செவ்வாய், 25 ஜூன், 2019

தினந்தோறும் காக்காய்க்கு அன்னம் {சாதம்} போட ஏதாவது மந்திரம் உண்டா?

ஒவ்வொருவரும் தினந்தோரும் தான் சாப்பிடுவதற்கு முன்பாக அந்த உணவை தெய்வத்துக்கு நிவேதனம் செய்து, வீட்டில் இருக்கும்பசு மாடு போன்ற வாயில்லா ஜீவன்களுக்கும் வைக்கோல் முதலிய தேவையான உணவளித்து, பகலில் காக்கைக்கும் இரவில் நாய்க்கும் கொஞ்சம் சாதம் போட்டு விட்டுஅதாவது காக பலி ஸ்வான பலி, யாராவது தன் வீட்டிற்கு அதிதி {விருந்தாளி} வருகிறார்களா? என்று சிறிது நேரம் வாசல் பக்கம் பார்த்து விட்டு, பிறகு தனது குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட வேண்டும், அதில் மதியம் சாப்பிடும் முன்பாக காக்கைக்கு உணவளிக்கும் போது கீழ் கண்ட மந்திரம் சொல்ல வேண்டும்...

ஸ்லோகம் –ஓம் ஐந்த்ர வாருண வாய்வ்யா:, ஸௌம்யா யாம்யாஸ்ச நைர்ருதா:
வாயஸா: ப்ரதிக்ருஹ்ணந்து பூமாவன்னம்  மயார்ப்பிதம்.

{இந்திரன், வருணன், வாயு, ஸோமன், யமன், நிர்ருதி மற்றும் இவர்களைச் சேர்ந்த வாயஸங்கள் அனைவரும் என்னால் தரையில் வைக்கப்பட்ட இந்த உணவை பெற்றுக் கொள்ளட்டும்.} என்னும் இந்த மந்திரம் சொல்லி காக்கைக்கு அன்னம் போடவேண்டும். வாயஸம் என்றால் காகம் என்று பொருள் அதனால் தான் சிராத்த பிண்டத்திற்கு வாயஸ பிண்டம் என்று பெயர் இவ்வாறே ஒவ்வொரு நாளும் இரவில் சாப்பிடும் முன்பாக

ஓம் ஸ்வாநௌ ஹி ஸ்யாம சப, லௌ வைவஸ்வத குலோத்பவௌ
தாப்யாமன்னம் ப்ரதாஸ்யாமி ஸ்யாதா மேதாஹிம்ஸதௌ

{கருப்பு நிறத்துடனும் பல நிறங்களுடனும் இருக்கும் வைவஸ்வத மஹாராஜாவின் குலத்தில் பிறந்த இரண்டு நாய்கள் {அரசர்} என்னை துன்புறுத்தாமல் இருக்கட்டும். இவர்களுக்கு நான் உணவளிக்கிறேன்} என்னும் மந்திரம் சொல்லி நாய்க்கு உணவளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் நாய் மற்றும் அதன் ஜாதியைச் சேர்ந்த எந்த ப்ராணியாலும் நமக்கு ஆபத்து நேராது. மேலும் காக்கைக்கு உணவளிப்பதால் நம் முன்னோரும், நாய்க்கு உணவளிப்பதால் பைரவரும் திருப்தி அடைகிறார்கள் என்கிறது சாஸ்த்திரம்.
திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்

1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.

திங்கள், 24 ஜூன், 2019

தர்ப்பணம் செய்யும் முன்பாக 33 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்...

1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

4.அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

5. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும் நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

8. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும் போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும் போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.

9. மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீக வர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.

13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

14. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

15. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

16. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

17. திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

18. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

19. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடா விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.

20. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும் போது பூசணிக்காயை தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டு போய் விடுவான் என்று கருதப்படுகிறது.

21. தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும் போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.

22. மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்லது.

23. மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) போய் உரிய பலன்களை கொடுக்கும்.

24. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.

25. மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

26. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

27. தர்ப்பணத்தை எப்போதும் தெற்கு  முகமாக பார்த்த படி தான் கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது அப்படி நடக்காமல் இருப்பது வேதனையான விஷயம் தான்.

28. மகாளய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக மிக நல்லது.

29. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.

30. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்த படி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.

31. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.

32. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.

33. மகாளய அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்த படி 3 தடவை நீர் விடுதல் வேண்டும்.
பெண் வயது 18 - என் பொண்ணுப்யூர் வெஜிடேரியன். வெங்காயம் கூட எங்காத்துல இல்ல. பாவம், பி.இ. முடிச்சிட்டு அப்ராட் போனாள்னா என்ன பண்ண போறாளோ தெரியலை

பெண் வயது 21 - பொண்னு பிரமாதமா பாடுவா எட்டு வருஷம் சாங்கித்யம், பரத நாட்டியம் அரங்கேற்றத்துக்கே மூனு லட்சம் ஆச்சு, அவ்ளோ பிரமாதமா ஆடுவா.... எங்கப்பா வேத வித்து...ரிக் வேத உபாகர்....தாத்தா நித்ய அக்கினிஹோத்ரி....ஜாதகமா குவியறது, இப்ப ஒன்னும் அவ்ளோ அவசரம் இல்லன்னு சொல்லி திருப்பி அனுப்பிண்டு இருக்கேன்.

பெண் வயது 23 - தென்கலை வரன்லாம் கூட நெறைய வற்றது, நாங்கதான் வேண்டாம்னுடோம். வடகலைதான் வேணும்ண்டார் என் ஆத்துக்காரர்

பெண் வயது 25 - ஜாதகமா கொட்றது...நான் நீன்னு ஒரே போட்டா போட்டி, முந்தாநேத்து வந்த வரன் கூட நல்லா படிச்சிருக்கான் ஆனா ஒரு ஸ்மார்ட்னெஸ் இல்ல, மத்து மாதிரி இருக்கான்.

ஸ்மார்த்தாவாம் நமக்கு சரிப்பட்டு வராதுனு சொல்லிட்டோம். அட்லீஸ்ட் நல்ல ஐயாங்கார் வரனா பாருங்கோனுட்டோம்....எங்க பொண்ணு பி.இ. பையன் வெறும் எம்.எஸ்.ஸி அது ஒத்து வராது.

பெண் வயது - 28 - இத பாருங்கோ, பையன் நல்லா சம்பாதிக்கரான் ஓகே, ஆனா மாமனார் மாமியார் கூட இருக்கப்படாது, என்ன பன்றது அவள இண்டிப்பெண்டெண்டா வளர்ந்துட்டோம் ? இன்னைக்கு ஐ.டி. இண்டஸ்ட்ரில யார் பொட்டு வெச்சுக்கரா மாமி ? .... பையனுக்கு கூட பிறந்தவ ஆத்துக்காரர் வைதீகம் பன்றாராம் அந்த சம்பந்தம் வேணாம்.... பையன் இப்பதான் அறுபதாயிரம் வாங்கரானாம், சொத்துனு மடிப்பாக்கம் தாண்டி ஒரே ஒரு அபார்ட்மென்ட் தான் வெச்சிருக்கா நமக்கு சரிப்பட்டு வராது.

பெண் வயது 31 - பையனுக்கு 34 ஆச்சாம், 3 வயசு வித்யாசம் வேண்டாம்னுட்டோம். மேக்ஸ்மிமம் 33 இருந்தா ஓ.கே. யு.எஸ் ஜாதகமா இருந்தா க்ரீன் கார்ட் இருக்கனும், ஏற்கனவே ட்ரம்பு துரத்திண்டிருக்கான்....வயசாறதுனு கண்டவனோட அனுப்பிட முடியுமா ?

பெண் வயது 34 - பையன் பேரு மைக்கலாம்... நல்ல டாலா ஹேண்ட்ஸம்மா இருக்கான். ஆன் சைட் பிராஜெக்ட் போயிருந்த போது இவளுக்கு பழக்கமாம். என்ன பண்றது மாமி அவ விருப்பம் முக்கியமோல்லியோ ? உலகம் இன்னிக்கு மாறிண்டே இருக்கே ? நாமதான் நெக்ஸ்ட் ஜெனரேஷனுக்கு ஏத்தா மாறி அட்ஜெஸ்ட் பண்ணிக்கனும். அவா வழக்கப்படி சர்ச்லதான் கல்யானம் பண்ணிக்குவேன்னுட்டா.....சரி விட்டு புடிப்போம் கொழந்தைக்கு என்ன தெரியும் ? மறக்காம கல்யானத்துக்கு வந்திடுங்கோ. மொத நா நீக்ரோ மாப்பிளைக்கு எங்காத்து வாத்யார் தலைமைல உபநயன பிரம்மோபதேசம் ஆறது. அவஸ்யம் வந்திருந்து நடத்தி கொடுக்கோணும்.
பிராமண கல்யாணங்களின் வருங்காலம் ?

