வெள்ளி, 21 செப்டம்பர், 2018

சிவன் அருள்பாலிக்கும் தலங்களும் அவற்றின் சிறப்பும்!

பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவபெருமானை வழிபட்டதால் சிவலிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

*நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்

*ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்த போது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

*தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன், இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

*கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் வெண்ணெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் தாய் & தந்தையருக்கு இறைவன் அசரீரியாக தன்னை வந்து தரிசனம் செய்த பின்னர் தங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று சொன்ன ஸ்தலம்.

*அமர்நாத்தில் உள்ள பனி லிங்கம் சந்திரனை போலவே 15 நாளில் வளர்ந்து பவுர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

*கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

*அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திரு விஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள் பாலிக்கிறார்.

*செம்பனார் கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

*காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்

*பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்டுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில் மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

*திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமவுலீஸ்வரர். அவர் மும்முக லிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும் தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

*ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள அனுமன் காட்டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப் பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

*பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

*தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்.

*ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1 காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வரர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

*தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நல்லூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாப்பழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

*காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குத் தெற்கே சிறிது தூரத்தில் ஜ்வரஹரேஸ்வரர் என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

*மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில் மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

விஷ்ணு சிறப்புச் செய்திகள்

*திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழுமலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரிபாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.

*திருமலையில் உள்ள பெருமாளுக்கு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

*நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் போகிற வழியில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அல்லாவுக்கு பூஜை நடக்கிறது.

*திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

*உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.

*ஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு சக்ரத்துடன் காட்சியளிக்கிறார்.

*திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது

*சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண சிங்கப்பெருமாள் கோயில் செல்ல வேண்டும் இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.

*திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.

*ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைந்த சிவன்-திருமால் கோயில் இது மட்டுதான்.

*திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவருக்கு வேதநாராயணன் என்று பெயர்.

*காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர். அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தரும் இவரது தரிசனம் 2019-ம் ஆண்டு கிடைக்கும்.

*திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.

*கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழு தலைகள் இருப்பது வித்தியாசமானது.

*திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன் கோயில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோயில்களிலும் தாயாருக்கு சன்னதி இல்லை.

*பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீ வைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

*காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிப்படுகிறார்கள்.

*கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.

*மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக்கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு சக்கரம் இல்லை.

*காஞ்சி உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.
ராகு கிரகத்தை வணங்குவதால் என்ன நன்மை?

