ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

ஆடி மாதத்தின் சிறப்பு

சூடிக் கொடுத்த சுடர் கொடியான ஆண்டாள் அவதரித்த தினம் தான் ஆடி மாதம் பூரம் நட்சத்திரமாகும்.

இன்றைய தினத்தை எல்லா கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வருகிறது. ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரமும் வருகிறது. அதில் என்ன சிறப்பு. ஆனால் ஆண்டாள் அவதரித்தபின் தான் அந்த நாளுக்கு தனிச்சிறப்பு ஏற்பட்டது.

ஆண்டாள் பூமித்தாயின் அம்சம் பூமித்தாயே பூமியில் அவதரித்தால் அது சிறப்பல்லவா உயிர்களைக் காக்கும் பொருட்டு ஆண்டாள் இந்த பூவுலகில் அவதரித்து நம்மை கரைசேர்த்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில் ஒரு துளசிச் செடியின் அடியில் கலியுகம் பிறந்து 98 வதாக வந்த நளவருடம் ஆடிமாதம் வளர்பிறையில் பஞ்சமி திதியும் பூர நட்சத்திரம் கூடிய நன்னாளில் பெரியாழ்வார் ஆண்டாளைக் கண்டெடுத்தார்.

அவளை கோதை என்னும் பெயரிட்டு வளர்த்து வரும்படி வடபெருங்கோயிலுடையானும் அருள் பாளித்தார். அதன்படி கோதையை வளர்ந்து வந்தார் பெரியாழ்வார்.

இந்த கோதை கண்ணனை நினைத்து பாவை நோன்பு நோர்ப்பதாக எழுதிய 30 பாடல்கள் தான் திருப்பாவை.

சூடிக்கொடுத்த சுடர்கொடியான கோதையை கண்ணனே ஆட்கொள்கிறான்.

அன்றைய தினம் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தப்படும்.
-----------------------
அருள் மிகு விநாயகர் திருக்கோயில்

மூலவர் : ஸ்ரீ விநாயகர் (விக்னேஸ்வர்)
உற்சவர் : விக்னேஸ்வர்
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : ஈச்சனாரி
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு

விழா : விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 2 நாள் திரு விழா, சித்திரைத் திருவிழா 2 நாள் திருவிழா. மாதத்தின் கிருத்திகை, பௌர்ணமி, அமாவாசை, சதுர்த்தி, தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் தைப்பூசம், கார்த்திகை தீபம்  
      
சிறப்பு : 5 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர்.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி : 641021, கோயம்புத்தூர், போன் : 422 - 267 2000, 267 7700. 

பிரார்த்தனை : விநாயகரை மனமுருக வேண்டிக்கொண்டால் எடுத்த காரியம் தடங்கல் நீங்குகிறதாக இத்தலத்துக்கு தொடர்ந்து வரும் பக்தர்கள் கூறகிறார்கள். மேலும் தங்கள் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவதற்காகவும், படிப்பில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்காகவும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். இவை தவி வியாபார விருத்தி, தொழில் மேன்மை, உத்தியோக உயர்வு ஆகியவையும் வேண்டி இத்தலத்து விநாயகப் பெருமானை வணங்கினால் நிச்சயம் பிரார்த்தனை நிறைவேறுகிறது.
 
நேர்த்திக்கடன் : சிதறு தேங்காய் போடுதல், கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் மாலை சாத்துதல், பாலாபிஷேகம் செய்தல் முதலியன. இவை தவிர சதுர்த்தி விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள். 
     
தலபெருமை : இத்திருக்கோயிலில் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வோர் விதமான அலங்காரம் செய்யும் நட்சத்திர அலங்கார பூஜை மிகவும் சிறப்பான ஒன்றாகும். திருக்கோயில் தினப்படி பூஜைக்கு வேண்டிய பால், பன்னீர், சந்தனம், குங்குமம், மலர் மற்றும் மின் கட்டணம் போன்றவைகளும் கட்டளைதாரர்களைக் கொண்டே நடத்தப்பட்டு வருகிறது. 5 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் அமைந்த அற்புதமான திருத்தலம். கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் திருக்கோயில். நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து போகும் சிறப்புபெற்ற விநாயகர் திருத்தலம்.
 
தல வரலாறு : மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டதாகவும் பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாமல் போய் விட்டதாம். காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்குப்படி இச்சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாம் இவ்வாறு விநாயகர் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது.
திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?

திருஷ்டி என்பது மற்றவர்களின் தீய எண்ணங்களால் நாம் சூழப்பட்டிருப்பது. த்ருஷ் எனில் பார்த்தல். நம்மை சிலர் நோக்கும் போது நமது வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டார்கள் எனில் அவை நம்மை தாக்கக்கூடும். தற்காலத்தில் உளவியல் அறிஞர்கள்கூட பாசிட்டிவ் திங்கிங், நெகட்டிவ் திங்திங் என எண்ணங்களின் தன்மைகளைப் பிரித்து இருக்கிறார்கள். மற்றவர்கள் இப்படித்தான் நினைக்க வேண்டும் என்று நாம் கட்டளை இடமுடியாது. எனினும் மழை பெய்தால் நாம் ஒரு குடையை பிடித்துக்கொண்டு நம்மை தற்காத்துக் கொள்கிறோமோ அது போன்று நமது புருவ மத்தியில் தூய மஞ்சளினால் ஆன குங்குமத்தை வைத்துக் கொள்ளுதல் பெண்கள் சிறப்பாக மஞ்சள் தேய்த்து நீராடுதல் வீட்டு நிலைக்காலில் மஞ்சள் போன்ற மங்கள சின்னங்களை வைத்தல் பார்த்தவுடன் மற்றவர்களின் மனதில் மாற்று எண்ணம் வருவதுபோல் நமது வீட்டுவாசலில் பொம்மைகள், படங்கள் வைப்பது, பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை வைப்பது இப்படி பல வழிமுறைகள் தீய த்ருஷ்டியை போக்குவதற்கும் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டுள்ளது. தந்திர சாஸ்திரங்களிலும் பெரியோர்களின் பழக்க வழக்கங்களினாலும் அந்தந்த ஊர்களில் இருக்கக்கூடிய வழக்கங்களிலும் உள்ளவற்றைக் கடைப்பிடிக்கலாம். இவற்றைத் தவிர நாம் முக்கியமாகக் கொள்ள வேண்டியது கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து நாம் மற்றவர்கள் மீது பொறாமைப்படாமல் இருப்பது எண்ணம் போல் வாழ்வு என்பதுபோல் நாம் தூய எண்ணத்துடன் நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டோமானால் சூரியனைக் கண்ட பனி போல எப்படிப்பட்ட தீய சக்திகளும் நம்மை அண்டாத வண்ணம் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்.
-----------------------
திருமுருக கிருபானந்தவாரியார்!