நம் கலாசாரத்தின் மீது மிகுந்த அபிமானம் உள்ளவர்கள் பலர் இந்தப் பிரச்னை காரணமாய் மனம் வெதும்பி செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். சமுதாயத்தில் ஒரு சுனாமியாய் உருவெடுத்துள்ள கலப்புத் திருமண பேரலையால் திணறிக் கொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம். நாமும் நம் சுற்றமும் இந்த அலைக்கு மாளாமல் நம் சமுதாயதிற்கும் ஒரு நல்ல வழியைக் காட்டும் கம்பீரமான கலங்கரை விளக்கமாய் நிலைத்து நிற்பது எங்ஙனம் ? வாமனர் போன்று சில சின்ன சின்ன அடிகளை எடுத்து முன்வைத்தோமானால் அவையே நம்மை திரிவிக்ரமனாக்கி நம் இலக்கை எளிதாக அடைய வழிவகுக்கும்.

1. கலப்புத் திருமணத்திற்கு நமக்கு அழைப்பு வந்தால் அங்கு செல்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அழைப்பு வைக்க வந்தவரிடமே நேர்முகமாக உங்கள் நிலையை கூறிவிட வேண்டும். உங்களுடைய இந்த நிலைப்பாடு உங்கள் குழந்தைகள் மனதில் ஆழமாய் பதியும்.

2. கலப்புமணம் செய்து கொண்டவர்கள் உங்கள் அலுவலகத்த்தில் அல்லது உங்கள் பிள்ளைகளின் வட்டத்தில் இருந்தால் அவர்களின் சங்கத்தை அலுவலக நிமித்தமாக மட்டும் நிறுத்திக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் நம் வீட்டிற்கோ விழாக்களுக்கோ சேர்த்துக்கொள்ளக் கூடாது.

3. வீட்டில் அனைவரும் பாழ் நெற்றியுடன் எப்போதும் இருக்கவே கூடாது. திருநீறு, திருமண், திலகம் தரிக்காமல் வெளியில் எங்கும் செல்லக் கூடாது. அதுவும் நெற்றியில் பளிச்சென விளங்கவேண்டும்.

4. அலுவலக நிமித்தமாய் பாண்ட்/ஷர்ட் அணிந்தாலும், வீட்டில் வேஷ்டி அணிவதை கண்டிப்பாக்க வேண்டும். சிறு குழந்தைகள் நீங்கலாக மற்ற எவரும் ஜீன்ஸ்/ஷார்ட்ஸ் அணியவே கூடாது. லுங்கி அணிந்த எவரையும் நம் வீட்டினுள் சேர்க்கக் கூடாது.

5. ஆண்கள் மீசை வளர்த்துக் கொள்வதையும், பெண்கள் தலைமுடி வெட்டிக் கொள்வதையும் தவிர்ப்பது உத்தமம். முழுவதும் சிகை வைத்துக் கொள்ள இயலாவிட்டாலும் சிறிய முடிச்சு போடும் அளவிற்காவது வைத்துக்கொள்வது நம் சம்பிரதாயத்திற்கு ஏற்றது

6. பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் சம்பிரதாய உடையான பஞ்சகச்சம்/மடிசார் கண்டிப்பாக அணிய வேண்டும்.

7. சந்தியாவந்தனம்/நித்யபூஜை எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது. எச்சில், பத்து, மடி, விழுப்பு, தீட்டு இவற்றில் எந்தவித தொய்வும் இருக்கக் கூடாது. இதற்கு விஞ்ஞான விளக்கம் தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

8. முட்டாள் பெட்டியை முதலில் தூக்கி ஏறிய வேண்டும். அது பிரம்மண்யத்திற்கு முதல் எதிரி. சினிமா பற்றி எதுவும் கூறத் தேவையில்லை.

