வியாழன், 12 செப்டம்பர், 2013

பிறந்த நட்சத்திரமும் தொடங்க வேண்டிய பெயரின் எழுத்தும்!
நட்சத்திரம்  எழுத்துக்கள்
அசுவினி  சு-சே-சோ-ல, ர
பரணி   லி-லு-லே-லோ
கிருத்திகை  அ-இ-உ-ஏ
ரோகிணி  ஒ-வ-வி-வு
மிருகசீரிஷம் வே-வோ-கா-கி-ரு
திருவாதிரை கு-கம்-ஹம்-ஜ-ங-ச-க
புனர்பூசம் கே-கோ-ஹா-ஹீ
பூசம்  ஹு-ஹே-ஹோ-டா
ஆயில்யம் டி-டு-டெ-டோ-டா
மகம் ம-மி-மு-மே
பூரம் மோ-டா-டி-டு
உத்திரம் டே-டோ-ப-பா-பி
அஸ்தம் பூ-கீ-ஜ-ண-தா-டா
சித்திரை பி-போ-ரா-ரி-ஸ்ரீ
சுவாதி ரு-ரே-ரோ-தா-க்ரு
விசாகம் தி-து-தே-தோ
அனுஷம் ந-நி-நு-நே
கேட்டை நோ-யா-யீ-யு
மூலம் யே-யோ-பா-பி
பூராடம்              பூ-தா-ட-பா-டா-பி
உத்திராடம் பே-போ-ஷ-ஜ-ஜி
திருவோணம் ஜு-ஜெ-ஜொ-கா-க
அவிட்டம் க-கீ-கு-கே
சதயம் கோ-ச-சீ-சு-ஸ-ஸீ-ஸு
பூரட்டாதி ஸ-ஸோ-தா-தீ-சே-சோ-டா-டி
உத்திரட்டாதி து-ஷா-ஜு-சா-சி-சீ-டா-தா-த-ஜ-ஞ
ரேவதி               தே-தோ-ச-சி-டே-டோ-சா-சி
27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய கிரகங்கள்!
அஸ்வினி   கேது
பரணி   சுக்கிரன்கார்த்திகை  சூரியன்                               
ரோகிணி  சந்திரன்
மிருகசீரிஷம்  செவ்வாய்
திருவாதிரை  ராகு
புனர்பூசம்  குரு (வியாழன்)
பூசம்  சனி
ஆயில்யம்  புதன்
மகம்  கேது
பூரம்  சுக்கிரன்
உத்திரம்  சூரியன்
அஸ்தம்  சந்திரன்
சித்திரை  செவ்வாய்
சுவாதி  ராகு
விசாகம்  குரு (வியாழன்)
அனுஷம்  சனி
கேட்டை  புதன்
மூலம்  கேது
பூராடம்  சுக்கிரன்
உத்திராடம்  சூரியன்
திருவோணம்  சந்திரன்
அவிட்டம்  செவ்வாய்
சதயம்  ராகு
பூரட்டாதி  குரு (வியாழன்)
உத்திரட்டாதி  சனிரேவதி  புதன்.
அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்:
அசுவினி  சுகந்த தைலம்
பரணி  மாவுப்பொடி
கார்த்திகை  நெல்லிப்பொடி
ரோகிணி  மஞ்சள்பொடி
மிருகசீரிடம்  திரவியப்பொடி
திருவாதிரை  பஞ்சகவ்யம்
புனர்பூசம்  பஞ்சாமிர்தம்
பூசம்  பலாமிர்தம் (மா, பலா, வாழை)
ஆயில்யம்  பால்
மகம்  தயிர்
பூரம்  நெய்
உத்திரம்  சர்க்கரை
அஸ்தம்  தேன்
சித்திரை  கரும்புச்சாறு
சுவாதி  பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)
விசாகம்  இளநீர்
அனுஷம்  அன்னம்
கேட்டை  விபூதி
மூலம்  சந்தனம்
பூராடம்  வில்வம்
உத்திராடம்  தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)
திருவோணம்  கொம்பு தீர்த்தம்
அவிட்டம்  சங்காபிஷேகம்
சதயம்  பன்னீர்
பூரட்டாதி  சொர்ணாபிஷேகம்
உத்திரட்டாதி  வெள்ளி
ரேவதி  ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்).

காசிக்குக் காவலரான ஆந்திரா காலபைரவர்!
காலபைரவர் கோயில்கள் இந்தியாவில் மட்டுமல்ல. இந்தோனேஷியா, நேபாள் முதலான வெளிநாடுகளிலும் உள்ளன. இந்தியாவில் காசி ÷க்ஷத்திரத்தை அடுத்து, ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் இஸன்னபல்லி என்னும் கிராமத்தில் உள்ள காலபைரவர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹைத்ராபாத் நகரிலிருந்து சுமார் 116 கிலோ மீட்டர் தொலைவில் நிஜாமாபாத் நெடுஞ்சாலையில் உள்ளது இக்கோயில். காசிக்குக் காவலரான கால பைரவர் இங்கு எப்படி வந்து கோயில் கொண்டார்? மற்றொரு கிளைக் கதை கர்நாடகத்தை ஆண்ட பாமினி சுல்தான்களுக்கு தோமகொண்டா என்ற சமஸ்தானத்தை தங்களின் கீழ் பரிபாலித்து, வரி வசூலித்துத் தர சமஸ்தானாதிபதி ஒருவர் தேவைப்பட்டார். எனவே, அங்கே பிரபலமான காச்சா ரெட்டி என்பவரை அழைத்து சமஸ்தானத்தைப் பரிபாலிக்கும் உரிமையை அஹமத் ஷா மற்றும் அவரது மகன் அஹமத் கான் ஆகியோர் அளிக்கின்றனர். இது கி.பி 1415-1435 ல் நடந்ததாக வரலாறு கூறுகிறது.
காச்சா ரெட்டிக்குப் பின் அவர்களின் வம்சாவளியில் வந்த காமி ரெட்டிக்கு(1550-1600) பகைவர்களிடமிருந்து சமஸ்தானத்தைக் காப்பாற்றுவது இயலாத காரியமாகப் பட்டது. இந்தக் குழப்பத்தில் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நின்ற காமி ரெட்டியின் கனவில், காலபைரவர் தோன்றி காசிக்குப் போய் தன் சிலையைக் கொண்டுவந்து இங்கு பிரதிஷ்டை செய்தால், அவர்களது சமஸ்தானத்தையும் அவர்களையும் தான் காப்பாற்றுவதாக உறுதி கூற, காமி ரெட்டி தன் சகோதரர் ராமி ரெட்டியுடன் காசிக்குச் சென்று சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வருகிறார்கள். அவர்களின் சமஸ்தானத்தை நெருங்கும் போது ஓர் இடத்தில் வண்டிச் சக்கரங்கள் தரையில் புதைந்து நின்று விடுகின்றன. எவ்வளவு முயன்றும் வண்டி நகரவில்லை. சிலையும் அசையவில்லை அதனால், பைரவருக்குக் கோயில் அங்கேயே எழுப்பப்பட்டது. அந்த இடம்தான் இஸன்னபல்லி
ஒவ்வொரு பிறப்பிலும் மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களும் உடற்பிணிகளும், பில்லி சூன்யம் முதலியவற்றால் ஏற்படும் துயரங்களும் காலபைரவரை வழிபடுவதன் மூலம் தீரும் என்பது நம்பிக்கை. கிராமங்களில் எட்டு திக்கும் பிரதிஷ்டை செய்யப்படும் அஷ்டதிக் பாலர்களும் காலபைரவர் உறுதுணையுடனே செயல்பட்டு, கிராமங்களை கெடுதல்களிலிருந்து காப்பதாக நம்பிக்கை. மார்கழி மாதம் தேய்பிறையின் 8-ம் நாள் கடும் விரதம் அனுஷ்டித்து, கண் விழித்து காலபைரவரைத் தியானித்து, அருகிலுள்ள புஷ்கரிணியில் நீராடி, பைரவருக்கு தேங்காய், மலர்கள், கடுகு எண்ணெய், கறுப்பு எள் முதலியவற்றைப் படைத்து வழிபட, ஒவ்வொரு பிறவியிலும் செய்த பாவங்கள் விலகும். கெட்ட ஆவிகள் தரும் தொல்லை நீங்கும். எடுத்த காரியங்களும் வெற்றிபெறும். சிறைப்பட்டவரும் விடுதலை பெறுவர். இந்தப் புஷ்கரணியில் நீர் கோடையிலும் வற்றுவதில்லை. இதில் முழுகி எழுந்தால் பாவங்கள் மறையும் என்பதும் ஒரு நம்பிக்கை. காலபைரவரின் சக்தியால்தான் புஷ்கரணியில் நீர்மட்டம் குறைவதில்லை என்கின்றனர். சுண்டுவிரலில் பிரம்மாவின் துண்டிக்கப்பட்ட தலையுடனும், பைரவ (நாய்) வாகனத்துடனும் சித்தரிக்கப்படும் காலபைரவர், நேபாளத்தில் சுப்ரீம் ஜட்ஜ். இவர் சன்னிதியில் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டால், அவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

