வியாழன், 21 மே, 2020

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்
கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன.

தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன.

திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. அது மட்டுமல்ல, திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது.

இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள், ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்து இருந்தால் அண்ணா மலையார் ஆலயத்தின் பழமை சிறப்புகள், நமக்கு மேலும் அதிக அளவில் துல்லியமாக கிடைத்திருக்கும். சங்கநாட்டு மன்னன், காலச்சூரி மன்னன் ஆகியோரும் திருவண்ணாமலையார் அருளை கேள்விப்பட்டு நிறைய பொன்னும், பொருட்களையும் தானமாக கொடுத்துள்ளனர்.

இதுவரை ஆராயப்பட்ட 119 கல்வெட்டுகளில் இருந்து திருவண்ணாமலை ஆலயம் முதலில் எப்படி தோன்றியது, எப்படி வளர்ச்சி பெற்றது, யார்-யாரெல்லாம் கோவிலை கட்டினார்கள் என்ற உண்மை ஆதாரப்பூர்வமாக நமக்கு கிடைத்துள்ளது.

திருவண்ணாமலை ஆலயம் இப்போது 24 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது. ஆனால் கல்வெட்டு ஆய்வுப்படி பார்த்தால், இதிகாச காலத்தில் மகிழம் மரத்தடியில் ஈசன் சுயம்புலிங்கமாக தோன்றினார் என்று தெரிய வருகிறது. அதனால்தான் திருவண்ணாமலை தலத்தில் மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது.

அடி, முடி காண முடியாதபடி, ஆக்ரோஷமாக, தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம் விஷ்ணுவும், பிரம்மாவும், “இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்?” என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன், மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது. 4-ம் நூற்றாண்டில் கருவறை, செங்கல்லால் கட்டப்பட்டது. 5-ம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது.

6, 7, 8-ம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார். அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில்தான் இருந்தார். ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் இருந்தது.

9-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது, திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. 817-ம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார். பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 10-ம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் வாரிசுகள்தான் இந்த பிரகாரங்களைக் கட்டினார்கள்.

அப்போதே திருவண்ணாமலை ஆலயம் விரிவடையத் தொடங்கி இருந்தது. 11-ம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழத் தொடங்கின. முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடி மர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான்.

1063-ம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம் பெறத் தொடங்கியது.

12-ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார். 13-ம் நூற்றாண்டில் சிறு, சிறு சன்னதிகள் உருவானது. சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா, கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் இந்த சன்னதிகளைக் கட்டினார்கள். அதோடு ஏராளமான நகைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அவர்கள் வாரி, வாரி வழங்கினார்கள்.

14-ம் நூற்றாண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும். அந்த நூற்றாண்டில்தான் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன. 1340-ம் ஆண்டு முதல் 1374-ம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹொய்சாள மன்னர் வீரவல்லாளன் இந்த திருப்பணிகளைச் செய்தார்.

15-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலை ஆலயத்துக்கு நிறைய பேர் தானமாக நிலங்களை எழுதி வைத்தார்கள். திருவண்ணா மலை ஆலயம் பொருளாதாரத்தில் மேம்பாடு பெற்றது இந்த நூற்றாண்டில்தான்.

16-ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராய ருக்கு, திருவண்ணாமலை கோவில் மிக, மிக பிடித்து போய் விட்டது. திருவண்ணாமலை ஆலயத்தை மிகப்பெரிய ஆலயமாக மாற்றி அமைத்த பெருமைக்கு சொந்தக்காரர் அவர்தான்.

அவர் மற்ற மன்னர்கள் போல ஏதோ ஒன்றிரண்டு திருப்பணிகள் மட்டும் செய்யவில்லை. இருபது பெரிய திருப்பணிகளை செய்தார். அந்த திருப்பணிகள் ஒவ்வொன்றும் இன்றும் திருவண்ணாமலையில் கிருஷ்ண தேவராயரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம், சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம், இந்திர விமானம், விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில் உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள், கதவுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் ‘கிருஷ்ணராயன்’ என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில.

1529-ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர், கிழக்கு ராஜகோபுரத்தை 1590-ல் கட்டி முடித்தார்.

இதற்கிடையே குறுநில மன்னர்களும், சிவனடியார்களும் சிறு, சிறு கோபுரங்களைக் கட்டினார்கள். பே கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜ கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. இன்று 9 கோபுரங்களுடன் திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது.

கோபுரங்கள் அனைத்தும் 1370-ல் கட்டத் தொடங்கப்பட்டு 1590-ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கட்டி முடிக்கவே சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னர்கள் மட்டுமல்ல... மகாராணிகள், இளவரசர்கள், இளவரசிகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், அரசு பிரதிநிதிகள், சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோழ, பாண்டிய, பல்லவ, ஹொய்சாள, சம்புவராய, விஜயநகர, தஞ்சை மன்னர்கள் போட்டி போட்டு செய்த திருப்பணிகள்தான் திருவண்ணாமலை தலத்தை நோக்கி மக்கள் அலை, அலையாக வர உதவி செய்தது.

14-ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை திருவண்ணாமலை நகரம் பல்வேறு போர்களை சந்ததித்தது. என்றாலும் அண்ணாமலையார் அருளால் இடையிடையே திருப்பணிகளும் நடந்தது.

கடந்த சுமார் 150 ஆண்டுகளாக நகரத்தார் செய்து வரும் பல்வேறு திருப்பணிகள் மகத்தானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலையில் குடியேறினார்கள். மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்த பெருமையும், சிறப்பும் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு உண்டு. 1179-ம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் கட்டி கொடுத்தனர். அது மட்டுமின்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து 12.06-1903, 4-6-1944, 4-4-1976 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தி வைத்த புண்ணியமும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கே சாரும்.

மன்னர்களில் கிருஷ்ண தேவராயரும், பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கனும் செய்த திருப்பணிகள் அளவிட முடியாதது. இன்று நாம் திருவண்ணாமலை ஆலயத்தை வியந்து, வியந்து பார்க்கிறோம் என்றால் அதற்கு இந்த இரு மன்னர்களிடம் இருந்த அண்ணாமலையார் மீதான பக்தியே காரணமாகும். எத்தனையோ மன்னர்கள் திருப்பணி செய்துள்ள போதிலும் வல்லாள மகாராஜா மீது அண்ணாமலையாருக்கு தனிப்பட்ட முறையில் பாசம் அதிகம் இருந்தது. அதற்கு காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும் இல்லாமல் தவித்ததுதான்.

திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார், அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார். அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார்.

அது மட்டுமின்றி வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது, அவருக்கு இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன. மேலும் ஆண்டு தோறும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார். ஒரு மகன், தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை அண்ணாமலையார் செய்து வருகிறார்
அன்யத குருதே யஸ்து தஸ்ய நாசோ பவிஷ்யதி
க்ரமதீக்ஷயுதானாம் ச ஸித்திர்பவதி நான்யதா
மந்த்ர க்ஷோபஶ்ச  வா பூயாத் க்ஷீணாயுர்வா பவேத்த்ருவம்
புத்ரஹாரீ ஸ்த்ரியோஹாரீ ராஜ்யஹாரீ பவேத்த்ருவம்
க்ரமதீக்ஷாயுதோ தேவீ    க்ரமாத் ராஜ்யமவாப்னுயாத்

எவன் ஒருவன் முறைப்படி க்ரமதீக்ஷையுடன் தேவியை ஆராதிக்கிறானோ அவனுக்கு செல்வம்,ராஜ்யம் மனைவி மக்கள் ஆகிய அனைத்தும் கிடைத்து மந்த்ரஸித்தியும் கிடைக்கும். மந்த்ரஸித்திக்கு இதுவே மார்க்கமாகும்.

அப்படி க்ரமதீக்ஷையல்லாமல் ஆராதனை செய்பவன் அனைத்தையும் இழப்பதோடு அல்லாமல் அவனது  ஆயுளும் குறைந்துவிடும்.
அம்பாள் எப்படிப்பட்டவள்? - ஸ்ரீ பெரியவா

அவள் அழகே உருவானவள் என்பதுபோல அன்பே உருவானவளும்!அன்பே அழகாக ஆகி உருவானவள். எந்த பக்ஷணமானாலும் அதற்குத் தித்திப்பைத் தருவது சர்க்கரை என்கிறமாதிரி, நாம் எங்கெங்கே எந்தெந்த அழகைக் கண்டாலும் அதையெல்லாம் அழகாக்கும் தாய்ச் சரக்கு அவள்தான்!பிரம்ம சக்தியான அவளுடைய பூர்ண அழகின் துளித்துளிதான் மற்ற அழகுகளிலெல்லாம் தெறித்திருக்கிறது. இப்படியே நாம் பார்க்கிற அத்தனை அன்புகளுக்கும் மூலமாயிருப்பதும் அவள்தான்
ஸ்ரீவித்யா அதிதேவதையான த்ரிபுரஸுந்தரியாயிருக்குகம் அம்பாளின் ரூபம். திரிலோகத்திலும் அவள்தான் மஹா அழகு என்பதால்தான் த்ரிபுரஸுந்தரி என்று பேர். பச்சையாயிருப்பாளா, சிகப்பாயிருப்பாளா, கறுப்பாயிருப்பாளா?இந்த எல்லாக் கலரிலும்தான் அவளுக்கு ரூப பேதங்கள் சொல்லியிருக்கிறது. இரண்டு கை மீனாக்ஷியிலிருந்து பதினெட்டுக் கை மஹிஷாஸுரமர்த்தினி வரை அவளுக்குப் பல ரூபம், காருண்யம் தானப்பா லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒரு அழகல்ல. கொஞ்சம் கோபம் வரட்டும், அழுகை வரட்டும். அப்போது கண்ணாடியில் நம் மூஞ்சி தட்டுப் பட்டால் நமக்கே பார்க்கப் பிடிக்கவில்லை. துளி ஜ்வரம் வந்தால் சரீர அழகு போய்விடுகிறது. கோபம், அழுகை, நோய், நொடி எதுவுமில்லாமல் அன்பே உருவாயிருக்கிற அம்பாளுடைய சரீரமொன்றுதான் நிஜ அழகு. ஆனதால் நம் கல்பனையில் அன்பை எத்தனை உத்க்ருஷ்டமாக [உயர்வாக]உருவமாக்கிப் பார்க்கமுடிகிறதோ அப்படிப் பாரப்பா!அதுதான் அம்பாள் ரூபம் என்று வைத்துக்கொள்.
நம்முடைய காம க்ரோதாதி அழுக்குகள், அழுகை, பயம் - எல்லா பயங்களிலும் பெரிய ஸம்ஸார பயம் - ஆகியவற்றை அடித்துக் கொண்டு போய்விடும் ஸெளந்தர்ய வெள்ளமாக அம்பிகை இருக்கிறாள். அந்த அழகே நமக்கு ஸகல ஸெளபாக்யங்களையும் அளித்துவிடுகிறது
அருவமும் உருவமும் கொண்ட கடவுளின் தன்மை. தத்வமஸி - நீயே அது !