9. கோயிலுக்குச் செல்வதே நமது பொழுது போக்காக வைத்துக்கொள்ள வேண்டும். நம் ஆச்சார்யார்களை குடும்பத்துடன் தரிசனம் செய்து ஆசி பெறுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

10. குலதெய்வத்தின் கோயிலுக்கு குடும்பத்துடன் செல்வதை ஒரு நியமமாய் வைதுக்கொள்ள வேண்டும்.

மேற்கூறிய வழிகளைப் பெரும்பாலும் பின் பற்றுவோர் குடும்பங்களுக்கு கலப்புமணப் பிரச்சினை அண்டாது. அதுவல்லாமல் ஏதேதோ காரணம் கூறி இவற்றைத் தவிர்க்கும் குடும்பங்கள் புதைச்சேற்றில் சிக்கின கதையாய் முடியுமேயன்றி வேறில்லை.
நமக்கு வேதத்தில் வஸ்திரத்தை குறித்து மிகவும் விசேஷமாக கூறப்பட்டுள்ளது. கரையில்லாத வஸ்திரத்தை அணியக்கூடாது. கரையுள்ள வஸ்திரத்தை மட்டுமே அணிய வேண்டும். ஸ்நானம் செய்து முடித்தவுடன் நாம் கட்டியிருக்கும் வஸ்திரத்தை கீழே போட்ட பிறகு அதை கால்களால் எடுக்கவோ மிதிக்கவோ கூடாது. ஏனென்றால் தேவதைகள் அனைவரும் வஸ்திரத்தில் குடியிருப்பார்கள். வேதத்தில் வஸ்திரத்தை செய்யும் முறை, வஸ்திரத்தில் தேவதைகள் எப்படி குடி புகுவார்கள் என்பதை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் தான் வஸ்திரதம் மிகவும் மகத்தானது. கரையுள்ள வஸ்திரத்தை யாருக்கேனும் அளித்தால் அவர்கள் பல தலைமுறைகள் நீடூடி வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதற்கு சமம். அதே போல் யார் கொடுத்தாரோ அவரும் பல தலைமுறைகள் நீடூடி வாழ வேண்டும் என்று ஸங்கல்பம் ஆகும். இதனால் தான் வஸ்திரத்தை தரும் பொழுது கரையில்லா வஸ்திரத்தை தரமாட்டார்கள். கரையுள்ளவையே தருவார்கள்.

"சர்வம் சிவமயம் ஜகத்" (நெசவு) துணி நெய்யும் நெசவுக் கலையின் மூலமாகவும், நெசவாளிகள் மூலமாகவும் நாம் பல தத்துவ விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். ஆணிலும் பெண்மை உண்டு, பெண்ணிலும் ஆண்மை உண்டு. முன்பே அதனை கூறியது அறிவியல் அல்ல. முன்பே ஆன்மீகம் கூறிவிட்டது.(அர்த்த நாரீஸ்வரர் வடிவம் அதுதான்) வேட்டியோ புடவையோ, அவை இரண்டுக்குமே குறுக்கு நெடுக்கில் குட்டையான குறுக்கிழையும் உண்டு. நீண்ட நெடுக்கிழையும் உண்டு. இதனை நேரிழை என்பர். நேரிழை என்றால் பெண் என்று பொருள். (நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்,சீச்சீ இவையும் சிலவோ விளையாடி... மாணிக்க வாசகர். திருவெம்பாவையில்) ஆடையில் ஓடும் நீண்ட நூலிழை பெண். அதில் குறுக்கே ஓடும் குட்டை நூலிழை ஆண். (உலகியல் வாழ்வில் பெண்ணே அதிக பங்கு வகிப்பவள் என்பதை இது காட்டுகிறது. அதனால் தான் இல்லற வாழ்வில் அனைத்து செயல்களிலும் பெண்ணுக்கே முன்னுரிமை தருகிறார்கள். ("Ladies first"என்ற ஸ்லோகனை ஆங்கிலேயன் நம்மை காப்பி அடித்து பின்னால் சொன்னான். முதலில் அதை நாம் தான் சொன்னோம்) அப்படியானால் ஆணையும் பெண்ணையும் சேர்த்து நெசவு நெய்தது தான் இல்லற வாழ்க்கையா?ஆமாம் அது தான் உண்மை!. அதை கூறுவதே இந்த வேஷ்டி புடவை முதலான ஆடைகள். அதனால் தான் விழாக்களில் ஒருவருக்கொருவர் வேட்டி வைத்து தருவது. புடவை வைத்து தருவது. குறைந்த பட்சம் ஓர் ரவிக்கை பிட்டாவது வைத்து தருவது எல்லாம் வந்தது) ஆம்  உலகில் நெருக்கமாய் பின்னி பிணைந்த முதல் இண்டர் நெட் வலைத்தள சேவையே இந்த புடவை வேட்டிதான். அதனால் தான் பூர்வ அபர கிரியைகள் எல்லாவற்றிலுமே இந்த துணி என்ற பொருளுக்கு மட்டும் முக்கியத்துவம் மிக அதிகமாய் உள்ளது. தானங்களில் வஸ்த்ர தானமும் இதனால் தான் வந்தது.