அவதாரங்களும் அவற்றின் ஆதார சக்திகளும்!
அம்பிகை பண்டாசுரனுடன் யுத்தம் செய்தபோது அவன், ஸர்வ அசுராஸ்திரம் எனும் அஸ்திரத்தால், ராவணன், பலி, ஹிரண்யாக்ஷன் முதலிய அசுரர்களை உண்டுபண்ணிப் போருக்கு அனுப்பினான். அவர்களை எதிர்க்க அம்பிகை தன் பத்து விரல்களிலிருந்து விஷ்ணுவின் பத்து அவதாரங்களை ஆவிர்பவிக்கச் செய்தாள்.
கராங்குளி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி : என்கிறது லலிதா சகஸ்ரநாமம். எந்த அவதாரத்திற்கு ஆதார சக்திகள் யார் யார் என்பதை அம்பாள் அஷ்டகம் விளக்குகிறது.
மத்ஸ்யாவதாரம் - கமலாத்மிகா: இவள் மகாலட்சுமியே. பொருள் மற்றும் அறிவு வறுமைகளையும் நீக்குபவள். அறிவுக் களஞ்சியமான வேதத்தைக் காக்க சக்தி அளிப்பவள்.
கூர்மாவதாரம் - பகளாமுகி: இவளை வழிபட்டால் ஜல ஸ்தம்பனம், அக்னி ஸ்தம்பனம் ஆகியவை செய்து நீரிலும் நெருப்பிலும் நிலை குலையாமல் வாழும் சித்தி கைகூடும். தன் அங்கங்களை உள்ளே சுருக்கி, ஸ்தம்பனம் செய்து கொள்ளும் பிராணி ஆமைதானே. பகளாமுகியே கூர்மாவதாரத்தின் உட்சக்தி.
வராஹ அவதாரம் - புவனேஸ்வரி: இவள் இதயாகாசத்தில் திகழும் ஞான வெளி. அன்பர்களுக்காகச் சிவந்த அன்னையாக வந்தவள். புவனம் முழுவதையும் நாசிமுனையில் தூக்கிய வராஹ அவதாரம் புவனேஸ்வரியின் ஆவிர்பாகம்.
நரசிம்ம அவதாரம் - திரிபுர பைரவி: திரிபுர பைரவி அன்பின் வடிவம். ஆனால் அச்சமூட்டக்கூடியவள். பைரவம் என்றால் அச்சமூட்டுதல். நரசிம்மமும் அப்படியேதான். அச்சமூட்டும் வடிவமானாலும் காருண்யமூர்த்தி.
வாமன அவதாரம் - தூமாவதி: நம் சிந்தனை என்கிற தவிட்டைப் புடைத்து, உண்மையான ஆத்ம அரிசியை நிற்கச் செய்யும் அனுக்கிரகம் செய்பவள் தூமாவதி. இவளைப் புகை சக்தி என்பர். ஒளிமய அக்னி இன்றிப் புகை ஏது? மஹாவிஷ்ணுவின் யோகநித்திரை இவள். இவளே வாமன சக்தி.
பரசுராம அவதாரம் - சின்னமஸ்தா: தன் தலையைத் தானே வெட்டிக் கொண்டு விளங்கும் வித்யுத் (மின்) சக்தியான இவளே பரசுராம சக்தி.
பரசுராமர் தன் அன்னையின் தலையை வெட்ட நேர்ந்ததல்லவா?
ராமாவதாரம் - தாரா: இவளது மந்திரமே ப்ரணவ தாரக மந்திரமான ஓம். தாரக நாமம் ராம நாமமே. அதற்கேற்ப ராமர் தாராவின் சக்தியாகக் கூறப்படுகிறார்.
கிருஷ்ணாவதாரம் - காளி: அழகும் அன்பும் உருவான கண்ணனே இவளது சக்தியைப் பெற்றவர். இவர் விளையாடியே காளியின் தொழிலாகிய சம்ஹாரத்தை மேற்கொண்டவர். காளியும் கருப்பு, இவரும் கருப்பு. காலோஸ்மி என்று கீதையில் கிருஷ்ணன் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்கிறார்.
பவுத்தாவதாரம் - மாதங்கி: வாக்தேவி மாதங்கியே பவுத்த அவதார உட்சக்தி.
கல்கி அவதாரம் - திரிபுரசுந்தரி: காமமாகிய மன்மதன் எரிந்ததும் அந்தச் சாம்பலிலிருந்து காமத்தின் விளைவே குரோதம் என்று காட்டவே பிறந்தான் பண்டாசுரன். இவனை திரிபுரசுந்தரி சம்ஹரித்தாள். மாதுளை நிறத்தவளான இவள் செவ்வாடையும் செம்மலரும் பூண்டு, இதயச் செம்மையின் உருவாக பிரும்மத்தின் எண்ணமற்ற சாந்தத்தில் தோன்றிய முதல் எண்ணமாகிய தன் உணர்வு என்ற சிவப்பாகத் திகழ்கிறாள்.
கலியுக முடிவில் கருமையான அந்தகாரம் சூழும்போது மனச் செம்மையை மீண்டும் உண்டாக்க அவதரிக்கும் கல்கி, இவள் அருள் விலாசமே ஆவார்.

