வியாழன், 15 ஜூன், 2017

ராசி, நட்சத்திர மந்திரங்கள்!

ஸ்ரீ கணபதி மந்திரங்கள்

1. ஸ்ரீ வல்லப மஹா கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே
வசமானய ஸ்வாஹா

2. தன ஆகர்ஷண கணபதி மந்திரம்

ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே
வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி
தேஹி ஸ்வாஹா

3. வ்ராத கணபதி மந்திரம்

ஓம் நமோ வ்ராத பதயே
நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து
லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே
சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:

4. கணபதி காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய
தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்

5. ஸ்ரீ லட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

6. ஸர்வ வித்யா கணபதி மந்திரம்

தினமும் காலையில் 108 முறை சொல்ல கல்வி, அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.

ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ
வித்யாம் தேஹி ஸ்வாஹா

கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருக

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்திரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:

ஸ்ரீ மஹாலெட்சுமி மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஸ்ரீரியை நம

காலை மாலை 108 முறை சொல்லி வந்தால் விரைவில் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

மனோவியாதி, விரோதிகளால் அச்சம் நீங்கி மனோதைரியம் பெற

ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸூகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ !!

எடுத்த காரியத்தில் வெற்றி பெற

ராமதூத மஹாதீர ருத்ர வீர்ய சமுத்பவ
அஞ்ஜநாகர்ப்ப சம்பூத, வாயு புத்ரா நமோஸ்துதே

(திருமண தடைநீங்கி திருமணம் நடைபெற தினமும் பெண்கள் கூறவேண்டியது. இதை தினமும் 108 முறை சொல்லவும்)

சர்வ மங்கள மாங்கல்யே சிவே
சர்வார்த்த சாதகே ! சரண்யே
த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே

இதை மனதிற்குள் எப்பொழுதும் பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். தினமும் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் அஷ்டலெட்சுமியின் அருள் கிட்டும்.

ஸ்ரீசுப்ரமண்யர்

(செவ்வாய்தோஷம் விலக தினமும் 108 முறை சொல்லவும்)

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்
மஹாமதிம் திவ்ய மயூர வாகனம்
ருத்ரஸ்ய ஸுனும் ஸூரசைன்ய நாதம்
குஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

சகல காரியங்களும் ஸித்திக்கும் ஸ்ரீவித்யா மகா மந்திரம்

ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்டம சாதய சாதய ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ

சகல தேவதா ஸ்ரீகாயத்ரி மந்திரங்கள்
ஸ்ரீ காயத்ரி கஷ்டங்கள் விலக

ஓம்
பூர்ப் புவஸ்ஸுவ
தத்ச விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீம ஹி
தியோ யோந ப்ரசோதயாத்

1. ஸ்ரீசுப்ரமண்யர்

(செவ்வாய்தோஷம் விலக தினமும் 51- முறை சொல்லவும்)

ஓம்
தத்புருஷாய வித்மஹே
மஹாசே நாய தீமஹி
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்

2. ஸ்ரீருத்ரர் (சிவன்
(நவக்ரஹ தோஷம் விலக 11-முறை தினமும் சொல்லவும்)

ஓம்
தத்புருஷாய வித்மஹே
மஹாசே தேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரசோதயாத்

கீழ்க்கண்ட மந்திரத்தை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை பதினாறு முறை பாராயணம் செய்து, ஸ்ரீ துர்க்கையை நமஸ்கரிக்க வீட்டில் சர்வ மங்களமும் உண்டாகும்.

தும்துர்கே: துரிதம் ஹர

காலை தீப வணக்க மந்திரம்

காலையில் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் பொழுது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி ஏற்றவும்.

(பலன்: எல்லா காரியங்களும் வெற்றியடையும்)

ஸோயம் பாஸ்கர வித்யஸ்த
கிரணோத்கர பாஸ்வா
தீப: ஜ்யோதிர் நமஸ்துப்யம்
சுப்ரபாதம் குருஷ்வமே.

துளசியை வழிபட மந்திரம்

துளசி மாடத்தை மூன்று முறை வலம் வந்து கீழ்க்கண்ட மந்திரத்தை கூறினால் ஸ்ரீமஹாலட்சுமி கடாக்ஷம் உண்டாகும்.

நமஸ் துளசி கல்யாணி, நமோ விஷ்ணுப்ரியே சுபே
நமோ மோக்ஷப்ரதே தேவி: ஸம்பத் ப்ரதாயிகே.

கோ பூஜை மந்திரம்

பசுவை காலை வேளையில் தரிசனம் செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை கூற நல்ல அருள் கிடைக்கும்.

சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி
பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே.

அரசமர வழிபாட்டு மந்திரம்

அரச மரததை தரிசனம் செய்யும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி வழிபட நன்மைகள் விளையும்.

மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே
அக்ரதஸ் சிவரூபாய வ்ருக்ஷ ராஜாயதே நம:
ஆயுர்பலம் யசோவர்ச்ச: ப்ரஜா: பசு வஸுநிச
ப்ரம்ம ப்ரக்ஞாம் சமேதாம் சத்வம் நோதேஹி வனஸ்பதே.

வில்வ மரவழிபாட்டு மந்திரம்

வில்வ மரத்தை தரிசனம் செய்யும்போது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி வழிபட இறை அருள் கிட்டும்

தர்சனம் பில்வ வ்ருக்ஷஸ்ய
ஸ்பர்சனம் பாபநாசனம்
அகோர பாபஸம் ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

செல்வம் பெருக மந்திரம்
108 முறை சொல்லவும்

லக்ஷ்மீ-பதே கமல-நாப
ஸுரேஸ விஷ்ணோ
வைகுண்ட க்ருஷ்ண
மதுஸூதன புஷ்கராக்ஷ
ப்ரஹ்மண்ய கேஸவ
ஜனார்தன வாஸுதேவ
லக்ஷ்மீ - ந்ருஸிம்ஹ
மம தேஹி கரா வலம்பம்.

மேற்கண்ட மந்திரத்தை லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டு ஜெபிக்கவும்.

மாலையில் தீபம் ஏற்றும் போது கூற வேண்டிய மந்திரம்

மாலை நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை கூறி விளக்கேற்றினால் சகல சுகமும் உண்டாகும்.

சிவம் பவது கல்யாணம்
ஆயுராரோக்ய வர்த்தனம்
மம: துக்க வினாசாய
ஸந்த்யா  தீபம் நமோ நம:

கெட்ட கனவு பரிகார மந்திரம்

நீங்கள் தூங்கும் போது கெட்ட சொப்பனங்கள் ஏற்பட்டால் கீழ்க்கண்ட மந்திரத்தை 5 முறை கூறினால் பரிகாரம் ஏற்படும்.

