ஞாயிறு, 15 மே, 2022

யஜுர்வேத த்ரிகால ஸந்தியா வந்தனம்.

யஜுர்வேத த்ரிகால ஸந்தியா வந்தனம்.


சந்தியா வந்தனம் - பிரம்மச்சாரிகள் 4 முழம் வேஷ்டி அணிந்து இடுப்பில் ஒரு துண்டு கட்டியும், கிருஹஸ்தர்கள் 8 (அ) 9 முழம் வேஷ்டி பஞ்ச கச்சம் உடன் அங்க வஸ்திரம் அணிந்தும் செய்வது நல்லது. காலையில், சூரிய உதயத்திற்குச் சிறிது முன்னரும், மதியம் சுமார் 11.30 to 12.30 அளவிலும்  மாலை சூரியன் அஸ்தமனத்திற்குச் சிறிது முன்பும் செய்ய வேண்டும்.
(1) ஆசமனம் : மந்திரம்:- அச்யுதாய நம:, அனந்தாய நம: ,கோவிந்தாய நம: கெஶவ , நாராயண, மாதவ,கோவிந்த, விஷ்ணோ, மதுஸூதன,  த்ரிவிக்ரம, வாமன ஸ்ரீதர,  ஹ்ரிஷீகேச , பத்மநாப, தாமோதர. (தரையில் கிழக்கு (அ) வடக்கு நோக்கி குந்தி உட்கார்ந்து செய்ய வேண்டும். மந்திரங்களினால், உள்ளங்கையில் ஓரிரு துளிகள் நீர் பருகுதல் - உள்ளும் புறமும் சுத்தி )
(செய்முறை: வலது உள்ளங்கையில் கட்டை விரல், சுண்டி விரல் இரண்டும் தவிர்த்து , நடு மூன்று விரல்களை ஒன்று சேர்த்தால் ஏற்படும் உள்ளங்கைக் குழியில் உத்தரிணியால் சிறிது தண்ணீர் ஊற்றிக்கொண்டு ,அச்யுதாய நம: , அனந்தாய நம: ,கோவிந்தாய நம: மூன்று முறை நீர் உட்கொள்க.  விரல்களின் பிரயோகம். கேஶவ , நாராயண - வலது கட்டை விரல் நுனியால், வலது இடது கன்னத்தைத் தொடவும். மாதவ, கோவிந்த - பவித்ர விரலால் வலது, இடது கண்கள்; விஷ்நோ, மதுஸூதன - ஆள் காட்டி விரல் - வலது, இடது நாசிகள், த்ரிவிக்ரம, வாமன : நடு விரல், வலது இடது காதுகள்:  ஸ்ரீதர, ஹ்ரிஷிகேஸ;நுனி விரல்- வலது, இடது தோள்கள் ;  பத்மநாப - கட்டை விரல் தவிர்த்து மற்ற 4 விரல்களால் நாபியைத் தொடவும்; தாமோதர. ஐந்து விரல்களாலும் சிரசைத் தொடவும்.
(2) கணபதி தியானம் : மந்திரம் :- ஶுக்லாம்பரதரம், விஷ்ணும், ஶஶி வர்ணம், சதுர் புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே. ( செய் முறை ) : இரண்டு கை முஷ்டிகளாலும் 5 முறை மெதுவாக, புருவங்களுக்கு மேல் சிரசில், குட்டிக் கொள்க. )
(3) பிராணாயாமம்: மந்திரம்:-
( செய்முறை  ) வலது கை, கட்டை விரல், மோதிர விரல் இரண்டை மட்டும் உபயோகிக்க. கட்டை விரலை வலது மூக்கின் நுனியில் மேதுவாக அழுத்தவும்; மோதிர விரல் இடது மூக்கின் நுனியைத் தொட்டுக் கொண்டு இருக்கட்டும், அழுத்த வேண்டாம். மூச்சுக் காற்றை மெதுவாக, இடது நாசி வழியாக உள்ளே இழுத்து சிறிது நிறுத்தி, மூக்கின் நுனியை மோதிர விரலால் லேஸாக மூடவும் ; வலது கட்டை விரலை சிறிது தளர்த்தி மூச்சுக் காற்றை வெளியே விடவும். இது போல 10 முறை பிராணாயாமம் ஒவ் வொரு வேளையிலும் செய்ய வேண்டும்.
(4)  ஸங்கல்பம் : மந்திரம் :- மமோபாத்த-ஸமஸ்த- துரித-க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஶ்வர - ப்ரீத்யர்தம் ( காலையில் ) ப்ராத: ஸந்த்யாம் உபாஸிஷ்யே ;  ( மத்யானம்) மாத்யாஹ்நிகம் கரிஷ்யே (மாலையில்) ஸாயம் ஸந்த்யாம் உபாஸிஷ்யே  ( செய் முறை=  என்ன செய்யப் போகிறேன் என்கிற பிரமாணம் - வலது துடைமீது இடது உள்ளங்கை கீழும், வலது கை அதன் மேலும் இருக்குமாறு வைத்துக்கொண்டு சொல்லவும் ).
5) மார்ஜனம் ( ப்ரோக்ஷண மந்திர ஸ்நானம் செய்தல் ). 1.ஆபோஹிஷ்டா மயோபுவ: (2.) தான ஊர்ஜே ததான (3)மஹே ரணாய சக்ஷஸே (4) யோவ: ஶிவதமோ ரஸ; (5) தஸ்ய பாஜயதே ஹந:(6) உஸதீரிவ மாதர:(7).தஸ்மா அரங்கமாமவ (8) யஸ்யக்ஷயாய ஜின்வத (9) ஆபோஜனயதா ச ந: (10) ஓம் பூர் புவ: ஸுவ: ( செய் முறை - ஆத்ம பரிஷேசனம் ஜலத்தினால் சிரசை ப்ரோக்ஷண ஸ்நானம்.செய்தல் ) பின்னர் ஓம் என ஜலத்தில் எழுதி புருவ மத்தியில் தொடவும்.
(6) ப்ராசனம் என்றால் என்ன? விளக்கம் - நாம் ஒவ்வொரு தினமும் அந்தந்த வேளை வரை செய்த பாவங்களுக்கு ஸூர்யன் , அக்னி , திக் தேவதைகளை கை கூப்பி வேண்டிக்கொண்டு ப்ராயச்சித்தம் செய்து கொள்ளுதல்.
மந்திரம்- (மூன்று வேளைக்கும் தனித் தனி மந்திரம் ) ப்ராத:(காலையில் ) ஸூர்யஶ் ச மா மன்யுஶ் சமன்யுபதயுஶ் ச மன்யுக்ருதேப்ய: I பாபேப்யோ ரக்ஷந்தாம் I யத்ராத்ர்யா பாப மகார்ஷம் I மநஸா வாசா ஹஸ்தாப்யாம் II பத்ப்யா முதரேண - ஶிஶ்னா I ராத்ரிர் ததவலம்பது I யத்கிஞ்ச துரிதம் மயி I இதமஹம் மாம்ருத-யோ நெள Iஸூர்யே ஜோதிஷி ஜூஹோமி ஸ்வாஹா II
மாத்யாஹ்நே - ஆப: புனந்து ப்ருதிவீம் ப்ருதிவீ பூதா புநாதுமாம் Iபுனந்து ப்ரஹ்மணஸ் பதிர் - ப்ரஹ்மபூதா புநாது மாம் I யதுச்சிஷ்டம - போஜ்யம்  யத்வாதுஶ்சரிதம் மம I ஸர்வம் புனந்து மாமாபோ ஸதாஞ்ச ப்ரதிக்ரஹ ஸ்வாஹா II
சாயங்காலே-- அக்னிஶ்ச மாமன்யுஶ்ச மன்யுபதயஶ்ச மன்யுக்ருதேப்ய: I பாபேப்யோ ரக்ஷந்தாம் I யதஹ்நா பாப ம கார்ஷம் மநஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யா - முதரேண ஶிஶ்னா I அஹஸ்த ததவலம்பது Iயத் கிஞ்ச துரிதம் மயி I இதமஹம் மா-மம்ருத-யோநெளா I சத்யே ஜோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா II ( வலது உள்ளங்கையில் சிறிது ஜலம் விட்டு உட்கொள்ளவும் )
(7) புனர் மார்ஜனம் : ( செய்முறை : முதலில் ஆசமனம் செய்து, பின்னர் மார்ஜனம் (இதை 3 வேளையும் செய்ய வேண்டும் ) அச்யுதாய நம: முதல்..... தாமோதர...வரை. ததிக்ராவண்ணோ அகாரிஷம் I ஜிஷ்ணோ ரஶ்வஸ்ய வாஜின: Iஸுரபி நோ முகா கரத் I ப்ரண ஆயிஷிஹும் தாரிஷத் II ஆபோ ஹிஷ்டா மயோ புவ: I தா ந ஊர்ஜே ததா தந I மாஹே ரணாய சக்ஷஸே I யோவ: ஶிவத மோரஸ: I தஸ்ய பாஜயதேஹ ந: I உஶதீரிவ மாதர:Iதஸ்மா அரம் கமாம வ: I யஸ்ய க்ஷயாய ஜின்வத ஆபோ ஜனயதா ச ந: I ஓம் பூர் புவஸ்ஸுவ:II ( பின்னர் ஆத்ம பரிசேஷணம் செய்துகொள்க )
(8) அர்க்ய-ப்ரதானம்: ஓம் பூர் புவ: ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்.  செய்முறை - காலையில்    கிழக்கு நோக்கி ( கட்டைவிரல் சேராமல் ) இரண்டு உள்ளங்கை நிறைய 8 விரல்கள் நுனி வழியாக 3 முறை அர்க்யம்  விடவும் , மதியம் வடக்கு
நோக்கி 2 முறையும், மாலையில் மேற்கு நோக்கி 3 முறையும் தரையிலோ,தாம்பாளத்திலோ விழுமாறு கைகளை மேலே தூக்கி நிறைய நீர் விடவும்.
(9) ப்ராயச்சித் தார்க்யம்:பிராணாயாமம் - ஓம் பூ: + பூர் புவஸ்ஸுவரோம் II அர்க்யம்: ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந: ப்ரசோதயாத் II ஓம் பூர்புவஸ்ஸுவ: ஆத்ம பரிசேஷணம். (சிரசில்)  +  ஒரு ஆத்ம ( தன்னைத்தானே) பிரதக்ஷிணம்.
(10) ஐக்யானு சந்தானம்: ( ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கியம் ஒற்றுமை ). மந்திரம் : அஸவாதித்யோப்ரஹ்ம Iப்ராஹ்மைவாஹமஸ்மி II
( த்யானம்.சூரியன் ப்ரம்மம் நானும் ப்ரம்மம் என ஜீவாத்மா பரமாத்மா ஒற்றுமையை இரு கைகளாலும் மார்ப்பைத் தொட்டுக் கொண்டு , கண்களையும் மூடிக்கொண்டு, ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கியத்தை ஒரிரு நிமிடம் மெளனமாகச் சிந்திக்கவும் ).
(11)தேவ தர்ப்பணம் - மந்திரம் :- ஆதித்யம் தர்ப்பயாமி, ஸோமம் தர்ப்பயாமி, அங்காரகம் தர்ப்பயாமி, புதம் தர்ப்பயாமி, ப்ருஹஸ்பதிம் தர்ப்பயாமி, ஶுக்ரம் தர்ப்பயாமி,சநைஶ் சரம் தர்ப்பயாமி,ராஹும் தர்ப்பயாமி, கேதும் தர்ப்பயாமி,கேஶவம் தர்ப்பயாமி, நாராயணம் தர்ப்பயாமி, மாதவம் தர்ப்பயாமி, கோவிந்தம் தர்ப்பயாமி, விஷ்ணும் தர்ப்பயாமி, மதுஸூதானம் தர்ப்பயாமி,த்ரிவிக்ரமம் தர்ப்பயாமி, வாமனம் தர்ப்பயாமி, ஸ்ரீதரம் தர்ப்பயாமி, ஹ்ருஷீ கேஶம் தர்ப்பயாமி,பத்மநாபம் தர்ப்பயாமி, தாமோதரம் தர்ப்பயாமி.
பிறகு ஆசமனம் செய்யவும் ) செய்முறை -  குந்தி உட்கார்ந்து கொண்டு மேலே அர்க்கியத்திர்க்குக் கூறியபடி கட்டை விரல் சேராமல் ஒவ்வொரு தேவர்களுக்கும் ஒரு முறை ( ஜலம் ) - அர்க்யம்  விடவும் )
பூர்வ பாகம் முடிந்தது.
உத்தர பாகம் : (12) காயத்ரி ஜெப சங்கல்பம். மந்திரம்  ஶுக்லாம்பரதரம், விஷ்ணும், ஶஶி வர்ணம், சதுர் புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே II ஓம் பூ: ஓம் புவ: ஓகும் சுவ: ஓம் மஹ: ஓம் ஜன:  ஓம் தப: ஒகும் சத்யம். ஓம் தத் ஸ விதுர் வரேண்யம் பர்கோ தீமஸ்ய தீமஹி  தியோயோன: ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம் II மமோ பாத்த- சமஸ்த - துரிதக்ஷய -த்வாரா- ஸ்ரீ பரமேஶ் வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: ஸந்த்யா- காயத்ரீ - மஹா மந்த்ர ஜெபம் கரிஷ்யே; மாத்யாஹ்நிக காயத்ரீ - மஹா மந்த்ர ஜெபம் கரிஷ்யே; ஸாயம் ஸந்த்யா காயத்ரீ-மஹா மந்த்ர ஜெபம் கரிஷ்யே .(கிழக்கு, வடக்கு, மேற்கு)
(13) (13)(1) ப்ரணவந்யாஸ: மந்திரம் :-  ப்ரணவஸ்ய ரிஷி: ப்ரஹ்மா தேவி காயத்ரி சந்த: பரமாத்மா தேவதா IIபூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி, ப்ருகு, குத்ஸ, வஸிஷ்ட, கெளதம, காஶ்யப, ஆங்கீரஸ ருஷய: II காயத்ரீ-  உஷ்ணிக - அனுஷ்ட்டுப் - ப்ருஹதீ - பங்தீ - த்ருஷ்டுப் - ஜகத்யஶ்- சந்தாம்ஸி II அக்னி - வாயு - அர்க்க- வாகீஶ- வருண- இந்த்ர - விஶ்வே - தேவா - தேவதா: II
( செய்முறை. ரிஷியை சிரசிலும், சந்தஸ்ஸை நாவிலும், தேவதையை இருதயத்திலும் தியானம் செய்ய வேண்டும். ரிஷி என்று சிரசையும், சந்த: என்று உதட்டையும்; தேவதா என்று மார்பையும் தொடவேண்டும். பின்னர் மூன்று பிராணாயாமம் செய்துவிட்டு, முடிவில் வலது காதைத் தொடவும் )
(13)(2)ப்ராணாயாமம் : ஓம் பூ:I ஓம் புவ: I ஓஹும் ஸுவ:I ஓம் மஹ: I ஓம் ஜன:I ஓம் தப: I ஒஹும் சத்யம் II ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி I தியோ யோந: ப்ரசோதயாத் I ஒமாபோ ஜ்யோதீரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுரோம் II ( ஒம் காரமே அனைத்தும் என தியானித்தல் )
(14) காயத்ரீ ஆவாஹநம்: ஆயாத்வித்யனுவாகஸ்ய வாமதேவ ரிஷி: I அனுஷ்ட்டுப் சந்த: Iகாயத்ரீ தேவதா II ஆயாது வராதா தேவீ அக்ஷரம் ப்ர்ஹ்ம சம்மிதம் I காயத்ரீம் சந்தஸாம் மாதேத்வம் ப்ரஹ்ம ஜுஷஸ்வ ந:II
ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்ராஜோஸி தேவானாம் தாம நாமாஸி விஶ் வமஸி விஶ் வாயு: ஸர்வமஸி ஸர்வாயு: அபி‌பூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி ஸாவித்ரீம் ஆவாஹயாமி ஸரஸ்வதீம் ஆவாஹ்யாமி II
செய்முறை : இரு கை கட்டை விரல் நுனிகளால் பவித்ர விரல் அடிக்கணுவைத் தொட்டுக்கொண்டு மார்பைத் தொடவும் ( இது ஆவாஹனீ முத்திரை -  இருதய கமலத்தில் காயத்ரீ தேவி ப்ரஸன்னமாக வேண்டுமெனப் பிரார்தனை செய்தல் )  .
(15)காயத்ரீ ஜெபம் - ஓம் பூர்புவஸ்ஸுவ: I தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி I தியோ யோன: ப்ரசோதயாத் II ( 28 / 58 / 108). செய்முறை - காலையிலும்,நடுப்பகலிலும் கிழக்கு முகமாக நின்று கொண்டும், மாலையில் - மாலையில் மேற்கு முகமாக உட்கார்ந்து கொண்டும் ஜெபம் செய்ய வேண்டும். காலையில் முகத்திற்கு நேராகவும், பகலில் மார்புக்கு நேராகவும், மாலையில் நாபிக்கு நேராகவும் கைகளை தன்னை நோக்கி இருக்குமாறு ( வஸ்திரத்தால் உபவீதமாக போர்த்தி வைத்துக்கொண்டு செய்யவேண்டும். ஸூக்ஷுமம் - என்னவென்றால் ஜெபம் ஓசை எழாமல், உதடு அசையாமல் , மனதில் ஐந்து இடங்களில் நிலை நிறுத்தி செய்ய வேண்டும் :- ஓம் -- பூர்புவஸ்ஸுவ: -- தத்ஸ விதுர் வரேண்யம் -- பர்கோ தேவஸ்ய தீமஹி -- தியோ யோன: ப்ரசோதயாத் )
(16) காயத்ரீ உபஸ்தானம் = ( திரும்ப அனுப்புதல் ) - பிராணாயாமம். ப்ராதஸ் ஸந்தியா உபஸ்தானம் கரிஷ்யே Iஆதித்ய சந்தியா உபஸ்தானம் கரிஷ்யே I ஸாயம் உபஸ்தானம் கரிஷ்யே I உத்தமே ஶிகரே தேவீ பூம்யாம் பர்வத மூர்தனி ப்ராஹ்மணேப்யோ ஹ்யனுஜ் ஞானம் கச்ச தேவீ யதா ஸுகம் II ( செய் முறை :- ஜெபம் செய்த திக்கில் நின்ற நிலையில் தேவியை வணங்கி வழி அழ்னுப்புதல் )  (17) ஸூர்ய உபஸ்தானம் - ( மூன்று விதம் - காலை, நடுப் பகல், மாலை ) காலை - மித்ரஸ்ய சர்ஷணீ த்ருத: ஶ்ரவோ தேவஸ்ய ஸானஸிம் I ஸத்யம்     சித்ர ஶ்ரவஸ்தமம் II மித்ரோ ஜனான் யாதயதி ப்ரஜானன் மித்ரோ தாதார ப்ருதுவீ முதத்யாம் Iமித்ர: கிருஷ்டீ ரனிமிஷாபிசஷ்டே ஸத்யாய ஹவ்யம்
க்ருதவத் விதேம IIப்ர ஸ மித்ர மர்தோ அஸ்து ப்ரயஸ்வான் யஸ்த ஆதித்ய ஶிக்ஷதி வ்ரதேன I ந ஹன்ய தே ந ஜீயதே த்வாதோ நைனமங்ஹோ அஶ் நோத யந்திதோ ந தூராத் II
நடுப்பகலில் - ஆஸாத்யேன ரஜஸா வர்த்தமானோ நிவேஶயன் அம்ருதம் மர்த்யஞ்ச I ஹிரண்யயேன ஸவிதா ரதேனாss தேவா யாதி புவனா விபஶ்யன் II உத்வயம் தமஸஸ்பரி பஶ்யந்தோ ஜ்யோதி ருத்தரம் I தேவம் தேவத்ரா ஸுர்ய-மகண்ம ஜ்யோதி-ருத்தமம்I உதுத்யம் ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ: I த்ருஶேவிஶ்வாய ஸூர்யம் II சித்ரந் தேவானா-முதகா -தனீகம் சக்ஷுர் மித்ரஸ்ய வருணஸ் யாக்நே: I ஆ ப்ரா த்யாவா ப்ருதிவீ அந்தரிக்ஷகும் ஸூர்ய ஆத்மா ஜகதஸ் தஸ்துக்ஷஶ்ச IIதச்சக்ஷுர் - தேவ ஹிதம் புரஸ்தாச் சுக்ரமுச்சரத் II பஶ்யேம ஶரதஶ் ஶதம், நந்தாம ஶரதஶ் ஶதம், மோதாம ஶரதஶ் ஶதம், பவாம ஶரதஶ் ஶதஹும், ஶ்ருணுவாம ஶரதஶ் ஶதம், ப்ரபரவாம ஶரத: ஶத: மஜீதாஸ்யாம ஶரத: ஶதம் ஜ்யோக்ச ஸூர்யம் த்ருஶே I ய உதகான்-மஹதோர்ணவாத்-விப்ராஜமான: ஸரீரஸ்ய மத்யாத் ஸமா வ்ருஷபோ லோஹிதாக்ஷ: ஸூர்யோ விபச்சின் - மநஸா புனாது II ஸாயங்காலே- இமம்மே வருண ஶ்ருதீ ஹவ - மத்யா ச ம்ருடய I த்வாமஸ்யு - ராசகே II தத்-த்வா யாமி ப்ரஹ்மணா வந்தமானஸ் ததா ஶாஸ்தே யானஜாமனோ ஹவிர்ப்பிஹி: I அஹேடமானோ வருணேஹ போத்யுருஶஹும் ஸ மாந ஆயு: ப்ரமோஷீ: II யச்சித்திதே விஶோயதா ப்ரதேவ வருண வ்ரதம் I மினீமஸி த்யவி த்யவி II யத்கிஞ்சேதம் வருண தைவ்யே ஜனேபி-த்ரோஹம் மனுஷ்யாஶ் சராமஸி I அசித்தீ- யத்-தவ தர்ம யுயோபிம மா நஸ் தஸ்மா-தேனஸோ தேவ ரீரிஷ: II கிதவாஸோ யத்-ரிரிபுர்- ந தீவி யத்வாகா சத்ய- முதயன் ந வித்ம Iஸர்வாதா விஷ்ய சிதிரேவ தேவாதா தே ஸ்யாம வருண ப்ரியாஸ: II  ( ஶ் , ஶ ஶா, ஶி ,ஶீ, ஶு, ஶூ, ஶெ, ஶே, ஶை, ஶொ, ஶோ, ஶௌ.) (  இதை விட்டுவிடவும் )
 ( செய்முறை விளக்கம் - ஜெபம் செய்த திசையை, கை கூப்பி நோக்கி நின்ற நிலையில், சூரிய மண்டல நடுவில் இருக்கும் பரமாத்வாவை மேற்கூறிய மந்த்திர உச்சாடனத்தால் துதிக்க வேண்டும் )
18).ஸமஷ்ட்யபிவாதனம்: மந்திரம் ஸந்த்யாயை நம: சாவித்ர்யை நம:காயத்ர்யை நம: ஸரஸ்வத்யை நம: ஸர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம: காமோ கார்ஷீன் மன்யுரகார்ஷீன் நமோ நம:  செய்முறை - ஜெபம் செய்த திசையிலிருந்து ஆரம்பித்து கிரமமாக நான்கு திசைகளிலும் அஞ்சலிசெய்து, முடிவில் ஜெபம் செய்த திசையில்- சர்வாப்யோ தேவதாப்யோ நமோன் நம: , காமோகார்ஷீத் மன்யுரகார்ஷீத் நமோ நம: எனவும் சொல்லி வணங்கவேண்டும்.
பின்னர் அபிவாதயே.....இரு காதுகளையும் உள்ளங்கையால் தொட்டுக் கொண்டு அவரவர் கோத்ரம் நாமம் கூறி நமஸ்கரிக்கவும். (1) அபிவாதயே -
(2) _______ _______ ______( ரிஷிகளின் பெயர், உங்கள் கோத்திரத்திற்கேற்ப ) (3) __(உங்கள் கோத்திரத்திற்கேற்ப - ஏகா, த்வயா, த்ரயா, பஞ்சா, ஸப்தா ரிஷேய
 என்பனவற்றை கூட்டிக்கொள்ளவும்), (4) ப்ரவரான்வித:
(5) __ஸூத்ர (ஆபஸ்தம்ப ,போதாயனஸூத்ர,  (6) ___(யஜூஷ் , ஸாமோ, ரிக்.. சகாத்யாயி  (7) ______கோத்ரஸ்ய (உங்கள் கோத்ரம்)
(8) ____ராமகிருஷ்ண (உங்கள் பெயர்) சர்மாணம் அஹம் அஸ்மிபோ:
19) திக் தேவதா வந்தனம்: மந்திரம் :- ப்ராச்யை திஶே நம:I தக்ஷிணாயை திஶே நம: I ப்ரதீச்யை திஶே நம: I உதீச்யை திஶே நம:I ஊர்த்வாய நம: I அதராய நம:Iஅந்தரிக்ஷாய நம: Iபூம்யை நம:I ப்ரஹ்மணே நம: I விஷ்ணவே நம:I ம்ருத்யவே நம: I ஜெபம் செய்ய ஆரம்பித்த திசையிலிருந்து வரிசைக் கிரமமாக நான்கு திசைகளிலும் அஞ்சலி செய்க. திக் தேவதைகளையும், மும்மூர்திகளையும் வணங்கவும். 20) யம வந்தனம்: யமாய நம: யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்தகாய ச ஒளதும்பராய தத்நாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய     சித்ரகுப்தாயவை நம: சித்ரகுப்தாயவை நம ஓம் நம இதி. ( இம்மந்திரத்தை தெற்கு நோக்கி சொல்லவும் )
21) ஹரிஹர வந்தனம் : ருதஹும் ஸத்யம் பரம்ப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ண பிங்களம் ஊர்த்வரேதம் விருபாக்ஷம் விஶ்வரூபாயவை நம: விஶ்வரூபாயவை நம ஓம் நம இதி II நர்மதாயை நாம: ப்ராதர் நர்மதாயை நமோ நிஸி நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹிமாம் விஷ ஸர்பத: அபஸர்ப்ப ஸர்ப பத்ரந்தே தூரம் கச்ச மஹா யஸா: ஜனமே ஜயஸ்ய யாகாந்தே ஆஸ்தீக வசனம் ஸ்மரன்னு ஜ்ஜரத்கார்வோ ஜ்ஜரத்கார்வாம் பன்னகேப்யோ பிரக்ஷது ஸ்ரீபன்ன கேப்யோபி ரக்ஷத்வ ஓம் நம இதி. II
22) ஸூர்யநாராயண வந்தனம். நம: ஸவித்ரே ஜகதேக சக்ஷுஷே ஜகத்ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேதவே I த்ரயீ மயாய த்ரிகுணாத்ம தாரிணே. விரிஞ்சி நாராயண ஶங்கராத்மனே II த்யேய: ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண:ஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட: கேயூரவான் மகர குண்டலவான் கிரீடி ஹாரி ஹிரண்மயவபுர் த்ருத ஶங்க சக்ர: II
ஶங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத I கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம், ஶரணாகதம் II ஆகாஶாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம் I ஸர்வ தேவ நமஸ்கார: கேஶவம் ப்ரதி கச்சதி II கேஶவம் ப்ரதி கச்சதி ஓம் நம இதி I அபிவாதாயே ---- அஸ்மிபோ: ஜெபம் செய்த திசையை நோக்கி அஞ்சலி செய்து,நமஸ்காரம்.
23) ஸமர்ப்பணம்: காயேன வாசா மனஸேந்த்ரியைர்-வா புத்த்யாத்ம நாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் I கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி I ஆசமனம். (ப்ரயோகம் - உள்ளங் கையில் சிறிது தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு, பலனை ஸ்ரீமன் நாராயணனுக்கே ஸமர்ப்பிக்கிறேன் .  

