வெள்ளி, 6 செப்டம்பர், 2019

அமாவாசை தர்பணம்*  {யஜுர்வேத ஆபஸ்தம்ப  தர்ப்பணம்}


யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம்.

சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம் செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி மாத்யாணிகம் செய்து விட்டு தர்பணம் செய்யவும்.


அமாவாசை தர்ப்பணம்


முதலில் ஆசமனம் அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ, நாராயணா, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுஸூதனா,  த்ரிவிக்ரமா, வாமனா, ஶ்ரீதரா, ஹ்ரிஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.


பவித்ரம் {மூன்று புல்} வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும். மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.


ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.


மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம் அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி

மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி நஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே விகாரீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதௌ மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதம்யாம் புண்யதிதௌ வாஸர: வாஸரஸ்து பௌம வாஸர யுக்தாயாம் உத்ராஷாடா நக்ஷத்ர யுக்தாயாம், வைத்ருதி நாம யோக, பவ நாம கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ப்ரதம்யாம் புண்யதிதௌ (ப்ராசீனா வீதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .............. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வசு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம், (இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் ....  (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) ............. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம்.....ஸோமோபாராக புண்யகாலே வர்கத்வய பித்ரூன் - உத்திஶ்ய ஸோமோபாராக  ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அ_த்ய_ கரிஷ்யே*

“ஆயாத பிதரக: ஸோம்யா கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச” அஸ்மின் கூர்ச்சே வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய, வெங்கட்ராம, சுப்பிரம்மண்ய ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் வாதுள கோத்ரா: விஜயலக்ஷ்மி, மீனாக்ஷி சுந்தராம்பாள், முத்து லக்ஷ்மி  சர்மனாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. கௌசிக கோத்ரா: ஸ்ரீராம, கோதண்ட ராம, வைத்தியநாத ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு

ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்.


ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.


வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்.


இடது காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.

1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவ: ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா: பதிபிஹி  தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்து வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .


2.2: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்ய: ஸ்வதா நமஹ வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்து வாதுள கோத்ரான் வெங்கட்ராம ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ வாதுள கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா வாதுள கோத்ரான் சுப்பிரமணிய சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


3.3: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந: வாதுள  கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


மாத்ரூ வர்க்கம்:


வாதுள கோத்ராஹா விஜயலக்ஷ்மி தாஹா: வஸு ரூபாஹா மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


வாதுள கோத்ராஹா மீனாட்சி சுந்தராம்பாள் தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை.


வாதுள கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.


மாதா மஹ வர்க்கம் தர்பணம்:


1.1: உதீரதாம் + ஹவேஷு கௌசிக கோத்ரா னு ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


1.2 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


1.3 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


2.1  கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


2.2 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


2.3 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


3.1 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


3.2 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


3.3 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.


1.1,2,3: கௌசிக கோத்ராஹா மீனாட்க்ஷி தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


2.1,2,3: கௌசிக கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


3.1,2,3: கௌசிக கோத்ராஹா வாளாம்பால் தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.


ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை


ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத


பூணல் வலம் : தேவதாப்பிய: ______


இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும். பூணல் இடம்.


உத்திஷ்ட்த பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தாமன்வேதா புராணம் தத்தாதஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான்தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹான், மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.


பவித்ரத்தை காதில் தரித்து, உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு, ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து


கையில் எடுத்து, யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.


காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணா யேதி சமர்பயமி.

சிராத்த காய்கறி
புடலங்காய், வாழைக்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், சேப்பங்கிழங்கு, கருனைக்கிழங்கு, பாகற்காய், இஞ்சி, மாங்காய், கறிவேப்பிலை, பழங்கள் மா, பலா, வாழை, வாழயிலை, விரட்டி, சிராய், சமித்து, நெய், பால், தயிர், வத்தலை, பாக்கு, பூ, மாலை,

பாயசம்
தயிர் பச்சடி
மாங்காய் பச்சடி
கொத்தவரங்காய்
அவரைக்காய்
கருனைக்கிழங்கு
வாழைக்காய்
பாகற்காய்
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்
மாங்காய் & இஞ்சி
கறிவேப்பிலை துவையல்
வடை
அதிரசம்
தேங்கோழல்
அல்வா
எள்ளு உருண்டை
பயத்த உருண்டை
பழங்கள்
புடலங்கா பொரித்த குழம்பு
வாழை தண்டு மோர் குழம்பு
சீரா ரசம்
தேன்
தயிர்
மஹாளய பட்சம்

பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மஹாளய பட்சம் : தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும் உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசையும் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனிடையே புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் தொடங்கி விட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 28 வரை மஹாளய பட்ச காலமாகும். மஹாளய பட்சம் புரட்டாசி அமாவாசையன்று முடிவடையும். அதற்கு முந்திய பதினைந்து நாட்களும் மஹாளய பட்ச காலமாகும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்ததாகும். மஹாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள்ளை தண்ணீருடன் சேர்த்து  அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் வரும் பரணி மஹாபரணி என்றும் அஷ்டமி மத்பாஷ்டமி என்றும் திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும். மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தனங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

புராணங்களில் மஹாளயபட்சம்: கருடபுராணம், விஷ்ணு புராணம், வராகபுராணம், போன்ற தெய்வீக நூல்களில் மஹாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.  இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.  நாம் கலியுகத்தில் வாழ்வதால் அது சாத்தியமில்லாமல் போய் விட்டது.  மஹாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசிவழங்குவதற் காகவே பிதுர் லோகத்தில் இருந்து பிதுர் தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.  வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுது போக்கு அம்சங்களை அறவே தவிர்த்து உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒரு நாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல் பழம் கொடுக்கலாம்.  ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர் பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பின்னர் பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

அன்னதானம் செய்த கர்ணன் : பிணிகளில் கொடுமையானது பசிப்பிணி. பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசியின் கொடுமை பல தானங்களை செய்த கர்ணனையே வாட்டியது. அதற்கு காரணம் கர்ணன் அன்னதானம் செய்யாது தான் என்று கூறப்பட்டது. அது பற்றிய சுவையான கதை. கர்ணன் தர்மங்கள் பல செய்த மாபெரும் வள்ளல் என்றாலும் கூட அதர்மத்துக்கு துணை போன துரியோதனனுடன் சேர்ந்திருந்ததால் அவனை அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் கிருஷ்ண பரமாத்மா. குருசேத்திர யுத்தத்தின் முடிவில் கர்ணன் இறக்க வேண்டும் என்பது விதி. இதற்காகவே அர்ஜுனனை தயார் செய்து கர்ணன் மீது அம்பு எய்ய சொன்னார் கிருஷ்ணன். ஆனால் அர்ஜூனன் விட்ட சில அம்புகளால் அவனைக் காயப்படுத்தினவே ஒழிய உயிரைப் பறிக்கவில்லை. அதற்குக் காரணம் கர்ணன் செய்த தர்மம்தான்.