ஓம் ஸ்ரீ கோவிந்தன நமஹ

வேலை கிடைக்க மந்திரம்

ஸ்ரீ தேவி ஹி அம்ருதோத்
பூதா-கமாலா-சந்த்ரசேபாநா
விஷ்ணு-பத்னீ வைஷ்ணவீச
வராஹோஹச்ச ஸார்ங்கிணீ
ஹரி-ப்ரியா தேவ-தேவி
மஹாலக்ஷ்மீ ச ஸுந்தரீ

ஸ்ரீலக்ஷ்மி தாயை வழிபட்டு மேற்கொண்ட மந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும்.

நாளும், கோளும் நல்லன ஆக மந்திர்ம

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நங்கிளை கிளைக்குங் கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.

சிவபெருமானையும், அம்பாளையும், வழிபட்டு 5முறை மேற்கண்ட மந்திரத்தை ஜெபிக்கவும்.

சுப மங்களங்கள் உண்டாக மந்திரம்

பிரம்மா முராரி:
த்ரிபுராந்தகஸ்ச
பாநுஸ்ஸீ பூமிஸுதோ புதஸ்ச
குருஸ்ச ஸுக்ர:
ஸநி-ராகு-கேதவ:
குர்வந்து ஸர்வே
மம ஸுப்ரபாதம்

மேற்கண்ட மந்திரத்தை காலை வேளையில் 21 முறை ஜெபித்து வர சுப மங்களங்கள் ஏற்படும்.

விதியை வெல்ல மந்திரம்

தங்குவர் கற்பகத் தாருவின் நீழிலில் தாயரின்றி
மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால் வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

ஞானமூர்த்தி நாள் வழிபாட்டு மந்திரங்கள்

அஷ்ட புஷ்பாஞ்சலி

ஓம் பவாய தேவாய நம:
ஓம் பவஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் ஸர்வாய தேவாய நம:
ஓம் ஸர்வஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் ஈசானாய தேவாய நம:
ஓம் ஈசானஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் பசுபதயே தேவாய நம:
ஓம் பசுபதஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் ருத்ராய தேவாய நம:
ஓம் ருத்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் உக்ராய தேவாய நம:
ஓம் உக்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை நம:
ஓம் பீமாய தேவாய நம:
ஓம் பீமஸ்ய தேவஸ்ய பதன்யை நம:
ஓம் மஹதே தேவாய நம:
ஓம் மஹாதேவஸ்ய பத்ன்யை நம:

அஷ்ட அர்க்கியம்

ஓம் பவம் தேவம் தர்ப்பயாமி
ஓம் பவஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் ஸர்வம் தேவம் தர்ப்பயாமி
ஓம் ஸர்வஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் ஈசானம் தேவம் தர்ப்பயாமி
ஓம் ஈசானஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் பசுபதயே தேவம் தர்ப்பயாமி
ஓம் பசுபதஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் ருத்ரம் தேவம் தர்ப்பயாமி
ஓம் ருத்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் உக்ரம் தேவம் தர்ப்பயாமி
ஓம் உக்ரஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் பீமம் தேவம் தர்ப்பயாமி
ஓம் பீமஸ்ய தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா
ஓம் மஹதே தேவம் தர்ப்பயாமி
ஓம் மஹா தேவஸ்ய பத்ன்யை ஸ்வாஹா

பஞ்ச கற்பூர ஆரத்தி

ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே ஸமேகமான் காம காமாய மஹ்யம் ! காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது ! குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம:

மந்த்ர புஷ்பம்

யோ பாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜவான் பசுமான் பவதி எ ஏவம் வேத ஆயதனம் வேத ஆயதனவான் பவதி

ஓம் வேதாதௌஸ்வர : ப்ரோக்தோ வேதாந்தேச ப்ரகடித : தஸ்ய ப்ரக்ருதி நஸ்ய:ய: பரஸ்ஸ மஹேஸ்வர

ஓம் கௌரி மிமாய ஸலிலானி தக்ஷத்யேகபதீ த்விபதிஸா சதுஷ்பதீ அஷ்டாபதி நவபதி பபூஷஷி க்ஷரா பரமே வ்யோ மன்

சதுர்வேதம்

ஓம் அக்னி மீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத் விஜம் ஹோதாரம் ரத்னதாதமம்

ஓம் இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்ஸத்தோபாய வஸ்த்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்ட்டதமாய கர்மணே

ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஓம்சந்ரோதே வீரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோரபிஸ்ரவந்து ந:

க்ருஹ்ய சூத்ரம்

ஓம் அதோதோ தர்ச பூர்ணமா ஸவ்யாக்யா ஸ்யாமஹ ப்ராதர் அக்னிஹோத்ரம் ஹுத்வா அன்ய மாஹம்ருணீயம் ம்ருண்ய அக்னே நன்வா ததாதி நஹ்ஸ்யோன்ய மக்னிம் ப்ரணயதி

இதிகாச புராணம்

ஓம் ஆஜ்யம் புருஷ மீசானம் புருஹுதம் புரஷ்க்ருதம்
பரமேகாக்ஷரம் ப்ரும்ம வ்யக்தா வ்யக்தம் சநாதனம்

ஸ்வஸ்தி வாசகம்

ஓம் ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தஸ்வா; ஸ்வஸ்திந: புஷா விஸ்வ வேதா
ஸ்வஸ்திநதார்ச்யோ அரிஷ்டநேமி: ஸ்வஸ்தினோ ப்ருஹஸ்பதிர் தாதது:

பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

ஓம் சிவலிங்கம்மணிஸ்ஸாக்ஷõது மந்த்ர: பஞ்சாட்சர சுத:
பூதரே ஒளஷதம் பும் சாந் த்ரிவிதம் முக்தி காரணம்

சிவஞான போதம்

ஓம் ஸ்த்ரிபும் நபும்சகா தத்வாது ஜகத: கார்ய தர்ஸனாது
அஸ்தி கர்த்தா சஹ்ருதவைதது ஸ்ருஜத்யஸ்மாத ப்ரபுர் ஹர:

தலமான்மியம்

விஸ்வஞ்ஞானம் சிவஞ்ஞானம் சர்வக்ஞானப் ரதாயகம்
ஆனந்த மயஞ்ஞானம் ஞானமூர்த்திம் சிவம் பஜே
ஞானசக்திம் ப்ராணசக்திம் சர்வ சக்திப் ரகாசிநீம்
சக்திசித் வியாபிநீம் தேவீம் ஞானாம்பிகாம் சிவாம் பஜே

பஞ்சாங்க ச்ரவணம்

திசேச்ச ச்ரியமாப்னோ தீவாராதாயுஷ்ய வர்த்தனம்
நட்சத்ராது ஹரதே பாபம் யோகாது ரோக நிவாரணம்
கரணாது கார்ய சித்திஞ்ச பஞ்சாங்கம் பலமுத்தமம்
வியோம வியாபி பரசிவ ப்ரம்மாத்மகம் மானசம்
ச்ருஷ்டி ஸ்திதி அதிகார போகம் அமலம் பாவாத்மகம் வாசிகம்
லோக÷க்ஷம சுரட்சண பாலனம் ஸ்வாபேட்ச சித்தா ரச்ரிதம்
வந்தே சுந்தர பரசிவ குடிலம் சித்தேச்வரம் சாச்வதம்

வாழ்த்து

ஞானநன் மறைகள் வாழ்க நற்றவம் வேள்வி வாழ்க
ஞானநல் லன்னை யோடும் ஞானநல் மூர்த்தி வாழ்க
ஊனமில் லரசு மன்னி உயர்தனிச் செங்கோ லோச்ச
வானநல் வளங்கள் ஆர்ந்து வையகம் வாழ்க ! வாழ்க !!