சுவர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளும் தடைப்படுமோ என்று பயந்தனர் தேவர்கள். அசுரனிடமிருந்து சூரியனை விடுவிக்க, பரிகாரத்தில் ஈடுபட்டனர். இதில் இருள் விலகி, இளஞ்சிவப்பாகக் காட்சி தந்தான் சூரியன். கடைசியில், அவனது இயல்பான நிறமான வெண்மை பளிச்சிட்டது என்கிற தகவல் வேதத்தில் உண்டு (சுவர்பானு ராஸுர: ஸுர்யம் தமஸாவித்யத்...).
கிரகணம் பிடித்த நிலையில், கருவட்டமாகக் காட்சி தருவான் சூரியன். கிரகணம் விடத் துவங்கியதும், சிவந்த கலந்த வெண்மையில் ஒளிர்வான். முழுவதும் விட்டதும், வெண்மை நிறத்தினனாகக் காட்சி தருவான். வேதத்தில், அந்த கிரகணத்தின் நிகழ்வு உள்ளது. ராகுவைப் பற்றிய தகவல் அதர்வண வேதத்தில் உண்டு (சன்னோ கிரஹா: சாந்திரமஸா: சமாதித்ய: சராகுணா...). வேத காலத்தில் இருந்து, தினமும் 3 வேளை, ராகுவுக்கு நீரை அள்ளி வழங்கி வழிபடுவர், வேதம் ஓதுவோர். பிறகு வந்த சம்ஸ்கிருத இலக்கியங்களில், ராகுவை சுவர்பானு எனக் குறிப்பிட்டனர். ராகுவுக்கு சுவர்பானு எனும் பெயர் உண்டு என்கிறது அமரகோசம். கிரகண காலப் பெருமையை விளக்கும் வேளையில், ராகுவைக் குறிப்பிடுகிறது தர்மசாஸ்திரம் (ராஹுக்ரஸ்தேதிவாகரே). மாயையின் தரம் மற்றும் அதன் இயல்பை விளக்க வந்த மகான் ஆதிசங்கரர், தட்சிணா மூர்த்தி ஸ்தோத்திரத்தில் ராகுவைச் சுட்டிக்காட்டுகிறார்.
கிரக வரிசையில், ராகுவைக் குறிப்பிடவில்லை; கிழமைகளில் இடம் தரவில்லை. ராசிச் சக்கரத்தில் 12 வீடுகள் இருந்தும், ராகுவுக்கு வீட்டு உரிமை இல்லை; ராசிகளின் உட்பிரிவுகளிலும் ராகு இல்லை. ராகுவை சாயாகிரகம் என்கிறது ஜோதிடம். ராகு, தென்படும் ராசிக்கு உரியவன். அவனுடன் இணைந்தவன்; அவனைப் பார்ப்பவன். ஆகவே விகிதாசாரப்படி, ராகுவுக்குப் பலன் சொல்ல வேண்டும் என்கிறது ஜோதிடம். கேந்திர த்ரிகோணாதிபதிக்கு யோககாரகன் எனும் பெருமை உண்டு. அவனுடன் இணைந்த ராகு, நல்ல பலனை அளிப்பான் என்கிறது ஜாதக சந்திரிகை (யோககாரக ஸம்பந்தாத்...). தாம்பூலப் பிரஸ்னத்தில், லக்ன நிர்ணயம் செய்ய ராகு கேதுவைத் தவிர்த்து, ஏழு கிரகங்களை மட்டும் ஏற்பார்கள். ராகுவும் கேதுவும் இணையாத ஏழு கிரகங்களை வைத்து, ஸப்த க்ரஹ சித்தாந்தம் ஆரம்ப காலத்தில் இருந்தது. வராஹமிஹிரர் அந்த சிந்தாந்தத்தை ஆராதித்தவர் என்கிறது ஜைமினீய பத்யாமிருதம். கேமத்ரும யோகத்தில், ராசிக்கு 2-லும் 12-லும் ராகு இருந்தாலும், கிரகம் இல்லாததாகவே கருதப்படும்; வெற்றிடமாகவே ஏற்பர்; நிழல் கிரகம் என ஒதுக்குவர். ஒரு ராசிக்கு முன்னும் பின்னுமான ராசிகளில் (ராசிக்கு 2 மற்றும் 12-ல்) பாபக் கிரகம் இருந்தால், அதற்கு உபயபாபித்வம் என்று பெயர். இந்த இரண்டுகள் ஒன்றில் ராகு தென்பட்டால், உபயபாபித்வம் உருவாகாது. பாப கிரகம் எனும் அந்தஸ்தை இழந்துவிடுகிறான். முகூர்த்த சாஸ்திரம், லக்ன சுத்திக்கு, எட்டில் கிரகம் இருக்கக் கூடாது என்கிறது. அங்கு ராகு இருந்தால், கிரகம் இல்லாததாகக் கருதப்படும் என்கிறது முகூர்த்த சாஸ்திரம். தசா புக்தி அந்தரங்கள், கிரகணம், ராகு காலம் ஆகியவற்றில் ராகு தென்படுவான். அடுத்து வந்த சிந்தனையாளர்கள் உச்சம், நீசம், ஸ்வ ÷க்ஷத்திரம் எனக் கொண்டு, மற்ற கிரகங்களின் அந்தஸ்தை ராகுவுக்கு ஏற்படுத்தினர். எல்லாக் கிரகங்களும் வலமாக வந்தால், இவன் இடமாக வருகிறான்.
ராகுவுக்கு சர்ப்பி எனும் பெயர் உண்டு. சர்ப்பி என்றால் ஊர்ந்து செல்லுதல், பரவுதல், நகருதல் என்று அர்த்தம். பாம்பு ஊர்ந்து செல்லும். ஆகவே, பாம்பின் வடிவமென ராகுவைச் சொல்வார்கள் (உரகாகார:) சர்ப்பம் என்றும் பாம்பைச் சொல்வர். சந்திரனின் பாதம் அது என்கிறது கணிதம். ராகு, பூமியுடன் இணைந்து சந்திரனை மறைக்கிறான். சந்திரனுடன் இணைந்து, சூரியனை மறைக்கிறான். அதுவே கிரகணத்தின் நிகழ்வு என்கிறது ஜோதிடம். பிரம்மாவிடம் வரம்பெற்று, கிரகண வேளையில் சூரிய சந்திரர்களைத் துன்புறுத்துகிறான் ராகு என்கிறது புராணம். ராகுவை சனிக்கிரகம் போல் பாவித்துப் பலன் சொல்லலாம் என்கிறது ஜோதிடம் (சனிவத்ராஹு:) ஆக்னேய கிரகம் 7-ல் இருந்தால், கணவன் இழப்பை அளிக்கும். சூரியன், செவ்வாய், சனி ஆகியவை ஆக்னேயத்தில் சேரும்; ராகு இதில் சேரவில்லை. குரூரக் கிரகம் 7-ல் இருந்தால், கெடுதல் விளையும், செவ்வாயை, குரூரக் கிரகம் என்கிறது ஜோதிடம் (க்ரூரத்ருத்..) அதிலும் ராகுவுக்கு இடமில்லை. இப்படியிருக்க... ராகுவுக்கு தற்போது முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. ராகு 5-ல் இருந்தால், குழந்தை பாக்கியம் இல்லை; 7-ல் இருந்தால் கணவன் இழப்பு என்று பரிகாரங்களுக்கு காளஹஸ்தி தலத்தைச் சொல்வர். நாக தோஷத்துக்கு நாகப்பிரதிஷ்டை பரிகாரம்; ராமேஸ்வரத்தில் சேது ஸ்நானம் ஆகியவை பரிந்துரைக்கப்படும். ராகு தோஷ பரிகாரமாக, அம்பாள் வழிபாட்டை வலியுறுத்துவர். ஆக, பரிகாரத்தால் மறைகிற தோஷமாக, ராகு தோஷத்தைச் சொல்வர். 12 ராசிகளில் ராகு எங்கு இருந்தாலும் அது தோஷம் எனக் கருதி, பரிகாரத்தில் ஈடுபடுகிற நிலை வந்துவிட்டது. காலத்துக்குத் தக்கபடி, புதுப்புது பரிகாரங்களும் தற்போது வந்து விட்டன. 5 மற்றும் 7-ல் ராகு இருக்கிற ஜாதகங்கள், தீண்டத்தகாத ஜாதகங்களாக மாறிவிடுகின்றன. ஜோதிட நம்பிக்கை கொண்டவர்கள் பாடு சொல்லில் அடங்காதது.
கிரக வரிசையில் இடம்பிடித்த ராகு, நன்மையைவிட தீமையையே அதிகம் சுட்டிக்காட்டுவதாக சித்திரிப்பதால் ஏற்பட்ட பயம், மக்களின் சிந்தனையை முடக்கிவிடுகிறது. சம்பிரதாயம், நம்பிக்கை ஆகியவற்றுக்கு முதலிடம் கொடுக்கிற மனம், சாஸ்திரத்தை மறந்துவிடுகிறது; ஆசையை அடையும் வழி தெரியாமல், முட்டுச் சந்து போல் முடங்கிவிடுகிறது. ஜோதிடத்தை மனம் சரணடைந்தால், சிந்தனையானது படுத்துவிடும். ஜோதிடத் தகவல் சிந்தனைக்கு இலக்காகியிருக்க, தகவலின் தரம் ஒருவனது முன்னேற்றத்தை வரையறுக்கும். ராகுவின் தரம், ஜோதிடத்தில் அவன் பங்கு ஆகியவற்றை உள்ளது உள்ளபடி அறிய வேண்டிய கட்டாயம் உண்டு. ஜாதகத்தில் உள்ள ராகு, கெடுக்கிற ராகு அல்ல; கொடுக்கிற ராகு எனும் விளக்கமும் இருக்கிறது. காலைச் சுற்றிய பாம்பு, (திருவாதிரை காலில் இருக்கும் ராகு) கடிக்காமல் விடாது (வேதனை அளிக்காமல் இருக்காது) என்று சிலேடையான விளக்கங்களை அளித்து ராகுவின் தரத்தைச் சொல்பவர்களும் உள்ளனர். தனி வீடு இல்லாததால், எல்லா வீடுகளிலும் தனி வீட்டுக்குச் சமமாக ராகு செயல்படும் வாய்ப்பு கிடைத்து விட்டது. நல்லவனுடன் இணைந்தால், நல்ல பலனை முடக்கி விடுவான்; எவரோடும் சேராமல், எவராலும் பார்க்கப்படாமல், தனியே ஒரு வீட்டில் தென்பட்டால், வீட்டுக்கு உரியவனின் இயல்புக்கு இணங்க, தனது இயல்பையும் கலந்து மாறுபட்ட பலனை அளிப்பான். கெட்டவனுடன் சேர்ந்தால், செயலின் தன்மையைக் கொடுமையாக்குவான். சூரியனுடன் இணைந்தால், ஜாதகரின் செல்வாக்கை இழக்கச் செய்வான். செயலை மங்கச் செய்வான். பெருந்தன்மையும் பேராதரவும் அங்கீகாரம் பெறாது. உச்சன் அல்லது வேறு வகையில் பலம் பொருந்திய சூரியனுடன் இணைந்தால், எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து, தனித்தன்மையுடன் திகழ்வான். எதிரியிடம் இருந்து வெகுமதிகள் வந்தடையும்; எதிர்பார்ப்புகள் சாதகமாகும் ! சந்திரனுடன் இணைந்தால் சிந்தனை சுணங்கும்; செயல் வலுவிழக்கும். பலம் பெற்ற சந்திரனுடன் இணைந்தால், சங்கடம் நேராமல் தடுத்துவிடுவான் ராகு. செவ்வாயுடன் இணையும்போது, தேவையற்றதில் செயல்படத் தூண்டிவிட்டு, ஆயாசத்தை உண்டாக்குவான். வலுப்பெற்ற செவ்வாயுடன் இணைந்தால், எதிர்ப்பைச் சமாளித்து, எளிதில் முன்னேறலாம். புதனுடன் சேர்ந்தால், தவறான நட்பால் நொந்து போகும் நிலை ஏற்படும். வலுவுள்ள புதனுடன் இணைந்தால், பக்குவ அணுகு முறையால் காரியங்களைச் சாதிக்கச் செய்வான் !

