புதன், 3 ஜூன், 2020

இன்று வைகாசி விசாக திருநாள். வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் உடனே கிடைக்கும்.

சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள்தான் வைகாசி விசாகம் ஆகும். அதனால்தான் முருகப் பெருமானுக்கு வைகாசி விசாகத்திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர்.

சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையை களைந்து அவர்களை காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். அவை தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டு சேர்த்தது.

புராணங்களின்படி சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது.

இது ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. வைகாசி மாதம்  விசாகம் நட்சத்திரம் தினத்தன்று இந்த அவதாரம் நிகழ்ந்தது. இதன் காரணமாக வைகாசி  விசாகம் தினம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால் சைவ மக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும்.

நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களை கொண்டாடும் பொழுதுதான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது. முருகனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.

பகை விலகும்.பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி ஐந்து வித எண்ணை ஊற்றி, ஐந்துவித புஷ்பம் சாற்றி, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும், அவனுக்கு பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

விசாக நட்சத்திர தினத்தன்று உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நல்லெண்ணையில் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்லன யாவும் நடைபெறும்.  பசும்பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் விசும்பும் வாழ்க்கை மாறி வியக்கும் விதத்தில் ஆயுள் கூடும்.

பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்க்கும் செயல்கள் எல்லாம்

சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறக்கும் எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும். மாம்பழத்தில் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சரும நோய் அத்தனையும் தீர்ந்தும் போகும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேனாலே அபிஷேகம் செய்து பார்த்தால் தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும்.

இதனால்தான் வைகாசி விசாகம் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் முருகன் திருத்தலங்களில் கோலாகல விழா கொண்டாடப்படுகிறது. விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்ற முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஆகும். இது ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமாகும்.

இது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும். மற்றொரு தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும். இத்தலம் தணிகை புராணம் எழுதிய நூலாசிரியர் ஸ்ரீகச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது.

சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும் லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கை தோற்றப்பொழிவு அன்று தரிசனமாகும்.  பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

கன்னியாகுமரி அம்மனுக்கு ‘ஆராட்டு விழா’ இந்நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமி மலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நடக்கும் விசாக திருவிழா தனித்தன்மை கொண்டது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள்.

விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் மண்ணை எடுத்து தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து சுயம்புநாதர் ஆலயத்தின் அருகில் குவிப்பார்கள். இதனால்  பாவ வினைகளும், நோய்களும் தீரும்.

செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும்.

வைகாசி மாதம் பவுர்ணமியும், விசாக நட்சத்திரமும் கூடிய உச்சி வேளையில் அறுக்கு இலையும், அரிசியும் தலையில் வைத்துக் கொண்டு உத்திரகோச மங்கை என்னும் தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் புனித நீராட வேண்டும். பின் ஆலயத்தின் உட்புறத்திலுள்ள அக்னி தீர்த்தத்தில் எள், அருகு, கோமியம் இவற்றை சிரசில் தெளித்துக் கொண்டு நீராடி கருவறையில் குடி கொண்டிருக்கும் மங்களநாதனுக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். பின் தான தர்மங்களை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
சாண்டில்ய ரிஷி

ஒருமுறை ஜமதக்னி, யக்ஞவல்கியர், வசிஷ்டர் ஆகியோர் மற்ற ரிஷி, முனிகளுடன் கலந்தாலோசித்து வரகத் என்ற யாகத்தை நர்மதைக் கரையில் செய்ய முனைந்தனர்.

அனைத்து முனிவர்களும் அதில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
.
ஆனால் வேள்வி தொடங்கும் முன்புவரை மகரிஷி காஷ்யபர் வந்து சேரவில்லை.

அவர் பங்கேற்பு இல்லாமல் யாகம் முடிவு பெறாது என்பதை ஏனைய முனிவர்டள் உணர்ந்தனர்.

அவரது பெயரை தர்ப்பைப் புல்லில் கிரந்த எழுத்துகளில் எழுதி பூஜை செய்து ஆவாஹன முறைப்படி அவரை எழுப்ப முயன்றனர்.

அப்போது அங்கு காஷ்யப முனியும் வந்து சேர்ந்தார்.

அங்கு நடத்திக் கொண்டிருக்கும் பூஜை விவரத்தை அவர் கேட்டறிந்தார்.

`தங்களது ஸங்கல்பம் விரயம் ஆகக் கூடாது!' என அவர்களுக்கு உரைத்தவர், மந்திரங்களைத் தானும் உச்சரித்தபடி கமண்டலத்திலிருந்து நீரை அந்த தர்ப்பைப் புல்லின்மீது தெளிக்கிறார்.

ஜடாமுடியும் மரவுரியும் தரித்த ஒரு முனிவர் அந்த தர்ப்பை புல்லிலிருந்து எழுந்து காஷ்யபரையும் மற்ற முனிவர்களையும் வணங்குகிறார்.

அந்த இளம் முனிவருக்கு `சாண்டில்யர்' என்ற பெயரை மகரிஷி காஷ்யபர் அவருக்கு சூட்டுகிறார்.

மகரிஷி உபமன்யு அந்த யாகத்தில் பங்கேற்றவரிடம்
காஷ்யபர் சாண்டில்யருக்கு தங்களது புதல்வி சாண்டிலாவை
திருமணம் செய்விக்க வேண்டி
கோரிக்கை வைக்க,
உபமன்யு மகரிஷி உடன்பட்டு
சாண்டிலாவின் விவாகம் சாண்டில்யருடன் நடத்தப்படுகிறது.

சாண்டில்யரும் சாண்டிலாவும் நீண்ட நாட்கள் அந்த நர்மதை தீரத்தில் தவம் புரிகின்றனர்.

இவரின் குருக்கள் கவுசிகர்
கௌதம மகரிஷி
கைசூர்ய காப்பியா
வாத்ஸய வைசரப்
குஸ்ஸிரி
கௌடிண்யா
அக்னிவாசா
வாத்யவமக்ஸயன்
வைஸ்தபுரியா
பரத்வாஜ் ஆகியோர்.

சாண்டில்யர் சாண்டில்ய கோத்திரத்தின் முன்னோடி ஆவார்.

சாண்டில்யர் சாண்டில்யா உபநிஷத்தினை எழுதியவர் ஆவார்.

சாண்டில்யா பக்தி சூத்திரத்தை எழுதிய பெருமையும் அவருக்கு உண்டு

பகவத புராணத்தின் கூற்றுப்படி, ஹஸ்தினாபுர மன்னர் பரிக்ஷித்
அர்ச்சுணனின் பேரன்
அபிமன்யுவின் மகன் பரிக்ஷித்.
மற்றும் துவாரக மன்னர் வஜ்ரா
கிருஷ்ணரின் பேரன் வஜ்ரா ஆவார்.
இவர்களின் சில மனோதத்துவ சந்தேகங்களை தீர்ப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

சாண்டில்ய மஹரிஷிக்கும், கிருஷ்ணனுக்கும் தொடர்புண்டு.

இவர் கிருஷ்ணனது வளர்ப்புத் தந்தையான நந்தகோபனது குடும்ப குரு
என்று புராணங்கள் சொல்கின்றன.

துவாரகை மன்னர் வஜ்ரனுக்கு ஆலோசனை சொல்ல
சாண்டில்ய ரிஷியை அழைத்ததால்,
இந்தத் தொடர்பு உறுதியாகிறது.

இந்த சாண்டில்ய ரிஷி 12 ஜோதி லிங்கங்களில் முதல் ஜோதி லிங்கமான
சோமநாதரை, பிரபாச க்ஷேத்திரத்தில் நிறுவினார்
என்று பல நூல்களில் கூறப்பட்டுள்ளது.

கஜினி முகம்மதுவால் 17 முறை படையெடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட
சோமநாதர் ஆலயம் இது.

தக்ஷனால் சபிக்கப்பட்டு, அதனால் தேய்ந்த சந்திரன், சிவனிடம் அடைக்கலாகி,
சாப விமோசனம் பெறுகிறான்.

சிவன் முடியில் பிறைச் சந்திரனாகத் தங்கி விடுகிறான்.
சந்திரனால் வழிபடப்பட்ட அந்த சிவ ரூபமே,
சோமநாதர்
என்றழைக்கப்பட்டது. 

இங்கு பிறைச் சந்திரனை வழிபடுவது விசேஷம்.

குறுந்தொகையில் கடம்பனூர்ச் சாண்டில்யனார் என்னும் பெயரில்
இடம் பெற்றுள்ள பாடலில்,

பிறைச் சந்திரனைக் கன்னிப் பெண்கள் தொழும் விவரம்
கொடுக்கப்பட்டுள்ளது என்பதே.

“வளையுடைத் தனையதாகிப் பலர் தொழச்
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே யன்னா”
(கு-தொ 307)

என்னும் அவரது பாடலில்

பெண்களது உடைந்த வளையலைப் போல
உருவத்துடன் பிறைச் சந்திரன் வானத்தில் தோன்றும் காட்சியையும்,
அதைப் பெண்கள் வழிபட்டதையும்
உவமையாகச் சொல்கிறார்.
ஶ்ரீ மஹாலிங்கஸ்வாமி மஹிமை:

"மஹாலிங்கம்!! மத்யார்ஜுனா!!" என்றபடி திருவிசைநல்லூர் க்ருஹத்திலிருந்து வெளியில் எட்டிப் பார்த்தார் ஶ்ரீதரஐயாவாள். பேய் மழை கொட்டிக் கொண்டிருந்தது. இம்மழையைத் தாண்டி, காவேரி வெள்ளம் ஓடும் வாய்க்காலைத் தாண்டி திருவிடைமருதூர் கோவிலுக்கு எப்படி போக முடியும்!! ஶ்ரீதர ஐயாவாளுக்கு ஒரே கவலை!! மஹாலிங்கத்தை தர்சிக்காமல் அன்னம் புசிப்பதில்லை என்ற வ்ரதத்தில் இருக்கும் ஶ்ரீதர ஐயாவாள் அன்றிரவு உபவாஸம் இருப்பதாகத் தீர்மாணித்துக்கொண்டார்!!