எந்த கடவுளை வணங்குவது ?- வேதம் காட்டும் வழி [பாடு]

சனாதான தர்மம் என அழைக்கப்படும் நமது பாரத கலாச்சாரத்தில் வழிபாடு என்பது ஓர் முக்கியமான அங்கமாக இருக்கிறது. மனித குலம் தோன்றிய முதலே வழிபாடு என்பதும் பிறந்தது எனலாம். கற்கால மனிதனாக இருந்த முதல் மனிதன், இயற்கை பொருட்களை வழிபடத் துவங்கினான். தனக்கு புரியாத அறிவுக்கு அப்பாற்பட்ட சக்தியை வணங்கினான் என சொல்லலாம். உதாரணமாக மின்னல், இடி, சூரியன் இவை அனைத்தும் அவனுக்கு அதிசயமாகவும், அச்சத்தை தூண்டுபவையாகவும் இருந்தன. அதனால் அவற்றை வழிபட ஆரம்பித்தான்.

கற்கால மனித நாகரீகத்தின் செயல் தற்சமயத்திலும் கூட ஆப்பிரிக்க பழங்குடியினரிடம் இருப்பதை காண முடிகிறது. காட்டில் சிங்கம் மற்றும் பிற மாமிசம் உண்ணும் விலங்குகள் கொன்று வீசிய மிருக உடல்கள் காய்ந்து அதில் உள்ள எலும்புகள் மட்டும் எஞ்சி இருக்கும். மழை வரும் நேரத்தில் ஏற்படும் மின்னலை வழிபடும் இந்த பழங்குடியினர், மின்னல் விழும் திசையை நோக்கி ஓடுவார்கள். அங்கே குவிந்துகிடக்கும் எலும்புகளை பார்த்து மின்னல்தான் பூமியில் குவிந்துகிடப்பதாக எண்ணி மிருக எலும்பை எடுத்து வந்து வழிபட்டனர். இவ்வாறு இருந்த வழிபாடு மெல்ல முன்னேற்றம் அடைந்தது.

மனித நாகரீகம் வழிபாட்டு முறையை ஏற்படுத்த இருவேறு காரணம் இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முதலில் தன் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியை வணங்கும் தன்மை. இரண்டாவதாக உலக நிகழ்வுகளின் தன்மையை புரிந்துகொள்ளாததனால் ஏற்படும் அச்சம். இந்த இரு காரணமும் மனிதன் உருவாவதற்கு முன்பே அவன் மிருகமாக இருந்த காலத்திலேயே ஏற்பட்டது எனலாம்.

ஓர் மிருகம் தனது சக்தியைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்த மிருகத்தை கண்டால் தாழ்ந்து மிகவும் அமைதியாக செல்வதை காணலாம். அதுபோல அச்சம் கொண்டு ஏற்பட்ட வழிபாடு மிருக நிலையில் இருக்கும் பொழுதே தோன்றியது என கூறலாம்.

மனித சமூகம் பழங்காலம் தொட்டுஅச்சத்தினாலும், ஆச்சர்யத்தினாலும் வழிபாட்டு முறைகளை கடைபிடித்து வரும் நேரத்தில் பாரத தேசம் தனது அறிவால் வழிபாட்டு முறைகளை கண்டறிந்து ஆழமாக வேர்விட்டு விருட்சமாக உயர்ந்தது.

பரந்து விரிந்த இந்த தேசம் மொழியால் வேறுபடாலும் தனது கலாச்சாரத்தால் ஒன்றுபட்டு இருக்கிறது என கூறுவார்கள். உண்மையில் கலாச்சாரத்தினால் என்பதைக் காட்டிலும் வழிபாட்டு முறையினால் ஒன்றுபட்டு இருக்கிறது என கூறலாம். வட இந்தியாவின் வடக்கு பகுதியில் வைணவதேவி என சக்தியை வழிபடும் மக்கள் தென் பகுதியின் தென்முனையில் கன்யாகுமரி என சக்தியை வழிபடுகிறர்கள். சிவ, விஷ்ணு வழிபாடு எங்கும் காணப்படும் ஒன்றாக இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது பாரத தேசத்தில் மனிதன் வழிபாட்டு முறையை ஒன்று போலவே வைத்திருந்தான் என்றும், அனைத்து வழிபாட்டு முறைக்கும் ஏதோ ஒரு கருத்து பொதுவாக இருந்திருக்க வேண்டும் என்றும் சிந்திக்க முடிகிறது.

கணக்கற்ற கோவில்கள் ஒவ்வொன்றிலும் பல கடவுள் உருவங்கள், அவற்றிற்கு காரண கதைகள், தல புராணங்கள் என பாரத தேச கோவில்கள் பற்றி ஆய்வு செய்தால் அதை வெளியிடும் புத்தகத்தின் பக்க அளவு பிரமாண்டமாக இருக்கும்.நமது சானாதன தர்மத்தின் உள்ளார்ந்த கருத்துக்கள் பற்றிய அறிவு பரவலாக அனைவரிடமும் குறைவு என கூறலாம். இதனால் நவ நாகரீகத்தில் இருக்கும் மக்கள் கோவிலுக்கு செல்வதையும், வழிபடுவதையும் பிற்போக்கான மூட நம்பிக்கையான எண்ணமாக காண்கின்றனர். வழிபாட்டு முறையில் அனைத்து பகுதிகளையும் தொட்ட ஓர் சமுதாயம் நமது பாரத சமுதாயம் என கூறமுடியும்.

எங்கும் வியாபித்து இருப்பவனின் தன்மை சில பொருட்களில் வெளிப்படுவதால், எல்லையற்ற இறை வனை அந்த பொருட்கள் மூலம் வழிபட்டனர். நமது வழிபாட்டு முறையில் உள்ள தத்துவத்தை மேலோட்டமாகப் பார்க்கும் வெளிநாட்டினர் பாரத மக்கள் உருவ வழிபாடு செய்பவர்கள் என எண்ணுங்கள்.

உண்மையில் வேத சாஸ்திரத்தில் ஒரு இடத்தில் கூட கடவுளின் உருவ நிலை விளக்கப்படவில்லை. புராணங்களிலும், இதிகாசங்களிலும் உருவநிலை விளக்கப்படுவதற்கான காரணம் இறைவன் அதில் ஓர் கதாபத்திரமாக வருவதாலும் , பாமர மக்கள் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கவும் உருவாக்கப்பட்டது.

வேத சாஸ்திரத்தில் விளக்கப்பட்ட இறைநிலையை சற்று தெளிவாக காண்போம். அனைவராலும் பயன்படுத்தபடும் காயத்ரி மந்திரம் ரிக், யஜூர், சாம வேத்தில் காணப்படுகிறது. நான்கில் மூன்று வேதங்களிலும் காணப்படும் மந்திரங்களில் காயத்ரியும் ஒன்று. இந்த மந்திரத்தின் பொருளை எளிமையாக கூறவேண்டும் என்றால் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை ஒளிமயமான ஆற்றலை வணங்குகிறேன். இதில் குறிப்பிட்ட ஒளி என்னும் சொல் வெளிச்சத்தை குறிப்பதில்லை. ஒளிர்கின்ற மேல் நிலையை குறிக்கும்.

ரிக், யஜூர் வேதத்தின் சாரங்களான உபநிசத்துக்களில் 'தத்வமஸி','அஹம் பிரம்மாஸ்மி' எனும் இரு வாசகம் புகழ்பெற்றது. "நீயே அது" "உன் உள் பரம்பொருள் உறைகிறது" என்பதே இதன் விளக்கம். வேறு எந்த சாஸ்திரத்திலும் மனித நிலையில் கடவுள் தன்மை உண்டு என கூறப்பட்டது இல்லை. "நீயே அது" என பல விளக்கங்கள் உண்டு. இந்த ஒரு வாசகத்தை கொண்டு பல மணிநேரம் பிரசங்கம் நிகழ்த்தும் அளவுக்கு விஷயம் இதில் புதைந்து கிடக்கிறது.

வேத காலத்திற்கு முன்பு நமது கலாச்சாரத்தில் திகழ்ந்த சித்தாந்தம் சாங்கிய சித்தாந்தம். கபில முனிவர் இதை வரையறுத்தார் என கூறப்படுகிறது. பாரத கலாச்சாரத்தில் தோன்றிய முதல் சித்தாந்தம் என சாங்கியம் புகழப்படுகிறது. சாங்கிய தத்துவத்தில் "இறைவன்" எனும் கொள்கை இல்லை என்பதே ஆச்சர்யம் ஊட்டும் , அதிர்ச்சி கொள்ளச் செய்யும் விஷயம்.

இந்த உலகில்[ஜெகத்] நீ மட்டுமே இருக்கிறாய், உன்னை தவிர அன்னியமாக வேறு எதுவும் இல்லை. நீயே அனைத்திற்கும் கிரியா சக்தியாகவும், ஆக்க சக்தியாகவும் இருக்கிறாய். நீ இயற்கையின் ஓர் பிரிவு எனவே நீயே இயற்கை என மிகவும் உயரிய சித்தாந்தம் கொண்டது சாங்கிய தத்துவம். இங்கே நாம் ஒன்று கவனிக்க வேண்டும். மனிதன் ஓர் கண்டுபிடிப்பை கண்டறிகிறான் என்றால், முதலில் அதை முழுமையற்ற நிலையில் கண்டறிவான். பின்பு சிறிது சிறிதாக மேம்படுத்துவான். உதாரணமாக தொலைபேசியை கண்டுபிடிக்கும் பொழுது பெரிய அளவில் அதிக சிக்கலுடன் இருந்தது, இந்த குறைகளை தீர்த்து இப்பொழுது கைபேசியை பயன்படுத்துகிறோம். ஆகவே மனித கண்டுபிடிப்பில் மேம்பட்ட தன்மை கடைசி நிலையிலேயே வர வாய்ப்பு உண்டு. கண்டுபிடித்தது முதலே மேம்பட்ட நிலை வர வாய்ப்பு இல்லை. ஆனால் சாங்கிய தத்துவம் என்பது எடுத்தவுடன் மாபெறும் உயர்நிலையை அடைந்தது என கூறலாம். இக்கருத்தை கொண்டு ஆராய்ந்தால் இந்த உயர் சித்தாந்தம் மனிதனால் உருவாக்கப் பட்டது தானா? என கேள்வி எழுகிறது.