(


செய்முறை) வலதுகைவிரல்கள் வழி கீழே தீர்த்தத்தை விடவும் )
24) இரக்ஷை -- அத்யா நோ தேவ ஸவித: ப்ராஜாவத் ஸாவி: ஸெளபகம் I பராதுஸ்வப்னியஹும் ஸூவ II விஶ்வானி தேவ ஸவிதா துரிதானி பரா ஸுவ I யத் பத்ரம் தன்ம ஆஸுவ II ( ப்ரயோகம் -ஜெபம் செய்த இடத்தில்   தீர்த்தத்தை ப்ரோக்ஷித்து , குனிந்து வலது பவித்ர விரலால் பூமியைத் தொட்டு ஜலத்தை புருவ மத்தியில் இட்டுக்கொள்ளவும் )முடிந்தது.- சுபம்.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

திருநெல்வேலியில் நெற்கட்டும் செவ்வல் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில்நாயகம் பிள்ளை  பேச்சிமுத்து ஆகியோருக்கு 1839 இல்   பிறந்தார்.

இவரது இயற்பெயர் சங்கரலிங்கம்.

ஐந்து வயதில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். அப்போது ஆசிரியர் சீதாராம நாயுடு அவர்கள் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரத்தை கற்றுக் கொடுத்தார்.
முருகன் மீது பக்தி உருவாயிற்று.

ஆரம்பக் கல்வியை முடித்த இவர், இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த புலமை பெற்றார்.

முருகப்பெருமானின் மேல் ஆழ்ந்த பக்தி கொண்ட
சேய் தொண்டர்களில் ஒருவர்.

தமிழகத்தில் வாழ்ந்த
“சமூக சீர்திருத்தப் போராளி” ஆவார்.

தமிழ் மொழி மேல் அப்படி ஓர் மகா ஈடுபாடு கொண்டவர்.

“மதுரத் தமிழை இகழ் தீயோர்
மணி நா அறுத்துக் கனலில் இட”
என்றார்.

சுமார் ஒரு இலட்சம் பாடல்களை பாடியவர் இவர்.