சொல்லால், செயலதனால், சொற்பொழிவால், கீதத்தால்
வல்ல அணிப்பூசை மாண்பதனால் - எல்லார்க்கும்
இல்லாச் சிறப்பை இசை வாரியார் சாமி
வல்லாண்மை மேலாகு மால்  - தவத்திரு சுந்தரசுவாமிகள்

1933 - ஆம் ஆண்டு. வயலூர் கோயிலின் அறங்காவலர், திருச்சியில் வசித்து வந்தார். அன்றிரவு அவரது கனவில் வயலூர் முருகன் தோன்றி, எட்டணா பெற்றுக் கொண்டாயே! அதனால், திருக்கோயில் ராஜகோபுரத் திருப்பணி முடித்துவிடுவாயா? என்று கேட்டார். செட்டியாருக்கு எதுவும் புரியவில்லை. பயத்தால் உடல் வெலவெலத்தது. பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்தார். காலையில் வண்டியைக் கட்டிக் கொண்டு நேராக வயலூர் சென்றார். கோயிலில், அர்ச்சகர் ஜம்புநாதன் என்னும் பதினெட்டு வயது இளைஞர் இருந்தார். நேற்று யார் தரிசனத்துக்கு வந்து எட்டணா கொடுத்தார்? என்று கேட்டார் செட்டியார்.


காங்கேய நல்லூரிலிருந்து மல்லையதாஸ் பாகவதர் குமாரர் கிருபானந்தவாரி என்பவர் எட்டணா கொடுத்தார். வெள்ளி கவசம் சாத்தி தரிசனம் செய்து வைத்தேன். இதோ பதிவுப் புத்தகத்தில் அவருடைய விலாசம் உள்ளது என்றார் அர்ச்சகர்.

அந்த எட்டணாவை என்னிடம் கொடு என்றார் செட்டியார். மணியார்டர் கூப்பனில் ஆண்டவன் கட்டளைப்படி தாங்கள் செலுத்திய எட்டணாவை திரும்ப அனுப்பியுள்ளேன். பெற்றுக்கொள்ளுங்கள் என்று எழுதி வாரியார் முகவரிக்கு மணியார்டர் செய்து விட்டார். திருப்பணி செய்யும் பொறுப்பையே ஏற்று முடிக்கத் தக்கவரிடம் இந்த எட்டணாவை வாங்கிக்கொண்டு திருப்தி அடையலாமா? என்ற குறிப்பை வயலூர் முருகன் தெரிவித்ததாக செட்டியார் எண்ணினார்.

தல யாத்திரை முடித்துக்கொண்டு காங்கேயநல்லூர் திரும்பிய வாரியாருக்கு மணியார்டர் காத்திருந்தது. அதனைப் பெற்றுக் கொண்டு கூப்பனைப் படித்தார். ஒன்றும் புரியவில்லை. பின்னர், திருச்சியில் உபன்யாசத்துக்குச் சென்ற வாரியாரை செட்டியார் சந்தித்தார். கனவில் நடந்ததைச் சொல்லி, வயலூர் ராஜகோபுரத் திருப்பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து திருச்சியில் சொற்பொழிவு ஆரம்பித்து, அதன் மூலம் பணம் வசூல் செய்து ராஜ கோபுரத் திருப்பணியை 1935ஆம் ஆண்டு தொடங்கினார்.

இந்த நிலையில் ஒரு நாள் இரவு வாரியாரின் கனவில், காங்கேயநல்லூர் முருகன் கோயில் காட்சி தெரிகிறது. அங்கு கோயிலில் முருகப் பெருமான் உலா வந்துகொண்டிருந்தார். வாரியார், அருணகிரிநாதர் சன்னதி முன்பு நின்று தொழுது நிற்கிறார். அருணகிரியாரது சிலை சற்றே சாய்ந்திருக்கிறது. அண்மையில்தானே அஷ்டபந்தனம் சாத்தி எழுந்தருளச் செய்திருந்தோம். இத்தனை விரைவில் சிலை சாய்ந்து விட்டதே என்று வருந்தினார்.

அப்போது காவியணிந்த சந்நியாசி கோலத்தில் காட்சி அளித்த ஒருவர், அன்பனே! எனக்கு மிகவும் பசி. ஏதேனும் உணவு கிடைக்குமா? என்கிறார். மாலை மூன்று மணியாகிவிட்டதே! அதனால் எதுவும் ஆயத்தமாக இல்லை என்று இவர் பதில் சொல்ல, ஏதாவது செய்து கொடு என்கிறார் சந்நியாசி. சரி சுவாமி, அரிசி நொய்யில் உப்புமா செய்து தரட்டுமா? என்று இவர் கேட்க, அப்படியே ஏதாவது கொடு என்று கூறிய வண்ணம் சந்நியாசி கோலத்தில் வந்தவர் மறைந்துவிட்டார். இதைத் தொடர்ந்து, சாய்ந்திருந்த அருணகிரியாரது சிலை நிமிர்ந்திருக்கக் கண்டார் வாரியார்.

உடனே, கண் விழிப்புற்றார் வாரியார். காங்கேயநல்லூரில் எழுந்தருளியிருக்கும் குருநாதருக்கு அறக்கட்டளை நிறுவ அடியேனுக்கு இட்ட கட்டளை இதுபோலும் என முடிவு செய்து தந்தைக்குக் கடிதம் எழுதினார். தினமும் ஒர் படி அரிசி சமைத்து நிவேதனம் செய்து, அதை தேசாந்திரிகளாக வரும் ஏழைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். இக்கட்டளை நிரந்தரமாக நிகழ்ந்து வர வேண்டி, அதற்கான நிலத்தையும் வாங்கினார். இன்றளவும் தினமும் ஏழைகள் உண்டு மகிழ்ந்து வருகிறார்கள்.

வயலூர் திருப்பணிக்கு முப்பதாயிரம் வசூலித்து கும்பாபிஷேகமும் நன்கு நடத்தினார். இந்தச் செய்தி ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்தது. ஆனால், வயலூர் என்பதற்குப் பதிலாக வடலூர் என்று அச்சிட்டுவிட்டனர். ஒரே எழுத்துதான் மாறுதல். அதுவே, இன்னொரு திருப்பணிக்கு அச்சாரமாகிவிட்டது. வயலூர் திருப்பணிக்குப் பிறகு வடலூர் சித்திவளாகத் திருப்பணிக்கு உத்தரவாகிறது என்றனர் அன்பர்கள்.

