செவ்வாய், 29 டிசம்பர், 2020

ஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு

ஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு




யாகங்களில் உயர்ந்தது அஸ்வமேதம்.

தேவர்களில் உயர்ந்தவர் ஹரி.

யானைகளில் உயர்ந்தது ஐராவதம்.

குதிரைகளில் உயர்ந்தது பஞ்சகல்யாணி.

பசுக்களில் உயர்ந்தது காமதேனு.

மிருகங்களில் உயர்ந்தது ஸிம்ஹம்.

பெண்களில் உயர்ந்தவர் சீதை.

அது போல யந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீ சக்ரம் எனப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு.

விநாயகன் உறையுமிடம் ஆனந்தபுரி.

முருகன் இருக்குமிடம் ஸ்கந்தலோகம்.

ப்ரமன் இருக்குமிடம் ஸத்யலோகம்.

நாராயணன் இருக்குமிடம் வைகுந்தம்.

இந்திரன் இருக்குமிடம் தேவலோகம்.

சிவபெருமான் இருக்குமிடம் கைலாயம்.

அது போல அன்னை ஜகன்மாதா அம்பிகை எம்பெருமானுடன் கூடி இன்புற்று உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு அருள்பாலிக்கும் இடம்
ஸ்ரீ புரம் எனக் கூறப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு பீடம் என்னுமிடமாகும்.

அன்னையுறையும் இந்த யந்திரத்தை கோடுகளாக வரைந்து வைத்தால் அது ஸ்ரீ சக்ரம் எனவும் அதற்கு வடிவம் கொடுத்தால் அதுவே மகாமேரு எனவும் கூறப்படும.

அன்னை உறையும் இந்த மகாமேரு 9 ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது.

அரசர்கள் அரண்மனைகளைச் சுற்றிகோட்டை மதில்களை அமைத்துக் காப்பது போல் தேவியின் ஸ்ரீ சக்ரபுரம் என்னும் கோட்டையைச் சுற்றி 9 கோட்டைகள் உண்டு.

ஒவ்வொரு கோட்டையையும் சேனாதிபதிகள் காப்பது போல பெண் சேனாதிபதிகள் காவல் காக்கின்றனர். ஒவ்வொரு கோட்டையும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது.

முதலில் சதுரக் கோட்டை த்ரைலோக்ய மோகனசசக்கரம் எனறு பெயர். இதனை ப்ரகடயோகினி முதலான 8 தேவியர் காவல்புரிகின்றனர்.

தாமரை இதழ்போன்ற 16 அமைப்புக்கள் கொண்ட பரிபூரக சக்ரம் என்னும் கோட்டை. இதை குப்தயோகினி முதலான 16 தேவியர் காவல் புரிகின்றனர்

3 தாமரை இதழ் போன்ற அமைப்பபைக் கொண்ட 8 தளங்களைக் கொண்ட கோட்டை இதற்கு ஸர்வரரேக ஸம்சேஷோபனா சக்ரம் என்ற பெயர். இதனை குப்ததரயோகினி முதலான 8 தேவியர் காவல் புரிகின்றனர்.

14 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வ ஸொபாக்கியதாயக சக்ரம் என்ற பெயரைக் கொண்டது இதனை ஸம்ப்ரதாய யோகினி முதலான 14 தேவதைகள் காவல் புரிகின்றனர்.

முக்கோணங்களைக் கொண்ட ஸர்வார்த்த ஸாதக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதை குலோத்தீரண யோகினி முதலான 10 தேவதைகள் காவல் புரிகின்றனர்.

10 முக்கோணங்களைக் கொண்ட சர்வரக்ஷாகர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை நிகர்ப்பயோகினி முதலான பத்து தேவதைகள் காவல் புரிகின்றனர்.

முக்கோணங்களைக் கொண்ட சர்வரோகஹர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை ரஹஸ்ய யோகினி முதலான 8 தேவதைகள் காவல்புரிகின்றனர்.

ஒரே முக்கோணம் சர்வஸித்தப் பிரதாயக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதனை அதிரஹஸ்ய யோகினி முதலான தேவதைகள் காக்கின்றனர்.

பிந்து ஸ்தானம் எனப்படும் ஸர்வானந்தமய சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இது ஒரு புள்ளி போன்ற இடமாகும். இதில் பரதேவதையான அம்பிகை ஸ்ரீ லலிதா மகாத்ரிபுர சுந்தரியாக இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள். லலிதா மஹாத்ரிபுர சுந்தரியாக இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள்.

இந்த அமைப்பைக்கொண்ட ஸ்ரீ சக்ரம் உலகம் உய்யும் பொருட்டு, ஆதிசங்கரரால் பாரத தேசத்தில் காஞ்சி. திருவானைக்கா, மற்றம் திருஓற்றியூர்; போன்ற தலங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மக்களின் துயரைப் போக்கி அன்னையின் அருளை அளிக்கும். ஒரு சிறந்த மார்க்கம் இந்த மஹாமேரு வழிபாடாகும்.

அன்னையிடம் நாம் செய்யும் அபசாரத்தினால் உண்டாகும் கோபம் தணிய தேவிக்கு இந்த சக்ரஸ்தாபனம் செய்து வழிபட்டால் எல்லா நன்மையும் பெறுவது திண்ணம்.                     

#ஸ்ரீ_சக்கரத்தின்_மகிமை:

மேரு மலையின் மீது புஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு முழுவதுமாக வடிவம் கொடுத்தார் என்றும், ஆதிசங்கரரின் குருவான கௌடபாதர் தான் அதை கிரஹித்து அவருக்கு உபதேசித் தருளினார் என்றும் லிங்கபுராணச் செய்யுள் குறிப்பிடுகிறது.

#மோகினி_ஹிருதயம் எனும் நூல் ஸ்ரீ சக்ர வடிவை பற்றி மிக எளிமையாகவும் தெளிவாகவும் பல விவரங்களை நமக்கு தெரிவிக்கிறது இந்த நூலை #வாமகேஷ்வர_தந்திரம் என்று வேறொரு பெயராலும் அழைக்கிறார்கள் இதில் தந்திர மார்க்கம் சார்ந்த உபாசன முறைகள் விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ சக்ரம் என்பது பிரபஞ்சவெளியில் எங்கும் வியாபித்துள்ள பரம்பொருளின் தன்மையை ஒருமைபாட்டை விளக்குவதே ஆகும்.

இந்த விளக்கத்தை ஒவ்வொரு மனிதனும் நன்கு விளங்கி கொள்ள ஒன்பது நிலைகளை கடந்து செல்ல வேண்டும் அதாவது மனிதனுக்கும் பிரம்மத்திற்கும் இடையில் ஒன்பது மறைப்புகள் உள்ளன.இந்த மறைப்புகளை ஸ்ரீ சக்ர தத்துவம் ஒன்பது ஆவரணங்கள் என்று பெயரிட்டு அழைக்கிறது.

விஞ்ஞான ரீதியான சில கருத்துக்களை நமது சுவாசம் மற்றும் உடல் அமைப்புகளை வைத்து மற்றும் ஒரு பதிவு ஸ்ரீ.மோகினி ஹ்ருதயம் கண்ணோட்டத்தில் கட்டுரை எழுதிக் கொண்டு இருக்கிறேன் விரைவில் பதிவிடுகிறேன்.

ஸ்ரீசக்ரம்

ஸ்ரீ


சக்ரம்:-

(சிவனுக்கு)பாண லிங்கம், (விஷ்ணுவுக்கு) ஸாளக்ராமம் என்று வைத்துப் பூஜை பண்ணுபவர்களே நிறைய இருக்கிறார்கள். இப்படிப் பஞ்சாயதன மூர்த்திகளில் அம்பாளுக்கு இயற்கையில் கிடைக்கிற கல் 'ஸ்வர்ண ரேகா சிலா'என்பது. ஆனால் அதை வைத்துப் பூஜிப்பவர்கள் துர்லபமாகவே இருப்பார்கள்.

ஸுப்ரஹ்மண்ய பூஜை செய்கிறவர்கள் வேலை வைத்தே பூஜிப்பதுண்டு. ஆனாலும் பொதுவில் மற்ற ஸ்வாமிகளுக்கு ஒன்று, அவயவங்களோடு கூடின மூர்த்தி, அல்லது இயற்கையில் கிடைக்கும் கல்லு ஆகியவற்றை வைத்தே பூஜிப்பது வழக்கமாயிருக்க அம்பாளுக்கு மாத்திரம் ஸ்ரீசக்ரம் என்றே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் அதோடுகூட - தனியாயில்லை, ஸ்ரீசக்ரத்தோடு கூட - அவயங்களோடு கூடிய விக்ரஹமும் வைப்பது வழக்கத்திலிருக்கிறது.

ஒவ்வொரு தேவதைக்குமான எந்த தந்த்ரத்தை (வழிபாட்டு முறையை)எடுத்துக் கொண்டாலும் அதில் 'மந்த்ரம்', 'யந்த்ரம்'என்று இரண்டு இருக்கும்.

ஒவ்வொரு விதமான சப்தக் கோவையை ஜபித்து ஜபித்து ஸித்தி பெற்றால் அதற்குரிய தேவதையை ஸாக்ஷத்கரிக்கலாம். அப்படியுள்ள சப்தக் கோவையே அந்த தேவதைக்கான மந்த்ரம் கர சரணாகதிகள் கொண்ட அவயவ ரூபம் போலவே ஒரு தேவதைக்கு இந்த அக்ஷர ஸமூஹமும் ஒரு ரூபம்,சப்த ரூபம், மந்தர ரூபம் என்பது. அதோடுகூட யந்த்ர ரூபமும் இருக்கிறது. ஏதோ கோடும், கோணமும், கட்டமும், வட்டமுமாகத் தெரிகிற யந்த்ரத்தில் அந்த ஒவ்வொன்றுக்கும் அர்த்தமுண்டு. அபார சக்தியுண்டு.

ஒவ்வொரு யந்த்ரமும் பரமாத்மாவை ஒரு குறிப்பிட்ட தேவதையாகப் பிடித்துத் தர ஏற்பட்டது. மந்த்ரத்தை மனஸுக்குள் ஜபிப்பது மாத்திரமின்றி யந்த்ரத்திலும் அர்ச்சன, ஆவாஹனாதிகளில் ப்ரயோஜனப்படுத்துவதுண்டு. அந்தந்த யந்த்ரத்தின் கோணங்களுக்கும், தளங்களுக்கும் உள்ளேயே அந்த தேவதைக்கான மந்த்ராக்ஷரங்களைப் பொறித்து வைப்பதும் உண்டு.

