சனி, 24 ஆகஸ்ட், 2019

கங்கா ஸ்நானம் செய்ய ஒரு வருஷம்!

காஞ்சிப்பெரியவர் 1932ல் ராமேஸ்வரம் வந்தார்.கடலில் ஸ்நானம் செய்த அவர் சிறிதளவு மணலைச் சேகரித்துக் கொண்டார்.அதை அலகாபாத்திலுள்ள பிரயாகை திரிவேணி சங்கமத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்பது அவரது எண்ணம்.அது மட்டுமல்ல!தீபாவளி கொண்டாடப்படும் அக்டோபர் மாதத்தில் காசிக்கு சென்று கங்கா ஸ்நானம் செய்யவும் அவர் முடிவெடுத்திருந்தார்.இதற்காக, அவர் வாகனங்கள் எதுவும் ஏற்பாடு செய்யவில்லை.நடந்தே செல்ல திட்டமிட்டார்.அப்போது பெரியவருக்கு வயது 39 தான்.இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு,தென்காசியைச் சேர்ந்த அனந்த கிருஷ்ண சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.அவர் முன்னதாகவே காசிக்கு நடந்தே புறப்பட்டார்.எந்தெந்த ஊர்களில் பெரியவர் தங்கிச் செல்ல வேண்டும் என்பதை செல்லும் வழியில் குறித்துக் கொண்டார்.அவ்வாறு அவர் நடந்து செல்ல ஆறு மாதங்கள் பிடித்தன.அவர் திரும்பி வந்து பயணத்திட்டத்தை பெரியவரிடம் அளித்தார்.பெரியவரும் சிஷ்யர்களும் 1933 செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தஞ்சாவூரிலிருந்து பயணத்தைத் துவக்கினர்.செல்லும் வழியில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெரியவர் தங்கினார்.அங்கெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து ஆசி பெற்றனர்.அனந்தசர்மா வேகமாகச் சென்று திரும்பியதால் ஆறுமாதங்கள் தான் பிடித்தன.ஆனால்,மகாபெரியவர் பல ஊர்களில் தங்கியதால்,பிரயாகையை அடைய 1934 ஜூலை 23ம் தேதி ஆகி விட்டது.அங்கு தான் கொண்டு சென்ற ராமேஸ்வரம் மணலை, திரிவேணி சங்கமத்தில் சேர்ப்பித்தார்.அங்கேயே செப்டம்பர் மாதம் வரை தங்கி விட்டார்.செப்டம்பர் இறுதியில் காசி கிளம்பினார்.அவரிடம் பக்தர்கள்,இப்போதே நீங்கள் வெகு தூரம் நடந்து வந்து விட்டீர்கள். இனியும் நடக்க வேண்டாம்.சாலை வசதி நன்றாக இருக்கிறது. வாகனத்தில் வாருங்கள்,என கோரிக்கை வைத்தனர்.மகாபெரியவர் அதை ஏற்கவில்லை.தொடர்ந்து நடந்தே காசியாத்திரையைத் தொடர்ந்தார்.பிரயாகையில் இருந்த பக்தர்கள் பலரும் அவருடன் சென்றனர்.அக்டோபர் 3ம் தேதி காசி எல்லையை அடைந்த சுவாமிகளை காசி மகாராஜா உள்ளிட்டோர் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.வரவேற்பு விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அக்டோபர் 7ல் மகாபெரியவர் கங்கையிலுள்ள மணிகர்ணிகை உள்ளிட்ட தீர்த்தக்கட்டங்களில் தீர்த்தமாடினார்.பண்டித மதன்மோகன் மாளவியாவின் அழைப்பை ஏற்று காசி இந்து சர்வகலாசாலையில் (பல்கலைக்கழகம்) உரையாற்றினார்.ஒவ்வொரு இந்துவும் வாழ்வில் ஒரு முறையேனும் காசி யாத்திரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.நாமும் மகாபெரியவர் ஆசியுடன் அடுத்த தீபாவளிக்குள் ஒருமுறை காசி யாத்திரை சென்று திரும்புவோம்.
நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன் நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள் மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி போர்க்கோலம் பூண்டு சும்ப நிசும்பர்களையும் அவர்களது படைத்தளபதிகளான மது கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும் மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.
ஓம் எனும் பொருளாய் விளங்கும் விநாயகா...

ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி

ஓம் பூமனும் பொருள்தொறும் பொலிவாய் போற்றி

ஓம் திங்கட் சடையோன் செல்வா போற்றி

ஓம் எங்கட் கருளும் இறைவா போற்றி

ஓம் அறுமுகச் செவ்வேட்கு அண்ணா போற்றி

ஓம் சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி

ஓம் மாலுக் கருளிய மதகிரி போற்றி

ஓம் பாலெனக் கடல்நீர் பருகினாய் போற்றி

ஓம் பாரதம் எழுதிய பரூஉக்கர போற்றி

ஓம் மாரதம் அச்சொடி மதவலி போற்றி

ஓம் உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றி

ஓம் கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி

ஓம் நம்பியாண் டார்கருள் நல்லாய் போற்றி

ஓம் தம்பிக்கு வள்ளியை தந்தாய் போற்றி

ஓம் இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி

ஓம் கரிமுகத் தெந்தாய் காப்போய் போற்றி

ஓம் ஐந்துகை யுடைய ஐய போற்றி

ஓம் ஐந்தொழில் ஆற்றும் அமர போற்றி

ஓம் கயமுக அசுரனைக் காய்ந்தாய் போற்றி

ஓம் மயிலறும் இன்ப வாழ்வே போற்றி

ஓம் செல்வம் அருள்க தேவா போற்றி

ஓம் நல்லன எமக்கருள் நாயக போற்றி

ஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி

ஓம் காக்கஎங் களையுன் கழலினை போற்றியே!
-------------------------
கணபதி துதி

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றுந் தா

அல்லல்போம் வல்லினைபோம்
அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத்துயரம் போம்- நல்ல
குணமதிகமா மருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பதம்
தப்பாமற் சார்வார் தமக்கு

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை
-------------------------
விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால் என்ன பலன்!

விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என விநாயக புராணம் கூறுகிறது. மகப்பேறு பெறமருத இலை, எதிரிகள்  தரும் துன்பம் தொலைய அரசஇலை, இதர துன்பங்கள் நீங்க அகத்தி இலை, சுகமான வாழ்வு பெற வில்வ இலை. சவுபாக்கியமான வாழ்வு பெற  வெள்ளெருக்கு இலை, புகழ்பெற மாதுளை இலை, லட்சுமி கடாட்சம் பெற கண்டங்கத்திரி இலை ஆகியவற்றால் பூஜிக்க வேண்டும். அருகம்புல்,  செம்பருத்தி, எருக்கம்பூ, மாவிலை கொண்டும் அர்ச்சனை செய்தால் இவை எல்லாவற்றையும் ஒரு சேர அடையலாம்.
-------------------------
விநாயகர் சித்தி மந்திரம்!

ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப
ஸாந்தயே.

