வியாழன், 19 நவம்பர், 2020

பிண்ணாக்கீசர்

பிண்ணாக்கீசர்

கோபாலா, எனக்கு பசிக்கிறதே! யாராவது உணவு தாருங்களேன், என்று அரற்றினார் பிண்ணாக்கீசர்.இவர் ஒரு அத்திமரப் பொந்தில் வசித்து வந்தார். கார்காத்தார் என்ற குலத்தில் இவர் அவதரித்ததாகச் சொல்கிறார்கள். இவருக்கு தந்தை கிடையாது. கன்னித்தாய் ஒருத்தி இறையருளால் இவரைப் பெற்றெடுத்தாள். அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை. குழந்தையைப் பெற்றெடுத்த அந்தத்தாய் எந்நேரமும் இறை சிந்தனையிலேயே இருப்பாள். கோயில்களுக்குச் சென்று அங்கேயே தங்குவார். பிரசாதம் தான் உணவு. கோயிலுக்கு வருவோர் போவோரும் உணவளிப்பர். இதை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்ததால், பிண்ணாக்கீசருக்கு எவ்வித கெட்ட வழக்கங்களுக்கும் ஆளாக வழியில்லாமல் போனது.சமையல் என்பது முக்கியமான ஒரு விஷயம். பெண்ணோ ஆணோ வீட்டில் சமைக்கும் போது, நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும். நாம் என்ன எண்ணியபடி சமைக்கிறோமோ, அந்த எண்ணங்கள் உணவில் ஊறிப்போகும். நல்லதை எண்ணியிருந்தால், தெய்வ ஸ்லோகங்களைச் சொல்லியபடியோ, கேட்ட படியோ சமையல் செய்திருந்தால் அதை சாப்பிடுவோரின் உடல்நலன் மட்டுமின்றி உள்ளத்தின் நலனும் வளரும். டாக்டர் சொன்னபடி சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வோருக்கு கொழுப்பு, சர்க்கரை, உப்பு முதலிய சத்துக்கள் ரத்தத்தில் முன்பை விட அதிகரிக்கும். காரணம் என்ன தெரியுமா? எண்ணங்களின் வண்ணம் தான்! கெட்ட எண்ணங்கள், பிறரை வஞ்சிக்கும் குணம், பணத்தைப் பற்றிய நினைப்பு, அதைக் காப்பாற்றுதல் அல்லது பெருக்குதல் போன்ற சிந்தனைகளுடன் சமையல் செய்தால் பேராசையும், அந்த ஆசையை எட்டுவதற்கு என்னென்ன பாதகங்கள் செய்யலாம் என்ற எண்ணமே வளரும்.இத்தகைய எண்ணங்களுக்கு கோயில் பிரசாதத்தில் இடமில்லை. சாப்பிடும் முன் அந்த உணவை கடவுளுக்கு சமர்ப்பித்து விட்டு சாப்பிடுபவர்கள் நல்ல குணம், செழிப்புடன் திகழ்வார்கள். இதே போல், பிண்ணாக்கீசர் தன் தாய் கொடுத்த கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு உயிர் வளர்த்தார். அவர் ருசிக்கு சாப்பிடுவதில்லை. பசிக்கு சாப்பிடுவார்.

இப்படி நற்சிந்தனைகளுடன் வளர்ந்த அவர், தன் தாயின் காலத்திற்குப் பிறகு கண்ண பரமாத்மாவின் நிரந்தர பக்தரானார். கண்ணா, கண்ணா, கண்ணா இதைத் தவிர அவர் வாயில் வேறு எதுவும் வராது. பசி வந்தால் கோபாலா, எனக்கு உணவு கொடேன், எனக் கதறுவார்.அந்நேரத்தில் யாராவது ஒருவர் பால், பழம் கொண்டு வந்து கொடுப்பார். ஒரு பழம், கொஞ்சம் பால்...அவ்வளவு தான் சாப்பிடுவார். பசி தீர்ந்து விடும். மீண்டும் மரப்பொந்தில் போய் அமர்ந்து, இறைவனைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார். இப்படியே காலம் கடந்த வேளையில், ஒருநாள் பாம்பாட்டி சித்தர் அவர் முன்பு தோன்றினார். சீடனே, பொந்தில் இருந்து வெளியே வா, என்றார். கண்ணால் பார்த்து நயன தீட்சை அளித்தார். கையால் தொட்டு ஸ்பரிச தீட்சை கொடுத்தார். கால்களால் அவருக்கு திருவடி தீட்சை கொடுத்தார். உலக நன்மையே உன் குறிக்கோளாக இருக்கட்டும் என்று உபதேசம் செய்து விட்டு மறைந்து விட்டார். குருவின் போதனையை நிறைவேற்ற கண்ணனை நினைத்து கடும் தவத்தில் ஆழ்ந்தார் பிண்ணாக்கீசர். இதனால் அவருக்கு அஷ்டமாசித்திகளும் கைகூடின. ஒருமுறை சிவ தியானத்திலும் அவர் ஆழ்ந்தார். தன் தவத்தின் முடிவில் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்ற தத்துவத்தை அறிந்தார். நோயற்ற மக்களைக் குணப்படுத்த முடிவு செய்தார். அவரைப் பார்த்தாலே சிலருக்கு நோய்கள் பறந்தன. சிலரை அவர் தொட்டவுடன் நோய் குணமானது. சிலருக்கு மண்ணையே மருந்தாக அவர் கொடுத்தார். அவர் கொடுத்த மண்ணை வாயில் போட்டதும் சர்க்கரை போல நோயாளிகளுக்கு இனித்தது. மண்ணைத் தின்ற மாத்திரத்தில் நோய்களும் விலகின. இதனால், அவரைத் தேடி ஆயிரக் கணக்கானோர் வர ஆரம்பித்து விட்டனர். கேரளாவில் உள்ள நாங்கணாச் சேரி என்ற கிராமத்திற்கு அவர் சென்றார்.

தகரத்தைப் பொன்னாக்கும் ரகசியம், உடலை எத்தனை வயதானாலும் இளமையுடன் வைத்திருக்கும் காயகல்ப ரகசியம் ஆகியவற்றைப் படித்தார். அந்தக்கலையைப் படிப்பதற்காக பல இளைஞர்கள் அவரைத் தேடி வந்தனர். தங்களைச் சீடர்களாக ஏற்று, அந்த ரகசியங்களைக் கற்றுத் தருமாறு கேட்டனர். அந்த இளைஞர்கள் இந்த வித்தைகளைக் கற்று சுயநலத்துடனும், உலகை மிரட்டும் நோக்குடனும் செயல்படுவார்கள் என்பதை ஞானதிருஷ்டியால் உணர்ந்த சித்தர், அதற்கு மறுத்து விட்டார். மேலும், தனக்கு சீடர்களே வேண்டாம் எனச் சொல்லி விட்டார். பின்னர், ஒரு மரப்பொந்தில் தங்கிக் கொண்டார் சித்தர். அங்கிருந்தபடியே மக்களுக்கு வைத்தியம் செய்ய ஆரம்பித்தார். இந்த உடலில் கட்டப் பட்டிருக்கும் கோவணம் கூட இறைவனால் தரப்பட்ட இரவல் தான். உன் உயிர் பிரிந்து உன்னை எரிக்கவோ, புதைக்கவோ செய்தால் இந்த  கோவணம் உன்னோடு வருமா? கோவணமும் இரவல் கொண்ட தூலம் இது என்று உடலைப் பற்றி அவர் பாட்டுப் பாடி மக்களை உலகப்பற்றில் இருந்து விடுவிக்க முயற்சியெடுத்தார். அவற்றைப் பாடல்களாக வடித்தார். ஒருநாள் அவர் சிவபூஜையில் ஆழ்ந்தார். அப்படியே சமாதி நிலைக்குச் சென்றவர், அந்த மரப்பொந்தை விட்டு வெளியே வரவில்லை. ஒரு காலத்தில் அந்தப் பொந்தும் அடைபட்டுப் போனது. சித்தர் சமாதியாகி விட்டார் என்பதை அறிந்த மக்கள், அந்த மரத்தையே அவரது சமாதியாகக் கருதி வழிபடத் துவங்கினர். 18 சித்தர்கள் தொடரை படித்த நாம், அவர்களை தினமும் மனதார வணங்கி, தங்கத்தின் மீதான ஆசையை ஒழிக்க அருள் புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்.


பொடி வகைகள்


பொடி  வைகைகள்

1.  சாம்பார் பொடி

அரை கிலோ தனியா, கால் கிலோ மிளகாய் ,  கால் கிலோ துவரம் பருப்பு,  கால் கிலோ  கடலை பருப்பு, 50 கிராம் சீரகம்,   50 கிராம் மிளகு, 50 கிராம் வெந்தயம்,  20 கிராம் துண்டுகளாக்கிய பெருங்காயம்,  25 கிராம்  மஞ்சள் பொடி,  50 கிராம் பச்சை அரிசி, ஒரு கொத்து கருவேப்பிலை எல்லாம் ஒவ்வொன்றாக  கொஞ்சம் கை  பொருக்கும் சூடு வரை வறுத்து எடுத்து நன்றாக ஆற வைக்கவும், ஆறியதும் இரண்டு ஈடாக மிக்ஸியில் போட்டு ரொம்பவும் நைஸாக அரைக்கவும் அல்லது மிஷினில் அரைத்து,  ஆற வைத்து Air tight container ல் வைக்கவும்

2.  ரசப்பொடி

ஒரு கப் துவரம் பருப்பு,  ஒரு கப் தனியா,  அரை கப் மிளகு,  அரை கப் சீரகம், 15-20 மிளகாய்,  10 கிராம்  பெருங்காயம், ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி,  10-15 கருவேப்பிலை
எல்லாம் ஒவ்வொன்றாக வாசனை  வரும் வரை வறுத்து  ( தனியா வறுக்கும் போது பெருங்காயம், மஞ்சள் தூள்,  கருவேப்பிலை போட்டு கொள்ளளாம் ) இறக்கி நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு கற கறவென்று  பொடித்து ஆறியதும்  Air tight container ல் எடுத்து வைக்கவும்

3.  கறி பொடி

ஒரு கப் தனியா, ஒரு கப் கடலை பருப்பு, ஒரு கப் உளுத்தம் பருப்பு, 15-20 மிளகாய்,  எல்லாம் தனி தனியாக எண்ணை ஊற்றாமல் ( dry fry ) சிவக்க வறுத்து எடுத்து ஆற வைத்து கொள்ளவும்

சின்ன நெல்லிகாய் அளவு  பெருங்காய கட்டியை வானலியில் போட்டு பிரட்டினால் சூடானதும் புஸ் என்று உப்பி வரும் அதையும்  எடுத்து ஆற வைக்கவும்

எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு கற கறவென்று பொடித்து நன்றாக ஆறியவுடன் Air tight container ல் எடுத்து வைக்கவும்

4.  இட்லி மிளகாய் பொடி

வானலியில் ஒரு கப் உளுத்தம் பருப்பு ,  அரை கப் கடலை பருப்பு ,  ஒரு பெரிய கட்டி பெருங்காயம் ,  100 கிராம் மிளகாய் ,   அரை ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி நன்றாக சிவக்க வறுத்து  ஆற வைக்கம்

அதே வானலியில் கால் கப் கருப்பு எள் போட்டு பட படவென்று பொரித்து இறக்கி ஆறியதும்  மிக்ஸியில் போட்டு அதனுடன்  பருப்புகளையும் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சம் கற கறவென்று அரைத்து ஒரே ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு ஒரு சுத்து சுத்தி எடுத்து ஆறியதும் ஏர் டைட் கண்டெய்னரில் வைக்கவும்

