வியாழன், 10 செப்டம்பர், 2020

வேதம்


ஒரு சுவாரஸ்யமான ஆனால் ஆராய்ச்சிக்கான விஷயம்....

வேதத்தில் ருத்ரம் எனும் பகுதி மிக ப்ரபலம் மற்றும் மிக உயர்ந்த அர்த்தங்களை கொண்டது..
இதின் இறுதியில் சமகம் என்பதாகும்.
11 ப்ரஸ்னங்களை கொண்டது.
11 வது ப்ரஸ்னம்..

ஏகா' ச மே
திஸ்ரஷ்ச' மே
பஞ்ச' ச மே
ஸப்த ச' மே
நவ' ச ம ஏகாதச ச மே
த்ரயோதச ச மே
பஞ்சதச ச மே
இப்படியாக ஆரம்பித்து.. 1,3,5,7,9,11,13,15... 33 வரை சென்று முடியும் அதற்கு மேலெழுந்த வாரியாக பல பொருள் இருந்தாலும்.. யோசித்து பார்க்கையில்..  மனித உடற்கூறு செல்லின் மைடொ காண்ட்றியா எனப்படுவது மிக முக்கிய பகுதியாகும். செல் பயாலஜி அறிந்தோர்க்கு இதன் முக்கியத்துவம் புரியும். மனித
 டி என் ஏ வில் இந்த மைடோ காண்ட்ரியா என்பது மிகச்சரியாக 16500 அடிப்படை ஜோடிகளைக் கொண்டது (33 thaousadan bases pair). ஆக அத்தனையும் கூட்டினால் சரியாக 33000
சமகம் 33அடிப்படையாக  எண்ணை நிறுத்துகிறது. இதில் இந்த 33 க்கும் 33 ஆயிரத்துக்கும் என்ன தொடர்பு என யோசித்தால்..
ருத்ரமானது பொதுவாக #ஏகாதச_சத_ருத்ரம் என கூறுவதுண்டு.
அதாவது 11 பேர் சேர்ந்து நூறு முறை கூறுவார்கள்.... 33 × 100 ×11   = 36300  தடவை வந்து விடும்..
((சற்றேறக்குறைய 33 ஆயிரத்தை தாண்டி 300 வரை  கணக்கு வரும்...காரணம்.எங்கேயாவது தவறுதலாக விட்டு போயிருந்தாலும் 33000 க்கு குறையக்கூடாது என்பதற்காக இருக்கும்))

இது அதற்கு அடுத்தது மேம்பட்ட கணக்கு முறை.. அதாவது ஒன்றை  இன்னும்( fine tune) துல்லியமாக செய்வது..

த்வேச மெ
சதுஸ்சமே.
ஷஷ்ட ச.மே
.அஷ்ட சமே
.தச ச மே.
த்வாதச ச மே.    ..என்று
 2,4, 6 81ல் 10 12 15 16...என 48ல்  இரட்டை என .இலக்கை  நிறுத்துகிறது...

மனித  டி என் ஏ வில் நியூக்ளியர் அடிப்படை எண்ணிக்கை.அடிப்படையாக base..  #48மில்லியன்..
(அதிக பட்சம் 250 மில்லியன் வரை)..

சஹஸ்ர ருத்ரம் என்பது 1000 பேர் சேர்ந்து 1000 முறை சொல்வது..
சரியாக 48 மில்லியன் வரும்.

வேதம் வேண்டுதல்களை டி எம்.ஏ வரை வைக்கிறது..அதில்தான் தலைமுறைகள் தொடர்பு உள்ளது. நம்ம டிசைன்.. சங்கிலித்தொடர் போன்று  அமைக்கப்பட்டு அடுத்த தலைமுறை க்கு எடுத்துச் செல்லப்படுவது இவற்றால்தான்.. ஆக சமகம் நமக்கு செல் பயாலஜியை கூறவறுகிறது..
சுவாரஸ்யமான விஷயமாக உள்ளதல்லவா.!

