செவ்வாய், 2 ஜூலை, 2019

*அமாவாசை தர்பணம்*  {யஜுர்வேத ஆபஸ்தம்ப  தர்ப்பணம்}

யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம். சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம் செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி மாத்யாணிகம் செய்து விட்டு தர்பணம் செய்யவும்.

அமாவாசை தர்ப்பணம்

முதலில் ஆசமனம் அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ, நாராயணா, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுஸூதனா,  த்ரிவிக்ரமா, வாமனா, ஶ்ரீதரா, ஹ்ரிஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

பவித்ரம் {மூன்று புல்} வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும். மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.

ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம் அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி
மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி நஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே ஹேமளம்ப நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகரமாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாம் புண்ய திதெள பௌம  வாஸர யுக்தாயாம் பூர்வாஷாடாநக்ஷத்ர யுக்தாயாம் ஏவங்குண விஷேஷன வஸிஷ்ட்டாயாம் வர்தமானாயாம் அமாவாஸ்யாம் புண்ய திதெள (பூணல் இடம்) ப்ராசீணாவீதி வாதுள கோத்ராணாம் பாலசுப்பிரமண்ய, வெங்கட்ராம, சுப்பிரம்மண்ய ஸர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் வாதுள கோத்ரானாம் விஜயலக்ஷ்மி, மீனாக்ஷி சுந்தராம்பாள், முத்து லக்ஷ்மி தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் கௌசிக கோத்ராணாம் ஸ்ரீராம, கோதண்ட ராம, வைத்தியநாத சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்ய தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

கையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும். பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.

பூணல் இடம் : தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும். அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச னூதனாஹா

அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையை எறிந்து விடவும் கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் இரைக்கவும்.
இந்த மந்த்ரம் சொல்லி.

அபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயன்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன:

பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)

அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.

பூணல் இடம் : தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஸம்ப்ரதாயப்படி போட்டு ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்.

“ஆயாத பிதரக: ஸோம்யா கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச” அஸ்மின் கூர்ச்சே வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய, வெங்கட்ராம, சுப்பிரம்மண்ய ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் வாதுள கோத்ரா: விஜயலக்ஷ்மி, மீனாக்ஷி சுந்தராம்பாள், முத்து லக்ஷ்மி  சர்மனாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. கௌசிக கோத்ரா: ஸ்ரீராம, கோதண்ட ராம, வைத்தியநாத ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு
ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்.

ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.

வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்.

இடது காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.

1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவ: ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா: பதிபிஹி  தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்து வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .

2.2: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்ய: ஸ்வதா நமஹ வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்து வாதுள கோத்ரான் வெங்கட்ராம ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ வாதுள கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா வாதுள கோத்ரான் சுப்பிரமணிய சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.3: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந: வாதுள  கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

மாத்ரூ வர்க்கம்:

வாதுள கோத்ராஹா விஜயலக்ஷ்மி தாஹா: வஸு ரூபாஹா மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

வாதுள கோத்ராஹா மீனாட்சி சுந்தராம்பாள் தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை.

வாதுள கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

மாதா மஹ வர்க்கம் தர்பணம்:

1.1: உதீரதாம் + ஹவேஷு கௌசிக கோத்ரா னு ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.2 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.3 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1  கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.2 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.3 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.2 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.3 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.1,2,3: கௌசிக கோத்ராஹா மீனாட்க்ஷி தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

2.1,2,3: கௌசிக கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

3.1,2,3: கௌசிக கோத்ராஹா வாளாம்பால் தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

பூணல் வலம் : தேவதாப்பிய: ______

இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும். பூணல் இடம்.

உத்திஷ்ட்த பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தாமன்வேதா புராணம் தத்தாதஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான்தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹான், மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

பவித்ரத்தை காதில் தரித்து, உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு, ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து

கையில் எடுத்து, யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.

காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணா யேதி சமர்பயமி.