தானம் பெற்ற கிருஷ்ணன் : அப்போது அந்தணராக வேடமணிந்துவந்த கிருஷ்ணன் கர்ணன் செய்த தர்மங்களை அவனிடம் இருந்து தானமாக பெற்றார். அதற்காக அவனுக்கு மோட்சம் அளித்தார். சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு அவன் செய்த பொன் நவரத்தின தானத்துக்கு பலனாக தங்கமாளிகை கட்டித் தரப்பட்டிருந்தது. பலவிதமான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன ஆனால் அவனுக்கு அங்கே உணவு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தெரியாமல் அவன் தவித்த போது தேவர்கள் அவனிடம் கர்ணா… நீ பூமியில் இருந்த போது பொன்னும் மணியுமே தானம் செய்தாய் அன்னதானம் செய்யவில்லை. எனவே நீ இப்போது பூமிக்குச் செல். இப்போது மஹாளயபட்ச காலம். பிதுர்கள் பூமிக்குச் செல்லும் காலம். அவர்களை அவரவர் உறவினர் வரவேற்று தர்ப்பணம் செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் செய்வர். இக்காலத்தில் நீ மறைந்திருந்து அன்னதானம் செய்து வா. பின்பு இங்கு உணவும் கிடைக்கும் என்றனர். இதனையேற்று கர்ணன் பூமிக்கு வந்த காலமே மஹாளய காலம் ஆனது.

உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால் அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மஹாளயபட்ச காலத்தில் நாம் எல்லாருமே முன்னோர்களை வரவேற்று பதிநான்கு நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். கடைசி நாளான மஹாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மஹாளயபட்ச காலத்தில் நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம் மாதா மாதம் அமாவாசை வருகிறது. ஆனால் மஹாளய அமாவாசை என்பது மிகவும் விசேடமானது. மஹாளய அமாவாசைக்கு முன்னர் மஹாளயபட்சம் என்ற ஒன்று ஆரம்பமாகும். எப்படி கிருஷ்ண பட்சம் சுக்கில பட்சம் என்ற இரண்டு உள்ளது. சுக்கில பட்சம் என்றால் வளர் பிறை கிருஷ்ண பட்சம் என்றால் தேய்பிறை. அது போல் மஹாளய பட்சம். இது எப்போது ஆரம்பம் ஆகுமென்றால் ஆவணி மாதத்தில் பெளர்ணமி முடிந்த மறுநாள் மஹாளய பட்சம் ஆரம்பமாகும். இதில் தொடங்கி புரட்டாசி மாதத்தில் அமாவாசை வருகிறது அல்லவா அதுவரை அதாவது பெளர்ணமியில் இருந்த அமாவாசை வரையிலான இரு வார காலம் இந்த மஹாளாய பட்சம் ஆகும்.
-----------------------------------------
மெய்கண்டார்

சைவ சமயத்தில் சமயக் குரவர் நான்கு பேர்களும் சந்தான குரவர்கள் நான்கு பேரும் என்று சொல்வார்கள்.  சமயக்குரவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் சம்பந்தமின்றித் தனித்தனியாக குருவானவர்கள்.  ஆனால் சந்தான குரவர்களோ ஒருவருக்கொருவர் சீடர்கள்.  சந்தான குரவர்களால் சாத்திரங்கள் சொல்லப்பட்டு, மடங்கள் ஸ்தாபிக்கப்பட்டு மடங்களின் மூலம் பாடங்கள் சொல்லப்பட்டன.  சந்தான குரவர்களின் திருவுருவச் சிலைகள் அந்த அந்த மடங்களிலேயே காணப்படும்.  அங்கேயே அவர்களுக்கு வழிபாடுகள் நடைபெறும். அத்தகைய சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர் மெய்கண்டார், அவரின் சீடர், அருள் நந்தி சிவம், அவரின் சீடர் மறைஞான சம்பந்தர், கடைசியாக உமாபதி சிவம். மெய்கண்டாரின் காலம் கி.பி. 1223

மெய்கண்டார் சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர்.  சைவ சித்தாந்த சாத்திரமரபையும், சைவ சமயத்துக்கான குரு மரபையும் தோற்றுவித்தவர் மெய்கண்டாரே ஆகும்.   இவர் பிறந்தது நடுநாட்டின் பெண்ணாடகம் என்னும் ஊராகும்.  கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு அருகே உள்ள பெண்ணாடம் என்னும் ஊரில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அச்சுதக் களப்பாளர் என்னும் சைவ வேளாளப் பெருநிலக் கிழார் வசித்து வந்தார்.  அவருக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறே இல்லை.  ஆகவே தம் குலகுருவான சகலாகம பண்டிதர் என்பவரிடம் சென்று தம் குறையைச் சொல்லி பரிகாரம் தேடினார். சகலாகம பண்டிதரும் மூவர் தேவாரங்களில் கயிறு சார்த்திப் பார்க்கலாம் எனக் கூறிவிட்டு அவ்வாறே கயிறு சார்த்திப் பார்த்தார்.  கயிறு சார்த்திய இடத்தில் திருஞானசம்பந்தரின் திருவெண்காட்டு தேவாரப் பதிகத்தின் இரண்டாம் பாடல் கிடைத்தது.