7:ஸ்ரீ அனந்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் (கி.மு.124-55)

நமது ஏழாவது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

ஏழாவது ஆச்சார்யர் ஸ்ரீ


அனந்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                                           (கி.மு.124-55)

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

ஸ்ரீ அனந்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் சேர நாட்டில் வாழ்ந்த சூரிய நாராயணமஹி என்பவரின் தவப் புதல்வர். பெற்றோர் இவருக்கு இட்ட நாமம் சின்னையா சக்தி உபாசகர். அஷ்டமி, பௌர்ணமி வெள்ளிக்கிழமைகளில் கௌரி தேவிக்கு விசேஷ பூஜை செய்வார். அம்பிகையின் அருளால் அளவிட முடியாத படி இலக்கிய ஆற்றல் பெருகியது. ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ சங்கர பாஷ்யங்களுக்கும், ஸ்ரீ சுரேஸ்வரர் அருளிய வார்த்திகங்களுக்கும் எளிய நடையில் குறிப்புரை எழுதினார். அதற்கு "ஆனந்த கிரி டீகா" என்று பெயர். இவர் வட நாடெங்கும் விஜயயாத்திரை புரிந்து திரும்பும் போது நடுவழியில் ஆந்திராவிலுள்ள ஸ்ரீ சைலத்தில் கி.மு.55 ஆம் ஆண்டு, குரோதனவருஷம், வைகாசிமாதம், கிருஷ்ணபக்ஷம், நவமியன்று சித்தியடைந்தார்.

6:ஸ்ரீ சுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் {கி.மு.205 -124}

நமது ஆறாவது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

                   6:ஸ்ரீ சுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                                            {கி.மு.205 -124}



காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

ஸ்ரீ சுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தஞ்சை மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் மருத்துவராகப் பணியாற்றிய பார்வு பண்டிதர் என்பவரின் திருமகனாவார். இவரும் திராவிட அந்தணர். தந்தை இவருக்கு வைத்த நாமதேயம் விஸ்வநாதர். ஹிந்து மதம் வளர பெரும் பாடு பட்டவர். ஸ்ரீசந்திர மௌலீஸ்வர பூஜையை பெரும் ஈடுபாட்டோடு செய்து வந்த ஸ்ரீ சுத்தானந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கி.மு.124ல் நாளாம் வருடம் சித்திரை மாதம் சுக்லபக்ஷம், சஷ்டி திதியில் காஞ்சியில் சித்தியுற்றார்.

5:ஸ்ரீ ஞானானந்தேந்ர ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள் (கி.மு.268-205)

5:ஸ்ரீ ஞானானந்தேந்ர ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள்
            (கி.மு.268-205)

சோழ நாட்டிலுள்ள மங்கலம் என்ற சிற்றூரில் ஸ்ரீ ஞானானந்தேந்ர ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள் அவதரித்தார். திராவிட அந்தண குலத்தவரான நாகேசன் என்பவரின் புதல்வர். ஞானோத்தமன் என்பது இவறது இயற்பெயர். தர்க்க சாஸ்திரத்தில் நிபுணர் ஸ்ரீகாமகோடி பீடத்தின் 2வது ஆச்சார்யரான ஸ்ரீசுரேஸ்வரர் இயற்றிய 'நைஷ்கர்ம்ய சித்தி'என்ற நூலுக்கு விளக்க உரை எழுதியுள்ளார். அதன் பெயர் சந்திரிகை. அந்நூலில் இவர் ஸ்ரீசுரேஸ்வரரையும் அடுத்து வந்த குருவையும் போற்றியிருக்கிறார். இவர் மன்மத ஆண்டு, மார்கழி மாதம், சுக்லபக்ஷ பஞ்சமியில் (கி.மு.205)காஞ்சியில் சித்தியடைந்தார்.


செவ்வாய், 8 செப்டம்பர், 2020

ஒரு மன்னனின் கதை



ஒரு மன்னன் தினமும் கிருஷ்ணரை வணங்காமல் எந்த வேலையையும் தொடங்க மாட்டான். காலையில் எழுந்ததும் "ஹரி ஹரி' என்று ஏழு தடவை சொல்லுவான். அரண்மனைக்கு கிளம்பும் முன் கேசவா கேசவா என்பான். சாப்பிடும் முன் கோவிந்தா என்பான். தூங்கச்செல்லும் முன் மாதவா என்பான். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒன்று வீதம் பரந்தாமனின் பதினாறு திருநாமங்களையும் ஏழு தடவை சொல்வது அவனது வழக்கம்.

என்ன தான் கடவுள் நாமம் சொன்னாலும் முன் வினைப் பாவங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டால் அதை யாரானாலும்
அனுபவித்து தான் தீர வேண்டும். பாவத்திற்குரிய தண்டனையை கடவுள் தந்தே தீருவான். மன்னனுக்கும் அந்த நேரம் வந்தது. அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு படுத்த படுக்கையாக கிடந்தான். அந்நிலையிலும் அவனுக்கு கிருஷ்ணரின் பெயர் மட்டும் மறக்கவில்லை.