தியாகராசர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் முதலானோர் தெலுங்கிலும், சமற்கிருதத்திலும் கர்நாடக இசையை வளர்த்துப் பாடப்பட்டு வந்த காலத்தில் இவர் தமிழில் வண்ணம் பாடியும், வண்ணத்தியல்பு என்னும் இலக்கணநூல் யாத்தும் தமிழிசைக்கு உயிரூட்டினார்.

பெண் கல்வி, விதவை மறுமணம், உயிர்க்கொலை புரியாமை, புலால் உண்ணாமை, தமிழ் உணர்வு ஆகியவற்றை தன் நூல்களில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.

தனது மனைவிக்கு கல்வி கற்பித்து புலமைபெற வைத்தார்.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் தந்தை, தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் உள்ளிட்டோர் இவரது சீடர்கள்.

மேனி முழுவதும் திருநீறு, நெற்றியில் குங்குமம், இடது தோளில் வடகலைத் திருநாமம், வலது தோளில் தென்கலைத் திருநாமம் தரித்திருப்பார். அக்கமணி மாலை, பாதக்குறடு, கோவணத்துடன், தண்டாயுதம் ஏந்தி வலம் வந்ததால் இவரை ‘தண்டபாணி சுவாமிகள்’ என்றனர் மக்கள்.

அகப்பொருளின் துறைகளை அமைத்து சந்த யாப்பில் ‘வண்ணம்’ என்ற பெயரில் பாடல்களைப் பாடியதால் ‘வண்ணச்சரபம்’ என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது.

இவர்
வள்ளலாரை 3 முறை சந்தித்துள்ளார்

ஒன்பதாம் வயதில் சங்கரலிங்கம் தென்காசியில் உள்ள பெரியப்பா வீட்டில் தங்கிப் படித்த போதே, பாடல் இயற்றும் திறமை அவருக்குள் ஊற்றெடுத்து கிளம்பியது.

ஒரு நாள் சுரண்டை என்ற ஊருக்கு அருகில் உள்ள சித்திரா நதிக்கரைக்கரையில் அமைந்த அம்மன் “பூமி காத்தாள்” எனும் தேவியைப் போற்றி ஒரு வெண்பா பாடினார்.

பூமி காத்தாள்’ என்ற அம்மனுக்கு அப்பெயர் வருவதற்கான காரணத்தை அதில் விளக்கி இருந்தார்.

முருகனைப் பற்றி ஏராளமான பாடல்கள் பாடியதால் முருகதாசன் என்றும்,

திருப்புகழைப் பாடிக்கொண்டே இருந்ததால் திருப்புகழ் சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.

1864ஆம் ஆண்டு திருநடைப்பயணம் சென்றபோது சுவாமிகள் வேலூரில் தங்கினார்.

அப்போது வடமொழி வாணர்கள் அவரிடம் நேரில் சென்று வாதிட்டனர். தமிழ்மொழியே வடமொழியைவிட உயர்ந்தது என்று சுவாமிகள் வாதிட்டார்.  

மொழிகளில் உயர்வு கொண்டது ‘வடமொழி’ என்பதை ஏற்பீர்களா? என்றனர்.

அதற்குச் சான்று தர முடியுமா?
என சுவாமிகள் கேட்க,

வேதம் வடமொழியில் தான் இருக்கிறது. இது ஒன்று போதுமே!

 வேதம் வடமொழியில் இருக்கிறதா? தமிழ் மொழியிலும் வேதம் இருக்கிறது தெரியுமா? என சுவாமிகள் பதில் சொல்ல,

தெரியாது என்றனர் வாணர்கள்.

ஆட்டையும், மாட்டையும் அடித்துப் போட்டு , ஊன் அவி பெய்து உண்ணும்படி சொல்வது உங்கள் வேதம்.

 “அவி சொரிந்து ஆயிரட் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத் துண்ணாமை நன்று” எனப் பேசுவது எங்கள் வேதம்…

தெரிந்து கொண்டு பேசுங்கள் என்றார்.

ஒரு பகலும் , ஒரு இரவும் கழிந்த பின் இரு தரப்பினரும் முடிவை எட்ட வில்லை.

பின்னர்

இறைவனுடைய திருவடியில் தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள
சம்மதம் தெரிவித்தனர்.

ஈசன் திருவடிக்கு முன்பு திருவுளச் சீட்டு எழுதிப் போடப்பட்டது.

அதில், “தமிழே உயர்ந்தது” என்னும் சீட்டு எடுக்கப்பட்ட போது சுவாமிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அப்போது, “தமிழே உயர்ச்சி யென்று சீட்டுக் கொடுத்த பெருமானே!”
என திருப்புகழ் பாடி முடித்தார்.

தமிழின் சிறப்புகளை வரலாற்றுச் சான்றுகளோடு கூறும் இப்பாடல் “தமிழலங்காரம்” என்று அழைக்கப்படுகிறது.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற தமிழின் ஐந்திலக்கணத்தை விட புலமைக்கு இலக்கணம் கூறும் ஆறாம் இலக்கணத்தை இவர் கற்பித்தார்.

சிற்றிலக்கியங்களில் முன்னிலை நாட்டம், மஞ்சரி, ஆயிரம், முறைமை, விஜயம், நூல், சூத்திரம் என்ற புதுமை இலக்கிய வகைகளை வழங்கினார்

முத்தமிழ் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழ் அலங்காரம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தவர். திருக்குறளை அடியொட்டி, 1300 குறள் வெண்பாக்களில் மறுநெறித் திருநூல் என்ற நூலை இயற்றியவர். அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு ஆகிய 3 இலக்கண நூல்களை தந்துள்ளார்.

அரசாட்சி, அருளாட்சி, திருமகள் அந்தாதி, திருமால் ஆயிரம், தில்லை ஆயிரம், சடகோபர் சதக்கந்தாதி, அருணகிரிநாதர் புராணம் என பல இலக்கியங்களைப் படைத்துள்ளார். ஏராளமான கீர்த்தனைகள், தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.

‘ஆங்கிலியர் அந்தாதி’ என்று நூல் வாயிலாக ஆங்கிலேயர் ஆதிக்கத்தை கண்டனம் செய்தார். 1240 விருத்தப் பாக்களால் ஆன சுயசரிதையை குருபர தத்துவம் என்ற பெயரில் எழுதினார். 72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை 3 ஆயிரம் பாடல்களில் புலவர் புராணம் என்ற நூலாகப் படைத்தார்.

தமிழகத்தில் அனைத்து ஊர்களுக்கும் சென்று முருகபக்தி
வளர்த்தார்.
விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூரில் கவுமார மடத்தை நிறுவி முருக வழிபாட்டு நெறியை வளர்க்கப் பாடுபட்டார்.

திருவாமாத்தூரில்
இறுதிகாலத்தில் அரிசி உணவைத் தவிர்த்து பயறு வகைகளை மட்டுமே உட்கொண்டார். 19-ம் நூற்றாண்டில் முருகன் வழிபாடு தழைத்தோங்கப் பாடுபட்டவர். கடும் தவத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட தண்டபாணி சுவாமிகள் 59-வது வயதில் (1898) மறைந்தார்.

இவரது சீடராகிய இராமநந்த சுவாமிகள் சிரவண புரத்தில் (கோயம்புத்தூர்) இன்னொரு திருமடத்தை நிறுவி, தண்டபாணி சுவாமிகள் செய்த இறைப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். தற்போது இந்த இரு மடங்களும் “கெளமரம் மடம்” என்று அழைக்கப்படுகிறது.


அறுபத்தி மூன்று நாயண்மார்கள்

அறுபத்தி மூன்று நாயன்மார்கள் தொடர்ச்சி பதிவு..



4 - அரிவாட்டாய நாயனார்

பெயர்: தாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள் :தை திருவாதிரை
அவதாரத் தலம்:கணமங்கலம்
முக்தித் தலம்:கணமங்கலம்

வரலாறு சுருக்கம்:

சோழமண்டலத்திலே, கணமங்கலம் என்கின்ற ஊரிலே; வேளாளர்குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவரும், இல்லறத்தை ஒழுங்காக நடத்துகின்றவரும், மிகுந்த செல்வமுள்ளவருமாகிய தாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.

அவர் பரமசிவனுக்குச் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் தினந்தோறுங் கொண்டுபோய், திருவமுது செய்வித்து வருவார். இப்படி நிகழுங்காலத்திலே, கடவுளுடைய திருவருளினால் அவருக்கு வறுமை உண்டாயிற்று. உண்டாகியும், அவர் கூலிக்கு நெல் அறுப்பவராகி, தாங்கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சுவாமிக்குத் திருவமுது செய்வித்து, கார் நெல்லைக்கொண்டு; தாஞ்சீவனம் செய்து வந்தார்.

செய்யுநாளிலே, பரமசிவன் அவ்வூரிலிருக்கின்ற வயல்களிலுள்ள நெல்லெல்லாம் செந்நெல்லாகும்படி அருள்செய்ய; தாயனார் மனமகிழ்ந்து, நாள்தோறும் வயல்களுக்குப் போய் நெல்லறுத்து, கூலி வாங்கி, "இப்படிக் கிடைத்தது அடியேன் செய்த புண்ணியத்தால்" என்று சுவாமிக்கு மிகத் திருவமுது செய்விப்பாராயினார்.

இப்படி நடக்கின்றபடியால், நாடோறும் உணவில்லாமை பற்றி, மனைவியார் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்திற்குப் போய், இலைக்கறி கொய்து சமைத்து வைக்க; தாயனார் அதையுண்டு முன்போலத் தாஞ்செய்யும் திருப்பணியைச் செய்தார். செய்யுநாளிலே, தோட்டத்திலுள்ள இலைக்கறியெல்லாம் அற்றுப்போக, மனைவியார் தண்ணீர் வார்க்க, அதனைப் பானம்பண்ணி, திருப்பணியைச் செய்து வந்தார்.

இப்படிச் செய்துவருநாளிலே ஒரு நாள், முன்போலச் சுவாமிக்குத் திருவமுது செய்விக்கும் பொருட்டுச் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடுவும் கூடையில் வைத்துச் சுமந்துகொண்டு போக; மனைவியார் பஞ்சகவ்வியங்கொண்டு அவருக்குப் பின்னால் நடந்தார்.

முன் செல்கின்ற தாயனார் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழ, மனைவியார் பஞ்சகவ்வியக் கலயத்தை மூடியிருந்த கையினால் அவரை அணைத்தார். அணைத்தும், பயன் இல்லை கூடையிற் கொண்டவை எல்லாம் கமரிற் (நிலத்திற்) சிந்தின, அது கண்டு தாயனார், “இனி அங்கு ஏன் போதல் வேண்டும்?” என வருந்தினார்.

“அளவில்லாத தீமையுடையேன், இறைவன் அமுது செய்யும்பேறு பெற்றிலேன்” என்று உறுபிறப்பினை அரிவார் போன்று அரிவாள் கொண்டு உள்ளந்தண்டு அறும்படி கழுத்தினை அரியத்தொடங்கினார்.

அப்பொழுது கமரின்றும் அம்பலத்தாடும் ஐயரது வீசிய கையும், மாவடு அருந்தும் “விடேல் விடேல்” என்று ஓசையும் உடனே ஒருங்கு எழுந்தன. இறைவரது திருக்கை அன்பரது கழுத்தரியும் திண்ணிய கையினைப் பிடித்துக் கொள்ளவே, அவரும் அச்செயல் தவிர்த்தனர். அரிந்த ஊறும் நீங்கியது.

அன்பனார் அஞ்சலி கூப்பி நின்று “அடியேனது அறிவில்லாமையைக் கண்டு என் அடிமை வேண்டிக் கமரின் வந்து இங்கு அமுது செய்தருளும் பரனே போற்றி” என்று பலவாறு துதித்து வணங்கினார். இறைவர் இடப வாகனராய்த் தோன்றி ‘நீ புரிந்த செய்கை நன்று! உன் மனைவியுடனே கூட நம் உலகில் என்றும் வாழ்வாயாக!” என்று அருளிச் செய்து, அவர் உடனே அடிசேர, திரு அம்பலத்தில் எழுந்தருளினார்.

தாயனவர் தம் கழுத்தை அரிவாள் பூட்டி அறுத்த காரணத்தால் அரிவாட்டாய நாயனார் எனும் திருநாமத்தைப் பெற்றார். 63 நாயன்மார்களில் ஒருவராக மாறினார்.

தொடரும்...


அறுபத்தி மூன்று நாயண்மார்கள்

அறுபத்தி மூன்று நாயண்மார்கள் தொடர் பதிவு...    

 