வடலூர் திருப்பணியை வாரியார் மிகவும் கஷ்டப்பட்டே செய்தார். திருப்பணி செலவுக்குப் பணமில்லாதபோது, தமது தங்க ருத்ராட்ச கண்டிகையை அடகு வைத்துப் பணம் வாங்கிச் செலவு செய்தார். இப்படி வயலூர், வடலூர், வள்ளிமலை ஆகிய தலங்களின் திருப்பணிகள் வாரியார் வாழ்வில் குறிப்பிடத்தக்கவை. இன்னும் எத்தனையோ பலநூறு கோயில்கள்.. அவர் செய்த திருப்பணி செலவுத் தொகையை கூட்டினால் பல கோடிக்கு மேல் ஆகும். கோடி ரூபாய் சேர்த்தவர் கோடீஸ்வரர் அல்லர்; கோடி ரூபாய் தர்மம் செய்தவர், திருப்பணி செய்தவரே கோடீஸ்வரர். அந்நிலையில் வாரியார் பலகோடி புண்ணியத்தைச் சேர்த்தவர்.

1933-ல் கதிர்காமக் கந்தன் கோயிலில் ஆடி வேல்விழாவில் கலந்துகொண்டு தல யாத்திரையாகத் திரும்பி வரும் வழியில் வயலூரைத் தரிசித்தார். அப்போது வயலூர் முருகன் இவரை ஆட்கொண்டு, இவரது பெருமையை உலகறியச் செய்தான்.

வேலூர் அருகிலுள்ள காங்கேய நல்லூரில் 1906-ஆம் ஆண்டு (25.8.1906) மல்லையதாஸ் பாகவதர் - கனக வல்லியம்மையாரின் புதல்வராக அவதரித்தார் கிருபானந்த வாரியார். சோதிடத்தில் வல்லவரான அவரது தந்தை அவர் பிறந்த நட்சத்திரமாகிய சுவாதிக்கு ஏற்றபடி இந்தத் திருப்பெயரைச் சூட்டினார். ஐந்து வயதில் வீரசைவ குலநெறிப்படி திருவண்ணாமலை பாணிபாத்ர மடத்தில் சிவலிங்க தாரணம் நடந்தது. தந்தையார் இவருக்கு சடாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார். மதுரை திருப்புகழ்ச் சாமி ஐயா அவர்களிடம் சூட்சும சடாஷர மந்திர உபதேசம் பெற்றார். ஒருமுறை திருக்காரையூரில் வாரியாரது கனவில் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் சடாக்ஷர மந்திரத்தை உபதேசித்து அருளினார்.

வாரியாருக்கு மூன்று வயதில் தகப்பனாரிடம் எழுத்தறிவு தொடங்கியது. ஐந்து வயதிலே ஏடு படித்தார். எட்டு வயதில் வெண்பா பாடினார். பத்து பன்னிரண்டு வயதில் பன்னீராயிரம் பாடல்களை மனனம் செய்யும் ஆற்றலைப் பெற்றார். தகப்பனார் மிகச்சிறந்த பவுராணிகர். அவருக்குப் பின், தமது 19-வது வயதில், பாட்டுப் பாடிக்கொண்டே சொற்பொழிவு செய்ய ஆரம்பித்தார். பள்ளிக்குப் போகாமலேயே தந்தையையே ஆசானாகக் கொண்டு பலப் பல கற்றார்; நடமாடும் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்தார். சங்கீதத்தைத் தந்தையாரிடம் கற்றார். இல்லறம் நல்லறமாகத் திகழ அவரது தாய்மாமன் மகள் அமிர்தலட்சுமி அம்மாளை மணந்துகொண்டார். சென்னையில் மிகுதியாக இசைச் சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டியிருந்ததால், சென்னையிலேயே குடியேறினார். அப்போது தென்மடம் வரதாசாரியாரிடம் வீணை பயின்றார். சென்னையில் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளைத் தரிசித்து ஆசி பெற்றார்.

காசி, கேதாரம், அமர்நாத், பத்ரிநாத், நேபாளம், கோகர்ணம், ஸ்ரீசைலம் மற்றும் பல தலங்களையும் தரிசித்து, எல்லா முக்கிய நகரங்களிலும் சொற்பொழிவாற்றிய பெருமை வாரியாருக்கு உண்டு. தமிழகத்தில் அவர் கால் படாத ஊரே இருக்காது. இதைத் தவிர, உலகின் பல நாடுகளுக்கும் சென்று அரும்பெரும் இந்து சமயப் பணிகளை ஆற்றி மேருவனைய புகழ் கொண்ட மேதகை, வாரியார்.

மெய்யன்பர்களே! ஞானமே வடிவாகிய வயலூர் மேவிய வள்ளலின் தனிப்பெருங் கருணையினாலே.. என்று சொற்பொழிவைத் தொடங்கினால் பட்டிதொட்டிகளில் வாழும் பாமரர் முதல் பட்டணத்தில் படித்தவர் வரை அனைவரும் தன்னை மறந்து அவர் பேச்சை ரசிப்பர். வாரி என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள். கிருபானந்த வாரி ஒரு நடமாடும் கடல். தமிழ்க் கடவுளாகிய முருகன் அவரது தனிக் கடவுள். அருணகிரிநாதரே அவரது மானசீக குரு, சங்க நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம், சைவத் திருமுறைகள், திவ்யப் பிரபந்தம், பிள்ளைத்தமிழ் நூல்கள் என்று இப்படி எத்தனை இலக்கியங்கள் உள்ளனவோ அத்தனையும் கற்றறிந்தவர். அருணகிரிநாதரின் அருள் நூல்களான திருப்புகழ், அலங்காரம், அநுபூதி, அந்தாதி, வகுப்பு என எல்லாவற்றையும் முற்றும் பருகி எழுத்தெண்ணி, நயம் காட்டி, தங்குதடையின்றி சந்த பிரவாகத்தை கொட்டும் அதி அற்புத ஞானவாரி.

திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களைப் பற்றி தமிழ் நாட்டில் அறியாதார் இல்லை. அவர் நாவில் திருப்புகழும், கையில் திருப்பணியுமாக நடமாடும் திருத்தொண்டர். நாயன்மார்கள் வரிசையில் வைத்து அவரை அறுபத்து நான்காவது நாயனாராக வழிபடும் சிவநேயச் செல்வர்களும் இருக்கிறார்கள்.

திருப்புகழ் அமிர்தம் என்ற  மாத இதழை 1936-ஆம் ஆண்டு சித்திரை மாதம் தொடங்கி 37 ஆண்டுகள் நடத்தினார். பல நூறு திருப்புகழ்ப் பாடல்களுக்கு உரை விளக்கம் எழுதி வெளியிட்டார். பல ஆன்மிக இலக்கிய நூல்கள், கதைகளை, கட்டுரைகளை எழுதி சமுதாயத்தில் ஒழுக்க நெறியை வளர்த்தவர்.

காலையானால் ஜபம், தியானம், பின்பு ஸ்நானம், பூஜை, ஓய்வு ஒழிவின்றி கட்டுரைகள் வரைதல், மாலையில் சந்தியாவந்தனம், பிறகு சொற்பொழிவு செய்யும் அறநெறி வாழ்க்கை. சூரியன் உதிக்காத நாள் இல்லை; அதுபோல், மாலையானால் மாலையும் கழுத்துமாக வாரியார் சொற்பொழிவு ஆற்றாத நாளே கிடையாது.