கிருஷ்ணா கிருஷ்ணா... என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள் என புலம்பிக் கொண்டிருந்தான். ஒருநாள் ஒரு முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவரிடம் ஸ்வாமி நோயின் கொடுமையை சகிக்க முடியவில்லை. என் வாழ்வை முடிக்க விரும்புகிறேன். உயிர் பிரிய மறுக்கிறதே என அழுதான். முனிவர் அவனைத் தேற்றி மன்னா! நீ அன்னதானம் செய்தாயா? என்றார். ஆமாம் சுவாமி! இப்போது கூட தினமும் என் நாட்டு சத்திரங்களில் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு படைக்கிறேன் என்றான். இனிமேல் அப்படி செய்யாதே! அரை வயிற்றுக்கு உணவிடு. உன் உயிர் பிரிந்து விடும் என்றார். ஏன் இப்படி சொல்கிறீர்கள் ஸ்வாமி! இது மேலும் எனக்கு பாவத்தை சேர்த்து நோய் தீவிரமாகுமே! என்று கேட்டான் மன்னன்.

மன்னா! அரைகுறை உணவிட்டால் சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர். சாபத்தின் கடுமையால் இறந்து போவாய் என்றார் முனிவர். அவர் சொன்ன படி பிடிக்காவிட்டாலும் பெரியவர் சொல்கிறாரே என ஏற்றுக் கொண்ட மன்னன் அரை சாப்பாடு போட உத்தரவு போட்டான். சாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும் மன்னனின் உயிர் பிரியவில்லை. இதென்ன ஆச்சரியம் என வியாதியின் கொடுமையையும், சாபத்தையும் சேர்த்து அனுபவித்த சூழ்நிலையில் முனிவர் மீண்டும் வந்தார். ஸ்வாமி! நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே என்றான் மன்னன். மன்னா! வரும் வழியில் தான் கவனித்தேன். உன் ஏவலர்கள் தானமிடும் போது அச்சுதா அச்சுதா' என கிருஷ்ணரின் இன்னொரு பெயரைச் சொல்லி அன்னம் இடுகின்றனர். அச்சுதன்' என்று பெயர் சொன்னால் உயிர் பிரியாது. பரந்தாமன் அவர்களைக் கை விடுவதில்லை. இனி நீ இறைவன் பெயரைச் சொல்வதையும் நிறுத்து என்றார். ஆனால் மன்னன் மறுத்து விட்டான்..என் கிருஷ்ணரின் பெயரைச் சொல்வதால், எனக்கு இன்னும் அவஸ்தை அதிகரிக்குமானாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்து விட்டு போகட்டும். அவர் பெயர் சொல்வதை மட்டும் நிறுத்தவே மாட்டேன் என சொல்லி விட்டான் மன்னன்.

அவனது மன உறுதி கண்ட கிருஷ்ணர் அவனுக்கு காட்சியளித்து
சுகமடையச் செய்தார். பார்த்தீர்களா! கிருஷ்ண நாமத்துக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது என்பதை! இனி உங்கள் குழந்தைகளுக்கும் கிருஷ்ணா, கண்ணா, அச்சுதா என்று பெயர் வைத்து அழையுங்கள். புண்ணியத்தை தேடிக் கொள்ளுங்கள்...!!

நான்காவது ஆச்சார்யர் ஸ்ரீ சத்ய போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்! கி.மு.364 - 268


4 : ஸ்ரீ சத்ய போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்!

கி.மு.364 - 268
காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடம் குரு ரத்தினமான ஸ்ரீ சத்ய போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கேரளத்தில் அமராவதி நதிக்கரையில் வாழ்தவர். இவர் தந்தையின் பெயர் தண்டவசர்மன். வேதமோதும் அந்தண மரபினர். பெற்றோர் இவருக்கிட்ட பெயர் 'பலிந்யாசர்'. ஸ்ரீ சங்கர பாஷ்யங்களுக்கு வார்த்திகங்கள் இயற்றிய இவர் பதகசதகம் என்னும் நூலையும் அருளியிருக்கிறார். கால வெள்ளத்தில் இவற்றைப் பாதுகாக்க முடியாமல் போய் விட்டது.

இவர் கி.மு.268 ல் நந்தன ஆண்டு வைகாசி மாதம் க்ருஷ்ண பக்ஷம் அஷ்டமியன்று காஞ்சியில் சித்தியடைந்தார்.

