திங்கள், 12 அக்டோபர், 2020

மருதாணி

மருதாணியை
ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்


கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது.
ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். 
அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.
“எங்களுக்கு எதுவும் வேண்டாம். 
இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. 
உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி.
அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். 
உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். 
அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.
அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். 
இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. 
மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.
அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.
மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.
வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. 
ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்
===மருதாணியை
ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது.
ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். 
அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.
“எங்களுக்கு எதுவும் வேண்டாம். 
இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. 
உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி.
அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். 
உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். 
அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.
அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். 
இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. 
மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.
அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.
மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.
வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. 
ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.

காமதேனு

 *பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா?*

 *தலை* - சிவபெருமான்
 *நெற்றி* - சிவசக்தி
 *வலது கொம்பு* - கங்கை
 *இடது கொம்பு* - யமுனை
 *கொம்புகளின் நுனி* - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.
 *கொம்பின் அடியில்* - பிரம்மன், திருமால்
 *மூக்கின் நுனி* - முருகன்
 *மூக்கின் உள்ளே* - வித்யாதரர்கள்
 *இரு காதுகளின் நடுவில்* - அஸ்வினி தேவர்
 *இரு கண்கள்* - சூரியன், சந்திரன்
 *வாய்* - சர்ப்பாசுரர்கள்
 *பற்கள்* - வாயுதேவர்
 *நாக்கு* - வருணதேவர்
 *நெஞ்சு* - கலைமகள்
 *கழுத்து* - இந்திரன்
 *மணித்தலம்* - எமன்
 *உதடு* - உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்
 *கொண்டை* - பன்னிரு ஆதித்யர்கள்
 *மார்பு* - சாத்திய தேவர்கள்
 *வயிறு* - பூமிதேவி
 *கால்கள்* - வாயு தேவன்
 *முழந்தாள்* - மருத்து தேவர்
 *குளம்பு* - தேவர்கள்
 *குளம்பின் நுனி* - நாகர்கள்
 *குளம்பின் நடுவில்* - கந்தர்வர்கள்
 *குளம்பின் மேல்பகுதி* - அரம்பெயர்கள்
 *முதுகு* - ருத்திரர்
 *யோனி* - சப்த மாதர் (ஏழு கன்னியர்)
 *குதம்* - லட்சுமி
 *முன் கால்* - பிரம்மா
 *பின் கால்* - ருத்திரன் தன் பரிவாரங்களுடன்
 *பால் மடி* - ஏழு கடல்கள்
 *சந்திகள்* - அஷ்ட வசுக்கள்
 *அரைப் பரப்பில்* - பித்ரு தேவதை
 *வால் முடி* - ஆத்திகன்
 *உடல்முடி* - மகா முனிவர்கள்
 *எல்லா அவயங்கள்* - கற்புடைய மங்கையர்
 *சிறுநீர்* - ஆகாய கங்கை
 *சாணம்* - யமுனை
 *சடதாக்கினி* - காருக பத்தியம்
 *வாயில்* - சர்ப்பரசர்கள்
 *இதயம்* - ஆகவணியம்
 *முகம்* - தட்சரைக் கினியம்
 *எலும்பு, சுக்கிலம்* - யாகத் தொழில்

 *அனைத்தும் பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார்.* *ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள். அப்போது பசு லட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள். எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.*

 *கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது’ என்று சொன்னது.*

 *லட்சுமி தேவியும், ’அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள். லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.


செவ்வாய், 6 அக்டோபர், 2020

விளக்கு ஏற்றுவதின் சிறப்பு

விளக்கு ஏற்றுவதைப்பற்றி விளக்கம்

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே!

“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?

தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு.

அவ்வாறு ஈர்க்கும் போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.
நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே
மயானம் போல் தோன்றும்.

எல்லோருமே சோர்வாக இருப்பார்கள். இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.

அதே போல் மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய் விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷும்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.

சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.

சுஷும்னா நாடி அந்த பரம் பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது.

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது.

நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.

பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது.

திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம்.
இதற்கு தடையேதும் இல்லை. ஆனால் பொதுவாக மாலை ஆறு மணிக்கு ஏற்றுவதே நமது மரபு.

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது.

ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.

ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது. அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள். ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். ஒரு நாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உனக்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான். அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது. இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர். அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச் சொல்கிறார். இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர். பின் கண் திறந்த போது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.

குறிப்பு:-

மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும். ஆஸ்துமா, மார்பு புற்று நோய் இவைகளுக்கு மெழுகுவர்த்தி தான் தாய். மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம். வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும் படி கேட்டுக்கொள்ளவேண்டும்.

இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.

விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
எங்கு விளக்குகள் நிறைய எரிகிறதோ அங்கு தோஷங்கள் விலகி செல்வங்கள் பெருகும் உதாரணம் திருமலையில் தினமும் ஆயிரம் தீபங்கள் ஏற்றி ஸஹஸ்ர தீபாலங்கரண ஸேவா நடை பெறுகிறது. கேரளாவில்
கோவிலைச்சுற்றி விளக்கு ஏற்றுகிறார்கள். இங்கு லட்ச தீபம்
ஏற்றுகிறார்கள். கேரளாவில் எந்த காரியத்திற்கும் ஸிரார்த்தத்திற்கு கூட விளக்கேற்றாமல் செய்யமாட்டார்கள்.
கோவிலில் கூட மூலஸ்தானத்தில் விளக்கேற்றாமல் வணங்கக் கூடாது என்று உள்ளது. விளக்கேற்றுவதன் மூலம் விலக்குவோம் தோஷங்களை
விளக்குவோம் இதை பிறருக்கு இப்பொழுது இருக்கும் பயங்கரமான சூழ்நிலையில் பூஜையறையில் விளக்கு எப்பொழுதும் எரிந்து கொண்டிருந்தால் அதிலிருந்து வரும் சுடர் ஓளியானது எப்பேற்பட்ட விஷக்கிருமிகளையும் அழித்து விடும். இதை அனைவருக்கும் பகிரவும்.


திங்கள், 5 அக்டோபர், 2020

அருள் தரும் அன்னை


அருள்தரும் அன்னை ஶ்ரீ முப்பிடாதி அம்மன் திருவரலாறு

அனைவருக்கும் வணக்கம்.

மக்களை காப்பவன் மன்னன். மழை, வெள்ளம், புயல், வெயில் மற்றும் நோய், நொடி என அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காத்து மனமகிழ்ச்சியோடு வைத்து இருந்து அழகு பார்ப்பவள் அனைத்துலகிற்கும் அன்னையான அம்மன்.