திடீரென்று ராத்ரி நேரத்தில் வீட்டுக் கதவை யாரோ படபடவென்று தட்டும் சப்தம்!! கதவைத் திறக்கிறார் ஶ்ரீதரர். திருவிடைமருதூர் மத்யார்ஜுனர் கோவில் சிவாச்சாரியார்!!

"அடாடாடாடா!! ஸ்வாமி!! இந்த கொட்ற மழைல நனைஞ்சுண்டு வந்துருக்கேளே!! உள்ளே வாங்கோ!! வாங்கோ!!" தொப்பலாக மழையில் நனைந்துகொண்டு வந்திருக்கும் மஹாலிங்கஸ்வாமி அர்ச்சகரை உள்ளே அழைத்துக்கொண்டு வந்தார் ஶ்ரீதர ஐயாவாள்!!

"மஹாலிங்கஸ்வாமி ப்ரஸாதம் கிடைக்காத நீங்க சாப்பிட மாட்டேள்ன்னு நேக்குத் தெரியும்!! இந்த மழையில நீங்க எப்படி வர முடியும்!! சரின்னு நானே வந்துட்டேன்!!" ஶ்ரீதர ஐயாவாள் கண்களில் ஜலம் தளும்பி வழிகிறது!! மஹாலிங்கத்தின் கருணையை நினைத்தா அல்லது சிவாச்சாரியாரின் அன்பை நினைத்தா!! இரண்டுமே கலந்து தான்!!

புது வஸ்த்ரம் கொடுத்து அவரை உடுத்திக்கச்சொல்லி விட்டு, இருவருமாக பேசிக்கொண்டே ஶ்ரீதர ஐயாவாளின் மனைவி பரிமாறிய அன்னைத்தை இருவரும் சாப்பிடனர்!! "ஆஹா!! ஸ்வாமி!! மழைல நினைஞ்சுண்டு வந்தது ரொம்ப பசிக்க ஆரம்பிச்சுடுத்து!! உங்க பார்யை கையாலே புசிக்கற அன்னம் தேவாம்ருதமா இருக்கு!!"

இருவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டின் கூடத்திலேயே படுத்துக்கொண்டனர்!! இருவரும் பேசிக்கொண்டே இருந்துவிட்டு எப்போது தூங்கினாரென்றே தெரியாதபடிக்கு ஶ்ரீதர ஐயாவாள் அசந்து விட்டார்!!

விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து பார்த்தால், பக்கத்தில் படுத்திருந்த சிவாச்சார்யாரைக் காணவில்லை.
"காலம்பற சீக்ரம் எழுந்து போய்ட்டார் போலருக்கே!! என்ன கார்யம்ன்னு தெரியல்லே!! நோக்கு ஏதாவது தெரியுமோ!! எப்போ புறப்பட்டார்ன்னு!!" தன் மனையாளிடம் கேட்டார் ஶ்ரீதர ஐயாவாள்.

"தெரியலியேந்நா!! நானும் உள்ள அசந்து தூங்கிட்டேன்!! சரி எழுப்ப வேண்டாமேன்னு கிளம்பிட்டார் போலருக்கு அண்ணா!! விடுங்கோ!! கோவிலுக்கு போறேளோன்னோ!! அங்க தான் இருப்பார்!! விஜாரிச்சுக்கலாம்!!" இது மனைவி.

"இல்லேடீ!! வாய்க்கால்லே வெள்ளமா ஜலம் ஓடறதேடீ!! எப்படி அவர் தாண்டி திருவிடைமருதூர்க்கு போவார்ன்னு தெரியல்லியே!!"

"ஏன்னா!! இதே வெள்ளம் தானே நேத்து ராத்ரியும் இருந்துருக்கும்!! எப்படி அவர் வந்தார்ன்னு நீங்க கேட்கல்லியே!!"

"அடாடாடா!! அது ஞாபகமில்லையே!! இந்த ப்ரளய ஜலத்துல மனுஷன் எப்படி நீந்திண்டு வந்தார்!! மஹாலிங்கம்!! மஹாலிங்கம்!!" என்றபடி அங்கலாய்த்துவிட்டு ஸ்நாநம் ஸந்த்யாவந்தனம் சிவபூஜை எல்லாம் முடித்து மத்யார்ஜூனேச்வரன் கோவிலுக்கு கிளம்பினார் ஶ்ரீதர ஐயாவாள்.

மழை நன்றாக விட்டிருந்தது!! வாய்க்காலில் முட்டிக்கால் அளவு ஜலம் ஓடிக்கொண்டிருந்தது!! எப்படியோ தாண்டி மத்யார்ஜுனர் கோவிலை அடைந்தார் ஶ்ரீதர ஐயாவாள்!!

நேராக மஹாலிங்கம் ஸந்நிதிக்கு சென்றார்!! அர்ச்சகரிடம் "ஏன் ஸ்வாமி!! மஹாலிங்கம் ஏதோ ரொம்ப களைப்பா இருக்கறாப்ல இல்லே!! மழை கொட்றதோல்லியோ!! ஒத்துக்கலை போலருக்கு!!" என்றார்!!

"இருக்கட்டும் ஸ்வாமி!! ஒரு நாள் தவறாத மஹாலிங்கம் ஸந்நிதியை தர்சிக்காத ப்ரஸாதம் வாங்காத நீங்க சாப்டதே இல்லே!! நேத்து ப்ரளயம் மாதிரி மழை!! என்னாலேயும் வந்து ப்ரஸாதம் கொடுக்க முடியல்லே!! என்ன பண்ணினேள்!! சிவாச்சாரியாரின் கேள்வியில் அதிர்ந்தார் ஶ்ரீதர ஐயாவாள்.

"ஸ்வாமி!! என்ன சொல்றேள்!! நீங்க தானே!! கொட்ற மழைல காவேரி வாய்க்காலைத் தாண்டி ஆத்துக்கு வந்து ப்ரஸாதம் கொடுத்தேள்!! புது வஸ்த்ரம் கூட கொடுத்தேன்!! அதைக் கட்டிண்டு எங்கூட சாப்டேள்!! விடியகாலம்பற தானே கிளம்பா போனேள்!! ராத்ரி எப்படி ப்ரளய ஜலம் மாதிரி ஓடற வாய்க்காலைத் தாண்டினேள்ன்னு கேட்கனும்ன்னு நினைச்சுண்ட்ருக்கேன்!!"

"என்ன சொல்றேள்!! நானா!! நான் வரவேயில்லையே!! இந்த மழைல வரமுடியல்லியேன்னு நீங்க என்ன பண்ணுவேளோன்னு நினைச்சுண்ட்ருந்தேனே!!"

"அப்போ!! வந்தது!!" மஹாலிங்கம் ஸந்நிதியில் பார்த்தால், நேற்று இரவு எந்த வஸ்த்ரத்தினை சிவாச்சாரியாருக்கு அளித்தாரோ, அதே வஸ்த்ரம் மஹாலிங்கத்தின் மேல்!!

ஶ்ரீதர ஐயாவாளுக்கு விதிர்விதித்து போய்விட்டது!! "ஆஹா!! ஆஹா!!அப்பா !! மஹாலிங்கம்!! மஹாலிங்கம்!! மத்யார்ஜுனா!! சங்கரா!! நீயா வந்தே!! எனக்காகக் கொட்ற மழைல நினைஞ்சுண்டு, உன் ப்ரஸாதத்தை நீயே கொடுத்து, புது வஸ்த்ரம் கட்டிண்டு, என் பக்கத்துலயே உட்கார்ந்து சாப்பிட்டு, என் கூடவே இருந்துண்டு, பரமேச்வரா!! பரமேச்வரா!! ஸர்வேச்வரா!! என்னால தாங்க முடியல்லே!!" இரண்டு கண்களும் ஜலத்தை ப்ரவாஹமாக பொழிந்தது!!

மஹாலிங்கத்தினுடைய அவ்யாஜ கருணையை என்னவென்று கூறுவது!! பக்தனுக்கும் பரமனுக்கும் இருக்கும் உறவே அலாதியானது!! பக்தனுக்காக பரமேச்வரன் எதையும் செய்வார் என்பதற்கான ப்ரத்யக்ஷ ஸாக்ஷியே ஶ்ரீதர ஐயாவாளுக்காக பரமேச்வரன் செய்தது!!

சிவ திவ்ய நாமங்கள், சிவ தோடயமங்கலம், சிவ நாம ஸங்கீர்த்தனம் பஜனை ஸம்ப்ரதாயத்தில் உயிர்ப்புடன் இன்றும் விளங்குவதற்கு  ஶ்ரீதர ஐயாவாளன்றோ காரணம்!!                                                                                                                                                                                                           
📕📕📕📕📕📕📕📕📕📕📕

*என் தடைப்பட்ட இமயப் பயணம்*
*பகுதி - 6*
*~~~~~~~~~~~~~~~~~~~~~~~*

     "நேற்று என் சகோதர அதிகாரியும் நானும் மிகுந்த ஆவலுடன் குறிப்பிட்ட அம்மரத்தடிக்கு சென்றோம். அங்கே இருந்த அந்தச் சாது அவரது கையைச் சோதித்துப் பார்க்க எங்களை அனுமதித்தார். அங்கு வடுவோ காயம் பட்ட அடையாளமோ இல்லை!