திங்கள், 7 செப்டம்பர், 2020

மூன்றாவது ஆச்சார்யர் ஸ்ரீ சர்வஞ்ஞாத் மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் (கி.மு. 407 முதல் 364 வரை)

ஸ்ரீ சர்வஞ்ஞாத் மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

(கி.மு. 407 முதல் 364 வரை)

ஸ்ரீ சர்வஞ்ஞாத் மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் தந்தை பெயர் வர்த்தனர். தந்தை இவருக்கிட்ட நாமம் மஹாதேவர். ஸ்ரீ ஆதிசங்கரர் சர்வக்ஞ பீடமேறியபின் நெல்லை மாவட்டத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான வேத விற்பன்னர்கள் வாதிட வந்தனர். வாதிட்ட சில நாழிகைகளிலேயே அவர்கள் ஒவ்வொருவராய் தோற்க, மூன்று நாள் தொடர்ந்து தளராமல் வாதிட்டார் ஏழு வயதே ஆன மஹாதேவர். நான்காம் நாள் பகவத்பாதரின் கருத்தை ஏற்றுச் சரணடைந்தார். இளம் வயது மஹாதேவரின் விசாலமான ஞானத்தைக் கண்டு அவரை சிஷ்யராக ஏற்று தமது வாரிசாக்கத்திருவுளம் கொண்டார் குரு சங்கரர். அப்பாலகனின் பெற்றோரை வரவழைத்து தமது விருப்பத்தை தெரிவித்தார். அவர்கள் மகிழ்வுடன் சம்மதித்தனர். குருநாதரே மஹாதேவனுக்கு சந்யாச தீக்ஷை அளித்து சர்வக்ஞாத்மர் என்ற தீக்ஷா நாமத்தை சூட்டினார். இப் பால சந்யாசி சுரேஸ்வராச்சாரியரின் பொருப்பில் விடப்பட்டு சகல சாஸ்திர பண்டிதரானார். 'இந்திர ஸரஸ்வதி' என்ற பட்டம் இவரிலிருந்து தான் தொடங்கியது. தேவேச்வரர் என்றே இவர் சுரேஸ்வரரைக் குறிப்பிடப்படுவார். இவர் ஸ்ரீ சங்கர சூத்ரபாஷ்யத்திற்கு அழகு மிளிரும் நடையில் 1267 பாசுரங்கள் கொண்ட விரிவான விளக்க உரை எழுதி உள்ளார். இந்த விளக்க உரை'சம்க்ஷேபசாரீரகா' எனப்படுகிறது. அத்துடன் கவிதை நடையில் 'சர்வக்ஞவிலாச' எனும் நூலையும் இவர் இயற்றி உள்ளார். அப்போதைய துவாரகா மடத்தின் ஆசார்யரான பிரம்ம ஸ்வரூபருக்கு குருவாக இவர் இருந்தார். இவர் காலத்துச் சோழ மன்னன் மனுகுலாதித்த சோழன் இம்மன்னனைப் பற்றித் தன் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் காஞ்சியில் கி.மு.364ல் நள ஆண்டு வைகாசி மாதம் கிருஷ்ண பஞ்சமியில் சித்தியடைந்தார்.


இரண்டாவது ஆச்சார்யர் ஸ்ரீ சுரேஸ்வரர்( கி.மு.491முதல் 407

நமது ஆச்சார்யர்களை பற்றி  தெரிந்துகொள்வோம்

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்யர் மற்றும் ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர். அவர்களின் முதலாமானவர் ஆதிசங்கரர் ஆவார். இவரை அனேகமாக அனைவருக்கும் தெரிந்தவர். மற்ற ஆச்சார்யர்களை பற்றி இனி வரும் நாட்களிள் நாம் தெரிந்துகொள்வோம். ஆதிசங்கருக்கு அடுத்தபடியாக பீடத்தை அளங்கரித்தவர் ஸ்ரீ சுரேஸ்வரர் ஆவார்.

2: ஸ்ரீ சுரேஸ்வரர்( கி.மு.491முதல் 407)