மண்ணுலக மக்கள் வணங்கும் அம்மன் அவதாரங்கள் எத்தனையோ என்றாலும் நெல்லைச் சீமையில் 'முப்பிடாதி’ என்ற பெயர் மிகப் பிரசித்தம். எண்ணற்றோருக்கு குலதெய்வமாகத் திகழும் இந்த அம்மன், அசுரர்கள் மூவருக்கு காவல் தெய்வமாக திகழ்ந்தவள். அந்த மூன்று  அசுரர்களின் இரும்பு, பொன், வெள்ளியாலான மூன்று கோட்டைகளுக்கும் காவலாக இருந்தவள் இந்த அம்மன் என்கிற ஒரு தகவல் உண்டு. 

முப்புரங்களையும் காத்ததால், முப்புராரி என்று பெயர். அதுவே பிறகு முப்புடாதி, முப்பிடாரி என்றும் மாறியதாகச் சொல்வர். இது தவிர, நெல்லைச் சீமையில் பல்வேறு பகுதியில் கோயில் கொண்டிருக்கும் இந்த அம்மனுக்கு, அந்தந்த பகுதிகளுக்கே உரிய தனிக்கதைகளும் உண்டு.முப்பெரும் சக்தி அன்னைகளான சரஸ்வதி, இலட்சுமி, பார்வதி எனும் தெய்வங்களை திருநெல்வேலி பகுதி மக்கள், தங்களுடைய பண்பாட்டிற்கு ஏற்ப முப்பிடாரி என்று பெயரிட்டு வணங்கி வருகிறார்கள் என்றும் கூறுவது உண்டு. நெல்லை வட்டார பகுதிகளில் முப்பிடாரி, முப்பிடாத்தி, முப்புடாதி என்கிற பெயர்கள் ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுப்பெயராகி இன்றும் வழங்கி வருகிறது.

ஸ்ரீ முப்பிடாதி அம்மன்  காயத்ரி மந்திரம்
“ஓம் த்ரிவதனாயை ச வித்மஹே
த்ரிஸூல ஹஸ்தாயை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்”

அருள்மிகு ஶ்ரீ முப்பிடாதி அம்மன் திருவரலாறு

அஷ்ட காளியரில் மூன்றாவதாக மூன்று தலைகளுடன் அவதரித்தவள் முப்பிடாதி. பிடரி என்றால் தலை என்று பொருள். மூன்று தலைகள் இருந்தமையால்  முப்பிடரி என்று அழைக்கப்பட்ட இந்த அம்மன் பின்னர் முப்பிடாரி என்று அழைக்கப்படலானார். இதுவே மருவி முப்பிடாதி என்றானது. இந்த அம்மனுக்கான  கோயில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் அமைந்துள்ளன.

கயிலாயம் விட்டு வந்த அஷ்ட காளியர்கள் பொதிகை மலைக்கு வந்து  சேர்ந்தனர். அங்கிருந்து ஒவ்வொருவரும் பூலோகத்தில் பல்வேறு இடங்களுக்குப் பெயர்ந்தனர். விரும்பிய இடத்தில் அமர்ந்துகொண்டு தான் வந்ததை அப்பகுதி  மக்களுக்கு உணர்த்தி கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றனர். மகிசாசுரனை அழிக்க அம்பிகை எட்டு பெண் குழந்தைகளாக நாகலோகத்தில் பிறந்தாள். அவர்களில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைதான் முப்பிடாதி.

அசுரர் குலத்துப் பெண் தானாவதி தனக்கொரு ஆண் வாரிசு வேண்டும் என்று பிரம்மனை நோக்கித் தவம் இருந்தாள்.தானாவதியின் கடும் தவத்தினை கண்ட பிரம்மதேவன் அவள் முன் தோன்றி, தானாவதி கேட்ட வரத்தைக் கொடுத்தார். வரத்தின் பயனாக தானாவதிக்கு மகனாக மகிஷாசுரன் பிறந்தான். வேதங்களையும், அனைத்து கலைகளையும் கற்றுணர்ந்த மகிஷாசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். மகிஷாசுரனின் தவத்தைக்கண்டு சிவபெருமான் அவன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தார். வரங்களைபெற்ற மகிஷாசுரன், " ஊர்வன, பறப்பன உள்ளிட்ட எந்த இனத்தாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. பெண் வயிற்றில் பிறக்காத பெண்ணால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும் " என்று வரம் கேட்டான். அதனைக் கேட்ட சிவபெருமான், " அப்படியே ஆகட்டும் " என்றார்.

வரங்களை பெற்ற மகிஷாசுரன் தனக்கு மரணம் நேர வாய்ப்பே இல்லை. என்ற ஆணவத்தில் தான் ஆண்டு வந்த மகேந்திர கிரிபர்வதம் (தற்போதைய மைசூர், மகிஷன் ஆண்டு வந்த ஊர் என்பதால் மகிஷா ஊர் என்று அழைக்கப்பட்டது. அது மருவி மைசூர் என்றானது) பகுதியில் தான் எண்ணியபடி ஆட்சி புரிந்தான். தனது சுயநலத்திற்காக கொடுஞ் செயல்கள் புரிந்து வந்தான். தேவர்களை துன்புறுத்தினான். மகிஷாசுரனின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். 

இதனிடையே ஒருநாள் கயிலாய மலையில் பார்வதிதேவி, விநாயகர், முருகன் சகிதமாக வந்தபோது சிவபெருமான் இருகண்களும் திறந்திருந்த நிலையில் ஆழ்ந்த தியானநிஷ்டையில் இருந்ததைக் கண்ட விநாயகப் பெருமான், அன்னை சக்தியிடம், “ தாயே, தந்தை ஏன் கண்களை திறந்தபடி தியானம் செய்கிறார்.  தியானம் என்றாலே கண்களை மூடித்தானே செய்ய வேண்டும் என்று வினா தொடுத்தார்.” அதற்கு பார்வதி தேவி, “தந்தையின் கண் ஒளியினால் தான் அண்ட சராசரங்கள் இயங்குகிறது. அவர் கண்களை மூடினால் அகிலமும் இருட்டாகும்” என்றார். 

அப்போது குறுக்கிட்ட முருகன், “தாயே, அப்படியென்றால் தந்தை ஒரு முறை கண்களை மூடிக்காட்டட்டும் பார்ப்போம்” என்றார். “இதை எப்படி தந்தையிடம் கூற, என்று விநாயகர் கேட்க, அவரிடம் சொல்ல வேண்டாம், அதை நானே செய்கிறேன் என்று கூறியபடி, பார்வதி தேவி, சிவபெருமானின் கண்களை, தனது கரங்களால் மூடினார். மறு கணமே அகிலமும் இருளில் மூழ்கியது. உடனே சக்தியின் கரங்களை விலக்கிக் கொண்டு கண்ணை திறந்தார் சிவன். “என்ன விளையாட்டு இது” சினம் கொண்டார், சிவன். பணிந்தார் பார்வதிதேவி, “சுவாமி, பிள்ளைகள் கேட்டதற்காக செய்தேன். தாங்கள் பொறுத்தருள வேண்டும்.” என்றார். 