சராசரி மனிதன் சாங்கிய தத்துவத்தை உணர முடியாது. பல குழப்பங்களும், விரக்தியும் அடைய நேரிடும். இதனால் கபிலர் காலத்திற்கு பின்பு வந்தவர்கள் கடவுள் தன்மையை இத்துடன் இணைத்து எளிமைப்படுத்தினார்கள். இதனால்சாங்கிய மதம் தனது உருவை இழந்து பல்வேறு மதங்களாக பாரததில் உருவெடுத்தது. பகவத் கீதை, பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற எண்ணற்ற தத்துவங்கள் சாங்கிய சித்தாந்தத்தின் பல பரிணாமங்கள் எனலாம். முன்பு குறிப்பிட்டது போல நமது பாரதத்தில் சித்தாந்தம், முதலில் தோன்றும் பொழுதே உயர்நிலையில் [Advanced stage] இருப்பதாக கொண்டால் அதற்கு பின்பு அந்த உயர்நிலை மேம்பட பரிமாணமடைந்தால் எவ்வளவு உயர்நிலை பெற்றிருக்கும் என எண்ணிப்பாருங்கள்.

சாங்கியம் துவங்கி அனைத்து சித்தாந்தங்களிலும் மனித நிலை திரிகுணங்களில் இருக்கிறது என விளக்கப்படுகிறது. சாத்வ, ரஜஸ், தமஸ் எனும் இந்த முக்குணங்கள் நமது இயக்கநிலைக்கு காரணமாக இருக்கிறது. இந்த முக்குணமற்ற நிலை இறை நிலை என அழைக்கப்படுகிறது. இவற்றை மனிதர்கள் சராசரியான நிலையில் புரிந்துகொள்ள முடியாது என்பதால் தான், எளிமையான முறையில் பல மதங்களும் சித்தாந்தமும் நிலவுகிறது.

"தத்வமஸி" எனும் மஹா வாக்கியம், 'நீ அதுவே' என கூறுவதாக சொன்னேன். சிறிது சிந்தித்து பாருங்கள் உங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா என்றால் அது சிறிது சிரமம் தான். கேட்கும் பொழுது புரிந்தது போல இருந்தாலும் உணர்வு நிலையில் இதை புரிந்துகொள்ள முடியாது. இந்த மஹாவாக்கியம் மனிதனை பொறுத்து மாறுபடுகிறது.

பிரம்மா தத்வமஸி எனும் வாக்கியத்தின் பொருளை தேவருக்கும், அசுரருக்கும் போதித்தார். தேவர்களுக்கு ஒரே குழப்பம். அது எப்படி நான் கடவுளாக முடியும் ? மீண்டும் பிரம்மாவிடம் வந்து விளக்கம் கேட்டனர். ஆனால் அசுரர்கள் தாங்களே கடவுள் என்ற எண்ணத்துடன் ஆணவ மிகுதியால் அழிவு செயலை துவங்கினார்கள். இந்த கதை மூலம் விளக்கப்படுவது யாதெனில் அஹம்பாவம் மற்றும் கீழ்குணம் கொண்ட மனிதனால் முழுமுதல் உண்மையான வேத கருத்துக்கள் புரியாது. எனவே அகம்பாவம் குறைய பிற வழிமுறைகளை பின்பற்றி தெளிவுற்றவுடன் 'சத்' தரிசனம் [உண்மை உணர்தல்] கிடைத்தால் மேம்பட்ட நிலை யை அடையலாம். இல்லையேல் மனிதன் அசுர நிலையை அடைய வழிவகுக்கும். நமது கோவில்கள் அதன் அமைப்பு மனித உடலை அடிப்படையாக கொண்டது. முதலில் கடவுளின் இடமாக கருதி வழிபட துவங்கும் மனிதன் இறுதியில் தன்னைத்தானே வழிபடுவதாக உணருவான். அங்கு மஹா வாக்கியம் 'தத்வமஸி' உணரப்படும்.

ஆகம சாஸ்திரம் கோவில் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் அமைப்பு செயல்படும் தன்மை ஆகியவற்றை விளக்குகிறது. நமது உடலில் உள்ள உறுப்புகள், நவ துவாரம், ஐந்து விதமான ப்ராணன், பஞ்ச கோசம், ஐம்புலன்கள் என இதன் அடிப்படையிலேயே கோவில்கள் அமைக்கப்படுகிறது.

நவ கோபுரங்கள் மனித உடலில் நவ துவாரத்தையும் அவனது மூளை மற்றும் சித்ராகாசம் என கூறப்படும் புருவ மத்தியப்பகுதி கருவறையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. நமது வழிபாட்டு முறைகள் மூன்று முக்கிய பிரிவுகளை கொண்டது அவை உருவம், அருவம் மற்றும் அருஉருவம். உருவநிலை இறைவழிபாடு நமக்கு தெரிந்த ஒரு விஷயம் தான். பெருமாள், முருகன், அம்பாள் என மனித உருவில் அவர்களை வழிபடுகிறோம். இதற்கு உருவ வழிபாடு என பொருள்.

அருவம் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. இல்லாத ஒரு விஷயத்திற்கு எப்படி விளக்கம் கூற முடியும் ? அருஉருவம் என்பது அருவ நிலையில் இருக்கும் உருவ அமைப்பு. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் 'உருஅருவம்' என கூறாமல் அருஉருவம் என்றே வழங்கப்படும் தன்மை. அருவம் முதலில் இருக்க உருவம் பின்பு வருகிறது. இதற்கு சிவலிங்க ரூபம் ஓர் உதாரணம். சுயம்பு நிலை விக்ரஹங்கள், மஞ்சள் பிள்ளையார் என அனைத்திலும் அருஉருவ நிலை உண்டு. சராசரி மனிதன் படிப்படியாக அருவநிலை வழிபாட்டை அடைய உருவம், அருஉருவம் என அமைப்பை ஏற்படுத்தினார்கள். மூன்று வகையான வழிபாட்டு முறை மூன்று குண ரீதியாகவும் அமைகிறது. ஓர் சிறு குழந்தையை அழைத்து அருவ நிலை வழிபாட்டை விளக்கினால் அக்குழந்தை புரிந்துகொள்ள முடியாது. மாறாக அக்குழந்தைக்கு மன அழுத்தம் உருவாகும். இன்னும் எளிமையாக சொன்னால் குரங்கை நினைக்காமல் மந்திரம் சொல்லும் கதையாக மாறிவிடும்.

நமது உடலில் 72,000 நாடிகள் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த 72,000 நாடிகளில் மூன்று முக்கிய நாடிகள் மனிதன் உயர்நிலைக்கு செல்லவும், கர்மங்கள் செய்யவும் உதவுகிறது. இடா நாடி, பிங்கள நாடி மற்றும் சுழுமுனை என தமிழில் கூறப்படும் இந்த நாடிகள் மனித செயலை தீர்மானிக்கிறது. எனவே இந்த மூன்று தன்மையை உணர்த்தும் நோக்கில் உருவ வழிபாடு அமைகிறது. இவற்றை புரிந்துகொள்ள உருவ நிலை விக்ரஹங்கள் எவ்வாறு மூன்று தன்மை பெறுகிறது என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இறைநிலை ---------------------இடா--------------------- சுழுமுனை---------------- பிங்கலை

பெருமாள் --------------------- பூதேவி ---------------------ஸ்ரீ விஷ்ணு----------------- ஸ்ரீ தேவி
முருகன்------------------------- வள்ளி ---------------------முருகன் ---------------------தெய்வானை
விநாயகர்---------------------- சித்தி ------------------------விநாயகர் --------------------புத்தி
ஸ்ரீ ராமர் ------------------------லஷ்மணர் -----------------ஸ்ரீ ராமர்---------------------- சீதாதேவி
ஜெகந்நாதர் -------------------பலராமர் --------------------ஸ்ரீ கிருஷ்ணர் -------------- சுபத்ரா
சிவன் ---------------------------கங்கை ---------------------சிவன் --------------------------பார்வதி
ஸ்ரீகிருஷ்ணர் ----------------- ருக்மணி -------------------ஸ்ரீ கிருஷ்ணர் ---------------பாமா

நாடிகளின் தன்மை சராசரி மனிதனுக்கு புரிவதில்லை. அவர்கள் இறைவனுக்கு இரு மனைவிகள் என தவறாக பொருள் கொள்கிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கருவறை 72,000 பொன் ஓடுகளால் அமைக்கப்பட்டு, மூன்று முக்கிய நாடிகளையும் பிரதிபலிக்கும் வண்ணமும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்து சிந்திதோமானால் நமது ஒவ்வொரு செயலும் அர்த்தம் கொண்டதாக அமைகிறது. ஐம்புலன்களும் செறிவு பெற்றால் மேம்பாடு அடைந்து இறைநிலை உணரலாம் எனும் தத்துவத்தின் அடைப்படையில் கோயிலில் உள்ள செயல்கள் அமைந்துள்ளது. ஐம்புலன் செயல்படும் தன்மை கோவிலில் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என காண்போம்.

உறுப்பு --------------செயல்கோவில் ---------------சம்பிரதாயம்
காது --------------------ஓசை --------------------------------மணிஓசை
மூக்கு ------------------நுகரும் தன்மை ------------------சுகந்த சாம்ராணி - சந்தனம்
வாய் --------------------ருசி ---------------------------------பிரசாதம், பழங்கள்
தோல் ------------------தொடு உணர்வு ---------------------கற்பூர ஆரத்தி, நமஸ்காரம்
கண் --------------------பார்வை -----------------------------அலங்காரம், கோவில் சிற்பம்.

மேற்கண்ட செயல்மூலம் தூய்மை அடையும் ஐம்புலனும் சமாதானம் அடைந்து செயலை நிறுத்திவிடும். ஆன்மா தனது செயலை துவங்கி வேலை செய்ய ஆரம்பிக்கும். அப்பொழுது செய்யும் ப்ரார்த்தனை முழுமையான ஆன்ம உயர்வுக்கு வழி ஏற்படும்.

நமது சானதன தர்மங்கள் இவ்வாறு செழித்து வளரும் நிலையில் பல தவறான நபர்களால் சிதறடிகப்பட்டு மூடப்பழக்கங்கள் புகுந்தது. அவற்றை சரியான வழிப்படுத்தி மேன்மை அடைய ஆதிசங்கரர் அவதரித்தார். தனது தெய்வீக ஆற்றலால் ஆறுவிதமான வழிபாட்டுமுறையை ஸ்தாபித்தார். இவை ஷண்மதங்கள் என அழைகப்படுகிறது. சூரியன், சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், விநாயகர் என தனித்தனியே வகை பிரித்து வழிபாட்டு முறையை சரிபடுத்தினார்.