சுக்கிரனுடன் இணைந்தால், தாம்பத்திய வாழ்வில் சங்கடம் நேரும். தவறான வழியில் செல்வம் பெருகும். பலம் பெற்ற சுக்கிரனுடன் இணைய, எதிர்பார்த்த உலகவியல் சுகங்களை அனுபவிக்கலாம். பெரிய மனிதர்களது தொடர்பால், பொருந்தாத பெருமைகளும் வந்தடையும். சனியின் சேர்க்கையால், நண்பர்கள் எதிரிகளாவர். பலம் பொருந்திய சனியுடன் இணைந்தால், தரம் தாழ்ந்த வழியில் முன்னேறும் நிலை உண்டாகும். இக்கட்டான சூழலில், அவனுக்குப் பெருமைகள் தேடி வரும். குருவுடன் இணைந்தால், சௌக்கியங்களை இழக்க நேரிடும்; எத்தனை முயன்றாலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் தோல்வியைத் தழுவ நேரும். மனச்சோர்வு அதிகரிக்க, கடமைகளை மறக்கும் நிலை உருவாகும். வலுப்பெற்ற குருவுடன் இணைந்தால், சங்கடம் தீர்ந்தாலும், சந்தோஷம் இருக்காது; காரியங்கள் காலம் கடந்து நிறைவேறும். குருவின் சேர்க்கையால், மற்ற கிரகங்களின் தோஷங்கள் முழுவதும் முடங்கிவிடும். ராகுவின் சேர்க்கையில் குரு செயலிழந்துவிடுவான். அதனை, குரு சண்டாள யோகம் என்கிறது ஜோதிடம். நல்லவனின் சேர்க்கை, கெட்டவனை நல்லவனாக்கும். ஆனால் ராகுவின் சேர்க்கை, குருவைக் கெட்டவனாக்கிவிடும் என்கிறது, அது ! அதேநேரம், யோக காரக கிரகங்களின் சேர்க்கையில், நல்லவனாக மாறுவதுடன் நிற்காமல், இணைந்த கிரகத்தின் நல்லபலன்களை இரட்டிப்பாக்கி, மகிழ்ச்சியை நிலைக்கச் செய்வான் ராகு. அசுர வேகத்தில் முன்னேற்றம் நிகழும். இதில் தடம்புரளாமல் இருக்க, ராகுவின் இடையூறு சாதகமாக மாறுவது உண்டு. இனிப்பின் அதீத தித்திப்பை, காரமானது குறைக்கும். ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்தாலும், ராகுவின் சேர்க்கையில் துன்பத்துக்கு இடமளித்து, இன்ப சேர்க்கையில் துன்பங்களின் கலப்படமே வாழ்க்கை எனும் நியதியை நிறைவுசெய்ய... ராகுவின் பங்கு சில தருணங்களில் பயன்படும்.

ராகுவை வைத்து, காலசர்ப்ப யோகம் உருவானது. அதுவே, விபரீத கால சர்ப்ப யோகம் எனும் பெயரில் விரிவாக்கம் பெற்றது. சஞ்சாரத்தில் 180 டிகிரி விலகி நிற்பதால், ராகுவுக்கும் கேதுவுக்கும் சேர்க்கை நிகழாது. சமீப காலமாக, குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும் விழாக்கோலம் கொண்டுவிட்ட நிலையில், ராகுப் பெயர்ச்சியும் அதில் இடம் பிடித்துவிட்டது. தினமும் ராகுகாலத்தைச் சந்திக்கிறோம். ராகு வழிபாடு என்பது, வேத காலத்தில் இருந்தே தொடர்கிறது. உலகம் தோன்றும் வேளையில், வானசாஸ்திரத்தில், ராகு இடம் பிடித்துவிட்டான். வராஹமிஹிரர், பிருஹத்சம்ஹிதையில் ராகுசாரத்தை விளக்கியுள்ளார். ஆகவே, போற்றுதலுக்கு உரிய கிரகங்களில் ராகுவையும் சேர்க்கலாம். ராகுவை அழைக்க, கயான: சித்ர: என்கிற மந்திரத்தை ஓதச் சொல்கிறது வேதம். ராம் ராஹவே நம: எனும் பீஜாக்ஷர மந்திரத்தைச் சொல்லலாம்; 16 உபசாரங்களை இந்த மந்திரம் சொல்லி நிறைவேற்றலாம். சதுர் பாஹும் கட்க வரசூலசர்மகரம்ததா காலாதி தைவம் ஸுர்யாஸ்யம் ஸர்பப்ரத்யதி தைவதம் என்ற ஸ்லோகம் சொல்லி, ராகுவுக்கு மலர் சொரிந்து, வணங்கலாம். வாழ்க்கைப் பயணத்தை எளிதாக்குவான் ராகு. கைகளுக்கு வலுவூட்டுபவன் ராகு என்கிறது புராணம் (ராஹோர்பாஹுபலம்...) செயல்படுவதற்குக் கைகள் தேவை. பிறர் உதவியின்றி வாழச் செய்வான் ராகு ! இன்றைய சூழலில், ராகுவின் அருள் அவசியம். ராகு பகவானை வணங்கினால், ஒளிமயமான வாழ்க்கை நிச்சயம் !
குளிகன் சேர்க்கையால் ஏற்படும் நன்மை தீமைகள்!

மந்தன் என்பவன் சனி, அவனுடைய புதல்வன் மாந்தி, சனிக் கிரகத்தில் இருந்து வெளிவந்தவன் என்று அர்த்தம். அவனுக்குக் குளிகன் என்றும் பெயர் உண்டு ! ஜாதக பலன் சொல்லும்போது, மாந்தியையும் அதாவது குளிகனையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என ஜாதகாதேசம், ஜாதக பாரிஜாதம் முதலான ஜோதிட நூல்கள் பரிந்துரைக்கின்றன.

சூரியன், சனி, செவ்வாய் ஆகியோரைப் போல், பாப கிரகங்களில் அடங்குபவன்; ஆகவே, குளிகன் இருக்கும் ராசிநாதன், அவன் சுபனாக இருந்தாலும், குளிகைச் சேர்க்கையால் பாபியாக மாறுவான் என்கிறது ஜோதிடம். உதாரணமாக, குளிகன் இருக்கும் ராசிக்கு உடையவன், ஆண் ஜாதகத்தில் 7ல் இருந்தால் மனைவியை இழப்பான் என்றும், பெண் ஜாதகத்தில் 7ல் இருந்தால் கணவனை இழப்பாள் என்றும் சொல்வர் (மாந்திராசீச்வரோவா). திருமணப் பொருத்த விஷயத்தில், கேரள அறிஞர்கள் இன்றைக்கும் குளிகனையும் சேர்த்துப் பலன் சொல்கின்றனர். அனுதினமும் குளிகன் உதிக்கும் வேளையை நாம் தவிர்ப்போம். ராகுகால அட்டவணை போல், குளிகை கால அட்டவணையையும் குறிப்பிடுகிறது பஞ்சாங்கம். நல்ல காரியங்களுக்கு ராகுவைத் தவிர்ப்பது போல், குளிகனையும் தவிர்ப்பது உண்டு. முகூர்த்த சாஸ்திரம், குளிகை காலத்தைத் தவிர்க்கச் சொல்கிறது. முற்பிறவியின் கர்மவினைப் பலனை, காலம் அதாவது வேளை நம்முடன் இணைக்கும். காலத்துடன் இணைந்த மாந்தி எனப்படும் குளிகனுக்கும் கர்மவினையை வெளிப்படுத்துவதில் பங்கு இருப்பதால், பலன் சொல்லும் விஷயத்தில் அவனையும் கவனிப்பது பொருந்தும். சனியின் புதல்வன் குரூரன், துஷ்டன்; எதையும் அழிக்கும் இயல்பு கொண்டவன்; பாம்பு வடிவில் தோன்றுபவன்; கண்ணுக்கு இடுகிற மை நிறத்தில், கருநீல நிறத்திலானவன். வட்ட முகமும், சிவந்த கண்களும், நீண்ட பற்களும் (த்ம்ஷ்ட்ரம்) கொண்டு, பயமுறுத்தும் தோற்றத்தைக் கொண்டவன் என்கிறது ஹோரா சாஸ்திரம். அவனால் ஏற்படும் இன்னல்களை அகற்ற குளிக சாந்தியைப் பரிந்துரைக்கின்றன பரிகார நூல்கள். அவனுடைய காயத்ரியைச் சொல்லி (குளிக காயத்ரி) வழிபட்டால் நன்மை என்கிறது சாந்திமயூகம்.

