சனி, 12 அக்டோபர், 2013

படலம் 60: விஷ்ணூமார்த்த பிரதிஷ்டை

60வது படலத்தில் ஹரிஹரார்த்த மூர்த்தி அர்த்தநாரீஸ்வரர் இவர்களின் பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. முதலில் இலக்கண அமைப்பு பூர்வமாக ஹரிஹரார்த்த மூர்த்தி அர்த்தநாரீஸ்வர மூர்த்தியின் பிரதிஷ்டையை கூறுகிறேன் என்பது கட்டளை. கற்சிலை முதலிய திரவ்யங்களால் பிம்பத்தை அமைக்கவும் என கூறி முதலில் உமார்த்த மூர்த்தி என்கிற அர்த்த நாரீஸ்வர மூர்த்தியின் லக்ஷணம் கூறப்படுகிறது. அங்கு பிம்பத்தில் தென் பாகத்தில் பரமேஸ்வரனின் பாதி உருவமும் வடக்கு பாகத்தில் உமாதேவியின் பாதி உருவமும் அமைக்க வேண்டும் தென்பாகத்தில் பாதிபாகமான பகுதியில் பிறை சந்திரனுடன் கூடிய ஜடாமகுடமும் இடப்பாகத்தில் அலகம் என்ற கேசத்துடன் கூடிய கரண்டமகுடம் அமைக்க வேண்டும். நெற்றியின் தென்பாகத்தில் பாதி அளவுள்ள நெற்றிக்கண் அமைக்கவும். வலது காதில் மகர குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அமைக்கவும். வலது இருகைகளில் கோடரியும் அபயமும், இடது கையில் நீலோத்பலம் அல்லது தேவி தியானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயுதமோ அமைக்கவேண்டும். இடது பாகத்தில் கண்ணை கண்ணாடி போல் பிரகாசமாக அமைக்கவும் என கூறி கண்ணாடியின் லக்ஷணம் கூறப்படுகிறது. வலப்பாகத்தில் புலித்தோலை அணிந்ததாகவும் இடப்பாகத்தில் இடது பாக ஸ்தானத்தையும் அழகிய வஸ்திரத்தையும் அமைக்கவேண்டும். வலது பாதம் கொஞ்சம் வளைந்ததாகவும் இடது பாதம் நேராக இருப்பதாக செய்ய வேண்டும் வலப்பாகம் மாணிக்க ரத்தினம் போல் பிரகாசிப்பதாகவும் இடப்பாகம் மரகத ரத்னம் போல் பிரகாசிப்பதாகவும் அமைக்கவும் என கூறி பிம்பத்தில் சூத்திரம் இடும் அர்த்தநாரீஸ்வரரின் லக்ஷணம் கூறப்படுகிறது. வலது பாகத்தில் பரமேஸ்வரன் உருவமும் இடது பாகத்தில் மஹாவிஷ்ணுவின் உருவமும் அமைக்க வேண்டும். இடப்பாகமான மஹாவிஷ்ணுவின் பாகத்தில் சங்கு, கடக முத்திரையுடன் கூடிய இரண்டு கையையும் பீதாம்பரத்துடன் கூடியதாகவும் மஹாவிஷ்ணு பாதி சரீரம் அமைக்க வேண்டும் என ஹரிஹரார்த்தமூர்த்தியை அமைக்க வேண்டும் என கூறப்படுகிறது.

பிறகு பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. கூறப்பட்ட காலத்தை பரிøக்ஷ செய்து முன்பு போலவே அங்குரார்ப்பணம் செய்து ரத்ன நியாசம், நயனோன் மீலனம் பிம்பசுத்தி, கிராமபிரதட்சிணம் ஜலாதிவாசம் முதலிய கிரியைகள் சாமான்யமாக ஸ்தாபனத்தில் சொல்லப்பட்ட முறைப்படி வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு மண்டபம் அமைக்கும் முறை விளக்கப்படுகிறது. குண்டம் அமைக்கும் முறையில் விசேஷம் கூறப்படுகிறது. பிறகு சில்பி விசர்ஜனம், பிராம்மண போஜநம்புண்யாகபிரோக்ஷணம் இவைகள் செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து, அங்கு முறைப்படி சயனம் கல்பிக்கவும். பிறகு ஜலாதிவாசத்திலிருந்து எடுத்து வரப்பட்ட பிம்பங்கள் ஸ்னபநாபிஷேகம் செய்து பிறகு இருவர்களின் இரண்டு கைகளில் ரக்ஷõபந்தனம் செய்யவும் என கூறி ரக்ஷõபந்தனம் கூறப்படுகிறது. பிறகு பிம்பத்தை சயனத்தில் அமர்த்தி சயனாதி வாச விதி கூறப்படுகிறது. கும்பம் அதிவாசம் செய்யும் முறையும் விளக்கப்படுகிறது. அங்கு பரமேஸ்வர சிவகும்பம் அமைத்து உமாதேவியின் தலைப்பாகத்தில் வர்தனியை ஸ்தாபிக்கவும். ஹரிஹரார்த்த மூர்த்தி விஷயத்தில் மஹாவிஷ்ணு சிரோதேசத்தில் மஹாவிஷ்ணு கும்பம் அமைக்கவும். அந்தந்த சரீரத்தின் அர்த்த பாகத்தை தியானித்து பூஜை செய்யவும் சுற்றிலும் வித்யேஸ்வரர்கள் அதிஷ்டிதமாக ஸ்தாபித்து சந்தனம் புஷ்ப தூபதீப நைவேத்யங்களால் பூஜித்து மூர்த்தீஸ்வரர்களையும் முறையே தத்வ தத்வேஸ்வரர்களையும் அவர்கள் வியாபித்து உள் இடங்களையும் குறிப்பிட்டு ஹரிஹரார்தமூர்த்தி இவர்களுக்கு மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களின் விஷயத்தில் சிறப்பு கூறப்படுகிறது. பிறகு ஹோம முறையும் திரவ்யங்களும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரண்டாவது நாள் மூர்த்திபர்களுடன் கூடி ஸ்வாமி, கும்பம், அக்னி இவைகளை பூஜிக்கவும் யஜமானன் மூர்த்திபர்களையும் ஆசார்யனையும் வஸ்திர, ஸ்வர்ணாங்குலீகம் இவைகளால் பூஜித்து அவர்களுக்கு தட்சிணை கொடுக்கவும். பிறகு நல்ல முகூர்த்த காலம் ஏற்பட்ட பொழுது ஆசார்யன் மந்திர நியாசம் செய்யவும் என கூறி அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரார்த்த மூர்த்தி இவர்களின் வேறுபாடு நிரூபிக்கப்படுகிறது. உத்ஸவம், ஸ்நபனம், அதிகமான நைவேத்யம் இவைகள் செய்ய வேண்டுமா வேண்டாமா என விளக்கமாக கூறப்படுகிறது. பிறகு இங்கு சொல்லப்படாதவற்றை அந்ததந்த ஸ்வாமியை ஸ்தாபிக்கும் முறையில் கிரஹித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. முடிவில் போகத்தையும் மோக்ஷத்தையும் கொடுக்க வல்லது என ஹரிஹரார்த்த மூர்த்தி, உமார்த்த மூர்த்தி பிரதிஷ்டை சொல்லப்பட்டது என பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறாக 60வது படல கருத்து சுருக்கம் ஆகும்.

1. விஷ்ணு உமார்த்த பிரதிஷ்டையை அதன் லக்ஷணத்துடன் சொல்கிறேன்.

2. இடது பாகத்தில் பார்வதியின் சரீரத்தையும் வலது பாகத்தில் சிவ சரீரத்தின் பாதியையும், வலது பாதியில் ஜடாமகுடமும், பிறை சந்திரனுடன் கூடிய சிகையையும்

3. இடது புறம் கரண்ட மகுடமும் நெற்றியில் சுருண்ட கேசத்துடன் கூடியதாகவும் வலப்புறம் அரை நெற்றிக் கண்ணை உடையதாகவும்

4. இடது காதில் சுருண்ட முடியும் கர்ணபத்ரத்துடன் கூடியும் வலது காதில் மகர குண்டலத்துடன் கூடியோ இல்லாமலும்

5. வலது மேல்கையில், மழுவும், அபயமும், அஸ்த்ரத்தை இடது கையில் கருங்குவளை மலர் தரித்ததாகவோ தேவியின் பிரதிஷ்டையில் கூறப்பட்டுள்ள ஆயுதத்தை ஏந்தியவராகவோ கண்ணாடி போலழகான உடையதாகவும்

6. கண்ணாடி அழகான வட்ட முக வடிவிலும் அதன் முஷ்டி பாகம் அதன் பாதி அளவாகவும் அதன் காம்பு மொட்டு போன்றும் கால்பக்கம் அழகாக உள்ளதாகவும் அமைக்க வேண்டும்.

7. உமையின் பாகம் ஸ்தனத்தோடு கூடியதாயும் அழகிய வஸ்த்ரம் உடுத்தியவராயும் வலது புறம் புலித்தோலுடையதாயும் இடது பாதம் சிறிது வளைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

8. இடது கால் நன்றாக நின்றதாயும் கொலுசு என்ற ஆபரணத்தினால் அலங்கரிக்கப்பட்டதாயும் மூன்றங்குல அளவு சிறிது வளைந்தும் பிறகு ஒன்பது அங்குல அளவு வளைந்ததாகவும் அமைக்க வேண்டும்.

9. இடது பாகம் பச்சை நிறமுள்ள தேகமாகவும் வலது பாகம் வெண்மையான காந்தி உடையதாயும் ஹ்ருதயம் குஹ்யம் இவைகளின் இடது வலது பாகத்தில்

10. சந்திரனின் இடப்பாகத்தை விட்டு நேராக நிற்கும் பாகத்தின் நுனியில் நடுபாகத்தில் சூத்திர மிடவும் உத்பல ஹஸ்தத்தின் உயரமும் ஸ்தன மொட்டும்

11. அதன் இடைவெளி பன்னிரெண்டங்குலமோ பதினான்கு அங்குலமாகவோ அமைக்கவும். ஈஸ்வர பாகத்தின் பக்கவாட்டுக்கை மத்தியில் உள்ளகை இவைகளின் இடைவெளி ஆறங்குலமாகும்.

12. கால் கட்டைவிரல், குதிகாலின் இடைவெளி பதினைந்து அல்லது ஐந்து அங்குலமாகும். மற்ற உருவ அமைப்புகள் சந்திரசேகர பிம்பத்தைப் போல் செய்ய வேண்டும்.

13. இவ்வாறு அர்தநாரீஸ்வரர் லக்ஷணம் கூறப்பட்டு ஹரிஹரார்த்த மூர்த்தியை பற்றி கேளுங்கள். முன்பு போலவே மஹேச்வரரின் பாதி உருவத்தையும் அமைக்க வேண்டும்.

14. விஷ்ணு பாகத்தில் சங்கு, கடகமுத்ரையோடு கூடிய இரண்டு கையை உடையவராகவும், பீதாம்பரத்துடன் எல்லா ஆபரணங்களையும் தரித்தவராயும்

15. மீதி உருவத்தை சந்திர சேகரரைப் போன்றே ஸூத்ரம் போடும், முறையில் செய்யவும். இவ்வாறே (ஹரிஹரார்த்த) சங்கர நாராயண மூர்த்திக்கு பிரம்ம பாகம் முதலியவைகளைச் செய்ய வேண்டும்.

16. இவ்வாறு பிம்பத்தை அமைத்து உத்தமமான ஆசார்யர்கள் பிரதிஷ்டையை செய்யவும். அவ்வாறான பிரதிஷ்டையை சுருக்கமாகக் கூறுகிறேன் கேளுங்கள்.

17. பிரதிஷ்டா காலம் முன்பே கூறப்பட்டுள்ளது. அவ்வாறே அங்குரார்ப்பணம் ரத்ன நியாஸம், நயனோன்மீலனம், மண் முதலியவைகளால் பிம்பசுத்தி

18. கிராம பிரதட்சிணம், ஜலாதிவாசம் இவைகளை ஸாமான்ய ஸ்தாபனத்திற்கு சொல்லப்பட்ட வழியில் செய்ய வேண்டும்.

19. மேலும் அர்தபாகத்தை அந்த தேவ மூலமந்திரமாக அர்ச்சிக்க வேண்டும். ஐந்து, ஒன்பது குண்டங்கள் ஒரு குண்டத்தையோ அமைக்க வேண்டும்.

20. ஈசானத்தில் சதுரகுண்டம் ஒன்றை அமைக்கவேண்டும். சில்பியை அனுப்பிவிட்டு பிராம்மண போஜனத்தை செய்யவும்.

21. புண்யாகப்ரோக்ஷணம் செய்து, ஸ்தண்டிலம் அமைக்கவும். அதில் சயனம், அமைத்து ஸ்நபனம் தனியாகச் செய்து ரக்ஷõ பந்தனத்தை

22. இருவரின் முன்பாகமான கையிலும் செய்ய வேண்டும். பிம்பத்தை சயனத்தின் மேல் ஏற்றி பணிவுடன் படுக்க வைக்க வேண்டும்.

23. சிவனுடைய சிரோபாகத்தில் சிவ கும்பத்தையும் அம்பிகைக்குரிய சிரோ தேசத்தில் வர்த்தனீ கலசத்தையும் ஸ்தாபிக்க வேண்டும்.

24. விஷ்ணுவினுடைய சிரஸ்தானத்தில் விஷ்ணு கும்பத்தையும் ஸ்தாபிக்கவும். அந்தந்த சரீரத்தின் பாதி பாகங்களை அங்கு குருவானவர் தியானித்து பூஜிக்க வேண்டும்.

25. ஆசார்யர் சுற்றிலும் எட்டு குடங்களில் வித்யேச்வரரை பூஜிக்கவும் சந்தனம் புஷ்பம், தூபம், தீபம் நைவேத்யம் முதலியவைகளை கொடுத்து

26. தத்வ தத்வேச்வரந்யாசத்தை செய்து அடைந்ததாகப் பாவித்து க்ஷமா முதலான எட்டு மூர்த்திகளையும் அதன் மூர்த்தீசர்களையும் தியானம் செய்யவேண்டும்.

27. மூர்த்தீசர்களைப் பூஜிப்பதில் சற்று மாறுதல் கூறப்படுகிறது. சர்வன் பசுபதி, உக்ரன், ருத்ரன் என்ற மூர்த்திஸ்வரர்களும் சேதனா, பலோத்கடியையும்

28. தாத்ரீயையும் விப்வீயையும், இந்த்ராதி அஷ்டதிக்குகளில் வரிசையாக பூஜிக்க வேண்டும். விஷ்ணுவின் அர்த்த பாகப்ரதிஷ்டையில் ஸர்வ, பசுபதி உக்ர, ருத்ரன்களையும்

29. புரு÷ஷாத்தமன் விஷ்ணு கோவிந்தன் லக்ஷ்மிநாயகன் எனவும் பூஜிக்க பஞ்சமூர்த்தி ரூபமான நியாஸத்தில் மூர்த்திகள் முன்போல்

30. மேற்கில் பிரம்மா, கேசவன், ருத்ரன், ஞானி, இச்சா, என்றும் கவுரியின் பாதி சரீரத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன்

31. ஜனார்த்தனன் புரு÷ஷாத்தமனையும் நியாஸம் செய்யவேண்டும். விஷ்ணுவின் பாதி பாகத்தில் பஞ்ச மூர்த்தீசர்களை நியாஸம் செய்யவேண்டும்.

32. சிவாம்சத்தில் சிவ மந்திரங்களையும் மற்ற அம்சத்தில் சரீரத்திற்கேற்ற மந்திரங்களையும் பூஜிக்க ஸம்ஹிதா மந்திரங்களினால் சிவனுடைய பாதி பாகத்தில் பூஜிக்க வேண்டும்.

33. அவ்வாறே மற்ற தேவதைகளுக்கு ஏற்ற ஈசாதிமூல மந்திரங்களால் பூஜிக்க இவ்வாறே மற்ற மந்திரங்களையும் புத்தியினால் அறிந்து பூஜிக்க வேண்டும்.

34. குண்ட ஸம்ஸ்காரத்தை செய்து அக்னியை அதில் பிறப்பிக்க வேண்டும். அந்தந்த திக்குகளில் அந்தந்த மூர்த்தீசர்களை ஆவாஹித்து

35. சமித்து, நெய், அன்னம், பொறி, எள், மூங்கில் யவைகளுடன் எல்லா மந்திரங்களாலும் பிரதான குண்டத்தில் ஆசார்யர் முன்போல் ஹோமம் செய்ய வேண்டும்.

36. புரசு, அத்தி, அரசு, ஆல் முதலிய சமித்துகளை கிழக்கு முதலான திக்குகளிலும் வன்னி, நாயுருவி, வில்வம் மயில் கொன்றை முதலியவற்றை அக்னி முதலான விதிக்குகளிலும் ஹோமம் செய்ய வேண்டும்.

37. பிரதான குண்டத்தில் புரசு, விசேஷமாக கூறப்படுகிறது. விஷ்ணு பாதிபாக விஷயத்தில் துளஸி, புரசு, இரண்டும் பிரதானத்தில் விசேஷம்

38. பிறகு இரண்டாவது நாளில் தேவர்களையும் கும்பங்களையும் அக்னியையும் பூஜிக்க வேண்டும். சந்தனம், வஸ்திரம், பொன் மோதிரம், முதலான உபசாரங்களோடு

39. மூர்த்திபர்களுடன் கூடிய ஆசார்யனை பூஜித்து தட்சிணையைக் கொடுக்கவும். நல்ல சுப முஹூர்த்தத்தில் மந்திர நியாஸத்தை செய்ய வேண்டும்.

40. கும்பங்களின் மந்திரங்களையும் வர்தனியின் மந்திரத்தையும் முறையாக சுவாமியிடத்தும் அம்பிகையிடத்தும், சமர்ப்பிக்கவும் பாதி விஷ்ணுவாக விஷயத்தில் வர்தனியை பீடத்தில் சேர்க்க வேண்டும்.

41. கிருஷ்ணருடைய கும்பத்திலிருந்து கிருஷ்ண பீஜத்தை கிருஷ்ணருடைய ஹ்ருதயத்தில் சேர்க்கவும். மற்ற கும்பங்களின் பீஜத்தை பீடத்தை சுற்றிலும் சேர்த்து நியாஸம் செய்ய வேண்டும்.

42. உத்ஸவம், ஸ்நபனம் மிகுந்த நைவேத்யம் முதலியவைகளை செய்யவும். செய்யாமலும் இருக்கலாம் இங்கு கூறாப்படாததை அந்தந்த மூர்த்தி ஸ்தானத்தில் கூறப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும்.

43. பக்தியையும் மோக்ஷத்தையும் கொடுக்கக்கூடிய விஷ்ணுமார்த்தி பிரதிஷ்டை இவ்வாறு கூறப்பட்டது.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் விஷ்ணு உமார்த்த பிரதிஷ்டா விதியாகிற அறுபதாவது படலமாகும்.
படலம் 59: கல்யாணோத்ஸவ முறை

59வது படலத்தில் கல்யாணம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் பொதுவாக எல்லா ஸ்வாமிக்கும் கல்யாண கர்மா கூறப்படுகிறது என்பது பிரதிக்ஞை. பிறகு கல்யாண கர்மாவின் காலம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு கல்யாண விதி விளக்கப்படுகிறது. அங்கு கொட்டகை மண்டபம் இஷ்டமான தேசம் இவைகளில் கோசாணத்தால் மெழுகப்பட்ட இடத்தில் ஸ்தண்டிலம் அமைத்து வெள்ளை வேஷ்டி தரித்தவரும், யோக்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவரும், பாட்டு பஞ்சவாத்யம் இவைகளால் ஆன சப்தங்களாலும், கண்ணாடி, குடை சாமரம் இவைகளாலும், பலவித தூபம், அனேக தீபங்களோடு, கூடியதுமான பல்லக்கில் ஏற்றி அழைத்து வரப்பட்ட பரமேஸ்வரனை கிழக்கு முகமாக ஸ்தாபிக்கவும். பரமேஸ்வரனுக்கு முன்பாக மணல் முதலிய திரவ்யங்களால் ஸ்தன்டிலம் அமைத்து ஸ்வாமிக்கும் ஸ்தண்டிலத்திற்கும், நடுவில், வஹ்னியை ஸ்தாபிக்கவும். அக்னியின் இடது பாகத்தில் வடக்கு முகமாக பிரம்மாவையும் மஹாவிஷ்ணுவை வலது பாகத்திலும் தெற்கு முகமாக வஸ்திரம் முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்டதாக ஸ்தாபிக்கவும். பிறகு ஆசார்யன் ஸ்வாமிக்கு பாத்யாசமனம் கொடுத்து அணிந்து கொள்வதற்காக இரண்டு வஸ்திரம் கொடுக்கவும். பிறகு ஸ்தண்டிலத்தில் அக்னியை வைத்து 5 ஸம்ஸ்காரங்களை செய்யவும். பிறகு ஹோமம் செய்யவும் பூர்ணாஹுதி முடிவில் எல்லா ஆபரணத்தாலும் அலங்காரம் செய்யப்பட்ட கவுரியை ஸ்வாமிக்கு வலப்பாகத்தில் வைத்து பாத்யயாசமனம் கொடுத்து அம்பாளுக்கு மங்களசூத்திரம் கொடுக்கவும்.

அணிந்து கொள்வதற்காக இரண்டு வஸ்திரம் அம்பாளுக்கு கொடுத்து பூஜிக்கவும் என்று கூறி மங்கள சூத்திரம் கொடுக்கும் முறை கூற இங்கு ஹோமமுறை மங்கள சூத்திரம் கொடுக்கும் முறை மந்திரத்துடன் கூடியதாக சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு அம்பாளின் அருகில் லக்ஷ்மியை ஸ்தாபித்து ஆசார்யன் ஸ்வாமி அம்பாளுக்கு ரக்ஷõபந்தனம் செய்யவும் என ரக்ஷõபந்தனம் செய்யும் முறை கூறப்பட்டு பஞ்சாங்க பூஷணம் உடையவரும் நன்கு சிவாகமம் அறிந்தவருமான ஆசார்யனால் உத்தரவு இடப்பட்ட அதே லக்ஷணம் உடைய விஷ்ணு போல் தியானித்து தன்னுடைய கொண்டியால் சிவனுடைய கையில், தீர்த்தம் விடவும் என ஜல தானம் தாரை வார்க்கும் முறை கூறப்படுகிறது. ஸ்வாமி அம்பாளுக்கு விபூதி கொடுக்கவும். ஸ்வாமிக்கு மதுபர்க்கம் தாம்பூலம் கொடுக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு கவுரியின் ஹ்ருதயத்தில் சிவ ஹஸ்த நியாசமும் அம்பாளின் வலது காதில் பீஜ முக்ய மந்திர ஜபமும், அம்மி மிதிப்பதும், லாஜ ஹோமமும் முறைப்படி கூறப்படுகின்றன. பிறகு சிவாக்னி பஸ்மாவிற்கும் விசர்ஜனம் செய்யவும். பிறகு நான்காவது தினத்தில் நான்காவது தின கார்யம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது. பிறகு தம்பதிகளின் சயன விதி நிரூபிக்கப்படுகிறது. பிம்பமாய் இருந்தால் உத்ஸவம் செய்யவும் அசலபிம்பமாய் இருந்தால் அதே ஆசனத்தில் ஸ்தாபிக்கவும் என கூறி பிம்பங்களின் ஸ்தாபன முறை கூறப்படுகிறது. இவ்வாறு மற்ற தேவர்களுக்கு கல்யாண உத்சவம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு தனியான பீடத்தை உடைய அம்பாளுக்கும் கல்யாணம் செய்யும் விதி கூறப்படுகிறது. பிறகு கல்யாண மூர்த்தி பிரதிஷ்டை செய்பவனுக்கு விசேஷமாக பலன்கள் கூறப்படுகிறது. இதை பிரதிஷ்டை செய்பவன் தன்னுடைய சரீரத்தின் முடிவில் எந்த ஸ்தானத்தை அடைந்து பக்தர்கள் அவனை திருப்பி அனுப்பாமால் இருக்குமோ அப்பேர்பட்ட சிவஸ்தானத்தை அடைகிறான் என கூறப்படுகிறது. இவ்வாறு 59வது படலத்தின் கருத்து சுருக்கம் ஆகும்.