ஆஞ்சநேயர் பாடல்கள்!

1. ஸ்ரீ ராம ராமா வென்று ஜெய மாருதி - ஸதா
சிந்தித் திருக்கும் பக்த ஜெய மாருதி
ஜெய மாருதி ஜெய மாருதி

2. நீலக்கடலை ஒரு நீர்த்தாரைப் போல் - தாவிக்
குதித்த பக்த ஜெய மாருதி
ஜெய மாருதி ஜெய மாருதி

3. பொல்லாத ராவணனை லங்கேசனை - ஒரு
புழுவாய் மதித்த பக்த ஜெய மாருதி
ஜெய மாருதி ஜெய மாருதி

4. ஸீதையை சிறைமீட்ட ஜெய மாருதி - ஸதா
சிந்தித்திருக்கும் பக்த ஜெய மாருதி
ஜெய மாருதி ஜெய மாருதி

2. சஞ்சீவி மலையைக்....

சஞ்சீவி மலையைக் கொணர்ந்தவன்
சிரஞ்சீவி என்னும் பட்டம் பெற்றவன் ஹனுமான் (2)

அஞ்சனா தேவி கொஞ்சும் புத்திரன்
சஞ்சலம் துடைத்த ராம மித்திரன் - காத்திரன் (சஞ்)
ராமகதை தன்னில் மகிழ்பவன் -ஸீதா
ராமனை ஹ்ருதயத்தில் பூஜிப்பவன்
ராம நாமத்தின் பெருமை உணர்ந்தவன்
சோமனின் அம்ஸத்தைப் பெற்றவன் - கற்றவன் (சஞ்)
எங்கெல்லாம் ராம நாமம் உண்டோ அங்கெல்லாம் இருப்பது உண்டு
தம் அங்கம் மறந்த நிலை கொண்டு
ஜெய் ஜெய் ராம முகுந்த ஹரி ஹரி ஹரி ஜெய் ஜெய் ராம் (3)
அஞ்சலியுடன் துதிப்பதுண்டு அன்றும் இன்றும் (சஞ்)

3. அனுமனைப் பாடு மனமே....

அனுமனைப் பாடு மனமே - உன்னை
அணுவும் அணுகாது பயமே
நாள்தோறும் ஸ்ரீ ராம ஜெயமே சொல்லும்
வாழ்க்கையில் எல்லாம் இன்ப மயமே.

1. என்றும் அவனை நினைத்தால் போதும்
எதிர்ப்புகள் எல்லாம் மறந்தே போகும்
கவலை என்பது மலை என்றாலும்
கவலை வேண்டாம் அவன் கை தாங்கும்

2. சக்தியும் நல்ல புத்தியும் கொடுக்கும்
சமய சஞ்சீவி ராமனின் தூதன்
நம்பிக்கையோடு அவனைத் தொழுதால்
நமக்கென வருவான் நல்லருள் புரிவான்.

4. ஜெய் ஹனுமான்...

பல்லவி

ஜெய் ஹனுமான், ஜெய் ஹனுமான்
வாயு மைந்தா ஜெய் ஹனுமான்  (2)

ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்
வானர வீரா ஜெய் ஹனுமான்  (ஜெய ஹனுமான்)

ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்
வானர ராஜா ஜெய் ஹனுமான் (ஜெய ஹனுமான்)

ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்
இராம பக்தா ஜெய் ஹனுமான் (ஜெய ஹனுமான்)

ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்
இராம தூதா ஜெய் ஹனுமான்  (ஜெய ஹனுமான்)

ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்
மகானு பாவா ஜெய் ஹனுமான் (ஜெய ஹனுமான்)

ஐயப்பன் பாடல்கள்!

சபரிமலையில்....

சபரிமலையில் வண்ண சந்திரோதயம் தர்ம
சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம்
கோடிக்கண் தேடிவரும் ஐயப்பனை...நாமும்
கும்பிட்டுப் பாடுகின்றோம் என்னப்பனை  (சபரி)
பாலெனச் சொல்லுவதும் உடலாகும் - அதில்
தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும்
வெண்ணெய் திரண்டதுந்தன் அருளாகும்.... இந்த
நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும்
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா...இந்த
ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும்
ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி)

வாசமுடைய பன்னீர் அபிஷேகம்... எங்கள்
மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம் - அதில்
இனிய பஞ்சாமிர்தத்தின் அபிஷேகம்
இன்பத்தைக் கூட்டுதய்யா உன் தேகம்
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா - இந்த
ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா ஐயப்பா
ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி)
உள்ளத்தின் வெண்மைதன்னைக் கையிலெடுத்து - அதில்
உன் பெயரைக் குழைத்து நெற்றியிலிட்டு
உருகும் விபூதியினால் அபிஷேகம்...ஹரி
ஓம்மென்று சந்தனத்தில் அபிஷேகம்
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா - இந்த
ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி)

தேடுகின்ற கண்களுக்கு...

தேடுகின்ற கண்களுக்கு ஓடி வரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி
வாடுகின்ற ஏழைகளின் வறுமை

வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி  (தேடு)

கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே... எங்கள்
காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே
அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே...எங்கள்
அன்பு வைத்து நதி வரைக்கும் ஓடி வந்தாயே
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி  (தேடு)

தந்தையுண்டு அன்னையுண்டு எந்தன் மனையிலே...ஒரு
தம்பிமட்டும் பிறக்கவேண்டும் உந்தன் வடிவிலே
அன்புகொண்டு தந்தைக்கவன் செய்யும் பணியிலே...நாங்கள்
ஆண்டுதோறும் வந்து நிற்போம் உந்தன் நிழலிலே
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி (தேடு)

சுவாமியே சரணம்...

சுவாமியே சரணம் சரணம் பொன்னயப்பா
சரணம் பொன்னயப்பா சுவாமி இல்லாதொரு
சரணம் இல்லையப்பா
ஹரிஹர சுதனே சரணம் பொன்னயப்பா
சுவாமி பொன்னயப்பா சரணம் பொன்னயப்பா
சுவாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா
பொன்னம்பல ஜோதியே சரணம் பொன்னயப்பா
சுவாமி பொன்னயப்பா சரணம் பொன்னயப்பா
சுவாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா
சபரிமலை வாசா சரணம் பொன்னயப்பா
சுவாமி பொன்னயப்பா சரணம் பொன்னயப்பா
சுவாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா

ஐயப்பா ஐயப்பா...