அவயங்களோடுள்ள விக்ரஹ ரூபத்திற்குப் பண்ணுவதுபோலவே யந்த்ரத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்யம் என்று எல்லா உபசாரங்களுடனும் பூஜை பண்ணவேண்டும். ஏனென்றால் அந்த விக்ரஹத்தின் உயிராகவுள்ள தேவதையேதான் இப்படி யந்த்ர ரூபத்தில் இருப்பதும். அந்த தேவதை மட்டுமில்லாமல் அதனுடைய வாஸ ஸ்தானம், அதனுடைய ஸகல பரிவாரங்கள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த யந்த்ர ரூபம் ஏற்பட்டிருக்கிறது.

அம்பாளுக்குப் பல ரூபமிருப்பதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு யந்த்ரமும் உண்டு. ஆனாலும் மீனாக்ஷி, துர்கை, புவனேச்வரி, சாரதாம்பிகை என்று மூர்த்தி வைத்திருப்பவர்களுங்கூட (அந்தந்த மூர்த்திக்கான யந்த்ரமாக இன்றி)ஸ்ரீசக்ரமே வைத்துப் பூஜை பண்ணுவதையும் பார்க்கிறோம்.

இப்பொழுது ஒவ்வொரு ஆவரணத்தில் எந்த எந்த தேவதைகள் உள்ளார்கள் என்பதை பற்றி எனக்கு தெரிந்த அளவில் பதிவிடுகின்றேன். தவறு இருந்தால் அதை திருத்திக் கொள்ள அம்பிகை அருள்புரியட்டும்.

முதல் ஆவரணம்: இது 'பூபுரம்' எனப்படுகிறது. மூன்று சதுரங்கள் கொண்டது.நம் தேகம் ஸ்ரீசக்ரமாகப் பாவிக்கப்படும்போது, முதல் ஆவரணம், நம் ஜீவாத்மாவின் ஸ்தூல சரீரத்தையும், இந்திரியங்கள், மனம் இவற்றால் உணரப்படும் விஷயங்களையும் குறிக்கும். இதில்,முதலாவது ரேகையில் அஷ்டமாசித்திகளும்மத்திம ரேகையில் ப்ராஹ்மி உள்ளிட்ட அஷ்டமாத்ருகா தேவியரும்,கடைசி ரேகையில்,ப்ரகடயோகினியரும் வசிக்கின்றனர். இது'த்ரைலோக்ய மோகனச் சக்ரம்' எனப்படுகிறது.

இரண்டாம் ஆவரணம்: பதினாறிதழ் கமலத்தைக் கொண்ட‌ இது 'ஸர்வாசாபரிபூரகச் சக்ரம்' எனப்படுகிறது. குப்த யோகினிகள் என்ற பெயர் கொண்ட தேவதைகள் இங்கே வசிக்கின்றனர். ஜீவாத்மாவின், ஸ்வப்னாவஸ்தையையும், சூட்சும சரீரத்தையும் அதில் அடையப்படும் அனுபவத்தையும் குறிக்கிறது.

மூன்றாவது ஆவரணம்: இதன் வடிவம் எட்டிதழ் கமலம். இது 'ஸர்வஸம்க்ஷோபணச் சக்ரம்' எனப்படுகிறது. குப்ததர யோகினிகள் இதில் வசிக்கும் தேவதைகளாவர்.

நான்காவது ஆவரணம்: இது 14 முக்கோணங்களை உடையது. இது 'ஸர்வ சௌபாக்கியதாயகச் சக்ரம்' எனப்படுகிறது. இதில் ஸம்ப்ரதாய யோகினிகள் வசிக்கின்றனர்.

ஐந்தாவதுஆவரணம்: இது 10 முக்கோணங்களை உடையது. இதன் பெயர் 'ஸர்வார்த்தஸாதகச் சக்ரம்'. இதில் குலோத்தீர்ண யோகினியர் வாசம் செய்கின்றனர்.  

ஆறாவது ஆவரணம்: இதுவும் 10 முக்கோணங்களை உடையது. இதன் பெயர், 'ஸர்வ ரக்ஷாகர சக்ரம்' என்று பெயர். நிகர்ப்ப யோகினிகள் இதில் வாசம் செய்கின்றனர்.

ஏழாவது ஆவரணம்: இது எட்டுக் கோணங்களை உடையது. இது 'ஸர்வ ரோகஹரச் சக்ரம்' எனப்படுகிறது. ரஹஸ்ய யோகினிகள் இதில் வசிக்கின்றனர்.

எட்டாவது ஆவரணம்: இது முக்கோண வடிவானது. இதற்கு, 'ஸர்வ ஸித்திப்ரதசக்ரம்' என்பது பெயர். ஜீவப்ரஹ்ம ஐக்கியமே ஸர்வசித்தி என்று குறிப்பிடப்படுகிறது.இதில் அதிரஹஸ்ய யோகினிகள் வசிக்கின்றனர்.

ஒன்பதாவது ஆவரணம்: இது 'ஸர்வானந்தமயச் சக்ரம்' ஆகும். இது பிந்து வடிவானது. இதில் சிவனும் சக்தியும் வீற்றிருந்து அருளுகின்றனர்.

சம தளமாக, கிடைமட்டத்தோடு இருக்கும் ஸ்ரீசக்ரத்திற்கு, 'பூப்ரஸ்தாரம்' என்று பெயர்.காஞ்சி காமாட்சி அம்மன் சன்னதியில், உள்ள ஸ்ரீசக்ரம்,' பூப்ரஸ்தாரம்' ஆகும்

தொடக்க ஆவரணங்கள் உயரமாகவும் பின்பு வருபவை சம தளமாகவும் இருப்பவை 'அர்த்த மேரு' எனப்படும். மாங்காடு காமாட்சி அம்மன் சன்னதியில் 'அர்த்த மேரு' உள்ளது.

ஒன்பதின் தத்துவம்

ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்
**************************************************
9ன் சிறப்பு தெரியுமா?
எண்களில் விசேஷமான
எண்ணாக கருதப்படுவது
ஒன்பது.
அந்த எண்ணில்
நீண்ட வாழ்வு எனும்
அர்த்தம் பொதிந்திருப்பதாகச்
சொல்கின்றனர்,

சீனர்களின் சொர்க்க கோபுரம்,
ஒன்பது வளையங்களால்
சூழப்பட்டுள்ளது.
எகிப்து, ஐரோப்பா, கிரீக்
முதலான நாடுகளும்
9-ஆம் எண்ணை
விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன.
புத்த மதத்தில்,
மிக முக்கியமான
சடங்குகள் யாவும்
ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும்.
தங்கம், வெள்ளி மற்றும்
பிளாட்டினத்தின்
சுத்தத்தை 999 என்று
மதிப்பிடுவார்கள்.

பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண்
இன்னும் மகத்துவங்கள்
கொண்டது.
ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம்
என்று பெயர்.
நவ என்ற சொல்
புதிய, புதுமை எனும்
பொருள் உடையது.

நவ சக்திகள்:
1,வாமை,
2,ஜேஷ்டை,
3,ரவுத்ரி,
4,காளி,
5,கலவிகரணி,
6,பலவிகரணி,
7,பலப்பிரமதனி,
8,சர்வபூததமனி,
9,மனோன்மணி,

நவ தீர்த்தங்கள்:
1,கங்கை,
2,யமுனை,
3,சரஸ்வதி,
4,கோதாவரி,
5,சரயு,
6.நர்மதை,
7,காவிரி,
8,பாலாறு,
9,குமரி

நவ வீரர்கள்:
1,வீரவாகுதேவர்,
2,வீரகேசரி,
3,வீரமகேந்திரன்,
4,வீரமகேசன்,
5,வீரபுரந்திரன்,
6,வீரராக்ஷசன்,
7,வீரமார்த்தாண்டன்,
8,வீரராந்தகன்,
9,வீரதீரன்

நவ அபிஷேகங்கள்:
1,மஞ்சள்,
2,பஞ்சாமிர்தம்,
3,பால்,
4,நெய்,
5,தேன்,
6,தயிர்,
7,சர்க்கரை,
8,சந்தனம்,
9,விபூதி.

நவ ரசம்:
1,இன்பம்,
2,நகை,
3,கருணை,
4,கோபம்,
5,வீரம்,
6,பயம்,
7,அருவருப்பு,
8,அற்புதம்,
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள்:
1,சூரியன்,
2,சந்திரன்,
3,செவ்வாய்,
4,புதன்,
5,குரு,
6,சுக்கிரன்,
7,சனி,
8,ராகு,
9.கேது

நவமணிகள்:-

நவரத்தினங்கள்:
1,கோமேதகம்,
2,நீலம்,
3,வைரம்,
4,பவளம்,
5,புஸ்பராகம்,
6,மரகதம்,
7,மாணிக்கம்,
8,முத்து,
9,வைடூரியம்

நவ திரவியங்கள்:
1,பிருதிவி,
2,அப்பு,
3,தேயு,
4,வாயு,
5,ஆகாயம்,
6,காலம்,
7, திக்கு,
8,ஆன்மா,
9,மனம்

நவலோகம் (தாது):
1,பொன்,
2,வெள்ளி,
3,செம்பு,
4,பித்தளை,
5,ஈயம்,
6,வெண்கலம்,
7,இரும்பு,
8,தரா,
9,துத்தநாகம்

நவ தானியங்கள்:
1,நெல்,
2,கோதுமை,
3,பாசிப்பயறு,
4,துவரை,
5,மொச்சை,
6,எள்,
7,கொள்ளு,
8,உளுந்து,
9,வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது:
1,சோமவார விரதம்,
2,திருவாதிரை விரதம்,
3,உமாகேச்வர விரதம்,
4,சிவராத்ரி விரதம்,
5,பிரதோஷ விரதம்,
6,கேதார விரதம்,
7,ரிஷப விரதம்,
8,கல்யாணசுந்தர விரதம்,
9,சூல விரதம்

நவசந்தி தாளங்கள்:
1,அரிதாளம்,
2,அருமதாளம்,
3,சமதாளம்,
4,சயதாளம்,
5,சித்திரதாளம்,
6,துருவதாளம்,
7,நிவர்த்திதாளம்,
8,படிமதாளம்,
9,விடதாளம்

அடியார்களின் பண்புகள்:
1,எதிர்கொள்ளல்,
2,பணிதல்,
3,ஆசனம் (இருக்கை) தருதல்,
4,கால் கழுவுதல்,
5,அருச்சித்தல்,
6,தூபம் இடல்,
7,தீபம் சாட்டல்,
8,புகழ்தல்,
9,அமுது அளித்தல்,

(விக்ரமார்க்கனின்
சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)
1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி,
2,க்ஷணபகர்,
3,அமரஸிம்ஹர்,
4,சங்கு,
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர்,
7,காளிதாசர்,
8,வராகமிஹிரர்,
9,வரருசி

அடியார்களின் நவகுணங்கள்:
1,அன்பு,
2,இனிமை,
3,உண்மை,
4,நன்மை,
5,மென்மை,
6,சிந்தனை,
7,காலம்,
8,சபை,
9,மவுனம்.

