செவ்வாய், 14 ஜூலை, 2015



 இன்றே தர்மம் செய்யுங்கள்
 ஒரு கையால் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொள்ளுங்கள்.இன்னொரு கையால் உலகவாழ்வில் செயலாற்றுங்கள்.
 பணத்தைத் தேடி அலைந்து திரியாதீர்கள்.கடவுளின் திருநாமத்தைச் சொல்லி வழிபடுவதே மேலான இன்பம்.
 ஒரு சிறு புல்லைக் கூட படைக்கத் திறனற்றவராக இருக்கும் நமக்கும் உணவு உடையும் கொடுத்த கடவுளுக்கு நன்றி காட்டுவது நம் கடமை.
 தர்மம் செய்வதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி போடுவது கூடாது.வாழ்வு நிலையற்றது என்பதை மறத்தல் கூடாது.
 மற்றவருக்கு உபதேசித்து திருத்துவதற்கு முன்னால் நம்மை நாமே தப்பு செய்யாமல் சரியான பாதையில் வாழக் கற்றுக் கொண்டால் போதும்.
 சேவை செய்பவர்களுக்கு தைரியம் மன ஊக்கம் இவற்றோடு மனதில் அமைதி முக மலர்ச்சியும் தேவையான அடிப்படையான பண்புகள்.
 காஞ்சி மஹா பெரியவா

சிதம்பரம் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்.(மே 1, 2015)

பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த
ஏராரும் மணிமன்றில் எடுத்ததிரு வடிபோற்றி
திருவாதவூரடிகள் எம்பெருமானது ஐந்தொழிற்கூத்து நிகழ்வதற்கு உரிமையுடைய திருத்தலமாகத் தில்லையை“தில்லை மூதூர் ஆடிய திருவடி”என்றும்,”தில்லையுட் கூத்தனே”என்றும் கூறியருளினார். தில்லை என்பது சிதம்பரம்.அது சித்+அம்பரம் என்னும் தொகைச்சொல்.‘சித்’ என்றால் ,‘ஞானம்’ என்று பொருள்; ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாசம்’ என்று பொருள்.எனவே சிதம்பரம் ‘ஞானாகாசம்’ஆகும்.அந்த ஞானாகாசம் அண்டத்திலும் உண்டு;பிண்டமாகிய உடலிலும் உண்டு.அண்டத்திலுள்ளது பராகாசம் என்றும் பிண்டத்திலுள்ளது ‘தகராகாசம்’ எனவும் வழங்கப்படும்.தகரம் சிறுமை.பராகாசம் தகராகாசம் எனும் இவ்விரண்டு ஆகாயங்களும் ‘பரை’ அல்லது ‘சித்சத்தி ’வடிவின. இவ்விரு ஆகாசங்களில் இருந்துகொண்டு ஐயன் ஐந்தொழிற் கூத்தியற்றி அண்ட பிண்டங்களை இயக்குகின்றான்.
பரமாண்டத்தின் இருதயகமலமாகக் கருதப்படுவது புண்ணிய பூமியாகிய பாரதத் திருநாட்டின் அங்கமாகிய மாதவஞ்செய் தமிழ்நாட்டின் தில்லை மூதூர்.தில்லை என்பதே பழமையான பெயர். சிதம்பரம் என்பது காலப்போக்கில் தோன்றி நிலைபெற்றுவிட்ட பெயர்.இதயகமலத்தில் இறை என்னும் பதிப்பொருள் ஞானப்பிரகாசமாக சிவப்பிரகாசமாக, அறிவொளியாக அருட்சோதியாகத், தன்னை அன்பால் நினைவார் நினையும் வடிவில் எழுந்தருளுவதை தெய்வப்புலவர் “மலர்மிசை யேகினான்” என்று சுட்டினார்.திருவாதவூர்ப் பெருந்தகை,“மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி” என விரித்துரைத்தார். இந்த இதயகமலத்தை,’அனாகதம்’ எனும் பெயரால் யோகியர் குறிப்பர்.
மேலானது உயர்ந்தது எனும் பொருள்படும் பரம் என்னும் பெயர் ஆண்பால் விகுதியேற்றுப் ‘பரன்’ எனவும் பெண்பால் விகுதியேற்றுப் ‘பரை’ எனவும் ஆகும்.பரம்- சிவம்; பரன் –சிவன்; பரை- சிவசத்தி. பராகாசம் அல்லது ஞானாகாசம் சித்சத்தி வடிவம். பரையிடமாக நின்று உரையுணர்வுக் கெட்டா ஒருவன் பஞ்சாக்கரத்தால் வரைமகள் காணும்படிக் கருணையுருக் கொண்டு ஆடிதலைப் பேணுபவருக்குப் பிறப்பில்லை என்பது நம் ஞானசாத்திரமாகிய உண்மைவிளக்கம்.
பரை பக்குவ ஆன்மாக்களுக்குத் திருவருளாகச் சிவத்தைக் காட்டும்; பக்குவமிலாத ஆன்மாக்களுக்குச் சிவத்தை மறைத்து, மறைப்புச்சத்தியாகிய திரோதானமாக நின்று உலகத்தைக் காட்டும்.
சிவத்தைக் காட்டுவது ‘ஞானநடனம்’ என்றும், பிரபஞ்சத்தைக் காட்டுவது ‘ஊனநடனம்’ என்றும் சாத்திரம் பேசும். இவ்விரு நடனங்களின் இயல்பைத் திருவாதவூரிறை,
“ஊனை நாடக மாடுவித்தவா
உருகி நானுனைப் பருக வைத்தவா
ஞான நாடக மாடு வித்தவா
நைய வையகத் துடைய விச்சையே”
(திருச்சதகம் 95)என்றருளினார்.
பிண்டமாகிய உடலில் இருந்துகொண்டு அதனை இயக்கும் உயிர்போல, உயிரின் உள்ளிருக்கும் தகராகாசமாகிய ஞானாகசத்தில் சிவம் இவ்விருவகை நடனங்களையும் இயற்றுகிறது; ஊன நடனத்தால் உலகபோகங்களை ஊட்டிப் பக்குவம் வரச் செய்கிறது; ஞான நடனத்தால் சிவானந்தமாகிய சிவபோகத்தை அருளுகின்றது. இதனை, “உய்யவென் னுள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா”, என்றும், “மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க” என்றும் மணிவாசகர் மொழிந்தருளினார்.