பேயடையா பிரிவெய்தும்; பிள்ளையினோடுள்ளம் நினை
வாயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே

என்ற பாடல் வந்ததைக் கண்டு சகலாகம பண்டிதர், “பிள்ளையினோடுள்ளம் நினைவாயினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்”  என்னும் இந்த வரிகளைச் சுட்டிக் காட்டிப் பிள்ளை பிறக்கும் என்று ஆறுதல் கூறித் “திருவெண்காட்டுத் தலம் சென்று அங்குள்ள மூன்று குளங்களிலும் நீராடி வழிபட்டால் கட்டாயம் பிள்ளை பிறக்கும்; கவலைப்படவேண்டாம்.”  என்று கூறி அனுப்பி வைத்தார்.  உடனே அச்சுத களப்பாளர் தம் மனைவியோடு திருவெண்காடு சென்று மூன்று குளங்களான, சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சக்ர தீர்த்தம் போன்றவற்றில் முறையே நீராடி திருவெண்காட்டு ஈசனை வழிபடலானார்.  ஒரு நாள் அவர் கனவில் ஈசன் தோன்றி, “அச்சுத களப்பாளா! இப்பிறவியில் உனக்குப் பிள்ளை வரம் இல்லை;  ஆனால் நீ எம் சீர்காழிப்பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து இங்கு வந்து வழிபட்டு விரதம் இருந்ததால் உனக்குத் திருஞான சம்பந்தனைப் போன்றதொரு தெய்வமகன் பிறப்பான்.”  என்று அருளுகிறார்.  அவ்வாறே அச்சுத களப்பாளருக்கு ஒரு பிள்ளைக் குழந்தை பிறக்கிறது.  குழந்தைக்குத் திருவெண்காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமாள் என்ற பெயரே வைக்கப்பட்டது.  குழந்தை பிறந்ததிலிருந்தே சிவபக்திச் செல்வனாய் விளங்கிற்று.  குழந்தைக்கு மூன்று வயதிருக்கையில் ஒரு அதிசயம் நடந்தது.

திருக்கைலையில் உபதேசம் பெற்ற பரஞ்சோதி முனிவர் கயிலையில் இருந்து அகத்தியரைக் காணவேண்டிப் பொதிகைக்கு ஆகாய மார்க்கமாகப் பறந்து கொண்டிருந்தார்.  அப்போது திருவெண்ணெய்நல்லூரில் மாமன் வீட்டில் இருந்த குழந்தை சுவேதவனப் பெருமாள் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார்.  பரஞ்சோதி முனிவர் அவ்வழியே வானவீதியில் செல்கையில் அவருக்கு மேலே செல்லமுடியாமல் தடங்கல் ஏற்பட்டது.  அதிசயித்த முனிவர் காரணம் அறிய வேண்டிக் கீழே நோக்கினார்.  ஜோதிமயமான தேஜஸுடன் கூடிய குழந்தை ஒன்று கீழே விளையாடுவதைக் கண்டார்.  உடனேயே அவருக்கு ஞானதிருஷ்டியில் அக்குழந்தை பெரிய மஹானாக வரப்போவதும், இந்த மூன்றாம் வயதிலேயே குழந்தை உபதேசம் பெறக்கூடிய பக்குவத்தோடு காததிருப்பதையும் உணர்ந்து கொண்டார். உடனே விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கியவர் குழந்தையைத் தம்கைகளால் எடுத்து அணைத்துக்கொண்டு ஸ்பரிச, நயன தீக்ஷைகள் அளித்தார்.

சிவஞான உபதேசமும் செய்வித்தார்.  பரஞ்சோதி முனிவரின் குருவின் பெயர் சத்தியஞான தரிசினி என்பதாகும்.  அந்தப் பெயரையே தமிழாக்கம் செய்து குழந்தையின் ஞான மார்க்கப் பெயரை மெய்கண்டார் என தீக்ஷாதிருநாமமாக  மாற்றியும் அருளிச் செய்தார். பின்னர் வான்வழியே சென்றுவிட்டார்.  அன்றுமுதல் சுவேதவனப்பெருமாள் மெய்கண்டார் ஆனார்.  சமய குரவர்களில் முதல்வரான சம்பந்தர் தம் மூன்றாம் வயதில் எவ்வாறு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அன்னையின் ஞானப்பாலை உண்டு ஞானம் பெற்றாரோ அப்படியே சந்தானகுரவரில் முதல்வரான மெய்கண்டாரும் தம் மூன்றாம் வயதிலேயே குருவால் ஆட்கொள்ளப்பட்டு ஞான உபதேசம் பெற்றார்.  இன்றைய சைவசித்தாந்த சாத்திர மரபைத் துவங்கி வைத்தவர் மெய்கண்டாரே ஆகும். மெய்கண்டாரால் எழுதப் பெற்ற ஒரே சாத்திர நூல் சிவஞானபோதம் ஆகும்.