வணங்கும் பக்தனுக்கு தன்னிகரில்லாத தன்மை தரும் பகமாலினி!
பகமாலினி தேவிக்கு ஒளியைப் பரப்பும் சிவந்த திருமேனி, புன்முறுவல் பூத்த அழகிய திருமுகம், மூன்று கண்களும் ஆறு கரங்களும் உடையவள். இடது திருக்கரங்களில் செங்கழு நீர் மலர், பாசம், கரும்பு வில் ஆகியவற்றையும், வலக்கரங்களில் தாமரை மலர் அங்குசம், மலர்க்கணைகள் ஆகியவற்றையும் ஏந்தியவன். இவளைப் போலவே தோற்றமளிக்கும் சக்தி கணங்கள் சூழ பக்தர்களுக்கு அருள் செய்யும் வடிவினளாக இவள் வீற்றிருக்கிறாள். பகம் என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். செல்வம், தர்மம், புகழ், ஸ்ரீ, ஞானம் என என்றும் மங்காத செல்வங்களை உடையவள். அந்த ஐஸ்வர்யங்களையெல்லாம் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு வாரி வழங்குபவளாக விளங்குவதால். இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள். பகம் என்றால் யோனி என்றொரு பொருளும் உண்டு. இந்த பகமெனும் தம்மையே பெண்மைக்கு உரியது. எனவே பெண்களுக்கு உரிய தெய்வமாகவும், அவர்களுக்குப் பலவிதமான நன்மைகளை அளிப்பவளாகவும் பகமாலினி விளங்குகிறாள். இவளை வழிபடுவதால் அனைத்து மக்களையும் தன் வசப்படுத்தும் சித்தி கிடைக்கும். மூவுலகும் அறியும் வண்ணம் பிரபலமான நிலை உண்டாகும். எந்த ஒரு காரியத்தைத் துவங்கினாலும் அதில் வெற்றி மட்டுமே கிடைக்கும். எதிரிகளை அழிக்கும் வழிமுறைகளையும், அவர்களை வெல்லும்  வல்லமையையும் தன் பக்தனுக்குக் கொடுப்பதில் பகமாலினி வல்லவள். திருமணமான தம்பதிகளிடம் மகிழ்ச்சியை, அன்னியோன்யத்தை உருவாக்கி ஆனந்தம் கொடுப்பதும் பகமாலினி தேவிதான். பெண்களுக்கு உரிய தெய்வமாக விளங்கும் இவள், கர்ப்பிணிப் பெண்களுக்கு கண்கண்ட தெய்வமாகவும், அவர்களுக்கு சுகப்பிரசவமாகவும் அருளுகிறாள். குறைப்பிரசவம், கரு கலைந்து போகுதல் போன்ற குறைபாடுகள் இவளை வணங்குவதால் அறவே நீங்கும்.
லவுகீக வாழ்வில் இத்தனை நன்மைகளைக் கொடுக்கும் பகமாலினி, ஆன்மீக ரீதியாக தன் பக்தனுக்கு எல்லா தெய்வங்களையும் ப்ரீதி பண்ணும் தன்மையையும், அளப்பரிய சாதனைகளைச் செய்யும் வல்லமையையும் கொடுக்கிறாள். மிகப்பெரிய ஜபங்கள், ஹோமங்கள், பூஜைகள் ஆகியவற்றை பகமாலினியின் அருள் இருந்தால் அனாயாசமாகச் செய்து விடலாம். தனக்குத் தானே எதிரியாக விளங்கும் காமம், க்ரோதம், லோபம் போன்ற பகைவர்களை வெல்லுவதும் இவளது பக்தர்களுக்கு மிகச் சுலபமாகிறது. தன்னை வணங்கும் பக்தனுக்கு தன்னிகரில்லாத தன்மையை அருளி, எல்லா நிலையிலும் ஜயத்தைக் கொடுப்பவள் பகமாலினி. பகமாலினி நித்யாவுக்கான அர்ச்சனை:
ஓம் பகமாலின்யை நம
ஓம் பகாயை நம
ஓம் பாக்யாயை நம
ஓம் பகின்யை நம
ஓம் பகோதர்யை நம
ஓம் குஹ்யாயை நம
ஓம் தாக்ஷõயண்யை நம
ஓம் கன்யாயை நம
ஓம் தக்ஷயக்ஞ விநாசின்யை நமஓம் ஜயாயை நம
ஓம் விஜயாயை நம
ஓம் அஜிதாயை நம
ஓம் அபராஜிதாயை நம
ஓம் ஸுதீப்தாயை நம
ஓம் லேலிஹானாயை நம
ஓம் கராளாயை நம
ஓம் ஆகாச நிலயாயை நம
ஓம் ப்ராஹ்ம்யை நம
ஓம் பாலாயை நம
ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம
ஓம் ப்ரஹ்மாஸ்யாயை நம
ஓம் ஆஸ்யரதாயை நம
ஓம் ப்ரஹ்வ்யை நம
ஓம் ஸாவித்ர்யை நம
ஓம் ப்ரஹ்மபூஜிதாயை நம
ஓம் ப்ரஜ்ஞாயை நம
ஓம் மாத்ரே நம
ஓம் பராயை நம
ஓம் புத்தயே நம
ஓம் விச்வமாத்ரே நம
ஓம் சாச்வத்யை நம
ஓம் மைதர்யை நமஓம் காத்யாயன்யை நம
ஓம் துர்காயை நம
ஓம் துர்கஸந்தாரிண்யை நம
ஓம் பராயை நம
ஓம் மூலப்ரக்ருதயே நம
ஓம் ஈசானாயை நம
ஓம் ப்ரதானேச்வர்யை நம
ஓம் ஈச்வர்யை நம
ஓம் ஆப்யாயன்யை நம
ஓம் பாவன்யை நம
ஓம் மங்கலாயை நம
ஓம் யமாயை நம
ஓம் ஜ்யோதிஷ்மத்யை நம
ஓம் ஸம்ஹாரிண்யை நம
ஓம் ஸ்ருஷ்ட்யை நம
ஓம் ஸ்தித்யந்தகாரிண்யை நம
ஓம் அகோராயை நம
ஓம் கோர ரூபாயை நம நம் மனதில் உள்ள ஒவ்வொரு காம்யத்தை (ஆசையை), பலனைப் பொறுத்து பகமாலினி தேவியை அதற்குரிய முறையில் உபதேசம் பெற்று ஆராதித்தால், அந்தந்த விசேஷமான பலன்கள் கிட்டும். உதாரணமாக, தாமரைப்பூ, கொன்றை, அரளி, அல்லி ஆகிய பூக்களை முறையே நான்கு வர்ணத்தவரும், அவரவர் வர்ணத்துக்கேற்ற பூவை, வாழைப்பழம், தேன்,நெய் கலந்த த்ரிமதுரத்தில் தோய்த்து இவளுக்கு ஹோமம் செய்தால் அனைத்து காரியங்ளும் வசப்படும். வில்வ தளம், ஸமித், பழம் ஆகியவற்றால் ஹோமம் செய்தால் பரிபூர்ண லட்சுமி கடாட்சத்தை அடையலாம். வெண்தாமரையில் செய்யும் ஹோமம் வாகன ப்ராப்தியும் சிவந்த தாமரையால் செய்யும் ஹோமம் சர்வ சித்தியும் தரும்.
பகமாலினிக்கு உகந்தவை:
திதி: வளர்பிறை (சுக்லபக்ஷ) த்விதீயை, தேய்பிறை சதுர்த்தசி
புஷ்பம்: செந்தாமரை
நைவேத்யம்: சர்க்கரை (நாட்டுச் சர்க்கரை)
பகமாலின்யை வித்மஹே ஸர்வ வசங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
என்பது இவளது காயத்ரி மந்த்ரம்
முறை யான உபதேசம் பெற்று; புரச்சரணம் செய்த பின்னர் இந்த ஹோமங்களைச் செய்தால் அனைத்து நன்மைகளையும் தங்கு தடையின்றிப் பெறலாம். பகமாலினி நித்யாவுக்கான பூதஜ: முதலில் ஸ்ரீ லலிதா தேவியை மகாநித்யாவாக தியானிக்க வேண்டும்.
யா பஞ்சதச்யாத்மக மந்த்ர ரூபா
பஞ்சோபசார ப்ரிய மானஸாம்பா
பஞ்சாக ஹர்த்ரீம் மஹதீம் சிவாம்தாம்
அ: கார ரூபாம் ப்ரணமாமி நித்யாம்
என்று கூறி லலிதா தேவியின் படத்துக்கோ யந்த்ரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தனம், குங்குமம் பொட்டு இடவும், பின்னர் அன்றைய நித்யாவான பகமாலினி நித்யாவை, அவளது யந்த்ரத்தில் தியானிக்கவும்.
பகஸ்வரூபாம் பகினீமமோதாம்
ஸம்÷க்ஷõ பயந்தீமகிலாம்ச்ச ஸத்வான்
க்லின்னத்ரவாம் ஸ்ரீபகமாலினீம்தாம்
ஆகாரரூபாம் ப்ரணமாலி நித்யாம்
என்று கூறி பகமாலினி நித்யா தேவியின் படத்துக்கோ யந்த்ரத்துக்கோ பூக்களைப் போடவும். பின்னர் சந்தனம், குங்குமம் பொட்டு இடவும். மேற் கூறிய நாமாவளியால் பகமாலினி தேவிக்கு அவளுக்கு உகந்த செந்தாமைரப் பூக்களால் அர்ச்சனை செய்து, பின்னர் தூபம் தீபம் காட்டவும், தேவிக்கு உரிய நைவேத்யமான சர்க்கரையைச் சமர்ப்பிக்கவும். முடிந்தால் தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். பின்னர் பகமாலினி தேவியின் காயத்ரியைக் கூறி கர்ப்பூர ஆரத்தி செய்து பூக்களைப் போட்டு பிரார்த்தனை செய்யவும்.
பகவானை கண்டு பயப்படுபவரா நீங்கள்?