விநாயகரைத் துதிக்க ஒரு மந்திரம்

ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் நாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம

இந்த மந்திரத்தை தினந்தோறும் மனம் உருகச் சொல்லி விநாயகரை வழிபட்டு வந்தால் சகல சவுபாக்கியங்களோடு, சந்தோஷமான வாழ்வைப் பெறலாம்.
-------------------------
மேல்மலையனூர் அங்காளியை
வணங்கி அளவில்லாத ஆனந்த வாழ்வையும் மகிழ்ச்சியும் அருளையும் பெற்று வாழ்வில் வளம் பெறுங்கள்....

ஒம் சக்தி ஓம்

ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி தமிழ் போற்றி!

ஓம் ஶ்ரீம்  அங்காள பரமேஸ்வரி போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அங்காளசக்தியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அங்கையர் கன்னியே பேற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அகோர ரூபினியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அகிலமே ஆனாய் போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அரனாய் நின்றாய் போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அங்கம் நிறைந்தாய் போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அன்பு வடிவானாய் போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அகிலாண்ட நாயகியே போற்றி ஒம்

ஓம் ஶ்ரீம்  சூரசம்ஆரியே போற்றி ஓம்

ஒம் ஶ்ரீம்  அகிலம் படைத்தாய் போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அண்ணவாகினியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மலையனூர் தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  பூவாடைக்காரியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  புத்தாய் ஆனாய் போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  கபாலசூலியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  பிரம்மதோசம் தீர்பாய் போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அமாவாசை நாயகியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  கஞ்சுளி கபால தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  பிரம்மகபால தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மயாணகாளியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  கானகத்து நாயகியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அங்காள ஈஸ்வரியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அருட்தரும் தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  பாம்புரு ஆனாய் போற்றி ஒம்

ஓம் ஶ்ரீம்  அண்ணபூரனியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மாசித்தேரே போற்றி ஓம்

ஓம் தீவினைஓட்டும் தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  பக்தி காக்கும் தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  கருநாகத தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மயானக்காலியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மகுடி நாதத்திலே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  வேப்பிலைசூலத்திலே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  எம்ஊர்காக்கும் தாயே போற்றி ஓம்

ஓம் ஆயிரம்கரத்தவளே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  பூமியால வந்தாய் போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மந்திரம் மாய்ப்பவளே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மக்கள்குறை தீர்ப்பாய் போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மாசித்தேர் நாயகியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  பாவாடைராயன்தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  திருசூலகாலியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  காமாட்சி அன்னையே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  சர்வலோக நாயகியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  சாமுண்டீஸ்வரி தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  ஶ்ரீம்  சுந்தரவள்ளியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  சிங்கவாகினியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  சிவலோக நாயகியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  தான்டவஈஸ்வரியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  தர்மதேவியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  தாட்சாயனிஅன்னையே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மலையனூர் தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மஞ்சல்அழகியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மாயசொரூபினியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  முத்துமாரியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  ராஜராஜேஸ்வரியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அங்காலரூபினியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அருளாட்சிபுரியும் தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  நல்வாக்கு தரும் தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அருள்வாக்கு சூலியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  சிங்கரதத் தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  ஆதிஅவதரித்தாய் போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  ஆனந்தபைரவியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  சிவனோடாடிடும் தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  சிரமாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  நாகக்கன்னி தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  கானகம்காக்கும் தாயே போற்றி ஒம்

ஓம் ஶ்ரீம்  ஈஸ்வரன் தேவியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  ஈடில்லா தெய்வமே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  கபால ஈஸ்வரி தாயே போற்றி ஓம்

ஒம் ஶ்ரீம்  உமாமகேஸ்வரியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  ஆனந்தவள்ளியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  ஆதிசக்தியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  எங்கும் நிறைந்தாய் போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  ஐம்புலம் அன்னையே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  எழில்மிகு தேவியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  ஆதிபராசக்தியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அன்பின்வடிவே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  ஐங்கரன்அன்னையே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அண்ணமளிக்கும் அண்ணபூரனியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  ஆறுமுகன் அன்னையே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  இனையில்லா ஈஸ்வரி தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  எங்கும் நிறைந்தாய் போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  கோபாலன் தங்கையே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அம்பிகை அன்னையே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  சமயபுரத்து மாரியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  தஞ்சைபுண்ணைல்லூர் மாரியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  திருவேற்காடுகருமாரியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  காஞ்சிகாமாட்சி அன்னையே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மதுரைமீனாட்சியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மாங்காடு மங்களநாயகியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  பெரியபாளையம் அம்மா போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  கல்கத்தா காலிகாதேவியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  கொல்லூர் மூகாம்பிகை தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  சோட்டானிக்கரரை பகவதி தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மேல்மருவத்தூர் தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மங்கையர்திலகமே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மங்கள ரூபினியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மாங்கள்யம் காப்பாய் போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  அங்காலஈஸ்வரி தாயே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  மீனவக்குமாரியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  பிழைகளை பொறுப்பாய் போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  ஞான ஒளியே போற்றி ஓம

ஓம் ஶ்ரீம்  ஊழ்வினை தணிப்பாய் போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  ஏற்றம் தருவாய் போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  இச்சாசக்தியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  கிரியாசக்தியே போற்றி ஓம்

ஓம் ஶ்ரீம்  ஞானாசக்தியே போற்றி ஓம்
முருகனின் அருள்பெற்றவர்கள்!

அகத்தியர்: முருகன் அருள்பெற்ற அடியார்களின் முதன்மையானவராகப் போற்றப்படுபவர் அகத்தியர். செந்தமிழ் நாடான இப்பகுதியை அகத்திய முனிவரே முருகப்பெருமானிடம் பெற்று பாண்டிய மன்னனுக்கு கொடுத்ததாக திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. பொதிகை மலையில் முருகனிடம் உபதேசம் பெற்று அகத்தியம் என்னும் இலக்கணத்தை எழுதியதாகக் கூறுவர்.

நக்கீரர்: கடைச்சங்கப்புலவராய் மதுரைநகரில் இருந்து தமிழை வளர்த்த புலவர் நக்கீரர். முருகப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். திருப்பரங்குன்றத்தில் பூதங்களிடம் சிக்கிக்குகையில் கிடந்தபோது, முருகனே காப்பாற்றி அருள்செய்தார். முருகனின் ஆறுபடைவீடுகளையும் சிறப்பித்துப் போற்றும் திருமுருகாற்றுப்படையை எழுதினார்.

அவ்வையார்: முருகனை வழிபட்ட பெண் அடியவர்களில் அவ்வையார் குறிப்பிடத்தக்கவர். பசு மேய்க்கும் பாலகனாக வந்த முருகப்பெருமான் இவரிடம், பாட்டி, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு ஞானத்தை அருளினார் என்பர். இவர் பாடிய இனியது, புதியது, அரியது, பெரியது ஆகிய பாடல்கள் தம் சிந்தைக்கு விருந்தளிப்பவையாகும்.