சகலாகம பண்டிதருக்கு இந்தச் செய்தி தெரிய வந்தது.  அவர் தாம் சொல்லிப் பிறந்த குழந்தை இவ்வளவு புகழோடு குழந்தைப்பருவத்திலேயே சீடர்கள் பலரோடும் திகழ்வது கண்டு ஆணவம் தலைக்கேற  ஒருநாள் அவரைக்காணச் சென்றார்.  அப்போது மெய்கண்டார் ஆணவமலம் குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார்.  உடனே சகலாகம பண்டிதர் மெய்கண்டாரை ஒரே கேள்வியில் வீழ்த்திவிட நினைத்து “ஆணவ மலத்தின் சொரூபம் யாது?” எனக்கேட்க, மெய்கண்டார் தம் சுட்டுவிரலை நீட்டி அவரையே காட்டினார்.  தம்மையே ஆணவமலத்தின் சொரூபமாகக் குழந்தை குரு காட்டியதும் சகலாகம பண்டிதரின் ஆணவம் அடங்கிப் பக்குவம் வந்தது.  வயதையும் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று மெய்கண்டாரின் கால்களில் வீழ்ந்து தம்மையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவ்வாறே மெய்கண்டாரும் அவரைத் தம் சீடனாக ஏற்றுக்கொண்டு ஞான உபதேசம் வழங்கி அருள் நந்தி என்ற தீட்சாநாமமும் அளித்தார்.  ஏற்கெனவே மெய்கண்டாருக்கு 48 மாணவர்கள் இருந்தனர்.  அருள் நந்தி 49-ஆம் மாணவராக ஆனார்;  சிலநாட்களில் மெய்கண்டாரை அடுத்து இரண்டாம் சந்தான குரவராக ஆனார்.  மெய்கண்டார் எவ்வளவு  காலம் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பது குறித்துச் சரியாகத் தெரியவில்லை.  ஆனால் திருவெண்ணெய் நல்லூரிலேயே முக்தி அடைந்ததாய்த் தெரிய வருகிறது.  அவரது சமாதிக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுவதாயும் தெரியவருகிறது.  திருவாவடுதுறை ஆதீனம் அவர் பிறந்த இடமான பெண்ணாகடத்தில் களப்பாளர்மேடு என்னும் பெயரில் வழங்கிய இடத்தைக் கண்டுபிடித்து அங்கே மெய்கண்டாருக்காக நினைவு நிலையம் கட்டி மெய்கண்டாரின் விக்ரஹமும் நிறுவப் பெற்றதாயும், தெரிந்து கொள்கிறோம்.
திருநெல்வேலி குருக்கு துறையில் தாமிரபரணி புஷ்கர் வெகு விமரிசையாக நடந்தது முடிந்தது. குறுக்கு துறையில் பஷ்கர் நடக்குமா நடக்காதா என்ற நிலையில் இருந்தோம். ஆனால் பெரியவா பரிபூரண அனுகிரஹத்தாலும், முருகப்பெருமானின் அருளாலும் வெகு விமரிசையாக நடந்தது முடிந்ததுள்ளது. இந்த குருக்கு துறையில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் மேல் மக்கள் ஸ்நானம் செய்துள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அனைத்து ஆதீனகுருமார்கள், சாதுக்கள், அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள், பொது மக்கள் என அனைவரும் இந்த குருக்கு துறையில் தான் நீராடினார்கள். இந்த அளவுக்கு குருக்கு துறையில் வெற்றி கண்டதற்கு கண்ணுக்கு தெரியாதமல் பலர் உதவி செய்துள்ளார்கள். அதில் முக்கியமாக ஆதீன குருமார்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது மூன்று நாட்களாக புதியதாக பதவி ஏற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், தீயனைப்பு துறை, நகராட்சி துறை, மருத்துவ உதவி குழுக்கள், வயதானவர்களுக்கு பேட்டரியில் இயங்கும் கார்கள், இந்து அறநிலையத் துறை,  இடைவிடாமல் வழங்கப்பட்ட அன்னதானங்கள், சிதம்பரம் தீட்க்ஷதர்களின் யாகங்கள், வேத பண்டிதர்களாள் ஒதப்பட்ட வேத பாராயணம், ஒதுவார் முற்த்திகலாள் ஒதப்பட்ட தேவாரங்கள், நாதஸ்வர சக்ரவர்த்தி செந்தில் வேலன், கடலூர் கோபி பாகவதர் அவர்களின் பஜனை, குமாரி லாவண்யா பாலாஜி அவர்களின் இசை கச்சேரி, ஹுசைன் அவர்களின் சொற்பொழிவு, வடகுடி சுந்தர்ராம தீட்க்ஷதர் அவர்களின் உபன்யாசம், நாட்டிய குழுவினரின் சிவோகம் நாட்டிய நாடகம், தீட்க்ஷதர்களின் அனுதினமும் மாலையில் நடைபெறும் தாமிரபரணி ஆற்றிர்க்கு தீப ஆர்த்தி, தொண்டாற்றும் தன்னாவளர்கள், இவை அனைத்திற்கும் மூல காரணமாக செயல்பட்ட பழனிசெல்வம், பழனிசெல்வத்திற்கு துணையாக திரு நரேன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் தடுப்பு கம்பி அமைத்தல், வரும் வழியில் உள்ள பாலத்தை அகலப்புத்துதல், பெண்களுக்கு உடை மாற்ற தனியாக பெரிய அரை அமைத்தல் போன்றவற்றை செவ்வனே செய்து தந்தது இன்னும் எவ்வளவோ கண்களுக்கு தெரியாமல் பலரும் பல உதவிகளை செய்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் வேறு யாராவது முக்கிய அங்கத்தினர் விடுபட்டு இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும். குறுக்கு துறையில் பஷ்கர் நடக்ககூடாது என்று நினைத்தவர்களுக்கு அப்பன் முருகப்பெருமான் அவர்கள் மூக்கின் மீது விரல் வைத்தார் போல் புஷ்கர் இன்று மாலை முருகனுக்கு அபிஷேகத்துடன் கொடி இறக்கப்பட்டு தாமிரபரணி அன்னையை விசர்ஜனம் செய்து பன்னிரெண்டு நாள் விழா இன்றுடன் எந்த ஒரு தடையும் இல்லாமல் வெகு சிறப்பாக நிறைவடைந்தது எங்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வளவு சிறப்பாக இந்த தாமிரபரணி புஷ்கர் தடையில்லாமல் வெற்றிகரமான நடந்தது என்றால் அதற்கு Mahalakshmi Subramanian Valasai Jayaraman இந்த இருவரின் கடின உழைப்பே. மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் தம்பதிகள் தான் நம் அனைவருக்கும் இது போல் ஒரு புஷ்கர் இருப்பதை இந்த தமிழ் நாட்டிற்கு தெரியப்படுத்தினார்கள். கோடான கோடி பக்தர்கள் இந்த புன்னிய நதியில் நீராடி பாபங்களை போக்கி புன்னியத்தை அடைந்தார்கள் என்றால் அதற்கு இந்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் தம்பதியினரையே சேரும். ஐந்து நாட்கள் அடியேன் இங்கே இருந்தது பார்த்ததில் நீராட வந்த மக்களின் எண்ணிக்கை இங்கு தான் அதிகமாக இருந்தது. அடியேன் பார்த்த வரை நீராடிய அனைவருக்கும் காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என மூன்று வேலையும் தலைவாழை இலை போட்டு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்ட ஒரே இடம் குருக்கு துறை மட்டுமே. மேலும் அவசரமாக செல்பவர்களுக்கு தட்டில் வைத்தும் அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டது. மேலும் காவல் துறை, தீயணைப்பு துறை, மாநகராட்சி துப்புரவு பணியாளரகள் என சுமார் ஆயிரம் பேர் அனுதினமும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்வளவு சிறப்பாக நடைபெற்ற இந்த தாமிரபரணி புஷ்கர் தற்கால கமிட்டியை நிருவிய மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம், வளசை ஜெயராமன் அவர்கள் ஒவ்வொரு முறை பேசும் போதும் காஞ்சி பெரியவாளையும், தருமை ஆதீனம் இவர்களை பற்றி முதலில் பேசியது சிறப்பு. இந்த இரு மடாதிபதிகளின் பரிபூரண ஆசீர்வாதத்தால் தான் இந்த குருக்கு துறையில் வெகு விமரிசையாக நடந்தது முடிந்தது. அதே போல் தமிழக அமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி முக்கிய தலைவர்கள் இங்கு வந்து தான் முருகன் சன்னிதான படித்துறையில் தான் நீராடினார்கள். அடியேனுக்கு தெரிந்தது இந்த மஹா புஷ்கர் என்று ஒன்றை தமிழகத்திற்கு தெரியப்படுத்தியதே இந்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்களே. அடியேன் ஏற்கனவே ஒரு பதிவில் இந்த அம்மையாருக்கு என்று ஒரு தனி விழா எடுக்க வேண்டும் என்று ஒரு பதிவு செய்திருந்தேன். அதற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்திருந்தீர்கள். அந்த விழாவானது அடியேனுக்கு தெரிந்தவரை இதுவே சரியான தருணம். இந்த நேரத்தில் இந்த அம்மையாருக்காக ஒரு விழா எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அடுத்தது இந்த அம்மையார் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் மாதம் செய்ய உள்ளார்கள். அதே போல் அடுத்தது குருபகவான் வரும் ஆண்டு விருச்சிகத்தில் பிரேவேசிக உள்ளார். விருச்சிக ராசி மஹா புஷ்கரம் சிந்து நதியில் நடத்த இந்த அம்மையார் இப்போதே திட்டம் தீட்டி உள்ளார்கள் என்பது மேலும் ஒரு மகிழ்ச்சியான
செய்தி. சென்ற ஆண்டு மாயவரத்தில் முதல் முறையாக இப்படி ஒரு புஷ்கர் இருப்பதை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதே இந்த தம்பதியினர் மட்டுமே. அதே போல் இந்த ஆண்டும் வெகு சிறப்பாக செயல்பட்டு இந்த புஷ்கர் இனிதே நிறைவுற்றுள்ளது. அவை அனைத்தும் பெரியவாளின் பரிபூரண அனுகிரஹம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