ஆணவ இருளினால் மறைப்புண்டு கிடப்பாருடைய கண்கள் ஞானாகாச வியாபகத்தில் வியாப்பியமாகக் கலந்திருந்தும் இந்தத் திருக்கூத்தினைக் காணும் தகைமை உடையன அல்ல. பலபிறவிகளிலும் ஈட்டிய சிவபுண்ணியப் பயனால் சிவகுருவின் அருள் கிடைத்து ஆணவ இருள் நீங்கப் பெற்றவரே இந்நடனத்தைக் காணும் பேறு பெறுவர். ஞான நடனக் காட்சியால் விளைவது அந்தமிலா ஆனந்தமாகிய சிவபோகம்.சிவசத்தியால் மலவாசனை நீங்கப்பெற்ற ஆன்மா இச்சிவபோகத்தை ஞானசத்தியால் அனுபவிக்கும். இவ்வனுபவத்தைத் தெய்வச் சேக்கிழார், “உணர்வின் நேர்பெற வருஞ்சிவபோகம்” என்றார். இந்தப் போகம் ஐம்புலன்களின் வழி நுகரப்படும் ‘சுவை ஒளி ஊறு நாற்றம் ஓசை’ போன்றதொன்றன்று. ஞானம் அல்லது அறிவால் அனுபவிக்கப்படுவது.
அதனால், நம் அருணகிரி மாமுனிவரும், “ அறிய அறிய அறியாத அடகள் அறிய அடியேனும், அறிவுள் அறியும் அறிவூர அருள்வாயே” (உத்தரமேரூர்)”பசுபா சமும்விட் டறிவா லறியப் படுபூ ரணநிட் களமான பதிபா வனையுற் றநுபூ தியிலப் படியே யடைவித் தருள்வாயே”(கருவூர்)“எப்பொருளுமாய அறிவையறி பவரறியும் இன்பந்தனை”(பொது) “அறிவும் அறியாமையும் கடந்த அறிவுதிரு மேனி” பொது) எனப்பல திருப்புகழ் மறையில் எடுத்தோதியமை காண்க.‘உணர்வின் நேர்பெற வருஞ் சிவபோகத்தை” , “ஊனடைந்த உடம்பின் பிறவியே தானடைந்த உறுதியைச்”சேருமாறு ஐம்பொறிகளாலும் அடையப் பெற்றவர்கள் நம் சைவசமயாச்சாரியர்களாகிய நால்வர். அவர்களுக்கும் முன்னதாக அருளப்பெற்றவர்கள் பதஞ்சலி முனிவர் வியாக்கிரபாத முனிவர் ஆகிய இருவருமாவர்.
பதஞ்சலி முனிவர் ஆதிசேடனின் அவதாரமாகப் பூவுலகில் முனிவராகத் தோன்றியவர். அத்திரி முனிவரும் அவருடைய பத்தினியார் அநசூயா தேவியாரும் மகப்பேறு விரும்பித் தவம் முயன்றனர். எம்பெருமானை வணங்கிக் கொண்டிருந்த அநசூயாதேவியின் கரங்களில் இறைவனின் அருளால் ஆதிசேடன் சிறுநாகப் பாம்பின் குட்டியாகத் தோன்றினான். அச்சமடைந்த அநசூயாதேவி கையைஉதறினாள். பாம்புக்குட்டி அவளுடைய பாதங்களில் வீழ்ந்தது. அதனால் பதஞ்சலி என்று பெயர் பெற்று மனித உடலும் பாம்பின் வாலும் பெற்று வளர்ந்தது.யோக சூத்திரம் செய்த பதஞ்சலி இம் முனிவரின் வேறாவர் என்பது அறிதல் வேண்டும்.
பதஞ்சலி முனிவரும் மத்தியந்த முனிவர் மைந்தரான வியாக்கிரபாத முனிவரும் தில்லையில் இறைவனை நோக்கித் தவம் செய்தனர். இருவரும் செய்த தவம் சைவநெறிப்படிச் சரியை கிரியை யோகம் ஞானம் என்பனவே.இருவரும் தில்லைவனத்தில் தவம் செய்யும் நாட்களில் விடியும் முன்னெழுந்து வைகறைப்போதில் மரங்களின் மீதேறி மலர் பறிப்பர். பதஞ்சலி முனிவர் பாம்புடலினராதலின் மரக்கொம்புகளைச் சுற்றிப் படர்ந்து மேலேறுவர்.மந்தியந்த முனிவரின் மைந்தர், மரங்களின் மீதேறிக் கோட்டுப் பூக்களைப் பறிக்கும்போது பனியீரத்தால் வழுவாதிருக்கும் பொருட்டுப் புலியின் கால்கலையும் மையிருளில் வண்டு புழு அரிக்காத மலர்களைக் காணக் கைவிரல் நுனிகளில் கண்களையும் இறைவனிடம் வேண்டிப் பெற்றார். புலியின் கால்களை வேண்டிப் பெற்றமையால் புலிக்கால் முனி எனப்பட்டார். இவர் வழிபட்ட்தால் தில்லை ‘புலியூர்’ எனப்பட்டது. புலிக்கு வடமொழியில் வியாக்ரம் எனப் பெயர். எனவே, இவர் விய்ரபாத முனிவர் எனப்பட்டார்.