ஐயப்பா ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா என்றாலே அல்லல் எல்லாம் அகழும்
அதுவே மெய்யப்பா மெய்யப்பா
சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா
அன்னை நோயை தீர்ப்பதற்கு ஐயன் புலிபால் கொண்டு வந்தான்
அரக்கர் குலத்தை அழிப்பதற்கு அழகுதேவன் அவதரித்தான் (ஐயப்பா)
யோக நிலையில் சபரி என்னும் உச்சி மலையில் வீற்றிருப்பான்
பாவம் போக்கும் பதினெட்டு படிகள் காண நமை அழைப்பான் (ஐயப்பா)
மகர ஜோதி காண்பதற்கு மாதம் முழுவதும் நோம்பிருந்தோம்
இரவும் பகலும் எண்ணி எண்ணி நினைவில் வைத்தே வேண்டுகிறோம் (ஐயப்பா)

ஆயிரம் தீபங்கள்...

ஆயிரம் தீபங்கள் ஆயிரம் தீபங்கள்
கண்ணில் தெரிகிறது - பம்பை ஆற்றில்
மணிகண்டன் பிறந்தது பம்பை ஆற்றில்

1. வில்லும் அம்பும் கொண்டவரை
விரதம் இருந்து வணங்கிடுவோம்
விரதம் இருக்கும் சக்தியினால்
வெற்றிகளை நாம் அடைந்திடுவோம் (ஆ)

2. சக்தி மிகுந்த ஆண்டவரை
சரணம் சொல்லி அழைத்திடுவோம்
சரணம் சொல்ல சரணம் சொல்ல
ஐயன் என்றும் நம்மிடையே (ஆ)

3. அழுதா நதியில் குளித்திடுவோம்
அன்னதானங்கள் செய்திடுவோம்
அமுதா மலையும் கரிமலையும்
கடந்து பம்பையை அடைந்திடுவோம் (ஆ)

4. ராமா ராமா என்று நாம்
ராம நாதனை வணங்கிடுவோம்
ராம நாதனை வணங்கி விட்டு
சபரிமலை ஏறிடுவோம்

5. சத்தியமான பதினெட்டாம்
படிகள் மீது ஏறிடுவோம்
படிப்படியாக நம் வாழ்வும்
உபயம் ஐயன் சக்தியினால் (ஆ)

ஐயப்பன் துதி

பூதநாத சதானந்த சர்வபூத தயாபரா
ரட்சரட்ச மஹா பாஹோ சாஸ்த்ரேதுப்யம் நமோநம:



குரு ராகவேந்திரா துதி

குரு ராகவந்திராய நமஹ  (3 தடவை)

1. பிரஹலாதன் என வியாஸர் ராயரென
நாரனெனை பாடும் திருவருளை
ராகவேந்திரா நின் திருவடி சரணம்
பணிந்து விட்டோம் இது அவன் செயலே  (குரு)

2. ஆஞ்சனேயர் துதி ஆற்றும் தவக்கோலம்
என்றும் சிரஞ்சீவி எம் குருவே
இம்மையும் இன்றி மறுமையும் இன்றி
எங்கள் வாழ்வில் வரும் திருவுருவே  (குரு)

3. மூலராமன் புகழ் போற்றும் வேந்தனை
சீலம்மேலிடும் திருமணியே
பிருந்தாவனத்தில் மருந்தாய் இருக்கும்
மன்னனே எங்கள் குரு மணியே
குரு ராகவேந்திராய சரணம்

குரு ஸ்துதி

1. ஹம்ஸ ஹம்ஸ பரமஹம்ஸ
ராம கிருஷ்ண குரவே நமஹ - ஹம்ஸ

2. ஜோதி ஜோதி பரம ஜோதி
ராம கிருஷ்ண குரவே நமஹ

3. தேவ தேவ மகாதேவ
ராம கிருஷ்ண குரவே நமஹ
ஹே ராம கிருஷ்ண குரவே நமஹ

4. ராம ராம ஹரே ராம
ராம கிருஷ்ண குரவே நமஹ
ராம ராம ஹரே ராம
ராம கிருஷ்ண குரவே நமஹ

5. கிருஷ்ண கிருஷ்ண ஹரே கிருஷ்ண
ராம கிருஷ்ண குரவே நமஹ.


வெக்காளி அம்மன் வழிபாடு!

கணபதி வாழ்த்து

1. ஜந்து கரத்தினை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.

2. கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸூதம் சோகவி நாச காரணம்
நமாமி, விக்னேஸ்வர பாதபங்கஜம்
ஓம் ஸீமுகாய நம: ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம: ஓம் கஜகர்ணாகாய நம:
ஓம் லம்போதராய நம: ஓம் விதடாய நம:
ஓம் விக்ன ராஜாய நம: ஓம் கணாதி பாய நம:
ஓம் தூம கேதவே நம: ஓம் கணாத்யஷாய நம:

ஓம் பாலசந்த்ராய நம: ஓம் கஜானனாயாநம:
ஓம் வக்ரதுண்டாயா நம: ஓம் ஸூர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹோம்பாய நம: ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் ஸ்ரீ விஸ்னெஸ்வர ÷ஷாடஸ நாமாவளி
நானாவித மந்த்ர, பளமள பத்ர புஷ்பணி சமர்ப்பயாமி
ஓம் காளி  ஜெய் காளி
ஓம் காளிகாயை ச. வித்மஹே. ச்மசான
வாஸின்யை தீமஹி ! தந்தோ கோரா
ப்ரசோதயாத்
தனம் தரும் : கல்விதரும். ஒரு நாளும்
தளர்வறியா
மனம் தரும் : தெய்வ வடிவும் தரும் நெஞ்சில்
வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர்
என்பவர்க்கே
கனம் தரும் : பூங்குழலாள் அபிராமி
கடைக்கண்களே.

வெக்காளி அம்மன் வழிபாடு

ஓம் சக்தி வாழ்க வாழ்க
ஓங்கார பொருளும் வாழ்க
அம்சக்தி இவளனவே
அனைவரும் தொழ வாழ்க
அருவாக உருவாக அருள் உருவாய்
அம்மன் அருள் கவசம் தனை
காலத்தை உண்டோன் தன் அகத்தே
உள்ளவளை மனமே துதி

உறையூர் தனிலே அமர்ந்திட்ட தாயே
உன் திருவடியை தந்தருள்வாயே
வெட்ட வெளியில் இருக்கும் என் தாயே
வேதனை தீர்க்கும் வெக்காளி நீயே

பகவதி நீயே பார்வதி நீயே
உறையூர் தனிலே வாழ்பவள் நீயே
உன்புகழ் பாட வரம் எனக்கருள்வாய்
நின்பதம் பணிவோம் வெக்காளி தாயே

மண் மழை தவிர்த்த மாகாளி நீயே
மக்களை காத்த வெக்காளி தாயே
சினம்கொண்ட சிவனை சிந்தையில் அடக்கி
சீர் செய்தாயே வெக்காளி தாயே

ஜகமது யாவும் ஜயஜய எனவே
வெக்காளி உன்னை பாடிடுவோமே
நின்பதம் வந்தோம் உள்ளத்தை தந்தோம்
உன்னை நினைந்து பாடிடுவோமே!