பிரஸ்னம் எனும் ஜோதிடப் பிரிவு, குளிகஸ்புடத்தைச் சேர்த்துப் பலன் சொல்கிறது. மரணத்தை வரையறுக்க, மரண குளிகனைக் கவனித்து முடிவு எடுப்பார்கள். த்ரிஸ்புடம் எனும் பிரிவில் குளிகஸ்புடத்துக்கும் பங்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை, சூரியோதயத்தில் இருந்து 26 நாழிகையில் தோன்றுவான் குளிகன். நான்கு நாழிகை குறைந்து, அடுத்தடுத்து வரும் கிழமைகளில் (26ல் இருந்து 22, அடுத்து 18,14,10,6,2) என சனிக்கிழமை வரை உதயமாகும் வேளையை அறிந்து, ஜாதகத்தில் இருக்கும் ராசியில் இடம் பிடித்துவிடுவான். அவன், லக்னத்தில் இருந்தால் சிந்தனை வளம் குறையும்; பாப கிரகத்துடன் இணைந்தால், ஏமாற்றுபவனாக மாறுவான்; அதிக ஆசையால் சிக்கித் தவிப்பான். இரண்டில் இருந்தால், புலன்களின் வேட்கையைத் தணிப்பதில் முனைப்புக் காட்டுவான். அங்கே, பாப கிரகத்துடன் இணைந்தால், ஏழ்மையில் தவிக்கச் செய்வான். 3ல் இருந்தால், அந்த ஜாதகதாரர் மிதப்புடன் தென்படுவார்; உடன்பிறந்தாரை இழப்பார்; பணம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவார். தேக ஆரோக்கியமின்றி இருப்பார். 4வது வீட்டில் தென்பட்டால், கல்வி, மகிழ்ச்சி, வீடு, நிலபுலன்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வான். 5ல் இருந்தால், மனதின் பலத்தை இழக்க நேரிடும்; தவறான செயல்களில் ஈடுபடுவர்; பிள்ளைச் செல்வத்தைக் குறைத்து விடுவான் குளிகன். 6ல் இருந்தால், எதிரிகளை அழிப்பான்; செப்படி வித்தை, மாயாஜாலம் ஆகியவற்றைக் கையாள்வான். 7ல் இருந்தால், சண்டைச் சச்சரவை ஏற்படுத்துவான். தரம் தாழ்ந்த மனைவியைப் பெற நேரிடும்; செய்நன்றியை மறக்கச் செய்வான். 8ல் இருந்தால், கண்கள் மற்றும் முகத்தின் அழகை இழக்க வாய்ப்பு உண்டு. 9ல் இருந்தால், தந்தை மற்றும் பெரியோரை வெறுக்க நேரிடும். 10ல் இருந்தால், சூடுசொரணை இல்லாதவராக மாற்றுவான்; தரத்துக்குச் சம்பந்தமில்லாத வேலையில் காலம் கடத்துவான். 11ல் இருந்தால், செல்வம், புகழ், வெகுமதி, வாழ்வில் உயர்வு, பெருந்தன்மை, சமூக அங்கீகாரம் ஆகியவற்றை அளிப்பான். 12ல் இருந்தால், ஆண்டியின் நிலையை ஏற்படுத்துவான்; அடுத்தவரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளுவான். குளிகன், 11ல் மட்டும் நல்லவன்; மற்ற வீடுகளில் அவன் கெடுதலையே வழங்குவான் எனச் சுருக்கமாகச் சொல்வர். 11ல் அவன் ஆகலாம்; மற்ற பதினொன்றில் அவன் ஆகா என்கிற சொல்வழக்கு உண்டு. ஆனால் ஒன்று... அவனுடன் இணைந்த கிரகங்களின் சேர்க்கையில், குளிகை பலம் மாறுபடும் என்பதை மறக்கக்கூடாது.

வலுவான கிரகங்களுடன் இணையும்போது, குளிகனின் பலன் மங்கிவிடும். ஷட்பலம், ÷ஷாடசபலம் ஆகியவற்றை ஆராயும்போது, குளிக பலனின் மாற்றத்தை அறியலாம். ஆழமான சிந்தனையின் அடிப்படையில், கிரகங்களின் தராதரத்தைச் சீர்தூக்கிப்பார்த்து, கூட்டுப்பலனை வெளியிடும் தருணத்தில், குளிக பலன் மாறுபாட்டைச் சந்திக்கும். குளிகன், சூரியனுடன் இணைந்தால், தகப்பனை வெறுப்பான்; சந்திரனுடன் இணைந்தால், தாயாருக்குத் துயரத்தைத் தருவான். செவ்வாயுடன் இணைந்தால், சகோதரனை இழப்பான்; அல்லது, வெறுப்பான். புதனுடன் இணைந்தால், மனநலம் குன்றும்; குருவுடன் இணைந்தால், நன்னடத்தை மறையும். சுக்கிரனுடன் இணைந்தால், தரம்தாழ்ந்த மனைவியுடன் வாழ்வான்; தரம் தாழ்ந்த பெண்களின் சேர்க்கையில் தனது உடல்நலனை அழித்துக் கொள்வான். சனியுடன் இணைந்தால், உலகவியல் இன்பத்தை அனுபவிப்பான். ராகுவுடன் இணைந்தால், ஈவு இரக்கம் இல்லாதவனாக மாறி, விஷம் வைத்து பிறரை அழிக்கவும் துணிவான். கேதுவுடன் இணைந்தால், நெருப்பு மூட்டிப் பொருட்களை அழிக்கவும் தயங்கமாட்டான். அவனது முடிவும் சில தருணங்களில் நெருப்பில் சேர்ந்துவிடும்.

குளிகன் இருக்குமிடத்தில் எந்த நட்சத்திரத்தின் தொடர்பு இருக்கிறதோ, அந்த நட்சத்திரத்தில் விஷக் கடிகையும் சேர்ந்திருந்தால், அரசனும் ஆண்டியாவான். குளிகோதய வேளையின் சேர்க்கை, பல கிரகங்களின் பலன்களை மாற்றி அமைக்கக் காரணமாகிறது. கண்ணில் இருக்கும் விழி சற்றே நகர்ந்திருந்தால், முகத்தின் மொத்த அழகையும் பாதிக்கும். திக்குவாய் சொல்லழகை இழக்கச் செய்யும். நீளமான கழுத்து, உடலழகை பாதிக்கும். ஏழ்மை வாட்டி வதைக்கும்போது, புத்திசாலியும் தவறு செய்வான். அதுபோல் குளிகனின் சேர்க்கை, விபரீத பலனையே தரும் என்பது ஜோதிடத்தின் கணிப்பு. குளிகனுடன் இணைந்த புதன், குளிக ராசிக்கு உடையவன் புதன் அல்லது குளிக ராசிக்கு உடையவனுடன் (மற்ற கிரகங்களுடன்) புதனின் சேர்க்கை, பார்வை ஆகியன இருப்பின், மன நலம் அற்றவர்களாக மாற்றிவிடும். அறிவு, சிந்தனை வளம் பெருக, புதனின் பங்கு உண்டு. அங்கு குளிக சேர்க்கை மன வளத்தைச் குன்றச் செய்யும். படிப்பில் ஈடுபாடு இன்மை, பாடங்கள் மனதில் பதியாதது, பதிந்தது நினைவுக்கு வராமல் தடுமாறுவது, அபஸ்மாரம், காக்காவலிப்பு, ஆராயும் திறன் இல்லாத நிலை, பிறருடன் இயைந்து பழக முடியாத குணம், எதிலும் பயம், பதற்றம், நம்பிக்கையின்மை ஆகிய அனைத்தும் குளிகன் சேர்க்கையில் விளையும் என்கிறது ஜோதிடம்.

பல விஷயங்களில் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றி காண்பவர் கூட, குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் சுணக்கத்துடன் இருப்பார்கள். உலகவியலில் கொடிகட்டிப் பறப்பவன், தாம்பத்தியத்தில் சூன்யமாக இருப்பான். மேதைத்தனம் குன்றி, எதையும் கிரகிக்கும் தகுதியை இழந்து, குழந்தை போல் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பார்கள். இவை எல்லாமே குளிகனின் செயல்கள்தான் ! மனதில் தோன்றும் எண்ணங்களையும், நிகழ்வுகளையும் வெளியே இருப்பதாக நினைத்து மனம் கலங்கும். நிலையும் அவனது சேர்க்கையில் நிகழும். இல்லாத சப்தம் காதில் விழுவதாகச் சொல்லி, அந்த ஒலி தம்மைத் துன்புறுத்துவதாக நினைத்து மனப்பிரமையில் வாடும் நிலைமையும் அவனுடைய அட்டகாசம்தான் ! ஆக, மன வளத்தைப் பல கோணங்களிலும் சிதறடிக்கும் திறன் அவனுக்கு இருப்பதால், மனதை ஆராயும் விஷயத்தில் குளிகனைப் பற்றிய தகவலும் சரியான முடிவுக்கு உதவும். ஆகவே, அவனைச் சேர்த்துப் பலன் சொல்வது பொருந்தும். இதனை பிரச்னை மார்க்கம், பிரச்னானுஷ்டான பத்ததி போன்ற நூல்கள் பரிந்துரைக்கின்றன. காலத்தின் அறிவை ஜோதிடம் புகட்டும். காலத்தில் அடங்கியுள்ள அனைத்தும் அதன் வடிவத்தில் அடங்கும். குளிகனும் அதில் அடங்கியிருப்பதால், அவனையும் கவனித்து முடிவுக்கு வருவதே உத்தமம் என்றனர் முன்னோர்கள். அவனது செயல்பாடுகளையும் விளக்கியுள்ளனர். ராகுகேதுவுக்கு மற்ற கிரகங்களின் தகுதி இல்லையாயினும், காலத்துடன் அவை இணைந்திருப்பதால் சேர்த்துப் பலன் சொன்னார்கள். அதுபோல், குளிகனையும் சேர்த்தால் தெளிவான பலன் கிடைக்கும்; ஏமாற இடமிருக்காது !

ராகு காலத்தையும் குளிகை காலத்தையும் கவனித்துப் பழக்கப்பட்ட நமக்கு, பிறந்த வேளையில் குளிகன் இருப்பதால் விளைகிற நன்மை தீமைகளை அறிந்து செயல்படுவது எளிது. நவக்கிரகங்களைப் போல், குளிகனும் வழிபடுகிற கிரகமாக இருப்பதால், அவனை வழிபடுவது சிறப்பு. கும் குளிகாயநம: எனும் பீஜாட்சர மந்திரத்தைச் சொல்லி, அவனுடைய உருவத்தை 16 உபசாரங்களுடன் வழிபடலாம். அதேபோல், மந்தாத்மஜாய வித்மஹே ரக்த நேத்ராய தீமஹி. தந்நோ குளிக: பிரசோதயாத் எனும் செய்யுளைச் சொல்லி, 16 உபசாரங்களைச் செய்து வழிபடலாம். நீலாஞ்ஜனஸங்காசோ ரக்தா÷ஷாவிஷமபீஷணோதீர்க்க: பஞ்சாஸ்யா: பிருது தம்ஷ்ட்ரோ பயங்கர: ஸர்வதாகுளிக: என்று சொல்லி வணங்கலாம். சனியின் புதல்வன் குளிகன். எனவே, எள்ளுருண்டை நைவேத்தியம் செய்து, குழந்தைகளுக்கு வழங்கலாம். அன்றாடப் பணிகளில் சிக்கித் தவிக்கும் நாம், சனிக்கிழமையில் மட்டுமேனும் சனி பகவானுடன் சேர்த்துக் குளிகனை வழிபடலாம். உற்சாகத்தில் தினமும் வழிபட நினைத்துச் செயல்பட்டால், பிறகு நடுவில் வழிபாடு நின்றுவிடலாம். ஈடுபாடும் குறையும். ஆகவே, வாரத்தில் ஒருநாள், ஒரு வேளை.. சனியை வணங்கும் வேளையில் குளிகனையும் சேர்த்து வணங்கினால், பொறுமையுடன் வழிபடலாம்; இயலாதவர்கள், நீராடிய பிறகு குளிகன் காயத்ரியை 12 முறை ஜபித்தாலே போதுமானது !
விளங்காத மர்மத்தை விளக்கும் யோக வசிஷ்டம்!

ஆன்மீக நாட்டம் உடைய ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் தோன்றும் விடை காண முடியாத கேள்விகள் ஏராளம். இந்தப் பிறவியின் மகத்துவம் என்ன, ஏன் இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமைந்தது. விதியா, முயற்சியா எது மேலோங்கும், இறப்புக்குப் பின்னர் எங்கே போகப் போகிறோம். மறு ஜென்மம் உண்டா, புண்யம் எது, பாவம் எது, எப்படி வாழ்ந்தால் ஆன்ம ஞானம் கிடைக்கும்.... இத்யாதி கேள்விகள் ஏராளம். விடைதாள் தெரியவில்லை. இந்தக் குறையை நீக்க வல்ல ஒரு அற்புதமான நூல் யோக வாசிஷ்டம். ஒவ்வொரு மர்மமான கேள்விக்கும் ஆணித்தரமாக நேரடியாக பதிலைத் தருவதில் இதற்கு நிகரான இன்னொரு நூல் இல்லை என்றே சொல்லலாம். அதனால்தானோ என்னவோ உயரிய ஞானம் உடைய அறிஞர்கள் பலரும் இதில் உள்ள கருத்துக்களைப் பிரதிபலித்துத் தங்கள் நூல்களில் கருத்துக்களை எழுதியுள்ளனர். ஜேம்ஸ் ஆலன், அன்னி பெஸன்ட், பால் ப்ரண்டன், அலெக்ஸாண்டர் கானான், சர் ஜேம்ஸ் ஜீன்ஸ், உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அறிஞர்கள் யோக வாசிஷ்ட கருத்துக்களை வார்த்தைக்கு வார்த்தை நேரடியாக அப்படியே தெரிவித்துள்ளனர்.

யோக வசிஷ்டம் எப்படி வந்தது?

ராமர் வசிஷ்டரிடம் கேள்விகள் கேட்க பிரம்ம ரிஷி வசிஷ்டர் பதில்களைத் தீர்க்கமாக அளிக்கிறார். அதுவே ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட யோக வாசிஷ்ட நூலாக அமைகிறது. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் ஸ்லோகங்கள் 32,000 தான்! இந்த உபதேசங்களைப் பெற்ற இராமர், தான் எப்போதும் பிரம்ம ஞானத்திலேயே இருக்க விரும்புவதாகக் கூறுகிறார். குரு வசிஷ்டர் இராமருக்கு அவரை உணர்த்தி, அவரின் அவதார நோக்கத்தைத் தெளிவுப்படுத்திய பிறகே தன்னை அறிந்து கொள்கிறார். ஸ்ரீராமசந்திர பிரபு.

விதி என்பது இல்லவே இல்லை என்கிறது!