ஸ்ரீ சுரேஸ்வரருடைய பூர்விக நாமம் மண்டனமிச்சர். இவர் நர்மதா நதிக்கரையில் மாகிஷ்மதி என்ற சிற்றூரில் வசித்து வந்தார். இவரை பிரம்மாவின் அம்சம் என்பர். இவருடைய மனைவி ஸரசவாணி ஸரஸ்வதி அம்சம். இவளும் தன் கணவரைப் போலவே வேத வேதாங்களில் புலமை மிக்கவள். மிச்ரரின் ஞானத்தை அறிந்த ஆதிசங்கரர் தனக்குப் பிறகு அவரே பீடத்தை அலங்கரிக்கக் கூடியவர் என தீர்மானித்து இல்லறத்தில் இருக்கும் அவரை துறவு வாழ்க்கைக்குத் திருப்ப அவர் இல்லம் தேடி வந்தார். அந்த காலங்களில் ஒருவர் ஒருவரை தன்பால் ஈர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் வாதத்துக்கு அழைப்பது வழக்கம். அவ்விதமே மிச்ரரை வாதத்திற்கு அழைத்தார் ஆதிசங்கரர். தோற்றவர் வென்றவர் மார்க்கத்தை பின்பற்ற வேண்டுமென்பது நிபந்தனை. இரண்டு மலர்களைக் கொண்டு வந்து இருவர் கழுத்திலும் சூட்டி எவர் மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர் என்று கூறி அவர்களுக்கு நடுவராக இருந்தாள் மிச்ரரின் மனைவி. இருவரும் சளைக்காமல் பலநாள் வாதப்போர் நடத்தினர். மிச்ரர் கழுத்தில் இருந்த மாலை வாடத் தொடங்கியது. கணவனில் பாதி மணைவி. தன்னையும் வாதில் வென்றாலே பூரண வெற்றி என்று ஸரசவாணி தர்க்கம் செய்தாள். அவளையும் தர்க்க சாஸ்திர நெறிப்படி வென்றார் ஆதிசங்கரர். நிபந்தனைப்படி மிச்ரர் சந்நியாச ஆச்ரமத்தை ஏற்றார். ஸ்ரீசுரேஸ்வரர் என்ற தீட்சா நாமத்தை அவருக்கு அளித்தார் சங்கரர். ஆதிசங்கரர் சித்தியடைந்த பின் ஸ்ரீ சுரேஸ்வரர் அனைத்து பீடங்களுக்கும் மேலாளராயிருந்து நிர்வகித்தார். இவர் பல அத்வைத்த நூல்களை எழுதினார். காஞ்சியில் ஒரு பெரும் அக்ரஹாரத்தை அமைத்தார். ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயத்துக்கருகிலுள்ள இந்த அக்ரஹாரம் மண்டனமிச்ரர் அக்ரஹாரம் என வழங்கப்படுகிறது. சுரேஸ்வரர் கி.மு.407ல் சுக்லபட்ச துவாதசியன்று சித்தியடைந்தார். இன்றும் காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடத்தில் சரேஸ்வருக்கு தனி சன்னதியும் திருவுருவமும் உள்ளது. இவருக்கு அடுத்து வந்த ஆச்சார்யர்கள் அனைவருக்கும் அவர்களுடைய நாமத்தில் சரஸ்வதி பட்டம் சூட்டப்பட்டது.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர


சனி, 5 செப்டம்பர், 2020

யுகங்களின் கணக்கு


 யுகங்களின் கணக்கு  
 ------------------------------------

 இந்து மத சாஸ்திரங்களில் காலத்தை மிக சிறிய அளவாகிய பரம மகா காலம் முதல் மிகப்பெரிய அளவாகிய பிரம்மாவின் ஆயுள் ஆன இரு பரார்தங்கள் வரை கணக்கிட்டுள்ளனர்.

இதற்கிடையே உள்ள காலத்தை பல்வேறு யுகங்களாகவும் , மன்வந்திரங்களாகவும் பிரித்துள்ளனர். அவற்றின் கால அளவு பற்றிய விவரங்கள் கீழே..  

 
 பரம மகா காலம் முதல் வருடம் வரை :
 
 பிரபஞ்சத்தில் சிறுதுளி அவத்தையின் காலமே ஒரு பரமாணு அல்லது ஒரு பரம மகா காலமாகும்.

மூன்று பரமாணுக்களின் காலமே ஒரு திரேசிரேணு ஆகும்.

மூன்று திரேசிரேணுகளின் காலம் ஒரு துருடி ஆகும்.

நூறு துருடிகளின் காலம் ஒரு வேதகாலம் எனப்படும்.

மூன்று வேதகாலம் கூடினால் ஒரு லவம் ஆகும்.

மூன்று லவ காலம் ஒரு நிமிஷம் .

மூன்று நிமிஷம் ஒரு ஷணம் ஆகும்.

ஐந்து ஷணம் ஒரு காஷ்ட்டை .

பதினைந்து காஷ்ட்டை ஒரு இலகு.

பதினைந்து லகுக்கள் ஒருநாழிகை .