பலகோயில் திருப்பணிகள், அறப்பணிகள், கல்விக் கூடங்கள் முதலியன அவரால் செழித்தன. காந்திஜி, ராஜாஜி போன்று இம் மூதறிஞரும் தமக்கு வரும் கடிதங்களுக்கு விடாது பதில் எழுதும் பழக்கமுடையவர். மாதம்தோறும், படிக்கும் பல குழந்தைகளுக்கு உதவித்தொகை அனுப்புவதை கடமையாகக் கொண்டிருந்தவர்.

பள்ளிக்கூடத்தை மிதியாதவர் வாரியார். ஆனால் பெரிய கல்லூரிகளும் செய்ய இயலாத அளவுக்கு அறிவு தானம் செய்தவர். காஞ்சி மாமுனிவர் அவருக்கு சரஸ்வதி கடாக்ஷமிர்தம் என்று பட்டம் வழங்கினார். மேலும் ஷட்பதநாதர், அமுதமொழி அரசு, பிரவசன சாம்ராட்... இப்படி 30-க்கும் மேற்பட்ட பட்டங்களும் பாராட்டுக்களும் பெற்ற பெருந்தகையாளர்.

லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் விரிவுரை செய்ய வாரியார் சென்றார். அப்போது உடல் நலம் குன்றியதால் தாயகம் திரும்ப வேண்டியதாயிற்று. வரும் வழியில் வான் வெளியில் முருகன் திருவடிகளில் கலந்தார். 8.11.1993 அன்று காங்கேய நல்லூர் முருகன் கோயிலுக்கு எதிரிலுள்ள சரவணப்பொய்கை அருகில், அவரது திருவுடலுக்கு சமாதி கோயில் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.

20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற திருமுருகன் திருத்தொண்டர், திருமுருக கிருபானந்த வாரியார். ஒளவையின் பாடல் ஒன்றின்படி, சபை ஏறுவதால் நூற்றில் ஒருவர்; நல்ல புலவர் ஆதலின் ஆயிரத்தில் ஒருவர்; பேச்சு வன்மையால் பதினாயிரத்தில் ஒருவர். வாரி வாரி வழங்குவதனால் கோடியில் ஒருவர்!
அனந்தராம தீட்சிதர்!

சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் உபன்யாசம், 1940-65ம் ஆண்டுகளில் மிகவும் புகழ் பெற்றது. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஸ்காந்தம், தேவிபாகவதத்தை சங்கீத உபன்யாசமாக நடத்தினார். இவருக்கே உரித்தான மகிஷாசுரமர்த்தினி இன்னிசை, காலத்தால் அழியாதது. குருவாயூரப்பன் பக்தரான இவர், நாராயணீயத்தை மக்களிடம் பரப்பினார். 1903ல், சுப்ரமண்ய தீட்சிதர்-சுப்புலட்சுமி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த இவர், கடலங்குடி நடேச சாஸ்திரிகளிடம் பாடம் படித்தார். (சாஸ்திரிகள், தீட்சிதருக்கு மாமனாரும் ஆவார்) அக்னிஹோத்ர யாகம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த தீட்சிதர், வேதவல்லுநராகத் திகழ்ந்தார். இவருடைய உபன்யாசத்தை மும்பை, கோல்கட்டா, சென்னை நகரங்களில் மாதக்கணக்கில் மக்கள் கேட்டு மகிழ்ந்தனர். பரந்தமனம் படைத்த இவர், செல்வந்தர்களிடம் ஏழை எளியவருக்கு அறத்தொண்டு செய்யும்படி வலியுறுத்தினார். சடங்கு சம்பிரதாயத்தை முறையாக செய்ய வேண்டுமென வழிகாட்டினார். அமிர்தவர்ஷினி உபன்யாச சக்கரவர்த்தி, வைதீக தரம் சம்ரட்சன ப்ரவசன தாத்ர உபன்யாசகா ஆகிய பட்டங்களைப் பெற்றிருந்தார். ருத்ர சமகம், ஸ்கந்த புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். காஞ்சிப்பெரியவர், சிருங்கேரி சுவாமிகள், நேருஜி, டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, பிரகாசம், சி.சுப்ரமண்யம், கல்கி சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, காசா சுப்பாராவ் ஆகியோர் இவரது உபன்யாசத்தை ரசித்ததில் குறிப்பிடத்தக்கவர்கள். பக்திப்பயிர் செழிக்க பாடுபட்ட இவர் 1969, அக்.30ல் இறைவனுடன் கலந்தார். ஸ்ரீஜயமங்கள ஸ்தோத்திரம் என்னும் அரிய பொக்கிஷத்தை நம்மிடையே விட்டுச்சென்ற, அந்த ஆன்மிகச் செல்வத்தை, நன்றியோடு போற்றுவோம்.