1. எல்லா தேவதைகளுக்கும் பொதுவாக கல்யாணம் செய்ய வேண்டிய முறைகள் பற்றி சொல்கிறேன். முன் நிச்சயிக்கப்பட்ட சுபமுஹூர்த்தத்திலோ அல்லது வேறு தினத்திலோ

2. மூன்றாம் நாளிலோ, நான்காம் நாளிலோ பகலிலோ நடு இரவிலோ விருப்பமான இடத்திலோ கொட்டகையிலோ மண்டபத்தில் பசுஞ்சாணத்தால் மெழுகி

3. அங்கு ஸ்தண்டிலம், வெள்ளை வஸ்திரத்தால் மூடப்பட்ட மேடையில் மூர்த்தியை ஸ்தாபிக்க வேண்டும். அலங்கரிக்க உகந்தவைகளால் அலங்கரித்து

4. ஸங்கீதம், பஞ்சகோஷம், குடைகள் சாமரங்கள், கண்ணாடிகள், தூபங்கள், தீபங்கள், வரிசைகளுடன் பல்லக்கு முதலியவற்றில் கொண்டு வந்து

5. அதற்கு முன்னால், மணல், முதலியவற்றால், மேடை அமைத்து கிழக்கு முகமாக வைத்து, மூர்த்திக்கும், ஸ்தண்டிலத்திற்கும் நடுவில் அக்னியை ஸ்தாபிக்க வேண்டும்.

6. அக்னி குண்டத்திற்கு வலது புறத்தில் வடக்கு முகமாக பிரம்மாவையும் இடது புறத்தில் தெற்கு நோக்கியபடி மஹாவிஷ்ணுவையும் வஸ்திர ஆபரணங்களாம் அலங்கார பூஷிதராக இருக்கச் செய்து

7. ஆசார்யரானவர் விஷ்ணு மூர்த்திக்கு உடுத்துக் கொள்ளவும் மேல் வஸ்திரத்திற்காகவும் கரையுடன் கூடிய ஹ்ருதய மந்திரத்தால் பாத்யம் ஆசமனம் கொடுத்து உடுக்க இரண்டு வஸ்திரம் கொடுத்து போர்த்த என இரு பட்டு வஸ்த்ரங்களால் பிரபுவை அலங்கரித்து

8. ஸ்தண்டிலத்தில் அக்னியை உண்டுபண்ணி பஞ்ச ஸம்ஸ்காரங்களைச் செய்ய வேண்டும். ஷடங்க மந்திரத்துடன் பூஜித்து உகந்த ஸமித்து நெய், அன்னம் இவைகளுடன் கூட

9. பூர்ணாஹுதியை கொடுத்து குருவானவர் அப்பொழுது கவுரியை ஸர்வாபரண பூஷிதையாக சுவாமிக்கு வலதுபுறத்தில் ஹ்ருதய மந்திரத்தால் ஸ்தாபித்து

10. தேவிக்கு பாத்யம், ஆசமனம், அர்க்யம், முதலானவற்றை அந்தந்த மந்திரங்களினால் கொடுத்து, ஹ்ருதய மந்திரத்தால் மங்கல சூத்திரத்தையும் தரிக்க வேண்டும்.

11. உடுத்த போர்த்த இரு வஸ்திரங்களையும் கொடுக்க வேண்டும். தேவியின் அருகில் ஸர்வாலங்கார பூஷிதையாக மஹாலக்ஷ்மியை ஸ்தாபிக்க வேண்டும்.

12. ஆசார்யர் சுவாமி அம்பாளுக்கு ரக்ஷõ பந்தனத்தை செய்து சிவத்விஜ குலத்தவர் சிவாகம சமர்த்தர்களுக்கும் ரக்ஷõ பந்தனத்தை செய்ய வேண்டும்.

13. தலைப்பாகை அங்க வஸ்திரத்துடன் பஞ்சாங்க பூஷிதர்களாக இருக்கும் குருவினால் ஏவப்பட்ட வேறொரு ஆசார்யன்

14. இரு வஸ்திரங்கள் மோதிரம் இவை உடையவராய். தன் சரீரத்தை விஷ்ணு மயமாகப் பாவித்து இரண்டு கைகளால் தரித்த கெண்டியால் ஹ்ருதய மந்திரத்தினால் ஜலத்தை கொடுக்க வேண்டும்.

15. மற்றொரு கரத்தில் இருவர்க்கும் விபூதி கொடுத்து பிறகு புண்யாஹத்தை செய்ய வேண்டும். பின் வேத சூத்திரங்களையும் ஜபிக்க வேண்டும்.

16. அக்னியில் பதினாறு சமித்துகளை சிவ அங்க மந்திரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். வெல்லம் பால், நெய், சேர்ந்த மதுவர்க்கத்தை ஹ்ருதய மந்திரத்தால் சுவாமிக்கு கொடுத்து

17. தத்புருஷ மந்திரத்தினால் ஆசமனத்தைக் கொடுத்து மறுபடியும் ஹ்ருதய மந்திரத்தினால் பதினாறு முறை நெய் ஹோமம் செய்து மறுபடியும் பதினாறு எண்ணிக்கையில் நெய்யினால் ஹோம் செய்து

18. காய்கறிகளுடன் கூடிய நைவேத்யத்தை செய்து சாந்தியின் பொருட்டு ஹ்ருதய மந்திரத்தால் ஹோமம் செய்து தாம்பூலத்தையும் கொடுத்து மிகவும் காரணராயுள்ள ஸ்வாமியை ஸ்தோத்தரித்து

19. இரண்டு தால அளவும் முடிச்சுடன் கூடிய முற்பது தர்பைகளால் ஆன கூர்ச்சத்தை சிவ ஹஸ்தமாக தியானித்து தேவியின் இதயத்தில் ஹ்ருதய மந்திரத்தால்

20. தேவியின் வலது காதில் ஆசார்யர் மூலமந்திரத்தை ஜபிக்க வேண்டும். இடப்பக்கம் நெல், அரிசியுடன் கூடிய ஸ்தண்டிலத்தில் அம்மிக்கல்லை வைக்கவும்.

21. முன்மாதிரி சுவாமியின் கையினால் தேவியின் வலது பாகத்தை பிடித்து ஹ்ருதிய மந்திரத்தால் ஆசார்யர் பாத தலத்தை அம்மியின் மேல் வைக்க வேண்டும்.

22. சிவபெருமான் உத்தரவினால் பட்டாடை முதலியவற்றால் விஷ்ணுவை சந்தோஷிக்கச் செய்ய வேண்டும். முன்போல் தர்பையால் அமைத்த கையை நான்காக அமைத்து

23. சிவ ஹஸ்த்தம் இரண்டு தேவியின் கையிரண்டு என எண்ணி பிறகு அக்னியை பிரகாசிக்கச் செய்து அந்த கைகளால்

24. மிகு வெண்மையானதும், அஸ்த்ர மந்திரத்தால் சோதிக்கப்பட்டதுமான நெற்பொறிகளை அக்னியில் சேர்க்கவும். மேற்கூறிய வேறொரு ஆசார்யனுடைய மோதிரம் அணிந்த கையினால்

25. அந்த அக்னியில் ஹ்ருதய சிவ மந்திரத்தால் பொறியை கொடுத்து ஹோமம் செய்து ஆசார்யர் அக்னியை பிரதட்சிணம் செய்து அம்மியை தொட்டு பிறகு

26. இரண்டாவது முறை பிரதட்சிணம் செய்து, பொறி ஹோமம் செய்ய வேண்டும். மூன்றாவது பிரதட்சிணம் செய்து பொறியுடன் வ்யாஹ்ருதி ஹோமமும் செய்ய வேண்டும்.

27. நூற்றி எட்டு தடவை ஹோமம் செய்து கடைசியில் பூர்ணாஹுதியும் செய்து அக்னியில் இருக்கும் சிவத்தை ஸாங்கமாக பூஜித்து

28. சிவாக்னியை விஸர்ஜனம் செய்து அந்த விபூதியையும் நீக்க வேண்டும். தேவர்களை நிறைய அளவு சந்தனம், ஸ்வர்ணம், புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.

29. பின் நான்காம் நாளில் செய்ய வேண்டிய க்ரியைகளைச் செய்ய வேண்டும். அதே நாளிலோ பகலிலோ நடு இரவிலோ

30. பஞ்ச ஸம்ஸ்காரங்களினால் ஸம்ஸ்கரிக்கப்பட்ட அக்னியால் சமித்து, நெய், அன்னம் முதலியவற்றால் சிவ மந்திரத்தால் நூறும் அங்க மந்திரத்தால் பத்து ஆஹுதியும் செய்ய வேண்டும்.

31. அகோராஸ்த்ர மந்திரத்தால் நூறு ஆஹுதியும் சில மூலமந்திரத்தால் பூர்ணாஹுதியும் செய்யவும். சில சக்திகளை ஐந்து வகை தோல்களினாலோ வஸ்திரங்களாலோ ஸயனம் அமைத்து

32. கவச மந்திரத்தால் அவற்றை பூஜித்து புதிய ஊஞ்சலில் தம்பதிகளை ஸ்தாபித்து அப்பம் முதலியவற்றை நிவேதித்து ஸந்தோஷிக்கச் செய்ய வேண்டும்.

33. ஸ்நபனம் செய்தோ, செய்யாமலோ இறுதியில் சிவோத்ஸவத்தை செய்ய வேண்டும். ஆஸநத்தோடு கூடியதாக மூலபிம்பத்தையோ உத்ஸவ பிம்பத்தையோ ஸ்தாபிக்க வேண்டும்.

34. தேவன், தேவி, மஹாலஷ்மி இவர்களுக்கு அக்னியை ஸ்தாபித்து அக்னிக்கு வலப்புறமோ இடப்புறமோ பிரம்மாவை விஷ்ணுவையும் மாற்றி இருத்தி

35. இவ்வாறே எல்லா தேவர்களுக்கும் விவாஹகார்யத்தை செய்ய வேண்டும். தனி பீடமுள்ள தேவியர்களுக்கும் மூல லிங்கத்திற்கும் இவ்வாறே செய்ய வேண்டும்.

36. மேலும் லக்ஷ்மி மஹா விஷ்ணுவுடன் பிரம்மாவையும் விட்டுவிட்டு முன் சொல்லியபடி அவர்களை ஸ்தண்டிலத்திலேயே சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும்.

37. மூலலிங்க விவாக விஷயத்தில் வெளியில் கருவறையிலிருந்து வெளி மண்டபத்தில் ஸ்தண்டிலத்தில் தேவியை ஆவாஹித்து விவாஹ கர்மாவை செய்ய வேண்டும்.

38. கல்யாண மூர்த்தியின் பிரதிஷ்டையை யார் செய்கிறாரோ அவர் தன் பந்து ஜன வகைகளாலும் எல்லா மக்களும் போற்றப்படுபவராய்

39. ஆயுள், லக்ஷ்மி கடாக்ஷம் புத்திர பவுத்திரர்களுடன் கூடியவராய் பூவுலகில் அரசனுக்கும் கிட்டாத சுகத்தை அடைந்து

40. சரீர முடிவில் எதை அடைந்து மீண்டும் திரும்புவதில்லையோ அப்பேர்பட்ட சிவபதத்தை பக்தர்கள் அடைவார்கள்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் கல்யாண கர்மவிதியாகிய ஐம்பத்தி ஒன்பதாவது படலமாகும்.
படலம் 58: கல்யாணமூர்த்தி பிரதிஷ்டை

58வது படலத்தில் கல்யாணமூர்த்தி பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. முதலில் லக்ஷண அமைப்பு முறையாக கல்யாண மூர்த்தியின் பிரதிஷ்டை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. சூத்திர கோடிடும் முறை கூறப்படுகிறது. பிறகு அம்பாளை ஸ்வாமியை அனுசரித்து செய்ய வேண்டும் என கூறி அம்பாளின் அளவு கூறப்படுகிறது. பிறகு தேவியின் அடுத்த பாகத்தில் சர்வலக்ஷணத்துடன் கூடிய தேவியை அமைக்க வேண்டும் என கூறி அந்த லக்ஷ்மியின் லக்ஷணமும் அளவு முறையும் கூறப்படுகிறது. பிறகு சூத்திரம் இடும் முறைப்படி ஸ்வாமி அளவை அனுசரித்து விஷ்ணுவின் லக்ஷணமும் பிரம்மாவின் அமைப்பும் செய்ய வேண்டும் என கூறி அமைக்கும் முறையை விளக்குகிறார். பிறகு அக்னி குண்டத்திற்கும் அந்த குண்டத்தில் அக்னியை அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டாவிதி கூறப்படுகிறது. முன்பு போல் காலத்தை பரிக்ஷித்து அங்குரார்பணகர்மா முன்பு கூறியபடி செய்யவும். பிறகு ஸ்வாமியின் வலது பாகத்தில் பிரம்மாவையும் வடக்கு பாகத்தில் விஷ்ணுவையும் கவுரியின் தெற்கு பாகத்தில் லக்ஷ்மியையும் வைத்து ஸ்வாமிக்கும் மஹாவிஷ்ணுவுக்கும் நவரத்னம் நியாசமும் மற்றவர்களான பரும்மா கவுரி லக்ஷ்மி ஆகியவர்களுக்கு ஸ்வர்ணமும் தியாசம் செய்யவும் என்று ரத்ன நியாச முறை கூறப்படுகிறது. பிறகு அந்தந்த படலத்தில் கூறியுள்ளபடி நயனோன் மீலனம் செய்ய வேண்டும் என நயனோன் மீலன விதி கூறப்படுகிறது. பிறகு பிம்பசுத்தி, கிராமபிரதிஷ்ணம் செய்து ஜலாதிவாசம் செய்யவும் என ஜலாதி வாச முறை கூறப்படுகிறது. நடுவில் பரமேஸ்வரன் அவரின் வலது இடது பாகத்தில் பிரம்மா, விஷ்ணு, பிரம்மாவின் இரண்டு பக்கத்திலும் கவுரி லக்ஷ்மியையும் ஸ்தாபிக்கவும் என்று ஜலாதிவாசத்தில் மூர்த்திகளை ஸ்தாபிக்கும் முறை கூறப்பட்டது. பிறகு ஸ்வாமி அம்பாளுக்கு இருபாக மண்டபம் அமைத்து அதில் குண்டம், வேதிகை அமைக்கும் முறையும் கூறப்படுகிறது. இரு மண்டபத்திலும் சில்பியின் திருப்திக்கு பிறகு பிராம்மண போஜனம் புண்யாக பிரோக்ஷணம், வாஸ்து ஹோமம் இவைகளை முறைப்படிசெய்து இவ்வாறு சம்ஸ்காரம் செய்யப்பட்ட இரண்டு மண்டபத்திலும் ஸ்தண்டிலம் அமைத்து முறைப்படி சயனம் அமைக்க வேண்டும்.

ஜலாதிவாச மண்டபத்திலிருந்து எடுத்து வரப்பட்ட ஈஸ்வரன், பிரம்மா, விஷ்ணு, கவுரி, லக்ஷ்மி ஆகியவர்களுக்கு ஸ்நபனாபிஷேகம் செய்து தனித்தனியாக ரக்ஷõபந்தனம் செய்து ஈஸ்வரனை ஈஸ்வரனுக்காக அமைக்கப்பட்ட மண்டபத்தில் ஈஸ்வரனை சயனாதிவாசம் செய்யவும். பிறகு அங்கு ஈஸ்வரனின் இடபாக, வலது பாகத்தில் மஹாவிஷ்ணுவையும் பிரம்மாவையும் தனித்தனியான சயனத்தில் அதிவாசம் செய்யவும். அம்பாளுடைய மண்டபத்தில் தேவியை சயனாதி வாசம் செய்து அந்த தேவியின் தெற்குபாகத்தில் லக்ஷ்மியையும் வடக்கு பாகத்தில் அக்னியையும் ஸயனாதிவாசம் செய்யவும். என்று ஸயனாதிவாச முறை விளக்கப்படுகிறது. இங்கு அக்னிக்கு ஜலாதிவாச விதியில் பூஜை செய்யும் முறை கூறப்படவில்லை. ஸயனாதிவாச முறையில் கும்பம் அதிவாசம் செய்யும் முறை பிரயோஜனம் கூறப்படுகிறது. சிவப்பு வஸ்திரத்தால் ஸ்வாமி அம்பாளை மூடவும். மஞ்சள் வஸ்திரத்தால் விஷ்ணுவையும் கருப்பு வஸ்திரத்தால் லக்ஷ்மியையும் வெள்ளை வஸ்திரத்தால் பிரம்மாவையும் போர்த்தவும் என கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மண்டபத்திலும் ஆசார்யர்கள் அவ்வாறே ஒவ்வொரு மூர்த்தியினிடத்திலும் தேசிகர்கள் செய்ய வேண்டிய கார்யங்களை செய்யவும். பிறகு கும்பாதிவாச முறை நிரூபிக்கப்படுகிறது. ஈசனின் சிரோதேசத்தில் சிவகும்பம் வர்தனியையும் அவ்வாறே பிரம்மா விஷ்ணுவிற்கு சிரோதேசத்தில் இரண்டு கும்பங்களையும் ஸ்தாபிக்கவும். தேவிக்கு சுற்றிலும் வாமா முதலிய எட்டு சக்திகளுக்கு எட்டு கும்பம் ஸ்தாபிக்க வேண்டும். ஸ்வாமி கும்பத்தை சுற்றிலும் அஷ்டவித்யேஸ்வரர் எட்டு கும்பம் ஸ்தாபிக்க வேண்டும். அவ்வாறே தேவி, லக்ஷ்மி, அக்னி, இவர்களின் சிரோதேசத்தில் மூன்று கடம் ஸ்தாபிக்கவும். அவரவர்களின் பூஜை முறையில் கூறப்பட்டுள்ளபடி தியானத்துடன் மூர்த்திகளை தனித்தனியாக சந்தனம் முதல் நைவேத்யம் வரை பூஜிக்க வேண்டும்.

தத்வ மூர்தயாதி நியாசம் ஈஸ்வரர் விஷயத்தில் முன்பு போல் செய்யவும். மற்றவர்களுக்கு அவர்களின் பூஜை முறையில் கூறப்பட்டுள்ளபடி தத்வாதி நியாசம் செய்யவும் என கும்ப அதிவாச முறை கூறப்பட்டது. பிறகு குண்ட அக்னி ஸம்ஸ்காரம் செய்து ஹோமம் செய்ய வேண்டும் என கூறி ஹோம முறை திரவ்ய அளவு குறிப்பிடும் முறையாக சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு பூர்ணாகுதியின் முடிவில் தேசிகன் தன்னுடைய கிரஹத்திலோ அந்த பிரதேசத்திலோ களைப்பாறுவதற்காக தூங்கவும் என்று கூறப்படுகிறது. காலையில் நித்யானுஷ்டானம் முடித்து கர்த்தா மூர்த்திபர்களுடன் கூடி ஆசார்யரை வஸ்திர ஸ்வர்ணாங்குலீயங்களால் பூஜித்து - ஐந்து நிஷ்க்கம் முதலான தட்சிணை கொடுக்கவும் என கூறப்படுகிறது. பிறகு மந்திர தியாச முறை கூறப்படுகிறது. பின்பு பூஜித்து ஸ்நபனம் செய்து அர்ச்சனாவிதி முறைப்படி பூஜிக்கவும். முடிவில் நைவேத்யம் கொடுத்து பிரதிஷ்டோத்ஸவத்தை அனுஷ்டிக்கவும் என்று பூஜை முறைகள் மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஸ்வதந்தரமான தேவாலயத்தில் கல்யாண மூர்த்தி பிரதிஷ்டை செய்யும் விஷயத்தில் சில விசேஷம் இருக்கிறது என்று கூறி அந்த விசேஷம் கூறப்படுகிறது. முடிவில் எந்த மனிதன் இவ்வாறு பிரதிஷ்டை செய்கிறானோ அவன் விருப்பப்பட்ட பலனை அடைவான் என கூறப்படுகிறது. இவ்வாறு 58வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. கல்யாண மூர்த்தியின் பிரதிஷ்டையை லக்ஷணத்தோடு கூறுகிறேன். ஜடா மகுடத்தோடு கூட பிறை சந்திரனை சிரசில் தரித்தவராய்

2. மூன்று கண், நான்கு கைகளோடு கூடினவராய் புதிய பால்யத்தினால் கர்வமுடையவராய் சமமான வளைவோடு ஈஸ்வரன் நின்ற திருக்கோலத்தில் இருப்பவராக ஈஸ்வரன் கூறப்படுகிறார்.

3. வலது கால் சிறிது வளைந்தும் இடது கால் ஊன்றியும் சந்திரசேகரரைப் போல் பிரகாசத்தை உடைய மற்ற இரண்டு கைகளையும் உடையவராயும்

4. ஜலத்தை கிரஹிப்பதில் தகுதி உடையதான வலது இடது கையை உடையவராய் தன்னுடைய இடது கையினால் கிரஹிக்கப்பட்டவராய் சந்தோஷமான மனதோடு

5. மூக்கு நுனியிலிருந்து இடது மார்பக மத்யத்தில் தொங்குகின்ற சூத்திரத்தையும் தொப்புள் நடுவிலிருந்து வலது இடது பக்கத்தில் வெளியிலேயும்

6. ஒவ்வொரு அங்குலம், வெளியே தள்ளி தொப்புள் சூத்ரமானது நடுவில் ஆகும். வரத ஹஸ்தத்தினுடைய பின் பகுதியின் நீளம் மணிக்கட்டினுடைய அகலமாகும்.

7. கைகளின் நடுவிலிருந்து, பத்தொன்பது அங்குலம் நடுவில் இடைவெளியாகும். பக்கவாட்டில் ஆறு அங்குல மாத்ரம் நடுவாகும்.

8. குஹ்யத்தினுடைய அடியின் சமயத்தில் வலது கடகமுத்திரையை தொங்குவதாகும். நாபியிலிருந்து மணிக்கட்டு வரையில் ஆறங்குலம் கூறப்படுகிறது.

9. கையினுடைய, நடுவிலிருந்து பக்கம் வரையில் ஐந்தங்குலம் கூறப்படுகிறது. கால்கட்டை விரல்களின் நடுவானது குதிகால்களின் நடுவாகும்.