இந்த செயலுக்காக நீ வருந்தியே ஆக வேண்டும் என்ற சிவன்,  " நாகக்கன்னியின் வயிற்றில் அஷ்ட காளியாக பிறக்க வேண்டும் " என்று சபித்தார். " இந்தச் சிறிய தவறுக்கு மானிடப் பிறப்பா, அதுவும் நாகத்தின் வழியாகவா " என்று வருத்தமுற்ற பார்வதி தேவி, அவ்விடத்திலிருந்து எழுந்து நகர முற்பட்டார். அப்போது சிவபெருமான் கடுஞ்சினம் கொண்டு நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து வெளியான தீப்பிழம்புகள் பார்வதிதேவியின் மேனியை எட்டு பிண்டங்களாக்கின. அந்த எட்டு பிண்டங்களையும் கையில் எடுத்துக்கொண்டார் சிவன். பாதாள லோகத்தில் நாகக்கன்னி பிள்ளை வரம் வேண்டி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவள் முன் தோன்றிய சிவன், தன்னிடமிருந்த எட்டுப்பிண்டங்களையும் சாப்பிடுமாறு கொடுத்தார். அதை உண்ட நாகக்கன்னியின் வயிற்றில் அது எட்டு முட்டைக்களாக உருமாறி வெளி வந்தன. நாகக்கன்னி அந்த எட்டு முட்டைகளையும் அடைகாத்து வந்தாள்.

நான்காவது நாள் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எட்டு முட்டையிலிருந்து எட்டு பெண் குழந்தைகள் பிறந்தன. முதலாவதாக பிறந்தாள் முத்துமாரி என்ற மாரிமுத்தாரம்மன், இவளை முத்தாரம்மன் என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு. இரண்டாவதாக பிறந்தாள் மாகாளி என்ற பத்திரகாளி, மூன்றாவதாக மூன்று முகத்துடன் பிறந்தாள் முப்பிடாதி (பிடாரி, பிடதி - என்றால் தலை என்று பொருள்). மூன்று தலைகள் இருந்ததால் முப்பிடதி, முப்பிடரி என்று அழைக்கப்பட்டது, இதுவும் மருவி முப்பிடாரி என்றும் முப்பிடாதி என்றும் அழைக்கப்படலாயிற்று. நான்காவதாக பிறந்தாள் உலகளந்தாள் என்ற உலகமாதா, இவளை உலகநாயகி என்றும் அழைப்பதுண்டு. ஐந்தாவதாக பிறந்தாள் அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி, அன்னை இவளே நாகாத்தம்மனாகவும், நாகவல்லியாகவும் அழைக்கப்படுகிறாள். ஆறாவதாக பிறந்தாள் செண்பகவல்லி என்ற வடக்கு வாசல் செல்வி, இவள் செல்லியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். ஏழாவதாக பிறந்தாள் சந்தனமாரி. இவளே சடைமாரி, ஆகாசமாரி என அழைக்கப்படுகிறாள். கடைசியாக பிறந்தாள் காந்தாரி.

பிள்ளைகள் எட்டுபேரையும் நாகக்கன்னி, அன்போடும், அரவணைப்போடும் வளர்த்து வந்தாள். வளர்ந்து வந்த பிள்ளைகள் கன்னியர் ஆகினர். " அம்மா, எங்கள் முகமும் உங்க முகமும் வேறுபட்டு உள்ளதே " என்று கேள்வி எழுப்ப, " எல்லாம் அந்த சிவனார் செயல் " என்றாள் நாகக்கன்னி. உடனே, " நம்மை  ஏன், தாயைப்போல் நாககன்னிகளாக படைக்காமல் மனிதகுல பெண்களாக படைக்க வேண்டும். இந்த நாகலோகத்தில் மனித பிறப்பு எடுத்து என்ன பயனைப் பெறப் போகிறோம். அதை அந்த சிவனிடமே கேட்போம் " என்று கூறி, அக்காள் தங்கை எட்டு பேரும் சிவலிங்கத்தை வைத்து பூஜித்து சிவனை நோக்கி தவமிருந்தனர். 

அவர்களின் தவத்தைக் கண்ட சிவன் அவர்கள் முன் தோன்றினார். அஷ்ட காளிகள் சிவனிடம் தங்களின் பிறப்பு குறித்து கேட்க, " மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டு வரும் மகிஷாசுரனை வதம் செய்யவே உங்கள் படைப்பு " என்று சிவனும் பதில் கூறினார்.  அஷ்டகாளிகளும், " தங்களின் வேண்டுகோளை ஏற்று மகிஷாசுரனை நாங்கள் அழித்து வந்த பின் எங்கள் எட்டு பேரையும் நீங்கள் மணமுடிக்க வேண்டும் " என்றனர். அதற்கு சிவனும் ஒப்புதல் அளித்தார். மேலும் மகிஷாசுரனை அழிக்கும் வகையில் அனைத்து வரங்களையும் நல்கினார் சிவபெருமான்.

சிவபெருமான் ஆணைப்படி மகேந்திரகிரி பர்வத மலைக்கு வந்த அஷ்டகாளிகளுக்கும், மகிஷாசுரனுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடக்கிறது. தனித்தனியாக நிற்பதை விட, ஒரு சேர நின்றால் தனது வலிமை அதிகம் என்பதை உணர்ந்து அஷ்ட காளிகள் எட்டுபேரும் ஒருசேர அமைந்து சாமுண்டீஸ்வரியாக மாறி மகிஷாசுரனை வதம் செய்தனர். இறக்கும் தருவாயில் அரக்கன் மகிஷாசுரன், " தாயே என்னை மன்னித்து விடுங்கள். வாழும் வரை மனித குலத்தில் ராஜாவாக இருந்தேன். இனி கானகத்தில் வாழும் உயிர்களுக்கு ராஜாவான சிங்கமாக மாறி, தாயே உம்மை சுமக்கும் பாக்கியம் தந்தருள வேண்டும் " என்றான். ஆங்கார ரூபினியாக இருந்த அன்னை சாமுண்டீஸ்வரி, சாந்த ரூபினியாக மாறினாள். மகிஷாசுரனை மன்னித்து சிங்கமாக்கி, தனது வாகனமாக்கிக் கொண்டாள். அன்றிலிருந்து அஷ்டகாளிகள் எட்டு பேரும் ஒரு சேர நின்ற கோலத்தில் உள்ள தேவி மகிஷாசுரமர்த்தினி என்ற நாமத்தில் அழைக்கப்பட்டாள்.

கொஞ்சம் படியுங்கள்

கொஞ்சம் படிங்க

உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை.

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.

போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை

ஆகவே  சிக்கனமாக
இருக்காதீர்கள்.

செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!

எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!

நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை.

நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.

உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.

உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.

அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!

சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.

பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!

ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.

அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே
போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

பணம், புகழ்,
சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும்
இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.

நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,
அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
 
மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !

உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது.

நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை
வாழவைக்கும்!!

அதற்கு மேல் என்ன வேண்டும்இ சொல்லுங்கள்?

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை  நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

வரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்!!!!!


