான்கு பேரையும் குடிக்கச் சொன்னார்.பிறகு ஒரு பீடிக்கட்டு மூன்று சிகரெட் ஒரு தீப்பெட்டி இவற்றைக் கொடுத்து பத்திரமா உன் வீட்டுல வெச்சுக்கோனு சொன்னார்.ரொம்ப காலம் பாதுகாத்து வந்தேன்.ஒரு முறை வீடு மாறும்போது அது எங்கோ தவறுதலாக மிஸ் ஆகி விட்டது என்று வருத்தத்துடன் சொன்ன கண்ணன் சித்தரின் சமாதி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
அது ஒரு சனிக்கிழமை...சித்தரை தரிசிப்பதற்காகப் போனேன்.சோமசுந்தரம் பிள்ளை வீட்டில் இருந்து ரசம் வாங்கி வரச் சொன்னார்.வாங்கி வந்து கொடுத்தேன்.குடித்தார்.பிறகு அவரைத் தரிசித்துக் கொண்டிருக்கும்போது.பாதையை மறைக்காதடா...குழிக்குள் இறங்குடா என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.இதன் காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லை.பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் இதைச் சொன்னேன்.வேறொன்னுமில்லை.அவர் கூடிய சீக்கிரமே சமாதி ஆகப் போகிறார்.அதைத்தான் இப்படிக் குறிப்பால் சொல்லி இருக்கிறார் என்றார் அவர்.அதன்படி அடுத்த சனிக்கிழமையே ராமசாமி சித்தர் சமாதி ஆகிவிட்டார்.தகவல் கேள்விப்பட்டதும்.சித்தரின் பக்தர்கள் ஒட்டன்சத்திரத்தில் குவிந்தனர்.சிங்கம்புணரி புலவர் பாண்டியன் என்கிற அன்பர் மலர் அலங்காரத்துடன் கூடிய பெரிய தேர் ஒன்றைத் தயாரித்தார்.சித்தர் அடக்கம் ஆவதற்கு காங்கிரஸ் பிரமுகரான பழநியப்பா நாகனம்பட்டி ரோட்டில் இடம் தந்தார்(இங்குதான் ராமசாமி சித்தரின் ஜீவ சமாதி இ ருக்கிறது)பெரிய குழி வெட்டி அதற்குள் நான் இறங்கினேன்.அப்போதுதான் குழிக்குள் இறங்குடா என்று சித்தர் போன சனிக்கிழமைஅன்று சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்தது.விபூதி உப்பு வில்வம் புஷ்பங்கள் போன்றவற்றை நிரப்பி சித்திரை அடக்கம் செய்தோம்.நான் கொண்டு சென்ற ஒரு சிவப்புத் துண்டை அவரது மேலுடம்பில் போர்த்தினேன்.மாபெரும் சித்த புருஷரை அடக்கம் செய்த பேறு எனக்கு அன்று கிடைத்தது அவரது அருள்தான்.
எல்லா காரியங்களும் முடிந்து இரவு சுமார் 11 மணி வாக்கில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநிக்குப் பேருந்தில் புறப்பட்டேன்.ஒட்டன்சத்திரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் விருபாட்சிமேடு என்கிற ஓர் இடம் வரும்.அந்த இடம் சற்று கரடுமுரடாக இருப்பதால் அதன் வழியாகப் பயணிக்கும் எந்த ஒரு பேருந்தும் நின்று நிதானித்துதான் செல்லும்.அதுபோல் நான் சென்ற பேருந்தும் விருபாட்சிமேட்டைக் கடக்கும்போது நிதானமாகச் சென்று கொண்டிருந்தது.அப்போது யதேச்சையாக சாலையின் இடப் பக்கம் கவனித்த நான் துணுக்குற்றுப் போனேன்.அங்கே ராமசாமி சித்தர் நடந்து போய்க் கொண்டிருந்தார்.அவரது மேலுடம்பில் நான் எப்படிப் போர்த்தினேனோ அதே நிலையில் அந்த சிவப்புத் துண்டு இருந்தது. சாமீ....சாமீ என்று குரல் எடுத்துக் கதறினேன்.பேருந்தில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.