10. முழங்காலுடைய நடுவில் சூத்திரத்தினுடைய மத்தியம், ஐந்து மாத்திரையாக கூறப்படுகிறது. சந்திரசேகர மூர்த்தியைப் போல் மற்ற கைகளுடைய இடைவெளி கூறப்படுகிறது.

11. உயர்ந்த அந்தனர்களே அம்பாளுடைய அளவு முன்போல் இங்கு கூறப்படுகிறது. அம்பாள் பார்வை முகம், உதடு, கக்ஷம், மார்பக அமைப்பு இருக்க வேண்டும்.

12. அந்த தேவியினுடைய மற்றொரு பாகத்தில் லக்ஷ்மி தேவியானவள் லக்ஷணத்தோடு கூடவும் தேவியினுடைய இடுப்பில் கையை வைத்துக் கொண்டவளாகவும் இருக்க வேண்டும்.

13. லக்ஷ்மீ தேவியின் இடுப்பு பன்னிரண்டு அம்சங்களாலும், அவ்வாறே தொப்புள், மற்றொரு கையும் பன்னிரண்டு அம்சங்களாகும். இரண்டு பாதங்களுடைய கட்டைவிரலின் இடைவெளி பதினெட்டு அங்குலமாகும்.

14. ஆறு அங்குலம் குதிகால்களின் நடுப்பக்கம் உள்ளதாக மஹாலக்ஷ்மி கூறப்படுகிறாள். ஈஸ்வரனுடைய உயரத்தில் பத்தில் ஒரு பாகம் முதல் பதினோரு பாகம் வரையில் பாகத்தின் உயரத்தோடு கூடினவராய்

15. பச்சை வர்ணமாய், கிரீட மகுடத்தோடு சங்க, சக்ரத்தை தரித்துக் கொண்டு, கையில் வைத்துக் கொண்ட

16. ஜலத்தோடு கூடின கெண்டியை உடையவராய் விஷ்ணுவானவர் கூறப்படுகிறார். மூக்கு நுனியிலிருந்து இருக்கக்கூடிய கைகளின் கட்டைவிரல் வரை உள்ளதாக நூலை தொங்க விட வேண்டும்.

17. அந்த சூத்திரத்திலிருந்து தொப்புள் வரையில் நான்கு அங்குலம் கூறப்படுகிறது. கெண்டியினுடைய விஸ்தாரமானது இரண்டு சூத்திரதாள அளவு கூறப்படுகிறது.

18. அவருடைய கழுத்தினுடைய அளவானது ஐந்து அங்குல வளவாகும். உருண்டை வடிவமுமாகும். வாயானது ஐந்தங்குலம் மூக்கானது ஐந்தங்குலமாகும்.

19. அதனுடைய அடியானது, ஐந்தங்குலம், நுனியானது அதனுடைய முக அளவாகும். ஒரு அங்குலம், அதனுடைய பாதஅளவும் அதனுடைய அடியிலிருந்து நுனி வரை மூன்று மூன்று அங்குலமாகும்.

20. ஐந்து மாத்திரை அளவுகளால் விஷ்ணுவின் அழகான இடம் கையில் கெண்டி இருப்பதாகவும் அதன் மேல் வலது கையில் ஜலதாரையை கல்பிக்க வேண்டும். ஸ்வாமியின் வலது கையின் மேல் அம்பாள் கையை வைத்து அதில் விஷ்ணுவினால் இடது கையிலுள்ள நீரை வலது கை மூலம் ஊற்றுவதாக அமைக்க வேண்டும் என்பதாகும்.

21. கெண்டியினுடைய அடிபாகமுடைய கையினுடைய உயரத்தையும் தொப்புள் சூத்திரத்தில் ஸமமாக இருக்க வேண்டும். தொப்புளிலிருந்து மணிகட்டு வரை ஏழு அங்குல அளவு எனக் கூறப்பட்டது.

22. மற்ற மணிகட்டுகளிலிருந்து, நீர்தாரைவரையுள்ளது. ஏழு மாத்திரையளவாகும். வலது கையினால் இடது கையினால் வரதமாகவும் கடகமாகவும் அமைக்க வேண்டும்.

23. விஷ்ணுவிற்கு கூறப்பட்ட படி பிரம்மாவை செய்ய வேண்டும். நான்கு கைகள், நான்கு முகம் ஜடாமகுடத்தோடு செய்ய வேண்டும்.

24. ஒட்யானத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு பூனூல், உத்தரீயத்தோடு குங்குமம் முதலான சோபனத் திரவ்யத்தோடு ஹோமத்திற்கு தயாராய் இருப்பவராகவும் மலர்ந்த முகத்தோடும்

25. மேலே வலது, இடது கைகளில் கமண்டலு, அக்ஷமாலையும் கீழ் வலது, இடது கைகளில் வரத அபயத்தோடும்

26. ஸ்ருவத்தை எடுத்துக் கொண்ட கார்யத்தோடு மற்றொன்று கடகமுத்திரையோடும் நெற்றி மூக்கு நுனி இடை நடுவில் தொப்புள் நடுவில்

27. பிறகு தொப்புளுக்கு மேல் பத்து பாகம் காலினுடைய கட்டைவிரல் அடியில் முதற்கொண்டு எட்டு பத்து அங்குலம்

28. அபயமானது, மார்பகம், தொப்புள் வரையில் மணிக்கட்டு அதன் நடுவில் பதினான்கு மாத்திரையாகும். பக்கத்தை நடுக்கையின் இடைவெளி ஆறு மாத்திரையாகும். முழங்காலுக்கு நடுவில் நின்ற சரீரத்தை சமானமாக உதாரணம் சொல்லப்பட்டது. பத்மாஸநத்தில் இருக்கின்ற பிரம்மாவின் ரூபம் இது மாதிரியாகும்.

29. நேரான நின்ற கோல அமைப்பின் முழங்காலில் இடைவெளி சரீரத்தின் இடைவெளி சமமாகும். இவ்வாறு ப்ரும்மரூபம் அறிந்து அவர் பத்மாஸனத்தில் இருப்பதாகவும் அறிய வேண்டும்.

30. தேவருடைய அங்குல அளவினால் இருபத்திரண்டு அங்குலமாகும். அக்னி குண்டத்தினுடைய ஆக்ருதி மூன்று மேகலை உடையதாகும்.

31. முனி புங்கவர்களே மேகலையானது ஒவ்வொன்றும் ஒவ்வொரு அங்குலம் ஆகும். அக்னியின் ஏழு நாக்கானது, பன்னிரண்டங்குல நீள அகலம் உள்ளதாகவோ

32. குண்டத்தின் நடுவில் இருக்கக்கூடிய அக்னியானது தானாகவே ஐந்து நாக்கை உடையதாகவும் அமைக்கவும். ஒரு முழம் முதல் நடுவில் பிரமானமாக எது ஆகின்றதோ

33. அந்த அளவு உயர்த்திய கை, கால்களுக்கும் அங்கங்களுக்கும் இங்கு கூறப்படுகின்றது. இவை அதிகமாகவோ குறைவாகவோ

34. வில், அம்பு, முதலிய ஆயுதங்களின் எடுத்திருப்பதிலும் வைத்திருப்பதிலும், இந்த முறையாகும். ஆயுதங்களுக்கு எல்லா சாஸ்திரங்களும் நியமங்கள் கூறப்பட்டுள்ளது.

35. ஸர்வ ஸாஸ்திரங்களில் பார்த்த மாத்திரத்திலேயே விளக்கப்படுகின்றது. எல்லா ஆபரணங்களும் இடதுபாக வலது பாக பிரிவாக கூறப்படுகின்றது.

36. எல்லா பிம்பங்களுக்கு தர்சனத்தையும், தேவியர்களுக்கும், மனிதர்களுக்கும், விசேஷமாக கல்யாண மூர்த்தியை காண்பிக்க வேண்டும்.

37. இது மாதிரி அமைப்புமுறை கூறப்பட்டது. பிரதிஷ்டா விதியை கூறுகிறேன். நல்ல காலத்தை அறிந்து முன்போல அங்குரார்ப்பணத்தை செய்து கொண்டு

38. ஈஸ்வரனுடைய வலது பாகத்தில் பிரம்மாவையும் இடது பாகத்தில் விஷ்ணுவையும் கவுரியின் தெற்கில் லக்ஷ்மியையும் உத்தமமான தேசிகர் வைக்க வேண்டும்.

39. பிறகு நவரத்னங்களை ஈஸ்வரனுக்கும், விஷ்ணுவிற்கும் வைக்க வேண்டும். பிரம்மா, கவுரீ, லக்ஷ்மி தேவிகளுக்கு தங்கத்தை வைக்க வேண்டும்.

40. நயனோன் மீலனம் பிறகு செய்து அந்தந்த பிரதிஷ்டையில் கூறப்பட்டபடி பிம்பசுத்தியும் நகரபிரதட்சிணத்தையும்

41. ஜலாதி வாசத்தில் நடுவில் ஈஸ்வரனையும், வலது இடது பக்கத்தில் பிரம்மாவையும், விஷ்ணுவையும், பிரம்ம விஷ்ணுவின் பக்கத்தில் அம்பிகையும், லக்ஷ்மியையும் வைக்க வேண்டும்.

42. முன்பு போல் உருவாக்கப்பட்ட யாக மண்டபத்தை அடைந்து கிழக்கு வடக்கு, கேடயத்தில் ஸ்நான வேதிகையோடு கூடியதில்

43. அந்த பரமேஸ்வரனுக்கு கிழக்கு, தெற்கு, வடக்கிலும், இஷ்டமான இடத்தில் ஒன்பது, ஐந்து, யோனி குண்டங்களோடு கூடியதாகவும்

44. ஸ்னான வேதிகை மூன்றோடும் தேவிக்கு முன்பே சொல்லப்பட்ட படியும் தேவருடைய மண்டபத்தில் ஒன்பது குண்ட அமைப்பிலும்

45. ஐந்து ஒன்று என்ற எண்ணிக்கையின் கணக்கிலே சதுர, எண்கோண, வட்ட குண்டங்களை நிர்மாணிக்க வேண்டும்.

46. சில்பியை திருப்தி செய்வித்து அந்தணர்க்கு உணவளித்தல் புண்யாஹ வாசனம் வாஸ்த்து சாந்தி ஸயனத்திற்கு ஸ்தண்டிலமும் செய்ய வேண்டும்.

47. ஸ்நபனமானது விஷ்ணு, கவுரீ, லக்ஷ்மி, தேவி, இவர்களுக்கு தனித்தனியாக ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். சயனத்தில் ஈஸ்வரனையும், படுக்க வைத்து இடது பாகத்திலும் வலது பாகத்திலும்

48. வேறு படுக்கையில் விஷ்ணுவையும் பிரம்மாவையும் படுக்க வைக்க வேண்டும். தேவியினுடைய மண்டபத்தில் தேவியையும் வலது பாகத்தில் லக்ஷ்மியையும்

49. வடக்கு பக்கத்தில் அக்னியை, சங்கல்பித்து தனியான படுக்கையில் படுக்க வைக்க வேண்டும். சிவப்பு, வஸ்திரத்தினால் ஈஸ்வரனையும் தேவியை மஞ்சள் வஸ்திரத்தினாலும்

50. நீல வஸ்திரத்தினால் விஷ்ணுவையும், நல்முத்து வர்ணத்தால் லக்ஷ்மியையும் அதே நிறத்தால் பிரம்மாவையும் உத்தமமான ஆசார்யர்கள் ஒவ்வொரு மண்டபங்களுக்கும் கிரஹிக்கத்தக்கவர்கள் ஆவர்.

51. குருவானவர் ஒவ்வொரு தேவர்களுக்கும் அவர்களுடைய தலைபாகத்தில் வர்தனியோடு கூடின சிவகும்பத்தையும் வர்தனீகும்பத்தையும்

52. பிரம்மா, விஷ்ணு, தலைபாகத்தில் இரண்டு குடங்களை வைக்க வேண்டும். சுற்றிலும் எட்டு கும்பங்களை வைத்து அஷ்ட விந்யேஸ்வரர்களை பூஜிக்க வேண்டும்.

53. தேவி, லக்ஷ்மி அக்னிக்கு தலைபாகத்தில் மூன்று கடங்களையும் வாமாதி எட்டு சக்திகளை சுற்றிலும் எட்டு கும்பங்களில் பூஜிக்க வேண்டும்.

54. அந்தந்த லக்ஷணத்தோடு கூட உருவான அமைப்புடன் கூடியதாக தனித்தனியாக சந்தன, புஷ்ப நைவேத்யங்களால் பூஜிக்க வேண்டும்.

55. முன்போலவே பரமேஸ்வரனுக்கு தத்வ தத்வேஸ்வரர்களையும் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களையும், பூஜிக்க வேண்டும். மற்றவர்களுக்கு அந்தந்த தத்வதத்வேஸ்வர் முதலியவர்களை நியசிக்க வேண்டும்.

56. பிறகு குண்டஸம்ஸ்காரம் அக்னி ஸம்ஸ்காரம் செய்து ஹோமம் செய்ய வேண்டும். சமித்து, நெய், ஹவிஸ், பொறி. எள்ளு, வெண்கடுகு, பயறு

57. புரசு அத்தி, அரசு, ஆல், கிழக்கு முதலான திக்குகளிலும் வன்னி, நாயுருவி, வில்வம் மயற்கொன்னை, அக்னி கோணங்களிலும்

58. பிரதான குண்டத்தில் புரசு சமித்தாகும். எல்லா குண்டங்களிலும் புரசு, சமித்து கூறப்பட்டு இருக்கிறது. ஒவ்வொன்றும் முன்போல் ஹோமம் செய்து உத்தமமான ஆசார்யன்

59. தன் வீட்டிலோ ஆலய சமீபத்திலோ சிரமத்தை போக்குவதற்காக ஆசார்யன் தூங்க வேண்டும். விடியற்காலையில் நித்ய கர்மாவை முடித்து கர்த்தாவானவன் ஆசார்யனை பூஜிக்க வேண்டும்.

60. வஸ்திர, தங்க மோதிரம், இவைகளை கூட ரித்விக்குகளோடு கூட பஞ்ச நிஷ்க்க எடையிலே முடிவில் தட்சிணை கொடுத்து

61. பிம்பங்களுடைய முன் நிலையில் கடங்களை வைத்து கும்பத்திலிருந்து மந்திரத்தை எடுத்து பிம்பத்தில் சேர்க்க வேண்டும். வர்தனியில் இருந்து மந்திரத்தை எடுத்து தேவி ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

62. ஸ்வாமியோடு கூடி ஒரே பீடத்தில் உமாதேவி இருப்பின் தேவிக்கு வர்தனியையும் தனியே இருப்பின் பீடநடுவிலும் உமா தேவியையும், வேறு பீடத்தில் தேவி இருக்கும் போது தேவியையும் மந்திரத்தை சேர்க்க வேண்டும்.

63. மற்றவர்களுடைய மூலமந்திரத்தை எடுத்து பீடத்தினுடைய சுற்றிலும் சேர்க்க வேண்டும். ஸ்னபனம் செய்து, அர்ச்சனையை முறைப்படி செய்யவேண்டும்.

64. கடைசியில் நைவேத்யத்தை செய்து ப்ரதிஷ்டோத்ஸவம் செய்யவும். சிறிது விசேஷம் இருக்கிறது. ப்ராம்மண உத்தமர்களே கேளுங்கள்.

65. ஸதாசிவர், முதலிய மூர்த்திகளுடைய தேவி திருக்கோயிலில் எந்த தேவீ யாருக்கு முறையோ ஸ்வதந்திர தேவியாக தேவாலயத்தில் இருக்கும் அமைப்பில் அவ்வாறே அமைக்க வேண்டும்.

66. பிரகாரம் மண்டபங்களுக்கு வெளியே, பிரதிஷ்டை செய்தால் அவைகளுக்கு கிழக்கு முதலிய திக்குகளில் ஒரு முழம், அளவுள்ளதாக அமைக்க வேண்டும்.

67. எப்படி அமைப்புள்ளதாக ஆகுமோ, அதன்படி அதனுடைய பயனும், அமையுமாம். அந்த தேவியினுடைய பக்கத்தில் செய்வதா செய்யக் கூடாதா என்பது கூறப்படுகிறது.

68. ஸ்வதந்திர அமைப்புகளில் வ்ருஷப வாஹனம், முதலியவைகளில் எப்பொழுதும் செய்ய வேண்டும். ஈசனாதி தேவர்களுக்கு தெற்குப் பக்கத்தில் தேவீ ஒரு பொழுதும் வைக்கக் கூடாது.

69. பிரதட்சிணத்தில் பிரகாரத்தில் சுவரை ஒட்டிய தேவர்கள் பிரதிஷ்டையானது தனிமையாகவோ, சேர்ந்தோ எந்த மனிதன் பிரதிஷ்டை செய்கிறானோ அவன் வேண்டும் பலன்களை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கல்யாண மூர்த்தி பிரதிஷ்டா விதியாகிய ஐம்பத்தியெட்டாவது படலமாகும்.
படலம் 57: காலாரி, காமாரி, மூர்த்தி, பிரதிஷ்டை

57வது படலத்தில் கால சம்ஹார மூர்த்தி காமாரி, மூர்த்தி, இவைகளின் பிரதிஷ்டா முறை கூறப்படுகிறது. முதலில் காலாரீ, காமாந்தர்களின் லக்ஷண பூர்வமாக பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது என்பது பிரதிக்ஞை. முதலில் காலசம்ஹாரமூர்த்தியின் லக்ஷணம் சூத்ரம் இடும் முறையாக கூறப்படுகிறது. இதில் நான்கு கையுடன் கூடிய காமாரி மூர்த்தி லக்ஷணம் கீழே விழுந்துள்ள காலனின் லக்ஷணம், அவ்வாறே அங்கே நிற்கின்ற கோலத்துடன் மார்கண்டேயரின் லக்ஷணமும் கூறப்படுகின்றது. இங்கு மார்க்கண்டேயருடன் கூடியதாகவோ இல்லாமலோ அமைக்கவும் என கூறப்படுகிறது. இங்கு சிவலிங்கத்திலிருந்து உண்டான காலாரி தேவனால் விழுந்த காலனையோ செய்யவும் என்று காலாரி மூர்த்தியை அமைக்கும் விஷயத்தில் வேறு விதம் கூறப்படுகிறது. பிறகு காமாரி மூர்த்தி லக்ஷணம் நிரூபிக்கப்படுகிறது. இங்கு யோகதட்சிணா மூர்த்திக்கு முன்பாக அவருடைய திருஷ்டியால் க்ஷண நேரத்தில் விழுந்த மன்மதனை அமைக்கவும் என்று கூறி மன்மத மூர்த்தி லக்ஷணம் கூறப்படுகிறது. இங்கு மன்மதன் தேவபாகன் வசந்தன் என்ற இரு நண்பர்களோடு கூடியதாகவோ இல்லாமலோ அமைக்கலாம் என்று விசேஷமாக கூறப்படுகிறது. இவ்வாறு மன்மதனின் ஐந்து சரத்துடன் கூடியவனாகவோ அல்லது ஒரு சரத்துடன் கூடியவனாகவோ அமைக்கலாம் என விசேஷம் கூறப்படுகிறது. மன்மதனின் ஐந்து சரங்கள் லிம்பனி, டாபினி, வேதினி, திராவினி, மாலிநி, என்ற ஐந்து பெயர்களும் கூறப்படுகின்றன. பிறகு பிரதிஷ்டா முறை கூறப்படுகின்றது. முன்பு கூறியுள்ளபடி நல்ல வார, திதி, நட்சத்திரங்களை பார்த்து அங்குரார்ப்பணம் செய்து முன்போல் யாக மண்டபம் அமைத்து குண்டவேதிகை இவைகளுடன் கூடிய மண்டப முறையும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஈஸ்வரன், காலன் காமன், இவர்களுக்கு தனித்தனியாக ரத்னநியாசம், நயனோன் மீலனம், பிம்பசுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம் வரையிலான கிரியைகள் செய்யவும் என்று கிரியைகளின் வரிசை முறை கூறப்படுகிறது.

பிறகு மண்டபத்தில் வேதிகைக்கு மேல் ஸ்தண்டிலம் அமைத்து அங்கு பிம்பங்களுக்கு தனித்தனியாக சயனம் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு ஸ்வாமியின் காலடியில் காலனுக்கும், காமனுக்கும், சயனம் கல்பிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு ஜலாதிவாசத்திலிருந்து மண்டபத்திற்கு எடுத்து வந்த பிரதிமைகளுக்கு தனித்தனியாக சயனாரோஹணம் செய்யவும் என்று சயனாதிவாச விதி கூறப்படுகிறது. கும்ப அதிவாச முறை சுருக்கமாக கூறப்படுகிறது. ஸ்வாமியின் சிரோதேசத்தில் சிவகும்பமும் அதற்கு வடக்கு பாகத்தில் வர்த்தனியையும் ஸ்தாபிக்கவும். காலனுக்கு கும்பத்தை அவனுடைய சிரோதேசத்தில் அந்த மந்திரத்தை ஸ்மரித்து பூஜிக்கவும் மன்மதனாக இருந்தால் சிரோதேசத்தில் மன்மதனுக்கு கும்பம் அமைக்கவும். மன்மதன் தேவபாக வசந்தன் என்ற மன்மதனோடு சேர்ந்திருந்தால் மன்மதனின் இருபக்கத்திலும் கும்பம் அமைக்கவும். சுற்றிலும் வித்யேஸ்வரர்களை அதிஷ்டித்ததும் வஸ்திரம், ஸ்வர்ணம் இவைகளுடன் கூடியதுமான எட்டு கும்பத்தை ஸ்தாபிக்கவும். பிறகு முறைப்படி சந்தனாதிகளால், கும்ப அர்ச்சனை செய்யவும் பிறகு தத்வேஸ்வராதி நியாசம் செய்யவும் என கூறி காலகாம விஷயத்தில் தத்வதத்வேஸ்வர மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாசம் கூறப்படுகிறது. மன்மத விஷயத்தில் வசந்தன் கிரீஷ்மன், பிராவிருட், சரத் ஹேமந்த என்று மூர்த்தீஸ்வரர் கூறப்படுகின்றன. பிறகு திரவிய நிரூபண பூர்வமாக ஹோம முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ராத்திரி சேஷத்தை போக்கி காலையில் ஆசார்யன் சுத்தமான ஆத்மாவுடன் மூர்த்திபர்களுடன் கூடி பிம்பம், கும்பம், அக்னி இவர்களை பூஜித்து நல்ல முகூர்த்தத்தில் நல்ல லக்னத்தில் கும்பங்களை பிம்பத்திற்கு முன்னதாக வைத்து மந்திர நியாஸம் செய்யவுமே என்று மந்தர நியாச விதி கூறப்படுகிறது. இங்கு கூறப்படாத ஒன்றை சாமான்ய ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்யவும் என்று கூறப்படுகிறது. முடிவில் இவ்வாறு எந்த மனிதன் பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் தன் விருப்பப்பட்ட போகங்களை அனுபவித்து, சரீரமுடிவில் சிவனை அடைவான் என்று கூறி இது சந்தேகம் இல்லை என கூறி பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு 57வது படல கருத்து சுருக்கமாகும்.