முனிவர் இருவரும் ஆற்றிய தவவழிபாட்டினை ஏற்று மகிழ்ந்த எம்பிரான்,” இங்குக் கொள வேறேதும் உண்டோ” என வினவினான்.திருக்கூத்துக் கண்ட முனிவர் இருவருக்கும் இத்தரிசனத்திற்கு மேல் வேண்டுவதொன்றுமில்லை. ஆயினும், நிலவுலகில் ஆன்மாக்கள் படுகின்ற துயரினை நீக்கக் கருணையுள்ளம் கொண்டு, பெருமானே! மின்னல் போலும் வாழ்க்கையையுடைய ஆன்மாக்கள் கண்களினால் தரிசிக்கும்தோறும் நிறைந்த ஞானவொளியாகிய இச்சபையிலே, அன்பையுடைய துணைவியாகிய உமாதேவியுடனே, இன்று முதல் எக்காலமும் ஆனந்த நடனம் அருளத் திருவுளம் இரங்க வேண்டும்” என வேண்டிக் கொண்டனர். தேவர்கள் தேவனாகிய மகாதேவன் திருவருளும் அங்கு அவ்வண்ணமே செய்ய இரங்கியது.
யான் எனது என்னும் வஞ்சத் தலைமையினையுடைய ஆன்மாக்கள் படுந் துன்பத்தினை எண்ணீ, முனிவரிருவரும் கருணையினால் வேண்ட இன்றும் நிகழ்வதுவே தில்லை மன்றுள் நிக்ழும் எம்பிரானின் திருக்கூத்து.தில்லை வனத்துள் எம்பிரான் ஆடிய மேடை அம்பலம் அல்லது மன்றம் எனப்படும். அம்பரம்- ஆகாசம்.ரகரவொற்று இங்கு லகரவொற்றாகத் திரிந்து, அம்பரம் அம்பலம் ஆயிற்று. இது வெட்டவெளி. மன்று என்பது கூத்தாடும் மேடை. இது எவ்விடத்துள்ளாரும் கூத்தினைக் கண்டின்புறுமாறு உயரமான, நாற்றிசையும் திறந்த வெளி. இவ்வெளி காலப்போக்கில் மூன்று திசைகள் அடைக்கப்பட்டுளதாயிற்று.நெல்லுக்குப் பாயும் நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசிவது போலவும், நல்லார் ஒருவருளரேல் அவர் பொருட்டுப் பெய்யும் மழை எல்லாருக்கும் பயன்படுவது போலவும் இவ்விருவருக்கும் வெளிப்பட்ட திருக்கூத்து மையல் வாழ்வில் உழலும் நமக்கும் கிடைத்தது.
இருமுனிவரும் செய்தருளிய உபகாரங்கள் பல. தனக்கெனத் திருமேனியில்லாத பரம்பொருளைத் தன் கருணையையே திருவுருவாக, அத் திருமேனி கொண்டு ஆடலைக் கண்டவர்க்கெல்லாம் முத்தி கிடைக்க அருள் செய்தனர். தேவர் முதலிய நம்மினும் பெரியர் யாராலும் செய்விக்க முடியாத பெருமானின் திருக்கூத்தை நம்பொருட்டு மண்ணின்மேல் தில்லையில் நிகழச் செய்தனர். அதனால் கயிலைமலையைக் காட்டிலும் தில்லை வனத்தை உயரச் செய்தனர். தில்லைத் திருக்கோவில் வழிபாட்டுப் பூசாவிதி, நித்திய நைமித்திய காமிய உற்சவ விதிகளைப் பதஞ்சலி பத்ததி எனும் நூலாக உதவினர். உலகில் உள்ள சிவாலயங்களிலெல்லாம் பொருந்தி உயிர்களுக்கு அருள்செய்யும் சிவகலைகள் அனைத்தும் அர்த்தசாம பூசையின்போது தில்லையில் வந்து குவியும்படி செய்தனர். தில்லையில் அர்த்தசாமபூசையை வாழ்வில் ஒருமுறையேனும் கண்டு அனுபவிக்க வேண்டும்.




சனி, 4 ஜூலை, 2015

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் திருப்பதி பெருமாளை ஸ்வாமி தரிசனம் செய்தார்.






சம்பவம்-ஒன்று)
ஒரு பெண் குழந்தை.ஐந்து வயது இருக்கும்.அந்த குழந்தை 25 பைசா காசு வைத்திருந்தது.சிறிது நேரத்தில் பைசா காணவில்லை.எல்லா இடமும் தேடியும் கிடைக்கவில்லை.அந்த குழந்தை வாயில் முழுங்கி விட்டது என்று எல்லோரும் அழுதார்கள்.என்ன செய்வது என்று தெரியவில்லை.ஸ்ரீ மகா பெரியவா சிரித்துக் கொண்டார்.பின் அவர்களிடம் இந்த பெண் குழந்தையை வேறு இடத்திற்கு கூட்டிச் சென்று எல்லா உடைகளையும் உதறி பாருங்கள் என்று அந்த குழந்தையின்
அம்மாவிடம் சொன்னார்.அதன்படியே செய்ததில் குழந்தையின் பாவாடை வழியாக குழந்தையின் இடுப்பில் அந்தக் காசு ஒட்டிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.
(சம்பவம்-இரண்டு)
ஒரு லம்பாடி கூட்டம்.அதில் ஒரு மாது மிகவும் குண்டாக இருந்தார்.ஒரு நான்கு பேர் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து ஸ்ரீ மகா பெரியவாளிடம் இவளை பாம்பு கடித்து விட்டது என்றனர்.ஸ்ரீ மகா பெரியவா,"நீ பாம்பை பார்த்தாயா?" என்றார்.இல்லை.பாம்புதான் கடித்தது என்றனர்.'சரி கொஞ்சம் சர்க்கரை,அரப்பு,தேன் கொண்டு வா" என்றார்.சர்க்கரையை அவள் வாயில் போடு"என்றார்.'எப்படி இருக்கு'என்றார். 'தித்திப்பாக இருக்கு என்றாள்.'அரப்பை (சீயக்காய் பொடி)போடு என்றார். 'இப்ப எப்படி இருக்கு' என்றார்.அந்த மாது கசக்கிறது என்றாள்."சரி போ பாம்பு கடியில்லை" என்றார்.
"பாம்பு கடி என்றால் அரப்பும் தித்திக்கும்" என்றார்.

நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்
* நாம் எப்படியோ பூமியில் பிறந்து விட்டோம்.நமக்குள் அழுக்கை (பாவங்களை)ஏற்றிக் கொள்ள இடம் கொடுத்து விட்டோம்.இனியாவது அழுக்கை போக்குவதற்காக பயன்படுத்தி கொள்வோம்.