இதற்குள் பருந்தும் வேகம் எடுத்து விட்டது.மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.சற்று முன் குழிக்குள் அடக்கமான சித்தர்.எப்படி விருபாட்சிமேடு அரு கே நடந்து போனார் என்கிற கேள்வி என் மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது எனவே பழநி பேருந்து நிலையத்தில் இறங்கிய கையோடு முதல் காரியமாக நள்ளிரவு வேளையில் தங்கவேல் சுவாமிகளின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினேன்.சுவாமிகளே வந்து கதவைத் திறந்து என்னப்பா... இந்த வேளைல?என்றார். எல்லா விஷயத்தையும் அவரிடம் சொன்னேன்.நாளைக்கு விடிகாலைல அவரை அடக்கம் பண்ண இடத்தைப் பார்த்துட்டு வந்து என்னிடம் சொல் அப்படின்னு படுக்கப் போய்விட்டார்.
இரவு முழுக்கத் தூக்கமே வரவில்லை.விடிந்தும் விடியாத பொழுதில் வீட்டை விட்டுக் கிளம்பினேன். தங்கவேல் சுவாமிகள் சொன்னபடி அந்த சமாதியை நோட்டமிட்டேன்.அவரது சமாதியில் தலைப் பகுதிக்கு நேராக தலையில் அரை அடி நீளத்துக்கு ஒரு வெடிப்பு காணப்பட்டது.உடனே பழநிக்குச் சென்று தங்கவேல் சுவாமிகளிடம் சொன்னேன்.ராமசாமி சித்தர் தன்னோட அருள் ஆற்றலை மட்டும் அங்கே வைத்து விட்டு சரீரத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாரப்பா.அவர் இப்போது வேறு பிரதேசத்தில் உலவிக் கொண்டிருப்பார்.அவர் போன ஊர் புண்ணியம் பெறும் என்றார்.அதாவது, சித்தர்களுக்கு சமாதி என்பது ஒரு ஒரு சம்பிரதாயத்துக்குத் தான்.அவர்கள் என்றென்றும் நம்முடனே இருந்து ஆசிர்வதித்துக் கொண்டிருப்பார்கள்.ராமசாமி சித்தரும் அப்படித்தான்.சுமார் இரண்டு மாதங்கள் கழித்து.கேரளாவில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் ராமசாமி சித்தரைப் பார்த்ததாக ஒரு நண்பர் சொன்னார் என்று முடித்தார்.கண்ணன்.ராமசாமி சித்தர் பெரும்பாலும் ஒரு குல்லா அணிந்திருப்பார்.முஸ்லிம் பக்தர் ஒருவர்.ஆசையுடன் கொடுத்ததாம் இது.சித்தரை சமாதி வைத்த இடத்தின் அருகே பிரமாண்டமான ஆலமரம் இருக்கிறது.இதன் அருகே ஒரு லிங்கம்.சமாதி ஆன இடத்தில் சில செங்கற்களின் மேலே வேங்கடாசலபதி ஸ்ரீசரஸ்வதிதேவி முருகப் பெருமான் ஆகியோரது திரு வுருவப் படங்கள் இருக்கின்றன.உள்ளே ஒரு நந்தி விக்கிரமும் உண்டு.மற்றபடி சமாதி ஆன இடத்தில் சிறப்பாக எதுவும் இல்லை.பள்ளிக்குச் செல்லும் சில மாணவர்கள் அவ்வப்போது இங்கே வந்து வணங்கிச் செல்கிறார்கள்.
அங்கோர் வாட்
இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.
இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!
இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!
இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.
பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.
பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!
இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.
இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