வல்லவள் நீதான், வஞ்சியும் நீதான்!
வசந்தமும் நீதான் வெக்காளி தாயே
நல்லறம் நீதான், நன்மையும் நீதான்
நற்சுவையும் நீதான் வெக்காளி தாயே!

உலகை ஈன்றவள் நீதானம்மா
உண்மை என்பதும் நீதானம்மா
நன்மை செய்வதும் நீதானம்மா
நலம் பெற செய்வதும் நீதானம்மா!

அம்மா என்றே உனை அழைத்தாலே
அன்பால் என்னை ஆட்கொள்வாயே !
அண்டங்கள் எல்லாம் ஈன்றவள் நீயே
ஆதி பரம்பொருள் சக்தியும் நீயே !

கனகன தகதக பசபச எனவே
தளிர்விடும் ஜோதி ஆனவள் நீயே
மோகநிவாரணி, சோக நிவாரணி
தாக நிவாரணி வெக்காளி நீயே!

உந்தன் நாமம் என்றும் பாட
ஊக்கம் தந்திட வேண்டும் அம்மா
தந்தன தான தனதன தான
தாண்டவ நடன ஈஸ்வரி நீயே!
குன்றினிதேவி, முனையொலி சூலி
முனிவர்கள் போற்றும் வெக்காளி நீயே
உறையூர் வாழும் வெக்காளி தாயே!
உன்திருவடியை தொழுதிடுவோமே!

காளியும் நீயே, காமினி நீயே
கார்த்திகை நீயே வெக்காளி தாயே
நீலினி நீயே, நீதினி நீயே, நீர்நிதி நீயே
நீரொலி நீயே
மாலினி நீயே, மாதினி நீயே மாதவி நீயே
வான்விழி நீயே
உறையூர் வாழும் வெக்காளி நீயே!
உன் திருவடியை தொழுதிடுவோமே!
நாரணி மாயை நான்முகன் தாயே
நாதினி நீயே வெக்காளி தாயே
பூரணி மாயை ஊற்றும் நீயே

உன் புகழ்பாட அருள்வாய் நீயே
தாரணி மாயை தாருணி தாயே
கனகாம்பிகையே காசினி தாயே
உறையூர் வாழும் வெக்காளி நீயே
உன்திருவடியை தொழுதிடுவோமே
வேதமும் நீயே வேதியியல் நீயே
வேதமும் நீயே வெக்காளி தாயே

நாதமும் நீயே நல்இசை நீயே
ஞானமும் நீயே, நாயகி தாயே
உலகமும் நீயே, உமையவள் நீயே
உண்மையும் நீயே வெக்காளி தாயே
காலமும் நீயே, கவிதையும் நீயே
காத்திடுவாயே காளியும் நீயே
உயிரும் நீயே, உடலும் நீயே
உலகமும் நீயே வெக்காளி தாயே
நாவுரை ஜோதி நற்றிசை ஜோதி
நாட்டிய ஜோதி சுடரொளி நீயே
அன்பின் வடிவே ஆறுதல் தருவாய்
அங்கம் முழுதும் தன்னுடையாளே

இன்னல்கள் தீர்க்கும் வெக்காளி நீயே
இகம்பர சுகத்தை தந்தருள்வாயே
ஊரை காப்பவள் நீதானம்மா
உன்பதம் சரணம் சரணம் அம்மா

ஏற்றம் தருவது நீதானம்மா,
எங்கும் நிறைந்தவள் வெக்காளி அம்மா
குங்குமத்தோடு சந்தனம் பூசி
மங்கல செல்வி வெக்காளி அம்மா

தினமது அபிஷேகம் பூ அலங்காரம்
பூஜையை ஏற்பவள் நீதானம்மா
கண்களில் வேகம் கைகளில் சூலம்
ஏந்திய நாயகி வெக்காளி நீயே

திருசாம்பலினால் ஆயிரமாயிரம்
சக்தியை கொடுப்பவள் நீதானம்மா
எத்தனை இன்பம் உன்திருநாமம்
எத்தனை சக்தி உன்திருரூபம்

எத்தனை சாந்தி உன் அருள் நாமம்
எத்தனை அன்பு வெக்காளி அம்மா
எனை மறந்தாலும் இவ்வுலகினிலே
உனை மறவேனோ வெக்காளி அம்மா

அலைபாயும் எந்தன் மனதினில் நின்று
ஆறுதல் அளிப்பாய் வெக்காளி அம்மா
காற்றினில் ஆடும் தீபத்தை போல
கலங்கி நின்ற வேளையில் நீயே

ஆறுதல் தந்து அருள்புரிவாயே அம்மா
தாயே வெக்காளி நீயே
தீயில் விழுந்த புழுவை போல
தவித்து நின்ற வேளையில் நீயே

கருணையில் என்னை காத்திடுவாயே அம்மா
தாயே வெக்காளி நீயே
கானல் நீர்போல் காணும் காட்சி கவலையை
தீர்ப்பாய் வெக்காளி தாயே

வாழ்க்கை என்ற ஓடத்தில் தாயே வளம்பெற
செய்வாய் வெக்காளி நீயே
கலங்கரை விளக்காய் இருப்பவள் நீயே
கரைதனில் சேர்ந்திட கருணை செய்வாயே
முழு முதல் தாயை அறிமுகம் செய்து
அனைவருக்கும்
அருளை கொடுப்பவள் நீயே
அலையும் மனதை நிலையாய் வைத்து
அணையா சுடரால் ஆட்கொள்வாயே

துயர் வந்த போதும் துணையாய் இருந்து
வழியை காட்டும் வெக்காளி நீயே
பொய்யான உலகில் புது வாழ்வை தந்து
மெய்யான பாதையை காட்டிடுவாயே

பொல்லாத மனதை பொன்போல் ஆக்கி
புகழ்தனை தருவாய் வெக்காளி தாயே
சக்தியின் சொல்லில் பொருள்கள் கோடி
சத்திய பாதையை காட்டிடுவாயே

இருளை நீக்கிய ஈஸ்வரி நீயே
ஞான ஒளியை தந்தருள்வாயே
முள்ளான என்னை மலர்போல் ஆக்கி
மோட்சத்தை தருவாய் வெக்காளி நீயே