அத்வைத கொள்கை கொண்ட ஆதிசங்கரர் ஷண்மதங்களை கொடுத்த காரணம் என்ன? சராசரி மனிதன் ஷண்மதங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தன்னை மேம்படுத்தினால் இறுதியில் அத்வைத நிலையை உணரமுடியும் என்ற ஆழமான நம்பிகையில் ஷண்மதங்களை உருவாக்கினார்.

ஆதிசங்கரர் கூறிய வழிபாட்டு முறைகளில் எதை தேர்ந்தெடுப்பது எனும் குழப்பம் இயற்கையானது. சிவன் கோவிலை எடுத்துக்கொண்டால் அங்கு பார்வதி, முருகன் மற்றும் விநாயகருக்கு தனி சன்னிதி உண்டு. நவகிரகத்தில் சூரியனும் வீற்றிருப்பார். ஷண்மதங்களில் சிவன் கோவிலிலேயே நான்கு மதங்களும் இருப்பதால் ஷண்மதங்களில் ஒன்றை தேர்ந்தெடுப்பவர்கள் குழப்பமடைவார்கள். ஜோதிடம் இதற்கு எளிய தீர்வை வழங்குகிறது. 5ஆம் பாவகம் வழிபாட்டு முறையை குறிக்கும் பாவகம்.

5ஆம் பாவ கிரகங்கள் தொடர்பை பொறுத்த ஷண்மதங்களை தேர்வு செய்யலாம்.

கிரகம்--------------------- ஷண்மதம் மற்றும் ---------------------நடைமுறையில் வழிபாடுகள்
-------------------------பிற வழிபாடு உள்ள தன்மை ----------------------------------------------------------

சூரியன்--------------------- சூரிய வழிபாடு ---------------------சூரிய நாராயணன்
சந்திரன் -------------------- சக்தி வழிபாடு --------------------- பார்வதி - அம்மன்
செவ்வாய் ----------------- கௌமாரம் -------------------------முருகன்
புதன் ------------------------- வைணவம் -------------------------பெருமாள்
குரு -------------------------சைவம் -------------------------------தஷிணாமூர்த்தி, பைரவர்
சுக்கிரன் -------------------அரு உருவ நிலை ----------------ஸ்ரீ வித்யா
சனி -------------------------அருவ நிலை --------------------- அத்வைத நிலை
ராகு -------------------------தாந்த்ரீக முறை -----------------காளி, பலி கொடுக்கும் முறை
கேது -------------------------கணபதியம் ------------------------விநாயகர்

5ஆம் பாவக அதிபதி, உபநட்சத்திரம் மற்றும் 5ஆம் பாவகத்தை தொடர்பு கொள்ளும் கிரகத்தை கொண்டு வழிபடும் இறைநிலையை தேர்ந்தெடுக்கலாம். வழிபாடு என்பது மனிதனை நல்வழிப்படுத்த மட்டுமல்ல, அம்மனிதன் தன்னைத்தானே உணரவேண்டும் என்பதால் தான். நீங்கள் எனக்கு இட்ட ஆணையால் மேற்கண்ட கருத்துக்களை விவரித்து இருக்கிறேன். உங்கள் குழப்பம் புரிகிறது. நீங்கள் எப்பொழுது ஆணையிட்டீர்கள் என யோசிக்க வேண்டாம்.

இறைவனின் ஆணையால் இதை அனைவருக்கும் தெரிவிக்கிறேன். என்பதையே அப்படி சொன்னேன். நமது வேத சாரம் கூறும் கருத்து அதுதானே / மறந்துவிடாதீர்கள்.

ஈஸ்வரன் இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்றால் அதற்கான பொருட்கள் எங்கு இருந்தது?

எதிலிருந்து இவை அனைத்தையும் படைத்தார் என கேட்பதுண்டு. ஈஷ்வர நிலை என்பது இறைநிலையின் முதல் நிலை. இதை பற்றி விரிவாக பின்பு விளக்குகிறேன்.

ஓர் சிலந்தியை கவனித்தீர்கள் என்றால், தானே தனது வலையை உருவாக்கி அதன் மையத்தில் அமர்ந்துவிடுகிறது.

அது போல தன்னையே உலகாக்கி , அண்ட சராசரமாக்கி அதன் மையத்தில் ஈஸ்வர நிலை இருக்கிறது. சிலந்திக்கு தனது வலையை உருவாக்கும் பொருள் எங்கிருந்து கிடைத்தது? தன்னிலிருந்து எடுத்து தனக்காக உருவாக்கியதை போல, இறையாற்றல் தன்னிலிருந்தே அனைத்தையும் உருவாக்கியது. மீண்டும் ஒரு நாளில் அனைத்தையும் தன்னகத்தே எடுத்து ஒன்றாகி விடும். இதையே படைப்பு மற்றும் பிரலயம் என வழங்கப்படுகிறது.

இதை எப்படி உனக்கு தெரிந்தது? என கேட்கலாம். அந்த பிரம்மாண்டமான சிலந்தியின் ஓர் இழைதானே நானும்? அதற்குள்ளே இருந்து வந்ததால் என் மூலத்தை உணர்ந்தேன். அதனால் தெளிந்தேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள், நீங்கள் - நான் - அது என அனைத்தும் ஒன்று என உணர்வீர்கள்.

இறைவன் பிரபஞ்சத்தில் பூமியை படைத்து அதில் மட்டும் மனிதர்கள் வாழவைத்தான். ஏன் வேறு இடத்தில் உயிரினம் இல்லை.?

இது உங்கள் அறியமையை காட்டுகிறது. இந்த பிரபஞ்சத்தின் பிற பகுதியில் உயிரினங்கள் இல்லை என எதை வைத்து முடிவு செய்தீர்கள்? சூரிய மண்டலத்தை விட்டு இன்னும் மனித இனம் தாண்ட வில்லை. சில மத நூல்கள் , கடவுள் மனிதனை அழைத்து அவனுக்கு பூமியை உருவாக்கிருப்பதாக சொன்னார் என்கிறது. அப்பொழுது அதற்கு முன் மனிதன் எங்கே இருந்தான்? அடிப்படை நிலையில் இருப்பதாலும், அறியாமையாலும் இந்த கருத்து வெளிபட்டுள்ளது.

பஞ்சபூதங்கள் உயிர் உருவாக்கதிற்கு காரணம் எனும் பொழுது, பிரபஞ்சத்தில் எந்த புள்ளியில் ஐபூதங்களும் சந்திக்கிறதோ அங்கு உயிர் தோற்றம் நிகழும். அவர்களும் நம்மை போல் இருக்க வேண்டும் என்பது இல்லை. வேறு மாதிரியும் இருக்கலாம். எவ்வாறு வேறு மாதிரி என்கிறீர்களா? உங்களை போன்று அறியாமையில் இல்லாமல், நல்ல ஞானத்துடன் இருக்கலாம்.

நமது பிறப்பின் கர்மவினைக்கு முற்பிறவியின் செயல் காரணம் என்றால், இதை பின்னோக்கி பயணித்தோம் என்றால் முதன் முதலில் ஓர் பிறப்பு எடுத்திருப்போம் அல்லவா? அதற்கு எந்த கர்மவினை காரணம்?

நாம் யார் நாம் எங்கிருந்து வந்தோம் எனும் தேடல் இல்லாத காரணத்தால் இக்கேள்விக்கு பலருக்கு விடை தெரியவில்லை. இதற்கு முன் சொன்ன கேள்வி பதில் இதை தெளிவாக்கும் என்றாலும் வேறு கோணத்தில் இதை விளக்குகிறேன்.

யோக வாஷிஷ்டம் எனும் நூல் இதற்கான தகுந்த விளக்கத்தை தருகிறது.அதில் இருக்கும் ஓர் கதையை எளிய வடிவில் பதிலாக அளிக்க விரும்புகிறேன்.

சிவன் தியானத்தின் உச்சநிலையான சமாதி நிலையில் இருக்கிறார். தனது நிலை கலைந்து வெளியே வரும்பொழுது பரமாத்மா முன் ஓர் தேனீ ரீங்காரம் இடுகிறது. அதை கண்ட பரமாத்ம சொரூபம் தேனீயாக உருவெடுக்கிறது.

தேனீ பல இடங்களுக்கு சென்று தேனை சேகரிக்கிறது. அப்பொழுது அழகிய மலர் ஒன்றை பார்க்கிறது. தேனீ ஓர் மலராக மாற்றம் அடைகிறது. மலர் மணம் கமழ இருக்கும் சூழ்நிலையில் அதை பறித்து கோவிலுக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே மலர் அர்ச்சனைக்காக கொண்டு செல்லப்பட்டு கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் அர்ச்சிக்கப்படுகிறது. மலர் தன்னிலை மீண்டும் உணர்ந்து சிவனாகிறது.

முதல் முதல் பிறவியில் நாம் இறைவனாகவே இருந்தோம். அந்த நிலை பிறப்பாலும் , நான் எனும் இருப்பாலும் மறக்கடிக்கபடுகிறது.

யோக வாஷிஷ்டம் என நான் குறிப்பிட்ட நூல் வஷிஷ்ட முனி ஸ்ரீராமருக்கு கூறிய ஞான கருத்துக்கள்.வஷிஷ்டர் ஸ்ரீராமனிடம் சொல்கிறார் ” நீ பரமாத்மா எனும் நிலை மறந்து இருக்கிறாயே அந்த தூக்கத்திலிருந்து வெளியே வா”. மாபெரும் இறைநிலையின் அவதாரத்திற்கே இந்த கதி எனில் நம் நிலையை எண்ணிபார்க்க வேண்டும்.

ஆணவத்துடன் நானே இறைவன் எனும் தன்மையை உணரும் பொழுது அரக்க குணம் ஏற்படுகிறது. பக்தியுடன் இதை உணரும் பொழுது அங்கே ஞானம் பிறக்கிறது.

நமது தர்மத்தில் இறைவனை தவிர அன்னியமாய் எதுவும் இல்லை. ஹிரண்ய கசிப்பு, கம்சன், ராவணன் என இறைவனுக்கு எதிராக செயல்படுவர்கள் எவரானாலும் அவர்களின் நிலை உணரவைக்கப்பட்டு இறுதியில் இறைவனுடன் இணைந்துவிடுவார்கள். காரணம் அவர்களும் இறைவனின் சொரூபமே.பிற மத கருத்துக்களை போல சாத்தான் என்ற எதிர் இயக்கம் கடவுளுக்கு அன்னியமாய் போர் செய்து கொண்டு இருக்க படைக்கப்படவில்லை.