பகவானிடம் நமக்கு பயம், பக்தி, விசுவாசம் ஆகியவை இருக்க வேண்டும். ஆனால், இறைவனிடம் பயம் எதற்கு? அவன் தான் பயத்தை போக்குகிறவனாயிற்றே? அவனிடம் நமக்கு என்ன பயம்? இந்த பயம் என்ற சொல்லுக்கு அவனை கண்டு நடுநடுங்கி பயப்பட வேண்டும் என்பது பொருளல்ல! அவனுக்கு நாம் ஏதாவது அபசாரம் செய்து விட்டோமோ, செய்து விடுவோமோ என்று பயப்பட வேண்டும். ஒரு குருவிடம், சீடன் பய பக்தியுடன் நடந்து கொள்கிறான் என்றால், குருவை கண்டு அவன் நடுங்கி, பயந்து கொண்டிருக்கிறான் என்ற அர்த்தமில்லை. அவரது மனமறிந்து, தவறுகள் நடந்து விடாமல் கவனமாக இருந்து பணிவிடை செய்வதைத்தான் பயபக்தியுடன் இருக்கிறான் என்கிறோம். குற்றம் குறை இல்லாதவனிடம் எந்த பயமும் இருப்பதில்லை.
நேர்மையாக நடப்பவன் எதற்கும் பயப்படுவதில்லை. பகவானும் சரி, மகான்களும் சரி... என்னைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம்... என்றுதான் சொல்லி இருக்கின்றனர். பகவானும், மகான்களும் மக்களுக்கு அருள் செய்யவே காத்திருக்கின்றனர். பக்தியும், விசுவாசமும் இருந்தாலே அருள் கிடைத்து விடும். பயப்பட வேண்டியதில்லை. பிரகலாதனுக்கு பகவானிடம் பக்தியும், விசுவாசமும் இருந்தது; நலம் பெற்றான். இரண்யனுக்கு இறைவனிடம் பக்தி, விசுவாசம் இல்லை; பயனடையவில்லை. குற்றவாளி, போலீசைக் கண்டதும் சந்து பொந்து வழியாக ஓடுகிறான். நேர்மையுள்ளவன் போலீஸ்காரரைப் பார்த்தாலும் பயமின்றி போய் கொண்டிருக்கிறான்.
தன்னிடம் குற்றமில்லாத போது, பயம் இருக்காது. குற்றம் உள்ளவன், பயப்படுகிறான். இந்த பயம் என்ற சொல், வேறு சில இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பயமானது மனதில் எழும் சந்தேகத்தின் காரணமாக உண்டாவது. ஒருவன் விருந்து சாப்பிடுகிறான். வயிறு நிறைய சாப்பிட்டதும், இவ்வளவு சாப்பிட்டு விட்டோமே! உடம்புக்கு ஆகுமோ, ஆகாதோ... என்ற பயம் வந்து விடுகிறது. பணக்காரன் அரசாங்கத்தை கண்டு பயப்படுகிறான். எந்த நேரத்தில் என்ன ரெய்டு வருமோ, என்ன நோட்டீஸ் வருமோ... என்று. இளம் வயதினருக்கு வயோதிகம் வந்து விடுமோ என்ற பயம். பணமும், பொருளும் உள்ளோருக்கு திருடர்களிடம் பயம். பயணம் செய்வோருக்கு விபத்து நேர்ந்து விடுமோ என்ற பயம்.
தர்ம சிந்தனை இல்லாதோருக்கு யாசகனைக் கண்டு பயம். படிக்காத பையனுக்கு பரிட்சை என்றால் பயம். இப்படி சில வகை பயங்கள் சந்தேகத்தின் காரணமாக ஏற்படும். இன்னும் பெரிய பயம் ஒன்றுள்ளது. அதாவது, மரண பயம். மரணம் என்பது எப்போதோ ஒருநாள் வரப்போவது நிச்சயம். அது, எப்போது என்று தெரியாததால் பயந்து கொண்டே இருக்கிறான். கொஞ்சம் உடல் அசவுகரியம் ஏற்பட்டால் கூட, உடனே வைத்தியரிடம் போகிறான். இதுவும் போதாது என்று ஜாதகத்தை தூக்கிக் கொண்டு ஜோசியரிடம் ஓடுகிறான். அவரும் ஜாதகத்தை பார்த்துவிட்டு, சனி போதாது, குரு போதாது என்று சொல்லி, நீடுழி வாழ சில பரிகாரங்களையும், ஹோமங்களையும் செய்யச் சொல்கிறார். இன்னும் அதையெல்லாம் செய்து கொண்டு ஓரளவு தைரியமாக இருக்கிறான். ஏன் இப்படி எல்லாம் செய்கிறான்? மரண பயம் தான்! இப்படி பயம் உண்டாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அப்படியானால் பயமே இல்லாதவன் யார்? மரணத்தைக் கண்டு பயப்படாதவன் தான் பயமற்றவன். மற்றவர்கள் எல்லாம் ஏதோ ஒன்றுக்கு பயந்தவர்கள் தான்!