அருள்மிகு கோரிக்க நாதர் திருக்கோவில், குரண்டி புண்ணியம் தேடி ஒரு பயணம்

கன்னியாகுமரியில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்  பிறந்த இடம் இருக்குன்னு அங்க போகலாம் ன்னு பிளான் பண்ணி போகும் போது பச்சை பசேல்ன்னு வயல் சூழ்ந்து பார்க்கவே ரம்மியமா இருந்தது. கொஞ்சம் ஓய்வு எடுக்களாம் வண்டியை விட்டு இறங்கி அக்கம் பக்கம் நோட்டம் விட்ட போது தூரத்தில் இயற்கை கொஞ்சும் இடத்துல  சின்னதா ஒரு கோவில் தெரிஞ்சுது. சுத்தி முத்தியும் ஒரு ஈ, காக்காவை காணோம். துணைக்கு கூப்பிட்டா யாரும் வரலை. இருந்தாலும் பதிவருக்குண்டான கடமை நம்மை வரவேற்க.., கொஞ்சம் உதறலா இருந்தாலும் பயத்தை மனசுலயும், சிரிப்பை உதட்டுலயும் வச்சுக்கிட்டு கோவிலுக்கு போனேன்......ஆளே இல்லாத கோவிலில இந்து அறநிலைய துறை சார்பா ஒரு அறிவிப்பு பலகை இருக்கு. அதை பார்த்துதான் சகலமும் தெரிந்து கொள்ளவேண்டியதா இருக்கு.  இந்த கோவிலோட பேரு ”அருள்மிகு கோரிக்க நாதர் திருக்கோவில் குரண்டி இந்த ஊர் தேரூர் பக்கத்தில இருக்கு. போகும் வழியெங்கும் புதர் மண்டி கிடக்கிறது கவனமா தான் போகனும். சரி வாங்க கோவிலுக்கு கிட்டக்க போய் பார்க்கலாம். முழு கோவிலும் இடிந்த நிலையில் இருக்கும் இந்த கோவிலில் தென்பக்கமா காலபைரவர் அருள் புரிகிறார்.  அவரை வணங்கிட்டு கோவிலை வலம் வர தொடங்கினோம். யாரோ ஒரு சிலர் பூஜைகள் செய்வது போல தான் தெரியுது. கோவிலின் முன்னே பலி பீடங்களும் வரிசையா அடுத்தடுத்து காணபடுது. அங்க பாதம் போன்ற ஒரு அமைப்பு காணப்படுது.   ஒவ்வொரு பலிபீடங்களிலும் மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்ததற்கான தடங்கள் இருக்கு. கொஞ்சம் பயத்தோடுதான் கோவிலை சுத்தி பார்த்தேன். உள்ள போலாமா?  வேணாமா!?ன்னு மனசுக்குள் ஒரு பயம். ஏன்னா. மேற் கூரைகள் இடிந்து விழும் நிலைல பாழடைந்து இருக்கு இக்கோவில். கட்டிட கலை அமைப்பு கூட பல்லவக்காலதது அமைப்புல இருக்கு. ஆனா,  குமரி மாவட்டத்தில் சேர, சோழ,பாண்டியர்கள் தான் ஆட்சி செய்திருக்காங்க. சில நாயக்கர் மன்னர்களும் ஆட்சி செஞ்சிருக்காங்க. இதெல்லாம் யோசித்து கொண்டே கோவிலை சுத்தி வந்தேன். கற்கள் எல்லாம் பெயர்ந்த நிலையில் விரிசல்களுடன் இருக்கு.  கற்சுவர்கள் உள்ளே பாசிப்படர்ந்தும், சுவர்கள்லாம் மரங்களின் வேர்களால் உடைந்து காணப்படுது.  வரிகற்கள்,  மேற்கூரையே இல்லாத கருவறை இதெல்லாம் பார்த்துக்கிட்டே சிவனே நீயே துணைன்னு கோவிலுக்கு போனேன். இரண்டாம் நிலையில் சக்கரம் போன்ற அமைப்பும் அபிஷேகம் செய்யும் நீர் வடிந்து செல்லும் அமைப்பும் காணபடுகிறது. அதைத்தாண்டி போனா கருவறை உள்ள சில நாக சிலைகளும், ஒரு சிவலிங்கமும் அதன் அருகில் கைகூப்பிய நிலையில் ஒரு மன்னருடைய சிலையும் காணப்படுகிறது. இடப்பக்கமும் ஒரு மன்னர் கும்பிட்ட நிலையிலும் ஒரு சிலையும் நடுவே கொன்னை மரமும் வளர்ந்து காணபடுகிறது. கோவிலின்  வரலாறை தெரிந்து கொள்ளலாம்ன்னு அந்த ஊரில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டா யாருக்கும் சரியா சொல்ல தெரியவில்லை. ஒரே ஒரு வயதான பெண்மணி மட்டும் கோவிலுக்குள்ளயா போனே!?ன்னு ஆச்சர்யமா கேக்க ஏன் போனா என்னம்மான்னு நான் கேக்க!? கோவிலுக்குள்ள அங்க பெரிய நாகம் ஒண்ணு இருக்கு இந்த ஊர்க்காரங்க பார்த்திருக்காங்கன்னு சந்திரமுகி படத்துல சொல்லுற மாதிரி சொல்ல என்னமோ என் மேலயே பாம்பு ஏறி இறங்குன மாதிரி ஒரு எஃபெக்ட் உடம்புக்குள்ள.. கம்ப்யூட்டர் பொட்டிக்குள்ள நெட்டோ!? போல்டோ இருக்காமே! அதுல இது கோரக்கரருடைய சமாதி ன்னு யாரோ சொல்லி பலர் வந்து இங்க பூஜை பண்ணிட்டு போறங்கன்னு அந்த அம்மா சொன்னாங்க. இந்த கோவில் பத்தி தெரிஞ்சே ஆகனும்ன்னு மண்டை குடைச்சல் எடுக்க இந்த கோவிலில் ஆண்டு தோறும் வழிபாடு செய்யும் யோகிஸ்வரர் குடும்பதினருக்குதான் இதைபத்தி முழு விவரமும் தெரியும் என்பதால் அவர்களையும் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களுக்கும் முழு விவரம் தெரியவில்லை. வருடத்துக்கு சிலமுறை பூஜை செய்வதற்கு போகும் முன் ஆட்களை கொண்டு அங்க இருக்குற புதர்களைலாம் வெட்டிட்டு 2 நாள் கம்பு வச்சி சத்தம் எழுப்பி பின் தான் அங்கேபோவாங்களாம். ஏன்னா பாம்பு பயம் அதனால யாரும் இதனுள்ளே பாதுகாப்பு இல்லாம போக வேணாம்ன்னு சொன்னார் ஆனாலும் சிலர் இங்க வந்து பூஜை செய்துட்டு போறாங்களாம்.  இந்த கோவிலை இந்து அறநிலைய துறை புதுப்பித்து கட்ரி தருவதா சொல்லி இருக்காங்களாம். இங்கே18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் என்னும் சித்தர் வரும் போது எதிரிகள் அவரை தாக்க வந்ததாகவும் அப்ப கால் காட்டி மறையும் வித்தைகாட்டி தன்னுடைய பாதங்கள் மட்டும் காட்சியாக விட்டு சென்ற இடம் இத்திருத்தலம் எனபது மட்டும் அவர்களுக்கு தெரிந்த வரலாறு. அதுக்கு சாட்சியா இரண்டு பாதங்கள் மட்டும் இங்க காணப்படுது. பூஜையோ வழிபாடோ இல்லைன்னாலும் அதன் அழகு பார்பதற்கு மனதை கொள்ளை கொள்கிறது.


ஸ்ரீ சங்கர பகவத்பாத ஸ்தோத்திரம் ஸ்ரீ தோடகாஷ்டகம் 1

விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே மஹிதோப நிஷத் கதிதார்த்த நிதே! ஹ்ருதயே கலயே விமலம் சரணம்

ஸ்ரீசங்கர பகவத்பாத ஸ்தோத்திரம்
ஸ்ரீ #தோடகாஷ்டகம்

1. விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே

மஹிதோப நிஷத் கதிதார்த்த நிதே!

