சனி, 12 டிசம்பர், 2020

ஓம் நமோ பகவதே தத்தாத்ரேயாய:

ஓம் நமோ பகவதே தத்தாத்ரேயாய:

அத்திரி மகரிஷி - அனுசூயா தம்பதிகள் காட்டில் குடில் அமைத்து வசித்தனர். அவர்களுக்கு மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் குழந்தைகளாகப் பிறக்க வேண்டும் என்பது ஆசை. இதற்காக கடுமையாகப் பிரார்த்தித்து வந்தனர். கடவுளே குழந்தையாகப் பிறப்பதென்றால் சாமான்யமா? அதிலும் மும்மூர்த்திகளும் ஒன்றுசேர்ந்து வந்தாக வேண்டுமே! மூவரும், அவர்களது பக்தியைச் சோதிக்க முடிவெடுத்தனர். துறவிகள் போல் வடிவெடுத்து, அத்திரியின் குடில் முன் வந்தனர். அத்திரி அப்போது வீட்டில் இல்லை. அவர் மனைவி அனுசூயா தர்மபத்தினி. கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்த பின்பே பணிகளைத் துவங்குவாள். அந்த தீர்த்தம் எப்போதும் வீட்டில் இருக்கும்.

அனுசூயா வந்தவர்களை வரவேற்றாள்.துறவிகள் தங்களுக்கு பசிப்பதாகக் கூறினர். உள்ளே உணவெடுக்கச் சென்ற அனுசூயாவிடம், தாயே... எங்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. எங்களுக்கு யார் உணவிட்டாலும், திகம்பர (நிர்வாணம்) நிலையிலேயே வாங்குவது வழக்கம். அப்படி செய்தால் மட்டுமே உணவு பெறுவோம்... என்றனர். அனுசூயா நல்லறிவு மிக்கவள். சாதாரண மனிதர்கள் இப்படி கேட்க மாட்டார்கள். இது ஏதோ தெய்வ சங்கல்பம் என நினைத்தவள், சற்றும் பதட்டமின்றி, அதற்கென்ன... அவ்வாறே உங்கள் பசியை தீர்த்து விடுகிறேன்... என்றவள் வீட்டுக்குள் சென்றாள். கணவரின் பாத தீர்த்தத்தை எடுத்து வந்து,இறைவா... நான் என் கணவர் மீதும், உன் மீதும் கொண்ட பக்தி உண்மையென்றால், இந்த துறவிகளை குழந்தைகளாக மாற்று... என்று கூறி அவர்கள் மேல் தெளித்தாள்.

அந்த பத்தினி தெய்வத்தின் பக்தியால், மூவரும் குழந்தைகளாகி விட்டனர். அவர்கள் விரும்பியபடியே அவர்களுக்கு பாலூட்டி, பசி தீர்த்தாள். அத்திரி முனிவரும் வந்தார். நடந்ததைக் கேட்டார். தன் ஞான திருஷ்டியால், வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதைப் புரிந்து கொண்டார். அவர்களை அன்புடன் அணைத்தார். அந்த குழந்தைகள் மூன்று தலையும்,  ஆறு கைகள் மற்றும் ஓருடலும் கொண்டதாக மாறின. இந்த தகவல் நாரதர் மூலம், மூன்று தேவியருக்கும் தெரிய வரவே, அவர்கள் அனுசூயையிடம் வந்து, தங்கள் கணவன்மாரை திருப்பித்தர வேண்டினர்.தேவியரே... இந்தக் குழந்தை எங்களிடமே வளர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதை நிறைவேற்றி வைத்தால் உங்கள் கணவன்மாரைத் திருப்பித் தருவேன்... என்றாள். மூன்று தேவியரும் அதற்கு ஒத்துக் கொள்ளவே, அனுசூயை மும்மூர்த்திகளை மானசீகமாக வேண்டினாள். அப்போது மூன்று தெய்வங்களும் காட்சியளித்து, தங்கள் சக்தியாகிய அக்குழந்தை ஒரு முனிவராக விளங்குவான்... என்று கூறி ஆசியளித்து, குழந்தைக்கு, தத்தாத்ரேயன் என்று பெயர் சூட்டினர். தத்தாத்ரேயன் என்றால், மும்மூர்த்திகளுக்கு சமமானவர் என்று பொருள்.

நாமும் தத்தாத்ரேயரை வழிபட்டு மும்மூர்த்திகளை வழிபட்ட பலனை பெறுவோம்.


ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள்

ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள்

 


 மதுரை மீனாட்சியின் அருந்தவப்புதல்வர். 1627ல் மதுரையை அடுத்த சமயநல்லூரில் அண்ணாஸ்வாமி சர்மா, திரிபுரசுந்தரி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைச் செல்வம் இல்லை. இருவரும் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தனர். திரிபுர சுந்தரி மனமுருகி பிரார்த்தித்தார். அம்மா, மீனாட்சி ! கிளி ஏந்திய காரிகையே ! எங்களுக்கு குழந்தை பிறந்தால், அதை நாங்கள் கூட வளர்க்க பிரியப்படவில்லையம்மா ! நீயே வைத்துக் கொள். குழந்தை பிறந்ததும், உன் பாதத்தில் விட்டு விடுகிறோம். நீயே அந்தக் குழந்தைக்கு தாயாக இரு, என கண்ணீர் விட்டு மனமுருகி வேண்டினார். ஒன்றுக்கு இரண்டாக இரட்டை குழந்தைகளைக் கொடுத்தாள். பாதங்களில் சங்கு சக்கரங்களுடன் பிறந்த மூத்த குழந்தையை தாங்கள் வேண்டியபடி அன்னை மீனாட்சியிடம் ஒப்படைத்தனர் அந்த தம்பதியர். ஒரு குழந்தையை தாங்கள் வளர்த்தனர். கோவிலுக்குள் வந்த குழந்ததைக்கு பாலுட்டி சீராட்டி, உயரிய மந்திரத்தை உபதேசித்து, தாயாக, தந்தையாக, குருவாக இருந்து வளர்த்தாள் மீனாட்சி. கோயிலில் வளர்ந்த குழந்தையை குழந்தைசாமி என பக்தர்கள் அழைத்தனர்.

குழந்தைசாமியின் 16ம் வயதில் அவரது தந்தையும் தாயும் அம்பாளின் திருவடியை அடைந்தார்கள். இதன்பின் வட திசை நோக்கி பயணமானார் குழந்தை சுவாமி. காசி சென்று அங்கே திரைலிங்க ஸ்வாமிகள் என்ற பெயருடன் கடுமையாக தவம் செய்து நிர்விகல்ப சமாதியில் 150 ஆண்டு காலம் காசிநிவாசியாக அருள் பாலித்தார். பின் கங்கை கரையில் சமுத்திரகூடம் என்னுமிடத்தில் உள்ள குகையில் நீண்ட காலம் தவமிருந்தார். (இந்த குகையைத்தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கண்டு பிடித்து இந்த இடத்தில் தவம் இருந்து விஜய யாத்திரையை ஆரம்பித்தார்.) பிறகு கைலாய மலையிலும், மகாமேரு சிகரத்திலும் அமர்ந்து அருள்பாலித்தார். மானஸரோவர், கங்கோத்ரி, அமர்நாத், கேதார்நாத் ஸ்தலங்களில் நிர்விகல்ப சமாதியில் நீண்ட நாட்கள் இருந்திருக்கிறார். கஜானந்தேந்திர சரஸ்வதி என்ற திருநாமத்துடன் இமாலயத்திலுள்ள ஆதிசங்கர பீடத்தை அலங்கரித்தார். நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தென் தேசத்திற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள்பாலித்துள்ளார். மதுரையை அடுத்த சித்தாலங்குடி என்ற கிராமத்தில் குழந்தை சித்தராய் தங்கி, பல சித்துகள் செய்து சமாதி அடைந்து மீண்டும் வெளியே வந்து வேறொரு இடத்தில் தோன்றியருளினார். சித்தாலங்குடியில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 4,5,6 தேதிகளில் குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவில், கதிர்வேலப்பர் என்ற திருநாமத்துடன் சமாதியடைந்து அருள்பாலித்து வருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில் குருபூஜை கொண்டாடப்படுகிறது. இதன்பிறகு காசியில் அவதரித்த ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்சர் நேரில் தரிசித்து, இவர் தான் உண்மையான பரமஹம்சம் என போற்றி புகழ்ந்தார். குழந்தையானந்தர் காசியில் தங்கியிருந்த காலத்தில் விஸ்வநாதர் கோயிலையும், காலபைரவர் கோயிலையும் சிறப்பாக பராமரித்தார். 1887ல் காசியில் தன்னை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விடுமாறு தன் சீடர்களுக்கு கட்டளையிட்டு, அப்பெட்டியுடன் தென்னகத்தில் திருவண்ணாமலை, சுருளி ஆகிய இடங்களில் தோன்றி பக்தர்களுக்கு நீண்ட காலம் அருள்பாலித்தார். 1919ம் ஆண்டு மதுரையிலிருந்து வத்தலக்குண்டு சென்றார். அங்கு தனக்கு தன் சீடர் மூலம் ஒரு கோயிலை நிர்மாணித்தார். அதேபோல் மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சமாதி அடைந்தார். தான் சமாதி ஆகும் போது வழக்கமாக செய்யகூடிய சடங்குகள் ஏதும் செய்ய வேண்டாம் என்று கூறிய சுவாமிகள், அங்கிருந்து வத்தலக்குண்டில் தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் எழுந்தருளினார். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள்.

வேதாந்த தேசிகர்

வேதாந்த தேசிகர்

ஆன்மாக்களை உய்விக்க பகவான் பல நிலைகளை மேற்கொள்கிறார். குருவாக ஆச்சார்ய நிலையில் தோன்றி, அஞ்ஞானத்தை அழித்து, ஞானத்தை வளர்ப்பதும் அந்நிலைகளில் ஒன்று. அப்படிப்பட்ட ஆசார்ய நிலையில் அவதரித்து அஞ்ஞானத்தை அகற்றி ஞான விளக்கேற்றியவர் வேதாந்த தேசிகர். தமிழகத்தின் புண்ணிய நகரான காஞ்சிபுரத்தில் அனந்த சோமயாஜிகள், தோதாத்திரி அம்மையார் தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களின் மகவாக அவதரித்தவர் வேங்கடநாத சம்மா. இளமையில் தேசிகருக்கு பெற்றோர் இப்பெயரையே சூட்டினர். இவரை திருவேங்கடத்தில் குடிகொண்டுள்ள ஸ்ரீனிவாசனின் திருமணி அம்சம் என்று போற்றுவர். இவர் அவதரித்த தலம் தூப்பல் எனப்படும். தூப்பல் என்றால் தூய்மையான இடம் என பொருள்படும். காஞ்சிமாநகருக்குள் இப்பகுதி இருக்கிறது.தேசிகர் தன் இருபதாவது வயதிலேயே வேதாந்த ரகசியங்களை எல்லாம் முறைப்படி கற்றுத்தேர்ந்தார். தனது மாமனார் கிடாம்பி அப்புள்ளாரிடம் அருளுபதேசம் பெற்று வைந்யேய மந்திரத்தை கற்றுக்கொண்டார். பின்னர் இல்லறவாழ்வை மேற்கொண்டார். தேசிகர் நாவன்மை மிக்கவர். இவரது நாவன்மை இவரை சிறந்த பேச்சாளராக்கியது. பாமரரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் ஆன்மிக சொற்பொழிவுகளை நிகழ்த்துவார். ஒருசமயம் தென் திருப்பதிகளை தரிசிக்க புறப்பட்டவர் திருவஹீந்திரம் கோயிலில் வந்து தங்கினார். அங்கு அவர் கருடாழ்வாரின் தரிசனம் கிடைக்கப் பெற்றார்.

ஸ்ரீஹயக்ரீவர் மந்திர உபதேசம் பெற்றதன் பயனாய் காட்சி தந்து வாக்குவன்மையை வழங்கி அருளினார். அங்கு தங்கியிருந்தபோது தன் நாவாற்றலால் சொற்பொழிவுகளையும், எழுதாற்றலால் பல நூல்களையும் இயற்றியவர். ஒருசமயம் தேசிகர் வறுமைப்பட்ட ஏழை அந்தண பிரம்மச்சாரியிடம் கருணை கொண்டார். ஸ்ரீ ஸ்துதி என்ற நூலை அருளிச்செய்து, காஞ்சிபுரம் தேவப்பெருமாள் கோயிலில் தாயாரின் சன்னதி முன்பாக பொன்மழை பொழிவத்தது கண்டு பக்தர்கள் அதிசயித்தனர். அந்த அந்தண பிரம்மச்சாரி தன் வறுமை நீங்கி வளம் பெற்றார். தேசிகரின் பெருமை நாடெங்கும் பரவியது. அவரிடம் பொறாமை கொண்ட ஒருவன் இவரிடம் வந்து, உமக்கு கிணறு வெட்டத் தெரியுமோ ? என கேட்டான். அமைதியாக புன்முறுவல் கொண்ட தேசிகர், உடன் ஒரு கிணற்றினை உண்டாக்கி, அவனது செருக்கை அடக்கினார். இன்றளவும் அக்கிணறு உள்ளது.சிற்பி ஒருவன் இவரிடம் வந்து, உமக்கு சிற்பம் வருமோ ? என ஆணவத்துடன் கேட்டான். உடன் தேசிகர் தமது உருவத்தையே விக்கிரகமாக அமைத்துக் கொடுத்தார். அந்த விக்ரகம் தேவநாத பெருமாள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. வேறொரு, சிலரால் தூண்டப்பட்ட பாம்பாட்டி யொருவன் இவர் முன்னிலையில் பாம்புகளை எல்லாம் வெளியில் எடுத்து விட்டான். பாம்பைக் கண்டதும் அவரருகே நின்ற பலரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஆனால், தேசிகர் அமைதியாக கருட தியானம் செய்தார்.

கருடன் தோன்றி பாம்புகளை எல்லாம் பற்றிச் சென்றது. பாம்பாட்டி தேசிகரின் பாதம் பணிந்து மன்னிப்புகேட்டான். இப்படி பல அரிய அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் தேசிகர். ராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யத்தை முப்பது முறை பிரவசனம் செய்து திருப்தியுற்றார் தேசிகர். ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரக்கவி என்ற நால்வகைக் கவிதைகளிலும் ஒப்புயர்வு பெற்று விளங்கியவர். வடமொழி பாண்டித்யம் கொண்டவர். இவர் எண்ணற்ற நூல்களை இயற்றி அருளினார். ஹயக்ரீவ ஸ்தோத்திர, கருட பஞ்சாசதத், அச்சுத சதகம், பந்துப்பா, ஊசற்பா, ஏசற்பா, அஷ்டபுஜான்டகம் போன்றவை சிறப்பானவை. களப்பிரர் படையெடுப்பால் தமிழகக் கோயில்கள் சூறையாடப்பட்ட நிலையில், ஸ்ரீரங்கத்தில் அந்தணர்கள் பெருமாளுக்கு பாதுகாப்பு செய்துவிட்டு பல திசைகளுக்கும் சென்றுவிட்டனர். அந்த சமயம் பெருமாளுக்கு எவ்வித சேதமும் வந்துவிடக்கூடாது என்று தேசிகரால் அபிதீஸ்தவம் என்ற நூல் அருளிச் செய்யப்பட்டது. கோடான கோடி விண்மீன்கள் விண்ணில் தோன்றினாலும் பளிச்சென்று கண்ணிற்கு புலப்படுவது ஒரு சிலவே. அதைப்போல் எத்தனையோ மகான்களின் மத்தியில் ஒளிவீசிக் கொண்டிருப்பவர் வேதாந்த தேசிகர் என்றால் அது மிகையாகாது.


சேஷாத்திரி சுவாமிகள்

சேஷாத்திரி சுவாமிகள்

ஆதிகுருவாகிய சங்கரர், காஞ்சிபுரத்தில் காமகோடி பீடத்தை அமைத்து, காமாட்சிதேவியை அமைத்து, காமாட்சி தேவியை ஸ்ரீவித்யா முறைப்படி வழிபாடு செய்ய முப்பது தேவி பக்தர்களை ஏற்பாடு செய்தார். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற இவர்கள் காமகோடி வம்சம் என அழைக்கப்பட்டனர். இந்த வம்சத்தை சேர்ந்த வரதராஜன் - மரகதம்பாள் தம்பதிகளுக்கு 1870, ஜனவரி 22ம் நாள் சனிக்கிழமை அஸ்த நட்சத்திரத்தில், உத்திரமேரூர் அருகே வாவூர் கிராமத்தில் மகான் அவதாரம் நடந்தது. பிறந்த சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாதலால் சேஷாத்ரி என பெயர் சூட்டப்பட்டார். ஒருநாள் சேஷாத்ரி தாயாருடன் கோயிலுக்கு செல்லும்போது, ஒரு வியாபாரி வைத்திருந்த நவநீதகிருஷ்ணர் பொம்மைகளில் ஒன்றை கேட்டார். வியாபாரியும் சேஷாத்ரியை தூக்கிக் கொஞ்சி, இந்த குழந்தைகயின் கை தங்கக்கை நேற்று ஆயிரம் சிலைகளும் விற்றுவிட்டது என்று கொண்டாடினான். அதுமுதல் இவர் கை பட்ட காரியம் வளர்ச்சி அடைந்ததால் நான்கு வயதிலேயே தங்கக்கை சேஷாத்ரி என்று அழைக்கப்பட்டார். சேஷாத்ரி சிறு வயதிலேயே வேதங்கள் கற்று பற்பல சாஸ்திரங்களில் வல்லவராக விளங்கினார். சேஷாத்ரியின் 14ம் வயதில் தகப்பனார் இறந்தார். ஒரு சமயம் வந்தவாசியில் உபன்யாசம் செய்பவர் உடல்நலக் குறைவால் வராததால் சேஷாத்ரி அங்கு சென்று ஓராண்டு ராமாயண பாகவதம் சொற்பொழிவாற்றினார். சேஷாத்ரிக்கு 17 வயதில் தாயார் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். சேஷாத்ரியின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் இவருக்கு சன்னியாசி யோகம் தான் உள்ளது. சன்னியாசி ஆகி பிறகு யோகியாக ஆவார் என கூறிவிட்டார்கள்.