5.  பருப்பு பொடி

ஒரு கப் துவரம் பருப்பு,  அரை கப் கடலை பருப்பு,  பாசி பருப்பு,  பொட்டு கடலை,  கால் கப் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் மிளகு, கால் ஸ்பூன் சீரகம் , 8-10 வர மிளகாய், 2 சின்ன கட்டி பெருங்காயம்  10 கருவேப்பிலை எடுத்து அடுப்பில் வானலி வைத்து மேல் சொன்னதை எல்லாம்   தனி தனியாக சிவக்க வறுத்து எடுத்து ஆறியதும்  தேவையான உப்பு சேர்த்து  மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்தால் சுவையான கம கமவென்ற பருப்பு பொடி ரெடி

6.  கருவேப்பிலை பொடி

வானலியில் ஒரு 4 ஸ்பூன்  உளுத்தம் பருப்பு ,   2 ஸ்பூன் கடலை பருப்பு ,  ஒரு சின்ன கட்டி யெருங்காயம் ,  4 மிளகாய் ,   1 ஸ்பூன் மிளகு ,  கால்  ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி நன்றாக சிவக்க வறுத்து  ஆற வைத்து மிக்ஸியில் போடவும்

அதே வானலியில் 2 கைபிடி அலம்பி  சுத்தம் செய்து ஈரப்பதம் இல்லாத கருவேப்பிலை ,  நெல்லிக்காய் அளவு புளியை சிறு சிறு துண்டுகளாக போட்டு , கருவேப்பிலையை அமுக்கினால் உடையும் அளவு
வறுத்து  ஆறியதும்  அதையும் மிக்ஸியில் போட்டு  தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சம் கற கறவென்று அரைத்து  ஆறியதும் ஏர் டைட் கண்டெய்னரில் வைக்கவும்

7. எள்ளு பொடி

வானலியில் ஒரு கை பிடி வெள்ளை எள்ளு, அரை கை பிடி உளுத்தம் பருப்பு 10 மிளகாப், போட்டு சிவக்க வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு கோர்ஸாக அரைத்தால் மணக்கும் எள்ளு பொடி ரெடி

8.  அங்காய பொடி

 அடுப்பை மீடியம் பிளேமில்  வைத்து 4-5 ஸ்பூன் வேப்பம் பூ, 10-15 சுண்டைக்காய், 3-4 ஸ்பூன் மணதக்காளி வத்தல் ஒவ்வொன்றாக போட்டு சிவக்க வறுத்து தனியாக வைக்கவும்

அதே வானலியில் ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு, 2 மிளகாய், ஒரு சின்ன துண்டு சுக்கு, சின்ன கட்டி பெருங்காயம், அரை ஸ்பூன் சீரகம், 7-8. கருவேப்பிலை, தேவையான உப்பு எல்லாம் ஒவ்வொன்றாக போட்டு வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் வேப்பம் பூ, சுண்டைக்காய், மணதக்காளி எல்லாம் போட்டு நைஸாக அரைத்தால்  கம கமவென்ற மருத்துவ குணம் கொண்ட அங்காய பொடி ரெடி

9.  தேங்காய் பொடி

வானலியில் 2 ஸ்பூன் எண்ணை ஊற்றி,  ஒரு கப் உளுத்தம் பருப்பு ,   கால்  துவரம் பருப்பு, 10 - 12  வர மிளகாய் போட்டு சிவக்க வறுத்து அதில் ஒரு நெல்லிக்காய் சைஸ் புளியை பிச்சு போட்டு, ஒரு ஸ்பூன் பெருங்காய பொடி, தேவையான உப்பு பபோட்டு நன்றாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைக்கவும்

ஒரு முழு முத்திய  தேங்காயை உடைத்து சன்னமாக துறுவி அதை வானலியில் போட்டு நன்றாக சிவக்க வறுத்து ஆறிதும் அதையும் மக்ஸியில் போட்டு கொஞ்சம் விட்டு விட்டு அரைத்து மூடி திறந்து நன்றாக கிளறி மறுபடியும் மூடி 2-3 சுத்து சுத்தி இறக்கி திறந்தால் மணக்க மணக்க தேங்காய் பொடி ரெடி

10.  தனியா பொடி

வானலியில் ஒரு கப் தனியா போட்டு வாசனை வரும் வறுத்து ஒரு அகலமான தட்டில் போடவும்

ஒரு கப்  உளுத்தம் பருப்பு,  அரை கப் கடலை பருப்பு, 8-10 வரமிளகாய் போட்டு சிவக்க வறுத்து தனியாவுடன் போடவும்

வானலியில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு ஒரு கட்டி பெருங்காயம், அரை ஸ்பூன் மிளகு,  கால் ஸ்பூன் சீரகம், நெல்லிக்காய் அளவு புளியை பிச்சு போட்டு , தேவையான கல் உப்பு போட்டு நன்றாக வறுத்து அதையும் தனியாவுடன் போட்டு நன்றாக ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு கற கறவென்று அரைத்தால் தனியா பொடி ரெடி

11.  வேப்பல கட்டி

தளிர் நார்த்த இலை ஒரு கைபிடி  ( இலையின் நடுவில் இருக்கும் காம்பை எடுத்து விட வேண்டும் ,  இலையை நீள வாக்கில் இரண்டாக மடித்து வெத்தலை காம்பு கிழிப்பது போல் கிழித்தால் காம்பு வந்து விடும்  ) ,  தளிர் எலுமிச்சம் இலை ஒரு கைபிடி , கருவேப்பிலை ஒரு கைபிடி ( கிராமங்களில் வீட்டு தோட்டத்திலேயே கிடைக்கும் = நகரங்களில்  வீதியில் வரும் கீரை விற்பவர்களிடம் சொல்லி வைத்து வாங்லாம்  ) எல்லா இலைகளையும் நன்றாக அலம்பி சுத்தம் செய்து ஒரு யெரிய தாம்பாளத்தில் பரப்பி   அரை மணி நேரம் வெய்யிலில் வைத்து ஈரப்பதம் இல்லாமல் எடுத்து அப்படியே மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து தனியே வைக்கவும்  ( அரைக்கும் போது 10-15 செகன்டுக்கு ஒரு முறை மிக்ஸி ஆஃப் செய்து மூடி திறந்து கிளறி விட்டு ,  கிளறி விட்டு அரைத்ததால் சீக்கிரம் நைஸ் பொடியாக வரும்  )

அதே மிக்ஸியில் 10-12 மிளகாய் ,  ஒரு ஸ்பூன் ஓமம் , ஒரு ஸ்பூன் பெருங்காய தூள் ,  தேவையான கல்உப்பு அப்படியே போட்டு கொற கொறவென்று அரைத்து அதனுடன் தனியே அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக அரைத்து எடுத்தால்  சூப்பரான வேப்பல  கட்டி ரெடி

12.  ஊறுகாய் பொடி

வானலியில் 2 ஸ்பூன் எண்ணை ஊற்றி ,
ஒரு ஸ்பூன் கடுகு ,  கால்  ஸ்பூன் வெந்தயம்,  10-12 மிளகாய் ,  2 சின்ன கட்டி பெருங்காயம் போட்டு வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்

13.  வெத்த குழம்பு பொடி

வானலியில் ஒரு கப் துவரம் பருப்பு,  கால் கப் கடலை பருப்பு, கால் கப்  தனியா, 2 ஸ்பூன் வெந்தயம், 2ஸ்பூன் கடுகு ,  அரை ஸ்பூன் மிளகு, சீரகம், 7-8 மிளகாய் வத்தல் எல்லாம் போட்டு சற்று சூடாகும் வரை பிரட்டி ஆறியதும் கற கறவென்று அரைத்து ஏர் டைட் கன்டெய்னரில் வைக்கவும்

 

பிராமணர்கள்

அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.  பிராமணர்களை  மதிக்கும் அனைவருமே கூட
படிக்கலாம் துவேஷம் இன்றி.
++++++++++++++++++++++++++
பிராமணர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது யார்?

பாரத தேசத்தில் பல குலங்கள் உள்ளன. பல அமைப்புகள் உள்ளன. இவர்களுள் பிராமணர்கள் யார்? இவர்களின் தோற்றம் எப்போது நிகழ்ந்தது? பிராமணர்களால் உலகிற்கு என்ன நன்மை? இவை பற்றி சில விஷயங்களை நாம் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

இதைப் பற்றி கூறும் முன்பு சில கேள்விகளை கேட்டுக் கொள்வோம். இவற்றுக்கான பதில்கள் அனைவம் அறிந்ததே!.

முதல் கேள்வி – உலகின் முதல் புத்தகம் எது? பைபிளா? இல்லை. ராமாயணமா? இல்லை. குரானா? இல்லை. மகாபாரதமா? இல்லை. மகாபாரதம் முதல் புத்தகம் இல்லை என்பதால் பகவத் கீதையும் முதல் புத்தகம் இல்லை.

பிரபஞ்சத்தில் முதன் முதல் மனிதன் எப்போது தோன்றினானோ அப்போதே ஒரு நூல் தோன்றியது. அதன் பெயர் வேதம். அந்தப் புத்தகத்தின் பெயர் ருக் வேதம். மீதி நூல்களுக்கு நம்மால் உடனே கால நிர்ணயத்தைக் கூறிவிட முடியும். பைபிள் 2013 ஆண்டுகள் பழமையானது. நியூ டெஸ்டமெண்ட். ஓல்ட் டெஸ்டமெண்ட் மோசஸ் ஆப்ரஹம் காலத்தைச் சேர்ந்தது. குரான் 1400 ஆண்டுகள் பழமையானது. பகவத்கீதை கிமு 3000 ஆண்டுகள்.

ருக் வேதத்தின் காலம் என்ன? யாராலும் சரியான பதில் அளிக்க முடியாது. வேதம் எப்போது பிறந்தது என்ற விஷயம் யாருக்கும் தெரியாது. தெரிந்து கொள்வதற்காக சில முயற்சிகள் நடந்தன. ஆனாலும் கண்டறிய முடியவில்லை.

வால்மீகி ராமாயணத்தில் ஒரு செய்தி உள்ளது. ஸ்ரீராமர் வேதத்தை வசிஷ்டரிடம் பயின்றார். வேதம் முதன்மையானதா? ராமாயணம் முதன்மையானதா? வேதத்தின் காலம்தான் புராதனமானது. ஸ்ரீகிருஷ்ணர் சாந்தீபனி என்ற ருஷியின் ஆசிரமத்தில் வேத அத்யயனம் செய்தார் என்று பாகவதத்தில் உள்ளது. அதனால் வேதத்தின் காலம் ஸ்ரீகிருஷ்ணருக்கும் முற்பட்டது. அதனால் உலகில் முதல் நூல் எது என்றால் அது ருக் வேதமே!

அடுத்த கேள்வி – வேதங்கள் எத்தனை? மொத்தம் நான்கு. ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு. வேதங்களில் உள்ள மொத்த மந்திரங்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இவற்றுக்கு த்ரயி என்றொரு பெயர் உண்டு. த்ரயி என்றால் மூன்று என்று பொருள். வேதங்கள் மொத்தம் நான்கல்லவா? த்ரயி என்று எவ்வாறு பெயர் வந்தது? த்ரயி என்பதற்கு வேறொரு பொருளும் உண்டு.

ருக் வேதம் செய்யுள் வடிவில் உள்ளது. யஜுர் வேதம் உரைநடை வடிவம் கொண்டது. சாமவேதம் பாடல் வடிவம் கொண்டது. அதனால் செய்யுள் உரைநடை கானம் என்று மூன்று விதமாக இருப்பதால் இவற்றுக்கு த்ரயி என்று பெயரிட்டார்கள் என்பது ஒரு விளக்கம். இதற்கு பல விளக்கங்கள் உள்ளன.