    "நான் ரிஷிகேசம் வழியாக இமயத்தின் தனிமையை நாடிச் செல்கிறேன்.' அந்தச் சாது எங்களுக்கு ஆசி கூறி உடனே புறப்பட்டார். அவருடைய புனிதத் தன்மையினால் என் வாழ்வு உயர்ந்ததாக உணர்கிறேன்."

    அந்த அதிகாரி பக்தி கலந்த ஆச்சரியத்துடன் கதையை முடித்தார்; அவரது அனுபவம் அவரை வழக்கத்தைவிட அதிகமாக நெகிழ வைத்திருந்தது. ஒரு கம்பீரமான சைகையுடன் அவர் அச்செய்தி வெளியாகி இருந்த பத்திரிக்கைத் துண்டை என்னிடம் கொடுத்தார். பரபரப்பான செய்திகளைத் திரித்துக் கூறும் பத்திரிக்கைகளுக்குரிய பாணியில் (அந்தோ, இந்தியாவில் கூட இந்நிலை இல்லாமலில்லை!) அப்பத்திரிகையின் நிருபர் அச்செய்தியை சற்று மிகைப்படுத்தியே இருந்தார்.சாதுவின் தலையே துண்டிக்கப்பட்டது போல அந்தச் செய்தி வெளியாகி இருந்தது.

    அமரும் நானும் தன்னைத் துன்புறுத்தியவனை,
கிறிஸ்துவைப் போன்று, மன்னிக்கும் தன்மை படைத்த அப்பெரிய யோகியைப் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று வருந்தினோம். இந்தியா, சென்ற இரண்டு நூற்றாண்டுகளாகப் பொருட் செல்வத்தில் ஏழையாக இருந்தாலும் அள்ள அள்ளக் குறையாத அருட் செல்வத்தை இன்றும் பெற்றுத்தான் உள்ளது; இந்தப் போலீஸ்காரரைப் போன்று சாதாரண உலக வாழ்க்கையில் ஈடுபட்ட மனிதர்கள் கூட எப்பொழுதாவது ஆன்மிகத்தின் சிகரங்களைச் சந்தித்து விட முடிகிறது.

     அவருடைய அதிசயமான கதையினால் எங்கள் அலுப்பைப் போக்கியதற்கு அந்த அதிகாரிக்கு நன்றி கூறினோம். அவர் எங்களை விட அதிர்ஷ்டசாலி என்பதை அவர் குறிப்பிட்டிருக்கலாம்; எவ்வித முயற்சியும் இன்றியே தெய்வீக ஒளி பெற்ற ஒரு மகானை அவரால் சந்திக்க முடிந்தது; எங்களுடைய தீவிரமான நாட்டம் ஒரு குருவின் திருவடிகளை அடையாமல் வன்மையான ஒரு போலீஸ் நிலையத்தில் முடிந்தது!

   இமயத்திற்கு மிக அருகில் இருந்தும், நாங்கள் பிடிபட்டு விட்டதால், எவ்வளவு தூரத்திலிருந்தோம்; சுதந்திரத்தை நாடும் எனது அவா இரு மடங்காகி விட்டது என்று அமரிடம் கூறினேன்.

    "சந்தர்ப்பம் கிடைத்ததும் நழுவிவிடலாம். நாம் புனிதமான ரிஷிகேசத்திற்கு நடந்தே செல்லலாம்." நான் ஊக்கமூட்டும் வகையில் புன்முறுவல் செய்தேன்.

    ஆனால் பலமான ஆதாரமாயிருந்த எங்கள் பணம் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டதால் என் தோழன் நம்பிக்கை இழந்தவனாகிவிட்டன்.

     "நாம் இந்த ஆபத்தான காட்டு பிரதேசங்களில் நடக்கத் தொடங்கினால் நாம் மகான்கள் வசிக்கும் இடத்திற்குப் பதிலாக புலிகளின் வயிற்றுக்குள் சென்று முடிவோம்."

     அனந்தாவும் அமரின் சகோதரனும் மூன்று நாட்கள் கழித்து வந்து சேர்ந்தனர். அமர் தன் சகோதரனை பாசம் கலந்த நிம்மதியுடன் வரவேற்றான். நான் சமாதானமடையவில்லை. அனந்தாவிற்கு என்னிடமிருந்து கடுமையான வசைச் சொற்களைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை.

    "உன் உணர்ச்சியை நான் புரிந்து கொள்கிறேன்," என் அண்ணன் ஆறுதலாக  மொழிந்தான். "நான் உன்னிடம் கேட்பதெல்லாம், நீ என்னுடன் காசிக்கு வந்து ஒரு முனிவரைச் சந்திக்க வேண்டும். பிறகு கல்கத்தாவிற்கு வந்து மிகுந்த துக்கத்தோடு இருக்கும் நம் தந்தையுடன் சில நாட்கள் தங்க வேண்டும். பிறகு நீ இங்கே  உன் குருவைத் தேடுவதை மறுபடி தொடங்கலாம்.

-பரமஹம்ஸ யோகானந்தர்

📕📕📕📕📕📕📕📕📕📕📕

தொடர்ந்து படிப்போமாக🙏
நமது #ஆலயங்களெல்லாம் எப்படி #மசூதிகளாக மாற்றப்பட்டது என்று பாருங்கள் நடுநிலை ஹிந்துக்களே...

நாம் முகலாயர்களால் கட்டப்பட்டது என நம்பிக் கொண்டிருக்கும் அத்தனை கட்டிடங்களும் அது தாஜ்மஹாலாக இருந்தாலும், தில்லி செங்கோட்டையாக இருந்தாலும், ஜூம்மா மசூதியானாலும், குதுப்மினாரானாலும் அல்லது எந்த முஸ்லிம்களால் கட்டப்பட்டவை எனப்படும் கோட்டைகள், மசூதிகளானாலும் சரி. அவை ஹிந்து அரசர்களால் கட்டப்பட்டவையே என ஆதாரங்களுடன் எடுத்து விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் முகலாய ஆட்சியில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிற எந்தக் கட்டிடமும் முகலாயர்களால் கட்டப்படவேயில்லை என்கிறார் வரலாற்றாசிரியர் K.M. Elliot. The so called Mogul rule is the biggest fraud of Indian history என்கிறார் அவரது The History of India as told by its Historians book

 முகலாயர்கள் ஹிந்து அரசர்களால் கட்டப்பட அரண்மனைகள் அல்லது ஆலயங்களின் மேல்பகுதியில் மட்டுமே மாற்றங்களைச் செய்து அதனைத் தாங்கள் கட்டியதாகக் காட்டிக் கொண்டார்கள். உதாரணமாக தாஜ்மஹாலில் செதுக்கப்பட்டிருக்கும் குரானிய எழுத்துக்கள்.

பொ.யு. (பொது முகம்)பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹால் உண்மையில்

ராஜபுத்திர அரசரான ஜெய்சிங்கிற்கு
 சொந்தமான

*"தேஜோ மஹாலயா"*

 என்றழைக்கப்பட்டதொரு அரண்மனை.. (அதனை சிவன் கோவில் என்றும் கூறுவதுண்டு). ராஜா ஜெய்சிங், ஷாஜஹானுக்கு அடிபணிந்து கப்பம் கட்டி வந்தவர்.

*ஷாஜஹான் அவரது மனைவி மும்தாஜின் மரணத்தை சாக்காக வைத்து அவரிடமிருந்து அந்த அரண்மனையை பிடுங்கிக் கொண்டார்.* ஷாஜஹானின்  "காதல்" மனைவியான மும்தாஜ் 1628-ஆம் வருடம் பாகல்பூரில் இறந்து அங்கேயே புதைக்கப்பட்டார். *ஆறுமாதம் கழித்து அதனைத் தோண்டியெடுத்து "தாஜ் மஹால்" என்றழைக்கப்படுகிற அரண்மனையின் நிலவறையில் மீண்டும் புதைக்கப்பட்டார்.* அப்படியானால் தாஜ்மஹால் ஆறே மாதத்தில் கட்டிமுடிக்கப்பட்ட ஒன்றா என்ன? *ஆனால் அதன் பின்னர் கிட்டத்தட்ட 22 வருட காலம் தாஜ்மஹால் மூடிக்கிடந்தது.* ஷாஜஹான் அதில் இன்றைக்கு நாம் காண்கிற மாற்றங்களைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருந்தார்.

தாஜ்மஹால் 1661-ஆம் வருடம் திறந்து வைக்கப்பட்டதாகக் கூறுவது மற்றொரு பொய்.

அவுரங்கஷீப் 1658-ஆம் வருடமே ஷாஜஹானை சிறையிலடைத்துவிட்டார் என்பதனைக் கவனிக்கையில் அது ஒரு பித்தலாட்டம் என்று தெரியவரும்.

 மேலும் ஷாஜஹான் ஒரு வடிகட்டின கஞ்சன். கிட்டத்தட்ட நூறு அறைகளும், சுரங்க வழிகளும் கொண்ட தாஜ்மஹாலைக் கட்டி முடிக்க அன்றைக்கே பல கோடி ரூபாய்கள் வேண்டும்.

அத்தனை பணத்தை செலவு செய்து ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜிற்காக தாஜ்மஹாலைக் கட்டினார் என்பது பெரும் புளுகு. அவரது அரண்மனை அந்தப்புரத்தில் ஏறக்குறைய 5000 அடிமைப் பெண்கள் இருந்தார்கள். ஷாஜஹானுக்கும் அவரது மகளுக்கும் இருந்த தகாத உறவு நிரூபிக்கப்பட்ட ஒன்று. அப்படியாகப்பட்ட மனிதர் 25 வருடங்களாக தாஜ்மஹாலைக் கட்டினார் என்பது அண்டப்புளுகுதான். ஆனால் அப்படித்தான் நாம் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம்.