கஷ்டத்தையும் ரசிக்கப் பழகு
○ உனக்கு ஒரு காயம் பட்டாலோ நோய் வந்தாலோ அதை கடவுளே அனுப்பி வைத்திருப்பதாக நினைத்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும்.அவற்றால் ஏற்படும் வலியை சமாளிப்பதை ஒரு தவம் போல கருத வேண்டும்.பழகப்பழக இந்த மனோபாவம் உறுதியாகி விடும்.நோய்நொடியை தாங்குகிற சக்தி உண்டாகும்.
□ நமக்கு எந்த கஷ்டம் வந்தாலும் வறுமையினால் சிரமப்பட்டாலும் அவை எல்லாம் நமக்கு வைராக்கியத்தை கொடுப்பதற்காக சுவாமியினால் அனுப்பப்பட்டவை என நினைத்துக்கொள்.
○ சாந்தமாக வாழ சாத்வீக உணவை உண்ண வேண்டும்.
□ அரை வயிற்றுக்குத்தான் சாப்பிட வேண்டும்.கால் வயிற்றுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். கால் வயிறை வாயுவுக்கு விட்டுவிட வேண்டும்.பசி தீர்க்கத்தான் ஆகாரமே தவிர ருசிக்காக அல்ல.
○ காஞ்சி மஹா பெரியவா