கல்லான என்னை கனிபோல் ஆக்கி
காத்தருள்வாயே வெக்காளி தாயே
அன்ன சக்தியும் நீதான் அம்மா
ஆறுதல் தருவதும் நீதான் அம்மா

உறையூர் வழும் எங்கள் தாயே
உன்அடி சரணம் சரணம் அம்மா
அகிலத்தை ஆள்வதும் நீதானாம்மா
அக்கினி வடிவம் நீதானம்மா

அம்பிகை என்பதும் நீதானம்மா
அகிலாண்டேஸ்வரி நீதானம்மா
சிங்க வாகினி நீதானம்மா
விஸ்வரூபினி நீதானம்மா

அங்காள ஈஸ்வரி நீதானம்மா
அனைத்தையும் காப்பவள் நீதானம்மா
உறையூர் வாழும் வெக்காளி அம்மா
உன்பதம் சரணம் சரணம் அம்மா

சக்தி மாரியும் நீதானம்மா
சஞ்சலம் தீர்ப்பதும் நீதானம்மா
முத்து மாரியும் நீதானம்மா

மூகாம்பிகையும் நீதானம்மா
காளி என்பதும் நீதானம்மா
நீலி என்பதும் நீதானம்மா
சூலி என்பதும் நீதானம்மா
வந்தருள்வாயே வெக்காளி தாயே
என்னை படைத்து நீதானம்மா
என்குறை தீர்ப்பது நீதானம்மா
கதியை தருவது நீதானம்மா
அனைத்தையும் கொடுப்பது வெக்காளி அம்மா
ஆதி சக்தியும் நீதானம்மா
அமர சக்தியும் நீதானம்மா
பராசக்தியும் நீதானம்மா

பருவ சக்தியும் நீதானம்மா
இச்சா சக்தியும் நீதானம்மா
கிரிய சக்தியும் நீதானம்மா
ஏக சக்தியும் நீதானம்மா

என்குறை தீர்ப்பதும் நீதானம்மா
ஞான சக்தியும் நீதானம்மா
ஞானத்தை தருவதும் நீதானம்மா
இந்து சக்தியும் நீதானம்மா வேத சக்தியும் நீதானம்மா
மூலசக்தியும் நீதானம்மா
முதலும் முடிவும் நீதானம்மா

பிரம்ம சக்தியும் நீதானம்மா
பிணிகளை தீர்ப்பதும் நீதானம்மா
கிரியா சக்தியும் நீதானம்மா
கீர்த்தியை தருவதும் நீதானம்மா

முடிலாசக்தியும் நீதானம்மா
குவளையம் காப்பது நீதானம்மா
சிற்றாசக்தி நீதானம்மா, சித்தியை தருவது நீதானம்மா
யோக சக்தியும் நீதானம்மா
யோகேஸ்வரியும் நீதானம்மா

தவத்தின் சக்தியும் நீதானம்மா
தத்துவம் தருவது நீதானம்மா
நித்தியம் தருவது நீதானம்மா
நின்பதம் சரணம் சரணம் அம்மா

காத்திட வேணும் எனையே வருக
வருக வருக வெக்காளி வருக
ஆழ்கடல் தனிலே பிறந்தவள் நீயே
ஆதிசக்தியே வருக வருக

காப்பவள் நீயே வருக வருக
கருணை கடலே வருக வருக
ஆதிபராசக்தி அம்மா வருக
அகிலம் நீயே வருக வருக

பக்தருக்கு அருளிட வருக வருக
சங்கரிதாயே சடுதியில் வருக
அம்மா தாயே அருள் புரிவாயே
அகிலத்தை காப்பவள் வெக்காளி தாயே

ஆதிசக்தியே அகிலமும் நீயே
ஆதியே ஜோதியே வருக வருக
அருள்நிறை வடிவே வருக வருக
ஆதியில் பாதியே வருக வருக

வெக்காளி அம்மா வருக வருக
பகவதி அம்பிகை பைரவி வருக
வராத சக்தியே வரம்தர வருக
தந்திர சக்தியே தவ சக்தி வருக

காளிகாம்பிகையே காத்திட வருக
கவலைக்கு மருந்தே காளியே வருக
சொந்தமும் பந்தமும் வெக்காளி வருக
ஆதியும் அந்தமும் அங்காளி வருக

எழில்மிகு முகமும் என்முன் வருக
கோல்விழி நீண்ட படர்ந்த முகமும்
காதுவரையும் நீண்ட கண்களும்
வில்லைபோல வளைந்த புருவமும்

சூரிய சந்திரன் கோல்விழி அழகும்
கோவை கனிபோல் கனிந்த செவ்வாயும்
கருணை முகமும் குங்கும திலகமும்
விரிந்த சடையும் கூந்தலின் அழகும்

செவிகள் இரண்டிலும் குண்டலம் அணிந்து
சிரசில் தங்க கீரீடம் அணிந்து
கழுத்தினில் முத்தார மாலை அணிந்து
திருமாங்கல்யம் அட்டிகையும் அணிந்து

கைகளில் கங்கனம் வளையல் அணிந்து
திரிசூலம் உடுக்கை வலக்கையில் பிடித்து
பாசாங்குசமும் அட்சய பாத்திரம்
இடுப்பில் யோக பட்டயம் அணிந்து

வலது காலை மடியில் வைத்து
இடது காலை அசுரன் மேல் வைத்து
உறையூர் வாழும் ஆதிசக்தியே
வெக்காளி தாயே வரம் தருவாயே

அன்பர்க்கருளும் யோகேஸ்வரியே
அன்பே அருளே சரணம் சரணம்
எங்கும் நிறைந்த வெக்காளி தாயே
எங்களை காத்திட முன் வருவாயே

சுடர்போல் தோற்றம் என்குலதாயே
இடர்களை போக்கி எனை அருள்வாயே
அங்காளஈஸ்வரி அருள் புரிவாயே
அருள்மிகு வெக்காளி அகிலமும் நீயே
அபயம் காத்திடும் அன்னையும் நீயே

அமாவாசையில் ஒளியினை தந்தாய்
ஆதியேசரணம்
அன்னமும் சொர்ணமும் காத்திடுவாயே
ஜோதியே சரணம்
பூரணி நாரணி சரணம் சரணம்
புவனேஸ்வரியே சரணம் சரணம்

உறையூர் தனிலே அமர்ந்தாய் சரணம்
வெக்காளி அம்மா சரணம் சரணம்
ஆக்கலும் அழித்தலும் உன் அருள்தாயே
அடியெனை காத்திட முன் வருவாயே
வேப்பிலை கண்ணின் வினைகளை தீர்ப்பாய்

குங்குமம் குறைந்தாய் கோயிலில் அமர்ந்தாய்
கருணை கடலாய் இருப்பவள் நீயே
கலங்கரை விளக்காய் எங்கும் நீயே
காளியும் நீயே, நீலியும் நீயே
கற்பூரதீபத்தில் காட்சி தந்தாயே