தாயார் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் ஒருநாள் சேஷாத்ரிக்கு தன் முதுகில் ஆதிபராசக்தி பாம்பின் வடிவமாக தன்னை ஆட்கொண்டதை உணர்ந்தார். சில நாட்களில், தாயார் சேஷாத்ரியை அழைத்து, பிறக்க முக்தி திருவாரூர், தரிசிக்க முக்தி சிதம்பரம், இறக்க முக்தி காசி, நினைக்க முக்தி திருவண்ணாமலை என்று பொருள் கொண்ட சுலோகத்தை மகனின் மார்பில் 3 முறை அடித்து அடித்து சொல்லிவிட்டு. அருணாசல, அருணாசல, அருணாசல என்று 3 முறை உருக்க கூவிவிட்டு மகளின் மகனின் மடியில் இயற்கை எய்தினார். தாயின் அந்திமச் சொற்களாகிய அண்ணாமலை அடிமனதில் ஆணிவேர் போல் பதிந்துவிட்டுது. திருவண்ணாமலை மனத்தால் கண்டு, ஒரு அட்டையில் அதைப் போல் வரைந்து, பூஜை அறையில் வைத்து காலை முதல் பிற்பகல் வரை அறையை உள்தாளிட்டு பூஜையில் ஈடுபட்டு விடுவார். சரியாக குளிப்பதில்லை. சாப்பிடுவதில்லை. உடம்பைப்பற்றி கவலைப்படுவதில்லை. ஞானப்பைத்தியம் என்று பலரும் பரிகசித்தனர். 19வது வயதிலேயே உபாசனையும், வைராக்கியமும் மிகுந்த நிலையை மேற்கொண்டு எல்லாவற்றையும் துண்டித்து துறவியாகி, காஞ்சிபுரத்தை விட்டு புறப்பட்டு, ஞானவித்தையை உலகெல்லாம் பரப்ப, அந்த ஞான தபோதனார் அண்ணாமலை நோக்கி வந்தார். தை மாதத்து ரத சப்தமி திருநாளில் திருவண்ணாமலையில் திருப்பாதம் பதித்தார். வந்த உடனே கிரிபிதட்சணம் போனார். கோயிலில் பல இடங்களில் தியானம் புரிந்தார். அங்கு அவர் தவம் செய்ய மிகவும் பிடித்த இடம் துர்க்கையம்மன் கோயில். திருவண்ணாமலை வந்தவுடன் தினசரி சித்து விளையாட்டுகள் செய்யலானார்.

பைத்தியம் போல் வேகமாக சிரிப்பார். நடப்பார். ஓடுவார். வசீகர கண்கள். அழுக்கே இவர் உடையின் நிறம். நிலையான இருப்பிடம் கிடையாது. நல்லவர்கள் வணங்கினால் ஆசிர்வதிப்பார். தீயவர்களை வசைமாரி பொழிவார். எந்த பெண்ணைக் கண்டாலும், என் தாய் என்று சொல்லி வணங்குவார். தூக்கமே கிடையாது. இரவில் சுற்றுவார். அல்லது தியானத்தில் இருப்பார். பக்தர்களுக்கு மும்மூர்த்திகளையும் காட்டி தானே பராசக்தி வடிவமாக காட்சிதந்துள்ளார். விஷத்தை அல்வா போல் விழுங்குவார். வியாதியால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு நிவாரணம் அளிப்பார். இவர் கட்டியணைத்தால் தோஷம் நீங்கும், கன்னத்தில் அறைந்தால் செல்வம் பெருகும். எச்சில் உமிழ்ந்தால் எல்லாம் கைகூடும். தவம் புரிந்த குகை அருகில் சென்று என் குழந்தை கந்தன் உள்ளே தவம் செய்கிறான் என்றார். ரமணரை உலகிற்கு காட்டியவர் சேஷாத்ரி சுவாமிகள், திருப்புகழ்தான் மந்திரம் என்று வன்னிமலை சுவாமிகளுக்கு உபதேசித்து, அவர் மூலம் திருப்புகழ் தமிழெங்கும் பரவச்செய்தார். 1929ம் ஆண்டு ஜனவரி மாதம் தன் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொள்ளும் நாட்களில் மகானின் முகத்தில் பிரகாசமான ஒளி, மூன்று நாட்கள் சிவசக்தி நிலையில் தியானம் செய்து முக்தி அடைந்தார். சுவமிகள் பிறக்கும்போது கிரகங்கள் இருந்த நிலையிலேயே முக்திநாளிலும் அமைந்தது. இது மகான்களுக்கே கிடைக்கூடிய மாபெரும் வாய்ப்பு. செங்கம் சாலை மலையடிவாரத்தில் சமாதி வைக்கப்பட்டார். இன்றும் ஜீவசமாதியில் இருந்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.


வாழ்வில் துன்பங்களும் கஷ்டங்களும் ஏற்படுவது ஏன்?

வாழ்வில் துன்பங்களும் கஷ்டங்களும் ஏற்படுவது ஏன்?

தங்கத்தை புடம் போடுவதும் வைரத்தை பட்டை தீட்டுவதும் அப்பொருள் மென்மேலும் ஜொலிப்பதற்காகத் தானே தவிர அதை அழிப்பதற்காக  அல்ல.நம் வாழ்வில் நாம் அடையும் துன்பங்களும் கஷ்டங்களும் கூட நம் மனதை பக்குவப்படுத்த கடவுள் எனும் கொல்லனால் பட்டை தீட்டப் படும் செயல் தான் என்பதை உணர்ந்து விட்டால் மனமானது சாந்தம் அடையும்.பாண்டுரங்கனின் மீது மிகுந்த பக்தி கொண்ட அடியவர் ஒருவர்  இருந்தார்.அவர் மனைவியின் பெயர் கமலாபாய்.யாசகம் கேட்டு வந்தவர்களுக்கெல்லாம் தங்கள் செல்வத்தை வாரிக் கொடுத்த அந்தக் குடும்பம் ஒரு காலகட்டத்தில் மிகுந்த வறுமையில் வாடியது.ஒருநாள் தன்னிடமிருந்த ஒரே மாற்றுத் துணியை துவைத்து காய போட்டு விட்டு குளிக்கச்  சென்றிருந்தார் கமலா பாய்.வீட்டிற்குள் பாண்டுரங்க பூஜையில் ஈடுபட்டு தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தார் அவரின் கணவர்.அப்போது  வாசலில்,ஐயா... தர்மம் செய்யுங்கள்...என்ற தீனமான குரல் கேட்டு பக்தர் வெளியில் வந்து பார்த்தார். கந்தலான புடவை அணிந்திருந்த பெண் ஒருவர் ஐயா...இந்த வீட்டில் ஏழைகளுக்குத் துணியும் தானியமும் தருவதாக கேள்விப்பட்டேன் ஏதாவது தர்மம் செய்யுங்கள்...எனக் கேட்டார்.

அந்த பெண்ணுக்கு தர்மம் செய்ய வீட்டில் ஏதாவது பொருள் இருக்கிறதா என்று பார்த்தார் எதுவும் இல்லை.மனைவி கமலாபாயின் மாற்றுப்  புடவை கொடியில் தொங்கிக் கொண்டிருந்தது.உடனே அந்த புடவையை எடுத்து அந்த ஏழைப் பெண்ணுக்கு தர்மம் செய்து விட்டார்.சிறிது÷நரத்தில் குளித்து ஈரப் புடவையுடன் வந்த கமலா பாய் நடந்ததை அறிந்து இவ்வளவு நாட்களாக உங்களுக்கு எல்லா விதங்களிலும் அனுசரணை யாக இருந்த எனக்கு ஒரு மாற்றுப்புடவைக்கு கூட வழி இல்லாமல் செய்து விட்டீர்களே...என்று கோபப்பட்டாள்.பக்தரோ கோபப்படாதே  கமலா...பண்டரிநாதன் திருவடிகளை சரண் அடை பகவான் கை விட மாட்டான்...என்று ஆறுதல் கூறினார்.கமலாபாயோ பகவானாம்...  பாதமாம்...அவன் தன் திருவடிகளில் விழுந்த பக்தர்களை மிதிக்கத்தான் செய்கிறானே தவிர காப்பாற்றுவது இல்லை அவன் பாதங்களை நசுக்குகிறேன்.பகவானுக்கு பாதங்களே இருக்கக் கூடாது...என்று கோபத்துடன் ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டு வெறிபிடித்தவள் போல கோவிலை நோக்கி  ஓடினாள் பக்தரும் பின்னாலேயே ஓடினார்.

பாண்டுரங்கன் சன்னிதி முன் நின்று, பாண்டுரங்கா...உன் பாதங்களில் விழுபவர்களை நீ அளவுக்கு மீறி சோதனை செய்கிறாய்; அதனால் உன்  பாதத்தை நசுக்கப் போகிறேன்... என்று உரத்த குரலில் கூறி கல்லை ஓங்கினாள்.அதற்குள் பின்னால் வந்த அவள் கணவர் ஓடிப் போய் பாண்டுரங்கன் திருவடிகளில் விழுந்து மறைத்துக் கொண்டார்.கமலா பாய் எறிந்த கல் குறி தவறி தரையில் விழுந்து உடைந்து சிதறியது.என்ன ஆச்சரியம்!உடைந்த கற்கள் யாவும் நவரத்தினங்களாகவும் வைடூரியங்களாகவும் சிதறின.அப்போது ருக்மணி தேவி காட்சியளித்து கமலா... உங்கள் தர்மக் குணத்தை உலகிற்கு எடுத்துக் காட்டவே ஏழைப் பெண்ணாக வந்து உன்னுடைய மாற்றுப் புடவையை தானமாக பெற்றேன். கோபத்தை தவிர்த்து உத்தமரான உன் கணவரை அனுசரித்து நட உனக்கு எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும்...என்று கூறி மறைந்தாள்.தாயே...ருக்குமணி தவி..மனித ஜீவன்களுக்கு மன பக்குவமும் வைராக்கியத்தையும் ஏற்படுத்துவதற்காகத் தான் நீ சோதனை செய்கிறாய் என்பதை உணராமல் போனேனே...என்று அழுதவள் தன் கணவரான துகாராமின் கால்களில் விழுந்து வணங்கினாள்.ஆம்...கமலாபாயின் கணவரான அந்த உத்தம பக்தர் துகாராம் தான்!பாண்டுரங்கன் அடியார்களில் தலை சிறந்தவரானழ வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி இது. சிதறிக் கிடந்த நவரத்தினங்களை  தொடாமல் துகாராமுடன் வெளியேறினாள் கமலாபாய்.கடவுள் கொடுத்த வாழ்க்கையில் அவன் நம்மை ஆட்கொள்ளும் விதமாக கொடுக்கும் சாதனைகளை அவன் பாதங்களை சரணடைவதன் மூலமே வெல்ல முடியும் என்பதை விளக்கும் கதை இது.

ஸ்ரீ ஸ்யாமளா தேவி

”ஸ்ரீ ஸ்யாமளா தேவி”

‘சியாமளா’ என்றும், ‘ஸ்ரீ ராஜ சியாமளா’ என்றும், ‘ஸ்ரீமாதங்கி’ என்றும், ‘மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் ‘மந்திரிணீ’ என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக இருப்பவள்.  இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், “மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதுரே நம:” என்று போற்றுகிறது.
மேலும் ‘கதம்பவனவாஸினீ’ என்றும் இந்த அம்பிகை துதிக்கப்படுகிறாள். ஸ்ரீ லலிதா தேவியின் வாசஸ்தலமான ஸ்ரீ நகரத்தில், சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்வதாலேயே சியாமளா தேவிக்கு இந்த திருநாமம். மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள். மதுரைக்கு ‘கடம்பவனம்’ என்ற ஒரு பெயரும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
‘கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிசேவிதா’… (ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்)
गेयचक् ररथारूढ मन्त्रिणी परिसेविता ….. ललिता सहस्रनाम स्तोत्रम् பண்டாசுர வதத்தின் போது, கேயசக்ர ரதத்தில் இருந்து அம்பிகைக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசுரனின் தம்பியான விஷங்கனை வதம் செய்தாள்.
‘மந்த்ரிண்யம்பா -விரசித- விஷங்கவத- தோஷிதாயை நம: ” … (ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்). मन्त्रिण्यम्बा विरचितव िषङ्गवध तोषिता ….. ललिता सहस्रनाम स्तोत्रम् சூக்ஷ்ம அர்த்தங்களின்படி பார்த்தால், அகங்காரம் மிகுந்த ஜீவனே ‘பண்டாசுரன்’ (உலகாயத) விஷயங்களில் ஜீவனுக்கிருக்கும் ஆசையே விஷங்கன். மேலும், குறுக்கு வழியில் செல்லும் புத்தியையும் விஷங்கன் குறிக்கிறான். சியாமளா தேவி, நேர்வழியில் செல்லும் மனதிற்கும் புத்திக்கும் ஆத்மஞானம் அறியும் மனநிலைக்கும் அதிபதி. ஆகவே, சியாமளா தேவியே ‘விஷங்க வதம்’ செய்கிறாள். ஸ்ரீ லலிதோபாக்கியானம், ‘சங்கீத யோகினி சியாமா, ச்யாமளா, மந்திர நாயிகா’ என்று துவங்கி அம்பிகையைப் போற்றுகிறது. ஸ்ரீ ஸ்யாமளா தேவி தண்டகம் சர்வ வல்லமை படைத்தது. அருள் அலைகளை ஈர்த்துப்பிடித்து இருக்கும் இடமெங்கும் பரப்ப கூடியது. நம்முள்ளே ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. வாழ்வில் உயர இந்த அருள் அலைகள் மிக மிக தேவை. வாழ்வு நல்ல வளம் பெற இந்த அருள் அலைகள் தேவை. துஷ்ட தேவதைகளை விரட்டி அடிக்கும் சக்தியுடையது. வாழ்வில் கல்வி, செல்வம், இவைகள் அமைய இந்த ஸ்ரீ ஸ்யாமளா தேவி தாயின் அலைகள் மிகவும் இன்றியமையாதது. இவள் இருக்கும் இடமெங்கும் அமைதி கரைபுரண்டோடும். இவள் கருணையோ கடல் போன்றது. காளிதாசர் அருளிய இந்த ஸ்யாமளாதேவி தண்டகத்தில் குறிப்பிட்ட ஒரு சில பீஜங்களை சரியான உச்சரிப்பில் சொல்லும் போது அது ஒரு வித அருள் அலைகளை தொட்டு உரசிச்செல்கிறது. இது மிகப்பெரும் ஆற்றலை மனதிற்குள் திணித்துவிட்டு செல்கிறது. இந்த ஸ்யாமளாதேவி தண்டகத்தில் ஒரு சில ஸ்லோகங்கள், அதில் ஒரு சில வரிகள், ஒரு சில வார்த்தைகள், ஒரு சில பீஜ அதிர்வுகள், எங்கேனும் ஒரு விதத்திலாவது, மனதினை மிக நுண்ணியதாக்கி, அமைதியை திணித்து, அம்பாளின் சக்தியின் ஜீவ அலைகளை உணரவைக்கும் சக்திவாய்ந்தவை. அந்த அதிர்வு நிலை, உணர்வு நிலை கிடைத்தவுடன், அப்படியே அதில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம். என்ன ஒரு அற்புதமான அலை இந்த ஸ்லோகத்தினுள் இருக்கிறது.
कारुण्यवारांनिधिम् … मीनाक्षी पञ्चरत्नम् ( श्रीमच्छङ्करभगवत )
காருண்யா வாராம் நிதிம் .. மீனாட்சி பஞ்சரத்னம் (ஆதிசங்கரர்)
இவளின் கருணை எவர் வரினும் அள்ள அள்ள குறையாத கடல். வாழ்வில் பொருள் பெரியது அல்ல. நல்ல கல்வியறிவு வேண்டும், நல்ல சொல்வன்மை வேண்டும், எதையும் எதிர்கொள்ள நல்ல தைரியம் வேண்டும், கருணை நிறைந்த உள்ளம் வேண்டும், வாழ்வில் நம் அன்றாட சாதாரண தேவைகள் சரிவர இன்னலின்றி பூர்த்திசெய்யவேண்டும். இவளின் ஒரு துளி கருணை அலைகளை அன்பால் உருகி, மெல்ல மெல்ல இதன் அலைநீளம் பிடித்து, உட்சென்று, ஆழ்ந்து அமைதியின் விளிம்பில் சென்று, கொட்டிக்கிடக்கும் தெய்வீகத்தை உணர வேண்டும்.
श्रीराजराजेश्वर्यष्टकम् … नवयौवना शुभकरी
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் .. நவயௌவனா ஶுப⁴கரீ
எப்படி ஒரு பெண் என்றுமே இளமையுடன் அழகுடன் இருக்க முடியும்? மானுட வாழ்வில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தானே அழகுடன் இருக்க முடியும். பிறகு முதுமை ஆட்கொண்டுவிடுமே? ஆனால் இவளோ என்றுமே ஒரு வசீகரிக்கும் அழகுடன் இருக்கிறாள். இவள் அழகும் நிறைந்தவள், தாய்மை சக்தியும் நிறைந்தவள், அன்பும் நிறைந்தவள், கண்களில் கருணையும் நிறைந்தவள்.
இந்த ஈனப்பிறவியில் இவளின் கருணை வேண்டும். இவள் கருணை இல்லையேல் அது ஒரு வறண்ட நிலத்திற்கு ஒப்பாகும். இவள் கருணை இன்றி இந்த உலகத்தில் சுபிக்க்ஷம் நிலவாது. இவளை பற்றி, இவள் பெருமை பற்றி, இவள் தரும் அன்பு பற்றி, இவள் தரும் ஆற்றல் பற்றி, இவள் தரும் ஞானம் பற்றி, சிந்திக்க சிந்திக்க, என்னே மகிழ்ச்சி இவளுக்கு. இவள் அருளும் பாக்கியங்களை இவளிடமே சொல்லி, இவள் அருள் உணர, பேரானந்தம் பெருக்கெடுக்கிறது. கருணை துளியை அள்ளி வீசுகிறாள். உருத்திரண்ட சக்தியொன்று உன்னத பெண் வடிவில். அழகிய முகம், அசையாத இமையும், அழகாண கண்களும், நீல நிற மேனியும், நிமிர்ந்த பார்வையும், பார்ப்பவரை ஆழ்ந்து உட்நோக்க, தத்தம் கர்ம வினையையும் கவனித்து, சூட்சுமத்தையும் தட்டி எழுப்பி, அருள் அலைகளை பரப்பும் அற்புதம். எவரும் இப்பார்வைக்கு ஈடுகொடுக்க முடியாது. வசீகரிக்கும் முகம். ஒரு சிறு பார்வை சுரீரென்று உறைந்து கிடக்கும் தெய்வீக தன்மையை தட்டி எழுப்பி சிந்திக்க வைக்கக்கூடியது. சர்வ வல்லமை படைத்தது. என்ன ஒரு அழகான பார்வை. ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை சிந்தனை வாயிலாக அருவி போல் கொட்டவைக்கிறது. அ முதல் தொடங்கி ஒவ்வொரு எழுத்தின் வாயிலாக இவள் பெருமையை சொல்லவைக்கும் சொல்வன்மை நாவில், வாக்கில் துள்ளி எழுகிறது. இவள் ஒரு சங்கீதப்பிரியை. எங்கு சங்கீதம் உள்ளதோ அங்கு இவள் இருக்கிறாள். எங்கு உள்ளம் வருடும் பாடல் ஒலிக்கிறதோ, அங்கே இவள் இருக்கிறாள். கைகளில் மாணிக்க வீணையை ஏந்தியவள். இந்த வீணை மிக இதமாக இதயத்தை வருடி நல்ல அன்பின் ஜீவ அலைகளை தொடும் சக்தியுள்ளது. வீணையின் நாதம் மனதோடு மிக நெருங்கிய தொடர்புடையது. மனதின் அலைகளோடு ஒட்டி உறவாடி நல்ல அதிர்வுள்ள அலைகளை எற்படுத்தக்கூடியது. எப்பொழுதேனும் உள்ளம் சோர்வுற்றால் வீணை ஒலியை மட்டும் கேட்டுப்பாருங்கள். சோர்வுஅலைகளை விரட்டி மெல்ல மெல்ல நல்ல அலைகளை உள்ளமெங்கும் பரப்பும் மகத்துவம் வாய்ந்தது. எந்த ஒரு பாடலில் வரும் வீணையின் நாதத்தை மட்டும் சற்றே தனியாக பிரித்து கவனித்து பாருங்கள், ஏதோ ஒரு ஈர்ப்பு அதில் உள்ளது என்பது புலப்படும். அந்த ஈர்ப்பு மனதோடு உறவாடும் தன்மை வாய்ந்தது. காலம் காலமாக ஆத்மாவுடன் பயணம் செய்வது பாவமும் புண்ணியமுமே. இன்றைய தலைமுறையில் எந்த ஒரு பிரச்சனைக்கும் மூல காரணம் அதன் கர்ம வினைகள் தானே. இதன் சாரம்சமே வாழ்வின் அமைதிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்வு அமைதியின்றி நிலை தடுமாற புண்ணியதத்தின் பற்றாக்குறை தான் காரணம். கர்மவினை பதிவுகள் நமது கருமையத்தில் பதிந்து, நாள் தோறும் நொடி தோறும், அலையாக கசிந்து, மென்மையான மனதினை சூழ்ந்துகொண்டு நம்மை எதையும் முழுமையாக செய்யவிடுவதில்லை. இதை எல்லாம் விரட்டி அடிக்க பல வழிகள். அதில் ஒன்று தான் இந்த ஸ்ரீ ஸ்யாமளா தேவி தண்டகம். இதை யார் வேண்டுமானாலும் தூயமனதுடன் சொல்லலாம். நீர் போல, காற்று போல அனைவருக்கும் பொது இது. இந்த ஸ்லோகங்கள் இறை அலைகளை அப்படியே ஏதேனும் ஒரு விதத்தில் தாங்கிவரும் ஒரு வார்த்தை கோர்வைகள். மனதை மிக நுண்ணிய அலைநீளத்தில் வைத்தவர்கள், என்றும் இறைஅலைகளிலேயே திளைத்தவர்கள், சக்தியின் அருள் ஆற்றலை உணர்ந்தவர்கள், மனதில் அன்பு எனும் சூட்சும ஆற்றலை வெகுகாலம் நிலைநிறுத்தப் பழகியவர்கள், இவர்கள் இறை அலைகளை மிக அழகாக உள்வாங்கி, அப்படியே உணர்ந்து, அதை யாவரும் உணரும் வண்ணம் மிக சரியான அதிர்வுகள் தருமாறு, மிக சரியான பீஜங்களால் கோர்த்து, வார்த்தைகளை வைத்து மிக அழகாக compose செய்து கொடுத்திருக்கிறார்கள். மிகவும் போற்றப்படவேண்டியவர்கள். மிக உயர்ந்த உள்ளம் கொண்ட ஆத்மாக்கள்.