பெரியவா சரணம்.

ஹர ஹர சங்கர                   ஜய ஜய சங்கர


காஞ்சி மஹா பெரியவா தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அடுத்த ஊர் காவேரிப்பட்டணம். 1944-ம் ஆண்டு மஹா பெரியவா அங்கே முகாமிட்டிருந்தார. ஒரு மாத காலமாக மகான் அங்கே தங்கியிருந்தபோது நித்திய நிகழ்ச்சிகளில் தினந்தோறும், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பிரபலங்கள், அரசாங்க அலுவலர்கள் போன்றோர் தவறாமல் பங்கேற்பது உண்டு.

இந்தக் கும்பலில் அஞ்சல்துறை அதிகாரி கோபால கிருஷ்ணனும் ஒருவர். மெத்தப் படித்தவர். காஞ்சி மகான் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர். அதனால் காவேரிப்பட்டணத்திஅதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டு இருந்த போது ஓயுவு நேரத்தில் மடத்துக் காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதனால் மகானின் நேர் பார்வையிலும் பலமுறை தென்படக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்த்து. அதுவே பெரிய பாக்கியமல்லவா? தான் அல்லும் பகலும் போற்றும் தெய்வம் தன்னைப் பார்க்கிரார் என்பதே, அருள் பெற்றது போலத்தானே?

சில தினங்களில் மகான் வேறு ஊருக்கு தனது முகாமை மாற்றிக் கொண்டார். இது நடந்து பல வருடங்களுக்குப் பின், மகான் வேறு ஓர் இடத்தில் முகாமிட்டிருந்தார. நிறைய பக்தர்கள் வரிசையாக ஆசி பெற்றுச் சென்ற வண்ணம் இருந்தனர். அந்த வரிசையில் நின்றவர்களில் அஞ்சல் அதிகாரி கோபால கிருஷ்ணனும் ஒருவர். ஓவ்வொருவராக நகர்ந்த பின் இவர் முறையும் வந்தது. நமஸ்காரம் செய்த பின் தீர்த்ததுக்காக தன் கையை நீட்டினார்.

தீர்த்தம் கொடுக்கும் முன் மகான் திடீரென நிமிர்ந்து பார்த்தார். ஏதோ கேள்வி கேட்கும் பாவனையில் கண்களைச் சுரிக்கி இவரைப் பார்த்தார். எதையோ ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறார் என்று நினைத்த அதிகார் “காவேரிப்பட்டணம் போஸ்ட் மாஸ்டர்.." என்று அடி எடுத்துக் கொடுக்க மகான் புன் முறுவலுடன் அவரை கைகளினால் ஆசீர்வதித்து “பரத்வாஜ கோத்திரம்!” என்றார்.

இரண்டே வினாடிகளில் இந்த சந்திப்பு நிகழ்ந்து விட்டது. என்றாலும் அதிகாரிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

அவ்வளவு கும்பலிலும் தன்னைக் கை தூக்கி ஆசீர்வதித்து தனது கோத்திரத்தை மறக்காமல் சொன்னார் என்றால் ஒவ்வொரு பக்தனின் சரித்திரத்தையும் அவர் ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்றுதானே அர்த்தம்?
பதினைந்து நாட்கள் பூலோகத்தில் தங்கும் முன்னோர்கள்!

வளர் பிறையான சுக்ல பட்சம் தேவதைகள் வழிபாட்டிற்கும் தேய் பிறையான அமரபட்சம் (கிருஷ்ணபட்சம்) முன்னோர்களான பிதுர் வழிபாட்டிற்கும் உகந்தது ஆகும். வருடத்தில் பன்னிரெண்டு கிருஷ்ண பட்சங்கள் வந்தாலும் அதில் பாத்ரபதமாதம் என்னும் புரட்டாசியில் வரும் மகாளயபட்சம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. ஒரே குடும்பத்தில் பிறந்து பணியின் காரணமாக பல ஊர்களில் வாழ்ந்தாலும் திருமணம் குலதெய்வ வழிபாடு போன்றவற்றில் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி நின்று கொண்டாடுவது போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வந்து தன் வாரிசுகளை நேரில் கண்டு வாழ்த்தும் காலமே மகாளயம் என கருதப்படுகிறது. பிதுர்லோகத்தின் தலைவரான எமதர்மனின் அனுமதியோடு முன்னோர்கள் பூலோகம் வந்து பதினைந்து நாட்கள் தங்குகிறார்கள். இந்த காலகட்டத்தில் மற்ற வழிபாடுகளை குறைத்துக் கொண்டு பிதுர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.