குமர குருபரர்: திருச்செந்தூர் அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இவர், ஐந்து வயதுவரை பேசும் திறனற்றவராய் இருந்தார். முருகனருளால் பேசும் ஆற்றல் பெற்றார். கந்தர் கலிவெண்பா என்னும் பாடலைப் பாடி அனைவரையும் வியப்பில்ஆழ்த்தினார். முருகனின் மீது இவர் பாடிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் புகழ்பெற்றதாகும். காசியில் மடம் ஒன்றை நிறுவி தெய்வத் தொண்டில் ஈடுபட்டார்.

தேவராய சுவாமிகள்:  பட்டி தொட்டிகளில் எல்லாம் முருகனுக்குரிய பாராயண நூலாகத் திகழும் கந்தசஷ்டிக் கவசத்தைப் பாடிய அருளாளர் தேவராயசுவாமிகள் ஆவார். முருகனுக்குரிய பீஜ மந்திரங்களை சூட்சுமமாகத் தெரிவிக்கும் நூல் இதுவாகும். சென்னிமலை முருகனின் மீது பாடப்பட்ட இந்நுõல், கவசம் போல பாதுகாக்கும் சக்தி கொண்டது.

ராமலிங்க வள்ளலார்:  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று கடவுளை கருணை வடிவில் கண்டு போற்றிய அருளாளர் வள்ளலார். சிறுவனாக இருக்கும்போது கண்ணாடியின் முன் தியானம் செய்யும்போது மயில்வாகனத்தில் முருகப்பெருமான் இவருக்கு காட்சியளித்தார் என்பர். கந்த கோட்டத்தில் வளர்ந்தோங்கும் கந்தவேளிடம் இவர் கேட்கும் வரங்கள் நம் ஒவ்வொருவருக்கும் தேவையானவை என்றால் மிகையில்லை.

பாம்பன் சுவாமிகள்:  யாழ்ப்பாணத்தில் சைவமரபில் தோன்றியவர் பாம்பன் சுவாமிகள். குமரகுருதாச சுவாமிகள் என்னும் பெயர் கொண்டிருந்த இவர், ராமேஸ்வரம் அருகில் உள்ள பாம்பனில் வாழ்ந்ததால், பாம்பன் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். முருகனின் மீது 6666 பாடல்கள் பாடியுள்ளார். பல அற்புதங்களை முருகனருளால் செய்த இவர், அண்மைக்காலத்தில் வாழ்ந்தவராவார். இவர் பாடிய சண்முக கவசம் பாராயண நூலாகத்திகழ்கிறது. தமிழ் உயிர்,மெய் எழுத்துக்கள் முப்பதையும் முதல் எழுத்தாககக் கொண்டு அமைந்த நூல் இது. பஞ்சாமிர்தவண்ணம் என்னும் பாடலால் முருகனுக்குஅபிஷேகம் செய்தவர் இவர்.
1. அறம் செய விரும்பு /1. Learn to love virtue.

2. ஆறுவது சினம் /2. Control anger.

3. இயல்வது கரவேல் /3. Don't forget Charity.

4. ஈவது விலக்கேல் /4. Don't prevent philanthropy.

5. உடையது விளம்பேல் /5. Don't betray confidence.

6. ஊக்கமது கைவிடேல் /6. Don't forsake motivation.

7. எண் எழுத்து இகழேல் /7. Don't despise learning.

8. ஏற்பது இகழ்ச்சி /8. Don't freeload.

9. ஐயம் இட்டு உண் /9. Feed the hungry and then feast.

10. ஒப்புரவு ஒழுகு /10. Emulate the great.

11. ஓதுவது ஒழியேல் /11. Discern the good and learn.

12. ஒளவியம் பேசேல் /12. Speak no envy.

13. அகம் சுருக்கேல் /13. Don't shortchange.

14. கண்டொன்று சொல்லேல் /14. Don't flip-flop.

15. ஙப் போல் வளை /15. Bend to befriend.

16. சனி நீராடு /16. Shower regularly.

17. ஞயம்பட உரை /17. Sweeten your speech.

18. இடம்பட வீடு எடேல் /18. Judiciously space your home.

19. இணக்கம் அறிந்து இணங்கு /19. Befriend the best.

20. தந்தை தாய்ப் பேண் /20. Protect your parents.

21. நன்றி மறவேல் /21. Don't forget gratitude.

22. பருவத்தே பயிர் செய் /22. Husbandry has its season.

23. மண் பறித்து உண்ணேல் /23. Don't land-grab.

24. இயல்பு அலாதன செய்யேல் /24. Desist demeaning deeds.

25. அரவம் ஆட்டேல் /25. Don't play with snakes.

26. இலவம் பஞ்சில் துயில் /26. Cotton bed better for comfort.

27. வஞ்சகம் பேசேல் /27. Don't sugar-coat words.

28. அழகு அலாதன செய்யேல் /28. Detest the disorderly.

29. இளமையில் கல் /29. Learn when young.

30. அரனை மறவேல் /30. Cherish charity.

31. அனந்தல் ஆடேல்/31. Over sleeping is obnoxious.

32. கடிவது மற /32. Constant anger is corrosive.

33. காப்பது விரதம் /33. Saving lives superior to fasting.

34. கிழமைப்பட வாழ் /34. Make wealth beneficial.

35. கீழ்மை அகற்று /35. Distance from the wicked.

36. குணமது கைவிடேல் /36. Keep all that are useful.

37. கூடிப் பிரியேல் /37. Don't forsake friends.

38. கெடுப்பது ஒழி /38. Abandon animosity.

39. கேள்வி முயல் /39. Learn from the learned.

40. கைவினை கரவேல் /40. Don't hide knowledge.

41. கொள்ளை விரும்பேல் /41. Don't swindle.

42. கோதாட்டு ஒழி /42. Ban all illegal games.

43. கெளவை அகற்று/43. Don't vilify.

44. சக்கர நெறி நில் /44. Honor your Lands Constitution.

45. சான்றோர் இனத்து இரு /45. Associate with the noble.

46. சித்திரம் பேசேல் /46. Stop being paradoxical.

47. சீர்மை மறவேல் /47. Remember to be righteous.

48. சுளிக்கச் சொல்லேல் /48. Don't hurt others feelings.

49. சூது விரும்பேல் /49. Don't gamble.

50. செய்வன திருந்தச் செய் /50. Action with perfection.

51. சேரிடம் அறிந்து சேர் /51. Seek out good friends.

52. சையெனத் திரியேல் /52. Avoid being insulted.

53. சொற் சோர்வு படேல் /53. Don't show fatigue in conversation.

54. சோம்பித் திரியேல்/54. Don't be a lazybones.

55. தக்கோன் எனத் திரி/55. Be trustworthy.

56. தானமது விரும்பு /56. Be kind to the unfortunate.

57. திருமாலுக்கு அடிமை செய் /57. Serve the protector.

58. தீவினை அகற்று /58. Don't sin.

59. துன்பத்திற்கு இடம் கொடேல் /59. Don't attract suffering.

60. தூக்கி வினை செய் /60. Deliberate every action.

61. தெய்வம் இகழேல் /61. Don't defame the divine.