ஷாஜஹான் ஒன்றும் பணக்கார அரசருமல்ல. அவரது ஆட்சி அமைதியானதாகவும் இருக்கவில்லை. ஷாஜஹானின் 30 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் 48 போர்கள் நடந்தன. தாஜ்மஹாலில் நடந்த குரானிய வசனங்களைப் பொருத்தும் வேலைகளைக் கண்ட 'டாவர்னியர்' என்கிற ஃப்ரெஞ்சுக்காரர் சாதாரண சாரம் கட்டுவதற்கு மரம் இல்லாமல் செங்கற்களைக் கொண்டு சாரம் கட்டியிருந்ததாகக் கூறுகிறார்.

 இவ்வளவு செலவு செய்து தாஜ்மஹாலைக் கட்டுகிற ஷாஜஹானுக்கு மரம் வாங்கக் கூடக் காசில்லை என்பது ஆச்சரியம்தான்.*

*இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்ட எத்தனை திட்டமிடல் இருந்திருக்க வேண்டும்? எவ்வளவு வரைபடங்கள் வரைந்திருக்கப்பட வேண்டும்? அப்படி எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை.... !

 ஷாஜஹான் தும்மினால் கூட எழுதி வைக்கும் அவரது வரலாற்றாசிரியர்கள் ஒருவர் கூட இந்தக் கட்டிடம் கட்ட நிகழ்ந்த திட்டமிடல்களை, செலவுகளைக் குறித்து ஒருவார்த்தை கூட எழுதவில்லை.

அப்படி எதுவும் நடந்திருந்தால்தானே எழுதி வைப்பார்கள்.

இன்றைக்கு இஸ்லாமிய கட்டிடக் கலையாக அறியப்படுகிற கும்மட்டங்கள் யாவும் ஹிந்துக் கட்டிடக்கலையே..!!* என்று ஆராய்ந்து முடிவிற்குக் வந்திருக்கிறார்கள்.

*They, the mugals and muslims in general, highjacked the hindu architecture and announced it as their own என்பது அவர்களின் இறுதியான முடிவு.*

*இஸ்லாம் பரவத் துவங்கிய நாளிலிருந்து கொலையும், கொள்ளையும் மட்டுமே நடத்தி வந்தவர்களுக்கு தங்களுக்கென ஒரு கட்டிட பாணியை உருவாக்கிக் கொள்ள எங்கே நேரமிருக்கும்?*

தாங்கள் வென்ற இடங்களில் இருந்த கட்டிடங்களை தங்களுடையதாக அறிவித்துக் கொண்டார்கள். படையெடுத்து வந்த பெரும்பாலான முஸ்லிம்கள் படிப்பறிவில்லாதவர்கள். தாஜ்மஹாலைப் போன்றதொரு மாபெரும் கட்டிடத்தைக் கட்டுவதற்கான கற்பனையோ அதற்கான கணித அறிவோ இல்லதவர்கள் அவர்கள்.

*ஆனால் இந்திய அரசர்கள் காலம்காலமாக பெரும் அரண்மனைகளையும்,  பேராலயங்களையும் கட்டியவர்கள். அவர்களிடம் பணிபுரிந்த ஹிந்து கட்டிடக் கலைஞர்கள் பெரும் திறமைசாலிகள். இந்தியாவிற்கு வந்தேறிய மொகலாயர்களிடம் அவர்களைப் போன்றவர்கள் அறவே இல்லை. இன்றைக்கு இருக்கும் முஸ்லிம் கட்டிடக் கலைஞர்கள் கூட முன்னால் ஹிந்துக்கள்தான். ஷாஜஹானால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் அவர்கள்.

இந்திய வரலாறெங்கும் நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட சுவாரசியமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆரம்பத்தில் நான் இதையெல்லாம் நம்பவில்லை. ஆனால் இதன் பின்னனியில் செய்யப்பட்டிருக்கும் ஆராய்ச்சிகள் சாதாரணமானவையல்ல என்று உணர்ந்த பின்னர் மேலும், மேலும் படிக்கத் தூண்டியது. 
..............🙏...........
படித்ததில் பிடித்த து

செவ்வாய், 2 ஜூன், 2020

விநாயகர் பெயர்கள்

கணங்கள் என்போர்  பதினெட்டு இனக்குழுக்கள் ஆவர்.

இவர்களை பதினெண் கணங்கள் என்பர்.

இவர்களுக்கு அதிபதி  விநாயகர் கணபதி என்று அழைக்கப்பெறுகிறார்.

விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயக புராணம் கூறுகிறது.

இந்தவகையில் விநாயரை வணங்கும்போது இவரின் 12 பெயர்களை கூறி வழிபட்டால் 12 அவதாரங்களின் பலன் கிடைக்கும்.

விநாயகரின் 12 அவதாரங்கள்

வக்ரதுண்ட விநாயகர்:

இவர் உலகம் ஒவ்வொரு முறை அழியும் போது தோன்றி, மீண்டும் உலகத்தை படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்ரன் (சிவவடிவம்) ஆகியோருக்கு அருளுவார்.

கஜானனபவிநாயகர்:

சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர்.
விக்கிரனபராஜர்: காலரூபன் என்ற அரக்கனை கொல்வதற்காக பிறந்தவர்.

மயூரேசர்:

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர்.

உபமயூரேசர்:

சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்தபோது அவனை அழித்தவர்.

பாலச்சந்திரர்:

தூமராசன் என்ற அசுரனை கொன்றவர்.

சிந்தாமணி:

கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புத பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர்.

கணேசர்:

பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, 5 முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர்.

கணபதி:
கஜமுகாசுரனை வென்றவர்.

மகோற்கடர்:

காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்.

துண்டி:

துராசதன் என்ற அசுரனை வென்றவர்.

வல்லபை விநாயகர்:

மரீச முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர்.

இதைத் தவிர்த்து விநாயகரை 32 விதமான மூர்த்தங்கள் பெற்று விளங்குகிறார். அந்த மூர்த்தங்களின் பெயர்கள்

1. பால கணபதி

பால" என்பது "இளம்" அல்லது "சிறு பராயம்" எனப் பொருள்படும். கணபதியைச் சிறு பராயத்தினராகக் கொண்டு வழிபடுவதற்கான வடிவம் ஆகையால் இதற்கு "பால கணபதி" எனப் பெயர் ஏற்பட்டது.

2. தருண கணபதி

நண்பகல் தோன்றும் சூரியன் போன்ற நல்ல சிவந்த திருமேனியையும் யானை முகத்தையும் எட்டுத் திருக்கரங்களையும் உடையவர். கைகளில் பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த தன்கொம்பு, நெற்கதிர், கரும்பின் துண்டு என்பவற்றை உடையவர்.

3. பக்தி கணபதி

நிறைமதி போன்ற வெண்மைநிறம் உடையவராக தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், பாயச பாத்திரம் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும் உடையவர்.

4. வீர கணபதி

சிவந்த திருமேனியையும், சிறிது சினந்த திருமுகத்தையும் உடையவர். வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறையும் பதினாறு திருக்கரங்களிலும் கொண்டவர்.

5. சக்தி கணபதி

செவ்வந்தி வானம் போன்ற நிறமுடையவராக, பச்சைநிற மேனியையுடைய தேவியைத் தழுவிக்கொண்டு இருப்பார். பாசம், பூமாலை இவற்றைத் தாங்கிய திருக்கரத்துடன் அபயகரமும் உடையவர்.

6. துவிஜ கணபதி

சந்திரன் போன்ற வெண்மை நிறமும் நான்கு முகமும் கொண்டவர். நான்கு திருக்கரங்களிலும் முறையே புத்தகம், அட்சமாலை, தண்டம், கமண்டலம் இவற்றைத் தரித்தவர். மின்னற்கொடிபோல விளங்குகின்ற கைவளையல்களை உடையவர்.

7. சித்தி கணபதி

பொன்கலந்த பசுமை நிறமுடையவரும் மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பரசு இவற்றை நான்கு திருக்கரங்களிலும் துதிக்கையுள் எள்ளுருண்டையையும் கொண்டு விளங்குகிறார்.

8. உச்சிட்ட கணபதி

இந்தத் திருவுருவத்தின் நிறம் குறித்து நூல்களில் வெவ்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. "மந்திர மகார்ணவம்" என்னும் நூலில் உச்சிட்ட கணபதியின் நிறம் சிவப்பு எனக் காணப்பட, உத்தர காமிகாகமம் கருமை என்கிறது.

வேறு சில நூல்கள் இத்திருவுருவத்தின் நிறம் நீலம் என்கின்றன.

உச்சிட்ட கணபதி வடிவத்தில் கணபதிக்கு இடப்புறத்தில் தேவியின் உருவம் காணப்படும்.

பல எடுத்துக்காட்டுகளில் தேவியின் உருவம் கணபதியின் இடது தொடைமீது இருக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளது.

பெரும்பாலும் தேவியின் உருவம் ஆடைகள் அற்ற நிலையிலேயே இருக்கும்.

மிக அரிதாக ஆடை அணிந்தபடி இருப்பதும் உண்டு.

இவ்வடிவத்தில் கணபதிக்கு ஆறு கைகள் உள்ளன. இவற்றுள் ஐந்து கைகளில் நீலோற்பலம், மாதுளம் பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை என்பவற்றை ஏந்தியிருப்பார். ஆறாவது கை தேவியைத் தழுவியிருக்கும்.