நவ நிதிகள்:
1,சங்கம்,
2,பதுமம்,
3,மகாபதுமம்,
4,மகரம்,
5,கச்சபம்,
6,முகுந்தம்,
7,குந்தம்,
8.நீலம்,
9.வரம்

நவ குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான
யாக குண்ட அமைப்புக்கள்:
1,சதுரம்,
2,யோனி,
3,அர்த்த சந்திரன்,
4,திரிகோணம்,
5,விருத்தம் (வட்டம்),
6.அறுகோணம்,
பத்மம்,
எண்கோணம்,

பிரதான விருத்தம்.
1,நவவித பக்தி :
2,சிரவணம்,
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம்,
5,பாத சேவனம்அர்ச்சனம்,
6,வந்தனம்,
7,தாஸ்யம்,
8,சக்கியம்,
9,ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் :
1,குமார பிரம்மன்,
2,அர்க்க பிரம்மன்,
3,வீர பிரம்மன்,
4,பால பிரம்மன்,
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன்,
7,விஸ்வ பிரம்மன்,
8,பத்ம பிரம்மன்,
9,தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் -
1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர்,
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு,
5,ஆலங்குடி,
6,கஞ்சனூர்,
7,திருநள்ளாறு,
8,திருநாகேஸ்வரம், 9,கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் -
1,வீரம்,
2, பூரம்,
3, ரசம்,
4,ஜாதிலிங்கம்,
5,கண்டகம்,
6,கவுரி பாஷாணம்,
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங்,
9,சிலாஷத்

நவதுர்க்கா -
1,ஸித்திதத்ரி,
2,கஷ்முந்தா,
3,பிரம்மாச்சாரினி,
5,ஷைலபுத்ரி,
7,மகா கவுரி,
8,சந்திரகாந்தா,
9,ஸ்கந்தமாதா,
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி

நவ சக்கரங்கள் -
1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம்,
3,சர்வ சம்மோகன சக்கரம்,
4,சர்வ சவுபாக்ய சக்கரம்,
5,சர்வார்த்த சாதக சக்கரம்,
6,சர்வ ரக்ஷõகர சக்கரம்,
7,சர்வ ரோஹ ஹர சக்கரம்,
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள் -
1,ஆதிநாதர்,
2,உதய நாதர்,
3,சத்ய நாதர்,
4,சந்தோஷ நாதர்,
5,ஆச்சாள் அசாம்பயநாதர்,
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர்,
7,சித்த சொவ்றங்கி
8,நாதர், மச்சேந்திர நாதர்,
9,குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள் :
இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள்,
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய்,
இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள் :
1,தோல்,
2,ரத்தம்,
3,மாமிசம்,
4,மேதஸ்,
5,எலும்பு,
6,மஜ்ஜை,
7,சுக்கிலம்,
8,தேஜஸ்,
9,ரோமம்

18 புராணங்கள்,
18 படிகள் என அனைத்தும்
9-ன் மூலமாக தான் உள்ளன.

காயத்ரி மந்திரத்தை
108 முறை ஜபிக்க வேண்டும்.
எல்லா தெய்வத்தின்
நாமாவளியும் ஜப மாலையின்
எண்ணிக்கையும்
இதை அடிப்படையாகக் கொண்டதுதான்!
புத்த மதத்தினர்
108 முறை மணியடித்து,
புது வருடத்தை வரவேற்றுக்
கொண்டாடுகின்றனர்.
சீனாவில்,
36 மணிகளை
மூன்று பிரிவாகக் கொண்டு,
சு ஸூ எனப்படும்
மாலையைக் கொண்டு
ஜபம் செய்வார்கள்.

ஸ்ரீகிருஷ்ணருக்குப்
பிரியமான மாதம்... மார்கழி.
இது வருடத்தின் 9-வது மாதம்!
மனிதராகப் பிறந்தவன்
எப்படி வாழ வேண்டும் என
வாழ்ந்து காட்டிய
ஸ்ரீராமபிரான் பிறந்தது,
9-ஆம் திதியான
நவமி நாளில்தான்.
9 என்ற எண்ணை
கேளிக்கையாக எண்ணாமல்
புராணங்களிலும்,
நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை
போற்றுவோம்.



A beautiful story about the flute of Krishna.


A beautiful story about the flute of Krishna.

 Krishna always holds a flute in his hand, but there is a great story behind it. Everyday Krishna would go in the garden and say to all the plants, “I love you”. The plants were very happy and responded back and said “Krishna, we love You, too”. One day Krishna rushed quickly into the garden very alarmed. He went to the bamboo plant and the bamboo plant asked, “Krishna, what´s wrong with you?” Krishna said “I have something to ask you, but it is very difficult”. The bamboo said “Tell me: if I can, I will give it to you”. So Krishna said “I need your life. I need to cut you”. The bamboo thought for a while and then said “You don´t have any other choice. You don’t have any other way?” Krishna said, “No, no other way”. And it said “OK, I surrender to you”. So Krishna cut the bamboo, made holes in it, and each time, while he was doing that, the bamboo was crying with pain, because he was paining the bamboo so much. Krishna made a beautiful flute out of it. And this flute was with Krishna all the time. 24 hours a day, it was with Krishna. Even the Gopis were jealous of the flute. They said, “Look, Krishna is our Lord, but yet we get to spend only some time with him. He wakes up with you, He sleeps with you, all the time you are with him”. So one day they asked the bamboo, “Tell us the secret of it. What secret do you have, that the Lord treasures you so much?” And the bamboo said “The secret is that I´m empty inside. And the Lord does whatever he wants with me, whenever he wants with me and however he wants with me”. So this is complete surrender: where God can do whatever He wants with you, whenever He wants, as He wants. And for that you don’t need to be scared, you know, you have just to give yourself. And who is yourself in reality? It’s just Him!

ஓம் வாஸுதேவம்

ஓம் வாஸுதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம் ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம்
வராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருஸிம்ஹம் நரகாந்தகம் அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்த மஜமவ்யயம்
நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம் கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம்
வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம் யக்ஞவாஹகம் சக்ரபாணிம் கதாபாணிம் ஸங்கபாணிம் நரோத்தமம்
வைகுண்டம் துஷ்டதமனம் பூகர்பம் பீதவாஸஸம்த்ரிவிக்ரமம் த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம் நந்திகேஸ்வரம்
ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம் ரௌத்ரம் பவோத்பவம்ஸ்ரீபதிம் ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம் மங்கலாயுதம்
தாமோதரம் தமோபேதம் கேஸவம் கேஸிஸூதனம்வரேண்யம் வரதம் விஷ்ணுமானந்தம் வஸுதேவஜம்
ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம் புருஷோத்தமம்ஸகலம் நிஷ்கலம் ஸுத்தம் நிர்குணம் குணஸாஸ்வதம்
ஹிரண்யதனுஸங்காஸம் ஸுர்யாயுத ஸமப்ரபம்மேகஸ்யாமம் சதுர்பாஹும் குஸலம் கமலேக்ஷணம்
ஜ்யோதீ ரூமரூபம் ச ஸ்வரூபம் ரூப ஸம்ஸ்திதம்ஸர்வஞ்ஜம் ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம் ஸர்வதோமுகம்
ஜ்ஞானம் கூடஸ்தமசலம் ஜ்ஞானதம் பரமம் ப்ரபும்யோகீஸம் யோக நிஷ்ணாதம் யோகினம் யோகரூபிணம்
ஈஸ்வரம் ஸர்வபூதானாம் வந்தே பூதமயம் ப்ரபும்இதி நாமஸதம் திவ்யம் வைஷ்ணவம் கலுபாபஹம்
வ்யாஸேன கதிதம் பூர்வம் ஸர்வபாப ப்ரணாஸனம்
ய: படேத் ப்ராதருத்தாய ஸ பவேத் வைஷ்ணவோ நர: ஸர்வ பாப விஸுத்தாத்மா: விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத்
சாந்த்ராயண ஸஹஸ்ராணி கன்யாதான ஸதானி ச
கவாம் லக்ஷஸஹஸ்ராணி முக்திபாகீ பவேந்நர: அஸ்வமேதாயுதம் புண்யம் பலம் ப்ராப்னோதி மானவ:
விஷ்ணு ஸதநாம ஸ்தோத்திரம்.

திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசி  அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிட்டும்


 

கிருஷ்ணா பட்

இவர் இப்படி ஆத்மார்த்தமாக சிவனை பூஜிக்கும் படத்தை ஏற்கனவே பார்த்திருப்போம் ..
யார் இவர் ,எங்கே இருக்கிறார் என்று எண்ணுபவர்கள் கவனத்திற்கு ...

KN கிருஷ்ணா பட் , 88 வயது முதியவர் ...

ஹம்பி , கர்நாடகா, சுல்தான்களால் அழிக்கப்பட்ட
 " படாவி லிங்கம் " கோயில். ,
கர்ப்பகிரகத்தில் மேல் கூரை இல்லை பாருங்கள் ,இருந்தாலும் கம்பிரமாக நிற்கும் 9 அடி உயர லிங்கம் ...

மேல கோபுரத்தை உடைக்க முடிந்தவர்கள்ளுக்கு கீழ் உள்ள சிலையை ..

450 ஆண்டுகளாக பூஜைகள் இல்லாமல் விடப்பட்டிருந்த லிங்கத்திற்கு ..

1980 ஆண்டு முதல் இவர் தனி மனிதனாக பூஜை செய்து கொண்டு இருக்கிறார் ..

காஞ்சி மகா பெரியவா ஹம்பி சென்ற போது தேவராய வம்சா வழியினிரடம் ,இவருக்கு  ஊதியமும் உணவும் கொடுங்கள் , இனி இவர் கோவிலை பராமரிப்பர் என்று கூறி உள்ளார் ..

இன்னமும் வருடத்திற்கு இருமுறை மகா சிவராத்திரி அன்று மட்டுமே ஊதியம் பெற்று கொண்டு இந்த உன்னத பணியை தொடர்கிறார் ..

இப்படியும் பல ஆயிரம் அர்ச்சகர்கள் பொருளாதார எதிர்பார்ப்பு எதுவும் இன்றி ,இறைப்பணிக்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்து உள்ளனர் ..

நாம் இங்கே நல்ல அதிர்வலைகளுடன் குடும்பத்துடன் வாழ ,இவர்களின் இந்த பூஜைகள் தான் முக்கிய காரணம் ..