3 அமர்நீதி நாயனார்...  பெயர்: அமர்நீதி நாயனார் குலம்: வணிகர் பூசை நாள்: ஆனி பூரம் அவதாரத் தலம்: பழையாறை முக்தித் தலம்: திருநல்லூர்  வரலாறு: சோழநாட்டிலே, பழையாறை என்னும் ஊரிலே, வைசியர் குலத்திலே, பெருஞ்செல்வமுடையவரும் சிவனடியார்களைத் திருவமுது, செய்வித்து அவரவர் குறிப்பறிந்து கந்தை கீள்கோவணம் என்பவைகளைக் கொடுப்பவருமாகிய அமர்நீதிநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருநல்லூர் என்னுஞ் சிவஸ்தலத்திலே மகோற்சவதரிசனஞ் செய்ய வருஞ் சிவனடியார்கள் திருவமுது செய்யும் பொருட்டு ஒரு திருமடம் கட்டுவித்துக்கொண்டு, தம்முடைய சுற்றத்தார்களோடும் அவ்விடத்திற் போய்ச் சேர்ந்து, மகோற்சவ தரிசனஞ்செய்து, தம்முடைய மடத்திலே சிவனடியார்களைத் திருவமுது செய்வித்துகொண்டு, மன மகிழ்ச்சியோடும் இருந்தார்.  இருக்கும் நாட்களிலே, ஒருநாள், சிவபெருமான் பிராமண வருணத்துப் பிரமசாரி வடிவங்கொண்டு, இரண்டு கெளபீனங்களையும் விபூதிப்பையையும் கட்டியிருக்கின்ற ஒரு தண்டைக் கையிலே பிடித்துக்கொண்டு அந்தத் திருமடத்திற்கு எழுந்தருளி வந்தார். அதுகண்ட அமர்நீதிநாயனார் மனமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் அவரை எதிர்கொண்டு வணங்கி, "சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளிவருவதற்கு அடியேன் பூர்வத்தில் யாது தவஞ்செய்தேனோ" என்று இன்சொற் சொல்ல கூறினார்.  பிரமசாரியானவர் அவரை நோக்கி, "நீர் அடியார்களைத் திருவமுது செய்வித்து அவர்களுக்கு வஸ்திரங்களும் கந்தைகளும் கீள் கெளபீனங்களும் கொடுக்கின்றீர் என்பதைக் கேள்வியுற்று, உம்மைக் காணுதற்கு விரும்பி வந்தோம்" என்றார் ஈசன்.  அதுகேட்ட அமர்நீதிநாயனார் "இந்தத் திருமடத்திலே பிராமணர்கள் போசனம் பண்ணும்பொருட்டுப் பிராமணர்கள் பாகம் பண்ணுவதும் உண்டு. தேவரீரும் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.  பிரமசாரியானவர் அதற்கு உடன்பட்டு, நாம் காவேரியிலே ஸ்நானம் பண்ணிக்கொண்டு வருவோம். 'ஒருபோது மழைவரினும் தரித்துக்கொள்ளும் பொருட்டு நீர் இந்த உலர்ந்த கெளபீனத்தை வைத்திருந்து தாரும்" என்று சொல்லி, தண்டிலே கட்டப்பட்டிருக்கின்ற இரண்டு கெளபீனங்களில் ஒன்றை அவிழ்த்து, "இந்தக் கெளபீனத்தின் மகிமையை உமக்கு நான் சொல்லவேண்டுவதில்லை. நான் ஸ்நானம்பண்ணிக் கொண்டு வரும்வரைக்கும் நீர் இதை வைத்திருந்து தாரும்" என்று ஈசன் பெருமான் கொடுத்து விட்டு, காவேரியிலே ஸ்நானம் செய்வதர்க்கு செல்கிறார்.  அமர்நீதிநாயனார் அந்தக் கெளபீனத்தை ஒரு தகுந்த இடத்திலே சேமித்து வைத்தார். ஸ்நானம்பண்ணப் போன பிரமசாரியாக வேடம் கொண்ட ஈசன் அமர்நீதிநாயனார் சேமித்து வைத்த கெளபீனத்தை அது வைக்கப்பட்ட ஸ்தானத்தினின்றும் நீக்கும்படி(மறையும்) செய்து, ஸ்நானஞ்செய்து கொண்டு, மழை பொழிய நனைந்து திருமடத்தை அடைந்தார்.  அமர்நீதிநாயனார் அது கண்டு எதிர்கொண்டு, "சமையலாயிற்று", என்று சொல்லி வணங்க; பிரமசாரியார், இனி அந்நாயனாருடைய அன்பாகிய ஜலத்திலே முழுக வேண்டி, அவரை நோக்கி, "ஈரம் மாற்றவேண்டும்; தண்டிலே கட்டப்பட்டிருக்கிற கெளபீனமோ ஈரமாயிருக்கின்றது. உம்மிடத்திலே தந்த கெளபீனத்தைக் கொண்டு வாரும்" என்றார்.  அமர்நீதி நாயனார் சீக்கிரம் உள்ளே போய்ப் பார்த்து. கெளபீனத்தைக் காணாதவராகி, திகைத்து மற்றையிடங்களிலுந் தேடிக் காணாமையால் மிகுந்த துக்கங்கொண்டு, வேறொரு கெளபீனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிரமசாரியார் முன் சென்று, "சுவாமீ! தேவரீர் தந்த கெளபீனத்தை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் கண்டிலேன். அது போனவிதம் இன்னதென்று அறியேன். வேறொரு நல்ல கெளபீனம் கொண்டு வந்தேன். இது கிழிக்கப்பட்ட கோவணமன்று, நெய்யப்பட்ட கோவணமே. தேவரீர் நனைந்த கெளபீனத்தைக் களைந்து இந்தக் கெளபீனத்தைச் சாத்தி, அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளும்" என்று பிராத்தித்தார்.  அதைக் கேட்ட பிரமசாரியார் மிகக்கோபித்து, "உம்முடைய நிலைமை நன்றாயிருக்கின்றது. நெடுநாட்கழிந்ததுமன்று; இன்றைக்கே தான் உம்மிடத்தில் வைத்த கெளபீனத்தைக் கவர்ந்து கொண்டு, அதற்குப் பிரதியாக வேறொரு கெளபீனத்தை ஏற்றுக் கொள்ளுமென்று நீர் சொலவது என்னை! சிவனடியார்களுக்கு நல்ல கெளபீனம் கொடுப்பேன் என்று நீர் ஊரிலே பரவச்செய்தது என்னுடைய கெளபீனத்தைக் கவர்தற்கோ! நீர் செய்கின்ற இவ்வாணிகம் நன்றாயிருக்கின்றது" என்று சொல்ல...  அமர்நீதிநாயனார் பயந்து முகம் வாடி நடுநடுங்கி, "சுவாமீ! அடியேன் இக்குற்றத்தை அறிந்து செய்தேனல்லேன். இதைப் பொறுத்தருளும், தேவரீருக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளெல்லாம் செய்கின்றேன். இந்தக்கோவணமன்றி வெகுபொன்களையும் பட்டாடைகளையும் இரத்தினங்களையும் தருகிறேன்; ஏற்றுக்கொள்ளும்" என்றார்.  அதற்குப் பிரமசாரியார் கோபந்தணிந்தவர் போலத்தோன்றி, "பொன்களும் பட்டாடைகளும் இரத்தினங்களும் எனக்கு ஏன்? நான் தரிப்பதற்கு உபயோகியாகிய கெளபீனத்துக்கு ஒத்த நிறையுள்ள கெளபீனம் தந்தாற் போதும்" என்று சொல்கிறார்.  அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, "எதனுடைய நிறைக்குச் சமமாகிய கெளபீனத்தைத் தரல் வேண்டும்" என்று கேட்டார்.  பிரமசாரியார் "நீர் இழந்த கெளபீனத்தின் நிறைக்கு ஒத்த நிறையையுடைய கெளபீனம் இது" என்று சொல்லி, தமது தண்டிலே கட்டப்பட்டிருந்த கெளபீனத்தை அவிழ்த்து, "இதற்கு ஒத்த நிறையுள்ளதாகக் கெளபீனத்தை நிறுத்துத் தாரும்" என்றார்.  அமர்நீதிநாயனார் "மிகநன்று" என்று சொல்லி, ஒரு தராசைக் கொண்டுவந்து நாட்ட; பிரமசாரியார் அந்தக் கெளபீனத்தை ஒரு தட்டிலே வைத்தார். அமர்நீதிநாயனார் தம்முடைய கையிலிருந்த நெய்யப்பட்ட கெளபீனத்தை மற்றத்தட்டிலே வைத்தார்.  அது ஒத்தநிறையிலே நில்லாமல் மேலெழுந்தது. அதைக்கண்டு, அடியார்களுக்குக் கொடுக்கும்படி தாம் வைத்திருந்த கோவணங்களெல்லாவற்றையும் கொண்டுவந்து ஒவ்வொன்றாக இட இட; பின்னும் தூக்கிகொண்டு எழும்பியது. அதைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்து, பலவஸ்திரங்களையும் பட்டுக்களையும் கொண்டுவந்து இட இட; பின்னும் உயர்ந்தது. அது கண்டு அநேக வஸ்திரப்பொதிகளைக் கொண்டுவந்து இட்டார். இட்டும், அத்தட்டு மேலே எழும்ப; கெளபீனத்தட்டுக் கீழே தாழ்ந்தது.  அமர்நீதிநாயனார் அதைக் கண்டு மிக அஞ்சி பிரமசாரியாரை வணங்கி, "எண்ணிறந்த வஸ்திரப்பொதிகளையும் நூற்கட்டுகளையும் குவிக்கவும், தட்டு உயர்கின்றது. தமியேனுடைய மற்றத்திரவியங்களையும் இத்தட்டிலே இடுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார்.  அதற்குப் பிரமசாரியார் "இனி நாம் வேறென்ன சொல்லுவோம்! மற்றத்திரவியங்களையும் இட்டுப் பாரும். எப்படியும் நம்முடைய கோவணத்துக்கு ஒத்த நிறையில் நிற்கவேண்டும்'. என்றார்.  அமர்நீதிநாயனார் நவரத்தினங்களையும் பொன் வெள்ளி முதலிய உலோகங்களையும் சுமைசுமையாக எடுத்து வந்து இட இட; தட்டு எழுந்தபடியே மேலே நின்றது.  அமர்நீதிநாயனார் அதைக்கண்டு பிரமசாரியாரை வணங்கி, "என்னுடைய" திரவியங்களில் ஒன்றும் சேஷியாமல் இந்தத் தட்டிலே இட்டேன். நானும் என் மனைவியும் புத்திரனும் மாத்திரம் சேஷித்து நிற்கின்றோம். தேவரீருக்குப் பிரீதியாகில் இனி, அடியேங்களும் இத்தட்டில் ஏறுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார்.  பிரமசாரியாரும் அதற்கு உடன்பட்டார்.  அது கண்டு, அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, பிரமசாரியாரை வணங்கி, தம்முடைய மனைவியாரோடும் புத்திரரோடும் தராசை வலஞ்செய்து "சிவனடியார்களுக்குச் செய்யுந் திருத்தொண்டிலே அடியேங்கள் தவறாமல் இருந்தோமாகில், அடியேங்கள் ஏறினமாத்திரத்தே இந்தத்தட்டு மற்றத்தட்டுக்கு ஒத்து நிற்கக்கடவது" என்று சொல்லி, திருநல்லூரில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வணங்கி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியோடு தட்டிலே ஏறினார்.  ஏறினவுடனே, பரமசிவனுடைய திருவரையிலே சாத்தப்படும் கெளபீனமும் பத்தியிலே சிறிதுங் குறைவில்லாத அமர்நீதிநாயனாருடைய அடிமைத்திறமும் பெருமையில் ஒத்திருந்தபடியால், துலாக் கோலின் இரண்டு தட்டுக்களும் ஒத்து நின்றன.  அவ்வற்புதத்தைக் கண்டவர்களெல்லாரும் அமர்நீதிநாயனாரை வணங்கி ஸ்தோத்திரஞ் செய்தார்கள். தேவர்கள் ஆகாயத்தினின்றும் கற்பகவிருக்ஷங்களின் புஷ்பங்களை மழைப்போலப் பொழிந்தார்கள். திருகைலாசபதி தாங்கொண்டு வந்த பிரமசாரி வடிவத்தை ஒழித்து, ஆகாயத்திலே பார்வதிதேவியாரோடு இடபாரூடராய்த் தோன்றி;  தம்மைத் தரிசித்து அந்தத் தராசுத் தட்டிலே தானே நின்றுகொண்டு ஸ்தோத்திரஞ் செய்கின்ற அமர்நீதிநாயனார் அவர் மனைவியார் புத்திரர் என்னு மூவர் மேலும் திருவருணோக்கஞ்செய்து, "நீங்கள் மூவிரும் நம்முடைய அருளைப் பெற்று, நம்முடைய சந்நிதானத்திலே நம்மை வணங்கிக்கொண்டிருங்கள்" என்று அருளிச்செய்து மறைந்தருளினார்.  அமர்நீதிநாயனாரும், அவர் மனைவியாரும், புத்திரரும், அக்கடவுளுடைய திருவருளினால் அந்தத்தராசுதானே தேவவிமானமாகி மேலே செல்ல, அவரோடு சிவலோகத்தை அடைந்தார்கள். அமர்நீதிநாயனாரும் 63 நாயன்மார்களில் ஒருவராக மாறினார்...  தொடரும்..

மூன்று கால் சித்தர்

மூன்று கால் சித்தர்.

உலகிலேயே மூன்று கால்களை உடைய முனிவர் என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்த பிருங்கிரிஷி முனிவர் சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபடக்கூடாது என்கிற கொள்கை கொண்டவர்.

இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள்.

நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அம்மையப்பனாய் நின்றனர். அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி முனிவர், அம்மையும் அப்பனும் ஓர்உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து அம்மையப்பரின் தொப்புள் வழியே துளையிட்டு சிவனை மட்டும் வலம் வந்தார்.

இதைகண்ட சினம் உற்ற அம்மை பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கிரிஷி  தடுமாறினார். உடனே சிவ பெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளினார் .

அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திர்ப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்பதை புரிந்து கொள் என்றார்.

பிரிங்கிரிஷியும் அப்பனே. என்னை அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்றும் பராசக்தியிடம் மன்னிப்பும் கோரினார்.

அறியாமற்செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் கூறினார்.

(திருச்சி மாவட்டம் திருவானைக்காவல்
ஜம்புகேஸ்வரர் கோவிலில் சிவலிங்க சன்னதிக்கு இடது புறம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத் தூண்களில் இந்த சிற்பம் உள்ளது)


அறுபத்து மூன்று நாயன்மார்கள்..

அறுபத்து மூன்று நாயன்மார்கள்... தொடர்பதிவு...

2 - அப்பூதியடிகள்...

பெயர் : அப்பூதியடிகள் நாயனார்
குலம் : அந்தணர்
பூசை நாள் :தை சதயம்
அவதாரத் தலம் :திங்களூர்
முக்தித் தலம் :திங்களூர்

வரலாறு:

சோழமண்டலத்திலே, திங்களுரிலே பிராமணகுலத்திலே, பாவங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எல்லாவற்றையும் நீக்கினவரும், புண்ணியங்களென்று சொல்லப்படவைகள்
எல்லாவற்றையும் தாங்கினவரும், சிவபத்தி அடியார்களில் சிறந்தவருமாகிய அப்பூதியடிகணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.

அவர் சிவானுபூதிமானாகிய திருநாவுக்கரசுநாயனாருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவர்மேலே மிக அன்பு கூர்ந்து, தம்முடைய வீட்டினுள்ள அளவைகள் தராசுகள் பிள்ளைகள் பசுக்கள் எருமைகள் முதலிய எல்லாவற்றிற்கும் இந்நாயனாருடைய பெயரையே சொல்லிவருவார்.
இன்னும் அவர் மேலாசையினாலே, திருமடங்கள் தண்ணீர்ப்பந்தர்கள் குளங்கள் திருநந்தனவனங்கள் முதலியனவற்றை அந்நாயனார் பெயரினாற் செய்து கொண்டிருந்தார்.

இருக்குநாளிலே, அத்திருநாவுக்கரசு நாயனார் திருப்பழனமென்னும் ஸ்தலத்தை வணங்கிக்கொண்டு பிறதலங்களையும் வணங்கும்பொருட்டு, அந்தத் திங்களுருக்குச் சமீபமாகிய வழியிலே செல்லும்பொழுது, ஒரு தண்ணீர்ப்பந்தரை அடைந்து, திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயர் எங்கும் எழுதப் பட்டிருத்தலைக் கண்டு, அங்கு நின்றவர்கள் சிலரை நோக்கி, "இந்தத் தண்ணீர்ப்பந்தரை இப்பெயரிட்டுச் செய்தவர்யாவர்" என்று வினாவினார்.
அவர்கள் "இப்பந்தரைமாத்திரமன்று, இவ்விடத்தெங்கும் உள்ள அறச்சாலைகள், குளங்கள், திருநந்தனவனங்கள் எல்லாவற்றையும் அப்பூதியடிகணாயனார் என்பவர் இத்திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயரலேயே செய்தனர்" என்றார்கள்.

அதைத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டு, "இங்ஙனஞ் செய்தற்குக் காரணம் யாதோ" என்று நினைந்து, அவர்களை நோக்கி, "அவர் எவ்விடத்தில், இருக்கின்றவர்" என்று வினாவ; "அவர் இவ்வூரவரே இப்பொழுதுதான் வீட்டுக்குப்போகின்றார், அவ்வீடும் தூரமன்று சமீபமே" என்றார்கள்.