கண்ணாடி மனசு வேணும்!
 எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்துகொண்டோ அழுதுகொண்டோ இல்லாமல்"ஆஹா!என்று எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
■ நாம் ஒரு இடத்திற்கு போனால் அங்கே இருப்பவர்கள்"குற்றம் கண்டுபிடிக்க வந்து விட்டான்'என்று முகத்தை சுளிக்கும்படியாக இருக்கக்கூடாது.எங்கே நாம் போனாலும் அங்கே நல்ல தினுசான சந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும்.
 தனக்கு என்று எதுவுமே இல்லாவிட்டால் மனதின் அழுக்குகள் நீங்கி அது கண்ணாடி மாதிரி சுத்தமாக இருக்கும்.அப்போது நிறைந்த ஆனந்தமாக இருக்கலாம்.
■ மேலும் மேலும் பணம் தருகிற தொழில் மேலும் மேலும் வியாதி தருகின்ற காரியங்கள் இவற்றை விட்டுவிட்டு நிம்மதியாக நிறைவோடு அடங்கி வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
 காஞ்சி மஹா பெரியவா

ஆவுடையார் கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்
1. ஆவுடையார் கோவில் என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகில் உள்ளது. சிற்பக்கலைக்கும், கட்டிடக்கலைக்கும் புகழ்பெற்ற சிவஸ்தலமாகும்.
2. இந்த ஊரில் உள்ள, ஆத்மநாத சுவாமி கோவிலில் மூலவர் சிவலிங்கத்தின் ஆவுடையார் எனப்படும் பீடம் மட்டும் இடம் பெற்றிருப்பதால், இந்த கோவிலும், கோவில் அமைந்துள்ள ஊரும், ஆவுடையார் கோவில் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.
3. இந்த ஊரின், பழம்பெயர் திருப்பெருந்துறை என்பது. சைவ, சமய குரவர் நால்வருள் நான்காமவரான மாணிக்கவாசக பெருமானின் வாழ்வில், பல அற்புதங்களை நிகழ்த்தியவர், இந்த 'திருப்பெருந்துறை உறை சிவபெருமான்' தான்.
4. அம்பாள் ஸ்ரீ யோகாம்பாளும் விக்கிரகத் திருமேனியாக இல்லை. அவளது திருவடிகளை மட்டுமே தரிசிக்க முடியும். தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறும்
5. முதல் கால பூஜையில் சுத்த அன்னம் (வெறும் சாதம்), 2-ம் கால பூஜையின் போது, சர்க்கரைப் பொங்கல், 3-ம் கால பூஜையில் தேன்குழல் பாயசம், அதிரசம், பிட்டு, தோசை, 4-ம் கால பூஜையில் சுத்த அன்னம், வடை, கீரை, 5-ம் கால பூஜையின் போது, சுத்தம் அன்னம் மட்டுமே, 6-ம் கால அர்த்தசாம பூஜையின் போது, புழுங்கல் அரிசி சாதம் வடிக்காமல், புளியோதரை, பாகற்காய் என நைவேத்தியம், சூடு பறக்கும் உணவின் ஆவி சுவாமிக்கு பிரசாதமாகும். இந்த பிரசாதங்களை சாப்பிட, பித்ருக்கள் எனப்படும் முன்னோரின் சாபங்கள் நீங்கப் பெறுவதுடன், அவர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
6. ஆனித் திருமஞ்சனம் விழா 10 நாட்கள் நடக்கும் 50 ஆயிரத்துக்கும் மேல் பக்தர்கள் கூடுவர்.
7. மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட மிகச் சிறப்புவாய்ந்த சிவதலம் இது.இக்கோயிலின் மண்டபங்களில் முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது போல கொடுங்கைகள் (தாழ்வாரம்) அமைக்கப்பட்டுள்ளது
8. புதிதாக ஒரு கோபுரமோ, மண்டபமோ அமைப்பது என்றால், தங்கள் திறமைக்கு சவாலாக இருக்கிற பணிகளை, செய்வதற்கு ஸ்தபதிகள் ஆயத்தமாகவே இருப்பர். ஆனால், கட்டட கலையின் உச்சக்கட்ட சாதனையாக அமைந்த படைப்புகள் என்று, சிலவற்றைக் குறிப்பிட்டு, அவற்றுக்கு இணையாக மட்டும், தங்களால் சாதனை படைக்க இயலாது என்று, எழுதிக் கொடுத்து விடுவர். ஆவுடையார் கோவிலின் 'கொடுங்கை!' இக்கோவிலில் சிறப்பு பெற்று இருப்பதால் ஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக, பிற பணிகளை செய்ய ஆயத்தமாக இருக்கிறோம்' என, புதிய பணிகளை துவங்குவதற்கு முன், இங்கு வேலைக்கு வரும் ஸ்தபதிகள் ஒப்பந்தம் போட்டுக் கொள்வர்.