அடுத்த கேள்வி – பிராமண குலம் எதற்காக ஏற்பட்டது? வேதங்களை பாதுகாப்பதற்காகப் பிறந்தது. சோமகாசுரன் என்பவன் வேதங்களை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான். அப்போது ஸ்ரீமகாவிஷ்ணு வேதங்களை இரட்சித்தார். இது மத்ஸ்யாவதாரத்தில் உள்ள ஒரு புராணக்கதை. இக்கதையின் பொருள் என்ன? வேதங்களுக்கு ஆபத்து ஏற்படும்போது சமுதாயத்தில் துயரம் நிலவும் என்பதால் வேத ரட்சணைக்காக பகவான் மீண்டும் மீண்டும் அவதாரம் செய்கிறான் என்பது தசாவதாரங்களின் பிரதானமான காரணம்.

பிராமண சமூகம் முதலில் எதற்காகத் தோன்றியது? வேதங்களை இரட்சித்து போற்றி பாதுகாத்து பரப்புவதற்காக. இது எந்த சந்தேகமுமற்ற பதில். இதில் எந்த ஒரு சமரசத்திற்கும் இடமில்லை. நம் முன்னோர்கள் இந்த வேலையைத்தான் செய்து வந்தார்கள்.

புருஷ சூக்தத்தில் ஒரு மந்திரம் உள்ளது.
“ப்ராஹ்மணோ அஸ்ய முகமாஸீத்
பாஹூ ராஜன்ய: க்ருத: I
ஊரு ததஸ்ய யத் வைஸ்ய:
பத்ப்யாம் சூத்ரோ அஜாயத: II
சந்த்ரமா மனசோ ஜாத:
சக்ஷோ சூர்யா அஜாயத II” – இது ஒரு குறியீட்டு விளக்கம்.
அதாவது அலங்காரம். யாருடைய அலங்காரம்? சமுதாய புருஷனை ஒரு மனிதனாக உருவகப்படுத்தியுள்ளார்கள்.

நம் உடலில் பல உறுப்புகள் உள்ளன. அவற்றுள் முகம் என்பது அறிவின் இடம். முழு நரம்பு மண்டலமும் தலையில் உள்ளது. காலில் முள் குத்தினால் செய்தி தலைக்குச் செல்கிறது. அதனால் அறிவுக் கூர்மை உடையவர்களை பிராமணர்கள் என்று அழைத்தார்கள்.

ஒரு கம்பெனியையோ அமைப்பையோ எடுத்துக் கொண்டால் அதில் நான்கு பிரிவுகள் இருக்கும். திட்டமிடல் பாதுகாப்பு பொருளாதாரம் தயாரிப்பு. இவையே பிராமணர் சத்திரியர் வைசியர் மற்றும் சூத்திரர். இவ்விதம் முழு சமுதாயத்தையும் நம் முன்னோர் திட்டமிட்டு வகுத்தார்கள். ஒரு Symmetrical சமச்சீரான அமைப்பை ஏற்படுத்தினார்கள். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது அது பாதுகாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது சீரழிந்து விடும். பொருளைத் தயாரிக்க பொறியியல் திறமை வேண்டும். மூளை வேலை செய்ய வேண்டும். பின்னர் அதனை சீராக விநியோகிக்க வேண்டும். இந்த கண்ணோட்டத்தில் நம் மூதாதையர் பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்று நான்கு சமூகங்களை புராதன காலத்தில் ஏற்படுத்தினார்கள். இந்த மந்திரத்திற்கு இதுதான் பொருள்.

இவர்களில் யார் உயர்ந்தவர்கள்? கால்கள்தான் உடலைத் தாங்குகின்றன. அவை சரியாக வேலை செய்யாவிட்டால் சரீரம் சரியாக உபயோகமாகது. அதனால் கால்களின் ஸ்தானத்தில் சிலர் உள்ளார்கள். தொடைகளின் ஸ்தானத்தில் சிலர் உள்ளார்கள். புஜங்களின் ஸ்தானத்தில் சிலர் உள்ளார்கள். மொத்த உடலுக்கும் ஸ்கீமிங் மற்றும் பிளானிங் தலையில் உள்ளது. அதனால் மூளையின் ஸ்தானத்தில் பிராமணர்கள் உள்ளார்கள். இது புராதன காலத்தில் ஏற்பட்ட ஒரு சிஸ்டம்.

இந்த சிஸ்டம் பாரத தேசத்தில் மட்டுமல்ல. உலகனைத்திலும் உள்ளது. கிரேக்க தேசத்தில் கூட இவ்விதமே உள்ளது. பழைய கிரேக்க நூல்களில்… இலியட் போன்றவற்றில்…. சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்றவர்களின் நூல்களில் இதே போன்ற வகைப்படுகளே கூறப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. நாகரீகம் வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இத்தகைய திட்டமிடல், சமச்சீரான வகைப்பாடு காணப்படும்.

மந்திரம் படிக்கும் பொது இறுதியில் ஆசீர்வசன மந்திரம் ஒன்று வரும்.
“சர்வே ஜனா: சுகினோ பவந்து
ஸர்வே ஸந்து நிராமயா I
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மாகச்சித் துக்க: பாக்பவேத் II” – என்று கூறி இன்னொரு மந்திரமும் கூறுவோம்.

“கோ ப்ராஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம்
லோகா சமஸ்தா சுகினோ பவந்து II”
– என்ற இந்த மந்திரத்தில் பசு மாடுகளும் பிராமணர்களும் சுகமாக இருக்கவேண்டும் என்று வருகிறது.

ஆயின் பிற விலங்குகள் சுகமாக இருக்கத் தேவையில்லையா? பிராமணர்கள் மட்டும் சுகமாக இருக்க வேண்டுமா? பிற சமூகத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டாமா? என்று ஒரு வினா கிளம்புகிறது. இதற்கு பதில் என்னவென்றால் பசுவும் பிராமணனும் பாதுகாப்பற்ற சமூகமாக தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்ள இயலாதவர்களாக உள்ளார்கள். புலியும் சிங்கமும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளக் கூடியவை. பசு தன்னைத் தானே காத்துக் கொள்ள இயலாத ஸாதுப் பிராணி. எனவே பசுக்களைப் பாதுகாக்க வேண்டும். பசு இனத்தைக் காப்பாற்றினால் அனைவருக்கும் பால் கிடைக்கும்.

பிராமணன் என்பவன் வேதங்களை ரட்சித்து பாதுகாக்கப் பிறந்தவன். பிராமணன் தன்னைத்தானே காத்துக்கொள்ள வலிமையற்றவன் என்பதால் மீதி உள்ள சமுதாயம் அனைத்தும் சேர்ந்து அவனை பாதுகாக்கவேண்டும். பாலும் வேதமும் அனைவருக்கும் பயன்படுவது. பிராமணன் தர்மப் பிரச்சாரம் செய்பவன். அதனால் அவனை சரியாக பாதுகாக்கா விட்டால் சமுதாயத்தில் தர்மப் பிரசாரம் நடைபெறாமல் சமுதாயம் சமச்சீர் நிலையை இழந்து விடும். வேத பிரச்சாரத்திற்காக பிராமணன் பாதுகாக்கப்படவேண்டும்.

சிலரின் ‘சர்நேம்’ எனப்படும் வீட்டுப் பாரம்பரிய பெயர்களைப் பார்த்தால் அதன் மூலம் சில விவரங்கள் புரியும். வட இந்தியாவில் சிலர் ‘த்விவேதி’ என்ற சர்நேம் கொண்டிருப்பார்கள். அவர்கள் இரண்டு வேதங்களில் சிறந்து விளங்குபவர்கள். ‘த்ரிவேதி’ மூன்று வேதங்களை அறிந்த குடும்பங்கள். ‘சதுர்வேதி’ நான்கு வேதங்களில் சிறந்த குடும்பங்கள். ‘உபத்ரஷ்டா’ என்ற குடும்பத்தார் யாகங்களை நடத்துபவர்கள். இவ்விதம் வீட்டுப் பெயர்களைக் கொண்டே இவர்களின் பூர்வீகர்கள் வேதங்களை எவ்விதம் காத்து வந்தார்கள் என்பதை அறியமுடிகிறது. ‘வேதம்’ என்னும் சர்நேம் கொண்டவர்களும் உள்ளார்கள்.

இவ்விதம் பல ஆயிரம் ஆண்டுகள் சிறப்பாக வழிநடத்தப்பட்ட ஒரு சமுதாயம் பாரத தேசத்திலிருந்தது. மேற்கத்திய நாடுகளின் படையெடுப்புக்குப் பிறகு நம் சமுதாயம் முழுவதும் பிரஷ்டமாகிவிட்டது… வீழ்ச்சியடைந்து விட்டது.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு சிறிய உதாரணம் பார்க்கலாம். இந்த சம்பவம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இந்தியாவிற்கு வந்த கிழக்கிந்திய கம்பெனியில் ஒரு கலெக்டர் இருந்தார். இது மதராஸ் அல்லது மதுரையில் நிகழ்ந்தது. அந்த கலெக்டர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு தாசில்தார் எதிர்ப்பட்டார். அவர் முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். கலெக்டரின் அருகில் ஒரு குமாஸ்தா இருந்தார். கோப்புகளைச் சுமந்துகொண்டு கலெக்டரின் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார். முதலியாரும் ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் பணிபுரிபவர். கலெக்டர் முதலியாரைப் பார்த்ததும், “ஹௌ டூ யு டூ, மிஸ்டர் முதலியார்?” என்று அவரோடு கைகுலுக்கினார். “ஐ ஆம் ஓகே சார்!” என்று கூறி முதலியார் கலெக்டருக்கு கைகுலுக்கி சல்யூட் அடித்தார். அதன்பின் முதலியார் செய்த செயலைப் பார்த்து கலெக்டருக்கு மூளை கலங்கியது கலெக்டரின் அருகிலிருந்த குமாஸ்தாவைக் கண்டதும் முதலியார் சாலையிலேயே சாஷ்டாங்கமாக விழுந்து பாத நமஸ்காரம் செய்தார்.

கலெக்டர் வினவினார், “மிஸ்டர் முதலியார்! நான் உன்னுடைய பாஸ். இவர் என்னுடைய கிளர்க். ஆனால் நீ எனக்கு கைகுலுக்கி சல்யூட் அடித்தாய். ஆனால் இவர் முன்னால் மண்டியிட்டாய். ஏன்?” என்று கேட்டார். அதற்கு அந்த முதலியார் கூறிய பதில் அந்த ஆங்கிலேயரை யோசிக்க வைத்தது.

“சார்! நாங்கள் இப்போது ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் பணியாளர்களாக சேர்ந்துள்ளோம். வயிற்றுப் பிழைப்புக்காக உங்களிடம் வேலை செய்கிறோம். நீங்கள் எங்கள் பாஸ். ஆனால் இந்த கிளார்க் எங்கள் குடும்பத்தின் பாரம்பரிய குரு. இவர் ஒரு பிராமணர். இவர்களின் மூதாதையர் எல்லோரும் எங்கள் மூதாதையர்களுக்கு சம்பிரதாயமாக வரும் குரு பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாதங்களில் நாங்கள் விழுந்து வணங்குவது எங்களின் சம்பிரதாயம். நீங்கள் வெறும் பாஸ் மட்டுமே. அதனால் ஷேக் ஹேண்ட் கொடுத்தேன்.இது எங்கள் பாரதிய கலாச்சாரம்” என்றார்.