ஞாயிறு, 30 ஜூன், 2019

ஸ்ரீ நிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேச கோவிந்தா
பக்தவத்சல கோவிந்தா
பாகவதப்பிரியா கோவிந்தா
நித்ய நிர்மல கோவிந்தா
நீலமேகஸ்யாம கோவிந்தா
புராணபுருஷ கோவிந்தா
புண்டரீகாக்ஷ கோவிந்தா
நந்த குமாரா கோவிந்தா
நவநீதசோர கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
பசுபாலக கிருஷ்ணா கோவிந்தா
பாபவிமோசன கோவிந்தா
துஷ்டஸம்ஸஹார கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரிபாலன கோவிந்தா
கஷ்ட நிவாரண கோவிந்தா
வஜ்ரமகுடா கோவிந்தா
வராஹமூர்த்தி கோவிந்தா
கோபீ ஜனலோல கோவிந்தா
கோவர்த்தநோத்தார கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
தசரத நந்தன கோவிந்தா
தசமுகமர்த்தன கோவிந்தா
பக்ஷிவாஹன கோவிந்தா
பாண்டவப் பிரியா கோவிந்தா
மத்ஸ்ய கூர்மா கோவிந்தா
மதுசூதன ஹரி கோவிந்தா
வராஹ நரசிம்ஹ கோவிந்தா
வாமன ப்ருகுராமா கோவிந்தா
பலராமானுஜ கோவிந்தா
பௌத்த கல்கீ கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
வேணுகானப் பிரிய கோவிந்தா
வெங்கட்ரமண கோவிந்தா
சீதாநாயக கோவிந்தா
ஸ்ரீ தர பரிபாலக கோவிந்தா
தரித்ரஜன போஷக கோவிந்தா
தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா
அனுதரக்ஷக கோவிந்தா
ஆபத்பாந்தவ கோவிந்தா
சரணாகதவத்ஸல கோவிந்தா
கருணாஸாகர கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
கமலாதளாக்ஷõ கோவிந்தா
காமுதபலதா கோவிந்தா
பாபவினாஸக கோவிந்தா
பாஹிமுராரே கோவிந்தா
ஸ்ரீ முத்ராங்கித கோவிந்தா
ஸ்ரீ வத்ஸாங்கித கோவிந்தா
தரணி நாயக கோவிந்தா
தினகரதேஜோ கோவிந்தா
பத்மாவதி பிரிய கோவிந்தா
ப்ரஸன்ன மூர்த்தி கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
அபயஹஸ்தா கோவிந்தா
அர்ச்யாவதார கோவிந்தா
சங்குசக்ரதார கோவிந்தா
சாரங்கதாதர கோவிந்தா
விரஜாதீர்த்தா கோவிந்தா
வீரோதி மர்தன கோவிந்தா
சாலக்ராம ஸாரா கோவிந்தா
ஸஹஸ்ரநாமா கோவிந்தா
லக்ஷ்மீவல்லப கோவிந்தா
லக்ஷ்மணாக்ரஜா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
கஸ்தூரி திலகா கோவிந்தா
காஞ்சனாம்பரதா கோவிந்தா
கருடவாஹனா கோவிந்தா
கஜராஜரக்ஷக கோவிந்தா
வானரஸேவித கோவிந்தா
வாரதிபந்தன கோவிந்தா
ஏழுமலையானை கோவிந்தா
ஏகஸ்வரூபா கோவிந்தா
ராமகிருஷ்ணா கோவிந்தா
ரகுகுலநந்தன கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
ப்ரத்யக்ஷதேவா கோவிந்தா
பரமதயாகர கோவிந்தா
வஜ்ரகவசாத கோவிந்தா
வைஜயந்தீமாலா கோவிந்தா
வட்டிகாசனே கோவிந்தா
வசுதேவசுதனே கோவிந்தா
பில்டபத்ராதர கோவிந்தா
பிக்ஷúக ஸம்ஸ்துத கோவிந்தா
மோஹனரூபா கோவிந்தா
சிவகேஸவமூர்த்தி கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
ப்ரம்ஹாண்டரூப கோவிந்தா
பக்தரக்ஷக கோவிந்தா
தித்யகல்யாணா கோவிந்தா
நீரஜநாப கோவிந்தா
ஹத்தீராமப்ரியா கோவிந்தா
ஹரிஸர்வோத்ம கோவிந்தா
ஜனார்தனமூர்த்தி கோவிந்தா
ஜகத்சாக்ஷிரூபா கோவிந்தா
அபிஷேகப்ரிய கோவிந்தா
ஆபத்பாந்தவா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
ரத்னகிரீட கோவிந்தா
ராமானுஜ ஹரி கோவிந்தா
ஸ்வயம் பிரகாஸா கோவிந்தா
ஆஸ்ரிதபக்ஷõ கோவிந்தா
நித்யசுபதப கோவிந்தா
நிகிலலோகேஸ கோவிந்தா
ஆனந்தரூபா கோவிந்தா
ஆத்யந்தரஹிதா கோவிந்தா
இஹபர தாயக கோவிந்தா
இஹபர ரக்ஷித கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
பத்மதளாக்ஷõ கோவிந்தா
பத்மநாபஹரி கோவிந்தா
திருமலை நிவாஸ கோவிந்தா
துஸசீ தளமால கோவிந்தா
சேஷாயி கோவிந்தா
சேஷாத்ரி ஹரி நிலயா கோவிந்தா
ஸ்ரீ நிவாச கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேச கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா

வியாழன், 27 ஜூன், 2019

சூரியன் உபதேசித்த சுக்ல யஜுர் வேதம்!

இறைவனுடைய உள்ளிழுக்கும் காற்றாகவும் வெளிவிடும் காற்றாகவும் விளங்குவது வேதம். பகவானுக்கும் சுவாசம் உண்டு என்கிறது வேதம். இந்த வேதத்தை நான்காக  வகுத்தவர் வியாசர். அவை ருக் யஜுர் சாமம் அதர்வணம் என்று எல்லாருமே அறிவார்கள். இதைத்தவிர சுக்ல யஜுர் வேதம் என்று மொரு வேதம் உண்டு. இந்த வேதத்தை யாக்ஞவல்கியர் என்ற மகான் சூரிய பகவானிடமிருந்து கற்று உலகிற்கு அளித்தார். யாக்ஞவல்கியர் இந்த வேதத்தைக் கற்ற வரலாறு சுவையானது. வைசம்பாயனர் என்ற ரிஷி வியாசரிடம் கற்ற யஜுர் வேதத்தை பல சிஷ்யர்களுக்கு கற்றுக்கொடுத்தார். ஒருநாள் வைசம்பாயனர் அதிகாலையில் நீராடிவிட்டு ஏதோ சிந்தனை செய்தவாறு ஆசிரமத்தை நோக்கிவந்தார். அப்போது நடுவழியிலே வேதத்தை பூரணமாகக் கற்றுணர்ந்த பிரம்மச்சாரி சிறுவன் ஒருவன் படுத்துக்கொண்டிருந்தான். அதையறியாமல் அந்த சிறுவனின் வயிற்றில் காலை வைத்து விட்டார் வைசம்பாயனர். அந்த சிறுவன் துடிதுடித்து இறந்துபோனான். அதனால் வைசம்பாயனருக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.

வருத்தம் தாங்காமல் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார் அவர். சீடர்கள் வழக்கம் போல வந்து வணங்கினார்கள். ஆச்சாரியர் முகம் வாட்டமாக இருப்பதைக் கண்டு பணிவோடு காரணம் கேட்டனர். வைசம்பாயனர் நடந்த விவரங்களைச் சொன்னார். சீடர்கள் செய்யும் பாவம் ஆச்சார்யர்களை வந்தடையும். இங்கே ஆச்சார்யரே பாவம் செய்து விட்டார். சீடர்கள் எல்லாருமாக சேர்ந்து ஏதாவது பிராயச்சித்தம் அனுஷ்டித்தால் அந்த பாவம் போகும். வைசம்பாயனரும் அவர்கள் அவ்வாறு அனுஷ்டித்து பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து தன்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார். சீடர்கள் எல்லாரும் அப்படியே நாங்கள் செய்கிறோம். அதைக் காட்டிலும் ஒரு கடமை எங்களுக்கு உண்டா? ஆச்சார்யாருக்கு ஏற்பட்ட சிரமத்தைப் போக்கவில்லையென்றால் சீடர்கள் எதற்கு? என்றார்கள். அப்போது அவர்களுள் ஒருவரான யாக்ஞவல்கியர் குருவே உங்கள் தோஷத்தை நிவர்த்திசெய்ய இத்தனை பேர் எதற்கு?நான் ஒருவனே பிராயச்சித்தம் செய்து சிரமத்தைப் போக்கிவிடுவேன் என்றார்.