9. பஞ்சாட்சர மண்டபத்தின் உத்தர கல்லில், சுற்றிலும், நான்கு திசைகளிலும், தொடர்ச்சியாக கட்டளை கலித்துறைப் பாக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், 'இந்த அற்புதமான மண்டப திருப்பணி, மனித முயற்சியால் கைகூடவில்லை. யோகநாயகி (ஆவுடையார் கோவில் இறைவி), கோபுரவேலவன் (பழைய கோபுரத்தில் இடம் பெற்றுள்ள முருகக் கடவுள்), விநாயகர், மாணிக்கவாசகர் ஆகியோரே செய்வித்தனர்' என, பொருள்படும் கவித்துவமான வரிகள் உள்ளன. தென்காசி காசிவிசுவநாதர் கோவிலை கட்டுவித்த, பராக்கிரம பாண்டியன், அந்த பணி தன் செயல் அல்ல என, ஒரு பாடலில் கூறுவதை இதனோடு ஒப்பிடலாம்.
10. பஞ்சாட்சர மண்டபத்தில் பொறிக்கப்பட்டு உள்ள, மற்றொரு பாடலில், விசைய (விஜய) ஆண்டு, துலா மாதத்தில், இந்த மண்டப திருப்பணியை துவங்கி, பிலவ ஆண்டு பங்குனி மாதத்தில், யோகநாயகி காரிகை இந்த பணியை முடித்தாள் என்று, கூறப்பட்டு உள்ளது. மேலும், 'சுவரோவியங்களை வரைந்து, பாக்கல் (பாவுகல்) எல்லாம் அமைத்தவன் விநாயகனே' என்று, மற்றொரு பாடலில் கூறப்பட்டு உள்ளது.
11. ஆத்மநாதர் கோயில் சிற்பக்கலைக்கு சான்றாக சிறப்புற கட்டப்பட்டுள்ளது. இங்கு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தில்லை மண்டபத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்த சிவன், அம்பாள் சிற்பமும், புலையன், புலத்தி வேடத்தில் வந்த சிற்பமும் உள்ளது.
12. இந்த சிவதலத்தில் வழிபடுவோர்க்கு குருபலன் கூடும். மாணிக்கவாசகருக்கு ஈசனே குருவாய் வந்து உபதேசித்த தலம் என்பதால் இந்த தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு சிறந்த ஞானம் பெற்றவராகத் திகழ்வர்.
13. ரூபம் (வடிவம்), அரூபம் (வடிவம் இல்லாமை), அருவுருவம் (லிங்க வடிவம்) ஆகிய மூன்று வடிவங்களில் அருளும் சிவன் இத்தலத்தில் மூலஸ்தானத்தில் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர (ஸ்தல விருட்சம்) வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகராகவும் அருளுகிறார்.
14. இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால் குருந்தமரத்தையும் சிவனாகக் கருதுவதால், கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபிஷேகம் நடக்கிறது
15. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறது. அதன்மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகவும், ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதாலும் சுவாமிக்கு "ஆத்மநாதர்' என்று பெயர் ஏற்பட்டது
16. ஆறு கால பூஜையின் போதும், இவருக்கு 108 மூலிகைகள் கலந்த தைல அபிஷேகம் நடப்பது விசேஷம்.
17. கோயில்களில் தீபாராதனை செய்யும் போது, பக்தர்கள் அதை கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். ஆனால், ஆவுடையார் கோயில் மூலவருக்கு, தீபாராதனை செய்யும் தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை.
18. இங்கு சிவனே ஜோதி வடிவமாக இருக்கிறார். அவரை வணங்குவதே தீபத்தை வணங்கியதற்கு ஒப்பானது தான். எனவே, தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொள்ள வெளியில் கொண்டு வருவதில்லை.
19. ஆவுடையார்கோயில் மூலஸ்தானத்தில் சிவனுக்கு பின்புறத்தில் வெள்ளை, சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியன், சிவப்பு அக்னி, பச்சை நிறம் சந்திரனாக கருதப்படுகின்றன.