உறையூர் அமர்ந்தாய் வெக்காளி தாயே
உயிர் ஓவியமே உலகாம்பிகையே
உடலும் உணர்வும் நீதானம்மா
உடலோடு உயிரையும் காப்பாய் நீயே

நிலவில் நின்றவள் நீதானம்மா
நித்தியம் தருவது நீதானம்மா
இரவினில் நிற்பது நீதானம்மா
தேவியே வெக்காளி வருவாய் அம்மா

பொற்பத மேடையில் அற்புதம் தந்து
புவனங்கள் அனைத்தும் காப்பவள் நீயே
இமையவள் மகளும் நீதானம்மா
இகம்பர சுகம்தரும் வெக்காளி அம்மா

வெக்காளி அம்மன் கவசம்

காக்க காக்க காளியே காக்க
காக்க காக்க கருமாரியே காக்க
நோக்க நோக்க நோய்களை நீக்க
தாக்க தாக்க தடைகளை தகர்க்க

பார்க்க பார்க்க பவபயம் நீங்கிட
பார்க்க பார்க்க பாவங்கள் ஓடிட
பில்லி சூனியம் தவ முனியோர்கள்
உந்தனை கண்டால் ஓடியே ஒளிய

பிரம்ம ராட்சசரும் காற்றும் கருப்பும்
என் பெயர் சொன்னால் கலங்கி அலறிட
வெக்காளி தாயே உன்துணை இருந்தால்
அணுகிய துயரம் அகன்று போகும்

மனிதனும் மிருகமும் கொல்லாதிருக்க
கடியும் பிடியும் சேராதிருக்க
துன்பமும் சோகமும் சூலாதிருக்க
துர்க்கை என்னும் வெக்காளி துணையாயிருப்பாய்

அம்மனின் 108 நாமங்கள்

ஓம் என்னும் பொருளே ஓம் ஓங்கார நாயகி ஓம்
ஆங்காரி ரீங்காரி ஓம் அங்காள ஈஸ்வரி ஓம்
அகிலாண்டநாயகி ஓம், ஆனந்த வல்லியே ஓம்
அந்தரி சுந்தரி ஓம், அபிராமி தாயே ஓம்
அக்கினி சக்தியே ஓம், ஆனந்த தாண்டவி ஓம்
ராஜராஜேஸ்வரி ஓம், ராமலிங்கேஸ்வரி ஓம்
கருமாரி தாயே ஓம், கற்பக வல்லியே ஓம்
காயத்ரி தேவியே ஓம், கங்கா துவானியே ஓம்
கண்ணாத்த தாயே ஓம், கன்னியாகுமரியே ஓம்
கனகாம்பிகையே ஓம், காமாட்சி தாயே ஓம்

காந்திமதி தாயே ஓம், கற்பூர சுந்தரி ஓம்
கன்னிகா பரமேஸ்வரி ஓம், கனகதுர்க்கையே ஓம்
இளவஞ்சி கொடியே ஓம், இமையக்கரசியே ஓம்
வேப்பிலைகாரி ஓம், வெக்காளி தாயே ஓம்
வேதாம்பிகையே ஓம், வேதநாயகியே ஓம்
சமயபுரத்தாளே ஓம், செண்பக வல்லியே ஓம்
சர்வேஸ்வரியே ஓம், சந்தன மாரியே ஓம்
சத்திய மாரியே ஓம், சாமுண்டிஸ்வரி ஓம்
சர்வசக்தியே ஓம், சாம்பிராணிவாசகி ஓம்
உமா மகேஸ்வரி ஓம், உலகாம்பிகையே ஓம்

உண்ணாமுளையே ஓம், உக்கிரங்கிரியே ஓம்
முண்டக கன்னியே ஓம், மூகாம்பிகையே ஓம்
கோமள வல்லியே ஓம், கோமதி அன்னையே ஓம்
கொப்புடைநாயகி ஓம், கோட்டை மாரியே ஓம்
கொடுங்கனூர் பகவதி ஓம், கோலவிழிதாயே ஓம்,
கோர சொருபியே ஓம், குங்கும தாயே ஓம்,
குண்டல தேவியே ஓம், குரூமாரி தாயே ஓம்,
மலையாள பகவதியே ஓம், மயான காளியே ஓம்,
மங்கள நாயகி ஓம், மான்விழி தேன்மொழி ஓம்,
மருவத்தூர் சக்தி ஓம், மதுரை மீனாட்சி ஓம்,

வல்லத்தரசியே ஓம், வடிவுடை தாயே ஓம்,
வாகேஸ்வரியே ஓம், வக்ர காளியே ஓம்,
விஸ்வரூபினி ஓம், விசாலாட்சியே ஓம்,
சோக நிவாரணி ஓம், ரோக நிவாரணி ஓம்,
புவனேஸ்வரியே ஓம், பூமாரி தாயே ஓம்,
தில்லை காளியே ஓம், சிவசக்தி தாயே ஓம்,
கஞ்சி காமாட்சி ஓம், காசி விசாலாட்சி ஓம்,
நிரந்தரி நிமலியே ஓம், நித்திய கல்யாணி ஓம்,
பவானி தாயே ஓம், பன்னாரி மாரி ஓம்,
நெல்லுகடைமாரி ஓம், நீலி கபாலி ஓம்,

துர்க்கை அம்மனே ஓம், துலுகானத்தம்மனேஓம்,
பராசக்தியே ஓம், பரமேஸ்வரியே ஓம்,
இளங்கண்மாரியே ஓம், ஈஸ்வரி தாயே ஓம்,
அமலாம்பிகையே ஓம், ஆத்மாம்பிகையே ஓம்,
நல்லாம்பிகையே ஓம், நடனாம்பிகையே ஓம்,
திருவுடைநாயகி ஓம், திருமுல்லை தேவியே ஓம்,
எல்லைமுத்துமாரி ஓம், நல்லைமுத்துமாரி ஓம்,
மூங்கில் அம்மனே ஓம், முக்கோண நாயகி ஓம்,
பத்ரகாளியே ஓம், பகவதி தாயே ஓம்,
பாகேஸ்வரியே ஓம், படை வீட்டம்மனே ஓம்,

பச்சையம்மனே ஓம், பைரவி தாயே ஓம்,
மாங்காட்டு மாரியே ஓம், மண்டியம்மாதாயே ஓம்,
முத்தாளத்தம்மனே ஓம், முக்குடைத்தம்மா ஓம்,
சோலையம்மனே ஓம், செல்லி அம்மனே ஓம்,
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம், ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்,
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம், ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

வெக்காளி அம்மன் 108 போற்றி

ஓம் சக்தியே போற்றி
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் ஞான சக்தியே போற்றி
ஓம் வெக்காளி அம்மயே போற்றி
ஓம் ஆதி சக்தியே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் ஏழைகளின் தாயே போற்றி
ஓம் மங்கல நாயகி போற்றி
ஓம் மதுரையை எரித்தாய் போற்றி