பாரதத்தின் நம் தர்மத்தின்  தொன்மை காக்க தன்னலமின்றி  உழைத்து கொண்டு இருக்கும் இவரை போன்ற இந்த ஆன்மாக்கள் தான் உண்மையான " பாரத ரத்தனாகள் "❤


ஆருத்ரா தரிசனம்

நாளை ஆருத்ரா தரிசனம் - திருவாதிரை 30.12.2020.

ஆடும் சிதம்பரமோ .....திருவாதிரையைப் பற்றி   எனக்கு தெரிந்ததை பதிவு செய்கின்றேன்.




சிதம்பரத்தில் ​மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதனையே ஆருத்ரா தரிசனம் என்கின்றனர். ஆருத்ரா என்பது ஆதிரையை குறிக்கும் சொல். சிவனுக்கு உரிய ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. எனவேதான் இந்த திருவாதிரை நாளில் ஆடல் அரசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இருபத்து ஏழு நட்சத்திரங்களிலே, இரண்டே இரண்டு நட்சத்திரத்துக்கு மட்டுமே "திரு" என்ற அடை மொழி உண்டு. அது சிவனுக்கே உரிய "திரு"வாதிரை நட்சத்திரமும், விஷ்ணுவுக்கு உரிய "திரு"வோண நட்சத்திரமும் ஆகும். அதிலும் சிவபெருமானை "ஆதிரையான்" என்றே அழைப்பார்கள். ஆதிரை நட்சத்திரம் ஆனது வான சாஸ்திரத்திலும், சோதிடத்திலும் பேசப் படும் 6-வது நட்சத்திரம் ஆகும். தற்கால வான இயல் அறிவின்படி இதை "ஓரியன் குழு"வில் சொல்லப் படுகின்றது. இந்த ஓரியன் குழுவில் 5 நட்சத்திரங்கள் முக்கியமாய்ச் சொல்லப் படுகின்றது. அவற்றில் மிகுந்த ஒளியுள்ள நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமே ஆகும். வடகிழக்குத் திசையில் காணப்படும் இந்த நட்சத்திரம் எப்போதும் மற்ற நான்கு நட்சத்திரங்களுடனேயே காணப்படும்.


​மார்கழி மாதம் புனிதமானது. மாதங்களுள் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் கிருஷ்ணன். மார்கழிச் சிறப்பை உணர்த்தவே ஆண்டாள் திருப்பாவை பாடியருளினாள். அதுவும் மார்கழி பெண்களுக்கே உரிய விஷேமான மாதம் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் நீராடப் போகுவீர் செல்வச் சிறுமியர்காள்! என்று சிறுமிகளைத்தான் ஏவினாள் ஆண்டாள். காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து-வாச நறுங்குழல் ஆய்ச்சியர் தம் மத்தினால்-ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ என்று மார்கழி விடியற்பொழுதே அறிவித்து சக பெண்களை நீராடச் செல்ல எழுப்புகிறாள் ஆண்டாள்.

மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா என்பர் நடராஜப் பெருமானுக்கு இன்னாளில் நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்டு ஆனந்திக்க ஆயிரமாயிரமாய் பக்தர்கள் கூடுவர். கேரளத்திலும் மார்கழித் திருவாதரை நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் அங்கு இது முழுமையாக ஒரு பெண்கள் பண்டிகையாகவே உள்ளது. தவக்கோலம் பூண்டு கன்னியாக இருந்த பார்வதி (மன்மதனை) எரித்த சிவபெருமானைத் தன் கணவராக வரிக்கிறாள். உமையின் அழகில் மயங்கிய பெருமான், தாம் எரித்த காமனை உயிர்பெற்று எழச் செய்வதாக அவளுக்கு வரமளிக்கிறார். இந்த வரம் அருளியதை எண்ணி, சிவபெருமான் தனது அழிக்கும் தன்மையை விலக்கி, சிருங்கார உருவம் எடுத்து, நாங்கள் வேண்டும் வரத்தையும் அருளவேண்டும் என்பதற்காகவே பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். பகவானை மகிழ்விக்கச் செய்து உவமையவளைப் போல் கன்னிகளும், சுமங்கலிகளும் அதிகாலையில் குளித்து தூய ஆடைகளை அணிந்து உண்ணா நோன்பிருந்து வழிபடுகிறார்கள். நிலைத்த மாங்கல்யத்துக்காகவும், ஐஸ்வர்யத்துக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். ஆனாலும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தினூடே இந்த விரதம் இருப்பதால் அவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்.​

இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்தத் திருவாதிரை நட்சத்திரம் மாதா மாதம் வந்தாலும், மார்கழியில் வரும் திருவாதிரைக்குத் தனிச் சிறப்பு. ஆடவல்லான், தன் பிரபஞ்ச நாட்டியத்தை அன்றே ஆடியதாய்க் கூறுவார்கள். அதிலும் சிதம்பரத்தில் இதற்குத் தனியான மகிமை. சிதம்பரத்தில் முக்கியமான திருவிழா, மார்கழித் திருவாதிரைத் திருவிழா என்றே சொல்லலாம். மற்ற நாட்களில் கோயிலுக்கு உள்ளே இருக்கும் நடராஜர் அன்று வீதியில் உலா வருவார். அதோடு அல்லாமல் நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகங்களும் நடக்கும். இந்த ஆதிரைச் சிறப்பு நாள் விழாவாய்க் கொண்டாடப் பட்டதைப் பரிபாடல் என்னும் சங்கப் பாடலில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து, மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை விரிநூல் அந்தணர் விழவு தொடங்க, புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப, ‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80 அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட, பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின் ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர் நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85 ஆதிரை நன்னாள் மட்டுமின்றி "அம்பா ஆடல்" என்னும் பாவை நோன்பினையும் சிறப்பித்துக் கூறுகின்றது மேற்கண்ட பாடல். ஆதிரை நாளில் நடராஜர், சிவகாமி, பிள்ளையார், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் தான் வீதி உலாச் செல்வார்கள். வானில் தென்படும் அந்த ஐந்து நட்சத்திரக் கூட்டமும் மேற்கண்டவாறே ஈசன், அம்பிகை, கணபதி, சுப்ரமணியர், சண்டேசஸ்வரர் என்றே சொல்லப் படுகின்றது. மிக்க ஒளியுடன் திகழும் திருவாதிரை நட்சத்திரத்தை "ஆடவல்லான்" என்றே சொல்கின்றனர் ஆன்மீகப் பெருமக்கள். மார்கழி மாதம் 11 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் 9-ம் நாள் அன்றுகாலையில் நடைபெறும் தேர் ஓட்டத்துக்குப் பின் மாலையில் ஆயிரக் கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு நள்ளிரவிலிருந்து அதிகாலை வரையில் இந்தத் திருவாதிரை அபிஷேகம் நடக்கின்றது. அதன் பின்னர் ஆடலரசன் தரும் காட்சியே "ஆருத்ரா தரிசனம்" என்று சொல்லப் படுகின்றது. இந்தச் சமயம் ஈசானமூலையில் ஆருத்ரா நட்சத்திரம் எப்போதும் இல்லா வகையில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்றும் சொல்லப் படுகின்றது. முழு நிலவு ஒளி ஊட்டும் பெளர்ணமி தினத்தன்று சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும்போது இந்த உற்சவம் அதிகாலையில் நடைபெறுகிறது. அந்த நேரம் வானில் தென்படும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதீத பிரகாசத்தை உணர்ந்தவர்கள் ஈசனின் திருக்கூத்து அப்போது நடைபெறுவதாயே உணர்கின்றனர்.


தேவாரம் சிதம்பரம் கோயிலில் ஒவ்வொரு காலபூஜையின் போதும் தமிழில் கோயிலின் குறிப்பிட்ட ஓதுவார்களால் பாடப் படுகின்றது. இன்னும் சொல்லப் போனால் தீட்சிதர்களே, நன்கு தேவாரப் பாடல்களை இசையுடன் பாடுவார்கள். பிரச்னை என்னவென்றால் நடராஜரின் பொன்னம்பலத்துக்கு அருகே உள்ள மேடை போன்ற "கனகசபை"யில் போய்ப் பாடவேண்டும் என்பதே திரு ஆறுமுகம் அவர்களின் கோரிக்கை. ஆனால் அந்த இடத்திலும் வழிபாடுகள் நடைபெறுவதாலும், குஞ்சிதபாதம் அபிஷேகங்கள் அங்கே தான் நடக்கும், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அபிஷேகம், வழிபாடு நடக்கும், என்பதால் ஓதுவார்கள் கூடக் கீழே நின்றுதான் பாடுவார்கள், ஆகவே நீங்களும், அங்கேயே நின்று பாடுங்கள் என்பது தான் தீட்சிதர்கள் தரப்பில் சொல்லப் படுகிறது, திரும்பத் திரும்ப. ஆனால் தமிழில் பாடுவதையே தீட்சிதர்கள் அனுமதிக்காதது போல் ஒரு தோற்றம் மீண்டும், மீண்டும் உருவாக்கப் படுவது வருத்தத்துக்கு உரியது. பல வருடங்கள் சிதம்பரம் கோயில் சென்று வருகிற முறையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், அங்கு தேவாரம் பாட எந்தத் தடையும் இல்லை என்று.


மேலும் மற்றொரு ​புராண​க் வரலாறு கூறுகின்றது,. உலகை இயக்கும் நடனம் இந்த உலகமானது, நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற பஞ்ச பூதங்களால் இயங்குகிறது. உலக இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது இறைவனின் நடனம்தான். இறைவன் அசைவதால்தான் உலகமே இயங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வுலகின் மூச்சாக இருந்து எப்போது இயக்குபவராக இறைவன் உள்ளார். எனவேதான் அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்கின்றனர். நடராஜரின் ஆட்டம் நின்றுவிட்டால் உலகின் இயக்கம் நின்றுவிடும். சிவபெருமான் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் சிவன் மட்டும் தனித்து ஆடியது 48. சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர் என்கின்றன புராணங்கள். இதனையே பார்க்க முக்தி தரும் தில்லை என்கின்றனர். நம் ஆன்மாவை சிவகாமியாக எண்ணி, நடராஜனின் நடனத்தை காணவேண்டும் என்பது ஐதீகம். பதஞ்சலி முனிவருக்கு அருள் பாற்கடலில் ஒரு நாள் மகாவிஷ்ணு திடீரென்று மகிழ்ச்சியில் திளைப்பதைக் கண்ட ஆதிசேஷன் அதற்குக் காரணம் கேட்டார். திருவாதிரை நாளன்று சிவபெருமான் நடேசனாக ஆடிய திருத்தாண்டவமே தனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார் திருமால். பரந்தாமனையே மெய்மறக்கச் செய்த அந்த நாட்டியத்தைத் தானும் காண ஆவல் கொண்டார் ஆதிசேஷன். பெருமாளும் ஆசியளித்தார். உடனே ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் பதஞ்சலி முனிவராக உருக் கொண்டு, பூலோகம் வந்து தவம் செய்யத் தொடங்கினான். தவம் உக்கிரம் அடைந்தபோது, பதஞ்சலி முனிவர் திடீரென்று கேட்ட குரலால் கண்விழித்தார். சிவன் தோன்ற, பதஞ்சலி சிவனிடம் திருநடனம் காணவேண்டி, உம்மைப் போலவே வியாகர் பாதரும் காத்திருக்கிறார். நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீராக என்று கூறி மறைந்தார். அதன்படி பதஞ்சலி முனிவரும் வியாக்ர பரதரும் சிதம்பரம் திருத்தலத்தில் திருவாதிரை நாளில் திருநடனத்தைக் கண்டனர். எனவே மார்கழி திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து, சிவாலயம் சென்று, நடராஜ தரிசனம் கண்டால் நமது பாவங்கள் விலகி புண்ணியம் பெருகும் என்கின்றன புராணங்கள் சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசனம், ஞாயிறுக்கிழமை நடைபெறுகிறது. சனிக்கிழமை தேர் திருவிழாவும் இதனைத் தொடர்ந்து ஞாயிறு அதிகாலை, நடராஜர் உடனுறை சிவகாமசுந்தரி அம்பாளுக்கு, ஆயிரங்கால் மண்டப முகப்பில், மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதன்பின்னர் பகல், 12 மணிக்கு மேல், பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மரகத நடராஜர் ஆருத்ரா தரிசன விழா ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிப்பார். ஆண்டுக்கு ஓரு முறை ஆருத்ரா தரிசனத்தன்று சிலையில் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும். ​