புதன், 19 ஜூன், 2019

அருணந்தி சிவாச்சாரியார்

இவர் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பிய பெரியார்களுள் ஒருவர். இவர் சைவ சமயத்தை சேர்ந்தவர்களால், சந்தான குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார். இவர் சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றியவர். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதாகக் கருதப்படும் சிவஞான போதத்தை இயற்றியவரான மெய்கண்ட தேவரை இவர் ஆசிரியராகக் கொண்டார்.

இவர் தமிழ் நாட்டில் திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம் வயதிலே இலக்கண, இலக்கிய நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்ததுடன், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளில் சிறந்த அறிவு கொண்டவராகவும் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை பெற்றவராகவும் இருந்தார்.

மெய்கண்டாரைக் குருவாகக் கொள்ளல்: பல மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்த இவர் தன்னுடைய மாணவர்களிற் பலர் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்த மெய்கண்ட தேவர் என்பவரிடம் பாடங் கேட்கச் சென்று விட்டதை அறிந்தார். தனது அறிவில் இறுமாப்புக் கொண்டிருந்த அருணந்தியார், மெய்கண்ட தேவரின் சிறப்புத் தான் என்ன என்பதை அறிய விரும்பித் தனது மாணாக்கர்களையும் அழைத்து கொண்டு திருவெண்ணெய் நல்லுருக்குச் சென்றார். மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியாரிலும் வயதில் இளையவர். எனினும் அருணந்தியார் வந்ததைக் கண்டும் காணாதவர்போல இருந்து, மாணவர்களுக்கு ஆணவ மலத்தைப்பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். சினம் கொண்டு அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த அருணந்தியார் இடையே குறுக்கிட்டு ஆணவம் என்றால் என்ன என்று கேட்டார். அருணந்தியாரின் மனநிலையை உணர்ந்து கொண்ட மெய்கண்டார். அவரை நோக்கி "நீர் நிற்கும் நிலை தான் அது" எனக் கூற அருணந்தியார் தனது தவறை உணர்ந்து மெய்கண்ட தேவரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டார்.

நூல்கள்: மெய்கண்டாரின் தலைமை மாணவனாகத் திகழ்ந்த இவர் அவரால் இயற்றப்பட்ட தலை சிறந்த சைவ சித்தாந்த நூலான சிவஞான போதத்தைத் தழுவி, சிவஞான சித்தியார் என்னும் நூலை இயற்றினார். இந் நூலின் சிறப்புக்கு நிலத்திற்கு மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் இன்னொரு நூலான இருபா இருபஃது என்னும் நூலும் இவர் இயற்றியதே. சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறை ஞான சம்பந்தர் இவர் மாணாக்கர் ஆவார்.

காலம்: இவர் வாழ்ந்த காலம் பற்றித் தெளிவு இல்லை. து. அ. கோபிநாதராயர் என்பவர் கல்வெட்டு ஒன்றை ஆதாரமாகக் கொண்டு இவருடைய குருவான மெய்கண்ட தேவர் கி.பி. 1232 ஆம் ஆண்டின் வாழ்ந்து கொண்டிருந்தவர் என்ற கருத்தை முன்வைத்தார். எனினும் குறித்த கல்வெட்டிலே கூறப்பட்டுள்ளவர் சந்தான குரவரான மெய்கண்ட தேவர் தானா என்பதில் ஐயப்பாடு உள்ளது.
காஞ்சி மஹா பெரியவா ...

தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அடுத்த ஊர் காவேரிப்பட்டணம். 1944-ம் ஆண்டு மஹா பெரியவா அங்கே முகாமிட்டிருந்தார. ஒரு மாத காலமாக மகான் அங்கே தங்கியிருந்தபோது நித்திய நிகழ்ச்சிகளில் தினந்தோறும், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பிரபலங்கள், அரசாங்க அலுவலர்கள் போன்றோர் தவறாமல் பங்கேற்பது உண்டு.

இந்தக் கும்பலில் அஞ்சல் துறை அதிகாரி கோபால கிருஷ்ணனும் ஒருவர். மெத்தப் படித்தவர். காஞ்சி மகான் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். அதனால் காவேரிப்பட்டணத்திஅதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டு இருந்த போது ஓயுவு நேரத்தில் மடத்துக் காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதனால் மகானின் நேர் பார்வையிலும் பலமுறை தென்படக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதுவே பெரிய பாக்கியமல்லவா? தான் அல்லும் பகலும் போற்றும் தெய்வம் தன்னைப் பார்க்கிரார் என்பதே அருள் பெற்றது போலத்தானே?

சில தினங்களில் மகான் வேறு ஊருக்கு தனது முகாமை மாற்றிக் கொண்டார். இது நடந்து பல வருடங்களுக்குப் பின் மகான் வேறு ஓர் இடத்தில் முகாமிட்டிருந்தார. நிறைய பக்தர்கள் வரிசையாக ஆசி பெற்றுச் சென்ற வண்ணம் இருந்தனர். அந்த வரிசையில் நின்றவர்களில் அஞ்சல் அதிகாரி கோபால கிருஷ்ணனும் ஒருவர். ஓவ்வொருவராக நகர்ந்த பின் இவர் முறையும் வந்தது. நமஸ்காரம் செய்த பின் தீர்த்ததுக்காக தன் கையை நீட்டினார்.

தீர்த்தம் கொடுக்கும் முன் மகான் திடீரென நிமிர்ந்து பார்த்தார். ஏதோ கேள்வி கேட்கும் பாவனையில் கண்களைச் சுரிக்கி இவரைப் பார்த்தார். எதையோ ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறார் என்று நினைத்த அதிகார் “காவேரிப்பட்டணம் போஸ்ட் மாஸ்டர்.." என்று அடி எடுத்துக் கொடுக்க மகான் புன் முறுவலுடன் அவரை கைகளினால் ஆசீர்வதித்து “பரத்வாஜ கோத்திரம்!” என்றார்.

இரண்டே வினாடிகளில் இந்த சந்திப்பு நிகழ்ந்து விட்டது. என்றாலும் அதிகாரிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
அவ்வளவு கும்பலிலும் தன்னைக் கை தூக்கி ஆசீர்வதித்து தனது கோத்திரத்தை மறக்காமல் சொன்னார் என்றால் ஒவ்வொரு பக்தனின் சரித்திரத்தையும் அவர் ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்றுதானே அர்த்தம்?
பதினைந்து நாட்கள் பூலோகத்தில் தங்கும் முன்னோர்கள்!

வளர் பிறையான சுக்ல பட்சம் தேவதைகள் வழிபாட்டிற்கும் தேய் பிறையான அமரபட்சம் (கிருஷ்ணபட்சம்) முன்னோர்களான பிதுர் வழிபாட்டிற்கும் உகந்தது ஆகும். வருடத்தில் பன்னிரெண்டு கிருஷ்ண பட்சங்கள் வந்தாலும் அதில் பாத்ரபதமாதம் என்னும் புரட்டாசியில் வரும் மகாளயபட்சம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. ஒரே குடும்பத்தில் பிறந்து பணியின் காரணமாக பல ஊர்களில் வாழ்ந்தாலும் திருமணம் குலதெய்வ வழிபாடு போன்றவற்றில் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி நின்று கொண்டாடுவது போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வந்து தன் வாரிசுகளை நேரில் கண்டு வாழ்த்தும் காலமே மகாளயம் என கருதப்படுகிறது. பிதுர்லோகத்தின் தலைவரான எமதர்மனின் அனுமதியோடு முன்னோர்கள் பூலோகம் வந்து பதினைந்து நாட்கள் தங்குகிறார்கள். இந்த காலகட்டத்தில் மற்ற வழிபாடுகளை குறைத்துக் கொண்டு பிதுர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.
பூணுல் ஏன் இடது தோளில் அணிகிறோம்? பூணுல் ஏன் மூன்று பிரியாக இருக்கிறது?