9. விக்ன கணபதி

பொன்நிற மேனியராக சங்கு, கரும்புவில், புஷ்பபாணம், கோடரி, பாசம், சக்கரம், கொம்பு, மாலை, பூங்கொத்து, பாணம் முதலியவற்றை திருக்கரங்களில் கொண்டு விளங்குகிறார்.

10. க்ஷிப்ர கணபதி

செவ்வரத்தம் பூப்போன்ற அழகிய செந்நிற மேனியோடு, தந்தம், கற்பகக்கொடி, பாசம், ரத்னகும்பம், அங்குசம் இவற்றை கைகளில் ஏந்தியவண்ணம் விளங்குகிறார்.

11. ஏரம்ப கணபதி

விநாயகரின் ஐந்து முகங்களைக் கொண்ட வடிவம். நேபாளத்தில் இவ்வடிவம் மிகவும் புகழ் பெற்றது..

விநாயகக் கடவுளுக்கான தாந்திரிய வழிபாட்டு முறையில் இவ்வடிவம் முக்கியமானது.

12. லட்சுமி கணபதி

எட்டுக் கைகளிலும் கிளி, மாதுளம்பழம், கலசம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, கட்கம், வரதம், இவற்றையுடையவரும் வெண்மை நிறத்தோடு நீலத் தாமரைப் பூவை ஏந்திய இரு தேவிமார்களோடு விளங்குவர்.

13. மஹா கணபதி

செங்கதிர் போன்ற நிறத்தோடு திருக்கரங்களில் மாதுளம்பழம், கதை, கரும்பி, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பலம், நெற்கதிர், தந்தம், ரத்னகலசம், இவற்றைத் தரித்தவரும், முக்கணனை உடையவரும், பிறையை சூடியவருமாக மடிமீது எழுந்தருளியிருக்கிற தாமரையை ஏந்திய தேவியோடு விளங்குவர்.

14. விஜய கணபதி

பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம், இவற்றைத் தரித்தவரும் பெருச்சாளி வாகனத்தில் வீற்றிருப்பவரும் செந்நிறமானவராகவும் விளங்குவர்.

15. நிருத்த கணபதி

பொன்போன்ற நிறத்தோடு மோதிரங்களணிந்த விரல்களையுடைய கைகளால் பாசம், அங்குசம், அபூபம், கோடரி, தந்தம் இவற்றைத் தரித்தவருராகவும் விளங்குவர்.

16. ஊர்த்துவ கணபதி

நீலப் பூ, நெற்பயிர், தாமரை, கரும்பு வில், பாணம், தந்தம் இவற்றையுடையவர். பொன் வண்ணமானவர். பச்சைநிற மேனியோடு விளங்குகின்ற தேவியைத் தழுவியிருப்பவர்.

17. ஏகாட்சர கணபதி

செந்நிற மேனியோடு செம்பட்டாடையுடன் செம்மலர் மாலை அணிந்து முக்கண்ணுடன் பிறையை சூடியிருப்பார். மாதுளம் பழம், பாசம், அங்குசம், வரதம், இவைகளை தாங்கிய கரங்களையுடையவர். யானை முகம் உடையவர். பத்மாசனத்தில் வீற்றிருப்பவர்.

18. வர கணபதி

செவ்வண்ணமானவர், யானைமுகம் உடையவர், முக்கண் உடையவர், பாசம் அங்குசம் என்பவற்றோடு விளங்குவர்.

19. திரயாக்ஷர கணபதி

திரயாக்‌ஷர கணபதி பொன்னிற மேனியுடன் அசைகின்ற காதுகளில் சாமரையணிந்து நான்கு கரங்களிலும் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றைத் தாங்கிய வண்ணம் துதிக்கையில் மோகத்துடனும் விளங்குவார்.

20. க்ஷிப்ரபிரசாத கணபதி

பாசம், அங்குசம், கல்பலதை, மாதுளம்பழம், தாமரை, தருப்பை, விஷ்டரம் இவற்றைத் தரித்தவர். திருவாபரணங்களை அணிந்தவர். பேழை வயிற்றையுடையவர்.

21. ஹரித்திரா கணபதி

மஞ்சள் நிறமானவர். நான்கு கரங்களையுடையவர். அவற்றில் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் இவற்றைத் தரித்தவர்.

22. ஏகதந்த கணபதி

பேழை வயிற்றுடன், நீலமேனியர், கோடரி, அட்சமாலை, இலட்டு, தந்தம் இவற்றையுடையவர்.

23. சிருஷ்டி கணபதி

பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைக் கரங்களில் ஏந்தியவர், பெருச்சாளி வாகனத்தை உடையவர். சிவந்த திருமேனியர்.

24. உத்தண்ட கணபதி

நீலம், தாமரை, மாதுளம் பழம், கதை, தந்தம், கரும்புவில், இரத்தினகலசம், பாசம், நெற்கதிர், மாலை இவற்றை ஏந்திய பத்துக்கைகளை உடையவர். அழகிய தாமரைப் பூவை ஏந்திய பச்சை மேனியளாகிய தேவியால் தழுவப்பெற்றவர்

25. ரணமோசன கணபதி

பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தரித்தவர். வெண்பளிங்கு போன்ற மேனியர். செந்நிறப் பட்டாடை உடது்தியவர்.

26. துண்டி கணபதி

அட்சமாலை, கோடரி, இரத்தினகலசம், தந்தம் இவற்றை ஏந்தியவர்.

27. துவிமுக கணபதி

தந்தம், பாசம், அங்குசம், இரத்தினபாத்திரம் இவற்றைக் கையில் ஏந்தியவர். பசுநீலமேனியர். செம்பட்டாடையும். இரத்தின கிரீடமும் அணிந்தவர். இருமுகம் உடையவர்.

28. மும்முக கணபதி

வலது கைகளில் கூரிய அங்குசம், அட்சமாலை, வரதம் இவற்றை உடையவர். இடது கைகளில் பாசம், அமுதகலசம், அபயம் இவற்றை உடையவர். பொற்றாமரையாசனத்தின் நடுப் பொகுட்டில் மூன்ற முகங்களோடு எழுந்தருளியிருப்பவர். புரசம், பூப் போன்ற சிவந்த நிறம் உடையவர்.

29. சிங்க கணபதி

வீணை, கற்பக்கொடி, சிங்கம், வரதம் இவற்றை வலது கைகளில் தாங்கியவர். தாமரை, இரத்தின கலசம், பூங்கொத்து, அபயம் இவையமைந்த இடதுகைகளை உடையவர். வெண்ணிறமான மேனியர். யானைமுகவர். சிங்க வாகனத்தில் எழுந்தருளியிருப்பவர்.

30. யோக கணபதி

யோக நிலையில் யோகபட்டம் தரித்துக்கொண்டு, இளஞ்சூரியன் போன்ற நிறத்தோடு, இந்திரநீலம் போன்ற ஆடையை உடுத்திக்கொண்டு, பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு இவற்றை ஏந்தி இருப்பவர்.

31. துர்க்கா கணபதி

சுட்ட பசும்பொன்னிறம், எட்டுக் கை, பெரியமேனி, அங்குசம், பாணம், அட்சமாலை, தந்தம் இவற்றை வலது கைகளில் ஏந்தியவர். பாசம், வில், கொடி, நாவற்பழம் இவற்றை இடது கைகளில் உடையவர். செந்நிற ஆடையுடன் விளங்குபவர்.

32. சங்கடஹர கணபதி

இளஞ்சூரியன் போன்ற வண்ணத்துடன், இடது பாகத் தொடையில் அம்மையை உடையவர். அம்மை பசிய மேனியவளாக, நீலப் பூவை ஏந்திய இருப்பாள். வலது கையில் அங்குசம் வரதம் உடையவர். இடது கையில் பாசம், பாயசபாத்திரம் ஏந்தியவர். செந்தாமரைப் பீடத்தில் நிற்பவர். நீலநிறமான ஆடையணிந்தவர்.
*லிங்க புராணம் ~ பகுதி — 06*

         ருத்திரர் தோற்றம்
 ======================

பிரம்மன் தவம் மேற்கொண்டு தன் படைப்புத் தொழிலைத் தொடங்க., கொடிய நஞ்சுடை பாம்புகள் தோன்றின. அதனால் வேதனைப்பட்ட அயன் உயிரை விட., பிரம்மனின் ஆவி பதினோரு ருத்திரராகியது. அழுது கொண்டே தோன்றியதால் அவர்கள் ருத்திரர் எனப்பட்டனர். ஈசன் தோன்றி பிரம்மனை உயிர்ப்பித்தார். எழுந்த பிரம்மன் சிவபெருமானைத் துதிக்க ஒவ்வொரு சமயமும் ஒவ்வோர் உருவில் பரமன் காணப்பட்டான். சத்தியோஜாதம்., வாமதேவம்., தத்புருஷம்., அகோரம்., ஈசானம் என்ற வடிவங்களில் தோன்றியதுடன் காயத்திரியையும் தோற்றுவித்தார். பரமன் பிரம்மனிடம் துவாபர யுகத்தில் வியாசர் தோன்றி வேதங்களைப் தொகுத்தளிப்பார் என்றார். என்னிடம் தோன்றிய நால்வர் ஞானத்தை அனைவருக்கும் உணர்த்துவதோடு அவர்களும் சிறந்த ஞானம் பெற்று கைலையங்கிரியை அடைவர். திருமாலும்., நீயும்., இந்திரனும்., லிங்கபூஜை செய்து கிடைத்தற்கரிய பேறு பெறுவீர்களாக என்று கூறி மறைந்தார். இவ்வுடலைப் புனிதம் ஆக்குபவை., ஆற்றில் நீராடல்., அக்கினிப் பிரவேசம்., மந்திரங்களை உணர்ந்து நடத்தல் ஆகும். நீராடும் போது வருணனையும்., சிவனையும் பக்தியுடன் தியானிக்க வேண்டும்.