தைவம் நாம ந கிஞ்சன் (விதி என்று ஒன்றும் இல்லை 2518)
தைவம் ந வித்யதே(விதி என்பது இல்லவே இல்லை 2813)
மூடை: ப்ரகல்பிதம் தைவம்(மூடர்களால் உருவாக்கப்பட்டதே விதி-2816)
என்று இப்படி அடித்துச் சொல்லும் யோக வாசிஷ்டம் மனிதனின் செயல்களே அவனுக்குப் பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதுவே விதி என்று சொல்லப்படுகிறது என்று விளக்குகிறது.

நீடித்திருக்கும் வியாதிக்கு இப்போது மருந்து சாப்பிட்டால் எப்படி அது தீருமோ அதே போல முந்தைய கருமங்களின் தீய விளைவுகளை இப்போதைய நல்ல கர்மங்களால் மாற்ற முடியும் என்று விளக்கி மனித குலத்திற்கே பெரும் ஆறுதல் செய்தியை அது தருகிறது! மனமே எல்லாம் என்று கூறி அதைச் செம்மைப்படுத்தி நல்ல எண்ணங்கள் மூலம் உயரிய நிலையை அடைய முடியும் என்பது யோக வாசிஷ்டம் தரும் அற்புத செய்தி! பிறப்பு, இறப்பு, கர்ம பலன்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களை விளக்கும் இந்த நூல் எப்படிப்பட்ட வழிகளின் மூலம் அருமையான ஆன்ம ஞானத்தை அடைந்து உலகியல் துன்பங்களிலிருந்து விடுதலை பெறலாம் என்ற ரகசியத்தையும் சுலபமாக விளக்குகிறது.

அதிசய வழிகள் நான்கு: இதற்கான அதிசய வழிகள் நான்கு உள்ளன.
சந்தோஷ சாதுசங்கஸ்ச விசாரோத்ய சமஸ்ததா
ஏத ஏவபவாப்யோத்யாவுபாயாஸ்தரணே ந்ருகாம  (21618)

சந்தோஷம்(எப்போதும் திருப்தி), நல்லோர் இணக்கம் (சாதுக்களுடன் சேர்தல்) விசாரம், அமைதி, இவையே மனிதருக்கு உலகம் என்னும் சாகரத்தைக் கடக்கும் வழிகளாகும். இதை எளிதாக நான்கு ஸ காரங்களாக ஸந்தோஷம், ஸத்சங்கம், ஸத்விசாரம், ஸமஸ்தம் என்று நினைவில் கொள்ளலாம்.

சந்தோஷம்: விஷயங்களில் ஆசையில்லாது, சந்தோஷமாக (திருப்தியுடன்) இருக்கும் ஒருவனுக்குப் பெரும் சக்திகள் (வளங்களும் கூட) ஒரு அரசனிடம் இருக்கும் ஏவலாள்கள் போலக் காத்துக் கிடக்கும் என்பதை உறுதியாக யோக வாசிஷ்டம் தெரிவிக்கிறது. எவ்வளவு அரிய செய்தி இது!

நல்லோர் இணக்கம்: மனதில் இருக்கும் இருளை சாதுக்கள் அகற்றுவர். சூரியஒளி போன்ற ஞானத்தைத் தருவர். தர்மங்கள் செய்வதாலும், புனிதத்தல யாத்திரை மேற்கொள்வதாலும் விரதங்களாலும் மதச் சடங்குகள் மற்றும் யாகங்களாலும் என்ன பயன், ஒருவன் சாதுக்களுடன் சேர்ந்து இருக்கும்போது!

விசாரம்: நான் யார்? உலகில் பிறப்பு என்ற தோஷம் எப்படி வந்து சேர்ந்தது? இப்படி தர்க்கரீதியாக ஆய்வு செய்வதே விசாரம்!

சமஸ்தம்: அனைத்து உயிர்களிடமும் நட்பாக இருந்தால் உயரிய ஆன்மா தன்னைத் தானேசுத்தப்படுத்துகிறது. ஆக இந்த நான்கு வழிகளில் எந்த ஒரு வழியை மேற்கொண்டாலும் இறை சக்தி அருளைப் பாலித்து பெரும் வளங்களைத் தந்து முக்தியை நல்கும் என யோக வாசிஷ்டம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது.

அதி சுலப வழி விசாரமே..: மேலே கூறிய நான்கு வழிகளில் மிகச் சுலபமான வழியாக ரமண மஹரிஷி கூறுவது நான் யார் என்று இடைவிடாது உன்னைக் கேள்வி கேள்! அனைத்து மர்மங்களும் தானே பிடிபடும் என்பதே! எப்போதும் திருப்தி, நிஜமான உயரிய பண்புகள் உள்ள சாதுக்களை நாடுதல், அனைத்து உயிர்களிடமும் சமத்துவம் என்பதெல்லாம் பலருக்கும் கடைப்பிடிக்க சற்று சிரமமான வழிகள். ஆனால் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் சற்றும் செலவின்றி ஆண் பெண் யாரானாலும் அந்தஸ்து பேதமின்றி நாடு, இனம், மொழி தாண்டி சுலபமாக செய்யக்கூடியது விசாரமே! அதனால்தான் அவர், ஆன்ம வித்தை உரை என்ற அற்புதமான பாடலில் பல்லவி அனுபல்லவி ஐந்தே ஐந்து சரணங்களில்.

ஐயே! அதி சுலபம் ஆன்மவித்த ஐயே! அதி சுலபம் என்று கூறி விளக்குகிறார்.

பொருள் பொதிந்த அடுக்குமொழித் தமிழ்க் கவிதை வரிகளை இந்தப் பாடலில் படித்தால் மஹரிஷி ஒரு மஹாகவியும் கூட என்பதை உணர்ந்து விடலாம்! சரணங்களின் கடைசி வரிகளைப் பார்ப்போம்! பொய் உருவாக்கிய அகங்காரத்தை நான் யார் என்ற இடைவிடாத கேள்வி மூலம் ஒழித்து விட்டால். சுயமான்மா விளக்குமே இருள் அடங்குமே, இடர் ஒடுங்குமே, இன்பம் பொங்குமே என்றும். மாம்சமான சரீரத்தை நான் என்று எண்ணாமல் நான் யார்? இடம் எது என்று விசாரிப்பதால். இதய குகையுள் தானாய்த் திகழும் ஆன்ம ஞானமே! இதுவே மோனமே. ஏக வானமே என்றும் உண்மை சொரூபத்தை உணர்ந்து விட்டால் பின் அறிவதற்கு என்ன இருக்கிறது? தன்னைத் தன்னில் உணர்ந்து விட்டால். தன்னுள் மின்னும் ஆன்ம பிரகாசமே அருள் விலாசமே அக விநாசமே இன்ப விகாசமே என்றும் கர்மங்களின் கட்டு அவிழ, இம்மார்க்கம் மிக்கு எளிது! சும்மா அமர்ந்திருக்க அம்மா! அகத்தில் ஆன்ம ஜோதியே; நிதானுபூதியே இராது பீதியே; இன்ப அம்போதியே (இன்ப அம்போதி ஆனந்தக் கடல்) என்றும். அண்ணாமலையானைக் காண அவன் அனுக்ரஹம் வேண்டும். உள் நாடு உளத்து ஒளிரும் அண்ணாமலை என் ஆன்மா காணுமே அருளும் வேணுமே அன்பு பூணுமே இன்பு தோணுமே என்றும் அற்புதமான சிறிய ஐந்து வரிப் பாடல்கள் ஐந்தின் மூலம் விளக்குகிறார். யோக வசிஷ்டம் கூறும் அதிசய வழிகள் நான்கில் அதிசுலபமான நான் யார் என்ற விசார வழியை அனுபூதியாக உணர்ந்தவர் மஹரிஷி ரமண மகான்! அனைவரையும் உய்விக்க எண்ணும் அருளுடன் ஐயே! அதி சுலபம் ஆன்ம வித்தை என்று அவர் கூறும் போது யோக வாசிஷ்டத்தின் உண்மைக் கூற்றையும் அதை மெய்ப்பிக்கும் மஹரிஷியின் மாண்பையும் எண்ணி எண்ணிநம் மெய் சிலிர்க்கும்! அவருடன் இணைந்து அதி சுலபம் ஆன்ம வித்தை என்று பாடியவாறே நான் யார் என்ற விசார மார்க்கத்தை மேற்கொண்டு சம்சார சாகரத்தைக் கடந்து விடலாம்! அப்போது..... சுயமான்மா விளங்குமே; இருள் அடங்குமே. இடர் ஒடுங்குமே இன்பம் பொங்குமே.
விளங்காத மர்மத்தை விளக்கும் யோக வசிஷ்டம்!