60,70,80 வயதில் ஆணும் & பெண்ணும்


ஆணும்  பெண்ணும் எவ்வளவு உயர் பதவி, பொருளாதரத்தில் மேலோங்கி இருந்தாலும் அவர்களின் 60 - 70 - 80 வயதுக்கு மேல் எப்படி இருப்போம் என்பது தான் . இது ஒரு கண்ணோட்டம் எனவே மனதை இப்போது தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
                                                       

*ஒருவரின் பணி ஓய்வுக்குப் பின் அதாவது 60ஐ கடந்து முதிர்ந்து கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என இப்போதே தெரிந்து வைத்திருப்பது, எது வந்தாலும் அஞ்சாமல் அவற்றை எதிர் கொள்ள உதவும்.*

1. *முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக விடை பெற்றுச் சென்றிருப்பார்கள்... பின் நம்மை  ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத் தொடங்குவார்கள். மிச்சம் இருப்பவர்களில் சிலர் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள். நமக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையிலே அதிக கவனம் செலுத்துவார்கள். உங்கள் மனைவியோ அல்லது கணவரோ உங்களுக்கு முன்னால் காலமானால் அனைத்தும் சூன்யமாகி விட்டது போல் உணர்வீர்கள்.*

*அதனால் அப்போது தனிமையில் வாழவும், அதையே ஏற்றும், ரசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்*

2.  *காலப் போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் உங்கள் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம்.*
*நீங்கள் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருப்பினும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருப்பினும்  முதுமை உங்களை ஒரு சராசரி*
*வயதான மனிதராக மாற்றி விடும். நீங்கள் மெதுவாக குடும்பத்தால் சமூகத்தால் ஓரங்கட்டப் பட்டு மறக்கப் படுவீர்கள்.*
*உங்கள் இடத்துக்கு மற்றவர்கள் வந்து விட்டதைப் பார்த்து நீங்கள் பொறாமைப் படவோ முணுமுணுக்கவோ செய்யாமல் உங்களை கட்டுப் படுத்திக் கொண்டு வாழ வேண்டும்*

3.  *அழையா விருந்தாளியாக பல வகை நோய்களும் உடல் உபாதைகளும் உங்களை அண்டும். ஒதுக்கித் தள்ள முடியாத அவைகளுடன் நட்பு கொண்டு வாழ்வதற்கு பழகி கொள்ளவும். உங்கள் உடல் இளமைக் காலத்தில் இருந்தது போலவே இப்போதும் தொல்லையில்லாமல் இயங்கும் என கனவு காணாதீர்கள். அதற்காக அதைப் பற்றியே நினைத்து கவலைப் பட்டுக் கொண்டே  இருக்காமல், எல்லாமே சரியாகவே நடக்கும்   என்ற மனப்பக்குவம் பெறுங்கள். ஒரு இடத்தில் முடங்கி விடாமல் சுறுசுறுப்பாக இயங்கி உங்கள் நலத்துக்குத் தேவையான உடற் பயிற்சியைப் பெறுங்கள்.*

4. *இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு நிலை வரும். அப்போது நம்மால் எழுந்து நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை வரலாம். நாம் பிறந்தபோது இருந்தோமே அது போல. ஒரு முக்கிய வித்தியாசம் நாம் குழந்தையாய் இருந்த போது நம்மை அன்போடு சீராட்டி பராமரிக்க நம் அன்னை இருந்தாள். ஆனால் இந்த படுக்கை சீசன்- 2 வில் சம்பளத்துக்கு வேலை செய்யும் நர்சுகள் தான் அனேகமாக இருப்பார்கள்.*

*அவர்களை நன்றி பாராட்டுவதுடன், அவர்கள் தங்கள் பணியினை செய்து முடிக்க உங்கள் ஒத்துழைப்பை நல்குங்கள்.*

5.  *கடைசி காலங்களில் உங்களது முதுமையைப் பயன் படுத்தி உங்கள் பணம் மற்றும் உடமைகளை உங்களிடம் இருந்து பறிக்க சிலர் முயற்சிக்கலாம்.  அது போன்ற மனிதர்களிடம் உஷாராக இருக்கவும். உங்களுக்கு இனி தேவை இல்லாதவற்றை நீங்களாகவே மற்றவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்*.

 *மிக முக்கியமாக, பற்றற்று வாழப் பழகுங்கள்.*

*வாழ்வின் கடைசி காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குறைந்து இருள் சூழும் நேரம் நெருங்கும். அச்சமயத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்துவது ஒரு யுகமாகத் தோன்றும்.*

*ஆகவே 60ஐத் தாண்டியவர்கள் வாழ்க்கை என்றால்  என்ன என்று இந்நேரம் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.*

*உங்களுக்குக் கிடைத்த வாழ்வை மகிழ்வோடு ஏற்று அனுபவியுங்கள்.*

*நம் பிள்ளைகள் என்னாவார்களோ, நம் பேரன் பேத்திகள் எவ்வளவு மார்க் வாங்குவார்களோ என்றெல்லாம் இனிக்  கவலைப் படாதீர்கள்.*

*ஊரில் ஊழல் மலிந்து விட்டதே, அரசியல்வாதிகள் அநியாயம் பண்றாங்களே என்றெல்லாம் நினைத்து மனதை வருத்திக் கொள்ளாதீர்கள்*.

*இனி நீங்கள் வாழப் போகும் எஞ்சிய காலத்தை மகிழ்வோடு வாழுங்கள்.* *மற்றவர்களை மதியுங்கள்.*
*பணிவோடு நடந்து கொள்ளுங்கள்.* *உங்கள் வயதைக் காரணம் காட்டி உங்களை உயர்த்திக் கொள்ள எண்ணாதீர்கள். யார் மனமும் புண்படும் விதமாக நடக்காதீர்கள்.*
*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து சஞ்சலமற்ற மனநிலையையும் அமைதியையும் தேடுங்கள்.*

*வாழ்க்கை வாழ்வதற்கே.*

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 22

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 22

தஞ்சம்மாளின் பிரிவிற்குப் பின் இளையாழ்வான் என்ன செய்தார்? இன்று உலகமே போற்றும் 'இராமானுஜர்'  எனும் பட்டம் யாரால் கிடைக்கிறது?
 துறவறம் மேற்கொள்ளுதல்

சன்னியாசஆஸ்ரமத்தை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்தார் இளையாழ்வான். வேதசரஸ் புஸ்கரணிக்குச் சென்றார். அங்கு நீராடினார். அங்கிருந்து பேரருளாளனை நோக்கி பிரார்த்தித்தார்.

'தான் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசி ஆகிவிடுவோம். இனி அதைக்கொண்டு தான் சம்பிரதாயத்தை வளர்க்க வேண்டும்' என்று திருவுளம் கொண்டு தேவராஜப்பெருமாளை பிரார்த்தித்தார்.

பேரருளாளன் சன்னிதிக்குச் சென்று "இவ்வளவு நாள் தாய், தந்தை, மக்கள் என்று இருந்தேன். இனி எனக்கு எந்த உறவும் இல்லை. இந்த பிறவியும் வேண்டாம்"  என்று பிரார்த்தித்தார்.