தர்பை., பலாச இலை., நறுமண மலரை நீரில் தோய்த்து சிரசில் தெளித்துக் கொள்ள வேண்டும். பிரணவத்தை உச்சரித்து நெற்றி, கைகள், மார்பு, வயிறு தோள்களிலும் கழுத்துகளிலும் விபூதியைப் பக்தியுடன் தரித்துக் கொள்ள வேண்டும். பிராணாயாமம் செய்து உடலைப் புனிதமாக்க வேண்டும். அதே போல கைகளில் நீர் ஏந்தி மந்திரம் ஜபித்து மும்முறை அர்க்யம் விட வேண்டும். ஆசமனம் செய்து சுத்தாசனத்தில் அமரவேண்டும். பட்டு., கம்பளி., மான்தோல்., ஆகியவற்றின் மீது அமரலாம். தர்ப்பையின் மீது அமர்தல் சிறப்புடையது. பவித்திரம் அணிந்து வலது முழங்கால் மீது இடதுகையின் மீது வலதுகையை வைத்து சங்கல்பம் செய்து ஆயிரத்தெட்டு முறை காயத்திரி ஜபிக்க வேண்டும். பின்னர் பித்ருக்களுக்கு., முனிவர்களுக்கு., தேவர்களுக்கு தர்ப்பணம் செய்யது., பிரம்ம யஜ்ஞம் செய்ய வேண்டும். விநாயகரையும்., முருகனையும் பிம்பத்தில் ஆவாகனம் செய்து உமாமகேஸ்வரனைத் தியானித்து வாசம் கொண்ட நீரால் மந்திர ஜபத்துடன் அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்து ஆடை ஆபரணங்களை அணிவித்து., தூய மலர் கொண்டு அர்ச்சித்து., தூப தீப நைவேத்தியங்களால் ஆராதித்துக் கற்பூரம் காட்டித் தரிசிக்க வேண்டும்.

பரப்பிரம்மம் இருபத்தாறாம் தத்துவம் :

அப்பிரம்மத்தை நாடும் உயிர் இருபத்தைந்தாம் தத்துவம்.
அவ்வியத்தம் இருபத்தி நான்காம் தத்துவம்.
மகத்தத்துவம்., அலங்காரம்., பஞ்ச தன்மாத்திரைகள் ஐந்து., ஞானேந்திரியங்கள் ஐந்து., கர்மேந்திரியங்கள் ஐந்து., மனம்., பஞ்சபூதங்கள் ஆகிய இருபத்திரண்டும் சேர்ந்து இருபத்து மூன்று தத்துவங்களாகும்.
இருபத்தாறாம் தத்துவமாய் நின்ற தனி முதலே கர்த்தா.
அவரிடமிருந்து தோன்றிய மூவரும் இவ்வுலகை நடத்திச் செல்கின்றனர்.

தொடரும்.....

*தேவ கணார்சித ஸேவித லிங்கம்*
*பாவைர் பக்தி பிரேவச லிங்கம் |*
*தினகர கோடி ப்ரபாகர லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் ||*
ஸ்ரீதேதியூர் பெரியவா  அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம் ஸ்ரீகாயத்ரீ மகிமை

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேதியூர் சாஸ்திரிகள் குடும்பத்துடன் ரயிலில் பயணிக்கும்போது ஸந்த்யாகாலத்தில் ரயில் மாயவரம் ஸ்டேஷன் அடைந்தது. சாஸ்திரிகளும் ஸந்த்யாவந்தனம் செய்ய ரயிலை விட்டு இறங்கி ஸ்தலசுத்தி செய்து விபூதி இட்டுக்கொண்டு அனுஷ்டானத்தை தொடங்கி காயத்ரி ஜபம் செய்ய தொடங்கினார். ஜபத்தில் லயித்த சாஸ்திரிகள் சூழ்நிலையை மறந்தார்!  ரயில் கிளம்பும் நேரம் ஆனதும்  Guard பச்சைக்கொடி காட்ட Angloindian driver ரயிலை Start செய்ய தயாரானார். விசிலும் அடித்தார். இதற்குள் ரயில் புறப்படும் நேரம் இது நீங்கள் உங்கள் கணவரின் ஜபத்தை சீக்ரம் முடிக்கச்சொல்லி ரயிலில் ஏறச்சொல்லுங்கள்! இல்லையெனில் ரயிலில் அவர் ஏறமுடியாது  என்று சக பயணிகள் பதற்றபடுத்த மாமியும் ஜபத்தை நடுவில் நிறுத்தமாட்டார் சாஸ்திரிகள் என்று கூறி தானும் பெட்டி சாமான்களுடன் இறங்கி ஜபம் பண்ணும் தன் கணவர் அருகில் போய் நின்றுகொண்டார்! இதற்குள் பலமுறை ப்ரயத்தனம் செய்தும் நின்ற இரயில் கிளம்ப மாட்டேன் என மக்கர் செய்ய Driverம் ஏதோ Technical snag என்று SM / guard ஆகியோரை கலந்து ஆலோசிக்க தொடங்கினார். இதற்கிடையில் நித்யம் செய்யும் ஆவர்த்தி பூர்த்தியாகி கண் திறந்த சாஸ்திரிகள் தன்னருகில் பெட்டியுடன் நிற்கும் மனைவியை பார்த்து நீ ஏன் இறங்கினாய்? என்று கேட்டு, வா ஏறிக்கொள்வோம்! என்று மாமியுடன் மீண்டும் ரயிலில் ஏறி அமர்ந்த சில நிமிடங்களில் கிளம்ப மறுத்த ரயிலை start. செய்ய மீண்டும் ஒருமுறை Driver  முயற்சிக்க ரயில் திடுக்கென்று கிளம்பியது!

சாஸ்திரிகள் ஜபத்தை நிறுத்தவில்லை!

காயத்ரி மஹிமை ரயிலை மீண்டும் ஓடச்செய்தது அதே இடத்தில் நாம் இருந்தோமேயானால் ஐயோ ரெயில் கிளம்பிவிட்டதே என்று அலறி அடித்துக்கெண்டு காயத்ரீயை விட்டுவிட்டு ரெயிலைபிடித்துக்கொள்வோம் ஆனால் அவர் மகான் ரெயிலை விட்டு விட்டு காயத்ரீயைப்பிடித்தால் காயத்ரீ அவரை விடாமல் காப்பாற்றினாள்.இதிலிருந்து அவர் நமக்கு சொல்லும் பாடம் நீ எதை விட்டாலும் காயத்ரீயை விடாதே உன்னை யார் விட்டாலும் காயத்ரீ உன்னை விடாது.
#தெரிந்த #ஹனுமான் #தெரியாத #விஷயங்கள்....    

*சிவபெருமான் தன் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது ராம நாமத்தை*
*உச்சரித்து கொண்டு வந்தார். பார்வதி தேவி,* *எம்பெருமானை*
*பார்த்து கேட்டாள்,* *“சுவாமி,நீரே* *எல்லோருக்கும் மேலான கடவுள். அப்படியிருக்க, நீர் ஏன்* *இன்னொரு கடவுளின் பெயரை சொல்கிறீர்.”*
*சிவன், அதற்கு பதில் சொல்கிறார். ”தேவி,* *'ராம' என்ற எழுத்து 2* *விஷயங்களை குறிக்கிறது.* *ஒன்று,”ராம” என்பது தான் பிரம்மம்.* *இரண்டாவது, அது விஷ்ணுவின் அவதாரமான ஒரு இளவரசனை குறிக்கிறது. ராமர் தான் என்னுடய இஷ்டமான அவதாரம். நான் பூலோகத்தில் அவதரித்து*
*ராமருக்கு தொண்டு செய்ய போகிறேன்.“*

*இதை கேட்ட பார்வதிக்கு கோபம் வந்து, தான் சிவனை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிந்து இருக்க* *மாட்டேன் என்று சொன்னாள்.சிவன் சொன்னார். " தேவி, கவலை வேண்டாம்.* *பூலோகத்துக்கு அனுப்ப போவது என்னுடய ஒரு சிறு பகுதி தான். மற்றபடி நான் உன்னுடன் தான் இருப்பேன்.” என்றார்.* *பார்வதியும் சமாதானமாகி* *சுவாமியுடன் அவர் எடுக்கப்போகும்* *அவதாரத்தை பற்றி*
*விவாதிக்க* *தயாரானாள். பலத்த* *விவாதத்துக்கு பிறகு* *சுவாமியின் அவதாரம்*
*ஒரு குரங்காக இருக்க வேண்டும் என்று* *நிச்சயிக்கப்பட்டது.*

*ஏன், குரங்கு அவதாரம்?*
*பரமேஸ்வரன் விளக்குகிறார். ”* *மனிதனாக அவதாரம் எடுத்தால், அது தர்மத்திற்கு ஒவ்வாத செயலாக அமையும்.* *எஜமானனை விட சேவகன் *
*ஒரு படி கீழ் நிலையில் இருக்க வேண்டும்.* *இந்த சூழலில் குரங்கு அவதாரம் பல காரணங்களால் சிறந்தது. குரங்குக்கு விசேஷமான தேவைகள் கிடையாது. நிறைய சேவகம் செய்ய வாய்ப்பு உண்டு.” என்றார்.*

*பார்வதி தேவி தானும் கூட வருவதாக அடம் பிடித்தாள். சுவாமியும் சம்மதித்து பார்வதி தான் எடுக்க போகும் அவதார குரங்குக்கு வாலாக இருக்கலாம் என்று முடிவு செய்தார். ( இப்போது புரிகிறதா? ஏன் அனுமார் வால் அழகாகவும் பலமுள்ளதாகவும் இருக்கிறது என்று).*