துன்பங்கள் நீக்கும் ஜீவ விக்ரகம் ...!

முதுமையினால் உடல் தளர்ந்தபோதும், ஸ்ரீரங்கம் தென் திருக்காவேரிக்கு தினமும் நடந்து சென்று நீராடி, அனுஷ்டானங்களை நிறைவேற்றி வந்தார், ராமானுஜர். திடீரென்று சில சீடர்களை அழைத்து, தான் இதுவரை உபதேசிக்காத ரகசியத் தத்துவங்களையும், பல சூட்சும அர்த்தங்களையும் உபதேசித்தார். சீடர்கள் இது பற்றிக் கேட்க, நான் இந்த பூத உடலை விட்டு விலகும் காலம், வெகு தூரத்தில் இல்லை என்றார் ராமானுஜர். ஸ்ரீமத் ராமானுஜரின், திருவடி நிலை, என்று பிற்காலத்தில் போற்றப்பட்ட கந்தாடை ஆண்டான் என்ற சீடர் அவரைக் கண்ணீருடன் அணுகி, சுவாமி, உங்கள் நினைவாக உங்களது திருமேனி விக்ரகம் ஒன்றைத் தந்திட வேண்டும் என்று வேண்டினார். ராமானுஜர் அதற்கு அனுமதி அளித்தார். மிகச் சிறந்த சிற்பி ஒருவர் மூலம் அப்போது ராமானுஜர் எவ்விதம் இருந்தாரோ, அதே போன்று ஒரு தத்ரூபமான விக்ரகம் வடிக்கப்பட்டது! ஸ்ரீமத் ராமானுஜர் அதனை ஆரத் தழுவி, தனது ஆத்ம சக்தியை அதனுள் செலுத்தினார். அவரது ஆணைப்படி, தைப்பூசத்தன்று அத்திருமேனி ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த விக்ரகத்தின் கண் திறப்பின்போது, ஸ்ரீரங்கத்தில் இருந்த ராமானுஜரின் கண்களில் இருந்து ரத்தம் வடிந்ததாம்! இதனை நானாகவே ஏற்று, என்னிடம் காட்டிய பேரன்பை அதனிடம் காட்ட, அனைத்து மங்களமும் உண்டாகும் என்று திருவாய் மலர்ந்து அருளினார், ராமானுஜர். ஸ்ரீமத் ராமானுஜரின் திவ்ய சரீரம் ஸ்ரீரங்கத்தில்  இருந்தாலும், இந்த ஜீவ விக்ரகம் ஸ்ரீபெரும்புதூரில் தன்னை நாடி வருவோரின் துன்பங்களை நீக்கி, அருள்புரிந்து வருவதில் ஆச்சரியமில்லை.
நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் புகை!

நம் வீடுகளில் திருமணம், புதுமனைப்புகுவிழா, கோயில் கும்பாபிஷேகம், மழை, குழந்தைவரம், ஆரோக்கியம், செல்வவளம் போன்ற தேவைகளுக்காக யாகம் செய்வதைக் காண்கிறோம். அந்தக்காலத்தில், மன்னர்கள் இதை பெரும் பொருட்செலவில் செய்துள்ளனர். ரிஷிகள் காடுகளில் ஹோமம் நடத்தியுள்ளனர். ஒரு தொழிற் சாலை, வர்த்தக நிறுவனம் திறக்கப்படுறதென்றால் கணபதிஹோமம் நடத்தப்படுகிறது. இதற்கு ஆன்மிக காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், அறிவியல் காரணமே பிரதானம்.மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு பிரச்னை யின் போது, ஒரே ஒரு குடும்பம் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது. இதற்கு காரணம், அந்த குடும்பத்தில் அடிக்கடி ஹோமம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தது தான். இந்த தகவல் அப்போது பரபரப்பாக வெளி வந்தது. ஹோமத்தின் போது வெளிப்படும் புகை, காற்றில் பரவியுள்ள நச்சுக்கிருமிகளை முற்றிலும் அழித்து விடும். யாகத்தில் இடும் நெய், அரிசி ஆகியவற்றால் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உண்டாகும் வாயுக்கள் ரத்தஅழுத்தம், ஆஸ்துமா, தலைவலி, குடல்புண் போன்ற வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அந்தக் காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தபிறகு, அந்த இடத்தில் அமர்ந்து மூச்சுப்பயிற்சி, தியானம் செய்யும் வழக்கம் இருந்தது. இதன்மூலம் உடல்நலத்தை சிறப்பாகப் பேணினர்."அந்தப் புகை பிடிச்சா தான் உடலுக்கு கேடு. ஹோமப்புகை நமக்கு மட்டுமல்ல! சுற்றுப்புறத்துக்கே நல்லது.
வள்ளி திருமணம் எப்படி நடந்தது?