॥ श्यामलादण्डकं कालिदासविरचितम् ॥ ஶ்யாமலாதண்டகம் காலிதாஸவிரசிதம் ॥
॥ அத ஶ்யாமலா தண்டகம் ॥ … ॥ अथ श्यामला दण्डकम् ॥
॥ த்யானம் ॥ … ॥ ध्यानम् ॥
माणिक्य वीणा मुपलालयन्तीं मदालसां मञ्जुलवाग्विलासाम् । माहेन्द्र नीलद्युति कोमलाङ्गीं मातङ्ग कन्यां मनसा स्मरामि ॥ १॥
चतुर्भुजे चन्द्रकलावतंसे कुचोन्नते कुङ्कुमरागशोणे ।. पुण्ड्रेक्षुपाशाङ्कुशपुष्पबाण- हस्ते नमस्ते जगदेकमातः ॥ २॥

மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம் |
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி ||
சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே குசோன்னதே குங்கும ராகஸோனே |
புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண- ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||

I always meditate on the daughter of Matanga Maharshi who playfully holds a Veena made of Mankikya, who is lazy by intoxication, whose speech is picturesque and beautiful and whose body is resplendent like the dark blue gemstone. O The Mother of the Worlds who has four hands, whose head is adorned with the crescent moon, who has a full bosom, who has a complexion red as kukum and who carries in her hands a bow of sugarcane, arrows of flowers, the rope and the ankusa (goad), my prostrations before you.

தியான ஸ்லோகத்தில், அம்பிகை, மாணிக்கக் கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் விருப்பமுடையவளாக, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக, திருமார்பில் குங்குமச்சாந்து தரித்தவளாக, தன் திருநெற்றியில், சந்திரகலையை அணிந்தவளாக, கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள்.
அம்பிகையின் திருக்கரங்களில் கிளியும் இடம்பெற்றிருக்கிறது. இதில் அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது. மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

॥ विनियोगः ॥ … ॥ வினியோக:³ ॥
माता मरकतश्यामा मातङ्गी मदशालिनी । कुर्यात् कटाक्षं कल्याणी कदम्बवनवासिनी ॥ ३॥

மாதா மரகதஶ்யாமா மாதங்கீ³ மத³ஶாலினீ । குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கத³ம்ப³வனவாஸினீ ॥ 3॥

May the Mother, who is dark as the marakata gemstone, who is the daughter of Matanga maharshi, who is exuberant, who is auspicious and who abides in the kadamba forest, cast on me the glances from her eye-corners.

॥ ஸ்துதி ॥ … ॥ स्तुति ॥
जय मातङ्गतनये जय नीलोत्पलद्युते । जय सङ्गीतरसिके जय लीलाशुकप्रिये ॥ ४॥

ஜய மாதங்க³தனயே ஜய நீலோத்பலத்³யுதே । ஜய ஸங்கீ³தரஸிகே ஜய லீலாஶுகப்ரியே ॥ 4॥

Victory to the daughter of Matanga. Victory to the one who has the complexion of the dark blue lily. Victory to the one who enjoys and appreciates music. Victory to the one who is fond of the playful parrot.

॥ दण्डकम् ॥ … ॥ த³ண்ட³கம் ॥
जय जननि सुधासमुद्रान्तरुद्यन् मणीद्वीप संरूढ् – बिल्वाटवीमध्य कल्पद्रुमा कल्प कादम्ब कान्तारवासप्रिये,
कृत्तिवासप्रिये, सर्वलोकप्रिये |

ஜய ஜனனீ ஸுதாஸமுத்ரான்த ஹ்ருத்யன் மணித்வீப ஸம்ரூட பில்வாடவீமத்ய கல்பத்ருமா கல்ப காதம்ப காந்தாரவாஸப்ரியே
க்ருத்தி வாஸப்ரியே ஸர்வ லோகப்ரியே |

(Victory to the Divine Mother) who is the darling of Siva and the whole world and who likes to live in the forest of kalpavriksha-like kadamba trees surrounding which is a forest of bilwa trees on the island of Manidweep in the midst of the ocean of nectar.

सादरारब्ध सङ्गीत सम्भावना सम्भ्रमालोलनी पस्रगाबद्ध चूलीसनाथत्रिके सानुमत्पुत्रिके |

ஸாதராரப்த ஸங்கீத ஸம்பாவனா ஸம்ப்ரமாலோலநீ பஸ்கராபத்த சூலீஸனாதத்ரிகே ஸானுமத்புத்ரிகே |

Victory to the Divine Mother) who is the daughter of Himavan, whose locks, around which are tied garlands of nipa which oscillate when she nods in appreciation of the melodious music started in her honor.

शेखरी भूतशीतां शुरेखामयूखावलीबद्ध-सुस्निग्ध नीलालकश्रेणि शृङ्गारिते लोकसम्भाविते |
कामलीलाधनु स्सन्निभ भ्रूलता पुष्पसन्दोह सन्देह कृल्लोचने,
वाक्सुधासेचने, चारुगोरोचना पङ्ककेलील लामाभिरामे, सुरामे | रमे |

ஸேகரீ பூதஸீதாம் ஸுரேகாமயூகாவலிபத்த ஸுஸ்நிக்த நீலாலகஸ்ரேணி ஸ்ருங்காரிதே லோகஸம்பாவிதே |
காமலீலாதனு: ஸன்னிப ப்ரூலதா புஷ்பஸந்தோஹ ஸந்தேஹ க்ருல்லோசனே வாக்ஸுதாஸேசனே
சாருகோரோசனா பங்ககேலீல லாமாபிராமே ஸுராமே | ரமே |

(Victory to the Divine Mother) who is worshipped by the people and whose beauty is enhanced by the dark blue locks which are smooth and which are illumined by the rays from the crescent moon adorning her forehead. (Victory to the Divine Mother) who is the embodiment of beauty, who is Lakshmi herself, whose eye-brows give the impression of the bow of Cupid, whose eyes lead one to doubt that they are the flowers of the eye-brow creepers, who showers sweet words and who is adorned with a pretty bindi (a round mark on the forehead) of gorochana.

प्रोल्लसद्ध्वालिका मौक्तिकश्रेणिका चन्द्रिका मण्डलोद्भासि लावण्य गण्डस्थलन्यस्त कस्तूरिकापत्र रेखासमुद्भूत सौरभ्य- सम्भ्रान्त भृङ्गाङ्ग नागीत सान्द्रीभवन्मन्द्र तन्त्रीस्वरे,सुस्वरे | भास्वरे |

ப்ரோல்லஸத்வாலிகா மௌக்திகஸ்ரேணிகா சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்தலன்யஸ்த கஸ்தூரிகாபத்ர ரேகாஸமுத்பூத ஸௌரப்ய ஸம்ப்ரான்த ப்ருங்காங்க நாகீத ஸாந்த்ரீபவன்மந்த்ர தந்த்ரீஸ்வரே, ஸுஸ்வரே | பாஸ்வரே |

(Victory to the Divine Mother) whose beautiful cheeks are lighted up by the moonlight-like lustre from the string of pearls adorning the short curly hair (playing on her forehead) and the melody from the Veena is made denser by the humming of honey-bees which are attracted by the fragrance arising from the patterns of kasturi made on her cheeks. Victory to the Mother who has a melodious voice and who has a resplendent form.

वल्लकी वादनप्रक्रिया लोलतालीद लाबद्ध-ताटङ्क भूषाविशेषान्विते, सिद्धसम्मानिते |

வல்லகீ வாதனப்ரக்ரியா லோலதாலீத லாபத்த தாடங்க பூஷாவிஷேஷான்விதே, ஸித்தஸம்மானிதே|

(Victory to the Divine Mother) who is honoured by the siddhas and who is adorned with tatankas (ear-ornaments) crafted from palm leaves which oscillate in the process of her playing the veena.

दिव्यहाला मदोद्वेल हेला लसच्चक्षुरान्दोलन श्रीसमाक्षिप्तकर्णैक- नीलोत्पले | श्यामले पूरिताशेषलोकाभि | वाञ्छाफले श्रीफले |

திவ்யஹாலா மதோத்வேல ஹேலா லஸச்சக்ஷுராந்தோலன ஸ்ரீஸமாக்ஷிப்தகர்ணைக நீலோத்பலே|
ஶ்யாமலே, பூரிதாஸேஷலோகாபி | வாஞ்சாபலே ஸ்ரீபலே |

(Victory to the Divine Mother) the beauty of whose eyes, undulating because of the inebriation caused by imbibing somarasa, surpasses the beauty of the blue lily worn on her ears, who is of dark blue complexion, who fulfils the desires of all the people, who is without blemish and who gives riches as the fruit (of worshiping her)

स्वेद बिन्दूल्ल सद्फाल लावण्य निष्यन्द सन्दोह सन्देह कृन्नासिकामौक्तिके सर्वविश्वात्मिके सर्वसिद्ध्यात्मिके कालिके |
ஸ்வேத பிந்தூல்ல ஸத்ப்பால லாவண்ய நிஷ்யந்த ஸந்தோஹ ஸந்தேஹ க்ருன்னாஸிகாமௌக்திகே ஸர்வ விஸ்வாத்மிகே ஸர்வஸித்தயாத்மிகே காளிகே |

(Victory to the Divine Mother) who is Kali, who is the soul of all mantras and all psychic powers and the pearl on whose nose-stud gives the impression that it is a drop oozing from the beauty of her forehead with beads of perspiration glistening on it.

मुग्द् धमन्दस्मितोदार वक्त्र-स्फुरत् पूग ताम्बूल कर्पूर खण्डोत्करे | ज्ञानमुद्राकरे | सर्वसम्पत्करे पद्मभास्वत्करे | श्रीकरे |
முக்த மந்தஸ்மிதோதார வக்த்ரஸ்புரத்பூக தாம்பூல கற்பூர கண்டோத்கரே |
ஞானமுத்ராகரே | ஸர்வஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே | ஸ்ரீகரே |

(Victory to the Divine Mother) whose face is lighted up by a beautiful smile, whose mouth is fragrant with betel leaf areca nut and camphor pieces, who sports the gnana mudra on her hand, who showers riches (on her devotees) and whose hands are beautiful and soft like the lotus.
कुन्द पुष्पद्युतिस्निग्ध दन्तावली निर्मला लोल कल्लोल सम्मेलन स्मेर शोणाधरे | चारुवीणाधरे | पक्वबिम्बाधरे |

குந்த புஷ்பத்யுதிஸ்நிக்த தந்தாவலீ நிர்மலா லோல கல்லோல ஸம்மேலனஸ்மேர ஸோனாதரே | சாருவீணாதரே | பக்வபிம்பாதரே |

(Victory to the Divine Mother) who carries the beautiful veena, whose lips are red like the ripe bimba fruit and whose teeth shine like jasmine buds and the red of her lips mixes with the pure white of her teeth when she smiles.

सुललित नवयौवना रम्भ चन्द्रोदयोद्वेल लावण्य दुग्धार्णवाविर्भ वत् कम्बु बिम्बोक भृत्कन्थरे | सत्कलामन्दिरे | मन्थरे |

ஸுலலித நவயௌவனா ரம்ப சந்த்ரோதயோத்வேல லாவண்ய துக்தார்ணவாவிர்ப வத்கம்பு பிம்போக ப்ருத்கந்தரே | ஸத்கலாமந்திரே | மந்த்தரே |

(Victory to the Divine Mother) whose gait is leisurely, who is the repository of all fine arts, whose neck is like the conch emerging from the milky ocean of the high tide of beauty caused by the rising moon of freshness of youth, delicate and beautiful.

दिव्यरत्नप्रभा बन्धुरच्छन्न हारादि भूषा समुद्योतमाना नवद्याङ्गशोभे | शुभे |

திவ்யரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா ஸமுத்யோதமானா நவத்யாம் ஸுஸோபே | ஸுபே |

(Victory to the Divine Mother) who is the embodiment of auspiciousness and whose blemishless beauty is lighted up by ornaments like necklaces studded with divine diamonds and gems.

रत्नकेयूर रश्मिच्छटापल्लव प्रोल्लस द्दोल्लता राजिते योगिभिःपूजिते |

ரத்னகேயூர ரஸ்மிச்சடாபல்லவ ப்ரோல்லஸத் தோர்லதா ராஜிதே யோகிபி: பூஜிதே |

(Victory to the Divine Mother) who is worshipped by the yogis and whose hands shine with the rays from the diamond-studded keyura, the rays giving the impression of tender leaf buds.
विश्वदिङ्मण्डलव्यापि-माणिक्य-तेजस्फुरत्-कङ्कणालंकृते- विभ्रमालंकृते- साधुभिस्सत्कृते!

விஸ்வதிங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜ:ஸ்புரத்கங்கணாலங்க்ருதே விப்ரமாலங்க்ருதே ஸாதகை: ஸத்க்ருதே |

(Victory to the Divine Mother) who is worshipped by sadhus, the splendour of the manikya in whose bangles spreads in all directions of the world and who is splendidly adorned.

वासरारंभवेला-समुज्जृंभमाणारविन्द-प्रतिद्वन्द्वि-पाणिद्वये ! संततोद्यद्दये! अद्वये !

வாஸராரம்ப வேலஸமுஜ்ரும்ப மாணாரவிந்த ப்ரதித்வன்த்வி பாணித்வயே | ஸந்ததோத்யத்தயே | அத்வயே |

(Victory to the Divine Mother) who is one without a second, whose compassion is always ascendant and whose both hands surpass the beauty of the blooming lotus in the early morning.

दिव्य्ररत्नोर्मिका-दीधितिस्तोम-संध्यायमानाङ्गुलीपल्लवोद्यन्नखेन्दु-प्रभामण्डले ! सन्नताखण्डले ! चित्प्रभामण्डले ! प्रोल्लसद्कुण्डले!

திவ்யரத்னோர்மிகா தீதிதிஸ்தோம ஸந்த்யாய மானாங்குளி பல்லவோத்யன்னகேந்து |
ப்ரபாமண்டலே, ஸன்னதாகண்டலே | சித்ப்ரபா மண்டலே | ப்ரோலஸத்குண்டலே |

(Victory to the Divine Mother) before whom bows Indra, who is effulgent consciousness, whose ear-globes shine and whose nails give the impression of the orb of the rising moon, the diamond-studded rings on her fingers giving out bright red rays creating the impression of evening twilight period (sayam sandhya).

तारकाराजिनीकाश हारावलिस्मेर चारुस्तना भोगभारान मन्मध्य-वल्लीवलिच्छेद वीचीसमुद्यत्समुल्लास सन्दर्शिताकार सौन्दर्यरत्नाकरे |. वल्लकीभृत्करे | किङ्कर श्रीकरे |

தாரகாராஜிநீகாஸ ஹாராவலிஸ்மேர சாருஸ்தனா போகபாரான மன்மத்ய வல்லீபலிச்சேதவீசீ *ஸமுல்லாஸ ஸந்தர்சிதாகார ஸௌந்தர்ய ரத்னாகரே வல்லகீப்ருத்கரே | கிங்கர ஸ்ரீகரே |

(Victory to the Divine Mother) who showers wealth on those serving her, whose bosom is adorned by several gold chains studded with diamonds resembling a cluster of stars and who is slightly bent (because of the weight of the breasts) and who has wave-like folds in the middle which further enhance the beauty of what is already an diamond mine (or ocean) of beauty.

