ஞாயிறு, 11 நவம்பர், 2018

மஹாளய ஸங்கல்பம்.
25-09-2018  செவ்வாய்--மஹாளய பக்ஷ தர்ப்பணங்கள்.

  ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, உத்திரப்ரோஷ்டபதி நக்ஷத்திர, 

  வ்ருத்தி நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ப்ரதம தின  தில தர்பணம்  கரிஷ்யே. 

      26-09-2018  புதன் 

 ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா  மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வீதியாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர, ரேவதி நக்ஷத்திர, 

  த்ருவ- நாம யோக தைதுள கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்விதீய தின  தில தர்பணம்  கரிஷ்யே.    

 27-09-2018--வியாழன்   

   ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா  மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள குரு வாஸர, அஸ்வினி நக்ஷத்திர, 

  வ்யாகாத நாம யோக வணிஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாம் த்ருதீயாயாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்ருதீய தின  தில தர்பணம்  கரிஷ்யே.  

 28-09-2018-வெள்ளி --மஹா பரணி 

 ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா  மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர, அபபரணி நக்ஷத்திர, 

  ஹர்ஷ நாம யோக பவ  கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்த்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சதுர்த்த தின  தில தர்பணம்  கரிஷ்யே. 

29-09-2018 ஶனி 

    ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா  மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, க்ருத்திகா நக்ஷத்திர, 

  வஜ்ரம் நாம யோக கெளஸ்துப கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே பஞ்சம தின  தில தர்பணம்  கரிஷ்யே.  

30-09-2018 ஞாயிறு 
  
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள பானு வாஸர,  ரோஹிணி நக்ஷத்திர, 

  ஸித்தி நாம யோக கரஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சஷ்ட்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சஷ்டம தின  தில தர்பணம்  கரிஷ்யே.  

 01-10-2018 திங்கள்.வ்யதீபாதம் 

  ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள இந்து வாஸர, ம்ருகசிரோ நக்ஷத்திர, 

  வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ஸப்தம தின  தில தர்பணம்  கரிஷ்யே.  

01-10-2018--திங்கள்-வ்யதீபாதம்

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள இந்து வாஸர, ம்ருகசிரோ நக்ஷத்திர, 

  வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

  02-10-2018--செவ்வாய்

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பெளம வாஸர, ஆருத்ரா நக்ஷத்திர, 

  வரீயான் நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே அஷ்டம தின  தில தர்பணம்  கரிஷ்யே.  

03-10-2018-புதன்

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே  நவம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர, புனர்வஸு நக்ஷத்திர, 

  பரிக நாம யோக தைதுள கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம்  நவம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே  நவம தின  தில தர்பணம்  கரிஷ்யே.  

 04-10-2018 வியாழன்

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள குரு வாஸர, புஷ்ய நக்ஷத்திர, 

  ஸித்த நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே தசம தின  தில தர்பணம்  கரிஷ்யே. 

05-10-2018—வெள்ளி

    ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர, ஆஶ்லேஷா நக்ஷத்திர, 

  சாத்ய நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஏகாதஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ஏகாதஸ தின  தில தர்பணம்  கரிஷ்யே.  

06-10-2018--ஶனி -கஜசாயா

   ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வாதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, மகா நக்ஷத்திர, 

  சுப நாம யோக கரஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்வாதஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்வாதஸ தின  தில தர்பணம்  கரிஷ்யே.  

    07-10-2018ஞயிறு

   ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர,  பூர்வ பல்குனி நக்ஷத்திர, 

  சுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்ரயோதஸ தின  தில தர்பணம்  கரிஷ்யே.

  07-10-2018 ஞயிறு-த்வாபர யுகாதி
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர, பூர்வ பல்குனி நக்ஷத்திர, 

  சுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் 

 அக்ஷய த்ருப்தியர்த்தம்  த்வாபர யுகாதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
  

  08-10-2018 திங்கள்
  ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர, உத்திரபல்குனி நக்ஷத்திர, 

  ப்ராம்ய நாம யோக சகுனி கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சதுர்தஸ தின  தில தர்பணம்  கரிஷ்யே.

08-10-2018 திங்கள்
  ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர, உத்திரபல்குனி நக்ஷத்திர, 

  ப்ராம்ய நாம யோக சகுனி கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய 
 த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 

  
 09-10-2018—செவ்வாய்

 ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, ஹஸ்த நக்ஷத்திர, 

  மாஹேந்த்ர நாம யோக கிம்ஸ்துக்னம் கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே பஞ்சதச  தின  தில தர்பணம்  கரிஷ்யே. 

     09-10-2018—செவ்வாய்  வைத்ருதி

 ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, ஹஸ்த நக்ஷத்திர, 

  மாஹேந்த்ர நாம யோக கிம்ஸ்துக்னம் கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள

 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம்  வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

சாதுர்மாஸ்யம்


சாதுர்மாஸ்யம் குருமார்களை ஆராதிக்க உகந்த காலம். நாரதர், சாதுர்மாஸ்ய காலத்தில் விரதமிருந்த சந்யாஸிகளுக்கு ஸேவை செய்த காரணத்தாலேயே ஞானம் உண்டாகி தேவரிஷியாகும் வாய்ப்பு கிட்டியதாக கூறுகிறார்.


சதுர் என்றால் நான்கு - சாதுர்மாஸ்யம் என்பது நான்கு மாதங்கள் அனுஷ்டிக்க வேண்டிய ஒரு விரதம். இது எல்லா ஆஸ்ரமத்தில் இருப்பவர்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் தான். ஆனால் சந்யாஸிகளுக்கு இது கூடுதல் விசேஷம்.

பொதுவில் சந்யாஸிகள் ஒரே இடத்தில் ரொம்ப நாளைக்கு தங்குதல் கூடாது என்கிறது சாஸ்திரம். (அந்த ஊரின் மீதோ மக்களின் மீதோ கூட அவருக்கு பற்றுதல் உண்டாகி விடக்கூடாது என்ற நோக்கில்). இதனால் இவர்களுக்கு பரிவ்ராஜகர்கள் என்று பெயர்.

ஆனால் இப்படி தொடர்து சஞ்சரித்துக் கொண்டே இருப்பதால் அவர்களுக்கு ஆத்ம விசாரம் செய்யும் நேரம் குறையவும் வாய்ப்பு இருக்கிறது.

இதற்காக விசேஷமாக சொல்லப்படும் காலமே சாதுர்மாஸ்யம். ஆனி மாதத்து பௌர்ணமி முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு சந்யாஸி எங்கும் பயணப்படாமல் ஒரே இடத்தில் தங்கி இருக்க சாஸ்த்ரங்கள் வழிகாட்டுகின்றன. இது மழைக்காலமாகவும் இருப்பதைக் காணலாம். 

மழைக்காலங்களில் பூச்சி, பொட்டுக்கள் வெளியே வரும் வாய்ப்பும் அதிகம். ஒரு சந்யாஸி ப்ரயாணம் மேற்கொள்வதால் அறிந்தோ அறியாமலோ கூட இந்த புழு பூச்சிகளுக்கு துன்பம் உண்டாகலாம் என்ற காரணத்தாலும் இவர்கள் ஒரே இடத்தில் தங்குவது அவசியமாகிறது.

(சக்கரத்தில் சிக்கி பூச்சிகள் சாகுமே என்ற காரணத்தால் சக்க்ரம் வைத்த வண்டியில் கூட ஏறாமல் வாழ்நாள் முழுதும் நடந்தே பயணித்தவர் மஹாபெரியவர்.)

இப்படி பிற உயிர்களுக்கென வாழும் சந்யாஸிகள் ஒரே இடத்தில் தங்கி இருக்கும் காரணத்தால், அவருக்கு சிஷ்யர்கள் ஸேவை செய்யும் காலமே சாதுர்மாஸ்யம்.

(சாதுர்மாஸ்ய காலத்தில் சந்யாஸிகள் மட்டுமே விரதம் அனுஷ்டிப்பது என்ற முறை நம் தமிழகப்பகுதிகளில் தான் பரவலாகக் காணப்படுகிறது. ஆந்திர கர்நாடகப் பகுதிகளில் க்ருஹஸ்தர்களும் உணவுக் கட்டுப்பாடு முதல பலவகைகளிலும் விரதம் காப்பது வழக்கம்)

இன்று சாதுர்மாஸ்யம் என்று வழக்கத்தில் இருந்தாலும் (சதுர் பக்ஷம் எனும்படி 2 மாதங்களே வழக்கத்தில் இருக்கின்றன)

சந்யாஸிகளின் சாதுர்மாஸ்யம் வ்யாஸ பூஜையுடனே துவங்குகிறது. நாம் நம் குருமார்களை வணங்க வேண்டிய காலத்தில் குருமார்கள் அவர்களது குருவான வ்யாஸரை வணங்குகிறார்கள்.

இந்த சாதுர்மாஸ்யமே ஒரு சந்யாஸியின் வயது. அதாவது, ஒரு சந்யாஸியின் வயது அவரது உடலுக்கான வயது அல்ல! அவர் எவ்வளது சாதுர்மாஸ்யம் கடைபிடித்திருக்கிறாரோ அதுவே அவர் வயது. 80 வயது ஆகி இருந்தாலும் தன்னைவிட அதிக சாதுர்மாஸ்யம் அனுஷ்டித்த பால சந்யாஸியைக் கண்டால் வணங்கத்தான் வேண்டும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சாதுர்மாஸ்ய காலமே குருவழிபாட்டுக்கு உகந்த காலம்.

நாம் வணங்கும் இஷ்ட தெய்வமே குருவாக மனித உருவில் வந்திருக்கிறது என்ற உண்மையை முதலில் உணர வேண்டும். குருவுக்கும் நம் இஷ்ட தெய்வத்துக்கும் பேதமில்லை என்பதை முதலில் உணரவேண்டும். இதை உணராமல் குருவை சாதாரண மனிதனாக எண்ணுபவன் எத்தனை பிறவி எடுத்தாலும் அவனுக்கு கதி கிடைக்காது.

அப்படிப்பட்ட குருவுக்கு நாம் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

இந்த சாதுர்மாஸ்ய காலத்தில், அந்த நன்றிக்கடனின் வெளிப்பாடாக தான் பெற்ற நல்வாழ்வுக்காகவும், பெற்ற ஞானத்துக்காகவும், குருவை வணங்க வேண்டும்.

சாதுர்மாஸ்ய காலத்தில் தங்கள் குருவையும், குல ஆசார்யர்களையும் வணங்குவதால் எண்ணில்லா நன்மைகள் விளைகின்றன. 

வ்யாஸ பூர்ணிமா, குரு பூர்ணிமா என்றெல்லாம் அழைக்கப்படும் நாளில் அவரவர் குருநாதர்களை குருதக்ஷிணையுடன் சென்று கண்டு வணங்கி ஆசி பெறுதல் வேண்டும்.

குருவில் கருணா கடாக்ஷம் படுவதால் அந்த ஒரு வருஷத்தில் நாம் அறியாமல் செய்த பாவங்கள் கரைவதோடு, வாழ்வில் முன்னேற்றம் அடைய ச்ரேயஸ் உண்டாகிறது, தர்மத்தில் கூடுதல் லயிப்பு உண்டாகிறது. (லௌகீக வாழ்வுக்கான முன்னேற்றம் - தனியே சொல்லப்படா விட்டாலும் குருவின் க்ருபையால் உண்டாகிறது).

ஆக சாதுர்மாஸ்யம் அனுஷ்டிப்பவரைக் கண்டாலே ப்ரம்மஹத்தி முதலான பாபங்கள் நீங்கி விடுவதாக பாரஹஸ்பத்ய ஸ்ம்ருதி கூறுகிறது.

சாதுர்மாஸ்ய காலத்தில் ஸந்யாஸிகளை வணங்குவதாலும் சேவை செய்வதாலும் ப்ரம்மஞானம் உண்டாகிறது என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

 மொத்தத்தில் இஹவாழ்வுக்கும் பரவாழ்வுக்கும் தேவையான அனுக்ரஹம் கிட்டுகிறது. 

108 பெருமாள் திவ்ய தரிசனம்!

இப்பிரபஞ்சத்தில் பெருமாளை சேவிக்க 108 திவ்ய தேசங்கள் உள்ளன. முதல் தேசம் ஸ்ரீரங்கம். 108 வது தேசம் பரமபதநாதர். 102வது தேசம் முக்திநாத் பெருமாள் (சாலக்கிராமப் பெருமாள்). இது நேபாளம் ஜாம்ஜோம் அருகே உள்ளது. தவிர ஏனைய 107 திவ்ய தேசங்கள் இந்தியாவில் உள்ளது. அவை வடநாட்டு திருப்பதி. தென்நாட்டு திருப்பதி, சோழநாட்டு திருப்பதி, நடுநாடு திருப்பதி (சோழ மண்டலம்), மலைநாடு திருப்பதி (கேரளம்) என ஐந்து மண்டலங்களாக பரவி உள்ளது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்தது தான் 108 பெருமாள் திவ்ய தேசம்.

108 பெருமாள் திவ்ய தேசம் தரிசனத்தை ஒரே இடத்தில் சேவிக்க... மதுரை தமுக்கம் மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புரட்டாசியை முன்னிட்டு தினமும் அதிகாலை 5.45 முதல் காலை 8 மணி வரை திருப்பதி ஸ்ரீநிவாசன் (மலையப்ப சுவாமி), திருச்சானுார் அலமேலு மங்கை தாயார் (பத்மாவதி தாயார்) பாராயணம் மற்றும் சுப்ரபாதம் சிறப்பாக நடக்கிறது.

108 திவ்ய தேசம் பெருமாள் சுவாமிக்கு காலை 6 மணி, மாலை 6 மணிக்கு இரண்டு கால சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பெருமாள் தரிசனத்தை முன்னிட்டு பஜனைகள், கோலாட்டம், ஆன்மிக சொற்பொழிவுகள் அருமை. பிரசாத ஸ்டாலில் லட்டு, முறுக்கு, புளியோதரை பிரசாதம் தலா ரூ.10.

அற்புதங்கள் நிறைந்த 108 பெருமாள் திவ்ய தரிசனம் தினமும் அதிகாலை 5.45 முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. செப்.,21ல் நிறைவடைகிறது.

கட்டணம் நபருக்கு ரூ.50. விவரங்களுக்கு மேலாளர் ஜெயப்பிரகாசின் மொபைலில் 98941 33523 தொடர்பு கொள்ளலாம். கோபுர தரிசனம் கோடி புண்ணியம். 108 பெருமாள் திவ்ய தரிசனம் நூறு கோடி புண்ணியம்.
தரிகொண்ட வெங்கமாம்பா!

ஆந்திரமாநிலம் தரிகொண்டா என்ற சிறிய கிராமத்தில் பிறந்து, சதா சர்வகாலமும் திருவேங்கடவனை நினைத்து உருகி தன்னை அர்ப்பணித்து, திருவேங்கடமுடையானையே தன் கணவனாக பாவித்து, திருமலையில் ஸ்ரீவாரி சேவை செய்து பரந்தாமனை அடைந்தவள் மாத்ருஸ்ரீதரிகொண்ட வெங்கமாம்பா.

ஆந்திர மாநிலத்தில் ஒரு காலத்தில் கடும் வறட்சி ஏற்படவே ராய துர்க்க பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியே கிளம்பி பிரத்தமிட்டா என்ற கிராமத்தில் ஒரு நாள் இரவு தங்கினர். காலையில் அங்கு லட்சுமி நரசம்மா என்ற அந்தணப் பெண்மணி தயிர்ப்பானையில் தயிர் கடைந்து கொண்டிருந்தாள். (தயிர்ப்பானைக்கு தெலுங்கில் தரிகொண்ட என்பது பெயர்.) அங்குள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மரிடம் பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தவாறே அந்தப் பெண்மணி தயிர் கடைந்து கொண்டிருக்கையில் திடீரென்று தயிர் மத்து நின்று விட்டது. துணுக்குற்ற அவள் மீண்டும் தயிர் கடைய மீண்டும் மத்து சுழலாது நின்றது. மத்தை ஓடவிடாமல் ஏதாவது தடை செய்கிறதா என்றே கையை உள்ளே விட்டுப் பார்க்க ஏதும் இல்லாததும் கண்டு அவள் திகைத்தாள். மீண்டும் மத்து நின்ற போது, தன் கணவனை அழைத்துப் பார்க்கச் சொல்ல, கணவர் வந்து பார்த்தபோது ஸ்ரீலட்சுமிநரசிம்ம சிலை ஒன்று தயிர்பானையில் இருப்பதை அவர் கண்டார். தனக்கு கோவில் கட்டி வழிபட நல்ல காலம் பிறக்கும் என்ற அசரீரி கேட்க, ஊர் மக்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு கோயில் எழுப்பி பெருமாளுக்கு தரிகொண்ட நரசிம்மர் (தயிர்ப்பானை நரசிம்மர்) என்று திருநாமம் இட்டு வழிபட்டு வந்தனர். கிராமத்தின் பெயரும் தரிகொண்ட என்று ஆயிற்று.

தரிகொண்ட கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபராக எழுந்தருளியிருக்கிறார். ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம், அகலமான பிரகாரம் ஆககியவற்றோடு கூடிய இந்த கோயிலில் பாஞ்சராத்ர ஆகமப்படி  பூஜைகள் நடைபெறுகின்றன. நீதிமன்றம், வழக்கு என்று செல்லாமல் மக்கள் இங்குள்ள பலிபீடத்தை வலம் வந்து ஆரத்தி செய்து சத்ய பிரமாணம் எடுத்துக் கொள்வது வழக்கம். எனவே தரிகொண்ட கிராமம் சத்ய ப்ரமாண க்ஷேத்ரமாகத் திகழ்கிறது. இந்த கோயிலில் செஞ்சு லட்சுமி, ஆதிலட்சுமி சன்னதிகளும், அனுமனுக்குச் சன்னதியும் உள்ளன. மேலும் இங்கு அவதரித்த பக்தை தரிகொண்ட ஸ்ரீவெங்கமாம்பாவுக்கு தனிச் சன்னதி உள்ளது. ஆந்திர மாநிலம் வாயல்பாடு என்ற ஊரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் தரிகொண்ட கிராமம் அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மா வம்சத்தில் வந்தவர்கள் நியோகி அந்தணர்களான கிருஷ்ணய்யா மங்கமாம்பா தம்பதியர் குழந்தைப் பேற்றுக்காக வருந்தி திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அனவரதமும் அவர்கள் வேண்டி கொண்டிருக்கையில் ஒரு நாள் மங்கமாம்பாவிடம் ஒரு சிறு குழந்தை ஓடி வந்து தயிர் சாதம் கேட்க, அவள் தயிர்சாதம் எடுத்துக் கொண்டு குழந்தைக்கு ஊட்ட முற்பட்டபோது, அக்குழந்தை தயிர்சாதப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தது. கிருஷ்ண பரமாத்வே தன்னிடம் வந்து தயிர் சாதம் பெற்றுச் சாப்பிட்டதாக மங்கமாம்பா மெய்சிலிர்த்தாள். ஸ்ரீவேங்கடேசப்பெருமாளையும் மனமுருகி அவர்கள் வேண்டிக்கொண்டனர். திருமலை வேங்கடவன் பெண் அம்சமாக தனக்குக் குழந்தையாகப் பிறக்கபோவதாக மங்கமாம்பா கனவு கண்டாள். அவள் கண்ட கனவு பலித்து, திருவேங்கடவன் அருளால் ஒரு பெண் குழந்தை (1730ம் ஆண்டு) அந்த தம்பதியருக்குப் பிறக்க, வேங்கடேசர், அலமேலுமங்கா ஆகிய பெயர்களை இணைத்து வெங்காம்பா என்று பெயரிட்டு அக்குழந்தையை அவர்கள் போற்றி வளர்த்தனர்.

இயற்கையாகவே சிறுவயதிலேயே இறைப்பற்று கொண்டிருந்த ஸ்ரீவெங்கமாம்பா தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலுக்குச் சென்று கோயில்க் கைங்கர்யங்கள் செய்வதில் ஈடுபட்டாள். சுப்ரமண்ய ஆச்சார்யர் என்பவரிடம் ராமாயணம், பாரதம், பாகவதம் போன்றவற்றைப் பயின்றாள். திருமண வயது வந்தவுடன் பெற்றோர் வெங்கமாம்பாவுக்கு தக்க வரணைத் தேடி திருமணம் செய்து வைத்தனர். ஆனால் வெங்கமாம்பாவோ இல்லறத்தில் ஈடுபாடின்றி, பக்தி மேலீட்டால் திருவேங்கடமுடையானே தன்னுடைய பதி என்று கூறி பரவசப்பட்டு வந்தாள். நோய்வாய்ப்பட்டு அவள் கணவன் இறந்தபோது, தன்னுடைய மணாளன் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் என்றும், தான் நித்ய சுமங்கலி என்றும் கூறிய வெங்கமாம்பா தன்னிடமிருந்து மங்கலப்பொருட்கள் அகற்றப்படுவதைத் தடுத்தாள். அவளது பக்தியைக் கண்ட கிராம மக்கள் வெங்கமாம்பா அலிமேலுமங்கா (அலர்மேல் மங்கா) அவதாரம் என்று கூறி, அவளை தேவுடம்மா என்று வழிபட்டனர். தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில் கைங்கர்யங்கள் செய்வதிலும், இறைவன் மீது கீர்த்தனைகள் இயத்துவதிலும், பாடுவதிலும், ஆடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாத்ருஸ்ரீ வெங்கமாம்பா திருமலையானைத் தரிசக்க பயணம் மேற்கொண்டாள்.

திருவேங்கடவன் மீது 36000 கீர்த்தனைகள் எழுதி இறவாப் புகழ் பெற்ற தாளப்பாக்கம் அன்னமய்யா (1408-1503) அவர்களின் சந்ததியினர் -ஸ்ரீவெங்கமாம்பாவின் மகிமை அறிந்து அவளை வரவேற்றனர். முதலில் ஸ்ரீவெங்கமாம்பவை கோயிலுற்குள் அனுமதிக்க மறுத்த அர்ச்சகர்களும் அவள் மகிமை அறிந்து ஏற்றுக் கொண்டனர். திருவேங்கடவன்  மீது ஆறாத காதல் கொண்ட ஸ்ரீவெங்கமாம்பா ஏராளமான கீர்த்தனைகளை இயற்றினாள். தன்னை மறந்து கோயில்க் கைங்கர்யங்களில் ஈடுபட்டு வந்த அவள், ஸ்ரீவேங்கடாசல மஹாத்மியம், தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சதகம், நரசிம்மர் விலாச கதை, சிவ நாடகம், பாலகிருஷ்ண நாடகம், விஷ்ணு பாரிஜாதம் போன்ற பல முக்கியமான நூல்களை இயற்றியதோடு யோகக் கலையையும் நன்கு பயின்று அஷ்டாங்க யோக சாரம் என்ற நூலையும் இயற்றி பெருமையடைந்தாள். திருமலையையும், திருவேங்கடமுடையானையும் பற்றி ஏராளமான கவிகள் இயற்றி தலைசிறந்த கவியத்ரியாகத் திகழ்ந்த மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாதான் இயற்றிய கீர்த்தனைகளில் முத்திரையாக கிருஷ்ணமய்யாவின் மகள் வெங்கமாம்பா என்று பதிஷ செய்திருக்கிறாள்.

தன் உடல், ஆவி அனைத்தையும் திருவேங்கடவனுக்கே அர்ப்பணித்த ஸ்ரீவெங்கமாம்பா ஒவ்வொரு நாள் இரவும் ஏகாந்தசேவை ஆரத்தி கைங்கரியத்தின்போது தட்டில் முத்துக்களை வைத்து வேங்கடவனை வணங்கி வந்தாள். தினந்தோறும் காலையில் ஸ்ரீவேல்கடவன் சன்னிதிக் கதவுகள் திறக்கப்படும்போது அங்கு சிதறிக் கிடந்த முத்துக்களைக் கண்டு துணுக்குற்ற அர்ச்சகர்கள், வெங்கமாம்பாவே இதற்குக் காரணம் என்றறிந்து வெங்கமாம்பாவை கோயிலிலிருந்து தொலைவில் உள்ள தும்புரகோணா என்ற குகைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வேங்கடவன் அருளால் அங்கிருந்து ஒரு குகைப் பாதையின் வழியாக தன் ஆரத்தி சேவையை அவள் மீண்டும் தொடர்ந்தாள். பெருமாளும் தன் பக்தை வெங்கமாம்பாவின் ஆரத்தியுடன் தான் தனக்கு இரவு பூஜை முடிய வேண்டும் என்று அர்ச்சகர்களின் கனவில் கட்டளையிட அர்ச்சகர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து ஏகாந்த சேவையின்போது வெங்கமாம்பாவை அனுமதித்தனர். தன்னுடைய ஆரத்தியில் திருவேங்கடமுடையானையே அவள் கண்டு மெய்மறந்தாள்.

அன்று முதல் தொடர்ந்து, திருமலை திருவேங்கடவன் திருக்கோவிலின் கடைசி சேவையான ஏகாந்த சேவையின் போது மாத்ருஸ்ரீவெங்கமாம்பாவின் சந்ததியினர் இந்த ஆரத்திக் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கமாம்பா முத்துக்களைக் காணிக்கையாக்கியதால் இந்த ஆரத்தி முத்தியா<லு ஆரத்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆரத்தியின் போது ஒரு வெள்ளத்தட்டில், வெற்றிலை, பாக்குதூள் ஆகியவற்றோடு மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் இஷ்ட தெய்வமான முத்துமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சிலை ஆகியவை வைக்கப்படுகின்றன. தினந்தோறும் கடைசி சேவையான ஏகாந்த சேவை அதிகாலை 1.30 மணி அளவில் முடிந்து, திருக்காப்பிடப்பட்டு, மீண்டும் 3.00 மணிக்கு ஸ்ரீவாரி சுப்ரபாத சேவையுடன் அடுத்த நாள் பூஜைகள், வழிபாடுகள் துவங்குகின்றன. 1730ஆம் ஆண்டு வேங்கடவன் அருளால் அவதரித்த ஸ்ரீவெங்கமாம்பா, எண்ணற்ற கீர்த்தனைகளையும், நூல்களையும் இயற்றி, இறுதியில் 1817 ஆம் ஆண்டு தனது 87வது வயதில் தன் பெருமானுக்காக அமைத்த துளசி வனத்தில் ஜீவசமாதி அடைந்தார். ஒரு பள்ளிக் கூட வளாக்ததிற்குள் அமைந்திருக்கும் பக்தை ஸ்ரீவெங்கமாம்பாவின் சமாதி பக்தர்களின் பார்வைக்காகத் தினமும் திறந்து வைக்கப்படுகிறது. மேலும் திருப்பதியில் மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் சிலை ஒன்றும் இரயில்வே பாலத்தின் கீழ் உள்ள சந்திப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் திருமலையில் கவியத்ரி மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் 285வது ஜயந்தி நாள் கொண்டாடப்படுகிறது. வெங்கமாம்பாவின் ஜயந்தி மற்றும் நினைவு நாட்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். கூர்ம ஜயந்தி இதே நாளில்தான் தாளப்பாக்க அன்னமய்யாவின் ஜயந்தி நாளும் கொண்டாடப்படுகிறது.
-----------------------------------------------
பராசர பட்டர்!

எம்பெருமானார் எதிராஜர், உடையவர், பாஷ்யக்காரர், பெரும்பூதூர் முனிவர் என்று ஆறாத அன்பினால் அடியார்கள் போற்றும் ஸ்ரீராமானுஜரின் பவித்திரமெனப் போற்றப்பட்டவர் கூரத்தாழ்வான். கூரம் என்ற ஊரில் சிற்றரசர் போல் செழிப்புடன் வாழ்ந்தவர். அவருக்கேற்ற குணவதியான பத்தினி ஆண்டாள். பவிஷ்யாச்சாரியார் என்று அடையாளம் கண்டு போற்றப்படும் சிறப்பினுக்குரிய லட்சுமணமுனி யான திருப்பாவை ஜீயரின் குணப்பண்புகளில் உளம் தோய்ந்து, பக்தியினால் ஆழங்கால் பட்டு அவரையே தன் ஆசாரியனாக வரித்து அவர் சரண் புகுந்தார் கூரத்தாழ்வான். தன் சுகபோகங்கள் அனைத்தையும் மனைவியுடன் இளையாழ்வாரேசரண் என்று வந்தடைந்தவர் ஆழ்வான்.

ஓரிரவு நகர்வலமாக வந்த கூரத்தாழ்வான், ஒரு வீட்டில் நடந்த துயரமான வாக்குவாதங்களைக் கேட்க நேர்ந்தது. ஆண்டாளை மணந்து கொள்பவன் முதல் இரவில் மரித்து விடுவான் என்று அவள் ஜாதகத்தில் இருந்ததால், அவளது திருமணம் தடைபட்டுவந்தது. காலமெல்லாம் கண்ணீருடன் தன் அருமை மகள் வருந்துவதைச் சகியாது அவளது பெற்றோர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் கடைசி முடிவுக்கு வந்து விட்டனர். மறுநாள் கூரத்தாழ்வான் அவர்களை வரவழைத்து ஆண்டாளைத் தான் மணமுடித்து அவளை மகிழ்ச்சியோடு வாழ வைப்பதாகக் கூறி, பலவிதங்களிலும் அவர்களைச் சமாதனப்படுத்தி, ஸ்ரீஎம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனை,

அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப்பொழிந்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முன் மேவினார்!
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே.

என்று உறுதி பூண்டு, ஒத்தொவ்வாத பல் பிறப்பையும் அளித்து ஆட்கொள்வன்- அவன் தானே! என்று ஞானத்தால் தேறி ஆண்டாளை தன் துணைவியாக ஏற்றார். எம்பெருமானின் அருளால் இந்த திவ்விய தம்பதிகள் 80 பிறை கண்டு நிறைவாழ்வு வாழ்ந்தனர். ஒரு முறை உணவு இடுவதற்கு முன் வாழை இலை வெட்டிய போது வாழை இலை வெட்டிய இடத்திலிருந்து நீர் வருவதைக் கண்டு, கண்ணீர் விட்டு அழுதார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலாருக்கு இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் வாத்ஸல்ய பாவத்தில். ஒரு மழை காலத்தில் வெளியில் பிட்சைக்கு போகாமல் இரவில் கண்ணயர தர்மபத்தினியான ஆண்டாள் ஒருக்கணம் எண்ணினால், ஏவலர்கள் எடுபிடியாக ஏவல் செய்ய, தங்கத் தட்டில் பலவிதமான உயர்ந்த உணவு வகைகளை உண்டுகளித்த என் கணவர் இன்று பட்டினியோடும் படுக்க நேர்ந்ததே! ரங்கா, உன் பக்தன் பட்டினி புலம்பவும் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அரங்கன் அர்ச்சாரூபமாக ஆழ்வானுக்கு பிரசாதங்கள் அனுப்பி வைக்க உத்திரவிட, அதன்படி உத்தமநம்பிகள் என்பவர் பெருமாள் பிரசாதங்களுடன் ஆழ்வான் இல்லத்துக்கு வந்து பிரசாதங்களைத் தந்தார்.

ஆழ்வான் ஆண்டாளை அழைத்து நீ ஏதாவது பெருமானிடம் குறைப்பட்டுக் கொண்டதுண்டோ என்று வினவ, நீங்கள் பசியோடிருப்பதைக் கண்டு மனம் பொறாமல், நான் பெருமானிடம் முறையிட்டது உண்மைதான் என்று கூறி மன்னிப்பு வேண்டினாள். ஆழ்வான் அந்த அமுதத்தை மூன்றில் ஒரு பங்கு கொடுத்து சாப்பிடச் சொல்லி விட்டு தானும் ஒரு பங்கை உண்டு உறங்கச் சென்றார். ஆண்டாள் எம்பெருமானின் அருளால் கருவுற்று இரண்டு ஆண்மகவுகளைப் பெற்றெடுத்தாள். ஆழ்வானும் தாம் பெற்ற குழந்தைகளுக்கு நாமகரணம் செய்ய ஆசாரியனை வேண்டினார். எம்பார் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வர வேதவியாச பட்டர், பராசர பட்டர் என்னும், திருநாமங்களை எதிராசன் சூட்டி மகிழ்ந்தார். வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த சிசுக்களில் பராசரபட்டர் என்ற குழந்தையை ஸ்ரீரங்கநாதர் தமது சுவிகாரபுத்திரனாக ஏற்றுக் கொண்டார்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்றபடி பட்டர் ஐந்து வயதிலேயே திருவாய்மொழியில் வரும் சிறு மாமனிசர் என்ற பதத்தைக் கூறி சிறு என்பது சிறியது. மா என்றால் பெரியது. எப்படி எதிர்மறையான இவை ஒருவரிடம் ஒன்றாகப் பொருந்தியிருக்கும்? என்று பட்டர் கேள்வி கேட்டபோது வியப்படைந்த தந்தை கூரத்தாழ்வான் அதற்குரிய விளக்கங்களையும் எடுத்துக் கூறினார். ஆகிருதியில் (உருவத்தில்) பெரியவராக இருப்பவரை அப்படிக் கூறி வணங்குகிறோம் என்று கூறினார். ஒரு சமயம் மற்ற பையன்களுடன் மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார் பட்டர். அப்போது சர்வக்ஞபட்டர் என்பவர் பல்லக்கில் பவனி வந்து கொண்டிருந்தார். அவருடைய சீடர்கள் விருதுகள் சொல்லிக் கொண்டு பின்னே வந்தனர். பட்டர் தன் சிறு கரங்களில் மண்ணை அள்ளி வைத்துக் கொண்டு இதற்குள் எவ்வளவு மண் இருக்கிறது என்று கூற முடியுமா? என்று கேட்க, சர்வக்ஞரும் சிரித்து விட்டு பதில் பேசாதிருந்தார். பையன் ஒரு கைப்பிடி மண் என்று கூறத் தெரியாமல் சர்வக்ஞர் பட்டர் என்று பெயர் கொண்டு, செல்லுதல் தகுமோ? என்று கேட்கவும் பையன் யார் குழந்தை என்று விசாரித்து மகிழ்ந்து பல்லக்கில் ஏற்றி வீட்டுவாசலில் இறக்கி விட கண்ணே என்று ஆண்டாள் உட்சென்று திருஷ்டி கழித்தார்.

மகாபுத்திசாலியாகவும், ஏகசந்தக்கிரகியாகவும் (தன் தந்தையைப் போல) விளங்கிய பட்டருக்கு ஆழ்வானும் எம்பாருமேவேதம் முதல் அனைத்து சாஸ்திரங்களையும் கற்பிக்க எதிராஜர் நியமனம் செய்தார். ஒரு சமயம் பட்டர் பகவத் சந்நிதியில் திரைசாத்தியிருக்கும் போது, நெருங்கி சமீபம் வரும் ஒரு குரல் யாரது? வெளியே போ என்று ஆணையிட பட்டரும் உடன் விலகி வெளியே வந்து விட்டார். சில நொடியில் மீண்டும் யாரது பட்டரா? உள்ளே வர வேண்டும் என்று குரல் ஒலித்தது. வெளியே போம் என்று சொன்னபோது நினைத்ததென்ன? என்று பெருமாள் வினவ, இன்று பகவானும், பிராட்டியும் ஏகாந்தமாக இருக்கிறார்கள் என்று எண்ணினேன். இதற்கு முன் நினைத்தது என்ன? என்று விடாப்பிடியாக எம்பெருமானும் வினவ, ஆழ்வானும் ஆண்டாளுமாக எண்ணினேன் என்றார் பட்டர். பட்டரே இது நம் ஆணை எப்பொழுதும் இதுபோலவே நினைத்து இருக்கக்கடவீர் என்று நியமித்தருள, பட்டர் பெருமாளின் சத்புத்திரர் என்ற விஷயம் மேலும் உறுதியாயிற்று.

பட்டருக்கு வயது வந்தவுடன் விவாகம் செய்து வைக்க எண்ணினார் ஆழ்வானும் ஆண்டாளும் பெரியநம்பிகள் <உறவினரின் பெண்ணை பராசரபட்டருக்கு திருமணம் முடிக்க அவர்கள் முனைந்தபோது, புது சம்பந்தமாக இது இருப்பதால் எனக்கு சம்மந்தமில்லை என்று பெண்ணைப் பெற்றவர் மறுத்துவிட்டார். ஆண்டாள் மனம் நொந்து பெருமாளிடம் விண்ணப்பம் செய்தாள். ஆழ்வான் நிச்சிந்தையாக ஈச்வரனின் குடும்பக் கவலைகளை ஏன் இழுத்துப் போட்டுக் கொண்டு, கவலைப் படுகிறாய்? எல்லாம் எம்பெருமானே பார்த்துக் கொள்வார் என்று கூறிவிட்டார்.

அன்று இரவே, அரங்கன் பெண்ணைப் பெற்றவர் கனவில் தோன்றி உமது இரண்டு பெண்களையும் பட்டருக்கே மனம் முடியுங்கள், பட்டர் என்னுடைய ஸ்வீகாரப்புத்திரன் என்பதால் எங்கள் குலமரபுப்படி, உபயநாச்சியாரோடு இருக்கும்படித் திருக்கல்யாணத்தை முடித்து வையுங்கள் என்றார். அதன்படி தனது இரு குமாரத்திகளையும் பட்டருக்கே துணைவியாகத் திருமணம் செய்து மகிழ்ந்தார். ஆழ்வான் பட்டினி கிடந்து அன்று நாம் அனுப்பிய பிரசாதத்தை உண்ட இந்த தம்பதிகள் நமது சங்கல்பத்தால் இரண்டு குமாரர்களைப் பெற அவற்றில் ஒன்றை நமக்காக்கிக் கொண்டோம் என்று உகப்புடன் பெருமாள் கூறிய செய்திகள் அனைத்தையும் எதிராஜர் சந்நிதியில் ஆழ்வான் விஞ்ஞாபனம் செய்ய குருநாதரும் அகமகிழ்ந்தார்.

ஒரு சமயம் ஸ்ரீரங்கத்தில் வைணவர்கள் பட்டரை எதிர்கொண்டு அரங்க நகரப்பன் சன்னதிக்கு அழைத்துச் சென்றார்கள். அரங்கனை மங்களாசாசனம் பண்ணிய பின் மாலை பரிவட்டம் முதலிய மரியாதைகள் செய்து அவர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். தாயாகிய ஆண்டாளைச் சேவித்து ஆசி பெற்ற பின் எப்பவும் போல, சிஷ்யர்களுக்கு தர்சன கிரந்த <உபதேசங்களைச் செய்து கொண்டிருந்தார். இதற்கிடையில் கங்கோத்தரியில் வேதாந்த மார்க்கம் மாறியபின் பரம வைஷ்ணவரான பட்டர் திருவடிகளே கதியெனயிருந்த தானிஜ், ஒருநாள், இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் மிகுந்த பசியோடு அவர் கிருஹத்திற்குச் செல்ல, உணவிட மறுத்த அவரது மனைவிமார்கள் அங்கு அன்னமில்லை நீராடும் இடத்திற்குச் செல்லுங்கள். அங்கே உங்கள் வேதாந்தி இருக்கிறார் என்று நிஷ்டூரமாகச் சொல்ல, வேதாந்தி மனம் கலங்கினார். தமது சொத்துக்களை மூன்று பாகமாக்கி அதில் இரண்டு பங்கை தன் மனைவியர் இருவருக்கும் தந்து விட்டு தன்னுடைய பங்கை ஓர் ஒட்டகத்தில் ஏற்றிக் கொண்டார்.

சன்யாச ஆசிரமத்தையும் ஏற்றுக் கொண்டு ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் சிறுபுத்தூருக்கு எழுந்தருளினார். பரமபாகவத சிகாமணியான அனந்தாழ்வான் முன்பு பட்டரை எதிர்கொண்டது போலவே இவரையும் எதிர் கொண்டு வரவேற்றார். ஸ்வாமி சுகுமார மனோகரனாக இருந்த தேவரீர் இப்படிச் செய்யலாமே? வேர்த்தபோது நீராடி, பசித்தபோது அமுதுண்டு. பட்டர் திருவடிகளே சரணம் என்று இருந்ததால் உம்மைப் பரமபதத்திலிருந்து தள்ளி விடுவார் உண்டோ? என்று கேட்டு அளவளாவி உணவிட்டு உபசரித்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்.வேதாந்தி தனது மூட்டை முடிச்சுகளுடன் பயணகதியில் பட்டர் திருமாளிகை அடைந்து தனது குரு நாதரைத் தண்டனிட்டு, தான் கொண்டு வந்த தனங்களை அவரது திருவடிகளில் சமர்ப்பித்தார். பட்டர் இதெல்லாம் என்ன? என்று கேட்டார். வேதாந்தி வீட்டு விஷயங்களையெல்லாம் விஸ்த்தாரமாக எடுத்துக்கூறி பசியோடு வந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அன்னம் மறுக்கப்படும்போது, அந்த கிருகஸ்தாஸ்ரமத்தில் என்ன பயன் என்று தேடி அவர்களின் பங்கை அளித்து விட்டு அடியேன் துறவு பூண்டு வந்துள்ளேன் என்று விண்ணப் பித்தார். அதை ஸ்வாமியின் திருவுள்ளப்படியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று விண்ணப்பித்தார். அதை ஸ்வாமியின் திருவுள்ளப்படியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று விண்ணப்பித்தார். வேதாந்தியும் அவ்விதம் செய்ய அந்தத் திரவியம் சீண்டுவாரின்றி அங்கே போட்டபடியே கிடந்தது. ஒரு நாள் பட்டர் நீராடச் சென்றபோது, இந்தத் திரவியக் குவியல் ஏது? என்று வினவ, வேதாந்தியும் விபரம் கூறினார்.

இந்தத் திரவியம் கொண்டு நந்தவனம் அமைத்து, மேற்கொண்டு பணம் இருந்தால், ததியாராதனம் செய்யக்கடவீர் என்று நியமிக்க அதன்படி நந்தவனம் அமைத்து பகவானுக்கு ததியாராதனம் செய்து வந்தார். அவரது குருபக்தியையும், வைணவ நெறியின் பால் கொண்டிருந்த எல்லையற்ற பக்தி விசுவாசமும் கண்ட பட்டர் அவரை அன்போடு அணைத்து நம் ஜீயர் என்ற நாமம் சூட்டினார். அவரை எக்கணமும் தம்முடன் பிரியாமல் இருக்க பணித்து சகல சாஸ்திரங்களையும் குளிரக் கடாக்ஷித்து, பட்டரைப் பற்றிக் கூறும்போது நஞ்சீயர் பட்டர் பிரபாவமும் நஞ்சீயரைப் பற்றி நவிலும் போது பட்டரின் ஆசாரிய விசேஷமும் வெளிப்படுகின்ற அதிசய குருபரம்பர வைபவமாகும். நஞ்சீயர் ஒருமுறை ஒரு சந்தேகம் கேட்டார். நம் பெருமாள் இங்கே சந்திரப்புஷ்கரணிக்கரையிலே கண் வளர்கிறாரே அதன் திருவுள்ளக்கிடக்கை என்ன வென்று, பட்டர் மறுமொழி பகர்ந்தார். நாராயணா, மணிவண்ணா என்று கூக்குரலிட்டபின் கஜேந்திரனைக் காக்க எழுந்தருளி வந்தார் எம்பெருமான். இங்கே நான் கூப்பிடுவதற்கு முன்னாலேயே தயாராக அவர் ரட்சகம் செய்யக் காத்துக் கண்வளர்கிறார் என்றார்.

பின்னொரு சமயம் பட்டரும் நஞ்சீயருடன் சேதுஸ் நானம் செய்ய எண்ணினார். செல்லும் வழியில், ஓர் இரவு களைப்பு மிகுதியினால் பட்டர் நஞ்சீயரின் மடியில் தலை வைத்து கண் துயின்றார். குருநாதர் தூக்கம் கெடுக்கக் கூடாது என்பதற்காக நஞ்சீயர் கால் களையோ உடம்பையோ சிறிதும் அசைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார். ஒரு சிஷ்யன் தன் ஆசானிடம் எப்படியிருக்க வேண்டுமென்ற உதாரண புருஷராயிருந்தார். ஆளவந்தாருக்கு ராமானுஜமுனி ஏகலைவன் என்று எம்பார் ஒருமுறை கூறியது இங்கும் பொருத்தமாக (வேறு ஒரு பொருளில்) பட்டரின் ஏகலைவனாக நஞ்சீயர் திகழ்ந்தார் எனலாம். கூரகுலோத்மம் என்ற ஊரிலே பட்டர் ஒரு சமயம் தங்கியிருந்தபோது அங்கு கூரகுலோத்மதாசரின் நந்தவனத்தில் பட்டரின் குடும்பத்தார் புழங்க, அதைப் பராமரிக்கும் காவலர்கள் அதைத் தடுத்தனர். அதைக் கேட்ட கூரகுலோத்தமதாசர் (இவர் கூரத்தாழ்வாருக்கும் பட்டருக்கும் சிஷ்யராக இருந்த பெரியவர். இந்த நந்தவனத்தை ஏற்படுத்தி நிர்வகிப்பவர். ஏகாங்கிகளை கோபித்து இது முற்றிலும் ஆசாரியர் குடுப்பத்தின் உகப்பிற்காகவே உள்ளது பட்டர் விரும்புவதால் பெருமாள் கைங்கரியத்துக்கும் பயன்படுகிறது என்று கூறினாராம். (வார்த்ததாமாலை-177ம் வார்த்தை)

திரிபுவன வீரதேவன் என்கிற காஞ்சிமன்னர் பட்டரின் வாக்குவன்மை மற்றும் ஆன்மீக மேன்மையை உணர்ந்து தமது அரண்மனைக்கு வந்து போகுமாறு தன் விருப்பத்தைத் தெரிவிக்க பட்டரும் அன்புடன் சிறிய பதிலை அந்த மணிப்பிரவாளத் தமிழிலே தருகிறோம் படித்துச் சுவையுங்களேன். திரிபுவன வீரதேவன் பட்டருடைய சபிஜாத்யம் கண்டு நீர் நம் பக்கல் ஒருநாள் வந்து போவீர் என்று அபேக்ஷிக்க பள்ளி கொள்ளுகிறவர் கை மறுத்தால், உன்னுடைய வாசலொழியப் போக்குண்டோ? என்றருளினார். எவ்வளவு சமத்காரமான பதில்கள். அரங்கன் கைவிட்டு விட்டால், நீதானே கதி என்று உயர்த்துவது போல் மன்னனைக் கூறி தனது மறுப்பையும் அதிலேயே தெரிவித்த நேர்த்தி, குரு மணிக்கு மேல் பதக்குண்டு என்று கூறிய கூரேசரின் அருமைப்புதல்வரல்லவா பட்டர்?

குருபரம்பரா பிரபாவத்திலும், வார்த்தா மாலையிலும் இடம்பெற்றுள்ள ஸ்ரீவைஷ்ணவ லட்சணத்தைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வது சுவையானது. பட்டரை ஆச்ரியித்த ஆர்வமுடைய ஸ்ரீவைஷ்ணவரை நோக்கி, நீர் அனந்தாழ்வானிடம் சென்று ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் இருக்கும்படி என்ன வென்று தெரிந்து வாரும் எனப் பட்டர் ஆக்ஞாபித்தார். அந்த அடியாரும் அதைச் சிரமேற் கொண்டு அனந்தாழ்வான் திருமாளிகைக்குச் செல்ல அப்பொழுது ததியாராதனை நடைபெற்று வந்தது. வந்தவர் பெருமையுடன் ஒரு பக்கம் காத்திருந்தார். பந்தி முடிந்தவுடன் வந்த விருந்தினரை ஆழ்வான் உள்ளே அழைத்துச் சென்று அன்புடன் அமுது படைத்து விபரம் கேட்டார். வைணவர் நான் பட்டரால் அனுப்பப் பட்டேன் என்றும் வைஷ்ணவ லட்சணங்களைக் கேட்டு உம்மிடம் தெரிந்து வரச் சொன்னார். ஆசாரியர் பவ்வியமாக மொழிந்தார்.

அனந்தாழ்வான் ஒரு புன்முறுவலுடன் இது மொழிந்தார். கொக்கு போல, கோழி போல, உப்பு போல உம்மைப் போல இருக்கும் என்று அவரிடம் விண்ணப்பம் செய்யுமென்று அருளினார். இதன் பொருள் நீர்க்கரையில் நின்று கொண்டிருக்கும் கொக்கு தனக்கு ஏற்ற மீனுக்காக காத்திருக்குமாப் போல, நீர் வண்ணனிடம் ஆசார அபசாரங்களை ஒதுக்கி, பாகவத கைங்கரியமென்ற பரம புருஷார்த்தத்தையே வைஷ்ணவன் கேட்டுப் பெறுவான். கோழி எப்படி குப்பையைக் கிளரி வேண்டாத விஷயங்களைத் தள்ளி தனக்கு ஏற்ற நெல்மணிகளையே தெரிந்து எடுத்துக் கொள்வது போல அவனும் சாஸ்திரங்களைத் துருவித் துருவி தனக்கு உரியத் தரமான ஸத் விஷயங்களையே ஸ்வீகரித்து பலன் பெறுவான்.

உப்பும் தான் சேர்ந்த உணவின் சுவையைக் கூட்டி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுவது போல, ஸ்ரீவைஷ்ணவர்களும் தன்னைச் சார்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் தன்னைச் சார்ந்த அடியார்களுக்கும் ப்ரயோஜனவஸ்து வாக விளங்கித் தன்னை முன்னிருந்துக் காட்டிக் கொள்ளாமல் பாகவத சேவையில் கரைந்து விடுவர் என்றும் கூறி, அனந்தாழ்வான் இவைகளுக்கு திருஷ்ட்டாந்தமாக உம்மைப் போல் இருப்பான் என்று வந்தவரைக் குறிப்பிட்டு இந்த மூன்று நியமங்களும் பொருந்திய உத்தம ஸ்ரீவைஷ்ணவராக அவரை மேம்படுத்தி உரைத்தது மிகவும் விசேஷமாகும்.

வீரசுதந்தரபிரம்மராயன் என்கிற கூரத்தாழ்வானின் சிஷ்யன், மதில்சுவர் எழுப்பும்போது பட்டரின் ஆணையையும் மீறி, பிள்ளை பிள்ளையாழ்வான் என்கிற இன்னொரு கூரத்தாழ்வான் சிஷ்யரின் கிருஹத்தை இடித்து விட்டுக் கட்டிவிட, மனம் வருந்திய பட்டர், ஸ்ரீரங்கத்தை விட்டு திருக்கோட்டியூர் சென்று அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் வீரசுதந்தர பிரம்மராயன் இறந்துவிட பட்டருடைய தாயார் ஆண்டாள் மிக வருந்தினார். ஆழ்வாரின் சம்பந்தமுடைய பிரம்மராயன் இகலோக வாழ்விலும் சுகப்படாது பரலோகத்திலும் நரகம் சென்று துன்பப்படயிருப்பதை எண்ணியே வருந்தினார். பட்டரின் சர்வக்ஞ அறிவைப் பரிசோதிக்கவே பல வித்வான்கள் கூடி, விவாதம் செய்தனர். ஆனால் வெற்றி கிடைக்காமல் தோல்வியைத் தழுவி மேலும் பட்டரைச் சோதிக்க ஒரு குடத்தில் பாம்பை விட்டு அழைத்துக் கொண்டு வந்து, இதில் என்ன இருக்கிறது என்று கேட்க, அவர்கள் குடத்தின் வாயைக் கவிழ்த்ததும் ஒரு பாம்பு வெளியே சீரிக் கொண்டு வெளி வந்தது. இது கொற்றக் குடையா? என்று கேலியாகக் கேட்டனர். பட்டர் சொன்னார். ஆம் அதிலென்ன ஐயப்பாடு? சென்றால் குடையாம் என்றல்லவா ஆழ்வார் பாசுரம் உள்ளது என்று கூறியவுடன் அவர்கள் யாவரும் வெட்கித் தலை குனிந்தனர்.

திரிபுவன வீரதேவன் என்ற காஞ்சி மன்னன் பட்டரின் வாக்குவன்மை மற்றும் ஆன்மீக மேன்மையை உணர்ந்து தனது அரண்மனைக்கு வந்து தமது விருப்பத்தைத் தெரிவிக்கப் பட்டரும் அன்புடன் கூறிய பதிலை அந்த மணிப்பிரவாள நடையிலே தருகிறோம் படித்துச் சுவையுங்களேன் என்றார். ஒரு சமயம் பட்டர் திரும்பும் வழியில் ஓர் வேடன் குடிலுக்கும் இருவரும் சென்றபோது, அவன் அவர்களுக்கு உபசரனை செய்தான். அப்பொழுது பட்டர் கூறினார். ஐயரே இவன் நம்மை உபசரிப்பது நம் பெருமையை உணர்ந்தோ வேறுலாபங்கள் கருதியோ இல்லை. சரண்யனான பகவான் தன் அபிமானத்தால் ஒதுங்கினவரை ஏற்றுக்கொள்ளாமல்யிருப்பானா? என்று கூறி வேடனிடம் வேறு ஏதாவது விஷயம் உண்டா எனக் கேட்டபோது அவன் கூறினான். சாமி இன்று ஓர் அதிசயம் நடந்தது. வழக்கம் போல் நான் வேட்டையாடும்போது ஒரு முயல்குட்டியைப் பிடித்து விட்டேன் என்றான் வேடன். அவர்கள் இருவருக்கும் இது ஆச்சர்யம் விளைவித்தது. மாமேகம் சரணம் வ்ரஜ என்ற இந்த முயலுக்கும் யாரும் உபதேசிக்கவில்லை. ஆனாலும் சரணாகதியும், ரக்ஷணமும், இரண்டுமே பலிதமானது. என்னே! என்று பட்டர் நஞ்சீயரிடம் கூறி சந்தோஷம் கொண்டார்.

எம்பெருமானார் நியமனப்படி பட்டர் சாரதா பீடத்திற்குச் சென்று ஸ்ரீபாஷ்யத்தை ஸ்ரீசாரதாதேவிக்கு காட்டி அவள் அனுக்கிரகம் பெற்று மீண்டதும் திரும்பி வரும் வழியில் திருவேங்கடமுடையானைச் சேவித்து வரும் வழியில் மனநிலை சரியில்லாத பெண்ளுக்கும் அனுக்கிரகம் செய்திருக்கிற செயல்களை குருபரம்பரை நூல்கள் தெரிவிக்கின்றன. பட்டருக்கு இரண்டு தேவியர்கள். இப்படி இருபக்கமும் இருசர்ப்பங்களை வைத்துக் கொண்டு சம்சாரமாகிய கடலை எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று குரு பக்தர் கேலியாகக் கேட்க பட்டரும் அயராமல் அந்த இரண்டு சர்ப்பங்கள் சீறும்போது அவைகளின் செருக்கை அடக்க வானத்தில் பறக்கும் வைனதேயன் இருக்கிறான். நம்மால் ஆவதென்ன? என்று கூறி பெருமாளைப் பரவினார்.

ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்திலே கைசிக துவாதசி நாளில் கைசிக புராணத்தை பட்டர் உபன்யாசம் செய்த போது பெரியபெருமாள் மிகவுகந்து திருமாலை திருப்பரிவட்டம் திருவாபரணம் இவற்றை அருளியதோடு உமக்கு நாம் மேலை வீடு தந்தோம் என்றிட, மகா பிரசாதம் என்று பட்டர் அதனை ஏற்றுக் கொண்டார். பெரிய பெருமாளையும் எம்பெருமாளையும் சேவித்து நியமனம் பெற்று தம் திருமாளிகைக்கு எழுந்தருள தாயார் அரங்கனைச் சேவிக்க, அவரும் நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் என்று ஆசிர்வதிக்க பட்டர், யாம் வேண்டுவதும் அதுவே எனக் கூறி அமைந்தார். பட்டர் திருமாளிகைக்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் கூடி அமுது செய்ய பெருந்திரளாகக் குழுமினர். பட்டர் திருநெடுந்தாண்டகத்துக்கு அர்த்தம் அருளிச் செய்தார். அஞ்சிறைப்புள்ள என்கிற பாசுரத்தை அனுசந்திக்கும்போது திருவேங்கட முடையான் கருடாரூடராய் வானில் காட்சியளித்தருள, பட்டரும் ஆனந்தப்பட்டார். பறவை ஏறும் பரம் புருடா என்கிற பாசுரத்தை இருமுறை அநுசந்தானம் செய்து சிரசின் மீது கைகூப்பிக் கபாலம் வெடித்து திருநாட்டிற்கு எழுந்தருளினார். தாயார் ஓடோடி வந்து அவரைத் தாங்கிப்பிடித்தார். நஞ்சீயரும் மற்றய சீடரும் வேரற்ற மரம் போல் சாய்ந்து கண்ணீர் பெருக்கினார். ஸ்ரீராமப்பிள்ளையக் கொண்டு சரமக்கிரியைகளை முறையாக நஞ்சீயர் செய்தார். பட்டர் அருளிச் செய்த கிரந்தங்கள், விஷ்ணு சகஸ்ரநாம பாஷ்யம், அஷ்டச்லோகி, ஸ்ரீகுணரத்ன கோசம், ஸ்ரீரங்கராஜஸ்தவம் முதலியன.
"ஸ்வஸ்தி வாசனம்"
|| ஸ்ரீ குருப்யோ நம: ||

ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:

ஸ்வஸ்தி ஸ்ரீமதகில பூமண்டலாலங்கார - த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதாஸேவித - ஸ்ரீகாமாக்ஷீ தேவீஸனாத - ஸ்ரீமதேகாம்ரநாத - ஸ்ரீமஹாதேவீ ஸநாத ஸ்ரீஹஸ்திகிரிநாத - ஸாக்ஷாத்கார - பரமாதிஷ்ட்டான - ஸத்யவ்ரத நாமாங்கித - காஞ்சீ திவ்யக்ஷேத்ரே - சாரதாமட ஸுஸ்த்திதாநாம் - அதுலித ஸுதாரஸ- மாதுர்ய கமலாஸன காமினீ தம்மில்ல ஸம்ப்புல்ல- மல்லிகாமாலிகா நிஷ்யந்த மஹரந்தஜ்ஜரீ - ஸௌவஸ்திக வாங்நிகும்ப்ப விஜ்ரும்ப்பணாநந்த - துந்துலித - மனீஷிமண்டலாநாம் அநவரதாத்வைத வித்யாவினோத ரஸிகாணாம் நிரந்தராலங்க்ருதீக்ருத - சாந்தி தாந்தி பூம்நாம் - ஸகல புவனசக்ர ப்ரதிஷ்ட்டாபக - ஸ்ரீசக்ர ப்ரதிஷ்ட்டா விக்க்யாத யசோலங்க்ருதாநாம் - நிகில பாஷண்ட ஷண்ட - கண்டகோத்காடநேந - விசதீக்ருத வேத வேதாந்த மார்க - ஷண்மத ப்ரதிஷ்ட்டாபகாசார்யாணாம்- ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய வர்ய - ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமத் சங்கர பகவத்பாதாசார்யாணாம் அதிஷ்ட்டானே - ஸிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸம்யமீந்த்ராணாம் - அந்தேவாஸிவர்ய - ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதாநாம் - ததந்தேவாஸிவர்ய - ஸ்ரீமத் சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதநாம் ச சரணநளினயோ: ஸ்ப்ரச்ரயம் ஸாஞ்சலிபந்த்தம் ச நமஸ்குர்ம:|

நம் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யர்களை இந்த ஸ்வஸ்தி வாசன ஸ்லோகம் பாராயணம் செய்து வணங்குதல் என்பது நம் பாரம்பரியம் என்கின்றனர் நம் பெரியோர்கள். வாழ்வில் ஒருமுறையேனும் இந்த மந்திரத்தைச் சொல்லி நம் ஆச்சார்யாளை வந்தனம் செய்தோமானால் கட்டாயம் குருவருள் நமக்குண்டு என்பது திண்ணம்.
நாசூக்கு _ மிக _ மிக _ அவசியம்  
ஞானிகளுக்கு _ கூட...!

பிராமணர்கள் கடல் கடந்து போகக் கூடாது என்பது அந்தக் கால ஆச்சாரமாம் ...
அதை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன்...!

அப்படி கடல் கடந்து வெளிநாடு போய் வந்தவர்களுக்கு , காஞ்சி மஹா பெரியவர் , தன் கையால் தீர்த்தம் கொடுப்பது இல்லையாம் ... அதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்...!

ஆனால்..இந்த "நாசூக்கு" சம்பவத்தை இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன்..!

# ஒரு தடவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி – சதாசிவம் தம்பதிகள் , கச்சேரிக்காக வெளிநாடு போய் விட்டு திரும்பி வந்தவுடன் ...நேராக காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள்...!

அவர்கள் வந்த  அந்த வேளையிலே பெரியவர் தன் கையாலேயே பக்தர்கள் எல்லாருக்கும் வரிசையாக  தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தாராம்...!

சற்றும் யோசிக்காமல் , சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்று விட்டாராம்...
[அவருக்கு இந்த ஆச்சாரம் ,அனுஷ்டானம் எல்லாம் அந்த சமயத்தில் எப்படி மறந்து போனதோ..தெரியவில்லை..! ]

சதாசிவத்துக்கு பின்னால்  ரா.கணபதி என்ற ஆன்மீக எழுத்தாளர் நின்று கொண்டிருக்கிறார்..!

[இவர்தான் காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவற்றைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர்]

காஞ்சி மடத்துக்கு ரொம்ப நெருக்கமான அவருக்குத் தெரியும் ... கடல் கடந்து போய்விட்டு வந்த பிராம்மணர்களுக்கு பெரியவர் தன் கையால் அபிஷேக தீர்த்தம் தருவது சாஸ்த்திர விரோதம் ... 

அதனால் கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என்று..!

ஆனால்....இதை எப்படி நாசூக்காக சதாசிவத்துக்கு எடுத்துச் சொல்வது..?

இப்போது ரா.கணபதிக்கு திக் திக்....
ஆனால், சதாசிவமோ இதைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் , 
ரொம்ப ரொம்ப சந்தோஷமாக ,பெரியவரை நோக்கி கியூவில் ......... முன்னேறிக் கொண்டே இருக்கிறார் ...

அவர் பக்கத்தில் நெருங்க நெருங்க , ரா.கணபதிக்கு “பக் பக்”....

மஹா பெரியவர் , சதாசிவத்துக்கு மட்டும் தீர்த்தம் கொடுக்காமல் விட்டு விட்டால் சதாசிவம் மனசு புண்பட்டுப் போவாரே..?

இந்த இக்கட்டான சூழ்நிலையை 
எப்படி இங்கிதமாக சமாளிப்பது ?

ஊஹூம்..இனி அதைப் பற்றி யோசித்துப் பலன் இல்லை..! 

வரிசை நகர்ந்து.......நகர்ந்து.....நகர்ந்து.....
இதோ... சதாசிவம்  ,காஞ்சி மஹா  பெரியவர் முன் , 
குனிந்து பணிவோடு பவ்யமாக தீர்த்தத்துக்காக கை நீட்டி நிற்கிறார் ...

படபடக்கும் இதயத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் ரா.கணபதி...!

நீட்டிய கைகளோடு சதாசிவம் நின்று கொண்டிருக்க....

மஹா பெரியவர் , மிக இயல்பாக தீர்த்த பாத்திரத்தை கீழே வைத்து விட்டு , 
சற்றே திரும்பி ... அவருக்கு அருகிலிருந்த தேங்காயை எடுத்து தரையில் “பட்” என்று தட்டி உடைத்து....அதிலிருந்த இளநீரை சதாசிவத்தின் கைகளில் விட்டு விட்டு சொன்னாராம் :

“இன்னிக்கு உனக்கு ஸ்பெஷல் தீர்த்தம்!” 

அசந்து விட்டாராம் ரா.கணபதி...!

ஆஹா...!!!
 என்ன ஒரு இயல்பான இங்கித சமாளிப்பு .... 
நாகரிக நாசூக்கு .!

இளநீரை ஏந்தியபடி நின்ற சதாசிவத்தின் முகத்தில் ஏகப்பட்ட பூரிப்பாம்...! 