இரண்டு நாழிகை ஒரு முகூர்த்தம்
.
ஏழு நாழிகை ஒரு ஜாமம் .

மனிதருக்கு இரவு நாலு ஜாமம் ஆகும்.

எட்டு ஜாமம் ஒரு நாள் ஆகும்.

பதினைந்து நாள் ஒரு பஷம் ஆகும்.

இரண்டு பஷம் ஒரு மாதம் ஆகும்.

இது பிதுர்களின் ஒரு நாளாகும்.

இரண்டு மாதங்கள் ஒரு ருது.

ஆறு மாதங்கள் ஒரு அயனம் ஆகும்.

தட்சிணாயனம், உத்திராயணம் என்ற இரு அயனங்கள் சேர்ந்தது ஒரு வருடம் ஆகும்.

இது தேவர்களின் ஒரு நாளாகும்.

 
 யுகங்கள், மன்வந்திரம், கல்பம், பரார்த்தம்  
 
1728000 ஆண்டுகள் கிருத யுகத்தின் காலமாகும்.

1296000 ஆண்டுகள் த்ரேதா யுகத்தின் காலமாகும்.

864000 ஆண்டுகள் துவாபர யுகத்தின் காலமாகும்.

432000 ஆண்டுகள் கலி யுகத்தின் காலமாகும்.

இந்த நான்கு யுகங்களும் சேர்த்து ஒரு
 மகா யுகம்(சதுர் யுகம்) எனப்படும்.

இது போல 71 சதுர் யுகங்கள் சேர்ந்தது
 ஒரு மன்வந்திரம் எனப்படும்.

ஒவ்வொரு மன்வந்திரத்திலும் ஒரு இந்திரன்  ஆட்சியை செய்து கொண்டிருப்பார்.

அந்த மன்வந்திரம் முடிந்ததும் அடுத்த இந்திரன் ஆட்சிக்கு வருவார்.

மன்வந்திரம் பற்றிய சிறு குறிப்பு இடையில்..

[ இந்து மத சாஸ்திரங்களில் ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்த காலம் ஒரு கல்பம் என்று கூறப்படுகிறது.
இந்த ஒரு கல்ப காலத்தில் 14 மனுக்கள்
 தங்கள் ஆட்சியை நடத்துவர் என்று கூறப்படுகிறது.
ஒரு மனு தன் ஆட்சியை நடத்தும் காலம் ஒரு
 மன்வந்திரம் ஆகும்.
ஒரு மன்வந்திர காலம் முடிந்தவுடன் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழிந்து விடும்
 என்றும் பின் புதிய மனு(மனு என்பவர் மனித குலத்தின் முதல் மனிதர் ஆவார்.)
 தோன்றி மானிட குலம் மீண்டும் உதயமாகும் என்றும் கூறப்படுகிறது.

இப்போது நடைபெறும் கல்பத்தில் 6 மன்வந்திரங்கள் ஏற்கனவே முடிந்து விட்டதாகவும் இப்போது நடைபெறும் ஏழாவது மன்வந்திரத்தில் வைவஸ்த மனு மனுவாகவும் புரந்தரன் இந்திரனாகவும் இருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

இப்போது நடைபெறும் கல்பத்தில் ஆட்சி செய்யும் மனுக்கள் மற்றும் இந்திரர்கள் பெயர்கள் பாகவத புராணத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 
 மன்வந்திரம் / மனு இந்திரர்
 
1 சுயம்பு / இந்திரன்
 
2 . ச்வாரோசிஷன் / ரோசன்
 
3 . உத்தமன்/ சத்யஜித்
 
4 . தபாசன்/ திரிசிகன்
 
5 . ரைவதன், விபு
 
6. சாசூசன்/ மந்திரதுருமன்
 
7 . வைவஸ்த மனு/ புரந்தரன்
 
8 . சாவர்ணி/ மகா பலி
 
9 . தசாசாவர்ணி/ சுரதன்
 
10 . பிரம்மா சாவர்ணி / சம்பு
 
11 . தர்மசாவர்ணி / வைதிருதி
 
12 . ருத்ர சாவர்ணி / ருது சாமவே
 
13 . தேவ சாவர்ணி / திவஸ்பதி
 
14 . இந்திரசாவர்ணி / சுகி ]

இவ்வாறு 14 மன்வந்திரங்களும் அதன் சந்திகளும் சேர்ந்தது ஒரு கல்பம் ஆகும்.

ஒரு கல்பம் ஆயிரம் சதுர் யுகங்கள் கால அளவை கொண்டிருக்கும்.