हेमकुम्भोपमोत्तुङ्ग वक्षोजभारावनम्रे | त्रिलोकावनम्रे |

ஹேமகும்போப மோத்துங்க வக்ஷோஜ பாராவநம்ரே | த்ரிலோகாவனம்ரே |

(Victory to the Divine Mother) whose full breasts resemble pots of gold causing her to bend slightly and to whom the three worlds bow down (as the Divine Mother)

लसद्वृत्तगम्भीर नाभीसरस्तीर शैवाल शङ्काकरश्याम रोमावलीभूषणे | मञ्जुसम्भाषणे |

லஸத்வ்ருத்த கம்பீர நாபிஸரஸ்தீர ஸைவால ஸங்காகரஸ்யாம ரோமாவலீ பூஷணே | மஞ்சுஸம்பாஷனே |

(Victory to the Divine Mother) whose speech is sweet and who is adorned with dark hair around the deep and round navel which makes one think of a lake with moss on its banks.

चारुशिञ्चत्कटीसूत्रनिर्भत्सितानङ्गलीलधनुश्शिञ्चिनीडम्बरे | दिव्यरत्नाम्बरे |

சாருஸிஞ்ஜத்கடீஸூத்ர நிர்பர்த்ஸிதாநங்க லீலாதனு: ஸிஞ்ஜனீ டம்பரே, | திவ்யரத்னாம்பரே |

(Victory to the Divine Mother) who is clothed in divine gem-studded raiment and the tinkling sound from whose waist-belt competes with that from the sporty bow of Kama (Cupid) (in arousing passionate love)

पद्मरागोल्लस न्मेखलामौक्तिकश्रोणिशोभाजितस्वर्णभूभृत्तले | चन्द्रिकाशीतले |

பத்மராகோல்லஸன் மேகலா பாஸ்வரஸ்ரேணி ஸோபாஜிதே ஸ்வர்ண பூப்ருத்தலே| சந்த்ரிகா ஸீதலே|

(Victory to the Divine Mother) who is as cool as the moonlight and the expanse and beauty of whose hip, adorned with a mekhala which shines with red stones, surpasses the expanse and beauty of the plateau of the golden mountain (Meru)

विकसित नवकिंशुकाताम्र दिव्यां शुकच्छन्न चारूरुशोभा पराभूत सिन्दूर शोणाय मानेन्द् रमातङ्ग हस्मार्ग्गले| वैभवानर्ग्गले| श्यामले|

வகஸித நவகிம்ஸுகாதாம்ர திவ்யாம் ஸுகச்சன்ன சாரூருஸோபா பராபூத ஸிந்தூர ஸோணாய மானேந்த்ர மாதங்க ஹஸ்தார்கலே | வைபவானர்கலே | ஸ்யாமலே |

Victory to the Divine Mother) whose beautiful thighs, covered with divine clothes with the colour of new blooming kimshuka flowers, compete with Indra’s elephant’s trunk smeared with sindur, who is a dark beauty and whose grace flows unimpeded.

कोमलस्निग्द्ध नीलोत्पलोत्पादि तानङ्गतूणीर शङ्काकरोदार जङ्घालते चारुलीलागते |

கோமளஸ்நிக்த நீலோத்பலோத்பாதி தானங்க தூணீர ஸங்காக ரோதார ஜங்காலதே சாருலீலாகதே |

(Victory to the Divine Mother) whose lower leg is pretty and smooth giving the impression of Kama’s quiver made of blue lilies and whose gait is pretty and playful.

नम्रदिक्पाल सीमन्तिनी कुन्तलस्निग्द्ध नीलप्रभापुञ्च सञ्जात दुर्वाङ्कुरा शङ्क सारङ्ग संयोगरिङ्खन्न खेन्दूज्ज्वले प्रोज्ज्वले| निर्मले|

நம்ரதிக்பால ஸீமந்தினீ குந்தலஸ்நிக்த நீலப்ரபாபுஞ்ச ஸஞ்ஜாத தூர்வாங்குரா ஸங்க ஸாரங்க ஸம்யோகரிங்கன்ன கேந்துஜ்வலே ப்ரோஜ்வலே | நிர்மலே |

(Victory to the Divine Mother) who is resplendent and pure and whose toe nails are brilliant and who is surrounded by deer which are attracted by the dark smooth locks of the consorts of the presiding deities of the eight quarters who bow down at her feet. The deer are deluded into thinking, by the texture and colour of the hair, that it is green durva grass.

प्रह्व देवेश लक्ष्मीश भूतेश तोयेश वाणीश कीनाश दैत्येश यक्षेश वाय्वग्निकोटीर माणिक्य संहृष्ट बाला तपोद्दाम– लाक्षारसारुण्य तारुण्य लक्ष्मी गृहिताङ्घ्रि पद्म्मे सुपद्मे | उमे |

ப்ரஹ்வ தேவஸ லக்ஷ்மீச பூதேச தோயேச வாணீ ச கீனா ச தைத்யே ச யக்ஷேச வாய்வக்னி மாணிக்ய சங்க்ருஷ்ட கோடீர பாலா தபோத்தாம லாக்ஷாரஸாருண்ய தாருண்ய லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரீ பத்மே ஸுதப்மே | உமே |

Victory to the Divine Mother) before whom bow down Indra, Vishnu, Siva, the lokapalas, Brahma, Yama, the Asura King, Kubera, Vayu, Agni and whose feet, adorned with red laksharasa and caressed by Lakshmi, shine like the light of the rising sun by the rays of manikya in the crowns of the celestials bowing down.

सुरुचिरनवरत्नपीठस्थिते सुस्थिते | रत्नपद्मासने रत्नसिम्हासने शङ्खपद्मद्वयोपाश्रिते विश्रुते |
तत्र विघ्नेश दुर्गावटुक्षेत्रपालैर्युते | मत्तमातङ्ग कन्या समूहान्विते | भैरवैरष्टभिर्वेष्टिते |
मञ्चुला मेनकाद्यङ्ग नामानिते | देवि वामादिभिः शक्तिभिस्सेविते |
धात्रि लक्ष्म्यादिशक्त्यष्टकैः संयुते | मातृकामण्डलैर्मण्डिते |
यक्षगन्धर्वसिद्धाङ्गना मण्डलैरर्चिते |
भैरवी संवृते पञ्चबाणात्मिके | पञ्चबाणेन रत्या च सम्भाविते |

ஸுருசி நவரத்ன பீடஸ்திதே ஸுஸ்திதே |
ரத்ன பத்மாஸனே ரத்ன ஸிம்ஹாஸனே ஸங்க பத்மயோபாஸ்ரிதே |
தத்ர விக்னேஷ துர்காவடுக்ஷேத்ரபாலைர்யுதே | மத்தமாதங்க கன்யா ஸமூஹான்விதே |
மஞ்ஜுளா மேனகாத்யங்க நாமானிதே, பைரவைரஷ்டபிர்வேஷ்டிதே |
தேவி வாமாதிபி:ஸக்திபி:ஸேவிதே |
தாத்ரி லக்ஷ்ம்யாதி சக்த்யஷ்டகை: ஸம்யுதே | மாத்ருகா மண்டலைர் மண்டிதே |
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கநா மண்டலைரர்சிதே | பஞ்சபாணாத்மிகே |
பஞ்ச பாணேனே ரத்யா ச ஸம்பாவிதே |

(Victory to the Divine Mother) who is seated on the dais of pretty nine jewels, whose throne is of diamonds, who is served by the shamkha and padma nidhis, who is famous, who is accompanied by Ganesha, Durga, Vatu and Kshetrapala, who has the company of intoxicated matanga kanyas, who is surrounded by the eight bhairavas, who is honoured by Manjula, Menaka and other celestial damsels, who is served by saktis like Vama, eight saktis of Dhatri ,Lakshmi and others, who is worshipped by the seven mothers, yakshas, gandharvas and the siddhanganas, who is surrounded by bhairavies, who is the very soul of Kama, who is honoured by Kama and Rati and who is propitiated by Vasanta who enjoys her affection.

प्रीतिभाजा वसन्तेन चानन्दिते | भक्तिभाजं परं श्रेयसे | कल्पसे |
योगिनां मानसे द्योतसे छन्दसामोजसा भ्राजसे | गीतविद्या विनोदाति तृष्णेन कृष्णेन सम्पूज्यसे |
भक्तिमच्चेतसा वेधसा स्तूयसे | विश्वहृद्येन वाद्येन विद्याधरैर्गीयसे |

ப்ரீதிபாஜா வஸந்தேன சானந்திதே | பக்திபா⁴ஜம் பரம் ஶ்ரேயஸே | கல்பஸே |
யோகினாம் மானஸே த்யோதஸே | ச்சந்தஸா மோஜஸா ப்ராஜஸே |
கீத வித்யா விநோதாதி த்ருஷ்ணேன க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே |
பக்திமச்சேதஸா வேதஸா ஸ்தூயஸே | விஸ்வஹ்ருத்யேன வாத்யேன வித்யாதரைர்கீயஸே |

O Mother! You bless your devotees with material and spiritual welfare. You shine in the hearts of yogis. You shine by the powerful Vedic chants. You are worshipped by Krishna who very much likes gitavidya( the fine art of music). Brahma sings your praises with deep devotion. Vidyadharas sing your glories with instruments which captivate the hearts of all.

श्रवणहरदक्षिणक्वाणया वीणया किन्नरैर्गीयसे | यक्षगन्धर्वसिद्धाङ्गना मण्डलैरर्च्यसे |
सर्वसौभाग्यवाञ्छावतीभिर् वधूभिस्सुराणां समाराध्यसे |

ஸ்ரவண ஹரண தக்ஷிணக்வாணயா வீணயா கின்னரைர்கீயஸே |
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலைரர்ச்யஸே |
ஸர்வ ஸௌபாக்ய வாஞ்சாவதீ பிர்வதூபி: ஸுராணாம் ஸமாராத்யஸே |

Your glories are sung by Kinnaras by playing the melodious Veena which captivates the ears. You are worshipped by groups of yakshas, gandharvas and shiddhas. You are propitiated by the wives of devas who desire for themselves all the good things in life.

सर्वविद्या विशेषत्मकं चाटुगाथा समुच्चारणा कण्ठमूलोल्लसद्- वर्णराजित्रयं
कोमलश्याम लोदारपक्षद्वयं तुण्डशोभाति दूरीभवत् किंशुकं तं शुकं लालयन्ती परिक्रीडसे |

ஸர்வவித்யா விஷேஷாத்மகம் சாடுகாத்தா ஸமுச்சாரணம் கண்டமூலோல்ல ஸத்வர்ண ராஜித்ரயம்
கோமளஸ்யாம லோதார பக்ஷத்வயம் துண்டஸோபாதி தூரீபவத் கிம்சுகம் தம்சுகம் லாலயன்தீ பரிக்ரீடஸே |

You mollycoddle and play with the parrot which is the personification of all knowledge, which keeps telling interesting stories, which has on its neck three lines of different colours, which has two pretty dark green wings and whose beak surpasses the kimshuka flower in its red colour.

पाणिपद्मद्वयेनाक्षमालामपि स्फाटिकीं ज्ञानसारात्मकं var मालागुण
पुस्तकञ्चङ्कुशं पाशमाबिभ्रती तेन सञ्चिन्त्यसे तस्य वक्त्रान्तरात् गद्यपद्यात्मिका भारती निस्सरेत् |
येन वा यावकाभाकृतिर्भाव्यसे, तस्य वश्या भवन्ति स्त्रियः पूरुषाः | येन वा शातकम्बद्युतिर्भाव्यसे सोपि लक्ष्मीसहस्रैः परिक्रीडते |

பாணிபத்மத்வயேன அக்ஷமாலாமபி ஸ்பாடிகீம் ஞானஸாராத்மகம் புஸ்தகம் *சாங்குஸம் பாஸமாபிம்ப்ரதீ யேன ஸஞ்சின்த்யஸே தஸ்ய வக்த்ரான்தராத் கத்யபத்யாத்மிகா பாரதீ நி:ஸரேத் |
யேந வா யாகவா பாக்ருதிர் பாவ்யஸே தஸ்ய வஸ்யா பவந்தி ஸ்த்ரிய: புருஷ: |
யேந வா ஸாதகும்பத்யுதிர் பாவ்யஸே ஸோபி லக்ஷ்ம்ஹீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே |

If a devotee meditates on you as holding in your hands the crystal akshamala, the book of supreme knowledge, the goad and the rope, from his mouth will emerge all knowledge in the form of poetry and prose. If he meditates on you as having a red complexion, all men and women will be under his spell. If he meditates on you as having golden complexion, he will sport with thousands of Lakshmis (i.e. he will have immeasurable wealth).

किन्न सिद्ध्येद्वपुः श्यामलं कोमलं चन्द्रचूडान्वितं तावकं ध्यायतः |
तस्य लीला सरोवारिधीः तस्य केलीवनं नन्दनं तस्य भद्रासनं भूतलं तस्य गीर्देवता किङ्करि तस्य चाज्ञाकरी श्री स्वयं |

கிம் ந ஸித்யதேத் வபு: ஸ்யாமளம் கோமளம் சந்த்ர சூடான்விதம் தாவகம் த்யாயத: |
தஸ்ய லீலா ஸரோவாரிதி: தஸ்ய கேலீவனம் நந்தனம் தஸ்ய பத்ராஸனம் பூதலம் தஸ்ய கீர்தேவதா கிங்கரீ தஸ்ய சா ஜ்ஞாகரீ ஸ்ரீ:ஸ்வயம் |

What is not accessible or achievable to the devotee who meditates on your beautiful dark blue form sporting the crescent moon on the head? For him the ocean is the pool for water sports, the Nandana vana is the forest where he can play, his seat is the entire earth, the Goddess of speech is his handmaid and Goddess Lakshmi waits for his orders.

सर्व तीर्थात्मिके सर्व मन्त्रात्मिके सर्व यन्त्रात्मिके सर्व तन्त्रात्मिके सर्व चक्रात्मिके सर्व शक्त्यात्मिके
सर्व पीठात्मिके सर्व वेदात्मिके सर्व विद्यात्मिके सर्व योगात्मिके सर्व वर्णात्मिके सर्वगीतात्मिके
सर्व नादात्मिके सर्व शब्दात्मिके सर्व विश्वात्मिके सर्व वर्गात्मिके सर्व सर्वात्मिके सर्वगे सर्व रूपे
जगन्मातृके पाहि मां पाहि मां पाहि मां देवि तुभ्यं नमो देवि तुभ्यं नमो देवि तुभ्यं नमो देवि तुभ्यं नमः

ஸர்வ தீர்தா²த்மிகே ஸர்வ மந்த்ராத்மிகே ஸர்வ யந்த்ராத்மிகே ஸர்வ தந்த்ராத்மிகே
ஸர்வ சக்ராத்மிகே ஸர்வ ஶக்த்யாத்மிகே ஸர்வ பீடா²த்மிகே ஸர்வ வேதா³த்மிகே
ஸர்வ வித்³யாத்மிகே ஸர்வ யோகா³த்மிகே ஸர்வ வர்ணாத்மிகே. ஸர்வ கீ³தாத்மிகே
ஸர்வ நாதா³த்மிகே ஸர்வ ஶப்³தா³த்மிகே ஸர்வ விஶ்வாத்மிகே ஸர்வ வர்கா³த்மிகே
ஸர்வ ஸர்வாத்மிகே ஸர்வகே³ ஸர்வ ரூபே
ஜக³ன்மாத்ருʼகே பாஹி மாம் பாஹி மாம் பாஹி மாம்
தே³வி துப்⁴யம் நமோ தே³வி துப்⁴யம் நமோ தே³வி துப்⁴யம் நமோ தே³வி துப்⁴யம் நம:
O Devi!, the soul or essence of all holy waters, all tantras, all mantras, all chakras (symbols), all psychic powers, all seats of power, all philosophy, all knowledge, all yogas, all musical sounds, all vedas, all speech, all worlds, all divisions and all austerities, who is everywhere, who is all forms, who is the Mother of all the worlds please save me, save me, I prostrate before you, I prostrate before you, I prostrate before you.

॥ इति श्यामला दण्डकम् सम्पूर्णम् ॥ இதி ஶ்யாமலா த³ண்ட³கம் ஸம்பூர்ணம் ॥
मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर ।. यत्पूजितं मयादेव परिपूर्णं तदस्तु मे ॥

வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும். மந்திரங்களை தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும் படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில் அந்த உபதேஸத்தால் உங்களுக்கும் உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும். ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, ஸ்வரத்தில் பிழையோ, வேறேனும் தவறோ ஏற்பட்டால், எஜமானனுக்கே தீங்கு விளைவிக்கும்.


வெள்ளி, 11 டிசம்பர், 2020

கோடீஸ்வரனாக்கும் குபேர இரகசியங்கள்!

கோடீஸ்வரனாக்கும் குபேர இரகசியங்கள்!

வந்த செல்வத்தை மதித்துப் போற்றுங்கள்.வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள்.அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள்.பணம் வந்தால் வாய்பிழந்த ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாவேன்!என்று இறைவனிடம் திரும்பத் திரும்பக் கூறுங்கள்.குபேர வாசலைத் திறந்து விடுவார்.வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்!என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும்.

* பணத்தைப் பிறரிடம் வழங்கும்போது தலைப் பகுதியியை நம் பக்கம் வைத்தபடி வழங்கிப் பிரியா விடைதரவும்.

*வாடகை...பலசரக்கு..பால்பாக்கி... எனப் பணத்தைப் பிறருக்கு வழங்கும்போதெல்லாம் சீக்கிரம் வேறு வழியில் என்னிடம் வந்து சேர்!எனப் பிரியா விடை கொடுத்து அனுப்புங்கள்.

* ஈரம் ஈரத்தை ஈர்ப்பதுபோல் ஏற்கனவே இருக்கும் பணம்தான் புதிய பணத்தை ஈர்த்து வரும்.எனவே பர்சில்... வங்கியில்...பீரோவில் வறட்சி கூடாது. இருப்புத் தொகை அதாவது ( கணிtஞுணtடிச்டூ அட்ணிதணt)ஆகக் குறிப்பிட்ட தொகை இருக்கும்போதே செலவை நிறுத்தி விட வேண்டும். நாள்தோறும் கண்கள் பணத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் பசுமையைப் பராமரிக்கவும்.

*தூய்மையற்ற இடத்திற்குள் திருமகள் நுழைய மாட்டாள்.வீடு.. அலுவலகம்...கல்லாப்பெட்டி...பணப்பை...எனச் செல்வம் புழங்கவேண்டிய இடங்களை எப்போதும் தூய்மையாக வைத்துப் பராமரிக்கவும்.

*வணிகத்தை...தொழிலை.... அலுவலகப் பணியை மனமலர்ச்சியுடன் விளையாட்டகச் செய்யுங்கள்.சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். சிடுமூஞ்சிகளையும் அழுமூஞ்சிகளையும் பார்த்து மூதேவிதான் விரும்பி வருகிறாள். சிரித்து வாழுங்கள்.சிரிப்பவர்களுடன் சேர்ந்து வாழுங்கள்.

*ஆபிரகாம் லிங்கன் படத்தைப் பாக்கெட்டில் வைத்துக் கேளுங்கள். பண வருமானம் குறையாது.

* கீழே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள் குபேர உறவு வாய்க்கும். வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும்.

