புதன், 23 செப்டம்பர், 2020

ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு பகுதி அறிமுகம்

ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு பகுதி அறிமுகம்
 


இன்று முதல் வரலாறு சுருக்கம் ஆரம்பம் :
 

புரட்சித்துறவி என்று போற்றப்படும் ராமானுஜர் கி.பி. 1017-ல் சக ஆண்டு 939, கலி ஆண்டு 4118, வியாழக்கிழமை, சித்திரை மாதம் 12-ஆம் தேதி சுக்லபட்ச பஞ்சமி திதியில், கடக ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவரது பெற்றோர் அசூரிகேசவசோமாயாஜுலு - காந்திமதி. குழந்தையைப் பார்க்க திருப்பதியிலிருந்து வந்த தாய்மாமன் திருமலைநம்பி, லட்சுமணன் அம்சமாக குழந்தை இருந்ததால் அதற்கு இளையப் பெருமாள் என்று பெயர் சூட்டினார். இளைய நம்பிக்கு எட்டு வயதான போது உபநயனம் செய்து வைக்கப்பட்டது. அவரது தந்தையே முதலில் கல்வி கற்பித்தார். அவரது பதினாறாவது வயதில் குஞ்சம்மாள் எனும் பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். அதன் பின் கொஞ்சநாட்களிலேயே அவரின் தந்தை காலமானார். தந்தையின் மறைவுக்குப்பின் குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்தார் இளைய பெருமாள்.
 

இந்த நிலையில், இளைய பெருமாளை ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்ல வந்து கொண்டிருந்தார் பெரிய நம்பி. அதே சமயம் பெரிய நம்பியிடம் கல்வி பயில திருவரங்கம் சென்று கொண்டிருந்தார் இளைய பெருமாள். இருவரும் மதுராந்தகம் பெருமாள் கோயிலில் சந்தித்துக் கொண்டார்கள். பெரிய நம்பி, இளைய பெருமாளை அங்கேயே மாணவனாக ஏற்று பஞ்ச சமஸ்காரம் செய்து வைத்தார். அப்போது அடியோடு திருப்பெயராக ராமானுஜர் என்று பெயரிட்டார். அன்று முதல் இன்று வரை அந்தப் பெயரே நிலைத்து விட்டது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், ராமானுஜர் துறவறம் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. அவரது துறவிக் கோலத்தைப் பார்த்த திருக்கச்சிநம்பி, யதிராஜா என்றழைத்தார். அதாவது துறவிகளின் அரசன் என்று பொருள். துறவிக்கோலத்தில் காஞ்சி கோயிலுக்குச் சென்றார் யதிராஜர். அவரைப் பார்த்த கோயில் அர்ச்சகர் ராமானுஜமுனி என்றழைத்தார். 

ராமானுஜர் பிட்சைக்குப் போகும் போது ஆண்டாளின் பாசுரங்களைப் பாடிச் செல்வது வழக்கம். இதனால் அவர் திருப்பாவை ஜீயர் என்று திருவரங்கத்து மக்களால் அழைக்கப்பட்டார். வில்லிப்புத்தூர் கோயிலுக்கு ராமானுஜர் சென்ற போது நம் கோயிலில் அண்ணார் என்று பக்தர்கள் அழைத்தார்கள். ஆளவந்தாரின் ஆதீனத்தை ஏற்றுக் கொண்ட பின் ஸ்ரீரங்கம் சென்ற ராமானுஜரை உடையவர் என்று போற்றினார்கள். ஐந்து ஆசிரியர்களின் பாதங்களில் அமர்ந்து பாடம் கேட்டதால் பஞ்சாசார்ய சீடர் என்று சொல்லப்பட்டார். பிரம்ம சூத்திரத்திற்கு வியாக்கியானங்களை எழுதி பாஷ்யம் அருளியதால் பாஸ்யக்காரர் ஆனார். ராமானுஜரை பெருமாளாகவே மக்கள் பார்த்தார்கள். அதனால் பயபக்தியுடன் எம்பெருமானார் என்றழைத்தார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு சங்கு, சக்கரம் வழங்கியதால் அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த பெருமான் என்று ராமானுஜர் பெயர் பெற்றார்.
 

ஸ்ரீபெரும்புதூரில் வாழும் வைணவர்கள் சுவாமி என்றே இவரை அழைத்தனர். ராமானுஜர் சில ஆண்டுகள் கர்நாடக மாநிலம் திருநாராயணபுரத்தில் வசித்தார். பின்னர் அங்கிருந்து ஸ்ரீரங்கம் புறப்படும்போது அங்கு வாழ்ந்த மக்கள் அவரைப் பிரிய மனமின்றித் தவித்தார்கள். அவர்கள் விருப்பப்படி தன்னைப்போல ஒரு விக்ரகத்தை உருவாக்கச் சொன்னார். கைகூப்பி விடைபெறும் கோலத்தில் சிலை வடிக்கப்பட்டது. அந்தச் சிலையைக் கட்டித் தழுவி தன் ஆற்றலை அதில் செலுத்திய ராமானுஜர், நான் இந்த விக்ரக உருவில் உங்களுடன் இருப்பேன். இந்தச் சிலையை என்னைப்போல் பாவித்து வருவீர்களாக என்று அருளாசி வழங்கினார். இத்திருமேனியை தாம் உகந்த திருமேனி என்று போற்றுவார்கள்.
 

இதே போல் அவர் அவதரித்த திருப்பெரும்புதூரில் அந்த ஊர்மக்கள் ராமானுஜருக்கு சிலைவைக்க விரும்பினார்கள். சிலை உருவானது .அந்தச் சிலையை அரவணைத்து தன் தெய்வீக ஆற்றலை சிலைக்குள் செலுத்தினார். அந்த விக்ரகத்தை தமர் உகந்த திருமேனி என்று போற்றுவர். ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் கோயில் வழிபாட்டு முறைகளை ஒழுங்குப்படுத்தி, அங்கு பூஜை முறைகள் செவ்வனே நடைபெறுவதைக் கண்ட வண்ணம் அங்கேயே தங்கியிருந்தார் ராமானுஜர். அப்போது சீடர்கள் அவரது உருவச் சிலை இருந்தால் வழிபடலாமே என்ற எண்ணத்தில் அவரிடம் அனுமதி வேண்டினார்கள்.
 

நூற்றிருபது வயதை எட்டியிருந்த ராமானுஜரின் உடல் நிலை சற்று மோசமாக இருந்தது. கல்லில் சிலை வடிக்குமளவு அவகாசம் இல்லை. எனவே சுண்ணாம்பு மற்றும் அரிய மூலிகைச்சாறுகள் கலந்த சுதை உருவம் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டது. பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் அமைந்த சிலை மீது ஸ்ரீ ராமானுஜரின் காவி உடையைப் போர்த்தினார்கள். இதனால் ஸ்ரீராமானுஜர் உயிருடன் அமர்ந்திருப்பது போல் காட்சித்தந்தது. ஸ்ரீராமானுஜர், பிரம்ம மந்திரத்தின் வாயிலாக மூச்சைப் பிடித்துக் கொண்டு தமது சக்திகளை அந்தச் சிலையில் நிலை நிறுத்தினார். அருகிலிருந்த சீடர்களைப் பார்த்து இது என் இரண்டாவது ஆத்மா. எனக்கும் இந்த வடிவத்திற்கும் வேறுபாடு எதுவுமில்லை. இந்த பூதவுடலை விட்டு இந்தப் புதிய திருமேனியில் நான் குடி கொள்ளப் போகிறேன் என்று சொல்லி அருகிலிருந்த எம்பாரின் மடியில் திருமுடியையும், வடுகநம்பியின் மடியில்  தம் இரண்டு திருவடிகளையும் வைத்துக் கொண்டு, எதிரில் வீற்றிருந்த தம் பரமாச்சாரியாரான ஆளவந்தாரின் இரண்டு பாதுகைகளையும் தியானித்துக் கொண்டு பரமபதத்திற்குச் சென்றார் என்று கூறப்படுகிறது. அன்று சனிக்கிழமை, சக ஆண்டு 1059 (கிபி 1137), மாக மாதம், சுக்லபட்ச தசமி என்று வரலாறு கூறுகிறது. இதனை திருநாட்டுக்கு எழுந்தருளல் என்று வைணவர்கள் கூறுவர். அவரது பூதவுடலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த மண்டபம் அருகே தென்கிழக்கு மூலையில் அமர்ந்த நிலையில் பதப்படுத்தி தனிச்சந்நிதியில் எழுந்தருளச் செய்து வழிபடலாயினர். இத்திருமேனியை தாமான திருமேனி என்பர். பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, மற்றும்  அரிய மூலிகைகளினால் அன்று அவரது திருமேனி பதப்படுத்தப் பட்டதால், இன்றும் அவர் உயிருடன் அமர்ந்திருப்பது போல் காட்சி தருகிறார். இது குறித்து பல கருத்துக்கள் நிலவினாலும், இன்று தனிச்சந்நிதியில் ஸ்ரீராமானுஜரின் திருமேனியை தரிசிக்கும் போது நிஜ உருவத்தைக் காண்பது போல் தெரிகிறது. தற்பொழுதும் வருடத்திற்கு இரண்டு முறை சித்திரை திருவாதிரை மற்றும் ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று பச்சைக்கற்பூரம், குங்கமப்பூ, ஆகியவற்றின் தைலம் கொண்டு அத்திருமேனிக்கு காப்பிடுகிறார்கள். ஸ்ரீராமானுஜருக்கு பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் தனிச்சந்நிதி இருப்பதைக் காணலாம். பெரும்பாலும் கைகளைக் கூப்பிய நிலையிலேயே அவரது வடிவம் இருக்கும். ஆனால், ஓரிடத்தில் மட்டும் சின் முத்திரையுடன் காணப்படுகிறார். அந்த இடம் தான் திருவேங்கடம். இங்கு திரிதண்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சின்முத்திரை என்றால் அத்வைதிகள் சொல்லும் பொருள் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது. சுட்டு விரல் பரமாத்மா; கட்டைவிரல் ஜீவாத்மா. ஆனால் அத்வைதக் கொள்கையை ஒப்புக் கொள்ளாத ஜீவாத்மா வேறு; பரமாத்மா வேறு என்று சொல்லும் ராமானுஜர் எப்படி சின்முத்திரை காட்டியிருக்க முடியும்? இதற்கு அவரே ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். என்ன முயற்சி செய்தாலும் சுட்டு விரல் நிமிர்ந்திருக்கும் போது கட்டை விரலால் சுட்டு விரலின் நுனியைத் தொட முடியாது. சுட்டு விரல் வளைந்து கொடுத்தால் தான் முடியும். அதாவது, பகவான் நம்மீது அருள் பாலித்தால் நாம் அவரை அடைய முடியும் என்று கூறியுள்ளார்.
 

வைணவத்தில் உயர்ந்தவன்  தாழ்ந்தவன் என்ற இன வேறு பாடில்லை. வைணவன் என்றாலே பெருமாள் பக்தன். பெருமாளுக்கு அடியார்கள் அனைவரும் ஒன்று தான் என்ற புரட்சிக் கருத்தினைக் கூறிய ஸ்ரீராமானுஜர் தான் இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலை நிர்வாகித்து வருவதாக நம்புகிறார்கள். கோவில் வரவு - செலவு கணக்குகள் இப்பொழுதும் அவர் சன்னிதியில் வாசிக்கப்படுகிறது. இன்றும் அனைத்து பூஜைகளும் ஸ்ரீராமானுஜருக்கு நடத்திய பிறகு தான் பெருமாளுக்கு நடைபெறுகிறது.
 

உய்ய ஒரு வழி உடையவர் திருவடி
பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந்தவன் பல்கலையோர் தாம்மன்ன வந்த இராமா நுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழ நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.
(இராமானுச நூற்றந்தாதி - 1)

மலர்ந்த தாமரைப் பூவில் வாசம் செய்யும் திருமகளை தன் மார்பில் கொண்டிருக்கும் திருமால்; அந்தத் திருமாலின் புகழையே பாடு பொருளாக அமைத்து திருவாய் மொழி முதலிய பாசுரங்களை அருளிய நம்மாழ்வார்; அந்த நம்மாழ்வாரின் திருவடிகளைப் பணிந்து உய்ந்த இராமானுஜர். நெஞ்சமே ! பலவிதமான கலைகளையும் கற்ற மேன்மக்கள் அனைவருக்கும் சிறப்பான வழிகாட்டியாக, அவர்கள் அனைவருக்கும் அடைக்கலமாக விளங்கிய இந்த இராமானுசருடைய நாமங்களையே நாம் சொல்லி மகிழ்ந்து, இவர் திருவடித் தாமரைகளையே நிலையாகப் பற்றி வாழ்வோம்.

🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐

காசி யாத்திரை

வாரணாசி தனிகுடும்பமாக  காசி  செல்பவர்களுக்கு சிறு தகவல்

காசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?*

*இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!*

*அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன?*

*கீழே கொடுத்துள்ளேன்.*

*அனைவரும் தங்கலாமா?*

இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.

சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது

முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:

Sri Kasi Nattukkottai Nagara Satram
Godowlia,
Varanasi - 221 001 (U.P)
Telephone Nos: 0542 - 2451804,
Fax No: 0542 - 2452404
(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)

Naat Koat Satram
Location Godowlia, Tanga Stanad
Behind Sushil Cinema
Varanasi

கட்டணம் உண்டா?

உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது.

உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.

ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள்
அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.

மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.

எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள்.

இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்
டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்

குளியல் அறைகளில் Water Heater உண்டு
குடிப்பதற்கு Purified Water உண்டு
மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு

சரி உணவு?

விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.

1
காலைச் சிற்றுண்டி: நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.
இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

2.
மதிய உணவு: நேரம் 12:30 மணி 2:30 மணி வரை
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40:00 கட்டணம்

ரூ.4,000:00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.

3. மாலை 4 மணி டீ உண்டு

4. இரவு 7:30 முதல் 9 மணிவரை
இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்
கட்டணம் ரூ.35:00 மட்டுமே

உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு.
AWB
ஓம் நமசிவாய சிவாய
மகாபெரியவா சரணம் 🙏🙏🙏


பவழமல்லி


பவழமல்லி

பவழமல்லிகை தெய்வீக மலராகக் கருதப்படுகிறது. ஆம் தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் பவழமல்லிமரமும் ஒன்று என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. பவளமல்லி பார்ப்பதற்கு மிக அழகானதும், நறுமணம் மிகுந்ததுமான அபூர்வமான மலராகும். இது சவுகந்தியா என்ற ஆபரணத்தை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.

🌹பவழமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம். இலக்கியத்தில் சேடல் என்று அழைக்கப்படுகிறது. புட்ப விதி என்னும் நூலில் பவழ மல்லிகை சண்பக‘ஞாழல் கோட்டூப்பூவகை’ என்று கூறப்பட்டுள்ளது.