ஹ்ருதயே கலயே விமலம் சரணம்

பவ சங்கர தேசிக மே சரணம் (1)

2. கருணா வருணாலய பாலய மாம்

பவஸாகரதுக்க விதூன ஹ்ருதம் I

ரசயாகிலதர்சன தத்வவிதம்

பவ சங்கர தேசிக மே சரணம் (2)

3. பவதா ஜனதா ஸ¨ஹிதா பவிதா

நிஜபோத விசாரண சாருமதே I

கலேயேச்வர ஜீவ விவேக விதம்

பவ சங்கர தேசிக மே சரணம் (3)

4. பவ ஏவ பவானிதி மே நிதராம்

ஸமஜாயத சேதஸி கௌதுகிதா I

மம வாரய மோஹமஹாஜல திம்

பவ சங்கர தேசிக மே சரணம் (4)

5. ஸுக்ருதே அதிக்ருதே பஹ§தா பவத:

பவிதா ஸமதர்சன லாலஸதா I

அதி தீனமிமம் பரிபாலய மாம்

பவ சங்கர தேசிக மே சரணம் (5)

6. ஜகதீ மவிதும் கலிதாக்ருதய:

விசரந்தி மஹா மஹ;ஸச்சலத: I

அஹிமாம் சுரிவாத்ர விபாஸ புர:

பவ சங்கர தேசிக மே சரணம் (6)

7. குருபுங்கவ புங்கவகேத ந தே

ஸமதா மயதாம் நஹி கோபி ஸுதி: I

சரணாகதவத்ஸல தத்வ நிதே

பவ சங்கர தேசிக மே சரணம் (7)

8. விதிதா ந மயா விசதைக கலா

நச கிஞ்சன காஞ்சனமஸ்தி குரோமி

த்ரு தமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்

பவ சங்கர தேசிக மே சரணம் (8)

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

கல்பக கணேச பஞ்சரத்னம்!

1. ஸ்ரீமத் தில்வவநே ஸபேசஸதந ப்ரத்யக் ககுப் கோபுரா தோபாகஸ்த்தித சாருஸத் மவஸதி: பக்தேஷ்டகல்பத்ரும:
ந்ருத்தா நந்தமதோத்கடோ கணபதிர் ஸம்ரக்ஷதாத்வோஸ்நிசம் துர்வாஸ: ப்ரமுகா கிலர்ஷி விநுத: ஸர்வேச்வரோஸ்க்ர்யோஸ்வ்யய:

பொருள் : சீர்மிக்க சிதம்பரத்தில் நடராஜரது கோயிலின் மேல் கோபுரத்தின் அழகிய கோட்டத்தில் விளங்குபவர், கற்பக மரமாகி அடியார் விரும்புவதை நிறைவேற்றுபவர், நடனத்தில் அடங்கா ஆனந்த மதம் கொண்டவர், துர்வாசர் முதலிய முனிவர்களால் வணங்கப் பெற்றவர், எல்லோருக்கும் மூத்தவர், குறைவற்றவர், அந்த கணபதி நம்மைக் காக்கட்டும்.

2. ஸ்ரீமத் தில்வ வநாபிதம் புரவரம் க்ஷúல்லாவுகம் ப்ராணிநாம், இத்யாஹுர்முநய: கிலேதி நிதராம் ஜ்ஞாதும் ச தத்ஸத்யதாம்
ஆயாந்தம் நிசி மஸ்கரீந்த் ரமஸ்பியோ தூர்வாஸஸம் ப்ரீணயந், ந்ருத்தம் தர்சயதி ஸ்ம நோ கணபதி: கல்பத்ருகல்போஸ்வதாத்

பொருள் : தில்லைக்காடு என்ற நகரம் உயிரினம் அனைத்தின் பசியைப் போக்குகிறது என முனிவர்கள் கூறுகிறார்கள். அதன் உண்மை நிலையை அறிய இரவில் வந்த துறவிகளில் சிறந்த துர்வாசரைத் திருப்திப்படுத்தி அவர் விரும்பிய தன் நடனத்தைக் காட்டிய கற்பகமரம் போன்ற கணபதி நம்மைக் காக்கட்டும்.

(தில்லையில் சிவகாமி அன்னை அன்னம் பாலிப்பது உண்மையா என்று சோதிக்க வந்தார் துர்வாசர். இரவானதால், அவருக்கு அன்னமளிக்கவில்லை. அதனால் சபிக்க இருந்த துர்வாசருக்கு சிவகாமி அம்பிகை உணவளித்தாள். நடராஜனின் நடனம் கண்ட பின்பே உணவருந்துவேன் என மறுத்த முனிவர் முன் கணபதியைக் கொண்டு அந்த நடனத்தைக் காண்பித்தாள் என்பது தல வரலாறு.)

3. தேவாந் ந்ருத்ததி த்ருக்ஷயா பசுபதே: அப்யாக தான் காமிந:, சக்ராதீன் ஸ்வயமுத்த்ருதம் நிஜபதம் வாமேதரம் தர்சயன்
தத்வா தத்ததபீஷ்டவர்க மநிசம் ஸ்வர்காதி லோகான் விபு: நித்யே ய: சிவகாமிநாததநய: குர்யாத்சிவம்வோஸ்ந்வஹம்

பொருள் : சிவபெருமானின் நடனம் காண விரும்பி வந்த இந்திரன் முதலான தேவர்களுக்குத் தன் வலது திருவடியைத் தூக்கிக் காண்பித்து அவர்கள் விரும்பியதை அருளி, சொர்க்கம் முதலிய அவரவர் உலகிற்கு அனுப்பினார். அந்த சிவகாமி சிதம்பரநாதனின் மகன் நமக்கு மங்களத்தைத் தரட்டும்.

4. அஸ்மாகம் புரதச்சகாஸ்து பகவான் ஸ்ரீகல்பகாக் யோஸ்க்ரணீ, கோவிந்தாதி ஸுரார்சிதோஸ்ம்ருதரஸப் ராப்த்யை கஜேந்த்ராந ந:
வாசம் யச்சது நிச்சலாம் ச்ரியமபி ஸ்வாத்மாவ போதம் பரம், தாரான் புத்ரவராம்ச்ச ஸர்வவிபவம் காத்யாயனி ஈசாத்மஜ:

பொருள் : அமிர்தம் பெற கோவிந்தன் முதலானோரால் வேண்டப் பெற்ற யானைமுக கற்பக கணேசர், நம் முன் தோன்றட்டும். அவர் எல்லோருக்கும் மூத்தவர். நல்ல வாக்கையும், அகலாத செல்வத்தையும், உயர்ந்த ஆத்ம ஞானத்தையும், நன் மனைவி மக்களையும் பெருமையையும் அந்த காத்யாயனீ - சிவனின் மகன் தந்தருளட்டும்.

5. வந்தே கல்பக குஞ்ஜரேந்த்ரவதநம் வேதோக்தி பி: தில்வபூ: தேவை: பூஜிதபாத பத்மயுகலம் பாசச்சி தம் ப்ராணிநாம்
தந்தாதீ நபி ஷட்பு ஜேஷு தததம்வாஞ்ச்சா ப்ரதத்வாப்தயே, ஸ்வாப்யர்ணாச்ரயி, காமதேநு மநிசம் ஸ்ரீமுக்ய ஸர்வார்ததம்

பொருள் : கற்பக கணபதி, யானைமுகன், தில்லை வாழ் அந்தணர்களால் வேத மந்திரங்களால் திருவடிகளில் பூஜிக்கப் பெற்றவர், உயிரினத்தின் பந்தத்தை நீக்குபவர், தந்தம் முதலிய ஆறு ஆயுதங்களை ஏந்தியவர். விரும்பியதைத் தருபவர் என்ற தகுதியைப் பெற காமதேனுவால் அணுகிப் போற்றப் பெற்றவர், செல்வம் முதலிய வேண்டிய எல்லாம் தரும் கணேசரை வணங்குகிறேன்.