உடனுக்குடன் அந்த கலெக்டர் இந்த சம்பவத்தைப் பற்றி லார்டு மேக்காலேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். “பிராமண சமூகம் பாரத தேசத்தில் மதிக்கப்படும் வரையில் நாம் இந்தியாவில் நாம் அரசாட்சியை நிறுவ முடியாது. நம் வேர் இங்கு தரையைத் தாண்டி கீழே பாயாது. பிராமணர்கள் பிற சமூகத்தால் மதிக்கப்பட்டால் நம்மால் இந்துத்துவத்தை இந்தியாவிலிருந்து விரட்ட இயலாது” என்று எழுதினார்.

இந்தக் கடிதம் லண்டனிலிருந்த மேக்காலேவுக்கு பிப்ரவரி 2 , 1835 அன்று கிடைத்தது. உடனுக்குடன் பதில் வந்தது. “இந்திய சமுதாயத்தை அழிப்பதற்கு வழி தேடுங்கள்! பாரதிய கலாச்சாரத்தையும் ஹிந்துக்களின் வாழ்க்கை வழி விதங்களையும் எவ்வாறு அழிப்பது என்று யோசியுங்கள்! அவசரமாக முதலில் பிராமண வகுப்பை இந்தியாவிலிருந்து அழித்து ஒழிக்க வேண்டும்” என்ற பதில் பிரிட்டனிலிருந்து வந்தது.

அதன் பின் அவர்கள் தங்களுக்குத் தெரிந்த விதத்தில் தமிழ்நாட்டில் பிராமண இனத்தை அழிக்கத் தொடங்கினர். அது இந்தியாவின் பிற இடங்களுக்கும் தொடர்ந்து. இதுவே பிராமண இனத்தின் அழிவிற்கு வித்திட்ட நிகழ்ச்சி!

தற்போது நாம் எல்லாம் ஏதோ கொஞ்சம் பிராமணர்களாக வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். நம்மில் பலருக்கு சாப்பாட்டுக்கு குறையில்லை.

ஆனால் பிராமணர்கள் அனைவரும் அவ்வாறு அல்ல. பிறரிடம் கையேந்தும் நிலையில் பலர் உள்ளனர். மிக மிக ஏழ்மையில் வாடுகிறார்கள். பிராமணன் என்றால் சமையல்காரன் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அது ஒரு கௌரவமான வேலைதான்… உணவளிக்கும் பணி.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் முங்கொண்டா என்றொரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிராமணக் குடும்பங்கள் நிரம்பியிருந்தன. அனைவரும் வேத பண்டிதர்கள். இன்று அங்கு சென்று பார்த்தால் அவர்களைக் காண முடியவில்லை. என்ன ஆனார்கள்? வேறு ஊர்களுக்குப் பிழைப்பு தேடி சென்று விட்டார்கள். பறவைகளைப் போல் கூட்டமாக இடம் பெயர்ந்து விட்டார்கள். எங்கே போனார்கள்? வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள்.

இன்று அனைத்து வெளிநாடுகளிலும் பிராமணர்கள் அதிகளவில் காணப்படுகிறார்கள். நியூஜெர்சியில் ஒரு மில்லியன் பிராமணர்கள் உள்ளார்கள். ஒருவரல்ல… இருவரல்ல! இதனை ‘ப்ரெயின் ட்ரெயின்’ என்பார்கள்.

நம் மேதமைச் செல்வங்கள் எல்லாம் இந்தியாவை விட்டு கிளம்பிச் சென்றுவிட்டன.

நம் தேசத்தை ஊழல் செய்பவர்களிடம் ஒப்படைத்து விட்டோம். இதுதான் நம் நாடு தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனை.

எல்லா புத்திசாலி பிள்ளைகளும் பாரத தேசத்தை விட்டு சென்றுவிட்டனர். அவர்கள் ஒரு டாலரில் உணவு உண்டு இன்னொரு டாலரை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். அதனைக் கொண்டு இந்தியாவில் உள்ள பெற்றோர் உயிர் வாழ்கிறார்கள். இன்று பிராமணர்களிடம் உடுத்திக்கொள்ள இரண்டாவது உடை இல்லை. நீங்கள் கோதாவரி மாவட்டம் சென்று கோனசீமா எனப்படும் இடத்தைப் பார்த்தால் அத்தகைய ஏழ்மை நிலையில் பிராமணர்கள் வசிப்பதைக் காண முடியும். இது உண்மை. இதனை யாரும் மறுக்க முடியாது.

இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது? இது யோசிக்க வேண்டிய விஷயம். வரலாறு தொடங்கிய நாள் முதல் பாரத தேசத்தைப் பாதுகாத்து வந்த பிராமணர்கள் இன்று அவல நிலைக்கு ஆளாகிவிட்டார்கள்.

சத்ரபதி சிவாஜியின் குரு சமர்த்த ராமதாச சுவாமி. ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் குரு மகா மந்திரி திம்மரசு. இவர் ராயலசீமாவில் குத்தி என்ற ஊரைச் சேர்ந்தவர். அவருடைய புத்தி கூர்மையால் முழுமையான பேரரசாக விஜயநகர சாம்ராஜ்யம் எழுந்து வளர்ந்தது.

வெளிநாட்டில் ஒரு சமூகம் உள்ளது. அவர்கள் ஜூஸ். யூதர்கள். அவர்கள் அறிவுக்கூர்மை மிகுந்தவர்கள். கடின உழைப்பாளிகள். இவர்களை ஹிட்லர் என்ன செய்தான்? 60 லட்சம் யூதர்களை ஒரே நாளில் கொன்று குவித்தான். அவர்கள் மேல் அத்தனை வெறுப்பு அவனுக்கு. அவர்கள் செய்த தவறுதான் என்ன? அவர்கள் மேதமை வாய்ந்தவர்களாக… புத்திசாலிகளாக இருந்ததுதான்!

அறிவுக்கூர்மை மிகுந்தவர்கள் எல்லாம் யூதர் சமூகத்திலிருந்து வந்தவர்களே! காரல் மார்க்ஸ் ஒரு யூதர். ஐன்ஸ்டீன் ஓர் யூதர். ஜீசஸ் கிரைஸ்ட் ஒரு யூதர். ஜீசஸ் கிரைஸ்ட் கிறிஸ்தவர் அல்ல. அவரைக் கொண்டு உருவாக்கிய மதம் கிறித்தவ மதம்.

யூத மதம் எங்கிருந்து உருவானது? அது ஹிந்து மதத்தில் இருந்து பிறந்தது. ஹிந்துக்கள் 3000 ஆண்டுகளுக்கு முன் பிற பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்த போது மத்திய தரைக்கடல் பகுதியில் நிலை பெற்றார்கள். இவர்கள் யாதவர்கள். கிருஷ்ணனின் உறவினர்கள்.

யது என்ற சொல்லே யூதர் என்றானது. மகேசா என்ற சொல் மோசஸ் என்று மாறியது. ப்ராஹ்மண் என்ற சொல் ஆப்ரஹாம் என்று மாறியது. ஓம் என்பது ஆமென் ஆனது. ஆமீன் என்றானது. ஆமீன் என்றால் சாந்தி. ஓம் சாந்தி என்று பொருள். இவர்கள் பிற்காலத்தில் தாம் பாரதியர்கள் என்பதை மறந்து போனார்கள். ஹிந்துக்கள் மீது படையெடுத்தார்கள். ஒரே மனித இனத்தில் ஏற்பட்ட வரலாற்று பரிணாமங்கள் இவை.

சாணக்கியரைப் பற்றி சிறிது பார்க்க வேண்டும். சாணக்கியர் சந்திர குப்தனின் குரு. சந்திரகுப்தன் ஒரு சக்கரவர்த்தி. சாணக்கியர் ஒரு பிராமணர். மிக எளிய ஆடையோடு இருப்பவர்.

ஒரு கிரேக்க தூதர் சந்திரகுப்தனை சந்திக்க வந்தார். தான் வந்த காரணத்தை கூறி சில ஓலைகளைக் கொடுத்தார். ஆனால் சந்திரகுப்தன் அவற்றை வாங்கிக் கொள்ளாமல் தன் குருவிடம் சென்று கொடுக்கும்படி கூறினான். ஒதுக்கமாக காட்டில் ஒரு குடிசையில் வசித்த சாணக்கியரைப் பார்த்து அந்த தூதர் வியந்து போனார். அப்போது சாணக்கியர் வறட்டி தட்டி காய வைத்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு பிரம்மச்சாரி.

தன் சமையலுக்கான ஏற்பாடுகளை தானே செய்து கொண்டிருந்தார். கிரேக்க தூதருக்கு ஒன்றும் புரியவில்லை. சக்கரவர்த்தியான சந்திரகுப்தனுக்கு இந்தப் பைத்தியக்கார பிராமணனா குரு? என்று விளங்காமல் விழித்தார். வந்த விஷயத்தைக் கூறி ஓலைச்சுவடிகளை அளித்தார்.

அவற்றைப் பெற்றுக் கொண்டார் சாணக்கியர். வந்தவரை உபசரித்து அமர வைத்தார். இருட்டத் தொடங்கியது. குடிசைக்குள் ஒரு சிறு கை விளக்கு எரிந்தது. மாலை சந்திரன் உதயமானான். சந்திரோதயம் ஆனவுடனே சாணக்கியர் அந்த விளக்கை அணைத்து விட்டு, “வெளியில் போய் அமரலாம், வாருங்கள்!” என்றார்.

தூதருக்கு ஒரே வியப்பு. “இருந்த ஒரு விளக்கையும் ஏன் அணைத்தீர்கள்?” என்று கேட்டார். “இந்த விளக்கை ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் வேண்டும். சந்திரகுப்தனிடம் சென்று கேட்டு வாங்கவேண்டும். அரசாங்க கஜானாவை துர்விநியோகம் செய்ய எனக்கு உரிமை இல்லை. சிக்கனமாக இருக்க வேண்டும்” என்றார்.

அதுதான் தேசபக்தி. அதுதான் தேசியவாதம். அதுதான் சாணக்கியர். அதுதான் பிராமணர்கள் தேசத்திற்கு அளிக்கும் பாதுகாப்பு. அவர்கள் காட்டும் மனிதாபிமானம். அதற்காகத்தான் சாணக்கியரை நாம் இன்றளவும் போற்றுகிறோம்.

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் உள்ள ரோமன் கத்தோலிக்கர்கள் தம்மை ‘போஸ்டன் பிராமின்ஸ்’ என்று கூறிக் கொள்கிறார்கள்.

பிராமணியம் என்பது தூய்மையின் குறியீடு. முழுமைக்கான அடையாளம். சத்துவம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்கள் உள்ளன. பிராமணர்கள் சத்துவ குணச் செல்வர்கள். சத்திரியர்கள் ரஜோ குணம் நிறைந்தவர்கள். க்ஷாத்திரம் ராஜன் போன்ற சொற்கள் ராஜஸ குணத்தின் அடையாளங்கள்.

இன்றைய சமுதாயத்தில் க்ஷாத்திரம் இல்லை. வீரம் இல்லை. அனைவரும் பலவீனர்கள் ஆகிவிட்டார்கள். பிராமணனைப் போட்டு அடிக்கிறார்கள். அதில்தான் வீரம் காட்டுகிறார்கள். இன்று சமுதாயத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பில்லை. இத்தகைய சூழ்நிலை ஏன் ஏற்பட்டது?

ஏனென்றால் பிராமணர்கள் இரண்டு முக்கியமான தெய்வீக சக்திகளை இழந்து விட்டார்கள். நம் முன்னோர்களிடம் பரம்பரையாக இருந்து வந்த சக்திகள் இரண்டு. முதலாவது சாபம் கொடுப்பது. இரண்டாவது அனுகிரகம் செய்வது.

சத் பிராமணன் ஒருவனுக்கு மனம் நோகுமானால் எதிரில் இருக்கும் தீயவன் அழிந்து போவான். பிராமணன் ஆசி கூறி அனுக்கிரகம் செய்தால் அது அப்படியே நிறைவேறும்.