தத்வமஸி, அஹம் பிரம்மாஸ்மி என்ற மஹாவாக்கியங்கள் உணர்த்தும் செய்தியும் இதுதான்.

நாமும் நம்மை கடந்து சென்றால் நமது சொரூபத்தை உணரலாம் அப்பொழுது நமது முற்பிறவி மட்டும் அல்ல முழுமுதற் பிறவியையும் உணர முடியும். தத்வமஸி - நீயே அது !

http://youtu.be/YAbvlFw8mJo

குறிப்பு:-
இந்த கட்டுரை நான் தட்டு எழுத்தில் எழுதியது.  நான்  படித்து அறிந்த பல பதிவுகளின் நூல்களின் (ஆத்ம போதனம், விவேக சிந்தாமணி , மனிதனின் தத்துவம் மற்றும் பல .......... நூல்களின் ரசதின்  தொகுப்பு.பயன் உள்ளது என்று பகிர்ந்துள்ளேன்.  கொள்கின்றேன்
குரு  என்பது  யார் ?

ஆன்மிகத் தேடலில் இருப்போர் இக்கேள்வியை கேட்காமல் இருக்க முடியாது...!

இப்பதிவு உங்களுக்கு விளக்கமாக அமையக்கூடும்...!

தேடுதல் உள்ளோர் மட்டும் தொடரவும்..!

முதலில் குரு என்பவர் யார்?

1)தன்னை உணர்ந்தவரா?
2)அன்பானவரா?
3)அஷ்ட மகாசித்துகள் பெற்றவரா?
4)அந்த ஆண்டவனையே கண்டவரா?
5)கையில் தடியுடன் முகத்தில் தாடியுடன் காவியும் தரித்து திருநீறணிந்து காடுமலைகளில் கடுந்தவம் புரிபவரா?
6)இல்லை ஜீன்ஸ் அணிந்து மோட்டார் வாகனத்தில் பறந்து பகட்டாக உடையணிந்து மெய்சிலிரிக்கும் ஆன்மிக உரை நிகழ்த்தி அவ்வப்போது சின்னத்திரையில் உங்களுக்கு தரிசனம் வழங்குபவரா?
7)யோகா வகுப்புகள் நடத்தி புதிய கோணத்தில் விளக்கம் தருபவரா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை ஒரு சிறு கதையின் உள்ளே இருக்கின்றது...

முன்னொரு காலத்தில் உலகப் புகழ் வாய்ந்த ஞானம் பெற்ற குரு ஒருவர் இருந்தார்...

அவர் இறக்கும் தருவாயில் இருக்கும் பொழுது, அவரின் சீடர்கள் அந்தக் குருவிடம் ஒரு கேள்வி எழுப்பினார்கள்.

எங்களுக்கெல்லாம் நீங்கள் குருவாக இருக்கிறீர்கள். உங்களுக்கு யார் குரு? என்று கேட்டனர்.

அந்த குரு சிரித்துவிட்டார் எனக்கு ஆன்மீகத்தில் எண்ணற்ற குருமார்கள் இருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மூன்று பேரை கட்டாயம் சொல்ல வேண்டும்.

என் முதல் குரு ஒரு நாய்..

ஒருமுறை நான் ஆன்மீகத்தை தேடி, எல்லாவற்றையும் துறந்து அலைந்து கொண்டிருந்த சமயம். அது ஒரு காடு. அப்போது எனக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது அருகிலேயே ஒரு சிறிய நீரோடை இருந்தது.

சரி நீர் குடிக்கலாம் என அதன் அருகே சென்றேன்..

அப்போது அங்கே ஒரு நாய், நீரோடைக்கு போவதும் திரும்புவதுமாக இருந்தது.

உற்று கவனித்தேன் அது மிகவும் களைப்பாக இருந்தது அதற்கும் நிறைய தாகம் போலிருக்கிறது.

ஆனால் நீரோடைக்கு போனதும் அங்கே நீரில் தெரியும் தன் உருவத்தைப் பார்த்து பயந்துபோய் திரும்பி வந்துவிட்டது.

ஆனால் தாகம் துரத்தியது. திரும்பவும் நீரோடைக்கு செல்கிறது . இப்படி போவதும் வருவதும், போவதும் வருவதுமாக இருந்தது.

நாய் களைத்துப் போய் விட்டது. இருந்தும் தாகம் மேலிடவே அந்த நாய் சரேலென தண்ணீருக்குள் பாய்ந்தது. பயம் தெளிந்தது தாகத்தைத் தீர்த்துக் கொண்டது.

அப்போதுதான் உணர்ந்து கொண்டேன். நம் தாகத்தை தணிக்க விடாமல் செய்வது பயம் மட்டுமே ஆனால் தாகம் மேலிடம் போது நமக்குள் உருவாகும் தைரியமானது பயத்தை உடைத்து விடுகிறது என அறிந்து கொண்டேன் அதனால் அந்த நாய்தான் என் முதல் குரு.

சீடர்கள் வியந்தனர்..

அப்போது இரண்டாவது குரு யார் என அந்த ஞானியை கேட்டனர்..


அவர் சொன்னார் எனது இரண்டாவது குரு ஒரு திருடன்..

என்ன திருடன் குருவாக முடியுமா? என்றனர்..

அவர் புன்னகையுடன் பதில் சொல்லத் தொடங்கினார்.

அந்தக் காட்டில் பசி மிகுதியால் நான் மிகவும் களைப்புற்று சோர்ந்து கிடந்தேன் அப்போது ஒருவர் வந்து என்னை கைத்தாங்கலாக தூக்கி அருகிலிருந்த தன் குடிசைக்கு அழைத்துச் சென்றார்.

எனக்கு உண்ண உணவும், குடிக்க நீரும் தந்தார். நான் நன்றி மிகுதியால் அவரைப் பார்த்தேன்.

‘ சாமி நீங்க யார் ‘என்று என்னை கேட்டார்.

அதைத்தான் தேடி அலைந்து கொண்டு இருக்கிறேன் என பதில் சொன்னேன்.

அவருக்கு அது புரியவில்லை.

சற்று தயக்கமாக ‘நீங்கள் யார்’ என்று கேட்டேன்.

‘நான் ஒரு திருடன்’என பதில் சொன்னார்.

உங்களுக்கு தயக்கம் இல்லை என்றால் உங்களுக்கு விருப்பம் இருக்கும் வரை இங்கேயே தங்கலாம் என்று கூறினார்.

நானும் வேறுவழியின்றி ஒத்துக் கொண்டேன்.

அன்று இரவு அவர் தன் தொழிலுக்கு கிளம்பினார் மறுநாள் காலையில் வந்தார். என்னப்பா தொழில் எப்படி? ஏதாச்சும் கிடைச்சதா? என்றேன்..

 இன்னைக்கு கிடைக்கல சாமி நாளைக்கு கண்டிப்பா கிடைக்கும் என்றார்.

மறுநாளும் தொழிலுக்குச் சென்றார் திரும்பி வந்ததும் மீண்டும் அதே கேள்வியை கேட்டேன் இன்னைக்கு இல்ல சாமி நாளைக்கு கண்டிப்பா கிடைக்கும் என்று பதில் சொன்னார்.

இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் எனது அதே கேள்வியும், அவரது அதே பதிலும் தொடர்ந்தது.

அன்றுதான் ஒன்றைத் தெரிந்து கொண்டேன். சாதாரண பொருளை தேடக்கூடிய (திருடக்கூடிய) திருடனுக்கே இவ்வளவு பொறுமையும் நம்பிக்கையும் தேவைப்படுகிறது என்றால்....

மிகப்பெரிய செல்வமாகிய ஞானத்தை தேடக்கூடிய எனக்கு எவ்வளவு நம்பிக்கையும் பொறுமையும் தேவை என்பதை தெரிந்து கொண்டேன்.

அதனால் அந்த திருடன் தான் எனது இரண்டாவது குரு...

சீடர்களுக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது...

(உங்களுக்கும் தானே)

அப்போ அந்த மூன்றாவது குரு யார்? என்று கேட்டனர்.

அந்த ஞானி சொன்னார் நான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட பிறகு ,ஒரு ஊரில் ஒரு வீட்டில் தங்கி இருந்தேன்.

அப்போது அவ்வீட்டிலிருந்த 5 வயது குழந்தையொன்று வீட்டிலிருந்த விளக்கையே பார்த்துக்கொண்டிருந்தது.

அந்த குழந்தையிடம் என் புத்திசாலித்தனத்தை காண்பிப்பதற்காக..

பாப்பா இந்த விளக்கில் வெளிச்சம் இருக்கிறதே அது எங்கிருந்து வந்தது எனத் தெரியுமா என கேட்டேன்.

அந்த குழந்தை சட்டென விளக்கை ஊதி அணைத்து விட்டு,

'தாத்தா ! இப்போ இந்த வெளிச்சம் எங்கே போச்சோ,

அங்கிருந்துதான் அந்த வெளிச்சம் வந்தது' என பதில் சொன்னது.

ஆஹா!!....

ஞானம் எனக்கு மட்டும் சொந்தம் என கர்வம் கொண்டிருந்தேன்.

அதை தகர்த்த அந்த குழந்தைதான் என் மூன்றாவது குரு என்றார்.

எனவே குரு என்பவர் ஒரு நபர் அல்ல குரு என்பது ஒரு தன்மை இருளை அகற்றும் மின்னல் கீற்று..

அஞ்ஞானம் போக்கும் அறிவு...!

குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறைகள் எல்லாம் செய்ய முடியாது..!

அப்படி வரையறுப்பது சரியான ஆன்மீக நெறி முறையும் அல்ல.

மகாபாரதத்தில் கிருஷ்ணன் கீதா உபதேசத்தை..

ஒழுக்கத்தில் சிறந்த பீஷ்மனுக்கு கூறவில்லை.

வித்தையில் சிறந்த துரோணருக்கு கூறவில்லை.

பக்தியில் சிறந்த விதுரனுக்கு கூறவில்லை .

பின் யாருக்குத்தான் கூறினான் ?

தன்னையே சரணாகதி அடைந்த அர்ஜுனனுக்குத் தான் கூறினார்.

இருப்பதிலேயே நண்பனிடம் சரணாகதி அடைவது தான் இயலாத காரியம்.

ஏனென்றால் நண்பனின் அத்தனை சேட்டைகளும் தான் நமக்குத்தான் தெரியுமே!

அதனால் நண்பனிடம் மட்டும் சரணாகதி அடைவது என்பது இயலாத காரியம்.