அஸ்வினி நட்சத்திரம் முதல் புனர்பூசம் வரையில் திருவாதிரை உற்சவ காலமாகும். அதிகாலையில் எழுந்து குளம், ஆறு போன்ற நீர்நிலையில் குளிப்பது திருவாதிரை விரதத்தின் முக்கிய அம்சம். அசுவினியன்று அருணன் உதிக்குமுன், பரணியன்று வெள்ளி தோன்றுமுன், கார்த்திகையன்று காகம் கரையும்முன், மிருக சீரிஷத்தன்று மக்கள் உணருமுன் குளிக்கவேண்டும் என்பது திருவாதிரை ஸ்நானத்தின் முறை. மிதமான குளிரும் இதமான காற்றும் வீசும் சுகமான விடியற்காலை பொழுதில் இளம் பெண்களின் பாடல் ஒலி அலை அலையென மிதந்து வரும் நீர் நிலையில் அவர்கள் குதித்து கும்மாளமிட்டுக் குளிக்கும் ஓசை, செப்புப் பானையின் வாயை மூடிவிட்டுத் தட்டுவது போல் அக்கம் பக்கத்தில் குடியிருப்போரின் காதுகளில் எதிரொலிக்கும்.

வீட்டுப் பெண்களும் மருமகள்களும் நீரில் தயிர் கடைவது போன்று பல விளையாட்டுகள் விளையாடுவார்கள். படிக்கட்டில் நெருப்பின் அருகே குளிர் காய்ந்து கொண்டிருக்கும் கிழவிமார்கள், தாம் மூட்டியிருக்கும் தீயின் சிறிய ஒளியில் இதைக் கண்டு இன்புறுவார்கள். குளித்துக் கரையேறிய இளம்பெண்கள், நெருப்பின் அருகில் குளிர் காய வரும்போது கிழவிகள் கடுங்குளிர்! தாங்கமுடியவில்லை! எல்லாவற்றையும் தாங்கும் பூமி மாதா போல் பெண்களும் பொறுமை கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்பார்கள். குளித்து முடித்தாகிவிட்டதா? வெள்ளாவியில் இட்டு வெளுத்த ஆடையை அணிந்துகொண்டு சாந்து, சந்தனம், மஞ்சள் பொட்டு, மை இவற்றை அணிந்து தச புஷ்பம் (பத்துப் பூக்கள்) சூடிய பிறகு கூட்டம் கூட்டமாக அவர்கள் பாடிக்கொண்டு வீடு திரும்புவார்கள்.

சிறு குளத்தில் துடி பரவியது; சிறு குன்றில் வெயில் பரவியது; வயலில் பசு பரவியது-உணர் உணர் என் குட்டிமாயே என்ற பொருள் கொண்ட அவர்களது பாட்டு சோம்பலால் தூங்கிக் கொண்டிருக்கும் தன் தோழியை எழுப்புவதற்காக இருக்கலாம். அல்லது மகா மாயை தேவியைப் பற்றி உணர்த்துவதாக இருக்கலாம். திருவாதிரை நோன்பன்று அரிசி சேர்க்காத எல்லா வகை தின்பண்டங்களும் தயாராகும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமாகக் கிடைக்கும் கிழங்குகளைக் கொண்டு செய்யும் ஒருவித கூட்டு, கூவக்கிழங்கு மாவினால் செய்த களி, இளநீர் இலை முக்கிய இடம்பெறும்.

அக்காலத்திலும் திருவாதிரை நட்சித்திரம் அறுபது நாழிகைக்குள் நூற்றெட்டு வெற்றிலை சாப்பிட வேண்டும் என்பது சுமங்கலிகளுக்கு முக்கியமான ஒரு சடங்காக இருந்தது. விளக்கை சாட்சியாக வைத்துக்கொண்டு அதன் எதிரில் கையில் பிடித்துக்கொண்டு அர்த்தநாரீஸ்வரர் சிவனை எண்ணிக்கொண்டு நூற்றெட்டு வெற்றிலை சாப்பிடத் தொடங்குவார்கள். திருவாதிரை நட்சத்திரம் போல் அமைப்பு உள்ள கொடுவேலிப் பூக்கள் மார்கழியில் எங்கும் பூத்திருப்பதை கேரளாவில் காணலாம். இதை பாதிராப் பூ(நடு இரவுப் பூ) என்பார்கள் திருவாதிரை நட்சத்திரம் உச்சியை அடைந்துவிட்டது என்று அறிந்தவுடன் பாதிராப் பூ சூடுவார்கள் ஆருத்ரா நட்சத்திரத்தை நோக்கிப் பூக்களை அர்ப்பணம் செய்து பின்னர் வட்டமாக அமர்ந்து கைதட்டி விளையாடுவார்கள். திருவாதிரையின் பெருமையைப் பறைசாற்றும் பக்திப்பாடல்களை பாடுவார்கள். நிலவும் நிழலும் இன்பமாக இணைந்த முற்றத்தில் பெண்கள் மட்டும் விழித்திருப்பார்கள்.​

சிதம்பரம், உத்தரகோஷமங்கை போன்ற ஆலயங்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது. ஆருத்ரா தரிசனம் காண வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் இந்த ஆலயங்களுக்கு வந்து இறைவனை தரிசித்து செல்கின்றனர். திருவாதிரைக் களி ‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது.

திருவாதிரை விரதம் இருப்பவர்கள் களி செய்து படைக்கும் வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு, சிவாலயம் சென்று நடராஜரைத் தரிசித்து வருவது சிறப்பு.

இது கதை அல்ல, உண்மை சம்பவம்.

இது கதை அல்ல.  உண்மை சம்பவம்.

 படித்து முடித்ததும், ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டு சிந்தியுங்கள்.

ஒரு அடியார் குடும்பம், காசிக்குச் சென்று  ஈசன் திருவுளையாடலால் அங்கேயே தங்க நேரிடுகிறது.

கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார்.

தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய தர்ம சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தை கற்றுத் தருகிறார் மகளும் வளர்கிறாள்.

மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை.

”நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே!” என்று

ஆனால் மகளோ, பிடிவாதமாக “அப்பா! நான் இறைவன் ஈசன் சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன்.

எனக்குத் திருமணம் வேண்டாம்” என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர்களும், அறிந்தவர்களும் கூட“அம்மா! நீ பெண்.

தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்”என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும்

*"காசி விஸ்வநாதர் மீது ஆணை!*

என்னை தொந்தரவு செய்யாதீர்கள்" என்று கூறி ஒதுங்கி விடுகிறாள்.

பிறகு, வேறு வழியில்லை என்பதால்,தன்னிடம் இருக்கக்கூடிய நில, புலன்களை எல்லாம் விற்று, “அம்மா! ஒரு வேளை நான் இறந்து போய்விட்டாலும்,

இந்த செல்வத்தைக் கொண்டு, பிறரை நாடாமல், கையேந்தாமல் வாழ்ந்து கொள்” என்று ஏற்பாடு செய்து, ஒரு பெரிய இல்லத்தையும் வாங்கித் தந்து விட்டு, சில காலங்களில் இறந்தும் விடுகிறார்.

“தந்தை எனக்கு சில விஷயங்களை போதித்தார்! அவற்றை செயல்படுத்தினால் என்ன?” என்று மகளுக்கு ஒரு ஆசை.

எனவே, பல ஊர்களில் இருந்து காசிக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக, தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும், உணவு தருவதும் என்று ஒரு அறப் பணியைத் துவங்க, காலம் செல்லச் செல்ல

 “இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார்” என்று அறிந்து பலர், மருத்துவ உதவி, கல்வி உதவி வேண்டும் என்று கேட்க, இவளும் செய்து கொண்டே வருகிறாள்.

உலகிற்கே படியளக்கும் ஈசன் சும்மா இருப்பானா, அவன் திருவுள்ளம், இந்தப் பெண்ணை, சோதிக்க எண்ணியது.

அந்தக் காசி மாநகரம் முழுவதும், இவள் புகழ் பரவத் தொடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து, தந்து, ஒரு கட்டத்தில், வறுமை இவளை சூழ்ந்து கொண்டது.

இப்பொழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க, வேறு வழியில்லாமல், அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சிறு தொகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள்.

ஒரு கட்டத்திலே, அவர்களும் இவளுக்குக் கடன் தர மறுத்து விடுகிறார்கள்.

அது மட்டும் அல்லாமல், ”முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் கொடு” என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள்.

இரவில் படுத்தால், இவளுக்கு உறக்கம் வரவில்லை. சிறு பெண் என்பதால், அச்சமும் ஆட்கொண்டுவிட்டது.

இந்த வேதனையோடு காசி விஸ்வநாதரை வணங்கி
“எந்த ஜென்மத்தில் நான் செய்த பாவமோ, இப்படிக் கடனாக என்னை இடர்படுத்துகிறது.

இறைவா.!
நான் செய்தது சரியோ? தவறோ? தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருந்ததால்,
என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன்.

ஊரைச் சுற்றி கடன் வாங்கி விட்டேன். எல்லோரும், கடனை, திரும்பக் கேட்கிறார்கள். என்னால் கொடுக்க முடியவில்லை.

அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை. அந்த கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை கொடு என்றுதான் கேட்கிறேன்”என்று மனம் உருகி, இறைவனை வணங்கி வேண்டுகிறாள்.

ஒரு நாள்,ஒரு பழுத்த மகான், இவளைத் தேடி வருகிறார்.

”மகளே! கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே, மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார் அவரைச் சென்று பார்.

உனக்கு உதவி கிடைக்கும்”
என்று அந்த மகான் கூறுகிறார். “எனக்கு அவரை அறிமுகம் இல்லை.

நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா?” என்ற அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது.

என்றாலும், துறவி கூறியதால், அன்று மாலை அந்த செல்வந்தர் இல்லத்திற்குச் செல்கிறாள்.

அந்த செல்வந்தன் இந்தப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் நேரில் பார்த்தது இல்லை.

இருந்தாலும் கூட, மிகப் பெரிய ஞான நிலையில் இருப்பவள் என்று கேள்விப்பட்டதால், அவளை உள்ளே அழைத்து அமர வைக்கிறார்.

அவரைச் சுற்றி ஊர்ப்பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையிலே”பெண்ணே! உனக்கு என்ன வேண்டும்?.

எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்?” என்று செல்வந்தன் கேட்க, இவள் தயங்கி, தயங்கி, தனக்கு ஏற்பட்டுள்ள கடன், மற்ற பிரச்சினைகளைப் பற்றிக் கூறி, “ஐந்து லட்சம் கடன் ஆகிவிட்டது. பலரிடம் கடன் வாங்கியதால், எல்லோரும் இடர் படுத்துகிறார்கள்.

எனவே, நீங்கள், ஐந்து லட்சம் தந்தால், காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது சிறு, சிறு பணிகளை செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன். நீங்களோ, மிகப்பெரிய செல்வந்தர்.

ஒரு துறவி தான் என்னை இங்கு அனுப்பினார். ”என்று தயங்கி, தயங்கி கூறுகிறாள்." அந்த செல்வந்தர் யோசிக்கிறார். ”இவள் மிகப் பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது."

ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லட்சம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
”தர முடியாது” என்றால் இவள் மனம் வேதனைப்படும்.

நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும்” என்று எண்ணி, அந்த செல்வந்தர் மிக சாமர்த்தியமாகப் பேசுகிறார்.

“பெண்ணே! நான் கூறுவதை நீ தவறாக எண்ணக்கூடாது.
உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார்.

நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு, ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும், நீர்த்தடங்களை அமைப்பதும், கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய்.

பாராட்டுகிறேன்.
ஆனால், உனக்கென்று கொஞ்சம் செல்வத்தை வைத்துக் கொள்ள வேண்டாமா? சரி.
உன் செல்வத்தை தர்மம் செய்தாய்.

ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி, தர்மம் செய்தாய்? கடன் வாங்கும் முன் என்னைக் கேட்டாயா? சரி. நீ செய்தது எல்லாம் நியாயம் என்றாலும், இப்படி தர்மம் செய்த நீயே, நடு வீதிக்கு வந்து விட்டாய்.

எப்படி உன்னால், என்னிடம் வாங்கிய கடனை, திருப்பித் தர முடியும்? அடுத்ததாக, நான் கடன் கொடுத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய்.

எதை நம்பி, நீ கேட்கின்ற அந்த பெரிய தொகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது?”
என்று அந்த செல்வந்தர் கேட்கிறார். இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி,

”அய்யா! நீங்கள் கூறுவது உண்மைதான். ஏதோ ஒரு ஆர்வத்தில் செய்து விட்டேன். அடமானம் வைக்க என்னிடம் எதுவுமில்லை.

உங்களிடம் கோடி, கோடியாக செல்வம் இருக்கிறது என்று ஊர்மக்கள் சொல்கிறார்கள்.

அதில் ஒரு சிறு பகுதியைத்தான் கேட்கிறேன். காசி விஸ்வநாதர் மீது ஆணை. எப்படியாவது சிறுக, சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள்” என்று கேட்கிறாள்.

“மன்னித்து விடு பெண்ணே! அடமானம் இல்லாமல், நான் எதுவும் தருவதற்கு இல்லை” என்று செல்வந்தர் கூற, அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு, ”அய்யா! உங்களுக்கே தெரியும்.

உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நானும், என் தந்தையும் ஆங்காங்கே, பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று.

தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பொதுக்குளம் கூட, அடியேன் கட்டியதுதான். இந்த நீரை, தினமும், ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன. இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா?

என்றாலும், இந்த பொதுக் குளத்தை, எதையும் எண்ணி அடியேன் அமைக்கவில்லை.

இருப்பினும், எனக்கு உடன்பாடில்லை என்றாலும், நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தத் திருக்குளத்திலே, நாளைக் காலை, சூரிய உதயத்தில் இருந்து, யாரெல்லாம் நீர் பருகிறார்களோ, அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன்.

ஐந்து லட்சத்திற்கு உண்டான அசல், வட்டிக்கு சமமான புண்ணியம், எப்பொழுது உங்களிடம் வந்து சேருகிறதோ, அப்பொழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன்”

என்று கேட்க, அந்த செல்வந்தர் சிரித்துக் கொண்டே, ”பெண்ணே! ஏதாவது ஒரு பொருளைத்தான் அடமானம் வைக்க முடியும். பாவ புண்ணியங்களை அல்ல.

ஒரு பேச்சுக்கு, நீ கூறியபடி, நீரைப் பருகுவதால் ஏற்படும் புண்ணியம், என் கணக்குக்கு வருவதாக வைத்துக் கொண்டாலும், புண்ணியம் அரூபமானது.

கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து, புண்ணியம், என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்று கேட்கிறார்.

“அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன்.

என்னுடன் வாருங்கள்என்று, அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.அங்கே குளக்கரையிலே கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி,

”எம்பிரானே! அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக்காட்டக் கூடாது. என்றாலும், கடனிலிருந்து தப்பிக்க, இந்த அபவாதத்தை செய்கிறேன்.

“ஈசனே, இந்த திருக்குளத்தின் அடியில் நீ இருக்க வேண்டும்.

எப்பொழுது, அடியேன் கணக்கில் இருந்து அசலும்,வட்டியுமான புண்ணியம், இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ, அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும்

"ஈஸ்வரா" என்று கூறி, பல முறை பஞ்சாக்ஷரம் கூறி வணங்கி, அடியாட்களின் துணை கொண்டு, அந்த சிவலிங்கத்தை கடினப்பட்டுத் தூக்கி, திருக்குளத்தின் நடுவே இடுகிறாள்.

சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது. பிறகு, அந்த செல்வந்தரைப் பார்த்து,

”அய்யா! நீரின் உள்ளே இருப்பது, வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாக்ஷாத் சவபெருமான் தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை, சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

யாரெல்லாம் நீரைப் பயன்படுத்துவார்களோ, எத்தனை காலம் ஆகுமோ? எனக்குத் தெரியாது. ஆனால், எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து, தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ, அப்பொழுதே, இந்த சிவலிங்கம் மேலே வந்து மிதக்கும்”என்று கூறுகிறாள்.

செல்வந்தரோ நகைத்து, ”அம்மா! சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்.

ஆனால், கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே”என்றார் கிண்டலாக.

இளம் பெண்ணோ.. “இல்லை. நம்புங்கள். சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும்”.

இதைக் கல் என்று பார்க்காதீர்கள். #பகவான் என்று பாருங்கள்”என்று அந்தப் பெண் உறுதியாகக் கூறுகிறாள். செல்வந்தர் யோசிக்கிறார்.

”இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து, பணம் தர மாட்டேன் என்றால், நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும்.

மேலும், இவள் கேட்பது மிகச் சிறிய தொகை. அது மட்டுமல்லாது, இவள் கூறுவது மெய்யா? பொய்யா? என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம்.

ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால், இவள் புண்ணியவதி என்பதை நானும், ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும்.

மாறாக நடந்தால், இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும்.” என்று எண்ணி, அவள் கேட்ட தொகையைத் தருகிறார்.

அதைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று யார், யாருக்கு தர வேண்டுமோ, அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு “இறைவா! உன்னை நம்பித்தான், இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே” என்று வேண்டிக் கொண்டு நிம்மதியாக சிவனை நினைத்து உறங்கச் செல்கிறாள்.

இங்கே செல்வந்தரோ, ”அவசரப்பட்டு விட்டோமோ? ஏமாந்து பெருந்தொகையை கொடுத்து விட்டோமோ?” என்று உறக்கம் வராமல், எப்பொழுது விடியும்?

என்று பார்த்து, விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து,”நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு, கையில் ஒரு ஏடும், எழுத்தாணியும் வைத்துக் கொண்டு,

ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன?” என்று குறித்துக் கொண்டே வாருங்கள்.

எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும்”

என்று ஏற்பாடு செய்து விட்டு, அன்று விடிந்ததும் வீட்டின் மேல்விதானத்தில் அமர்ந்து கொண்டு, குளக்கரையை பார்வையிட துவங்குகிறார்.

விடிந்து, காலை மணி ஆறு ஆகிறது. காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று, குளத்து நீரை அருந்தி விட்டு மறுபக்கம் செல்கிறது. அவ்வளவுதான்.

குபுகுபுவென தூப, தீப, சாம்பிராணி, குங்கும சந்தன மணத்தோடு மேளத்தாளத்தோடு, உடுக்கை ஒலிக்க எம்பெருமான் சிவலிங்கம் மேலே வந்து மிதக்கிறார்

அவ்வளவுதான். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கி நிலைகுழைந்து தரையில் அமர்ந்து விட்டார்.

“ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே, ஐந்து லட்சத்திற்கு சமம் என்றால், அந்த புண்ணியவதி செய்த அறப்பணிகளுக்கு முன்னால், என் செல்வம் அத்தனையும் வீண்”

என்பதை புரிந்து கொண்டு, “என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே! செல்வம்தான் நிலையானது என்று இருந்தேன்.

அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள்.” என்று கூற, ஊரே சென்று பார்த்தது.

அதன் பிறகு, தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து, அந்த பெண்ணை தன் பெண்ணாக தத்து எடுத்து கொண்டு, தானும் கடைசிவரை தர்மம் செய்து வாழ்ந்தார். இது 300-400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம்

”தர்மங்களை செய்கிறோம்? இருப்பினும் நம் வாழ்க்கை சிறக்கவில்லையே? ஒரு வேளை நாம் முட்டாள்தனமாக வாழ்கிறோமா? மற்றவர்கள் எல்லாம் மிகவும் சாமர்த்தியமாக வாழ்கிறார்களே? நாமும் அது போல வாழவில்லையே? தனத்தை சேர்த்து வைக்க வில்லையே?” என்ற எண்ணம் வரும் போதெல்லாம், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தால், மனதிற்கு கட்டாயம் உற்சாகம் கிடைக்கும்.