இன்று எத்தனையோ பிராமணர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். அவை பலவும் நிலைப்பதில்லை. காரணம் என்ன? பிராமணர்கள் காயத்ரி மந்திரத்தின் அருளை இழந்துவிட்டார்கள். யாரும் காயத்ரி மந்திர ஜபத்தை சரியாகச் செய்வதில்லை.

இன்று ஒரு கேள்வி எழலாம். எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. அதற்கெல்லாம் நேரமில்லை என்று பலரும் நினைக்கலாம்.

முன்பிருந்த சமூகச் சூழல் வேறு. இன்று அவசர யுகம் என்று கூறலாம். வயிற்றுப் பிழைப்புக்காக உழைத்தே உடலும் மனமும் சோர்ந்து போகிறது என்று கூறலாம்.

ஆனால் டிவி சீரியல் பார்ப்பதற்கும் திரைப்படம் பார்ப்பதற்கு இன்று நேரமும் மனமும் உள்ளது. அவற்றை பார்க்கா விட்டால் எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் காயத்ரியை ஜபம் செய்யா விட்டால் நஷ்டம் உண்டு.

‘கய்’ என்றால் உயிர் என்று பொருள். ‘த்ரா’ என்றால் ரட்சணை. நமக்கு பத்து பிராணன்கள் உள்ளன. அவை பிராணன் அபானன் வியானன் உதானன் சமானன் என்பவை. இவை பஞ்சப் பிராணன்கள்.

இவற்றைத் தவிர ஐந்து உப பிராணன்கள் உள்ளன. நாகன் கூர்மன் கிருகரன் தேவதத்தன் தனஞ்செயன்.

இந்த பிராண சக்திகள் நம் உடல் முழுவதும் பரவி உள்ளன. இவை இல்லாவிட்டால் சிவம் சவமாகிவிடும். பிராண சக்திகள் நம்மிடம் இருக்க வேண்டும் என்றுதானே நாம் விரும்புவோம்? பின் அவற்றை காத்துக் கொள்ள வேண்டாமா? காயத்திரி மந்திரத்தால் அவற்றை இரட்சித்துக் கொள்ள வேண்டும்.

மந்திரம் உச்சரித்தால் உயிர் எவ்வாறு பாதுகாக்கப்படும்? மருத்துவமனைக்குச் சென்று மருந்து வாங்கி சாப்பிட்டால் தானே உயிர் பாதுகாக்கப்படும்? என்று கேட்கலாம்.

நம் உடலில் கால் முதல் தலை வரை மின்காந்த அலைகள் பரவியுள்ளன. பிராமணர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? காலையிலேயே துயிலெழுத்து காயத்ரி ஜபம் செய்து தம் உடலில் இருக்கும் மின்காந்த சக்தி அலைகளை உறுதியாக்கிக் கொண்டார்கள். அக்காரணத்தால் அவர்கள் உடல் முழுவதும் தெய்வீக சக்தி இருந்தது.

“ஓம் பூ: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி I
தியோ யோந: ப்ரசோதயாத் II” என்று காயத்ரியை பிரார்த்தனை செய்தார்கள். “என் அறிவைத் தூண்டுவாயாக!” என்று காயத்ரி மாதாவை பிரார்த்தனை செய்தார்கள். அறிவு தூண்டப்பட்டு பாதுகாக்கப் படாவிட்டால் என்ன ஆகும்? நம் மூளை கூர்மையடையாது. எதிலும் முன்னேற்றத்தை காண முடியாது.

அதனால் நம்முடைய முதலும் முக்கியமானதுமான கடமை பிராமணர்களைப் பாதுகாப்பது. பசுக்களைப் பாதுகாப்பது. ‘கோ’ என்ற சமஸ்கிருதச் சொல் ‘கௌ’ என்ற ஆங்கிலச் சொல்லாக மாறியது. ஆங்கிலம் சுதந்திரமான ஒரு தனிப்பட்ட மொழி அல்ல. சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்த ‘பேத்தி’ என்று கூறலாம். லத்தீனும் கிரேக்கமும் சமஸ்கிருதத்தின் சகோதரிகள். டோர் என்றால் கதவு. இது த்வார் என்ற சொல்லிலிருந்து உருவானது. நக்தா என்றால் சம்ஸ்கிருதத்தில் இரவு. அது நைட் ஆனது. எல்லா ஆங்கிலச் சொற்களுக்கும் வேர்ச் சொல் சம்ஸ்கிருதமாக இருக்கும். சமஸ்கிருதம் அனைத்து மொழிகளுக்கும் தாய்.

இன்று நாம் சமஸ்கிருதத்தைக் காப்பாற்றுகிறோமா? போகட்டும்… கௌரவ மரியாதையாவது அளிக்கிறோமா? சமுதாயத்தில் யாராவது பிராமணனை மதிக்கிறார்களா? யாருமில்லை.

இந்து மதத்திற்கும் பிராமணர்களுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இன்று யாரும் மதிப்பளிப்பதில்லை. பின் சமுதாயத்தை யார் பாதுகாப்பார்கள்?

பாரத தேசத்தில் ஐந்து ‘க’ காரங்கள் உள்ளன. இந்த ஐந்தும் பாதுகாக்கப் பட்டால் இந்தியா பாரத தேசமாக… புண்ணிய பூமியாக விளங்கும்.

காயத்ரி கோ கீதை கங்கை கோபாலன். இந்த ஐந்தின் மீது யாருக்கு கௌரவ மரியாதை உள்ளதோ… யார் தன் வாழ்நாளில் இந்த ஐந்தையும் காப்பதற்காக கங்கணம் கட்டி வாழ்வானோ அவனே ஹிந்து.

“நான் இந்தியாவில்தான் வசிக்கிறேன். ஆனால் பிராமணர்களின் மேல் எனக்கு மதிப்பு கிடையாது. நான் வேதங்களை மதிக்க மாட்டேன். அது ஏதோ பழைய நூல். தற்காலத்திற்கு உதவாது. அவற்றை ஏன் படிக்க வேண்டும்?” என்று கேட்பவன் ஹிந்து அல்ல.

“பசுமாட்டை நான் மதிக்க மாட்டேன். கோமாதாவை வணங்கமாட்டேன். பிற விலங்குகளைப் போல அவற்றையும் கொல்லலாம். தவறல்ல. அது எந்த விதத்தில் சிறந்தது? ஆடு தாழ்ந்தது….மாடு மட்டும் உயர்ந்ததா? ஏன் இந்த வேறுபாடு? நாய் தாழ்ந்ததா? அது மனிதனைக் காவல் காக்கிறது. அதனால் நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்பேன். மடியில் வைத்து சோறூட்டுவேன். நாயை அன்போடு வளர்ப்பேன். பசுவைக் காலால் உதைப்பேன்” என்பவர்களிடம் ஒரு கேள்வி.

நாயின் சிறு நீரைக் குடிக்கலாமா? அது மருத்துவ குணம் கொண்டதா? ஆனால் பசு மாட்டின் சிறுநீரை அருந்தலாம். நம் முன்னோர்கள் பஞ்சகவியம் காலையில் அருந்தி வந்தார்கள். இன்றைக்கும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நாட்டு பசுவின் சிறுநீர் சிறிது அருந்தி வந்தால் நோயின்றி வாழமுடியும். விடியலில் எழுந்து குளித்து விட்டு சிறிது பசுஞ்சாணி அருந்த வேண்டும். இது தற்போது சாத்தியமா? சாத்தியம்தான்! அதனால் என்ன நன்மை? அல்சர் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வராது. சர்க்கரை நோய் நெருங்காது. கேன்சர் வராது. இது உண்மை. எந்த ஆரோக்கியக் கேடும் அருகில் நெருங்காது. நம் முன்னோர்கள் அறிவியல் பூர்வமாக ஆய்ந்து கூறியவை இவை!

பசுமாட்டின் உடலில் பதினான்கு புவனங்களும் உள்ளன என்பதால் அதனை வணங்குகிறோம். காலையில் பசுமாட்டைச் சுற்றி வந்து பிரதட்சணம் செய்து வணங்கினார்கள் நம் முன்னோர். இன்று அந்த கலாச்சாரம் கிராமங்களில்கூட தென்படுவதில்லை. காணாமல் போய்விட்டது.

கங்கையில் நாம் சேர்க்கும் கழிவுகளைப் பற்றி சற்று நினைத்துப் பாருங்கள். கல்கத்தா ஹூக்ளி நதி முழுவதும் சேறாக உள்ளது. நம் இந்திய கலாச்சாரம் போலவே நதிகளும் நாசமடைந்து விட்டன. ஊழல் நிறைந்த சமுதாயத்தில் வாழும் நாம் புண்ணிய நதிகளை பாழ் செய்து விட்டோம். நம்மை நாம் பிராமணர்கள் என்று எவ்வாறு அழைத்துக் கொள்வது?

பிராமணர்களுக்கும் பிறருக்கும் என்ன வேறுபாடு? சாணக்கியர் தன் தவ சக்தியால் ஒரு பெரிய அரசாங்கத்தை அடக்கியாளக் கூடியவராக இருந்தார்.

தங்குடூரு பிரகாசம் பந்துலு ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக இருந்தவர். குள்ளமாக சிவப்பாக இருப்பார். எப்போதும் ஒரு மேலங்கி அணிந்திருப்பார். வெயிஸ்ட் கோட். ஏனென்றால் உள்ளே அணிந்திருந்த கிழிந்த சட்டையை மறைப்பதற்காக. அவ்விதம் உயர்ந்த மனிதர்கள் எளிமையை விரும்பி ஏற்றார்கள்.

இன்று ஒரு பஞ்சாயத்துபோர்டு அதிகாரியின் அறைக்குச் சென்றால் கூட அறை முழுவதும் ரூபாய் நோட்டுக் கட்டுகளை பார்க்க முடியும். மிகப் பெருஞ் செல்வம் முடங்கிக் கிடக்கிறது. இந்தியா ஏழை நாடல்ல. இந்தியா மிகப் பெரும் செல்வம் நிறைந்த நாடு. ஆனால் பொதுமக்கள் ஏழைகள். அரசியல்வாதிகள் செல்வந்தர்கள்.

வேதத்தில் உள்ளவை வெறும் பாரத தேச மக்களுக்காக கூறப்படவில்லை. முழு மனித இனத்திற்குமான சொத்துக்கள் அவை. ருக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் ஒரு மந்திரம் உள்ளது.

“சம் கச்சத்வம், சம் வதத்வம், சம் வோ மனாம்ஸி ஜானதாம், தேவா பாகே யதா பூர்வே…..”

இதன் பொருள் என்ன?

சம் கச்சத்வம் – மனித இனம் முழுவதும் ஒற்றுமையாக சேர்ந்து நடப்போம். ஓ உலக மனிதர்களே! அனைவரும் ஐக்கியமாக சேர்ந்து நடப்போம்.

சம் வதத்வம் – நாம் அனைவரும் ஒரே சிந்தனையோடு ஒரே கொள்கையில் நிற்போம்.

சம் வோ மனாம்ஸி ஜானதாம் – நாம் அனைவரும் மனம் ஒருமித்து இருப்போம். நம் அனைவர் மனமும் ஒன்று கலந்து இருக்கட்டும்.

தேவா பாகே யதா பூர்வே – நம் புராதன புண்ணிய புருஷர்கள் எவ்வாறு கூறினார்களோ நாமும் அதேபோல் வாழ்வோம்.