(கிருஷ்ணனைப் போன்ற நண்பன் மட்டும் நமக்கு உபதேசித்திருந்தால் என்ன சொல்லியிருப்போம். உன் அட்வைஸ நிருத்துறயா? உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா?என்றிருப்போம்)

ஆனால் கிருஷ்ணனின் அனைத்து சேட்டைகளையும் அறிந்த பின்பும் (சிசுபாலன் கண்ணனின் சேட்டைகளை பக்கம் பக்கமாக பட்டியலிட்ட பின்பும்) அர்ஜுனன் சரணாகதி அடைந்தான்.

அர்ஜீனன் முழுவதும் ஏற்கும் தன்மையில் இருந்ததனால் கிருஷ்ணனுக்கு வேறு வழியே இல்லை அர்ஜுனனை சீடனாக ஏற்றுக்கொண்டான். கீதை அருளப்பட்டது.

இவ்வளவு ஏன்? ஞானத்திற்கெல்லாம் தலைவனாக இருக்க கூடிய சிவபெருமான் கூட தன் மகனாக இருந்தாலும், மண்டியிட்டு வாய் மூடி தலை குனிந்து தன்னை சீடன் என்ற நிலைக்கு இறக்கிக் கொண்ட பின்புதான் முருகனிடம் உபதேசம் பெறமுடிந்தது.

சம்மட்டி ஓசையை கேட்டு ஞானமடைந்தவரைப் பற்றியும், உடைந்த குடத்தின் ஓசையிலே ஞானமடைந்த பெண் புத்தத்துறவியைப் பற்றிய கதையையும் படித்துள்ளோம் தானே.

ஆகவே இங்கு *ஆன்மீகத்தில் முக்கியமானது குருவின் தகுதி அல்ல சீடனின் தகுதிதான் மிகவும் முக்கியமானது...!*

எவ்வளவு மழை பெய்தாலும் திறந்த பாத்திரத்தைத்தான் மழையால் நிரப்ப முடியும்.

மூடிய பாத்திரத்தை வானமே கிழித்துக்கொண்டு பெய்தாலும் நிரப்ப முடியாது .

தெரியுமா உங்களுக்கு?

உண்மையிலேயே கிரேக்க ஞானி டயோஜனிஸிக்கு ஒரு நாய்தானே குரு.

நியூட்டனுக்கு ஆப்பிள் தானே குரு.

ஆர்க்கிமிடிஸிக்கு தான் குளித்த தண்ணீர்தானே குரு.

உலகின் பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டைக்கு நட்சத்திரங்களை பற்றி விளக்கிய குரு சோப்பு நுரைதானே.

அதனால்தான் நதிமூலம் பார்ப்போரின் தாகம் தீர்வதில்லை..

ரிஷிமூலம் பார்ப்போர் ஞானம் அடைவதில்லை..

தவித்தவன் தண்ணீரை தேடி பயணிப்பது போல, தாகம் கொண்டவனின் தொண்டையை நனைக்க தண்ணீரும் பயணப்படுகிறது.

*தன்னை தகுதி படுத்திக் கொண்டவன் தன் பாதையிலேயே தன் குருவைக் காண்பான்...!*

*குருவே சரணம்.....!


https://chat.whatsapp.com/5AWgILGn7lB0xWlOSwtnRr
காலை முதல் இரவு வரை மந்திரங்கள்

காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், *ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள்* என்பதாக ஐதீகம். ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்

“கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே து  ஸரஸ்வதீ கரமூலே ஸ்திதா  கௌரி
 ப்ரபாதே கரதர்சனம் ”

பூமித்தாய்க்கு வணக்கம்!

வாழ்க்கை முழுவதும் நம்மைச் சுமந்து காப்பவள் பூமித்தாய். அவளுக்கு நன்றி செலுத்தவும் நம் கால்கள் பூமியை ஸ்பரிசிக்க அனுமதி வேண்டியும் சொல்லி வணங்குவது அவசியம்.

“சமுத்ரவஸனே தேவி
பர்வத ஸ்தன மண்டலே!
விஷ்ணு பத்னி நமஸ்துப்யம்
பாதஸ்பர்சம் க்ஷமஸ்வ மே!! ”

*ஸ்நானம்* :

கங்கேச யமுனா  க்ருஷ்ண கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவிரி ஜலே அஸ்மின் சந்நிதம் குரும்’ என்று நாம் சொல்லி நீராடினோமென்றால், அந்த நீராடல் புனித நீராடல் ஆக மாறிவிடுவதாக ஐதீகம்

*உணவு உண்ணும் போது* :

உணவு உண்ணும் முன்
சொல்ல வேண்டிய ஸ்லோகம்

அன்னபூர்ணே ஸதா பூர்ணே

சங்கர ப்ராண வல்லபே !

ஞான வைராக்ய ஸித்யர்த்தம்

பிக்ஷாம் தேஹி ச பார்வதி !!

*உணவுக்கு பஞ்சம் வராமல் இருக்க சொல்லவேண்டிய மந்திரம்*.

“முக்தாஹார விபூஷிதாம் குசபராநம்ராம் ஸகாஞ்சீகுணாம்
தேவீம் திவ்யரஸாந்ந பூர்ணகர காம்போஜ தர்வீகராம்
த்யாயேச் சங்கர வல்லபாம் த்ரிநயநாமம்பாம் ப்ரவலம்பாலகாம்.”

தினமும் சாப்பிடும் முன் காகத்திற்கு அன்னம் வைப்பது வழக்கம். அதற்கு முன் பூஜையறையில் வைத்து இந்த ‘பலி மந்திரம்’ சொல்வது சிறப்பு.

*பெருமாள் பக்தர்கள்*:
“பலிர் விபீஷணோ பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜுன!
மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா!”
என்று சொல்லி சோறு இட வேண்டும்

சிவ பக்தர்கள்,
“பாண ராவண சண்டேஸ நந்தி ப்ருங்கி ரிடாதய!
மஹாதேவ ப்ரஸாதோயம் க்ருஹ்ணந்து ஸாம்பவா”
என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். ”

*நாடு நலம் பெற*…

காலே வர்ஷது பர்ஜன்ய:
ப்ருத்வீ ஸஸ்யஷாலினீ
தேஸோஹம் க்ஷோபரஹித:
ப்ராமணஸ்ஸந்து நிர்பயா:

*தன ஆகர்ஷண கணபதி மந்திரம்*

“ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா ”

மாலையில் திருவிளக்கு
ஏற்றியதும் குடும்பத்தினர் அனைவரும் சொல்ல வேண்டிய அபூர்வ மந்திரம் இது

“ சிவம் பவது கல்யாணம்
ஆயுள் ஆரோக்ய வர்தனம்
மம துக்க விநாசாய
ஸந்த்யா தீபம் நமோ நம: ”

*தூங்கும் முன்*:

கரசாரண கிருதம் வா கயாஜம் கர்மஜாம் வா
ஸர்வவண நயனஜம் வா மனசாம் வா அபராதம்

விஹிதம். அவிஹிதம்.வா சர்வம் எட்டாத் க்ஷாமஸ்வா
ஜெய ஜெயா கருணாப்தே ஸ்ரீ மகாதேவா ஷம்போ …

தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த தவறான செயல்களை மன்னியுங்கள் என்று வேண்டுவதாகும்.

*கெட்ட ஸ்வப்பணம் வராமலிருக்க* :

அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்தனம் ஹம்சம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் துஸ்வப்ன சாந்தயே

ப்ரம்மாணம் சங்கரம் விஷ்ணும் யமம் ராமம் தனும் பலிம் ஸப்தைதான் ய: ஸம்ரேந் நித்யம் துஸ்வப்னஸ்தஸ்ய நிச்யதி.

இந்த மந்திரங்களை சொல்வதால் எங்கும் அவனே ! எதிலும் அவனே என்று அவன் ஸ்மரணையுடன் பிரார்த்திப்போமாக ……..