ஓம் ........ஹ்ரீம்.......க்ளீம்சௌம்........ஸ்ரீம்......கும் குபேராய........... நரவாகனாயயக்ஷ ராஜாய...... தன தான்யாதிபதியே............ லக்ஷ்மி புத்ராய......ஸ்ரீம்........ ஓம்....... குபேராய நமஹ.........!

மனம் தரும் பணம்! போன்ற பொன்மொழிகளை உணர்ந்து முதலில் மனத்தைப் பணக்கார மனமாக மாற்றுங்கள்.வெகுசீக்கிரம் வெளியில் பணக்காரன் ஆகிவிடுவீர்கள்.


ராமகிருஷ்ண பரமஹம்சர்

ராமகிருஷ்ணர் பகுதி ஒன்று

சத்தியம் தவறாத சுதிராமிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவ்வூரில் மிகப்பெரிய ஜமீன்தார் ராமானந்தர். அவரைப் பகைத்துக்கொண்டு யாராலும் வாழ இயலாது. அவ்வாறு பகைத்துக்கொண்டால் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சொத்துக்களைப் பறித்துக்கொண்டு ஊரைவிட்டே விரட்டிவிடுவார். இதே நிலைமைதான் இப்போது சுதிராமிற்கு ஏற்பட்டிருந்தது. சத்தியம் தவறாத உத்தமரான சுதிராம் கோல்கட்டாவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த தேரேய்பூர் கிராமத்தில் வசித்தார். அவரது முன்னோர்கள் புகழ்பெற்று விளங்கினர். ராமபிரான் அவர்களின் குலதெய்வம். இருந்தாலும் சிவபெருமானையும் வழிபடத் தவறுவதில்லை. 50 ஏக்கர் நிலத்திற்கு சுதிராமும் அவரது இரண்டு தம்பிகளும் சொந்தக்காரர்கள். ஏழைகளுக்கு இரக்கத்துடன் உதவுவார்கள். பிறர் துன்பம் கண்டு மனமுருகும் தன்மை கொண்டவர்கள். இக்குடும்பத்தின் புகழ் பக்கத்து கிராமங்களில்கூட பரவியிருந்தது. மாணிக்ராம் சட்டர்ஜி என்பவர்தான் இக்குடும்ப தலைவராக இருந்தார். அவரது மகன்தான் சுதிராம். சுதிராமிற்கு பிறகு நிதிராம், கனைராம் என்ற தம்பிகளும், ராம்சிலா என்ற தங்கையும் பிறந்தார்கள். இவர்களில் சுதிராம் பக்தியில் மிகுந்த நாட்டமுள்ளவர். ராமபிரானைத் துதித்துக்கொண்டே இருப்பார். காலையில் ராமனை வணங்கிய பிறகுதான் தண்ணீர்கூட குடிப்பார். தியாக உணர்வு மிக்கவர். உண்மை மட்டுமே பேசுவார். அவருக்கு இயற்கையாகவே ஆசைகள் மனதில் இல்லை. ஒழுக்கம் தவறி நடப்பவர்களைக் கண்டால் ஒதுங்கிப் போய் விடுவார். அவர்களைப்பற்றி வேதனையோடு பேசுவார். சாஸ்திர சம்பிரதாயங்களில் அதிக நாட்டம் கொண்டவர்.

அக்கால அந்தணர் மரபுப்படி, இளமையிலேயே அவருக்கு ஒரு சிறுமியை மணம் செய்து வைத்தனர். ஆனால், அச்சிறுமி மனைவி சில நாட்களில் இறந்து போனார். மீண்டும் இருபத்தைந்தாம் வயதில் சந்திரமணிதேவி என்னும் நற்குண மங்கையை மணம் செய்துகொண்டார். சந்திராவும் தன் கணவரைப் போலவே பக்திப்பிழம்பாக இருந்தார். கள்ளம் கபடமற்றவர். பிறரது துன்பங்களை வலியச்சென்று ஏற்றுக்கொள்வார். ஒரு சுமைதாங்கியாக அவர் திகழ்ந்தார். 1805-ல் இத்தம்பதியருக்கு ராம்குமார் என்ற மகன் பிறந்தான். 1810-ல் காத்யாயனி என்ற மகள் பிறந்தாள். இதன்பிறகு 16 ஆண்டுகள் கழித்து ராமேஸ்வர் என்ற மகன் பிறந்தான். மூத்தவர் என்ற முறையில், குடும்பப் பொறுப்பு சுதிராமின் கைவசம் இருந்தது. உழைப்பில் வல்லவரான அவர் குடும்பத்திற்காக ஏராளமான சொத்துக்களைச் சேர்த்தார். செழுமைக்கு பஞ்சமில்லை. ஆனால், இந்த அழகிய குடும்பத்தின் மீது யார் கண்பட்டதோ; அல்லது சுதிராம் ராமனின் பக்தர் என்பதால், இயற்கையாகவே துன்பம் ஆட்கொண்டதோ தெரியவில்லை. அவரது குடும்பத்திற்கு வந்தது சோதனை. அப்போது தேரேய்பூர் கிராமம் ஜமீன்தார்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருந்தது. அவர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்கு மொத்தமாக வரியை கட்டிவிட்டு கிராமத்தை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வருவார்கள். அவர்கள் வைத்தது தான் சட்டம். அவர்கள் விதித்தது தான் வரி. தேரேய்பூர் கிராமம் ராமானந்தராய் என்ற ஜமீன்தாரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அவர் பெரும் கொடுமைக்காரர்.

அவ்வூரில் வசித்த ஏழை ஒருவன் அவரது கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தான். அவன்மீது பொய்வழக்கு தொடர்ந்தார் ராய். தனது வழக்கிற்கு சாட்சிகளை அவர் தேடவேண்டி வந்தது. அவ்வூரிலேயே சத்தியவான் என கருதப்பட்டவர் சுதிராம். எனவே அவரை சாட்சிசொல்ல அனுப்பினால், அந்த சாட்சியம் நியாயமானதாகக் கருதப்பட்டு, ஏழைக்கு தக்க தண்டனை கிடைக்கும் என அவர் நம்பினார். சுதிராமிற்கு ஆள் அனுப்பினார். நான் சொல்வதை நீ கேட்க வேண்டும். அந்த ஏழைக்கு எதிராக நீ நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் நான் உனக்கு வேண்டிய வசதி செய்து தருகிறேன் என்றார். சத்தியம் தவறாத சுதிராம் இதற்கு மறுத்தார். ஏய் சுதிராம்! நீ சாட்சி சொல்ல மறுத்தால் அந்த ஏழையின் கதிதான் உனக்கும் ஏற்படும். உன்மீதும் பொய் வழக்கு போட்டு உன் சொத்துக்களைப் பறிப்பேன். உன் குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்துவிடுவேன். நீ மட்டுமின்றி உனது சகோதரர்களும் அவர்களது குடும்பமும் தெருவிற்கு வந்துவிடும், ஜாக்கிரதை, என மிரட்டினார் ராமானந்தர். சுதிராம் அவரது மிரட்டலுக்கு பணியவில்லை. என்னால் ஒரு ஏழையின் குடும்பம் அழியக்கூடாது. என் குடும்பம் வேண்டுமானால் அழிந்து போகட்டும், என ஆணித்தரமாகச் சொல்லி விட்டார். தன் குடும்பமே அழியப்போகிறது என தெரிந்தும் சத்தியம் தவறக்கூடாது என்பதில் உறுதியாக நின்று விட்டார். ஆனால், அந்த ஜமீன்தாரின் செல்வாக்கின் முன் சாதாரண பணக்காரரான சுதிராமின் சத்தியம் எடுபடவில்லை. ராமானந்தர் நினைத்ததை சாதித்துவிட்டார். சுதிராம்மீது பொய்வழக்கு தொடுக்கப்பட்டது. அவரது வீடு, 50 ஏக்கர் நிலம் அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ராமானந்தருக்கு சொந்தமாகிவிட்டன. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த வீட்டை விட்டு குடும்பத்தினர் கண்ணீருடன் வெளியேறினர். ஊர்மக்கள் அவர்கள்மீது பரிதாபப்பட்டார்களே தவிர, ஜமீன்தாருக்கு பயந்து எவ்வித உதவியும் செய்ய முன்வரவில்லை. சுதிராமின் இரண்டு சகோதரர்களும் அவரவர் மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டனர். 40 வயதே நிரம்பிய சுதிராம் மனைவி, குழந்தைகளுடன் நட்ட நடுரோட்டில் தத்தளித்து நின்றார்.


திங்கள், 7 டிசம்பர், 2020

பிருது

பிருது

மதர்மராஜனின் மகள் சுனிதா, அவள் கணவன் அங்கா, இவர்களின் புதல்வன்தான் வேனா, எமதர்மராஜனின் பேரனான இவன் தர்மத்தை அழித்து வாழும் அரக்கனாக இருந்தான். அவன் இப்பூவுலகின் மன்னனானதும் அவனது மமதையும் அகங்காரமும் மேலோங்கி நின்றன. தர்மத்தின் காவலனான எமதர்மராஜனின் பேரன் என்பதை மறந்து, அதர்மத்தையே தனது லட்சியமாகக் கொண்டு கொடுங்கோல் ஆட்சி புரிந்தான் அவன். தேவர்களையும் மகரிஷிகளையும், நல்லவர்களையும் விரோதியாகக் கருதி அவர்களை அடக்கி, அழித்தொழிக்கும் செயல்களில் ஈடுபட்டான். தானே முழுமுதற் கடவுள் என்று பிரகடனம் செய்தான். முனிவர்கள் செய்யும் யாகங்களில் தனக்கே முதல் ஆஹுதி தர வேண்டும் எனக் கட்டளையிட்டான். அவ்வாறு செய்ய மறுத்த முனிவர்களின் யாகங்களை அழித்து, அவர்களைத் துன்புறுத்தினான்.வேனாவின் கொடுங்கோல் ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்டது பூமியும் அதன் இயற்கைச் செல்வங்களும்தான்! வேனாவின் கொடுமைகள் எல்லை மீறியதால் இயற்கை அழிந்துகொண்டிருப்பதைச் சகிக்கமுடியாத பூமாதேவி. தான் படைத்த செல்வங்கள் எல்லாவற்றையும் திருப்பி எடுத்துக்கொண்டு தன்னுள் அடக்கிக் கொண்டாள். ஒரு பசு வடிவம் எடுத்து,அண்ட சராசரங்களில் எங்கோ மறைந்துகொண்டாள். வேனாவின் பூமி எந்தவித இயற்கைச் செல்வங்களும் இன்றி வறண்டு காட்சி தந்தது. பூமியில் தண்ணீர் இல்லை. தாவரங்கள் இல்லை; பசுமை மறைந்தது. நோயும் வறுமையும் மக்களைச் சூழ்ந்துகொண்டன. இந்த நிலையைப் போக்கி, பூமியை வளம் பெறச் செய்ய, மகரிஷிகள் யாகங்கள் செய்தனர். முப்பெரும் தேவர்களைக் நோக்கி தவம் இருந்தனர். முடிந்தவரை பொறுமையாக வேனாவுக்கு அறிவுரை கூறினர். ஆனால், வேனா எவரையும் மதிக்கவில்லை. நல்லோர் உபதேசங்களைக் காதில் வாங்கவில்லை. முப்பெரும் தேவர்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைப் பற்றி இழிவாகப் பேசினான். எல்லா மக்களும் மற்ற கடவுள்களை வழிபடுவதை நிறுத்திவிட்டுத் தனக்கே பூஜை செய்ய வேண்டுமென ஆணையிட்டான்.

பொறுமையைக் கடைப்பிடித்து பூமியைக் காக்க தவம் செய்து வந்த சப்த ரிஷிகளும் வேனாவின் கொடும் செயல்களால் கோபம் அடைந்தனர். தர்ப்பை எனும் புனிதமான புல்லைக் கையிலெடுத்து மந்திரங்கள் ஓதி, அந்த தர்ப்பையையே அஸ்திரமாக்கி, வேனா மீது ஏவினர். எமதர்மராஜனும் தன் பேரனை அழித்து பூவுலகைக் காப்பதே தர்மம் எனக் கருதி, தன் பாசக்கயிற்றை வேனா மீது வீசினான். வேனா மடிந்து தரையில் வீழ்ந்தான். தேவர்களும், மகரிஷிகளும் வேனாவின் உடலிலிருந்து அவனது தீய சக்திகள் அனைத்தையும் நீக்கி அழிக்க முடிவு செய்தனர். அதேநேரம், அவனுள் இருந்த சில நல்ல சக்திகளை மட்டும் திரட்டி, அவனுக்கு வாரிசாக ஒரு மகனை உருவாக்கவும் முடிவு செய்தனர். முதலில் அவர்கள், வேனாவின் இறந்த உடலின் தொடையைப் பிளந்து, அதிலிருந்து ஓர் எலும்பால் அந்தத் தொடையைக் கடைந்தனர். அப்போது அவலட்சணமான முகத்துடன், கறுப்பான நிறத்தில், குள்ளமான ஓர் உருவம் தோன்றியது. அந்த உருவம், தான் என்ன செய்ய வேண்டும் என்று மகரிஷிகளைக் கேட்டது. அதற்கு அவர்கள் நிஷாத என்று கூறினர். நீ எதுவும் செய்ய வேண்டாம் சும்மா இரு என்பது அதன் பொருள்.
தீமைகளும் தீய சக்திகளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து அழிந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு கூறினர் ரிஷிகள். அந்த உருவத்துக்கு நிஷாதன் என்று பெயர் சூட்டி, விந்திய பர்வதத்தில் அமர்த்தினர். அங்கே வேனாவைச் சூழ்ந்திருந்த தீய சக்திகள் மெதுவாகத் தேய்ந்து மண்ணோடு மண்ணாக மறைந்தன. அதன்பின், வேனாவின் உடலிலிருந்து அவனது நல்ல சக்திகளைப் பெற்று உலகுக்குப் பயன்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர் மகரிஷிகள். அவர்கள் வேனாவின் உடலின் வலது கையைப் பிளந்து கடைந்தபோது, அதிலிருந்து அற்புதமான தேஜஸுடன் நல்ல சக்திகளின் பிரதிநிதியாக ஒரு மனிதன் தோன்றினான். அவனுக்கு பிருது எனப்பெயர் சூட்டினர். பிருது வேறு யாருமல்ல; பூவுலகை அழிவிலிருந்து காக்க ஸ்ரீமகாவிஷ்ணுவே பிருதுவாக அவதரித்தார். பிருது தோன்றியபோது விண்ணிலிருந்து அஜகரா எனும் அற்புத சக்திவாய்ந்த வில்லும், சில அம்புகளும் பூமியில் விழுந்தன. நல்லாட்சி நடத்தத் தோன்றியிருந்த பிருதுவுக்கு, தீமைகளை அழிக்க உதவுவதற்காக அந்த ஆயுதங்கள் தேவர்களால் அளிக்கப்பட்டன.

அந்தத் தருணத்தில் பிரம்மா தோன்றினார் ஆங்கீரஸ் மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க பிரம்மாவே பிருதுவுக்கு முடிசூட்டினார். மன்னனாகப் பொறுப்பேற்ற பிருதுவுக்குப் பல கடமைகள் இருந்தன. பசு வடிவில் இருந்த பூமாதேவியைத் தேடிக் கண்டுபிடித்து, அவளைச் சமாதானப்படுத்தி, தன் நாட்டில் மறைந்த இயற்கை வளங்களைப்பெற்று, மக்களையும் மற்ற ஜீவராசிகளையும் காப்பாற்ற வேண்டியதுதான் அவனது முதல் கடமையாக இருந்தது. இதனால் அவன், பசு வடிவில் எங்கோ மறைந்திருக்கும் பூமாதேவியைத் தேடிப் புறப்பட்டான். ஆனால் பூமாதேவியோ அவன் கண்ணில் படாத இடத்துக்குச் சென்று மறைந்து கொண்டாள். எனினும், பிருது தன் முயற்சியைக் கைவிடவில்லை. இயற்கையைக் காப்பாற்றி மக்களை வாழவைக்கத் துடிக்கும் பிருதுவின் முயற்சியைப் பாராட்டி, பசு வடிவில் இருந்த பூமாதேவியே மணமிரங்கி பிருது முன் தோன்றினாள். பிருது பூமித்தாயை வணங்கி, தன் தந்தை வேனாவுக்காக மன்னிப்புக் கோரினான். மீண்டும் தன் நாட்டை வளமாக்க வழி செய்யவேண்டும் என வேண்டினான்.பிருது மன்னா! என்னிடமிருந்து சுரக்கும் பாலைப் பொழிந்து, அழிந்துபோன இயற்கைச் செல்வங்களை மீண்டும் தோன்றச் செய்கிறேன். ஆனால், என்னிடமிருந்து பால் சுரக்க ஒரு கன்றுக்குட்டி வேண்டுமே.... என பூமாதேவி கூறினாள். பிருது, பூமாதேவிக்கு நன்றி கூறி, ஸ்வாயம்புவ மனு எனும் தேவனை வேண்ட, அவனே கன்றுக்குட்டியாக வந்தான். பசு வடிவில் இருந்த பூமாதேவி பாலைச் சுரந்தாள். அது அருவியாக ஆறாக, ஓடி, பூமியில் பசுமையை உண்டாக்கியது. மறைந்த மரம், செடி, கொடிகளும், மலர்களும் பூமியை அலங்கரித்தன. ஜீவராசிகள் நன்றியோடு பிருதுவையும் பூமாதேவியையும் பூஜித்தன. மனித இனம் வாழத் தேவையான அத்தனை செல்வங்களையும் பூமாதேவி வழங்கினான். பிருது, மகாவிஷ்ணுவின் அம்சம். பூமாதேவி அவன் மார்பில் வாழும் ஒரு பத்தினி, பிருதுவால் தேடிக் கண்டடையப் பெற்றவள் என்பதால் அவள் பிருத்வி எனப் பெயர் பெற்றாள்.

பிருது தோன்றியபோது அவனது வலது கையில் மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரம் ரேகை வடிவில் இருந்தது. இதனால் பிருது, விஷ்ணுவின் அம்ஸாவதாரம் என மகரிஷிகள் அறிந்தனர். பிருது, பூமாதேவியை பசு வடிவில் வழிபட்டு பூமியை வளம் பெறச் செய்ய சக்தி தந்தது இந்த சக்கர ரேகைதான் என்று அறிந்து, அவனைச் சக்கரவர்த்தி என்று புகழ்ந்தனர் தேவர்களும் ரிஷிகளும்! சக்கரவர்த்தி என்ற சொல் முதன்முதலில் அடைமொழியானது மன்னன் பிருதுவுக்குத்தான். அவனுக்குப் பிறகு தோன்றி, நாட்டை நலமுடன் ஆண்ட மன்னர்களும் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டனர். பூமியின் அம்சமே பசு வடிவம் ஆனதால், இன்று பூமி பூஜை செய்யும்போதும், வீடுகளில் கிரஹப்ரவேசம் செய்யும்போதும் ஒரு பசு மாட்டையும் கன்றுக்குட்டியையும் கொண்டுவந்து கோபூஜை செய்து வணங்குவது வழக்கத்தில் உள்ளது. இதனால் பிருத்வியின் நல்லாசியும் அருளும் பெற்று சவுபாக்கியங்களுடன் வாழலாம் என்பது நம்பிக்கை.