வைசம்பாயனருக்கு கடும் கோபம் வந்து விட்டது. எல்லாரையும் சாமானியர்கள் என்று மதித்து நீ ஒருவனே உயர்ந்தவனென்று காட்டிக்கொள்கிறாய். அது உன் அகங்காரத்தைக் காட்டுகிறது. இவ்வளவு அகங்காரமுடைய சீடன் எனக்குத் தேவையில்லை. நீ ஆசிரமத்தை விட்டு வெளியே போ! என்று கோபத்தோடு சொன்னார். யாக்ஞவல்கியருக்கு அதற்கு மேல் கோபம். ஆச்சார்யரே தங்களிடத்தில் இருக்கிற அன்பினால் மதிப்பினால் சொன்ன வார்த்தைகளே தவிர இவர்களைக் குறைத்துக் கூறுவதற்காக நான் பேசவில்லை. அப்படி நீங்கள் நினைப்பதும் ஏற்றதல்ல. என் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல் என்னை போகச் சொல்கிறீர்கள். உங்களுடைய ஆச்சாரியத்துவம் எனக்கு வேண்டியதில்லை என்றார். அதற்கும் மேலே வைசம்பாயனர் என்னுடைய ஆச்சார்யத்துவம் வேண்டியதில்லையானால் என்னிடம் கற்ற வேதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு போகமுடியுமா? அதனால் வேதத்தை முழுக்க கக்கிவிட்டுப் போ என்றார்.

யாக்ஞவல்கியரும் சளைக்கவில்லை. கற்ற வேதங்களை எல்லாம் மொத்தமாக ஒரு மாமிசக் கோளமாகக் கக்கிவிட்டு கோபத்தோடு வெளியேறிவிட்டார். மகான்களின் தவவலிமையால் இப்படி எல்லாமே சாத்தியமாகும். வேதவித்தை கேட்பாரில்லாமல் ஒரே மாமிசக் கோளமாகக் கிடந்தது. வைசம்பாயனர் வேதம் இப்படி இருப்பதைக் கண்டு மனம் வருந்தி மற்ற சீடர்களை அழைத்து அவர்களை தித்திரா என்ற பறவைகளாக மாற்றி கிழே கிடந்த மாமிசத்தை உண்ணும்படி சொன்னார். அவர்களும் குரு சொன்னபடி செய்தார்கள். இவ்வாறு வேதவித்தைகள் கக்கப்பட்டு மறுபடியும் கொள்ளப்பட்டு தரித்தது. அதனால் இதற்கு கிருஷ்ண யஜுர் வேத தைத்ரீய சம்ஹிதை என்று பெயர். தித்திரா என்ற பறவையின் பெயரால் தைத்ரீயம் என்ற உபநிடதம் உள்ளது. வேதமிழந்த யாக்ஞவல்கியர் கங்கை நதி தீரம் சென்று நீராடி ஸ்ரீமந்நாராயணனைக் குறித்து பலவாறாக ஸ்தோத்திரம் செய்தார். பிறகு காயத்ரி தேவியைக் குறித்து பல நாட்கள் தவமிருந்தார். அவரது தவத்திற்கிரங்கிய காயத்ரி தேவி அப்பனே நீ வேண்டிய வரமென்ன என்று அன்புடன் கேட்டாள். அவளை வணங்கிய யாக்ஞவல்கியர் தாயே ஸ்ரீ வைசம்பாயனர் என்னிடம் கற்ற வித்தைகளைக் கொடு என்று கேட்டார். மறுக்க வழியில்லாமல் கொடுத்து விட்டேன். இப்பொழுது எனக்கு யஜுர் வேதம் வேண்டும். நீங்களே குருவாக இருந்து வேதத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் என்றார்.

அதைக்கேட்ட காயத்ரி தேவி முன்னொரு காலத்தில் நைமித்திக பிரளயம் ஏற்படப் போகிறதென்று அறிந்த பிரம்மதேவர் விஷ்ணு லோகம் சென்று சுவாமி வரப்போகும் பிரளயத்தில் அசுரன் ஒருவன் வேதங்களை அபகரிப்பான் என்கிற பாடம் பயம் உண்டாகிறது என்றார். அதைக்கேட்ட விஷ்ணு, குழந்தாய் கவலை வேண்டாம். வேதத்தின் ஒரு பகுதியாக யஜுர் வேதத்தை சூரிய பகவானிடத்தில் வைப்போம் என்று சொன்னார். அதன்படியே இந்த வேதமானது அயாதயாமம் என்பது சூரியனிடம் வைக்கப்பட்டிருக்கிறது. நீ சூரிய பகவானைக் குறித்து தவமிருப்பாயாக. நீ வேத வியாசரிடம் வேத அத்யயனம் செய்திருக்கிறாய். அந்த பிரகஸ்பதியே உனக்கு அட்சராப்யாசம் செய்து வைத்திருக்கிறார். எனது கடாக்ஷத்தால் உன் விருப்பம் நிறைவேறும் என்று அருள் புரிந்து மறைந்தாள். அது முதல் யாக்ஞவல்கியர் சூரிய பகவானைக் குறித்துத் தவமிருந்தார். சூரியன் ஒரு குதிரை வடிவில் அவர் முன் தோன்றினான். {அதனால் முறைப்படி சந்தியா வந்தனம் செய்து முறைப்படி முத்திரையிட்டு, சூரியனைப் பார்த்து விட்டு கண்களை மூடினால் குதிரை ரூபம் கண்ணுக்குள் தெரியும்.} சூரியதேவன் யாக்ஞவல்கியரிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். யாக்ஞவல்கியர் என் ஆச்சாரியர் வைசம்பாயனர் என்னை அனுப்பி விட்டார். அவருக்குத் தெரியாத வேதம் முழுவதும் எனக்கு வேண்டும் என்றார். யாக்ஞவல்கியரின் தவத்திற்கு மெச்சிய சூரியன் குருவுக்கு என்ன தெரியாதோ அந்த வேதத்தை சீடருக்கு உபதேசம் செய்து விட்டார். அப்படி சூரியன் உபதேசம் செய்தது தான் சுக்லயஜுர் வேதம்.
ஸ்ரீ குருவாக்ய பரிபாலனம்
     ***தர்மசாஸ்திரம்***

1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;

3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;

4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.

10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.

12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

40. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை - தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

தர்ம சாஸ்திரம்
---------------------------------------------------
கனவில் பாம்பு தென்படுவதால் என்ன பரிகாரம்!