* வாக்கு மனம் உடல் என மூன்றாலும் பாவம் செய்து இருக்கிறோம்.அவற்றைக் கொண்ட அந்தப் பாவத்தைப் புண்ணியத்தில் கரைத்து விட முயற்சிக்க வேண்டும்.
* நாம் இந்த உலகை விட்டு ஒருநாள் போக வேண்டியது உறுதி. அதற்குள் பாவமூட்டையைத் தொலைத்து விட்டால் போதும் ஆனந்தம் கிடைத்து விடும்.
* வெளியுலகப் பொருட்களால் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது என்று நினைப்பது அறியாமை.மகிழ்ச்சியோ நிம்மதியோ அவரவர் மனதைப் பொறுத்த விஷயங்களே.
* காஞ்சி மஹா பெரியவா

எல்லாம் நமக்காகவே!
卐 தர்மம் செய்ய எண்ணம் வந்து விட்டால் நினைத்தவுடன் செய்து விட வேண்டும்.இல்லாவிட்டால் மனம் மாறி விடும்.
卐 பணத்தை தேடுவது மட்டுமே வாழ்க்கைஅல்ல.தினமும் கொஞ்சம் நேரமாவது கடவுளைப் பற்றி சிந்திக்கவும் வேண்டும்.
卐 நமக்கு இரண்டு கைகள் இருக்கின்றன.இதில் ஒரு கையால் கடவுளின் திருவடியையும் மற்றொரு கையால் உலக விஷயத்தையும் பிடியுங்கள்.
卐 கடவுள் மீது பக்தி செலுத்துவதால் கடவுளுக்கு எந்த வித ஆதாயமும் இல்லை.எல்லாம் நமக்காகத் தான் என்பதை உணர்ந்து வழிபாடு செய்யுங்கள்.
卐 காஞ்சி மஹா பெரியவா



வரதட்சணை
கிருதயுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என யுகங்கள் நான்கு வகைப்படும்.இந்த நான்கு யுகங்களிலும் யுகத்திற்கு ஏற்றவாறு செய்யவேண்டிய தர்மங்களை நமது இந்து மத நூல்கள் கூறிகின்றன.இந்த நான்கு யுகங்களிலும் மனிதர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய விஷயங்கள் அநேகமாக ஒன்றாகத்தான் இருக்கும்.ஆனால் சில விஷயங்களில் சில மாறுதல் இருக்கும்.
மனிதர்களுக்கு பிரம்மச்சரியம் கிருஹஸ்தம் வானப்பிரஸ்தம் சன்யாசம் என நான்கு ஆஸ்ரமங்கள் உண்டு.இதில் கலி தவிர மற்ற மூன்று யுகங்களிலும் பிரம்மச்சரியத்துடனேயே தன் வாழ்நாள் பூராவும் இருக்கலாமென்று மதநூல்கள் கூறுகின்றன.இது ஆண்களுக்கான விதி.
பெண்களுக்கோவெனில் கன்னிகா சுமங்கலி விதவா என்று மூன்று நிலை மாத்திரமே.இந்த மூன்று நிலையில் கன்னிகா நிலையிலேயே ஒரு மாது தன் வாழ்நாள் முழுவதும் இருக்கக் கூடாது என்பது நியதி.சீக்காளியாகவோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ கல்யாணம் நடப்பது அரிது என்று தெரிந்தால் அது சமயம் சாளிக்கிராமத்தை வைத்து அதற்குக் கல்யாணத்திற்குச் செய்யவேண்டிய அத்தனை சடங்குகளையும் செய்து அந்த சாளிக்கிராமத்திலுள்ள பகவானையே பர்த்தாவாக கணவனாக கொண்டு பூஜித்து வழிபட்டு தன் காரியங்களையும் செய்து கொண்டே சுமங்கலி நிலையில் அவள் வாழ வேண்டும்.இரண்டாவதாக வாழை மரத்திற்கு எல்லா வைதீக கல்யாண சடங்குகளையும் செய்து பிறகு அந்த வாழை மரத்தை வெட்டி விட வேண்டும்.இது விதவா நிலையைக் குறிக்கும்.
அன்று முதல் விதவா நிலையை அடைந்து விதவா தர்மத்தைக் கடைபிடித்து வாழவேண்டும்.இந்த இரண்டையும் தவிர கன்னிகா நிலையிலேயே வாழ்ந்ததாக வரலாறும் கிடையாது.எந்த நூலிலும் சொல்லப்படவில்லை.
தற்காலத்தில் பலர் வரதட்சணைக் கஷ்டத்தினாலோ அல்லது குடும்பத்தைப் பராமரிப்புச் செய்யவேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட நிலையினாலோ அல்லது சந்தோஷமாக உல்லாசமாக சுதந்திரமாக இருக்கவேண்டுமென்ற எண்ணத்தாலோ கல்யாணமே செய்து கொள்ளாமல் வாழ்கிறார்கள்.
வரதட்சணை என்பது உண்டு.ஆனால் வரனுக்கு மாப்பிள்ளைக்கு தட்சணை கொடுப்பது என்பதல்ல!.வரன் புருஷன் பெண்ணை தானமாகப் பெறுகிறான்.அந்த தானத்திற்குப் பிரதிபலனாக புருஷன் பெண்ணுக்குக் கொடுப்பது என்ற பழக்கம் உண்டு.அதை வைத்துத்தான் வரன் கொடுக்கும் தட்சணை வரதட்சணை என்றாயிற்று.ஆனால் அது மாறி, இன்று வரனுக்குக் கொடுக்கும் தட்சணை வரதட்சணை என்று நடை முறையில் வந்துவிட்டது.
அதே போல் கன்னிகாதானம் என்பதனால் கன்னிகையை தானம் செய்யும்பொழுது சக்திக்கு ஏற்றவாறு பெண்ணை நன்றாக அலங்கரித்து தட்சணையுடன் கூட தானம் அளிப்பது வழக்கம்.இதெல்லாம் வெறும் வழக்கங்களே தவிர வரதட்சணை என்பதற்கு சாஸ்திரங்களில் ஆதாரம் ஒன்றும் கிடையாது.