காஞ்சி பேரருளாளனே ஆச்சாரியனாக வந்து விண்ணப்பம் செய்ய, தேவனே - காஷாயம், திரிதண்டம் - இரண்டையும் இளையாழ்வானுக்குக் கொடுத்தார். ஒருவர் சன்னியாசனம் ஆக வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் ஆச்சாரியானிடத்திலேதான் திரிதண்டம் - காஷாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இளையாழ்வானோ எங்கே, யாரைப் போய்த் தேடுவார்? அதனால்தான் காஞ்சி தேவப்பெருமாளே ஆச்சாரியானாக வந்துவிட்டார் இளையாழ்வானுக்காக.

ஆச்சாரியானாக வந்த தேவப்பெருமாளை இளையாழ்வான் சேவிக்க, அவரோ திரிதண்டத்தை அர்ச்சகர் மூலம் கொடுத்து, "இனி நீர் உள்ளவரையும் தரிசிக்கப்படுவீர். உமக்கு 'இராமானுஜ முனி' என்று திருநாமம் உகந்தருளினோம்!" "இனி இராமானுஜரை மடத்திலேயே வைத்து வாரும்" என்று திருக்கச்சி நம்பிகளுக்கும் அருளினார்.

காஞ்சி தேவப்பெருமாளே ஆச்சாரியானாக உகந்தருளிய 'இராமானுஜர்' என்ற திருநாமமே இன்று உலகம் முழுவதும் அனைவராலும் போற்றப்படுகிறது.

இளையாழ்வான் திரிதண்டத்தைப் பெற்றுக்கொள்ளும் பொழுது நம் மருமகன் முதலியாண்டானைத் தவிர மற்ற அனைத்து சொந்தங்களையும் இழந்தோம் என்றார். முதலியாண்டானைப் பற்றி பிறகு பார்க்கலாம்.

🌻🍁 ஸ்ரீ வைஷ்ணவ சன்னியாசம்

சாதாரணமான சன்னியாசம் மேற்கொள்பவர்கள் வைத்திருக்கும் தண்டத்தில் ஒரு கொம்பு தான் இருக்கும். ஆனால், வசிஷ்டாத்வைதத்தில் சன்னியாசி வைத்திருப்பதில் மூன்று கொம்புகள் இருக்கும்.

'சத்தியம் ஒன்று' என்பது ஆதிசங்கரருடைய கொள்கை. அதனால் ஏக தண்டம்.

'தத்துவங்கள் மூன்று' என்பது இராமானுஜரின் கொள்கை. சித்து, அசித்து, ஈஸ்வரர்கள் என்பது மூன்று கொம்பின் தத்துவமாகும். திரிதண்டத்தை எப்பொழுதும் கையிலிருந்து நழுவ கூடாது. காஷாயத்தை எப்பொழுதும் நிலையிலிருந்து மாற்றக்கூடாது.

சிகை - குடுமி உண்டு. யக்ஜோபவீதம் - பூணூல் உண்டு. இடுப்பில் காஷாய வஸ்திரம் உண்டு. கையில் எப்பொழுதும் திரிதண்டத்தைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இவற்றைதான் இராமானுஜர் பெற்றுக் கொண்டார். இப்பொழுது இராமானுஜரை சேவித்துப் பார்த்தால் உயர்ந்த சூரியன் பளபளவென்று விடிவதெற்குத் தயாராக இருப்பது போல் இருக்கிறார்.

இளையாழ்வான் என்று இதுவரை அழைத்தோம். இப்பொழுதிருந்து இளையாழ்வானை "இராமானுஜர்" என்று அழைப்போம்!

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை விரிவாக்க இராமானுஜர் எடுக்கும் முயற்சிகளை இனிவரும் பதிவில் காணலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🙏💐


ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 21


ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 21

இன்றைய பதிவில் தஞ்சம்மாள் செய்த மூன்றாவது பிழை என்ன என்பதை அறியலாம்.

மூன்றாவது பிழை

பெரிய நம்பிகள் தம் மனைவியுடன் இளையாழ்வான் வீட்டில் தங்கியிருந்தபோது, ஒருநாள் இளையாழ்வான் ஸ்ரீ பெரும்புத்தூர் சென்றிருந்தார். அந்த சமயத்தில் இளையாழ்வானின் மனைவியும், பெரிய நம்பிகளின் மனைவியும் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது இரண்டு வாளியும், நீர் இறைக்கும் பொழுது ஒன்றுடன் ஒன்று உரசி நீர் தெளித்தது. இதைக்கண்ட தஞ்சம்மாள் பெரிய நம்பிகளின் மனைவியிடம் பேச ஆரம்பித்தார். இவள் பேச பதிலுக்கு பெரிய நம்பிகளின் மனைவி பேச வாதம் விவாதமானது.

இதை தெருவில் குடியிருந்தோர் அனைவரும் கேட்டு விட்டனர். இளையாழ்வானின் மனைவி தஞ்சம்மாளை சற்று அதிகமாகவே விவாதம் செய்து விட்டாள். இதை அறிந்த பெரிய நம்பிகள், தன் மனைவியைக் கோபித்துக் கொண்டார்.

"வா! நாம் திருவரங்கம் செல்லலாம்" என்று கூறி, பெரிய நம்பிகள் தன் மனைவியை அழைத்துக் கொண்டு இளையாழ்வான் வீட்டை விட்டுக் கிளம்பினார். ஸ்ரீ பெரும்புத்தூர் சென்றிருந்த இளையாழ்வான் வரும்முன்னே பெரிய நம்பிகள் சென்றுவிட்டார்.

தன் வீட்டிற்கு வந்திருந்த பெரிய நம்பிகளை வீட்டில் அழைத்தபோது இல்லை. "எங்கே சென்றார்?" என்று அருகில் இருந்தோரிடம் விசாரித்த பொழுது, அவர் திருவரங்கம் புறப்பட்டுச் சென்றதையும், தஞ்சம்மாள் நடந்து கொண்டதையும் அருகிலிருப்போர் கூற, தஞ்சம்மாளிடம் பெரிய நம்பிகள் பற்றி விசாரித்தார். தஞ்சம்மாளும் நடந்ததைக்கூற, இளையாழ்வானுக்கு அதிகமாகவே கோபம் வந்துவிட்டது.

"ஆச்சாரியனைத் தேடி தேடி அலைந்து கொண்டிருந்ததற்கு பரிசாக, இறைவனே பெரிய நம்பிகளை ஆச்சாரியனாக ஆக்கிக் கொடுத்தார். அந்த ஆச்சாரியனுக்கே பெரிய பாவத்தை பண்ணிவிட்டாய்" என்று கூறினார். வைஷ்ணவ சம்பிரதாயத்தை பொறுத்தவரை, பாகவதன் பாவத்தை விடவும், ஆச்சாரியானுக்குச் செய்யும் பாவத்தைத் தொலைக்கத்தான் பிராயச்சித்தம் இல்லை. அதற்கு என்ன பரிகாரம் செய்தாலும், செய்த பாவத்தைத் தொலைக்க முடியாது. "இந்த பாவத்தை நான் எப்படி நான் தொலைப்பேன்? என்ன செய்வேன்?" என்றெல்லாம் உரைத்தார்.