6. ஒளமாபத்யம் இமம் ஸ்தவம் ப்ரதிதினம் ப்ராதர் நிசம் ய: படேத், ஸ்ரீமத் கல்பக குஞ்ஜராநந க்ருபா பாங்காவ லோகாந்நர:
யம் யம் காமயதே ச தம் தமகிலம் ப்ராப்நோதி நிர்விக்நத: கைவல்யம் ச ததாந்திமே வயஸி தத் ஸர்வார்த்த ஸித்திப்ரதம்

பொருள் : உமாபதி சிவாச்சாரியாரால் செய்யப் பெற்ற, விரும்பியதைத் தருகிற இந்தத் துதியை இரவும் பகலும் படிப்பவன் ஸ்ரீகற்பக விநாயகரின் கருணைக் கடைக்கண் பார்வையால் நாடியது அனைத்தையும் தடையின்றிப் பெறுவான். தன் இறுதி நாட்களில் எல்லா புருஷார்த்தத்தையும் நிறைவுறச் செய்கிற கைவல்யத்தையும் பெறுவான்.
----------------------------------------------------------------------------
கிருஷ்ணர் துதி!
கிருஷ்ணாய வாஸுதேவாய தேவகி நந்தநாய
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோநம:

பொருள் : தேவகிக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவனும், வாசுதேவனும், நந்தகோபனின் குமாரனும், கிருஷ்ணனுமாகிய கோவிந்தனை வணங்குகிறேன்.

நம: பங்கஜநாபாய நம: பஞ்சத மாலிநே
நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜாஸ்ரியே

பொருள் : நாபியில் தாமரையை உடையவரும், தாமரை மாலையைத் தரித்தவரும், தாமரை போன்ற கண்களை உடையவரும், அழகான பத்ம ரேகையைக் கால்களில் உடையவருமான தங்களைப் பலதடவை வணங்குகிறேன்.

மூகம் கரோதி வாசாலம் பங்கும் வங்கதே கிருஹம்
யத்கிருபா பரமம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்

பொருள் : பேசவே இயலாதவரையும் கூட பேச்சாற்றல் மிக்கவராக மாற்றக் கூடியவரும், குடிசையையே மாளிகையாக்கக் கூடியவருமான அந்தப் பரமானந்த மாதவனின் கருணையை வணங்குகிறேன்.

சங்க சக்ர கதாபாணே த்வாரகா நிலையார்ச்சுத:
கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம்

பொருள் : சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றைத் தரித்தவரும், த்வாரகாபுரியின் அதிபரும், தாமரை போன்ற கண்களை உடையவரும், பசுக்களைப் பரிபாலிக்கிறவருமான பிரபுவே, தங்களைச் சரணடைந்த என்னைக் காப்பாற்றுங்கள்.

த்வம் ஆதி அந்தோ பூதானாம் த்வமேவ ச பராகதி:
விஸ்வாத்மன் விஸ்வ ஜநக: விஸ்வகர்த்த: பிரபோவ்ய:

பொருள் : உலகத்தை தேகமாகக் கொண்டவரே, உலகத்தைப் படைத்தவரே, உலகத்தை அழிப்பவரே, ஹே பிரபோ, அழிவற்றவரே, பிராணிகளின் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என (ஆக்கல், காத்தல், அழித்தல்) முத்தொழிலையும் செய்பவரே உம்மை வணங்குகிறேன்.

யத்ர யோகேஸ்வர: கிருஷ்ணோ
யத்ர பாத்ரோ தனுர்த்தர:
பத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர்
த்ருத்வா நீதிர் மதிர் நம:

பொருள் : எங்கு யோகேஸ்வரனான ஸ்ரீ கிருஷ்ண பகவான் இருக்கிறாரோ, எங்கு வில்லேந்திய வீரன் அர்ஜுனன் இருக்கிறானோ அங்கெல்லாம் மகாலட்சுமியின் கடாட்சத்தோடு மிகுந்த ஜெயமும், அழியாத ஐஸ்வர்யமும், நீதியும் நிச்சயம் இருக்கும்.

தேவகி ஸூத கோவிந்த வாஸுதேவ ஜெகத்பதே
தேஹிமே தநயம் கிருஷ்ணா த்வாம் அஹம் சரணம் கத:

பொருள் : தேவகியின் மகனான கோவிந்தனே வாசுதேவனே, உலகத்தின் தலைவனே எனக்கு ஒரு மகனைத் தந்து அருள்வீர்.

பகவான் கூறியது

நாகம் வஸாமி வைகுண்டே நயோகி ஹ்ருதயே
தத்ர நிதஸ்யாமி யத்ர காயந்தி மத் பக்தா ! நிருத்யே !!

பொருள் : நான் எனது இருப்பிடமான வைகுண்டத்தில் வெகுகாலம் வசிப்பதில்லை. யோகிகளின் இதயத்திலும், வசிப்பதில்லை. எந்த இடத்தில் என் பக்தர்கள் பாடியும் ஆடியும் களிப்படைகிறார்களோ அந்த இடத்தில் நான் வசிப்பேன். அவர்கள் மனதில் நிறைந்திருந்து அவர்கள் வேண்டுவதை அருள்வேன். இது நிச்சயம் !
----------------------------------------------------------------------------
108 Divya Desam : sri Appakudathan Temple

Moolavar : Appakudathan
Urchavar : Appala Ranganathar
Thayar : Indiradevi, Kamalavalli
Thala Virutcham : Purasa tree
Theertham : Indira Pushkarini
Agamam Pooja  : Pancharatra Agama
Old year : 2000 years old
Historical Name : Tirupair
City : Koviladi
District : Thanjavur
State : Tamil Nadu

Singers : The Lord of the temple is praised in the Mangalasasanam hymns of Saints Periazhwar, Tirumazhisai Azhwar and Tirumangai Azhwar  
      
Festival : Car festival on Panguni Uthiram star day Theerthavari in March-April; Vaikunta Ekadasi in December-January; Navarathri in September-October and the butter pot breaking utsav-Uri Adi- are the festivals celebrated in the temple  

Opening Time : The temple is open from 8.30 a.m. and 12.00 a.m. and from 4.30 p.m. and 8.00 p.m, Sri Appakudathan Temple, Koviladi (Tirupair)-613 105, Thanjavur district, Phone : +91- 4362 - 281 488, 281 460, 281 304 
     