இந்த மந்திரத்தின் தேவை இன்றைக்கும் உள்ளதைக் காண முடிகிறது. இந்த மந்திரங்களை எழுதி எத்தனையோ கோடி வருடங்கள் கடந்துவிட்டன. இன்றைக்கும் அதற்கான தொடர்பு காணப்படுகிறது. மனித இனத்திற்குப் பயன்படும் மந்திரங்கள் இவை.

பிராமணன் காயத்ரி மந்திரத்தின் சக்தியைப் பெற்றானாகில் துஷ்ட சக்திகள் அழிந்து போகும். ஆனால் தற்காலத்தில் அத்தகைய தெய்வீக சக்தி பிராமணனிடம் அரிதாகி விட்டது. தற்போது நேர்மறையான சக்தி வாய்ந்த அலைகள் பிராமணனால் சமுதாயத்திற்கு வழங்கப் படுவதில்லை. காயத்ரி மாதா நமக்கு சக்தி அளிப்பதில்லை. ஏனென்றால் நாம் அவளை வணங்குவதை நிறுத்தி விட்டோம்.

இளைய சமுதாயம் இனியாகிலும் வேதத்தை மதித்து காயத்திரி ஜபம் செய்யக் கற்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து காயத்ரியை வணங்கி அவள் அருளைப் பெற முயற்சிக்க வேண்டும்.

உண்மை எப்போதும் வெல்லும். ருதா என்ற சமஸ்கிருதச் சொல்லிருந்து ட்ரூத் என்ற சொல் பிறந்தது. சத்தியமே பேச வேண்டும். சமுதாய நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.

பிராமணன் செய்யும் தவம் அவனுக்கு மட்டுமல்ல. அனைத்து குலத்தவருக்கும் சென்றடையும். தேசம் தலமாக விளங்கும். பிராமணர்கள் தங்களின் தாழ்ந்த நிலைமைக்கு யாரையும் குறை சொல்லிப் பயனில்லை. நாமே நம் நண்பர்கள். நாமே நம் பகைவர்கள். பிராமண தர்மத்தைப் காப்பாற்றிக் கொண்டே அவரவர் உத்தியோகங்களைச் செய்து வர வேண்டும். இன்றைக்கு நாம் ஓரளவாவது நலமாக இருக்கிறோம் என்றால் நம் பூர்வீகர்கள் செய்த தவமே காரணம்.

அறிவுக்கூர்மை மிகுந்த யூதர்களை ஹிட்லர் வேட்டையாடிக் கொன்றது போலவே தற்போது பிராமணர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். ஏனென்றால் பிராமணர்கள் அறிவுக்கூர்மை மிகுந்தவர்கள். பொறாமையும் அசூயையும் நிறைந்தவர்களுக்கு அறிவுத் திறன் மிக்கவர்களைப் பார்த்தால் பொறுக்க இயலாது.

இரண்டாயிரம் ஆண்டுகள் யூதர்கள் தமக்கென்று ஒரு நாடு இன்றி மேற்கத்திய நாடுகளால் அடித்து விரட்டப்பட்ட நிலையில் வாடினார்கள். 1948ல் அவர்களுக்கு ஒரு சிறிய நாடு கிடைத்தது. அதுவே இஸ்ரேல். அது தெலுங்கானா மாநிலம் அளவு நிலப்பரப்பு கொண்டது. இப்போது அவர்கள் மிகச் சக்தி வாய்ந்தவர்களாகிவிட்டார்கள். அரபு நாடுகளை எல்லாம் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் பிராமணர்களின் மீது பல திசைகளிலிருந்தும் தாக்குதல் நடக்கிறது. பிராமணர்களை அழித்து கிறிஸ்தவர்களாக மாற்றும் முயற்சி தீவிரமாக நடக்கிறது. பகவத்கீதை மீதும் பிராமணர்கள் மீது மட்டுமே குறிவைத்து எதிர்ப்பு கிளம்புகிறது. பசுமாடுகள் கொல்லப்படுகின்றன. இந்த அழிவு சக்திகளிடமிருந்து பாரத தேசத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம் புராதான கலாசார செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்! தர்மப் பிரசாரம் நடக்க வேண்டும்!

-“சாரித்ரிக நவலா சக்கரவர்த்தி” டாக்டர் முதிகொண்ட பிரசாத் (தெலுங்கு சொற்பொழிவு)
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. பிராமணர்களை  மதிக்கும் அனைவருமேகூட
படிக்கலாம் துவேஷம் இன்றி. 

அருள் மிகு ரத்தினகிரீஸ்வரர் கோயில், கரூர்

அருள் மிகு ரத்தினகிரீஸ்வரர் கோயில், கரூர்

 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 1178 அடி உயரமும் 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம். சித்திரை மாதங்களில் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. சுவாமிக்கு காலையில் பால் அபிசேகம் செய்த பச்சை பால் மாலை வரை கெடாது. பத்தி, கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது. இது இக்கோயிலின் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 64 வது தேவாரத்தலம் ஆகும்.

  இறைவன் 9 ரத்தினங்களாக இருப்பதால் இம்மலையை சுற்றி அமைந்த சுற்று வட்டாரப்பகுதிகளில் பூமிக்கடியில் பச்சை கற்கள், சிவப்பு கற்கள் ஆகியவை நிறைய கிடைக்கின்றன. சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். 1117 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலம் இம்மலையில் உள்ள பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை. மணிமுடி இழந்து தேடி வந்த ஆரிய மன்னனுக்கு இரத்தினமும், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு பொற்கிழியும் இறைவன் கொடுத்ததும் இத்தலத்தில்தான்.

வைராக்கிய பெருமாள் :
காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் தனக்கு குழந்தை பிறந்தால் தன் சிரசை தருவதாக வேண்டினார். அது படியே நடக்க வைராக்கிய பெருமாள் தன் சிரசை சுவாமிக்கு காணிக்கையாக கொடுத்தார். மலைக்கு கீழே பாதமும், மேலே சிரசும் வந்தது. தேனும் தேங்காய்ப்பாலும் மட்டும்தான் இவருக்கு அபிசேகம். பூஜை முடிந்த பிறகு சுவாமியின் மாலை இவருக்குத்தான் போடப்படும். இத்தலத்தில் இவர் மிகவும் விசேசமானவர்.

காகம் பறவா மலை :
ஆயர் ஒருவர் அபிசேகத்துக்காக கொண்டு வந்து வைத்திருந்த பால் காகம் கவிழ்த்ததால் அது எரிந்து போயிற்று. அப்படி கவிழ்ந்த எல்லைக்கு மேல் காகம் இப்போதும் இந்த மலையின் மீது ஒரு காகம் கூட பறப்பதில்லை என்பது சிறப்பான அதிசயம்.

தீர்த்தசிறப்பு :
காவேரித் தீர்த்தம் தினமும் கால்நடையாகவே 8 கி.மீ., நடந்து எடுத்துக் கொண்டு வந்து சுவாமிக்கு அபிசேகம் செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்கள் :
★ இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதங்களில் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதிக்கு நேரேயுள்ள நவத்துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது.

★ சுவாமிக்கு பால் அபிசேகம் செய்த பச்சை பால் மாலை வரை கெடாது.

★ பத்தி, கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் கெடுவதில்லை. அபிஷேகம் செய்த பால் சிறிது நேரத்தில் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுகிறது.


நவ பிருந்தாவனம்

ஸ்ரீ மதாநந்த குருப்யோ நமஹ
ஸ்ரீ ராகவேந்திராய நம

கர்நாடக மாநிலத்தில், கொப்பல் மாவட்டத்தில், கங்காவதி தாலுக்காவில் ஆனேகுந்தியில் துங்கபத்ரா ஆற்றின் நடுவில் உள்ள ஒரு திட்டில் அமைந்துள்ள நவ பிருந்தாவனம் நினைத்தாலும், துதித்தாலும் மனக்குறைகளை நீக்கி நன்மைகளை வழங்கி பிரார்த்தனைகள் நிறைவேற செய்யும் அற்புதமான ஸ்தலமாகும்.

மத்வாச்சார்யரின் குரு பரம்பரையில் உள்ள ஒன்பது ஆசார்ய குருமார்களின் ஜீவ சமாதி அமைந்து உள்ள மிகவும் புனிதமானதும் சக்தி வாய்ந்த ஸ்தலமாகவும் திகழ்கின்றது.

இந்த ஒன்பது ஜீவ சமாதிகளில் அந்த மகான்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

இந்த இடம் தான் ஸ்ரீமத் ராமாயணத்தில் சொல்லப்படும் கிஷ்கிந்தா.

சுக்ரீவரும் அவரது வானர சேனையும் இங்கு தான் இருந்ததாக சொல்லப்படுகிறது.  

அந்த ஒன்பது குருமார்களின் பெயர்கள்
கீழே !!

ஸ்ரீ பத்மநாப தீர்த்தர்,
ஸ்ரீ ஜய தீர்த்தர்,
ஸ்ரீ கவீந்த்ர தீர்த்தர்,
ஸ்ரீ வாகீச தீர்த்தர்,
ஸ்ரீ வியாசராஜர்,
ஸ்ரீ ஸ்ரீநிவாச தீர்த்தர்,
ஸ்ரீ ராமதீர்த்தர்,
ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர்,
 ஸ்ரீகோவிந்த தீர்த்தர்

ஒன்பது த்வைத மடாதிபதிகளின் பிருந்தாவனம் இருப்பதால் நவ பிருந்தாவனம் என்று அழைக்கப்படுகிறது.

இது மிகவும் சிறப்பு மிகுந்த ஆலயமாகும்

மத்வ மதத்தில் மிகவும் தொன்மையான பீடாதிபதி ஸ்ரீ வியாசாராஜர் பாரதம் முழுக்க இந்து சமய கருத்துகளையும் பல க்ரந்தங்களையும் பரப்பியவர்.

இந்த ஸ்ரீ வியாச ராஜரின் மறுபிறவியே மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள்.

ஸ்ரீ வியாசாராஜர் கிருஷ்ண தேவராயர் அரசருக்கு அலோசகராகவும் இருந்தவர்.

ஒருநாள் கிருஷ்ண தேவராயரை குஹ பீடையில் இருந்து காப்பாற்றி அரச பதவி ஏற்று வியாசராய தீர்த்தராக இருந்தவர் வியாசராஜர் ஆனார்.

இந்தியாவில் பல மாநிலங்களில், நம் தமிழ் நாட்டில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆஞ்சநேய விக்ரஹங்கள் உட்பட 700 ஆஞ்சநேயர் விக்ரஹங்களை ப்ரதிஷ்டை செய்தவர்.

நவ பிருந்தாவனத்தை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்

ஒரு முறை நவ பிருந்தாவனம் சென்று பாருங்கள் வாழ்வில் ஒரு திருப்பம் கண்டிப்பாக ஏற்படும்.

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.


எண்ணிக்கை 108 மகத்துவம்

எண்ணிக்கை 108 மகத்துவம்.

ருத்திராட்ச மாலை அல்லது வேறு எந்த மணி மாலைகளனாலும் 108 மணிகளால் கோர்க்கப்பட்டிருப்பது ஏன் என்று பார்ப்போம்.
நமது இந்திய மண்ணில் தோன்றிய எந்த கலாச்சாரமானாலும் சரி அது இந்து கலாச்சாரமானாலும், புத்த கலாச்சாரமானாலும் அல்லது ஜெயின் கலாச்சாரமானாலும் அல்லது சீக்கிய கலாச்சாரமானாலும் சரி அவற்றிலும் இந்த 108 மணிகளே பின்பற்றப் படுகின்றன.
எந்த மந்திரத்தையும் 108 முறை ஓதினால் தான் அதன் பலன் தெரியும் என்பார்கள் ஏன்?
ஏன் ஜப்பானில் கூட ஜென் கோயில்களில் 108 முறை கோயில் மணியை ஒலிக்கச் செய்வார்களாம்.
நமது முன்னோராகிய சித்தர்கள் கணித வல்லுனர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதற்க்கு இது ஒரு உதாரணம். அதாவது 108 என்கிற எண் ஒரு முழுமையான மொத்த பிரபஞ்சத்தையும், அதன் ஆற்றலையும், அறிவையும் குறிக்கும். அதாவது கடவுள் தன்மையை குறிக்கும்
இந்த 108 என்கிற எண் முழுமையை குறிக்கிறது என்பதற்க்கு சில உதாரணங்கள்.......