தஞ்சம்மாளுடன் குடும்பப் பொறுப்பில் இருக்கும் வரையில், தம்முடைய நோக்கமும், பிரார்த்தனைகளும், ஸ்ரீ வைஷ்ணவ செயல்பாடுகளும் முழுமையாக செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். "இனி, நீ உன் பிறந்தகம் செல்லலாம்" என்று தஞ்சம்மாளிடம் கூறிவிட்டார். தஞ்சம்மாளுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து, அவரது வீட்டில் உள்ளவர்களை வரவழைத்து அவர்களுடன் தஞ்சம்மாளை அனுப்பி வைத்து விட்டார்.

'தஞ்சம்மாளுக்கும் எனக்கும் இருக்கும் உறவு முறிந்துவிட்டது. இனி, ஸ்ரீ வைவஷ்வ சம்பிரதாயங்களில் சுதந்திரமாகச் செயல்படலாம்' என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அதன் பின் இளையாழ்வான் செய்த செயல் என்ன? இளையாழ்வானுக்கு இன்று உலகமே போற்றும் இராமானுஜர் எனும் பட்டம் யாரால் கிடைக்கிறது?  நாளைய பதிவில் அறியலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 20

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 20

 தஞ்சம்மாளின் செயல்கள்

மந்திர ரத்தினத்தின் ரகஸ்யத்தைக் கேட்டு உய்ந்த இளையாழ்வான், குருவையும் அவர் பத்தினியையும் காஞ்சிபுரத்திற்கு அழைத்தார். பெரிய நம்பிகளும் இளையாழ்வானின் வேண்டுகோளுக்கிணங்க காஞ்சிபுரத்திற்கு வந்தார்.

காஞ்சிபுரம் வந்த பெரிய நம்பிகளையும், அவரது பத்தினியையும் தம் இல்லத்தின் ஒரு பகுதியில் தங்குமாறு இளையாழ்வான் சொல்ல அவரும் சம்மதித்தார். இளையாழ்வான் வீட்டில் அவர்கள் தங்கினார்கள். இளையாழ்வான் பெரிய நம்பிகளிடம் வீட்டில் இருந்தவாறே காலட்சேபம் பயின்று வந்தார். நம்பிகள் வியாச சூத்ர அர்த்தத்தை கற்றுக் கொடுத்தார்.

ஒரு சமயம் வீட்டிற்கு ஸ்ரீ வைஷ்ணவர் வர, அவருக்கு உணவிடும் படி தஞ்சம்மாளிடம் சொன்னார் இளையாழ்வான். ஆனால், தஞ்சம்மாளோ உணவு ஏதும் இல்லை என்று கூறிவிட்டாள். அப்போது இளையாழ்வான் உள்ளே சென்று பார்த்த பொழுது ஒரு பாத்திரம் நிறைய பழைய சாதம் இருப்பதைக் கண்டார். "வீட்டில் உணவை வைத்துக்கொண்டே, ஸ்ரீ வைஷ்ணவருக்கு உணவில்லை என்று சொல்வது அபச்சாரம் இல்லையா?" என்று தஞ்சம்மாளிடம் தன் சினத்தை வெளிப்படுத்தினார். வீட்டிற்கு வந்த பாகவதற்கு உணவில்லை என்பது பெரிய அபச்சாரம்.

ஆனால், எல்லை மீறிய சினத்தை இளையாழ்வான் கட்டுப்படுத்திக் கொண்டு தஞ்சம்மாளை திட்டுவதோடு விட்டுவிட்டார். இது தஞ்சம்மாள் செய்த இரண்டாவது பிழை. முதல் பிழை திருக்கச்சி நம்பிகள் உணவருந்திய போது இலையைக் கையால் எடுக்காமல் கோலால் எடுத்து, குப்பையில் போட்டு வீட்டை சுத்தம் செய்து, தானும் சுத்தப்படுத்திக் கொண்டது.

இப்போது நடக்கும் சம்பவத்தின் மூலம் தஞ்சம்மாள் பெரிய பிழையைச் செய்கிறாள். அதுதான் அவள் இளையாழ்வானைப் பிரிய காரணமாக அமைந்தது. இளையாழ்வானின் மனைவி தஞ்சம்மாள் அப்பேற்பட்ட மனம் படைத்தவளா என்று எண்ண வேண்டாம். ஆளவந்தார் காஞ்சிபுரம் வந்தபொழுது ஸ்ரீ வைஷ்வண சம்பிரதாயத்திற்கு இளையாழ்வானைத்தான் ஆக்கிக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார் அல்லவா?  அந்த வேண்டுதல் தான் இப்போது தஞ்சம்மாளுக்கும், இளையாழ்வானுக்கும் உண்டான பிரிவு மூலம் நிறைவேறப் போகிறது.

காஞ்சி பேரருளாளன் எதைக் கேட்டாலும் கொடுக்கக் கூடியவர். ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவ சாம்ராஜ்யம் உருவாவதற்கு இந்த காஞ்சி பேரருளாளனின் அருள் தான் காரணம். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சிறப்பு பெற்ற ஆச்சாரியர்கள், 12 ஆழ்வார்களில் மூன்று ஆழ்வார்கள் அவதாரம் பண்ணியது என்ற எல்லா சிறப்பும் காஞ்சிபுரத்திற்கு உரியதே. எல்லோருடைய பிரார்த்தனை எதுவானாலும் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடியவர் காஞ்சி பேரருளாளன். அவர் தான் இப்பொழுது ஆளவந்தாரின் பிரார்த்தனையை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

சரி, தஞ்சம்மாள் செய்த மூன்றாவது பிழை என்ன?

!!  சாதீயத்திற்காக சம்சாரபந்தத்தை துறந்த ஸ்ரீமத் பகவத் ராமானுஜர் !!

சாதி ஏற்றத்தாழ்வை ராமானுஜர் கடுமையாக எதிர்த்தார். சாதி ஏற்றத்தாழ்வை தம்முடைய மனைவி கொண்டிருந்தார் என்பதே அவரின் துறவறத்துக்கு ஒரு காரணம். அவரின் தாம்பத்ய வாழ்வில் மூன்று முறை ராமானுஜரின் மனைவி இத்தகைய சாதி ஏற்றத் தாழ்வை வெளிப்படுத்துகிறார்.

திருக்கச்சி நம்பிகளுக்கு வீட்டின் நடையிலேயே உணவு அளிக்கிறார் ராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பாள். அதன் பின், வைணவர் ஒருவருக்கு ஆகாரம் அளிக்குமாறு கூற வீட்டில் ஒன்றுமில்லை என்று பொய் சொல்லிவிடுகிறார்.