பெருமாள் கோயிலில்இருக்கும் கருடாழ்வாருக்கு சனிக்கிழமையில் துளசிமாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றுங்கள். இந்த பரிகாரத்தை மூன்று அல்லது ஐந்து வாரத்திற்கு தொடர்ந்து செய்யுங்கள்.
----------------------------------------------
ஏழுபடை வீடு!

கோவை மாவட்டம், பல்லடம் தாலுகாவில் உள்ள வானவன்சேரி என்ற கிராமத்தில் அலகுமலை முருகன் கோயில் உள்ளது. ஆறுபடை வீடு முருகன்களும் எந்தெந்த திசையில் உள்ளனரோ, அதே அமைப்பில் இங்கு அவர்களுக்கு சன்னதிகள் அமைந்துள்ளது சிறப்பு. அத்துடன் முத்துக்குமாரசுவாமி, பால தண்டாயுதபாணி சுவாமியையும் சேர்த்து ஏழு சன்னதிகள் உள்ளதால் இந்தக் கோயிலை ஏழு படை வீடு என்கின்றனர்.
----------------------------------------------
கிரகதோஷ நிவர்த்திக்கு யாரை வணங்குவது சிறந்தது?

நவக்கிரக வழிபாடு தற்காலத்தில் அதிகமாகி விட்டது. திருஞானசம்பந்தர் கோளறு பதிகத்தில் சிவனை வழிபட்டால் நவக்கிரகம் அனைத்தும் நன்மை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். தேவராய சுவாமிகள், கந்தசஷ்டி கவசத்தில், முருகவழிபாட்டால், நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று பாடியுள்ளார். அதனால்,அதிதேவதையான தெய்வத்தை வழிபடுவதே சிறந்தது.
---------------------------------------------------
அமாவாசையன்று நள்ளிரவு 12 மணிக்கு பூஜை நடத்துவது சரியா?

ஆண்டில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இரவு நேர பூஜையை ஆகம சாஸ்திரம் அனுமதிக்கிறது. மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் மட்டுமே வழிபாட்டுக்காக கோயில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் வழக்கமான நேரத்தில் வழிபடுவதே சரியானது.
---------------------------------------------------
அம்மாவின் ஆணை!

தசரதருக்கு கோசலை, கைகேயி, சுமித்ரா என்று மூன்று பட்டத்தரசிகள். இந்த மூவருமே மூன்று குணம் கொண்டவர்கள். கைகேயி தன் மகன் பரதனுக்கு பட்டம் சூட்ட விரும்பினாள். அதற்கு தடையாக இருந்தராமனைக் காட்டுக்குஅனுப்பவும் கணவரிடம் வரம் பெற்றாள். தான் வாழ பிறரைக் கெடுப்பது அரக்க குணம்.ராமனுக்கு பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்ததைக் கேள்விப்பட்டதும் மகிழ்ந்த கோசலை, அவன் காட்டுக்குச் செல்ல இருப்பதை அறிந்ததும் மனம் துடித்தாள். இன்பத்தைக் கண்டால் மகிழ்வதும், துன்பத்தைக் கண்டால் துவள்வதும் இயல்பு.சுமித்ரை தன் மகன்லட்சுமணனிடம், ராமனிடம் தம்பி என்ற உரிமை எடுத்துக் கொள்ளாதே! ஒருவேலைக்காரன் போல் நடந்து கொள், என்று மகனுக்கு ஆணையிட்டாள். பிறர் நலனுக்காக, மகனைப் பிரியும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்ட இவளே தெய்வத்தாயாக உயர்ந்து நிற்கிறாள்.
---------------------------------------------------


அனுமன் கையில் சிவலிங்கம்!

ஆறடி உயரத்தில் கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு நின்ற திருவடிவினராக அனுமன் அருள்பாலிக்கும் தலம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கூகலூர். இவர் அதிசய ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார். உடல்நிலை சரியில்லாதவர்கள் மகப்பேறு இல்லாதவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமை இங்கே வந்து வடைமாலை சாத்தி இவரை வழிபட்டால் நற்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.
உயிர் பிரியும் போது தச வாயுக்களின் பங்கு :

உடலை விட்டு இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில் தான் உயிர் உடலை விட்டு பிரியும்.
மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு. இவை தச வாயுக்கள் எனப்படும்.

1. உயிர் காற்று. (பிராணன்)
2. மலக்காற்று. (அபானன்)
3. தொழில் காற்று. (வியானன்)
4. ஒலிக்காற்று. (உதானன்)
5. நிரவுக்காற்று.( சமானன்)
6. தும்மல் காற்று. (நாகன்)
7. விழிக்காற்று. (கூர்மன்)
8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
9. இமைக் காற்று. (தேவதத்தன்)
10. வீங்கற் காற்று. (தனஞ்சயன்)

உயிர் வெளியே புறப்படும் நாள், நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.

உதாரணமாக... ஒரு வீட்டை நாம் காலி செய்யும் போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டு வந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் ஒவ்வொன்றாக நிறுத்தி, நமது நடு நெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும். சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும், இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும், மூத்திர வாசல் வழியாகவும், காதின் வழியாகவும், மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும். ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்சயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும். உயிர் பிரியும்.

மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும் போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் செய்வது தான். உயிரற்ற உடல்களை ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்கள் பிழைக்க வைப்பதுவும் இந்த தனஞ்சயனை தம் யோக சக்தியால் ஊக்கி விட்டு மற்ற ஒன்பது வாயுக்களை அழைத்து வரச்செய்து உடலினுள் புகுத்தி உயிர் அளிப்பதே ஆகும். இவ்வாறாக புனரபி ஜனனம், புனரபி மரணம்.
என்ற நிலை அமைகிறது. பிறப்பின் துவக்கம் ஆசையின் தூண்டலால் அமைகிறது. பாபங்களும், புண்ணியங்களும் அற்ற சம நிலையை அடைவதே பிறப்பற்ற நிலையைத் தரும். அதுவே ஒவ்வொரு மனிதரும் காண வேண்டிய உன்னதமான முக்தி நிலையாகும்.

#தச வாயுக்களின் சுற்று:

1. பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல் வளையில் உள்ளது. கை, கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.
2. அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும். குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.

3. வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையா பொருளில் உருப்புக்களை நீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.

4. உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.

5. சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.

6. நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.

7. கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண் திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.

8. கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டு பண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.

9. தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.

10. தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல் இறந்த மூன்றாம் நாள் தலை வழியாக வெழியே செல்லுதல்.

குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள் தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீஷ்வர ஜகத்குரு அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஸ்ரீ சந்த்ரஸேகரேந்த்ர - அஸ்மதாசார்யாய நமோ நம:

ஸ்ரீ சந்த்ரமௌளி - பாதாப்ஜ - மதுபாய நமோ நம:

ஸ்ரீ ஆசார்யபாததிஷ்டானாபிஷிக்தாய நமோ நம:

ஸர்வக்ஞாசார்ய - பகவத்ஸ்வரூபாய நமோ நம:

அஷ்டாங்கயோகனிஷ்டா - கரிஷ்டாய நமோ நம:

ஸனகாதி - மஹாயோகி - ஸத்ருசாய நமோ நம:

மஹாதேவேந்த்ர - ஹஸ்தாப்ஜ - ஸஞ்ஜாதாய நமோ நம:

மஹாயோகி - விநிர்பேத்ய - மஹத்த்வாய நமோ நம:

காமகோடி மஹாபீடாதீஸ்வராய நமோ நம:

கலிதோஷ - நிவ்ருத்த்யேக - காரணாய நமோ நம:

ஸ்ரீ சங்கரபதாம்போஜ-சிந்தனாய நமோ நம:

பாரதீக்ருத ஜிஹ்வாக்ர - நர்தனாய நமோ நம:

கருணாரஸகல்லோல - கடாக்ஷாய நமோ நம:

காந்தி நிர்ஜித-ஸூர்யேந்து - கம்ராபாய நமோ நம:

அமந்தா நந்தக்ருன் - மந்தகமனாய நமோ நம:

அத்வைதானந்தபரித - சித்ரூபாய நமோ நம:

கடீதட - லஸச்சாரு - காஷாயாய நமோ நம:

கடாக்ஷமாத்ர - மோக்ஷேச்சா - ஜனகாய நமோ நம:

பாஹு - தண்ட - லஸத்வேணு - தண்டகாயநமோ நம:

பாலபாக - லஸத்பூதி - புண்ட்ரகாய நமோ நம:

தரஹாஸ - ஸ்புரத்திவ்ய - முகாப்ஜாய நமோ நம:

ஸூதாமதுரிமா - மஞ்ஜு - பாஷணாய நமோ நம:

தபனீய - திரஸ்காரி - ஸரீராய நமோ நம:

தப: ப்ரபா - ஸதாராஜத் - ஸுநேத்ராய நமோ நம:

ஸங்கீதானந்த - ஸந்தோஹ - ஸர்வஸ்வாய நமோ நம:

ஸம்ஸாராம்புதி - நிர்மக்ன-தாரகாய நமோ நம:

மஸ்தகோல்லாஸி - ருத்ராக்ஷ - மகுடாய நமோ நம:

ஸாக்ஷாத் - பரஸிவாமோக - தர்ஸனாயநமோ நம:

சக்ஷுர்கத - மஹாதேஜோ - அத்யுஜ்ஜ்வலாய நமோ நம:

ஸாக்ஷாத்க்ருத - ஜகன்மாத்ரு - ஸ்வரூபாய நமோ நம:

க்வசித் - பாலஜனாத்யந்த - ஸுலபாய நமோ நம:

க்வசின் - மஹாஜனாதீவ - துஷ்ப்ராபாய நமோ நம:

கோப்ராஹ்மண - ஹிதாஸக்த - மானஸாயநமோ நம:

குருமண்டல - ஸம்பாவ்ய - விதேஹாயநமோ நம:

பாவனாமாத்ர - ஸந்துஷ்ட - ஹ்ருதயாய நமோ நம:

பாவ்யாத்யபாவ்ய - திவ்யஸ்ரீ-பதாப்ஜாய நமோ நம:

வ்யக்தாவ்யக்ததராநேக - சித்கலாய நமோ நம:

ரக்தஸுக்ல - ப்ரபாமிஸ்ர - பாதுகாய நமோ நம:

பக்தமானஸ - ராஜீவ - பவனாய நமோ நம:

பக்தலோசன - ராஜீவ - பாஸ்கராய நமோ நம:

பக்த-காமலதா - கல்ப - பாதபாய நமோ நம:

புக்திமுக்தி ப்ரதாநேக - சக்திதாய நமோ நம:

சரணாகத - தீனார்த்த - ரக்ஷகாய நமோ நம:

ஸமாதி - ஷட்க - சம்பத் - ப்ரதாயகாய நமோ நம:

ஸர்வதா ஸர்வதா லோக - சௌக்யதாய நமோ நம:

ஸதா நவநவாகங்க்ஷய - தர்ஸனாய நமோ நம:

ஸர்வ - ஹ்ருத்பத்ம - ஸஞ்சார - நிபுணாய நமோ நம:

ஸர்வேங்கித - பர்ஜ்ஞான - ஸமர்த்தாய நமோ நம:

ஸ்வப்னதர்ஸனபக்தேஷ்ட - ஸித்திதாய நமோ நம:

ஸர்வவஸ்து - விபாவ்யாத்ம - ஸத்ரூபாய நமோ நம:

தீன - பக்தாவனைகாந்த - தீக்ஷிதாய நமோ நம:

ஜ்ஞானயோக - பலைஸ்வர்ய - மானிதாயநமோ நம:

பாவ - மாதுர்ய - கலிதாபயதாய நமோ நம:

ஸர்வபூதகணாமேய - ஸௌஹார்தாய நமோ நம:

மூகீபூதாநேகலோக - வாக்ப்ரதாய நமோ நம:

ஸீதளீக்ருத - ஹ்ருத்தாப - ஸேவகாய நமோ நம:

போகமோக்ஷ - ப்ரதாநேக-யோகஜ்ஞாயநமோ நம:

ஸீக்ரஸித்திகராநேக - ஸிக்ஷணாய நமோ நம:

அமானித்வாதி - முக்யார்த்த - ஸித்திதாய நமோ நம:

அகண்டைக - ரஸானந்த - ப்ரபோதாய நமோ நம:

நித்யாநித்ய - விவேக - ப்ரதாயகாய நமோ நம:

ப்ரத்யகேகரஸாகண்ட - சித்ஸுகாய நமோ நம:

இஹாமுத்ரார்த்த - வைராக்ய - ஸித்திதாய நமோ நம:

மஹாமோஹ - நிவ்ருத்த்யர்த்த-மந்த்ரதாய நமோ நம:

க்ஷேத்ரக்ஷேத்ரஜ் ஞ - ப்ரத்யேக - த்ருஷ்டிதாய நமோ நம:

க்ஷயவ்ருத்தி - விஹீனாத்மஸௌக்யதாய நமோ நம:

தூலாஜ்ஞான - விஹீனாத்மத்ருப்திதாய நமோ நம:

மூலாஜ்ஞான - பாதிதாத்மமுக்திதாய நமோ நம:

ப்ராந்திமேகோச்சாடன - ப்ரபஞ்ஜனாய நமோ நம:

ஸாந்தி - வ்ருஷ்டிப்ரதாமோக-ஜலதாய நமோ நம:

ஏககால - க்ருதாநேக - தர்ஸனாய நமோ நம:

ஏகாந்தபக்தஸம்வேத்ய - ஸ்வகதாய நமோ நம:

ஸ்ரீ சக்ரரத - நிர்மாண - ஸுப்ரதாய நமோ நம:

ஸ்ரீ கல்யாணதராமேய - ஸுஸ்லோகாய நமோ நம:

ஆஸ்ரிதாஸ்ரயணீயத்வ - ப்ராபகாய நமோ நம:

அகிலாண்டேஸ்வரீ - கர்ண-பூஷகாய நமோ நம:

ஸசிஷ்யகண - யாத்ரா - விதாயகாய நமோ நம:

ஸாதுஸங்கநுதாமேய - சரணாய நமோ நம:

அபின்னாத்மைக்யவிஜ்ஞான - ப்ரபோதாய நமோ நம:

பின்ன - பின்ன - மதைஸ்சாபிபூஜிதாய நமோ நம:

தத்தத்விபாக - ஸத்போத - தாயகாய நமோ நம:

தத்தத்பாஷா - ப்ரகடித - ஸ்வகீதாய நமோ நம:

தத்ர தத்ர க்ருதாநேக - ஸத்கார்யாய நமோ நம:

சித்ரசித்ர - ப்ரபாவ - ப்ரஸித்திகாய நமோ நம:

லோகானுக்ரஹக்ருத்கர்ம - நிஷ்டிதாய நமோ நம:

லோகோத்த்ருதி - மஹத்பூரி - நியமாய நமோ நம:

ஸர்வவேதாந்த - ஸித்தாந்த - ஸம்மதாய நமோ நம:

கர்மப்ரஹ்மாத்மகரண - மர்மஜ்ஞாய நமோ நம:

வர்ணாஸ்ரம - ஸதாசார - ரக்ஷகாய நமோ நம:

தர்மார்த்தகாமமோக்ஷ - ப்ரதாயகாய நமோ நம:

பத-வாக்ய - ப்ரமாணாதி - பாரீணாய நமோ நம:

பாதமூல - நதாநேகபண்டிதாய நமோ நம:

வேதசாஸ்த்ரார்த்த - ஸத்கோஷ்டீ - விலாஸாய நமோ நம:

வேதசாஸ்த்ரபுராணாதி - விசாராய நமோ நம:

வேதவேதாங்கதத்வ - ப்ரபோதகாய நமோ நம:

வேதமார்கப்ரமாண - ப்ரக்யாபகாய நமோ நம:

நிர்ணித்ரதேஜோவிஜித - நித்ராட்யாய நமோ நம:

நிரந்தர - மஹானந்த - ஸம்பூர்ணாய நமோ நம:

ஸ்வபாவ - மதுரோதார - காம்பீர்யாய நமோ நம:

ஸஹஜானந்த - ஸம்பூர்ண - ஸாகராய நமோ நம:

நாதபிந்துகலாதீத - வைபவாய நமோ நம:

வாதபேதவிஹீனாத்ம - போததாய நமோ நம:

த்வாதஸாந்த - மஹாபீட - நிஷண்ணாயநமோ நம:

தேஸகாலாபரிச்சின்ன - த்ருக்ரூபாய நமோ நம:

நிர்மானசாந்திமஹித - நிஸ்சலாய நமோ நம:

நிர்லக்ஷய - லக்ஷய - ஸம்லக்ஷய-நிர்லேபாய நமோ நம:

ஸ்ரீஷோடஸாந்த - கமல - ஸுஸ்திதாயநமோ நம:

ஸ்ரீ சந்த்ரஸேகர - ஸ்ரீஸரஸ்வத்யை நமோ நம:

இத்யேதத் குருதேவஸ்ய நாம்னாம் அஷ்டோத்தரம் ஸதம்  படனாத் பூஜனாத் தத்க்ஞானாத் பக்தானாம் இஷ்ட ஸித்திதம்.

ஸர்வம் ஸ்ரீ குரு தேவார்ப்பண மஸ்து.

செவ்வாய், 25 ஜூன், 2019

கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் ஸ்தல வரலாறு.

உமையம்மையார் மயிலுருக்கொண்டு கபாலீசுவரரைப் பூஜித்த தலம். தேவலோகத்து கற்பக மரம், கேட்டதை கொடுப்பதைப்போல, இத்தலத்து அம்பிகையும் கேட்கும் வரங்களை தருவதால் "கற்பகாம்பிகை' எனப்பட்டாள். முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம். இராம பிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரரால் தேவாரப்பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம். பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத் தலம். ஆளுடைய பிள்ளை - ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற திருத்தலம். சீர்த்திமிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு திருப்புகழைப் பெற்ற தலம். வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொன்மைத்தலம்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கிய இந்த சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

இத்தலத்து முருகப்பெருமான் (சிங்கார வேலர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

கபாலீசுவரம் :  பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று செருக்கடைய, அவன் நடுச்சிரத்தைக் கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் கபாலம் ஏந்திய ஈசுவரன் கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் அதனால் இது கபாலீசுவரம் எனப் பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.

திருமயிலையைப் பற்றியும் கபாலீசுவரரை பற்றியும் எழுந்த முதல் இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடிய "மட்டிட்ட புன்னையங் கானல்...' எனத் தொடங்கும் பதிகமேயாகும். இப்பாடல்கள் மூலம் திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிகர் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். இவரது மகள் பூம்பாவையை, ஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க முடிவு செய்தார். இந்நேரத்தில் மலர் பறிக்கச்சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிர் இழந்தாள். அவளை தகனம் செய்த சிவநேசர், அஸ்தியையும், எலும்பையும் ஒரு குடத்தில் போட்டு வைத்துவிட்டார். சம்பந்தர் இங்கு வந்ததும் நடந்ததை அறிந்து, சாம்பல் வைத்திருக்கும் குடத்தை கொண்டு வரக் கூறினார்.