*லோகா சமஸ்தா சுகிநோ பவந்து* ……
விஷ்ணு சகஸ்ர -நாமத்தை-- சாகதேவன் மூலம் இந்த உலகுக்கு அறிய வைத்த கங்கை -பாரத --போர் உடல் முழுவதும் அஸ்திரங்கள் எய்ய பட்டு அம்பு படுக்கையில் இருந்தார் பீஷ்மர் ---அவரை சுற்றி கண்ணன் --பாண்டவர்கள் --கௌரவர்கள் --என யாவரும் கவலையுடன் நின்றிருக்க --பீஷ்மரோ அம்பு படுக்கையிலும் கம்பீரமாக படுத்து கணீர் குரலில் நல்ல உபதேசங்களை கூறி கொண்டிருந்தார் ---அவரின் உபதேசங்களை காது குளிர கேட்டு மகிழ்ந்த பாண்டவர்களில் ஒருவரான தருமர் ---பாட்டனாரே உங்கள் உபதேச கருத்துக்கள் யாவும் மனிதன் போற்றி வாழ கூடிய ஒன்று ---ஆனால் வாழ்வில் இவையெல்லாம் ஒரு மனிதன் கடைபிடித்து வாழ்வது என்பது கடினமன்றோ --அதனால் எளிமையான உபதேசங்கள் எவையேனும் இருந்தால் அதை பற்றி கூறுங்களேன் என்று வேண்ட ----தருமர் கூறியதை கேட்ட பீஷ்மர் ---தன் இரு கண்களால் கண்ணனை பார்த்து கொண்டே தன் இரு கரம் கூப்பி கண்ணனை வணங்கி கொண்டே --ஆயிரம் ஆயிரம் பாவங்களை போக்க வல்ல ஆயிரம் அனந்தனின் நாமத்தை கூறுகிறேன் கேட்டு உயர்வு பெறுங்கள் என்று கூறி கொண்டே கூறியதுதான் விஷ்ணு -சகஸ்ர நாமம் ---அனந்தனின் ஆயிரம் நாமங்களையும் கேட்டு மனம் பூரிப்படைந்தனர் யாவரும் ஆனால் சகாதேவன் மட்டும் ஏதோ யோசனை செய்து கொண்டிருக்க அதை கவனித்த கண்ணன் சகாதேவனை தனியே அழைத்து சென்று அவனது யோசனைக்கு காரணம் கேட்க ----சகாதேவன் --பரமாத்மா அனைத்தும் அறிந்தவன் நீ என் யோசனை என்னவென்று அறியாதவனா நீ சரி நானே கூறுகிறேன் ---கண்ணா ---பீஷ்மர் கூறிய உனது ஆயிரம் நாமங்களை கேட்டு நாங்கள் மன-பாரம் குறைந்தோம் --மனம் தெளிவுற்றோம் என்பது எல்லாம் உண்மையே ஆனால் நங்கள் கேட்ட இந்த புண்ணிய விஷ்ணு -சகஸ்ர -நாமம் ஆயிரத்தையும் இனி வரும் மக்கள் யாவரும் கேட்கும் வண்ணம் அதை நாங்கள் குறிப்பெடுத்து வைக்கமுடியாமல் போயிற்றே அதை நினைத்து தான் நான் யோசனை செய்தேன் --என்று வருந்தி கூற --கண்ணன் ---சகாதேவா ---வருந்தாதே --பீஷ்மரின் கழுத்தில் ஒரு ஸ்படிக மாலை உள்ளது அவர் உடல் எரியூட்ட படுவதற்கு முன் அந்த ஸ்படிக மாலையை அணிந்து கொள் --அவர் கூறிய சகஸ்ர --நாமம் ஆயிரமும் உன் சிந்தனையில் தோன்றும் --நீ அதை எழுத்து வடிமாக உருவாக்கி வியாசர் மூலம் இந்த உலகுக்கு தந்து விடு என்றான் கண்ணன் --சகாதேவன் சிரித்து கொண்டே ---கண்ணா பீஷ்மரின் ஸ்படிகமாலைக்கு அவ்வளவு சக்தியா அப்படி என்ன சக்தி அதில் இருக்கிறது என்று கேட்க ----கண்ணன் --சகாதேவா--முன்பொருமுறை பீஷ்மர் இளைஞராக இருக்கும் போது கங்கை கரை நோக்கி சென்று ---கங்கை மாதாவை வணங்கி --தாயே என் தந்தை சாந்தனுவுக்காக என் வாழ்வில் எந்த பெண்ணையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து சபதம் செய்துள்ளேன் எவருமே சொல்ல தயங்கும் இந்த வார்த்தையை நான் என் தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்ததால் தேவர்களும் -முனிவர்களும் ---என்னை வாழ்த்தி --பிதாமகன் பீஷ்மர் என எனக்கு பட்டம் அளித்துள்ளனர் ---ஆனாலும் இந்த இளமையில் --காதலும் காமமும் என்னை ஆட்கொள்ளாமல் இருக்கவும் என் தந்தைக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றவும் தாங்கள் தான் எனக்கு அருள வேண்டும் தாயே என்று வேண்டி அழுதார் பீஷ்மர் ---குழந்தை அழுதால் தாய் பொறுப்பாளா என்ன ---தன் மகன் அழுததை பொறுக்காத கங்கை மாதா பீஷ்மர் முன் தோன்றி ---மகனே தேவவிரதா இல்லை இல்லை --மகனே பீஷ்மா அப்படித்தானே யாவரும் உன்னை அழைக்கிறார்கள் உன் இரு கரங்களையும் நீட்டு என்றாள் கங்கை மாதா --பீஷ்மரும் தன் இரு கரங்களையும் நீட்ட ---கங்கை நீர் பீஷ்மரின் இரு உள்ளங்கையிலும் சில துளிகள் விழுந்து பின் அதுவே ஒரு ஸ்படிக -மாலையாக மாறியது ---ஸ்படிக -மாலையை ஆச்சிரியதுடன் பார்த்து கொண்டிருந்த பீஷ்மரிடம் --கங்கை மாதா கூறலானாள்---மகனே --திருமாலின் வாமன அவதாரத்தில் அவரின் பாத கமலத்தில் ---பிரம்ம-தேவரின் கமண்டலத்தில் உள்ள நீரால் --- அபிஷேகம் செய்யப்பட்டு பெருக்கெடுத்து பூலோகம் வரும் வேளையில் சிவபெருமான் தன் சடையில் அந்த நீரின் வேகத்தை தாங்கி --சூடி கொள்ள --பின் பகீரதன் தவத்துக்கு இணங்கி சிவபெருமான் அந்த நீரை சடையில் இருந்து அவிழ்த்து பூலோகத்தில் பெருக்கெடுத்து ஓட செய்து அந்த நீரான எனக்கு கங்கை எனவும் பெயர் சூட்டி அழைத்தார் ----இப்படி மும்மூர்த்திகளின் ஸ்பரிசத்தால் பூலோகம் வந்ததால் பாவங்களை போக்கும் புண்ணிய நதி என்ற பெயர் எனக்கு உருவானது ---அப்படியே உன் கையிலும் இருக்கும் இந்த ஸ்படிகமாலையம் புனிதமாக இருக்க வைக்கும் உன்னை ---நீ நினைக்கும் --கூறும் நல்ல உபதேசங்கள் யாவும் இந்த ஸ்படிகமாலையில் பதிந்து விடும் அப்படியே--- உனக்கு பின் இந்த ஸ்படிக மாலையை யார் அணிகிறார்களோ அவர்களுக்கு உன் உபதேச மொழிகள் யாவையும் இந்த ஸ்படிக மாலை அவர்களின் உள்ளத்தில் புகுத்தி அவர்களையும் புனித படுத்திவிடும் --என்று கூறி கங்கை மறைந்தாள் ---பீஷ்மர் கண்ணீருடன் தன் தாயின் கருணையை எண்ணி ஸ்படிகமாலையை அணிந்து கொண்டார் என்று கண்ணன் சகாதேவனிடம் கூறி முடிக்க ---சகாதேவன் கண்ணனிடம் கண்ணா எங்கள் எல்லோர் மனதிலும் நீயே கேள்விகளை எழுப்பி அதற்க்கு நீயே விடைகளையும் கூறிவிடுகிறாய் ----உன் ஆயிரம் திருநாமங்களை கொண்ட இந்த விஷ்ணு சகஸ்ரநாமம் கங்கையை போலவே யாவர் பாவங்களையும் நீக்க வல்லது ---பீஷ்மரின் ஸ்படிகமாலையை அணிந்து ---வியாசர் உதவியுடன் விஷ்ணு சகஸ்ரநாமத்தை எழுதி இந்த உலகுக்கு அளிப்போம் அதை படித்து யாவரும் புனிதமடையட்டும் அதுக்கு அருள் புரிவாயே கண்ணா --என்று சாகதேவன் கண்னை வணங்கி நின்றான் ----ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ --
#சேஷாத்ரி_பரப்பிரும்மம்

திருவண்ணாமலையில் பெரும்புகழோடு உலவிக் கொண்டிருந்த காலம். அவர் ஏதாவதொரு கடையின் உள்ளே நுழைந்து எதையாவது வாரி இறைத்தால் அன்று கடையில் வியாபாரம் அமோகமாக நடக்கும்! இதனால் அவர் தங்கள் கடைக்கு வரமாட்டாரா என்று பலரும் காத்திருப்பார்கள். ஆனால் அவர் பெரிய மகான் என்று தெரியாமலேயே அவர்மேல் மட்டற்ற தாய்ப்பாசம் செலுத்தி வந்தார் ஒரு மூதாட்டி. அவர் சேஷாத்ரி பரப்பிரும்மத்தின் பால்வடியும் திருமுகத்தைப் பார்த்துப் பரவசப்பட்டார். இந்தப் பிள்ளை லோ லோ என்று தெருக்களில் அலைகிறதே, பசிக்காதோ என்று வருத்தப்பட்டார்.

அவரைத் தன் வீட்டு வாயிலில் பார்த்தால், உள்ளே வந்து ஒருவாய் சாப்பிட்டு விட்டுப் போ என்று அதட்டுவார். பரப்பிரும்மம் அந்தத் தாயன்புக்குக் கட்டுப்படுவார். தன் முகத்தைப் பாசத்தோடு பார்த்தவாறே கையில் பிசைந்து தன் வலக்கரத்தில் மூதாட்டி வைக்கும் தயிர் சாதத்தை அன்போடு சாப்பிடுவார்.

ஒருநாள் அவர் மூதாட்டியிடம் கேட்டார், பாட்டி! உனக்கு பட்சிகளைப் பார்க்கும் ஆவலுண்டா? மூதாட்டி நகைத்தாள். நீதான் என்னென்னமோ வித்தையெல்லாம் காட்டுகிறாயாமே? இன்று எனக்கு வித்தை காட்டப் போகிறாயா? சரி காட்டு. பறவைகளைப் பார்க்கிறேன்! என்றார் பாட்டி.

பரப்பிரும்மம் தன் வேட்டியிலிருந்து ஒரு நூலைப் பிரித்துப் கீழே போட்டார். மறுகணம் கூடமெங்கும் காடை, குருவி, மைனா, புறா, மயில் என எண்ணற்ற பறவைகள் கீச் கீச் எனக் கத்தியவாறு அங்குமிங்கும் பறந்தன. பாட்டி வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறிதுநேரம் சென்றது. பரப்பிரும்மம் நகைத்தாவறே, பாட்டி! பட்சிகளைப் பார்த்தது போதுமா? என்று கேட்டார். மூதாட்டி அடிப்படையில் ஒரு தாயல்லவா? வியக்க வைக்கும் ஒரு பதிலைச் சொன்னார் அவர், போருண்டா சேஷாத்ரி. இதுகள் எங்கிருந்து வந்ததோ அங்கேயே அனுப்பிடு. இதுகளோட அப்பா அம்மாவெல்லாம் இதுகளைக் காணோமேன்னு தேடமாட்டாளோ?

மறுகணம் பரப்பிரும்மம், வேட்டியிலிருந்து மற்றொரு நூலைப் பிரித்துக் கீழே போட்டார். பறவைகள் அனைத்தும் காட்சியிலிருந்து மறைந்தன.
#சேஷாத்ரி_பரப்பிரும்மம்

திருவண்ணாமலையில் பெரும்புகழோடு உலவிக் கொண்டிருந்த காலம். அவர் ஏதாவதொரு கடையின் உள்ளே நுழைந்து எதையாவது வாரி இறைத்தால் அன்று கடையில் வியாபாரம் அமோகமாக நடக்கும்! இதனால் அவர் தங்கள் கடைக்கு வரமாட்டாரா என்று பலரும் காத்திருப்பார்கள். ஆனால் அவர் பெரிய மகான் என்று தெரியாமலேயே அவர்மேல் மட்டற்ற தாய்ப்பாசம் செலுத்தி வந்தார் ஒரு மூதாட்டி. அவர் சேஷாத்ரி பரப்பிரும்மத்தின் பால்வடியும் திருமுகத்தைப் பார்த்துப் பரவசப்பட்டார். இந்தப் பிள்ளை லோ லோ என்று தெருக்களில் அலைகிறதே, பசிக்காதோ என்று வருத்தப்பட்டார்.

அவரைத் தன் வீட்டு வாயிலில் பார்த்தால், உள்ளே வந்து ஒருவாய் சாப்பிட்டு விட்டுப் போ என்று அதட்டுவார். பரப்பிரும்மம் அந்தத் தாயன்புக்குக் கட்டுப்படுவார். தன் முகத்தைப் பாசத்தோடு பார்த்தவாறே கையில் பிசைந்து தன் வலக்கரத்தில் மூதாட்டி வைக்கும் தயிர் சாதத்தை அன்போடு சாப்பிடுவார்.