1. காலஸம்ஹார மூர்த்தி, காமதகன மூர்த்தி பிரதிஷ்டையை லக்ஷணங்களோடு (அதன் அமைப்பு முறை) கூடியதாக கூறுகிறேன். நான்கு கைகள் மூன்று கண்கள் ஜடாமகுடம் இவைகளோடு கூடியவராகவும்

2. இடது கால் (குஞ்சிதமாக) சிறிது வளைந்த அமைப்பை உடையவரும், புலித்தோலை தரித்தவரும், நீண்ட தித்திப்பல்லோடும் கூட நீளமான மூக்கையும் சிறிது வலது பாதத்தை தூக்கியவராய் இருப்பவரும்

3. வலது கையில் சூலாயுதமும், இடது கையில் ஊசியும், வலது கையில் பரசுவையும் இடது கையில் நாகபாசமும் தரித்தவராய் (உடையவராய்)

4. ஈஸ்வரனுடைய பார்வை (கடாக்ஷம்) யானது காலனான யமனிடத்தில் வைக்கப்படவேண்டும். பரமேஸ்வரனுடைய சூலம் கீழ்நோக்கியோ யமனின் உடல்மேல் இருப்பதாகவோ கூறப்பட்டுள்ளது.

5. எச்சரிக்கும் முத்ரையையுடைய கை, (ஊசியோடு கூடிய கை) தொப்பூழ் பக்கத்தில் கையை தூக்கிய அமைப்பாகவும் அந்த கையினுடைய மணிக்கட்டு, பக்க நடுவில் ஐந்து அங்குலத்திலும்

6. காதுவரை சூலத்தினுடைய நுனியும் அதனுடைய மணிக்கட்டிலிருந்து காதினுடைய நுனி இரண்டு தாள அளவும் தோள்பட்டை பாகத்திற்கு ஸமமாக பக்கக்கையும்

7. காதினுடைய நுனி மணிக்கட்டுவரை என்பது ஒரு யவை அங்குல அளவாகும். தலை, வலதுகை, இடது மூக்கினுடைய பாகம்

8. தொப்பூழின் வலது பாகம் இடது கால் நுனி வரை முன்பக்கமாக கோடுபோட வேண்டும். அந்த சூத்திரத்திலிருந்து ஆண்குறியின் இடது பாகத்தின் நடுவிலுமாக கோடு போட வேண்டும்.

9. நிற்க கூடிய முழந்தாள் இடைவெளி சூத்திரத்திலிருந்து இடது பக்க சூத்திரம் கூறப்பட்டது. உயரே தூக்கப்பட்ட பாதம் முழங்கால் உயரமும் இடுப்பு நுனியும் அதற்கு சமமான அளவாகும்.

10. முழந்தாள் நடுவிலிருந்து சமமான உயரம் பாததள நுனிவரையிலும் ஆகும் என்று சொல்லப்பட்டது. வலது பாதத்தினுடைய குதிகால் நுனி வரை நூல்வரை பதினைந்து அங்குலமாகும்.

11. மேல்கைகளில் கடகம் சூலஹஸ்தமும் அந்த சூலஹஸ்தத்தின் இடது பக்கத்தில் தொப்பூழ் பாகம் வரை எட்டு யவம் அளவாகும்.

12. நடுவிலுள்ள சூத்திரத்திலிருந்து முழங்கால் வரை சம்பந்தப்பட்ட மூன்று அங்குலமாகும். உயரே தூக்கப்பட்ட நுனிபாகமுள்ள முழங்காலுக்கு எட்டு மாத்ரையாகும்.

13. யமன் கீழே விழுவதாகவும் மயங்கியதாயும் அழுது கொண்டும், கத்திக் கொண்டும், சிவப்பு வஸ்திரத்தோடு கூடியதாயும் அவ்விதமே செம்பட்டை முடியுள்ளவராயும்

14. சூலம், பாசம், விரிந்த கால்கள், தித்திப் பல்லுடன் கூடிய முகம், சிவப்பு பருவம், சிகப்பு கண்களோடு

15. பரமேச்வரனுடைய நாபிவரையில் உள்ளதாக ஒன்பதுதாள அளவில் செய்ய வேண்டும். கையை கூப்பிக் கொண்டாவது அமைப்புள்ளதாக யமனை செய்ய வேண்டும்.

16. அல்லது பரமேச்வரனுடைய லிங்கத்திலிருந்து தள்ளப்பட்டு விழுந்தவனாக செய்ய வேண்டும். காலஸம்ஹாரமூர்த்தி லிங்கத்திலிருந்து வெளிக்கிளம்பினவராகச் செய்தல் வேண்டும்.

17. மற்றொருவர் (மார்கண்டேயர்) பூசியவராய், த்ரிபங்கத்தில் நின்றவராய், தலைகுனிந்தவராய் புஷ்பாஞ்சலியோடு கூடியவராய் பக்கத்தில் இருப்பது (விரும்பத்தக்கது).

18. மார்க்கண்டேயர் யமனிடத்திலிருந்து பயத்தை அடைந்தவராகவோ மார்க்கண்டேயன் பரமேச்வரனால் மகிழ்ச்சி அடைந்தவனாகவோ இருப்பதாக குறிப்பறியும் தன்மையால் சேர்த்தோ சேர்க்காமலோ இருக்கலாம்.

19. அபஸ்மாரத்தினுடைய சரீரத்தில் கால் ஊனினதாக இல்லாமலோ இருக்கலாம். காலஸம்ஹார மூர்த்தி இவ்வாறு கூறப்பட்டது. மன்மத ஸம்ஹார மூர்த்தியை பற்றி கூறப்படுகிறது.

20. யோகத்திலிருக்கக்கூடிய தட்சிணா மூர்த்திக்கு முன்பாக மன்மதனை செய்ய வேண்டும். பார்வை பட்ட அந்த நிமிடத்திலேயே விழுந்தவனாக

21. பத்து பாகத்தை விட்டு தேவனுடைய ஒரு பாகம் முதல் ஏழுபாகம் வரை மன்மதனை தங்க ஆபரணங்களுடன் கூடியவனாக அமைக்கும்படி கூறப்பட்டுள்ளது.

22. சுத்தமான தங்கத்தை போல் பிரகாசித்துக் கொண்டு ஐந்து புஷ்ப பாணங்கள் கரும்பு வில்லோடு கூட மீன் கொடியோடு கூடியவனாக மன்மதனையும்

23. வசந்தனாகிய நண்பனோடு கூடியும் மிகவும் அழகானவனாகவும் தேவருடைய அருகில் இருந்து கொண்டு லம்பினீ, தாபினீ, வேதினீ, திராவினீ

24. மாரினீ என்ற அம்புகள் ஆகும், வில்லை இடது கையிலும் அம்புகளை வலது கையில் வைத்திருப்பவனாகவும் மன்மதன் நண்பனோடு கூடியவனாகவோ நண்பனின்றியோ ஓர் அம்புடன் கூடியவனாகவோ

25. மேற்கூறிய இந்த முறைப்படி உருவ அமைப்பு கூறப்பட்டது. பிரதிஷ்டை விதிமுறையை கூறுகிறேன். நாள் அங்குரார்ப்பணம், யாகமண்டபம் (வேள்விச் சாலை) முதலியவைகளை முன்போல் செய்ய வேண்டும்.

26. ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையுள்ள குண்டங்களை மண்டபத்தில் செய்ய வேண்டும். சதுரமோ (நாண்கோணம்) எண்கோணங்கள், வட்ட வடிவம் என்ற வடிவமாகவோ அமைக்க வேண்டும்.

27. ரத்னந்யாஸம், கண்திறப்பது பிம்பசுத்தி அதற்கு பிறகு கிராம பிரதட்சிணம், ஜலாதிவாசம் இவைகளை ஆசார்யன் முன்போல் செய்ய வேண்டும்.

28. காலஸம்ஹார மூர்த்தி, காமாந்தக மூர்த்தி, தேவர்களுக்கு (மார்க்கண்ட யமன், மன்மதன் மித்ரன்) தனித்தனியாக செய்ய வேண்டும். வேதிகைக்கு மேல் ஸ்தண்டிலத்தில் சயனம், ஸ்நபனம், தனித்தனியாக செய்ய வேண்டும்.

29. ஈஸ்வரனுடைய (காலஸம்ஹாரர்) பாதத்தில் யமனையும், காமாரி பாதத்தில் மன்தனையும் சயனம் செய்விக்கவும். ரக்ஷõபந்தனம் சயனத்தில் எழுந்தருளச் செய்தல், முன்போல் தனித்தனியாகச் செய்ய வேண்டும்.

30. தலைபாகத்தில் ஈஸ்வர கும்பத்தையும் வடக்கு பாகத்தில் வர்த்தினியையும் வைத்து, யமனுடைய மந்திரத்தை ஸ்பரிசித்து யமனின் தலைப்பக்கத்தில் யமகும்பத்தையும் வைக்கவும்.

31. மன்மதனுடைய தலைபாகத்தில் வஸ்திரங்களோடு கூடிய கும்பத்தை வைக்க வேண்டும். நண்பனோடு மன்மதன் கூடியிருந்தால் அவர்களுக்காக இரண்டு கலசங்கள் வைக்க வேண்டும்.

32. மன்மதனுடைய அருகில் சயனாதி வாஸத்தில் வஸந்தன், தேவபாகன் ஆகிய இரு நண்பர்களையும் ஆசார்யன் அமைத்து

33. வஸ்திரம், இவைகளோடு கூடிய (எட்டு) கும்பங்கள், கிழக்கு முதலிய திக்குகளில் சுற்றிலும் வைக்க வேண்டும். வித்யேஸ்வரர்கள் (பூஜித்து) சந்தன புஷ்பங்களினால் பூஜிக்க வேண்டும்.

34. தத்வேஸ்வரர்களை பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும். தத்பம் முதலானவைகள் முன்போலவே காமதகன மூர்த்திக்கு வ்யாப்தி கூறப்பட்டது.

35. யமனுக்கு ஐந்து மூர்த்திகளுக்கு மூர்த்தீஸ்வரர்களையும், பூஜிக்க வேண்டும். ஆத்ம தத்வம், வித்யாதத்வம் சிவதத்வங்களுக்கிடையே வ்யாப்தி கூறப்பட்டது.

36. சப்ததத்வம் ப்ரக்ருதிதத்வம், காலதத்வம் வரையிலாகவும் ஈசானம் வரையிலுமாகி மூர்த்திகள் மூன்று தத்வ வ்யாபகமாகும். வசந்தம் கிரீஷ்மம் என்ற ஸம்ஞயில் கூறப்பட்டது.

37. ப்ராவிருட், சரத், ஹேமந்தம் என்ற ருதுக்கள் மன்மதனுக்கு மூர்த்தீச்வரர்கள் ஆவர். குண்ட ஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து, சமித்து நெய் ஹவிஸ், எள்ளு

38. அரிசி, வெல்லம், பொறி, வெண்கடுகு, இவைகளை முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும். புரசு, அத்தி, அரசு, ஆல் ஆகிய சமித்துக்களை கிழக முதலான நான்கு திசைகளில் ஹோமம் செய்ய வேண்டும்.

39. வன்னி, கருங்காலி, நாயுருவி, வில்வம் ஆகிய சமித்துக்களை தென்கிழக்கு முதலான நான்கு கோணங்களிலும் புரசு பிரதானத்திற்கும் ஆகும் அல்லது எல்லா குண்டங்களிலும் புரசு சமித்து ஹோமம் செய்யலாம்.

40. காலனையும், காமனையும் பிரதான குண்டத்தில் புத்தியுள்ளவன் கல்பிக்க வேண்டும். இந்த மாதிரியாக இரவை கழித்து பிறகு பரிசுத்தமான விடியற்காலையில்

41. சுத்தனான ஆசார்யன், பிம்பத்தை எடுத்து பூஜித்து குரூத்தமனானவன் கும்பம், குண்ட அக்னியில் மந்திரந்யாஸம் செய்ய வேண்டும்.

42. ரிக்விக்குகளோடு கூட வஸ்திரம் தங்க மோதிரம் இவைகளினால் அடைந்த தட்சிணைகளோடு (பணம்) நல்ல லக்னத்தில்

43. கும்பங்களை பிம்பங்களுக்கு முன்பாக வைத்து சிவகும்பத்தை மந்திரத்தை நினைத்துக் கொண்டு பரமேஸ்வரனுடைய மந்திரத்தை ஆதரவோடு நியாசம் செய்து அதனுடைய பீடத்தில் கரகமான வர்த்தனீயை நியசிக்க வேண்டும்.

44. அஷ்ட வித்யேச கும்பங்களுடைய மந்திரத்தை எடுத்து அதன் பீடத்தை சுற்றிலும் சேர்க்க வேண்டும். மற்றவைகளிலிருந்து மூலமந்திரத்தை எடுத்து அந்தந்த மூர்த்திகளுடைய ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

45. ஸ்னபனம், அதிகமான நைவேத்யம், உத்ஸவம் செய்தோ அல்லது செய்யாமலிருக்கலாம். இங்கு கூறப்படாததை ஸாதாரணமாக ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்ய வேண்டும்.

46. இது மாதிரியாக செய்கின்ற மனிதன் விரும்பிய போகங்களை அனுபவித்து சரீர முடிவில் ஈச்வரனை அடைகிறான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் காலாரி காமாந்தக பிரதிஷ்டை முறையாகிய ஐம்பத்தியேழாவது படலமாகும்.
படலம் 56: பக்தானுக்கிரஹ மூர்த்தி ஸ்தாபனம்

56 வது படலத்தில் பக்த அனுக்கிரஹ தேவதா ஸ்தாபன விதி கூறப்படுகிறது. அமைப்பு முறையுடன் பக்த அனுக்கிரஹ தேவரின் ஸ்தாபனம் கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பக்த அனுக்கிரஹர்கள் சதாசிவன் முதலிய தேவர்கள் என்று முன்னமே கூறப்பட்டுள்ளது. தேவ தானவ, கந்தர்வ முனிவர்கள் முதலிய மனுஷ்யர்கள் அவ்வாறே எறும்பு முதல் யானை வரை உள்ள ஜங்கம பிராணிகள் மரம் செடி கொடி முதலிய ஸ்தாவரங்கள் ஆகியவை இந்த சாஸ்திரத்தில் அனுக்கிரஹம் அடைய தகுந்தவர்களாவார்கள். இவர்களின் அனுக்கிரஹமானது சாக்ஷúஷதீக்ஷõ ஸ்பர்ச தீøக்ஷ சாஸ்த்ர தீøக்ஷ வாசிக தீøக்ஷ என்று பலவிதமாக கூறப்படுகிறது. எந்த மனிதன் சிவனால் அதிஷ்டிக்கப்பட்ட சரீரத்துடன் மரணத்தை அடைகிறானோ அவள் அந்த மனிதன் எல்லா பாபத்திலிருந்து விடுபட்டு சிவனாகவே ஆகிறான் இவ்வாறு எந்த மனிதன் மரணம் அடைந்த சமயத்தில் தன்னுடைய இஷ்டமான லிங்கத்தை தொட்டுக் கொண்டு உயிரை விடுகிறானோ அவனும் சிவனாகவே ஆகிறான். இதில் சந்தேகம் இல்லை.  இவ்வாறு அனுக்கிரஹம் செய்பவர்கள் அனுக்கிரஹிக்கப்படுபவர்களுக்கு செய்யும் அனுக்கிரஹம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பக்தர்களின் உருவத்தை அமர்ந்ததாகவோ, நின்ற கோலத்திலோ, படுத்திருப்பதாகவோ நல்ல லக்ஷணம் அஞ்சலிகையுடன் கூடியதாக உலோகம் முதலிய திரவ்யங்களால் செய்ய வேண்டும். இவ்வாறு உலோகம் முதலிய திரவ்யங்களால் சதாசிவன் முதலிய தேவர்களின் உருவமோ அல்லது அவர்களுடைய பீடமோ செய்யப்படவேண்டும். பக்த பிரதிமை, தேவபிரதிமையை ஸ்தாபிக்கவும் என்று பக்தானுகிரஹ தேவலக்ஷணம் கூறப்பட்டது. பிறகு பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. அங்கு கூறப்பட்ட நல்ல காலத்தில் அங்குரார்ப்பணம் செய்து ரத்னநியாஸ, நயனோன்மீலன, பிம்பசுத்தி, கிராமப் பிரதட்சிண, ஜலாதி வாசம் வரையிலான கிரியைகள் செய்யவும் என்று கிரியையின் வரிசை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டை மண்டபத்தை குண்டம், வேதிகையுடன் கூடியதாக முன்பு கூறப்பட்டுள்ளபடி செய்யவும்.

பிறகு ஸ்தபதியை திருப்தி செய்து, பிராம்மண போஜனம், புண்யாகவாசன பரோக்ஷணம் செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலம் செய்து அங்கு முறைப்படி சயனம் கல்பிக்கவும். பிறகு ஜலாதி வாசத்திலிருந்து பிம்பத்தை மண்டபத்திற்கு எடுத்து வந்து ஸ்நபனத்தால் அபிஷேகம் செய்து ரக்ஷõபந்தனம் செய்து சயனத்தில் ஸ்தாபிக்கவும். பிறகு முன்பு போல் கும்பஸ்தானம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ஸ்வாமியின் கால் பக்கத்தில் பக்தனின் கும்பமும் சுற்றிலும் வித்யேஸ்வரரால் அதிஷ்டிதமான எட்டு கும்பங்களையும் ஸ்தாபிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு தத்வததத்வேஸ்வர மூர்தித்தேஸ்வர நியாசம் முன்பு கூறிய முறைப்படி செய்யவும் என்று கும்ப அதிவாச முறை மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஹோம முறை திரவ்ய நிரூபணம் முதற் கொண்டதாக சுருக்கமாக கூறப்படுகிறது. இரண்டாவது தினத்தில் ஆசார்யன் முறைப்படி கும்ப, அக்னி பூஜை செய்து, தட்சிணையை பெற்றுக் கொண்டு மூர்த்திபர்களுடன் கூடி பிம்பத்திற்கு முன்பாக கடங்களை ஸ்தாபித்து மந்திர நியாசம் செய்யவும் என்று மந்திர நியாஸம் முறைப்படி கூறப்படுகிறது. பிறகு அந்த கும்பத்தில் உள்ள தீர்த்திரங்களால் மூர்த்தியை அபிஷேகம் செய்யும் முறையும் கூறப்படுகிறது. பிரதிஷ்டை முடிவில் ஸ்நபனம், நைவேத்யம் செய்யவும். பிறகு உத்ஸவம் செய்யவும் என்று உத்ஸவம் செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு முடிவில் இறந்தவரை குறித்து அவரின் புத்திரனோ பேரனோ இந்த பிரதிஷ்டையை செய்யவும் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுதே தன்னுடைய ஆத்மாவை சிவாத்மாவாக பாவித்து பிரதிஷ்டை செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு 56வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஹே, உயர்ந்த அந்தணர்களே, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்ற தேவருக்கு உருவ அமைப்புடன் கூடியதான ஸ்தாபனத்தை நன்கு கூறுகிறேன், கேளுங்கள்!

2. ஸதாசிவாதி தேவர்கள் முன்பே அமைப்பு முறையுடன் கூறப்பட்டுள்ளார்கள். அவர்களே அனுக்ரஹம் செய்யக்கூடியவர்கள், அதனால் பக்தாநுக்ரஹம் செய்யக்கூடியவர்கள் என்று எண்ணப்படுகிறார்கள்.

3. தேவர்கள், தானவர்கள், கந்தவர்கள், முனிவர்கள், மனுஷ்ய ஜாதிகள், எரும்பு முதல் யானை வரை ஜங்கமஸ்தாவரங்கள் எவர்களோ

4. அவர்கள் அனுக்ரஹிக்க கூடியவர்கள். சாஸ்திரங்களில் அனுக்ரஹம் பலவிதமாக கூறப்பட்டுள்ளது. சிவதீøக்ஷ, சாஸ்த்ர உபதேசம், ஸ்பர்சதீøக்ஷ, சாக்ஷúஷ தீøக்ஷ சமாதான வார்த்தைகள் மூலம் என்பதாக அருள்பாலிக்கும் முறை கூறப்பட்டுள்ளது.

5. சிவாதிஷ்டித உடலோடு கூடின ஓர் மனிதன் மரணத்தை அடைந்தால் அந்த மனிதன் எல்லா பாபங்களில் இருந்து விடுபட்டு சிவனாகவே ஆகின்றான்.

6. இறக்கும் காலத்திலே விருப்பப்பட்ட லிங்கத்தை தொட்டுக்கொண்டு எவன் உயிரை விடுகின்றானோ அவன் சிவனே அதில் சந்தேகம் இல்லை.

7. சொல்லப்பட்ட கோத்ரம் முதலிய தேகத்தை அதனுடைய ஆகிருதியை (உருவை) செய்து தொட்டுக் கொண்டு நல்ல லக்ஷணத்தோடு கூட படுத்துக் கொண்டோ அமர்ந்து இருந்து கொண்டோ நின்று கொண்டோ

8. கையை கூப்பிக் கொண்டு பிரதிமையை ஸதாசிவர் முதலான பிம்பங்களுக்கு கூறப்பட்ட உலோக திரவியங்களினால் (பொருட்களால்) சமர்த்த னானவன் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

9. சமர்த்தனான ஆசார்யன் அதனுடைய பீடத்தை அதேபோல் அளவில் செய்ய வேண்டும். பக்தானுக்ரஹ தேவதையினுடைய லக்ஷணம் இம்மாதிரி கூறப்பட்டது.

10. பிராம்ஹண உத்தமர்களே, பிரதிஷ்டை செய்வதை பற்றி கூறுகிறேன் கேளுங்கள். முன்போல நல்லவேளையை நிர்ணயம் செய்து அங்குரார்பணம் செய்ய வேண்டும்.

11. ரத்னந்யாஸம், கண் திறப்பது, பிம்பசுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலத்தின் நடுவில் (அதிவாஸம்) ஜலாதிவாசம் செய்ய வேண்டும்.

12. பிரதிஷ்டா மண்டபமானது (அதை) முன்பு கூறப்பட்ட முறையினால் செய்யவும். அந்த இடத்தில் ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் குண்டங்களை அமைக்கவும்.

13. நாற்கோணம் முதலிய குண்டங்கள், வ்ருத்த குண்டம், பிரதாணமாகவோ அமைத்து சில்பியை சந்தோஷப்படுத்தி அனுப்பிவிட்டு பிராம்ஹண போஜநம் செய்வித்து புண்யாஹவாசனம் செய்து புரோக்ஷிக்கவும்.

14. நெல், அரிசியால் ஸ்தண்டிலம் அமைத்து ஸ்நபனம், சயனாதிவாசம், அதே போல் ரக்ஷõபந்தனம் (காப்புகட்டு) கும்பஸ்தானம் இவைகள் முன்போல் செய்ய வேண்டும்.

15. அதனுடைய பாதத்தில் அதனதனுடைய தியானத்தோடு பக்த கும்பத்தையும் ஹ்ருதய மந்திரத்தோடு கூட வித்யயேஸ்வர கடங்களை சேர்ந்ததாக (கடகங்களுடன்)

16. அந்தந்த மூர்த்திகளுடைய நியாஸங்களை முன் கூறிய விதியினால் நடத்த வேண்டும். குண்ட ஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து ஹோமம் செய்ய வேண்டும்.