இந்த ஒரு கல்பம் பிரம்மாவின் ஒரு பகல் ஆகும். அதே கால அளவு அவரின் இரவாகும்.

இது போல 720 கல்பங்கள் அவரின் ஒரு ஆண்டாகும்.

பிரம்மாவின் 50 ஆண்டுகள் ஒரு பரார்த்தம் ஆகும்.

பிரம்மாவின் வயது நூறு ஆண்டுகள் ஆகும்

இந்த நூறு ஆண்டுகள் முடிந்ததும் மகா பிரளயம் ஏற்பட்டு பிரம்மா முதல் அனைத்து தேவர்கள், உயிரினங்களும் பரமாத்மாவில் கலந்து விடுவர்.

இதே கால அளவு பரமாத்மா சயனத்தில் இருப்பார். பின் புதிய பிரம்மாவை தோற்றுவித்து படைப்புகளை தொடர்வார்.
 
 ஒரு சதுர் யுகம் 4320000 வருடங்கள்
71 சதுர் யுகம் 306720000 வருடங்கள்
 
 சந்தி 1728000 வருடங்கள்
 சந்தியுடன் ஒரு மன்வந்திரம் 308448000 வருடங்கள்
 
 ஒரு கல்பம் 4320000000 வருடங்கள்
 
 பிரம்மாவின் ஒரு வருடம் 3110400000000 வருடங்கள்
 பிரம்மாவின் ஆயுள் 311040000000000 வருடங்கள்

என்ன தலை சுற்றுகிறதா..?

இணையத்தில் படித்தது..

நீங்களும் அறிந்திருக்க இங்கே பதிகிறேன்..

புதன், 2 செப்டம்பர், 2020

நாடாவாவி கிணறு

 நடவாவி கிணற்றின் அற்புதங்களும்.... அதிசயங்களும்...


.

காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் கிராம்ம்....சஞ்சீவிராயர் கோயிலுக்கு சொந்தமானது......

நடவாவி கிணறு என்பது அத்தி வரதர்,,,,நீருக்குள் தியானிக்கும் இடம் போன்றது......

கிருஷ்ண  தேவராயர்
 ஆட்சி காலத்தில் ,,,,லஷ்மி குமார தாதாச்சாரியார் அவரது முயற்சியால்  1584  இல் அமைக்கப்பட்டது....

இந்த கிணற்றுக்கும்,,,பாலாற்றுக்கும் இடையே சுரங்க பாதை உள்ளது...

பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அற்புத கிணறு வடிவிலான கோயில்....

ஜோதிட ரீதியில்,,வான் மண்டலங்களை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது....
இதன் சிறப்பினை,,,இன்னும் சொல்ல வேண்டுமே யானால்......ஒவ்வொரு தமிழ் ஆண்டு பிறந்த்தும்,,,சித்திரை பௌர்ணமி தினத்தன்று காஞ்சி வரதர்,,,ஸ்ரீதேவி,,பூதேவி உடன் இந்த நடவாவி கிணற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறும்....

இதற்கு பிறகு தான்,,காஞ்சியில் உள்ள ஆலயத்தில்,,, பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது...

என்றுமே வற்றாத கிணறு.....
முதல் 27 படிகள்......நட்சத்திரத்தை குறிக்கும்...

இரண்டாவது 9 படிகள்.....நவகிரகங்களை குறிக்கும்...

மண்டபத்தின் 12 தூண்கள்..... 12 ராசிகளை குறிக்கும்....

தூண்களில் உள்ள சுவாமிகள்,,எப்போதும் நீருக்கடியில் தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றனர்...

காஞ்சி வரதர்,,,,சித்ரா பௌர்ணமி தினத்தன்று வருகை புரிந்து காட்சி அளிக்கிறார்..... இதற்கு நடவாவி திருவிழா என்று பெயர்.....

அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இந்த அற்புத கிணறு ,,,,இன்றும் பயன்பாட்டில் உள்ளது....

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

பத்மநாப ஸ்வாமி வந்த கதை!


அனந்த விரதம் ஸ்பெஷல்

பத்மநாப ஸ்வாமி வந்த கதை!
-------------------------------------------------
வில்வமங்கல சந்நியாசி ஒருவர், ஸ்ரீமந் நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை புரியும் நேரங்களில், பகவான் ஒரு சிறுவனாக வந்து அந்த சந்நியாசிக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்.
அவரைக் கட்டிப் பிடித்து விளையாடுவதும், பூஜை சாமான்களைக் கலைத்தபடியும்
கஷ்டங்களைக் கொடுத்தார்.