1) எண் 9 முழுமையை குறிக்கும் எண், எண் 108ஐ கூட்டினால் 1+8=9 வரும், 108ம் முழுமையை குறிக்கிறது. அதே போல் 9துடன் எந்த எண்னை பெருக்கினாலும் வரும் விடையை கூட்டிபார்த்தால் 9 வரும் 1x9=9. 2x9=18. 1+8=9. 285x9=2565 2+5+6+5=18 1+8=9. 8543x9=76887 7+6+8+8+7=36 3+6=9. அதாவது 9 என்கிற எண் கடவுள் நிலையை ஒரு முழுமையை குறிக்கும் எண்.

2) 9 கிரகங்கள்12 ராசிகளில் பயணிக்கும் நிலை இருப்பை ஒரு முழுமையை குறிக்கிறது 9 x 12 = 108.

3) மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுக்கும் 4 பாதம் வீதம் மொத்தம் நட்சத்திரங்களுக்கு 108 பாதங்கள் 27 x 4 = 108.

4) வேதகால புத்தகங்களின் படி பிரபஞ்ச‌த்தில் உள்ள கணிமங்களின் எண்ணிக்கை 108. இப்பொழுது இன்னும் சில கணிமங்கள் உள்ளதாக கண்டு பிடித்திருக்கிறார்கள்.

5) கணிததில் 1,2 மற்றும் 3 ஆகிய எண்களின் ஆற்றல் பற்றிய உண்மை எண் 1க்கு ஆற்றல் 1. எண் 2க்கு ஆற்றல் 4 (2x2). எண் மூன்றிர்க்கு ஆற்றல் 27 (3x3x3). இந்த மூன்றையும் (1x4x27) பெருக்கினால் வரும் மொத்த ஆற்றல் 108. இது தான் பிரபஞ்ச ஆற்றல். எண் 1 ஒரு பரிமான ஆற்றலையும், எண் 2 இரண்டு பரிமான ஆற்றலையும், எண் 3 முப்பரிமான ஆற்றலையும் குறிக்கிறது

6) சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 108 சந்திரன்களை வரிசையாக அடுக்கி வைத்தால் எவ்வளவு துரம் வருமோ அவ்வளவு தான்.

7) சூரியனின் விட்டம் சரியாக பூமியின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகம்.


சோளிங்கர் யோக நரசிம்மர்

சோளிங்கர் யோக நரசிம்மர்


11மாதங்கள் யோக நிலையில் இருந்து கார்த்திகை மாதம் மட்டும் யோக நரசிம்மர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்!

ராம அவதாரம் முடிந்ததும் ராமபிரான் வைகுண்டம் எழுந்தருளும் வேளையில், தாமும் உடன் வருவதாக கூறினார் ஆஞ்சநேயர்.

ஆனால் ராமபிரான், ‘கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் சப்த ரிஷிகளுக்கும், காலன் மற்றும் கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்.
அவர்களை என்னுடைய சங்கு, சக்கரத்தால் அழித்து கலியுகம் முடியும் வரை நீயும் கடிகாசலத்தில் சங்கு, சக்கரத்துடன் இருந்து யோக ஆஞ்சநேயராக மக்களுக்கு அருள்பாலித்து கலியுகம் முடியும் வேளையில் எம்மை வந்தடைவாய்’ என்று கூறிவிட்டார்.

இதனால்தான் யோக நிலையில் சங்கு, சக்கரத்துடன் அமர்ந்த நிலையில் தனி மலையில் .நரசிம்மர் அமர்ந்திருக்கும் மலை அருகே யோக ஆஞ்சநேயராக அருள் பாலிக்கிறார்..

கலியுகம் முடியும் வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீகம். எனவேதான் இன்றும் பக்தியோடு, ராமாயணம் படிக்கும் இடம் தோறும் ஆஞ்சநேயர் அருவமாகவோ, உருவமாகவோ வந்து கலந்துகொள்வதாக ஐதீகம்.

பக்த பிரகலாதனுக்காக தூணில் இருந்து அவதரித்தவர் நரசிம்மர்அத்திரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜா, விஸ்வாமித்ரர் என சப்த ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி நரசிம்மப் பெருமாள் சோளிங்கபுரம் தலத்தில் சாய்ந்த நிலையில், யோக முத்திரையோடு தியானக் கோலத்தில் காட்சியளிக்கிறார்

இங்குள்ள பெரிய மலையின் உச்சியில் வடக்கு நோக்கியபடி ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. அதனைக் கடந்தால் சாளக்கிராம மாலை அணிந்து மூலவராய் யோக நரசிம்மர் கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலித்து வருகிறார்.
அம்ருதவல்லித் தாயார்...
தனிச்சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் உற்சவர் பக்தவச்சலப் பெருமாள் என்பதாகும். தாயார் திருநாமம் சுதாவல்லி.

குறிப்பு.... ஸ்ரீயோக நரசிம்மரை வணங்கிய பிறகு ஸ்ரீஆஞ்சநேயரை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்...


சரியை, கிரியை என்றால் என்ன?

சரியை, கிரியை என்றால் என்ன?

இறைவனை அடைவதற்கான உபாயமாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களை வரையறுத்துள்ளனர் பெரியோர்.

இதில் சரியை என்பது உழவாரப்பணி முதலாக சிவன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் செய்யும் தொண்டு. அதோடு சிவனடியார்களை அன்பாக உபசரிப்பதும் ஆகும்.

பெரிய புராணத்தில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதன் மூலமே இறையருளைப் பெற்ற எண்ணற்ற நாயன்மார்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து கிரியை எனப்படுவது, உள்ளத்தாலும் புறத்தாலும் பூஜிப்பது.

நெஞ்சகமே கோயில்

நினைவே சுகந்தம்

அன்பே மஞ்சன நீர்

பூசை கொள்ள வாராய் பராபரமே - என்னும் தாயுமானவர் வழியில் பூஜிப்பது கிரியை ஆகும்.

சிவம் ஒன்றையே ஒருமுகப்படுத்தி வழிபடும் நிலை யோகம்.

புலன்களின் வழியாக வேறு எந்த சிந்தனைகளும் நமக்குள் தோன்றாதவாறு, நாம், இறைவனாகிய பரம்பொருளை தியானிக்கிறோம் என்னும் வேறுபாடு மறைந்து, நாமும் தியானமும் இரண்டறக் கலக்கும் நிலையே யோகம்.

இறைவனைப் பற்றியும் உயிரைப் பற்றியும் தெரிவிக்கும் நூல்களைக் கற்று பெரியவர்களின் உபதேசங்களைப் பெற்று இறைவனின் அருளைப் பெறுவதற்கான ஞானத்தைப் பெறுவது.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் இந்த நான்கு வழிகளின் மூலமாக இறைவனின் அருள் கிடைக்கும்.

சிவன் அடியார்களைப் போற்றி சிவன் ஆலயங்களில் செய்யும் தொண்டால், சாலோகம் (சிவன் உலகம்), உள்ளும் புறமும் பூஜிப்பதால் சாமீபம் (சிவன் அருகில் இருத்தல்), பரிபூரண யோகத்தால் சாரூபம் (சிவ ஸ்வரூபமும்) கிடைக்கும். சிவ சிந்தனையை ஞானத்தில் தேக்கி இருப்பதால் முக்தி எனும் பலன் கிடைக்கும்.

ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம்

ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம்

இந்த துதியை பாராயணம் செய்து வந்தால் இல்லத்தில் பொன் பொருள் சேரும். அன்னப்பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். ஞானமும், ஆரோக்கியமும், புத்திர லாபமும் உண்டாகும்.

ஓம் ஸ்ரீகணேஶாய நமஹ:

(1)
ஷண்முகம் பார்வதீபுத்ரம்
க்ரெளஞ்சஶைல விமர்தநம் ।

தேவஸேநாபதிம் தேவம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

ஆறுமுகனும், பார்வதியின் புத்ரனும், மலை உருவமெடுத்த கிரௌஞ்சா அசுரனை வதைத்தவனும், தேவஸேனையின் கணவனும், தேவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(2)
தாரகாஸுர ஹந்தாரம் மயூராஸநஸம்ஸ்திதம் ।

ஶக்திபாணிம் ச தேவேஶம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

தாரகாஸூரனை வதம் செய்தவனும், மயில் மீது அமர்ந்தவனும், ஞான வேலை கையில் தரித்தவனும், சிவபுத்ரனுமான
ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன்,
திருப்பாதங்களில்
சரணமடைகிறேன்.

(3)
விஶ்வேஶ்வர ப்ரியம் தேவம்
விஶ்வேஶ்வர தநூத்பவம் ।

காமுகம் காமதம் காந்தம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீபரமேஸ்வரனின் அன்பிற்கு உரியவனும், தேவனும், ஸ்ரீவிஸ்வேஸ்வரனின் புத்ரனும், வள்ளி தேவசேனையிடத்தில் விருப்பம் கொண்டவனும், பக்தர்களின் மன விருப்பங்களை நிறைவேற்றுபவனும், மனதைக் கவருகின்றவனும் சிவ புத்ரனுமான ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன்,
திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(4)
குமாரம்
முநிஶார்தூலமாநஸாநந்தகோசரம் ।

வல்லீகாந்தம் ஜகத்யோநிம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

குமரக் கடவுளும், சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகிறவனும்,
வள்ளியின் கணவனும், உலகங்களுக்கு காரணமானவனும்,
சிவ புத்ரனுமான
 ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(5)
ப்ரலயஸ்திதிகர்தாரம்
ஆதிகர்தாரமீஶ்வரம் ।

பக்தப்ரியம் மதோந்மத்தம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

அழித்தல் காத்தல் இவற்றைச் செய்கிறவரும், முதலில் உலகங்களைப் படைத்தவரும், யாவருக்கும் தலைவனும், பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவனும், ஆனந்த வடிவினை கொண்டவனும், சிவபுத்ரனுமான
ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(6)
விஶாகம் ஸர்வபூதாநாம்
ஸ்வாமிநம் க்ருத்திகாஸுதம் ।

ஸதாபலம் ஜடாதாரம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவனும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமும், கிருத்திகையின் புத்ரனும், எப்பொழுதும் குழந்தை வடிவமாய் விளங்குகிறவனும் ஜடையை தரித்தவனுமான,
சிவபுத்ரனுமான
ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(7)
ஸ்கந்த ஷட்கம் ஸ்தோத்ரமிதம்
ய:படேத் ஶ்ருʼணுயாந்நர: ।

வாஞ்சிதாந் லபதேஸத்ய
ஸ்சாந்தே ஸ்கந்தபுரம்வ்ரஜேத் ॥

ஆறு சுலோகமுள்ள இந்த ஸ்ரீஸ்கந்தனின் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்பவர்கள், அவர்கள் கோரிய பொருளை உடன் அடைவார்கள். முடிவில் ஸ்ரீஸ்கந்தனின் பட்டினத்தில் அவனுடன் சேர்ந்து வசிப்பார்கள்.

இதி ஶ்ரீஸ்கந்த ஷட்கம் ஸம்பூர்ணம்

இவ்வாறாக ஸ்ரீ ஸ்கந்த ஷட்கம் நிறைவுபெற்றது.