*பார்வதி கடைசியாக இன்னொரு* *சந்தேகத்தை* *கிளப்பினாள். “சுவாமி,* *ராவணன் உங்கள் பரம பக்தன்.* *நீங்கள் எப்படி அவன் மரணத்துக்கு*
*உதவ முடியும்? ”,என்று கேட்டாள். சிவன், ”* *தேவி,உனக்கு நினைவு இருக்கிறதா? ராவணன் என் 11 ருத்ர அம்சங்களை திருப்தி* *பண்ணுவதற்காக*
*தன்னுடைய ஒவ்வொரு தலையையும் வெட்டி நெருப்பில் போட்டான்.*
*ராவணனுக்கு 10 தலைகள் தானே! 10 ருத்ரர்கள் தான் திருப்தி ஆனார்கள்.*
*ஓரு ருத்ரருக்கு கோபம். அந்த 11வது ருத்ர அம்சம் தான் குரங்கு அவதாரம் எடுக்க போகிறது.” என்றார்.*

*இப்பொழுது, எப்படி அவதாரம் நடந்தது என்று பார்க்கலாம்.*

*3 உப கதைகள்:*

*சிவன் -மோகினி*
*ஒரு சமயம்,விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். சிவன் மோகினியின்* *ஆட்டத்தை ரசித்து, அவருக்கு ஒரு பரிசு கொடுக்க நினைத்தார்.*
*மோகினியான விஷ்ணு ”உங்களுடய ஆத்ம சக்தியின் முழு பலத்தையும்* *கொடுங்கள்”, என்று கேட்டார். சிவனும் அப்படியே தன் சக்தியை ஒரு விதையாக கொடுத்தார். விஷ்ணு சப்த ரிஷிகளை கூப்பிட்டு," இதை பத்திரமாக காப்பாற்றுங்கள். இதிலிருந்து ஒரு மஹா பலம் பொருந்திய மஹான் பிறக்க போகிறார். அவர் என்னுடைய ராமாவதாரத்தில் ராவண வதத்துக்கு துணையாக இருப்பார்.” என்று சொன்னார். அவர்களும் தக்க சமயத்தில் அந்த விதையை வாயு பகவானிடம் சேர்த்தனர்.*

*வாயு-அஞ்ஜனி*

*முன்னொரு சமயம் வாயு பகவான்* *ஜாலந்திரன் என்ற அசுரனை கொல்வதற்கு சிவனுக்கு உதவி செய்தார். அதற்காக சிவன்,*
*வாயுவுக்கு மகனாக பூலோகத்தில் பிறப்பேன், என்று வரம் கொடுத்தார்.*

*அஞ்ஜனி*
*அஞ்ஜனி, கேசரி என்ற குரங்கின் மனைவி. இந்த அஞ்ஜனி,* *சாதரண குரங்கு*
*இல்லை. இவள், ஒரு தேவ மாது. பார்வதி தேவியின்* *பணிப்பெண். ஒரு* *சமயம், இந்த தேவ மாது இந்திரனை ஆயிரம்* *கண்ணுடையவன்*
*என்று கேலி செய்யப் போய், குரங்காக பிறக்க வேண்டிய நிலையை அடைந்தாள். சிவன்,* *அவள் மேல்* *இரக்கப்பட்டு, அவள் வயிற்றில் அவர்*
*மகனாக பிறக்கிற பாக்கியத்தை, வரமாக அளித்தார்.*

*வாயுவுக்கு* *அஞ்ஜனியின் மேல் ஒரு ஈடுபாடு.* *சிவனுடைய விதையை*
*அஞ்ஜனிக்கு கொடுக்க* *தீர்மானித்தார் அஞ்ஜனி சிவனை நினைத்து*
*தியானம் செய்து கொண்டிருந்தாள்.*
*வாயு பகவான் சிவனுடைய விதையை அவள் காது வழியாக அவளுடைய கர்ப்பத்தில் சேர்த்தார்.*

*இப்பொழுது எல்லா முடிச்சும் அவிழ்ந்து விட்டதா?*
*இது தான்,பரமசிவன், அனுமாராக அவதாரம் எடுத்த  கதை. அதனால்  தான், அனுமாரை சங்கர சுவன், கேசரி நந்தன், அஞ்ஜனி புத்திரன் என்று அழைக்கிறோம்.*

*இந்த அதிசய கூட்டணி- விஷ்னு அம்சமான ராமரும், சிவ அம்சமான அனுமானும்*🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம் அனுமன் ஆர் கே சாமி🙏🙏
🌸🙏🏻🌸
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் மகிமை....
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெண்மணி தன் குடும்பத்தில் நிகழ்ந்த ஓர் அற்புதத்தைப் பற்றி பத்திரிகை ஒன்றில் எழுதி இருந்தார். என் தாய்- தந்தை ஏழ்மையில்தான் இருந்தார்கள். என் தந்தை பள்ளிக்கூட ஆசிரியர். அவர் சம்பளத்தில் ஓரளவு கஷ்டப்படாமல் வாழ்ந்து வந்தோம். என் பெற்றோருக்கு வரிசையாக ஐந்தும் பெண் குழந்தைகளாகவே பிறந்தனர். 
நான் ஐந்தாவது பெண். “ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியா வான்’ என்பது பழமொழி. என் தந்தை ஆசிரியர். இவரால் ஐந்தையும் எப்படிக் கரையேற்ற முடியும் என்று உறவினர்கள் மட்டுமல்லாது, நண்பர்களும் கவலைப்பட்டார்கள். என் முதல் அக்காவுக்கு திருமண வயது வந்தது. யார் யாரோ வந்தார்கள்; போனார்கள். “அக்கா விற்கு அப்பா எப்படித் திருமணம் நடத்தப் போகிறார்- பணம் வேண்டாமா’ என்று கவலைப்பட்டோம்.
திடீரென்று ஒருநாள், வசதியான குடும் பத்தை சேர்ந்த ஒருவர், நன்கு படித்து பெரிய வேலையிலிருக்கும் தன் மகனுக்குப் பெண் கேட்டு வந்தார்.
 “அவ்வளவு வசதியும், பெரிய வேலையிலிருக்கும் பிள்ளைக்கு அதிக வரதட்ச ணையும், நகைகளும் கேட்க மாட்டார்களா- நம்மால் எப்படி முடியும்’ என்று நினைத்த போதே, பிள்ளையைப் பெற்ற தாயும் தந்தையும், “எங்களுக்கு நிறைய பணமும், நகைகளும் இருக்கு. வரதட்சணை எதுவும் வேண்டாம். உங்களால் முடிந்த அளவிற்கு திருமணத்தை நடத்தினால் போதும்’ என்றார்கள். எங்களுக்கோ வியப்பு. ஆனால் அந்த வரனே முடிந்தது. இப்படியே ஒவ்வொரு பெண் ணிற்கும் நல்ல இடமாய், பெரிய உத்தியோகத்திலிருக்கும் மாப்பிள் ளைகளே கிடைத்தார்கள்.  எனக்கும் அப்படியே அமைந்தது. இன்று ஐந்து பெண்களும் அமோகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட எழுபத் தைந்து வயதை எட்டிவிட்ட என் அப்பா விடம் நான், “இது எப்படியப்பா சாத்திய மாயிற்று’ என்று கேட்டேன்.  அவர் சொன்னார்: “நான், என்னுடைய பதினைந்தாவது வயதில் விஷ்ணு சஹஸ்த்ர நாமம் பாராயணம் செய்ய ஆரம்பித்தேன். இதோ, எழுபது வயதிற்கு மேல் ஆகிவிட்டது.  இன்றுவரை ஒருநாள்கூட சஹஸ்த்ர நாம பாராயணத்தை நான் நிறுத்தியதில்லை. உங்கள் ஐந்து பேருடைய கல்யாணத்தையும் அமோகமாக நடத்தியவன் இந்த வாத்தியார் இல்லையம்மா. சாக்ஷாத் அந்த எம்பெருமான் நாராயணனே நடத்தி வைத்தான்!’ என்றார். என்ன அற்புதம் பாருங்கள். ஓர் ஏழை ஆசிரியரின் ஐந்து பெண்களுக்கும் பெரிய இடத்திலிருந்து பிள்ளைகள் வந்து, அவர் களாகவே விரும்பி திருமணம் செய்து கொண்டு அமோக வாழ்வு வாழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் உண்மையான இறை நம்பிக்கையே.  அதனினும் பெரிய உண்மை விஷ்ணுசஹஸ்ரநாமத்தின் மகிமையே! ஓம் நமோ நாராயணாய !

திங்கள், 1 ஜூன், 2020

*துளசிதாசருக்கு உதவிய ஆஞ்சநேயர் பற்றிய பகிர்வுகள் :*

ஒரு சமயம் துளசிதாசர் காசியில், கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசித்தார். விஸ்வநாதர் கருணை காட்டுவார் என்று காத்திருந்தார். ஓயாமல் ராமநாம ஜெபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகா லட்சேபம் சொல்வார்.

ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ஒரு ஆலமரத்தில் கொட்டி விடுவார்.

அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று வசித்து வந்தது. அது அந்த நீரை குடித்ததும் தாகம் அடங்கி ஒருவாறு அமைதி கிடைத்தது. இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்து கொண்டது.

அந்த ஆவி ஒரு நாள் துளசிதாசர் திரும்பிப் போகும் வழியில் மறைத்து நின்றது. துளசிதாசரின் நடை தடைப் பட்டது. உரக்க ராமா, ராமா என்று சத்தமிட்டு கூவினார்.