17. சமித்து, நெய், பொறி, எள், மூங்கில், அரிசி, யவதான்யம், புரசு, அத்தி, அரசு, ஆல் இவைகள் கிழக்கு முதலிய நான்கு திசைகளிலும்

18. வன்னி நாயுறுவி, வில்வம், இச்சி ஆகிய சமித்துக்களை தென்கிழக்கு முதலான கோணங்களிலும் புரசு சமித்து பிரதான குண்டத்திலும் அல்லது எந்த குண்டசமித்து இல்லையோ அந்த குண்டத்திற்கு புரசுசமித்தையும் ஹோமம் செய்ய வேண்டும்.

19. பிறகு இரண்டாவது தினத்தில் கும்பம், அக்னி, பூஜையை செய்து ருத்விக்குகளோடு கூட வஸ்திரம், தங்கம் முதலியவைகளை அடைந்தவனாய்

20. ஆசார்யன் பத்து நிஷ்கம் தட்சிணையை அடைந்து சந்தோஷமான மனதோடு பிம்பத்தின் முன்நிலையில் கடங்களை வைத்து பிம்பத்திற்கு மந்திரந்யாஸம் செய்யவும்.

21. கும்பத்திலிருந்து மந்திரத்தை எடுத்து தேவருடைய ஹ்ருதயத்தில் நியஸித்து (சேர்த்து) ஈஸ்வரன் தேவியோடு கூடி இருந்தால் ஆசார்யன் தேவியினுடைய மந்திரத்தை

22. தேவியினுடைய ஹ்ருதயத்தில் மந்திரத்தை சேர்க்க வேண்டும். இல்லாவிடில் பீடத்தில் சேர்க்க வேண்டும். பிறகு கும்ப ஜலத்தினால் அவர்களை அபிஷேகம் செய்ய வேண்டும்.

23. பக்த கும்பத்திலிருந்து மூலமந்திரத்தை அந்த பக்த ஹ்ருதயத்தில் சேர்த்து நியஸிக்க வேண்டும். மற்ற அஷ்டவித்யேஸ்வர மூலமந்திரங்களை எடுத்து பீடத்தினுடைய சுற்றிலும் சேர்க்க வேண்டும்.

24. அந்த கும்ப ஜலத்தினால் பீடத்தை அபிஷேகம் செய்விக்க வேண்டும். ஸ்நபனம் செய்து முடிவில் நைவேத்யம் செய்ய வேண்டும்.

25. கடைசியில் உத்ஸவம் செய்ய வேண்டும் என ஸாமான்யமாக கூறப்பட்டது. திரிபுரஸம்ஹார (முப்புரம் எரிப்பது) பிரதிஷ்டையில் விசேஷவிதி கூறப்பட்டிருக்கிறது.

26. பக்த பிரதிஷ்டையில் கூறியுள்ளபடி எந்த மனிதன் இந்தபடி செய்கிறானோ, அவன் புண்ய கதியை அடைகிறான்.

27. புத்திரனை விரும்புகிறவர்கள் புத்திரனையும், பணத்தை விரும்புகிறவர்கள் பணத்தையும் தேவர்கள் விரும்புபவர்கள் தேவர்களையும், மோக்ஷத்தை விரும்புபவர்கள் மோக்ஷத்தையும் அடைவார்கள்.

28. மனுஷ்யன் எந்தந்த விருப்பங்களை விரும்புகிறானோ அவைகளை அடைகிறான். இறந்தவனை குறித்து எந்த மகன், பேரன், இப்பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் மேற்கூறிய பயனை அடைகிறான்.

29. உயிரோடு இருக்கும்பொழுதே சிவ அடையாளத்தை உடையவனாக தன்னை பிரதிஷ்டை செய்து கொள்ளலாம்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பக்தானுக்ரஹ தேவஸ்தாபன முறையாகிற ஐம்பத்தியாறாவது படலமாகும்.
படலம் 55: சண்டேசானுக்ரஹ மூர்த்தி

55வது படலத்தில் சண்டேசானுகிரஹர் முதலானவர்களின் ஸ்தாபனமுறை கூறப்படுகிறது. இங்கு அமைக்கும் முறைப்படி சண்டேசானுக்ரஹ, நந்தீசானுக்கிரஹ, விஷ்ணுஅனுக்கிரஹ மூர்த்திகளின் பிரதிஷ்டை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. முதலில் சண்டேசானுக்ரஹ மூர்த்திலக்ஷணம் கூறப்படுகிறது. இங்கு உமா தேவியுடன் கூடிய சந்திரசேகரமூர்த்திக்கு வலப்பக்கத்திலோ, இடது பக்கத்திலோ அமர்ந்ததாகவோ நின்றதாகவோ அஞ்சலிகையுடன் ஸ்வாமியை பார்த்துக்கொண்டிருப்பதாக சண்டிகேஸ்வரரை அமைக்கவும். அங்கு ஈஸ்வரன் சண்டிகேஸ்வரரின் சிரசில் புஷ்பமாலையாக சுற்றுவதனை செய்பவராகி பிம்பம் அமைக்கவும். இப்பேர்பட்ட உருவ அமைப்பு உடையது சண்டேசானுகிரக மூர்த்தியாகும். இவ்வாறாக சண்டேசானுக்கிரக மூர்த்திலக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு முன்பு போலவே உமாதேவியுடன் கூடிய சந்திரசேகரமூர்த்திக்கு பாகத்திலோ, வலதுபாகத்திலோ, இரண்டுகண், இரண்டுகை உடையதும் அமைதியானதும் அஞ்சலிகையுடன் கூடியதாகவும், ஜடாமகுடத்துடன் கூடியதாகவும் சிவாகமங்களை கேட்பதில் ஈடுபட்டதாகவும் பிரசன்ன மானவருமான நந்திகேஸ்வரரை அமைக்கவும் இவர் நந்தீசானுக்கிரஹ தேவனாகும் என்று நந்தீசானுக்கிரஹ மூர்த்தி வர்ணிக்கப்பட்டது. பிறகு முன்பு கூறப்பட்டுள்ள அமைப்புபடி ஸ்வாமியின் வலது பாகத்திலோ இடது பாகத்திலோசக்ரத்துடன் கூடிய அஞ்சலிகையையும், சங்கம், தாமரை இவைகளை விஷ்ணுவிற்கு சக்ரம் கொடுப்பவராக உள்ளவர் விஷ்ணு அனுக்கிரஹமூர்த்தியின் லக்ஷணம் கூறப்பட்டு மற்ற அனுக்கிரஹ கார்யம் செய்யும் சிவனை அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. முன்பு கூறப்பட்டு நல்ல கிழமை நட்சத்திரம் முதலியவைகளை பரிக்ஷித்து அங்குரார்பணம் செய்து அனுக்கிரஹம் செய்பவர் அனுக்கிரகிக்கப்படுவர்கள் ஆகிய இருவர்க்குமான விஷயத்தில் ரத்ந நியாசம், நயனோன்மீலனம், பிம்பசுத்தி கிராமபிரதட்சிண பூர்வமாக ஜலாதிவாசம் வரையிலான கிரியைகளை செய்யவும் என்று கிரிய வரிசை முறை கூறப்படுகிறது.

பிறகு யாக மண்டபம் குண்டம் வேதிகை அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு சிலையை திருப்திசெய்து விட்டு பிராம்மணபோஜனம், புண்யாகப்ரோக்ஷணம் வாஸ்து ஹோமம் இவைகளை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு மண்டபத்தில் வேதிகையில் ஸ்தண்டிலம் அமைத்து முறைப்படி சயனம் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு ஜலாதிவாசத்திலிருந்து மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்ட பிம்பங்களுக்கு தனித்தனியாக ஸ்நபனம் செய்து ரக்ஷõபந்தனம் செய்து சயானாதிவாசம் செய்யவும் என சயன அதிவாச முறை விளக்கப்படுகிறது. பிறகு ஈஸ்வரனால் அனுக்கிரஹிக்கத் தகுந்த பக்தர்கள் தனியாக பீடமாக இருந்தால் அவர்களுக்கு ஸ்வாமியின் காலடியில் சயனம் அமைத்து பிறகு ஈஸ்வரனின் சிரோபாகத்தில் சிவகும்பம், வர்தனியையும் ஸ்தாபிக்கவும். அனுக்கிரஹிக்கவேண்டிய பிம்பங்களின் விஷயத்தில் அந்த பூஜை முறையில் கூறப்பட்டுள்ளபடி அந்தந்த மூர்த்திக்கு எட்டுகும்பங்களுடன் ஸ்தாபிக்கவும். ஹோமமுறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு மறுநாள் மூர்த்திபர்களுடன் கூடி ஆசார்யன் தேவன், கும்பம், அக்னி இவர்களை பூஜித்து நல்ல முகூர்த்தத்தில் தட்சிணை பெற்றுக்கொண்டு மந்திரநியாசம் செய்யவும் என்று மந்திரர்யாஸமும் விளக்கப்படுகிறது. பிறகு அந்தந்த கும்ப தீர்த்தங்களால் அந்தந்தி ஸ்வாமியை அபிஷேகம் செய்யவும் என்று கும்பாபிஷேக முறை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டையின் முடிவில் ஸ்நபனம், உத்ஸவம், அதிகமான நைவேத்யம் இவைகளை செய்யவும். இங்கு பூஜை விஷயத்தில் வேறுபாடு காணப்படுகிறது. தேவியானவள் தனியாக பீடமாக இருந்தால் கல்யாணம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு முடிவில் இவ்வாறு யார் பிரதிஷ்டை செய்கிறானோ அவன் முடிவில் மோட்சத்தை அடைகிறான் என்று பலச்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு 55வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பிறகு சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர் விஷ்ணு இவர்களை அனுகிரஹித்த பிரபுவினுடைய பிரதிஷ்டையை அதன் லக்ஷணத்தோடு கூட நன்கு கூறுகிறேன்.

2. உயர்ந்த ஆசார்யன் உமா மஹேஸ்வரனுடையவோ, சந்திரசேகர மூர்த்தியினுடையவோ வலது அல்லது இடது பாகத்திலோ

3. முழந்தாள், துடை, தொப்புள், வரையிலும் மார்பு பகுதி, கழுத்து பகுதி, வரையிலுமோ இருக்கும் நிலையையுடையவராகவும் அமர்ந்தோ நின்ற கோலத்துடனோ அஞ்சலி கூப்பிய கையை உடையவராகவோ

4. ஸ்வாமியைப் பார்த்த கோலமாகவோ என்னுடைய பக்தனான சண்டிகேஸ்வரரை எல்லா அங்க அழகுடையதாக அமைக்கவேண்டும். கனிஷ்ட தச தாளம் என்ற அளவினால்

5. மாலையினுடைய நுனியை, ஈஸ்வரனுடைய வரத, ஹஸ்தத்திலும் இன்னொரு கை நுனியை கடக கையிலும் வைத்து ஈஸ்வரன் மாலையினால் சண்டிகேஸ்வரனுடைய தலையில் சுற்ற வேண்டும்.

6. நந்திகேஸ்வர, அனுக்ரஹ மூர்த்தியில் சிறிது விசேஷமிருக்கிறது. சாந்தராய், இருகைகள், இரண்டு கண்கள், அஞ்சலியை சேர்த்துக் கொண்டு (கையை கூப்பிக் கொண்டு)

7. விரிந்த ஜடையை உடையவரும், ஜடையை மகுடமாக தரித்தவரும், ஆகம சாஸ்திரத்தை கேட்க்கும் விழிப்புணர்வோடும் வணங்கியவராய் செய்ய வேண்டும்.

8. முன்கூறிய அளவில் நந்திகேஸ்வரரை மலர்ந்த திருமுகமுடையவராய் அவரை செய்ய வேண்டும். நந்தீசானுக்ரஹ மூர்த்தியை இந்த பிரகாரம் கூறப்பட்டது. அது போல் விஷ்ணு அனுக்ரஹ மூர்த்தியையும் செய்ய வேண்டும்.

9. நந்தீஸ்வரரை விட்டு விட்டு விஷ்ணுவை அதன் லக்ஷணத்தோடு கூடியதாக சக்கரத்தோடு கூடின அஞ்சலி ஹஸ்தமும், சங்கு தாமரைகளை போன்ற மற்றகைகளிலும்

10. விஷ்ணு மூர்த்திக்கு சக்ரத்தை அளிப்பவராக இந்த தேவர் இருக்க வேண்டும். இவ்வாறே பரமேஸ்வரனை மற்ற அனுக்ரஹத்தை வேண்டி அவரை நோக்கிய தேவனை செய்ய வேண்டும்.

11. இந்த பிரகாரம், லக்ஷணங்களை கூறப்பட்டது. பிரதிஷ்டாவிதியை கூறுகிறேன். அங்குரார்பணம், ரத்னன்நியாஸம், இரண்டும் முதல் நாளிலும்

12. கண் திறப்பது, பிம்பசுத்தி, நகர பிரதட்சிணம், ஜலாதிவாசம், யாக மண்டபம் நிர்மாணம்

13. பிறகு வட்டவடிவ குண்டம், சதுரஸ்ர குண்டம், எண்கோண குண்டங்களை செய்ய வேண்டும். லக்ஷணங்களோடு கூட ஒன்பது, ஐந்து என்பதான எண்ணிக்கையில் செய்ய வேண்டும்.

14. சிற்பிகளை அனுப்பிவிட்டு பிராம்மன போஜனம் புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தி, தனியாக வேதிகையில் ஸ்தண்டிலம் அமைத்து சயனத்தை அமைக்க வேண்டும்.

15. ஸ்நபனம், ரக்ஷõபந்தனம், முதலியவைகளை முன்போல் தனித்தனியாக தேவர்களுக்கு செய்து சயனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

16. அருள் பாலிக்கப்பட்ட எந்த தேவர்கள் தனிமையான இருக்கையையுடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு சயன அமைப்பை ஸ்வாமியின் திருவடியின் கீழ் அமைக்க வேண்டும்.

17. ஈஸ்வரனுடைய தலை பாகத்தில் வர்த்தனியுடன் கூடிய சிவ கும்பத்தை வைக்க வேண்டும். அனுக்ரஹிக்கப்பட்ட மூர்த்திகளுக்கு அந்த அந்த மூர்த்திகளுடைய எட்டு கும்பங்களை மந்திரத்துடன் கூடியதாக வைக்க வேண்டும்.

18. முனிபுங்கவர்களே, அந்தந்த அத்யாயத்தில் சொல்லப்பட்டபடி கிரஹிக்க வேண்டும். குண்ட, அக்னி ஸம்ஸ்காரத்தை செய்து திரவ்யங்களால் ஹோமம் செய்ய வேண்டும்.

19. சமித்து, நெய், அன்னம், பொறி, எள், நெல், அரிசி இவைகளை வரிசையாகவும் புரசு, ஆல், அத்தி, இச்சி கிழக்கு முதலியவைகளையும்

20. வன்னி, கருங்காலி, பில்வம், அரசு தென்கிழக்கு முதலிய திசை குண்டங்களிலும் பிரதான குண்டத்தில் புரசு சமித்தும் அல்லது புரசையே எல்லா குண்டங்களுக்கும் உபயோகம் செய்யலாம்.

21. சண்டர், நந்திகேசர், விஷ்ணு, ஆகிய இவர்களை பிரதான குண்டத்தில் ஆசார்யன், ஹோமம் செய்ய வேண்டும். முடிவில் ஹோம கார்யமானது, பூர்ணாஹுதியோடு தனியாக செய்ய வேண்டும்.

22. தத்துவத்தை அறிந்து, ஆசார்யன், இரண்டாம் நாள், மூர்த்தீபர்களுடன் பரிசுத்தமாக சயனத்திலிருந்து பிம்பத்தை எடுத்து, கும்ப, குண்ட, அக்னிகளை பூஜித்து

23. நல்ல முஹூர்த்தம் வந்த ஸமயத்தில் மந்திரந்யாஸத்தை செய்ய வேண்டும். வஸ்திரம், தங்கமோதிரம், முதலியவைகளால் பூஜிக்கப்பட்டு ரித்விஜர்களோடு கூட அடையப்பட்ட பிம்பத்தின் முன்னிலையில் ஆதாரமாய் செய்யப்பட்ட ஸ்தண்டிலத்தில் கும்பங்களை வைக்க வேண்டும்.

24. பத்து ரிஷ்கம் முதலான அளவுள்ள தட்சினையினால் திருப்தி அடைந்த ஆசார்யன், பிம்பத்திற்கு முன்பாக ஸ்தண்டிலம் அமைத்து அதன்மேல் கடங்களை அமைக்கவும்.

25. கும்பத்திலிருந்து மந்திரத்தை எடுத்து, சிவனுடைய ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். வர்தனியினுடைய சக்தியை எடுத்து அதனுடைய பீடத்தின் மேல் சேர்க்க வேண்டும்.

26. அம்பாள் ஒரே பீடத்திலிருந்தால் அவளுடைய ஹ்ருதயத்தில் மந்திரத்தை நியஸிக்க வேண்டும். மற்றவர்களுடைய மூல மந்திரத்தை எடுத்து பீடத்தை சுற்றிலும், நியாஸம் செய்ய வேண்டும்.

27. சண்டேசர் முதலிய தேவர்களிடத்தில் அவருடைய கும்பங்களுடைய மந்திரத்தை வைக்க வேண்டும். அந்தந்த கும்ப ஜலங்களினால் அந்தந்த தேவதைகளுக்கு அபிஷேகம் செய்துவிக்க வேண்டும்.

28. ஸ்நபனம், உத்ஸவம், அதிகமான நைவேத்யம், முதலியவைகளை செய்தும் செய்யாமலும் இருக்கலாம். அம்பாள் வேறு பீடத்தில் இருந்தால் ஆசார்யன் கல்யாணம் செய்துவிக்க வேண்டும்.

29. இது மாதிரி எந்த ஒரு மனிதன் செய்கிறானோ, அவன் முடிவில் மோக்ஷத்தை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் சண்டேஸாத்யனுக்ரஹ விதியாகிற ஐம்பத்தி ஐந்தாவது படலமாகும்.
படலம் 54: சரபேச பிரதிஷ்டை

54வது படலத்தில் சரபேச பிரதிஷ்டை கூறப்படுகிறது. இங்கே சரபேச மூர்த்தியின் உருவ அமைப்பை கூறுவதன் மூலம் பிரதிஷ்டை கூறப்படுகிறது என்பது பிரதிக்ஞை. பிறகு கழுத்திலிருந்து மேற்பட்ட பாகத்தில் பட்சி உருவமாக ஸ்வர்ண காந்தியுடன் சிம்மபாதம் போல் நான்கு பாதத்தையும், மேல் பாகத்தில் நான்கு பாதம் இருப்பதாகவும் செய்து கழுத்திற்கு மேல் பாகத்தில் மனிதஉருவம், ஸிம்ம உருவமாகவும் பயங்கரமான தெத்திப்பல்லை உடையதாகவும் சிவந்த மூன்று கண்ணைஉடையாதகவும், கீழே இரண்டு பாதம், மேலே இரண்டு பாதம் வயிற்றில் இரண்டு பாதம் நரசிம்மரை ஸம்ஹாரம் செய்வதுபோல் சரபேச மூர்த்தியை அமைக்கவும். அஞ்சலி கையுடன் கூடியதும் சேஷ்டையின்றி பெரிய சரீரத்தை உடையதும் வணங்கிய தேகத்தை உடையதுமான நரசிம்ம மூர்த்தியை அமைக்கவும் என்று வெட்கம் அடைந்த நரசிம்மமூர்த்தி லக்ஷணம் கூறப்படுகிறது. கற்சிலை முதலான திரவ்யங்களுள் இஷ்டப்பட்ட திரவ்யங்களால் சரபேசரை அமைக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு உருவ அமைப்பை விளக்கி சரபேசமந்திரத்தை கூறி பூஜைகளில் இஷ்டசித்திக்காக இந்தமந்திரத்தை சரபேஸ்வரனின் பொருட்டு உபயோகிக்கவும் என கூறப்படுகிறது. வஜ்ரதேகன் முதலிய எட்டு மூர்த்திபர்களின் பெயர் கூறிய இவர்கள் பூஜையிலும் பிரதிஷ்டையிலும் முறையாக கிழக்கு முதலிய திசைகளில் ஸ்தாபிக்கபடுபவர்கள் என கூறப்படுகிறது. இவர்களுக்கு தன்னுடையபெயருடன் கூடிய அக்ஷரத்தினால் மந்திரம் உபயோகித்து செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டாமுறை கூறப்பட்டது. பிறகு நல்ல லக்னத்தை உடைய தினத்தில் அங்குரார்பணம், நயனோன்மீலனம், ரத்தினநியாஸம், பிம்பசுத்தி, கிராமபிரதட்சிணம், ஜலாதிவாசம் ஆகிய கிரியைகள் முறைப்படியே ஹரிக்கும் ஹரனுக்கும் தனித்தனியாக செய்யவேண்டும் என கூறப்படுகிறது.