ஆன்மீக நாட்டம் உடைய ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் தோன்றும் விடை காண முடியாத கேள்விகள் ஏராளம். இந்தப் பிறவியின் மகத்துவம் என்ன, ஏன் இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமைந்தது. விதியா, முயற்சியா எது மேலோங்கும், இறப்புக்குப் பின்னர் எங்கே போகப் போகிறோம். மறு ஜென்மம் உண்டா, புண்யம் எது, பாவம் எது, எப்படி வாழ்ந்தால் ஆன்ம ஞானம் கிடைக்கும்.... இத்யாதி கேள்விகள் ஏராளம். விடைதாள் தெரியவில்லை. இந்தக் குறையை நீக்க வல்ல ஒரு அற்புதமான நூல் யோக வாசிஷ்டம். ஒவ்வொரு மர்மமான கேள்விக்கும் ஆணித்தரமாக நேரடியாக பதிலைத் தருவதில் இதற்கு நிகரான இன்னொரு நூல் இல்லை என்றே சொல்லலாம். அதனால்தானோ என்னவோ உயரிய ஞானம் உடைய அறிஞர்கள் பலரும் இதில் உள்ள கருத்துக்களைப் பிரதிபலித்துத் தங்கள் நூல்களில் கருத்துக்களை எழுதியுள்ளனர். ஜேம்ஸ் ஆலன், அன்னி பெஸன்ட், பால் ப்ரண்டன், அலெக்ஸாண்டர் கானான், சர் ஜேம்ஸ் ஜீன்ஸ், உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அறிஞர்கள் யோக வாசிஷ்ட கருத்துக்களை வார்த்தைக்கு வார்த்தை நேரடியாக அப்படியே தெரிவித்துள்ளனர்.

யோக வசிஷ்டம் எப்படி வந்தது?

ராமர் வசிஷ்டரிடம் கேள்விகள் கேட்க பிரம்ம ரிஷி வசிஷ்டர் பதில்களைத் தீர்க்கமாக அளிக்கிறார். அதுவே ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட யோக வாசிஷ்ட நூலாக அமைகிறது. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் ஸ்லோகங்கள் 32,000 தான்! இந்த உபதேசங்களைப் பெற்ற இராமர், தான் எப்போதும் பிரம்ம ஞானத்திலேயே இருக்க விரும்புவதாகக் கூறுகிறார். குரு வசிஷ்டர் இராமருக்கு அவரை உணர்த்தி, அவரின் அவதார நோக்கத்தைத் தெளிவுப்படுத்திய பிறகே தன்னை அறிந்து கொள்கிறார். ஸ்ரீராமசந்திர பிரபு.

விதி என்பது இல்லவே இல்லை என்கிறது!

தைவம் நாம ந கிஞ்சன் (விதி என்று ஒன்றும் இல்லை 2518)
தைவம் ந வித்யதே(விதி என்பது இல்லவே இல்லை 2813)
மூடை: ப்ரகல்பிதம் தைவம்(மூடர்களால் உருவாக்கப்பட்டதே விதி-2816)
என்று இப்படி அடித்துச் சொல்லும் யோக வாசிஷ்டம் மனிதனின் செயல்களே அவனுக்குப் பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதுவே விதி என்று சொல்லப்படுகிறது என்று விளக்குகிறது.

நீடித்திருக்கும் வியாதிக்கு இப்போது மருந்து சாப்பிட்டால் எப்படி அது தீருமோ அதே போல முந்தைய கருமங்களின் தீய விளைவுகளை இப்போதைய நல்ல கர்மங்களால் மாற்ற முடியும் என்று விளக்கி மனித குலத்திற்கே பெரும் ஆறுதல் செய்தியை அது தருகிறது! மனமே எல்லாம் என்று கூறி அதைச் செம்மைப்படுத்தி நல்ல எண்ணங்கள் மூலம் உயரிய நிலையை அடைய முடியும் என்பது யோக வாசிஷ்டம் தரும் அற்புத செய்தி! பிறப்பு, இறப்பு, கர்ம பலன்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களை விளக்கும் இந்த நூல் எப்படிப்பட்ட வழிகளின் மூலம் அருமையான ஆன்ம ஞானத்தை அடைந்து உலகியல் துன்பங்களிலிருந்து விடுதலை பெறலாம் என்ற ரகசியத்தையும் சுலபமாக விளக்குகிறது.

அதிசய வழிகள் நான்கு: இதற்கான அதிசய வழிகள் நான்கு உள்ளன.
சந்தோஷ சாதுசங்கஸ்ச விசாரோத்ய சமஸ்ததா
ஏத ஏவபவாப்யோத்யாவுபாயாஸ்தரணே ந்ருகாம  (21618)

சந்தோஷம்(எப்போதும் திருப்தி), நல்லோர் இணக்கம் (சாதுக்களுடன் சேர்தல்) விசாரம், அமைதி, இவையே மனிதருக்கு உலகம் என்னும் சாகரத்தைக் கடக்கும் வழிகளாகும். இதை எளிதாக நான்கு ஸ காரங்களாக ஸந்தோஷம், ஸத்சங்கம், ஸத்விசாரம், ஸமஸ்தம் என்று நினைவில் கொள்ளலாம்.

சந்தோஷம்: விஷயங்களில் ஆசையில்லாது, சந்தோஷமாக (திருப்தியுடன்) இருக்கும் ஒருவனுக்குப் பெரும் சக்திகள் (வளங்களும் கூட) ஒரு அரசனிடம் இருக்கும் ஏவலாள்கள் போலக் காத்துக் கிடக்கும் என்பதை உறுதியாக யோக வாசிஷ்டம் தெரிவிக்கிறது. எவ்வளவு அரிய செய்தி இது!

நல்லோர் இணக்கம்: மனதில் இருக்கும் இருளை சாதுக்கள் அகற்றுவர். சூரியஒளி போன்ற ஞானத்தைத் தருவர். தர்மங்கள் செய்வதாலும், புனிதத்தல யாத்திரை மேற்கொள்வதாலும் விரதங்களாலும் மதச் சடங்குகள் மற்றும் யாகங்களாலும் என்ன பயன், ஒருவன் சாதுக்களுடன் சேர்ந்து இருக்கும்போது!

விசாரம்: நான் யார்? உலகில் பிறப்பு என்ற தோஷம் எப்படி வந்து சேர்ந்தது? இப்படி தர்க்கரீதியாக ஆய்வு செய்வதே விசாரம்!

சமஸ்தம்: அனைத்து உயிர்களிடமும் நட்பாக இருந்தால் உயரிய ஆன்மா தன்னைத் தானே சுத்தப்படுத்துகிறது. ஆக இந்த நான்கு வழிகளில் எந்த ஒரு வழியை மேற்கொண்டாலும் இறை சக்தி அருளைப் பாலித்து பெரும் வளங்களைத் தந்து முக்தியை நல்கும் என யோக வாசிஷ்டம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது.