அப்போது சம்பந்தர் சிவனை வேண்டி,

"மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சர மமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்''

என்று பதிகம் பாடினார்.

""மண்ணில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு நடத்தப்படும் தைப்பூசம் என்னும் நல்விழாவை காண்பதே பிறவிப்பயனாகும். அவ்விழாவைக் காணாமல் நீ சென்றுவிட்டது உனக்குத்தானே நஷ்டம்,'' என்ற ரீதியில் இந்தப்பாடல் அமைந்தது. அவர் பாடியதும், பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். அவளை திருமணம் செய்து கொள்ளும்படி சிவநேசர் சம்பந்தரிடம் வேண்டினார். உயிர் இழந்தவளுக்கு மீண்டும் உயிர் அளித்ததால், அவள் எனக்கு மகளாகிறாள் எனச்சொல்லி சம்பந்தர் மறுத்து விட்டார். பூம்பாவையும் இறுதிவரை சிவப்பணியே செய்து சிவனடி சேர்ந்தாள். இவர் பாடிய 11 பாடல்களில் முதல் 10 பாடல்கள் பூம்பாவையை அழைக்கும் முறையில் உள்ளன. இப்பதிகத்தில் இத்தலத்து ஈசனையும் கோயில் பற்றியும் மயிலாப்பூர் பற்றியும் அழகுறக் கூறுகிறார்.

யானையில் தேவியர்: சூரனை வதம் செய்யும் முன்பு, முருகப்பெருமான் இக்கோயிலில் சிவனை வேண்டி தவமிருந்தார். சிவனும், அம்பிகையும் அவருக்கு காட்சி தந்து வேலாயுதம் கொடுத்தனுப்பினர். அதன்பின் முருகன், சூரனை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டார். இவர் சிங்காரவேலராக அசுர மயிலுடன், ஒரு சன்னதியில் இருக்கிறார். அசுரனை வென்றதால் இந்திரன் தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அப்போது அவரது வாகனமான ஐராவதம், தெய்வானையைப் பிரிய முடியாமல் அவளுடனேயே தங்கிவிட்டது. வள்ளியும், தெய்வானையும் யானை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கின்றனர். இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம்.

தல வரலாறு: உமையவள் சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் அவ்விளக்கந்தனை நல்கிட, அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட, தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் "நீ பூதலத்தில் மயில் உருப்பெற்றிடுவாய்' என சாபமிட்டார். "சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய்' எனக் கூறினார். அவ்வாறே இத்தலத்தில் அமைந்துள்ள புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பூஜித்து தேவியார் வழிபட்டார். அவர்தம் அரும் தவத்தின் மகிமையால் சிவபெருமான் தேவியின் முன் தோன்றி, "மயிலாய் இருந்த பழி உன்னை விட்டகன்றது. கற்பகவல்லி என்பதான பெயர் உனக்காகுக' என வரம் அருளினார். அச்சமயம் தேவியார் பரமனை நோக்கி அடியேன் இங்கு தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதி "மயிலை' என பெயர் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பரமனும் அவ்வாறே அருளியதாக வரலாறு கூறுகிறது.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இக்கோயிலுக்கு அருகில் உள்ள கோயில்கள்:-

1. புரசைவாக்கம் (சென்னை) - கங்காதரேசுவரர் திருக்கோயில் 
   
2. சிந்தாதிரிப்பேட்டை - ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில் புரசைவாக்கத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது.

3. திருவல்லிக்கேணி - திருவேட்டீஸ்வரர் திருக்கோயில் சிந்தாதிரி பேட்டையிலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது.

4.  திருவல்லிக்கேணி - பார்த்தசாரதி திருக்கோயில் (திவ்ய தேசம்) திரு வேட்டீஸ்வரர் கோயிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது.

5. மயிலாப்பூர் - கபாலீஸ்வரர் திருக்கோயில் (பதிவில் காணும் கோயில்) (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
திருவல்லிக்கேணியிலிருந்து நான்கு  கி.மீ தொலைவில் உள்ளது.

6. மயிலாப்பூர் - வெள்ளீஸ்வரர் திருக்கோயில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ளது.

7. திருவான்மியூர் - மருந்தீஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்) மயிலாப்பூரிலிருந்து ஏழு கி.மீ தொலைவில் உள்ளது.
* * * * *
திருக்கோயில்களின் குளங்களை சீரமைப்பதால், மழைநீர் சேகரிப்புக்கு குளங்கள் பெருமளவு உதவியாக இருக்கும். இந்த குளங்கள் பண்டைய காலம் முதலே நிலத்தடிநீர் நிலையை மேம்படுத்த உதவிகரமாக இயங்கி வந்துள்ளன.

நம் தமிழ் நாட்டின் பழமையான திருக்கோயில்களை பாதுகாப்போம்.
கோயில் குளங்களை தூர்வாரி சீரமைப்போம். 
பகவதாஷ்டமி 25.06.2019 ஆனி தேய்பிறை பிறை வாழ்க்கையில் பிரச்சனைகளை தீர்க்கும் அஷ்டமி விரதம்.


அஷ்டமி நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத் தரும்.

ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.

* மார்கழி தேய்பிறை அஷ்டமி - சங்கராஷ்டமி

* தை தேய்பிறை அஷ்டமி - தேவ தேவாஷ்டமி

* மாசி தேய்பிறை அஷ்டமி - மகேஸ்வராஷ்டமி

* பங்குனி தேய்பிறை அஷ்டமி - திரியம் பகாஷ்டமி

* சித்திரை தேய்பிறை அஷ்டமி - ஸ்நாதனாஷ்டமி

* வைகாசி தேய்பிறை அஷ்டமி - சதாசிவாஷ்டமி

* ஆனி தேய்பிறை அஷ்டமி -  பகவதாஷ்டமி

* ஆடி தேய்பிறை அஷ்டமி - நீலகண்டாஷ்டமி

* ஆவணி தேய்பிறை அஷ்டமி - ஸ்தானுஷ்டாமி

* புரட்டாசி தேய்பிறை அஷ்டமி - ஜம்புகாஷ்டமி

* ஐப்பசி தேய்பிறை  அஷ்டமி -  ஈசான சிவாஷ்டமி

* கார்த்திகை தேய்பிறை அஷ்டமி - ருத்ராஷ்டமி

அஷ்டமி நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத் தரும். அஷ்டமி விரதமிருப்பவர்கள் அழகிய உருவத்தைப் பெறுவார்கள். உடல் ஊனமில்லாமலும் செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்றெல்லாம் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வரலாம்.