அதே போல் ஜானுவாசம் என்று சொல்லக் கூடிய மாப்பிள்ளை அழைப்பு ஒன்று. அதாவது கல்யாணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை முதலியவர்களை வரவழைப்பது என்பது மரபு.ஆனால் இப்பொழுது போல் மாப்பிள்ளைக்கு புதிய உடை ஊர்வலம் கச்சேரிகள் எல்லாம் பழக்கத்தை ஒட்டியும் பொருளாதாரத்தை ஒட்டியும் வளர்ந்ததே.
கல்யாணம் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொண்டது.அதற்கும் பெரிய பெரிய கல்யாண மண்டபங்கள் தேவையல்ல.வீட்டிலேயே அதைச் செய்து விடலாம்.நண்பர்களுக்கு பந்து வர்க்கத்தினருக்குத் தெரிவிக்க வேண்டி மாலையில் ஏதோ ஓர் இடத்தில் வரவேற்பு வைத்துக் கொண்டு விடலாம். மாப்பிள்ளை அழைப்புச் செலவு கல்யாணச்செலவு இவைகளை கணிசமாக குறைத்துக் கொண்டு சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.இதில் பெண்கள் தான் முக்கிய பங்கு எடுத்து நடத்த வேண்டும். நடத்தவும் முடியும்.
அதாவது தங்கள் கல்யாண காலத்திலே 'தங்கள் தகப்பனார் என்ன கஷ்டத்துக்கு உள்ளானார்.எவ்வளவு பணச் செலவு செய்தார்.அதனால் கண்ட பலன் என்ன? என்பதை எல்லாம் சிந்தித்து தங்கள் பிள்ளைகளின் கல்யாணங்களை இவ்விதம் நடத்தவேண்டும்.அதே நேரம் பெண்களுக்கு கல்யாணம் என்று வரும்போது முடிந்த அளவு பொருளாதார சௌகரியம் செய்து கொடுத்து கல்யாணத்தை கட்டாயம் முடித்து விட வேண்டும்.
ஆகவே பெண்கள் கல்யாணத்தைத் தாமதப்படுத்தாமல் பையன்களை மேற்சொன்ன முறையில் தயாரிக்க வேண்டும்.இதன் பொறுப்பு பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருடைய கையிலும் இருக்கிறது.பெண்கள் கண்ணீர்விடுவது நாட்டிற்கு நல்லதல்ல.ஆகவே எந்த ஒரு காரியத்திலும் பெண்கள் மனம் கலங்கும்படி கண் கலங்கும்படி வாழக் கூடாது.சமுதாயம் அப்படி வாழ விடவும் கூடாது.



ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள் ..
இந்த ஸ்லோகத்தை அவரவர் நட்சத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.
ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்
1. அஸ்வினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய
2. பரணி
கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய
3. கிருத்திகை
இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய
4. ரோஹிணி
ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய
5. ம்ருகசீர்ஷம்
வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய
6. திருவாதிரை
ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய
7. புனர்பூசம்
காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய
8. பூசம்
ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய
9. ஆயில்யம்
யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய
10. மகம்
தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய
11. பூரம்
ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய
12. உத்திரம்
தீனமான வாளி காம தேனவே நம: சிவாய
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய
13. ஹஸ்தம்
ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய
14. சித்திரை
ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய
15. ஸ்வாதி
ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய
16. விசாகம்
பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய
17. அனுஷம்
மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய
18. கேட்டை
ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய
19. மூலம்
திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய
20. பூராடம்
அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய
21. உத்தராடம்
கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய
22. திருவோணம்
விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய
23. அவிட்டம்
அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய
24. சதயம்
ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய
25. பூரட்டாதி
புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய
26. உத்தரட்டாதி
அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய
27. ரேவதி
சூலினே நமோ நம:
கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

குருசாமி அம்மையார் {கண்டமங்கலம்}
நாம் வணங்கும் தெய்வங்களில் ஆண் தெய்வமும் உண்டு பெண் தெய்வமும் உண்டு.அதுபோல் சித்த புருஷர்களிலும் பெண் மகான்கள் இருந்துள்ளனர். ஆன்மிகத்திலும் தொண்டுள்ளத்திலும் இவர்கள் சிறந்து விளங்கி பக்தி நெறி தழைக்க அரும் பாடுபட்டுள்ளனர். ஔவையார் காரைக்கால் அம்மையார் மங்கையர்க்கரசியார் என்று நம் தமிழகத்தில் எத்தனையோ பெண் அருளாளர்கள் இருந்துள்ளனர்.இறை பக்தியின் மேன்மையை இவர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.இறை தரிசனத்தையும் பெற்றிருக்கிறார்கள். புதுவை(பாண்டிச்சேரி)மாநிலத்தில் ஒரு பெண் சித்தர் ஜீவ சமாதி கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இன்னருள் புரிந்து வருகிறார்.புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்டமங்கலத்தில் இந்த அம்மையாரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.கண்டமங்கலத்தில் பிரதான சாலையிலேயே உள்ள சமரச சுத்த சன்மார்க்க நிலைய வளாகத்தில் இந்த சமாதி திருக்கோயில் இருக்கிறது. பிரதான சாலையை ஒட்டி இது அமைந்திருந்தாலும் ஜீவ சமாதி அமைந்திருக்கும் இடம் மரங்கள் சூழ.. இயற்கை எழிலோடு விளங்கிறது.
புதுவை மக்களுக்கும் எண்ணற்ற வெளியூர் பக்தர்களுக்கும் அருள் பாலித்து வாழ்ந்து வந்த இந்தப் பெண் சித்தரின் திருநாமம் ஸ்ரீகுருசாமி அம்மையார்!இந்த வழியே பயணப்படும் ஏரளாமான பக்தர்கள் சமாதித் திருக்கோயிலைத் தரிசித்துப் பலன் பெற்று வருகிறார்கள். 1890-ல் இருந்து 1895 வரை இந்தப் பகுதியில் குருசாமி அம்மையார் வசித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
எங்கே இருக்கிறது கண்டமங்கலம்?