ராமானுஜரின் குரு பத்தினியாருடன் சேர்ந்து கிணற்றிலிருந்து நீர் அள்ளும் போது தகாத சொற்கள் கூறி அதன்காரணமாக அவர்கள் வீட்டை விட்டே வெளியேறுவதற்குக் காரணமாயிருக்கிறார். இந்த மூன்று நிகழ்வுகள் அவரை துறவறத்துக்கு தூண்டுவதாக அமைந்தன.

ராமானுஜரின் மனைவி தஞ்சம்மாளோ மிகுந்த ஆசாரமான குடும்பத்திலிருந்து வந்தவள்.

 ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளோடு பேசுவதையே விரும்பாதவள்; அவரையே குருவாக ஏற்றுக் கொண்டது அவளுக்குத் துளியும் பிடிக்கவில்லை.

இந்த நிலையில் ராமானுஜர் தஞ்சம்மாளிடம், ‘திருக்கச்சி நம்பிகளை அமுதுண்ண அழைத்துள்ளேன். விரைவில் தளிகை (சமையல்) செய்’ என்றார்.

 தஞ்சம்மாள் வேண்டா வெறுப்பாக தளிகை செய்ய, ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளை அழைத்து வர புறப்பட்டுப்போனார். நம்பிகளோ, வேறு வேலை இருந்ததால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ராமானுஜரின் வீட்டிற்கு வந்துவிட்டார்.

தஞ்சம்மாள் இரண்டு திண்ணைகளுக்கிடையில் இருக்கும் நடைபாதையில் அவரை அமரச் செய்து உணவிட்டாள். திருக்கச்சி நம்பிகள் சென்றபின் அவர் சாப்பிட்ட இலையைக் கோலால் எடுத்தெறிந்து, வீடு முழுவதும் சாணம் தெளித்து சுத்தம் செய்து, தானும் குளித்துவிட்டு, புதியதாக சமையல் செய்து ராமானுஜரின் வருகையைப் பார்த்துக் காத்திருந்தாள்.

 விவரம் அறிந்த ராமானுஜர் கோபம் கொண்டார். தன் பக்தி மார்க்கத்திற்கும் மனித நேயத்திற்கும் வைணவ வளர்ச்சிக்கும் தஞ்சம்மாள் உறுதுணையாக இருக்கமாட்டாள்; உபத்திரமாகத்தான் இருப்பாள் என்று எண்ணிக் கொண்டார்.

இன்னொரு சமயம், ராமானுஜருக்கு எண்ணெய்த் தேய்க்க ஒரு வைணவர் வருவார். ஒருநாள் அந்த வைணவர் பசிக்கிறது என்றுகூற, ராமானுஜர் தஞ்சம்மாளை அன்னமிடச் சொல்கிறார்.

 அவளோ தளிகை இன்னும் செய்யவில்லை என்கிறாள். அப்படியா? சரி! பழைய சாதம் இருக்குமே! அதைப் போடு என்கிறார்.

தஞ்சம்மாள் அதுவும் இல்லை என்று கூறிவிட்டு வெளியில் சென்றாள். அப்போது உள்ளே சென்று பார்த்த ராமானுஜர், உணவு மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டார்.

மற்றொரு சமயம் பெரிய நம்பிகளிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்ட ராமானுஜர் அவரையும் அவரது மனைவி விஜயாம்பாளையும் தம் இல்லத்திற்கு அழைத்து வந்தார்.

அவர்களை வீட்டில் இருக்கச் செய்து மேல்மாடியில் பெரிய நம்பிகளிடம் உபதேசம் பெற்று வந்தார். ஒருநாள் ராமானுஜர் ஸ்ரீ பெரும்புதூர் சென்றிருந்தார்.

அப்போது தஞ்சம்மாளுக்கும் விஜயம்பாளுக்கும் கிணற்றங்கரையில் தண்ணீர் எடுக்கச் சென்றிருந்த போது மனஸ்தாபம் ஏற்பட்டது.

விஜயம்பாள் எடுத்த குடத்து நீர்த்துளிகள் தஞ்சம்மாளின் குடத்து நீரில் சிந்திவிட்டன. மிகுந்த ஆசாரம் பார்க்கும் தஞ்சம்மாள், விஜயாம்பாள் பிராமணளாக இருப்பினும் தன்  தாழ்ந்தவள்; செல்வத்திலும் தனக்குச் சமமாக இல்லை என்று கருதி, ‘ஏம்மா! குரு பத்தினி என்ற நினைப்போ?’ என்று கேட்டுவிட்டாள்.

பெரிய நம்பிகளும் விஜயம்பாளும் ராமானுஜர் வருவதற்கு முன் கிளம்பிவிட்டனர்.
ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து வந்த ராமானுஜர் செய்தி அறிந்து மிகவும் விசனப்பட்டார். சாதி வேறுபாடுகளை பார்க்கக் கூடாது என்ற தம் கொள்கைகளுக்கு தன் மனைவியே எதிரி என்று புரிந்து கொண்ட ராமானுஜர்,

‘சற்றே ஏறுமாறாக நடப்பாளேயாகில் கூறாமல் சந்நியாசம் கொள்’

 என்பதற்கேற்ப துறவறம் மேற்கொண்டார். ஓடும் உதிரத்தில் உருண்டு விழும் கண்ணீரில் சாதி தெரிவதுண்டோ? என்ற உண்மை தஞ்சம்மாளை போன்று பலருக்குப் புரியாமல் இன்றளவும் இருப்பது புரியாத புதிரேயாகும்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏


ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 19

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 19

பெரிய நம்பிகள் இளையாழ்வான் சந்திப்பு

வாழியெதிராசன் வாழியெதிராசன்

திருக்கச்சி நம்பிகள் மூலம் பெரிய நம்பிகளையே குருவாக ஏற்றுக்கொள்ளும்படி பேரருளாளன் இட்ட கட்டளையை மேற்கொண்டு, பெரிய நம்பிகளை சந்திக்கப் புறப்பட்டார் இளையாழ்வான்.

இந்த சமயத்தில் திருவரங்கத்திலுள்ள ஸ்ரீ  வைஷ்ணவர்கள் ஆளவந்தாரின் விசேஷ கடாக்ஷம் பெற்ற இளையாழ்வாரை அழைத்துக் கொண்டு வரவேண்டுமென்று பெரிய நம்பிகளிடம் விண்ணப்பித்தனர். பெரிய நம்பிகளும் அதனை ஏற்றுக் கொண்டு தன் மனைவியுடன் இளையாழ்வானைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றார்.