அப்போது அந்த ஆவி கூறியது, பெரியவரே, பயப்பட வேண்டாம். நான் ஒரு பாவியின் ஆவி. நீங்கள் வார்த்த நீரைக் குடித்து புனிதமானேன். உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன். சொல்லுங்கள் என கேட்டது.

துளசிதாசருக்கு மனதில் ஒரே எண்ணம் தானே. ராம தரிசனம் தான் அது. அதற்கு இந்த ஆவியா உதவப் போகிறது என்றெல்லாம் யோசிக்காமல் கேட்டு விட்டார்.

ராமாயணம் கேட்க வரும் ஆஞ்சநேயர்

எனக்கு ராம தரிசனம் கிடைக்க வேண்டும் என்று. அதற்கு ஆவி பதில் கூறியது. ‘இது உங்களுக்கு வெகு சுலபமாயிற்றே’ என்றது. எப்படி? என கேட்டார் துளசிதாசர். உங்களிடம் தான் ராமாயணம் கேட்க தினமும் அனுமன் வருகிறாரே என்றது. எனக்கு தெரியாதே என்றார் தாசர்.

ஆம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நேரே உட்கார்ந்திருக்கும் ஜனங்களுக்கு அப்பால் ஒருவர் உட்கார்ந்திருப்பார். நீங்கள் வருவதற்கு முன்பே வந்து விடுவார். பிரசங்கம் முடிந்து ஜனங்கள் திரும்பும்போது ஒவ்வொரு வரையும் விழுந்து வணங்கி விட்டு கடைசியில் தான் போவார்.

அவர் எப்படி இருப்பார்? என்று துளசிதாசர் கேட்டார். உடம்பெல்லாம் வெண் குஷ்டம். அசிங்கமாக இருப்பார். யாரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது. ஒதுக்க வேண்டும் என்பதற் காகவே அப்படி வருவார். அவர் கால் களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

ராமன் எப்போ வருவாரோ?
அன்று இரவு சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே தாசர் கவனித்து விட்டார். தன் கண்ணெதிரே ஆனால் சற்று தள்ளி தலையில் முக்காடிட்டுக் கொண்டிருப்பவரை பார்த்து விட்டார். அன்று பிரசங்கத்தில் சபரியின் கதை. சபரி, ராமன் எப்போது வருவாரோ? என்று வழிமேல் வழி வைத்து காத்திருக்கிறார். வழியிலே போவோர் வருவோரை எல்லாம் வினவுகிறாள். புலம்புகிறாள். ஏமாற்றி விடாதே ராமா!

சபரி புலம்பல்
ராமா! என்னை ஏமாற்றி விடாதே. எனக்கு நீ தான் கதி. எனக்கு வேறு எதிலும் நாட்டமில்லை. எங்கே சுற்றுகிறாயோ? உனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா? நீ இங்கு வரமாட்டாயா?

உன்னைத் தேடி நான் அலைய வேண்டும். ஆனால் என்னைத் தேடி நீ வர வேண்டும் என நினைக்கிறேனே? என்ன அபச்சாரம். நான் உன்னை தேடி வர முடியாதே! யாராவது அழைத்து வர மாட்டார்களா? ராமனை நான் தரிசனம் செய்வேனா? எனக்கு அந்த பாக்கியம் உண்டா? என்று சபரியின் கதையை கூறி விட்டு மயக்கம் அடைந்து விட்டார் தாசர். சபை முழுவதும் கண்ணீர் விட்டு கதறியது. எங்கும் ராம நாம கோஷம்.

காலை பிடித்துக் கொண்ட தாசர்

பின் வெகு நேரம் ஆயிற்று. துளசி தாசருக்கு மயக்கம் தெளியவில்லை. சிலர் நெருங்கி வந்து மயக்கம் தெளிய உதவி செய்தனர். அத்துடன் சபை கலைந்து விட்டது. பின் வெகுநேரம் கழித்து கண் திறந்து பார்த்தார் துளசி தாசர்.

எதிரே குஷ்டரோகி வடிவில் அனுமர் நின்று கொண்டிருந்தார். பிரபோ! அஞ்சன புத்ரா! என்று கதறி அழுது அவருடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அனுமன் கால்களை விடுவித்துக் கொண்டார். பின் தாசரை தோளில் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடந்தார். பொழுது விடிந்து விட்டது. தாசரை கீழே கிடத்தினார் அனுமன். துளசி தாசரும் ‘கண் விழித்து நான் எங்கிருக்கிறேன்’ என்று வினவினார்.

சித்ர கூடத்தில் ராம ஜெபம்

இதுதான் சித்ர கூடம் இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில் வனவாசம் செய்த இடம். அங்கே பாரும் மந்தாகினி. இங்கே உட்கார்ந்து ராமஜெபம் செய்யும். ராம தரிசனம் கிட்டும் என்று கூறினார் அனுமன். அதற்கு துளசி தாசர் நீங்கள் கூட இருக்க வேண்டும் என்றார். நீர் ராம நாமம் சொன்னால் உமது கூடவே நான் இருப்பேன். எனக்கு என்ன வேறு வேலை என்று கூறினார் அனுமன். பின் மறைந்து விட்டார். தாசரும் ராமஜபம் செய்தார்.
எப்படி இருப்பார் ராமர்?

ராமன் வருவாரா? எப்படி வருவார்? லட்சுமணன் கண்டிப்பாக வருவாரா? எப்படி இருப்பார்? தலையில் ஜடா முடியுடன் வருவாரா? அல்லது வைரக் கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? பட்டு பீதாம்பரம் அணிந்து வருவாரா? ரதத்தில் வருவாரா? நடந்து வருவாரா? என்றவாரு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார். கண் கொட்டாமல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்.

மலைப்பாதை. ஒற்றையடிப் பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல். அதன்மேல் நின்ற கொண்டு ராம ராம என்று நர்த்தனமாடினார். மலை உச்சியிலிருந்து வேகமாக இரண்டு குதிரைகள் ஓடி வந்தன. அவற்றின் மீது இரண்டு ராஜாக்கள். தாசர் எத்தனையோ ராஜாக்களை பார்த்திருக்கிறார். தலையில் தலைப்பாகை. அதைச் சுற்றி முத்துச் சரங்கள். கொண்டை மீது வெண் புறா இறகுகள். வேகமாக குதிரை மீது வந்தவர்கள் தாசரைப் பார்த்து சிரித்துக் கொண்டே போய் விட்டனர்.

ராமனுக்கு ஈடாவாரா?

ஆமாம். பெரிய வீரர்கள் இவர்கள்! என் ராம, லட்சுமணனுக்கு ஈடாவார் களா? தலையில் ரத்ன கிரீடமும், மார்பில் தங்க கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புராத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே என்ன அழகாக இருப்பார் கள் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமம் சொன்னார்.

சிறிது நேரம் கழித்து அனுமன் வந்தார். தாசரைப் பார்த்து ‘ராம லட்சுமணர்களை பார்த்தீர்களா? என்று கேட்டார். இல்லையே என்றார் தாசர். என்ன இது உமது பக்கமாகத்தானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார்.
ஐய்யோ! ராம, லட்சுமணர்களா? ஏமாந்து போனேனே என்று அலறினார் துளசி தாசர். அதற்கு அனுமன் ‘ராமன் உமது இஷ்டப்படி தான் வர வேண்டுமா? அவர் இஷ்டப்படி வர கூடாதா? என்று கேட்டார். உடனே தாசர், சுவாமி மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாத பேதை நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தவர்களை அலட்சியம் செய்து விட்டேன். வாயு குமாரா? இன்னும் ஒருமுறை தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன்.

எல்லாம் சரி. நீர் போய் மந்தா கினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயண பாராயணம் செய்யும் ராமன் வருவாரா? பார்க்கலாம் என்றார். துளசிதாசரும் மந்தாகினிக்கு ஓடினார். நீராடினார். ஜபம் செய்தார். வால்மீகியின் ராமாயணத்தை ஒப்புவித்தார்.

நதியில் நீராடுதல்

இதனிடையே இரண்டு நாட்கள் ஆகி விட்டது. ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்னால் ராம லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்கிற கட்டத்தை படித்துக் கொண்டிருந்தார்.

எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்து பதினைந்து நாள் வளர்ந்த தாடி. சுவாமி கோபி சந்தனம் உள்ளதா? என்று அவர்கள் கேட்டனர். இருக்கிறது. தருகிறேன் என்றார் அவர்.

சந்தனம் கேட்ட ராம, லட்சுமணன்

சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள். (வடதேசத்தில் கங்கை முதலிய நதி தீர்த்தக் கரையில் பண்டாக்கள் (சாதுக்கள்) உட்கார்ந்து கொண்டு நதியில் நீராடி வருபவர் களுக்கு நெற்றியில் திலகம் இட்டு தட்சணை வாங்கிக் கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது). அதற்கென்ன! நாமம் போட்டு விடுகிறேனே என்றார் தாசர். இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோபி சந்தனத்தை குழைக்கிறார். அந்த கருப்புப் பையன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். இவர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார். அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் மெய் மறந்து விட்டார்.

அந்தப் பையன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தை தன் கட்டை விரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான். தன்னுடன் வந்த வனுக்கும் தீட்டினான். அவர்கள் உட்கார்ந் திருந்திருந்த படித் துறைக்கு அருகே ஒரு மாமரம். அதன் மீது ஒரு கிளி. அது கூவியது.

‘சித்ர கூடகே காடபரே பகி ஸந்தந கீ பீர
துளசிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர”

பொருள்: (சித்ரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்.)

இதைக் கேட்டு துளசிதாசர் திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தார். சாது அவர்களே! என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டான் அந்த கருப்பு இளைஞன். ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது என்று கதறிக் கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசி தாசர்.