விழுப்புரம் பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில்(என்.எச்-45ஏ)வருகிற ஒரு பேருந்து நிறுத்தம் அரியூர் மெயின் கேட்.இங்கு இறங்கிக்கொண்டால் இரண்டே நிமிட நடை தூரத்தில் குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதியை அடைந்து விடலாம்.பிரதான சாலையிலேயே இருப்பதால் கண்டுபிடிப்பதிலும் போக்குவரத்திலும் எந்தச் சிரமமும் இருக்காது.
விழுப்புரத்துக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் இருக்கிறது.அரியூர் அதாவது விழுப்புரத்தில் இருந்து 23 கி.மீ. தொலைவு பாண்டியில் இருந்த 17 கி.மீ. தொலைவு சமாதி அமைந்துள்ள இடத்தில் பாதி விழுப்புரம் மாவட்டத்திலும் மறு பாதி புதுவை மாநிலத்திலும் இருக்கிறது. கண்டமங்கலம் என்பது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கிறது.அரியூர் என்பது புதுவை மாநிலத்தில் அமைந்துள்ளது.இதனால்தான் இந்த ஜீவ சமாதி அமைந்துள்ள பகுதியை கண்டமங்கலம் அரியூர் என்றே வழங்கி வருகிறார்கள். குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி சுதந்திர காலத்துக்கு முன் அதாவது 1947-க்கு முன் முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்ததாம். மேலே சொன்னபடி இரண்டு மாநிலத்துக்கும் இது எல்லையாக அமைந்தமையால் இந்த ஜீவ சமாதி அமைந்துள்ள இடத்துக்கு அருகே புதுவை எல்லையில் பிரெஞ்சுப் படையும் தமிழக எல்லையில் பிரிட்டிஷ் படையும் தன் வீரர்களை நிறுத்திக் காவல் காத்து வந்ததாம்.எனவே இரண்டு படைகளும் நிரந்தர முகாமிட்டிருக்கும் இடத்துக்கு அருகே உள்ள குருசாமி அம்மையார் ஜீவ சமாதி எவருக்கும் புலப்படவில்லை. இந்தப் பகுதி வழயாகப் பயணிப்போர் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று இங்கே அமர்ந்தாலும் அவர்களை விரட்டிவிடுவார்கள் இரண்டு படையினரும்.காரணம் போராட்டக்காரர்களாக இருக்குமோ என்கிற சந்தேகத்தில் எவரையும் இதன் அருகே நெருங்கவிட மாட்டார்களாம்.
தமிழகப் பகுதிக்கு ஒரு வழியாக சுதந்திரம் கிடைத்த பின்னும் பிரெஞ்சுக் குடியரசின் ஒரு பகுதியாகவே புதுவைப் பிரதேசம் தொடர்ந்து வந்தது.எனவே குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதியை நிம்மிதியாகத் தரிசிக்க வரும் பக்தர்களை பிரெஞ்சப் படைகள் சந்தேகக் கண் கொண்டே பார்க்க ஆரம்பித்தது.எங்கே தமிழகம் மாதிரி தங்களது கட்டுப்பாட்டில் உள்ள புதுவைப் பிரதேசத்திலும் ஏதேனும் கலகம் விளைவித்து விடுவார்களோ என்று பிரெஞ்சுப்படை பயந்தது.காலம் உருண்டோட...எல்லாப் படைகளும் தொலைந்தொழிக்க பின்னர்தான் இந்த ஜீவ சமாதி ஒரு வெளிச்சத்துக்கு வந்தது என்று சொல்லலாம்.
குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி இங்கே எப்படி அமைந்தது என்பதைப் பார்ப்பதற்கு முன்.இந்தப் அம்மையாரைப் பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம். வட நாட்டில் இருந்து இங்கே வந்தவர் குருசாமி அம்மையார் என்பது ஒரு செய்தி.கால்நடை யாகப் பல பகுதிகளுக்கும் சென்ற இவர்.கடைசியாக வந்து அமர்ந்து இந்த கண்டமங்கலத்தில் தான்.இந்த இடத்தின் சூழலும் அமைதியும் அம்மையாருக்குப் பிடித்துப் போக...இங்கே மரத்தடியில் தங்கி தன் இருப்பிடமாக ஆக்கிகொண்டார்.சாப்பாடு என்பதைப் பற்றி கவலை கொள்ளாமல் எந்நேரமும் தியானத்திலேயே இருப்பாராம்.யாரோ ஒரு வட நாட்டுப் பெண் சாது தங்கள் ஊருக்கு வந்து தியானத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.என்பதை அறிந்த அக்கம்பக்கத்து ஊர்க்காரர்கள். அம்மையாரிடம் வந்து அருள் கேட்பார்களாம்.தங்களுக்குள்ள மனக் குறை வியாதி வீட்டில் நல்ல காரியம் நடைபெறுவதற்கு இருக்கும் தடைகள் போன்றவற்றை அம்மையாரிடம் கொட்டுவார்களாம்.அவர்களின் குறைகளை எல்லாம் புன்னகையுடன் கேட்டுக்கொண்டு ஆசி புரிந்து அனுப்பி வைப்பாராம்.அதன் பின் நிம்மதியுடன் வீடு திரும்புவார்கள் பக்தர்கள்.