62. தேசத்தோடு ஒட்டி வாழ் /62. Live in unison with your countrymen.

63. தையல் சொல்கேளேல் /63. Don't listen to the designing.

64. தொன்மை மறவேல் /64. Don't forget your past glory.

65. தோற்பன தொடரேல்/65. Don't compete if sure of defeat.

66. நன்மை கடைப்பிடி /66. Adhere to the beneficial.

67. நாடு ஒப்பன செய் /67. Do nationally agreeables.

68. நிலையில் பிரியேல் /68. Don't depart from good standing.

69. நீர் விளையாடேல் /69. Don't jump into a watery grave.

70. நுண்மை நுகரேல் /70. Don't over snack.

71. நூல் பல கல் /71. Read variety of materials.

72. நெற்பயிர் விளைவு செய் /72. Grow your own staple.

73. நேர்பட ஒழுகு /73. Exhibit good manners always.

74. நைவினை நணுகேல் /74. Don't involve in destruction.

75. நொய்ய உரையேல் /75. Don't dabble in sleaze.

76. நோய்க்கு இடம் கொடேல்/76. Avoid unhealthy lifestyle.

77. பழிப்பன பகரேல் /77. Speak no vulgarity.

78. பாம்பொடு பழகேல் /78. Keep away from the vicious.

79. பிழைபடச் சொல்லேல் /79. Watch out for self incrimination.

80. பீடு பெற நில் /80. Follow path of honor.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /81. Protect your benefactor.

82. பூமி திருத்தி உண் /82. Cultivate the land and feed.

83. பெரியாரைத் துணைக் கொள் /83. Seek help from the old and wise.

84. பேதைமை அகற்று /84. Eradicate ignorance.

85. பையலோடு இணங்கேல் /85. Don't comply with idiots.

86. பொருள்தனைப் போற்றி வாழ் /86. Protect and enhance your wealth.

87. போர்த் தொழில் புரியேல்/87. Don't encourage war.

88. மனம் தடுமாறேல் /88. Don't vacillate.

89. மாற்றானுக்கு இடம் கொடேல் /89. Don't accommodate your enemy.

90. மிகைபடச் சொல்லேல் /90. Don't over dramatize.

91. மீதூண் விரும்பேல் /91. Don't be a glutton.

92. முனைமுகத்து நில்லேல் /92. Don't join an unjust fight.

93. மூர்க்கரோடு இணங்கேல் /93. Don't agree with the stubborn.

94. மெல்லி நல்லாள் தோள்சேர் /94. Stick with your exemplary wife.

95. மேன்மக்கள் சொல்கேள் /95. Listen to men of quality.

96. மை விழியார்மனை அகல் /96. Dissociate from the jealous.

97. மொழிவது அற மொழி /97. Speak with clarity.

98. மோகத்தை முனி /98. Hate any desire for lust.

99. வல்லமை பேசேல் /99. Don't self praise.

100. வாது முற்கூறேல் /100. Don't gossip or spread rumor.

101. வித்தை விரும்பு /101. Long to learn.

102. வீடு பெற நில் /102. Work for a peaceful life.

103. உத்தமனாய் இரு /103. Lead exemplary life.

104. ஊருடன் கூடி வாழ் /104. Live amicably.

105. வெட்டெனப் பேசேல் /105. Don't be harsh with words and deeds.

106. வேண்டி வினை செயேல் /106. Don't premeditate harm.

107. வைகறைத் துயில் எழு /107. Be an early-riser.

108. ஒன்னாரைத் தேறேல் /108. Never join your enemy.

109. ஓரம் சொல்லேல்/109. Be impartial in judgement.
10:10:18 நவராத்திரி ஆரம்பம்.

முதல் நாள் : மஹா கணபதி பூஜையுடன் தொடங்கி கலச பூஜை செய்து துர்கையை தியானம் செய்து கலசத்தில் ஆவாஹனம் செய்து துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம். மஹிஷாஸுரமர்த்தினி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

11:10:18 இரண்டாம் நாள் : இக்சா சக்தியான துர்கையை துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்து ஸ்ரீ லலிதா திரிசதி, ஸ்ரீ காமாட்சி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

12:10:18 மூன்றாம் நாள் : துர்கா அஷ்டோத்திர பூஜை. ஸ்ரீ லலிதா சஹ‌ஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா நவரத்ன மாலா பாராயணம் செய்யலாம்.

13:10:18 நான்காம் நாள் : ஸ்ரீமகாலக்ஷ்மியை தியானம் செய்து லக்ஷ்மி அஷ்டோத்திர பூஜை செய்தல் நல்லது. ஸ்ரீ கனக தாரா ‌ம‌ந்‌திர‌ம், ஸ்ரீ அன்ன பூர்ணாஷ்டகம், அஷ்டலக்ஷ்மி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

14:10:18 ஐந்தாம் நாள் : லக்ஷ்மி அஷ்டோத்திர பூஜை செய்து ஸ்ரீ கனகதாரா ம‌ந்‌திர‌ம், ஸ்ரீ லலிதா சஹ‌ஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டகமும் பாராயணம் செய்வது நன்மை தரும்.

15:10:18 ஆறாம் நாள் : லக்ஷ்மி அஷ்டோத்திரம் அல்லது மகாலக்ஷ்மி ஸஹ‌ஸ்ரநாம பூஜை செய்தல் சிறப்பானது.

16:10:18 ஏழாம் நாள் : ஸ்ரீ சர‌ஸ்வதி அஷ்டோத்திர பூஜை செய்து ஸ்ரீ சாரதா புஜங்க ம‌ந்‌திர‌ம் மற்றும் ஸ்ரீ தேவி கட்கமாலா முதலியவை பாராயணம் செய்யலாம்.

17:10:18எட்டாம் நாள் : சர‌ஸ்வதி அஷ்டோத்திர பூஜை செய்து ஸ்ரீ தேவி நவரத்னமாலா மற்றும் ஸ்ரீ பவானி புஜங்கம் பாராயணம் செய்யலாம்.

18:10:18 ஓன்பதாம் நாள் : சர‌ஸ்வதி அஷ்டோத்திரம், லக்ஷ்மி அஷ்டோத்திரம் மற்றும் ஸ்ரீ லலிதா சஹ‌ஸ்ரநாமம் பாராயணம் சிறந்த பலன் தரும்.

19:10:18 கன்னிகா பூஜை : நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் அன்னை பராசக்தியை ஒவ்வொரு ரூபத்தில் ஆராதனை செய்கிறோம். ஏழு அல்லது பத்து வயதுக்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை நம் இல்லத்திற்கு அழைத்து அவர்களை அன்னை பாலா திரிபுரசுந்திரியாக பாவித்து நல்விருந்தளித்து, புத்தாடை, அணிகலன்களான வளையல், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் அளிப்பது அம்பிகை பக்தர்களின் வழக்கம். முதல் நாளில் ஒரு குழந்தையில் தொடங்கி விஜயதசமி அன்று நவகன்னிகைகளுக்கு மேற்கூறியவாறு உபசாரங்கள் செய்யலாம். அல்லது இப்படி செய்ய இயலாதவர்கள் கடைசி நாளில் ஒன்பது கன்னிகைகளுக்கும் ஒரு சேர விருந்தளித்து ஆடை, அணிகலன்கள் அளிக்கலாம். இந்த உபசாரங்களை தேவி பராசக்தி அன்புடன் ஏற்றுக் கொண்டு நமக்கு நல்வாழ்வு தருவாள்.