ஏழரை சனிக்கு அறிவியல் பரிகாரம்

ஏழரை சனிக்கு அறிவியல் பரிகாரம்!

எனக்கு ஏழரைச்சனி எனக்கு அஷ்டமத்து சனி அர்த்தாஷ்டம சனி கண்டச்சனி என்றெல்லாம் பலரும் நடுக்கம் கொள்கிறார்கள்.இவை தங்கள்  வாழ்க்கையில் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள்.இதற்காக பல பரிகாரங்களைச் செய்கிறார்கள்.அதில் தவறில்லை.ஆனால் செலவே இல்லாமல் எளிய அறிவியல் பரிகாரம் ஒன்று உள்ளது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.கோள்களின் நகர்வுகளை அறிந்து  கொண்டால் பரம்பொருளான கடவுளின் நிலையை அடையமுடியும் என வானவியல் அறிஞர் ஆர்யபட்டா கூறியுள்ளார்.கோள்களின் நகர்வு பற்றி  அறிந்தவர்கள் நல்ல பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என யஜுர் வேத ஜோதிடம் கூறுகிறது.

நாசா விஞ்ஞானி கார்ல் சாகன் நாம் கிரகங்கள் நட்சத்திரங்களில் இருந்து தான் பிறந்திருக்கிறோம்.நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான்.அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும் என்று குறிப்பிடுகிறார்.கிரகம் நட்சத்திரங்களை நோக்கி தியானம் செய்தால் நற்பலனை நிச்சயம் நம்மால் பெற முடியும்.வானத்தில் கிரகங்கள் எந்த இடத்தில் சுற்றுகின்றன  என்பது பற்றி யாரும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.அதனைத் தெரிந்து கொள்வதால் நமக்கு உண்டாகும் பலனையும் யாரும் அறிந்து  கொள்ளவில்லை.பொதுவாக ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் கிரகம் செல்வதை பெயர்ச்சி என குறிப்பிடுகிறோம். அந்த வகையில் குரு சனி கிரகங்களின் பெயர்ச்சிகளை மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். மெதுவாக நகர்வதால் சனியை மந்த கிரகம் என்பர்.9 கோடி மைல்  துõரத்தில் இருக்கும் பூமி சூரியனைச் சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது.ஆனால் சூரியனை விட்டு 85 கோடி மைல் தள்ளியிருக்கும் சனி அதற்கான  சுற்றுப்பாதையில் ஒரு முறை சுற்றி வர 30 வருடம் ஆகிறது.மிக நீண்ட தொலைவில் இருப்பதால் சனி ஒரு ராசியைக் கடக்க உத்தேசமாக  இரண்டரை ஆண்டு காலம் ஆகிறது.  

தற்போது சனி கிரகம் தீர்க்க ரேகை 209ல் இருந்து 210 ஐ அடைகிறது.அதாவது 209 டிகிரியில் உள்ள துலாமை விட்டு210 டிகிரியிலுள்ள விருச்சிக ராசியை அடைவதையே துலாம்- விருச்சிக ராசி மாற்றம் என்கிறோம்.சரி இனி அறிவியல் ரீதியாக சனி பரிகாரம் தேடுவது பற்றி பார்ப்போம்.பஞ்சாங்கம் அல்லது எபிமரிஸ் அளிக்கும் கிரக நிலைகளை ஒரு வரைபடத்தில் சுற்றுப்பாதைகளில் அமைத்துக் கொண்டால் சனி உள்ளிட்ட எல்லா
கிரகங்களையும் அதன் இருப்பிடத்திலேயே பறவைப் பார்வையாக மனதாலேயே நம்மால் பார்க்க முடியும்.அதாவது கிரகங்களை ஒரு குறிப்பிட்ட  இடத்தில் இருப்பதாக மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.தற்போதைய சனிப்பெயர்ச்சியில் சூரியனுக்கு மிகவும் அருகில் அதாவது 15 டிகிரி அளவு வித்தியாசத்தில் சனி இருக்கும்.எனவே இந்த முறை ஏற்படும் சனிப்பெயர்ச்சியை நேரில் பார்ப்பது கடினம்.எனவே சூரியனுக்கு சற்று  மேலாக சனி இருப்பதாக நம் மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.முதலில் பூமியின் வடதுருவத்தை மனதில் வரவழைக்க வேண்டும்.அங்கிருந்து பல லட்சம் கோடி மைல் தூரம் மனதாலேயே கடந்து செல்ல வேண்டும்.

அப்போது சூரிய மண்டலத்தையும் அதனைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பார்வையாக நம் மனதால் காண முடியும்.சூரியனுக்கு அருகில் சனி இருப்பதாக மனதில் கற்பனை செய்து சனீஸ்வரா!எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று என  மனதால் தியானம் செய்ய வேண்டும்.இந்த முறையில் இரவில் அல்லது பகலில் எந்த நேரத்திலும் மனத்திரையில் கண்டு தியானிக்கலாம்.சனி மட்டுமல்ல!பிற கிரகப்பெயர்ச்சிகளால் நமக்கு பிரச்னை இருந்தாலும் சம்பந்தப்பட்ட கிரகங்களுடன் ஒன்றாகவோ அல்லது குறிப்பிட்ட கிரகத்துடன்  அன்றைய நாளில் சம்பந்தப்பட்ட நட்சத்திரத்துடன் ஒன்றிக் கலந்தோ உயிர்க்கலப்பு பெறலாம். கிரகங்களின் இருப்பிடத்தை மனத்திரையில் கண்டு  தியானத்தில் ஆழ்ந்து விடுவதன் மூலம் அவைகளிடம் இருந்து காந்த அலைக்கதிர்களைநம்மால் ஈர்க்க முடியும்.10 அல்லது 15 நிமிடம் இந்த தியானத்தை செய்வதன் மூலம் கிடைக்கும் பலன் கோயில்களில் நவக்கிரகங்களை வலம் வந்து அடையும் பலனுக்கு ஈடாகவோ அல்லது அதற்கும் மலானதாகவோ இருக்கும்.உங்கள் பிறந்த நட்சத்திர நாளில் உங்களது நட்சத்திரம் இருக்குமிடத்தை உத்தேசமாகக் கணக்கிட்டு அந்த இடத்திற்கு  மனதால் சென்று தியானம் செய்பவர்கள் பிரத்யேக பலனைப் பெற முடியும்.கிரகங்கள் ஒன்பதும் நம் உடம்பில் ஒவ்வொரு பாகத்தைக் குறிக்கும்.சூரியன்,எலும்பு,சந்திரன்,ரத்தஓட்டம், செவ்வாய்,மஜ்ஜை, புதன்,தோல், வியாழன்,மூளை, சுக்கிரன்,உயிர்ச்சக்தி,சனி,நரம்பு மண்டலம்.அந்தந்த உறுப்புகள் நலம் பெற அந்த கிரகத்தை நோக்கி தியானம் செய்யலாம்.  மொத்தத்தில், இரவு நேரத்தில் மட்டுமே கிரகம்,நட்சத்திரங்களைக் கண்டுகளிக்கலாம் என்ற நிலையை மாற்றி பிரமிப்பூட்டும் பறவைப்பார்வை மூலம் பகல்,இரவு பாகுபாடு இல்லாமல் எந்த நேரத்திலும் மனதை செலுத்தி  உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தை அடையலாம்.இதை நடைமுறையில் கொண்டு வர நாம் எதையும் கற்றுக் கொள்ள  வேண்டியதில்லை. வீட்டிலேயே அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கிரகங்களின் இருப்பிடம் அறிந்து மனம் செலுத்தி தியானம் செய்வதே  போதுமானது. இவ்வாறு தொடர்ந்து செய்பவர்கள் வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவது உறுதி.


ரமணர்

ரமணர்

அன்று ஆருத்ரா தரிசனம் ! அதாவது, மார்கழி திருவாதிரை நட்சத்திரம்! திருச்சுழி பூமிநாதசுவாமி திருக்கோயிலில் நடராஜர் புறப்பாடு சிறப்பாக நடந்தது. வீதி உலா இனிதே நிறைவு பெற்று திருக்கோயிலில் சுவாமி பிரவேசிக்கும் நேரம்! பூமிநாதர் திருக்கோயில் மணி ஒலித்தது! அதே நேரத்தில் அருட்குழந்தை ரமணர் பூவுலகில் அவதரித்தார்.

ஜோதி தரிசனம்
பூமிநாதர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிறைவு பெற்ற நேரத்தில், கண்பார்வை இல்லாத ஒரு பெண்மணிக்கு ஜோதி தரிசனம் கிடைத்தது! ஆம்! ரமணரின் தாய் அழகம்மாவிற்குப் பிரசவம் பார்க்க வந்த பெண்மணி கண்பார்வை இல்லாதவர் ரமணர் பூமியில் அவதரித்த அதே நேரத்தில் அந்தப் பெண்மணிக்கு ஒரு ஜோதி தரிசனம் கிடைத்தது!

தலைச்சுழியை மாற்றும் திருச்சுழி
பாண்டிய நாட்டிலுள்ள பதினான்கு பாடல் பெற்ற சிவத்தலங்களில் பத்தாவது திருத்தலம் திருச்சுழியல். இது மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் ஐம்பது கி.மீ தொலைவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.

திருஞானசம்பந்தர் திருவவதாரம் செய்த சீர்காழி, பிரளய வெள்ளத்தில் தோணியப்பர் திருவருளால் மிதந்து தப்பித்தது! ரமணர் உதித்த திருச்சுழியல் பிரளய வெள்ளம் பாதாளத்தில் புகுந்ததால் பிழைத்தது! சிவபெருமான் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்து பாதாளத்தில் செலுத்திக் காத்ததால் இத்தலத்தை திருச்சழியல் என அழைத்தனர் தற்காலத்தில் திருச்சுழி என வழங்கி வருகிறது திரிசூலபுரம், முத்திமாநகர் மகா ஆவர்த்தபுரம், ஜோதிவனம் போன்ற வேறு பெயர்களும் உள்ளன.

சிவபக்தர் சுந்தரம் ஐயர்
தேவாரம் போற்றும் திருச்சுழி பூமிநாதப் பெருமானை அன்றாடம் வழிபடும் பக்தரான சுந்தரம் ஐயர், அழகம்மா என்ற பெண்ணை மணந்து இனிதே இல்லறம் நடத்தி வந்தார். சுந்தரம் ஐயர் உழைப்பால் உயர்ந்து, செல்வம், சேர்த்து அறச்செயல்கள் புரிந்தவர்.

கணக்கப்பிள்ளை குமாஸ்தாவாக இருந்தவர், மனுக்களும் விண்ணப்பங்களும் எழுதிக் கொடுக்கும் தொழிலை மேற்கொண்டார். சட்ட நுணுக்கங்களைக் கற்று பட்டம் பெறாத வழக்கறிஞராக உயர்ந்தார். சட்ட உதவியைத் தொழிலாகக் கருதாமல் தம்மை நாடி வந்தவர்களுக்கு நல்லதே செய்யும் பண்பாளராக விளங்கினார். அதனால் அப்பகுதியில் சுந்தரம் ஐயர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

ஆங்கிலக் கணக்குப்படி 1879 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முப்பதாம் நாள் சுந்தரம் ஐயர் அழகம்மாள் தம்பதியரின் மகனாக ஸ்ரீரமணர் அவதரித்தார். சுந்தரம் ஐயர் தம்பதியர் தங்கள் மகனுக்கு வேங்கடராமன் என்று பெயர் சூட்டினர். குழந்தையின் சுட்டித்தனத்தைக் கண்டு மகிழ்ந்த அனைவரும் ராமன் என்று செல்லமாக அழைத்தனர்.

சுந்தரம் ஐயர் தம்முடைய குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வியை அளிக்க விரும்பினார். பள்ளிமடம் வட்டத்திலிருந்த ஒரு மிஷனரி ஆரம்பப்பள்ளியில் வேங்கடராமனைச் சேர்ந்தார்.

வேங்கடராமனின் மனம் பள்ளிப்படிப்பில் ஈடுபட வில்லை. வயிற்றுப் பிழைப்புக்காகப் படிக்கும் கல்வியில் அவருக்கு நாட்டம் இல்லை.

கால்பந்து விளையாடுதல், மல்யுத்தம் பயிறுதல், ஓடுதல், நீந்துதல், கபடி விளையாடுதல் போன்றவை வேங்கடராமனுக்கு விருப்பமான விளையாட்டுக்களாக இருந்தன. அதனால் அவனுக்கு அதிகமான நண்பர்கள் கிடைத்தனர். அவர்களிடையே வேங்கடராமன் முக்கியத்துவமும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தான் கௌண்டின் யநதி பள்ளிக்கு அருகில் இருந்தது, அந்த நதிக்கரையில் வேங்கடராமன் தனது நண்பர்களுடன் விளையாடுவான் காளையார்கோயில் வேங்கடராமன் படித்த பள்ளிக்கு அருகில் இருந்தது. திருச்சுழியிலிருந்து கோயில் பூஜை செய்யும் குருக்கள், பட்ட,ர் வேத விற்பன்னர்கள் ஆகியோர் அன்றாடம் காளையார் கோயிலுக்குச் செல்வார்கள் அவர்களுடன் சிறுவன் வேங்கடராமனும் சென்று அங்கு விளையாடுவான்.

ஒரு முறை சுந்தரம் ஐயரின் முன்னோர் ஒருவரின் இல்லம் தேடி வந்த சந்தியாசியை அவர் உரிய முறையில் வரவேற்று உபசரிக்கவில்லை அதனால் சந்நியாசி கோபம் கொண்டு சாபம் கொடுத்துவிட்டார் உங்கள் பரம்பரையில் தலைமுறைக்கு ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி கையேந்தி பிச்சை வாங்கிச் சாப்பிடும் நிலை ஏற்படும் என்று அந்த சந்தியாசி சபித்தார்

அச்சாபம் குறித்து சுந்தரம் ஐயர் அழகம்மாவிடம் கூறினார். அச்சாபப்படி நடந்து வருவதாகவும் விளக்கினார். சுந்தரம் ஐயரின் தகப்பனாரின் சகோதரர் ஒருவர் காவியுடுத்துத் துறவியாகித் திரித்து கொண்டு இருந்தார். சுந்தரம் ஐயரின் மூத்த சகோதரர் வீட்டை விட்டு வெளியேறிப் பரதேசியாகத் திரிந்தார்.

திண்டுக்கல்லில் வேங்கடராமன் ஐந்தாம் வகுப்பு வரைகற்றான். திண்டுக்கல் பகுதியில் இருந்த மலைகள், கோயில்கள் ஆகிய அனைத்தும் அவனுக்கு அத்துபடி! நண்பர்களுடன் அங்கெல்லாம் அலைந்து திரிந்து விளையாடி மகிழ்வான். வேங்கடராமன் திண்டுக்கல்லில் படித்துக் கொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக சுந்தரம் ஐயர் காலமானார் அழகம்மாவும் குழந்தைகளும் சோகத்தில் ஆழ்ந்தனர். அந்தச் சோகத்திலும் வேங்கடராமன் சிந்தனையில் மூழ்கினான்.

உடல்தான் சுந்தரம் ஐயரா? அவருடைய உயிர் எங்கே போயிற்றது? மரணம் என்பது என்ன? மரணத்தைத் தவிர்க்க இயலாத? உயிரை எடுத்துக் கொண்டு போவது யார்? என்றெல்லாம் பலவாறு வேங்கடராமன் சிந்திக்கலானான். சுந்தரம் ஐயரின் இறுதிக்கடன்கள் முடிந்தன. கூட்டுக் குடும்பங்கள் நிறைந்திருந்த அக்காலத்தில் சுந்தரம் ஐயரின் சதோதரர்கள் அழகம்மா மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசித்தனர். குடும்ப நண்பரான பூமிநாதசுவாமிதிருக்கோயில் குருக்களும் உடன் இருந்தார்.

சுந்தரம் ஐயரின் தம்பிகளில் ஒருவரான சுப்பையா மதுரையில் வசித்து வந்தார் மற்றொரு தம்பியான நெல்லையப்பர் மானாமதுரையில் இருந்தார். நாகசாமி மற்றும் வேங்கடராமன் மதுரையிலுள்ள சுப்பையா வீட்டில் தங்கி, படிப்பைத் தொடருவது நல்லதென எண்ணினார். அழகம்மாள் குழந்தைகள் நாகசுந்தரம், அலமேலு ஆகிய மூவரையும் நெல்லையப்பர் தன்னுடன் மானமதுரைக்கு அழைத்துச் செல்லத் தீர்மானித்தார் சுந்தரம் ஐயரின் குடும்பச் சுமையை அவருடைய சகோதரர்கள் அன்புடன் பங்கிட்டுத் தாங்க முற்பட்டனர்.

மானாமதுரையில் தங்கியிருந்த அழகம்மா மற்றும் குழந்தைகளை நெல்லையப்பர் பரிவுடன் கவனித்துக் கொண்டார். அதே நேரத்தில் மதுரைக்குச் சென்ற நாகசாமி கல்லூரியில் சேர்ந்து படித்தான். தம்பி வேங்கடராமன் வழக்கம் போல் பள்ளிக்கல்வியில் நாட்டம் இல்லாமல் இருந்தான்.

வேங்கடராமன் ஆங்கிலத்தில் மோசமாகவும் தமிழ் தவிர மற்றப் பாடங்களில் சுமாராகவும் மதிப்பெண்கள் வாங்கினான். தமிழில் ஆர்வம் ஆதிகம் இருந்தது நன்னூல் சூத்திரங்கள் வேங்கடராமனுக்கு மனப்பாடமாக இருந்தன இந்தச் செய்திகளை சுப்பையா கடிதம் மூலம் அழகம்மாவிற்கு தெரியப்படுத்தினார் அழகம்மா மதுரையில் இருந்த இரண்டு மகன்களையும் சென்று பார்க்க விரும்பினார்.

மதுரை சென்ற அழகம்மா வேங்கடராமனுக்கு, அறிவுரைகளைக் கூறினார். வேங்கடராமன் அவற்றை அமைதியாகக் கேட்டான். வேங்கடராமன் விடுமுறை நாள்களில் மலையடிவாரங்ளுக்கும்  திருக்கோயில்களுக்கும் செல்வான். திருச்சுழியைச் சேர்ந்த சொக்குப் பட்டர் என்பவர் தீபத்திருநாளைக் காணத் திருவண்ணாமலைக்குச் சென்று திரும்புகையில் மதுரையில் வேங்கடராமனின் தந்தையின் இளவல் சுப்பையரின் இல்லத்திற்குச் சென்றார். பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் வேங்கடராமன், எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டான்.