குருசாமி அம்மையார் சாதாரணமானவரா...இறையருள் பெற்றவர் ஆயிற்றே! இவரிடம் வந்து ஆசி பெற்றுச் சென்றவர்கள் அடுத்த வந்த சில நாட்களிலே தங்கள் குறைகள் அகலப் பெற்றனர்.அதன் பின் அம்மையாருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இவரது இருப்பிடம் தேடி வந்து வணங்கிச் செல்வார்கள்.அப்படி வருபவர்களில் பொருள் வசதி படைத்த சிலர் அம்மையாரின் தியானமும் அருட் பணியும் தடைபடாமல் இருப்பதற்காக போதிய இட வசதியை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர்.இன்னும் சிலர் நில புலன்களையும் சில சொத்துகளையும் அம்மையார் பெயருக்கு எழுதிக் கொடுத்து சந்தோஷப்பட்டனர். வருமானத்தை வைத்துக்கொண்டு ஒரு பெண் சாது என்ன செய்வார்?தான் தங்கி இருக்கும் இடத்தில் தினமும் தண்ணீர் தானம் அன்னதானம் செய்ய ஆரம்பித்தார்.தன் இடத்துக்கு வரும் அனைவருக்கும் உணவிட்டு மகிழ்வாராம்.
சித்த புருஷர்கள் என்றால் அவர்களின் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருக்கும்தானே!அதுபோல் குருசாமி அம்மையாரிடம் ஒரு நடைமுறை இருந்து வந்தது.அதாவது ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் உடல் முழுக்க காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்தெடுத்த விழுதை பூசிக்கொண்டு சற்று நேரம் ஊறிய பிறகு அருகில் உள்ள கிணற்றில் இறங்கிக் குளிப்பது வழக்கமாம்.அம்மையாரின் சமாதிக்கு அருகில் அந்தப் புனிதக் கிணறு இன்று பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.
அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண் பக்தர்கள் சிலரே மிளாகயை அரைத்து அம்மையாரின் மேல் பூசிவிடுவார்களாம். இப்படி மிளகாயை அரைப்பது இந்த மடத்திலேயே செய்ய வேண்டுமாம். வீட்டில் இருந்து மிளகாயை அரைத்து எடுத்து வரக் கூடாது.இப்படி அரைத்துக் கொடுத்த பெண்களின் கைகளே ஜிவுஜிவுவென்று எரியும் என்று என் அம்மா கூறி இருக்கிறார்.அப்படி இருக்கும்போது இதை உடலில் பூசிக் கொண்டு சிரித்த முகத்துடன் அந்தப் பெண்களுக்கு ஆசி வழங்குவாராம் அம்மையார்.மிளகாய் அரைக்கும்போது பெண்கள் என்ன நினைத்துப் பிரார்த்தித்தாலும் கூடிய விரைவிலேயே அது நடந்துவிடும் என்று அம்மா கூறி இருக்கிறார் என்று சொல்லி மெய் சிலிக்கிறார் பாண்டிச்சேரியில் இன்று வசிக்கும் பெண்மணி ஒருவர்.
உடல் முழுக்க மிளகாய் அரைத்த விழுதுகள் அப்பி இருக்க...அதோடு அருகில் இருக்கும் கிணற்றில் இறங்கி விடுவாராம்.கிணற்றின் மேல் அவர் கால் வைப்பதுதான் தெரியுமாம்.அடுத்த கணம் கிணற்றுக்குள் இருப்பாராம்.எப்படி இறங்குவார் என்பது எவருக்குமே தெரியாதாம்.கிணற்றுக்குள் இருக்கும் அம்மையாரை எவரும் எட்டிப் பார்க்கக் கூடாதாம்.அப்படி ஒரு முறை எட்டிப் பார்த்த பெண்மணி அம்மையாரைப் பார்க்கவே முடியவில்லை.அவரது தலைமுடி கிணற்றில் நீர்ப் பரப்பு மேல் படர்ந்து இருந்தது.அவரைக் காணவில்லை என்று பய உணர்ச்சியுடன் சொல்லி இருக்கிறார்.
அதுபோல் குளித்து முடித்து எப்படி மேலே ஏறி வருகிறார் என்பதும் எவருக்கும் தெரியாது.தரைக்கு வந்தவுடன் அம்மையார் அப்படியும் இப்படியும் திரும்பும்போது அவரது ஈரமான தலைமுடியில் இருந்து சிதறும் நீர்த் துளிகள் பலர் மீதும் பட்டுத் தெறிக்கும். அந்த நீர்த் துளிகள் தங்கள் மேல் படாதா என்கிற ஆர்வத்துடன் பலரும் அம்மையாரை நெருங்கவார்களாம்.நீர்த் துளிகள் பட்டால் தங்கள் குடும்பம் சிறக்கும் என்பதற்காகப் பலரும் அருகே செல்வதற்குப் போட்டி போடுவார்களாம்.
இன்றும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் குருசாமி அம்மையாரின் மூலவர் விக்கிரகத்துக்கு மிளகாய் அரைத்து அபிஷேகம் செய்யும் வழிபாடு நடக்கிறது. இதற்காகப் பல பெண் பக்தர்களும் இங்கு வந்து ஆலய வளாகத்திலேயே மிளகாய் அரைத்துத் தருகிறார்கள்.ஏதாவது ஒரு பிரார்த்தனையை மனதில் வைத்துக்கொண்டு.அம்மையாரின் அபிஷேகத்துக்கு மிளகாய் அரைத்துக் கொடுத்தால் அது நிச்சியம் பலித்துவிடும் என்கிறார்கள்.மற்றபடி வியாழக்கிழமைகளில் பால் எலுமிச்சம்பழச் சாறு கொண்டு குருசாமி அம்மையாருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.அன்றைய தினத்தில் இந்த மடம் இன்று செயல்படுவதற்கு உறுதுணையாக இருந்து வரும் வள்ளலார் ஆன்மிகப் பேரவை அன்னதானக் குழுவினர் அன்னதானம் செய்கின்றனர்.
குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி, இங்கு இருக்கும் இடம் சில காலத்துக்கு வெளியுலகுக்குத் தெரியாமலே இருந்து வந்தது என்று சொல்லி இருந்தோம். காரணம்.செடி கொடிகளும் முட்புதர்களும் ஒரு கட்டத்தில் சமாதியை மூடிவிட்டிருந்தன.தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் பிறந்த நடராஜ சுவாமிகள் எனும் ஆன்மிக அடியாரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. இளம் வயதிலேயே துறவறம் பூண்ட நடராஜர் யாத்திரையாகப் புறப்பட்டு பல திருத்தலங்களைத் தரிசித்து வந்து கொண்டிருந்தார்.அப்படி வந்தவர் புதுவையை அடைந்து சித்தானந்த சுவாமி கோயிலில் தவத்தில் ஆழ்ந்தார்.அதுவரை நிரந்தரமாக எங்கும் தங்காமல் யாத்திரையாகப் பயணப்பட்டுக்கொண்டே இருந்த நடராஜரை ஓர் அசரீரிக் குரல் தடுத்தாட்கொண்டது.குருசாமி கோயிலுக்குப் போ...அங்கே உனக்குப் பணிகள் காத்திருக்கின்றன எனபதே அந்த அசரீரி.