வியாழன், 5 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 27 ॐ

நிருத்த சபை என்பது வெளிப் பிரகாரம். இங்கே நாம் இப்போது தரிசிக்கப் போவது பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப் பட்ட சோமாஸ்கந்த மூர்த்தி ஆகும். இந்த சோமாஸ்கந்தர் இங்கே வந்ததுக்கும் ஒரு கதை இருக்கிறது. வனவாசம் செய்து வந்த பஞ்ச பாண்டவர்கள் தருமபுத்திரரின் பிறப்புக்குக் காரணம் ஆன தர்மராஜனின் உபதேசத்தின் பேரில் சிவனைத் துதிக்க நல்ல இடம் தேடினார்கள். அதற்கு அவர்கள் தென்பகுதி தான் உகந்தது என முடிவெடுத்து வந்தபோது சிதம்பரம் பற்றிக் கேள்விப் பட்டு சிதம்பரம் வர கால முனிவரின் உபதேசத்தின் பேரில் தாங்கள் இழந்த ராஜ்யத்தைப் பெறுவதற்கும் வாழ்வின் மேன்மைக்கும் சிவபூஜை செய்ய சிவன் சோமாஸ்கந்தரின் வடிவில் நடனக் கோலத்துடன் அவர்கள் எதிரே தோன்றி அனுக்கிரகம் செய்ததோடு அல்லாமல் ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜ ரூபத்தையும் காட்டி அருளினார். அப்போது முதல் இந்த மூர்த்தம் "பஞ்ச பாண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்தி" என்ற பெயருடன் விளங்குகிறார். இவர் நிருத்த சபையின் வடபாகத்தில் இவரும் வடக்கே பார்த்துக் கொண்டே காட்சி அளிக்கிறார்.

காலசம்ஹார மூர்த்தி : இவர் பஞ்சபாண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்திக்கு அருகேயே மேற்கே பார்த்துக் கொண்டு காணப் படுகிறார். பொதுவாக காலசம்ஹார மூர்த்தி, மார்கண்டேயருடனும், திருக்கடையூருடனுமே தொடர்பு கொண்டிருந்தாலும் இங்கேயும் காணப் படுகிறார்.

அடுத்தது ரொம்ப முக்கியமானவர் சரபர் : இவரைப் பற்றி ஏற்கெனவேயே திவாகர் கேட்டிருந்தார். இவருக்கு இங்கே தனிச் சன்னிதியே உள்ளது. தனியான பூஜைகள், அர்ச்சனைகள், அபிஷேஹங்கள் எல்லாம் உண்டு. இவரும் அந்த சிவபெருமானின் ஒரு ஸ்வரூபம் தான் என்றாலும் இவரின் தோற்றம் விசித்திரமாய் இருக்கும். இவர் மனித ரூபத்திலும் பறவைகள் போல் இறக்கைகளுடனும் மிருகங்கள் போன்ற உடல் அமைப்பிலும் காணப் படுவார். இவரின் தோற்றம் பற்றிப் பல புராண்ங்கள், உபனிஷதங்கள் ஆகமங்கள் பலவிதமாய்க் கூறினாலும் காளிகாபுராணம் கூறுவது என்ன வென்று  பார்ப்போம். ஹிரண்யனை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு வதம் முடிந்த பின்னரும் தன்னுடைய உக்கிரத்தை அடக்க முடியாமல் இருக்க அவன் மார்பில் வாசம் செய்யும் அந்த "ஸ்ரீ" கூட நரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சிவபெருமானைச் சரணடைய அவர் தான் ஒருத்தன் தான் இவரை அடக்கவல்லவன் என்று சொல்லி சரபரின் தோற்றத்தில் உருமாறியதாகக் காளிகா புராணம் சொல்லுவதாய்ச் சொல்கின்றனர். இந்த சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும் மேலே தூக்கிய இரண்டு இறக்கைகளும், நான்கு கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், நான்கு கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும் அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். தோற்றத்தின் காரணம் தெரிந்து விட்டது. இனி உடலின் ஒவ்வொரு பாகமும் எந்த அமைப்பில் ஏற்பட்டது எனப் பார்ப்போம். சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும் கூர்மையான நகங்களோடும் நாலு புறமும் சுழலும் நாக்கோடும் காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் பட்சிகளின் அரசன் என்றும் சாலுவேஸ்வரன் என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும் இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும் நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும் அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும் உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது. எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் "கலியுக வரதன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம் திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. இது தவிர சிதம்பரம் கோவிலில் நாம் பார்த்ததும் தனிச் சன்னதி தான். ஞாயிற்றுக் கிழமைகளில் இவரை வணங்குவது சிறப்பாகச் சொல்லப் படுகிறது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
நற் சிந்தனைகள் கடவுளின் பக்தர்களுக்குப் பணிபுரிவதால் தான் கடவுளை அடைய முடியும் என்பதை உங்கள் இருதயத்தில் நிருத்திக் கொள்ளவேண்டும். ஸ்ரீ ஜகத் குரு பதரி சங்கராசார்ய ஸ்வாமிகள்
-------------------------
நற் சிந்தனைகள்: எல்லையற்ற பொறுமையும்,விடாமுயற்சியும் உள்ளவர்களால் மட்டும் ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கமுடியும்.
ஜபித்ததோடு,ராமபிரான் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும்.
ஸ்ரீ ஸ்ரீ பெரியவா மல்லிகார்ஜுன ஸ்வாமிகள்
-------------------------
நற் சிந்தனைகள்: இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டது தெய்வீக அருளைப் பெறுவதற்காகவே.அதனால் இந்த உடல் நன்கு பராமரிக்கப் படவேண்டும்.சுத்தமாகவும்,தூய்மையாகவும்,அழுக்கு, வியாதி, வருத்தம், தோல்வி மனப்பான்மை இவற்றால் பாதிக்கப்படாமலும் உடல் பாதுகாக்கப்பட வேண்டும்.

நீங்கள் உடலல்ல.உடல் என்பது ஒன்பது துவாரங்களடங்கிய அழியும் பொருளாகும்.ஆகவே இந்திரிய சுகத்தை புலனின்ப நுகர்ச்சியை நாடிச்செல்லாதீர்கள்.

கடவுளை நோக்கி மணதை திருப்புங்கள்.அப்போது மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டு விடும்.பிறகு உங்கள் மனதின் மேல் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதாகும்.
ஸ்ரீ ஸ்ரீ பெரியவா மல்லிகார்ஜுன ஸ்வாமிகள்
-------------------------
பசி தீர்த்த காளி!