சொக்குப் பட்டர், நான் அருணாசலத்திலிருந்து வருகிறேன் என்றார் வேங்கடராமன் அப்பெயரைக் கேட்டவுடன் அனைத்தையும் மறந்தான்! தன்னை மறத்த நிலையில் வேங்கடராமன் வேகமாக மாடியறைக்குச் சென்றான் சிறிது நேரம் கழித்து மாடியறையில் இருந்த பெரிய புராணப் புத்தகத்தை எடுத்து ஈடுபாட்டுடன் படிக்கலானான். சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் திருச்சுழியில் பிறந்த வேங்கடராமன் என்ற சிறுவனின் மனதில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மகரிஷி ரமணரை மாநிலத்திற்கு அளித்தது! இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யத்துணிந்த சிவனடியார்களின் தொண்டு வாழ்க்கை சிறுவன் வேங்கடராமனின் மனதில் ஆழப் பதிந்தது பள்ளிக் கல்வியில் நாட்டமில்லாத வேங்கடராமனை ஒரு திருமுறை நூல் கவர்ந்தது விந்தைதான்!

மதுரையில் சுப்பையாவின் இல்லம் மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு அருகில் இருந்தது. அதனால் வேங்கடராமன் அன்றாடம் கோயிலுக்குச்  செல்வான் , மீனாட்சியிடம் சுந்தரரேசுவரிடமும் தான் நாயன்மார்களைப் போன்ற பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமென உள்ளம் உருகி வேண்டிக் கொள்வான் வேங்கடராமனிடம் சிவபக்தியும் ஞானவைராக்கியமும் வளரலாயிற்று.

மாடியறையில் அமர்ந்து மரணம் முதலான விஷயங்கள் குறித்துச் சிந்தித்தான் வேங்கடராமன். ஆழ்ந்த சிந்தனை தியானமாக மாறியது! தியானம் உச்ச நிலையைத் தொட்டது. வேங்கடராமன் சிறிது நேரம் மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவந்தான் ! அது முதல் அவனுக்கு மரணம் குறித்த அச்சம் ஒழிந்தது.

கோயிலுக்குச் செல்வதும் தியானம் செய்வதுமே முக்கியப் பணியாகிவிட்ட வேங்கடராமனுக்குப் படிப்பு அறவே வெறுத்துப் போயிற்று. ஆர்வத்துடன் ஈடுபட்ட விளையாட்டுக்களும் மகிழ்ச்சியைத் தர வில்லை. நண்பர்கள் குழாத்தையும் நாடவில்லை.

ஆங்கில இலக்கணப் புத்தகத்தின் சில பகுதிகளை மூன்று முறை எழுதும் தண்டனையைப் பெற்றான் வேங்கடராமன். அதன்படி, இரண்டு முறை எழுதி முடிந்த நிலையில் வேங்கடராமனுக்கு விரக்தியும்  வெறுப்பும் மேலிட்டது. இலக்கணப் புத்தகம், பேனா ஆகியவற்றை வேங்கடராமன் வீசி எறிந்தான்.

அச்செயலைக் கண்ட அண்ணன் நாகசாமி பெரிதும் கடிந்து கொண்டார். அதனைப் பொருட்படுத்தாத வேங்கடராமன் அடுத்த நடவடிக்கை குறித்துச் சிந்தித்தான். அருணாசலம் குறித்த நினைப்பு மேலிட்டது. இனி அருணாசலத்தை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான்!என்ற திடமான, தீர்மானமான முடிவிற்கு வந்தான். அன்றைய சூழ்நிலை அவனுக்குச் சாதகமாகவே அமைந்தது!

 பள்ளிக்கூடத்தில் இன்று ஸ்பெஷல் கிளாஸ் போய்விட்டு வருகிறேன் என்று வேங்கடராமன் அண்ணனிடம் கூறினான். அப்படியா? கீழே இருக்கும் என் பெட்டியைத் திறந்து ஐந்து ரூபாய் எடுத்துக்கொள்; போகும் வழியில் எங்கள் காலேஜில் கட்டிவிடு என்று அண்ணன் நாகசாமி கூறினார். அதுவும் அண்ணாமலையார் திருவருளே என்று கருதிய வேங்கடராமன் ஜந்து ரூபாயை எடுத்துக் கொண்டான்.

இரயில் மார்க்கங்கள் குறித்த ஒரு வரைபடத்தைப் பார்த்ததில் திருவண்ணாமலை பயணத்திற்கு மூன்று ரூபாய் போதும் என்று தெரிந்தது.

நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவருடைய உத்தரவுப்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன் . நல்ல காரியத்திற்கே புறப்படுவதால் எவரும் விசனப்பட வேண்டாம். பணமும் செலவு செய்ய வேண்டாம் உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை ரூ.2 இதோடு கூட இருக்கிறது என்று அண்ணனுக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்தான் வேங்கடராமன்.

அவசரமாக மதுரை இரயில் நிலையத்திற்குச் சென்றான். அன்று தெய்வாதீனமாக இரெயில் சற்றுக் காலதாமதமாக வந்தது! திண்டிவனத்திற்குப் பயணச் சீட்டு வாங்கினான் ஒருவாறு விடுதலை பெற்ற உணர்வோடு வண்டியில் ஏறி அமர்ந்தான். வண்டியும் புறப்பட்டது.

அண்ணாமலை, அருணாசலம், அருணகிரி ஆகிய சொற்கள் பக்தர்களைச் சொக்க வைக்கும் மந்திரச் சொற்கள் மகான்களைத் தன்பால் ஈர்த்து, இறையருள் இன்பத்தில் திளைக்கச் செய்து, புகழும் முக்தியும் அருளும் அற்புதத் திருத்தலம் அண்ணாமலை!

மலையும் அண்ணாமலை! மகிமைமிகு தலமும் அண்ணாமலை தலத்தில் உறையும் மகேசன் பெயரும் அண்ணாமலை!

மதுரையிலிருந்து திண்டிவனத்திற்கு ரெயில் கட்டணம் இரண்டு ரூபாய் பதின்மூன்று அணா. அது போக வேங்கடராமனிடம் மூன்று அணாதான் எஞ்சி இருந்தது. திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை மிகவும் அருகில் இருக்குமென்று வேங்கடராமன் கருதினான். வண்டியேறிய பிறகு வேங்கடராமன் வயதான ஒருவர் புதிய வழித்தடம் குறித்துக் கூறினார். விழுப்புரத்திலிருந்து காட்பாடி செல்லும் வண்டிகள் திருவண்ணாமலை வழியாகச் செல்கின்றன என்ற விவரத்தைக் கூறினார்.

இவனிடம் மீதமிருந்த சில்லரை அறையணி நல்லூர் வரை செல்லுமளவிற்கே இருந்தது. அங்கே இறங்கி நடந்தே திருவண்ணாமலைக்குச் செல்லத் தீர்மானித்தான் மாலை நேரத்தில் அறையணி நல்லூரில் இறங்கி மலைக்கோயில் ஈசனைத் தரிசிக்கச் சென்றான் வேங்கடராமன். அங்கு ஒரு ஜோதி தோன்றியது சன்னிதியிலிருந்த ஈசன் திருமேனியில் அந்த ஜோதி ஐக்கியமானது!

திருக்கோவிலூர் பாகவதரிடம் வேங்கடராமன் தனது கடுக்கனை அடகு வைத்து நான்கு ரூபாய் வாங்கிக் கொண்டான் அடுத்தநாள் காலையில் திருக்கோவிலூரிலிருந்து ரயிலில் திருவண்ணாமலைக்குப் பயணமானான் திருவண்ணாமலையை நெருங்கிய உடனேயே வேங்கடராமன் ஆனந்தக் கண்ணீர் உகுத்தான் .உடல் சிலிர்த்தது!

அருணாசலசிவ! அருணாசலசிவ! என்ற மந்திரத்தை உள்ளம் உருகி ஜபித்தபடி 1886 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் வேங்கடராமன் பாலரமணராக அண்ணாமலையில் அடியெடுத்து வைத்தார். ஈசனும் பாலரமணரைப் பாசத்துடன் வரவேற்றார்! ஆனால் பாலரமணர் பாசங்கள் அனைத்தையும் துறந்தார்.

தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டார். வேட்டியைக் கோவணமாகக் கட்டிக் கொண்டார். ஜாதி சின்னமாகிய பூணூலை அறுத்து எறிந்தார். அனைத்தையும் துறந்த சுத்தபுருஷனாக ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். பால் வடியும்  முகம் கொண்ட பாலரமணரின் தவத்தைக் கண்டு பலரும் வியந்தனர். எனினும், விஷமிகள் சிலர், அவர் மீது கற்களை வீசித் தொந்தரவு செய்தனர்.

அண்ணாமலையர் கோயிலில் ஓர் இருண்ட குகை இருந்தது. அதனைப் பாதாளலிங்கக் குகை என்று கூறுவார். அங்குப் பகல் நேரத்திலேயே இருள் நிறைந்திருக்கும். பாலரமணர் அதுவே தனது தவத்திற்கு ஏற்ற தனிமையான இடம் எனத் தேர்ந்தெடுத்தார். அங்குச் சென்று தவத்தில் அமர்ந்தார். ஊண், உறக்கம் இல்லாமல் கடுந்தவம் இயற்றினார். உடல் மெலிந்தது. குகைக்குள் இருந்த புழுக்களும் பூச்சிகளும் பாலரமணரின் உடலைத் துளைத்தன. பாலயோகியின் தொடைப்பகுதி அரிக்கப்பட்டது ஆனாலும் அவருடைய தவம் கலையவில்லை!

அங்கு அவர் எத்தனை காலம் கடுந்தவம் இயற்றினார் என்பது எவருக்கும் தெரியாது. சேஷாத்ரி சுவாமிகள் அக்குகையில் நுழைந்து வெளியே வந்தார். உள்ளே தவமியற்றிய உத்தமத் துறவியை உலகிற்கு அறிமுகம் செய்தார். சேஷாத்ரி சுவாமிகள் ரமணர் திருவண்ணாமலைக்கு வருவதற்கு எழு ஆண்டுகள் முன்பு வந்தவர். வயதிலும் ரமணரைவிட மூத்தவர். உத்தண்டி நயினார் என்ற சாது பாலரமணரிடம் உபதேசம் பெற வந்தார் அவர் பாலரமணருக்குப் பாதுகாவலாக இருந்தார். அவர் இல்லாத நேரங்களில் விஷமிகள் ரமணருக்கு இடையூறுகள் செய்தனர். எனினும் ரமணர் தமது மௌனத் தவத்தைத் தொடர்ந்தார்.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் முதல் குருநாதரான ஸ்ரீமத்தெய்வசிகாமணி பரமாச்சார்ய சுவாமிகளின் சமாதி அமைந்துள்ள திருக்கோயிலை குருமூர்த்தம் என்று அழைத்தனர். அண்ணாமலைத் தம்பிரான் என்ற சுவாமிகள் பாலரமணரை குருமூர்த்தத்தில் அமர்ந்து தவம் இயற்ற உதவினார் அங்கு பாலரமணர் பதினெட்டு மாதங்கள் கடுந்தவம் இயற்றினார்.

அண்ணாமலைத் தம்பிரான் மதுரையில் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் பாலரமணரின் பெருமைகளை எடுத்துக் கூறினார் அதனைக் கேட்ட சிறுவன் ஒருவன் திருச்சுழி வேங்கடராமன் திருவண்ணாமலையில் இருப்பதாக உறவினர்களிடம் கூறினான். வேங்கடராமனின் மற்றொரு சிற்றப்பாவான நெல்லையப்பர் திருவண்ணாமலைக்கு வந்தார் மாந்தோப்பில் பரண் அமைத்து அதன் மீதிலிருந்து தவம் இயற்றிக் கொண்டிருந்தார் பாலரமணர் மானாமதுரை நெல்லையப்பர் தரிசனம் செய்ய விரும்புகிறார் என்று எழுதியனுப்பினார் சிற்றப்பா. அவருக்கு அனுமதி கிடைத்தது. பாலரமணரின் கோலத்தைக் கண்டு ஒருபுறம் பெரிதும் வருந்தினார் மறுபுறம் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பாலகன் பரமஞானியாகத் திகழ்வதைக் கண்டு மகிழ்ந்தார். தன்னுடன் ஊருக்கு வருமாறு அழைத்தார். பாலரமணர் எவ்விதச் சலனமும் இன்றி மௌனமாக இருந்தார். அவருடைய வைராக்கியத்தைப் புரிந்து கொண்ட நெல்லையப்பர் ஊர் திரும்பினார்.

தாய் அழகம்மை தனது மூத்த மகன் நாகசாமியுடன் திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது பாலரமணர் பவளக் குன்று என்ற வேறு இடத்தில் நிஷ்டையில் அமர்ந்திருந்தார். மகன் வேங்கடராமனை கௌபீன தாரியாகக் கண்ட தாயின் மனம் துடித்தது. தாயும் அண்ணனும் தவசீலரைத் தங்களுடன் அழைத்தனர். பந்தபாசங்கள் அனைத்தையும் அறுத்துவிட்ட ஞானி பாலரமணர் அவர்களின் சொற்களைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை தாயின் கதறலைக் கண்ட பக்தர்கள், பதிலை எழுதிக் காட்ட பாலரமணரிடம் வேண்டினர்.

அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்
நடவா தென் முயற்சிக்கினும் நடவாது
நடப்ப தென்றடை செய்யினும் நில்லாது
இதுவே திண்ணம் ஆதலின்
மௌனமாய் இருக்கை நன்று!

என்ற ஞானமொழிகளை பாலரமணர் எழுதினார் தாய் வேறு வழியின்றி நாகசாமியுடன் ஊர் திரும்பினார்.

விசாகப்பட்டினம் நரசிம்ம சாஸ்திரிகளின் மகன் கணபதி முனிவர், திருவண்ணாமலை வந்து தியானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது பகவான் அழைக்கிறார் என்றல ஒரு ஒலி அவுருக்குக் கேட்டது உடனே மலையேறிச் சென்று விருபாட்ச குகையில் அமர்ந்திருந்த பகவானைக் கண்டு வணங்கினார்.

தன்னைச் சீடனாக ஏற்று நல்லுபதேசம் செய்ய வேண்டினார். பகவான் அவ்வாறே அவரைச் சீடராக ஏற்று பதினைந்து நிமிடத்திற்கு உபதேசம் செய்தருளினார். பின்னர் கணபதி முனிவர், பாலரமணரை இளமையிலேயே புலன்களை அடக்கி ஆண்டவர் என்ற பொருளில் அவரை ரமணர் என்று அழைத்தார். அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது!

சேஷாத்ரி சுவாமிகள் அடையாளம் காட்டிய பாலரமணரைப் பாமர மக்கள் பிராமண சாமியார் என்றே அழைத்து வந்தனர். திருவண்ணாமலையில் அடியெடுத்து வைத்தவுடன் வேங்கடராமன் பூணூலை அறுத்தெறிந்தார். ஜாதிமதங்களைக் கடந்த உத்தமராகி விட்டார் எனினும் அவருக்கும் ஜாதி முத்திரை!

வேங்கடராமன் சிறுவனாக இருந்தபொழுது, அவருடைய உறவினர் லட்சுமண  அய்யர் என்பவர் அவரை ரமணி என்ற செல்லப் பெயரிட்டு அழைத்து வந்தார். அவரது விருப்பப்படியும் ரமணர் என்ற பெயர் பொருத்தமாக அமைந்துவிட்டது.

அடுத்தநாள் ரமணமகரிஷி தமது சீடர்களுக்கு, சிறிது நேரம் உபதேசம் செய்தருளினார் காவியகண்ட கணபதி முனிவர் முன்னரே பிரபலமாக இருந்தார். அவர் ரமண மகரிஷியின் சீடரான பிறகு மக்கள் மத்தியில் ரமணர் பெரும் புகழ் பெற்றார் பகவான் அவ்வப்பொழுது பக்தர்களின் வினாக்களுக்கு அளித்த பதில்களைத் தொகுத்து ரமணகீதை என்ற நூலாக வெளியிட்டவர் கணபதி முனிவரே ஆவார்.

முதல் முறை திருவண்ணாமலைக்கு வந்து மகனைக் கண்டு ஏமாற்றத்துடன் மானாமதுரைக்குத் திரும்பினார் அழகம்மை. எனினும் மகனைக் காணஅடிக்கடி வந்து சென்றார் 1914 ஆம் ஆண்டு அண்ணாமலை வந்த அழகம்மைக்கு உடல் நலம் குன்றியது இருபது நாள்களுக்கு மேல் அவர் படுத்த படுக்கையாக இருந்தார். அப்போது ரமணர் தமதுஅன்னையை அன்புடன் கவனித்துப் பணிவிடைகள் செய்தார் உடல் நலம் தேறியவுடன் அழகம்மை மானாமதுரைக்குத் திரும்பினார்.

அழகம்மைக்குப் பாதுகாப்பாக இருந்து வந்த நெல்லையப்பர் காலமானார். மகன் நாகசுந்தரத்தின் மனைவியும் மறைந்தார். சோகங்கள் தொடர்ந்தன. துவண்டு போன அழகம்மை தம்முடைய  ஞானப் புதல்வனே கதியென்று கருதி 1916 ஆம் ஆண்டு மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்தார்.

அழகம்மையின் வருகைக்குப் பிறகு பகவான் ஸ்கந்தாஸ்ரமத்தில் வசிக்கலானார். அழகம்மை சமையல் பணிகளை மேற்கொண்டு,பக்தர்களுக்கு அன்னம் அளித்தார். அழகம்மை உடன் இருப்பதை பகவான் விரும்பமாட்டார் என்றும் அவர் நமது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டுவிடுவார் என்றும் பக்தர்கள் எண்ணினர். பகவான் அவ்வாறு செய்யவில்லை எனினும் ரமணர் பக்தர்களிடம் பேசிய அளவிற்கு அழகம்மையிடம் பேசியதில்லை.

பகவான், ஆசிரமத்திலுள்ள பல பக்தர்களில் ஒருவராகவே அழகம்மையையும் கருதினார். பகவானின் தாய் என்ற முறையில் அவருக்கென்று எந்த விதமான தனியுரிமையும் அளிக்கவில்லை எனினும், பகவான் அவ்வப்பொழுது அழகம்மையின் ஆச்சார அனுஷ்டானங்கள் குறித்து நகைச்சுவை கலந்த விமர்சனங்கள் செய்வார் அந்த முறையிலேயே தமது தாயை ஞானமார்க்கத்திற்குத் திரும்பினார்.

அழகம்மையின் இறுதிக்கால வாழ்க்கையில் ஆறு ஆண்டுகள் ஆச்சிரமத்தில் கழிந்தன. அப்போது அவருக்கு பகவானிடம் பூரண நம்பிக்கை ஏற்பட்டது. அழகம்மையின் இறுதிநாளும் வந்தது.