🌹அதாவது நாற்பது வகையான கோட்டூப் பூ வகைகளில் பவழமல்லியும் ஒன்று. இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும். பொதுவாக இந்த மரம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பூத்துக் குலுங்கும். இறைவனின் பூஜைக்குரிய மலர்கள் அனைத்தும் செடிகளில் இருந்து தான் பறிக்கப்படும். ஆனால் பொதுவாக மண்ணில் உதிர்ந்து கிடக்கும் பூக்களை பூஜைக்கு பயன் படுத்த மாட்டார்கள். ஆனால் இதற்கு பவழ மல்லி விதிவிலக்காக உள்ளது. இது இரவில் பூத்து அதிகாலையில் உதிர்வதால் அப்படி உதிர்ந்த பவழமல்லிப் பூக்களை சேகரித்துத் தொடுத்து இறைவனுக்கு பயன் படுத்துவார்கள்.

🌹பவழமல்லிமரம் மூன்று இலை தொகுப்புகளைக் கொண்டது. இவற்றில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம். மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது.

🌹பவழமல்லி சிறுமரமாகக் காணப்படும். இந்தியா முழுவதும் பரவலாக பவளமல்லியை பார்க்கலாம். 1500 அடி உயரம் வரையுள்ள இடங்களில் வளரக்கூடியது. சுமார் 15 அடி உயரம்வரை வளரும். தண்டுபாகம் நான்கு பட்டைகளை உடையது. இலைகள் சற்று நீண்டு முட்டை வடிவில் சொரசொரப்புடன் இருக்கும்.

🌹பூக்கள் எட்டு இதழ்களுடன் வெண்மையாகவும், காம்பு பவள (சிவப்பு) நிறத்திலும் பார்ப்பதற்கு அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும். கனிகள் வட்டவடிவில் உறை அமைப்பில் இருக்கும். செடியில் இருந்து உதிரும் போது இருபகுதியாக பிரிந்து விழும். அதில் ஒவ்வொரு பாகத்திலும் சிறிய விதை இருக்கும். அந்த விதையை எடுத்து தொட்டிகளில் ஊன்றி புதிய செடியை உருவாக்கலாம்.

🌹இந்த அற்புதச் செடியைப்பற்றி வாயு புராணம் இவ்வாறு தெரிவிக்கிறது. பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள். ஆனால் சூரியன் இளவரசியை ஏற்கவில்லை. இதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து தனது இன்னுயிரை விடுத்தாள். இளவரசி பாரிஜாதம் தீயில் எரிந்த சாம்பலில் இருந்து தான் பாரிஜாதம் என்ற செடி உருவானது.

🌹சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக் கொள்ள வில்லை என்பதால் இந்த செடி பகலில் சூரியனை பார்த்து பூப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது. இதனால் தான் இதனை வருந்தும் மரம் என்றும் அழைப்பார்கள். தன்னைக் கை விட்ட சூரியனைப் பார்ப்பதை தவிர்ப்பதற்காக இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து. கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் என்று விளக்குவார்கள்.

🌹பாரிஜாதம் என்ற இந்த பவழமல்லி, திருமாலுக்கு உகந்தது. பவழமல்லி வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருப்பதாக நம்புகிறார்கள். தேவலோகத்தில் இருந்த இந்த பாரிஜாதமலர் வேண்டும் என்று சத்யபாமா, ருக்மிணி இருவரும் கிருஷ்ணபகவானிடம் கேட்கவே கிருஷ்ணர் பவழமல்லிமரத்தை கொண்டு வந்து சத்யபாமாவின் வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம். ஆனால் மரம் வளர்ந்து ருக்மிணி வீட்டில் பூக்களை உதிர்த்தது என்றுகூறப்படுகிறது.

🌹இத்தகைய பவழமல்லியில் இருந்து நம் முன்னோர்கள் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான மருந்துகளையும் கண்டு பிடித்து நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள். பவழமல்லி மரத்தின் இலை, விதை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. பவழமல்லி சிறுநீரகத்தை காப்பாற்றக்கூடிய மருத்துவத்தன்மை உடையதாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து.

🌹கால்மூட்டு வலி, ரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. பவழமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது. பவழமல்லி மரத்தின் வேரை மென்று தின்றால் பல்லீறுகளில் உருவாகும் வலியை குணப்படுத்தும். விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும். இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் உள்ளது. பவழ மல்லிவிதையை பொடி செய்து அதை எண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கையும் மறைந்து முடி வளரும்!

🌹தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திரு வைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவழமல்லி தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

🌹திருக்களரில் இறைவன் பாரிஜாதவனேஸ்வரராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இவருக்கு களர் முலை நாதேஸ்வரர் என்றும் பெயருண்டு. இறைவியை, இளம் கொம்பன்னாள், அமுதவல்லி என்று பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். இத்தலம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 21 கி.மீ. தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் வழியில் அமையப்பெற்றுள்ளது.

🌹தில்லையில் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தானும் அந்த பாக்கியத்தைப் பெற நினைத்தார். இத்தலத்தின் மகிமையை உணர்ந்து தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாத செடியை இங்கே கொண்டு வந்து வளர்த்து வந்தார். அந்தச் செடியால், நாளடைவில் வளர்ந்து சில நாட்களில் அந்தப் பகுதி முழுவதுமே பாரிஜாத வனமாக மாறியது. அதன் பிறகு ஒரு சிவலிங்கத்தை பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் ஸ்தாபித்து தேவதச்சன் மூலமாக கோயிலை எழுப்பி வழிபட்டு தவம் செய்து வந்ததாக கோயில் ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது.

🌹துர்வாசருக்கு இறைவன் நடராஜர் பிரம்ம தாண்டவ தரிசனம் தந்து அருளினார். திருக்களர் திருத்தலத்தில் வழிபாடு செய்யும் பக்தர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம். இத்தலத்தில் பாரிஜாதகராக அருள்
பாலிக்கும் இறைவனைப்பற்றி திரு ஞானசம்பந்தர் பாடியிருப்பதாவது:

🌹“பாக்கியம் பல செய்தபத்தர்கள் பாட்டொ டும்பலபணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள் வாக்கின் நான்மறை யோதினாயமண் தேரர் சொல்லிய சொற்க ளானபொய் ஆக்கி நின்றவனே அடைந்தார்க் கருளாயே.”

திருவண்ணாமலை மாவட்டத்தில்
ஆரணியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் திருத்தலத்தில் பவழமல்லி தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. இத்தலத்தில் குழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்கும் புத்திரகாமேட்டீஸ்வரராக ஈசன் அருள்பாலித்து வருகிறார்.

🌹வீட்டில் வளரக்க கூடிய இந்த பவழமல்லி மரத்தில் பட்டு வீசும் காற்று ஆரோக்யமானது நம் உடல் நலத்தை பாதுகாக்கக் கூடியது.




செவ்வாய், 22 செப்டம்பர், 2020

தேவ ரகசியம்

தேவரகசியம்!

*ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறாள். அக்குழந்தையின் தந்தை மூன்று மாதத்துக்கு முன்னால்தான் இறந்து போயிருந்தான்.*

*எமதர்மன்* ஒரு எமதூதனை அனுப்பி "அந்த பச்சிளம்  குழந்தையின் தாயின் உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு" என்கிறான்.
*இந்த எமதூதன் நினைக்கிறான்*, "ஐயோ பாவம்; அப்பாவும் இல்லை, அம்மாவின்உயிரையும் நான் எடுத்துக்கொண்டு போய்விட்டால்  இந்த குழந்தையின் கதி என்னவாகும்!" என அத்தாயின் உயிரை எடுக்காமலே வானலோகம் திரும்பி விட்டான்.*

*நாமெல்லோரும் அந்த நிலையில்தான் இருக்கின்றோம். நமக்கென்று ஒருசில வரையறைகளை வகுத்துகிறோம். அதற்கு பல அளவுகோல்களையும் வைத்திருக்கிறோம்.*

*ஆக, எமதூதன் அந்த குழந்தையின் நிலைமையை நினைத்து பரிதாபப்பட்டதனால் உயிரை எடுக்காமல் போய்விட்டான்.*

*ஆனால், அங்கே எமன் சொல்லிவிட்டார்; "உனக்கு தேவலோக ரகசியங்கள் தெரியவில்லை...*

*கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்பது பற்றிய அறிவு இல்லை...*

*அது தெரிகிற வரைக்கும் பூமியிலே போய் கிட" என்று அவனை தூக்கி பூமியில் போட்டுவிட்டார்.*

*அவன் பூமியின் ஒரு பூங்காவில், மினுமினுக்கும் தன் தேக தேஜஜ் எல்லாம் இழந்து கன்னங்கரேலென்று முனங்கிக் கொண்டு  கிடக்கிறான்.*
*அப்போது அந்த வழியாக வருகிற ஒரு தையற்காரன்,*
என்னடா இது,  இங்கே ஒரு முனங்கல் சத்தம் கேட்கிறதே" என்று அவனைப் பார்த்து விட்டு, தன்னிடம் இருந்த ஒரு துணியை அவனுக்கு போர்த்துகிறான்.*
*மேலும் "என்னுடன் வா" என்கிறான்.*

*எமதூதன் மறுவார்த்தை பேசாமல்
தையற்காரனுடன் அவன் வீட்டுக்குச் செல்கிறான்.* திண்ணையில் எமதூதனும்,  அந்த தையற்காரனும் படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

*அந்த தையற்காரனின் மனைவி தையற்காரனை மட்டும், "வா வா வந்து கொட்டிக்கோ"  என்று சாப்பிட கூப்பிட்டாள்.*
அவன் விருந்தாளி வந்திருக்கிறானே என்று சொன்னான்.
*அவள் கணவனை திட்டி விரட்டி விட்டாள்.*

*"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று".  எமதூதனும்  ஒன்றும் சொல்லாமல் போய்க் கொண்டே இருந்தான்.*
*ஒரு பத்து நிமிடம் கழித்து அவள்; "சரி,சரி வந்து சாப்பிட்டு போ"  என்று எமதூதனை  மறுபடியும் கூப்பிட்டாள்.*

*அப்போது அந்த எமதூதன் லேசாக சிரித்தான். கன்னங்கரேலென்று இருந்த அவன் உடம்பு சற்று பொன்னிறமாக மாறிற்று. ஆனால் ஒன்றும் பேச மாட்டான்.*

*தையற்காரன் சொல்வான்: "எனக்கு துணிகளில் இந்த காஜா போடுவதற்கு, பட்டன் தைப்பதற்கு  ஆளில்லை; உனக்கு தங்குவதற்கு இடமும், சாப்பிட சாப்பாடும் போடுகிறேன். எங்கள் வீட்டில் இருந்து கொள்" என்று சொன்னான்.

*எமதூதன் டெய்லரிங் அசிஸ்டண்ட் ஆகிவிட்டான்.*

*ஒரு பத்து வருடம் ஆகிறது. ஒரு குதிரை வண்டியில் ஒரு பணக்கார பெண்மணி கை கொஞ்சம் முடமாக இருக்கிற குழந்தை, அத்துடன் ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை என இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்து *தையற்காரனிடம்* *"இந்த குழந்தைக்கு 'கை' கொஞ்சம் சரி இல்லாமல் இருக்கிறது". நல்லா தளர்வாக தைக்க வேண்டும்.  என்று சொல்வாள்.*

*எமதூதன் அந்த குழந்தையையும் பார்த்தான். அந்த பணக்கார பெண்மணியையும் பார்த்தான். பின்னர் சிறிது சிரித்தான். அவன் உடம்பு இன்னும் கொஞ்சம் பொன்னிறமாக மாறியது.*

*இன்னும் ஒரு ஐந்து வருடம் ஆகிவிட்டது.*

*ஒருநாள் ஒரு பெரிய பணக்காரன் பென்ஸ் காரில் வந்தான். வந்து, "இந்தாப்பா! இதில் பத்து மீட்டர் விலையுர்ந்த துணி இருக்கிறது. இதிலே 20 வருஷம் தாக்குப் பிடிக்கிற மாதிரி சூப்பராக சபாரி சூட் தையுங்கள்" என்று சொல்லி கொடுத்து விட்டுப் போனான்.*

*அதற்குள் அந்த எமதூதன் தேர்ந்த தையற்காரன் ஆகிவிடுகிறான்.*

*முதல் நாள் போய்விட்டது.*
*இரண்டாம் நாள் போய்விட்டது.*

 *முதலாளி தையற்காரன், "நாளை டெலிவரி , அந்த பணக்காரன் வந்து கேட்பானே,  என்ன சொல்வது?"  என்று கேட்கிறான்.*

*இந்த எமதூததன்; டர்ரென்று  அந்த பேண்ட் துணியை கிழித்து, ஒரு தலையணை உறை, பெட் கவர் தைத்து விட்டான். *முதலாளி தையற்காரன் திட்டுகிறான்". என் பிழைப்பில் மண்ணை போடுவதற்கு தான் வந்தாயா? இப்போது அவன் வந்து கேட்டால்  நான் என்ன பண்ணுவது?" என்கிறான்.*

*அப்போது கார் டிரைவர் ஓடி வருகிறான்.  "நீங்கள் சபாரி தைக்காதீர்கள். என் முதலாளி இறந்து விட்டார். அதனால் அத்துணியில் ஒரு தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்து விடுங்கள்"  என்று கூறுகிறான்.*

*இப்பொழுது எமதூதன் முகத்தில் சிரிப்பு வந்ததும், அவன் முழுவதும் பொன்னிறமாக மாறி விடுகிறான்.*
*அப்படியே மேலே பறந்து போக ஆரம்பிக்கிறான்...*  

*அப்போது தையற்காரன்  சொல்வான், "அப்பா நீ யார்? வாழ்க்கையில் இதுவரைக்கும் மூன்று முறைதான் சிரித்தாய். ஒவ்வொரு தடவை சிரிக்கிற போதும் உன் உடம்பு பொன்னிறமாக மாறியது. அதனால் அதற்கு விளக்கத்தை சொல்லிவிட்டு,  நீ போ" என்கிறான்.*

*அவன் "நான் எமனுடைய தூதுவன். ஒரு தாய் இறந்து விட்டால், அந்த குழந்தைக்கு யார் கதி! என்று அந்த தாயின் உயிரை எடுக்காமல் விட்டதனால்; பூமியில் போய் தேவ ரகசியத்தை தெரிந்து கொண்டு வா" என்று என்னை அனுப்பினார்கள். அதனால் இப்பூலோகம் வந்தேன்.*