ஒருநாள் அவர் மூதாட்டியிடம் கேட்டார், பாட்டி! உனக்கு பட்சிகளைப் பார்க்கும் ஆவலுண்டா? மூதாட்டி நகைத்தாள். நீதான் என்னென்னமோ வித்தையெல்லாம் காட்டுகிறாயாமே? இன்று எனக்கு வித்தை காட்டப் போகிறாயா? சரி காட்டு. பறவைகளைப் பார்க்கிறேன்! என்றார் பாட்டி.

பரப்பிரும்மம் தன் வேட்டியிலிருந்து ஒரு நூலைப் பிரித்துப் கீழே போட்டார். மறுகணம் கூடமெங்கும் காடை, குருவி, மைனா, புறா, மயில் என எண்ணற்ற பறவைகள் கீச் கீச் எனக் கத்தியவாறு அங்குமிங்கும் பறந்தன. பாட்டி வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறிதுநேரம் சென்றது. பரப்பிரும்மம் நகைத்தாவறே, பாட்டி! பட்சிகளைப் பார்த்தது போதுமா? என்று கேட்டார். மூதாட்டி அடிப்படையில் ஒரு தாயல்லவா? வியக்க வைக்கும் ஒரு பதிலைச் சொன்னார் அவர், போருண்டா சேஷாத்ரி. இதுகள் எங்கிருந்து வந்ததோ அங்கேயே அனுப்பிடு. இதுகளோட அப்பா அம்மாவெல்லாம் இதுகளைக் காணோமேன்னு தேடமாட்டாளோ?

மறுகணம் பரப்பிரும்மம், வேட்டியிலிருந்து மற்றொரு நூலைப் பிரித்துக் கீழே போட்டார். பறவைகள் அனைத்தும் காட்சியிலிருந்து மறைந்தன.
எந்த ஒரு வினைக்கும் நாம் தான் காரணம் என்ற புரிதல் ஏற்படும்போது நம்மை சுற்றி நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.

கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை? எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?

கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற எண்ணங்கள் மாறி நம்முடைய  தவறுக்கான வினைகள்தான் தற்போது நாம் அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான புரிதல் ஏற்படும்.

புரிதல் ஏற்படும்போது எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம் வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை நாம் அடையும்போது, நம்முடைய  95% கர்மங்களை நமக்காக வேறு ஒருவர் அனுபவித்து விடுவார். காரணம்!! நீங்கள் அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான
அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த அவர் ஏற்கனவே பிறவிகடலை கடந்தவராக இருப்பார்.

ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு வழியே சென்று கொண்டு இருந்தார். திடீர் என்று அங்கே உள்ள சாக்கடையில் குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர் குழாயில் காலை கழுவிவிட்டு சென்றுவிட்டார்.  இதை பார்த்தவர்களுக்கு அவர் பைத்தியகாரன் என்று தோணலாம். ஆனால் அவரை பொறுத்தவரை பொருளுக்கும் அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது
ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு
அவருடையது அல்ல!! அவரை நம்பி இருப்பவர்களின் கர்மவினைகளை தான் அவர் அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார்.

இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி வரலாம்!! அந்த ஞானியை பொறுத்தவரை
அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது. காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம் தான் உள்ளது. அதாவது அவருக்கு மனம் என்ற ஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான் இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும் உதிப்பதும் கிடையாது!! மறைவதும் கிடையாது!! இதுவே " சும்மா இருப்பது " என்று சொல்லப்படுகின்றது.

ஒருவன் அவர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த
வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள்சுற்றி கொண்டிருக்கும். இவனுக்கு அன்று சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும் என்ற விதி இருக்கும், ஆனால் இவன்
உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக
அந்த ஞானி அந்த விதியை முடித்து வைக்கின்றார். மேலும் அவர் மீது நம்பிக்கை
கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில்
சுற்றிக் கொண்டே இருக்கும்.

இவர்கள் தன் தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க
தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய
கணக்குகளை அழித்துவிடுவார்.
முடிவில் இவர்களும் அந்த ஞானியின் நிலைக்கே வந்துவிடுகின்றனர். அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும்
கேட்காதீர்கள் என்று கூறுவது.

காரணம்!! நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற
அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள் கேட்க நினைப்பது கூட சிறியதாக தான்
இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே
சிறந்தது ஆகும். இதில் பூரண சரணாகதி என்பது இனி
அனைத்தும் உன் செயல் என பற்றுகளை துறப்பதுவே ஆகும். "நான்" என்ற எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் "நீ" என்ற
எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி. அதற்குபிறகு  நமக்கென்று தனிப்பட்ட எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும் கூடாது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் செய்வதாகவே இருக்கவேண்டும்.
அருணகிரி திருப்புகழ் பாடியிருக்காரு! அனுபூதி பாடியிருக்காரு! இன்னும் என்னென்னமோ பாடியிருக்காரு! ஆனால் இந்தக் கந்தர் அலங்காரத்துக்கு மட்டும் ஒரு "இனம் புரியாத" தனித்த பெருமை உண்டு! ஏன்-ன்னு உங்களுக்குத் தெரியுமா?

"சும்மா" இரு! அம்-மா பொருள்!

 "சும்மா" இருப்பது எப்படி?  பார்க்கலாம்!:)

"சும்மா" இருக்கறது-ன்னா என்ன? பதிவு போடாம, பின்னூட்டம் இடாம, பதிவு படிக்காம, தமிழ்மணம் பக்கமே வராம, இப்படிப் பல வித "சும்மா" இருத்தல்களா? ஹிஹி!

* "சும்மா" இருக்கும் திறம் அரிதே! - என்று தாயுமானவர் பாடுகிறார்!

* "சும்மா" இரு, சொல்லற என்றலுமே! அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! - என்று இதே அருணகிரி அநுபூதியில் சொல்றாரு!

"சும்மா" இரு-ன்னு சொன்ன ஆன்மீகவாதிகளும் சும்மா இருக்க வேணாமா? அதை விட்டுட்டு எப்படி அநுபூதி பாடலாம்? அப்படின்னா அவிங்களும் "சும்மா" இல்லை! ஏதோ "சும்மா"-வைப் பற்றிச் சும்மாச் சொல்லிட்டுப் போயிட்டாங்க! அப்படியா என்ன? :)

ஹா ஹா ஹா! இன்னிக்கி அலங்காரத்தைச் "சும்மா" பாக்கலாம் வாங்க! :)

சொல்லுகைக்கு இல்லை என்று, எல்லாம் இழந்து, சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல என்னை விட்டவா! இகல் வேலன், நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக், கல்வரை கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் வல்லபமே!

இகல் வேலன் = இகல்-னா வலிமை! இகல்-ன்னு வரும் குறள் என்ன? சொல்லுங்க பார்ப்போம்! வலிமை வாய்ந்த வேலன்!

நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை = இது யாருப்பா? கொல்லி-சொல்லின்னு?
கொல்லி என்றால் இந்தளப் பண். நாதநாமக்ரியை ராகம்.
பேசினாலே இந்தளம் போலப் பேசும் சொல்லி -வள்ளி! அவள் எப்பமே நாத நாமம் தானே பேசுவாள்! அதான் அவள் பேச்சே நாதநாம ராகமாய், இந்தளமாய் ஆகிவிட்டது!

இறைவனின் நாமங்களுக்கு இறைவனைக் காட்டிலும் அவ்வளவு பெருமை!
முருகாஆஆஆஆ என்று ஒரு முறை உரக்கச் சொல்லிப் பாருங்கள்!
என்ன, முருகனை விட இனிக்குதா? :) அதான் நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!

நாத நாமத்தைச் சொல்லிக்கிட்டே இருந்தா, நம்மையும் அறியாமல், நம் குரலும் கனிவாகி, இனிமையாகி, இந்தளம் ஆகிவிடும்!

கல்வரை, கொவ்வைச் செவ்வாய், வல்லியை = கல் மலையில் வாழ்பவள், கொவ்வைப்பழம் போல் சிவப்பான வாயாடி, வல்லிக் கொடி போன்று மெலிந்த வள்ளி!

கல்-மலை என்றால் அதிகம் பசுமை இல்லாத மலை! வள்ளி மலை/திருத்தணி போய் பார்த்தால் தெரியும்! கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் என்பது அப்பர் தேவாரம்! கொவ்வை-ன்னா கொய்யாப் பழமா? இல்லையில்லை!
கொவ்வைப் பழம் தான் திரிந்து...கோவைப் பழம் ஆகி விட்டது! கோவைப் பழம்-ன்னா உடனே கோயம்புத்தூர் பழம்-ன்னு சன்னமா வந்து நிக்கப் போறாங்க! :)

கோவைப் பழம் பாத்து இருக்கீங்களா? வீட்டுல கோவக்கா கறி செய்வாங்களா?
கிளிக்கு ரொம்ப பிடிக்குமே, அந்தக் கோவைப் பழம்! அதான் கிளி மூக்கு போலவே சிவப்பான உதட்டைக் கொவ்வைச் செவ்வாய்-ன்னு சொல்லுறாங்களோ?

புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் = அவளை அணைத்த வண்ணம் காட்சி தரும் அண்ணல்! அவனுக்கு மால்+வரை+தோள் = மயங்கும் மேகம்+மலை+தோள்!

தோள் இரண்டும் மலை போல் குவிந்து இருக்கு! தினமும் ஜிம்-முக்குப் போய் Arm Stretches பண்ணுவான் போல முருகன்! :)
அந்தத் தோள் மலையின் மீது முருகனின் முடிச் சுருள், மேகம் போல வந்து விழுகிறது! அதை ஓவியமா வரைஞ்சி காட்டுறாரு அருணகிரி!

வல்லபமே = அவனுக்குப் பிடித்தமான திறம்! சாமர்த்தியம்! அட, முருகனுக்கு என்னாங்க சாமர்த்தியம்? வேல் விடுறதா? மயில் மேல ஸ்டைலா வரதா? உம்...அதை எல்லாம் சொல்லுறத்துக்கு இல்லையாம்!

சொல்லுகைக்கு இல்லை = சொல்லுன்னு சொன்னா, சொல்ல முடியாது!
எல்லாம் இழந்து = யாவற்றையும் இழந்து

சும்மா இருக்கும் எல்லையுள் = சும்மா இருக்கும் ஒரு எல்லைக்குள்
செல்ல எனை விட்டவா = என்னைச் சென்று சேர்ப்பித்தவா!

உன் வல்லபத்தைச் சொல்லத் தான் முடியுமா?