தொண்டை மண்டலம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் மேல்பாடி அருகே வள்ளிமலை என்ற வள்ளிக்காட்டில் வேடுவர் தலைவராக நம்பிராஜன் என்பவர் வாழ்ந்து வந்தார். இந்த வள்ளிக்காட்டில் சிவமுனி என்ற முனிவர் தபஸ் செய்து கொண்டிருந்தார். இவர் நாராயண அம்சம் கொண்டவர். இவர் தவம் செய்துகொண்டிருந்தபோது அவருக்கு எதிரே அழகான மான் ஒன்று போய்க்கொண்டிருந்தது. அதை அன்புடன் அவர் பார்த்தார். ரிஷி கர்ப்பம் ராத் தாங்காது என்பர். உடனே மான் கர்ப்பமாகி அது ஒரு குழந்தை ஈன்றது. அது ஒரு பெண் குழந்தை. அந்தப் பெண் குழந்தையை நம்பிராஜன் எடுத்து தன் மனைவியிடம் கொடுக்கிறார். வள்ளிக் காட்டில் இருந்து இந்தப் பெண் குழந்தையை எடுத்ததால் இந்தக் குழந்தைக்கு வள்ளி என்ற பெயரிட்டு வளர்க்கிறார். அவளுக்குப் பன்னிரண்டு வயது பூர்த்தியானதும், அவர்களுடைய வேடுவர் குல வழக்கப்படி, தினை முதலிய தானியங்களை பட்சிகளிடமிருந்தும், மிருகங்களிடமிருந்தும் காக்க காவலுக்கு அனுப்பி வைப்பார்கள். தினைக் கொல்லையைக் காவல் காக்க காட்டிலேயே பரண் மாதிரி ஒன்றை அமைத்து கவை, கம்பு கொடுத்து பெண்களை காவல் காக்க அனுப்பி வைப்பார்கள். அந்தக் காட்டில் சுப்ரமண்யர் தன் அழகிய உருவத்தை மாற்றிக்கொண்டு வேடுவர் வேஷத்தோடு வில் அம்பு வைத்துக்கொண்டு, வள்ளி காவல் காத்துக் கொண்டிருக்கும் காட்டுக்கு வருகிறார். வந்தவர் வள்ளியிடம், அம்மா நீ யார்? உன் ஊர் என்ன? பெயர் என்ன? உன் பெற்றோர் யார்? இவ்வளவு அழகான பெண்ணாக இருக்கும் உன்னை இந்த காட்டில் காவலுக்கு அனுப்பி வைத்தது யார்? என வள்ளியைக் கேட்கிறார். உண்மையில் பார்த்தால் அவர் வள்ளியைத் தான் திட்டியிருக்க வேண்டும். ஆனால் உன்னை இங்கு அனுப்பி வைத்தது யார்? எனக் கேட்கிறார். நீ வந்த வேலையைப் பார்த்துக்கொண்டு போ. என் பெற்றோரைப் பற்றிப் பேச உனக்கு என்ன உரிமை இருக்கிறது? என சத்தமிட்டாள். இந்த வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கும் வேளையில், தாரை தம்பட்டம் அடித்தபடி நம்பிராஜன் அவருடைய சேனைகளுடன் காட்டில் வள்ளி இருக்குமிடம் நோக்கி வருகிறார். அதைக் கண்ட முருகர் வள்ளி உட்கார்ந்திருக்கும் பரணுக்கு பின்னால் நிற்கறார். ஆனால் வள்ளி நடுக்கத்துடன் இருக்கிறார். நம்பிராஜன் தன் மகளுக்கு தினை, தேன், பழங்கள் கொடுக்கிறார், பரணுக்கு பின்னால் நின்றிருந்த முருகர்(வேடுவர்) பெரிய வேங்கை மரமாகிவிட்டார். நம் சாஸ்திரங்களே வேதத்தை மரமாகச் சொல்கிறார்கள், பாகவதம் வேதமே மரமானது என்று சொல்கிறது. திடீரென்று தோன்றிய அந்த மரத்தை வேடுவரோடு வந்தவர்கள் வெட்டலாம் என்று சொல்ல, அதற்கு நம்பிராஜன் அவர்களைத் தடுத்து, வேண்டாம் இந்த மரம் வள்ளிக்கு நிழலாக இருக்கட்டும். துணையாக இருக்கட்டும் என்கிறார். அவர்கள் கிளம்பியதும், முருகர் மறுபடியும் வள்ளியிடம் வந்தார். என்ன உன் தந்தை வந்துவிட்டுப் போகிறார் எனக் கூற, வள்ளி, உண்மையைக் கூறுங்கள். நீங்கள் வேடுவர் இல்லை. ஏனென்றால் மரமானதை நான் பார்த்தேன். மேலும் நீங்கள் வேறு வேடத்தில் வருவதால் வேடுவர் இல்லை. உங்களைப் பார்த்தால் ஏதோ ராஜ வம்சத்தில் பிறந்தவர் மாதிரி தெரிகிறது. என்று சொல்ல... அதற்கு முருகர், நான் வேடுவன்தான்! என்றார். ஆனால், வள்ளி தன் மனதுக்குள் நம்மைக் கவர்ந்து சொல்லத்தான் இவர் வந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, இந்தக் காட்டில் வேடுவர் குலத்தில் பிறந்த பெண் நான். எனக்கு வசதியும் கிடையாது. மேலும் என் தந்தைக்கு நீங்கள்என்னிடம் பேசியக்கொண்டிருப்பது தெரிந்தால் அவ்வளவுதான்! நீங்கள் என்னிடம் எந்த வாக்குவாதமும் செய்யவேண்டாம் எனக் கெஞ்சினாள்.
இப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே அரைமணிக்கு ஒருமுறை வரும் நம்பிராஜன் மீண்டும் தன் மகளைப் பார்க்க வருகிறார். உடனே வள்ளி, இந்த முறை என்ன வேஷம் எடுக்கப்போகிறார்? என குழப்பத்துடன் பார்த்தாள். உடனே முருகர் வயதான தொண்டுக் கிழவனாக மாறினார். உடம்பு வெள்ளையான ரோமங்கள், அணிந்திருக்கும் வஸ்திரமும் வெள்ளை, உடம்பு முழுவதும் திருநீறு பூசியிருக்கிறார். உடல் தள்ளாடித் தள்ளாடியபடியே நடந்து வருகிறார். வயோதிகரைக் கண்ட நம்பிராஜன் அவர் காலில் விழுந்து நமஸ்கரிக்க, நம்பிராஜனிடம் விபூதியைக் கொடுத்து, மங்களம் உண்டாகட்டும்! என்றார். அவரைப் பார்த்து நம்பிராஜன் என்ன விசேஷம் ? யாரைப் பார்க்க வந்தீர்கள்? நீங்கள் எங்கே போக வேண்டும்? ஏதாவது பொருளைத் தேடி வந்திருக்கிறீர்களா? எனக் கேட்க, அதற்கு முருகப் பெருமான், எனக்கு இந்த உலகத்தில் எதுவும் வேண்டாம். இங்கு ஒரு புண்ணிய தீர்த்தம் ஒன்று உள்ளது. அதன் பெயர் குமரி தீர்த்தம். அங்கு நீராட வேண்டும் என்றார். அதைக் கேட்ட நம்பிராஜன், அம்மா வள்ளி! இவர் தள்ளாத வயதில் நம் இருப்பிடத்துக்கு வந்திருக்கிறார். அவரைக் கூட்டிக் கொண்டு போய் விட்டுவா என்று கூற.. அந்தக் காட்சி தன் மகளை, திருமணம் செய்துகொள் என்பதை மறைமுகமாக கூறுவது போல் இருந்ததாம்.
நம்பிராஜன் அந்த இடத்தை விட்டு சென்றதும், முருகர் வள்ளியைப் பார்த்து, எனக்குப் பசியாக இருக்கிறது.உண்பதற்கு ஏதாவது தர வேண்டும் எனக் கூற... வள்ளி தன் தந்தை கொடுத்த தேனை தினைமாவுடன் பிசைந்து முருகப் பெருமானிடம் கொடுக்கிறார். அதை உண்டதும் அவருக்கு விக்கல் எடுக்கிறது, அதைப் போக்குவதற்குக் குடிக்க தண்ணீர் கேட்கிறார்.  வள்ளியும், இங்கு ஒரு சுனை ஒன்று உள்ளது அங்கு போய்த்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்ல... முருகர், நான் கிழவன். என்னால் தனியாக போக முடியாது. ஆகவே என்னோடு நீயும் வா என்று கூறியபடி வள்ளியின் கையைப் பிடித்துக் கொண்டு சுனையைநோக்கிப் போகிறார். அங்கு தண்ணீர் குடித்த பிறகும் வள்ளியின் கையை விடாமல் பிடித்தபடி நிற்க.. வள்ளி தன் கையை அவரிடமிருந்து பிடிவாதமாக இழுத்து உதறிவிட்டு, தாத்தா, நான் முன்னால் போகிறேன். நீங்கள் பின்னால் வாருங்கள் என்று கூறிவிட்டு வேகமாக ஓடுகிறாள். அந்தச் சமயத்தில் தன் அண்ணனான விநாயகரை வேண்டுகிறார். உடனே வள்ளி ஓடுகின்ற பாதையில் பெரிய யானை ஒன்று பிளறியபடி ஓடி வருகிறது. இதைக் கண்டு பயந்த வள்ளி திரும்பவும் கிழவரிடம் வந்து, நீங்க சொல்வதை நான் கேட்கிறேன். அந்த யானையைத் திரும்பிப் போகச் சொல்லுங்கள் என்று வள்ளி வேண்டுகிறார். உடனே அவரும் யானையிடம் வேண்ட... யானையும் திரும்பிப் போய்விட்டது. உடனே முருகர் தன் உருவத்தை மாற்றி, சுப்ரமண்யராகக் காட்சியளித்தார். நாரதர் வாழ்த்தோடு பார்வதி, பரமேஸ்வரன் முன்னிலையில் முருகர் வள்ளியை மணந்தார். இப்படியாக வள்ளி திருமணம் நடந்தது.
தூணிலும் இருப்பான் இறைவன்!