*"இங்கு அப்படி என்ன தெரிந்து கொண்டாய்?"  என்று தையற்காரன் வினவுகிறான்.*

*முதல் நாள் உன் மனைவி என்னை அடிக்க வந்தாள் அல்லவா...?*
*அப்போது அவள் முகத்தில் மூதேவி தெரிந்தாள்.*
*பத்தாவது நிமிடம் என்னை சாப்பிட வாவா என்று கூப்பிடும் போது அன்னை மகாலட்சுமி தெரிந்தார்.*
*அப்போது, இந்த உலகத்தில் "ஒருவன் பணக்காரன் ஆக இருப்பதற்கும்,  ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள்தான் காரணம்"  என்று தெரிந்து கொண்டேன். மூதேவி போய்விட்டு சீதேவி வருவதற்கு பத்து நிமிடம் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன்.*
*இதுதான் #தேவரகசியம் # ஒன்று*

*மனிதர்களிடம்  பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் இருக்கிறது.  ஆனால் எந்த கார்டை வைத்து விளையாடுவது, எதை விடுவது; என்று தெரியாததினால்  பெரும் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.*

*"பத்து வருடம் கழித்து ஒரு பணக்கார பெண்மணி குதிரை வண்டியில் வந்தாள் அல்லவா...?*
*அவளுடன் ஒரு குழந்தை கை முடமாக வந்தது அல்லவா...?*
*அதுதான்  அம்மா இறந்து விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நான் நினைத்த குழந்தை.*

*அக்குழந்தையின் நிஜமான தாய் ஒரு பரமஏழை. அவள் இறந்தும் விட்டாள். இருந்தும் கூட இந்த குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வதற்கும்,   தளர்வாக தைக்கவேண்டும் என்று அக்கறையுடன் கூறுகின்ற அளவிற்கு ஒரு பணக்கார அன்பான அம்மாவை இறைவன் தயாராக வைத்திருக்கிறான்.  இது எனக்கு தெரிந்த போது இரண்டாவது முறையாக சிரித்தேன்.*
*ஒரு எமதூதன் ஆகிய எனக்கே; பச்சாதாபம் இருக்கிறபோது, உயிர்களை கருணையுடன் உருவாக்கும் இறைவனுக்கு இருக்காதா? அவன் அதற்கு ஒரு மாற்று வழி வைத்துக் கொண்டுதான் அந்த உயிரை எடுப்பான். இது எனக்கு தெரிந்தபோது இரண்டாவது #தேவ ரகசியம்#  புரிந்தது.*

*இறைவன் எல்லாவற்றையும் காரண காரியங்களோடுதான் நடத்துகிறான்.*

*மூன்றாவது #தேவ_ரகசியம்# மூன்றுநாட்களில் சாகப்போகிறவன்; இன்னும் 20 வருடங்கள் *தான்* உயிரோடு இருக்கப்போவதாக  நினைத்துக்கொண்டு,  நன்றாக 20 வருஷத்திற்கு வருகிற மாதிரி துணியை தைத்துக்கொடு என்று சொன்னானே!!*
*"எனக்கு தெரியும் அவன் சாகப்போகிறான்" என்று,  அதனால்தான் நான் அத்துணியை தைக்கவே இல்லை.*

*அவன்  இறந்த அந்த நேரத்தில் துணியை கிழித்து தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்தேன்".*

*இம் மனிதர்கள் இந்த உலகத்தை ஏதோ நூறு வருஷம் இருநூறு  வருஷம் குத்தகைக்கு போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்து குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.*

*சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.!!*

*நேற்று இருந்தவன் இன்று இல்லை. அதுதான் இந்த வாழ்வின் எதார்த்தமான உண்மை!*

*அதுதெரிந்தும் ஒவ்வொருவனும் நான் மட்டும் ரொம்ப வருஷம் இருப்பேன், மற்றவன்தான் செத்துக் கொண்டிருப்பான் என்றும் நினைக்கிறான் அல்லவா?* *அதுதான் மூன்றாவது #தேவரகசியம்#!*

*அதனால்தான் இந்த உலகத்தில் அவன் திறமையாக செயலாற்றாமல் இன்னும் 20-வருஷம் கழித்து நடக்கப் போகிற தன் குழந்தையுடைய கல்யாணத்திற்கு இன்றைக்கு காசு இல்லையே என்று வருத்தப்படுகிறான்!!*

*இன்னும் 15 வருடம் கழித்து கல்லூரியில் படிக்கப்போகிற பையனுக்கு 'Fees'- கட்ட பணம் இல்லையே என்று இப்பொழுதே வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறான்!!!*

*இதுவே இவ்வுலகத்தின்  நிம்மதி தொலைய காரணமாகிறது. பேசிக் கொண்டிருக்கிறபோது இந்நொடியே நாம் இறந்துபோகலாம், நாம் இறந்தாலும் நம் குழந்தைகளை நம்மை விட கடவுள் மிகநன்றாகப் பார்த்துக்கொள்வார் என்பதை உணர்ந்தால், நாம் சந்தோஷமாக இருப்போம்!

*இந்த மூன்று ரகசியங்கள்*

*அதாவது ஏழையாக இருப்பதும் பணக்காரன் ஆக இருப்பதும் நம்முடைய எண்ணங்களால் நடக்கிறது.*

*இரண்டாவது எது நடக்கிறதோ- அதற்கு #கடவுள்# ஒரு ஆகச்சிறந்த மாற்றுவழி வைத்திருப்பார்.*
*மனிதனின் மனநிலையில் உள்ள தான் என்னும் *ஈகோவினாலும்*,  அறியாமையினாலும்; அவர்களால் இறைவனின் அருட்களை புரிந்து கொள்ள முடிவதில்லை.*

*மூன்றாவது- யாருக்கும், எந்த நேரத்திலும் சாவு வரலாம்.*
*இது தெரியாமல் மனிதர்கள் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.*
*இந்த #அஞ்ஞானம்#தான் உலகில் துக்கங்களுக்கு எல்லாம் காரணம்.*

 இப்படிப் பட்ட #தேவ-ரகசியங்களை# புரிந்து கொண்டு நாமும் வாழப் பழகி விட்டால், நாம் வாழும் காலமெல்லாம் நிம்மதியான வசந்தமே..


அகத்தியர்

அகத்தியரின் தடங்கள் இன்றும் இலங்கையில் திருகோணமலையில், இன்றும் அகத்தியர் வாழும் புண்ணிய பூமி இலங்கை.
இலங்கை சிவ பூமி அகத்தியர் ஆலயம் தான் இது

திருமலை மாவட்டம் மூதூர் கங்குவேலியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் மேற்கேயுள்ள வனப்பகுதியில், மகாவலி கங்கைக்கு அருகில் அமைந்திருந்த அகத்தியர் தாபனத்திற்கு ஆடி அமாவாசைக் காலத்தில் சைவ மக்கள் சென்று
வருவது வழமை. இவர்களை விட இங்கு சேனைப் பயிர்ச் செய்கையாளர்களும், விறகுத்
தொழிலாளர்களும் அடிக்கடி சென்று
வருவதுண்டு. இங்கு அமைந்திருந்த கற்தூண்களும், அகத்தியர் ஆலயமும், சிவலிங்கமும், ஈழத்தை முதன் முதலாக சோழர்கள் ஆட்சி செய்வதற்கு முன்னரே (2500 ஆண்டுகளுக்கு முன்னர்) நிறுவப்பட்டமைக்கான வரலாற்று சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேயிடத்தில் 18ஆம் நூற்றாண்டில் 2ஆவது அகத்தியர் தமிழ் பல்கலைக் கழகம் இயங்கியமைக்கான வரலாற்றுத் தடயங்களும் காணப்பட்டன. இவ்வாறான புராதன சிறப்பையும், புராண காலப் பதிவுகளையும் கொண்ட அகத்தியர் தாபனத்தை கடந்த ஓரிரு நாட்களுக்கு சிங்களப் படைகள் துடைத்தழித்துள்ளன.

திருக்கரசுப் புராணத்தின் படி, கைலையில் சிவபெருமானுக்கும், உமாதேவிக்கும் திருமணம் இடம்பெற்ற பொழுது, கைலைமலை சரிந்ததாகவும், இதனை சீர்செய்யும் நிமித்தம் ஈழத்தின் திருமலைக்கு அகத்திய முனிவரை சிவபெருமான் அனுப்பி வைத்ததாகவும்
கூறப்படுகின்றது.

இதன்படி திருமலையை சென்றடைந்த அகத்தியர், அங்குள்ள கங்குவேலிப் பகுதியில் சிவலிங்கம் அமைத்து, தனது தவலிமையால் கைலை மலையை வழமைக்கு கொண்டு வந்ததோடு, அங்கிருந்தவாறே சிவன் – பார்வதி
திருமணத்தை தரிசித்ததாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் திருமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர், தற்பொழுது மாவிலாறு என்று அழைக்கப்படும் அகத்தியனாற்றில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாகவும் ஐதீகங்கள் கூறுகின்றன.

தமிழ்க் கலைகள் அறுபத்தி நான்கும் அகத்தியரால் இங்கு போதிக்கப்பட்டவையாகும். அகத்தியத் தாபனம் பல்கலைகளையும் போதித்து வந்துள்ளது. திருமங்கலாய் தொடங்கி மூதூர் துறை மகாவலி வரை மகாவலி ஆற்றுக்கு கிழக்கே கங்கை வெளி பரந்து காணப்பட்டது. இன்று கங்குவேலி என்று பெயர் குறுகி விட்டது. உலகில் முதலில் நாகரீகம் தோன்றியது இங்கே தான் என மூதூர் அகத்தியர் என்ற ஆய்வு நூலில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. கங்குவேலியிலுள்ள அகத்தியத் தாபனம் அழிந்த பின்னரும், வழிபாட்டுத் தலமாக சிவலிங்கம் காட்சியளித்தது. அத்துடன் அகத்தியத் தாபனத்தின் வாயில் படிகள், சந்திரவட்டக்கல் உட்பட கல்வெட்டுக்கள் என்பன போர் முடிவடைந்த பின்னர் சமாதானச் சூழல் நிலவுகிறது எனக் கூறப்படும் காலத்தில் தான் சேதமாக்கப் பட்டிருக்கின்றன. ஈழ நாட்டில் அகத்தியரைப் பற்றிய குறிப்புக்கள், நூல்கள், வரலாற்றுச் சுவடுகள் அதிகம் காணப்படுகின்றன.

இந்தியாவில் காணப்படும் தமிழரின் வரலாற்றுக் காலத்துக்கு இவை முற்பட்டவையாகும். தமிழ்ப் பேரவைக்கால நூல்களில் முத்தூர் அகத்தியர் என்று தம்மைத் தாமே அறிமுகப்படுத்தியுள்ளமையை நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அகத்தியர் ஈழத்தில் திருகோண மலையில் பல்லாண்டுகள் காலம் வாழ்ந்துள்ளார் என்பதை அவர் பணிகளாலும், நூல்களாலும் அறிய முடிகின்றது. திருமங்கலாய்ச் சிவன் கோவில், அகத்தியத் தாபனம், திருக்கரசைச் சிவன் கோயில் என்பவற்றை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். இதன் மூலம் திருகோணமலையின் தமிழரின் வரலாறு, வரலாற்றுக் காலங்களுக்கு முற்பட்டது என் பதை உறுதி செய்ய முடிகின்றது. அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவமுறைகளை வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார்.

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயாளர் பிரிவில் (திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில்) அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி (திருக்கரை சையம் பதி) கிராமத்தில் மகாவலி கங்கைக் கரையில் அகத்தியத் தாபனம் அமைந்திருக்கிறது. அகத்தியத் தாபனம் தொடர்பாக 2001 ஆம் ஆண்டில் பேரறிஞர்.க. பாலசுப்பிரமணியம் அவர்களால் வெளியிட்டப்பட்ட ஆய்வு நூல் மகாசி்த்தர் மூத்தூர் அகத்தியர் என்பதாகும். வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அகத்தியத் தாபனம் தொடர்புடைய புகைப்படங்கள் சில மகா சி்த்தர் முத்தூர் அகத்தியர் என்னும் ஆய்வு நூலில் இருந்து.

மகா சி்த்தர் முத்தூர் அகத்தியர் ஆய்வு நூல் பேரறிஞர். க . பாலசுப்பிரமணியம்

அகத்தியர்அறிவுரை!
*************************

"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன்
சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்த சமயத்தில் எப்படி
தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள். ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக்
கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக் கொண்டு உலகில் அனைத்தையும்
பார்க்கப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எள


தாக, மிக நீதியாக தோன்றம்."

நவராத்திரி மகிமை

நவராத்திரியின் மகிமையை விளக்கும் இந்தக் கதை தேவி பாகவதம்- 5-வது ஸ்கந்தத்தில் உள்ளது.

தேவி மஹாத்மியத்திலும் இடம் பெற்றுள்ளது.
மனிதர்களில் துயரப்படுபவர்கள் இரண்டு வகை.

ஒன்று, சொத்து- சுகங்களை இழந்து துன்புறுவோர். அடுத்தது, குழந்தைகள், உறவினர் மற்றும் சுற்றத்தாரின் செயல்களால் துயரப்படுபவர்.

இவர்களது துயரைப் போக்கும் விதம்... முனிவர் ஒருவர், அம்பாளின் வழிபாட்டு மகிமையைச் சொல்லும் முகமாக உள்ளது இந்தக் கதை.

சுரதன் என்ற அரசன் மிக நல்லவன்; குடிமக்களை நன்கு வாழவைத்தான். இவனது ராஜ்ஜியத்தைக் கவர நினைத்த மலைவாசிகள், திடீரென படையெடுத்து வந்து போரிட்டு வெற்றியும் பெற்றனர்.

தோல்வியுடன் அரண்மனை திரும்பிய மன்னன், தன் மந்திரிகளும் பகைவர்களின் கைக்கூலிகளாக இருப்பதை அறிந்து மனமுடைந்தான். அரண்மனையில் இருந்தால் தனக்கு ஆபத்து என்று உணர்ந்தவன், காட்டுக்குச் சென்றான்.

"என் பெயர் சமாதி. செல்வத்துக்குக் குறைவில்லை. தர்மத்தில் நாட்டம் உள்ளவன். ஆனால் பொருளாசை மிகுந்த என் பிள்ளைகளும் உறவினர்களும் வஞ்சனை செய்து காட்டுக்குத் துரத்தி விட்டனர். அவர்கள் தீமை செய்தாலும் என் மனம் அவர்களை நினைத்தே ஏங்குகிறது’’ என்று வருந்தினான் வியாபாரி.

அவனுக்கு ஆறுதல் சொன்ன மன்னன், ‘’வருந்தாதே; நானும் உன்னைப்போன்று பாதிக்கப் பட்டவன்தான். வா... இருவரும் சுமேதஸ் ரிஷியிடம் சென்று, நமது துயரம் தீர வழி கேட்கலாம்’’ என்று வியாபாரியை ரிஷியிடம் அழைத்துச் சென்றான்.