சிவன் கோயிலின் காவல் தெய்வம் க்ஷேத்திர பாலகர். கோவிலைக் காப்பவர் என்பது இதன் பொருள். இவர் காளியின் கோபம் தணிக்க குழந்தை வடிவில் வந்தார். சாகா வரம் பெற்ற தானகாசுரன் தேவர்களைத் துன்புறுத்தினான். அசுரனை அழித்து தேவர்களைக் காக்கும் பொறுப்பை சிவன் காளியிடம் ஒப்படைத்தார். காளியும் அசுரனைக் கொன்றாள். அதன் பிறகும் அவளது ஆவேசம் தீரவில்லை. உயிர்கள் அனைத்தும் காளியைக் கண்டு அஞ்சின. அப்போது சிவனின் கட்டளைப்படி மாய பாலகன் ஒருவன் காளியின் முன் குழந்தை வடிவில் பசியால் அழத் தொடங்கினான். அதைக் கேட்ட காளிக்கு தாய்மை குணம் மலர்ந்தது. மார்போடு அணைத்துப் பாலூட்டினாள். பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்துக் குடித்தது அக்குழந்தை. அதன் பின் காளி சாந்தமானாள். அக்குழந்தையே க்ஷேத்திர பாலகர் என்னும் பெயர் பெற்றது. இவரே பிற்காலத்தில் பைரவராக மாறியதாக செய்தி உண்டு. லிங்கபுராணத்தில் இந்தத் தகவல் இருக்கிறது.
--------------------------------------------------
ஸ்மரணாத் அருணாசலம்

ஒரு கிராமத்தில் முகாமை முடித்து கொண்டு அடுத்த முகாமுக்கு போய் கொண்டிருந்தார்கள் பெரியவா. வழியில் ஒரு பிச்சைகாரர் வந்தான். தொலைவில் இருந்து பார்த்த போதே இவர் ஒரு சாமியார் ரொம்ப பேர் கூட வருகிறார்கள். நல்ல சில்லறை தேறும் என்று எண்ணியிருப்பான்.
அருகில் வந்ததும் அண்ணாமலைக்கு அரோஹரா' என்று கூவிக்கொண்டே பெரியவா பாதங்களில் விழுந்தான்.
பெரியவாள் உடன் வந்தவர்களை திரும்பி பார்த்தார்கள். இவன் நமக்கு ரொம்ப உபகாரம் செய்து இருக்கிறான்.

இவனென்ன உபகாரம் செய்தான்?

'ஸ்மரணாத் அருணாசலம் என்று சொல்லுவார்கள். அருணாச்சலேஸ்வரரை நினைத்தாலே போதுமாம் ரொம்ப புண்ணியம் இவன் நமக்கெல்லாம் அருணாச்சலேஸ்வரரை ஞாபகபடுத்தி உபகாரம் செய்திருக்கிறான். பிச்சைகாரன் இன்னும் நின்று கொண்டு இருந்தான். பத்து பைசா கூட தேறவில்லை. பெரியவா அவனை பார்த்து புன்னகை செய்தார்கள்.
இன்னிக்கு எங்கேயும் பிச்சைக்கு போக வேண்டாம். அப்போ சாப்பாட்டுக்கு இன்னிக்கு வழி?

மடத்திலேயே சாப்பிடலாம் அப்புறம் வெளியூர் போ பெரியவாள் பக்தர்களை பார்த்து சொன்னார்கள். எந்தரோ மகானுபாவுலு எங்கெங்கெல்லாமோ எத்தனையோ மகான்கள், சித்தர்கள், பக்தர்கள் இருக்கிறார்கள். இந்த பண்டாரத்தை பாருங்கள் நாளை பற்றி கவலை படுவதில்லை. அன்றன்று கிடைக்கும் பிக்ஷையில் காலம் தள்ளுகிறான். இவனுக்கு உள்ள ஞானம் கூட நமக்கு வருவதில்லை. ஒரு பண்டார  பிச்சைக்காரனிடம் கூட ஈஸ்வரனை பார்த்தார்கள் பெரியவா. உடன் வந்து கொண்டிருந்த ஒரு வித்வான் சொன்னார், ஈஸ்வரனே அவதாரம் செய்துவந்தால் கூட நாம் அவரை வெறும் மனுஷனாய் பார்க்கிறோம்.

பெரியவாளை தான் குறிப்பிட்டாரோ? தெய்வம் தெய்வ வடிவிலேயே வந்தாலும் நம்பாத பாமர மக்கள் நாம் என்னத்தை சொல்ல?
சில தானங்கள் பற்றி விபரம்...

யமதர்மருக்கும் ப்ராமணணுக்கும் நடந்த உரையாடல் ;

ஆதியில் யமுனை உற்பத்தியாகும் களிந்த மலையின் கீழுள்ள மத்தியதேசத்தில் பர்ணசாலை என்ற பெயர் பெற்ற பெரிய பிராம்மண கிராமம் இருந்தது. வித்வான்கள் நிரம்பி இருந்தனர்.

அப்போது யமன் சிவந்த கண்களும் நெறித்த ரோமங்களும் காக்கை போன்ற கணுக்கால் கண் மூக்குள்ளவனுமான் ஒரு கிங்கரனை பார்த்து ,நீ! பர்ணசாலை ப்ராமண கிராமத்திற்க்கு போ; அங்கு சாந்தியுள்ளவனும் வித்துவானும் அகஸ்திய கோத்திரத்தானுமாகிய சர்மி என்ற பெயருள்ள ஒரு ப்ராமணனை அழைத்து வா; அவன் பக்கத்தில் அவன் கோத்திரமாகவே இருக்கும் மற்றொரு ப்ராமணனை அழைத்து வராதே. அவனும் இவனை போன்ற குணவான் தான். ஆனாலும் புத்திர ஸ்ந்தானத்திலும் ஒழுக்கத்தில் இவன் மேலானவனாததால் நான் குறிப்பிட்டவனையே அழைத்து வா ! அவனுக்கு நான் பூஜை செய்யவேண்டும்' என்று சொன்னார்.

ஆனால்,கிங்கரன் யாரை யமன் வேண்டாமென்றரோ அவனையே பிடித்து அழைத்து வந்துவிட்டான்.  யமன் மிகுந்த சக்தியுள்ளவனாததால் அவரையே இருத்தி பூஜை செய்து அவரை கொண்டுபோய் விட சொன்னபோது , அந்த ப்ராமணன் தர்மராஜனை பார்த்து ,ஓ! தர்மந்தவறாதவனே, நான் என் ஆயுள் காலத்தில் மிச்சமுள்ள காலத்தை இங்கேயே கழிப்பேன் என்றான்.