எல்லா நாட்களிலுமே பூஜையின் முடிவில் ஸ்ரீ துர்கா லக்ஷ்மி ஸர‌ஸ்வதீப்யோ நம: என்று கூறி மலர்களுடன், குங்குமம், அட்சதை ஆகியவற்றை அம்மாளிடம் சமர்ப்பிக்கவும்.
மலர் வேண்டாம் மனம் போதும்!

சிவபெருமானுக்கு பூஜை செய்ய புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டை, நீலோத்பவம், பாதிரி, அரளி, செந்தாமரை ஆகிய எட்டு வகையான மலர்களை பயன்படுத்தலாம். இம்மலர்கள் அஷ்ட புஷ்பங்கள் எனப்படுகின்றன. இவற்றில் சில இப்போது கிடைப்பதில்லை. இம்மலர்களை படைத்து மட்டும்தான் சிவனை வழிபட வேண்டுமென்பதில்லை. நமசிவாய என அவர் திருநாமத்தை உச்சரித்து, மனம் என்னும் பூவால் வழிபட்டாலே போதும். மலர்களால் அர்ச்சித்து வணங்கிய பலன் கிடைத்து விடும்.
----------------‐----------
இடதுகை எதற்கு!

இடது கை என்றாலே வேண்டா வெறுப்பாகப் பார்க்கிறோம். ஆனால், எதையும் ஆண்டவன் நன்மைக்கே கொடுக்கிறான். தினமும் வீட்டில் காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி  இஷ்ட தெய்வத்தை ஸ்தோத்திரம் சொல்லி வழி படுகிறோம். பூஜையின் நிறைவில், இரு கைகளையும் ஒன்று சேர்த்து, பூக்களை அள்ளி, சுவாமியின் திருவடியில் தூவ வேண்டும்.
 இதற்கு புஷ்பாஞ்சலி என்று பெயர். தெய்வ கைங்கர்யங்களை வலது கையால் தான் செய்ய வேண்டும் என்றாலும், புஷ்பாஞ்சலியின் போது மட்டும், இடக்கையையும் சேர்த்து செய்வது தவறில்லை என்கிறது சாஸ்திரம்.
----------------‐----------
சுயம்புவை வணங்கலாம்!

கோயிலில் கருவறையில் மூலவரும், அதன் அருகில் உற்சவரும் எழுந்தருளியிருப்பர். திருவிழா காலத்தில் உற்ஸவர் மட்டும் திருவீதி எழுந்தருள்வது வழக்கம். சுவாமி தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு அருள்புரிவதற்காக வீதியுலா நடக்கிறது. அப்போது உற்ஸவர், மூலவரின் அனைத்து சக்தியையும் தன்னோடு எடுத்து வருவதாக ஐதீகம். அந்த சமயத்தில் மூலவரை தரிசித்தல், அர்ச்சித்தல், வலம் வருதல் போன்ற எந்த வழிபாட்டையும் மேற்கொள்வது கூடாது என்கிறது சிவயோகி ஸம்வாதம். ஆனால், சுவாமி சுயம்பு மூர்த்தியாக (தானாக தோன்றியது) எழுந்தருளியுள்ள கோயில்களில் மட்டும் மூலவரைத் தரிசிக்கலாம். ஆனால், அர்ச்சனை செய்யவோ, வலம் வரவோ கூடாது.
----------------‐----------
நீரின் நிழலே ஆகாயம்!

நீருக்கு நிழல் இருக்கிறதா? என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்வர். ஆனால், நீருக்கு நிழல் இருக்கிறது. நிழல் இல்லை என்றால் ஆகாயமே இல்லை என்றாகி விடும். நீரின் நிழல் அதனுள்ளேயே அடங்கி விடுவதால், வெளியில் தெரிவதில்லை. சிவனும் நீரைப் போல அருள் செய்கிறார். அவரை வணங்கும்போது, ஆன்மாவிற்கு முக்தி கிடைக்கிறது. அது அவருக்குள்ளேயே ஒடுங்குகிறது. இதனை உணர்த்தும் விதமாக சைவ சித்தாந்தத்தில், நீரார் நிழல் என்று சிவனை வேண்டி பாடப்பட்டுள்ளது.
----------------‐----------
அக்கா தம்பி சந்நிதி!

அட்டவீரட்டத் தலங்களில் (சிவன் வீரச்செயல்கள் நிகழ்த்திய இடங்கள்) ஒன்று, கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலுள்ள திருவதிகை. நாவுக்கரசரின் கொடிய சூலைநோயினைப் போக்கிய வீரட்டானேஸ்வரர் இங்குள்ள கோயிலில் உள்ளார். இக்கோயிலில் நாவுக்கரசருக்கும், அவரது சகோதரி திலகவதியாருக்கும் சந்நிதி உண்டு. தேவாரத்தில், தான் பாடிய முதல் பாடலில் இத்தல சிவனைப் பற்றியே நாவுக்கரசர் பாடியிருக்கிறார். வீரட்டானேஸ்வரரை வழிபட்டே திலகவதியார், சமணமதத்தை தழுவிய தன் தம்பியை சைவ சமயத்திற்கு மாற்றினார்.
----------------‐----------
மணி அடிக்க வேண்டிய நேரம்!

பூஜைப்பொருளில் ஒன்றான மணியை இஷ்டம் போல நினைத்த நேரமெல்லாம் அடிக்கக் கூடாது. அதற்குரிய நேரத்தில் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்கிறது பரசுராம கல்ப சூத்திரம்.ஸ்நாநே தூபே ததா தீபே நைவேத்யே பூஷணே ததாகண்டா நாதம் ப்ரகுர்வீத ததா நீராஜநேபிச என்கிறது அதற்கான ஸ்லோகம். அபிஷேகத்தின் போதும், சாம்பிராணி காட்டும் போதும், தீபாராதனை வேளையிலும், நைவேத்யம் செய்யும்போதும், ஆபரணம் அணிவித்து அலங்கரிக்கும் போதும், நீராஞ்ஜனம்  என்னும் கற்பூர ஆரத்தியின் போதும் மணியோசை  எழுப்ப வேண்டும்.  வீட்டில் கற்பூர ஆரத்தி காட்டும் போது மணியடிப்பது நல்லது.
----------------‐----------
பூஜைக்குரிய திசை!

விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு, சூரியன் ஆகிய தெய்வங்களை வணங்கும்போது சுவாமியை கிழக்கு நோக்கி வைத்து, நாம் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்வதே சிறந்தது. பெண் தெய்வங்களான காளி, மாரி, லட்சுமி, பிற அம்மன்களை வழிபடும்போது நேருக்கு நேராக அமர்ந்து பூஜை செய்யலாம். அதாவது, அம்மன் கிழக்கு நோக்கி இருக்க, நாம் மேற்கு நோக்கியோ அல்லது அம்மன் வடக்கு நோக்கி இருக்க, நாம் தெற்கு நோக்கியோ பூஜை செய்யலாம்.
----------------‐----------
விநாயகர் பிரம்மச்சாரியா அல்லது திருமணம் ஆனவரா?