இருவரது வேண்டுதலையும் கேட்ட ரிஷி, ‘’நவராத்திரியில் விரதம் இருந்து அம்பாளை பூஜியுங்கள். அவள் அருளால் உங்களின் துயரம் விலகும்!’’ என்றார்.

அம்பாளின் மகிமைகளையும் நவராத்திரி வழிபாடுகளையும் விவரித்து, மந்திர உபதேசமும் செய்தார்.
அதன்படியே அரசனும் வியாபாரியும், மந்திர ஜபம் செய்து, கடுந்தவத்தில் ஆழ்ந்தனர்.

நவராத்திரி பூஜையையும் முறைப்படி செய்தனர். இதன் பலனாக இருவருக்கும் காட்சி தந்தாள் அம்பிகை.

‘‘மன்னா, உன் பகைவர்கள் உன்னைச் சரண் அடைவர். நீ பல்லாண்டு காலம் நல்லாட்சி புரிவாய்!’’ என்று அருள் புரிந்தாள்.

வியாபாரியின் பிரார்த்தனை வேறுவிதமாக இருந்தது. ‘’தாயே, எனக்கு ஞானத்தைக் கொடு! நான், பிறவிப் பெருங்கடலைத் தாண்ட விரும்புகிறேன்!’’ என்றான்.
‘‘அப்படியே ஆகும்’’ என்று வரமளித்து மறைந்தாள் அம்பிகை.

மன்னனும் வியாபாரியும் சந்தோஷத்துடன் திரும்பி வந்து, வாட்டம் போக்க வழிகாட்டிய முனிவரை வணங்கி ஆசிபெற்றனர். அம்பிகை வரமளித்த படியே, அவர்களது பிரார்த்தனைகளும் பலித்தன.


அகிலாண்டேஸ்வரி

ஈஸ்வரி என்றாலே ஜகதீஸ்வரி, அகிலாண்டேஸ்வரி


தான் ஞாபகத்துக்கு வரும்.

திருச்சிக்கு அருகில் இருக்கும் திருவானைக்காவல் கோவிலில் குடிகொண்டு இருப்பவள்.

அம்பாள் மிக அழகு! அதுவும், அர்த்த ஜாம பூஜைக்கு அலங்கரிக்கப்பட்ட அகிலாண்டேசுவரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவ்வளவு களை, அழகு, கம்பீரம். அகிலாண்டேசுவரி மிக உக்ரமான அம்பாள் என்றே கூறுவார்கள்.

நடு இரவில், சலங்கை ஒலி 'ஜல் ஜல்' என ஒலிக்க, அவள் கோவில் பிரகாரங்களை வலம் வருவதாக ஐதீகம்.

இரு காதுகளிலும் ஆதி சங்கரர் அணிவித்த ஸ்ரீசக்ரத்தை தாடங்கம் என்கிற காதணிகளைஅணிந்து எதிரில்அமர்ந்து இருக்கும் ஆனைமுகத்தோனுக்கும்,அடியவருக்கும் அருள்பாலிப்பவள்.

பார்க்கப் பார்க்க திகட்டாத ஜ்வலாமுகி ,வாராஹி அவள்.

அம்மா அம்மா அம்மா
எனக் கபயம் அருள்வாய் அகிலாண்டேஸ்வரி

ஸிம்ஹ வாஹினி  ஸ்ரீ லலிதே பவானி
நம்பினோரைக் காக்கும் செம்மல்ர் வதனி

மங்கள நாயகி  மதுரை  மீனாஷி
திங்களை சூடியோன் தேவி  ஸ்ரீ காமாஷி கங்கை நதிக் கரை காசி விசாலாஷி
இங்கு ஏலகனோடு  எனக்குக் கொடு காஷி

நவராத்திரி ஸ்பெஷல்

காளிதாசரின் குமார சம்பவம்...  சிறு குறிப்பு. [ நவராத்திரி ஸ்பெஷல் ]

பார்வதி தேவியின் மனதில் சிவபெருமானை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆழத்தை அளப்பதற்கு வந்ததுபோல். சிவபெருமானே பிரம்மச்சாரி வேடத்தில் வந்து தேவியை பரிக்ஷை செய்கிறார். அது மட்டுமல்லாமல் சிவபெருமான் மீது அன்னைக்கு இருக்கும் அளவிடமுடியாத அன்பை தேவியே திருவாய் மலர்ந்து அருள வேண்டும். அதைக்கேட்டு பேரானந்தம் அடைய வேண்டும் என்று நினைத்து பிரம்மச்சாரி வேடத்தில் வந்தாரோ என்று நாம் நினைக்க தூண்டுவது போல இருந்தது அவரது பேச்சு.

பிரம்மச்சாரி – பார்வதி தேவியின் வாத – பிரதிவாதங்களுக்கு இடையில் தேவி அவரின் கூற்றை இவ்வாறு ஏளனம் செய்கிறாள். சிவபெருமானைப் பற்றிய உண்மையான ஞானமும் இல்லாத நீங்கள். அவரைப்பற்றிய விஷயம் கூறுவதில் மட்டும் சிறந்து விளங்குபவரா நீங்கள். உங்களையும் அறியாமல், ஈசனைப் பற்றி ஒரே ஒரு உண்மையைக் கூறியுள்ளீர்கள்! சிவபெருமானைப் பற்றிய குலமோ, அவருடைய பெற்றோர்களைப் பற்றிய விவரமோ எதுவும் யாரும் அறியமாட்டார்கள். எனவே அவரைத் திருமணம் செய்ய நினைப்பது தவறு என்று கூறினீர்கள் அல்லவா?! அது முற்றிலும் உண்மையே!! ஏனென்றால் எந்த வேதங்கள் சிவபெருமானை, பிரம்மனுக்கே கர்த்தா: அதாவது பிரம்மனையே சிருஷ்டி செய்தவர் என்று கூறுகின்றனவோ, எந்த சிவபெருமான் இந்த உலகில் உள்ள அனைத்துக்கும் சிருஷ்டி கர்த்தாவாக இருக்கிறாரோ. அவரைப் பற்றிய, ஆதி அந்தம் இல்லாத அவரை, பெருமைப்பற்றிய குலமோ, கோத்ரமோ அறிவது என்பது இயலாத காரியம்தான்!!! ஜகத்பிதாவான அவர் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்.

இப்படி பேசிக் கொண்டு வந்த பார்வதிதேவி. பிரம்மச்சாரியுடன் பேசி. அவருக்கு சிவனுடைய பரதத்துவத்தைப் புரிய வைப்பது இயலாத காரியம் என்பதை அறிந்து இவ்வாறு சொல்கிறாள். உங்களுடன் இப்படி விவாதம் செய்வது போதும்” நீங்கள் சிவபெருமானைப்பற்றி எப்படியெல்லாம் கேள்விப்பட்டீர்களோ அப்படியே ஒன்றுக்கூட குறையாமல் அவர் இருந்து விட்டு போகட்டும். ஆனால் சிவனின் பேரில் என் மனதில் இருக்கக்கூடிய அபரிமிதமான அன்பு. மற்றவர்களுடைய நிபந்தனையோ, பாராட்டுதலையோ கேட்டு மாறப் போவது இல்லை. எனவே இந்த வீண் வாதம் இனி தேவையில்லை.”

பார்வதிதேவி இவ்வாறு கூறிய பின்பும் தன்னுடைய கருத்துக்களை சொல்ல விழைகின்ற பிரம்மச்சாரியை அங்கிருந்து எப்படியாவது வெளியேற்ற சொல்லி தன தோழிக்கு உணர்த்துகிறாள் தேவி. பின் அதிதியாக வந்த ஒரு பிரம்மச்சாரியை வெளியேறும்படி சொல்வது முறையல்ல என்று நினைத்து. தேவி தானே அந்த இடத்திலிருந்து செல்ல முற்படுகிறாள். அதற்கான காரணத்தையும் சொல்கிறாள். பெருமானைப் பற்றி அவதூறு பேசுவது மட்டுமல்ல அதனைக் கேட்டுக் கொடிருந்தாலும் பாவம் நம்மை சேரும்” இப்படி சொல்லி அங்கிருந்து அவசரமாக வெளியேற முயற்சி செய்யும் போது. தன்னுடைய உத்தரீயத்தின் நுனியை யாரோ பிடித்து இழுப்பதை உணர்ந்து மிகவும் கோபமுற்றவலாய் யாரென்று திரும்பிப் பார்க்கிறாள் தேவி. பிரம்மச்சாரி மறைந்து, சிவபெருமான் தன ஸ்வய ரூபத்தில் புன்னகையுடன் காட்சி தருவதை கண்டாள் அன்னை.

சிவபெருமானைப் பற்றி சிவபெருமானுக்கே புரிய வைக்க பாடுபட்டதையும், தன்னுடைய ஆழ்ந்த காதலை அவரிடமே தெரியப்படுத்தியதையும் எண்ணி, வெட்கம், துக்கம், சந்தோஷம், ஆனந்தம், திகைப்பு இவை அனைத்தும் ஒருங்கப் பெற்றவளாய் வெளியே செல்வதற்காக மேலே தூக்கப்பட்ட பாதத்தை கீழே வைத்து.செல்வதா அல்லது அங்கயேஇருப்பதா என்ற தடுமாற்றத்தில், காட்டாறு நடுவில் மலையினால் தடுக்கப்படும்போது. போகும் திசையறியாமல் சுழன்று சுழன்று ஆரவாரம் செய்வது போல். ஆர்ப்பரிக்கின்ற தன் மனதை அடக்க முடியாமல் சந்தோசத்தில் செய்வதறியாமல் நின்றாள் பார்வதி தேவி!!!

“ ஹே தேவி!! நான் இன்று முதல் உனது அடிமை! உன்னுடைய தவத்தினால் என்னை வென்று விட்டாய்” என்று சொல்லும் பிறைச்சந்திரனை தலையில் சூடிய பெருமானின் வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் அவரை அடைய தான் பட்ட எல்லா கஷ்டங்களுக்கும் பலன் கிடைக்கப்பெற்று மீண்டும் புத்துணர்ச்சி அடைந்தாள் பார்வதி தேவி!! இப்படி சொல்லும் பொருளும் போல் என்றும் சேர்ந்தே இருக்கின்ற சிவனும், பார்வதியும் நம் எல்லோரையும் காக்கட்டும்!!


அம்பாளை விட மங்கள வஸ்து ஒன்றும் இல்லை

அம்பாளைவிட மங்கள வஸ்து இல்லை. ஸர்வ மங்கள மாங்கல்யே என்பார்கள். அவளுடன் சேர்ந்திருப்பதாலே பரமேசுவரனும் மங்கள ஸ்வரூபியாகிறார்.

மங்களமே வடிவான அம்பிகை மகா சுமங்கலி. அவளுடைய சௌமங்கலியத்துக்கு எப்படி பங்கம் உண்டாக முடியும்?  இதனால்தான் ஆலஹால விஷம் சாப்பிட்டுக்கூடப் பரமேசுவரன் சௌக்கியமாகவே இருக்கிறார் என்று ஆச்சாரியாள் ஸெளந்தரிய லஹரியில் கூறுகிறார்.

காதில் தோடு, நெற்றியில் குங்குமம், கழுத்தில் கருகுமணி இத்யாதி மங்கள சின்னங்களெல்லாம் சுமங்கலி லக்ஷணம். அம்பாளும் காதில் தாடங்கம் அணிந்திருக்கிறாள். சாதாரண பனை ஒலையைத்தான் தாடங்கமாகப் போட்டுக் கொண்டிருக்கிறாள். தாலீபலாச தாடங்கம் என்று இதை ஸ்தோத்திரங்கள் சொல்கின்றன.

பழைய காலத்தில் எல்லோருமே படாடோபம் இல்லாமல் எளிமையிலேயே சுபிக்ஷமாக இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு திருஷ்டாந்தமாகத் தோன்றுகிறது. அம்பாளைப் போலவே எல்லா ஸ்திரீகளும் பனை ஒலையைத்தான் போட்டுக் கொண்டிருக்கவேண்டும். இதனால்தான் பிற்காலத்தில் வைரத்தோடு போட்டுக் கொள்கிற டாம்பீகம் வந்தபின்கூட, அதை வைர ஒலை என்றே சொல்கிற வழக்கம் உண்டாகியிருக்கிறது.

அம்பாளுடைய தாடங்கத்துக்கு வருவோம். மங்களச் சின்னமான தாடங்கம் அவள் காதிலிருந்து இறங்கக்கூடாது.அப்படியானால் பரமேசுவரன் எக்காலத்திலும் ஜீவிக்கத்தான் வேண்டும். இதனால்தான் அவள் ஆலஹால விஷம் உண்டும்கூட அது அவரைப் பாதிக்கவில்லை. இது உன் தாடங்க மகிமையம்மா!என்கிறார் ஆசாரியாள்.

 திருவானைக்காவில் அகிலாண்டேசுவரியின் தாடங்கத்திலேயே ஸ்ரீ சக்ர, சிவ சக்ரப் பிரதிஷ்டை செய்து, அவளை ஸெளம்ய மூர்த்தியாக்கின ஆசாரியாள், இப்படி இங்கே தவ ஜனனி தாடங்க மஹிமா என்கிறார்.
விஷத்தைச் சாப்பிட்டும் பரமேசுவரன் சொஸ்தமாக இருப்பதற்குக் காரணம், எந்த விஷத்தையும் முறிக்கிற மருந்தாக, அமிருத்தமாக, அம்பிகை அவரோடு சேர்ந்து இருப்பதுதான்.

வேத வாக்கியமான ஸ்ரீ ருத்திரத்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது. ருத்திரனாக கோரமாக இருக்கிற உனக்கு சிவா என்று ஒரு மங்கள சரீரம் இருக்கிறது. இந்த சிவாதான் லோகம் முழுவதற்கும் மருந்து. (சிவா விச்வா ஹபேஷஜீ) லோகத்துக்கு மட்டும்தான் அது மருந்தா?இல்லை. ருத்திரனாக உனக்கும்கூட சிவாதான் மருந்து. (சிவா ருத்ரஸ்ய பேஷஜீ) என்று வேதம் சொல்கிறது.

 கோர ஸ்வரூபியையும் தன் பதிவிரத்யத்தால் மங்களமாக்கி, அவரை என்றென்றும் ஜீவிக்கும்படி செய்கிறவளை ஸ்திரீகள் ஆராதித்தால் பதிபக்தியும், தீர்க்க ஸெளமங்கல்யமும் ஸித்திக்கும்.