ஓம் ஈசனின் தேவி போற்றி
ஓம் இடபாகம் அமர்ந்தாய் போற்றி
ஓம் தில்லைகாளியே போற்றி
ஓம் சிறுவாச்சூர் காளியே போற்றி
ஓம் அம்மை உமையே போற்றி
ஓம் ஆனந்த வல்லி போற்றி
ஓம் மாயனின் தங்கை போற்றி
ஓம் மணி மந்திரகாளி போற்றி
ஓம் ஆனந்த நடனமாடும் தேவியே போற்றி
ஓம் செங்கண்மா தங்கை போற்றி

ஓம் சிதம்பரம் காளி போற்றி
ஓம் வேலனின் தாயே போற்றி
ஓம் வேல் தந்த வித்தகி போற்றி
ஓம் சந்தன காப்பில் சிரிப்பாய் போற்றி
ஓம் சங்கரன் நாயகி போற்றி
ஓம் உறையூரின் தேவி போற்றி
ஓம் உள்ளத்தில் நிறைந்தாய் போற்றி
ஓம் மங்கையர்க்கரசி போற்றி
ஓம் மாணிக்க வல்லி போற்றி
ஓம் கருணை உள்ளம் கொண்டாய் போற்றி

ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் கனக வல்லியே போற்றி
ஓம் காரணி பூரணி போற்றி
ஓம் தக்கன் கடை மொழிதாய் போற்றி
ஓம் சாம்பவி சங்கரி போற்றி
ஓம் அங்கையர் கண்ணி போற்றி
ஓம் ஆதிபராசக்தியே போற்றி
ஓம் வெட்ட வெளியில் அமர்ந்தாய் போற்றி
ஓம் வெக்காளி தேவியே போற்றி
ஓம் மோகத்தை அழிப்பாய் போற்றி

ஓம் முக்கண்ணன் தேவியே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி
ஓம் சிக்கலை தீர்ப்பாய் போற்றி
ஓம் மக்கள் மனதில் நிறைந்தாய் போற்றி
ஓம் மழலைச் செல்வம் தருவாய் போற்றி
ஓம் தத்துவ பொருளே ஆனாய் போற்றி
ஓம் சாம்பவி சங்கரி மனோன்மணி போற்றி
ஓம் சரணாபுயத்தி சம்ஹாரியே போற்றி
ஓம் நமோ பகவதி உத்தமி போற்றி
ஓம் பஞ்சாசர பகவதி போற்றி

ஓம் எஞ்சாகரத்தி இன்பதாண்டவியே போற்றி
ஓம் ஆணவம் அகற்றிஆட்கொள்வாய் போற்றி
ஓம் நவ வடிவான நாராயணி போற்றி
ஓம் ஜோதி சுடராய் ஜொலிப்பாய் போற்றி
ஓம் சிவ சிவ சிவசங்கரி போற்றி
ஓம் தந்தையும் தாயும் ஆனாய் போற்றி
ஓம் இடைப்பின் தலையில் இருப்பாய் போற்றி
ஓம் கடை சுழி முனையில் கலந்தாய் போற்றி
ஓம் முச்சுடராகி முளைந்தாய் போற்றி
ஓம் மூலத்தில் நின்ற முதல்வியே போற்றி

ஓம் ஜாலங்கள் புரியும் சமர்ப்பியே போற்றி
ஓம் ஒரெழுத்தான உத்தமியே போற்றி
ஓம் ஈரெழுத்தான ஈஸ்வரியே போற்றி
ஓம் முன்றெழுத்தான முக்கண்ணியே போற்றி
ஓம் நான்கெழுத்தான நாராயணியே போற்றி
ஓம் ஐந்தெழுத்தான அம்பிகையே போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
ஓம் அகந்தையை அழிக்கும் அன்னையே போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணவதியே போற்றி
ஓம் குருவாய் விளங்கும் கோலவிழியே போற்றி

ஓம் சின்மயமாக சிரிப்பாய் போற்றி
ஓம் தன் மயமாக தனித்தாய் போற்றி
ஓம் வேதாந்த மால வித்தைகியே போற்றி
ஓம் வேற்றுமையில்லா விமலியே போற்றி
ஓம் நாற்பத்து முக்கோண நாயகியே போற்றி
ஓம் அரணோடு அறியாய் அமர்ந்தாய் போற்றி
ஓம் பரனோடு பறைவாய் இருப்பாய் போற்றி
ஓம் மோன பாத்திரத்தின் முடிவே போற்றி
ஓம் ஞானஷேத்திர வடிவே போற்றி
ஓம் நடுநிலை ஆன நான்மறை போற்றி

ஓம் கொடுவினை அகற்றும் குண்டலி போற்றி
ஓம் சுத்த சிவத்தில் ஜொலிப்பாய் போற்றி
ஓம் சக்தி சிவமாய் இருப்பாய் போற்றி
ஓம் சுக சொரூப சூழ்ச்சியே போற்றி
ஓம் அகண்ட பூரணி ஆனவள் போற்றி
ஓம் மாலை திருமகள் வானீயே போற்றி
ஓம் அன்னையே வடிவுடைய அம்மையே போற்றி
ஓம் கன்னியாய் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் மாலை திருமகள் வடிவே போற்றி
ஓம் ஆட்சியாய் நீலாய ஆட்சியே போற்றி

ஓம் நாரணி பூரணி நாயகி போற்றி
ஓம் ஆரணியாம் விசாலாட்சியே போற்றி
ஓம் கன்னியாம் பத்ரகாளியே போற்றி
ஓம் மண்ணும் துர்க்கை ஆனாய் போற்றி
ஓம் ஏந்திர வித்தைகள் செய்பவள் போற்றி
ஓம் மந்திர சொரூபினி மௌலியே போற்றி
ஓம் மாய குண்டலி மகேஸ்வரியே போற்றி
ஓம் ஆயிரம் நாமங்கள் கொண்டாய் போற்றி
ஓம் ஆனந்த வடிவுடை நண்பனே போற்றி
ஓம் மணவாக்கு கடந்த மாகாளியே போற்றி

ஓம் சர்வ சம்ஹாரி சக்தியே போற்றி
ஓம் என் உள்ளத்தின் உள்ளே இருப்பாய் போற்றி
ஓம் மன்னுயிர் குயிராய் இருப்பாய் போற்றி
ஓம் மகிமை மிகு கஞ்சி காமாட்சியே போற்றி
ஓம் கனகம் பொழிகின்ற காமகோட்டத்தே போற்றி
ஓம் மணங்கவர் காயத்ரி மாமண்டபத்தே போற்றி
ஓம் வெற்றி கம்பம் விளங்கும்மாலையத்தே போற்றி
ஓம் வேதனை நீக்கும் வெக்காளி அம்மயே போற்றி.