முருகப்பெருமான் பாலசுப்பிரமணியராக இருக்கும் போது பிரம்மச்சாரியாக உள்ளார். வள்ளி, தேவசேனாவுடன் இருக்கும் போது திருமணமானவர் என்கிறோம். அது போலத்தான். பால கணபதி பிரம்மச்சாரி, திருமணமான பிறகு சித்தி, புத்தி சமேத கணபதி என்று போற்றப்படுகிறார். இன்னொரு விஷயம் உலகியல் திருமணங்களோடு இவற்றை ஒப்பிட்டுப் பேசக் கூடாது. தம்மை வழிபடுபவர்களுக்கு வெற்றியைத் தருபவர் என்பதை சித்தி தேவியும், நல்லறிவைத் தருபவர் என்பதை புத்தி தேவியும் குறிக்கிறார்கள்.
----------------‐----------

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

**இராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா**

பிரம்மாவின் மகன்
மரீசீ

மரீசீயின் மகன்
கஷ்யபர்

கஷ்யபரின் மகன்
விவஸ்வான்

விவஸ்வானின் மகன்
மனு

மனுவின் மகன்
இஷ்வாகு

இஷ்வாகுவின் மகன்
விகுக்ஷி

விகுக்ஷியின் மகன்
புரண்ஜயா

புரண்ஜயாவின் மகன்
அணரன்யா

அணரன்யாவின் மகன்
ப்ருது

ப்ருதுவின் மகன்
விஷ்வாகஷா

விஷ்வாகஷாவின் மகன்
ஆர்தரா

ஆர்தராவின் மகன்
யுவான்ஷ்வா-1

யுவான்ஷ்வாவின் மகன்
ஷ்ரவஷ்ட்

ஷ்ரவஷ்டின் மகன்
வ்ரதஷ்வா

வ்ரதஷ்வாவின் மகன்
குவலஷ்வா

குவலஷ்வாவின் மகன்
த்ருதஷ்வா

த்ருதஷ்வாவின் மகன்
ப்ரோமத்

ப்ரோமத்தின் மகன்
ஹர்யஷ்வா

ஹர்யஷ்வாவின் மகன்
நிகும்ப்

நிகும்பின் மகன்
சன்டஷ்வா

சன்டஷ்வாவின் மகன்
க்ருஷஸ்வா

க்ருஷஸ்வாவின் மகன்
ப்ரஸன்ஜீத்

ப்ரஸன்ஜீத்தின் மகன்
யுவான்ஷ்வா-2

யுவான்ஷ்வாவின் மகன்
மன்தாத்தா

மன்தாத்தாவின் மகன்
அம்பரீஷா

அம்பரீஷாவின் மகன்
ஹரிதா

ஹரிதாவின் மகன்
த்ரதஸ்யு

த்ரதஸ்யுவின் மகன்
ஷம்பூத்

ஷம்பூத்தின் மகன்
அனரண்யா-2

அனரண்யாவின் மகன்
த்ரஷஸ்தஸ்வா

த்ரஷஸ்தஸ்வாவின் மகன்
ஹர்யஷ்வா 2

ஹர்யஷ்வாவின் மகன்
வஸுமான்

வஸுமாவின் மகன்
த்ரிதன்வா

த்ரிதன்வாவின் மகன்
த்ரிஅருணா

த்ரிஅருணாவின் மகன்
திரிசங்கு

திரிசங்கு வின் மகன்
ஹரிசந்திரன்

ஹரிசந்திரநநின் மகன்
ரோஹிதாஷ்வா

ரோஹிதாஷ்வாவின் மகன்
ஹரித்

ஹரித்தின் மகன்
சன்சு

சன்சுவின் மகன்
விஜய்

விஜயின் மகன்
ருருக்

ருருக்கின் மகன்
வ்ருகா

வ்ருகாவின் மகன்
பாஹு

பாஹுவின் மகன்
சாஹாரா

சாஹாராவின் மகன்
அசமஞ்சன்

அசமஞ்சனின் மகன்
அன்ஷுமன்

அன்ஷுமனின் மகன்
திலீபன்

திலீபனின் மகன்
பகீரதன்

பகீரதனின் மகன்
ஷ்ருத்

ஷ்ருத்தின் மகன்
நபக்

நபக்கின் மகன்
அம்பரீஷ்

அம்பரீஷனின் மகன்
சிந்து த்வீப்

சிந்து த்வீப்பின் மகன்
ப்ரதயு

ப்ரதயுவின் மகன்
ஸ்ருது பர்ணா

ஸ்ருது பர்ணாவின் மகன்
சர்வகாமா

சர்வகாமாவின் மகன்
ஸுதஸ்

ஸூதஸின் மகன்
மித்ரஷா

மித்ராஷாவின் மகன்
சர்வகாமா 2

சர்வகாமாவின் மகன்
அனன்ரண்யா 3

அனன்ரண்யாவின் மகன்
நிக்னா

நிக்னாவின் மகன்
ரகு

ரகுவின் மகன்
துலிது:

துலிதுவின் மகன்
கட்வாங் திலீபன்

கட்வாங் திலீபனின் மகன்
ரகு 2

ரகுவின் மகன்
அஜன்

அஜனின் மகன்
தசரதன்

தசரதனின் மகன்

**ஸ்ரீ ரகு ராம**

ராமாரின் குல வம்சத்தை பற்றி அறிவதே  பெரும் புண்ணியம்

#ஜெய்ஸ்ரீராம்#

அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ******
சிதம்பர ரகசியம் பகுதி : 14