நவராத்திரி சிறப்பு பதிவு

நவராத்திரியில் சஹஸ்ரநாமமும் தேவி உபாஸனை வழிபாடு நீண்ட சிறப்பு பதிவு :-

அம்பாளை ஆராதிப்பதற்கு ரொம்ப உத்க்ருஷ்டமான சாஸ்த்ரத்திலே சொல்லி இருக்கிற சம்ப்ரதாயத்தை அனுசரித்து எல்லோரும் அனுஷ்டானம் செய்து கொண்டு வருகிறோம். அம்பாளை நாம் சாதாரணமாக ஸஹஸ்ர நாமங்கள் சொல்லி ஆராதிப்பது உண்டு. ஸஹஸ்ர நாமங்கள் என்று சொன்னால் நாம் சொல்லி வருவது சாதாரணமாக லலிதா ஸஹஸ்ர நாமம்தான். அந்த லலிதா ஸஹஸ்ர நாமத்தைச் சொல்லி நாம் அம்பாளை ஆராதிப்போம். நிஜமாக அந்த ஸஹஸ்ர நாமத்தினுடைய அர்த்தத்தை நாம் புரிந்து கொண்டால் அது ஒரு ரொம்பப் பெரிய விஷயம். அது புரிந்து கொண்டு அதன்படி நாம் நடந்துகொண்டால் நாம் அம்பாளுடைய பரிபூரண க்ருபைக்குப் பாத்ரமாவோம். ஸஹஸ்ர நாமங்களில் அம்பாளுடைய மகிமை எவ்வளவு? என்பதைச் சொல்லியிருக்கிறது. அம்பாளுடைய பூஜை பண்ணக் கூடியவன் எப்பேர்ப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறது.

வேதாந்தத்து சித்தாந்தம் என்ன என்பதையும் இங்கு சொல்லியிருக்கிறது. எல்லாமே சொல்லி இருக்கிறது. அம்பாளுடைய மகிமை என்ன என்பதன் விஷயம் வரும்போது “பவதாவ ஸூதா வ்ருஷ்டி: பாபாரண்ய தவானனா

தௌர்பாக்ய தூல வாதூனா
ஜராக் வாந்த ரவிப்ரபா
பாக்யாப்தி சந்த்ரிகா
பந்த சித்த கேகி கனாகனா
போக பர்வத தம்தூளி;
ம்ருத்யு தாரு குடாரிகா

என்று சொல்லியிருக்கிறது. அவளை (அம்பாளை) பூஜித்தால் என்ன வெல்லாம் கிடைக்கும்? என்றால் கிடைக்காதது ஒண்ணுமில்லை. “பவதாவ ஸுதா வ்ருஷ்டி; ‘பவம்’ என்று சொன்னால் இந்த ஒரு சம்சார சக்கரம். சம்சார சக்ரம் என்று சொன்னால் ஜனன மரணாத்மக ஒரு ப்ரவாகம். பிறக்கிறோம். கொஞ்சம் வருஷம் இந்தப் பூமண்டலத்தில் இருக்கிறோம். திரும்ப இந்த சரீரத்தை விட்டு விடுகிறோம். இன்னொரு சரீரம் வருகிறது. அந்த சரீரத்துலே கொஞ்சம் சுகமோ, துக்கமோ அனுபவிக்கிறோம். போய் விடுகிறோம். திரும்ப இன்னொரு சரீரம். இந்த ஒரு சக்ரம், இது தான் சம்சார சக்ரம் என்பது. எத்தனை காலம் இந்த சக்ரத்தில் சுற்றிக் கொண்டு இருப்பது? இதில் என்ன சௌக்யம் இருக்கிறது? பார்த்தால் இதில் ஒரு சௌக்யமும் இல்லை. இந்த சக்ரத்திலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று சொன்னால் அம்பாளுடைய தயவு வேண்டும். அதிலிருந்து விடுதலை கொடுக்கக் கூடியவள் அம்பாள். “பவதாவ ஸூதா வ்ருஷ்டி;” அதாவது அந்த நாமத்துக்கு நேரடியாக அர்த்தம் சொல்ல வேண்டும் என்று சொன்னால் காட்டிலே தீப்பிடித்து விட்டால் அந்தத் தீ அணைய வேண்டும் என்று சொன்னால் நாம் ஒரு குடம் ஜலம் கொண்டு போனால் அது ஒண்ணும் அணையாது. ஆனால் ஆகாசத்துலேருந்து பெரிய வ்ருஷ்டி: (மழை)வந்தால்தான் அந்தக் காட்டுத் தீ அணையும். இந்த சம்சார சக்ரம் என்கிற இந்த காட்டுத் தீக்கு அவளுடைய அனுக்ரஹம் என்பது ஒரு பெரிய மழை. அப்பேர்ப்பட்டவள் என்று சொன்னால் இந்த சம்சார பயத்தை போக்கக் கூடியவள்.

இரண்டாவதாக “பாபாரண்ய தாவன லா” என்று சொல்லி இருக்கிறது. பாபங்கள், பாபங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். பாபங்கள் செய்யாதவன் யார்? என்று கேட்டால் யாருமே இல்லை. எல்லாரும் ஏதோ ஒரு விதமாக பாபங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். சிலர் சொல்வார்கள். நான் ஒரு பாபமும் செய்யவில்லை என்று சொல்வார்கள். அது சும்மா நீங்கள் சொல்வதோடு சரி. செய்கையிலே உங்களுக்கு அப்படி இருக்க முடியாது. அது தான் பகவத் பாதாள் ஓர் இடத்திலே, மனிதன் பிறந்த அன்றிலிருந்து சாகிற வரையிலும் ஒரு விதமான பாபமும் செய்யவில்லை என்று நெஞ்சு தட்டிக் கொண்டு சொல்ல முடியுமா? சொல்ல முடியாது.

“வாசா’ ஜன்ம ப்ராயண யோஹோ
அந்த ராளே காம்ய ப்ரதி ஸித்த போஹோ
ஸர்வாத் மனா வர்ஜனம்
கேனி சித் ப்ரதிக்ஞாதம் அசக்யம்”

பகவத் பாதருடைய வாக்யம் இது. “ஸ்வநிபுணானாம் அபி ஸுஷ்மா பராத தர்சனா”

அதாவது சம்ஸ்க்ருதத்துலே அவருடைய வார்த்தைக்கு அர்த்தம். எவனுமே பிறவியிலிருந்து சாவதற்குள்ளே அந்த சமயத்துலே எந்த விதமான ஒரு காம்ய கர்மத்தையோ, நிஷித்த கர்மத்தையோ அதாவது பாபத்தையோ செய்யவில்லை என்று “ப்ரதிக்ஞா’ செய்ய முடியாது. எவ்வளவு பெரிய கெட்டிக்காரர் என்று நினைத்துக் கொள்ளும் நபர்களுக்கும், தனக்குத் தெரியாமலே சில தப்பிதங்கள் நடந்து போய் விடும். அதனாலே நம்மால் பாபங்கள் நடக்கவில்லை என்று நாம் சொல்லவே முடியாது. பின்பு என்ன சொல்லலாம்? நான் தெரிந்து ஒரு தப்பிதமும் செய்யவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். தெரியாமல் எவ்வளவு தப்பிதங்கள் நடக்கிறதோ தெரியாது. தெரியாமல் தப்பிதம் நடந்தால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாமோ என்று யாரும் சொல்லக் கூடாது. ஏனென்றால்

“அனிச்ச யாபி ஸம்ஸ்ப்ருஷ்டோ
தஹத்யே விஹி பாவத:

நெருப்பு இருக்கிறது. ஒரு சின்னக் குழந்தை நெருப்பைத் தொட்டால் சுடும் என்பது தெரியாது. நெருப்பைத் தொட்டு விட்டது. அப்போது அந்த நெருப்பு அந்தக் குழந்தையின் கையில் சுடாமல் விடுமா? சுடும். அப்போது நாம் போய் அதுகிட்ட “என்ன குழந்தை தெரியாமல் தொட்டு விட்டால் அதையே நீ சுட்டு விட்டாயே!” என்று நாம் யாராவது அந்த நெருப்பை சத்தம் போடலாமா?

அதே போல் நாம் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பாபத்துக்குப் பலன் இருக்கவே இருக்கிறது. அதேபோல் புண்யத்துக்கும் பலன் இருக்கிறது.

ஒருவனுக்குத் தெரியவில்லை. அது புண்யம் என்று சொல்லி பண்ணி விட்டான். ஆனாலும் அந்த புண்யத்துடைய பலன் கிடைக்கத்தான் செய்யும்.

அதாவது ஓர் இடத்துலே இந்த மாதிரி ஒரு  ஸத்காலட்சேபம் நடந்து கொண்டு இருந்தது. ஒருவன் வந்தான். இங்கு காலட்சேபம் நடக்கிறது என்பதே தெரியாது. அந்த இடத்துலே உட்கார்ந்தான். ஸ்வாமிதர்சனம் பண்ணினான். போய் விட்டான். அவனுக்கு அந்த பலன் இருக்கவே இருக்கும். பஜனை நடந்து கொண்டு இருந்தது. அவனும் அவர்களோடு சேர்ந்து அந்த பஜனை நாமத்தை உச்சரித்தான். அதனுடைய பெருமை என்ன என்பது தெரியாது. எல்லாரும் பகவான் நாமா சொல்கிறார்கள். அவனும் சொல்லிவிட்டான். அந்த பலன் அவனுக்கு இருக்கவே இருக்கும். அதுதான் பூர்வார்த்தத்துலே சொன்னார், “தஹரர் ஹரதி பாபானே

திஷ்ட தித்மதர விஸ்ம்ருத:

என்று சொன்னார். அதனால் நாம் பாபங்கள் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் பாபம் பாபம்தான். அதற்கு பலனை அனுபவிக்க வேண்டியது உண்டு. அப்போது எத்தனையோ பாபங்கள் நடக்கிறதே இந்த எல்லாப் பாபங்களுக்கும் நாம் ப்ராயச்சித்தத்துக்கு  எங்கே போவது? அந்த ப்ராயச்சித்தங்கள் நமக்குத் தெரியவும் தெரியாது. அதனால் இந்த இத்தனை பாபங்களுக்கும் ப்ராயச்சித்தம் தேவியினுடைய நாமத்தை உச்சாரணம் செய்தால், தேவியினுடைய மகிமையைச் சொல்லும் போது ஏகஸ்ய நாம்ணே

ஞான  சக்தி:
பாப கானான் நிவர்த்தயே
தன் நிவர்த்ய மதே கர்த்தம்
மானன் லோகாய் ஸதுர்தசே”

இந்தப் பதினான்கு லோகங்களிலே இருக்கக் கூடிய ஜனங்கள் அத்தனை பேரும் செய்த பாபங்கள் எல்லாவற்றையும் தேவியுடைய ஒரு நாமமே போக்கும் என்று அதற்கு அர்த்தம். அப்பேர்ப்பட்ட மகிமை பகவன் நாமாவுக்கு இருக்கிறது. அதெல்லாம் வெறும் கதை. நாம் எப்படி நம்ப முடியும் என்று சொன்னால் நாம் எப்படி நம்ப முடியும் என்று சொல்லிக் கொண்டு இருப்பவன் அப்படியே உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டியதுதான். வந்து இவன் விஞ்ஞானம் ரொம்ப வராத சந்தர்ப்பத்துலே இந்த காலத்திலே ரேடியோ என்று ஒரு கருவி இருக்கிறதாமே! அதிலே பேச்சு வந்து கொண்டிருப்பதைப் பார்த்துட்டு அந்த பழைய காலத்து ஆட்கள் சொல்லிக் கொண்டு இருந்தார்களாம், ஏய்! அதிலே எவனோ உட்கார்ந்து கொண்டு பேசறாண்டா! இல்லாவிட்டால் எப்படி சப்தம் கேட்கும்? இல்லை ஓய்! அது எங்கேயோ டெல்லியிலோ எங்கோ என்றால் டேய்! டெல்லியிலே பேசுவது இதற்குள் எப்படி கேட்கமுடியும்? அதற்குள்ளே எவனோ உட்கார்ந்து பேசுகிறான். நீ நம்பா விட்டால் நான் என்ன பண்ணுவது ஐயா! அது விஷயம் அப்படித்தான். என்று இவன் சொல்கிறான். அதே போல் சாஸ்த்ரம் சொல்கிறது.அதில் நமக்கு சந்தேக ப்ரவிருத்தி இருந்தால் நமக்குத்தான் அதனுடைய பலத்தை அடைய முடியாதே தவிர சாஸ்த்ரத்தினுடைய தப்பு ஒண்ணும் இல்லை.

அதனால் பகவன் நாமத்துக்கு இவ்வளவு மகிமை இருக்கு என்று சாஸ்த்ரம் சொல்கிறது. இருக்கிறது வாஸ்தவம்தான். நாம் தினமும் பூஜை எல்லாம் செய்து முடித்தபிறகு கடைசிலே ஒரு ஸ்லோகம் சொல்கிறோம். ஏதோ அவர்கள் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். நாம் சொல்கிறோம் என்பதைத் தவிர அர்த்தத்தை யாரும் கவனிப்பது கிடையாது.

“யஸ்ய ஸ்ம்ருத்யாச நாமோத்யா
தபப் பூஜா க்ரியா திஹு
மோனம் சம்பூர்ணதாம்
யாதி சத்ய வந்தே தவஸ்யதம்

அந்த பரமாத்மாவின் ஸ்மரண மந்திரத்திலேயும் எந்த பரமாத்மாவின் நாமத்தை உச்சாரணம் செய்த மாத்திரத்திலேயே நாம் செய்யக் கூடிய கர்மாவில் ஏதோவகையில் ஒரு சிறிய கம்மி இருந்தாலும் அதாவது மந்த்ரம் சரியாக சொல்லவில்லை, அல்லது சரியாக அந்த தந்த்ரம் செய்யவில்லை. அல்லது பதார்த்தங்கள் சரியாகக் கொண்டுவரவில்லை. அல்லது தப்புத் தப்பாக நடந்து விட்டது, என்று எந்த ஒரு குறை இருந்தாலும், அந்தக் குறை அவ்வளவும் எந்த பரமாத்மாவின், நாமோச்சாரணத்தினாலேயே எந்த பரமாத்மாவின் ஸ்மரணத்தினாலேயே நீங்குமோ அப்பேர்ப்பட்ட பரமாத்மாவை நமஸ்கரிக்கிறேன் என்று அந்த ஸ்லோகத்தில் இருக்கிறது. “ஸ்ம்ருதி:” என்றால் ஸ்ரேணம் = நினைவு, பரமாத்மாவின் நாமத்தை உச்சரிப்பு = நாமோத்யா, நாமோத்தி: என்பதற்கு, உச்சரிப்பினாலேயும், தபப் பூஜா க்ரியா திஷு = நாம் செய்யக் கூடிய பூஜையிலே நாம் செய்யக் கூடிய இன்னும் எல்லா ஸத்கர்மாக்களிலேயும் ஊனம், அதில் என்னவெல்லாம் குறைவு வருகிறதோ அது எல்லாம் சம்பூர்ணமாகிறது. அது எப்போது? சத்ய = உடனே. தவச்சிதம் வந்தே = அந்தப் பரமாத்மாவை நமஸ்கரிக்கிறேன்.