உடனே திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகணாயனாருடைய வீட்டுத்தலைக்கடைவாயிலிற் செல்ல, உள்ளிருந்த அப்பூதிநாயனார் சிவனடியார் ஒருவர் வாயிலில் வந்து நிற்கின்றார் என்று கேள்வியுற்று விரைந்து சென்று, அவருடைய திருவடிகளிலே நமஸ்கரிக்க; அவரும் வணங்கினார்.

அப்பூதிநாயனார் "சுவாமீ! தேவரீர் இவ்விடத்திற்கு எதுபற்றி எழுந்தருளினீர்" என்று வினாவினார்.
திருநாவுக்கரசு நாயனார் 'நாம் திருப்பழனத்தை வணங்கிக்கொண்டு வரும்பொழுது, வழியிலே நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரைக் கண்டும் அப்படியே நீர் செய்திருக்கின்ற பிறதருமங்களைக்கேட்டும்' உம்மைக் காண விரும்பி, இங்கே வந்தோம்" என்று சொல்லி, பின்பு, "சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரிலே உம்முடைய பெயரை எழுதாது வேறொருபெயரை எழுதியதற்குக் காரணம் யாது" என்று வினாவினார்.

அப்பூதிநாயனார் "நீர் நல்லவார்த்தை அருளிச்செய்திலீர், பாதகர்களாகிய சமணர்களோடு கூடிப் பல்லவராஜன் செய்த விக்கினங்களைச் சிவபத்தி வலிமையினாலே ஜயித்த பெருந்தொண்டரது திருப்பெயரோ வேறொருபெயர்" என்று கோபித்து, பின்னும், பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்தலாலே இம்மையினும் பிழைக்கலாம் என்பதை என்போலும் அறிவிலிகளும் தெளியும் பொருட்டு அருள்புரிந்த திருநாவுக்கரசுநாயனாருடைய திருப்பெயரை நான் எழுத, நீர் இந்தக் கொடுஞ்சொல்லை நான் கேட்கும்படி சொன்னீர். கற்றோணியைக்கொண்டு கடல்கடந்த அந்த நாயனாருடைய மகிமையை இவ்வுலகத்திலே அறியாதார் யாருளர்! நீர் சிவவேடத்தோடு நின்று இவ்வார்த்தை பேசினீர். நீர் எங்கே இருக்கிறவர்? சொல்லும்" என்றார்.

திருநாவுக்கரசுநாயனார் அவ்வப்பூதியடிகளுடைய அன்பை அறிந்து, "ஆருகதசமயப் படுகுழியினின்றும் ஏறும் பொருட்டுப் பரமசிவன் சூலைநோயை வருவித்து ஆட்கொள்ளப்பெற்ற உணர்வில்லாத சிறுமையேன் யான்" என்று அருளிச்செய்தார். உடனே அப்பூதிநாயனார், இரண்டு கைகளும் சிரசின்மேலே குவிய, கண்ணீர் சொரிய, உரை தடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, பூமியிலே விழுந்து திருநாவுக்கரசுநாயனாருடைய ஸ்ரீபாதாரவிந்தங்களைப் பூண்டார்.

திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகளை எதிர்வணங்கி எடுத்தருள, அப்பூதியடிகள் மிகக் களிப்படைந்து கூத்தாடினார்; பாடினார்; சந்தோஷமேலீட்டினால் செய்வது இன்னது என்று அறியாமல், வீட்டினுள்ளே சென்று, மனைவியாருக்கும் பிள்ளைகளுக்கும், பிறசுற்றத்தார்களுக்கும்

திருநாவுக்கரசுநாயனார் எழுந்தருளிவந்த சந்தோஷ சமாசாரத்தைச் சொல்லி, அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, நாயனாரை வணங்கும்படி செய்தார்.அவரை உள்ளே எழுந்தருளுவித்து, பாதப்பிரக்ஷாளனஞ் செய்தார்.

அங்ஙனம் செய்த தீர்த்தத்தை அவர்களெல்லாரும் தங்கண்மேலே தெளித்து, உள்ளும் பூரித்தார்கள். நாயனாரை ஆசனத்தில் இருத்தி, விதிப்படி அருச்சனை செய்து, "சுவாமீ, தேவரீர் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்திக்க; அவரும் அதற்கு உடன்பட்டருளினார்.
அப்பூதிநாயனார் திருவமுது சமைப்பித்து, தங்கள் புத்திரராகிய மூத்ததிருநாவுக்கரசை வாழைக் குருத்து அரிந்துகொண்டு வரும்பொருட்டு அனுப்ப; அவர் விரைந்து தோட்டத்திற்சென்று, வாழைக் குருத்து அரியும்பொழுது, ஒரு பாம்பு அவருடைய கையிலே தீண்டி, அதனைச் சுற்றிக்கொண்டது.

அவர் அதை உதறிவீழ்ந்து, பதைப்புடனே அது பற்றிய வேகத்தினாலே வீழுமுன் கொய்த குருத்தை வேகத்தோடு கொண்டோடி வந்து, விஷம் முறையே ஏறித்தலைக்கொண்ட ஏழாம்வேகத்தினாலே பல்லுங் கண்ணும் சரீரமும் கருகித் தீய்ந்து உரை குழறி மயங்கி, குருத்தைத் தாயார்கையில் நீட்டி, கீழே விழுந்து இறந்தார்.

அதுகண்டு, தந்தையாரும் தாயாரும் "ஐயோ! இது தெரிந்தால் இனி நாயனார் திருவமுது செய்யாரே" என்று துக்கித்து, சவத்தை வீட்டுப் புறத்து முற்றத்தின் ஓர்பக்கத்திலே பாயினால் மறைத்து வைத்துவிட்டுனர்
அப்பமூர்த்தியிடத்திற்சென்று "சுவாமி, எழுந்து வந்து திருவமுது செய்தருளவேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள் அப்பமூர்த்தி எழுந்து கைகால் சுத்தி செய்துகொண்டு, வேறோராசனத்தில் இருந்து, விபூதி தரித்து, அப்பூதிநாயனாருக்கும் அவர் மனைவியாருக்கும் விபூதி கொடுத்து; புதல்வர்களுக்கும் கொடுக்கும்போது, அப்பூதிநாயனாரை நோக்கி "நாம் இவர்களுக்கு முன்னே விபூதி சாத்தும்படி உம்முடைய சேட்டபுத்திரரை வருவியும்" என்றார்.

அப்பூதிநாயனார் "இப்போது அவன் இங்கே உதவான்" என்றார். அப்பமூர்த்தி அதைக் கேட்டவுடனே சிவபிரானுடைய திருவருளினாலே தம்முடைய திருவுள்ளத்திலே ஒரு தடுமாற்றத் தோன்ற, அப்பூதிநாயனாரை நோக்கி, "அவன் என்செய்தான்? உண்மை சொல்லும்" என்றார்.

அப்பூதிநாயனார் அஞ்சி நடுங்குற்று, வணங்கி நின்று, நிகழ்ந்த சமாசாரத்தை விண்ணப்பஞ்செய்தார். அப்பமூர்த்தி அதைக்கேட்டு, "நீர் செய்தது நன்றாயிருக்கின்றது; இப்படி வேறியார் செய்தார்" என்று சொல்லிக்கொண்டு எழுந்து, சிவாலயத்துக்குமுன் சென்று சவத்தை அங்கே கொணர்வித்து, விஷத்தை நீக்கியருளும் பொருட்டுப் பரமசிவன்மேலே திருப்பதிகம்பாடினார்.

உடனே அப்புத்திரர் உயிர்பெற்று எழுந்து; அப்பமூர்த்தியுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரிக்க; அப்பமூர்த்தி விபூதி கொடுத்தருளினார். அப்பூதிநாயனாரும் மனைவியாரும் தங்கள் புத்திரா பிழைத்தமையைக் கண்டும் அதைக்குறித்துச் சந்தோஷியாமல், நாயனார் திருவமுதுசெய்யாதிருந்தமையைக் குறித்துச் சிந்தை நொந்தார்கள்.

அப்பமூர்த்தி அதனை அறிந்து, அவர்களோடும் வீட்டிற்சென்று, அப்பூதி நாயனாரோடும் அவர் புத்திரர்களோடும் ஒருங்கிருந்து திருவமுது செய்தருளினார். அப்படியே சிலநாள் அங்கிருந்து, பின் திருப்பழனத்திற்குப் போயினார்.

அப்பூதியடிகள் சைவசமயாசாரியராகிய திருநாவுக்கரச நாயனாருடைய திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெருஞ் செல்வமெனக்கொண்டு வாழ்ந்திருந்து, சிலகாலஞ் சென்றபின் பரமசிவனுடைய திருவடிகளை அடைந்தார். 63 நாயன்மார்களில் ஒருவராக ஈசன் அருளினார்.

தொடரும்..


கதிர்காம ஸ்வாமிகள்

கதிர்காம ஸ்வாமிகள்

ஸ்ரீகதிர்காம ஸ்வாமிகள். ஸித்துகள் அதிகம் நிகழ்த்தி இராத சித்த புருஷர் இவர். தான் இருந்த வரையிலும் எந்த ஒரு விளம்பரத்தையும் தேடாதவர். தன்னைப் பலர் முன்னிலையிலும் வெளிப்படுத்திக் கொள்வதை விரும்பாதவர். தனக்குப் பிறகு இவர்தான் சிஷ்யர் என்று எவரையும் அடையாளம் காண்பிக்காதவர். சுத்த சன்னியாசி, பரம யோகி. கதிர்காம சுவாமிகளின் குருவருளுக்குப் பாத்திரமான பக்தர்கள் பலரும். சுவாமிகள் இன்றைக்கும் ஜீவித்து வருவதாகச் சொல்கிறார்கள். தங்களது வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் ஸ்வாமிகள் உடன் இருந்து நல்ல பல தீர்வுகளை வழங்கி வருவதாக மெய்சிலிர்ப்புடன் சொல்கிறார்கள். பக்தர்கள் தன் மீது கொண்டுள்ள நம்பிக்கை சிறிதும் பொய்த்துப் போகாமல் இருக்க. சிக்கலான நேரங்களில் அவர்களை இனிதே நல்வழிப்படுத்தி இன்றளவும் இயக்கி வருகிறார் ஸ்ரீகதிர்காம சுவாமிகள்.

சில ஆண்டுகளுக்கு முன் கோரமான ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டு. உயிருக்கே ஆபத்தான நிலையில் மருத்துமனைவில் அனுமதிக்கப்பட்டார் ஸ்வாமிகளின் பிரபலமான பக்தர் ஒருவர். நிச்சயம் பிழைக்க மாட்டார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்டார் அவர். ஆனால் கதிர்காம சுவாமிகளின் அருளால் அன்றைய தினம் இரவு. அவரது உடல் முழுவதும் யாரோ ஒருவர் திருநீறு பூசுவது போல் உணர்ந்தார் அவர். பிறகென்ன.... மருத்துவ உலகமே கைவிடப்பட்ட அவர், ஸ்வாமிகளின் அருளால் இன்றும் பூரணத் துடிப்புடன் நடமாடிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீகதிர்காம ஸ்வாமிகளின் அதிஷ்டானம்?

உமையம்மையால் ஞானப் பால் பெற்ற திருஞானசம்பந்தரின் அவதாரத் தலமான சீர்காழிக்கு அருகே ஸ்ரீகதிர்காம ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இருக்கிறது. சீர்காழியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் மார்க்கத்தில் சீர்காழியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் - அதாவது சீர்காழி நகரத்திலேயே சட்டநாதபுரம் பகுதியில் காவிரியின் உபநதியான உப்பனாற்றங்கரையில் அமைந்துள்ளது ஸ்வாமிகளின் அதிஷ்டானம். 19.11.1962-ஆம் வருடம் பிலவ ஆண்டு கார்த்திகை 4-ஆம் தேதியன்று திங்கட்கிழமை தினத்தில் மக நட்சத்திரத்தன்று ஸ்வாமிகள் நிர்விகல்ப சமாதி ஆனார். அதுவரை சீர்காழித் தெருக்களில் நடமாடி, பக்தர்களை ஆசிர்வதித்து வந்த ஸ்ரீகதிர்காம சுவாமிகள். இப்போது அதிஷ்டானத்தில் இருந்தபடியே நகரையும் தம் மக்களையும் காத்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத மக நட்சத்திர தினத்தில் ஸ்வாமிகளின் குருபூஜை ஆராதனை விழா. அவரது பக்தர்களால் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மகான்களின் அவதாரத்தை அறிய முடியுமா? அது போல் ஸ்ரீகதிர்காம ஸ்வாமிகளின் அவதார தினத்தை இதுவரை எவரும் அறியவில்லை. பூர்வாஸ்ரமத்தைப் பற்றிய குறிப்புகளும் பெருமளவில் புலப்படவில்லை. ஸ்வாமிகளின் அருளுக்கும் ஆசிக்கும் பாத்திரமான பல பக்தர்கள் இன்றளவும் சீர்காழி. சென்னை உட்பட பல ஊர்களில் இருந்து வருகிறார்கள். கதிர்காம ஸ்வாமிகளுடன் தாங்கள் அளவளாவிய அந்த நாட்களைப் பற்றி அவரது பக்தர்கள் பேச ஆரம்பித்தாலே, உருகிப் போகிறார்கள். கிட்டத்தட்ட தங்களின்  பலரும் ஸ்வாமிகளை வழிபடுகிறார்கள். 