அழகம்மைக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. பகவான் தமது வலக்கரத்தை அன்னையின் இதயப் பகுதியிலும் இடக்கையை உச்சந்தலையிலும் வைத்தபடி அருகிலேயே உட்கார்ந்திருந்தார். இரவு எட்டு மணிக்கு அழகம்மை முக்தி அடைந்தார். அழகம்மை சமாதிநிலை அடையும் வரை பகவானும் பக்தர்களும் சாப்பிடாமல் இருந்தனர். சமாதி எய்திய பிறகு பகவான் இனி நாம் சாப்பிடலாம் தீட்டும் இல்லை ஒன்றும் இல்லை என்று கூறினார்.

அடுத்தநாள் காலையில் சமாதிக் கிரியைகள் தொடங்கின. அழகம்மையின் உறவினர்களும் , ரமணரின் பக்தர்களும் கூட்டமாக வந்தனர். மலைக்கு அப்பாலுள்ள பாலிதீர்த்தம் என்ற இடத்தில் முறைப்படி சமாதிக் குழியில் விபூதி, கற்பூரம் உப்பு ஆகியவற்றை நிரப்பினர். அதன் மீது ஒரு சமாதி கட்டினார். சமாதியின் மீது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த சிவலிங்கம் மாத்ருபூதேசுவரர் என்று பெயர் பெற்றது மாத்ருபூதேசுவரருக்கு அன்றாட பூஜைகள் தொடர்ந்து நடக்கின்றன. ஆண்டு தோறும் வைகாசி தேய்பிறை நவமியில் மாத்ருபூதேசுவரர் மகாபூஜை சிறப்பாக நடைபெறுகிறது .

கணபதி சாஸ்திரிகளைப் போன்ற கல்வியாளர்கள் பலரும் ரமணரின் சீடர்களானார்கள். பல துறைகளைச் சேர்ந்த சான்றோர்களும் பாமரரும் பகவானுக்குச் சீடர்கள் ஆகி தங்களால் இயன்ற பணிவிடைகளையும் தொண்டுகளையும் செய்தனர்.

ரமணாஸ்ரமம்

ரமணர் 54 ஆண்டுகள் திருவண்ணாமலையில் வாழ்ந்தார். அதில் 26 ஆண்டு வாழ்க்கையை பாதாளலிங்கக் குகை குருமூர்த்தம், மாந்தோப்பு, பவழக் குன்று, விருபாட்ச குகை, ஸ்கந்தாஸ்ரமம் ஆகிய வேறுபட்ட இடங்களில் வாழ்ந்தார் இருபத்தெட்டு ஆண்டுகள் பகவான் ரமணாஸ்ரமத்தில் தொடர்ந்து எழுந்தருளியிருந்தார்.

ரமண பக்தர்களில் ஒருவர் கந்தசாமி. இவர் தன்னுடைய சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் ஸ்கந்தாஸ்மரத்தை உருவாக்கினார். அவருடைய நினைவைப் போற்றும் வகையில் தான் ரமணர் அந்த இடத்திற்கு ஸ்கந்தாஸ்ரமம் என்று பெயரிட்டார்.

மலையிலுள்ள ஸ்கந்தாஸ்ரமத்திலிருந்து ரமணர் அடிக்கடி அன்னையின் சமாதிக்குச் சென்று வருவார். ஒரு நாள் அன்னையின் சமாதிக்கு வந்த ரமணர் தெய்வீக உந்துதலால் அங்கேயே தங்கிவிட்டார். அந்த இடம் பக்தர்கள் எளிதில் வந்து போகவும் வசதியாக இருந்தது. ஆகவே அந்த இடத்திலேயே பக்தர்கள் ரமணாஸ்ரமத்தை நிறுவினர்.

ஆஸ்ரம நடைமுறைகள்
ரமணர் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து விடுவார். ஆஸ்ரம அன்பர்கள் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, மண்டபத்தில் கூடிவிடுவார்கள். தியானமும், பக்தியிசையும் நடைபெறும். ஐந்து மணிக்கு ரமணர் தமது ஆசனத்தில் அமர்வார் . அவர் பதினைந்து மணித்துளிகள் தியானம் செய்வார்.

ஆழ்ந்த தியானத்தில் ரமணரை, பக்தர்கள் தவயோகியாகக் கண்டு தரிசிப்பார்கள். ஆஸ்ரம வாழ்க்கையில் எல்லோரும் எல்லாவற்றிலும் சமம் என்ற கோட்பாட்டை, பகவான் வலியுறுத்தினார். பதினோரு மணியளவில் ஆஸ்ரமத்திலுள்ள பசு முதலான வாயில்லா ஜீவன்களுக்கும், வெளியில் காத்திருக்கும் ஏழைகளுக்கும் உணவு வழங்கப்படும்.

புதிய மரபு

ரமணாஸ்ரமத்தில் விலங்கினங்களுக்கும், ஏழைகளுக்கும் முதலில் உணவு வழங்குப்படும் ரமணாஸ்ரமத்தில் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய பிறகே ரமணருக்குப் பரிமாறுவர்! இது புதிய மரபு!

ரமணரின் எளிமை

பிரமாண்ட பந்தலில் பூஜை, அன்னதானம் என அமர்க்களப்படுகிறது. காலை 10 மணி முகூர்த்தத்தில் ரமணரை அழைத்து வந்து பூஜை செய்ய ஏற்பாடு. இதற்கிடையே அன்னதானத்திற்காக நிறைய பரதேசிகள் வி.ஐ.பி பந்தலில் நுழைந்துவிட்டனர். அப்போது யாரோ ஒருவர், பரதேசிகளுக்கு கிழக்குப் பந்தலில் அன்னதானம் நடக்கும். அங்கே செல்லுங்கள். இங்கே வராதீர்கள்! என்று விரட்டியடித்தார். மணி காலை 9.50 ரமணரை அழைக்கப் போனால் அவரைக் காணோம்! எங்கே தேடியும் கிடைக்காமல் திடுக்கிட்டு திகைத்தனர். பூஜை நேரமோ நெருங்கிவிட்டது. அப்போது ஒருவர் ஓடோடி வந்து. கிழக்குப் பக்க பந்தலில் ரமணரைப்போல் ஒருவர் உட்கார்ந்திருப்பதாகச் சொன்னார். அங்கு போய்ப் பார்த்தால், பரதேசிகளுக்கு நடுவே ரமணர் அமர்ந்திருக்கிறார். இங்கே வந்து ஏன் உட்கார்ந்திருக்கிறீர்கள்! என்று கேட்டபோது, ரமணர் சொன்னார். பரதேசிகள் கிழக்குப் பந்தலுக்குப் போகணும்னு ஒருவர் விரட்டினார். அதான் இங்கு வந்து விட்டேன்!

என் கடன் பணிசெய்து கிடப்பதே

என்கடன் பணிசெய்து கிடப்பதே என்றார் அப்பர்பெருமான் அதற்கேற்ப பகவான் ரமணர் எப்போதும் ஏதாவது ஒரு பணியில் தன்னை ஈடு படுத்திக் கொள்வார் காலையில் ஒன்பது மணிக்கு செய்தித்தாள்களைப் படிப்பார். கடிதங்களைப் படிப்பார். அச்சுப் பிரதிகளைத் திருத்துவார் புத்தக பைண்டிங் செய்வார். காய்கறிகளை நறுக்குவார்; தோட்ட வேலைகள் செய்வார்; எனினும் அவருடைய உள்ளம் எப்போதும் ஆத்மானுபவத்தில் திளைத்து இருக்கும்!

மாலை மூன்று மணி அளவில் ஆஸ்ரம அன்பர்களுக்கு காபி அல்லது தேநீர் வழங்கப்படும். அதன் பிறகு ரமணர் பக்தர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பார். ஐயங்களைப் போக்குவார். சில நாள்களில் ரமணர் மெதுவாக நடந்து சென்று கிரிவலம் வருவார். ரமணரின் இளவலும் சின்ன சுவாமி என்று அழைக்கப்பட்டவரும் ஆகிய நிரஞ்சனானந்தர்  ஆஸ்ரமம் பொறுப்பாளராக இருந்து அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் நிறைவேற்றினார்.

ஆஸ்ரமத்தில் புத்தக விற்பனை மையம் திறப்பு மாத்ருபூதேஸ்வர் கோயில் குடமுழுக்கு, வேத பாடசாலை தொடக்கம் ஆகிய பணிகள் அனைத்தும் நிரஞ்சானந்தரால் செல்வனே நிறைவேற்றப்பட்டன. ஆஸ்ரமத்தில் இரவு ஏழு மணிக்கு மேல் பக்திப் பாடல்களை இசைப்பார்கள் ஒன்பது மணிக்கு இரவு உணவு பரிமாறப்படும்.

ரமண மகரிஷியும் ஸ்ரீநாராயணகுருவும்
அண்மைக்காலத்தில் வாழ்ந்த அருளாளர்களில் முக்கியமானவர் ஸ்ரீநாராயணகுரு. அண்ணாமலையில் ரமண மகரிஷியும், கேரளத்தில் ஸ்ரீநாராயண குருவும் சமகாலத்தில் ஞானச்செங்கோல் ஓச்சி வந்தனர்.

அச்சுதானந்தர் கோவிந்தானந்தர் வித்யானந்தர் ஆகிய சீடர்களுடன் நாராயணகுரு அண்ணாமலைக்கு வந்தார். ரமணமகரிஷி ஸ்கந்தாஸ்ரமத்தில் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தார். சற்று நேரம் அவரை உற்று நோக்கிய ஸ்ரீநாராயணகுரு மரத்தடியில் அமர்ந்து ரமணருடன் அளவளாவினார்.

இன்று எங்களுடன் சாப்பிடலாமே! என்று ரமணர் ஸ்ரீநாராயணகுருவிடம் மலையாளத்தில் கூறினார். இருவரும் அமர்ந்து உணவருந்தினர். ஸ்ரீநாராயணகுரு பத்தியச் சாப்பாடு மேற்கொண்டு இருந்ததால் மோர்சாதம் கனிகள் அப்பளம் பாயசம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டார். ரமணர் மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் நேரம் மலைப்பக்கம் சென்று வருவார். அன்று ரமணர் மலைப்பக்கம் சென்றுவருவதற்குள் ஸ்ரீநாராயணகுரு அவருக்கு கவிதைக் காணிக்கை  ஒன்றை ஆயத்தமாக வைத்திருந்தார்!

ஆம் கவிதை எழுதிய சீட்டை நாராயணகுரு ரமணரிடம் கொடுத்தார். நாராயணகுரு விடைபெற்றுச் சென்ற பிறகு ரமணர் அந்தச் சீட்டைப் பிரித்துப் படித்தார். நிவ்ருத்தி பஞ்சகம் என்ற தலைப்பில் ஸ்ரீநாராயணகுரு ரமணரைப் போற்றிப் புகழ்ந்து, சம்ஸ்காரத்தில் ஐந்து சுலோகங்கள் எழுதியிருந்தார்.

சிலநாட்கள் சென்ற பின் நாராயணகுருவின் வர்க்கலை ஆசிரமத்திலிருந்து ரமணருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் நாராயணகுரு பகவானைப் போற்றி முனிசரய பஞ்சகம் என்ற தலைப்பில் மேலும் ஐந்து சுலோகங்கள் இயற்றி அனுப்பியிருந்தார்.

ஸ்ரீநாராயணகுரு இயற்றிய பத்துப் பாடல்களையும் (இரண்டு பஞ்சகங்கள் ) ரமணர் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் தமது கைப்பட எழுதி வைத்துள்ளார். நாராயணகுரு பகவானை ராஜ சர்ப்பம் என்று போற்றி உரைத்துள்ளார். வர்க்கலை ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களிடம் ஸ்ரீநாராயணகுரு ரமணரைப் பற்றி விசாரிப்பது வழக்கம்.

நாராயணகுரு உடல் நலம் குன்றிய செய்தி தந்தி மூலம் ரமணருக்குத் தெரிவிக்கப்பட்டது. பகவான் ரமணர், ஸ்ரீநாராயணகுருவிற்கு உதவுவதற்காகத் தமது சீடர்கள் இருவரை அனுப்பி வைத்தார். ஸ்ரீநாராயணகுரு சமாதி அடையும் வரை அவர்கள் வர்க்கலையில் தங்கியிருந்து அவருக்கு அணுக்கத் தொண்டுகள் புரிந்தனர். இவ்வாறு இரு  நட்புக் கொண்டிருந்தனர்.

ரமணாஸ்ரமத்தில் ராஜேந்திர பிரசாத்

அப்போது இந்திய விடுதலை வேள்வி இறுதிக் கட்டத்தில் இருந்தது. மகாத்மா காந்தியின் தூதுவர்களாக மூவர் ரமணாஸ்ரமத்திற்கு வந்து, ஒரு வாரம் தங்கினர். ரமணரைத் தரிசித்து மகிழ்ந்தனர்.

பாபு ராஜேந்திர பிரசாத், ஜம்னாலால் பஜாஜ், காமத் ஆகிய மூவருமே ரமணாஸ்ரமம் வந்தார்கள். அவர்கள் விடைபெற்றுச் செல்வதற்கு முன்னால் ரமணரைத் தரிசித்தனர். பஜாஜ் அவர்கள் ரமண தரிசனம் தங்களுக்கு புதிய ஆத்ம பலத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறினார். ரமணரும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். சுதந்திரத்திற்குப் பிறகு 1950 இல் ரமணரின் ஆசிகளைப் பெற்ற பாபு ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பெறுப்பேற்றார்.

தமிழ்க் கவிஞர் ரமணர்

ஆத்மஞானியாகவும் சித்தபுருஷராகவும் திகழ்ந்த ரமணர் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞர் ஆவார். பிøக்ஷ ஏற்கச் செல்லும் பக்தர்கள் பாடுவதற்கு ஏற்றதாக ரமணர் இயற்றியது அக்ஷரமணமாலை என்ற தோத்திரம்.

அக்ஷரம்  என்றால் அழியாதது என்று பொருள். எழுத்துக்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்பதால் அக்ஷரம் என்றனர். மேலும் எழுத்துக்கள் அகரத்தில் தொடங்கி, க்ஷகர த்தில் முடிவடைகின்றன. அழியாமல் இருக்கும் இறைவனுக்கு அழியாமல் இருக்கும் எழுத்துக்களால் தொடுத்ததே அக்ஷரமணமாலை. அக்ஷ+ரமணமாலை என்றும், அக்ஷர மணமாலை என்றும் பொருள் கொள்ளலாம். இதனை ரமணர் தமிழில் தொடுத்ததால் அ வில் தொடங்கி வை என்ற எழுத்தில் நிறைவு செய்கிறார். மொத்தம் நூற்றெட்டுக் கண்ணிகளைக் கொண்டது அக்ஷரமணமாலை. நூலின் தொடக்கத்தில் கணபதி காப்பும் அருணாசலசிவ! அருணாசலசிவ! என்ற பல்லவியும் உள்ளது. வள்ளுவர் தமது பெற்றோர் பெயர்கள் வரும் வகையில் ஆதிபகவன் என்று தொடங்கினார் ரமணர் அக்ஷரமணமாலையின் இரண்டாம் கண்ணியில் அழகு சுந்தரம் போல் என்று குறிப்பிட்டுள்ளார். ரமணரின் தாய் அழகம்மா தந்தை சுந்தரம் இருவர் பெயரையும் இணைந்து அழகுசுந்தரம் என்று இரண்டாவது கண்ணியைத் தொடங்குகிறார். தோத்திரமாகப் பாட ஏற்றது. எனினும் அக்ஷரமண மாலையில் மேலான வேதாந்தக் கருத்துக்கள் பொதிந்துள்ளன.

நான் யார் என்ற ஆத்ம விசார நூலை ரமணர் இயற்றியுள்ளார். ரமணர் இயற்றிய உள்ளது நாற்பது, திருமூலரின் திருமந்திரத்தைப் போன்ற நடையில் இயற்றப்பட்டுள்ளது.

வடமொழியில் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் ரமணர் சில கவிதைகள் இயற்றி உள்ளார். எனினும், தமிழ்க்  கவிதை எழுதுவதிலேயே ஆதிக ஆர்வம் கொண்டிருந்தார். ரமணரின் தாயார் உடல் நலம் குன்றியிருந்த பொழுது அவர் இனிய வெண்பாக்களை இயற்றினார்.

அலையாய் வருபிறவி அத்தனையும் மாற்ற
மலையாய் எழுந்த மருந்தே!- தலைவாநின்
தாள்கதியாய் வாழும் என் தாய் தாப மாற்றியே
ஆள்வதும் உன்கடனே ஆம்.

நினைத்த மாத்திரத்தில் வெண்பாக்களை இயற்றும் திறமை பெற்றவர் ரமணர். ரமணரின் நூல்கள் ரமண நூற்றிரட்டு என்ற பெயரில் வெளிவந்துள்ளன. தனி நூல்களும் உள்ளன.

ரமணர் திருவண்ணாமலைக்கு வந்த பொன்விழா ஆண்டு 1946 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பகவானுக்கு இடது முழங்கைக்குக் கீழே ஒரு கட்டி தோன்றியது சர்க்கோமா என்ற புற்றுநோய்க் கட்டி என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர். கரத்தை வெட்டி எடுக்க வேண்டுமென்று கூறினார். மகான் இயற்கை வழி நடக்கட்டும் என்று கூறிவிட்டார். அறுவைச் சிகிச்சை பயனளிக்கவில்லை. நோயைப் பொருட்படுத்தாமல் மகரிஷி தனது பணிகளைச் செய்து வந்தார்.

1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் பகவான் பரிபூரணம் எய்தினார். சற்றே கண்களை விரித்து, புன்னகை மலர்ந்து விழியோரத்தில் பேரானந்தக் கண்ணீர் மல்கக் காட்சியளித்த நிலையில் சித்தி அடைந்தார். அதே நேரத்தில் ஓர் எரிநட்சத்திரம் வானவெளியில் மெல்ல நகர்ந்து அண்ணாமலைச் சிகரத்தில் ஐக்கியமானதை நகரவாசிகள் கண்டனர்! அருணாசலசிவ என்று பக்தர்கள் முழங்கினர்.

மகரிஷியின் பூதவுடலை பத்மாசனத்தில் இருக்கச் செய்து அபிஷேக ஆராதனைகள் நடத்தினர். மாத்ரு பூதேஸ்வரர் சன்னதி பழைய தரிசன மண்டபம் இரண்டுக்கும் இடையில் பூதவுடலை சமாதிகொள்ளச் செய்தனர். அன்றாட வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் ஆண்டு தோறும் ஆராதனை விழா நடைபெறுகிறது. ரமணாசிரமம் சேஷாத்ரி சுவாமிகள் அதிஷ்டானம் உள்ள அதே சாலையில் வலப்புறத்தில் அமைந்துள்ளது.

திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில் அவருடைய கமண்டலம், பாதணி, கைத்தடி ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த புண்ணிய பூமியில் ரமணர் இன்றும் தங்கியிருந்து தங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் பக்தர்கள்.