பகவானுடைய மகிமையைச் சொல்வதற்கு இப்பேர்ப்பட்ட ஸ்லோகங்களை முன்னோர்கள் நமக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த அர்த்தத்தை நாம் அனுசந்தானம் செய்வதில்லை. அப்பேர்ப்பட்ட மகிமை பகவானுடைய நாமோச்சாரணத்துக்கு இருக்கிறது என்பதைச் சொல்கிறபோது இனி நாம் அதில் சந்தேகப்பட்டால் என்ன ப்ரயோஜனம்? ‘ஸம்சயாத்மா வினஸ்ய தி’ என்று பகவான் சொன்னார். சந்தேகம், சந்தேகம் என்று இருப்பவனுக்கு நாசம் தான். அவனுக்கு எதற்கெடுத்தாலும் சந்தேகம் தானே!

“நாயம் லோபோஸ்தி
நபரோ ஸம்சயா த் மன”

அந்த ஸம்சயாத்மா ஆனவனுக்கு இக பரலோகத்துலேயும் சுகம் கிடையாது. பரலோகத்துலேயும் சுகம் கிடையாது. இனி எதற்கெடுத்தாலும் அவனுக்கு சந்தேகம் ஆனதினாலே நீ சாப்பிடு! சாப்பிட்டால் வயிறு நிறையும் என்றால் நிறையுமோ, நிறையாதோ நான் எப்படி சாப்பிடுவது? இதில் என்ன போட்டிருக்குகிறார்களோ என்னவோ? நான் எப்படி சாப்பிடுவது? பால் கொண்டு கொடுத்தால் பாலில் என்ன சேர்த்திருக்கிறார்களோ? நான் எப்படி சாப்பிடுவது? நீ ஸ்கூலுக்கு போ! ஸ்கூலில் அங்கே பாடம் சொல்லிக் கொடுப்பார்களோ, மாட்டார்களோ, நான் ஏன் போகணும்? இந்த மாதிரி ஆரம்பித்துவிட்டால் அவனுக்கு இங்கேயும் சுகமில்லை. ஜன்மாந்தரத்திலேயும் சுகமில்லை என்பது தீர்மானம். அதனாலே நாம் இந்த விஷயத்துலே பகவானுடைய நாமத்துக்கு அபாரமான மகிமை உண்டு என்கிற விஷயத்துலே சந்தேகப்படக் கூடாது. அதற்காகத்தான் அங்கே தேவியைச் சொல்கிற போது,”பாபாரண்ய தவானலா” எப்படி காட்டுக்கு ஒரு தீ பிடித்து விட்டால் அந்தக் காட்டை முழுவதும் பஸ்பமாக்கி விடுமோ, அதேபோல் நம்முடைய பாபங்கள் எல்லாவற்றையும் பஸ்மமாக்கக் கூடிய பவித்ரமான நாமம் தேவியினுடையது. அதேபோல் “தௌர்பாக்ய தூல வாதூலா” நம்முடைய தாரித்ரியத்தை மரணம் பண்ணக்கூடிய சக்தி அவருக்கு இருக்கிறது. “ஜராத்ராந்த ரவிப்ரபா” வயசு ஆகி ரொம்ப முடியாத நிலைமை இருந்து அந்த அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிற சமயத்துலே அந்த தேவியுடைய ஸ்மரணம் அந்த தேவியுடைய நாமோச்சாரணம் மனத்திற்கு வந்தால் நாம் சௌக்யமாக இருக்க முடியும். “பாக்யாப்த சந்த்ரிகா” = சகல சௌபாக்யங்களும் அவருடைய தயவினாலே ப்ராப்த்திக்கும். ‘பக்தி சித்த கேகி கனா கனா” = பக்தர்களுடைய மனத்திற்கு அந்த தேவியினுடைய ஸ்வரூபம் வந்தால் அத்யந்த ஆனந்தமாக இருக்கும்.

“ரோக பர்வததம் போளிர் மீருத்யு” தாரு குடாரிகா = சகல ரோகங்களையும் தேவி நிவர்த்தி ஆக்குவாள். எந்த விதமான அப ம்ருத்யுக்களும் தேவி உபாசகர்களுக்கு வராது.

இப்பேர்ப்பட்ட மகிமை பரதேவதைக்கு இருப்பதனாலே நாம் அந்தப் பரதேவதையை ஆராதிக்கிறோம். அதேபோல் அவளைப் பூஜிக்கிறவருடைய விஷயத்தைச் சொல்கிறபோது ஓர் இடத்திலே அதே சஹஸ்ர நாமத்திலே சொல்கிறது, “அந்தர்முக சமாராத்யா பஹிர் முக ஸுதுர் லபா”

அந்தர் முகன், பஹிர் முகன் என்று சொன்னால் எவனுடைய மனத்திலே அந்தப் பரதேவதையைத் தவிர வேறு எதையும் நினைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இல்லையோ அவன் உத்தமன் = அந்தர் முகன். எவனுக்கு பூஜைக்கு உட்கார்ந்தாலும் மனது அங்கே இல்லையோ அவன் பஹிர்முகன். நமக்கு உட்கார்ந்தோம் என்ற பெயரே தவிர அங்கே டெலிபோன் வந்திருக்கிறதே அதை அட்டென்ட் பண்ணனும், இங்கே இன்று ரேடியோவில் (ஸீமீஷ்s) செய்தி என்ன வருகிறது? அதைக் கேட்கணும். ஏனென்றால் சரியாக பூஜைக்கு உட்கார்ந்த போதுதான் அது வருமாம். அதனால் அதையும் விட முடியாது. அதனால் அதைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். ஒருபக்கம் டெலிபோன், மறுபக்கம் ரேடியோ நடுவிலே பூஜை. அப்பேர்ப்பட்ட பஹிர்முகர்களுக்கு தேவி அத்யந்த துர்லபமானவள். நமக்கு பூஜை என்று சொன்னால் மனசு அங்கே லயித்திருக்கிறதா இல்லையா என்பது நமக்கு அத்யந்த அவச்யகமானது.

“அந்தர்முக சமாராத்யா”

அதனால்தான் அப்பேர்ப்பட்ட அந்தர்முகமானவன், அதாவது பகவத் விஷயத்துலே மனசு லயித்திருப்பவன் அவன் பூஜை செய்ய வேண்டும்.

அதேபோல் இன்னோர் இடத்திலே சொல்லியிருக்கிறது. “பௌத்ரியாதி வாசனா லப்யா” என்று சொல்லியிருக்கிறது. சில வாசனைகள் வாசனை என்றால் புஷ்பத்தினுடைய வாசனை என்று அர்த்தம் இல்லை. சில ஸம்ஸ்காரங்கள். என்ன என்றால் மத்ரி, கருணா, மோதித, உபேக்ஷா, சுக, துக்க, புண்யா புண்ய விஈயானாம் பாவானாத: சித்தப் ப்ரஸாதனம்” என்று வேத சாஸ்த்ரத்திலே சொல்லியிருக்கிறது. அதாவது உலகத்துலே சிலருக்கு ரொம்ப சுகம் கிடைக்கிறது. சிலருக்கு ரொம்ப துக்கம். சிலர் எப்போதும் நல்ல கார்யங்கள் பண்ணுகிறார்கள். சிலர் கெட்ட கார்யங்கள் பண்ணுகிறார்கள். அப்பேர்ப்பட்ட ஆட்களைப் பார்க்கும்போது நம்முடைய மனசுலே எப்படி இருக்கணும் என்கிற ஒரு ப்ரச்னை, நமக்கு சாதாரணமாக எப்படி வருகிறது என்று கேட்டால் மனுஷ்யனுக்கு இயற்கையாக ஒருத்தன் ரொம்ப சௌக்யமாக இருக்கிறான் என்று சொன்னால் அவனைப் பார்த்தால் வயிற்றெரிச்சல்! என்ன சௌக்யமாக இருக்கிறான் என்று கேட்டால் “சார்! அவன் எப்படி வந்தான் என்று தெரியும் ஓய்! எல்லாம் கள்ளப் பணம் தானே! (உடனே) சௌக்யமாக இருக்கான். புண்யம் பண்ணியிருக்கிறான், ரொம்ப சௌக்யமாக இருக்கிறான் என்று சொன்னால் போதாதா? அது இல்லை, ஒருத்தன் ரொம்பக் கஷ்டப் படுகிறான். படட்டும். இன்னும் கஷ்டப் படட்டும். அதைப் பார்த்தால் ஒரு கருணை உண்டாக வேண்டாமா? அது கிடையாது. ஒருத்தன் ரொம்ப நல்ல கார்யங்கள் பண்ணுகிறான். அதைப் பார்த்து சந்தோஷப்படக் கூடாதா? ஒருத்தன் நல்ல கார்யங்களைச் செய்கிறான் என்று சொன்னால் அங்கே ஏதாவது ஒரு குற்றம் கண்டு பிடிக்கிறதே தவிர அங்கே சந்தோஷப்படுவது என்பதே கிடையாது. அதேபோல் ஒருத்தன் தப்பிதம் பண்ணுகிறான் என்று சொன்னால் நமக்கு முடிந்தால் அவனுக்கு புத்திமதி சொல்லுவது இல்லை என்றாலும் பேசாமல் இருக்கலாம். அது போதும். எப்போதும் அவனைப்பற்றித் திட்டிக் கொண்டே இருப்பது அது எதற்கு? அதுவும் கூடாது. அதுதான் அங்கே சொல்லியிருக்கிறது. மைத்ரி, கருணை, முதிதா உபேக்ஷா. ரொம்ப சௌக்யமாக இருக்கிறான் என்று சொன்னால் அவன் விஷயத்துலே வயித்தெரிச்சல் பட வேண்டாம். ஸ்நேகத்தோடு இரு. ரொம்ப சந்தோஷம் ஓய்! சௌக்யமாக இருக்கிறீர்கள். சந்தோஷம். ஒருத்தன் ரொம்ப கஷ்டத்துலே இருக்கிறான் என்று கேட்டால் அவன் விஷயத்துலே கருணையோடு இரு. துக்கத்திலே இருக்கான் என்று சொன்னால் அவன் விஷயத்துலே ஒரு கருணை வேணும். கருணை என்று சொன்னால் இன்னொருத்தனுடைய துக்கத்தை நீக்க வேண்டும் என்ற விருப்பம் மனத்திலே உண்டாவது. அப்படிப்பட்ட ‘தயை’ என்பது உனக்கு வரவேண்டும். “என்னப்பா! ரொம்ப கஷ்டப் படுகிறாய். எனக்கு முடிந்த அளவுக்கு நான் உனக்கு உதவி செய்கிறான்.”

ஒரு ‘ஜீவித வாகனன்’ என்கிற ஒரு வித்யாதரனுடைய கதை இருக்கிறது. அது ஸம்ஸ்க்ருதத்துலே’ நாகானந்தம்’ என்கிற ஒரு நாடகத்துலே எழுதியிருக்கிறார்கள். ஒரு கருணருசிப்ரதானமான கதை. அதைப் படித்தால் கண்ணிலே ஜலம் வராதவனே கிடையாது. அப்பேர்ப்பட்ட ‘கருணாரசம்’ ரொம்ப இருக்கும் அந்த நாடகத்துலே. அதாவது இந்த கருடன் வந்து சர்பங்களை, தினமும் ஒரு சர்பத்தை சாப்பிடுவேன் என்று ப்ரதிக்ஞை பண்ணிக் கொண்டான். இல்லாவிட்டால் சர்ப குலத்தையே நாசம் பண்ணுவேன் என்று சொல்லி விட்டான். அப்போது அவர்கள் எல்லாரும் என்ன பண்ணினார்கள் என்று கேட்டால் “நாங்களே உனக்கு தினம் ஒரு சர்ப்பத்தை (பாம்பை) அனுப்புகிறோம். நீ எங்கள் குலத்தை நாசம் செய்யாதே” என்று சொன்னார்கள். அதே போல் தினமும் ஒரு சர்ப்பம் வரவேண்டியது, அதை கருடன் சாப்பிட்டு விட்டுப் போவது என்று இருந்தது. இந்த ஜீவித வாகன்’ என்ற வித்யாதரன்  ஒருதடவை அந்தப் பக்கத்துக்கு வந்தான். அங்கே வந்து பார்க்கும் போது அன்று ஒரு பாம்பு “சங்கசூடன்’ என்று பெயர். அன்று அதனுடைய சர்த்தை. கருடன் அங்கே வரணும் அந்த ‘சங்க சூடனை’ சாப்பிட வேண்டும். அப்போது அந்த வித்யாதரன் ‘ஜீவித வாகனன்’ கேட்டார். “என்னப்பா இங்கு வந்திருக்கிறாய்? இன்று என்னைத் தான் கருடனுக்கு ஆஹாரமாக எங்கள் வாசுகி அனுப்பியிருக்கிறார். வந்திருக்கிறேன். அது என்னப்பா? உன்னை கருடன் சாப்பிடவேண்டுமா? ஆமாம்!  சரி இன்று என்னைச் சாப்பிடட்டும். கருடன் நீ உயிரோடு இருந்து கொள். “என்றானாம், சாத்யமில்லையே சாத்யமில்லை. நான்தான் இன்று கருடனுக்கு ஆஹாரம். அதுதான் அங்கே என்ன ஒரு திட்டம் பண்ணியிருக்கிறார்கள் என்று கேட்டால் ஒரு சிவப்பு துணியை மாலை போட்டுக் கொள்ள வேண்டியது. மேலே போட்டுக் கொண்டு அங்கே ஒரு சில ஒரு கல் இருக்கிறது. அந்தக் கல்லில் உட்கார வேண்டியது. உடனே அந்த கருடன் வருவான். அந்தத் துணியை எடுத்து விட்டு அந்தப் பாம்பை சாப்பிட்டு விட்டுப் போய் விடுவான். இந்த ஜீவித வாகனன் கேட்டான் “அந்த சிவப்புத் துணியை எனக்குக் கொடு. நான் மேலே போட்டுக் கொண்டு உட்காருகிறேன். இதற்கு வத்தி சிலை என்றுபெயர். அந்த ‘வத்தி சிலை மேல் உட்காருகிறேன்” சாத்யமே இல்லை என்று அந்தப் பாம்பு சொன்னதாம். “இல்லை நான் உன்னைக் காப்பாற்ற வேண்டும். ஏய் எனக்காக நீ உயிரை விட்டால் என்ன ப்ரயோஜனம்?” என்று பாம்பு கேட்டதற்கு ஜீவித வாகனன் சொல்கிறான், “இந்த உயிரைக் கொடுத்தால் ஒருவனைக் காப்பாற்ற முடியும் என்று சொன்னால் அவச்யம் அதைக் கொடுக்க நான் தயார். இதை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது?” அவன் அப்படியே அந்த ஜீவித வாகனன் அந்த வத்தி சிலையிலே உட்கார்ந்தான் கருடன் வந்தான். வரும்போது இவனுக்கு சந்தோஷம். முதல்நாள்வரை அந்த பாம்புகள் நடுங்கிக் கொண்டு இருந்தன (கருடன் வரும்போது) இன்று இவன் மிக சந்தோஷத்துடன் வாருங்கள் என்னுடைய புண்யத்தினால நீங்கள் வந்திருக்கிறீர்கள் சாப்பிடுங்கள் என்னை” என்றானாம். அதைக்கேட்டு கருடனுக்கு அபரிமிதமான ஆச்சர்யம். இன்று வரை யாரும் இந்த வார்த்தை சொல்லவில்லையே! நான் வரும்போது நடுங்கிக் கொண்டு இருந்தார்களே இவன் வந்து என்னை சாப்பிடுங்கள் என்று சொல்கிறானே! என்று நினைத்துக் கொண்டு “என்ன யோசனை பண்ணுகிறீர்கள்.? என்ன! என்னை சாப்பிட உங்களுக்கு பிடிக்கவில்லையா? தாராளமாக சாப்பிடுங்கள்” என்றானாம். பின்பு கடைசியிலே கருடனுக்கு “ஏய்! இப்படிப்பட்ட ஒரு பவித்ர ஆத்மா இருக்கிறானே! தன்னுடைய உயிரைக் கொடுத்து இன்னொருவனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்கு இருந்தானே! அப்போது இத்தனை நாள்கள் நான் என்ன பாவம் பண்ணினேன்?” என்று கருடனுக்கு பச்சாதாபம் வந்து விட்டது என்று சொல்வார்கள்.