எனவே, அன்பர்களே..இதைக் கதை என்று பார்க்காமல், தர்மத்தின் பாதையை உணர வேண்டும்.

ஸ்ரீ புது பெரியவாளின் வார்ஷிக ஆராதனை


ஸ்ரீ புது பெரியவாளின் வார்ஷிக ஆராதனை

பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் - ஒரு பார்வை
 

கடந்த சில வருடங்களாக அவர்கள் தமது பூத உடலுடன், நம்மிடையே இல்லை; ஆனால் தமது பிருந்தாவனத்தில் தன்  குருவுக்கு அருகிலேயே இருந்து நம்மையெல்லாம் அருள் பாலித்து வருகிறார்கள் அவருக்கு முன்னால் 68 பீடாதிபதிகள் இந்தபீடத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர்கள் என்றும் புதியவராகவே காக்ஷியளித்தார். அவ்வாறு இருந்தாலும், காலத்திற்கேற்றபடி தன் தனது வாழ்க்கையின் சில அம்சங்களை மாற்றிக்கொண்டாலும்,  ஸ்ரீ மடத்தின் ஸம்பிரதாயத்தை அவர்கள் ஒருபோதும், ஒரு விதத்திலும் மீறியதில்லை. உதாரணமாக ஒரு சம்பவத்தை இங்கு எழுதுகிறேன். 1971 என்று ஞாபகம். என் பிறந்த ஊரான, சாத்தூரில் நான் படித்த ஆரிய வைசிய மிடில் ஸ்கூலில் காம்ப் . நான் காம்பில், அவர்களுடன் அங்கு வந்திருக்கிறேன். அங்கு என் பால்ய சிநேகிதன் சங்கரன் வந்திருந்தான். தான் தன் கைப்பட, ஸ்ரீ பெரியவர்களுக்கு பாத பூஜை செய்ய விரும்பினான். அவனது விருப்பத்தை நான் ஸ்ரீ பெரியவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு, அவர்கள் சொன்ன பதில்: " உனக்குத்தான் நமது மடத்தின் சம்ப்ரதாயம் தெரியுமே. கிராப் வைத்துக்கொண்டவர்கள், ஸ்ரீ மடத்து பூஜகர் மூலம் தான் பாத பூஜை செய்ய முடியும். இதை அவனிடம் நீயே சொல்லிவிடு ". இன்னொரு சம்பவம்: ஸ்ரீ காஞ்சி மடத்தில் , நமது ஸ்வாமிகள் நித்திய பூஜைகள்  செய்து வருகிறார்கள் . ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் யாத்திரையாக சென்றிருப்பதால், மூன்று வேளை பூஜைகளையும், நமது ஸ்வாமிகளே செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். அவர்களுக்கு தனது மலத்துவார த்தினருகே ஓரு  பெரிய கட்டி. பழுத்து உடையவேண்டிய நிலை. எவ்வளவு வலியிருக்கும் என்று அவரவர்களே ஊகித்துக்கொள்ளலாம். பழுத்து உடைந்தும் விட்டது. அவ்வப்பொழுது அந்த இடத்தை சுத்தி செய்து கொள்ளவேண்டிய நிலை. ஸ்ரீ மடத்து டாக்டர் வந்து இதை செய்வார். சுத்தி செய்தபின் ஸ்நானம் செய்தபின் தான் பூஜை செய்ய முடியும். இது தினசரி மூன்றுவேளை செய்யவே ண்டியது. பூஜை ஒவ்வொரு முறை முடிந்தபின் தான், டாக்டர் அதற்கு மருந்து போடமுடியும். இவ்வாறு மடத்து சம்பிரதாயத்தையும் விடாமல், தனது சரீரத்தின் இயலாமையையும் பொறுத்துக்கொண்டு அவர்கள் தனதுபணியில் சிறிதளவும் பங்கம்வராமல், மேற்கொண்டார் என்பது எவ்வளவு பேர்களுக்குத்தெரியும்?
 
1954-ம் வருஷம், பீடத்துக்கு வந்த தினத்திலிருந்து, 64 வருஷங்கள்  சற்றும் ஓய்ச்சலையோ அல்லது ஒழிவோ இல்லாது, அவர்கள் செய்த பணிகள் எத்தனை, எத்தனை? இதை நான் இங்கு சொல்லவேண்டியது அனாவசியமே, ஆனால் நாடறியும். 1987-ல்  அவர்கள் இரவோடு இரவாக தலைக்காவேரி சென்று , அங்கு அகஸ்தியர் தவம் மேற்கொண்ட ஆஸ்ரமத்தில் தங்கி மௌனமாக சிலகாலம் தவம் இருக்கவேண்டி நேர்ந்தது. இது ஏன்? சிலரது வசைச்சொற்களையும், வசைமாரிகளையும் பொறுக்கும் விதமாகவே அவர்கள் இதை தன் தவமாக மேற்கொண்டார் என்பது சிலருக்கே தெரியும். அவ்வாறு அவர்கள் சென்ற பொழுதும், அவர்களது {குறை சொல்பவர்களுடைய} மனோபாவம் சிறிதும் மாறவில்லை. அது ஏன்? இன்றும் சிலரது அவர்களைக்குறித்த க்ரோத மனோபாவம் மாறவில்லையே? {ஸ்ரீ பகவான் கீதையில், மூன்றாவது அத்தியாயத்தில் சொன்ன, 37-வது ஸ்லோகம் இங்கு நினைவுக்கு வருகிறது} அதற்குப்பின்பு அவர்கள் மேல்,  2006-ல், ஒரு பெரிய அவதூறும்  சுமத்தப்பட்டது, அவர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தி, அவர்கள் கோர்ட்டுக்குச் செல்லும்படியாயிற்று. சிலகாலம், ஜெயிலிலும் இருக்க நேரிட்டது. கோர்ட்டில், ஜட்ஜின் கேள்விக்கு " நான் ஒரு குற்றமும் செய்யவில்லை "என்று  சொன்னதைத்தவிர வேறு ஒன்றுமே சொல்லவும் இல்லை, செய்யவும் இல்லை. இதைத்தொடர்ந்து பல வேண்டத்தகாத செயல்களும் நடந்தன. எல்லாவற்றையும் பொறு த்துத்தாங்கினார்கள். ஆனாலும் அவர்கள் சற்றும்  அயராது, ஓர் ஆலமரம் போல் நிமிர்ந்து நின்றார்கள்.

2012-ம் வருஷம் அவர்கள் ஒரு குற்றமற்றவர்கள் என்று கோர்ட் தீர்ப்பு வந்து விடுதலையான பின்பு அவர்கள் முதன் முதலில் விடுத்த செய்தி:
1. வேத தர்மத்தை காக்க என்னென்ன வழிகள் உண்டோ அவற்றையெல்லாம் தொடங்க வேண்டும்.
2. நமக்கெல்லோர்க்கும் முன்னோடியான ஸ்ரீ பகவத் பாதர்களுடைய பெருமையை எல்லோரும் அறியுமாறும், விருத்தி செய்யுமாறும், அவர்களுடைய எல்லாக்கிரந்தங்களையும் லோகம் முழுக்கப்பரப்பவேண்டும்.
3. "லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து " என்பதற்கிணங்க, பொது ஜனங்களுக்கெல்லாம், உ தவும் வகையில் ஆவனம் செய்வதில் ஈடுபடவேண்டும். அவர்கள் எப்பொழுதும் சிரித்த முகமாகவே தான் காணப்பட்டார்கள். சைவ வைஷ்ணவ வேறுபாட்டை அவர்கள் என்றுமே கொண்டதில்லை. ஒரு வருஷம் மார்கழி மாதத்தில், அவர்கள் தினமும், காலை வேளைகளில், காஞ்சிபுரத்திலுள்ள ஒவ்வொரு வைஷ்ணவ ஸ்தலமாக சென்று தொழுது வந்தார்கள். காஞ்சியில் வரதராஜ ஸ்வாமி தேர் மிகவும் பழுது பட்ட நிலையில் இருந்தது. புதிய தேர் செய்ய வேண்டிய நிலை. தானே முன்வந்து, பல தனிகர்களை அண்டி அதற்கு வேண்டிய பணம் சேகரித்தார்கள். இப்பொழுது அங்கு உள்ளது. அவர்களால் செய்யப்பட்ட புதிய தேர். இது எவ்வளவு பேர்களுக்குத் தெரியும்? போன வருஷம் ஒரிஸ்ஸாவில், புவனேஸ்வரில், ஒரு பெரிய ஆஸ்பத்திரி நிறுவியிருக்கிறார்கள். தமிழ் நாடும், தமிழக அரசும், காஞ்சி மடத்திடம் வெறுப்பு காட்டாமல் இருந்திருந்தால், அவர்கள் தமிழ் நாட்டு  மக்களுக்கு, குடி தண்ணீர் மற்றும் விவசாயத்துக்கான தண்ணீர் இவற்றிற்காக  நிறைய செய்திருப்பார்கள். வேண்டாத வெறுப்பிலும், வேண்டாத அரசியலிலும் புகுந்து நம் தமிழ் மக்களும், தமிழ் நாட்டு அரசும், தன்னையே கெடுத்துக்கொண்டு, தத்தளித்துக்கொண்டிருக்கிறது. தலை விதி என்று தான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு கர்நாடக சங்கீதத்தில் மெத்த விருப்பம். குறிப்பாக, தியாகராஜ ஸ்வாமிகள், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள், புரந்தர தாசர், சதாசிவ பிரும்மேந்திரர் இவர்கள் கவனம் செய்த கிருதிகளை விரும்பிக் கேட்பார்கள். பஜனையில் ஈடுபாடும் உண்டு. சந்நியாசிகளுக்கே உரித்தான  ஸ்ரீமத் பாகவதத்தை  கிருஷ்ண ப்ரேமி சொல்ல கேட்க பெரிதும் விரும்பினார்கள்.
அவர்களுடைய கஷாய உடை எப்பொழுதும் முழங்காலுக்கு கீழே ஒரு அங்குலத்துக்கு மேல் எப்பொழுதும் இருக்காது. இரண்டு கால்களையும் சற்று அகட்டி வைத்து நேரான கூறிய பார்வை. முகத்திலேப்பொழுதும் தவழும் சிரிப்பு அல்லது புன்முறுவல்.
ஒரு சமயம் 1972-ல், பத்ரீயில்  அவருடன் கேம்ப் சென்ற சமயம், என்னிடம் அருகிலுள்ள பாண்டுகேஸ்வரம் என்னும் ஊரில் சில நாட்கள் தங்கியிருந்த பொழுது, என்னிடம் அவர்கள் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. அன்று அவர்கள் சொன்னது: " நாங்கள் ஒரு போதும் பெட்டி வைத்துக் கொள்வது இல்லை . இந்தத்துணியில் தான் எங்கள் புத்தகத்தை எல்லாம்  வைத்துக் கொள்வோம். இந்தப்புத்தகங்கள் தான் எங்கள் சொத்து, மற்றதெல்லாம் மடத்தை சேர்ந்ததே ." மற்றோரு சமயம், 2001-ம் வருஷம் என்று ஞாபகம். மும்பையில் S.I.E.S வளாகத்தில் தங்கியிருந்தார்கள். நான் அவர்களுடைய பக்கத்தில் இருந்தேன். அச்சமயம், பிர்லா குடும்பத்தினர், காலம் சென்ற ஆதித்ய பிர்லாவின் மனைவியார், சில உறவினர்களுடன் வந்திருந்தார்கள். அச்சமயம் அம்மாதரசியார், ஸ்ரீ பெரியவர்களிடம், " தாங்கள் சொல்லுங்கள். நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அதை செய்கிறோம்." என்று சொல்ல அதற்கு அவர்கள் சொன்ன பதில்  இதுவே. " தங்களது குடும்பத்தினர் நம் நாட்டுக்கும், எங்களது மடத்திற்கும், நிறையவே செய்திருக்கிறீர்கள். நம் நாட்டுக்கு நிறையவே இன்னும் செய்ய வேண்டியுள்ளது. " என்று சொல்லி அப்பொழுது தான் அணிந்த காஷாய துணியை காண்பித்து, " எங்களுக்கு இது போதும்." என்று பதிலிறுத்தார்கள். இவ்விரு சம்பவங்களிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது  'உள்ளது போதும் ' என்ற மனப்பான்மையே. அவர்களைப்பற்றி இன்னும்  எவ்வளவோ சொல்லலாம் தான். இத்துடன் முடிக்கிறேன்.  
 