பிறகு யாகத்திற்காக மண்டபம் அமைக்கவும் என கூறப்படுகிறது. அங்கு வேதிகை குண்டம் செய்முறை கூறப்பட பிறகு சில்பியை திருப்திசெய்து புண்யாகபிரோக்ஷணம் பிராம்மன போஜனம், வாஸ்து ஹோமம் இவைகளை செய்யவும் மண்டபத்தில் சயனம் அமைக்கவும், பிறகு முன்பு கூறியபடி ஜலத்திலிருந்து பிம்பத்தை மண்டபத்திற்கு எடுத்து வந்து சுத்திசெய்து, சரபமூர்த்தி நரசிம்ம மூர்த்திக்கும் ரக்ஷõபந்தனம் செய்து கிழக்கு வடக்குமுகமான பாதத்தையும் வைத்து சயன அதிவாசம் செய்து நரசிம்மமூர்த்தி தனிபீடமாக இருந்தால் சரபமூர்த்தியின் இடது பாகத்தில் சயனாதிவாசம் செய்யவும், பிறகு சிவப்பு வஸ்திரத்தால் போர்த்தவும் என்று சயனஅதிவாச முறை கூறப்பட்டது. பிறகு சிவகும்பமும் விஷ்ணு கும்பமும் சிரோதேசத்தில் ஸ்தாபிக்கவும் சுற்றிலும் வஜ்ரதேகம் முதலான எட்டு கும்பங்களை ஸ்தாபிக்கவும். பிறகு முன்பு கூறப்பட்ட ஆசார்யன் சந்தன புஷ்பங்களால் பூஜிக்கவும். மூர்த்திமூர்தீஸ்வரநியாஸம் செய்யவும் என்று கும்ப அதிவாச முறை விளக்கப்பட்டது. பிறகு திரவ்ய நிரூபணமுறையாக ஹோமமுறை கூறப்படுகிறது. பிறகு தட்சிணையால் சந்தோஷம் அடைந்த ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி முறைப்படி மந்திர நியாசம் செய்யவும் என கூறி மந்திர நியாஸமுறை கூறப்படுகிறது. பிறகு அந்தந்த கும்பதீர்த்தங்களால் அபிஷேகம் செய்யவும் என்று கும்பாபிஷேக முறை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டைக்கு முடிவில் ஸ்நபனம் செய்து ஆசார்யன் அதிகமான நைவேத்யம் உத்ஸவம் செய்யவும் என்று கூறப்படுகிறது. பிரதிஷ்டா முறை கார்யத்தை குறிப்பிடும் அளவால் சொல்லப்படுகிறது இவ்வாறு சரபமூர்த்தியை பிரதிஷ்டைசெய்து பிரதிதினமும் பூஜிக்கும் முறை முன்பே கூறப்பட்டுள்ளது. ஆனால் சரபேச மந்திரத்தினால் அர்ச்சனை செய்யவும் என கூறப்படுகிறது. ஸ்நபனோத்ஸவ கர்மாக்களை ஆசார்யன் சரபேஸ்வரனை பொருட்டு செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் சரபமந்திரத்தினால் சத்துருவர்க்க நாசனமும், ஸர்வவ்யாதி நாசனமும், வஸ்ய ஆகர்ஷன வித்வேஷாதிகர்மாவும் செய்யலாம் என கூறப்படுகிறது. பிறகு இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபன முறைப்படிசெய்யவும் என கூறப்படுகிறது. எந்தமனிதன் சரபேஸ்வரமூர்த்தி பிரதிஷ்டையை பக்தியுடன் செய்கிறானோ அவன் இந்த ஜன்மாவில் விருப்பப்பட்ட போகங்களை அனுபவித்து மேல் உலகத்தில் ஈஸ்வரபதத்தை அடைகிறான் என கூறப்படுகிறது. இவ்வாறு 54வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. சரபேச பிரதிஷ்டையை லக்ஷணத்தோடு கூறுகிறேன். பட்சியை போல் இரண்டு இறக்கைகளை உடையதாகவும் தங்க நிறமாகவும்

2. மேல் இறக்கைகளை உடையதாகவும், சிவந்த மூன்று கண்களை உடையதாகவும், சிங்கத்தை போன்ற நான்கு கால்களை உடையதாகவும்

3. கூறான நகங்களை கூடியதாகவும், மேல் நோக்கிய நான்கு பாதங்களை உடையதாகவும், விரிந்த சடையோடு கூடியதாகவும், தெய்வீகமான வாலை உடையதாயும்

4. கழுத்திற்குமேல் மனிதர்களை போலவும் தெய்வீக தலையை உடையதாயும், நீண்ட தெத்திப் பல்லும், பெரிய பராக்ரமத்தோடு கூடிய சிம்ம முகத்தோடும்

5. ஜகத்தை அழிப்பதற்கு தயாராக வரும் அஞ்ஜலி பந்தத்துடன் இருப்பவரும் அசைவற்ற பெரிய உடல் உள்ளவருமான நரசிம்ம மூர்த்தியை அபஹரிப்பவராயும்,

6. வணங்கின சரீரத்தோடு தாமரை இதழ் போன்ற கண்களை உடைய விஷ்ணுவை மேல்நோக்கிய முகத்தை உடையவராகவும், மேல்நோக்கிய 2 பாதத்தையும், நரஸிம்மரின் வயிற்றில் 2 பாதத்தை உடையவராகவும்

7. ஆகாசத்தை நோக்கிய முகத்தை உடையவராக சரபேஸ்வரரை செய்ய வேண்டும், இவ்வாறு அமைப்பு முறை கூறப்பட்டு அவரின் மந்திரம் கூறப்படுகிறது.

8. சவுச என்பதாக மந்திரத்தை (எட்டாவது எழுத்து வர்க்கத்தின் முதல் எழுத்தான சாவும். பதினான்காவது உயிரெழுத்தான அவும், ஆறாவது உயிர் எழுத்தான ஊவும் (ஊ) பிந்துவும் நாதமும் ஆகிய (ம்) சேர்ந்து சவும் என பொருள்படுகிறது.

9. இது சரபபீஜம் என்றும் சரபேஸ்வர என்று கூறப்பட்டுள்ளது. பிறகு ஹரிஹர என்ற பதத்தை நான்காம் வேற்றுமை உடையதாயும் கூறவும். (சரபேச்வராய ஹரிஹராய)

10. முதலில் பிரணவம் என்ற ஓம்காரத்தையும் மந்த்ர முடிவில் நம: என்ற பதத்தையும் கூடியதாக விருப்பப்பயனை அடைய சரபேஸ்வரனின் பூஜை முதலியவைகளில் சொல்ல வேண்டும்.

11. முதல் எழுத்தினால் (மந்திரத்தினுடைய) ப்ரும்ம மந்திரத்தையும் அங்க மந்திரத்தையும் அமைத்துக் கொள்ள வேண்டும். வஜ்ரதேகர் என்பவர் முதலாவதாகவும், பிறகு காதகர், வியோஜகர்

12. மாரணர், தீர்க்க ஹஸ்த்தர், தீஷ்ண தம்ஷ்டரர், ஜடாதரர், பலிப்பிரியர், இவர்கள் எட்டு வித்யேஸ்வரர்கள் ஆவார். இவர்கள் கிழக்கு முதலான திசைகளில் இருக்கிறார்கள்.

13. பூஜையிலும் பிரதிஷ்டையிலும் முறையாக சுற்றிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அவருடைய பெயர்க்கு உண்டான முதல் எழுத்தினாலே மந்திரங்களை கூறவேண்டும்.

14. கற்சிலை முதலான பொருள்களில் விருப்பப்பட்ட பொருளால் சரபேஸ்வரனை அமைக்கவும். பகலில் நல்ல லக்னம் இருக்கும் பொழுது பிரதிஷ்டையை செய்ய வேண்டும்.

15. அங்குரார்பண கார்யமானது அதன் முறைப்படி செய்ய வேண்டும். நயனோன்மீலனம், ரத்னன், நியாஸம் செய்ய வேண்டும்.

16. மண் முதலியவைகளால் சுத்தி செய்தும், கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம் முதலியவைகளை முன்போல் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் தனித்தனியாக செய்ய வேண்டும்.

17. மண்டபத்தை முன்பு போல் செய்து சதுரம் முதலான ஒன்பது குண்டங்களும் ஐந்து குண்டங்களோடு கூடியதாகவோ ஒரு குண்டத்தோடு கூடியதாகவோ செய்ய வேண்டும்.

18. ஸ்தபதியை அனுப்பி விட்டு புண்யாகவாசன ஜலத்தினால் பிரோக்ஷணம் செய்து, அதனுடைய மீதியையும் வெளியே போட்டுவிட்டு மெழுக வேண்டும்.

19. புண்யாகவாசனம், வாஸ்த்து சாந்தி, அதன் கார்யம் ஸ்தண்டிலத்தை செய்து, சயனாதி வாசம் செய்து முன்போல ஸ்நபனம், ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

20. தனித்தனியாக இரண்டு கார்யங்களும் செய்து, இரண்டு மூர்த்திக்கும் சயனா ரோகனத்தை நடத்த வேண்டும். தேவன் கிழக்கு திக்கில் தலையையும் வடக்கில் கால் இருக்கும்படியாகவும் செய்ய வேண்டும்.

21. தனியான பீடத்தில் விஷ்ணு இருந்தால் இடது பக்கத்தில் அவரை சயனாதிவாசம் செய்து சிகப்பு வஸ்திரம் போற்றி கும்பஸ்தாபநம் செய்ய வேண்டும்.

22. சிவகும்பத்தையும், விஷ்ணு கும்பத்தையும் வைக்க வேண்டும். நூல் சுத்தியதாகவும், மாவிலை, வஸ்திரங்களோடு கூடியதாக தலை பக்கத்தில் வைக்க வேண்டும்.

23. தங்கம் நல்ல வஸ்திரங்கள் இவற்றுடன் கூடியதாய் சுற்றிலும் எட்டு கடங்களை நியாஸம் செய்து நூல் சுற்றப்பட்டும் ஜலத்தோடு கூடியதும் வஜ்ர தேஹாதிகளை அதிஷ்டான முடியதாய்

24. முன் சொல்லப்பட்ட மந்த்ர சொரூபத்தை அறிந்தவரான ஆசார்யன், சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும். ஸகலீகரணம் செய்து, ஹ்ருதயாதிகளிலிருந்து உண்டான மூர்த்திகளை அவைகளை ஆவாஹணம் செய்து அந்த மூர்த்தியை ஹ்ருதயத்திலிருந்து மூலத்தினால் ஆவாஹனம் செய்து சரபேச மந்திரத்தை நியாஸம் செய்து விஷ்ணுவினிடத்தில் அதற்கு கூறியபடி பூஜிக்க வேண்டும்.

25. ஹ்ருதய அஞ்சலியுடன் கூடியதாக மூல மந்திரத்தினால் சரபேச மந்திரத்தை ஆவாஹனம் செய்து, மஹா விஷ்ணுவையும் அவ்வாறே ஆவாஹநம் செய்ய வேண்டும்.

26. முன்போலவே மூர்த்தி, மூர்த்தீஸ்வரன், நியாஸத்தை செய்ய வேண்டும். மூர்த்திகள் வஜ்ரதேகன் முதலியவைகள் ஈசானன் என்று கூறப்படுகின்றன.

27. குண்டம், அக்னி, இவைகளுக்கு ஸம்ஸ்காரம் செய்து பிறகு ஹோமத்தை செய்ய வேண்டும். புரசு சமித்துகளினால் நெய்யினால் அன்னத்தினால்

28. எள்ளினால், பொரியினால், மருந்து வகையினால் மூர்த்தீச மந்திரங்களோடு கூட பூர்ணாஹீதி கொடுத்து இரண்டாவது நாள் அக்னி கும்பங்களில் தேவதா பூஜை செய்ய வேண்டும்.

29. ஆசார்யன் பூஜை செய்பவர்களோடு கூட கிடைத்த தட்சிணையால் சந்தோஷத்துடன் ரித்விக் முதலியவர்களோடு முறைப்படி மந்திரத்தின் நியாசம், ஆரம்பம் செய்ய வேண்டும்.

30. ஈஸ்வரனுடைய முன்னிலையில் ஆசார்யன் ஸ்தண்டிலத்தை செய்து கடங்களை வைத்து கும்பத்திலிருந்து மூலமந்திரத்தை எடுத்து சரபேச மூர்த்தியின் ஹ்ருதயத்தில் நியஸிக்க வேண்டும்.

31. விஷ்ணு மூலமந்திரத்தை எடுத்து நரசிம்ஹ ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். மற்றவைகளின் மூலமந்திரங்களை எடுத்து பத்ம பீடத்தில் சுற்றிலும் சேர்க்க வேண்டும்.

32. அந்தந்த கும்பங்களின் ஜலத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். ஸ்நபனம் செய்து நைவேத்யம் உத்ஸவங்களை நடத்த வேண்டும்.

33. இந்த மாதிரியாக பரமேஸ்வரனை பிரதிஷ்டை செய்து தினம்தோறும் நன்கு பூஜிக்க வேண்டும். முன் போலவே அர்ச்சனம் செய்து சரப சம்பந்தமான மந்திரங்களினால் அர்ச்சிக்க வேண்டும்.

34. ஸ்நபனம் உத்ஸவம் முதலிய கார்யங்கள் முறைப்படி செய்ய வேண்டும். தேசிகளும் அவருடைய மந்திரங்களினால் சத்ரு வர்க்கங்களை நாசம் செய்ய வேண்டும்.

35. எந்த வியாதி உண்டானாலும், இந்த மந்திரத்தினால் வியாதிகளை நாசம் செய்யவும், வச்யம், ஆகர்ஷணம், வித்வேஷணம் முதலியவைகளை இந்த முறையிலேயே நடத்த வேண்டும்.

36. இங்கு கூறப்படாததை சாதாரணமாக ஸ்தாபனத்தில் கூறப்பட்டபடி கிரஹித்துக் கொள்ள வேண்டும். எந்த மனுஷ்யன் சரபேஸ்வரனிடத்தில் இந்த முறைப்படி செய்கிறானோ

37. பக்தியினாலும் பாவனையோடு கூடியும் உள்ள அவனுக்கு பிராம்ணர்கள் இந்த மாதிரி செய்ய வேண்டும். புண்ய கூட்டங்களுடைய இந்த அளவு போகங்களையும் இந்த ஜன்மத்தில் அனுபவித்து

38. விரும்பிய அனைத்தும் கிடைக்கப் பெற்று மேலுலகில் மேலான ஈஸ்வர பதத்தையும் அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் சரபேச்வர பிரதிஷ்டையை கூறும் ஐம்பத்து நான்காவது படலமாகும்.
படலம் 53: பலிபர்த்ரு பிரதிஷ்டை

53வது படலத்தில் பலிபர்த்ரு பிரதிஷ்டைமுறை கூறப்படுகிறது. அதன் லக்ஷணம் நித்யோத்ஸவபடலத்தில் கூறப்பட்டுள்ளது. முன்பு கூறப்பட்டுள்ள நல்ல காலத்தில் அங்குரார்பணம், ரக்ஷõபந்தனம், பிம்பசுத்தி, கிராமபிரதட்சிணம், ஜலாதி வாசம் வரையிலான செய்யவேண்டிய கிரியைகளை முன்பு கூறப்பட்டுள்ளபடி செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு வேதிகை குண்டத்துடன் கூடிய மண்டபம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிரதான குண்டம் விருத்தம் என கூறப்படுகிறது. பிறகு சில்பியை திருப்திசெய்து பிராம்மணபோஜனம், புண்யாஹப்ரோக்ஷணம் வாஸ்து ஹோமம் வரையிலான கர்மாக்கள் செய்யவும் என கர்மாக்களின் வரிசை கூறப்படுகிறது, பிறகு ஜலாதி வாசத்திலிருந்து பிரதிமையை எடுத்து மண் முதலியவைகளால் பிம்ப சுத்தி செய்து சந்தனாதிகளால் பூஜித்து ரக்ஷõபந்தனம் செய்யவும். பிறகு மண்டபத்தில் வேதிகைகள் ஸ்தண்டில பூர்வமாக சயனம் அமைத்து அங்கு பிம்பத்தை சிவப்பு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு சயனாதிவாசம் செய்யவும் என அந்த அதிவாச முறை கூறப்படுகிறது. பிறகு கும்ப அதிவாச முறை கூறப்படுகிறது. வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட சிவ கும்பத்தை பிம்பத்தின் சிரோபாகத்தில் ஸ்தாபிக்கவும். அதை சுற்றிலும் வஸ்திரங்களோடு கூடின எட்டு கும்பங்களையும் ஸ்தாபிக்கவும் என கும்ப அதிவாச முறை கூறப்பட்டு சிவ கும்பத்தில் பாசு பதாஸ்திரத்தை பூஜிக்கவும் என கூறி பாசுபதாஸ்திர மந்திரம் கூறப்படுகிறது. பிறகு அந்த கும்பங்களைச் சுற்றிலும் உள்ள எட்டு கும்பங்களில் வஜ்ரம் முதலான ஆயுதங்களை முறைப்படி பூஜிக்கவும் என கூறப்படுகிறது. தத்வதத்வேஸ்வர மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாச பூஜையும் கூறப்படுகிறது. பிறகு குண்ட அக்னி சமஸ்காரம் செய்து சிவாக்னியை பூஜிக்கவும் என ஹோமம் செய்யும் முறையும் திரவ்ய நிரூபணமும் முறைப்படி கூறப்படுகிறது. பிறகு இரண்டாவது நாள் யஜமானன் ஆசார்யன் முதலானவர்களை பூஜித்து தட்சிணை கொடுக்கவும். தட்சிணை பெற்றுக் கொண்ட ஆசார்யன் ஸ்வாமி, கும்பஅக்னியை முறைப்படி பூஜித்து பிம்பத்திற்கு முன்பாதி கும்பங்களை ஸ்தாபித்து மந்திரந் நியாசம் செய்யவும் என்று மந்திர நியாஸ முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டை ஸ்நபனம் உத்ஸவம் அதிகமான நைவேத்யம் செய்ய வேண்டுமா இல்லையா என விசேஷமாக கூறப்படுகிறது. இங்கு கூறப்படாததை சாமான்யபிரதிஷ்டையில் கூறப்பட்டுள்ள படிசெய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டை முறை சுருக்கமாக கூறப்பட்டு முடிவில் யார் இவ்வாறு அஸ்த்ர பிரதிஷ்டை செய்கிறானோ அவன் இந்தலோகத்தில் சுகத்தையும் மேல்உலகத்தில் மோட்சத்தையும் அடைகிறான் என கூறப்படுகிறது. இவ்வாறு 53வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்!

1. பலிபோடுவதற்கு எடுத்துச்செல்லும் மூர்த்தமான பலி பர்த்ருவின் பிரதிஷ்டையை கூறுகிறேன். சந்திரசேகரப்ரதிஷ்டையில் கூறியுள்ளபடி சூத்ரமிடும் முறை நித்யோத்ஸவத்தில் கூறப்பட்டுள்ளது.

2. பிராயச்சித்தங்களிலோ ஸகவிதமான கார்ய ஸித்திக்காகவோ நித்யோத்ஸவத்திலும், விசேஷமான அதன் மந்திரங்களையும்

3. ஹே மூனீஸ்வரர்களே, சுருக்கமாக பிரதிஷ்டையை கூறுகிறேன். காலத்திலே அங்குரார்பணம், ரத்னநியாஸம், கண் திறப்பது முதலியன செய்து

4. வாஸ்து சாந்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம் முன்னால் சொல்லப்பட்டிருப்பதால் அவை அனைத்தும் செய்ய வேண்டும்.

5. மண்டபம் நிர்மாணம் செய்து அதில் ஒன்று, ஐந்து, ஒன்பது குண்டங்களும், குண்டங்கள் வட்டவடிவம், சதுரம், எண்கோணமோ செய்ய வேண்டும்.

6. அந்த மூன்று பக்ஷங்களிலும் பிரதான குண்டம் வட்டவடிவமே. பிறகு சில்பிகளை போகச் சொல்லிவிட்டு, பிராம்ணர்களை போஜனம் செய்விக்க வேண்டும்.

7. புண்யாகவாசனம் செய்து பிரோக்ஷித்து வாஸ்த்து ஹோமத்தை செய்ய வேண்டும். ஜலத்திலிருந்து பிம்பத்தை எடுத்து ஐந்து மண்ணினால் ஸ்நபனம் செய்ய வேண்டும்.

8. சந்தனம் முதலியவைகளால் பூஜித்து, ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். வேதிகையில் ஸ்தண்டிலத்தோடு கூடிய சயனத்தை செய்ய வேண்டும்.

9. சிவப்பு நிறமான வஸ்திரங்களோடு, கூடின தேவனை சயனத்தில் படுக்க வேண்டும் முன் போல் சுற்றிலும் சிவ கும்பங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

10. தலை பாகத்தில் சிறந்த வஸ்திரத்தை உடையவரும், எல்லா கும்பங்களும், வஸ்திரங்களோடு கூடியதாகவும் அமைத்து சிவ கும்பத்தில் பாசுபதாஸ்திரத்தை பூஜிக்க வேண்டும்.

11. அந்த லக்ஷணத்துடன் கூடிய ரூபத்தை தியானித்து சந்தனம் முதலியவைகளால் பூஜித்து, நான்காவது வேற்றுமையோடு ஹூம்பட் என்ற பெயர்களோடு கூடின மந்திரத்தினால்

12. ஓம் சிலீம், பம், சும், பண்ண ம என்றும் மந்திரத்தினால் பூர்த்தியான தேவனை பாசுபதாஸ்திரம் என கூறப்படுகிறது.

13. அகாரம் முதல் அவுகாரம் முடிய எழுத்துக்கள், ஸத்யோஜாதாதி மந்திரங்கள் முதல் பட் முடிய மந்திரங்கள் ஹ்ருதயாதி மந்திரங்கள்

14. மந்திரத்தினால், முறைப்படி ஓம்காராதி ஹ்ருதய மந்திரங்கள் வேறுபடுகின்றன. ஹ்ருதயாதிகளோடு கூடிய ஹூம்பட் கடையாகவும் நம என்ற பதத்தை கடைசியாகவும்

15. ஹ்ருதய மந்திரத்தினால் வித்யாதேகத்தினாலும் ஹும்காரத்தை கல்பிப்பதனால் ஹ்ருதய மந்திரத்தை சேர்ப்பதினாலும்

16. வஜ்ரம் முதலிய எட்டு ஆயுதங்களையும் குருவானவர் சுற்றிலும் பூஜிக்க வேண்டும். தத்வதத்வேஸ்வரர்களையும் நியாஸம் செய்து முன்போல் மூர்த்திகளையும் நியாஸம் செய்ய வேண்டும்.

17. புத்திமானானவன் மூர்த்தீஸ்வரர்களையும் நியசித்து வஜ்ராதிகளையும் நியாசம் செய்ய வேண்டும். குண்டங்களில் ஸம்ஸ்காரத்தை செய்து சிவாக்னியை ஸ்தாபிக்க வேண்டும்.

18. சமித்து, நெய், அன்னம், ஓஷதிவர்க்கங்களும் எள், பொறி இவைகளோடு கூடியதாக முன்பு சொல்லப்பட்ட மூலமந்திரம் ப்ருமாங்க மந்திரங்களினால் முன்பு கூறப்பட்ட எண்ணிக்கை

19. மூர்த்தி மூர்த்தீஸ்வரரால் ப்ரும்மாங்க மந்திரங்களோடு கூட ஹோமம் செய்ய வேண்டும். புரசு, அத்தி, ஆல், இந்திராதி திக்குகளிலும்

20. வன்னி, கருங்காலி, வில்வம், பிப்பல, சமித்துக்கள், அக்னியாதி திக்குகளிலும் பிரதான குண்டத்தில் இரண்டாவதாக, புரசு சமித்தினால் ஹோமம் செய்ய வேண்டும்.

21. பிறகு தேசிகர்களை பூஜித்து தட்சிணைகள் கொடுக்க வேண்டும். பிம்பத்தினுடைய முன்னிலையில் குடங்களை வைத்து அந்த கும்பங்களிலிருந்து மந்திரத்தை ஹ்ருதயத்தில்

22. நியசிக்க வேண்டும், பத்ம பீடத்தில் பரிவார மந்திரங்களை நியசிக்க வேண்டும், ஸ்நபனம், உத்ஸவம், விசேஷ நைவேத்யங்கள் செய்ய வேண்டும் செய்யாமலும் கூட பூஜித்து வரலாம்.

23. இங்கு கூறப்படாததை சாதாரணமாக பிரதிஷ்டையை போல் செய்ய வேண்டும். இது மாதிரியாக அஸ்த்ரப்பிரதிஷ்டையை எவன் செய்கிறானோ

24. அவன் இந்த லோகத்தில் சுகத்தை அடைவான். பரலோகத்தில் மோக்ஷத்தை அடைவான்.