யோகம் அறிந்தவர்களும் அதன் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்த முயன்றவர்களுமே அறிந்த உண்மை இது. நாம் இப்போ தினமும் செய்யற ஆசனங்கள் எல்லாம் யோகம் ஆகி விடாது. உண்மையாக யோகக் கலையைக் கற்றவர் இன்று மிகச் சிலரே இருக்கின்றனர். இந்த யோகக் கலையின் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்தி வேண்டியபோது விடுவதற்கும் இழுப்பதற்கும் தெரிந்தவரே யோகி ஆவார். இது சித்தர்களால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன். பதஞ்சலி முனிவரும் வியாகரம பாதரும் சித்தர்களில் சேர்ந்தவர்கள். அவர்களால் முடிந்தது. இவர்கள் இருவரும் முக்தி அடைந்ததும் ராமேஸ்வரத்தில் என்று சொல்லுவார்கள். தென்னாட்டைச் சேர்ந்த இவ்விரு சித்தர்களும் சேர்ந்து இறைவனுக்கு எழுப்பிய கோயில் தான் இந்கச் சிதம்பரம் கோயில். நம் உடலின் அமைப்புத் தான் பொதுவாகக் கோயில் அமைப்பும். இதில் சிதம்பரம் கோயில் ஞான ஆகாசம் எனப்படும். "சித்" என்றால் "ஞானம்" என்றும் "அம்பரம்" என்றால் "ஆகாசத்தையும்" முறிக்கும். சித்தர்கள் மூச்சுக்கலையை விஞ்ஞானத்தின் உதவியின்றியே பயின்றவர்கள். மூச்சைக் கட்டுப் படுத்தத் தெரிந்தவர்கள். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை தரம் மூச்சு விடுகிறான் என்பதைக் கண்டறிந்து அதைக் கட்டுப் படுத்தி ஞானம் அடைந்து சகல சித்தியும் கைவரப் பெற்றவர்கள். ஒரு சாதாரண மனிதன் 4 வினாடிகளுக்கு ஒருமுறை மூச்சை உள்ளிழுத்து வெளியிடுகிறான். ஒரு நிமிஷத்திற்குப் பதினைந்து முறையும், ஒரு மணி நேரத்திற்கு 900 முறையும் ஒரு நாளுக்கு 21,600 முறையும் மூச்சு விட்டு இழுக்கிறான். இதைக் குறைக்கத் தான் யோகக் கலை பயன்படுகிறது. அதன் மூலம் மூச்சைக் கட்டுப் படுத்தி 21/2(இரண்டரை) மணி நேரத்துக்கு ஒரு முறை மூச்சை இழுத்து வெளியிட்டால் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலரைப் போலவும் மார்க்கண்டேயரைப் போலவும் இருக்க முடியும் வாழ முடியும். ஒரு பிறந்த குழந்தையைப் பாருங்கள். அது மூச்சு விடுவதை! முதலி பிறந்து கொஞ்ச நாட்களுக்கு மிகச் சரியாக முச்சை விட்டு இழுக்கும். குழந்தையின் மூக்கு நுனியில் இருந்து அதன் உச்சிக் குழி இருக்கும் உச்சந்தலைக்கு 12 அங்குலம் நீளம் இருக்கும். குழந்தையின் உச்சந்தலை "படபட"வென அடித்துக் கொண்டே இருப்பதைக் கண்டிருக்கலாம். குழந்தையின் உள்நாக்குக்கும் இந்த உச்சந்தலைக்கும் ரகசிய வழி இருப்பதாயும் அதுதான் இறைவன் இருப்பிடம் எனவும் சொல்லப் படுகிறது. அதனால் தான் குழந்தை பிறந்ததும் தானே சிரிப்பதற்கும் அழுவதற்கும் இறைவன் விளையாட்டுக் காட்டுகிறார் என்று சொல்கிறோம். 6 மாதத்துக்கு மேல் ஆகிக் குழந்தையின் உச்சிக் குழி மூடியதும் இதில் 4 அங்குலம் குறைகிறது. குழந்தையும் நம்மைப் போல் மூச்சு விட ஆரம்பிக்கிறது. 21,600 ஒரு நாளைக்கு என்ற கணக்குப்படி நம் வாழ்நாள் பூராவுக்கும் வேண்டிய மூச்சை நாம் அதிகமாய்ச் செல்வழிக்கிறோம். நடக்கும்போது, நிற்கும்போதும், ஓடும்போதும், விளையாடும்போதும், தூங்கும்போதும் என்று செலவு செய்வதால் குறைந்து வருகிறது. இந்த ரகசிய வழியானது முறையான யோகப் பயிற்சியில் மீண்டும் திறந்து கொள்ளும். நம் உள்மனதில் உள்ள மூன்றாவது கண் எனச் சொல்லப் படும் ஞானக் கண் திறந்து கொள்ளும். உள்ளொளி பிறக்கும். ஞானம் சித்தியடையும்.

அடுத்து இந்த ஞானக் கண் திறக்கும் முறையான "குண்டலினி யோகம்" பற்றி விவரம் கொடுக்கப் போகிறேன். யாரும் தவறிக் கூட முயற்சி செய்து பார்க்கவேண்டாம். விளைவுகள் மோசமாக இருக்கும். முறையான குருவிடம் முறையான பயிற்சி இல்லாவிட்டால் ஏற்படும் விளைவுகளில் மரணம் கூட சம்பவிக்கலாம். திரு ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய "பாபா" திரைப்படத்தில் காட்டிய யோக முத்திரை தவறு எனவும் அதனால் தான் படம் தோல்வி அடைந்ததோடு அல்லாமல் வேறு மோசமான விளைவுகளைச் சந்தித்தார் எனவும் சொல்லப் பட்டது. ஆகவே படிக்கிறதோடு நிறுத்திக் கொள்வோம்.

மிண்டும் நாளை சந்திக்கலாம்

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

படித்ததில் பிடித்தது

ஸ்ரீ நாம பலம்

சரி..... இன்னைக்கு மஹாபாரத பதிவு போடலாம்ன்னு யோசிச்சா கடைசி வரை போதாந்திராளே ஞாபகத்துக்கு வந்துட்டு இருக்கார்... எல்லாம் இந்த பயபுள்ள  காலைல பண்ணின வேலையாத்தான் இருக்கும்ன்னு நினைச்சிட்டு பகவான் நாமம் பற்றி கோடானகோடியில் ஒரு துளி எழுதுகிறேன்...

ஏன்னா ! போதாந்திராள் நாமத்துக்காகவே வாழ்ந்து அதை பரப்பி அந்த நாமமாகவே ஆனவர். தன் குரு ஸ்தானத்தில் செய்து கொண்ட சபதத்திற்க்காக தினமும் 100008 ராம நாமம் சொன்னவர். இவரும் நெரூர் சதாசிவ ப்ரம்மேந்திரரும் ஆத்ம நண்பர்கள். சரி... லட்சத்து எட்டாயிரம் ஜபம்தானே அப்படின்னு சும்மாவும் சொல்ல முடியாது. ஏன்னா ஒரு நாளைக்கே 86400 நொடி தான்... அப்ப நீங்களே யோசிச்சுக்கோங்க... இவருதான் இப்படின்னா நம்ம தியாக பிரம்மம் தினமு ம் 125000 ராம நாம ஜபம் முடிச்சார். இப்படி 21 வருடத்தில் 96 கோடி ஜெபத்தை சங்கல்பித்து முடித்தார்...

அந்த நாம சாகரத்தின் மதிப்பு அப்படி....

 போதாந்திராள் பகவன் நாம ரஸாயனம் அப்படிங்கர புத்தகத்தில் சொல்லிருப்பார்...

" ஸதானந்த: ஸ்ரீமான் அனுபதிக்காருண்யவிவாஸோ! ஜகத்ஷேமமாய ஸ்ரீ ஹரிகிரிஸ்ரூபம் வித் ரூதவான்!... " இப்படிங்கர ஸ்லோகத்தில் சொல்லுவார்...

காரணமேதுமின்றி கருணை செய்பவருமான நிர்வ்யாஜ கருணா மூர்த்தியான பகவான் மஹா விஷ்ணு, பரமசிவன் என்ற ரூபம் தரித்தாலும்... இது உலகை உய்விக்க போதாதென்று நினைத்து விஷ்ணு, சிவன் நாம ரூபமாக எழுச்சியுடன் நின்றாராம். (பகவான் நம்ம மேலே கருணை செய்யருக்கு காரணமே வேண்டியதில்லைங்கரார்).