அதாவது கருணை என்று சொன்னால் இன்னொருத்தனுக்கு எப்படியாவது நாம் உதவி செய்ய வேண்டும் என்கிற ஒரு பாவம். அந்த பாவத்தை விட்டு விட்டு அவன் கஷ்டத்தில் இருக்கிறான் என்று சொன்னால், இருக்கட்டும் என்று சொன்னால் அது என்ன குணம்? அதேபோல் ஒருத்தன் புண்யம் பண்ணுகிறான் என்று சொன்னால் அங்கு சந்தோஷத்தைக் காட்ட வேண்டும். ஓ! பெரிய கார்யம் பண்ணுகிறீர்கள். இன்னும் பண்ணுங்கள். சந்தோஷம். உங்கள் மாதிரி தர்மிஷ்டங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லவேண்டாமா? அதை விட்டு விட்டு அவர் எப்படி பண்ணுகிறார் எனக்கு தெரியாதா? என்று சொல்லவேண்டுமா? அவர் எந்த பக்கத்திலிருந்து வருகிறார் என்று தெரியுமா? எந்த பக்கத்திலிருந்து வந்தால் என்ன? அவன் செய்கிற நல்லகாரியத்தைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டாமா? இன்று ஒருவர் என்னிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.

ஸ்வாமிஜி! உலகத்துலே ஒரு பெரிய ஆச்சர்யம் என்ன பார்க்கிறோம் என்று கேட்டால் (சாதாரணமான மனிதர்கள் சொல்வது தான்) பெரிய, பெரிய தணிகர்கள் அதாவது ஒரு நாளுக்கு பத்து லட்க்ஷம், இருபது லட்க்ஷம் வியாபாரம் பண்ணிக் கொண்டு இருக்கக் கூடிய தணிகர்கள் (பணக்காரர்கள்) இருக்கிறார்களே! அவர்களுக்கு வருஷத்துக்கு ஒரு லக்ஷம் ரூபாய் தர்மம் பண்ண வேண்டும் என்று கூட மனசு வர மாட்டேன் என்கிறது. அந்த விஷயம் (தர்மம்) வரும்போது நான் கொஞ்சம் கஷ்டத்தில் இருக்கிறேன் என்று சொல்லி விடுகிறார்கள். ஒரு நாளுக்கு 10,20 லக்ஷம் ரூபாய் வியாபாரம் நடந்து கொண்டு இருக்கிறது என்பது சரி. என்றைக்காவது ஒரு நாள் ஒரு பெரிய காரியம் பண்ணவேண்டும் என்று யாராவது போனால் நீங்கள் மன்னிக்க வேண்டும். கஷ்டத்தில் இருக்கிறேன். இதோ 100 ரூபாய் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த காரியத்தை முடித்து விடுங்கள் என்று சொல்லி விடுகிறார்கள்.  உலகத்துலே இது ஒரு பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது என்று சொன்னார்.

அப்படி நாம் இல்லாமல் ஒருத்தன் வந்து அந்த விஷயத்துலே நல்ல மனசோடு தர்மத்தைச் செய்கிறான் என்று சொன்னால் அவன் விஷயத்தில் நம் சந்தோஷத்தைத் தெரிவிக்க வேண்டியது நம் கடமை. அதை விட்டு விட்டு அவன் விஷயத்துலே கேவலம் ஆட்ஷேபத்தையே நாம் தெரிவித்தோமானால் அது அர்த்தம் இல்லாத கார்யம். அதேபோல் ஒருத்தன் ரொம்ப தப்பிதம் பண்ணுகிறான் என்று சொன்னால் அவனுக்கு புத்திமதி சொல்லலாம். நீ இந்த மாதிரி இருக்கக் கூடாது. இன்னும் என்னவென்றுகேட்டால் அது அவனுடைய ப்ராப்தம் என்று சொல்லி விட்டு விடுகிறோமே தவிர, அவனைப் போய் வார்த்தைக்கு வார்த்தை, திட்டிக் கொண்டே இருந்தால் என்ன ப்ரயோஜனம்?

அதனால் உனக்கு ஒண்ணும் நல்லது ஆகாது. அவனுக்கும் ஆவது இல்லை. இனி உனக்கு ஸ்ரமம் ஒண்ணுதான் பலன். அதனால் இந்த ஒரு நான்கு வாசனை? என்ன வாசனை? ஸம்ஸ்காரங்கள். என்ன ஸம்ஸ்காரம்? சுகத்துலே இருக்கிறவன் விஷயத்துலே ஸ்நேகத்தோடு இருக்கிறதும், துக்கத்துலே இருக்கிறவனோட விஷயத்துலே. கருணையோடு இருக்கிறதும், புண்யம் செய்கிறவன் விஷயத்துலே சந்தோஷமாக இருக்கிறதும், பாபி விஷயத்துலே உபேக்ஷையாக இருக்கிறதும், இந்த ஸம்ஸ்காரங்கள் எவனுக்கு இருக்கிறதோ அவன் உத்தமமானவன். அவன் தேவி பூஜை செய்வதற்குத் தகுதியானவன் என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது நாம் அப்பேர்ப்பட்ட ஓர் உத்தமமான ஸம்ஸ்காரங்களை சம்பாதிக்கனும் என்பதற்கு முயற்சி செய்ய வேண்டுமே தவிர எனக்கு அதெல்லாம் கிடையாது நான் ஒண்ணும் தேவி பூஜை செய்ய வேண்டியதில்லை என்று யாரும் நினைத்துக் கொள்ளக் கூடாது. நாம் அந்த ஸம்ஸ்காரங்களை சம்பாதிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதேபோல் தேவி “ஸதாசார ப்ரவர்த்திகா” ஸதாசாரத்தை அவள் ஸர்வத்ரா தினங்களுக்கு ப்ரேரணையை, ஸதாசாரத்தில் இருப்பதற்கு ஒரு ப்ரேரணையைக் கொடுப்பாள். “துராசாரசமனீ” துராசாரங்களை நாசமாக்கக் கூடியவள்.

நம்முடைய முக்யமான ஒரு விஷயம், ஒரு ‘ஸதாசாரம்’ = பவித்ரமான ஆசரணம் என்பது நமக்கு வேண்டும். ஆசரணத்துலே ஒரு பாவித்ரியம் இல்லா விட்டால் இனி நாம் என்ன செய்தாலும் என்ன ப்ரயோஜனம்? அநேகம் பேருக்கு வேதங்கள் விஷயத்துலே ஓர் அபாரமான மதிப்பு, உண்டு. ஆனால் வேதத்துலே இருக்கக் கூடிய ஒரு ‘வைசிஷ்டம்’ ஓர் இடத்துலே சொல்லி இருக்கிறது. “ஆசாரஹீனம் நபினந்தி வேதா: ஆசாரமே இல்லாவனுக்கு அவனை வேதங்கள் கூட பவித்ரம் ஆக்காது. அதனால் ஆசாரம் என்பது ரொம்பவும் முக்யம். ஆசாரம் என்று சொன்னால் அது ஸதாசாரம். துராசாரம் அல்ல. அப்பேர்ப்பட்ட ஸதாசாரத்துலே நாம் இருக்கணும் என்று சொன்னால் நமக்கு தேவியினுடைய அருள் வேண்டும். ஏனெனில் அவள்தான் “ஸதாசார ப்ரவ்ருத்திகா” நமக்கு இருக்கிற துராசாரங்கள் தூரமாகனும் என்று சொன்னால் அவளுடைய அருள்தான் வேணும். அவள்தான் “துராசார சமனி” இப்பேர்ப்பட்ட மகிமை தேவிக்கும் அபாரமாக சொல்லியிருக்கிறது. அதே ஸஹஸ்ர நாமங்களிலே. அது மட்டும் இல்லை. அவளை நாம் ஸ்ரத்தையோடு ஆராதித்தால் “ஸத்ய ப்ரஸாதினீ” = உடனே அனுக்ரஹம் செய்வாள். அது ஒண்ணும் தாமதமே இருக்காது. ஆனால் நம்முடைய பக்தி என்பதை மட்டும் அவள் ரொம்பவும் எதிர் பார்ப்பாள். “பக்தி ப்ரியா பக்தி கம்யா பக்தி வச்யா பயா பஹா” பக்தியை அவள் ரொம்பவும் எதிர் பார்ப்பாள். அதுதான் பகவான் கீதையிலே சொல்கிற போது “ஏமே பக்த்யா ப்ரயச்சதி” நாம் பகவானுக்குக் கொடுக்கக்கூடிய பதார்த்தம் பெரிசா என்பது ப்ரச்னை அல்ல. நாம் அதை பக்தியோடு கொடுக்கிறோமா இல்லையா என்பது தான் ப்ரச்னை. பக்தியோடு நாம் எதைக் கொடுத்தாலும் பகவான் ஸ்வீகரிப்பான்.

அதேதான் பகவத் பாதாள் சொல்கிறபோது
“பக்தி கின்ன துரோத்யஹோ
வனசரோ பக்தா வதம் சாயதே”

ஏய்! பக்தி ஒண்ணுதான் முக்யம். பக்தி வேண்டுமே தவிர பெரிய பண்டிதர்கள் பூஜை பண்ணினால் தான் பகவான் ஏற்றுக் கொள்வார். பெரிய பணக்காரர்கள் பூஜை பண்ணினால்தான் பகவான் ஏற்றுக் கொள்வார் என்கிற அர்த்தம் இல்லை. ப்ரச்னை இல்லை. வெறும் பக்தி என்கிற ஒண்ணு இருந்தால் அது ஒரு காட்டு மனுஷன் ஆனாலும் அவனுடைய பூஜையை பகவான் பஹூஸந்தோஷத்தோடு ஸ்வீகரிப்பான் என்று சொல்லியிருக்கிறது. அதனால் தான் ஸம்ஸ்கிருதத்துலே ஒரு ஸ்லோகம் இருக்கிறது “ ஒரு பண்டிதர் தினமும் பகவான் சந்நிதிக்குப் போய்” விஷ்ணவேநம: என்று சொன்னார். இன்னொருத்தனுக்கு பாவம் ஒரு ‘ராமசப்தம்’ தவிர வேறு எந்த சப்தமும் தெரியாது. விஷ்ணாய நம: என்றான். இந்த பண்டிதருக்கு வந்து என்னடா இவன் தினம் வந்து “அபசப்த ப்ரயோகம்’ பண்ணுகிறான் என்று தோன்றும். விஷ்ணாய நம: இந்த இருவருக்கும் பக்தி ரொம்ப உண்டு. ஆனால் அவன் அபசப்தம் பண்ணுகிறானே இப்படி ப்ரயோகம் பண்ணுகிறவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது? என்று தோன்றும். கடைசியிலே இவரும் பகவத் சாகித்யத்துக்குப் போனார். அவனும் அங்கே தயாராகி விட்டான். “ஏய் நீ எப்படி யடா வந்தாய் இங்கே! என்று கேட்டால் பகவானுக்கு விஷ்ணாயா! சொன்னால் என்ன விஷ்ணவே சொன்னால் என்பது ப்ரச்னை இல்லை. இரண்டு பேருடைய மனசுலே பக்தி இருந்ததா என்று பார்த்தார். இரண்டு பேருக்கும் பக்தி இருந்தது. இரண்டு பேருக்கும் சாயித்யம் கொடுத்து விட்டான். “மூர்க்கோவததி விஷ்ணாயா”

“ வித்வான் வததி விஷ்ணவே
உபயோ சதுர்சம் புண்யம்
பாவக்ராஹி ஜனார்த்தன:”

அதனால் நம்முடைய பக்திக்குத்தான் பகவான் மதிப்பு கொடுப்பானே தவிர இவன்பெரிய பண்டிதனா? இவன் பெரிய பணக்காரனா? இவன் பெரிய அதிகாரியா? என்று பகவான் பார்க்க மாட்டான். அதனால் நாம் எல்லாரும் பக்தியோடு பகவானைப் பூஜித்தால் ஸ்ரேயஸை அடைய முடியும். அப்பேர்ப்பட்ட மகிமை தேவிக்கு இருக்கிறது. அந்த தேவியை பக்தியோடு நாம் உபாஸிக்க வேண்டும். சமீபத்திலே யாரோ என்னிடம் கேட்டார்கள். ஸ்வாமிகளே! அம்பாள் பூஜை செய்ய வேண்டும் என்றால் எல்லாருக்கும் எப்படி முடியும்? எல்லாருக்கும் சாத்யமில்லையே என்ன சாத்யம் இல்லையப்பா! என்ன வேணும்? அம்பாளுக்கு வேண்டியது, உன்னுடைய பக்தி ஒண்ணுதான் வேணும். அந்த பக்தி இருந்தால் வேறு ஒண்ணும் செய்ய வேண்டியதில்லை அம்பாளுடைய உருவம் வைத்துக் கொண்டு நாமத்தைச் சொல்லிக் கொண்டு வா. போதும். அதிலேயே நீ ஸ்ரேயஸை அடைய முடியும். அதனால் அம்பாளை பூஜை செய்வதற்கு பூஜிப்பதற்கு எல்லோருக்கும் யோக்யதை இல்லை என்று மட்டும் நினைத்துக் கொள்ளவே வேண்டாம். எல்லாருக்கும் யோக்யதை இருக்கிறது. அதனால் அப்பேர்ப்பட்ட பக்திப் பாவத்தோடு நாம் தேவியை ஆராதித்து ஸ்ரேயஸை அடைய வேண்டிய ஒரு பவித்ரமான சமயம் இது. இந்த சமயத்தை நாம் வ்யர்த்தமாக்கக்கூடாது. வீணாக்கக் கூடாது. இந்த சமயத்தை சார்த்தகப் படுத்த வேண்டும்.