இதன் பின் அவரது உள்ளுணர்வுக்குக் கிடைத்த குறிப்புகளைக் கொண்டு விழுப்புரம் சாலையில் பயணப்பட ஆரம்பித்தார்.அரியூர் பகுதி வந்ததும். ஏதோ ஒரு குறிப்பு கிடைக்க அங்கே புதர் மண்டிய ஓர் இடத்தில் அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தார்.ஆம்! அந்தப் புதருக்குள்தான் குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி புதையுண்டு கிடந்தது. தியானத்தின்போது நடராஜருக்கு குருசாமி அம்மையார் காட்சி கொடுத்து. நான் இங்கேதான் குடிகொண்டிருக்கிறேன்.என்று சொல்ல... சட்டென்று தியானம் கலைந்து எழுந்தார் நடராஜர் பரபரவென்று அந்த முள் புதரை அகற்றினார்.சமாதியைக் கண்டு பிடித்தார்.பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் படையினரின் எதிர்ப்பை எல்லாம் சமாளித்து அந்த ஜீவ சமாதிக்குப் புத்துயிர் தந்தார் நடராஜர்.
நடராஜரின் இந்த திருப்பணிகளுக்கு உள்ளூர்க்காரர்கள் சிலரும் உதவ முன்வந்தனர்.அதன் பின் குருசாமி அம்மையாரின் திருவுருவப் படத்தைப் பாதுகாத்து வரும் ஒரு அன்பரை மங்கலம்பேட்டையில் கண்டுபிடித்து, அதை வாங்கினார்.படத்தில் உள்ள உருவத்தைக் கொண்டு அம்மையாருக்கு ஒரு திருமேனி வடிக்கச் செய்தார்.அந்தத் திருமேனியே இன்று நாம் தரிசிப்பது! வழிபாட்டையும் அன்ன தானத்தையும் அந்த ஜீவ சமாதியில் துவங்கி வைத்தார். குருசாமி அம்மையாருக்கு செல்வந்தர்கள் கொடுத்த சொத்துகளைக் கஷ்டப்பட்டுக் கண்டறிந்து அவற்றைக் கொண்டு கல்வி உட்பட பல திருப்பணிகளைச் செய்தார் நடராஜர்.
1970-ஆம் ஆண்டு நடராஜ சுவாமிகளை மறைந்துவிடவே அவரின் சீடரான சீதாராம் என்பவர் இந்தப் பணிகளைத் தொடர்ந்து நடத்தினார்.இந்த இரு அருளாளர்களின் பெருமுயற்சியால்தான் குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி இன்று நம் தரிசிக்க கிடைத்திருக்கிறது. என்றே சொல்லலாம்.நடராஜ சுவாமிகள் சீதாராம் சுவாமிகள் ஆகிய இருவரின் சமாதிகளும் அம்மையாரின் சமாதி அமைந்துள்ள இடத்துக்கு அருகே அமைந்துள்ளன.புதுவை மாநிலத்தில் சமாதி கொண்ட இந்த குருசாமி அம்மையாரின் குருபூஜை தினம் சித்திரை மாத பௌர்ணமி தினத்தன்று அவருடைய எண்ணற்ற பக்தர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மையாரின் ஜீவ சமாதித் திருக்கோயிலைத் தரிசித்து அவரது அருள் பெற்று, வாழ்வில் வளம் பெருக்குவோம்!
தவம்:கண்டமங்கலம்-அரியூர்.
சிறப்பு:ஸ்ரீகுருசாமி அம்மையார் மடம்.
எங்கே இருக்கிறது:விழுப்புரம் பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.-45ஏ)வருகிற ஒரு பேருந்து நிறுத்தம்-அரியூர் மெயின் கேட் இங்கு இறங்கிக்கொண்டால் இரண்டே நிமிட நடை தூரம்.விழுப்புரத்துக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் இருக்கிறது.அரியூர் அதாவது விழுப்புரத்தில் இருந்து 23 கி.மீ. தொலைவில் பாண்டியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது.
எப்படி போவது:விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் அனைத்துப் பேருந்துகளும் அரியூர் மெயின் கேட் நிறுத்தம் அல்லது கண்டமங்கலம் காவல் நிலையத்தில் நின்று செல்லும்.இதில் ஏதாவது ஒரு நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்.பிரதான சாலை என்பதால் ஏராளமான பேருந்து வசதி உண்டு.தொடர்புக்கு:வள்ளலார் ஆன்மீகப் பேரவை அன்னதானக் குழு, கண்டமங்கலம்-அரியூர்.{மொபைல்: 9486623409, 9884816773.}
தர்மம் செய்யுங்கள்
♧ நல்ல செயல் எல்லாமே தர்மம் என்றாலும் பிறருக்கு விரும்பிச் செய்யும் ஈகையே மேலான தர்மம்.
♧ பலனை எதிர்பார்க்காமல் தர்மம் செய்தால் நம்மிடமுள்ள மன அழுக்கு நீங்கி பேரின்பம் கிடைக்கும்.
♧ தர்மத்தை தமிழில் "அறம்' என்பார்கள்.அவ்வையாரும் அறம் செய்ய விரும்பு என்று உபதேசித்து உள்ளார்.
♧ பிறர் பொருளைத் திருடினால் தான் திருட்டு என்பதில்லை.மற்றவருக்கு உரியவற்றை அபகரிக்கும் எண்ணம் கூட மனதில் எழக் கூடாது.
♧ காஞ்சி மஹா பெரியவா

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்
1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள்.