ஸ்வாமிகள் சரித்திரத்தில் இருந்து சில செய்திகள்.
ஸ்வாமிகள் பூவுலகில் வசித்த காலம் இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் என்று சொல்லப்படுகிறது. வங்காள தேசத்தைச் சேர்ந்த பிரம்ம குலத்தில் அவதரித்தவர். நேபாள மந்திரி ஒருவரின் திருமகனார் என்றும் குறிப்பு உண்டு. வசதிகள், வாய்ப்புகள் இருந்தும் சுகபோக வாழ்க்கையில் நாட்டம் செல்லாமல். துறவறத்தை நாடியது சுவாமிகளின் மனம். இறைவனின் சித்தம் அதுவாக இருந்தால், எவர்தான் என்ன செய்ய முடியும்! எனவே, இளம் பிராயத்திலேயே வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

ஊர் ஊராகத் திரிந்தார். வயிற்றுப் பசிக்கு பிக்ஷை கைகொடுத்தது. இறைப் பசிக்கு தவம் கைகொடுத்தது. பல நாட்கள் பயணம் செய்து. பல ஊர்களைக் கடந்து ஆன்மிகத்தின் தாயகமான இமயமலைச் சாரலை அடைந்தார். தவ சீலர்களின் சொர்க்கபுரியான இமயம். இவரை இரு கரம் நீட்டி வரவேற்றது. ஏகாந்தமான சூழ்நிலையில் தன் தவத்தைத் துவங்கினார்.ஸ்ரீகதிர்காம சுவாமிகள் இமயமலையில் தவம் இருந்த காலத்தில்தான் ஸ்ரீஞானானந்த கிரி சுவாமிகளை (திருவண்ணாமலை அருகே திருக்கோவிலூர் தபோவனத்தில் அதிஷ்டானம் கொண்டுள்ள மகான்) சந்தித்தார். மகான்களின் மனங்கள் இரண்டாறக் கலந்தன. இறைவன் இருவரையும் இணைந்து வைத்தான். தவத்திலும் யோகத்திலும் நாட்களைக் கழித்தார்கள் இருவரும். அதன் பின் இருவரும் இலங்கை சென்றதாகக் கூறப்படுகிறது.கதிர்காம முருகன் இவர்களை ஆட்கொண்டான். புராணங்கள் புகழும் கதிர்காமத்தின் அடர்ந்த மலைப் பகுதிகளில் இருவரும் நீண்ட காலம் தவம் புரிந்தார்கள். சாதாரண தவம் அல்ல... சுமார் 65 ஆண்டு காலத்துக்கு இந்த தவம் நீடித்தது. அறப் பணிகள் புரிந்தனர்.இவர்களின் பக்தியிலும் தவத்திலும் பூரித்த  கந்தப் பெருமாள் இருவருக்கும் காட்சி தந்து அருளினார் (இதனால் தான் கதிர்காம சுவாமிகள் என்கிற திருப்பெயர் பின்னாளில் இவருக்கு வந்தது சுவாமிகளின் இயற்பெயர் பாலசுப்பிரமண்ய சுவாமி என்பாரும் உளர்.) அப்போது, கதிர்காம சுவாமிகளை பக்தி மார்க்கத்திலும் ஞானானந்த கிரி சுவாமிகளை ஞான மார்க்கத்திலும் செல்லுமாறு முருகப் பெருமானே வழிநடத்தியதாக. சுவாமிகளின் சரிதம் சொல்கிறது. 65 ஆண்டு கால தவம் முடிந்த பிறகு கதிர்காம சுவாமிகளும் ஞானானந்த கிரி சுவாமிகளும் தமிழகம் திரும்பும்போது, பிரியத் கூடாத உறவினர்களைப் பிரிவதுபோல், அந்த வனத்தில் உள்ள துஷ்ட மிருகங்கள் எல்லாம் துயரத்தால் கண்ணீர் விட்டதாக சுவாமிகளின் பக்தர்கள் சிலர் மெய் சிலிர்த்துச் சொல்கிறார்கள். அப்படித் திரும்பிய கதிர்காம சுவாமிகள் சீர்காழியைத் தேர்ந்தெடுத்தார். ஞானானந்த கிரி சுவாமிகள் திருக்கோவிலூரைத் தேர்ந்தெடுத்தார்.கதிர்காமத்தில் ஸ்ரீபிரம்மானந்தா என்கிற யோகிடம் சன்னியாச தீட்சை பெற்றார் சுவாமிகள். அதன் பின் காஷ்மீர், இமயமலை, பர்மா போன்ற தேசங்களுக்குச் சென்றுவிட்டு இறுதியாக சீர்காழிக்கு வந்து உப்பனாற்றங்கரையில் ஒரு சில பக்தர்கள் பனைமட்டை ஓலையால் அமைத்துத் தந்த குடிசையில் தங்கலானார். தன் உணவுத் தேவைக்காக சட்டநாதபுரம் மற்றும் தென்பாதி அக்ரஹாரத்தில் உள்ள வீடுகளுக்கு பிக்ஷை கேட்டுச் செல்வார். இதை அன்னக் காவடி என்கிறார்கள். துவக்க காலத்தில் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொண்டார் சுவாமிகள். மிகவும் எளிமையான உணவு. மிளகு, கீரை, பருப்பு, சேர்த்த பதார்த்தத்தை உண்பார் சுவாமிகள். அதுவும் பிசைந்த அன்னத்தில் இருந்து மூன்றே மூன்று கவளங்கள் மட்டும் உட்கொள்வார். உணவில் உப்பு சேர்ப்பதை சுவாமிகள் விரும்ப மாட்டார். இரவில் பால் அருந்துவார். இட்லியும் அதற்குத் தொட்டுக்கொள்ள நெய் கலந்த சர்க்கரையும் சுவாமிகளுக்கு விருப்பம் என்று அவரது பக்தர் ஒருவர் சொன்னார்.

கப்பல்கார செட்டியார் எனப்படும் தனவந்தர் வீட்டுக்கு மாலை வேளைகளில் சென்று உணவருந்தி, அவரிடம் மனம் விட்டு உரையாடுவார் சுவாமிகள். இத்தகைய அற்புத மகான் ஒருவர், தங்கள் ஊருக்கு வந்து தங்கி இருக்கிறார் என்பதை அறிந்த சீர்காழி மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் அவ்வப்போது பெருமளவில் திரண்டு வந்து. தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லுமாறு கதிர்காம சுவாமிகளை நமஸ்கரித்துக் கேட்பார்கள். அவர்களில் பலருக்கு சுவாமிகள் அனுக்ரஹமும் செய்துள்ளார். வரும் பக்தர்களில் பலர் இனிப்புகள், திராட்சை, கல்கண்டு, பழங்கள், முந்திரி போன்றவற்றை சுவாமிகள் சாப்பிடட்டுமே என்று ஆசைப்பட்டு வாங்கி வருவார்கள். ஆனால், அவற்றின் மேல் தன் திருக்கரங்களைப் பதித்துவிட்டு, குழந்தைகளுக்கும் அங்குள்ள பக்தர்களுக்கும் தருமாறு சொல்லி, அதில் இருந்து எதையும் எடுத்துகொள்ள மாட்டார் சுவாமிகள்.ஸ்ரீகதிர்காம சுவாமிகள் உப்பனாற்றங்கரைக்கு வந்து ஓலைத் குடிசையில் அமர்ந்த காலத்தில் அந்தப் பகுதியே காடு போல காட்சி அளித்தது. பிறகு,  சுவாமிகளின் முயற்சியால் ஏற்றம் போட்டு நீர் இறைத்து அந்தப் பகுதியையே மணக்கும் நந்தவனமாக மாறினார். நந்தவனமாக இந்தப் பகுதி மாறுவதற்கு முன் ஏராளமான பாம்புகள் இங்கே நடமாடும். அவற்றுள் சில பாம்புகள் சுவாமிகளின் திருமேனி மேல் விழுந்து சுற்றிக் கொள்ளும். சுவாமிகளும் ரொம்ப சுவாதீனமாக, சரி... போ உன் இருப்பிடத்துக்கு. சிலர் உன்னைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்று சொல்ல... உடலில் இருந்து பாம்புகள் தரையில் இறங்கி ஊர்ந்து போய்விடும். இந்தக் காட்சியை நேரில் பார்த்த அன்பர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். தன் பக்தர்களிடம் பாம்பைக் கண்டு பயப்படாதீர்கள். அதைப் பார்த்தவுடன் ஜெய சீதாராம்..... ஜெய சீதாராம் என்று சொல்லுங்கள் அடுத்த கணமே அவை நம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும் என்பார் சுவாமிகள்.

அடியார்களுக்கு அன்னதானம் செய்வதென்றால் கொள்ளைப் பிரியம் சுவாமிகளுக்கு. தினமும் குறைந்தது பதினாறு பரதேசிகளுக்காவது தன் கைப்பட அன்னம் எடுத்துக் கொடுப்பார் சுவாமிகள். எது இருக்கிறதோ இல்லையோ, தயிர் சாதமும் ஊறுகாயும் நிச்சயம் இந்த அன்னதானத்தில் இடம் பெறும். அன்னதானம் முடிந்து சாதுக்கள் புறப்படும் போது. அவர்கள் கைச்செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்புவார். இதெல்லாம் சாதாரண நாட்களில் நடக்கும் அன்னதானம் விசேஷ தினங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். சீர்காழியில் வசிக்கும் ஒருவர் தன் தந்தையார் கூறியதாக நம்மிடம் சொன்னார். பூசனிக்காயை சாம்பாரில் போடுவதற்காக உளியால் அதை சரசரவென்று வெட்டுவார்கள். கத்தியால் நறுக்கிக் கொண்டிருந்தால் நேரம் போதாது. இரண்டு கைகளாலும் பிடிக்கக்கூடிய அளவில்தான் லட்டு தயார் செய்யச் சொல்வார் சுவாமிகள். சாம்பார் இருக்கும் மிகப் பெரிய அண்டாவில் குனிந்து அதை எடுக்க முடியாது என்பதால், ஒரு வாளியில் கயிறு கட்டித்தான் சாம்பாரை எடுத்துப் பரிமாறுவார்கள். அப்படி என்றால், அந்த அண்டா எத்தனை பெரிதாக இருக்கும் என்று யோசியுங்கள். கேட்கவே மலைப்பாக இருக்கிறது. இதை எல்லாம் பார்த்து அனுபவித்தவர்கள், எத்தனை பாக்கியம் பெற்றவர்கள்! சுவாமிகளின் அனுபவங்களைப் பல பக்தர்களும் நெகிழ்ந்து போய்ச் சொல்கிறார்கள். அவற்றுள் சிலவற்றுள் இவை! பேச்சு சரியாக வராத தன் பெண்ணைக் கூட்டி வந்தார் ஒரு அம்மணி. இருவரையும் உப்பனாற்றில் மூழ்கிவிட்டு வரச் சொன்னார் சுவாமிகள். தரிசித்துவிட்டு நம்பிக்கையுடன் புறப்பட்டவர்கள். அவர்கள் ஊர் போய்ச் சேருவதற்கு முன்பாக, பாதி வழியிலேயே அந்தப் பெண்ணுக்குப் பேச்சு அட்சர சுத்தமாக வந்துவிட்டது.சதா எந்நேரமும் மது குடித்தே தன் வாழ்க்கையைத் தொலைந்துவிட்ட ஒரு அன்பர். சுவாமிகளைச் தரிசிக்க வந்தர். தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை இதற்கே செலவழித்ததால். குடும்பம் நிர்க்கதியாகிப் போய்விட்டது. வீட்டிலும் நிம்மதி இல்லை. அந்த மது ப்ரியருக்கு. கதிர்காம சுவாமிகளிடம் போனால் எல்லா பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைப்பதாகச் சொல்கிறார்களே.... நாமும் போய்த்தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் உப்பனாற்றங்கரைக்கு சுவாமிகளின் குடிசைக்கு வந்தார். அந்த மது ப்ரியர். வந்தவரின் மனதில் உள்ள எண்ணத்தைப் புரிந்துகொள்வதில் சுவாமிகளுக்கு சிரமம் இருக்குமா என்ன?

வந்த மது ப்ரியரின் கையில் ஒரு சொம்பை கொடுத்து உப்பனாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருமாறு சொன்னார் சுவாமிகள். அவரும் குழப்பத்துடனே உப்பானற்றுக்குப் போய் நீர் முகர்ந்து வந்து சுவாமிகளிடம் கொடுத்தார். அதைப் பத்து நிமிடங்கள் தன் கையில் வைத்திருந்தபடியே அவரிடம் சில விஷயங்களைப் பேசினார் சுவாமிகள். பிறகு, அந்தச் சொம்பு நீரை அவரிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னார். அந்தச் சொம்பு நீரை மடமடவென்று குடித்து முடித்த அவர் அதிர்ந்து போனார். காரணம்-மதுவில் இருக்கும் அதே சுவை. கொஞ்சமும் குறையாமல் அந்த நீரிலும் இருந்ததுதான் சுவாமிகளின் அருளால் சாதாரண குடிநீர் இப்படி மாறிப் போய்விட்டிருந்தது. அன்பரே.... பாவம் எத்தனை நாட்களுக்குத்தான் கடைக்குப் போய் காசு கொடுத்து வாங்கிக் குடிப்பீர்கள்? இன்று ஒரு நாளைக்காவது நீங்கள் இலவசமாகக்  குடிக்கலாமே என்றுதான் இப்படிச் செய்தேன் என்றார் சுவாமிகள் புன்னகையுடன்  வந்திருந்தவருக்கு வெட்கமும் அவமானமும் சேர்ந்து கொண்டது. கண்ணீர் மல்க, சுவாமிகளின் திருப்பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.  நாளை முதல் குடிக்கிற எண்ணம் உனக்கு வருதானு பார் என்று சொல்லி அனுப்பினார் சுவாமிகள்.

என்னே ஆச்சரியம்! மறுநாளில் இருந்து அந்த அன்பர் குடிப் பழக்கத்தை அறவே நிறுத்திவிட்டார். இதை சுவாமிகளிடம் வந்து சந்தோஷமாகச் சொல்லிவிட்டுப் போனார் அவர். சில நேரங்களில் சுவாமிகள் தனியே அமர்ந்திருப்பார். ஆனால், எதிரே அமர்ந்திருக்கும் ஒருவரிடம் வெகு சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதுபோல் தோற்றம் இருக்கும். அது போன்ற வேளைகளில் ஞானானந்த கிரி சுவாமிகளிடம் கதிர்காம சுவாமிகள் உரையாடிக் கொண்டிருப்பதாகப் பின்னாளில் அவரின் பக்தர்கள் சொன்னார்கள். இரும்பைத் தங்கமாக்கும் ரசவாத வித்தையும் உடலை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் போட்டுச் செய்யும் நவகண்ட யோகமும் சுவாமிகளுக்குப் பரிச்சயமானவை. நவகண்ட யோகத்தில் சுவாமிகள் இருக்கும்போது பாம்புகள் அவரைச் சுற்றி இருக்கும். அந்த வேளையில் பக்தர்கள் எவராவது திடீரென முன்னேறிவிப்பே இல்லாமல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்துவிட்டால், அவ்வளவுதான்!  இதனால், அக்கம்பக்கத்தில் உள்ள பக்தர்களிடம் கதவு மூடி இருந்தால், திறந்துகொண்டு உள்ளே வரும்போது ஜெய் சீதாராம் என்று சொல்லிவிட்டு உள்ளே வாருங்கள் என்பார் சுவாமிகள். அதாவது அப்படிச் சொல்லிவிட்டு, அவர்கள் உள்ளே வருவதற்குள் சுவாமிகள் இயல்பு நிலைக்கு வந்து விடுவார்.சீர்காழி தென்பாதியில் சுவாமிகளே கட்டிய முருகன் கோயில் ஒன்று இருக்கிறது. இங்கு முருகப் பெருமான் பிரதான மூலவராகவும், தவிர விநாயகர் மற்றும் வேணுகோபாலன் ஆகிய விக்கிரகங்களும் பிரதிஷ்டை ஆகி உள்ளன. சுவாமிகள் பயன்படுத்திய சில பொருட்களும் தரிசிக்கக் கிடைக்கும் இந்த கோயில் பூஜைகள் சிறப்பாக நடந்து வருகின்றன. நாயன்மார்கள் திருநட்சத்திரத்தன்று அபிஷேக, ஆராதனைகள் செய்யும் வழக்கத்தை சுவாமிகள் இந்த கோயிலில் துவக்கி வைத்தார். அது இன்றளவும் நடைபெற்று வருகிறது. இந்த கோயில் அடிக்கடி தங்கும் வழக்கம் சுவாமிகளுக்கு உண்டு. இங்கே தான் கட்டிய ஆறடி அகலமும் ஆறடி ஆழமும் உள்ள தனி அறையில் அவ்வப்போது சென்று நிஷ்டையில் கூடி விடுவது சுவாமிகளின் வழக்கம். நிஷ்டையில் உட்கார்ந்தால் ஸமாதி நிலைக்குப் போய்விடுவார் சுவாமிகள். இந்த ஸமாதி நிலைக்கு நேரம் காலம் எல்லாம் தீர்மானிக்க மாட்டார் சுவாமிகள். சில வேளைகளில் மூன்று நாட்கள், ஒரு வாரம். ஒரு மாதம் என்றெல்லாம்கூட நிஷ்டையின் நாட்கள் நீட்டிக்கப்பட்டு விடும்.