ஒரு ஊரில் பக்தர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு கோயிலைக் கட்டினார்கள், அவரவர் தங்களால் இயன்ற தொண்டுகளைக் கோயிலுக்கு செய்தார்கள். அந்த ஊரில் ஒரு வயது முதிர்ந்த சிற்பி ஒருவன் இருந்தான். அவனுக்கும் கோயிலில் ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று எனக்கும் ஏதாவது வேலை கொடுங்கள் என்றான். நீ கிழவன் உன்னால் என்ன செய்ய முடியும்? என்று அந்த நிர்வாகி அலட்சியாமாகக் கேட்டார். ஏதோ, என்னால் முடிந்ததை செய்கிறேன் ஏதாவது மூலையைக் காட்டுங்கள் அங்கே ஏதாவது செதுக்குகிறேன் என்று கெஞ்சினான். கிழவனுடைய வேண்டுகோளுக்கு இரங்கிய அவர் கோயிலில் இருட்டாக இருந்த ஓரிடத்தில் உள்ள கம்பத்தைக் காட்டி, அதில் ஏதாவது செய்து கொள் என்று சொன்னார். கிழவன், அந்த இடமாவது கிடைத்ததே என்ற மகிழ்ச்சியோடு வேலை செய்யத் தொடங்கினான். அவனுக்கு வயசு ஆயிற்றே தவிர, சிற்பத் திறனில் தளர்ச்சி உண்டாகவில்லை. மெல்ல மெல்ல அந்தத் தூணில் ஓர் அழகிய உருவத்தைக் கோலம் செய்யத் தொடங்கினான். ஆர்வத்தோடும், பக்தியோடும், உருவைச் செதுக்கினான். நாளுக்கு நாள் அவனுக்கு ஊக்கம் மிகுந்தது உருவமும் அழகு பெற்று வந்தது.
ஒரு நாள் வெளியூரிலிருந்து ஒரு கலாரசிகர் வந்தார் கோயிலில் பல சிற்பங்கள் அமைத்து வரும் சிற்ப உருவங்களை எல்லாம் கண்டு இன்புற எண்ணிக் கோயிலுக்குள் புகுந்தார். முகப்பில் பல சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களுடைய உழைப்பில் உருவாகி வந்த சிற்பங்களைக் கண்டு வியந்தார். சிற்ப வடிவங்களில் சில முற்றுப் பெற்றிருந்தன. சில முடிவடையும் நிலையில் இருந்தன. ரசிகர் எல்லாவற்றையும் பார்த்து மகிழ்ந்தார். பிறகு, கோயிலைச் சுற்றிக் கொண்டு வந்தார். ஒரு மூலையில் உள்ள தூணில் கிழச் சிற்பி வேலை செய்து கொண்டிருந்தான். சற்றே இருண்ட அந்த மூலைக்கும் ரசிகர் சென்றார் சிறிது நேரம் நின்ற பிறகுதான் தூண் தெரிந்தது; தூணில் உருவாகிய வடிவமும் தெரிந்தது கண்ணைச் சுருக்கியும் விரித்தும் பார்த்தார். அங்கேயே நின்ற விட்டார். மயில் மேல் ஏறிவரும் முருகன் திருவுருவத்தை கிழவன் அங்கே படைத்து முடித்திருந்தான். அந்த உருவத்தின் ஒவ்வோர் அங்கமும் குழைந்து இழைந்து கொஞ்சியது. திருமுக மண்டலம் உயிர் பெற்று விளங்கியது. இத்தனை நேரமும் ரசிகர் கண்ட சிற்பங்களை எல்லாம் எங்கோ தள்ளிவிட்டு இந்த முருக வடிவம் மேலோங்கி நின்றது ரசிகர் உலகையே மறந்து பார்த்தார்; அந்தக் கிழவனுடைய கையில்தான் எத்தனை திறமை! அவர் எதையோ நினைத்துக் கொண்டார் கண்ணில் நீர் துளித்தது. அவனைப் பார்த்து பேசலானார். அப்பா! இந்த அழகிய உருவத்தை இந்த இருண்ட மூலையிலே அமைக்கிறாயே! இதை யார் அப்பா, பார்க்கப் போகிறார்கள்? உனக்கு இந்த இடம்தானா கிடைத்தது? மூலஸ்தானத்து விக்கரகத்தைச் செய்யும்படி அல்லவா உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும்? சொல், இதை யார் பார்த்து மகிழப் போகிறார்கள்? என்று கேட்டார். சிற்பி கனைத்துக் கொண்டான், ஒருவரும் பார்க்க மாட்டார்கள் என்றா சொல்கிறீர்கள்? அவர்கள் பார்க்க வேண்டாமே! ஒருவன் நிச்சயமாகப் பார்ப்பான் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்ற தலை நிமிர்ந்து அவன் சொன்னான். அவனுடைய நெஞ்சத் திண்மையைக் கண்டு ரசிகர் பிரமித்துப் போனார். கிழவன் கூறியபடி அவனுடைய சிற்பத்தை அந்த ஒருவன் தானா கண்டான்? கோயிலைப் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் கண்டார்கள். கர்ப்பகிருகத்துக்குள்இருக்கும் சுவாமிக்குப் பூஜை செய்வது தான் வழக்கம். ஆனால் யாரோ ஒரு பக்தர் இந்த தூணைச் சுற்றி கம்பி கட்டி அதையே ஒரு கோயில் ஆக்கி விட்டார்; விளக்குப் போட்டார். தனியே பூஜை நடத்தினார்.
முருகன் கம்பத்து இளையவனாகக் காட்சி தரலானான் இப்படி ஒரு கதை உண்டு. திருவண்ணாமலை கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தக் கரையில் கம்பத்து இளையனார் கோயில் என்று ஒரு சன்னதி இருக்கிறது. அருணகிரிநாதருக்கு அருள் செய்த பெருமான் திருக்கோயில் அது. ஒரு மண்டபத்தின் தூணில் முருகன் எழுந்தருளியிருக்கிறான் பின்னர் ஒரு கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. தூணில் உருவத்தை வடித்தபோது அங்கே இந்தச் சிறப்பு ஏற்படும் என்று அந்தக் காலத்தில் யாரும் உணர்ந்திருக்க மாட்டார்கள். சிதம்பரத்தில் நடராஜர் சன்னதியில் ஒரு தூணில் தண்டாயுதபாணி எழுந்தருளியிருக்கிறார். அந்தத் தூணே இப்போது கோயிலாகி விட்டது. இப்படியாக தூணில் உள்ள ஆஞ்சநேயருக்கும் தண்டபாணிக்கு மகிமை உண்டான இடங்கள் பல.
சீர்காழியிலும் இப்படி ஒரு நடைபெறுகின்றன அந்த தேவஸ்தானத்தில் தலைமைப் பதவியை சட்டைநாதர் தம்முடைய மகிமையினால் பெற்றார் பக்தர்களும் இப்போது அவரது அருள் வேண்டி நிற்கிறார்கள். இந்த சட்டைநாதர் உருவம் தோணியப்பர் கோயிலைச் சார்ந்த ஒரு மூலையில் இருக்கிறது. கோயிலில் பிரம்மபுரீசர் சன்னதிக்குப் பின்னே ஒரு கட்டுமலை இருக்கிறது. அந்த மலையில் தோணிபுரேசர் எழுந்தருளியுள்ளார். சட்டைநாதரோ ஒரு மூலையில் தனியனாக உள்ளார்.