பெரிய நம்பியும் அவரது மனைவியும் மதுராந்தகம் (காஞ்சிபுரம் மாவட்டம்) சென்றடைந்தனர். அங்கு எழுந்தருளியுள்ள ஏரிகாத்த பெருமாளின் சந்நிதியில், அவர்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். இளையாழ்வானும் அப்பொழுது மதுராந்தகம் ஏரிகாத்த பெருமாளின் கோவிலுக்கு வந்தடைந்தார், பெரிய நம்பிகளைச் சந்தித்தார். இந்த எதிர்பாராத சந்திப்பினால் பெரிய நம்பிகளும் இளையாழ்வானும் மகிழ்ந்தனர். பெரிய நம்பிகளைச் சந்தித்தது பேரருளாளன் கருணையே என்று மகிழ்ந்த இளையாழ்வான் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

பெரிய நம்பிகளும் இளையாழ்வானை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார். பெரிய நம்பிகள்,  "காஞ்சி பேரருளாளன் சந்நிதி முன்பு 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்து கொள்ளலாம்" என்றார். இளையாழ்வானோ "எனக்கு இவ்ளோ நாள் தவம் செய்து இப்போது தான் குருவாக தாம் கிடைத்திருக்கிறீர். காஞ்சிபுரம் செல்லலாம் என்றால், அதற்குள் என்ன நடக்கும் என்று தெரியாது. அதனால் இந்த மதுராந்தகத்திலேயே பஞ்ச சம்ஸ்காரம் செய்துவிடலாமே" என்று வேண்ட, பெரியநம்பிகளும் ஏரிகாத்த ராமர் கோவிலிலுள்ள மகிழ மரத்தடிக்கு அழைத்துச் சென்று 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்தார்.

🌺🌺 பஞ்ச சம்ஸ்காரம்

பஞ்சசம்ஸ்காரம் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்திலுள்ள முக்கிய சம்பிரதாயம் ஆகும்.

🍁 சங்கு - சக்கரம்

தீயிலிட்டு நன்கு பழுக்க காய்ச்சிய சங்கினை இடது தோளிலும், சக்கரத்தினை வலது தோளிலும் இடுவார்கள். பெரிய நம்பிகள் இளையாழ்வானின் வலது, இடது தோளில் சக்கரம், சங்கினை இட்டார்.

🌻 திருமண் காப்பிடல்

சீடரின் நெற்றி, கழுத்து, மார்பு, முதுகு, தோள்பட்டை, வயிறு ஆகிய இடங்களில் 12 திருமண் காப்புகளை, விஷ்ணுவின் 12 சிறப்புப் பெயர்களைக்கூறி ஆச்சாரியர் காப்பிடுவார். பெரிய நம்பிகள் இளையாழ்வானுக்கு திருமண் காப்பிட்டார்.

🌹 தாஸ்யநாமம் சூட்டுதல்

ஆண் பக்தர்களுக்கு இராமானுஜ தாஸன் என்றும், பெண் அன்பர்களுக்கு இராமானுஜ தாசி என்று பெயரிடுவார்கள். விஷ்ணு பக்தரின் பிறப்புப்பெயர் வாசுதேவன் இருப்பின் வாசுதேவ இராமானுஜ தாசன் என்று பெயரிடுவார்கள். இராமானுஜர் தங்கள் தொடர்புடையவர் என்பதைக் குறிக்க இராமானுஜ தாஸ்யப் பெயர் புதிதாக ஆச்சாரியாரால் சூட்டப்படுகிறது.

ஆனால், இளையாழ்வானான இராமானுஜர் அவதரித்து வைஷ்ணவ ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் வரை "தாஸன்" "தாசி" என்ற திருநாமத்தை இட்டுக் கொள்வார்கள். "இளையாழ்வான் தாஸன்" என்ற திருநாமத்தை பெரிய நம்பிகள் இளையாழ்வானுக்கு இட்டார்.

🌺 மந்திரதீட்சை அளித்தல்

மூன்று தெய்வீக புனித இரகசியத் திரய மந்திரங்கள் (இரகசியத் திரயம்) எனும் எட்டெழுத்து மந்திரம், துய மந்திரம் மற்றும் சரம ஸ்லோகம் ஆகிய மந்திரத்தை தீட்சை பெறும் சீடரின் காதுகளில் மட்டும் கேட்கும்படி ஆச்சாரியார் மந்திர தீட்சை அளிப்பார்.

இளையாழ்வானின் காதில் துய மந்திரம், சரம ஸ்லோகம் மந்திரங்களை பெரிய நம்பிகள் கூறினார். எட்டெழுத்து மந்திரம் இளையாழ்வான்  திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் கற்றார். அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்.

🍁 யக்ஹம்

திருமாலை வழிபடும் முறைகள், உணவு நியமம் மற்றும் பிற வைஷ்ணவ அடியார்களுடன் நடந்து கொள்ளும் முறைகளை ஆச்சாரியன் சீடருக்கு விளக்குவார். இவற்றையெல்லாம் இளையாழ்வானுக்கு பெரியநம்பிகள் எடுத்துக் கூறினார்.

ஆளவந்தாரின் கருணை தம்மூலம் இளையாழ்வானுக்கு பிரகாசித்து அருளுகிறது என்று கூறி, சர்வமந்திரம், த்வய மந்திரம் அனைத்தையும் உபதேசித்தார் பெரிய நம்பிகள்.

மந்திர ரத்தினத்தின் ரகஸ்யத்தைக் கேட்டு உய்ந்த இளையாழ்வான், குருவையும், அவர் பத்தினியையும் காஞ்சிபுரத்திற்கு அழைத்தார்.


ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
       திருப்பாணாழ்வார் அருளிச்செய்த
             அமலனாதி பிரான்
             🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
               பெரிய நம்பிகள்
         அருளிச்செய்த தனியன்

ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயானம் மத்யேகவேர துஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிஸ்சிகாய மநவை முநிவாஹனம் தம்

விளக்கவுரை :
எந்த ஒரு திருப்பாணாழ்வார் திருக்காவேரியின் மத்தியில் திருப்பள்ளி கொண்டிருக்கின்ற
அழகிய மணவாளப் பெருமாளை,
திருவடி தொடங்கி திருமுடி வரைக்கும்
கண்குளிர அனுபவித்த மகிழ்ந்த சிந்தையராய், தமது கண்கள் அப்பெருமாளை தவிர வேறு ஒன்றையும் பார்க்காது என்று திடமாக சொன்னாரோ , அப்படிப்பட்டவரும்,
லோகசாரங்க முனிவரை வாஹனமாக உடையவருமான திருப்பாணாழ்வாரை
சிந்திக்க கடவேன்.

             திருமலைநம்பிகள்
         அருளிச்செய்த தனியன்

காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி*
தேட்டரும் உதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்*
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து*
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே.

விளக்கவுரை :
லோகசாரங்க முனிவரின் தோளில் ஏறி, தனியே திருவரங்கனின் சந்நிதியிலே புகுந்து, அம்முனிவர் திருவரங்கனை காண்பிக்கவே,
தான் கண்ட திருவரங்கனின்
திருவடித் தாமரைகள்,
நல்ல பீதாம்பரம்,
திரு உந்திக்கமலம்,  கிடைத்தற்கு அரிய பொன் அரைநாண், பிராட்டி வாழ்கின்ற மார்பு,  திருக்கழுத்து, சிவந்த திருவாய், சோர்வில்லாத திருக்கண்கள் இவற்றை பாசுரங்களாக பாடி மகிழும் திருப்பாணாழ்வாருடைய திருவடிகளை துதிக்கப் பெற்றோமே.
         மலர்க்கண்ணில் வேறொன்றும்
              வையாதான் வாழியே!

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