Information : Lord, in His Bhujanga Sayana-reclining posture is facing west.  The Vimana above the sanctum is of Indira Vimana design.  Lord Vazhikatti Vinanayaka (Guiding Vinayaka) graces the place.  Upamanyu and Sage Parasara had the darshan of Lord Appakudathan here  

Greatness Of Temple : Appam is a sweet preparation offered to Gods as nivedhana.  Perumal got the name Appakudathan as He received the pot of Appam from king Upamanyu.  Perumal appears embracing the pot by one hand.  Perumal destroyed the pride of Indira, saved Sage Markandeya from fear of death and relieved king Upari Siravasu from sins and curses in this ancient place.  It is also said that this temple (Kovil) came into being even before the Srirangam temple that followed next.  Adi in Tamil means foundation or forerunner.  Hence, the place is named Koviladi, it is explained by scriptures. This is the temple from where Saint Periazhwar left for Lord’s Abode after singing his last Mangalasasanam.  Hence, the belief is that one worshipping Perumal here is sure to reach Vaikunta.  Mother and Lord are facing each other.  Tirumangai Azhwar praised Perumal in his hymns. Lord Appakudathan followed Azhwar to Tiruvellarai where too he sang his praise again. Koviladi - Appala Rangam is one among the Pancha Ranga sthala occupies the second place.  Other four are Adhirangam in Sriranga Pattinam in Mysore, Madhya Rangam in Sri Rangam, Chaturtha Rangam in Kumbakonam and Pancha Rangam in Indalur-Mayiladuthurai,  It may be noted that Srirangam comes third after Koviladi.  
      
Temple History : King Upamanyu lost his powers due to the curse of Sage Durvasa.  When begged for pardon and relief, the sage said that the king should feed one lakh people in this place, then known as Palasavanam and he would be relieved of the curse.  The king built a palace nearby and commenced the feeding.  One day, Lord Sriman Narayanan-Perumal came there in the guise of an aged Brahmin.  He was served food.  To test the determination of the king, Lord consumed the entire quantity of food prepared for the day.  King politely asked the Brahmin if He wanted anything more.  The Brahmin replied He wanted one pot of Appam.  Sooner He received Appam pot from the king, his curse vanished, says the Sthala Purana.
274 Sivalayam Sri Shivaloka Thyagar temple
 
Moolavar    : Shivaloka Thyagar
Urchavar    : Tirugnana Sambandar
Amman : Tiru Vennetru Umai Ammai, Suvedha Vibhuti Nayaki
Thala Virutcham    : Mango
Theertham    : Panchakkara, Ashwa, Vasishta, Athiri Jamadagni, Vyasa Mrigandu theerthams
Old year    : 2000 years old
Historical Name    : Shivalokapuram, Mukthipuram, Thirumana Nallur, Thirumanavai
City    : Achalpuram
District    : Nagapattinam
State    : Tamil Nadu
 
Singers : The temple is praised by Saint Tirugnana Sambandar in his Thevaram hymns. This is the 5th Lord Shiva temple on the northern bank of Cauvery praised in Thevaram hymns.      
             
Festival : Mahashivrathri is very devotionally celebrated in the temple in February-March.      
                     
Opening Time : The temple is open from 6.00 a.m. to 12.00 a.m. and from 4.00 p.m. to 8.00 p.m. Sri Shivaloka Thyagaraja Swami Temple, Achalpuram, Sirkali – 609 101, Nagapattinam district. Phone : +91- 4364 - 278 272     
            
Information : The temple stands majestically facing east with a five tier Rajagopuram.  Nanda Mandapam and 100 pillar mandap is next to the tower.  Saint Sambandar graces in the 100 pillar mandap with Stotra Poornambikai in wedding posture.  Next to this are the shrines of Lord Shivaloka Thyagarajar and Mother Tiruvennetru Umai Ammai, both facing east.  Lord Vishnu, Sages Kaka, Vasishta, Parasara, Brugu and Jamadagni had worshipped Lord Shiva in this temple.      
             
Greatness Of Temple : Sirkali occupies a place of pride in the religious map of Tamilnadu as the birth place of Saint Tirugnana Sambandar who ably restored the Vedic glory and supremacy of Saivism against the massive assault of other faiths.  It also has the added reputation of the Saint merging with Shiva Jyoti with all the devotees gathered there for his wedding at Achalpuram.  Noted poet Sekkizhar shows the Saint in his celebrated epic Periapuranam as one small in physical stature but a mount in wisdom.  As Achal-Mother, personally attended the wedding of the saint and offered the Vibhuti Prasad to the gusts, She is praised as Tiruvennetru Umai Ammai.  The place came to be known as Achalpuram.  Great sages as Vasishta, Parasara, Jamadagni, Brugu had the Kailash darshan here.  Lord Brahmma secured the creation boon from the Lord here, while Vishnu was granted the power of destroying the wicked and demons. Indira had all the luxuries from Lord Shiva at this place.  Holy Ganga Devi performed penance at the entrance of the place.  Moon was relieved of his curse. Those worshipping in this temple will become free of all adverse effects falling on them. Everyone worshipping Lord who embraced Saint Sambandar through the Shiva Jyoti is sure to awarded total salvation. Sage Kaka was reluctant to tread on this land with his legs and used his head and performed penance sitting in the Nirudhi corner-southwest. Tiruneelakanda Yazhpanar, Muruga Nayanar, Tiruneelanakka Nayanar worshipped Lord in this temple.
Sacred Ash-Vibhtui is the Prasad offered in the temple.  Applying this on the body cures the devotee of all illness, frees him/her from sins and poverty and ensures the Mangalya longevity of women, according to belief.
     
Temple History : The history of Saint Tirugnana Sambandar is the very history of Saivism philosophy stressing the ultimate truth that reaching the Lotus feet of Lord Shiva should be purpose of a meaningful human life.  Father Shivapada Hrudayar asked the Saint Son to marry which though he refused first but gave in reluctantly thinking it to be the will of Lord.  Shivapada Hrudayar chose Poompavai, daughter of Sivanesan Chettiar as his bride.  But she died of a snake bite.  Tirugnanasambandar restored her to life with the grace of Lord and simply accepted her as his daughter only.  Shivapada Hrudayar then chose Mangai Nallal daughter of Nambiandar Nambi of Nallur.  The wedding took place at Achalpuram.  Tiruneelanakka Nayanar conducted the rituals.  Circumambulating the wedding fire pit with his bride, Gnanasambadar prayed to Lord Shiva to protect him from the problems of a marital life and praised Him with Kallur Perumanam hymn. Lord Shiva appeared in the form of Jyothi and advised the saint to join Him along with all gathered there.  Losing himself completely to the Lord, Sambandar sang his last Pathigam (10 verses) highlighting the glory of Panchakshara Mantra –  Na Ma Shi va ya.  All merged with the Lord collectively the same time. This event is celebrated each year in the temple on the Moola Star day in the month of Vaikasi – May-June.
------------------------------------------------------------------------------------------------------------