இந்தக் காலத்தில் அன்னம், ஆகாரம் எதுவும் இல்லை. சுவாமிகள் நிஷ்டையில் இருக்கும்போது பெரிய சைஸில் உள்ள நல்ல பாம்பு ஒன்று சுவாமிகளின் தலைக்கு மேலே படம் எடுத்த கோலத்தில் அவரைக் காவல் காத்து வரும் எப்போதாவது முக்கியமான பக்தர்கள் எவராவது வருவதாகத் தெரிந்தால், சுவாமிகளின் காதில் உஸ் உஸ் என்று சத்தம் எழுப்பி, அவருக்குத் தகவல் கொடுக்கும். உடனே சுவாமிகளும் நிஷ்டை கலைந்து. சரி... நீ போகலாம் என்று பாம்புக்கு விடைகொடுத்து வெளியே வருவார் சுவாமிகள். ஸ்ரீகதிர்காம சுவாமிகள் இருநூறு வயதைத் தாண்டியவர் என்பது அவரது பக்தர்களின் நம்பிக்கை. எப்படி  என்பதற்கும் அவர்கள் விளக்கம் தருகிறார்கள். கிழக்கிந்திய கம்பெனியினர் இந்தியாவுக்கு வந்து ஆட்சி செய்ததைப் பற்றித் தனது கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். அதாவது அப்போது கதிர்காம சுவாமிகள் இருந்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது. தவிர காஷ்மீரில் 25 வருடம் பர்மாவில் 25 வருடம். இமயமலையில் 25 வருடம். இலங்கையில் 65 வருடம் என்று அவர் இருந்ததாகச் சொல்கிறார்கள். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது சுவாமிகள் வயதை ஊகிக்கலாம் என்கிறார்கள் அவருடைய பக்தர்கள்.1962-ஆம் வருடம் நவம்பர் மாதம் 19-ஆம் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு சுவாமிகள் நிர்விகல்ப சமாதி நிலையை அடைந்தார். தான் சமாதி ஆகப் போவதை முன் கூட்டியே உணர்ந்து கொண்ட ஸ்ரீகதிர்காம சுவாமிகள். முதல் நாள் முக்கியமான சில பக்தர்களை வரவழைத்தார். அடுத்த நாளின் திதி, நட்சத்திரம் இவற்றைச் சொல்லிவிட்டு, நாளை ஒரு முக்கியமான தினம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அதோடு உப்பு. சாம்பிராணி, கற்பூரம், விபூதி இவற்றைப் பெருமளவில் இன்றே வாங்கி வையுங்கள் என்றும் சொன்னார். சுவாமிகள் எது சொன்னாலும் அதை உடனே நிறைவேற்றும் அவரது பக்தர்களும் அன்றைய தினமே அந்தப் பொருட்களை வாங்கி வைத்து விட்டார்கள்.

அடுத்த நாள் நள்ளிரவு அமர்ந்த நிலையிலேயே சுவாமிகள் சமாதி ஆனார். அதுவரை, இதற்காகத்தான் பொருட்களை முதல் நாளே வாங்கி வைக்கச் சொன்னார் என்பது எவருக்கும் புரிபடவில்லை அதன் பின், சுவாமிகள் இருக்கும்போதே குறிப்பால் உணர்த்திய இடத்தில் அவரது நிர்விகல்ப சமாதி அமைந்தது. அதன் மேல் லிங்க பிரதிஷ்டையும் அமைந்தது. இந்த கோயில் உப்பனாற்றங் கரையில் அமைந்துள்ளது. பலிபீடம், நந்திதேவர், கருவறை, பிராகாரம் என்று இந்த அதிஷ்டானத் திருக்கோயில் காணப்படுகிறது.

தகவல் பலகை:தலம் :சீர்காழி.சிறப்பு :கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானத் திருக்கோயில்.

இருப்பிடம்: சீர்காழியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் மார்க்கத்தில் சீர்காழியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் - அதாவது சீர்காழி நகரத்திலேயே சட்டநாதபுரம் பகுதியில் அமைந்துள்ளது சுவாமிகளின் அதிஷ்டானம்.மயிலாடுதுறையில் இருக்கும் சீர்காழிக்கும், சீர்காழியில் இருந்து மயிலாடுதுறைக்கும் எண்ணற்ற பேருந்துகள் உள்ளன. இறங்கவேண்டிய பேருந்து நிறுத்தம் - உப்பனாறு. அங்கே இறங்கிக்கொண்டால். உப்பனாற்றங்கரையில் ஓரத்தில் சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது.

தொடர்புக்கு:
டாக்டர்: ஆர்.வி. நாதன் (தங்குடு),
ப.எண்: 16, பு.எண்: 29, வல்லபபாய் படேல் தெரு, தென்பாதி, சீர்காழி - 609 111, நாகை மாவட்டம், போன்: 04364 - 270650,

வெள்ளி, 13 மே, 2022

நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.

1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாதங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாசங்கள்(3)

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை:

1.ப்ரபவ
2.விபவ
3.சுக்ல
4.ப்ரமோதூத
5.ப்ரஜோத்பத்தி
6.ஆங்கீரஸ
7.ஸ்ரீமுக
8.பவ
9.யுவ
10.தாது(தாத்ரு)
11.ஈச்வர
12.வெகுதான்ய
13.ப்ரமாதி
14.விக்ரம
15.விஷு
16.சித்ரபானு
17.ஸுபானு
18.தாரண
19.பார்த்திப
20.வ்யய
21.ஸர்வஜித்
22.ஸர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜய
29.மன்மத
30.துன்முகி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வாரி
35.ப்லவ
36.சுபக்ருது
37.சோபக்ருது
38.க்ரோதி
39.விச்வாவஸு
40.பராபவ
41.ப்லவங்க
42.கீலக
43.ஸெளம்ய
44.ஸாதாரண
45.விரோதிக்ருத்
46.பரிதாபி
47.பிரமாதீச
48.ஆனந்த
49.ராக்ஷஸ
50.நள
51.பிங்கள
52.காளயுக்தி
53.ஸித்தார்த்தி
54.ரெளத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்தோத்காரி
58.ரக்தாக்ஷி
59.க்ரோதன
60.அக்ஷய.

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்:

1.வஸந்தருது (சித்திரை, வைகாசி)
2.க்ரீஷ்மருது (ஆனி, ஆடி)
3.வர்ஷருது (ஆவணி, புரட்டாசி)
4.ஸரத்ருது (ஐப்பசி, கார்த்திகை)
5.ஹேமந்தருது (மார்கழி, தை)
6.சிசிரருது (மாசி, பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும் :

1.சித்திரை (மேஷம்)
2.வைகாசி (ரிஷபம்)
3.ஆனி (மிதுனம்)
4.ஆடி (கடகம்)
5.ஆவணி (சிம்மம்)
6.புரட்டாசி (கன்னி)
7.ஐப்பசி (துலாம்)
8.கார்த்திகை (விருச்சிகம்)
9.மார்கழி (தனுர்)
10.தை (மகரம்)
11.மாசி (கும்பம்)
12.பங்குனி (மீனம்)

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும் :

1.ஸுக்ல பக்ஷம் (அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

2.க்ருஷ்ணபக்ஷம் (பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.

க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும் :

1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி
13.திரையோதசி
14.சதுர்த்தசி
15பெளர்ணமி(அ)அமாவாசை.

வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும் :

1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்:

1.அஸ்வினி
2.பரணி
3.கர்த்திகை
4.ரோகினி
5.மிருகசீரிஷம்
6.திருவாதிரை
7.புனர்பூசம்
8.பூசம்
9.ஆயில்யம்
10.மகம்
11.பூரம்
12.உத்திரம்
13.ஹஸ்த்தம்
14.சித்திரை
15.சுவாதி
16.விசாகம்
17.அனுஷம்
18.கேட்டை
19.மூலம்
20.பூராடம்
21.உத்ராடம்
22.திருவோணம்
23.அவிட்டம்
24.சதயம்
25.பூரட்டாதி
26.உத்திரட்டாதி
27.ரேவதி.

கிரகங்கள் ஒன்பது ஆகும்:

1.சூரியன் (SUN)
2.சந்திரன் (MOON)
3.அங்காரகன் (MARS)
4.புதன் (MERCURY)
5.குரு (JUPITER)
6.சுக்ரன் (VENUS)
7.சனி (SATURN)
8.இராகு (ASCENDING NODE)
9.கேது (DESCENDING NODE)

இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக (பாகங்கள்) பிரிக்கப்படும், நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள் (பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.

நட்சத்திரங்கள், இராசி, இராசிஅதிபதி.

அஸ்வினி, பரனி, கார்த்திகை முன் ¼ மேஷம், செவ்வாய்

கர்த்திகை பின்3/4, ரோகினி, மிருகசீரிஷம் முன்1/2 ரிஷபம்,
சுக்கிரன்

மிருகசீரிஷம்பின்1/2, திருவாதிரை, புனர்பூசம்முன்3/4, மிதுனம், புதன்

புனர்பூசம் பின் ¼, பூசம், ஆயில்யம்
கடகம், சந்திரன்

மகம், பூரம், உத்திரம் முன் ¼, சிம்மம்,
சூரியன்

உத்திரம் பின்3/4, ஹஸ்தம், சித்திரை முன்1/2, கன்னி, புதன்

சித்திரை பின்1/2, சுவாதி, விசாகம் முன்3/4, துலாம், சுக்கிரன்

விசாகம் பின்1/4, அனுஷம், கேட்டை
விருச்சிகம், செவ்வாய்

மூலம், பூராடம், உத்திராடம் முன்1/4
தனுசு, குரு

உத்திராடம்பின்3/4, திருவோணம், அவிட்டம் முன்1/2, மகரம், சனி

அவிட்டம் பின்1/2, சதயம், பூரட்டாதி முன்3/4, கும்பம், சனி

பூரட்டாதி பின்1/4, உத்திரட்டாதி, ரேவதி, மீனம், குரு

சோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என கண்டறிந்து, அந்த தெய்வத்தை அதிதேவதையாக கூறியுள்ளனர். ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிதேவதை.

சூரியன் - சிவன், சந்திரன் - பார்வதி

பரமனும், பார்வதியும் படியளப்பவர்கள் என்ற வழக்கு உண்டு. அது போலவே அனைத்திற்கும் மூலகாரணாய் சூரியன் இருக்கிறான். அவன் கொடைக்கு நிகரில்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவன் உதவியின்றி பிராணன் கிடைப்பதில்லை. ஆகவே சூரியன் சிவனானார். பரமன் மனைவி பார்வதி, சந்திரனுக்கு அதிதேவதை. பூமியை தாயைப் போல் குளிரூட்டும் கிரகம். சூரியனிடத்தில் வெப்பத்தை பெற்று குளிர்ந்த ஒளியாய் தந்து நீர் நிலைகளை பொங்க வைக்கும்.
இந்த இரண்டுகிரகங்களின் நிலை சாதகத்தில் - நல்ல முறையில் இருந்தால், ஒரு ஜாதகர் தன் இன பந்துக்களுடன் இனிதே வாழ்வான் என்பது உறுதி.

செவ்வாய் :சுப்ரமண்யர்

ஜாதகத்தில் வீரத்திற்கு இன்றியமையாதது செவ்வாய் பலம். இரும்பு கிரகம். உடல் பலத்திற்கு இன்றியமையாதது செவ்வாயின் நிலை. வீரத்தில் சிறந்த தெய்வம் முருகன். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி தெய்வமும் இல்லை என்பது பழமொழி. அசுரர்களை தேவர்களுக்காக வதம் செய்த தெய்வம் முருகன். ஆதலால் செவ்வாய்க்கு அதிதேவதை சுப்பிரமணியர்.

புதன் :விஷ்ணு

ஒரே நேரத்தில் இருவேறு குணத்தைக் கொண்ட கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்தில் இரு நிறம் கொண்ட தெய்வம் விஷ்ணு. அதுபோலவே ஒருபுறம் கடும் வெப்பமும் மறுபுறம் கடும் குளிரும் கொண்டது. எந்த கிரகத்தின் நேர்கோட்டில் 10 பாகைக்குள் உள்ளதோ அதன் குணத்தை பிரதிபலிக்க வல்லது. நியாயம் தவறாமல் கடமையை செய்வதற்கு இன்றியமையாதது இதன் நிலை.

குரு : பிரம்மா, தட்சிணாமூர்த்தி (குரு)

ஜாதகத்தில் கல்வி, கேள்வி, கீர்த்திக்கு வழிவகுக்கும் கிரகம். தற்சுழற்சி அதிகம் உள்ளது. இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே விருத்தியாகும். ஆசிரியர் போன்ற குணத்தை உடையது.

சுக்ரன் : லக்ஷ்மி, இந்திரன்

ஒரு ஜாதகத்தில மற்ற கிரகங்கள் நிலை கெட்டிருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வல்ல கிரகம் சுக்ரன். களத்திர காரகன். லக்ஷ்மியை போல் ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடிய கிரகம். ராஜயோகத்தையும், சுகபோக வாழ்க்கையையும், மனைவி வழி சொத்து சேர்க்கையையும் மனைவியின் குண நலத்தையும் கொடுக்கும். 8ம் இடத்திற்கு உரிய கிரகம். இந்திரன் குணத்தைக் கொண்டது. மழைக்கு காரணமான குளிர்ந்த கிரகம்.

சனி : எமன், சாஸ்தா

உஷ்ணத்தை பிரதிபலிக்கும் கிரகம். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். சனி 0 பாகையில் குளிர்ச்சியை கொடுக்கும். அதனால் சாஸ்தாவிற்கு நிகராக சொல்லப்பட்து. ஆனால் பார்வை உக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலும் சனிக்கு நிகர் சனியே வேறு கிரகம் இல்லை (ஆயுள் காரகன்).

ராகு: காளி, துர்கை

கருமாரியின் நிழல் கிரகம். சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இதன் 0 பாகையில் சாதகத்தில் வரும்போது பலன் தருவது அரிது. கருமை நிறம் உடையது. ராகு, கேதுக்கு இடையில் மற்ற கிரகங்கள் உடைபட்டு விட்டால் கால சர்ப்ப யோகம், தோஷம் என்று கூறுவதுண்டு. சாதகனின் பிற்பட்ட காலங்களிலேயே பலன் கொடுக்கும். இளம் வயதில் அவதிகளை சந்திக்க நேரும். துஷ்ட குணத்துடன் கொடுக்க வல்ல கிரகம்.