கந்தபுராணம் பகுதி நான்கு

கந்தபுராணம் பகுதி - 4

ஒம் சரவணபவ

முதியவராய் வந்தவர், வானத்ததில் எழுந்தருள ரிஷப வாகனம் ஓடோடி வந்து அவரைத் தாங்கியது. ஆம்... முதியவராக வந்து கங்கையைச் சிந்தி, யாக குண்டத்தை அணைத்தது சிவபெருமான் தான். அங்கே உமையவளும் வந்து சேர, இருவரும் ரிஷபத்தில் அமர்ந்து அசுரர்களுக்கு காட்சி தந்தனர்.அசுரக்குழந்தைகளே என்னைக் குறித்த உங்களது யாகத்தின் மதிப்பு அளவிட முடியாதது. நீங்கள் கேட்கும் வரங்களைத் தர நான் காத்திருக்கிறேன், என்றார் சிவன்.அசுரத்தலைவன் பத்மாசுரன் சிவனிடம், கருணைக்கடவுளே ! தங்கள் தரிசனம் கண்டு அகம் மகிழ்ந்தோம். எங்களது பக்தி உண்மையானதென்றால், ஆயிரத்து எட்டு அண்டங்களையும் எங்களுக்குத் தர வேண்டும். அவற்றை நாங்களே அரசாள வேண்டும். மேலும் எங்களுக்கு திருமால், பிரம்மா உள்ளிட்ட எந்த தேவராலும் அழிவு ஏற்படக்கூடாது. தேவர்கள் தங்கள் ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் எங்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். எல்லா அண்டங்களுக்கும் சென்று வரும் ஆற்றலை தாங்கள் தர வேண்டும், என்றான். சிவன் அவன் கேட்டதையெல்லாம் மட்டுமல்ல, கேட்காததையும் கொடுத்தார். சூரபத்மனே ! இந்த அண்டங்களை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். அவற்றை மேற்பார்வை செய்ய இப்போது உன்னிடமிருக்கும் பலம் போதாது. எனவே உன் சகோதரர்களுக்கும், சகல அண்டங்களுக்கும் , சகல அண்டங்களுக்கு செல்லும் வரம் திருகிறேன். இன்னும் பல கோடி பேர் அடங்கிய நான்கு வகை சேனைகளையும் தருகிறேன். இந்திர விமானம், சிங்க வாகனம், பாசுபதாஸ்திரம் போன்றவற்றையும் தருகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை நீ 108 யுககாலம் தான் ஆட்சி செய்ய முடியும், அதன் இறுதியில் மரணமடைவாய், என்றார். மிக மிக நீண்ட காலம் இந்த பூமியில் வாழப்போவது பற்றி சூரபத்மன் மகிழ்ந்தாலும், தன் மரண எச்சரிக்கையைக் கேட்டு வருந்தி, ஈசனே ! தங்கைளத் தவிர வேறு யாராலும் எங்களுக்கு மரணம் நேரக்கூடாது என்ற தங்கள் வரம் நிலைத்தாலே போதும். இந்த அண்டங்கள் உள்ளளவும் நாங்கள் வாழ்வோம், என்றான் சூரபத்மன்.அசுரத்தலைவனே ! என்னாலோ, என் சக்தியாலோ தவிர வேறு எதனாலும் உனக்கு மரணமில்லை, என்றார் சிவன். சூரபத்மன் இது கேட்டு மகிழ்ச்சி கூத்தாடினான். இதற்குள் சிவன் மறைந்து விட்டார். அசுரக்கூட்டம் ஆரவாரத்துடன் சிவனால் தங்களுக்கு அருளப்பட்ட படைகளுடன் கிளம்பியது. கிட்டத்தட்ட ஐம்பது கோடி அசுரர்களுடன் புறப்பட்ட அப்படை நேராக காஷ்யபரிடம் சென்றது. தந்தையே ! நாங்கள் பல்லாண்டுகளாக தவமிருந்து 1008 அண்டங்களையும் ஆளும் சக்தியைப் சிவபெருமான் மூலம் பெற்றோம். இனி தங்கள் வழிகாட்டுதல் படி நடப்போம் என்றான் சூரபத்மன். நல்ல பிள்ளைகளைப் பெற்றவர்களைப் பற்றி பெற்றவர்கள் பெருமைப்படுவார்கள் இங்கோ அரக்கி மீது ஆசைப்பட்டு, அசுரப் பிள்ளைகளைப் பெற்ற இந்த தந்தையோ மனம் வருந்தினார். சிவனாரே வரம் கொடுத்த பிள்ளைகளை தன்னால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்துடன் மகனே ! நீ இந்த வீரர்களுடன் குலகுரு சுக்ராச்சாரியாரை போய்ப்பார். அவரது வழிகாட்டுதல் படி நடந்து கொள் என்று சொல்லி அனுப்பி விட்டார். அனைவரும் சுக்ராச்சாரியாரைச் சென்று சந்தித்தனர். சுக்கிராச்சாரியார் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என் அன்பு சீடர்களே ! இந்த உலகம் சிவனுக்கு கட்டுப்பட்டது. உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனும், பாவம் செய்தாலும், புண்ணியம் செய்தாலும் இறுதியில் பரமாத்மாவான அந்த சிவனின் உடலில் தான் கலக்கிறது. எனவே, பாவ, புண்ணியம் பற்றி நீங்கள் யாரும் கவலைப்படக்கூடாது. உங்களைக் கண்டு எல்லாரும் நடுங்க வேண்டும். அப்படியானால் தான் அசுர ராஜ்யம் பல்லாண்டு வாழும், நீங்கள் அந்த சிவனை மறக்காமல் தினமும் பூஜிக்க வேண்டும். அதே நேரம் எல்லா லோக அதிபதிகளையும் ஓடஓட விரட்டி அண்டங்களை உங்கள் பிடிக்குள் கொண்டு வர வேண்டும்.கொலை செய்யுங்கள்; தேவப் பெண்ணிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளுங்கள். கொள்ளையடியுங்கள்; போரிடுங்கள்; இப்படி செய்ய உங்களுக்கு சிவனே அதிகாரம் கொடுத்திருக்கிறார். அண்டமெல்லாம் உங்களுக்கு என வாக்களித்த பிறகு யாரோ ஒருவன் அதில் இருந்து ஆள என்ன தகுதி இருக்கிறது ? இவற்றைச் செய்யத் தயங்கினால், உங்களை எவனும் மதிக்கமாட்டான். புறப்படுங்கள் இப்போதே, என்றார். சூரபத்மன் அவரது காலில் விழுந்து பணிந்து புறப்பட்டான். அவர்களின் வாகனம் வித்தியாசமாக இருந்தது. சிவனால் சூரபத்மனுக்கு அருளப்பட்ட இந்திர விமானம் பறக்கும் சக்தியுடையது. அதை கோடி குதிரைகள் இழுத்துச் சென்றன. கோடி சூரியன்களின் பிரகாசத்தைக் கொண்டதாக அது விளங்கியது. சிங்கமுகன் ஏறிச் சென்ற தேரை பத்து லட்சம் யானைகள், பத்துலட்சம் குதிரைகள், பல பூதங்கள் இழுத்துச் சென்றன என்றால், அந்த ரதத்தின் வேகத்தைக் கேட்கவா வேண்டும். தாரகாசுரன் பத்தாயிரம் குதிரைகள் பூட்டப் பட்ட மற்றொரு பறக்கும் விமானத்தில் ஏறிச் சென்றான். இதர படையினர் கோவேறு கழுதை, ஒட்டகம், யானை, குதிரை என பல மிருகங்களை வாகனமாக்கி ஏறிச் சென்றனர். இந்த படைகள் பறந்து சென்ற தூரம் மட்டும் மூன்றுகோடி யோஜனை அளவுக்கு இருந்ததாம். (அதாவது கிட்டத்தட்ட 40 கோடி கிலோ மீட்டர் தூரம்.) அந்தளவுக்கு பரந்திருந்தது இந்த உலகம். ஒருவனுக்கு முதல் தேவை செல்வம். அது இருந்தால் தான் எவ்வளவு மக்கள் இருந்தாலும் வயிறார சாப்பிட முடியும். இந்த செல்வத்தைச் சம்பாதிப்பதில் முதலில் அக்கறை காட்டியது அசுரப்படை. எனவே அவர்கள் செல்வத்தை முழுமையாகக் கொள்ளையடிக்க சென்ற இடம் அளகாபுரி. இந்த பட்டணத்தின் தலைவன் தான் குபேரன். குபேரனின் ஊருக்குள் அத்துமீறி புகுந்தது ராட்சதப் படை.

தொடரும்


கந்தசஷ்டி விரதம்

கந்தர் சஷ்டி விரதம் ஸ்பெஷல் !
➖➖➖➖➖➖➖


வறுமையில் வாடிய முருகனடியார் ஒருவர் தினமும், அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியை பாராயணம் செய்து வந்தார்.
இருந்தாலும் வறுமை நீங்கவில்லையே... என வருந்தினார். செல்வ வளம் பெற, லட்சுமி குறித்த வேறு நுாலை பாராயணம் செய்ய வேண்டுமோ? என்ற சந்தேகம் எழுந்தது.

அதை தீர்க்க விரும்பிய அடியவர், காஞ்சிபுரம் புறப்பட்டார். பரமாச்சாரியாரை தரிசித்தார்.
''சுவாமி.... எனக்கு இப்போது, முதல் தேவை பணம் தான். கடன் சுமையால் கஷ்டப்படுகிறேன். வட்டி கட்டமுடியவில்லை. கந்தர் அனுபூதி பாராயணம், வறுமை போக்கும் என எனக்கு தோன்றவில்லை.
லட்சுமி கடாட்சம் பெற ஏதேனும் ஸ்லோகம் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்'' என்றார்.

பரமாச்சாரியார் அவரிடம், '' முன்ஜென்ம வினைப்பயன் நீங்கும் வரை நம்பிக்கைஉடன் பாராயணம் செய்ய வேண்டும். அதன் பின் பலன் கிடைக்கும். இன்னின்ன பலன் பெற இன்னின்ன பாராயணம் என்று அதில் இருக்கிறது. கந்தர் அனுபூதி நிச்சயம் செல்வ வளம் தரும்.''

கந்தர் அனுபூதியில் இதற்கு சான்று இருக்கிறதா சுவாமி?

சுவாமிகள் புன்முறுவலுடன், ''வெளியில் ஏன் தேட வேண்டும். பாட்டுக்குள்ளே சான்று இருக்கிறதே? கந்தர் அனுபூதியின் கடைசி அடியைச் சொல்லேன் பார்க்கலாம்''

அடியவர் கடைசி அடியை ராகத்துடன் 'குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்றார்.

'அதற்கு என்ன பொருள்?'

'குருவாய் வந்து அருள்புரிவாய் குகனே என்று பொருள்'

 பரமாச்சாரியார் சிரித்தபடி விளக்க ஆரம்பித்தார். ''வருவாய் அருள்வாய் என்றால் 'வா, வந்து அருள்புரிய வேண்டும்' என்பது ஒரு பொருள். இது தவிர, 'வருவாய் தா' என்றும் ஒரு பொருள் உண்டு இல்லையா? கந்தர் அனுபூதி பாராயணம் செய்தால் 'வருவாய் பெருகும்' என்பதில் இன்னுமா சந்தேகம்? வேறு ஸ்லோகம் தேவையில்லை. கந்தர் அனுபூதியை தொடர்ந்து பாராயணம் செய்ய செல்வ வளம் பெருகும்.
நன்றியுடன் விடைபெற்ற அடியவருக்கு கந்தரனுபூதியின் மகிமை புரிந்தது.

ஹர ஹர ஸங்கர.!
ஜய ஜய ஸங்கர....