கோயில்களும் அவற்றின் துவார பாலகர்களும்!


கோயில்கள் அமைக்கப்பட்ட வேண்டிய வழிமுறைகளை ஆகம நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. திருக்கோயிலின் அமைப்பு லட்சணங்களாக கர்ப்ப கிரஹம், துவஜஸ்தம்பம், பலிபீடம், ராஜகோபுரம் முதலியவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, மூலஸ்தானத்தின் வாயில் காப்பவர்களாக துவார பாலகர்களையும் நிர்மாணிக்க வேண்டும் என்று ஆகம விதி வலியுறுத்துகிறது. சில்ப சங்கிரஹம் என்னும் நூல் துவாரபாலகர்களின் தோற்றத்தையும் அங்க லட்சணங்களையும் அழகாக எடுத்துச் சொல்கிறது. நீண்ட பெரிய கைகளும், குறுகிய இடையும், கோரைப் பற்களும் கொண்ட பூத கணங்கள் இவை என்று அந்த நூலில் வர்ணிக்கப்பட்டபோதிலும், சாந்த சொரூபம் கொண்ட துவாரபாலகர்களையும் நாம் அநேக ஆலயங்களில் காணத்தான் செய்கிறோம். ஆகம சாஸ்திரத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இந்த மாறுதலுக்குக் காரணம் விளங்கும்.
பெருமாள் கோயில் துவார பாலகர்கள்: விஷ்ணு ஆலயங்களில் உள்ள துவாரபாலகர்கள் ஜயனும், விஜயனும் ஆவர். இவர்கள் வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு துவாரபாலகர்களாக இருந்தவர்கள் சனத்குமாரர்களின் சாபத்தினால் மூன்று பிறவிகளில் அசுரர்களாக இருந்து, பின்னர் திருமாலின் சேவைக்கே அவர்கள் வந்து சேர்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த துவாரபாலகர்கள் கரங்களிலே சங்கும் சக்கரமும் கதாயுதமும் ஏந்திக் காட்சி தருகின்றனர்.
சிவன் கோயில் துவார பாலகர்கள்: சிவாலயங்களில் துவார பாலகர்களுக்கு சண்டன், பிரசண்டன் என்ற பெயர்கள் வழங்குகின்றன. இவர்கள் வீராதி வீரர்கள். தமிழில் வழங்கப்படும் ஒரு பழமொழி தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட, பிரசண்டன் இதன்மூலம் இந்த துவாரபாலகர்கள் பற்றிய விவரத்தை முற்காலத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதை உணரலாம்.
அம்மன் சன்னதியைப் பாதுகாக்கும் துவாரபாலகி(பெண்)களை ஹரபத்ரா, சுபத்ரா என்று அழைக்கிறார்கள். மூலஸ்தானத்தின் வாயிலில் மட்டுமன்றி தேர்களிலும், தெப்பங்களிலும், ராஜகோபுரங்களிலும்கூட இந்தத் துவார பாலகர்களைக் காணலாம். தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுர துவாரபாலகர்கள் காண்போரைக் கவரும் விதத்தில் உள்ளனர். கோயிலுக்குள் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் துவார பாலகர்களின் எதிரில் நமஸ்கரித்து, உட்செல்ல அனுமதி பெற்று, பிறகே மூல ஸ்தானத்தை வழிபடச் செல்லவேண்டும் என்பது ஆலய தரிசன விதி.

வில்வ இலை 

வில்வ இலைக்கு அதிக சக்தி உண்டு. மருத்துவ ரீதியாக பார்க்கப் போனால் ஆண்களின் விந்தணு நீர்த்த தன்மையை போக்கும். விந்தணு நீர்த்த தன்மை பிரச்சினை இருப்பவர்கள் வில்வ இலையை சாப்பிட்டாலே போதும்.

அதற்காகத்தான், அந்த காலத்தில் பெருமாள் கோயிலுக்கும், சிவன் கோயிலுக்கும் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஏனென்றால் பெருமாள் கோயிலில் கொடுப்பது துளசி, சிவன் கோயிலில் கொடுப்பது வில்வம். இவை இரண்டுக்குமே அதீத சக்தி உண்டு.

பிரசாதங்கள் என்று கோயிலில் கொடுப்பவை அனைத்துமே மூலிகைகள்தான். ராஜ ராஜன் காலத்தில் எல்லாம் மூலிகைகளால் செய்யப்பட்ட சிவலிங்கங்கள் எல்லாம் உண்டு. சில கோயில்களில் எல்லாம் அபிஷேகங்கள் இருக்காது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள லிங்கம் மண்ணால் ஆனது என்றும் சொல்லப்படும். அதாவது மண்ணை மூலிகைச் சாறுகள், வில்வக் குழம்புகளை வைத்து செய்யப்பட்டது. அதனால்தான் அவற்றிற்கு அபிஷேகங்கள் செய்வதில்லை.

வில்வத்தின் வடிவத்தைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். மூன்றாகப் பிரிந்திருக்கும். சூலம் என்று எடுத்துக்கொடுக்கலாம். மூன்று தெய்வங்களை குறிப்பதாகவும், நங்கூரத்தின் வடிவிலும் இருப்பதாக கூறலாம்.

சாதாரணமாக சிவனுக்கு எத்தனை ரத்தினம் அணிவித்தாலும், வில்வத்தால் பூஜை செய்தால் அதீத சக்தி கிட்டும். வில்வத்திற்கு அவ்வளவு மகிமை.

மேலும் நாம் தினமும் வில்வ பொடியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நலம் கிட்டும்.

ரத்தத்தை சுத்திகரிப்பது, விந்தணு நீர்த்தத் தன்மை போன்ற பல பிரச்சினையை சீர் செய்யும். அம்மன் கோயிலில் கொடுக்கப்படும் வேப்பிலைக்கும் அதிக மருத்துவ குணம் உள்ளது.

வில்வத்தால் சிவனை அர்சிக்கும்போது, சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும், சிவனின் அருளைப் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஏழரை சனிக்கு சரியான பரிகாரம் வில்வம்தான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.