சிவபெருமானின்  அவதாரங்களில் ஸ்ரீபைரவர் அவதாரமும் ஒன்று. சனிபகவானின் குரு பைரவர் மூர்த்தியாகும். ஸ்ரீபைரவர் அவதாரம் 64 வகைகள் உண்டு .

பைரவரின் திருவுருத்தில் பண்ணிரண்டு இராசிகளும் அடக்கம்.

தலையில் மேஷஇராசியும், வாய் ரிஷப இராசியும், கைகளில் மிதுன இராசியும், மார்பில் கடக இராசியும், வயிற்றில் சிம்மம் இராசியும், இடையில் கன்னி இராசியும், புட்டத்தில் துலாம் இராசியும், பிறப்பு உறுப்பில் விருச்சிக இராசியும், தொடையில் தனுசு இராசியும், முழந்தாளில் மகர இராசியும், காலில் கீழ்பகுதி கும்ப இராசியும், காலின் அடியில் மீன இராசியும் அமைந்துள்ளன.

அந்தகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் தேவர்களையெல்லாம் துன்புறுத்தி இன்பம் கண்டான். தேவர்களை மட்டுமல்லாமல் முப்போதும் சிவ சிந்தனையில் திளைத்திருக்கும் முனிவர்களையும் விட்டு வைக்கவில்லை. தேவர்களையும், எப்போதும் தன்னையே நினைத்திருக்கும் முனிவர்களையும் துன்புறுத்தும் அந்தகாசுரனை அழிக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், தம்முடைய திருமுகங்களில் ஒன்றான தத்புருஷத்தில் இருந்து மகா பைரவ மூர்த்தியைத் தோற்றுவித்தார். அவரே அந்தகாசுரனை வதம் செய்து தேவர்களையும் முனிவர்களையும் காப்பாற்றினார். மேலும் கர்வம் கொண்ட பிரம்மதேவரின் தலையைக் கொய்தவரும் பைரவர்தான்.

அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் விசேஷம், அன்றைய தினம் பைரவரை வணங்கிட, வேண்டும் வரங்கள் எல்லாம் கிடைக்கும். 

அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி யாவும் பைரவரை வணங்கினால் நன்மையாக முடியும். தாமரை, வில்வம், தும்பை, செவ்வந்தி, சந்தன மாலைகள் பைரவருக்கு விருப்பமானவை. பரணி நட்சத்திரத்தில் பைரவர் அவதரித்தார். எனவே அந்த நட்சத்திரக்காரர்கள் இவரை வணங்கினால் நல்லது. பைரவருக்கு நள்ளிரவு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினும் உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜை சிறப்பானது.

அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு  ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும். எலுமிச்சம்பழத்தை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால் தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். கெட்ட அதிர்வுகள் விலகும் என்று சொல்லப்படுகிறது. மன அமைதியே இல்லாதவர்களுக்கு பைரவரே நல்ல துணை. செல்வவளம் பெருக சொர்ணாகர்ஷன பைரவரை வணங்கலாம். எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. துக்கங்கள் யாவையும் மாற்றி நிம்மதியை அருளும் பைரவ வழிபாட்டை  மேற்கொள்வோம்.
தினந்தோறும் காக்காய்க்கு அன்னம் {சாதம்} போட ஏதாவது மந்திரம் உண்டா?

ஒவ்வொருவரும் தினந்தோரும் தான் சாப்பிடுவதற்கு முன்பாக அந்த உணவை தெய்வத்துக்கு நிவேதனம் செய்து, வீட்டில் இருக்கும்பசு மாடு போன்ற வாயில்லா ஜீவன்களுக்கும் வைக்கோல் முதலிய தேவையான உணவளித்து, பகலில் காக்கைக்கும் இரவில் நாய்க்கும் கொஞ்சம் சாதம் போட்டு விட்டுஅதாவது காக பலி ஸ்வான பலி, யாராவது தன் வீட்டிற்கு அதிதி {விருந்தாளி} வருகிறார்களா? என்று சிறிது நேரம் வாசல் பக்கம் பார்த்து விட்டு, பிறகு தனது குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட வேண்டும், அதில் மதியம் சாப்பிடும் முன்பாக காக்கைக்கு உணவளிக்கும் போது கீழ் கண்ட மந்திரம் சொல்ல வேண்டும்...

ஸ்லோகம் –ஓம் ஐந்த்ர வாருண வாய்வ்யா:, ஸௌம்யா யாம்யாஸ்ச நைர்ருதா:
வாயஸா: ப்ரதிக்ருஹ்ணந்து பூமாவன்னம்  மயார்ப்பிதம்.

{இந்திரன், வருணன், வாயு, ஸோமன், யமன், நிர்ருதி மற்றும் இவர்களைச் சேர்ந்த வாயஸங்கள் அனைவரும் என்னால் தரையில் வைக்கப்பட்ட இந்த உணவை பெற்றுக் கொள்ளட்டும்.} என்னும் இந்த மந்திரம் சொல்லி காக்கைக்கு அன்னம் போடவேண்டும். வாயஸம் என்றால் காகம் என்று பொருள் அதனால் தான் சிராத்த பிண்டத்திற்கு வாயஸ பிண்டம் என்று பெயர் இவ்வாறே ஒவ்வொரு நாளும் இரவில் சாப்பிடும் முன்பாக

ஓம் ஸ்வாநௌ ஹி ஸ்யாம சப, லௌ வைவஸ்வத குலோத்பவௌ
தாப்யாமன்னம் ப்ரதாஸ்யாமி ஸ்யாதா மேதாஹிம்ஸதௌ

{கருப்பு நிறத்துடனும் பல நிறங்களுடனும் இருக்கும் வைவஸ்வத மஹாராஜாவின் குலத்தில் பிறந்த இரண்டு நாய்கள் {அரசர்} என்னை துன்புறுத்தாமல் இருக்கட்டும். இவர்களுக்கு நான் உணவளிக்கிறேன்} என்னும் மந்திரம் சொல்லி நாய்க்கு உணவளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் நாய் மற்றும் அதன் ஜாதியைச் சேர்ந்த எந்த ப்ராணியாலும் நமக்கு ஆபத்து நேராது. மேலும் காக்கைக்கு உணவளிப்பதால் நம் முன்னோரும், நாய்க்கு உணவளிப்பதால் பைரவரும் திருப்தி அடைகிறார்கள் என்கிறது சாஸ்த்திரம்.