அதற்கு யமன், நான் இங்கே காலவிதியை எவ்வகையிலும் அறிய மாட்டேன்.எவன் தர்மத்தை செய்கிறானோ அவனை மட்டுமே அறிவேன் .ஆதலால் நீ இருப்பிடம் செல்வாயாக ,அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவாயாக என கேட்க, அதற்க்கு ப்ராமணன் , பரிசுத்தமான தானந்தான் மிக சிறந்த புண்ணியமாகும், அதை எனக்கு சொல் என்றான்.

யமன் , ப்ரம்மரிஷியே! தானத்தை பற்றி உயர்ந்த விதியை சொல்கிறேன் ; கேள். இவ்வுலகத்தில் திலதானம் மிகச்சிறந்தது. அழிவில்லாத புண்ணியம்.எள்ளானது வேண்டியவற்றை நிறைவேற்றுகிறது. அதனாலேயே ஸ்ராத்ததிற்க்கு எள் சிலாக்கியமானதாகும். அதுதான் தனக்குயர்வில்லாத தானம். ப்ராமணனுக்கு சாஸ்திர முறையோடு வைகாசி பவுர்ணமியில் தில தானம் செய் என்றார்.

கிருகத்தில் எப்போதும் நன்மையை வேண்டுகிறவர்கள் எள்ளை உண்பிக்க வேண்டும்.உடம்பில் தடவிகொள்ள வேண்டும் அப்படியே தண்ணீரும் கொடுக்கவேணும் . ஆசமனமும் செய்யவேண்டும் என்பதும் நிச்சயம். ஓடைகளையும் கிணறுகளையும் வெட்டுவிக்க வேண்டும். ஜலம் எப்போதும் கொடுக்க வேண்டும்.

ப்ராமணோத்தமரே! நித்தியமாக தண்ணீர் கொடுப்பதற்க்காக தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும். உண்டவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது முக்கியமான காரியம்.வஸ்திர தானம் செய்பவன் அதில் உள்ள நூலளவு வருச காலமும் தீபதானம் செய்பவன் அது எரியும் நிமிஷங்களளவு வருஷகாலமும் கோதானம் செய்பவன் அதன் ரோமங்கள் உள்ள வருஷகாலமும் தண்ணீர் கொடுப்பவன் அந்த தண்ணீர் துளிகள் வருஷ காலமும் ஸ்வர்க ஸுகத்தை அனுபவிப்பர். ஆதலால் நீயும் இந்த தானங்களை செய்ய கடவாய் என்று கூறி அவனை கொண்டு போய் விட்டு முதலில் சொன்ன சர்மி எந்த ப்ராமணனை கூட்டி வரச்செய்தார்.

சர்மி என்ற ப்ராமணனுக்கும் அதே போல பூஜை செய்து அதே போல தான விபரங்களை கூறி அனுப்பி வைத்தார்.

ஆதலால் பித்ருக்களுக்கு ப்ரீதி உண்டாக்க கண்ணுக்கினிய தீபதானம் செய்யவேண்டும். ரத்ன தானமும் மிகச்சிறந்த புண்ணியம் என்று சொல்லப்படுகிறது. ரத்ன தானமானது கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் அதுவே அழியாத புண்ணியமாக நிலைக்கிறது. அதே போல இந்த தானங்களை செய்வதற்க்காக திருமணம் செய்து புத்திர லாபத்தை பெற வேண்டும். புத்திர லாபமானது எல்லா லாபங்களிலும் சிறந்தது.

ஆக ,தான் சம்பாரிக்கும் பொருளில் முடிந்த அளவு (யதா சக்தி) தானம் கொடுத்து நன்மை அடையுங்கள். குடுக்காத தானம் அவரவர்களுக்கு பெரும் தீமையை செய்யும் .

ராம ராம ராம

#மஹாபாரதம்
#தானம்
#யமன்
#ப்ராமணன்
#தான_சிறப்பு
#திலதானம்
#எள்தானம்
#தீபதானம்
#தண்ணீர்_தானம்
#கோதானம்
#ரத்னதானம்
சாப்பாடு (போஜனம்) பத்தி காஞ்சி மஹா பெரியவா அருமையான விளக்கம். இத படிங்க மொதல்ல

கல்யாணம் மத்த விசேஷம் சாதாரணமாக வீடுகளில் போஜனம் எப்படி சாப்பிடுறோம்? என்று பெரியவா கேட்டார். வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்" ''ஓ அதை கேக்கறேளா பெரியவா.  மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம், பட்சணம், கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னா.

"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?" மஹா பெரியவா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மௌனமாக இருந்தார்கள். தெரியும் அவரே பதில் சொல்வார் என்று. இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையா இருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு தண்ணிய தெளிக்கிறா அப்பறம் பாயசம் அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா பாயசத்தால பிறந்த ஸ்ரீ ராமனையும் தயிர் வெண்ணைப்பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும் போது நிணைக்கனும் என்பதற்காகத்தான் என்றார் பெரியவா...

"மொதல்ல குழம்பு. இதுல, 'தான்' இருக்கு. தான்  என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசணி, பரங்கி, கத்திரி, முருங்கைக்கா ஏதோ ஏதோ இருக்குமே அது தான் '' தான் '' என்பது இல்லையா. நாம எல்லாம் பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே ''தான் ''  என்கிற  அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம ''குழம்பி'' ப் போயிடறோம். அந்தத் ''தானை''  கொஞ்சமா தீர்த்துட்டு அடுத்த  கட்டத்துக்குப் போறோம்.

அப்போ ''தான்'' இல்லாததால் ஒரு தெளிவு வந்துடறது இல்லையா. அதாவது ''ரச'' மான மன நிலை. அது தான் ரசம். ''தான்'' இல்லாம தெளிவா இருக்கற மனசுல ''ரச'' மான எண்ணம் வருது.

அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் ஆயிடறது...

கடைசியா மோர். மோர் என்கிறது என்ன எப்படி கிடைக்கிறது? 

பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய் வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது.

அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை.

இந்த போஜன ஸம்ப்ரதாயத்திலிருந்து என்ன புரியறது?

நாமளும் அகங்காரத்தை விட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு, யாருக்கும் எந்த உபத்ரவமும் பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது 'நோ மோர்!"

சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம் பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இதை நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப் பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துல தான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம  வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரி தான்  அமைச்சிருக்கா!" சொல்லி முடிச்சா ஸ்ரீ மஹா பெரியவா...
------------------------