விஷ்ணு சஹஸ்ரநாமம் முன்னுரையில் சொல்லும் போதும்... இதர தர்மத்தை நோக்குங்கால், அவைகளை விட சிறந்ததாக நாம சங்கீர்த்தனம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று சொல்லப்படுகிறது. ப்ரஹமாண்ட புராண ஆரம்பத்தில் "ஹரி கீர்த்தனம்' என்ற ஸ்துதிக்கு உபதேசம் பெறுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. சுத்தம் அசுத்தம் என்ற காரணமும் இல்லை ஆதலால் உடனே சொல்லவேண்டும் என்று சொல்லப்படுகிறது.  அதாவது " ச ஸ்மஸானச்ண்டாலவாடிகாதினிஷித்ததேஸேஸு ந கார்யம் அனிஷித்தேஸேஷ்வேவ கார்யமிதி....." அப்படிங்கர வாக்கியத்தில், இடு/சுடுகாடு, தீண்டத்தகாதோர் வசிக்கும் இடம், புனிதமான இடம், ஜனன, மரண தீட்டுக்கள், நள்ளிரவு, காலை, மாலை என்ற கால நியதியும் இந்த நாம சங்கீர்த்தன ஜபத்திற்க்கு இல்லை. கடுமையான கலிதோஷம் வாசுதேவரின் நாம ஸங்கீர்த்தனத்தால் நீரில் உப்பு கரைவது போலே கரைகிறது.

"ஹரி" என்னும் இரண்டு எழுத்துக்கள் ஒர் எழுத்தாக சொலப்படும் போது நூற்றுக்கணக்கான ஜென்மங்களில் சேற்றுவைக்கப்பட்ட பாவகுவியலை கூட பஞ்சு பொதியை நெருப்பு நிர்மூலமாக்குவது போல பொசுக்கிவிடும் என்று போதாந்திராள் எடுத்துக்காட்டுகிறார். பத்து அஸ்வ மேத யாகம் செய்தவன் கூட மறுபிறவி அடைவான். ஆனால் கிருஷ்ணருக்கு நமஸ்காரம் செய்தவனுக்கு மறுபிறவி இல்லவே இல்லை. கிரஹண காலத்தில் கோடி கோதானம் செய்தல், பிராயகை, காசி, கங்கை முதலிய புண்டணிய ஷேத்திரங்களில் கல்பகோடி காலங்களில் வசித்தல், பல்லாயிரக்கணக்கான வேள்வி செய்தல், மேரு மலையளவு தங்கம் தானம் செய்தல் இவையனைத்தும் " கோவிந்த " சப்தத்திற்க்கு இணையாகா!!! பல்லாயிரக்கணக்கான கொலைகள் செய்த்தல், கடுமையான மதுபானங்கள், கோடிக்கணக்கான ஆசானின் மனைவியை நாடுதல் எண்ணற்ற திருட்டுக்கள் என்ற இவை அனைத்து பாபங்களும் "கோவிந்தா" என்ற நாம சங்கீர்த்தனத்தால் ஒரு நொடியில் அழிக்கப்பட்டு விடுகின்றன.

"நரகே பச்யமானஸ்து" நரகத்தில் வாட்டப்படுபவனுக்கு என்று சொல்லும் போது பூஜை செய்த்தல் என்று சொல்லப்படவில்லை. " கிருஷ்ணருக்கு நமஸ்காரம் " என்று சொன்ன உடனேயே நமஸ்காரம் செய்தல் என்ற செய்கையின் பலன் சென்றடைந்து காப்பாற்றபடுகிறான். ரிக்வேதத்தில் "ஆஸ்ய ஜானந்தோ நாம சித்விவக்தன மஹஸ்தே விஷ்ணோ ஸுமதிம் பஜாமஹே" என்று சொல்லும் பிரஹரணத்தில், ஒரு தடவை உச்சரிக்கப்படும் நாம சங்கீர்த்தனம் தங்கு தடையின்றி ஆத்ம ஸாக்‌ஷாத்காரம் என்ற ஞானத்திற்க்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்ருதி, ஸ்மிருதி, புராணத்தில் எந்த நாமம் ஆத்யாத்மைகம், ஆதிதைவீகம், ஆதிபூத என்ற தாபங்களை தாண்டுவிக்குமோ எல்லாவித பாபங்களை நீங்க செய்யுமோ எல்லா பாபத்திற்க்கும் பிராய்ச்சித்தமாக அமைகிறதோ இதற்கு மேற்பட்ட புண்ணியம் மூவுலகிலும் இல்லை என்று சொல்லப்படுகிறதே அதுவே "ராம" நாமமாகும் என்று கூறப்படுகிறது.

ஸ்கந்த புராணத்தில் வரும் காசி காண்டத்தில் சொல்லப்படுவது போல ராம நாமமே விஸ்வ நாதர் வாக்கினால் வந்து அனைத்து ஜீவராசிகளை முக்தி அடைய செய்கின்றது. ராம நாமம் அசுரர்களை நடுங்க் வைக்கும் என்று வால்மீகி பகவானும் ராமாயணத்தில் பதிவு செய்கிறார். அதனாலே இது தாரக மந்திரம் என்று சொல்லப்படுகிறது. இதற்க்கு கால நேர விதி நியதி என்ற எந்த தடையுமில்லை. எந்த காலத்திலும் ஜெபிக்கலாம். தியாகராஜர் கீர்த்தனையில் குறிப்பிடும் போது " ராம! உன் நாம பலம் யாருக்கு தெரியும்? ஈஸ்வரரை தவிர? " என்பார். பரமேஸ்வரருக்கு மட்டுமே ராம நாமத்தை பற்றி தெரியுமாம்!!!!.....

"கிரக பலமேமி ராம! நின்னு அனுகிரஹபலமுந்தி"---  கிரஹபலம் என்னை என்ன செய்யும் ராம உன்னுடைய அனுகிரஹ பலம் இருக்கும் போது அப்படின்னு தியாக பிரம்மம் பாடினது போல... எல்லா கிரஹ பிரச்சனைகளை ராம நாம பலம் போக்கிவிடும்... ஆதலால் அனைவரும் தினமும் ஒரு குறிப்பிட்ட 5-10 நிமிடமாவது நாம ஜெபம் செய்து புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள். நாம ஜெபத்தின் சிகரம் தொட்ட நாம போதாந்திராள் மற்றும் தியாகபிரம்மம் அதிஷ்டானங்களை உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசித்து அந்த நாம சாம்ராஜ்யத்தில் இணைய ஆசீர்வாதிக்க பிராத்தனை செய்யுங்கள்.

நாம போதாந்திராள் அதிஷ்டானம் கும்பகோணம் மாயவரம் சாலையில் திருவிடைமருதூர் அடுத்து கோவிந்தாபுரம் என்னும் ஊரில் உள்ளது.

தியாகபிரம்மம் அதிஷ்டானம் திருவையாறு தியாகராஜர் கோவிலுக்கு எதிரில் உள்ளே ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம