திங்கள், 17 ஆகஸ்ட், 2020

கணேச கவசம் பாடல் வரிகள்

கணேச கவசம் பாடல் வரிகள்

ஏஷோதி சபலோ தைத்யான் பால்யேபி னாஶயத்யஹோ
அக்ரே கிம் கர்ம கர்தேதி ன ஜானே முனிஸத்தம 1

தைத்யா னானாவிதா துஷ்டாஸ்ஸாது தேவத்ருமஃ கலாஃ
அதோஸ்ய கம்டே கிம்சித்த்யம் ரக்ஷாம் ஸம்பத்துமர்ஹஸி 2

த்யாயேத் ஸிம்ஹகதம் வினாயகமமும் திக்பாஹு மாத்யே யுகே
த்ரேதாயாம் து மயூர வாஹனமமும் ஷட்பாஹுகம் ஸித்திதம் ஈ
த்வாபரேது கஜானனம் யுகபுஜம் ரக்தாம்கராகம் விபும் துர்யே
து த்விபுஜம் ஸிதாம்கருசிரம் ஸர்வார்ததம் ஸர்வதா 3

வினாயக ஶ்ஶிகாம்பாது பரமாத்மா பராத்பரஃ
அதிஸும்தர காயஸ்து மஸ்தகம் ஸுமஹோத்கடஃ 4

லலாடம் கஶ்யபஃ பாது ப்ரூயுகம் து மஹோதரஃ
னயனே பாலசம்த்ரஸ்து கஜாஸ்யஸ்த்யோஷ்ட பல்லவௌ 5

ஜிஹ்வாம் பாது கஜக்ரீடஶ்சுபுகம் கிரிஜாஸுதஃ
வாசம் வினாயகஃ பாது தம்தான்‌ ரக்ஷது துர்முகஃ 6

ஶ்ரவணௌ பாஶபாணிஸ்து னாஸிகாம் சிம்திதார்ததஃ
கணேஶஸ்து முகம் பாது கம்டம் பாது கணாதிபஃ 7

ஸ்கம்தௌ பாது கஜஸ்கம்தஃ ஸ்தனே விக்னவினாஶனஃ
ஹ்றுதயம் கணனாதஸ்து ஹேரம்போ ஜடரம் மஹான் 8

தராதரஃ பாது பார்ஶ்வௌ ப்றுஷ்டம் விக்னஹரஶ்ஶுபஃ
லிம்கம் குஹ்யம் ஸதா பாது வக்ரதும்டோ மஹாபலஃ 9

கஜக்ரீடோ ஜானு ஜம்கோ ஊரூ மம்களகீர்திமான்
ஏகதம்தோ மஹாபுத்திஃ பாதௌ குல்பௌ ஸதாவது 10

க்ஷிப்ர ப்ரஸாதனோ பாஹு பாணீ ஆஶாப்ரபூரகஃ
அம்குளீஶ்ச னகான் பாது பத்மஹஸ்தோ ரினாஶனஃ 11

ஸர்வாம்கானி மயூரேஶோ விஶ்வவ்யாபீ ஸதாவது
அனுக்தமபி யத் ஸ்தானம் தூமகேதுஃ ஸதாவது 12

ஆமோதஸ்த்வக்ரதஃ பாது ப்ரமோதஃ ப்றுஷ்டதோவது
ப்ராச்யாம் ரக்ஷது புத்தீஶ ஆக்னேய்யாம் ஸித்திதாயகஃ 13

தக்ஷிணஸ்யாமுமாபுத்ரோ னைறுத்யாம் து கணேஶ்வரஃ
ப்ரதீச்யாம் விக்னஹர்தா வ்யாத்வாயவ்யாம் கஜகர்ணகஃ 14

கௌபேர்யாம் னிதிபஃ பாயாதீஶான்யாவிஶனம்தனஃ
திவாவ்யாதேகதம்த ஸ்து ராத்ரௌ ஸம்த்யாஸு யஃவிக்னஹ்றுத் 15

ராக்ஷஸாஸுர பேதாள க்ரஹ பூத பிஶாசதஃ
பாஶாம்கு

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

பிரதோஷ ஸ்தோத்திரம்

ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்திரம்.

ஸ்ரீ கணேசாய நம:

ஜய தேவ ஜகன்னாத ஜய சங்கர சாச்வத |

ஜய ஸர்வ ஸுராத்யக்ஷ ஜய ஸர்வ ஸுரார்ச்சித ||

ஜய ஸர்வ குணாதீத ஜய ஸர்வ வரப்ரத |

ஜய நித்ய நிராதார ஜய விச்வம்பராக்ய ||

ஜய விச்வ ஏக வந்த்யேச ஜய நாகேந்த்ர பூஷண |

ஜய கெளரிபதே சம்போ ஜய சந்த்ர அர்த்த சேகர ||

ஜய கோட்யர்க ஸங்காச ஜய ஆனந்த குணாச்ரய |

ஜய பத்ர விரூபாக்ஷ ஜயாசிந்த்ய நிரஞ்சன ||

ஜய நாத க்ருபாஸிந்தோ ஜய பக்தார்த்தி பஞ்சன |

ஜய துஸ்தர ஸம்ஸார ஸாகர உத்தாரண ப்ரபோ ||

ப்ரஸீத மே மஹாதேவ ஸம்ஸாரார்தஸ்ய ஸ்வித்யத: |

ஸர்வ பாப க்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் பரமேஸ்வர ||

மஹா தாரித்ர்யமக்நஸ்ய மஹாபாப ஹதஸ்ய ச |

மஹா சோக நிவிஷ்டஸ்ய மஹா ரோகாதுரஸ்ய ச ||

ருணபாரபரிதஸ்ய தஹ்ய மாநஸ்ய கர்மபி : |

க்ரஹை: ப்ரபீஜமாநஸ்ய ப்ரஸீத மம சங்கர ||

தரித்ர: ப்ரார்த்தயேத்தவம் ப்ரதோஷே கிரிஜாபதிம் |

அர்த்தாடோ வாத ராஜா வா ப்ரார்த்தயேத்தேவம் ஈச்வரம் ||

தீர்க்கமாயு: ஸதாரோக்யம் கோசவ்ருத்திர் பலோன்னதி : |

மமாஸ்து நித்யம் ஆனந்த: ப்ரஸாதாத்தவ சங்கரம் ||

சத்ரவ: ஸம்க்ஷயம் யாந்து ப்ரஸீதந்து மம ப்ரஜாபத : |

துர்பிக்ஷமரி ஸந்தாபா: சமம் யாந்து மஹீதலே ||

ஸர்வ ஸஸ்ய ஸம்ருத்திஸ்ச பூயாத்ஸுகமயா திச: |

ஏவம் ஆராதயேத்தவம் பூஜாந்தே கிரிஜாபதிம் ||

ப்ராஹ்மணான் போஜயேத் பஸ்சாத் தக்ஷிணாபிஸ்ச பூஜயேத் |

ஸர்வ பாப க்ஷயகரி ஸர்வ ரோக நிவாரணி ||

சிவபூஜா மயாக்யாதா ஸர்வாபீஷ்ட பலப்ரதா ||

சிந்தாமணி கணபதி

சிந்தாமணி கணபதி

அபிஜித் ஓர் அரசன். அவரின் மனைவி பெயர்
குணவதி. இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை பேறு இல்லாமல் இருந்தது. ஒரு முறை அந்த அரசனை, வைஸம்பாயன முனிவர் சந்தித்தார். தனக்கு குழந்தை பிறக்க அருளச் சொன்னார். அவர் பிர்ம்மாவை நோக்கி தவம் இருக்க சொன்னார்.

முனிவர் சொன்னபடி அபிஜித்தும்,
குணவதியும் காட்டிற்குள் சென்று கடுமையான தவமியற்றினர். தவத்தின் பயனாக அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘கண’ என்று பெயரிட்டனர். அவன் வளர்ந்ததும், மக்கள் அனைவரும் ‘கண ராஜா’ என்று அழைத்தனர். கண ராஜா பலமும், புத்திசாதுர்யமும் கொண்டவனாக விளங்கினான்.

ஓர் நாள் காட்டினில் வேட்டையாடி விட்டு,
அங்கே இருந்த கபில முனிவரின் ஆசிரமம் வந்தான். கபில முனிவரும் கண ராஜாவை வரவேற்று உபசரித்தார். தன்னிடம் இருந்த சிந்தாமணி ரத்தினத்தைக் கொண்டு, அறுசுவை உணவுகளை வரவழைத்து இளவரசனுக்கு விருந்து படைத்தார். அந்த அற்புதத்தைக் கண்ட கண ராஜா தனக்கு அந்த சிந்தாமணி ரத்தினத்தை தரும்படி கேட்டான். ஆனால் அதற்கு கபில முனிவர் மறுத்துவிட்டார்.

இதனால் அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக அந்த ரத்தினத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான். இதனால் மிகவும் வருத்தம் அடைந்த கபில முனிவர், துர்க்கை அம்மனை நோக்கி பிரார்த்தனை செய்தார். முனிவரின் பிரார்த்தனையை ஏற்ற துர்க்கை, விநாயகரை நோக்கி தவம் இருக்கும் படி வலியுறுத்தினாள். கபில முனிவரும் அப்படியே செய்தார்.

முனிவரின் கடும் தவத்தைக் கண்டு மகிழ்ந்த விநாயகர், அவருக்கு முன்பாகத் தோன்றினார். அவரை வணங்கிய முனிவர் கண ராஜாவிடம் இருந்து சிந்தாமணி ரத்தினத்தை மீட்டுத் தரும்படி வேண்டினார்.. இதன் காரணமாக விநாயகருக்கும் கண ராஜாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் கண ராஜாவை வதம் செய்து, சிந்தாமணி ரத்தினத்தை மீட்டு, கபில முனிவரிடம் ஒப்படைத்தார் விநாயகர். ஆனால் கபில முனிவர் அதை தானே வைத்துக் கொள்ளாமல், அந்த சிந்தாமணி ரத்தினத்தை மாலையாக கோர்த்து, விநாயகரின் கழுத்தில் அணிவித்து

விட்டார்.

இதனாலேயே ‘சிந்தாமணி விநாயகர்’ என்ற பெயர் வந்தது.

சிவனின் மூன்று மகள்கள் பற்றி தெரியுமா????

சிவனின் மூன்று மகள்கள் பற்றி தெரியுமா????

சிவனுக்கு விநாயகர், கார்த்திகேயன், ஐயப்பன் என 3 மகன்கள் இருப்பது தெரியும், ஆனால் அவருக்கு இருக்கும் மூன்று மகள்கள் குறித்தும், அவர்கள் எப்படி வணங்கப்படுகிறார் என்பதை இங்கு பார்போம்...

 சிவன் 

சிவ பெருமானுக்கு கணேஷன், முருகன், ஐயப்பன் என மூன்று மகன்கள் இருப்பது அனைவரும் அறிந்தது. பல இடங்களில் வழிபட்டும் வருகிறது. ஆனால் அவரின் மூன்று மகள்கள் பற்றி அந்தளவுக்குப் பெரியளவில் பேசப்படுவதில்லை. வாருங்கள் சிவ பெருமானின் மூன்று மகள்கள் குறித்து இங்கு பார்ப்போம்...


இந்து மதத்தின் மும்மூர்த்திகளாக படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் மகா விஷ்ணு, அழிக்கும் கடவுளாக சிவன் உள்ளார். பரம்பொருளாக இருக்கும் சிவ பெருமான் அழிக்கும் செயலை மட்டும் செய்யாமல், மக்களை காப்பாற்றுதல், அவர்கள் செய்த தவறுகளுக்கான தக்க தண்டன் கொடுத்தல் என மிக முக்கிய செயல்களை செய்கிறார்.


பரம்பொருளான அவர் குறித்து நாம் அறிந்தது மிகவும் குறைவுதான். அவருக்கு விநாயகர், முருகப்பெருமான், ஐய்யப்பன் ஆகிய மூன்று மகன்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அவருக்கு மூன்று மகள்கள் இருப்பதும், அவர்களின் சிறப்பு குறித்து அவ்வளவாக பேசப்படுவதில்லை.

மூன்று மகள்கள்:


1. அசோக சுந்தரி
2. ஜோதி
3. வாசுகி
ஆகிய மூன்று மகள்கள் சிவ பெருமானுக்கு உள்ளனர்.

அசோக சுந்தரி : அசோக சுந்தரி குறித்து பத்ம புராணத்தில், சிவன், பார்வதி தம்பதிக்கு மகளாக அசோக சுந்தரி வருணிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அசோக சுந்தரி நகுசன் என்பவரை மணந்து கொண்டதாகவும், அவர்களுக்கு ‘யயாதி’ என்ற குழந்தையும் இருப்பதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என ஏங்கிய உமயவளின் சோகத்தை நீக்க பிறந்த அழகி (சுந்தரி) என்பதால் அசோக சுந்தரி என பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது.
அசோக சுந்தரியை காளி தெய்வமாகவும் சொல்லப்படுகின்றது. காளி தேவி (அசோக சுந்தரி) சிவபெருமானின் மகள் என அப்பர் சுவாமிகளும், நம்பியாண்டார் நம்பி பாடிய பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் கேரளாவில் சிவராத்திரியாகக் காளியை காணும் வழக்கம் இன்றும் உண்டு.

உப்பு சுவை : சிவ பெருமான் விநாயகரின் தலையை கொய்த போது பயத்தில் அசோக சுந்தரி உப்பு நிறைந்த சாக்கில் ஒழிந்து கொண்டதாகவும் அதனால் அசோக சுந்தரியின் தேகம் திவ்ய உப்பு சுவை கொண்டதாக மாறியதாக கூறப்படுகின்றது. இவர் குஜராத்தில் பெரிய அளவில் அறியப்பட்டு வணங்கப்படுகிறார். ஆனால் இந்தியாவின் வேறு பகுதிகளில் அவ்வளவாக அறியப்படவில்லை.

ஜோதி : ஜோதி என்றால் ஒளி. அவரின் பெயராலேயே அறியப்படுகின்றார். ஜோதியின் பிறப்பிற்குப் பின் இரண்டு கதைகள் கூறப்படுகின்றது. முதல் கதையில் ஜோதி சிவபெருமானின் ஒளி வட்டத்திலிருந்து பிறந்தார் என்றும் அவர் சிவனின் உடல் வழிபாடு எனவும் கூறப்படுகிறது. மற்றொரு கதை பார்வதி தேவியின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட ஜோதியிலிருந்து பிறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஜோதியை ஜ்வாலாமுகி என்ற பெயரில் தமிழகத்தில் பல கோயில்களில் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.
யாரும் அறிந்திராத சிவன் - பார்வதியின் காதல் கதை..!

வாசுகி : வாசுகி என்பவர் அனைத்து கோயில்களிலும் வணங்கப்படும் பாம்பு தெய்வமாக உள்ளார். இவர் சிவ பெருமானின் மகள், ஆனால் பார்வதி தேவியின் மகள் இல்லை.
ஏனெனில் பாம்புகளின் கடவுளாகிய கத்ரு செதுக்கிய சிலையின் மீது சிவ பெருமானின் உயிர் அணுக்கள் விழுந்ததால் வாசுகி பிறந்ததாக கூறப்படுகின்றது. சிவ பெருமான் ஆலகால விசத்தைக் குடித்த போது அவரை அந்த விஷத்திலிருந்து விடுவித்ததும் இந்த வாசுகி தான். வாசுகிக்கு மானசா என்ற பெயரும் உண்டு. இவரின் அதீத கோபத்தின் காரணத்தால் சிவ பெருமானால் நிராகரிக்கப்பட்டார். இவர் மேற்கு வங்கத்தில் பாம்பின் வடிவில் வணங்கப்பட்டு வருகின்றார். 

சித்தர்கள்

இரகசியத்தை அறிந்துக் கொண்ட "சித்தர்கள்" பரம் பொருளான இறைவனை பஞ்சப்பூத ஆராதனைகள் மூலம் வழிப்பட்டனர்.

இப்பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது ஆகாயம், அதை தொடர்ந்து காற்று, பின் நெருப்பு - நீர் இறுதியில் நிலம் என்பதை உணர்த்தும் வகையில் "நமசிவய" என பஞ்சாட்சரத்தை மந்திரமாய் பிரயோகித்து "ந"-மண் "ம"- நீர் "சி"-நெருப்பு "வ" காற்று, இறுதியில் ஆன்மா ஒடுங்கும் இடமான "ய" ஆகாயமாய் இருப்பதை அறிந்து அனுதினமும் வணங்கி வந்தனர்.

அண்டத்தில் இருக்கும் இப்பூதங்களே சூட்சுமத்தில் இயங்கும் பிண்டங்களையும் ஆட்டுவிக்கின்றன. பஞ்ச பூதங்களில் ஆகாயம், நெருப்பு, நீர், நிலம் என நான்கு பூதங்களையும் இயக்கும் சக்தி காற்றாகும். 

காற்று இல்லா விட்டால் மற்ற பூதங்களால் தனித்து செயல்பட முடியாது என்பதை சித்தர்கள் உறுதி செய்தனர். எனவே சுவாசமான "காற்று" ஒடுங்கினால் "மனம்" ஒடுங்கும் ஐம்புலன்களும் அடங்கும் எனும் சூட்சுமத்தை உலகோர் அறிய தெரியப்படுத்தினர்.

சித்தர்கள் சுவாசத்தை ஒடுக்கும் முயற்சியில் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில், உடலில் அதீத உஷ்ணம் உண்டானது. அதீத உஷ்ணத்தால் ஏற்பட்ட பஞ்சபூத வித்தியாசத்தால் உடலை எண்ணிலடங்கா பிணிகள் சிதைத்தது. 

இப்பிணிகளை நீக்கி உடலை பேணி உயிரை காக்க வேண்டிய காலக்கட்டாயத்தால் உடலை பலப்படுத்தும் உபாயங்களைத் தேடி உலகம் முழுவதும் அலைந்து திரிந்தனர். 

இறுதியில் சித்தர்கள் அனைவரும்  தஞ்சம் அடைந்த பூமி தான் குமரிக் கண்டமான இன்றைய தமிழகம்.

பொய்கை ஆழ்வார்

பொய்கை ஆழ்வார் 4203 BCE


பன்னிரெண்டு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்.

முதல் திருவந்தாதி இயற்றியவர்.

ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் திவ்வியப்பிரபந்தம்
என்று அழைக்கப்படுகின்றன.

திவ்வியப்பிரபந்தத்திற்கு
திராவிட வேதம் என்றொரு பெயரும் உண்டு.

இறைவனின் பெருமையை நயமுற அழகாக - செவிக்கு இனிமையாகப் பாடுவதால் திவ்வியப்பிரபந்தம் எனச் சிறப்புப் பெறுகின்றது.

திருமாலிடம் தீவிர பக்தி கொண்டு தன்னையை அர்ப்பணித்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.

அவர்களில் காலத்தால் முந்தியவர்கள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார்.

இவர்கள் மூன்று பேரும் ‘முதலாழ்வார்கள்’ என்றும், ‘மூவர் முதலிகள்’ என்றும் போற்றப்படுகின்றனர்.

இந்த மூவரில் முதல்வர் பொய்கை ஆழ்வார்.

காஞ்சி மாநகரில் திருவெஃகா எனப்படும் யதோத்காரி திருக்கோவில் இப்போது சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில் அருகே உள்ள பொய்கையில் பொன்வண்ணமாக மின்னிய ஒரு தாமரை மலரில்,

சித்தார்த்தி ஆண்டு, ஐப்பசித் திங்கள் அஷ்டமித் திதி, திருவோண நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை அன்று தெய்வீக ஒளியுடன் ஒரு குழந்தை அவதரித்தது.

பொய்கையில் பொற்றாமரையில் அவதரித்ததால் இவருக்குப் பொய்கையாழ்வார் என்று பெயர் வந்தது.

திருமாலின் ஐம்படைகளின் ஒன்றாக விளங்கும் பாஞ்ச சன்யம் என்ற சங்கின் அம்சமாக பிறந்தவரே பொய்கை ஆழ்வார்.

திருமாலின் கருணையால் அனைத்தையும் கற்றார்.

இளமையிலேயே அனைத்து மறைகளையும் கற்று உணர்ந்து யோகியாய்த் திரிந்து, மகாவிஷ்ணுவிடம் மாறாத அன்பு
கொண்டு தன்னையே பெருமாளின் தொண்டிற்கு அர்ப்பணித்து கொண்டார்.

ஹரியும் சிவனும் ஒன்றுதான். ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம்.

சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம்.

இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு சேவை செய்தும் வாழ்ந்து வந்தார்.

இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும், இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்றும் கூறினார்.

இவர் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் பல திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனைப் பாடி பணிந்தார்.  பெருமாளின் 108 திருப்பதிகளில் பொய்கையாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 6 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருக்கோவலூரில்,

ஒரு வீட்டின் இடைகழியில்
மழை பெய்யும் ஒரு நாள் இரவில்
முதலாழ்வார்கள் மூவரையும் ஒருங்கிணைத்தான் இறைவன்.

தனித்தனியாக தலயாத்திரை மேற்கொண்ட மூன்று ஆழ்வார்களும் திருக்கோவலூரில் ஒரே சமயத்தில் நுழைய பெருமழை உண்டானது. மழைக்கு ஒதுங்கும் பொருட்டு ஒரு குடிசையை நெருங்க அவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் எனும் அளவில் இருக்க இம்மூவரும் அங்கு சிறிது நின்றுகொண்டிருக்க நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான் இறைவன்.

நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால்,
அவர்கள் பாசுரங்கள் மூலம் விளக்கேற்றினர்.

பொய்கையார் பூமியாகிற தகழியில்(அகல்) கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சுட்டினேன் சொல் மாலை
இடராழி நிங்குகவே என்று முதல் திருவந்தாதி -1 ஆக பாடினார்.

கடலினால் சூழ்ந்த இவ்வுலகை அகழியாக கொண்டு, கடலை நெய்யாகக் கொண்டு,கதிரவனை திரியாகக் கொண்டு விளக்கை ஏற்றி திருமாலின் திருவடிக்கு பாசுரங்களை மாலையாகச் சூட்டினேன்.

பூதத்தார் அன்பாகிய தகழியில்(அகல்) ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார்.

அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானச் தமிழ் புரிந்த நான் இரண்டாம் திருவந்தாதி -1 ஆக பாடினார்.

அன்பை அகழியாகக் கொண்டு, ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு, அறிவை திரியாகக் கொண்டு திருமாலுக்கு விளக்கேற்றினேன்

இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார் பேயாழ்வார்.

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று மூன்றாம் திருவந்தத்தி -1
என்றுப் பாடினார் பேயாழ்வார்.

பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.

பொய்கையாரின் செயல் புற இருள் நீக்கியது, பூதத்தார் செயல் அக இருளை நீக்கியது.

அக இருள், புற இருள் இவ்விரண்டும் நீங்கினால் பரமனைக் காணலாம்.

ஆக முதல் இரண்டு ஆழ்வார்கள் செயல்கள் அக, புற இருள் நீக்க பேயாழ்வார் இறைவனின் வடிவழகை அன்பெனும் வெளிச்சத்தில் கண்டார் .

நெருக்கத்தின் காரணம், திருமாலே என்று உணர்தனர்.

நாலாயிர திவ்ய பந்தத்தில் நூறு பாடல்களை பாடியுள்ளார் பொய்கையாழ்வார்.

பிரதோஷம் ஸ்பெஷல்!நந்திதேவர்

பிரதோஷம் ஸ்பெஷல்!நந்திதேவர்

நந்தீஸ்வரரின் கதையைப் படித்தோருக்கு பூமியில் வாழும் காலம் வரை செல்வச்செழிப்பும், வாழ்வுக்கு பிறகு மறுபிறப்பில்லை என்பதும் ஐதீகம்.

அடிலகன் என்ற சிவபக்தன், பூலோக வாழ்வை முடித்து கயிலாயம் சென்றான்.

அந்தப்புரத்தில் பார்வதிதேவி சிவனை தியானித்துக் கொண்டிருந்தாள். வெளியே நந்திதேவர் காவல் காத்துக் கொண்டிருந்தார்.

சிவபார்வதியின் தரிசனம் பெற வேண்டுமென விரும்பிய பக்தன், நந்திதேவரையும் மீறி அம்பிகையின் இருப்பிடம் சென்றான்.

அவளைக் கண்ட மகிழ்ச்சியில் சத்தம் போட்டு வணங்கினான்.

பக்தனின் குரல் கேட்ட அம்பிகை, தியானம் கலைந்து எழுந்தாள். நந்தியின் காவலையும் மீறி, தன் இருப்பிடத்திற்கு பக்தன் வந்ததைக் கண்டவள், "ஏ நந்தீசா! யாரைக் கேட்டு இவனை உள்ளே அனுமதித்தாய்?'' என்று சத்தமிட்டாள்.

அவளிடம் வந்த நந்தி,""தாயே! தங்கள் பக்தன் என்பதால் தான் அனுமதித்தேன். நீங்கள் பூஜை முடித்த பிறகுதான் அவனை அனுப்பியிருக்க வேண்டும். தவறாக நடந்து விட்டேன், மன்னியுங்கள்,'' என்றார்.

அங்கு வந்த சிவன், பணியில் தவறிய நந்தியை பூலோகத்தில் மானிடராகப் பிறக்கும்படி செய்து விட்டார்.

இவ்வேளையில் சிலாதர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சப்தரிஷிகள் வந்தனர்.

அவர்களுக்கு சிலாதரின் மனைவி அன்னம் பரிமாறச் சென்ற போது "குழந்தையில்லாத வீட்டில் துறவிகள் உண்ணக்கூடாது' என்ற விதிப்படி, அங்கு தங்களால் உண்ண இயலாது எனச் சொல்லி சென்று விட்டனர்.

இதனால் வருந்திய முனிவரும், அவரது மனைவியும் சிவனை உருக்கமாக வேண்டினர். இந்த வேளையில்தான் சிவன், நந்திக்கு சாபம் கொடுத்திருந்தார்.

நந்தீசரை ஒரு பெட்டியில் வைத்து பூலோகத்தில், சிலாதர் தங்கியிருந்த ஆஸ்ரமத்தின் அருகே வைத்தார்.

சிலாதர் கண்களில் அந்த பெட்டி பட்டது. அதற்குள் காளையின் முகம், மனித உடலுடன் ஒரு குழந்தை இருந்ததைக் கண்டார்.

தனக்கு குழந்தை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தவர், ""இறைவா! பிள்ளையில்லாத எனக்கு ஒரு நற்குழந்தையை தந்திருக்கக் கூடாதா? காளை முகம் கொண்ட குழந்தையை ஊரார் எப்படி ஏற்பார்கள்?'' என மன்றாடினார்.

அந்த நேரத்தில்,""சிலாதா! வந்திருப்பவன் யாரோ அல்ல. என் காவலன் நந்தீசன்.

அவனுக்கு அழகான முகம் தருகிறேன். ஆனால், அவனது ஆயுள் பூலோகத்தில் 12 ஆண்டுகள் மட்டுமே.

அவன் ஒரு சாபத்தால் உன்னிடம் வந்துள்ளான். அவனை வளர்க்க வேண்டியது உன் பொறுப்பு,'' என அசரீரி ஒலித்தது.

12 ஆண்டு தன்னோடு வாழ வந்தவன் என்றாலும், தங்களை கயிலாயம் அழைத்துப் போகிற பிள்ளை என்பதால், சிலாதர் மகிழ்ந்தார்.

தன் மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்தார். அந்தக் குழந்தை சிவலோகப் பிள்ளை என்பதால், அவனைப் பார்த்தவுடனே பலருக்கு நோய் நீங்கியது.

சிலர் அவனைக் கடவுளாகவே பாவித்து வணங்கி, தங்களுக்கு முக்திநிலை வேண்டும் என்றனர்.

அவன் பிரதோஷ வேளையில் (மாலை4.30-6.00) சிவ தியானத்தில் ஈடுபடுவான்.

அப்போது பக்தர்கள் பலரும் அவனுடன் இணைந்து சிவ தியானம் செய்வர். அவன் கண்மூடி தியானிக்கும் போது, நெற்றியின் நடுவில் சிவதரிசனம் காட்டினான்.

இதனால், தங்களுக்கு பிறப்பற்ற நிலை கிடைத்ததாக மக்கள் எண்ணினர்.

பல அற்புதங்கள் நிகழ்த்திய நந்தீசர், 12 வயதில் தன் பெற்றோருடன் கயிலாயம் சேர்ந்து, இழந்த பதவியை மீண்டும் பெற்றார்.

தன் தவறுக்கு வருந்தி, முழங்காலிட்டு இன்றும் சிவபார்வதி முன்னால் பணிவுடன் அமர்ந்துள்ளார்.

பிரதோஷ நாளன்று, நந்தீஸ்வரரின் கதையைப் படித்தோருக்கு பூமியில் வாழும் காலம் வரை செல்வச்செழிப்பும், வாழ்வுக்கு பிறகு மறுபிறப்பில்லை என்பதும் ஐதீகம்.

திருச்சிற்றம்பலம் !

சனி, 15 ஆகஸ்ட், 2020

கடன் தீர நரசிம்மர் ஸ்லோகம்

கடன்கள் தீர நரசிம்ம ஸ்தோத்திரம்

1. தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

2. லக்ஷ்மி யாலிங்கித வாமாங்கம்
பக்தானாம் வர தாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

3. ஆந்த்ரமாலா தரம் ஸங்க
சக்ராப்ஜாயுத தரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம்
கத்ரூஜ விஷநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

5. ஸிம்ஹநாதேன மஹதா
திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

6. ப்ரஹ்லாத வரதம்
ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

7. க்ரூரக்ரஹை : பீடிதானாம்
பக்தானாம் அ பயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

8. வேத வேதாந்த யக்ஞேசம்
ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருணமுக்தயே

9. ய இதம் படதே நித்யம்
ருணமோசன ஸம்ச்ஞிதம்
அந்ருணீஜாயதே சத்ய :
தனம் சீக்ர - மவாப்னுயாத்
அகோபில நிவாஸாய ப்ரக்லாத வரதாத்மனே
மஹாவீரஜகந்நாத ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்
ருணவிமோச நாதாய ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்.

கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம்

மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:
அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.

இந்த சுலோகத்தை தினமும் காலையில் 11முறை பாராயணம் செய்யவும்.

மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்

மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்

த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருஹ மிவ பந்தனாத் ம்ருத்யோர் மூஷியமா ம்ருதாத்!

மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்
(மார்க்கண்டேயர் அருளியது)
இந்த மார்க்கண்டேய ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு எமபயம் நீங்கும். நீண்ட ஆயுள் உண்டாகும்.
ஓம் ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்டம் உமாபதிம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுகரிஷ்யதி!
காலகண்டம் கால மூர்த்திம் காலாக்னிம் கால நாசனம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
நீலகண்டம் விருபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
அனந்தம் அவ்யயம் சாந்தம் அக்ஷமாலா தரம் ஹரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
ஆனந்தம் பரமம் நித்யம் கைவல்ய பத்தாயினம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
தேவதேவம் ஜகன்னாதம் தேவேசம் வ்ருஷபத்வஜம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
ஸ்வர்க்கா பவர்க தாதாரம் ஸ்ருஷ்டி ஸ்திதியந்த காரணம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
கங்காதரம் சஸிதரம் சங்கரம் சூல பாணிநம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
பஸ்மோத் தூளித சர்வாங்கம் நாகாபரண பூஷிதம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
அர்த்தநாரீஸ்வரம் தேவம் பார்வதீ பிராணநாயகம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
நீலகண்டம் விரூபாக்ஷம் நிர்மலம் நிருபத்ரவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
வாமதேவம் மகாதேவம் லோகநாதம் ஜகத்குரும்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
த்ரயக்ஷம் சதுர்ப்புஜம் சாந்தம் ஜடாமகுடதாரிணம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
ப்ரளய ஸ்திதி கர்த்தாரம் ஆதகர்த்தாரம் ஈஸ்வரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
வ்யோமகேசம் வ்ருபாக்ஷம் சந்திரார்க்கிருத சேகரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
கல்பாயுர் தேகிமேபுண்யம் யாவதாயுர் அரோகரம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!
சிவேசாரம் மஹாதேவம் வாமதேவம் ஸதாசிவம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம
ஸம்ஸார வைத்ய ஸர்வக்ஞ பிஷஜாம் அபியோ பிஷக்
ம்ருத்யுஞ்ஜய: ப்ர ஸன்னாத்மா தீர்க்கம் ஆயு ப்ரயச்சது.

நோய் விலக இந்த ஸ்லோகம்

நோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்
தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். கீழ்க்குறிப்பிட்ட அவருடைய மந்திரத்தை தினமும் காலை, மாலை வேளைகளில் பக்தியுடன் கூறிவந்தால் கொடிய நோய்கள் விலகும். நோயற்ற வாழ்வு கிட்டும். மேலும் மருத்துவமனைகளில் தன்வந்திரி படத்தை வைத்து இந்த மந்திரத்தையும் அதன்கீழ் எழுதி வழிபட்டால் அந்த மருத்துவமனை பிரபல்யமடையவும். தன்வந்திரியின் அருள் கிட்டும்.

ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய
தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா

தன்வந்திரி ஸ்லோகம்

சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

மாலையில் ஜபிக்க வேண்டிய மங்கள ஸ்லோகங்கள்....

மாலையில் ஜபிக்க வேண்டிய மங்கள ஸ்லோகங்கள்....

1. பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதி ச
ஜபேந் நாமத்ரயம்நித்யம் மஹாரோக நிவாரணம்

2. நித்யான்னதான நிரதம் ஸச்சிதானந்த விக்ரஹம்
ஸர்வரோக ஹரம் தேவம் ஸுப்ரம்மண்ய முபாஸ்மஹே

3. பஞ்சாபகேச ஜப்யேச ப்ரணதார்த்தி ஹரேதி ச
ஜபேந் நாமத்ரயம் நித்யம் புனர் ஜன்ம ந வித்யதே

4. ரட்ச பஞ்ச நதீநாத தயாஸிந்தோ மஹேச்வர
அநாதநாத பக்தானாம் அபயம் குரு சங்கர

5. ஸுமீனாக்ஷ? ஸுந்தரேசௌ பக்த கல்பமஹீருதௌ
தயோரநுக்ர ஹோ யத்ர தத்ர சோகோ ந வித்யதே

6. ஸ்ரீ கண்ட பார்வதீ நாத தேஜிநீபுர நாயக
ஆயுர்பலம் ச்ரியம் தேஹி ஹர மே பாதகம் ஹர

7. கௌரீவல்லப காமாரே காலகூட விஷாசன
மாமுத்ரா பதம் போதே: த்ரிபுரக்நாந்தகாந்தக

8. கௌரீபதே நமஸ்துப்யம் கங்காசந்த்ர கலாதர
அசேஷ க்லேச துரிதம் ஹராசு மம சங்கர

9. மஹாதேவம் மஹேசானம் மஹேச்வரம் உமாபதிம்
மஹா ஸேன குரும் வந்தே மஹாபய நிவாரணம்

10. ம்ருத்யுஞ் ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம:

11. ச்ரிய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்

12. மங்களம் கோசலேந்த்ராய மஹநீய குணாத்மனே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வ பௌமாய மங்களம்

13. க்ருஷ்ண: கரோது கல்யாணம் கம்ஸ குஞ்சரீ கேஸரீ
காளிந்தீ ஜல கல்லோல கோலாஹலகுதூஹலீ

14. ஸ்ரீ ராம சந்திர: ச்ரிதபாரிஜாத: ஸமஸ்த கல்யாண குணாபிராம:
ஸீதாமுகாம் போருஹ சஞ்சரீக: நிரந்தரம் மங்கள மாத நோது

15. காஞ்சநாத்ரி நிபாங்காய வாஞ்சிதார்த்த ப்ரதாயிநே
அஞ்சநா பாக்ய ரூபாய ஆஞ்சநேயாய மங்களம்

16. பீதாம்பரம் கரவிராஜித சங்க சக்ர கௌ மோதகீ ஸரஸிஜம் கருணாஸமுத்ரம்
ராதாஸஹாயமதி ஸுந்தர மந்தஹாஸம் வாதாலயேச மநிசம் ஹருதி பாவயாமி

17. குண ரோகாதி தாரித்ரிய பாபக்ஷúபதப ம்ருத்யவம்
பயக்ரோத மந: க்லேசா: நச்யந்து மம ஸர்வதா !