ஒரு நாள்... கண்ணனின் தொந்தரவுகளைத் தாங்க முடியாத சந்நியாசி கோபத்தில்,
''உண்ணீ (சின்னக் கண்ணா)... தொந்தரவு செய்யாதே'' என்று கூறி அவனைப்
பிடித்துக் கீழே தள்ளிவிட்டார். கோபமுற்ற கண்ணன் சுயரூபத்தில் அவர் முன்
தோன்றி, ''பக்திக்கும் துறவுக்கும் பொறுமை தேவை.

உன்னிடம் அது இருக்கிறதா என்று சோதிக்கவே இவ்வாறெல்லாம் நடந்து கொண்டேன். இனி, நீ என்னைக் காண
வேண்டுமானால், அனந்தன் காட்டுக்குத்தான் வர வேண்டும்'' என்று கூறி விட்டு
மறைந்தார்.

தனது தவறை உணர்ந்த சந்நி யாசி, அனந்தன் காடு எங்கே இருக்கிறது என்பது தெரியாமல், கவலையுடன் புறப்பட்டார்.

பல நாட்கள் அலைந்து திரிந்தும் அவரால் அந்தக் காட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள், வெயிலில் நடந்து வந்த தளர்ச்சியுடன் ஒரு மரத்தின்
நிழலில் அமர்ந்தார். அருகில் இருந்த குடிசை வீட்டில் தம்பதியிடையே ஏதோ
வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.

அதன் முடிவில் கணவன், ''நீ இப்படி அடிக்கடி என்னிடம் சண்டை போட்டால் உன்னை அனந்தன் காட்டில் விட்டு விடுவேன்'' என்றான் மனைவியிடம். இதைக் கேட்ட சந்நியாசி ஆவலுடன் அந்த
வீட்டுக்குச் சென்று அவர்களை சமாதானம் செய்ததுடன், அனந்தன் காட்டைப் பற்றி
விசாரித்தார்.

அந்தக் கணவனும் காட்டைக் காட்டினான்.
கற்களும் முட்புதர்களும் அதிகம் இருந்தன. எனினும், பகவானைக் காணும் ஆவலில்
இடர்களைக் கடந்து முன்னேறினார் சந்நியாசி. கடைசியில் பகவானைக் கண்டார். தனக்கு ஏற்கெனவே காட்சி தந்த உண்ணிக் கண்ணனாக பகவான் இப்போது காட்சி
தரவில்லை!

ஓர் இலுப்ப மரத்தின் அடியில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் அனந்தன் என்ற பாம்பின் மீது பரந்தாமன் பள்ளி கொண் டிருப்பதைக் கண்ட சந்நியாசி, மகிழ்வுடன் அவரை
வணங்கினார்.

தனக்குப் பசியெடுப்பதாகக் கூறிய பகவானுக்கு, காட்டில் கிடைத்த மாங்காயில்
சிறிது உப்பு சேர்த்து சமர்ப்பித்தார் சந்நியாசி. பிறகு, திருவிதாங்கூர் மன்னருக்குத் தகவல் தெரிவித்தார். மன்னர், எட்டு மடங்களில் உள்ள அந்தணர்
களை அழைத்துக் கொண்டு அனந்தன் காட்டுக்குப் புறப்பட்டார்.

ஆனால், அங்கே ஸ்வாமி இல்லை.
எனினும், அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்குக் கோயில் கட்ட ஏற்பாடு
செய்தார் திருவிதாங்கூர் மன்னர். கோயிலுக்குள், அனந்தன் பாம்பு மீது
பள்ளிகொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, 'பத்மநாப ஸ்வாமி'
எனும் திருநாமம் சூட்டப்பட்டது.

ஆரம்பத்தில் இலுப்ப மரத்தில் செய்யப்பட்ட மூல விக்கிரகம் கி.பி. 1686-ல் தீப்பிடித்தது. அதன் பின்னர், கடு சர்க்கரை யோகம் என்னும் கலவை யால் பன்னிரண்டாயிரம் சாளக்கிராமக் கற்களை இணைத்து புதிய சிலை உருவாக்கப்பட்டது.இது ஓர் அபூர்வ சிலையாகும்.

18 அடி நீளமுடையவராகக் காட்சி தரும் ஸ்ரீஅனந்த பத்ம நாப ஸ்வாமியின் திருமேனி முழுவதும் தங்கத் தகடு வேயப் பட்டிருக்கிறது. இந்தச் சிலையை திருவனந்த புரத்தில் இப்போதும் தரிசிக்கலாம்!