பக்கத்தில் நின்ற ரா.கணபதியிடம் திரும்பி .. 
திருப்தியோடு சொன்னாராம் :
“பாத்தியா..? இன்னிக்கு பெரியவா எனக்கு மட்டும் ஸ்பெஷலா தீர்த்தம் கொடுத்துருக்கா... ”

ரா.கணபதி , மஹா பெரியவர் முகத்தைப் பார்க்க ... அதில் மந்தஹாசப் புன்னகை...!

 ஆம் ....  மஹா பெரியவர் சாஸ்திரத்தையும் மீறவில்லை..!
மற்றவர் மனசு நோகும்படி நடந்து கொள்ளவும் இல்லை...! 
இதற்குப் பெயர்தான் “நாசூக்கு”

# இந்த  நாசூக்கு மிக மிக அவசியம் ...
ஞானிகளுக்கு கூட...!

# நமது பேச்சு , மற்றும் பழக்கவழக்கங்களில் 
மற்றவரைப் புண்படுத்தாத தன்மை...
மென்மை..
இங்கிதம்..

🚨🙏🚨அதுவே தெய்வீகம்...!
நென்மேலி

பிண்டம் வைத்த  நல்லூர் - ஸ்ராத்த ஸம்ரட்சண  நாராயணன்
பெற்றேர்களை உயிரோடு இருக்கும் வரை காப்பதற்க்குப்பெயர் கடமை அவர்கள் காலமானவுடன் அவர்களுக்கு செய்வதற்கு பெயர் கடன் கடனை அடைக்கவில்லையென்றால் வட்டிக்கு மேல் வட்டி சேர்ந்து நம் குட்டிகள் தலையில் தான் விழும் அப்படி விழாமல் இருக்க பித்ரு கர்மக்களை விடாமல் செய்யவேண்டும். ஷேத்திரங்களுக்கும் சென்று  பித்ரு பரிகாரங்கள் செய்யலாம் 

முக்கியமாக ராமேஸ்வரம், காசி, கயா  மற்றும் புனித தலங்களுக்கு செல்லும்போது மறைந்த முன்னோர்களுக்காக சில சடங்குகள் செய்ய வேண்டும். அவற்றை செய்ய எல்லோருக்கும் வசதிகள் அமையாது.

செங்கல்பட்டு அருகில் நென்மேலி  என்ற திருத்தலம் அமைந்துள்ளது.

இது எளியவர்களின் கயா என்று கூறப்படுகிறது.
இதைப் பற்றி சிறு குறிப்பு.

செங்கல்பட்டு அருகே நென்மேலி  என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள  
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி பல நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப் படுகிறது. மேலும் இந்த சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தி " ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர் " என்னும் திருநாமமும் இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம் அர்கிய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய  கயா என்றும் வழங்கப்படுகிறது.

இந்த சன்னதியில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணி புரிந்தஸ்ரீ யாக்ஞவல்கியரைக்  குருவாகக் கொண்ட சுக்ல யஜுர்  வேதத்தை  சேர்ந்த யக்ஞ நாராயண ஷர்மா சரஸ வாணி தம்பதிகள் இந்தப் பெருமானின் மீது ஆறாத பக்தி கொண்டிருந்தனர்.

மேலும் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும்  தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரச தண்டனையை ஏற்க  விரும்பாமல்  திருவிடந்தை என்னும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

அவர்களுக்கு தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மனம் வருத்தத்துடன் மரணமடைந்தார்கள்.

அவர்களுடைய எண்ணத்தை எம்பெருமானே செய்ததாக பெருமாள் சாட்சியம் சொன்னார்.
அந்த திவானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்ததிகள்  இல்லாருக்கும் ஸ்ராத்தம் செய்ய இயலாதவர்களுக்கும் தானே முன்னின்று ஸ்ராத்தம் செய்து வைப்பதாக எத்தனித்து குதப காலம் என்னும் பித்ரு வேளையில் ( 12 மணி முதல் 1 மணி வரை ) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார்.

எனவே இங்கு ஸ்ராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே ஸ்ராத்த சம்ரக்ஷணம் ஆகும்.

இந்த ஸ்வாமிக்கு நிவேதிக்கப்படும் வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்த்த துவையலும் நிவேதனமாகும்.

ஸ்வாமி  இதனை மட்டும் ஏற்று பித்ருக்களை திருப்தி செய்கிறார்.

தினமும் நடை பெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியிலோ , அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ அல்லது என்று முடியுமோ அன்று கலந்து கொள்வது கயை  ஸ்ராத்தம் செய்த பலனைக்கொடுக்கும் .

அர்ச்சகரின் முகவரி;
ஸ்ரீ சம்பத் பட்டாச்சாரியார் ,
பிராமணர் வீதி,
நென்மேலி  போஸ்ட், நத்தம் வழி ,
செங்கல்பட்டு -603002,
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன் : 044 - 27420053.

இந்த தலம்  செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து  ஐந்தாவது கிலோ மீட்டரில் உள்ளது.

பித்ரு பூஜை பகல் 12 மணிக்கு மேல் மட்டுமே நடை பெறும், இதில் கலந்து கொள்பவர்கள் 10 மணிக்கு சன்னதியில் இருக்க வேண்டும். அர்ச்சகரிடம் முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
-----------------------------------------------------------
உயிர் பிரியும் போது தச வாயுக்களின் பங்கு :

உடலை விட்டு இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில் தான் உயிர் உடலை விட்டு பிரியும்.
மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு. இவை தச வாயுக்கள் எனப்படும்.

1. உயிர் காற்று. (பிராணன்)
2. மலக்காற்று. (அபானன்)
3. தொழில் காற்று. (வியானன்)
4. ஒலிக்காற்று. (உதானன்)
5. நிரவுக்காற்று.( சமானன்)
6. தும்மல் காற்று. (நாகன்)
7. விழிக்காற்று. (கூர்மன்)
8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
9. இமைக் காற்று. (தேவதத்தன்)
10. வீங்கற் காற்று. (தனஞ்சயன்)

உயிர் வெளியே புறப்படும் நாள், நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.

உதாரணமாக... ஒரு வீட்டை நாம் காலி செய்யும் போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டு வந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் ஒவ்வொன்றாக நிறுத்தி, நமது நடு நெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும். சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும், இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும், மூத்திர வாசல் வழியாகவும், காதின் வழியாகவும், மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும். ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்சயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும். உயிர் பிரியும். 

மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும் போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் செய்வது தான். உயிரற்ற உடல்களை ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்கள் பிழைக்க வைப்பதுவும் இந்த தனஞ்சயனை தம் யோக சக்தியால் ஊக்கி விட்டு மற்ற ஒன்பது வாயுக்களை அழைத்து வரச்செய்து உடலினுள் புகுத்தி உயிர் அளிப்பதே ஆகும். இவ்வாறாக புனரபி ஜனனம், புனரபி மரணம்.
என்ற நிலை அமைகிறது. பிறப்பின் துவக்கம் ஆசையின் தூண்டலால் அமைகிறது. பாபங்களும், புண்ணியங்களும் அற்ற சம நிலையை அடைவதே பிறப்பற்ற நிலையைத் தரும். அதுவே ஒவ்வொரு மனிதரும் காண வேண்டிய உன்னதமான முக்தி நிலையாகும்.

#தச வாயுக்களின் சுற்று:

1. பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல் வளையில் உள்ளது. கை, கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.
2. அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும். குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.

3. வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையா பொருளில் உருப்புக்களை நீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.

4. உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.

5. சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.

6. நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.

7. கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண் திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.

8. கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டு பண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.

9. தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.

10. தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல் இறந்த மூன்றாம் நாள் தலை வழியாக வெழியே செல்லுதல்.

குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள் தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன.
உறவினர்கள் இறந்து விட்டால் அந்த வருடத்தில் பண்டிகைகளை கொண்டாடலாமா? தர்ம சாஸ்த்ரம் சொல்வது என்ன.

பிராஹ்ம்மணர்களாகிய நாம் அனைவரும் அடிப்படை தர்ம சாஸ்திரத்தையாவது தெரிந்து கொள்ள வேண்டும்.

சட்டம் (தர்ம சாஸ்த்திர சட்டம்) தெரியாது. என்பது குற்றமாகும் (பாபமாகும்.) IGNORANCE OF LAW IS NOT AN EXCUSE.

தர்ம சாஸ்திரப்படி ஒரு கர்மாவைச் செய்வதற்கு கர்த்தா (அக்கர்மாவைச் செய்கின்றவன்) காலம் (அக்கர்மாவை செய்ய விதிக்கப்பட்ட காலம்) இடம் (அக்கர்மாவைச் செய்யக்கூடிய இடம்) இவை மூன்றும் தோஷமற்றதாக இருக்க வேண்டும் என்கிறது சாஸ்த்திரம்.

மேலே கூறப்பட்ட அடிப்படையின் படி ஒரு கிருஹத்தில் யாராவது இறந்து விட்டால் அவர்களுக்கு (அந்த இறந்தவருக்கு) கர்மா செய்யக்கூடிய பிள்ளை (அ) கர்மாவைச் செய்யக்கூடிய உறவினர் யாரோ அவர்கள் அந்த ஒரு வருடம் நித்ய கர்மாவைத் தவிர மற்ற கர்மாக்களஈச் செய்வத்ற்கு சுத்தி போறாது என்று கூறுகிறது. அது மட்டுமல்ல அக்கர்மாவை செய்பவன் எங்கு வஸிக்கின்றானோ அந்த இடத்திற்கும் போவதால் சுத்தி போறாது என்கிறது. 
இதன் அடிப்படையில் முற்காலத்தில் (அவிமுக்த குடும்பம்) அதாவது பந்துக்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்தார்கள். (சமையல், பூஜை) ஆகையால் பந்துக்கள் அனைவரும் ஒரு வருடம் பண்டிகைகளைக் கொண்டாடமாட்டார்கள். இக்காலத்தில் அப்படியல்லாமல் உறவினர்கள் அனைவரும் தனித்தனியாக இருக்கின்றார்கள். இப்படி இருக்க மேலே கூறிய சாஸ்த்திரப்படி கர்த்தாவைத் தவிர (கர்மா செய்யக்கூடிய) மற்றவர்களுக்கு எப்படி அசுத்தி வரும். மற்றவர்கள் வீட்டிற்கு எப்படி அசுத்தி வரும். ஆகவே இறந்தவரின் கர்மாவைச் செய்யக்கூடிய பிள்ளைகளுக்கும் (அ) அந்த இறந்தவரின் கர்மாவை தொடர்ந்து செய்யக்கூடியவர்களுக்கும் மட்டுமே இந்த அசுத்தி பொருந்தும். மற்ற தாயாதிகள் மற்றும் உறவினர்கள்  இறந்தவரின் சபிண்டீகரணம் என்று சொல்லக்கூடிய பன்னிரெண்டாம் நாள் கர்மா முடிந்தவுடன் அவரவர்கள் வீட்டில் எல்லா பூஜைகளையும், பண்டிகைகளையும் செய்யலாம். 