20. சுவாமிக்கு இங்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றியுள்ளனர்.
21. பஞ்சாட்சர மண்டபத்தில் உள்ள சிவனை குதிரைச்சாமி என்று அழைக்கிறார்கள்.
22. மாணிக்கவாசகருக்காக, சிவன், குதிரைகளுடன் மதுரைக்கு சென்று அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் ஒப்படைத்தார். குதிரை மீது சென்ற சிவன், இக்கோயிலில் பஞ்சாட்சர மண்டபத்தில் இருக்கிறார். இவரை, "குதிரைச்சாமி' என்று அழைக்கிறார்கள்.
23. குதிரைக்குகீழே நரிகளும் உள்ளன. இவருக்கு "அசுவநாதர்' என்றும் பெயர் உண்டு.
24. ஆத்மநாதர் கோயிலில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை குறிக்கின்றன. சிவனை சுற்றி திருவாசியில் உள்ள 27 தீபங்கள் நட்சத்திரங்களையும், அருகிலுள்ள 2 தீபங்கள் ஜீவாத்மா, பரமாத்மாவையும் குறிக்கின்றன
25. சன்னதியிலிருந்து வெளியே வரும் அடுத்தடுத்த வாசல் நிலைகளில் பஞ்சகலைகளை குறிக்க 5 தீபம், 36 தத்துவங்கள், 51 அட்சரங்கள், 11 மந்திரங்கள், 224 உலகங்கள் இவற்றை குறிக்கும் விதமாக அந்தந்த எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
26. இத்தலத்தில் குருவாக இருந்து மாணவர்களுக்கு உபதேசம் செய்தபோது, சீடர்கள் அவருக்கு படைத்த உணவை ஏற்றுக்கொண்டார். அவரிடம் பயின்றவர்கள் வீட்டிலிருந்து புழுங்கல் அரிசி சாதம், கீரை, பாகற்காய் என எளிய பொருட்களை அவருக்கு கொடுத்தனர். அதனை சிவனும் விரும்பி வாங்கி சாப்பிட்டார். இதன் அடிப்படையில், ஆத்மநாதருக்கு புழுங்கல் அரிசி சாதம்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.
27. அடுப்பில் இருந்து இறக்கப்பட்ட சாதத்தை அப்படியே சுவாமி சன்னதிக்கு கொண்டு சென்று, படைக்கல்லில் ஆவி பறக்க கொட்டி விடுகின்றனர். அப்போது சன்னதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும். சுவாமி அரூப வடிவானவர் என்பதால், அரூபமாகி விடும் ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது.
28. தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத் தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது.
29. இந்த பாதத்தை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.
30. சூரிய, சந்திர கிரகணங்களின்போது கோயில்களின் பூஜை செய்யமாட்டர். ஆனால், ஆவுடையார் கோயிலில் கிரகணநாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது. ஆதியந்தம் அல்லாத அருவ வடிவ சிவனுக்கு சிவபூஜை எந்த காரணத்தாலும், தடைபடக்கூடாது என்பதற்காக பூஜை நடக்கிறது.
31. குரு இருக்குமிடத்தில் சிஷ்யர்கள், மரியாதை கொடுப்பதற்காக அவர்முன்பு அமராமல் நின்று கொண்டிருப்பார்கள். இக்கோயிலில் ஆத்மநாதருக்கு மரியாதை செய்யும் விதத்தில், மாணிக்கவாசகர், சொக்க விநாயகர், முருகன், வீரபத்திரர் ஆகியோர் நின்ற கோலத்திலேயே இருக்கின்றனர்.
32. ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால், நவக்கிரக தூண்கள் வைக்கப் பட்டுள்ளன. முதல் தூணில் ராகு, கேது, 2வது தூணில் சனி, வியாழன், சுக்கிரன், செவ்வாய், மூன்றாவது தூணில் உஷா, பிரத்யூஷா, சூரியன், புதன், நான்காம் தூணில் சந்திரனும் இருக்கின்றனர். அருகிலுள்ள 2 தூண்களில் காளத்தீஸ்வரர், கங்காதேவி உள்ளனர்.
33. முக்தியை அடைவதற்கான பிரதான மூன்று நிலைகளான சச்சிதானந்த நிலை அமைப்பில் இக்கோயில் உள்ளது. "சத்' அம்சமாக கோயில் மகா மண்டபமும், "சித்' அம்சமாக அர்த்தமண்டபமும், "ஆனந்த' மயமாக கருவறையும் இருப்பது விசேஷம்.