கேது :விநாயகர், சண்டிகேஸ்வரர்

ஞானத்தை கொடுக்கும் கிரகம். ஒரு ஜாதகன் பிறக்கும்போது 0 பாகை ஜன்மத்திலிருந்தால் அந்த ஜாதகனுக்கு சித்தியையும் முக்தியையும் கொடுக்கும். நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமலிருந்து பணி செய்வதில் வல்லமையைத் தரும். சோம்பல் சேர்ந்த திடீர் மாற்றத்தை தரவல்ல கிரகம். (நிழல் கிரகம்).

உடலுக்கு ஒன்பது வாசல் :

மனிதர்களுக்கு ஒன்பது வாசல் உள்ளது அவை ஒவ்வொன்றையும் கிரகம் ஆட்சி செய்கின்றது அவையானவன

1,சூரியன்-இடக்கண்
2,சுக்கிரன்-வலக்கண்வாசல்
3,சந்திரன்-வாய் வாசல்
4,புதன்-இடமூக்கு வாசல்
5,செவ்வாய்-வலமூக்கு வாசல்
6,வியாழன்-வலக் காதுவாசல்
7,சனி-இடக்காது வாசல்
8,இராகு-மலவாசல்
9,கேது-சிறுநீர் வாசல் ஆகும்

இவற்றுள் அடைக்கப்பட்ட வாயில் ஆகிய கொப்பூழை குளிகன் அல்லது மாந்தி ஆட்சி செய்கிறது! உயிர் பிரியும்போது எந்தத் திசை,எந்தப் புத்தி நடக்கிறதோ அதற்குரிய வாயில் வழியாக உயிர் பிரியும்!

நவரத்தினங்கள்:

1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.

பூதங்கள் ஐந்து வகைப்படும் :

1.ஆகாயம் - வானம்
சப்தம், ஓசை
2.வாயு - காற்று
ஸ்பர்ஷம், தொடு உணர்வு
3.அக்னி - நெருப்பு(தீ)
ரூபம், ஒளி (பார்த்தல்)
4.ஜலம் - நீர்
ரஸம், சுவை
5.பிருத்வி - நிலம்
கந்தம், நாற்றம் (மணம்)

மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும் :

1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.

பெறுகள் பதினாறு வகைப்படும்:

1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்..

புராணங்கள் பதினெட்டு வகைப்படும்,  இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.

1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம்
3.பிரம்மவைவர்த்த புராணம்
4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம்
14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம்
16.மார்க்கண்டேய புராணம்
17.பிரம்மாண்ட புராணம்
18.பவிஷ்ய புராணம்.

இதிகாசங்கள் முன்று வகைப்படும்.:

1.சிவரகசியம்
2.இராமாயணம்
3.மஹாபாரதம்.

இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது....

40வது பட்டம் அழகியசிங்கர்


மகாவிஷ்ணுவின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் நிகழ்ந்த தலம் துவரிமான். இங்குள்ள ரங்கராஜப்பெருமாள் கோயிலுக்கு அருகில் அகோபில ஜீயர் சுவாமியின் பிருந்தாவனம் உள்ளது. மடத்தின் 40வது பட்டமான இவரது திருநாமம் ரங்கநாத சடகோப யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள்.


1923ல் இவர் மதுரை கூடலழகர், அழகர்கோவில், திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்துார் தலங்களை தரிசித்து விட்டு, துவரிமானில் தங்கிய போது முக்தியடைந்தார். இவரது சமாதிக்கோயிலான பிருந்தாவனம் வைகைநதிக்கரையில் கட்டப்பட்டது. கருவறையில் ஜீயர் வலது கையில் திருத்தண்டும், இடது கையில் ஓலைச்சுவடியும் தாங்கிய கோலத்தில் காட்சியளிக்கிறார். செப்புத்திருமேனி ஒன்றும் உள்ளது.
ஜீயரின் அற்புதங்கள்: ஜீயர் மடாதிபதியாக இருந்த காலத்தில் அற்புதங்கள் பல நிகழ்த்தினார். ஆந்திராவின் கர்நுால் மாவட்டத்தில் உள்ளது அகோபிலம் மடம். இங்குள்ள நரசிம்மர் கோயிலுக்கு அருகில் பிரம்ம ராட்சஷன் ஒருவன் இருந்ததால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இதையறிந்த ஜீயர், நரசிம்ம மந்திரம் ஜபித்து ராட்சஷனை விரட்டினார். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுடன் நேரில் பேசும் திருக்கச்சிநம்பி போல ஜீயரும் பேசும் சக்தி பெற்றிருந்தார். ஒருமுறை மடத்தின் யானைக்கு மதம் பிடிக்கவே, பாகனால் அடக்க முடியவில்லை. இந்நிலையில் ஜீயர், யானையின் முகத்தில் தீர்த்தம் தெளித்து கையால் தடவிக் கொடுக்க அது சாந்தமானது.

ஆந்திராவிலுள்ள கட்வல் சமஸ்தானத்தில் சோமபூபால் என்பவரின் ஆட்சிக்காலத்தில் சென்னகேசவப் பெருமாள் கோயில் கட்டப்பட்டது. அப்போது கோயிலுக்குள் பிராமணர் ஒருவர் கொல்லப்படவே சோமபூபாலுக்கு வாரிசு இல்லாமல் போனது. இதன்பின் கட்வல் வந்த ஜீயர் மூன்றாண்டுகள் தங்கி, பெருமாளுக்கு புதிய சிலைகளை நிர்மாணித்து கும்பாபிேஷகம் நடத்தவே நிலைமை சீரானது. இதன்பின் கட்வல் சமஸ்தானம் ஜீயருக்கு பொன்னும், பொருளும் அளித்து பெருமை சேர்த்தது.

பரிகார வழிபாடு: ஜீயரை தரிசித்து 16 முறை வலம் வந்தால் எதிரி பயம், நீதிமன்ற வழக்கு, கடன் பிரச்னை நீங்கும். மாணவர்கள் துளசிமாலை சாத்தி வழிபட ஞாபகதிறன் அதிகரிக்கும். கல்வி வளர்ச்சி உண்டாகும். விளக்கு ஏற்றி வழிபடும் கன்னியருக்கு நல்ல மணவாழ்வு கிடைப்பதோடு குழந்தைப்பேறும் உண்டாகும். துளசி தீர்த்தம் பருகினால் பயந்த கோளாறு, காரணமற்ற அச்சம் நீங்கும். அர்ச்சனை செய்த மிளகை சாப்பிட நீண்டநாள் நோய் விலகும். சனிக்கிழமையன்று தரிசித்து தீபமேற்ற கிரக தோஷம் பறந்தோடும். வருஷாபிேஷகமான ஆனிவிசாகத்தை முன்னிட்டு 10 நாள் திருவிழா நடக்கும். ஜீயரின் அவதரித்த மார்கழி விசாகம், நினைவு நாளான தைமாதம் தேய்பிறை திரயோதசியில் சிறப்பு பூஜை நடக்கும்.

எப்படி செல்வது? மதுரை– சோழவந்தான் ரோட்டில் மேலக்கால் வழியில் 8 கி.மீ.,
விசேஷ நாட்கள்:ஆனி விசாகம், மார்கழி விசாகம், தை தேய்பிறை திரயோதசி திதி
நேரம்: காலை 05:00 - 08:00 மணி, மாலை 04:00 – இரவு 07:00 மணி
தொடர்புக்கு: 94878 26722, 0452 – 247 5238
அருகிலுள்ள தலம்: துவரிமான் ரங்கராஜப்பெருமாள் கோயில்.

நடனகோபால நாயகி சுவாமிகள்


 நடனகோபாலநாயகி சுவாமிகள், மதுரையில் 1843, ஜனவரி 9 (மார்கழி மிருகசீரிட நட்சத்திரம்) வியாழக்கிழமை அவதரித்தார். இவரது தந்தையார் ரங்கார்யர், தாய் லட்சுமிபாய். பெற்றோர் பிள்ளைக்கு ராமபத்ரன் என்று பெயரிட்டனர். பள்ளியில் படித்த காலத்தில் ஓம் என்ற மந்திரத்தின் பொருளைக் கேட்டு ஆசிரியர்களையே திகைக்கச் செய்தார். அவரது மனம் எப்போதும் இறைச் சிந்னையிலேயே இருந்தது. இளமையில் வணிகர் ஒருவரிடம் கணக்கெழுதும் பணியில் சேர்ந்தார். ஆனால், வணிகர் ராமபத்ரனின் இறைச்சிந்தனையைக் கண்டு வேலையை விட்டு வெளியேற்றினார். பின்னர் தன் வீட்டுத் தொழிலான நெசவுத்தொழிலைச் செய்தார். திடீரென்று ஒருநாள் வீட்டைவிட்டு கிளம்பி, திருப்பரங்குன்றத்தில் துறவியைப் போல யோகத்தில் ஆழ்ந்தார். 12 ஆண்டுகால தவத்திற்கு பின், பரமக்குடி நாகலிங்க அடிகளாரிடம் சதாநந்தர் என்று தீட்சாநாமம் பெற்றார். சித்தரைப் போல பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களிடம் பிரபலமானார்.ஒருமுறை மதுரை அருகில் உள்ள அழகர்கோவில் சுந்தராஜப்பெருமாளை தரிசித்தார். அன்றுமுதல் ஆழ்வார்களின் மீதும், நாலாயிரதிவ்ய பிரபந்தங்களின் மீதும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அங்குள்ள ஆதிநாதசுவாமியை தரிசித்தார். அங்கே, நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடல்களை வடபத்ராரீயர் என்ற பக்தர் பாடிக் கொண்டிருந்தார். அந்த வரிகள் சதாநந்தரின் மனதை கொள்ளை கொண்டது. அவர் அந்த பக்தரை சாஷ்டாங்கமாக பணிந்து தமக்கு வழிகாட்டும்படி கேட்டுக் கொண்டார். அந்த பக்தர், அவரைத் தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார். விஷ்ணுவின் அம்சம் நிறைந்த சதா நந்தருக்கு, நடன கோபால் என்று பெயரிட்டார். ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், கீதாபாஷ்யம், பிரம்மசூத்திர பாஷ்யம், பகவத்கீதை, விஷ்ணு புராணம், நாலாயிரதிவ்ய பிரபந்தம் ஆகியவற்றை அவரிடம் கற்று முடித்தார். தன்னை ஒரு பெண்ணாகவும், திருமாலை ஆணாகவும் கருதி ஹரிபக்தியில் ஆழ்ந்தார். பின், பல திவ்யதேசங்களுக்கு தீர்த்தயாத்திரை புறப்பட்டார். ஸ்ரீரங்க ரங்க நாதர் மீது பாடல்கள் பாடினார். அங்கிருந்த ஸ்ரீரங்கநாராயண ஜீயர் நடனகோபாலை நடனகோபால நாயகி என்று அழைத்தார். தம்முடைய வாழ்நாள் முடிய இருப்பதை முன்கூட்டியே உணர்ந்து, அழகர்கோவில் அருகிலுள்ள காதக்கிணறு என்னுமிடத்தில் தமக்கான பிருந்தா வனத்தை(சமாதி) அமைக்குமாறு கூறினார். 1914 ஜனவரி 8, வைகுண்ட ஏகாதசி நாளில்பகவான் ஹரி வந்து விட்டார் என்று சொல்லிக் கொண்டே மகாவிஷ்ணுவின் திருவடிகளில் இணைந்தார். நடனகோபால நாயகி சுவாமிகள் என்று பக்தர்களால் இன்று போற்றப்படுகிறார். இவர் பிரபந்தப்பாடல்கள், பக்திரச கீர்த்தனைகள், நாமாவளிகள், தமிழ் கீதகோவிந்தம் ஆகியவற்றை இயற்றியுள்ளார். ஸ்ரீமதே ராமானுஜா என்ற மந்திரம் ஜெபித்தால் மனத்தூய்மை உண்டாகும் என்கிறார் சுவாமிகள். ராமானுஜரின் உரைகளையும்,உபதேசங்களையும் படிக்கவேண்டும் என்று நம்மை வேண்டுகிறார். பிருந்தாவனக்கோயிலில் இவர் வழிபட்ட ருக்மணி, சத்யபாமா சமேத நடனகோபால கிருஷ்ணர் விக்ரகம் உள்ளது. இவர் பயன்படுத்திய ஆண்டாள் கொண்டை, துளசிமணிமாலை, பாதுகையை (காலணி) ஆகியவற்றை இங்கு தரிசிக்கலாம். இவரது அவதார தினம் டிசம்பர் 21, மார்கழி மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிருந்தாவனத்தில் கொண்டாடப்படுகிறது.

குரு பாடல்கள்

குரு பாடல்-1

மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்கு ஆசான் மந்திரி
நறைசொரி கற்பகப்பொன்
நாட்டினுக்கு அதிபதியாகி
நிறைதனம் சிவிகை மன்றல்
நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன்
இருமலர்ப்பாதம் போற்றி போற்றி!

குரு பாடல் 2

அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி
நன்றாக வானவர் மாமுனிவர் நாடோறும்
நின்றார வேத்து நிறைகழலோன் புனைகொன்றைப்
பொன்றாது பாடிநம் பூவல்லி கொய்யாமோ

குரு பாடல் 3

ஆலின்கீழ் அறங்களெல்லாம் அன்றவர்க்கு அருள்செய்து
நூலின் கீழ் அவர்கட்கெல்லாம்
 நுண்பொருளாகி நின்று
காலின்கீழ் காலன்தன்னைக்
கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யு மானார்
பழனத்தெம் பரமனாரே.

குரு பாடல் 4

குணமிகு வியாழ குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரக தோஷமின்றி காத்தருள்வாயே

குரு பாடல் 5

பெருநிறை செல்வம் மேன்மை
பெற்றிடும் சுகங்கள் யாவும்
வருநிறை மரபு நீடி வாய்க்கும் சந்ததி தழைக்க
குருநிறை ஆடை ரத்னம்தான் பெற அருளும் தேவ
குருநிறை வியாழன் பொற்றாள்
குரைகழல் தலைக் கொள்வோமே.

குரு பாடல் 6

ஆலநிழல் கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்
ஆலம் அமுது செய்வ தாடுவதீ- ஆலம்
துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்
துறையுடையான் சோராத சொல்லு

குரு பாடல் 7

வேத நூல் தர்ம சாஸ்திரம்
மேன்மையை அறிந்தோனாகி
சாதனையால் கற்பகத்
தனிநாட்டின் இறைவனாகி
சோதியாய் குருவுமாகி
சொர்க்கத்தை மண்ணில் நல்கும்
ஆதியாம் குருவே! நின்தாள்
அடைக்கலம் போற்றி! போற்றி!!

குரு பாடல் 8

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்கமுதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.