சாஸ்திரத்தில் கூறப்பட்ட கர்மாக்களை நாமே அசுத்தி என்று நினைத்துக் கொண்டு செய்யாமல் விடக்கூடாது. இயற்கையாக (தெய்வாதீனமாக) வந்தால் மட்டுமே விசேஷ கர்மாக்களை செய்யாமல் விடவேண்டும். சாஸ்த்திரம் எப்போதும் நமது நன்மையைத்தான் கூறும். நாம் தான் சாஸ்த்திர்ம் என்ற பெயரில் பல ஸம்பிரதாயங்களை வளர்த்துக் கொண்டுள்ளோம்.

இதைப்பற்றி ஒரு சமயம் மஹாஸ்வாமிகள் கூறுகையில் நானும் பெரியவர்கள் (முன்னோர்கள்) செய்த ஸம்பிரதாயங்களை விடக்கூடாது என்று கூறிவந்தேன். ஆனால் வடக்கத்தியர்கள் விவாஹ விஷயங்களில் என்னை கண்டித்து கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில் சாஸ்த்ர விரோதமான ஸம்பிரதாயங்களை கடைபிடிக்க கூடாது என்று கூறினார். ஆதிசங்கர பகவத் பாகவதர்களும் இதையே உபநிஷத் பாஷ்யத்தில் விவரமாகக் கூறியுள்ளார். ஏதோ ஒரு கட்டத்தில் (தவிர்க்க முடியாத) சூழ்நிலையில் தனது குருவே சாஸ்திரத்திற்கு மாறாக செய்திருந்தால் கூட நாம் அதைப் பின்பற்றக் கூடாது என்று கூறியுள்ளார். இதை பல பேர் எங்காத்து சாஸ்த்ரிகள் ஒரு வருடம் பண்டிகை செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார்களே என்று கேட்கிறார்கள். யாரும் வைதீகர்களை குறை கூற வேண்டாம். நாம் தான் சாஸ்த்திரம் தெரிந்த வைதீகர்களை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும். தர்ம சாஸ்திரம் தெரியாத வைதீகர்களைக் கேட்டுப் பயனில்லை. தர்ம சாஸ்திரம் சைவம், வைணவம் எல்லோருக்கும் ஒன்று தான். ரிஷிவாக்கியங்களான ஸ்ம்ருதியை கடைபிடிப்பவர்கள் அனைருக்கும் இது பொருந்தும்.

தற்காலத்தில் உள்ள குழப்பங்களுக்கு அருமையான விளக்கம்.

பெரியவா கடாக்ஷம் பரிபூரணம்.
ஜோதிடம் மக்களின் மனத்தில் செய்யும் பல விபரீதங்களை பார்ப்போம்.

திருச்சி ஶ்ரீரங்கம் பகவத் சந்நிதியில் தன் பெண் திருமணத்திற்கு அர்ச்சனை செய்த பின் ஒரு சேவார்த்தி ஏங்க திருப்பட்டூர் எப்படிப் போகணும் என கையில் ஒரு நோட்டை வைத்துக் கொண்டு கேட்டார். அடுத்து அங்கே போகனுமாம். பின் இன்னும் இரண்டு கோவில்கள் வரிசையாக அடுத்த அடுத்த பயணம். இன்னொருவர் ஏங்க சுக்கிர ப்ரீதி பண்ண சொல்லி சொன்னாங்க அதாவது ஶ்ரீரங்க பெருமாளுக்கு பட்டு சாத்தவும் நம்பெருமாளுக்கு பன்னிரெண்டு  அடி மாலை சாத்தவும் சொன்னாங்க என்றார்.

தற்செயலாக வந்த கோயில் அர்ச்சகர் தம்பி ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு மதுரகவி நந்தவனம் என்ற இடத்திலிருந்து சாத்தாத வைணவர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலை தான் சாத்துவார்கள். மற்றபடி வெளியில் இருந்து நாம் பணம் கொடுத்து வாங்கி கொடுக்கும் மாலைகளை சாற்றுவது கிடையாது என சொன்னார்.

அதே போல் வேறு ஒரு குடும்பம் அதன் தலைவர் பெண்ணுக்கு நாகதோஷம் நம்பெருமாளுக்கு பணிவிடை செய்யற ஆதிசேஷனுக்கு பன்னிரெண்டு முட்டை வாங்கி வைக்க  சொல்றாங்க என கூறினார். நான் மிரண்டு போய் ஶ்ரீரங்கத்தில் இப்படியெல்லாம் செய்ய முடியாது. என அவருக்கு புரியவைப்பதற்குள் பட்ட பாடு பெருமாளே முடியலை.

தெருவுக்கு நாலு ஜோசியக்கரர்கள் படித்த மற்றும் பாமர ஜனங்களுக்கும் எதை தின்னா பித்தம் தெளியும் என்ற நிலையில் அதை உபயோகப்படுத்தி பல ஜோதிடர்கள் ஆளுக்கொரு விதமாக இதுவரை கேட்டேயிராத பல பரிகாரங்கள் சொல்லுகிறார்கள்.

தேங்காயில் விளக்கெண்ணெய் விளக்கு, பூசணிக்காயில் விளக்கு
வாழைப்பழத்துல விளக்கு என சிறப்பு பரிகாரங்கள் செய்ய சொல்கிறார்கள். ஜோசியக்காரங்க எல்லாம் குடும்ப பரிகாரம் என பக்கம் பக்கமாக நோட்டு போட்டு எழுதி தர நம்ம மக்களும் கர்ம சிரத்தையா அதை செஞ்சு முடிக்க கோவில் மற்றும் ஊர் ஊராக அலையறத பார்த்தால் மிகவும் கஷ்டமாக உள்ளது. நாள் கிழமைகளில் (வியாழன், வெள்ளி சனி, என பல நாட்களிலும்) பகவான் சந்நிதியிலோ தாயார் சந்நிதியிலோ ஒரு ஈ காக்கா காணோம். மொத்த கூட்டமும் அன்றய தினத்தில் நவக்கிரக சந்நிதில் அல்லது குடும்ப ஜோதிடர் பரிகாரம் செய்ய சொன்ன சன்னதிகளில் வரிசை கட்டி நிற்பது வேதனையான ஒன்று. எள் விளக்கு, கொண்டகடலை மாலை எலுமிச்சை விளக்கு, என ஒரே பரிகார அமர்க்களம். #ஜோதிடத்தில் பரிகாரம் என்ற ஒன்று கிடுயவே கிடையாது. பகவானை மட்டுமே நம்புங்கள் வாழ்வே நல்ல விதமான மாறும் உதாரணமாக ஒன்றே ஒன்றை மட்டும் குறிப்பிட்டு விளக்குகிறேன்.

பாரதத்தில் பாண்டவரான சகாதேவன் கௌரவ மன்னன் துரியோதன் தன்னிடம் பாரத போரில் பாண்டவர்களை ஜெயிக்க பூமி பூஜை போட நல்ல நாள் குறித்து தர கேட்டப்போது அருமையான நாளை குறித்து கொடுத்தான்.
அதன் படி யுத்த நாள் பூஜை நடந்தால் கௌரவர்கள் வெற்றி உறுதி ஆயிற்று.

அதை அறிந்த தர்மர் கேட்டாராம். ஏன் சகாதேவா அப்படி ஒரு நல்ல  நாளை குறித்து கொடுத்தாய் அவன் நம் எதிரி அல்லவா என கேட்க? சகாதேவன் சொன்னாராம். உண்மையை சொல்லுவது ஜோதிட தொழில் தர்மம் அதனால் எதிரியே கேட்டாலும் சரியானதை மட்டுமே குறித்து கொடுப்பேன் என்றாராம். ஜோதிடம் என்பது உண்மைகளை மட்டுமே சொல்லுவது தவறாக வழிகாட்டுவதல்ல. உடனே தர்மன் பகவான் கிருஷ்ணனை சரணடைய பகவான் கிருஷ்ணன் சகாதேவன் குறித்து கொடுத்த அந்த அமாவாசை நாளுக்கு முதல் நாளே அமாவாசை தர்ப்பணம் செய்ய தன் செய்கையால் குழம்பிய சூரியனையும், சந்திரனையும் ஒருவருக்கு ஒருவர் நேரே பார்க்க வைத்து கௌரவர்களை குழப்பி விட்டு அமாவாசை இல்லா நாளில் பூஜையை போட வைத்து வெற்றியை பாண்டவர்கள் பக்கம் திருப்பினாராம்.

நண்பர்களே, அன்பர்களே பகவான் நினைத்தால் யார் வாழ்விலும் எத்தகைய நிலையிலும் எப்படிப்பட்ட மாற்றமும் நடக்கும். நமக்கு தேவை பகவான் மேல் முழு நம்பிக்கையும் உண்மையான பக்தியுமே. தினமும் அவர்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் காலை, மாலை என இரு வேளையிலும் நல்லெண்ணை விளக்கேற்றுங்கள்.

முக்கியமாக உங்கள் குடும்ப குல தெய்வத்தை தினமும் வணங்குங்கள்.

ப்ரபந்தம், திருப்பாவை என எது தெரியுமோ அதில் குறைந்தது நாலு பாசுரங்கள் சொல்லுங்கள். இல்லை உங்களுக்கு பிடித்த தேவாரம் திருவாசகம் என சொல்லுங்கள். குழந்தைகளை பகவத் நாமாக்களை சொல்ல சொல்லுங்கள். ஆத்மார்த்தமாக பகவானை வணங்குங்கள்.
இல்லத்தின் அருகில் உள்ள ஒரு பகவத் கோவிலுக்குச் சென்று அங்கிருக்கும் பகவானை மனமாற வேண்டுங்கள். பிறருக்கு நல்லதை நினையுங்கள், நல்லதையே பேசுங்கள். பகவானை நோக்கி நாம் ஒரு அடி வைத்தால் அவர் நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைக்கிறார். எதற்க்கும்  நாம் கவலைப்பட தேவையில்லை. அரிய பிறப்பு மானிடபிறவி. பகவானை வணங்கி அனைத்தும் பெறலாம்.

ஜோசியத்தை நம்புங்கள் ஆனால் பரிகாரம் சொல்லும் எந்த ஜோதிடர்களையும் அல்ல. பகவான் இருக்கிறான் நம்மை காப்பாற்ற நாம் பகவானின் குழந்தைகள். நம்மை கஷ்டப்பட வைத்து அவர் மகிழ்வாரா எனவே யாரும் எதற்க்கும் கலங்கமடைய வேண்டாம். பகவான் கொடுக்க நினைப்பதை எந்த கிரகங்களாலும் அல்லது யாராலும் தடுக்க முடியாது. கொடுக்க நினையாததை எந்த கிரஹங்களாலும் அல்லது யாராலும்  கொடுக்க முடியாது எனவே பரிகாரங்கள் என பணத்தை நேரத்தை வீணாக்காமல் பகவானை மட்டுமே வணங்குங்கள் வெற்றி தானாக வரும்.

ஜெய் ஶ்ரீராம்!