ச. சிதம்பரேச ஐயர்

அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி பூஜை


அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி பூஜை

05 : 08 : 20 அன்று நமது பாரத பூமியில் அயோத்தி மாநகரில் ஸ்ரீ ராமஜென்ம பூமியில் ப்ரம்மாண்டமான ஸ்ரீ ராமர் ஆலயம் அமைக்க பூமி பூஜை செய்ய ஏற்பாடுகள் அதி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

ஸ்ரீ வேதவ்யாஸ மஹரிஷிகளால் அருளிச் செய்யப்பட்ட ப்ரஹ்மாண்ட மஹாபுராணத்தின் உத்தரபாகத்தில் "காஞ்சி காமாக்ஷி தேவி வர்ணனம்" எனப்படும் முப்பத்தி ஒன்பதாவது அத்யாயமும், காஞ்சிபுர மாஹாத்ம்யம் எனப்படும் நாற்பதாம் அத்யாயமும் உள்ளன. இதில் நாற்பதாம் அத்யாயத்தில் ஸ்ரீ தசரத மஹாராஜா காஞ்சி ஷேத்ரத்தில் ஸ்ரீ காமாக்ஷி அம்பாளை ஸ்தோத்ரம் செய்த ஸ்லோகங்கள் உள்ளன. {124 - 129}

அன்றைய தினம் அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று தன்னுடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் அறுபத்தி ஒன்பதாவது ஆசார்யாள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவர்களின் வார்ஷிக ஜயந்தி இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்த அயோத்யா விவகாரத்தில் புது பெரியவா மிகப்பெரிய முயற்சி செய்தது யாரும் மறந்து விட கூடாது. பெரியவா இன்றும் நம்மோடு இருக்கிறார் என்று நிரூபிப்பதற்காக தான் இந்த பூமி பூஜை பெரியவா ஜென்ம நட்சத்திரத்தில் வருகிறது. பெரியவா இன்று இருந்திருந்தால் அயோத்யா தீர்ப்பு வந்த நாளன்றே கோவில் கட்டுவதற்கு முதலில் நின்று இருப்பார். நமது துரதிர்ஷ்டம் பெரியவா நம்மோடு இல்லாமல் சுஷ்ம ரூபமாக இருந்து கொண்டு அவரின் நட்சத்திர தினத்தன்று நடைபெற இருக்கிறது. ராமஜென்ம பூமி விஷயத்தில் ஆரம்ப கால கட்டத்தில் தன்னை முழுமையான அர்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்டவரும், தண்ணலம் பாராமல் அயராமல் உழைத்தவருமான காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் லட்சியம் இன்று நினைவாகிறது. வரும் ஐந்தாம் தேதி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார்கள். என்னுடைய யோஜனை அதாவது ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு ராம ஜென்ம பூமியில் ஓரு சிலை வைக்க வேண்டும் என்பதே. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசாங்கத்திடம் கேட்டு கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக நாம் எல்லோரும் பிரதமருக்கு கடிதம் மூலமாகவும் மெயில் மூலமாகவும் அனைவரும் அனுப்பினால் நிச்சயம் பிரதமர் மோடி ஜி அவர்கள்  ஓத்துழைப்பார். நமது பெரியவா சிலையும் வரலாற்றில் இடம் பெறும்.
பாரத தேசத்தில் எந்த ஒரு சன்னியாசியும் செய்ய அஞ்சிய போது நம் புது பெரியவா தான் முதலில் நின்றார் என்பதை நாம் இந்த தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

ஜய ஜய சங்கர ஜயேந்திர சங்கர ஜய

ஸ்ரீ ராமபிரானின் திருவுள்ளமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
                   பாரத் மாதாகி ஜெய் வந்தே மாதரம் 

குரு பூர்ணிமா


வியாச பூர்ணிமா குரு பூர்ணிமா நாளில் அவரது சாதனைகளை விளக்கும் பதிவீடு :

வியாசர், தாறுமாறாக இருந்த வேதத்தை ஒழுங்கு படுத்தி, ரிக், யஜுஸ், ஸாம, அதர்வ என்ற சதுர் மறைகளாக்கி, ரிக் வேதத்தை பைல முனிவரிடமும், யஜுர் வேதத்தை வைசம்பாயன முனிவரிடமும், ஸாம வேதத்தை ஜைமினி முனிவரிடமும், அதர்வண வேதத்தை ஸுமந்த் முனிவரிடமும் ஒப்படைத்து, இன்றளவும் நின்று நிலைபெறச் செய்தவர் என்பதால் அவர் வேத வ்யாஸர் என்றே அழைக்கப் படுகிறார். வ்யாஸர் என்றால் தொகுப்பாளர் (Composer) என்று பொருள்.

வியாசர் வசிஷ்டரின் கொள்ளுப் பேரனும், சக்தி முனிவரின் பேரனும், பராசர முனிவரின் மகனும், சுக முனிவரின் தந்தையும் ஆவார்:

வ்யாஸம் வஸிஷ்ட2 நஃதா1ரம்
  சக்1தே1ஃ பௌ1த்1ரம் அக1ல்மஷம்।
ப1ராச'ராऽத்1மஜம் வந்தே3
   சு'க1தா1த1ம் த1போ1நிதி4ம்।।

வியாசரை விஷ்ணுவின் மறுவடிவம் எனக் கூறுவர். இவர் வேறு அவர் வேறு அல்ல என்று பொருள்படுமாறு அமைந்தது இந்த ஸ்லோகம்:

வ்யாஸாய விஷ்ணு ரூபா1ய
   வ்யாஸ ரூபா1ய விஷ்ணவே।
நமோ வை ப்3ரஹ்ம நித4யே
    வாசி'ஷ்டா2ய நமோ நம:।।

வியாசர் க்ருஷ்ண த்வீபம்‌ என்ற இடத்தில் பிறந்ததால் இவரை "க்1ருஷ்ண த்வைபா1யனர்" / "த்வைபா1யனர்" என்றும் அழைப்பர். வசிஷ்டரின் குலத் தோன்றல் என்பதால் வாசிஷ்டர் என்ற‌ பெயரும் உண்டு. இன்றும் சிரஞ்ஜீவியாக வாழும் இவர் பதரிகாஸ்ரமத்தில் இருப்பவர். பாதராயணர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

வியாசர், நால் வேதங்களையும் தொகுத்தது மட்டுமின்றி, வேத ஸாரங்களை ஸ்ம்ருதிகளாகவும் ஆக்கி உதவியுள்ளார். பதினெட்டுப் புராணங்களை இயற்றியவரும் இவரே.‌ அப்புராணங்களைப் பராமரிக்கும் பணியை ஸூத பௌராணிகர் வசம் ஒப்படைத்தார்.

நம் நாட்டு இரட்டை இதிஹாஸங்களான ராமாயணம் வால்மீகி முனிவராலும், மஹாபாரதம் வியாச முனிவராலும் இயற்றப் பட்டவை. ராமாயணம் 24,000 ஸ்லோகங்களைக் கொண்டது என்றால், மஹாபாரதம் (அதில் அடங்கியுள்ள பகவத்கீதை (ம) விஷ்ணு ஸஹஸ்ர நாமம் உட்பட) 100,000 ஸ்லோகங்களைக் கொண்டது என்றால் எவ்வளவு பெரிய சாதனை என்று மலைக்கத் தோன்றுகிறது அல்லவா?
ப்3ரஹ்ம ஸூத்1ரம் என்ற இவரது நூல் தான் நம் நாட்டின் அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத வேதாந்தங்களின் தோற்றுவாய் ஆகும்.

வியாசர் முனிவர்களுக்கெல்லாம் முனிவர்; ரிஷிகளுக்கெல்லாம் ரிஷி. அதனால் தான் வியாச பூஜை, எந்த வேதாந்தத்தைப் பின்பற்றும் ஸ்வாமிகளும், கடைப்பிடிக்க வேண்டிய நோன்பாக நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.

வியாசருக்கு எவ்வளவு பெரிய மகத்துவத்தைத் தந்துள்ளனர் என்றால், அவரை பகவான் வ்யாஸர் என்று அழைப்பதுடன், அவரை  "ஒரு தலை உடைய பிரம்மா ; இரு கை உடைய விஷ்ணு , நெற்றிக்கண் இல்லாத சிவன்" என்றும் போற்றுகின்றனர் :

#அச1து1ர்முக2_யத்1_ப்3ரஹ்மா
    #அச1து1ர்பு4ஜ_விஷ்ணவே।
#அபா4ல_லோச1னஃ_சம்பு4:
     #ப4க3வான்_பா3த3ராயண:।।

மஹர்ஷி வியாசரின் அவதார தினத்தில் அவரை நன்றியுடன் நினைவு கூர்வது, நம் நாட்டுப் பாரம்பரியங்களை மதிக்கும், நம் அனைவரது கடமையுமாகும்.