நன்மை தரும் மவுனம்

 தினமும் அரை மணி நேரமாவது மவுனமாக தியானம் செய்யுங்கள்.
 மவுனத்தை அனுஷ்டித்தால் அந்த நேரத்திலாவது சண்டை சச்சரவு இராது.இதுவும் ஒரு வகையான சமூக சேவைதான்.
 நல்லதை உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மவுனத்துக்கு உண்டு.நன்மைகளை பெற்றுத்தர மவுனமே உபாயமாக இருக்கிறது என்பதை"மவுனம் ஸர்வார்த்த ஸாதகம்'என்று சொல்வார்கள்.
 ஒன்றைச் சுருக்கமாக சொன்னால் அது மனதில் பதியாமல் போய்விடலாம்.அதையே சுவாரஸ்யமான கதையாக சொன்னால் நன்றாக மனதில் பதியும்.
 வரவு, செலவு என்பது பணம் ஒன்றில் மட்டும் இல்லை.நாம் வார்த்தையை அதிகம் விட்டால் அது செலவு. எதிராளியிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது வரவு.
 காஞ்சி மஹா பெரியவா

கஜபூஜை, கோபூஜை நடத்துவதன் நோக்கம் என்ன?
ஆண் யானையாக இருந்தால் விநாயகராகவும் பெண் யானையாக இருந்தால் கஜ லட்சுமியாகவும் பூஜிப்பர்.சிற்ப சாஸ்திரப்படி கோவிலில் கோசாலை என்னும் மாட்டுத் தொழுவமும் யானைக் கொட்டகையும் குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.எனவே கோபூஜை செய்தால் அக்கோவிலுக்கு எல்லா தேவர்களும் வந்து அருள்புரிவதாக ஐதீகம்.இந்த பூஜைகளால் பக்தர்களின் விருப்பம் தடையில்லாமல் நிறைவேறும். செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.


வெள்ளி, 26 ஜூன், 2015

ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரம் கால் மண்டபம் {காஞ்சிபுரம்}
பஞ்சபூத தலங்களில் மண் தலமாக விளங்குவது காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் ஆகும். இக்கோயிலில் 3-ஆம் பிரகாரத்தில் பல்லவ ராஜகோபுரம் அமைந்துள்ளது. 6-ஆம் நூற்றாண்டில் இருந்து 13-ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் அக்கோபுரம் தான் கோயிலின் பிரதான வாயிலாக இருந்துள்ளது.அக்கோபுரத்துக்கு அருகே பல்லவ மண்டபம் இருந்துள்ளது. இது 6-ஆம் நூற்றாண்டில் இருந்து 13-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சிதிலமடைந்து அழிந்துள்ளது.பல்லவர் மண்டபம் இருந்ததற்குச் சான்றாக 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திர பல்லவனின் கல்வெட்டுடன் கூடிய தூண் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது இத்தூண் தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளது.
கடந்த 14, 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கோயில் திருப்பணிகள் நடைபெற்று ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் காலத்தில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் பல்லவ ராஜகோபுரம் அருகே ஆயிரம் கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
ஆயிரம் கால் மண்டபம் :ஆயிரம் கால் மண்டபத்துக்குள் 2 மேடைகளும், மண்டபத்துக்கு மேலே ஒரு மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் போது ஸ்ரீ ஏலவார்குழலியை(காமாட்சியம்மன்) கன்னிகாதானம் செய்து வைப்பதற்காக வரும் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்காக ஒரு மேடையும், ஸ்ரீ ஏகாம்பரநாதருக்காக ஒரு மேடையும் என அமைக்கப்பட்டுள்ளது.திருக்கல்யாணம் நடைபெறுவதற்காக ஆயிரம் கால் மண்டபத்துக்கு மேலே ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடைக்குச் செல்ல வசதியாக சுட்ட செங்கற்களால் படிக்கட்டுகளும் கட்டப்பட்டுள்ளது.மண்டபத்துக்குள் விகடசக்கர விநாயகர் மற்றும் சண்முகர் சன்னதி அமைந்துள்ளது. இந்த ஆயிரம் கால் மண்டபம் விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலைக்குச் சான்றாக இன்றளவும் விளங்குகிறது.
16-ஆம் நூற்றாண்டு தொடங்கி கடந்த 1988-ஆம் ஆண்டு வரை ஏகாம்பரநாதர்- ஏலவார்குழலி திருக்கல்யாணம் ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்து வந்துள்ளது. கடந்த 1988-ல் திருக்கல்யாண மேடையின் தூண்கள் சரிந்ததாலும், மேலே செல்லும் படிக்கட்டுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தாலும், திருக்கல்யாண வைபவத்தை மேலே நடத்த பொதுப்பணித்துறை அனுமதிக்கவில்லை.இந்நிலையில் நாட்டில் உள்ள பழம்பெருமை வாய்ந்த கோயில்களைப் பழமை மாறாமல் புதுப்பிக்க மத்திய அரசின் நிதிக்குழு நிதி ஒதுக்கியது. அந்த வகையில் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது.ஆயிரம்கால் மண்டபத்தில் உள்ள அனைத்து தூண்களும் ரசாயனக் கலவை மூலம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன. மேலும் மண்டபத்தில் உள்ள விகடசக்கர விநாயகர், சண்முகர் சன்னதி கோபுரங்களும் புதுப்பிக்கப்பட்டன.திறந்த வெளியாக இருந்த ஆயிரம் கால் மண்டபத்துக்குப் பாதுகாப்பு கருதி சுற்றிலும் கிரில் கேட்டுகள் அமைக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மேல் மேடைக்கு செல்லும் படிக்கட்டுகளும் புதுப்பிக்கப்பட்டன.
திருக்கல்யாணம்:புதுப்பிக்கப்பட்ட பின் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் அன்று இரவு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை ஆயிரம்கால் மண்டபத்துக்கு மேலே உள்ள மேடையில் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது.திருக்கல்யாணத்தின் போது ஆயிரம் முதல் 2 ஆயிரம் பக்தர்கள் வரை ஆயிரம் கால் மண்டபத்துக்கு மேல் அனுமதிக்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதியை பொதுப்பணித்துறை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .





லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது.இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும்.
பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அவர் உருவாக்கிய குளம் "பரசுராம தீர்த்தம்' எனப்படுகிறது.சில சிவன் கோயில்களில் மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில்,கஜலட்சுமி சிற்பம் அமைத்திருப்பார்கள்.ஆனால் இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதைக் காணலாம். விநாயகர் நடனம் ஆடும் கோலமும் சண்டிகேஸ்வரரின் பஞ்சலோக சிலையும் வித்தியாசமானவை. பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான். திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற தலம். வள்ளலார் விண்ணப்பக்கவி வெண்பாவில்,"நற்கருணை வாய்க்கும் பழுவூர் மரகதமே' என்று சிவனையும், அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தல முருகனையும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

{முதலாம் பராந்தக சோழன் காலத்தில் இங்கு திருப்பணி நடந்துள்ளது.}

"பழு' என்றால் ஆலமரம்.எனவே சுவாமி "ஆலந்துறையார்' எனப்படுகிறார்.

தல வரலாறு:கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், ""விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்,'' என்றார்.அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் அம்பாள் "அருந்தவநாயகி' எனப்படுகிறாள்.


ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா கவசம் 

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா நவமணி மாலை 

நவமணி மாலை போன்று நன்கமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா கவசத்தை  நாள்தோறும் காலை, மாலை ஒன்பது தடவைகள் அன்பர்கள் ஓதிவரின் எவ்விடத்திலும் என் நேரத்திலும் எதனாலும் எவ்வித இடையூறும் நேராவண்ணம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா முன்னின்று காத்து முழு அனுக்ரஹம்  புரிவார் என்பது திண்ணம்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட மஹா பெரியவா திருக்கவசம் யான் பாடக் கார்மேனி ஐங்கரனே காப்பு
1. திருவளரும் காஞ்சி வாழ் ஸ்ரீ காமகோடி
நாதனவர் சிரசைக் காக்க
அருள்வளரும் ஸ்ரீ மஹா பெரியவா அமலனவர்
நெற்றியினை அமர்ந்து காக்க
பொருள் வளரும் ஸ்ரீ மஹா பெரியவா  புனிதரவர்
வதனமதைப் பொலிந்து காக்க
தெருள்வளரும் ஸ்ரீ மஹா பெரியவா தேவரவர்
கண்ணிரண்டும் தினமும் காக்க
2. புவியிறைஞ்சும் ஸ்ரீ மஹா  பெரியவா புருவங்கள்
இரண்டினையும் புகழ்ந்து காக்க
செவியிரண்டும் ஸ்ரீ மஹா  பெரியவா பக்த சேவகர்தான்
எந்நாளும் சேர்ந்து காக்க
தவமுனிவர் ஸ்ரீ மஹா  பெரியவா என்
தலைமயிரைத் தழைந்து காக்க
நவமணியார்  ஸ்ரீ மஹா  பெரியவா என்
நாசியினை நயந்து காக்க
3. கண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா என் தெய்வமவர்
இருகன்னம் கனிந்து காக்க
விண்கண்ட ஸ்ரீ மஹா  பெரியவா விமலரவர்
கண்டமதை விரைந்து காக்க
பண்கண்ட ஸ்ரீ மஹா  பெரியவா  பரமரவர்
தோளிரண்டும் பரிந்து காக்க
மண்கண்ட ஸ்ரீ மஹா  பெரியவா மாதவர் என்
மார்பகத்தை மகிழ்ந்து காக்க
4. தூயசுடர் வடிவான  ஸ்ரீ மஹா  பெரியவா அண்ணல்
வலதுகரம் துணிந்து காக்க
நேயமுறும் ஸ்ரீ மஹா  பெரியவா நவநீதரவர்
இடதுகரம் நிதமும் காக்க
ஆயமறை முடிவான ஸ்ரீ மஹா  பெரியவர்
மணிவயிற்றை அறிந்து காக்க
தேயமெலாம் துதிசெய்யும் ஸ்ரீ மஹா பெரியவா வள்ளல்
இடுப்பதனைத் தெரிந்து காக்க
5. குரு ஸ்ரீ மஹா பெரியவா பகவனவர் கரவிரல்கள்
ஈரைந்தும் குழைந்து காக்க
உரு வோங்கும் ஸ்ரீ மஹா பெரியவா உத்தமர் என்
பற்களினை உவந்து காக்க
கருவோங்கும் ஸ்ரீ மஹா  பெரியவா  என்
வளர்நாவை களித்துக் காக்க
பெருமானாம் ஸ்ரீ மஹா  பெரியவா போதனென்றன்
நெஞ்சமதைப் பெரிதும் காக்க
6. கனிவுமிகு ஸ்ரீ மஹா  பெரியவா கடவுளவர்
குறியதை எக்காலும் காக்க
இனிமைமிகு ஸ்ரீ மஹா பெரியவா இறையவர் என்
வலக்காலை இனிது காக்க
தனிமைமிகு ஸ்ரீ மஹா  பெரியவா பதியவர் என்
இடக்காலைத் தாவிக் காக்க
பனி இருள்தீர் ஸ்ரீ மஹா  பெரியவா  என்
பாதவிரல் பத்தும் காக்க
7. இருதொடையும் ஸ்ரீ மஹா பெரியவா ஈசரவர்
எஞ்ஞான்றும் இறங்கிக் காக்க
திருமுதுகைப் பிடரியினை ஸ்ரீ மஹா  பெரியவா
வானவர்தான் சிறந்து காக்க
தருமதுரை ஸ்ரீ மஹா  பெரியவா என் வாயும்
இதழ் இரண்டும் தவழ்ந்து காக்க
அருநிதியாம் ஸ்ரீ மஹா  பெரியவா ஆண்டவர் என்
அங்கமெலாம் அழகாய்க் காக்க
8. கரியவிழி படைத்தநமன் வருங்காலம்
ஸ்ரீ மஹா  பெரியவா கடிதிற் காக்க
பெரியபகை வஞ்சகர்கள் எதிர்த்திடுங்கால்
ஸ்ரீ மஹா  பெரியவா பேணிக் காக்க
அரியகொடும் பிணிபூதம் அணுகிடுங்கால்
ஸ்ரீ மஹா  பெரியவா அமைந்து காக்க
உரியவிஷப் பூச்சிகளால் இடரின்றி
ஸ்ரீ மஹா  பெரியவா உடனே காக்க
9. எத்திக்கும் எப்போதும் எவ்விடத்தும்
ஸ்ரீ மஹா  பெரியவா என்னைக் காக்க
பக்தியுடன் பணிபுரியும் வேலையெல்லாம்
ஸ்ரீ மஹா  பெரியவா காக்க
முத்திநலங் கொடுத்தென்னை ஸ்ரீ மஹா பெரியவா
ஸ்ரீ சிவனவன் முன்னே காக்க
சித்தியெல்லாம் தந்தென்னைச் காஞ்சி சேர்
ஸ்ரீ மஹா  பெரியவா சித்தர் காக்க.
ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா மூல மந்திரம்
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர ! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர !! ஜெய ஜெய சங்கர !!!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர ! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர !! ஜெய ஜெய சங்கர !!!