இவ்வாறாக உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பலிபர்துரு பிரதிஷ்டா முறையாகிற ஐம்பத்தி மூன்றாவது படலமாகும்.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

படலம் 52: பிக்ஷõடன பிரதிஷ்டை

52வது படலத்தில் பிக்ஷõடனர் பிரதிஷ்டா விதி கூறப்படுகிறது. இங்கு பிக்ஷõடனருக்கும் கங்காளமூர்த்திக்கும் அமைப்பு முறை விளக்கத்துடன் அந்த இருவர்களின் பிரதிஷ்டை கூறுகிறேன் என்று பிரதிக்ஞை. கங்காளமூர்த்தியின் லக்ஷணம் கூறப்படுகிறது. பாதத்தில் பாதுகையுடன் கூடியதாகவும், நான்கு கையும், பூணூலும் கிளம்புவதற்கு தயாராகவும் இருப்பதாக தேவனை அமைக்க வேண்டும். வலது காலை சிறிது வளைந்ததாகவும் இடது கால் நேராக இருப்பதாகவும் அமைக்கவேண்டும், பக்கவாட்டில் உள்ள கைகளில் வலக்கையில் குச்சியையும் இடக்கையில் உடுக்கையையும் அமைக்க வேண்டும். மற்ற இரு கைகளில் இடது கையில் தோகையுடன் கூடியதும் எலும்பு கூட்டையும் உடைய காலதண்டத்தை அமைக்க வேண்டும். வலது கையில் மானின் நாக்கை தொட்டு கொண்டது போல் அமைக்க வேண்டும். பக்கத்தில் பெண்களையும் பூதங்களையும் அமைக்கவும் என கூறப்படுகிறது. இங்கு பெண்களுக்கும் பூதங்களுக்கும் உருவ அமைப்பு முறை பலவிதமாக கூறப்படுகிறது. இப்பேர் பட்ட லக்ஷணம் உடையவரே கங்காள தேவர் ஆவர். கங்காளம் தண்டம் இவைகள் இல்லாத வரும் ஆடையில்லா ஸ்வரூபமாகவும் இருப்பவர் பிக்ஷõடனதேவர் ஆவர்என்று பிக்ஷõடன மூர்த்திலக்ஷணம் கூறப்படுகிறது. மூர்த்திகளின் பிரதிஷ்டா முறை விளக்கப்படுகிறது. இங்கு கூறியமுறைபடி நல்லகாலத்தில் அங்குரார் பணம் செய்யவும். பிறகு தேவன் பூதம் பெண்கள் இவர்களுக்கு ரத்னநியாஸம் முறைப்படி செய்யவும். பெண் முதலானவர்களுக்கு செய்யலாம் அல்லது செய்ய வேண்டாம் என்று ரத்னநியாஸ முறை கூறப்படுகிறது. பிறகு நயனோன்மீலனம் பிம்ப சுத்தி கிராம பிரதட்சிணம் ஜலாதிவாசம் வரையிலான கிரியைகள் செய்யவேண்டும் என்று கிரியைகளை குறிப்பிடும் முறை வர்ணிக்கப்படுகிறது. பிறகு முன்புபோல் யாகமண்டபம் அமைத்து குண்டம் வேதிகை தயார் செய்து சில்பியை திருப்தி செய்து பிராம்மணபோஜனம், புண்யாகப்ரோக்ஷணம் வாஸ்து ஹோமம் வரையிலான கர்மாக்களை செய்யவும் என அறிவிக்கப்படுகிறது.

பிறகு ஸ்தண்டிலம் அமைத்து முறைப்படி பிம்பங்களை அனுசரித்து தனித்தனியாக சயனம் அமைக்கவும். ஜலாதிவாசத்திலிருந்து பிம்பத்தை மண்டபத்திற்கு எடுத்து வந்து அவர்களுக்கு ஸ்நபனம் ரக்ஷõபந்தனம் செய்வித்து மத்தியில் ஈஸ்வரன் அதற்கு தெற்குபக்க வடக்குபக்கத்தில் பூதங்கள் ஆகியவற்றை முறைப்படி வஸ்திர அலங்கரிக்கப்பட்டதாக சயன அதிவாசம் செய்யவும் கங்காள தண்டம் தனியாக இருந்தால் அதை ஈஸ்வரனுடைய தலை பாகத்தில் அதிவாசம் செய்யவும் என்று சயனஅதிவாச முறை வர்ணிக்கப்படுகிறது. பிறகு கும்ப அதிவாச முறை கூறப்படுகிறது. இங்கு சயனவிஷயத்தில் குறிப்பிட்டுள்ள பிம்பங்களுக்கு கும்பஸ்தாபன முறை கும்பத்தை பூஜிக்கும் விஷயத்தில் மந்திர விசேஷம் அவ்வாறே தத்வ தத்வேஸ்வரமூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸவிஷயத்தின் விசேஷங்கள் நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறு கும்ப அதிவாசவிஷயத்தின் விசேஷ குறிப்பிற்கு பிறகு ஹோமம் செய்யவும் என்ற திரவ்யங்களில் நிரூபனமுறைப்படி ஹோமவிதி சுருக்கமாக கூறப்படுகிறது. இரண்டாவது நாள் தட்சிணையை பெற்று ஆச்சாரியன் மூர்த்திபர்களுடன் கூடி தேவ கும்ப அக்னி பூஜைகளை நன்கு செய்து பிம்பத்திற்கு முன்னதாக கும்பங்களை வைத்து மந்திரநியாஸம் செய்யும் முறை அவ்வாறே அந்த கும்பங்களால் அபிஷேகம் செய்யும் முறையும் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு ஆச்சாரிய பிரதிஷ்டைக்கு முடிவில் ஸ்நபனமும், பெரியஉத்ஸவமும், அதிகமான நைவேத்தியமும் செய்யவேண்டும். இங்கு கூறப்படாததை சாமான்யஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டாமுறை கூறப்பட்டது. பிறகு எந்த மனிதன் இந்த பிரதிஷ்டை செய்கிறானோ அவன் புண்யமான கதியை அடைவான் என்று கூறப்படுகிறது! முடிவில் இவர்களின் பிரதிஷ்டை எல்லாஇடத்திலும் பாலஸ்தாபனத்துடன் கூடியதாக இல்லையா என்று விவரிக்கப்படுகிறது. இவ்வாறு 52வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்!

1. ஹே, உயர்ந்த அந்தணர்களோ, பிக்ஷõடனர், கங்காளர் இவர்களுடைய உருவ அமைப்புகளும் பிரதிஷ்டையையும் நான் கூறுகிறேன், கேளுங்கள்.

2. காலில் காலணியுடனும் நான்கு கைகளுடனும் பூணூலுடனும் அமைதியான வடிவமும் நடந்து செல்லத் தயாரான நிலையில் இருக்கக்கூடிய நிலையிலும்

3. ஜடாமகுடத்தால் பிரகாசிக்கக்கூடியவரும் கத்தியை கட்டியவராகவும், அழகானவராகவும் வெண்பட்டோடு கூடியவராகவும் ஆபரணங்களோடு கூடியவராகவும் செய்ய வேண்டும்.

4. இடது காதில் சங்கினால் ஆன காதணியையும், வலது காதில் மகர குண்டலத்தையும், வலது காலை வளைத்த நிலையில் உடையவராகவும், இடது காலை நன்கு பூமியில் வைக்கப்பட்டவராயும்

5. ஸமபங்கம் என்ற அமைப்புடனும், தன்னுடைய பிரகாசமான சரீரத்தோடு, வலது கையில் தண்டத்தையும் இடது கையில் உடுக்கையையும்

6. வலது கை நடுவிரலுடைய நுனியானது மானுடைய நாக்கு நுனியை தொட்டவாறும், முன் இடது கைகளில் மயில்தோகை குச்சியையும், காலதண்டத்தையும்

7. இரண்டு தண்டங்களுடைய மூலப்ரதேசமானது தோள் பட்டைக்கு மேல் உயர்ந்ததாகவும், பலவிதமான தேவாஸுர கூட்டங்களோடு கூடியவராகவும்

8. தன்னுடைய இடதுபாகத்தில் தலையில் சுமந்த பலிபாத்ரத்தோடு கூடிய பூதத்துடனும் பல ரூபங்களை தரித்த பலவிதமான பூதங்களோடு கூடியதும்

9. பேரீ, தவில் முதலியவைகளின் ஆரவாரத்தோடு பாட்டு, நாட்டியம் முதலியவைகளைச் செய்யவராகவும் தன்னைப் பார்த்த மாத்திரத்திலேயே மோஹித்தவர்களும் வசீகரிக்கப்பட்டவர்களுமான குற்றமற்ற சவுந்தர்யமுள்ள அழகிய பெண்களோடு கூடியவராகவும்

10. நழுவிய வஸ்திரம், அணிகலன்களோடு கூடியவர்களாயும், பிøக்ஷயிடுவதற்கு எதிர் நோக்கியிருப்பவர்களும் சிலர் ஆசீர்வாதத்திற்காக எதிர்நோக்கியிருப்பவராகளாயும், சிலர் ஆலிங்கனம் செய்ய எதிர் நோக்கியிருப்பவர்களாயும் இருக்கும்படி (ஸ்திரீ) பெண்களை அமைக்க வேண்டும்.

11. சிரஸ் சூத்திரமானது நெற்றியின் மத்தியிலிருந்து ஒரு அங்குலம் தள்ளி இருக்க வேண்டும். கால் கட்டை விரலுடைய அடியிலிருந்து இடது மூக்கு முனியோவெனில்

12. வலது பாகத்தில் எட்டு யவ பிரமாணம் தள்ளியும் இதயத்திலிருந்து வலது பாகத்தில் மூன்று யவப்பிரமாணம் தள்ளியும், தொப்பூழ், ஆண்குறி இவைகள் இடதுபாகத்தில் ஏழு அங்குலமாக இருக்க வேண்டும்.

13. இரு கால்களுடைய கட்டை விரல்களின் மத்யமானது ஆறு மாத்ர அளவுள்ளதாக கொள்ள வேண்டும். இரு குதிகால் பாகங்களுடைய அளவு ஏழங்குலமாகும். முழங்கால்களுடைய அளவிலிருந்து முகத்தினுடைய அளவின் இடைவெளி

14. அங்குலம் என்று அறியவும். குச்சியையுடைய கையில் வளைவான கடகம் தொப்பூழ் பிரதேசம் வரையிலும் உடையதாகவும்

15. நாபியிலிருந்து மணிக்கட்டினுடைய முடிவானது முன் சொல்லப்பட்ட பாகமாக கூறப்படுகிறது. வலது மேல் கைக்கும் கீழ்கைக்கும் மத்ய பாகமானது ஐந்து மாத்ர அளவுள்ளதாகவும்

16. மான் முகத்தை தொடக்கூடிய கையானது தொடையின் நடுபாக அளவாகவும், தொடை மத்தியிலிருந்து அந்த மான் முகத்தை தொடக்கூடிய கை வரையிலும் 21 மாத்திரை அளவாகவும்

17. அந்த மானை தொடக்கூடிய கடக முத்ரையோடு கூடிய கீழ்நோக்கிய கையானது நுனிபாகத்துடன் கூடியதாகவும், இடது மேல் கைக்கும் கீழ்கைக்கும் உள்ள அளவானது 7 மாத்ரை அளவுள்ளதாகும்.

18. கங்காள மூர்த்தியினுடைய தோகையை தரித்திருக்கக்கூடிய கையினுடைய கக்ஷபாகம் சமமான உயரமுள்ளதாக இருக்க வேண்டும். கையின் முடிவிலிருந்து மணிக்கட்டின் முடிவு வரையில் 16 அங்குலமாகவும்

19. கையிலிருக்கக்கூடிய அந்த தோகை தண்டமானது 12 அங்குல மாத்ரமோ (அளவு) அந்த தோகையும் அதே அளவாகவும் கீழிருந்து சுவாமியினுடைய மூக்கின் நுனி வரையிலும் இருக்க வேண்டும்.

20. கங்காள மூர்த்தியினுடைய கையில் இருக்கக்கூடிய தண்டமானது சுவாமியினுடைய கீழ்கழுத்து வரையிலும் அந்த தண்டத்தினுடைய நுனியில் பூதபிரேத முகத்தையும் செய்ய வேண்டும்.

21. பெண்கள், சுவாமியினுடைய மார்பு, முகம், ஸ்தனம், நாபி இவைகள் வரையிலும் உயரமானவர்களாகவும் பூதரூபங்கள் மூன்றுமுக முள்ளவைகளாகவோ இஷ்டப்படியோ செய்யலாம்.

22. இவர் இவ்வாறாகவும், மற்றொருவரான பிக்ஷõடனர் வஸ்த்ரமில்லாமலும் பூதப்ரேதாதிகள் இல்லாமலும் (பெண்களுடன்கூட) இருபக்கங்களிலும் விரித்த ஜடையும், சுருண்ட முடிகளோடு அலங்கரிக்கப்பட்டவராகவும்

23. இடுப்பு பிரதேசத்தில் பாம்பு சூத்ரமாக சுற்றப்பட்டும் வரதஹஸ்தமும் கபாலமானது இடதுகையில் கல்பிக்க வேண்டும்.

24. இடது பாகத்தில் மற்றொரு கையில் உடுக்கையும் ஏந்தி, வலது பாகத்தில் இன்னொரு கையில் மயில் தோகையை தரித்தவராகவும்

25. பாம்பானது பக்கத்தில் இருக்குமாறும் மான் முகமானது முன்பக்கத்தில் இடது பாகம் திரும்பியும் அல்லது இடது பாகத்தில் மூலையாக பார்த்தவாறும் செய்ய வேண்டும்.

26. கபாலமேந்திய கையினுடைய பின்பக்கமானது தொப்பூழ் வரையிலும் இருக்க வேண்டும். தொப்பூழிலிருந்து அந்த மணிக்கட்டின் முடிவு வரையிலும் 16 அங்குலமாக கூறப்பட்டுள்ளது.

27. உடுக்கையினுடைய மேல்பாகமானது காதினுடைய கடைசி வரையிலும் அந்த கையின் மணிக்கட்டிலிருந்து காது முடிவு வரை 16 மாத்ரை களாகவும், மீதமுள்ளவைகள் கங்காளமூர்த்தியை போலும் இருக்க வேண்டும் (அளவு முறை)

28. ஹரனான பிக்ஷõடனர் தனியாகவும், விஷ்ணுவோடு கூடியதாகவும் அமைக்கலாம். ஹே முனிபுங்கவர்களே, சுருக்கமாக ஸ்தாபன முறையை சொல்லுகிறேன்.

29. அந்த பிரதிஷ்டாகாலமானது முன்னமே கூறப்பட்டுள்ளது. அதைப்போலவே அங்குரார்பணம் ரத்னந்யாஸம் முதலியவைகளை சுவாமிக்கும் பூதங்களுக்கும் முறைப்படி செய்து

30. குருவானவர் பெண்களுக்கு தனிப்பீடமாகவோ அல்லது ஒரே பீடத்திலோ மான் முதலானவைகளை விட்டுவிட்டு ரத்னந்யாஸம் செய்ய வேண்டும்.

31. நயனோன்மீலனம் செய்து பிம்ப சுத்தி ஜலாதிவாஸம், கிராமபிரதட்சிணம் முதலியவைகளை முறைப்படி செய்து

32. யாக மண்டபத்தை அடைந்து திக்குகளில் ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கைகளில் எண்கோணம், வட்டவடிவம் முதலிய குண்டங்கள் யாக சாகலையில் முன்பு கூறியதுபோல் அமைக்க வேண்டும்.

33. பிறகு சில்பியை மரியாதை செய்து அனுப்பிவிட்டு ஸ்பர்சதோஷத்திற்காக வித்வான்களுக்கு உணவளித்து புண்யாஹம், வாஸ்துஹோமம், சயனம் முதலியவைகளுக்கு தனியாக ஸ்தண்டிலம் அமைத்து

34. பிறகு ஸ்நபனாபிஷேகம், காப்புகட்டு, பிம்ப சுத்தி, முதலியவைகளை தனியாகச் செய்து மத்தியில் மூலபேரத்தையும் அதற்கு வலது பாகத்தில் இடது பாகத்தில் முறையாக பெண்களையும் பூதங்களையும்

35. தனித்தனியாக வஸ்திரம் அணிகலன்களால் அலங்கரித்து எல்லாவற்றையும் முறைப்படி சயனம் செய்வித்து அந்த கங்காள தண்டமானது தனியாக இருப்பின் தலைபாகத்தில் தனியாக சயனம் (படுக்கை) செய்வித்து

36. கிழக்கு ஈசான திக்கு இவைகளுக்கிடையில் (விஷ்ணு, பிக்ஷõடணர் இவர்களுக்கு மத்தியில்) வர்த்தீனியோடு கூட கும்பங்களை வைத்து, மற்ற கும்பங்களை அந்த மூர்த்திக்கு தலைபாகத்தில் வர்த்தீனியுடன் கூடியதாக

37. வைத்து அந்தந்த தேவதைகளுடைய மந்திரங்களோடு கூட சந்தன புஷ்பங்களோடு உபசாரங்களை செய்து அந்த பூதகணங்களுடைய கும்பங்களில் வீரேசாய நம: என்று ஆசார்யரானவர் பூஜைசெய்து

38. அந்த பூதகணங்களுடைய கும்பவர்த்தனியில் நந்தனாயை நம: (நந்தநாயே நம:) என்று மனதால் பூஜை செய்து பிரதான கும்பத்தில் கங்காளரை பூஜை செய்து தத்வ நியாஸத்தை செய்ய வேண்டும்.

39. சுவாமிக்கு தத்வங்கள் முன்போல் செய்து வீரேசகும்பங்களுக்கு மறுபடியும் சொல்லப்படுகிறது. மூர்த்திகள் முன்போலவும் மூர்த்தீச்வரர்கள் பிரமுகன், துர்முகன் என்றும்

40. பிரமோதன், ஆமோதன், விக்னராட் என்றும் கங்காள மூர்த்திக்கு விஷ்ணுவுக்கு போன்றும் செய்து பிறகு ஹோமத்தை ஆரம்பிக்க வேண்டும்.

41. குண்டஸம்ஸ்காரம், அக்னிஸம்ஸ்காரம் செய்து, சமித்து, அன்னம், நெய், நெல், பொறி, எள், மருந்து வகைகளோடும் (மூலிகை) அக்ஷதைகளோடு கூட ஹோமத்தை செய்ய வேண்டும்.

42. பலா, கருங்காலி, அரசு, அத்தி முதலியவைகளை கிழக்கு முதலான திசைகளிலும், வன்னி, ஆல், வில்வம், நாயுருவி முதலியவைகளை தென்கிழக்கு முதலான கோணங்களிலும்

43. (அல்லது) பிரதானத்திலும் எல்லா குண்டங்களிலும் புரச சமித்தையும் ஆசார்யனானவன் தேவர்களை ஆவாஹனம் செய்து ஹோமம் செய்ய வேண்டும்.

44. பிறகு இரண்டாவது நாளில் பிம்பம், கும்பம், அக்னி, முதலியவைகளில் ஈசனை பூஜித்து வஸ்த்ரம், தங்கம், தட்சிணை இவைகளை அடைந்தவர்களான ரித்விக்குகளுடன் கூடிய ஆசார்யன்

45. மந்திர நியாஸம் செய்து பிம்பத்திற்காக முன்பாக கும்பங்களை வைத்து, கும்பத்திலிருந்து மூலமந்திரத்தை எடுத்து சுவாமியினுடைய ஹ்ருதயத்தில் சேர்த்து

46. வர்த்தனீயிலிருந்து பீஜத்தை எடுத்து சுவாமியினுடைய தாமரை பீடத்தில் நியாஸம் செய்து, மற்ற கும்பங்களிலிருந்து பீஜங்களை எடுத்து அவரவர்களுடைய ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

47. ஆசார்யரானவர் அந்தந்த கும்ப ஜலங்களினால் அபிஷேகம் செய்து, ஸ்நபநம், உத்ஸவம் முதலியவைகளையும் செய்து பிரதிஷ்டையின் முடிவில் நிறைய நிவேதனமும் செய்ய வேண்டும்.

48. இதில் சொல்லப்படாததை பொதுவான ஸ்தாபனங்களில் சொல்லப்பட்டிருக்கிறபடி எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த புத்திமானானவன் இவ்வாறு செய்கிறானோ அவன் புண்யகதியை அடைகிறான்.

49. நடு சூத்திரத்திலிருந்து சூத்ரங்களுக்கு இரண்டு அங்குலம் இரண்டங்குலமாக எல்லா அங்கங்களையுடையவும் அமைப்பாகும்.

50. கைகளுடைய எண்ணிக்கை கூடவும், ஆடை, ஆபரணம் முதலியவை, முத்ரைகளும் வெண்மை முதலிய வர்ணங்களுடன் இருக்க வேண்டிய நிலையில் ஸ்பஷ்டமாக காண்பிக்க வேண்டும்.

51. ஆசார்யன் சில்பி, கர்த்தா, இவர்கள் எதை விரும்பி செய்கிறார்களோ அதை செய்ய வேண்டும். பிராம்மணர்களே எல்லா தேவதைகளுக்கும் மேலே கூறப்பட்டது பொதுவான முறையாகும்.

52. இந்த பிரதிஷ்டையானது (ஆத்ய) பாலஸ்தாபனம், செய்தோ, செய்யாமலோ எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும். பிக்ஷõடனர், கங்காளர், பிரதிஷ்டா விதிமுறை இம்மாதிரி கூறப்பட்டது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பிக்ஷõடன பிரதிஷ்டா முறையைக் கூறும் ஐம்பத்திரண்டாவது படலமாகும்.
படலம் 51: தட்சிணாமூர்த்தி ஸ்தாபனம்

51 வது படலத்தில் தட்சிணாமூர்த்தி ஸ்தாபன முறை கூறப்படுகிறது. முதலில் வியாக்யாணம், கேயம், யோகம் இவைகளில் இருக்கும் மூன்று விதமான தட்சிணாமூர்த்தியின் ஸ்தாபனம் கூறப்படுகிறது என்பது பிரதிக்ஞை. பின்பு ஞானமுத்திரையுடன் கூடியவர் வியாக்யான மூர்த்தி, வீணையுடன் கூடியவர் கேயமூர்த்தி, வியாக்யானம் வீணை இவை இரண்டும் இல்லாமல் இருப்பவர் யோகமூர்த்தி என்று மூன்று மூர்த்திகளின் சாமான்யமான லக்ஷணத்தை கூறி இந்த மூன்று மூர்த்திகளுக்கும் சூத்ரபாதம் என்ற முறைப்படி விசேஷலக்ஷணம் கூறப்படுகிறது. இங்கு வியாக்யானத்துடன் கூடியவர் அறிவை கொடுப்பவர் என்றும் கேயமூர்த்தியும் யோகமூர்த்தியும் மோக்ஷத்தை கொடுக்ககூடியவராகவும் கூறப்படுகிறது. மேலும் வியாக்யானமூர்த்தி விஷயத்தில் கவுசிக, காச்யப, பாரத்வாஜ, அத்திரி, கவுதமர் என்ற முனிவர்களின் அமைப்பு முறை கூறப்படுகிறது. இந்த முனிவர்களின் ஒருவர் இருவர் மூவரையோ பக்கங்களில் ஸ்தாபிக்கவும் என்று கூறப்படுகிறது. இந்த முனிவர்களின் ஒருவர் இருவர் மூவரையோ பக்கங்களில் ஸ்தாபிக்கவும் என்று கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. முன்பு போல் திதி வாரம் இவைகளை உடைய நல்லகாலத்தை அறிந்து அங்குரார்பணம் செய்து வேதிகை குண்டத்துடன் கூடியதான மண்டபம் அமைக்கவும். பிறகு ரத்ன நியாஸ நயனோன்மீலனம் பிம்ப சுத்தி கிராம பிரதட்சிண ஜலாதிவாசம் வரையிலான காரியங்கள் செய்யவேண்டும் என்று கிரியைகளின் மேலான பெயர்கள் குறிப்பிடப்படுகிறது. பிறகு யாகத்திற்காக அமைக்கப்பட்ட மண்டபத்தில் புண்யாக பிரோக்ஷண, பிராமண போஜனம் மறுபடியும் புண்யாஹ பிரோக்ஷணம் வாஸ்து சாந்தி பூமி பரிகிரஹம் முதலிய கர்மாக்களை செய்யவும். பிறகு மண்டபம் ஸ்தண்டிலம் அமைத்து தட்சிணாமூர்த்திக்கும் முனிவர்களுக்கும் தனித்தனியாக சயனம் அமைக்கவும்.