இடது தோளில் பூணுல் அணிய வேண்டும் என்பது வேதத்தின் கட்டளை. எப்பொதும் பூணுல் இடது தோளின் இருக்க வேண்டும். இடது தோளின் பூணுல் இருக்கும் போது அதற்கு உபவீதி என்று சிறப்புப் பெயர்.

உபவீதியாக எப்பொதும் இருக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் (ஸதோப வீதினா பாவ்யம்) சொல்கிறது. தேவர்களுக்கு பணி விடை செய்யும் வேளையில் பூணுல் இடதுதோளில் இருக்க வேண்டும். அதாவது உபவீதியாக இருக்க வேண்டும்.

நம் முன்னோர்களை ஆராதிக்கும் போது பூணுல் வலது தோளில் இருக்க வேண்டும். (பிராச்ஸினாவீதி) ரிஷிகளை வழிபடும் வேளையில் இரு தோளிலுமாக தொங்க வேண்டும். அதாவது மாலை போல அணிய வேண்டும். முத்தொழிலின் வெளிப்பாடு முப்பிரி.

மூன்று ஆச்ரமங்களுக்கும் அது தேவை. காலம் மூன்று. மூர்த்திகள் மூன்று. வேதம் மூன்று. பூணுலின் பிரிவுகளும் மூன்று. மூன்று எண்ணிக்கை முற்று பெற்றதாக கூறும். ஏலத்தில் மூன்று முறை அழைப்பார்கள். நீதி மன்றத்திலும் மூன்று முறை அழைப்பார்கள். அது முற்று பெற்றதாக கருதுகிறோம்.

பூணுல் பரமாத்மா வடிவம் (யஞஜாக்ய பரமாத்மாய). பரமாத்மா மூன்று கால்களோடு எழும்பினார் (த்ரீபாத் ஊர்தவ) மூன்று அடி அளந்தவர். அப்போது முற்றுப் பெற்றது. தேவர்கள், ரிஷிகள், முன்னோர்கள் இம்மூவருக்கும் தினமும் பணிவிடை செய்ய வேண்டும். அதற்கு ஆதாரமான பூணுலும் மூன்று பிரியாக இருப்பது பொருந்தும்.

அவன் ஆராதிக்கும் காயத்ரீ மூன்றடிகளோடு விளங்குபவள். அவளை மூன்று வேளையும் வழிபட வேண்டும். அதற்கு காரணமாக பூணுலும் மூன்று பிரியாக வந்தது சிறப்பு.


சனி, 1 ஜூன், 2019

இரண்டாம் நூற்றாண்டு சிவலிங்கம்!

கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவலிங்கத்தை ஆந்திரா மாநிலத்திலுள்ள ரேணிகுண்டாவிற்கு அருகிலுள்ள குடிமல்லம் தலத்தில் தரிசிக்கலாம். 5 அடி உயரம் கொண்ட இச் சிவலிங்கத்திற்கு ஆவுடையார் கிடையாது. பாணத்திலேயே சிவபெருமானின் உருவம் உள்ளது. அதில் கைகளும், காலடியில் ஒரு அரக்கன் மிதிபட்டுக் கிடக்கும் காட்சியையும் காணலாம்.2ம் நூற்றாண்டு சிவலிங்கம்! கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவலிங்கத்தை ஆந்திரா மாநிலத்திலுள்ள ரேணிகுண்டாவிற்கு அருகிலுள்ள குடிமல்லம் தலத்தில் தரிசிக்கலாம். 5 அடி உயரம் கொண்ட இச் சிவலிங்கத்திற்கு ஆவுடையார் கிடையாது. பாணத்திலேயே சிவபெருமானின் உருவம் உள்ளது. அதில் கைகளும், காலடியில் ஒரு அரக்கன் மிதிபட்டுக் கிடக்கும் காட்சியையும் காணலாம்.நூற்றாண்டு சிவலிங்கம்!