செவ்வாய், 30 அக்டோபர், 2018

மகான் ராகவேந்திரர் பகுதி-2

பிரகலாதனின் காலத்தில் மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்தனர். அவன் அனுஷ்டிகம், சாத்வீகம் என்ற இருவகையான புண்ணியங்களைச் சேர்த்தான். அனுஷ்டிகம் என்பது தர்மம் செய்வதால் வரக்கூடியது. சாத்வீகம் என்பது ஹிம்சை செய்தவரிடமும் அஹிம்சையைக் காட்டுவதால் கிடைக்கக்கூடியது. முந்தைய புண்ணியத்தால் செல்வம் பெருகும். வாழ்நாள் கூடும். பிந்தைய புண்ணியம் பிறப்பற்ற நிலையை ஏற்படுத்தும் இரக்க மனம் கொண்ட பிரகலாதன் இரண்டு விதமான புண்ணியங்களையும் அளவுக்கதிகமாகச் சேர்த்து விட்டான். அவன் பிரம்மனை வணங்கி, தெய்வமே! தாங்கள் எனக்கிட்ட சாபம் தீரும் காலம் வந்து விட்டதா? என மனமுருகிக் கேட்டான். பிரம்மன் அவன் முன்பு தோன்றி,சங்குகர்ணா! நீ இப்பிறவியில் அளவுக்கதிகமாக புண்ணியத்தை சேர்த்து விட்டாய். இவ்வாறு புண்ணியம் செய்பவர்கள், அந்த புண்ணியத்திற்குரிய பலன்களை பூமியில் இருந்து அனுபவிக்க வேண்டும். உலகின் சுகமான இன்பங்களை அனுபவித்த பிறகே பிரம்மலோகம் வர முடியும்,என்றார். சங்குகர்ணன் அவரிடம்,சுவாமி! அப்படியானால் எனது புண்ணியங்களைத் தீர்க்கும் வழி யாது?என்றான்.  நீ அடுத்த பிறவியிலும் மன்னனாகவே பிறப்பாய். இப்பிறவியில் மகாவிஷ்ணுவின் பக்தனாக இருந்த நீ, அடுத்த பிறவியில் பாலிகன் என்ற பெயரில் பிறந்து, அவருக்கு எதிராக செயல்படும் மக்களுக்கு ஆதரவாக இருப்பாய். எனவே, உன் புண்ணியத்தின் பெரும்பகுதி கரையும். அதன் பிறகும் நீ சேர்த்த புண்ணியங்களின் விளைவை கலியுகத்தில் தான் தீர்ப்பாய், என்று அருள்பாலித்து மறைந்தார். பிரகலாதனாய் பிறந்த சங்குகர்ணன், இப்பிறவியில் பாலிகன் என்ற மன்னனாகப் பிறந்தான். கவுரவர்களின் நண்பனாக வேண்டிய சூழல் இவனுக்கு ஏற்பட்டது. குரு÷க்ஷத்திர யுத்தத்தில் இவன் கவுரவர்களுடன் சேர்ந்து, பகவான் கிருஷ்ணரின் நண்பர்களான பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டு அழிந்தான். அடுத்த யுகமான கலியுகத்தில் பாலிகனின் அவதாரம் உலகமே வியக்கக்கூடியதாக இருந்தது.
பாலிகனாகப் பிறந்த சங்குகர்ணன், கவுரவர்களுடன் இணைந்திருந்தாலும் கூட அப்போதும் சில புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டான். மனிதர்கள் பாவம் செய்தாலும் சரி, புண்ணியம் செய்தாலும் சரி!  கன்மம் எனப்படும் இந்த இரு வினை களால் ஏற்படும் பலன்களை அனுபவிப்பதற்காக பூலோகத்தில் மீண்டும் பிறக்க நேரிடும். அதனால் தான்  பாவ, புண்ணியம் இரண்டும் கலந்த இந்த பிறவிச்சுழலில் இருந்து காப்பாற்றும்படி  இறைவனிடம் மகான்கள் வேண்டிக் கொள்வார்கள்.பாலிகன் செய்த புண்ணியத்தின் விளைவை அனுபவிக்க அவன் பூலோகத்தில் பிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல நூறு ஆண்டுகள் கடந்தன. கலியுகம் பிறந்தும் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. மைசூரு மாநிலத்தில் (இப்போதைய கர்நாடகம்), அப்பூர்  என்ற கிராமத்தை ஒட்டிய குக்கிராமத்தில் ராமாச்சாரியார் என்பவர் வசித்தார். இவருக்கு குழந்தை இல்லை. ராமாச்சாரியாரும், அவரது மனைவியும் மனம் நொந்து போய் இருந்தனர்.ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் ஊரார் அவர்களைப் பற்றி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவார்கள். குறிப்பாக, உறவுக்காரர்கள் அந்தப் பெண்ணை மலடி என ஏசுவார்கள். அந்த ஆண்மகனை குடும்ப வாழ்வுக்கு லாயக்கற்றவன் என்பர். ராமாச்சாரியரும் இதற்கு விதிவிலக்கல்ல. கணவனும், மனைவியும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள். அந்த தம்பதியர் கண்ணீர்  வடிக்காத நாளில்லை. அவர்கள், தங்கள் பிரச்னைக்கு தீர்வு வேண்டி பிரமான்ய தீர்த்தர் என்ற வைணவத்துறவியை அணுகினர். தீர்த்தர் சுவாமிகளுக்கு எங்கள் நமஸ்காரம். இவள் என் மனைவி, நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுகிறோம். ஊராரும் உற்றாரும் எங்களைப் பற்றி பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனம் நொந்து போயிருக்கிறோம். குழந்தை இல்லாதவர்கள் வாழ்வதை விட சாவதே மேல். மேலும், குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு சிரார்த்தம் முதலியன செய்ய ஆள் இல்லாததால் நரகத்திற்கு செல்வார்கள் என்கிறது சாஸ்திரம். நாங்கள் ஏன் வாழ வேண்டுமென நினைக்கிறோம். எங்களுக்கு குழந்தை பிறக்க வழியிருக்கிறதா? நீங்கள் தான் ஒரு யோசனை சொல்ல வேண்டும், என்றார்.

தீர்த்தர் ராமாச்சாரியரிடம், அன்பனே! கவலைப்படாதே. உனக்கு குழந்தை பிறக்கும் காலம் கனிந்துவிட்டது. ஒரு ஆண்குழந்தை உனக்குப் பிறக்கும், என்றதும், தம்பதியர் உணர்ச்சிப்பிழம்பாகி விட்டனர். தீர்த்தரை சேவித்த அவர்கள், சுவாமி! இதென்ன அதிசயம்! நிஜமாகவா இது நிகழப்போகிறது! எங்களுக்கு குழந்தையா! அதிலும் ஆண் குழந்தையா! என்னே நாங்கள் செய்த பாக்கியம், என்று புன்னகையும், கண்ணீருமாகக் கேட்டவர்களுக்கு அடுத்து வார்த்தைகள் வர மறுத்தன. நா தழுதழுத்தது. மனிதர்களுக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சரி, அல்லது சோகம் நிகழ்ந்தாலும் சரி! ஏனோ, வார்த்தைகள் வர மறுக்கின்றன. பிரமான்ய தீர்த்தரே அவர்களது இந்த உணர்ச்சிவசப்படும் தன்மையைக் கண்டித்தார். ராமாச்சாரி! நீ ரொம்பவும் சந்தோஷப்படாதே. மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும் போதும், வேண்டாத நிகழ்ச்சிகள் நடக்கும் போதும் மனதை ஒரே நிலையில் வைத்திருப்பவனே சிறந்த மனிதன். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத நிலையற்ற உலகில் நாம் வசிக்கிறோம் என்பதை மறந்துவிடாதே. நல்லது நடக்கப் போகிறது என்பதற்காக மகிழாமலும், துன்பம் வரப்போகிறது என்பதற்காக கலங்காமலும் இருக்க வேண்டும், என சொல்லி விட்டு, ராமாச்சாரி! இந்த அறிவுரையை நான் எதற்காக உன்னிடம் சொன்னேன் என்று உனக்குத் தெரியுமா? என்றதும், கேள்விக்குறியோடு, தீர்த்தரின் முகத்தை அந்த தம்பதியர் ஒரு வித பயத்தோடு நோக்கினர். அத்துடன், தீர்த்தர் சொன்னதில் இருந்த நியாயத்தை உணர்ந்து தங்கள் மகிழ்ச்சியை ஒரு குட்டையைப் போல் சுருக்கிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்க தயாராயினர்.ராமாச்சாரி! உங்களுக்கு குழந்தை பிறக்கும். ஆனால், அந்தக் குழந்தை எனக்குரியது. குழந்தை பிறந்தவுடன் அவனை எனக்கு தத்துக் கொடுத்து விட வேண்டும், என்றார்.இந்த நிபந்தனையைக் கேட்டதும், தம்பதிகள் விக்கித்துப் போனார்கள். சற்றுமுன் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, நதியில் கரைந்த சர்க்கரை போல் ஆயிற்று. குழந்தை பிறந்தவுடன் சீராட்டி, பாலூட்டி வளர்க்க வேண்டும்.

குருகுலத்துக்கு அனுப்பி அவனுக்கு பெரிய படிப்பெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும், இளைஞன் ஆனதும், சிறந்த பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், அந்த திருமணத்தை ஊரே வியக்கும் வகையில் பெரிய அளவில் நடத்த வேண்டும், பேரன், பேத்திகளுடன் மகிழ்ந்து விளையாட வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்வது எல்லாப் பெற்றோர்களுக்கும் வாடிக்கை தானே! ஆனால், தீர்த்தர் தங்களுக்கு இப்படி ஒரு நிபந்தனை விதிக்க என்ன காரணம் என்று யோசித்தனர்.சுவாமி! எங்களுக்கு குழந்தை பிறக்குமென தங்கள் திருவாக்கு மலர்ந்ததும் நாங்கள் மகிழ்ந்தோம். இப்போது, இப்படி ஒரு நிபந்தனை விதிக்க காரணமென்ன? என அவர்கள் கவலையுடன் கேட்டனர்.ராமாச்சாரி! கவலைப்படாதே! உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை சாதாரண குழந்தையல்ல. அவன் உலக இச்சைகளில் வாழ்வதற்காகப் பிறக்கவில்லை. மிகப்பெரிய புண்ணிய ஆத்மாவான அந்தக் குழந்தை சன்னியாச நிலை பெற்றுய்வதற்காக பிறக்கிறது. நீங்கள் அந்தக் குழந்தையை என்னிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்தால் மட்டுமே உங்களுக்கு குழந்தை பாக்கியம். இல்லாவிட்டால் இதுவும் சிரமமே! என்றார். உலகம் உய்வதற்காக ஒரு மகானைப் பெற்றுத் தரப்போகிறோம். அத்துடன் மலடி என்று ஊரார் சூட்டிய கொடுமையான பட்டத்தில் இருந்து விடுதலையும் கிடைக்கும். துறவியின் நிபந்தனைக்கு சம்மதித்து விட வேண்டியது தான் என முடிவெடுத்த அந்தத்தாய், சுவாமி! எனக்கு குழந்தை பிறந்தால் போதும், பிறந்தவுடன் தங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன், என்று கண்ணீர் மல்க கூறினார்.
ராகவேந்திரர் பகுதி-3

பிராமன்ய தீர்த்தர் சொன்னபடியே அந்தத்தாய் கர்ப்பமானார். 1447, ஏப்ரல் 22 ஒரு புண்ணிய தினமாக இந்த உலகத்துக்கு அமைந்தது. ஆம்... அன்று தான் அந்த அற்புதக்குழந்தை பூமியில் அவதரித்தது. தீர்த்தர் சொன்னபடி பிறந்த அன்றே குழந்தையை ஆஸ்ரமத்தில் ஒப்படைத்து விட்டனர் பெற்றோர். குழந்தைக்கு எத்திராஜன் என்று பெயர் வைத்தார் தீர்த்தர். குழந்தையைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார் தீர்த்தர். எத்திராஜனுக்கு ஆறு வயதானது. அவருக்கு உபநயனம் (பூணூல் அணிவிக்கும் சடங்கு) நடத்தப்பட்டது. அதன்பின் இரண்டே ஆண்டுகள். எட்டே வயதில் சன்னியாசமும் வழங்கப்பட்டு விட்டது. சன்னியாசம் பெற்ற எத்திராஜனின் பெயர் வியாசராயர் என மாற்றப்பட்டது. வியாசராயருக்கு மத்வாச்சாரியாரின் துவைத கருத்துக்கள் போதிக்கப்பட்டன. வியாசராயரும் அதை அக்கறையுடன் படித்தார். பின்னர், மேல்படிப்புக்காக மூலபஹல் என்ற ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவ்வூரில் ஸ்ரீபாதராஜர் என்ற மகான் இருந்தார். அவர் சிறந்த கல்விமான். அந்தக் கல்விமானிடம் படித்த வியாசராயரும் பெரும் கல்வியாளர் ஆனார். அது மட்டுமல்ல! துவைதக் கருத்துக்களை மிகத்துல்லியமாக மற்றவர்களுக்கும் கற்பிக்கும் ஆற்றலைப் பெற்றார்.இந்த நேரத்தில் வியாசராயரை வளர்த்து ஆளாக்கிய பிரமான்ய தீர்த்தர் முக்தி பெற்றார். அவருக்குப் பின் ஆஸ்ரமத்தை சிறந்த முறையில் நடத்த கல்விமானான வியாசராயரே தகுதியானவர் என அங்கிருந்தோர் கருதினர். மடத்தின் தலைவராக வியாசராயர் நியமிக்கப் பட்டார். பின்னர், அவர் நாடு முழுவதும் பயணம் செய்து துவைதக் கருத்துக்களை மக்களிடையே எடுத்துச் சொன்னார். அவரது கருத்துக்களை ஏற்ற பெரியவர்கள் எல்லாம் தங்கள் சொத்தையே ஆஸ்ரமத்துக்கு எழுதி வைத்தனர். அந்த மடம் வியாசராய மடம் என்று பெயர் பெற்றது.வியாசராயர் அந்தப் பணத்தைக் கொண்டு ஏராளமான ஆன்மிகப்பணிகளைச் செய்தார். நாடெங்கும் 700க்கும் மேற்பட்ட இடங்களில் ராமதூதனான ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்ய விக்ரகம் வடித்துக் கொடுத்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுள்ள வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்திக் கொடுத்தார். 12 நூல்களை அவர் எழுதினார். வியாசராயரின் அரும்பணிகளும் ஒருநாள் முடிவுக்கு வந்தன.துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள நவபிருந்தாவனத்தில் அவர் சமாதியடைந்தார். ஆக, பிரம்மாவின் ஆணைப்படி மூன்று பிறவிகளையும் நிறைவு செய்துவிட்டான் சங்குகர்ணன். இனி அவன் பிரம்மலோகம் சென்றுவிடலாம் என்று நினைத்திருந்தான்.சங்குகர்ணன் அளவுக்கதிகமான புண்ணியம் செய்திருந்ததால், அதன் பலன் இன்னும் 700 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்து அனுபவிக்கும் அளவுக்கு மிஞ்சியிருந்தது. அதையும் இந்த பூமியில் பிறந்து மக்களுக்கு அருள் வழங்கிக் கழிக்கலாம் என முடிவெடுத்தான் சங்குகர்ணன்.மாசில்லாத வானத்தில் வரும் வட்டநிலா போல பூமிக்கு வரத்  தயாரானது அந்தச் செல்வம்.1519ல் கர்நாடக மாநிலத்தில், வேதசாஸ்திரங்களை அறிந்த கிருஷ்ணபட்டர் குடும்பத்தினர் வசித்து வந்தனர். பட்டர் சிறந்த இசைமேதையும் கூட. விஜயநகரப் பேரரசை நிறுவிய கிருஷ்ணதேவராயரே இவரிடம் தான் வீணை கற்றுக்கொண்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அத்துடன் விஜயநகரப் பேரரசின் ஆஸ்தான கவியாகவும் விளங்கினார். கிருஷ்ணபட்டரின் மகன் கனகசாலபட்டரும், தந்தைக்கு சற்றும் குறையாத அறிஞராக விளங்கினார். கனகசால பட்டரின் வாரிசாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு திம்மண்ணா பட்டர் என்று பெயர் சூட்டினர். திம்மண்ணா துவைத சித்தாந்தத்தில் பெரும் மேதையாகத் திகழ்ந்தார். புலிக்கு பிறந்தது புலி என்பதை நிரூபிக்கும் வகையில், வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார். அது மட்டுமல்ல! வீணை இசை பெரிதா! இவர் குரலழகு பெரிதா என்று மற்றவர்கள் விவாதிக்கும் வகையில், பாடும் திறமையையும் பெற்றிருந்தார். ஆனால், என்ன துரதிர்ஷ்டமோ..தனது முன்னோரைப் போல திம்மண்ணா பட்டருக்கு அரசவைப்பதவி கிடைக்கவில்லை.

திம்மண்ணா பட்டருக்கு கோப்பம்மா என்ற பெண்மணியைத் திருமணம் செய்து வைத்தனர். இந்த சமயத்தில் விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்ட பகுதிகளில் மதக்கலவரம் ஏற்பட்டதால், அங்கு இந்துக்களால் வாழ முடியாத சூழல் ஏற்பட்டது. குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தது. சிறுமிகளுக்கும், வயதான பெண்களுக்கும் கூட பாதுகாப்பில்லாமல் போனது.எனவே, இந்துக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாயினர். திம்மண்ணா பட்டருக்கு குருராஜ் என்ற மகனும், வெங்கம்மா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். பெண்ணைப் பெற்றவர் என்பதாலும், மனைவிக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதாலும் திம்மண்ணா பட்டரும் தன்இருப்பிடத்தை மாற்ற முடிவெடுத்தார். தன் பாட்டனாரும், தந்தையும் சேர்த்து வைத்த நவரத்தினங்களையும், தங்கம், விலை உயர்ந்த ஆடைகளை எடுத்துக் கொண்டு, அவர்கள் இந்துக்களின் புனித பூமியாகத் திகழ்ந்த தஞ்சாவூர் வந்து சேர்ந்தனர்.தஞ்சாவூர் அருகே புவனகிரி என்ற கிராமம் இருந்தது. அங்கே திம்மண்ணா பட்டர் குடியேறினார். அங்கே பாதுகாப்பு கிடைத்ததே தவிர, அன்றாடச் செலவுக்கு திண்டாட வேண்டியிருந்தது. விஜயநகரத்தில் இருந்து கொண்டு வந்த பொருட்களை விற்று செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். செக்களவு பொன் இருந்தாலும் செதுக்கித் தின்றால் எத்தனை நாளைக்கு வரும் என்பது நம்மவர் சொல்லியிருக்கும் பொன்மொழி. திம்மண்ணா பட்டர் வீட்டில் இருந்த கஜானா காலியாகத் தொடங்கியது.

செவ்வாய், 23 அக்டோபர், 2018


திருநெல்வேலி குருக்குதுறையில் தாமிரபரணி புஷ்கர் வெகு விமரிசையாக நடந்தது முடிந்தது. குறுக்கு துறையில் பஷ்கர் நடக்குமா நடக்காதா என்ற நிலையில் இருந்தோம். ஆனால் பெரியவா பரிபூரண அனுகிரஹத்தாலும், முருகப்பெருமானின் அருளாலும் வெகு விமரிசையாக நடந்தது முடிந்ததுள்ளது. இந்த குருக்கு துறையில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் மேல் மக்கள் ஸ்நானம் செய்துள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அனைத்து ஆதீனகுருமார்கள், சாதுக்கள், அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள், பொது மக்கள் என அனைவரும் இந்த குருக்கு துறையில் தான் நீராடினார்கள். இந்த அளவுக்கு குருக்கு துறையில் வெற்றி கண்டதற்கு கண்ணுக்கு தெரியாதமல் பலர் உதவி செய்துள்ளார்கள். அதில் முக்கியமாக ஆதீன குருமார்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது மூன்று நாட்களாக புதியதாக பதவி ஏற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், தீயனைப்பு துறை, நகராட்சி துறை, மருத்துவ உதவி குழுக்கள், வயதானவர்களுக்கு பேட்டரியில் இயங்கும் கார்கள், இந்து அறநிலையத் துறை,  இடைவிடாமல் வழங்கப்பட்ட அன்னதானங்கள், சிதம்பரம் தீட்க்ஷதர்களின் யாகங்கள், வேத பண்டிதர்களாள் ஒதப்பட்ட வேத பாராயணம், ஒதுவார் முற்த்திகலாள் ஒதப்பட்ட தேவாரங்கள், நாதஸ்வர சக்ரவர்த்தி செந்தில் வேலன், கடலூர் கோபி பாகவதர் அவர்களின் பஜனை, குமாரி லாவண்யா பாலாஜி அவர்களின் இசை கச்சேரி, ஹுசைன் அவர்களின் சொற்பொழிவு, வடகுடி சுந்தர்ராம தீட்க்ஷதர் அவர்களின் உபன்யாசம், நாட்டிய குழுவினரின் சிவோகம் நாட்டிய நாடகம், தீட்க்ஷதர்களின் அனுதினமும் மாலையில் நடைபெறும் தாமிரபரணி ஆற்றிர்க்கு தீப ஆர்த்தி, தொண்டாற்றும் தன்னாவளர்கள், இவை அனைத்திற்கும் மூல காரணமாக செயல்பட்ட பழனிசெல்வம், பழனிசெல்வத்திற்கு துணையாக திரு நரேன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் தடுப்பு கம்பி அமைத்தல், வரும் வழியில் உள்ள பாலத்தை அகலப்புத்துதல், பெண்களுக்கு உடை மாற்ற தனியாக பெரிய அரை அமைத்தல் போன்றவற்றை செவ்வனே செய்து தந்தது இன்னும் எவ்வளவோ கண்களுக்கு தெரியாமல் பலரும் பல உதவிகளை செய்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் வேறு யாராவது முக்கிய அங்கத்தினர் விடுபட்டு இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும். குறுக்கு துறையில் பஷ்கர் நடக்ககூடாது என்று நினைத்தவர்களுக்கு அப்பன் முருகப்பெருமான் அவர்கள் மூக்கின் மீது விரல் வைத்தார் போல் புஷ்கர் இன்று மாலை முருகனுக்கு அபிஷேகத்துடன் கொடி இறக்கப்பட்டு தாமிரபரணி அன்னையை விசர்ஜனம் செய்து பன்னிரெண்டு நாள் விழா இன்றுடன் எந்த ஒரு தடையும் இல்லாமல் வெகு சிறப்பாக நிறைவடைந்தது எங்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வளவு சிறப்பாக இந்த தாமிரபரணி புஷ்கர் தடையில்லாமல் வெற்றிகரமான நடந்தது என்றால் அதற்கு Mahalakshmi Subramanian Valasai Jayaraman இந்த இருவரின் கடின உழைப்பே. மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் தம்பதிகள் தான் நம் அனைவருக்கும் இது போல் ஒரு புஷ்கர் இருப்பதை இந்த தமிழ் நாட்டிற்கு தெரியப்படுத்தினார்கள். கோடான கோடி பக்தர்கள் இந்த புன்னிய நதியில் நீராடி பாபங்களை போக்கி புன்னியத்தை அடைந்தார்கள் என்றால் அதற்கு இந்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் தம்பதியினரையே சேரும். ஐந்து நாட்கள் அடியேன் இங்கே இருந்தது பார்த்ததில் நீராட வந்த மக்களின் எண்ணிக்கை இங்கு தான் அதிகமாக இருந்தது. அடியேன் பார்த்த வரை நீராடிய அனைவருக்கும் காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என மூன்று வேலையும் தலைவாழை இலை போட்டு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்ட ஒரே இடம் குருக்கு துறை மட்டுமே. மேலும் அவசரமாக செல்பவர்களுக்கு தட்டில் வைத்தும் அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டது. மேலும் காவல் துறை, தீயணைப்பு துறை, மாநகராட்சி துப்புரவு பணியாளரகள் என சுமார் ஆயிரம் பேர் அனுதினமும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்வளவு சிறப்பாக நடைபெற்ற இந்த தாமிரபரணி புஷ்கர் தற்கால கமிட்டியை நிருவிய மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம், வளசை ஜெயராமன் அவர்கள் ஒவ்வொரு முறை பேசும் போதும் காஞ்சி பெரியவாளையும், தருமை ஆதீனம் இவர்களை பற்றி முதலில் பேசியது சிறப்பு. இந்த இரு மடாதிபதிகளின் பரிபூரண ஆசீர்வாதத்தால் தான் இந்த குருக்கு துறையில் வெகு விமரிசையாக நடந்தது முடிந்தது. அதே போல் தமிழக அமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி முக்கிய தலைவர்கள் இங்கு வந்து தான் முருகன் சன்னிதான படித்துறையில் தான் நீராடினார்கள். அடியேனுக்கு தெரிந்தது இந்த மஹா புஷ்கர் என்று ஒன்றை தமிழகத்திற்கு தெரியப்படுத்தியதே இந்த மஹா லக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்களே. அடியேன் ஏற்கனவே ஒரு பதிவில் இந்த அம்மையாருக்கு என்று ஒரு தனி விழா எடுக்க வேண்டும் என்று ஒரு பதிவு செய்திருந்தேன். அதற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்திருந்தீர்கள். அந்த விழாவானது அடியேனுக்கு தெரிந்தவரை இதுவே சரியான தருணம். இந்த நேரத்தில் இந்த அம்மையாருக்காக ஒரு விழா எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அடுத்தது இந்த அம்மையார் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் மாதம் செய்ய உள்ளார்கள். அதே போல் அடுத்தது குருபகவான் வரும் ஆண்டு விருச்சிகத்தில் பிரேவேசிக உள்ளார். விருச்சிக ராசி மஹா புஷ்கரம் சிந்து நதியில் நடத்த இந்த அம்மையார் இப்போதே திட்டம் தீட்டி உள்ளார்கள் என்பது மேலும் ஒரு மகிழ்ச்சியான
செய்தி. சென்ற ஆண்டு மாயவரத்தில் முதல் முறையாக இப்படி ஒரு புஷ்கர் இருப்பதை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதே இந்த தம்பதியினர் மட்டுமே. அதே போல் இந்த ஆண்டும் வெகு சிறப்பாக செயல்பட்டு இந்த புஷ்கர் இனிதே நிறைவுற்றுள்ளது. அவை அனைத்தும் பெரியவாளின் பரிபூரண அனுகிரஹம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
பெரியவா சரணம்.
ஹர ஹர சங்கர                   ஜய ஜய சங்கர

செவ்வாய், 16 அக்டோபர், 2018

சிவானந்தர் சீரிய வாழ்விலிருந்து ...

கொடுத்து மகிழ்பவர்

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் அவதரித்தவர் சிவானந்தர். பலரும் இவரைக் குருவாக ஏற்றனர். இவரைக் காணவரும் பக்தர்கள் கூடை கூடையாகப் பழங்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்துக் கொண்டே இருப்பர். அவரும் அவற்றை தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் வழங்கிக் கொண்டே இருப்பார். உலகின் பல பாகங்களில் இருந்தும் பணமும், அன்பளிப்புகளும் ஆஸ்ரமத்திற்கு வரும். அதன்மூலம் துறவிகளுக்கு வேண்டிய உணவு, மருத்துவ உதவி, சிறந்த நூல்கள் என்று வேண்டியவற்றைச் செய்து மகிழ்ச்சி காண்பார். தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்து மகிழவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் சிவானந்தரை, கவியோகி சுத்தானந்த பாரதியார், கிவ்ஆனந்தர் (கொடுத்து மகிழ்பவர்) என்று போற்றினார்.

பிறருக்குச் சொல்லிக் கொடுங்கள்

இடைவிடாத ஆன்மிகப்பயிற்சியாலும், தியானத்தாலும் சிவானந்தரிடம் எப்போதும் ஞானம் குடிகொண்டிருக்கும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எப்போதும் பரந்த மனப்பான்மையுடன் ஞானவிஷயங்களை வழங்கிக்கொண்டிருப்பார். இருபது முக்கிய ஆன்மிக போதனைகள், நாற்பது நல்லுரைகள், சாதன தத்துவம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். ஞான தானத்தை எப்போதும் எல்லோருக்கும் கொடுங்கள்! இவ்வாறு செய்தால், யார் யாருக்கு எதெது வேண்டுமோ அத்தனையையும் அவர்களுக்குக் கொடுத்தவர்கள் ஆவீர்கள், என்கிறார் சிவானந்தர்.

நாத்திகனுக்கே முக்கியத்துவம்

தரம் குறைந்த செய்திகளுடன் வரும் பத்திரிகைகளுக்கும் சிவானந்தர் கட்டுரை அனுப்புவது வழக்கம். இதனால் சிவானந்தரை பலரும் விமர்சித்தனர். சிலர் கண்டனமே தெரிவித்தனர். அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சிவானந்தர், ஒரே தராசில் ஆன்மிக விஷயத்தையும், காமச் சுவையையும் எடை போட்டுப் பார்க்கும் வாசகர்கள் விரைவிலேயே ஆன்மிகவாதிகளாக மாறிவிடுவார்கள். முதலில் நாத்திகர்களையும், நம்பிக்கையற்றவர்களையும் தான், நான் ஆன்மிகவாதியாக மாற்ற வேண்டும், என்று பதிலளித்தார். அவரது கட்டுரைகளைப் படித்து விட்டு, இந்தியா, இலங்கை, பர்மா, மலேசிய நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் அன்பர்கள் சிவானந்தரை நாடி வந்தனர்.

வாங்க குழந்தையே!

யாரும் எளிதில் அணுகும் விதத்தில் சிவானந்தர் மிக எளிமையான மகானாக வாழ்ந்தார். தரிசனநேரம் என்று தனியாக நேரம் எதையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. தம்மிடம் வரும் பக்தர்களிடம் அவரவருடைய தாய்மொழியிலேயே பேசுவார். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலாய், ஜெர்மன், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் வரவேற்று உபசரிப்பார். சிறுகுழந்தைகளையும் நீங்கள் என்று மதிப்புடன் உபசரிப்பார். ஒருமையில் அழைப்பதை அவர் விரும்புவதில்லை. மனிதர் மட்டுமில்லாமல் பறவை, விலங்குகளிடம் கூட அன்புடன் கவனிப்பார். பசித்த உயிர்களுக்கு உணவிடுவதை ஒரு தாய்போல செய்வதில் அவருக்கு இணை அவரே. தன்னை பெரிய மகானாக எண்ணிக்கொள்ளாமல் சாதாரண மனிதராகவே பழகுவார்..

கொலைகாரனிடமும் இறைவன்

1950, ஜனவரி 8 மாலையில், சிவானந்தரின் ஆஸ்ரமத்தில் சத்சங்க கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மின்விளக்கு அதிகம் இல்லாத காலம் அது. அரிக்கேன் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் வெளிச்சம் மங்கலாக இருந்தது. அப்போது கோவிந்தன் என்னும் முரடன் சிவானந்தரைக் கொல்லும் நோக்கத்தில் கோடரியால் தாக்கினான். ஆனால், சிவானந்தர், தலைப்பாகை அணிந்திருந்ததால் அடி விழவில்லை. போலீசார் உடனே வந்து அவனைப் பிடித்தும் கூட அவனை தண்டிக்க சிவானந்தருக்கு மனமில்லை. பழங்கள், விபூதிபிரசாதம் கொடுத்து அவனை வழியனுப்பினார். திருடர், கொலைகாரர்களிடமும் இறைவன் இருக்கிறார் என்று எல்லாருக்கும் உபதேசம் செய்தார்.

மவுனமான நேரம் மனதில் ஏது பாரம்

*  எளிமையான அதே சமயத்தில் சத்துள்ள ஆகாரங்களை உண்ணுங்கள். உண்ணும் முன் கடவுளுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள். சரிவிகித உணவை உட்கொள்வதும் அவசியம்.
*  மிளகாய், பூண்டு, புளி போன்ற உணவுவகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். காபி, டீ, மாமிசம், மது போன்ற உணவுவகைகளை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.
*  தினமும் பத்து பதினைந்து நிமிடங்களாவது யோகசனப் பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள். நீண்ட தூர நடைபயிற்சியை அன்றாடம் மேற்கொள்ளுங்கள். முடிந்தால், சுறுசுறுப்பை உண்டாக்கும் விளையாட்டில் ஈடுபடுங்கள்.
*  தினமும் இரண்டு மணி நேரமாவது மவுனத்தை கடைபிடியுங்கள். விடுமுறை நாட்களில் நான்கு மணி முதல் எட்டுமணி நேரம்வரை மவுனம் நல்லது. இது மனதுக்கு நல்லது. கண், வாய், செவி, மூக்கு, நாக்கு ஆகியவற்றை முடிந்தளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
*  உண்மையே பேசுங்கள்.இரக்கமும், கனிவும் கொண்டிருங்கள். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். ஒளிவுமறைவின்றி திறந்த மனத்துடன் எல்லோரிடமும் பழகுங்கள்.
*  நெஞ்சில் நேர்மையைப் பின்பற்றி வாழுங்கள். நன்மைக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். உழைத்துப் பணம் சேருங்கள். நியாயமான வழியில் வராத எப்பொருளையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். பெருந்தன்மை உணர்வுடன் செயல்படுங்கள்.
*  கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். சகிப்புத்தன்மையுடன் பிறர் குற்றங்களை மன்னிக்கவும் மறக்கவும் செய்யுங்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்களுடனும், சூழ்நிலைகளுடனும் ஒத்துப்போக கற்றுக் கொள்ளுங்கள்.
* தீயவர்களின் தொடர்பை விட்டு விலகுங்கள். உங்கள் சாதனைகளையும், ஆன்மிக எண்ணங்களையும் குறை கூறுபவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்களிடம் இருந்து விலகி விடுங்கள்.
*  உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடைமைகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். எளிய வாழ்க்கையையும், உயர்ந்த சிந்தனையையும் பெற்று வாழுங்கள்.
*  பிறருக்கு நன்மை செய்து வாழ்வது தான் உயர்ந்த வாழ்வு. தன்னலமில்லாமல் பிறருக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் செய்யும் பணியையோ, தொழிலையேயோ கடவுளுக்குச் செய்யும் வழிபாடாகச் செய்யுங்கள். அதை அவருக்கே அர்ப்பணித்து விடுங்கள்.
*  உங்கள் வருமானத்தில் இரண்டு முதல் பத்து சதவீதத்தை தானம் செய்யுங்கள். உலகமே உங்கள் குடும்பம் என்ற பரந்த நோக்குடன் வாழுங்கள்.
*  பணிவுடன் எல்லா உயிர்களையும் மானசீகமாக வணங்குங்கள். ஆடம்பரம், போலி கவுரவம், டம்பம், கர்வம் போன்றவற்றை அறவே கைவிடுங்கள்.
*  கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்து விடுங்கள். எல்லா நிலைமையிலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
*  கண்ணில் காணும் அனைத்திலும் கடவுளையே காணுங்கள். காலை எழும்போதில் இருந்தே கடவுள் சிந்தனையோடு அன்றாடப் பணிகளைத் தொடங்குங்கள்.
* அன்றாடம் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு தெய்வப் பாடல்கள் பாடுங்கள். எளிய மந்திரங்களைச் சொல்லுங்கள். வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் சென்று மனதார வழிபாடு செய்யுங்கள்.
-இதயத்தை இதமாக்குகிறார் சிவானந்தர்
எந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்?

கொலு வைக்கும் போது 5,7,9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர்.ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும்.கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

முதல் படியில் செடி,கொடி,காய்,கனி பொம்மைகளை வைக்க வேண்டும்.மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம்.நத்தை பொம்மை வைப்பது நலம். எதையும் நிதானமாகச் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள்,கரையான் புற்று,சிலந்தி வலை,களிமண்ணில் செய்த எறும்பு,வண்ணத்துப்பூச்சி (காதிகிராப்ட் கடைகளில் மரத்தால் செய்தது கிடைக்கிறது) பொம்மைகளை வைக்க வேண்டும்.எறும்பு போல் சுறுசுறுப்பு,கரையான் புற்றையும் சிலந்தி வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.

நான்காம் படியில் நண்டு,வண்டு,தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும்.ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.

ஐந்தாம் படியில் மிருகங்கள்,பறவை பொம்மைகள் வைக்க வேண்டும்.மிருக குணத்தை விட்டு பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.

ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும்.முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.

ஏழாம் படியில் மகான்கள்,முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.விவேகானந்தர், ராமகிருஷ்ணர் ராகவேந்திரர் பொம்மை கடைகளில் கிடைக்கிறது.வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்து பொம்மை செய்யலாம்.கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.

எட்டாம் படியில் நாயன்மார்கள்(அப்பர், சம்பந்தர், சுந்தரர்),ஆழ்வார்கள்(ஆண்டாள்,பெரியாழ்வார்) சூரியன்,நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.மகானாக உயர்ந்தவர் தவம்,யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.

ஒன்பதாம் படியில் பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி,லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து,நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும்.தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

குல தெய்வம் என்பது என்ன பிரிவு?

பிரும்மன் படைத்த உயிரினங்களைக் காக்க விஷ்ணுவும், சிவபெருமானும் பலவேறு அவதாரங்களையும், ரூபங்களையும் படைத்தார்கள் என்று கூறினேன் அல்லவா. அந்த உயிரினங்களைப் படைத்தப் பின் அவற்றை கோடிக்கணக்கான பல்வேறு பிரிவுகளாக பிரித்து உலகின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு குணங்களுடன் படைப்புக் கொடுத்தார். அந்த பல்வேறு குனங்களுடம், பலவேறு இடங்களிலும் பரவிக் கிடந்த படைப்புக்களை பாதுகாக்க, வழிப்படுத்த வேண்டும் என்பதை முன்னரே பரமாத்மன் முடிவு செய்து இருந்ததினால்தான் விஷ்ணு மற்றும் சிவபெருமானின் மூல அவதாரங்கள் மூலம் கோடிக்கணக்கான துணை அவதாரங்களை படைக்க வழி செய்யப்பட்டு இருந்தது. அவர்களால் அப்படியாக படைக்கப்படும் ஒவ்வொரு அவதாரத்துக்கும் சில பொறுப்புக்களும் அதிகாரங்களும் தரப்பட்டது. அவர்கள் பிரும்மாவினால் படைக்கப்பட்டு கோடிக்கணக்கான பிரிவுகளில் இருந்த ஒவ்வொரு பிரிவையும் பாதுகாத்து வழிகாட்டும் பொறுப்புக்களைப் பெற்றது.

பிரும்மாவினால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனும் 13 ஜென்ம காலங்களைக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது. படைப்பின் தத்துவப்படி ஒரு ஆத்மாவின் 13 ஜென்ம காலம் எனப்படுவது சுமார் 781 ஆண்டுகளைக் கொண்டதாம். ஒவ்வொரு ஆத்மாவும் படைக்கப்பட்டவுடன் அதை நல்வழிப்படுத்தி பாதுகாக்க எந்தெந்த தேவதை அல்லது தெய்வங்களுக்கு அதிகாரம் தரப்பட்டு இருந்ததோ அந்த தெய்வங்களும், தேவதைகளும் அந்த ஆத்மாக்களை தம்முடன் இணைத்துக் கொண்டு விடுவதினால் அந்த அந்த தெய்வத்தையே காக்கும் கடவுளாக அந்த ஆத்மாவும் ஏற்றுக் கொண்டு விடுகிறது. அதுவே அந்த ஜீவனின் குல தெய்வமாகி விடுகிறது. அந்த ஜீவனை சார்ந்த அனைத்து ஜீவனுக்கும் வம்சாவளியாக அதே தெய்வமும், தேவதையும் குல தெய்வமாகி விடுகிறது. இப்படியாக அமைந்ததே குல தெய்வம் என்பது. அவரவர் தமது குல தெய்வத்தை வணங்க வேண்டும் என்று இதனால்தான் கூறப்படுகிறது.

ஒரு ஆத்மாவானது ஜனனம் எடுத்தப் பின் அவர்கள் தங்கி உள்ள இடங்களில் ஏதாவது ஒரு காரணத்தினால் உந்தப்பட்டு தமக்கு பாதுகாப்பைத் தர அவர்கள் மனதில் தோன்றும் தெய்வம், தேவதை அல்லது ஏதாவது ஒரு உருவத்தை மானசீகமாக வணங்கத் துவங்குவார்கள். இந்த செயலும் தெய்வ நிர்ணயித்தின்படியே நடைபெறத் துவங்குகிறது. அதுவே அவர்களது குல தெய்வமாகி விடும். இப்படியாக துவங்கும் அந்த குல தெய்வ வழிபாடு என்பது அவர்கள் குடும்பத்தில் துவங்கி அவர்கள் மூலம் அவர்களது வம்சத்தில் தொடரும்.

ஒரு வம்சம் என்பது எத்தனை ஆண்டுகள் அல்லது எத்தனை குடும்பத்தினர்வரை பொருந்தும்? ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே ஒரு வம்ச கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் கூட 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். நம்மில் யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சந்ததியினர் யார் என்பது தெரியுமா? யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது. மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.

எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இப்படியாக மூன்று தெய்வங்களும் தமது சார்ப்பிலே லட்சக்கணக்கான அணுக்களைப் படைத்து தமது அவதார தூதர்களாக, தெய்வங்களாக, தேவதைகளாக கிங்கணர்களாக உலகெங்கும் அனுப்பி வைத்து உள்ளார்கள். அவை அனைத்தும் பல்வேறு ரூபங்களில் அங்காங்கே குடி கொண்டுள்ளன. அப்பொழுது அங்கு குடி கொள்ளும் தெய்வங்களையும், தேவதைகளையும் அந்தந்த இடங்களில் உள்ளவர்கள் ஆராதிக்கத் துவங்குவார்கள். அப்படி தம்மை ஆராதிக்கத் துவங்கும் வம்சத்தை அந்தந்த தேவதைகளும் தெய்வங்களும் தமது பாதுகாப்பில் தத்து எடுத்துக் கொள்ளும்.

ஒருமுறை ஒரு தேவதையோ அல்லது தெய்வமோ ஒரு வம்சத்தினரை தத்து எடுத்துக் கொண்டு விட்டால் அதன்பின் அந்த வம்சத்தின் ஏழேழு தலை முறைக்கும் அவர்களே பாதுகாப்பாக இருந்தவாறு அந்த வம்சத்தினரின் குல தெய்வமாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள். அந்த வம்சத்தினரின் வீடுகளில் நடைபெறும் நல்லவை மற்றும் கெட்டவை என்ற அனைத்து அம்சங்களிலும் சடங்குகளுக்கும் அந்தந்த தேவதைகளும் தெய்வங்களும் மட்டுமே பொறுப்பு ஏற்பார்கள். அந்த வம்சத்தை மற்ற தேவதையோ அல்லது தெய்வமோ ஏழேழு தலை முறை முடியும் வரை பாதுகாக்க முன்வராது. இதுவே அவற்றை படைத்த மூல தெய்வங்களின் சட்டமாகும்.

இப்படியாக நிர்ணயிக்கப்பட்ட தெய்வீக சட்டத்தை மீறி ஏழேழு தலை முறை முடியும்வரை ஏற்கனவே ஒரு தேவதை அல்லது தெய்வம் தத்து எடுத்துக் கொண்ட வம்சத்துக்கு வேறு தேவதை அல்லது தெய்வம் அடைக்கலம் கொடுக்க முன்வந்தால் அப்படி தடம் பிழன்று வேறு தெய்வ ஆராதனை செய்யும் வம்சத்தினரின் பிராத்தனைகளை அவற்றைப் படைத்த மூல தெய்வம் ஏற்காது. மாறாக அப்படிப்பட்ட வம்சத்தினர் ஏராளமான பிரச்சனைகளை தத்தம் வாழ்க்கையில் சந்தித்தபடி இருப்பார்கள். ஆகவே குல தெய்வம் என்பது தெய்வத்தின் ஒரு பிரிவே என்றாலும் ஒரு குறிப்பிட்ட வம்சத்தினர் வணங்கித் துதிப்பதற்காக, அவர்களது வம்சங்களைப் பாதுகாக்கவே படைக்கப்பட்டவை.

குல தெய்வங்களுக்கு சில குறிப்பிட்ட காரியங்கள் தரப்பட்டு உள்ளன. அவற்றை செய்தப் பின் அவர்கள் தாம் செய்ததையும், அவற்றுக்கான காரணங்களையும், முறையான வழிப்பாதை மூலம் அவரவர்களைப் படைத்தவர்கள் மூலம் பரப்பிரும்மனிடம் அனுப்பும். அங்குதான் ஒரு கம்பியூட்டர் போல அனைவரது கணக்குகளும் வைக்கப்பட்டு அடுத்தப் பிறவி நிர்ணயிக்கப்படுகின்றது. ஆகவே குலதெய்வ வழிபாடு என்பதும் இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே என்பதினால்தான் குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்பட்டு ஆறு ஜென்மங்களுக்கு தண்டனைக் கிடைக்கின்றது. மனிதர்கள் பெற்றுள்ள ஆறு அறிவும் இந்த ஆறு நிலைக் கடவுள் தத்துவத்தினாலேயே அமைந்து உள்ளது.

வெள்ளி, 12 அக்டோபர், 2018

பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய பொருள்களின் சமஸ்க்ருத பெயர்கள் :

1) வெற்றிலைப் பாக்கு - தாம்பூலம்

2) முழுத்தேங்காய் - நாரிகேலம்

3) பல தேங்காய் மூடிகள் - நாரிகேல கண்டாணீ

4) வாழைப்பழம் - கதலி பலம்

5) மாம்பழம் - ஆம்ர பலம்

6) விளாம்பழம் - கபித்த பலம்

7)நாகப்பழம் ( நாவல்பழம்  ) - ஜம்பு பலம்

8)பலாப்பழம் - பனஸ பலம்

9) சாத்துக்குடி - நாரங்க பலம்

10) ஆப்பிள் பழம் - காஷ்மீர பலம்

11) பேரிக்காய் - பேரீ பலம்

12) கொய்யாப் பழம் - பீஜா பலம்

13) திராட்சை பழம் - திராட்ஷா பலம்

14) பேரீச்சம் பழம் - கர்ஜீர பலம்

15) பிரப்பம் பழம் - வேத்ர பலம்

16) கரும்பு - இக்ஷூ தண்டம்

17) மாதுளம்பழம் - தாடிமீ பலம்

18) எலுமிச்சம்பழம் - ஜம்பீர பலம்

19) வடை - மாஷாபூபம்

20) மஞ்சள் பொங்கல் - ஹரித்ரான்னம்

21) எள்ளுச்சாதம் - திலோன்னம்

22) சர்க்கரைப் பொங்கல் - குடான்னம்

23) அக்காரவடிசல் - சர்க்கரான்னம்

24) வெண்பொங்கல் - முத்கான்னம்

25) புளியோதரை - திந்திரிணியன்னம்

26) வெள்ளைசாதம் - சுத்தான்னம்

27) எலுமிச்சைசாதம் - ஜம்பீரபலன்னம்

28) தேங்காய் சாதம் - நாரிகேலன்னம்

29) தயிர்சாதம் - தத்யோன்னம்

30) பலவித சாதங்கள் - சித்ரான்னம்

31) சுண்டல் - க்ஷணகம்

32) பால் பாயாசம் - க்ஷீர பாயஸம்

33) வெல்ல பாயாசம் - குட பாயஸம்

34) புட்டு - குடமிச்சபிஷ்டம்

35) முறுக்கு - சஷ்குலி

36) இட்லி - லட்டுகானி

37) கொழுக்கட்டை - மோதகானி

38) அப்பம் - குடாபூபம்

39) மாவிளக்கு - குடமிஸ்ஸபிஷ்டம்

40) அதிரசம் - குடாபூபம்

41) உளுந்து - மாஷம்

42) பயறு - முத்கம்

43) எள் - திலம்

44) கடலை - க்ஷணகம்

45) கோதுமை - கோதுமா

46) அரிசி - தண்டுலம்

47) அவல் - ப்ருதுகம்

48) நெய் - ஆஜ்யம்

49) பருப்பு பாயாசம் - குடபாயஸம்

50) பால் - க்ஷீரம்

51) சுக்கு வெல்லம் கலந்த நீர் - பானகம்

52) வெண்ணெய் - நவநீதம்

53) கல்கண்டு - ரஸ கண்டாளீ

56) மல்லிகைப்பூ - மல்லிகாபுஷ்பம்

57) செவ்வந்திப்பூ - ஜவந்திபுஷ்பம்

58) தாமரைப்பூ - பத்மபுஷ்பம்

59) அருகம்புல் - தூர்வாயுக்மம்

60) வன்னிஇலை - வன்னிபத்ரம்

61) வில்வ இலை - பில்வபத்ரம்

62) துளசி இலை - துளஸிபத்ரம்

63) ஊதுபத்தி / சாம்பிராணி - தூபம்

64) விளக்கு - தீபம்

65) சூடம் - கற்பூரம்

66) மனைப்பலகை - ஆசனம்

67) ரவிக்கைத்துணி - வஸ்த்ரம்

68) மஞ்சள்/குங்குமம் கலந்த அரிசி - மங்களாட்சதை

69) ஜலம் நிரப்பிய சொம்பு - கலசம்

70) திருமாங்கல்ய சரடு - மங்கலசூத்ரம்

71) மற்ற பட்சணங்கள் - விசேஷபக்ஷணம்

72) பூநூல் - யக்ஞோபவீதம்

73) சந்தணம் - களபம்

74) விபூதி - பஸ்பம்

75) வாசனை திரவியங்கள் - ஸுகந்தத்ரவ்யா

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

ஶ்ரீ காயத்ரி மஹா மந்த்ரத்தை இப்படியெல்லாம் நாம் பயன்படுத்த கூடாது. கீழே தரப்பட்டுள்ளதை பார்க்கவும்.

1) ரிங்டோனில் போடக்கூடாது

2) சலூன் கடையோ, டீக்கடையோ, மற்ற கடைகளோ, ஆபீஸிலோ, எந்த அலுவலகத்திலோ பயன் படுத்தக்கூடாது.

3) காலர் டியூனில் கூடாது.

4) ரிவர்ஸ் ஹார்னில் கூடாது.

5) சினிமா, மற்றும் எந்த நிகழ்ச்சியிலும் உபயோகப் படுத்தக்கூடாது.

6) ஆன்மீக இடங்கள் மற்றும் கோவில்களிலும் (பிரைவேட்) வெளிப்படையாக  chanting அனுமதிக்ககூடாது.

7) பெண்கள் ஜபிக்கவே கூடாது.

8) யாருமேகூட வாயால் சொல்லக்கூடாது.

9) உதடே அசையாமல் 'ஜபிக்க வேண்டும்'.

10) பொழுது போக்கு சமாச்சாரம் அல்ல. இப்போது உள்ள இந்த அனர்த்ததுக்கு எல்லாம் காரணம்

நாம் செய்யவேண்டியதை செய்யாததும், செய்யக்கூடாததை செய்வதால் வரும் விபரீதம் மட்டுமே.

வெறும் பூணல் உள்ளவர்கள் பிராமணர்கள் அல்ல.

அன்றாட அநுஷ்டானத்தை தகுந்த முறையில் நடைமுறைப் படுத்துவதிலேயே பிராமணத்தும் பூரணமாக உள்ளது.

அன்றாட அநுஷ்டானம் கடினமானது அல்ல

நேற்று வந்த கம்யூட்டர், போன் கற்றுக்கொள்ள முடியும்.

அநுஷ்டானம் கற்றுக்கொள்ள முடியாதா.

முடியாவிட்டாலும் பரவாயில்லை

மற்றவர்களை திசை திருப்பி  அவர்களை கெடுக்க எந்த முயற்சியும் யாருமே செய்யக்கூடாது.

நம்மை நாம் மதிப்போம்.

நமது சம்ரதாயத்தை மதிப்போம்.

நமது ஆசாரியனை மதிப்போம்.

நமது அன்றாட அநுஷ்டானத்தை மதிப்போம்.

பஞ்ச கச்சம் தெரியாது.

பஞ்சாக்ஷரம் தெரியாது.

பசு பந்தம் தெரியாது.

பாரதத்தின் பெருமை தெரியாது.

பல கோத்ரங்களின் தாத்பர்யம் தெரியாது.

பரந்தாமனையும், பரமசிவனை மட்டும் எப்படி தெரிந்து கொள்வது அவர்களாளும் தான் எப்படி அநுஹ்ரகம் பண்ணமுடியும், நாம் அதற்காக தயாராகவில்லை என்றால்.

யோசித்து நம் வழியில் அமைதியாக பயணிப்போம்

ஸந்த்தோஷம்

தாஸன் 🙏🙏🙏🙏   இது முகநூலில் வந்த பதிவு .

சனி, 29 செப்டம்பர், 2018

சிவன் அருள்பாலிக்கும் தலங்களும் அவற்றின் சிறப்பும்!

பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவபெருமானை வழிபட்டதால் சிவலிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

*நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்

*ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்த போது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

*தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன், இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

*கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் வெண்ணெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் தாய் & தந்தையருக்கு இறைவன் அசரீரியாக தன்னை வந்து தரிசனம் செய்த பின்னர் தங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று சொன்ன ஸ்தலம்.

*அமர்நாத்தில் உள்ள பனி லிங்கம் சந்திரனை போலவே 15 நாளில் வளர்ந்து பவுர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

*கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

*அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திரு விஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள் பாலிக்கிறார்.

*செம்பனார் கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

*காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்

*பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்டுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில் மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

*திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமவுலீஸ்வரர். அவர் மும்முக லிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும் தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

*ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள அனுமன் காட்டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப் பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

*பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

*தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்.

*ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1 காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வரர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

*தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நல்லூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாப்பழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

*காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குத் தெற்கே சிறிது தூரத்தில் ஜ்வரஹரேஸ்வரர் என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

*மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில் மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

விஷ்ணு சிறப்புச் செய்திகள்

*திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழுமலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரிபாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.

*திருமலையில் உள்ள பெருமாளுக்கு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

*நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் போகிற வழியில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அல்லாவுக்கு பூஜை நடக்கிறது.

*திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

*உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.

*ஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு சக்ரத்துடன் காட்சியளிக்கிறார்.

*திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது

*சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண சிங்கப்பெருமாள் கோயில் செல்ல வேண்டும் இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.

*திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.

*ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைந்த சிவன்-திருமால் கோயில் இது மட்டுதான்.

*திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவருக்கு வேதநாராயணன் என்று பெயர்.

*காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர். அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தரும் இவரது தரிசனம் 2019-ம் ஆண்டு கிடைக்கும்.

*திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.

*கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழு தலைகள் இருப்பது வித்தியாசமானது.

*திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன் கோயில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோயில்களிலும் தாயாருக்கு சன்னதி இல்லை.

*பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீ வைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

*காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிப்படுகிறார்கள்.

*கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.

*மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக்கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு சக்கரம் இல்லை.

*காஞ்சி உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.


நாட்டு கவுண்டர், வெள்ளாள கவுண்டர் வேறு வேறா? தெளிவாக பலர் விளக்கியும் மீண்டும் மீண்டும் இது தீர்ந்தபாடில்லை.
 

இதன் நிலைபாடு : சேர நாட்டில் காடுகளை அழித்து நகர்/காணிகளை அமைத்த வெள்ளாளர் காமிண்டன் பட்டம் கட்டிகொண்டு குடிசாதிகளை காத்தனர். பட்டம் என்பது ஒருவருக்குரியது. நாளடைவில் பட்டம் கட்டிகொண்டவரின் பங்காளிகள் பெண் கட்டி பெண் எடுத்த மாமன் மைத்துனர்கள் காமிண்டன் பட்டம் சூட்டி கொண்டனர். ஊரை உருவாக்கிய போது அதனை நிர்வகிக்கும் பொருட்டு ஊர் கவுண்டர் என்று ஒருவரை நியமித்தனர். இதேபோல பண்ணாடி, கொத்துக்காரர் எல்லோரும். நான்கைந்து கிராமம்/ஊரை சேர்த்து ஒரு காணியை நிர்வகிக்கும் பொருட்டு ஒரு காணியாள கவுண்டரை நியமித்தனர். இந்த காணியாள கவுண்டர் வெள்ளாளன் தான். இரண்டு மூன்று காணிகள் சேர்ந்து வளநாடு என்று அறியப்படும். ( அண்ணமாரின் பொன்னிவளநாடு போல ). இதனை நிர்வகிக்க நியமிக்கபடும் வெள்ளாளன் பட்டக்காரன்/நாட்டார்.

இந்த வளநாடுகள் இரண்டு / மூன்று/நான்கு சேர்ந்து ஒரு பெரிய வளநாடாக நிர்வகிக்க பட்டது. ( காங்கேய நாடு 5 வளநாடுகளை கொண்டது.
1. காடையூர் முழுக்காதன்,2.காங்கேயம் செங்கன்னன்,
3.ஆனூர்(பழையகோட்டை) பயிரன் / வள்ளியரச்சல் பில்லன்,
4.பாப்பினி தோடை,
5. வீரசோழபுரம் கன்னந்தை நிர்வாகம்).
இது பெரிய நாட்டார்/ பெரிய பட்டக்காரர் நிர்வாகம்(காங்கேய நாட்டுக்கு மேல உள்ள ஐந்தில் முழுக்காதன்/செங்கன்னன்/பயிரன் மாறி மாறி பெரியபட்டம் கட்டினர்). இதுவும் வெள்ளாளன் தான். கொங்க தேசத்தின் 24 நாடுகள் இதன் படி தான். இந்த 24 நாட்டை நிர்வகிப்பது மூவேந்தரில் ஒருவர். நிர்வாகம் சார்ந்தவரை மட்டும் தான் நாட்டார்/நாட்டான்/நாட்டாமை காரன் (நாட்டு ஆளுமை காரன்)  என்று குறிப்பிடுவர்.

அன்றைய நாளில் வெள்ளாளர் பட்டம் கட்டிகொண்டது முதலில் 

1.கீகரை பூந்துறை ( நாமக்கல் ,ஈரோடு காவேரிக்கு கிழக்கு) ,
2.மேகரை பூந்துறை ( அவல் பூந்துறை , நசியனூர் சுற்றிய பகுதி),
3.காங்கேய ( காங்கேயம் ,வெள்ளகோவில்,முத்தூர், காடையூர் , நத்தகாடையூர் இப்படி 14 காணி).

4. தென்கரை ( தாராபுரம் வடக்கு,மூலனூர், புதுப்பை, ஊதியூர் ......) 
 

இங்கு பட்டம் வெள்ளாளருக்கு முதலில் கட்டினர். பின் வேடுவரிடம் இருந்து வாங்குதல் , மன்னனிடம் பெறுவது என்று மீதமும் பட்டம் கட்டி பட்டக்காரனாக / நாட்டாராக வெள்ளாளர் கொங்க நாடு முழுக்க மாறினர். முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த பட்டக்காரர்/நாட்டார் அந்தஸ்த்து காலத்துக்கு காலம் மாறிவிடும். ஆட்சி மாற்றம் அடிக்கடி நிகழும்.

நாட்டான் என்பது அண்ணன்,  காணியாளன் என்பது தம்பி. இது தான் வித்தியாசம். பொங்கலூர் நாட்டின் நாட்டாரில் வருவது கொடுவாய் ஓதாலன். அதில் ஒருவருடைய மகன் 2பேர் தம்பி 3பேர் பங்கிட்டு கொண்டது தான் குண்டடம், நிழலி, கண்டியன்கோவில்......., இவர்கள் 5 பேரும் காணியாள கவுண்டர்கள். நாட்டாரின் மகன் காணியாளனாக உள்ளான். இப்படி நமக்குள் ஒருவருக்கு பயன்படுத்திய வார்த்தை நாளடைவில் அந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தினர். உதாரணமாக இன்றும் சில கூட்டங்கள் தங்களை பட்டக்காரர் பங்காளிகள் என்று சொல்வதை காணலாம்.

சில தரவுகள்,

1. கன்னிவாடி கன்னகுல ஆதினத்தின் தலைவரான முத்துச்சாமி கவுண்டர், மோரூர் நாட்டுகவுண்டரான சூரிய காங்கையனின் மகன். இந்த வழி தோன்றல் கன்னிவாடியன் கூட்டம். [கன்னகுல பட்டயம்].

2. சென்னிமலையில் ஈஞ்கூர் ஈஞ்ச குலத்தவரின் கட்டளை மடத்தின் பெயர் ஈஞ்சகுல நாட்டுகவுண்டர் மடம்.

3.இறையமங்களம் கன்னகுலத்தவர் கோவிலில் பொறிக்கபட்டுள்ளது , #கொங்கு_நாட்டு_வெள்ளாளர் சங்கம்.  நாட்டு கவுண்டர் கோவில்.

4. பரஞ்சேர்வழி விழியகுலத்தவர் கீகரை பூந்துறை நாட்டில் அதிகாரம் நாட்டு கவுண்டர் ஆயினர்.

5. பின்பு பருத்திபள்ளி செல்லகுலத்தில் பெண்ணெடுத்து மல்லசமுத்திரம் வளநாட்டை சீராக பெற்று நாட்டு கவுண்டராக விழியகுலத்தவர் மாறினர்.

6.கன்னகுலத்தவர் பாண்டியரால் மோரூர் நாட்டுகவுண்டராய் நியமனம் செய்யபட்டனர். அதற்கு முன்பு மோரூர் நாட்டார் ஆந்தை குலத்தவர். நாட்டார் காலத்துக்கு காலம் மாறும் பதவி.

இப்படி பல உண்டு.,

கீழே தீரன் சின்னமலை கவுண்டர் கிரயம் செய்த பட்டயம் பிரதி உள்ளது. இதில் குறிப்பிடபடும் நாட்டுகவுண்டடரெல்லாம் வெள்ளாளன் அல்லாது யார்?

தென்னிந்திய வர்ணாசிரம கோட்பாட்டின் படி நாட்டார் என்றாலே வெள்ளாளர் (சத்திரியர்) என்று பொருள். நிறைய இடத்தில் பிராமணர் நாட்டார் நகரத்தார்.... என்று வரும்.

   கீகரை ஏழுகரை நாடுகளை (வளநாடு) நிர்வகித்த 8 குலத்தவர் நாட்டு என்று சேர்த்து கொண்டனர். நாட்டு வெள்ளாளர், நாட்டு கவுண்டர் என்று முற்சேர்க்கை. நமது பக்கமும் இது உள்ளது. ஊர் பெரிய வீட்டுகாரரை நாட்டு / நாட்டுதுரை என்று அழைப்பர். வெள்ளைக்காரன் சாதிவாரி கணக்கெடுப்பு செய்து, கீகரையில் நாட்டர் குலமாக இருந்த 8 குலத்தை நாட்டுகவுண்டரென குறிப்பிட்டான்.  நாம் நம்மோடு இருந்த நாட்டார் குலங்களை மறந்து போனோம்.

நமக்குள் சண்டை மூட்டுவதே சிலருக்கு எண்ணம். தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்கலாம். நாமளே முடிவு செய்வது தவறாக கூட இருக்கலாம்.

திருமணம் முடிந்த பின் நாட்டுகல் வழிபடுபது நம் சடங்கு. இது 24 நாட்டுகவுண்டர்களாக பாவிக்கபடும் கல். மங்கல வாழ்த்து நாட்டார் சபை புகுதலை சொல்லும். இந்த நாட்டார் சபை 79 வெள்ளாள கவுண்டரை உடையது. ( கல்லிடைபாடி கல்வெட்டில் எழுவத்தொன்பது வளநாட்டு சபையை சேர்ந்த கன்னந்தை என்று குறிப்பு உள்ளது. கன்னந்தை குலம் நாட்டு கவுண்டரில் ஏது? நாட்டார் சபையில் எப்படி?)

ஊருக்கு ஊர் சம்பிரதாய வழக்கு வேறுபடும். இதே காங்கேயத்தில் நாங்கள் செய்யும் சீர் , தாராபுரத்தில் வேறு படுகிறது. பொள்ளாச்சி, உடுமலை பக்கம் நிறைய வித்தியாசம். வேறு வேறு சாதியென பிரித்து கொள்ள வேண்டுமா?

ஆறு தாண்டி பெண் கொடுக்கும் வழக்கம் நம்மிடம் முன்பு கிடையாது. காவேரி மட்டுமல்ல, அமாராவதி,நொய்யல் கூட அடங்கும்.

கீழே உள்ள படத்தில் குறிப்பிட்ட படி நான் நாட்டு கவுண்டர் வகையறா. ஆனால் நான் வெள்ளாளன். 🙂. எப்படி?? வேறு சாதி என்றால் நானும் வேற சாதி தான். எங்களோடு மணவினையும், அன்னம் தண்ணீர் பொழங்காட்டியும் பரவாயில்லை.



இந்து  சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்குச்
                            சிலக் கேள்விகள்

1927ம் வருடம் தொடங்கி கோயில், இந்து சமய அறக்  கட்டளைகள் தமிழக அரசுக் கட்டுப்பாட்டில் வரத் தொடங்கின. 1947ம் வருடம் சுமார் 100 கோயில்களைத் தன் பிடியில் வைத்திருந்த  அரசு  தற்போது 38,000 கோயில்களுக்கு  மேல்  தன்   இரும்புப் பிடியில் வைத்துள்ளது. கோயில்களின் சிறப்பான நிர்வாகத்திற்காகத்தான் அவற்றை எங்கள் வசம் வைத்துள்ளோம் என்று சொல்லும் அரசும், கோயில்களில் அறநிலையத்துறை அதிகாரிகளாக நிர்வாகம் அரசு ஊழியர்களும், இவர்கள் இந்தக் கோயில்களைத் தம் வசம் வைத்துள்ளதை ஆதரிப்பவர்களும் கீழ்கண்ட கேள்விகளுக்குத் தெளிவான, நேரடியான விடை அளிக்க வேண்டும்:

1.  இந்திய அரசியல் சட்டப்படி எல்லா மதத்தினருக்கும் (மைனாரிட்டி சமூகங்கள் உள்பட) ஒரே மாதிரியான  அடிப்படை வழிபாட்டு, நிர்வாக உரிமை கொடுத்துள்ள போது, இந்து சமய கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகளை, அவற்றின் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மட்டும் ஏன் அரசு எடுத்துக்கொள்கிறது? மிக அதிக அளவில் தற்போது பெருகியுள்ள சர்ச்சுகள், மசூதிகள் அவற்றின் சொத்துக்கள், ஆகிவற்றை ஏன் நிர்வகிக்கக் கூடாது?

2.  ஹிந்து சமயத் திருமடங்கள் தனி மத உட்பிரிவைச் சேர்ந்தவை என்று உச்ச நீதி மன்றதின் அரசியல் சாசன அமர்வு சொன்ன பிறகும் (1954) இந்து சமய அறநிலையத்துறை எப்படித் திருமடங்களைக் கட்டுப்படுத்துகிறது. உதாரணம் - திருப்போரூர் சிதம்பரம் ஸ்வாமிகள் மடத்திற்கு அரசு வேலைக்காரனானக் காஞ்சிபுரம் உதவி ஆணையரைத் தக்காராக  7 வருடங்களாக வைத்துள்ளது.

3. கோயில்களின் வழிபாட்டு உரிமைகளில் குறுக்கிட, அரசுக்கு அறநிலையத்துறைச் சட்டத்தில் எந்த இடமும் இல்லாத போது, எப்படி  அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் பாலாலயம், கும்பாபிஷேகம், திருவிழாக்கள் போன்றவற்றை முடிவு செய்கிறார்கள் ?

4. கம்ப ராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் எரிக்க வேண்டும் என்று மேடைதோரும் பேசிய நாஸ்திகன் அண்ணாதுரை இறந்த தினத்தன்று (பிப்ரவரி 3ம் தேதி) கோயில்கள் உள்ளே இலை போட்டு  அன்னதானம் எந்த ஆகம  விதியின் கீழ் நடக்கின்றது ?  கோட்ஸே தூக்கில் போடப்பட்ட தினத்தில் காந்தி ஆச்ரிமங்களில் அன்னதானம் செய்ய அரசு உத்தரவு  போடுமா? இந்திரா  காந்தி நினைவு  நாளன்று  சீக்கியர்கள்  தங்கள் குருத்வராவில் அன்னதானம்  செய்ய வேண்டும் என்று அரசு  உத்தரவு போட முடியுமா ?

5.  அறநிலையத்துறைச் சட்டம் பிரிவு 25-A ன் படி அறங்காவலராக  இருப்பவர் கோயில் இருக்கும் இடத்தில், அந்த ஊரில்  நல்ல  நடத்தை உள்ளவர், நன்மதிப்பு உள்ளவர் என்ற பெயர் பெற்றிருக்க  வேண்டும்.  கோயில் நிர்வாக விஷயத்தில் கவனம் செலுத்த ஆர்வமும்,  வேண்டிய அளவு நேரமும் உள்ளவராக இருக்க வேண்டும். அப்படி இருக்கையில்,   அறநிலையத்துறை ஊழியர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் கோயில் தக்காராக உள்ளனர்?

6. அறநிலையத்துறைச் சட்டம் 47ம், 49ம் கண்டிப்பாக இந்து சமயக் கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு  தலித் அறங்காவலர், ஒரு பெண் அறங்காவலர் நியமனம் செய்யப்பட வேண்டும்  என்று சொல்லும் போது 2011ம் ஆண்டிலிருந்து அவ்வாறு செய்யாமல் தலித்துகளுக்கும்  பெண்களுக்கும் அறநிலையத்துறை ஏன் வஞ்சனை செய்கிறது ?

7. அறநிலையத்துறைச் சட்டப்படி கோயில் கட்டமைப்புகளை அப்படியே வைத்துப் பாதுகாக்க வேண்டும். அவற்றை மாற்றவோ, புதிதாக ஏதும் கட்டவோ கூடாது என்று சொன்னப்  பிறகு, விதிகளை சட்டத்திற்கு மாறாக மோசடியாக இயற்றி, புதிய கோபுரம், மண்டபம் கட்டுதல், பழைய கோபுரம், மண்டபங்கள், கோயில் கதவுகள், தூண்கள்  பழுது என்று சொல்லி அவற்றை அகற்றி விற்பனை செய்தல், புதிய சிலை செய்தல் அவற்றில் தங்கம் சேர்க்கிறேன் என்று மோசடி செய்தல் - இவையெல்லாம் எந்த சட்டத்தின் கீழ் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்கிறார்கள் என்று காட்ட முடியுமா ? 

8. திருக்கோயில் கோபுரங்களுக்கு, கொடிமரங்களுக்குத் தங்க முலாம் பூசுதல் - தங்கத் தேர், வெள்ளித் தேர், தங்கத் தொட்டில்செய்தல் -  பணம் கட்டினால் -  இந்தத்  தேர்களில் சுவாமி பவனி - எவை எல்லாம் எந்த ஆகம  அடிப்படையில் - எந்த அறநிலையத்துறைச் சட்டப் பிரிவின் கீழ் செய்தார்கள் என்று  காட்ட முடியுமா?

9. எந்த ஆகமத்தின் கீழ் நீங்கள் கோயில் உள்ளே அலுவலகங்கள், கழிப்பறைகள் எல்லாம் கட்டிக்கொண்டு கோலோச்சுகிறீர்கள்? கோயில் உள்ளே இவைகள் எல்லாம் கட்டக் கூடாது என்பதை அறநிலையதுறைச் சட்டமும், தமிழ்நாடு கோயில் நுழைவுச் சட்ட விதிகளும் சொல்கின்றனவே? உங்கள் துறையில் உண்மையில் சட்ட அறிவு உள்ளவர்கள் இருக்கின்றார்களா? அப்படி இருந்தால் அந்த அறிவு - சட்டத்தை மீறுவதற்காகவா?

அறநிலையத்துறையின்  கோயில் நிர்வாக இலட்சணம்:

10. சென்னை ttk சாலையில் தீனதயாளன் வீட்டுக் கிடங்கில் கிடைத்த  200க்கும் அதிகமான கோயில் சிலைகளை இவர்கள்  அடையாளம் காட்டவில்லை - காரணம் இந்தக் கோயில் சிலை என்று அடையாளம் காட்டினால், சிலை காணாமல் போன போது - போலீசிடம் புகார் கொடுக்கவில்லை என்ற உண்மை வெளிப்பட்டு விடும். இப்பொழுது தெரிகிறதா? சிலைக் கடத்தலுக்கு யார் முழு உடந்தை என்று?

11. 1986  ஆண்டிலிருந்து தற்போது வரை சுமார் 50000 ஏக்கர்கள் கோயில், கட்டளை விளை நிலங்கள் காணவில்லை. தற்போது உள்ள 4.75 லட்சம் ஏக்கர் நிலங்களில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர்கள்- ஆக்கிரமிப்பில் உள்ளன அல்லது பல வருடங்களாகக் குத்தகைப் பணம் வரவில்லை. இவர்களுடைய கொள்கை குறிப்பில் ஒரு போதும் நஞ்சை நிலங்கள் குத்தகை வசூல் எவ்வளவு, புஞ்சை நிலங்கள் வசூல் எவ்வளவு, கிராமப்புற மனைகள் வசூல் எவ்வளவு, நகர்ப்புற  மனைகள் குத்தகை வசூல் எவ்வளவு  - என்றெல்லாம்  போட மாட்டார்கள். மேலும் ஒரு ஆண்டு வசூல் எவ்வளவு என்று போடுவதற்கு அவர்களுக்குக் கூடக் கூச்சமாக உள்ளது. அவ்வளவு குறைவான  வசூல். அதானால் மூன்றாண்டு வசூல்  தொகையைத் தான்  குறிப்பிடுகிறார்கள்.  வருடம்தோறும் ரூ. 6000 கோடி வர வேண்டிய கோயில் நிலங்கள் வருமானம், ரூ 120 கோடி கூட  வருவதில்லை. அதாவது வர வேண்டிய தொகையில் 2 சதவிகிதம் கூட வருவதில்லை. இப்படி 2 % குறைவான வசூல் தான் 40 வருடங்களாக இருக்கிறது. இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் என்ன விளக்கம் அளிக்க முடியும்? 

• 33,000 ஏக்கர் நிலங்கள் உள்ள  வேதாரண்யம் ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோயில் நிலங்களில் 30000 ஏக்கர்கள் ஆக்கிரமிப்பில். கோயில் நிலங்களை அளவீடு செய்ய கோரிக்கை வைக்கிறார் நேர்மையான செயல் அலுவலர். கோரிக்கையை  குப்பையில் போடுகிறார் நாகை மாவட்ட ஆட்சியர். மாவட்ட ஆட்சியர் மீது  ஆணையர் அனுமதி பெற்று வழக்குத் தொடுக்கிறார் நேர்மையான  அலுவலர். பிறகு அந்த வழக்கைத் திரும்பப் பெற ஆணையர் அலுவலக  அதிகாரிகளே அவருக்கு ஏன் அழுத்தம் கொடுத்தனர்?

•  திருச்செந்தூர் அருகில் உள்ள உவரி ஸ்ரீ சாஸ்தா கோயில் நிலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட  கார்னெட் என்னும் விலைமதிப்பு மிகுந்த கற்களை எடுத்தக் கொள்ளையன் மீது மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்த உதவி ஆணையரை மிரட்டி அன்றைய ஆணையர் வழக்கினை ஏன் திரும்பப் பெறச் செய்தார்?

• புதுக்கோட்டை அரசர்கள் அந்த மாவட்டக் கோயிலுகளுக்கு வழங்கிய 105,,000 ஏக்கர் நிலங்கள் எங்கே ?

•  தஞ்சை இராஜா சத்திரம் ஒர் இந்து சமய நிறுவனம். இதற்குச் சொந்தமான 33,000 ஏக்கர் நிலங்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் இந்துக்களுக்கு எந்த பயனும் இன்றி வைத்திருப்பதை எதிர்த்து ஏன் உங்கள் துறை நடவடிக்கை எடுக்கவில்லை ?

• கரூர் நகரமும், அதைச் சார்ந்தப் பகுதிகளிலும் உள்ள 850 ஏக்கர் நிலங்கள் கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரருக்குச்  சொந்தம். அவற்றை மீட்க 30 வருடங்களுக்கு முன்பு உங்கள்  துறை வழக்கு போடுவதாக பாவலா காட்டிவிட்டு இப்போது வழக்கை கைவிட்டு விடலாம் என்று சொல்லுவது ஏன் ?

• மதுரை நகரில் வண்டியூர் தெப்பக்குளம் அருகில் 50 ஏக்கர்கள் - ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குச் சொந்தமானவை - உச்ச நீதி மன்றத் தீர்ப்பிற்கு பிறகும் ஏன் மீட்கவில்லை ?

• சிறுமலைப் பகுதியில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 3000 ஏக்கர் நிலங்களை ஏன்
கையகப் படுத்தவில்லை? 

• அறநிலையத்துறை கைக்குச் செல்லும் முன் திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலுக்கு 6300 ஏக்கர்கள் சொந்தம்.
தற்போது 2000க்கும் குறைவான ஏக்கர்களே உள்ளன.

• அதே போல் வடுவூர் ஸ்ரீ இராமர் கோயிலுக்கு இருந்த 5000 ஏக்கர்கள் தற்போது எப்படி 50 ஏக்கர்களாக சுருங்கின?

 12. அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில்  பணத்தை  வெளிப்படையாகக்  கொள்ளை அடித்த காட்சிகள்

• திருவேற்காடு  திருக்கோயில் பணத்தை எடுத்து அறநிலையத்துறை  மந்திரிக்கு ஒரு டோயோட்டா இன்னோவா காரும், அவர் உதவியாளருக்கு மற்றொரு இன்னோவா காரும் வாங்கியுள்ளனர்.

• ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பணத்தில் வாங்கப்பட்ட காரை அமைச்சர் மகன் பயன் படுத்தி வருகிறார்.

• ஏற்கனவே அறநிலையத்துறை ஆணையர் உபயோகத்திற்காக ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் பணத்தில் கார் வாங்கப் பட்டுள்ளது.

• அமைச்சருக்கு கூடுதல் ஓட்டுநராக ஒருவர் நியமிக்கப்பட்டு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இருந்து அவருக்கு சம்பளம் அளிக்கப்படுகிறது.

• மாங்காடு ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயில் பணத்தில் வாங்கப்பட்ட காரைத்தான் அறநிலையத்துறை ஆணையர் பயன்படுத்துகிறார்.

• அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் காரைப் பயன்படுத்திகிறார்.

• இந்தக் கார்களுக்கானப் பெட்ரோல் டீசல் செலவை கோயிலில் இருந்து மாதந்தோறும் எடுக்கின்றனர்.

• அறநிலையத்துறையின் 10 ஓட்டுனர்கள் மேல் இருக்கின்றனர். இவர்களுள் ஒருவரைத் தவிர மற்றவர் எல்லோரும் கோயில் ஊழியர்கள். கோயில் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு அறநிலையத்துறை அதிகாரிகளுக்குக் கார் ஓட்டுகின்றனர்.

• சென்னை ஆணையர் அலுவலகத்தில் 12 தட்டச்சு எழுத்தர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கோயில் பணியாளர்கள். கோயில் கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள். புதிதாகச் சங்கம் அமைத்து உங்கள் உரிமைகளுக்கு போராடுகின்றீர்களே?   2 வருடங்கள் ஒருவர் ஒரே இடத்தில் தொடர்ந்து பணி புரிந்தால் அவரை அந்த அலுவலகத்தில் நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற அரசுச் சட்டப்படி அவர்களை அறநிலையத்துறை ஊழியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று உங்கள் சங்கம் சார்பில் போராடுவீர்களா?  இந்தத் தட்டச்சர்களோடு ஸ்ரீ கபாலி கோயில் ஊழியர்கள் இருவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருவர் ஆணையர் அலுவலகத்தில் பல வருடங்களாகப் பணி புரிகிறார். ஒருவர் கோட்டையில் அறநிலையத்துறை அலுவலகத்தில் வேலை செய்கிறார்.

• திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ சங்கரநாராயணர் கோயில் பணம் ரூ. 80,000/- எடுத்து ஆணையர் அலுவலகத்தில் செராக்ஸ் யந்திரம் வாங்கி உள்ளனர். 

• சென்னையில் மூன்று கோயில்களில் இருந்து பணம் எடுத்து ஆணையர் அலுவலகத்தில் உள்ள தணிக்கைப் பிரிவிற்கு குளிர் சாதன வசதி செய்து கொண்டுள்ளனர்.

• வடபழனி ஸ்ரீ முருகன் கோயில் பணத்தை எடுத்து  ஆணையர் அலுவலகத்தில் கழிப்பறைகள் கட்டியுள்ளனர். திருத்தணி கோயில் பணத்தை எடுத்து ஆணையர் அலுவலகத்தில் கூட்ட அரங்கு, நூலகம், வரவேற்பறை கட்டியுள்ளனர்.

• ஆணையர் அலுவலகத்தில் கணினிகள் வாங்கப் பழனி கோயில் பணம் ரூ.  15.00 லட்சம் அறநிலையத்துறை அதிகாரிகளால் சட்ட விரோதமாக கையாடல் செய்யப்பட்டுள்ளது.

• தஞ்சை இணை ஆணையர் அலுவலகச் செலவிற்காக திங்களூர் என்ற கிராமத்தில் உள்ள கோயில் பணத்தில் இருந்து ரூ. 50,000 கையாடல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் (ஸ்ரீ நாச்சியார் தேவஸ்தானம்) ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோயில், திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில், மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபாலஸ்வாமி கோயில், திருவாரூர் ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கோயில் இது போன்ற 45 கோயில்களில் செயல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வந்ததை மாண்புமிகு உச்ச நீதி மன்ற அமர்வு 10.02.1965 தேதி வெளியிட்டத் தீர்ப்பின் மூலம்  தடை செய்துவிட்டது. தற்போது எந்த அதிகாரத்தின் பேரில் அங்கு அறநிலையத்துறை  -  செயல்  அலுவலர்களை வைத்து நிர்வாகம் செய்கிறது என்று உங்களால் காட்ட முடியுமா ?