பிறகு ஜலாதிவாசத்திலிருந்து எடுத்துவந்த பிம்பங்களுக்கு ஸ்நான வேதியில் ஸ்நபனம் செய்யவும். அந்தபிரதிமைகளை சயனத்தில் வஸ்திரம், கூர்ச்சம் இவைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களாக சயனாதிவாசம் செய்யவும் என்ற சயனாதிவாஸ முறை கூறப்பட்டது. இவ்வாறு வியாக்யான கேய யோக நிஷ்டர்களான மூன்று மூர்த்திகளின் விஷயத்தில் பிரதிஷ்டை கூறப்படுகிறது. பிறகு அந்த அந்தந்த மூர்த்திகளுக்கு அந்த மூர்த்தியின் சிரோதேசத்தில் அவர்களின் கும்பங்களை அலங்கரிக்க பட்டதாக சிவ கும்பத்தின் வடக்கு பாகத்தில் வர்த்தனியை ஸ்தாபிக்கவும் பிரதிமா லக்ஷணத்தில் கூறப்பட்டபடி ரூபத்தியானத்துடன் முறைப்படி பூஜிக்கவும். தத்வ தத்வேச்வர மூர்த்தீஸ்வர நியாஸம் முறைப்படி செய்யவும் என்று கும்ப அதிவாச முறை சுருக்கமாக கூறப்படுகிறது. இங்கு முனிவர்களுக்கும் தத்வ தத்வேஸ்வர மூர்த்திமூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவேண்டுமென்று அறிவிக்கப்படுகிறது. பிறகு குண்டஸம்ஸ்கார அக்னிஸம்ஸ்காரம் ஹோமம் செய்யவும் என கூறி திரவ்ய நிரூபணமுறைப்படி ஹோமம் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரவு பொழுதை போக்கி சுத்தமான காலை பொழுதில் ஆச்சாரியன் மூர்த்திபர்களுடன் கூடி நித்ய அனுஷ்டானம் முடித்து பிம்பங்களை எடுத்து பூஜித்து கும்ப அக்னி இவைகளையும் பூஜிக்கவும், பிறகு எஜமானன் தேசிகர்களுக்கு தனித்தனியாக தட்சிணை கொடுக்கவும். ஆசார்யன் பிம்பத்திற்கு முன் ஸ்தண்டிலத்தில் கும்பத்தை வைத்து மந்திர நியாஸம் செய்யவும் என்று கூறி மந்திரநியாஸம் முறை கூறப்படுகிறது. இங்கு முனிவர்களுக்கும் பீஜமந்திரங்களை அவர்கள் ஹ்ருதயத்தில் ஸ்தாபிக்கவும் என்று அறிவிக்கப்படுகிறது. பிறகு அந்தந்த கும்ப தீர்த்தங்களால் அந்தந்த தேசத்தில் அபிஷேகம் செய்யவேண்டும் இவ்வாறே முனிவர்களின் கும்பதீர்த்தங்களால் முனிவர்களுக்கும் அபிஷேகம் செய்விக்க வேண்டும். வியாக்யான தட்சிணாமூர்த்தி கையில் உள்ள காமிகம் முதலான ஆகமங்களை உபாகமத்துடன் கூடியதாக ஸ்தாபிக்கவும். பிறகு தேவேசனை ஸ்தாபிக்கவும் வலது இடது பாகங்களில் முனிவர்களை ஸ்தாபித்து, ஸ்நபனம், உத்ஸவம், அதிகமான நைவேத்தியம் செய்யவும். முடிவில் தட்சிணாமூர்த்தி பிரதிஷ்டையை செய்பவன் எல்லாம் அனுபவித்து முடிவில் பரமேஸ்வரனை அடைகிறான் என்பதில் சந்தேகம் இல்லை இவ்வாறு 51 வது படல கருத்தாகும்!!

1. ஹே, விப்ரச்ரேஷ்டர்களே, தட்சிணாமூர்த்தியினுடைய ஸ்தாபனத்தை கேளுங்கள். வ்யாக்யான லக்ஷணம், கேயலக்ஷணம், யோகலக்ஷணம் என நிஷ்டையில் மூன்று விதங்களாம்

2. அந்த தட்சிணாமூர்த்தியானவர் வ்யாக்யான லக்ஷணத்தில் ஞான முத்ரையோடும் (சின்முத்ரை) கேய லக்ஷணத்தில் வீணையோடும், இரண்டிலிருந்தும் வேறுபட்ட யோகத்தில் பலவிதமான திருஉருவ பேதங்களாகும்.

3. நான்கு கைகள், மூன்று கண்கள், வெண்மையாகிற காந்தியோடு கூடிய இளம் சந்திரனோடும், வெளுப்பு, பவள நிறமாகவும், பொன்னிறமாகவும், கருப்பு திருமேனியோடு கூடியவராகவும்

4. புலித்தோல் ஆடையை தரித்தவராகவோ, அல்லது பீதாம்பரங்களை தரித்தவராகவோ மேல் (அங்க) வஸ்திரத்துடன் கூடியவராகவும் வெண்மையான பூணூலை அணிந்தவரும்

5. விரித்த ஜடையோடு கூடியவராகவோ, ஜடாமகுடத்தோடு கூடியவராகவோ (தலையில்) பட்டையான பட்டுத்துணியால் கட்டப்பட்டவராகவோ, தலையில் மண்டை ஓட்டை தரித்தவராகவும்

6. ஊமத்தம்பூ, கொன்றை புஷ்பம், பாம்பு படங்களுடன் கூடியவரும் சந்திரனோடு கூடியவராயும் ஐந்தாவது தொழிலான (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனுக்ரஹமுத்ரையுடன் (தலையில் கங்கை மற்றும் மணிச்சரங்களோடு கூடியவராயும்)

7. ஆலமரத்தினுடைய அடியில் பாறாங்கல்லில் மீது அமர்ந்தவராகவும், புலித்தோலின் மீது அமர்ந்தவராகவும் அல்லது மரத்தினடியில் நின்ற கோலத்துடனோ, வீராஸனமுடையவராகவோ

8. வலது காலை தொங்கவிட்டு அதனுடைய முழங்காலின் மீது வளைந்த இடது கால்விரல்களை வைக்கப்பட்டவராய் வலது கையில் முத்ரையோடு கூடியவராய் செய்ய வேண்டும்.

9. நன்கு காண்பிக்கப்பட்ட ஸமிக்ஞைகளோடு இடது கையில் இருக்கக்கூடிய புஸ்தகத்தோடு கூடியவராயும் முப்பத்திரண்டு அங்குல நீளமான (சாய்ந்த) புஸ்தகத்தை கையில் உள்ளவராயும்

10. அல்லது இடதுகையில் ஸர்ப்பம் (பாம்பு) உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முழங்காலில் வைக்கப்பட்டுள்ள மணிக்கட்டுடன் கூடியதாக வரதஹஸ்தத்தை அறியவும்.

11. முழங்காலில் சேர்ந்த முழங்கையை உடையதாக தொங்குகிற கையை அமைக்கவும். விரிந்த (மலர்ந்த) தாமரையின் காந்தியைப் போன்று உள்ள விரிந்த விரல்களோடு கூடிய கையை உடையவராகவும்.

12. பின்கையில் இரண்டிலும் அக்ஷமாலை, அக்னியோடு கூடியவராகவும் தாமரையையோ, நீலோத்பலத்தையோ, பாம்பையோ இடதுகையில் வைத்திருப்பவராகவும்

13. அந்த இருகைகளையும் கடக முத்ரையோடு கூடியதாகவும் பிரஸன்னமான நேர்பார்வையோடு கூடியவராகவோ, அல்லது தனது மூக்கு நுனியில் பார்வையுடையவராகவோ இடது கையில் புஸ்தகத்தோடு கூடியவராகவும்

14. சரீர மத்தியிலிருந்து இடதுபாகத்தில் சிறிது வளைவான பங்கத்தோடு அதாவது ஆபங்க ஸஹிதமாக செய்ய வேண்டும். சூத்திரமானது முறையாக இடது பாகத்தில் ஹ்ருதய, தொப்பூழ், குஹ்யப்ரதேசம் இவைகளில் இருக்க வேண்டும்.

15. மத்தியிலிருந்து மூன்று மாத்ரை அளவு விட்டதாக தொங்கும் பாதமுள்ளதாகும். லம்ப பாதத்தின் இருக்கையானது மத்ய சூத்ரத்திலிருந்து 1/2 அங்குல இடைவெளியுள்ளதாகும்.

16. 1/2 அங்குல அதிகரிப்பால் ஒன்றறை யவப்பிரமாணம் வரையாகும். கட்டைவிரலின் அடிபாக உயரத்திலிருந்து (மார்பு) நுனிவரை உள்ள இடைவெளி பத்து அங்குலமாகும்.

17. கட்டை விரலுக்கும் மார்பகத்திற்கும் உள்ள இடைவெளி இரு கண்களுக்கும் இடைப்பட்ட தூரம் ஆகும். நாபியிலிருந்து மணிக்கட்டின் இடைவெளி நான்கங்குலமென்று உதாரணம் கூறப்படுகிறது.

18. புஸ்தகமுள்ள கைக்கும் துடையின் மேல் பாகத்தின் இடைவெளியும் தொப்பூழிலிருந்து மணிக்கட்டு வரையிலான இடைவெளியும் பத்தொன்பது அங்குலமாகும்.

19. கையின் தோள் பக்க மத்தியிலிருந்து பக்க வாட்டு மத்யபாகம் வரையிலான இடைவெளி ஆறங்குலமாகும். பக்கக்கையின் மணிக்கட்டிலிருந்து அந்த கையின் தோள்பட்டையின் மத்தியும் எட்டங்குலம் ஆகும்.

20. நடுபாகமுள்ளகை, பக்கவாட்டுக் கையின் இடைவெளி பத்து மாத்ரையாகும். தோள்பட்டைபாக அடியிலிருந்து கையின் முடிவுபாகம் ஓரங்குலமாகும். இடுப்பு பாக சூத்ரம், கடக முத்ரையின் உயர அளவினால் இருமாத்ரை அங்குல அளவாகும்.

21. ஜடாமகுடம், ஸ்தனம், கழுத்தின் அடிபாகம் இவைகளின் முறையே இரண்டங்குல நீளம் மட்டும் அளவாகும். அவைகள் அந்தந்த அழகுடன் கூடியவைகளாகவும், வெண்மையான பூணூலை தரித்தவர்களாயும்

22. வெண்மையான பட்டு முதலிய வஸ்திரங்களை தரித்தவர்களாகவும், விபூதி ருத்ராக்ஷங்களை அணிந்தவர்களாயும், கவுசிகர் மஞ்சள் நிறமுள்ளவராகவும், காச்யர் கரும்பச்சை நிறமாகவும்

23. பரத்வாஜர் சிகப்பு நிறமாகவும், அத்ரி, கவுதமர் இவர் இருவரும் புகை நிறமாகவும், உள்ள இவர்களை சுவாமிக்கு இருபக்கங்களிலும் பக்கத்திற்கு ஒருவராகவோ மூவராகவோ வைக்க வேண்டும்.

24. வ்யாக்யான (லக்ஷண) மூர்த்தியானவர் இவ்வாறாகவும், கேயமூர்த்தி என்ற வீணா தக்ஷிணா மூர்த்தியானவர் (நடுபக்கத்தில் உள்ள வலது கையில் கடகமுத்ரையோடு கூடியதாகவும்) வலது இடது பாகம் உள்ள நான்கு கைகளில் கடக முத்ரையையும்

25. கடக முத்ரையுடன் கூடிய வலதுகையில் வீணையும், அந்த வீணை இடது தொடையில் சேர்ந்ததாக அமைக்கவும். வலதுகை கடகமுத்ரையுடன் துடையின்மேல் வைத்ததாக அமைக்க வேண்டும்.

26. அந்த வீணையினுடைய வட்டபாகமானது தொடைக்கு வெளியிலும், அதனுடைய மூலபாகமானது கடகமுத்ரைக்கு மேல் உள்ளதாகவும், இடது பாகம், ஒரு பங்காகவும், ஐந்து பாகத்தை உடையதாயும்,

27. அகலமானது ஐந்து அங்குலம், நீளமானது, ஐந்தங்குலம் வீணையினுடைய முகத்தின் சுற்றளவு ஐந்தங்குலம் வீணையினுடைய முகத்தின் உயர அளவானது ஆறங்குலமும்

28. வீணை வட்டபாகத்தின் உயரம் மூன்று அங்குலம் என்று அறிந்து செய்யவேண்டும். கையிலிருந்து மணிக்கட்டு வரையும் இடுப்பு சூத்ரமுதலும், முறையாக

29. 30 அங்குலம் என்றும், வேறு கை மணிக்கட்டிலிருந்து தொப்பூழ் வரையிலுமான இடைவெளியானது முன்பு போல 30 அங்குலமாகும்.

30. வ்யாக்யான மூர்த்தியையும் இவ்வாறாக கவனித்து செய்யவும். அவ்விடத்தில் கண்ணின் பார்வை வளைந்ததாகவும் அமைக்க வேண்டும்.

31. விரிந்த இடது கையை உடையவர் யோக மூர்த்தி என்றும் பிறகு வளைந்த இடது குதிகால் நுனியானது இடுப்பு பிரதேசத்தை ஒட்டியதாகவும்

32. தூக்கப்பட்ட அவருடைய இடது முழங்கால் நுனியானது இடதுகையின் பின் பாகத்துடன் சேர்ந்ததாகவும் நன்கு பார்வையோடு கூடியவராகவும் சிறிது ஆபங்கத்தோடு கூடியவராகவும்

33. பலவித பிராணிகளோடு கூடியவராகவும், பலவித பாம்புகளோடு கூடியவராகவும், அனேக முனிவர்களோடு கூடியவராகவும் சித்த வித்யாதரர் களோடு கூடியவராகவும்

34.  பூதகணங்கள், கின்னர கிம்புருஷாதிகளோடு கூடியவராகவும், மரங்களால் சூழப்பட்ட வராகவும், அவருக்கு பக்கத்தில் மலை முதலியவை களைச் செய்தும் ஆலமரம், புல்லடர்ந்த பிரதேசத்தில் வீற்றிருப்பவராகவும்

35. பழங்களோடும், கிளைகளோடும், விழுதுகளோடும் பலவித பக்ஷிகளோடும் கூடிய மரத்தின் அடியில் தென்புறமாக நிழலில் அமர்ந்திருப்பவராகவும் கருணையோடு கூடியவராகவும்

36. ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் விரிக்கப்பட்ட புலித்தோலின் மீது நன்கு அமர்ந்தவராகவும் கவுசிகாதி முனிவர்களோடு கூடியவராகவும்

37. ஆதிசைவர் குலத்தில் முதன் முதலில் தோன்றியவர்களும், ஆகமங்களை அறிந்த மனதை உடையவர்களும், பரமேச்வரர்களும் தீøக்ஷ செய்யப்பட்டவர்களுமான கவுசிகாதி முனிவர்களால் சூழப்பட்டவராயும் ஆக

38. தட்சிணாமூர்த்தியினுடைய மூர்த்தி பேதங்களானது கூறப்பட்டுள்ளது. வ்யாக்யான மூர்த்தியானவர் ஞானத்தை கொடுக்கக் கூடியவராகவும், கேய தட்சிணாமூர்த்தியானவர் போகத்தையும் கொடுக்கக்கூடியவராக அறிய வேண்டும்.

39. யோக தட்சிணாமூர்த்தியானவர் முக்தியை கொடுக்கக்கூடியவராக அறியவும், (நினைத்து பூஜை செய்யவும்) உட்கார்ந்த கோலமாகவோ நின்ற கோலமாகவோ, ரிஷிகளோடு கூடியவராக இல்லாமலோ வடிவமைக்க வேண்டும்.

40. ஆலமரம் இல்லாமலோ பூதகணங்களால் சூழப்பட்டவராகவோ பூதத்தின் மீது தொங்கிய திருவடியை வைத்தவராகவோ, தட்சிணா மூர்த்தியானவர் கூறப்படுகிறார்.

41. இவ்வாறு அமைப்பு முறைகள் கூறப்பட்டு பிரதிஷ்டா முறையானது கூறப்படுகிறது. திதி, வார, யோகாதிகளை முன் போல் எடுத்துக் கொண்டு அங்குரார்பணத்தை செய்ய வேண்டும்.

42. யாக மண்டபத்தை முன்போல் செய்து ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கைகளில் சதுரச்சமும், சுற்றிலும் அஷ்டாச்ரமுமோ அமைக்க வேண்டும்.

43. ரத்னந்யாஸம், நயனோன்மீலனம், பிம்ப சுத்தி, கிராம பிரதட்சிணம் முதலியவைகள் செய்து ஜலத்தில் அதிவாஸம் செய்ய வேண்டும்.

44. புண்யாஹ ஜலத்தை தெளித்தலை செய்த பிறகு அந்தணர்களுக்கு உணவளிப்பதை செய்விக்க வேண்டும். புண்யாஹவாசனம், வாஸ்துஹோமாதிகளை செய்து பூமியை ஏற்றுக் கொண்டு

45. பூஜிக்கத்தக்க அந்த ரிஷிகளையும், சுவாமியையும், வேதிகையின் மீது தனியாக ஸ்தண்டிலம் அமைத்து அதன்மேல் சயனத்தை அமைக்க வேண்டும்.

46. பிறகு ஸ்தான வேதிகையில் ரிஷிகளோடு கூட சுவாமிக்கு ஸ்நபனாபிஷேகம் செய்வித்து, பிறகு அந்த கவுசிகாதி ரிஷிகளோடு கூட சுவாமியை படுக்கையில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

47. கவுசிகர் முதலிய ரிஷிகள் சுவாமியின் வலது பாகத்திலும், பாரத்வாஜர் முதலியவர்கள் சுவாமியின் இடது பாகத்திலும் சயனத்தில் வஸ்திரம், கூர்ச்சம், ஆபரணம் இவைகளுடன் கூடியதாக தனித்தனியாக சயனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

48. வ்யாக்யான, கேய, யோக பேதங்களுக்கும் பொதுவாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அவரவர்களுடைய தலைபாகத்தில் அவரவர்களுடைய கும்பத்தை வஸ்திராலங்காரங்களோடு கூட வைக்க வேண்டும்.

49. சிவ கும்பத்தினுடைய இடது பாகத்தில் வர்த்தினியை வைக்க வேண்டும். சுற்றிலும், எட்டு கும்பங்களை வைத்து வித்யேச்வரர்களை பூஜிக்க வேண்டும்.

50. உருவ அமைப்புகளோடு கூடிய அந்த வடிவத்தை முறைப்படி பூஜை செய்து தத்வந்யாஸம் மூர்த்திந்யாஸாதிகளை செய்து ஹோமத்தை செய்ய வேண்டும்.

51. தத்வங்களை முன்போல சுவாமிக்கு செய்து முனிவர்களுக்கும் எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறதோ அவ்வாறு செய்து குண்ட ஸம்ஸ்காரத்தை செய்து சிவாக்னியை உற்பத்தி செய்து

52. ஸமித்து, நெய், ஹவிஸ், பொறி, எள், வெண் கடுகு, மூங்கில் முதலியவைகளை கிழக்கு முதலிய திசைகளில் ஹோமம் செய்ய வேண்டும். பிரதானத்தில் புரசு சமித்தை ஹோமம் செய்ய வேண்டும்.

53. வில்வம் முதலிய சமித்துகளை ஆக்னேயாதி கோணங்களில் ஹோமம் செய்து பிரதானத்தில் ரிஷிகளை தர்பண, தீபநம் செய்து இந்த பொருள்களால் ஹோமம் செய்து கடைசியில் பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

54. இரவுப் பொழுதை முடித்து சுத்தமான காலைப்பொழுதில் குருவானவர், சிஷ்யர்களோடு கூட ஸ்நானத்தை முடித்தவராய் மந்திர சுத்திகளை செய்து கொண்டவராய்

55. குண்டங்களில் அக்னிகளை பூஜித்து கும்பங்களையும் பூஜித்து (சயன கும்பம்) பிம்பங்களை எடுத்து பூஜிக்கவும். ஆசார்யர்களுக்கு தட்சிணா தாம்பூலம் முதலியவை அளிக்கச் செய்து

56. நல்ல முஹூர்த்த நாழிகைக்கு முன்பாக மந்திர நியாஸத்தை முதலில் ஆரம்பிக்க வேண்டும். முன்போல பிம்பத்திற்கு முன்பாக ஸ்தண்டிலத்தில் கும்பங்களை வைத்து

57. கும்பத்திலிருந்து பீஜமந்திரத்தை சுவாயினுடைய ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். வர்த்தனியிலிருந்து பீஜத்தை சுவாமியினுடைய பீடத்தில் சேர்க்க வேண்டும்.

58. வித்யேச்வரர்களுடைய பீஜங்களை பீடத்தில் பிரதட்சிணமாக சேர்க்க வேண்டும். அந்தந்த கும்ப ஜலங்களை அந்தந்த பிரதேசத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

59. ரிஷிகளுடைய பீஜமந்திரங்களை அவர்களுடைய ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். அந்தந்த கும்ப ஜலத்தினால் அவர்களை அபிஷேகம் செய்ய வேண்டும்.

60. ஸ்ரீ கண்ட முனிவராகிய தட்சிணா மூர்த்தியினுடைய கையில் இருக்கக்கூடிய புஸ்தகத்தில் காமிகம் முதலான ஆகமங்களை, உபாகமங்களுடன் கூடியதாக அமைக்கவும்.

61. பிறகு ஸ்வாமியை ஸ்தாபித்து சுவாமியினுடைய இருபக்கங்களிலும் ரிஷிகளை ஸ்தாபனம் செய்ய வேண்டும். ஸ்நபனம் செய்து உத்ஸவம், மஹாஹவிர் (படையல்) நிவேதனம் முதலியவைகளை செய்தாலும் செய்யலாம்.

62. இங்கு சொல்லப்படாதவைகளை பொதுவாக கூறப்பட்ட ஸ்தாபனங்களில் சொன்னதுபோல் செய்யவும். எந்த ஒரு மனிதன் தட்சிணா மூர்த்தியினுடைய ஸ்தாபனத்தை இவ்விதம் (பிரதிஷ்டையை) செய்கிறானோ

63. அவன் இவ்வுலகில் தனக்கு விருப்பப்பட்டவைகளை அனுபவித்து கடைசியில் பரமேச்வரனை அடைவான், அதில் ஸந்தேஹம் இல்லை.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தட்சிணாமூர்த்தி பிரதிஷ்டா முறையாகிற ஐம்பத்தியோராவது படலமாகும்.