எங்க சச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் (பரமேஷ்டி குருநாதர்) தேவியை அநேக விதமாக ஸ்துதித்திருக்கிறார். பகவத் பாதாள் எப்படி தேவீஸ்தோத்ரங்கள் அநேக ஸ்தோத்ரங்கள் செய்தாரோ அதே போல் எங்க சச்சிதானந்த சிவாபிநவ நரஸிம்ம பாரதீ ஸ்வாமிகளும் அம்பாளை அநேக விதமாக ஸ்துதித்து இருக்கிறார். அவர் அம்பாள் சந்நிதியிலே ஒரு ப்ரார்த்தனை நாம் எல்லோரும் பண்ணவேண்டும் என்று சொன்னார்.

“வித்யாம் சுத்தாம் ச புத்திம்
கமல ஜதயிதே ஸத்வரம்
தேஹி விஸ்யம்
(கமலஜதியிதா அஷ்டகம்).

முக்யமாக நமக்கு வேண்டியது. வித்யையும், பரிசுத்தமான புத்தியும். நம்முடைய மனசுலே கல்மிஷம் இருந்து விட்டால் நாம் எவ்வளவு படித்தாலும் சுகம் இல்லை. மனசு நிர்மலமாய் இருக்க வேண்டும். அந்த ஒரு நிர்மலமான மனசு இருந்தால் நம்முடைய ஜென்மம் க்ருதார்த்மாகி விடும். அதே போல் இந்த சம்சார பந்த நிவர்த்தகமான ஞானத்தையும் தாயே! நமக்கு கொடு என்று சொன்னார் அவர். அதேபோல்.

“பாபம் ஹம்ஸயித்வா
பஹூ ஜனி ரஜிதம்
கிம்ஜதே அணி மாராத் சம்பாத்யா
அஸ்திக்ய வித்யம்”
ஸ்ருதி குரு வசனஷ்வாகரம் பக்தி தாட்யம்

பாபத்தைப் போக்க வேண்டும். அநேக ஜென்மங்களில் பாபத்தைச் செய்திருக்கிறோம். ‘பஹுஜனிரசிதம் பாப விஹம் தம் யித்வா” இந்த ஜென்மம் மட்டுமில்லாமல் எத்தனையோ ஜென்மங்களிலே பாபம் நடந்திருக்கிறது. அதெல்லாம் நீதான் போக்க முடியும் என்று “பாபாரண்ய தவானலா” என்று வேண்டினார். அதனால் நீ இந்த பாபத்தைப் போக்கி. புண்யத்தை எனக்கு வரும்படி செய்து ஆஸ்திக்யத்தை உண்டாக்கி ஆசார்யாள் விஷய (குரு) பேச்சுலேயும் சாஸ்த்ரத்தின் வாக்கிலேயும் விஸ்வாசத்தை உண்டாக்கி என்னைக் காப்பாற்ற வேண்டும். ஆஸ்திக்யம் வேணும் என்று அங்கே சொல்லிஇருக்கிறார். அந்த ஆஸ்திக்யம் இல்லாமல் கேவலம் நாஸ்திகன் மாதிரி நாம் வாழ்க்கை நடத்தினால் இந்த வாழ்க்கையும் அந்த நாஸ்திகர்கள் வாழ்க்கைக்கும் நாலுகால் ப்ராணிகள் வாழ்க்கைக்கும் வித்யாஸம் இல்லை. அப்பேர்ப்பட்ட வாழ்க்கையை நாம் நடத்தக் கூடாது. அதனால் அங்கே ஆஸ்திக்யத்தை உண்டாக்கும் என்று தாயாரை (தேவியை) வேண்டிக் கொண்டார் அவர். அப்பேர்ப்பட்ட மகான்கள் எல்லாரும் அதிஸ்ரத்தையோடு இந்த பவித்ரமான சமயத்தில் தேவியை ஆராதித்தார்கள் என்கிறபோது அதே மகான்களுடைய பரம்பரையில் வந்து இருக்கிற நாம் எல்லோரும் கூட அந்த தேவியை அதே பக்தி ஸ்ரத்தைகளோடு ஆராதித்து ஸ்ரேயஸை அடைய வேண்டியது கர்தவ்யம் (கடமை)


திருப்போரூர் கந்த ஸ்வாமி முருகன் கோவில்

ஆணவத்தை அழிக்கும் அருள்மிகு திருப்போரூர் கந்த ஸ்வாமி முருகன் திருக்கோவில்


ஸ்தல வரலாறு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது திருப்போரூர் திருத்தலம். சுமார் 700 வருடப் பழைமையான ஆலயம் எனும் பெருமை மிக்க திருத்தலம் இது.

முருகப்பெருமான், அசுரர்களை எதிர்த்து நிலம், நீர், ஆகாயம், ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கினார். அவர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். இவ்வகையில் அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று முருகப்பெருமான் அடக்கி, ஒடுக்கிய இடமே திருப்போரூர் திருத்தலம் ஆகும்.

கந்தசுவாமி திருக்கோவில் :

அசுரர்களுடன் முருகப்பெருமான் போரிட்ட போது, மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர்புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும், பைரவரின் துணையோடும் கண்டறிந்து முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இவ்வாறு மறைந்திருந்த அசுரர்கள், முருகப் பெருமானின் கண்களில் அகப்பட்ட இடமே இன்றும், கண்ணகப்பட்டு (கண் அகப்பட்டு) என்ற இடமாக திருப்போரூர் அருகில் உள்ளது.

அருணகிரிநாதர் இந்தத் தலத்துக்கு வந்து, முருகப்பெருமானைத் தரிசித்து திருப்புகழ் பாடியிருக்கிறார்.

முருகப் பெருமானுக்கு அப்பனுக்கே பாடம் சொன்னவன் என்றும் ஞானகுரு என்றும் பெயர்கள் உண்டு. திருப்போரூர் முருகப்பெருமான், மற்ற தலங்களைப் போல் அல்லாமல், பிரம்மாவுக்கு உரிய அட்சரமாலையை கையில் ஏந்தியபடி, திருமாலைப் போல இடது கரத்தை தொடையில் வைத்தபடி சிவனாருக்கே உரிய அபய ஹஸ்த முத்திரையுடன் மும்மூர்த்திகளின் அம்சமாத் திகழ்கிறார்.

தந்தை ஈசனைப் போலவே இங்கே சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர் கந்தபெருமான் என்கிறது ஸ்தல புராணம். எனவே, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது. மாறாக, ஸ்ரீசுப்ரமண்யர் யந்த்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்த்ரத்துக்கே அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

இந்த யந்த்ரத்தில் கந்த சுவாமி கடவுளின் திருநாமங்கள் சுமார் 300க்கும் மேலாகப் பொறிக்கப்பட்டு உள்ளன.

பிரளயத்தால் ஆறு முறை அழிவைச் சந்தித்து, ஏழாவது முறை கட்டப்பட்டதாம் இந்தக் கோயில். அதுவே இன்றளவும் நிலைத்து, கம்பீரத்துடன் காட்சி தருகிறது!

ஓம்கார அமைப்பில் அமைந்த ஆலயம். சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும் போது சந்நிதியில் இருந்து பார்த்தால், முன்னே தரிசித்துச் செல்பவர்களைப் பார்க்க முடியாதபடி அமைக்கப்பட்டு உள்ளது.

எல்லாக் கோயில்களிலும் கோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் கொடிமரம் அமைந்திருக்கும். ஆனால் இங்கே, கோபுரத்திற்கு வெளியே இருக்கிறது கொடிமரம்..

திருத்தணி, சுவாமிமலை தலங்களில் முருகக் கடவுளின் சந்நிதிக்கு எதிரில் ஐராவதம் எனும் வெள்ளை யானை வாகனமாக நிறுத்தப்பட்டிருக்கும். அதேபோல், மயில்வாகனனின் வாகனமாக, இங்கு ஐராவத யானை சிலையாக அமைக்கப்பட்டு உள்ளது.

ஸ்தல வரலாறு :

மதுரையில் சங்கப்புலவர் மரபில் அவதரித்தவர் சிதம்பர சுவாமிகள். இவர் மதுரை மீனாட்சியம்மனையும் சொக்க நாதரையும் அனுதினமும் உள்ளத்தில் இருத்தி தியானித்து வந்தார். மீனாட்சி அம்மனின் மீது கலிவெண்பாவும் பாடியுள்ளார்.

அன்னை மீனாட்சியின் அருளுரை :

ஒருமுறை சிதம்பர சுவாமிகள் தியானத்தில் அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தார். கூடவே அன்னை மீனாட்சி தோன்றி, ‘சிதம்பரா! மதுரைக்கு வடக்கே, காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் உள்ளது. அங்கே குமரக் கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து, அழகிய திருக்கோவில் நிர்மாணித்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்து. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டும்’ என்று அருளுரைத்து மறைந்தார்.

மதுரையில் இருந்து அன்னை மீனாட்சி காட்டிய திசையில் பயணித்து, யுத்தபுரி, சமராபுரி, போரிநகர் என்றெல்லாம் அழைக்கப்படும் திருப்போரூரை அடைந்தார் சிதம்பர சுவாமிகள். அப்போது அங்கு ஒரு வேம்படி விநாயகர் ஆலயம் மட்டுமே இருந்தது. மற்ற பகுதிகள் பனங்காடாக காணப்பட்டது. அந்தப் பகுதியில் முருகப்பெருமான் திருவுருவத்தை தேடித் திரிந்தார். இறுதியில் ஒரு பனை மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக கந்தப்பெருமான் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தார்.

கோவில் கட்டும் பணி :

சுயம்பு மூர்தமாக வெளிப்பட்ட முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோவிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் சிதம்பர சுவாமிகள் தியானத்தில் இருந்த போது அந்த சுயம்பு வடிவ கந்தப் பெருமானின் உருவில் இருந்து முருகப் பெருமான் தோன்றி, சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து ‘சிவாயநம’ ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோவிலின் தோற்றமும், அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் என்பதை உணர்ந்தவர், மனதில் தோன்றிய கோவில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

ஒருமுறை திருப் பணிக்காக வைத்திருந்த பொருட்களை திருடர்கள் கவர முயற்சிக்க, அவர்கள் பார்வை இழந்து வருந்தினர். சுவாமிகளை வணங்கி மீண்டும் கண் பார்வை பெற்ற கள்வர்கள், தாங்கள் வைத்திருந்த பொன், பொருட்களை திருப்போரூர் ஆலய திருப்பணிக்கு கொடுத்து விட்டு சென்றனர்.

கோவிலுக்கு நிலம் தானம் :

அந்த காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட ஆற்காடு நவாப் மன்னனின் மனைவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது, நவாப் மனைவிக்கு திருநீறு பூச, அவரது வயிற்று வலி நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோவிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று அழகிய திருக்கோவில் எழுந்தது. அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோவில் ஆகும்.

ஆலயத்தின் தெற்கே அமைந்துள்ள திருக்குளமான ‘வள்ளையார் ஓடை’ என்னும் சரவணப் பொய்கையில் நீராடி, கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கீழே ஒரு சிறு பீடத்தில் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம், அபய வரத திருக்கரங்களுடன் பிரம்ம சாஸ்தா வடிவில் வள்ளி- தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். மூலவர் சுயம்பு என்பதால் இந்த சிறிய மூர்த்தியை சிதம்பர சுவாமிகள், அபிஷேக வழிபாட்டிற்காக அமைத்துள்ளார்.

உபதேச மூர்த்தி :

கருவறையில் உள்ள மூலவருக்கு புனுகுச் சட்டம் சாத்தி, கவசம், திருவாபரணம் முதலியன அணிவிக் கிறார்கள். எதிரில் யானை வாகனமும், பலிபீடமும் உள்ளன. கணபதி, தண்டாயுதபாணி, பிரம்ம சாஸ்தா, துர்க்கை, அகத்தியர், நாகராஜர், வீரபாகு, வீரபத்திரர் சன்னிதிகளும் ஆலய உட்பிரகாரத்தில் உள்ளன. கருவறை பின்புறம் பஞ்சலோகத்தில் அமைந்த விநாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பிரம்மா, தேவேந்திரன், நந்தி, த்வனி சண்டேசர், மாத்ரு சண்டேசர், அஸ்திரதேவர், உபதேச மூர்த்தி சன்னிதிகளும் அமைந்துள்ளன.

சிவபெருமானது மடியில், தந்தையின் திருமுகத்தைப் பார்த்தபடி முருகன் அமர்ந்திருக்க, சிவபெருமானோ தன் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம் பெறும் அதி அற்புத திருவடிவே உபதேச மூர்த்தி ஆகும். இந்த உபதேச மூர்த்தி திருவுருவுக்கு மரிக்கொழுந்து சாத்தி, நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

கோவில் அமைப்பு :

ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திரு வடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளது. இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து, 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எதிரிகள், பகைவர்கள் தொல்லை விலகும்.

கோவில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர், தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். எனவே இத்தல விநாயகரையும், சனீஸ்வரரையும், கந்தசுவாமியையும், பைரவரையும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 8 சனிக் கிழமைகள் வழிபட்டு வந்தால், சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகன்று விடும் என்று கூறப்படுகிறது.

ஆலய தலமரமான வன்னி மரத்தின் அருகே வன்மீகநாதர், புண்ணியகாரணி அம்பாள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வன்னிமர விநாயகர் சன்னிதிகள் உள்ளன. மேலும் இடும்பன், சூரியன் சன்னிதிகளும் இருக்கின்றன. இத் தலத்தில் பைரவர் நாய் வாகனம் இல்லாமல், தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் எழுந்தருளியிருப்பது சிறப்பு அம்சமாகும்.

கந்தசஷ்டி விழா இங்கு விசேஷமாக நடக்கும். இந்த வேளையில் கஜமுகன், பானுகோபன், சிங்கமுகன், சூரபத்மன், அஜமுகி, தாரகன் ஆகிய அசுரர்களை வதம் செய்வார். மாசி பிரம்மோற்ஸவத்தின் போது, முருகன் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்யும் வைபவம் நடக்கும்.

கந்தசஷ்டி விரத நாளில், அல்லது செவ்வாய்க் கிழமையில், கிருத்திகை மற்றும் விசாக நட்சத்திர நாட்களில், திருப்போரூர் கந்தவேலனை, தரிசியுங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்கள் நிச்சயம்!

திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மாமல்லபுரம் முதலிய இடங்களில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தூரத்தில் திருப்போரூர் அமைந்துள்ளது.

வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா 🙏🙏🙏