அதி சுலப வழி விசாரமே..: மேலே கூறிய நான்கு வழிகளில் மிகச் சுலபமான வழியாக ரமண மஹரிஷி கூறுவது நான் யார் என்று இடைவிடாது உன்னைக் கேள்வி கேள்! அனைத்து மர்மங்களும் தானே பிடிபடும் என்பதே! எப்போதும் திருப்தி, நிஜமான உயரிய பண்புகள் உள்ள சாதுக்களை நாடுதல், அனைத்து உயிர்களிடமும் சமத்துவம் என்பதெல்லாம் பலருக்கும் கடைப்பிடிக்க சற்று சிரமமான வழிகள். ஆனால் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் சற்றும் செலவின்றி ஆண் பெண் யாரானாலும் அந்தஸ்து பேதமின்றி நாடு, இனம், மொழி தாண்டி சுலபமாக செய்யக்கூடியது விசாரமே! அதனால்தான் அவர், ஆன்ம வித்தை உரை என்ற அற்புதமான பாடலில் பல்லவி அனுபல்லவி ஐந்தே ஐந்து சரணங்களில்.

ஐயே! அதி சுலபம் ஆன்மவித்த ஐயே! அதி சுலபம் என்று கூறி விளக்குகிறார்.

பொருள் பொதிந்த அடுக்குமொழித் தமிழ்க் கவிதை வரிகளை இந்தப் பாடலில் படித்தால் மஹரிஷி ஒரு மஹாகவியும் கூட என்பதை உணர்ந்து விடலாம்! சரணங்களின் கடைசி வரிகளைப் பார்ப்போம்! பொய் உருவாக்கிய அகங்காரத்தை நான் யார் என்ற இடைவிடாத கேள்வி மூலம் ஒழித்து விட்டால். சுயமான்மா விளக்குமே இருள் அடங்குமே, இடர் ஒடுங்குமே, இன்பம் பொங்குமே என்றும். மாம்சமான சரீரத்தை நான் என்று எண்ணாமல் நான் யார்? இடம் எது என்று விசாரிப்பதால். இதய குகையுள் தானாய்த் திகழும் ஆன்ம ஞானமே! இதுவே மோனமே. ஏக வானமே என்றும் உண்மை சொரூபத்தை உணர்ந்து விட்டால் பின் அறிவதற்கு என்ன இருக்கிறது? தன்னைத் தன்னில் உணர்ந்து விட்டால். தன்னுள் மின்னும் ஆன்ம பிரகாசமே அருள் விலாசமே அக விநாசமே இன்ப விகாசமே என்றும் கர்மங்களின் கட்டு அவிழ, இம்மார்க்கம் மிக்கு எளிது! சும்மா அமர்ந்திருக்க அம்மா! அகத்தில் ஆன்ம ஜோதியே; நிதானுபூதியே இராது பீதியே; இன்ப அம்போதியே (இன்ப அம்போதி ஆனந்தக் கடல்) என்றும். அண்ணாமலையானைக் காண அவன் அனுக்ரஹம் வேண்டும். உள் நாடு உளத்து ஒளிரும் அண்ணாமலை என் ஆன்மா காணுமே அருளும் வேணுமே அன்பு பூணுமே இன்பு தோணுமே என்றும் அற்புதமான சிறிய ஐந்து வரிப் பாடல்கள் ஐந்தின் மூலம் விளக்குகிறார். யோக வசிஷ்டம் கூறும் அதிசய வழிகள் நான்கில் அதிசுலபமான நான் யார் என்ற விசார வழியை அனுபூதியாக உணர்ந்தவர் மஹரிஷி ரமண மகான்! அனைவரையும் உய்விக்க எண்ணும் அருளுடன் ஐயே! அதி சுலபம் ஆன்ம வித்தை என்று அவர் கூறும் போது யோக வாசிஷ்டத்தின் உண்மைக் கூற்றையும் அதை மெய்ப்பிக்கும் மஹரிஷியின் மாண்பையும் எண்ணி எண்ணிநம் மெய் சிலிர்க்கும்! அவருடன் இணைந்து அதி சுலபம் ஆன்ம வித்தை என்று பாடியவாறே நான் யார் என்ற விசார மார்க்கத்தை மேற்கொண்டு சம்சார சாகரத்தைக் கடந்து விடலாம்! அப்போது..... சுயமான்மா விளங்குமே; இருள் அடங்குமே. இடர் ஒடுங்குமே இன்பம் பொங்குமே.

புதன், 19 செப்டம்பர், 2018

சனி பற்றிய 53 முக்கிய தகவல்கள்
1. சனியானவர் ஜன்ம லக்னத்தில் இருந்தாரானால் அது சொந்த வீடாக இல்லாத பட்சத்தில் ஜாதகரின் வாழ்க்கையில் சங்கடங்கள் சூழக் கூடும். ஜாதகர் வறுமையில் உழல்வார். மட்டமான செயல்களைச் செய்யக்கூடியவர் ஆவார். மந்தமாகப் பேசுவார்.

2. லக்னத்தில் சனி இருக்கப் பெற்று சனிக்கு அது பகைவீடாக இருக்குமானால் நண்பருடன் சண்டை போடுகிற குணம் ஜாதகருக்கு அமையும். ஜன்ம லக்னம் துலாமாகவோ, தனுசாகவோ, மீனமாகவோ அமைந்து அதில் சனி இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு உயர்வுகள் உண்டு. தோற்றப் பொலிவு இருக்கும். ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் தகுதி ஏற்படும்.

3. மகரம் அல்லது கும்பம் ஜன்ம லக்னமாகி சனியானவர் அங்கே இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு விசேஷமான தகுதிகள் நன்மைகள் சிறப்புகள் எல்லாம் உண்டாகும்.

4. ரிஷபத்தில் உள்ள சனியானவர் அது ஜன்ம லக்னமானால் சிறப்பான பலன்களைத் தருவார் என்று சில கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

5. 2-ஆம் இடத்தில் உள்ள சனி நிறையப் பணம் தருவார். ஆனால், அந்தப் பணத்தை இழக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படக்கூடும். 2-ல் உள்ள சனியினால் முகத்தில் நோய் அல்லது வாயில் புண் ஆகியவை உண்டாகக் கூடும்.

6. சனியானவர் 2-ஆம் இடத்தில் இருந்தாரானால் தாய்நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் சென்று சுகபோகங்களையும், செல்வங்களையும் பெறக்கூடியவராக இருப்பார்.

7. 2-ல் உள்ள சனியால் ஜாதகருக்குத் தாயிடம் பக்தியுண்டாகும். ஆனால், சகோதர பாசம் இராது.

8. 2-ல் உள்ள சனிக்குச் சுபபலம் இருக்குமானால் அதாவது ஆட்சி, உச்சம் போன்ற நிலை இருக்குமானால் குறைகள் குறையவும், நிறைகள் அதிகமாகவும் சந்தர்ப்பமுண்டு.

9. 3-ஆம் இடத்தில் உள்ள சனி அறிவு, ஆற்றல் இரண்டையும் தருவார். ஆனால், மனோவியாகூலம் அவ்வப்போது உண்டாகும்.

10. சனியானவர் 3-ல் இருந்தால் ஜாதகருக்குத் தரும குணம் இருக்கும். ஆனாலும் செய்யும் காரியங்களில் தரக்குறைவு இருந்து கொண்டிருக்கும்.
3-ல் உள்ள சனி பலம் பெற்றிருந்தாரானால் குறைகள் எல்லாம் அகல்வதோடு மனைவியால் இன்பமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உண்டாகும்.

11. 3-ஆம் இடத்தில் உள்ள சனி பலவீனமாக இருந்தாரானால் சகோதரர்களுக்கு நாசம் ஏற்படக்கூடும். தாய்நாட்டை விட்டு வெளிநாடு செல்லக்கூடிய நிலை ஜாதகருக்கு உண்டாக கூடும். அந்த நிலை நல்லதாக அமைவதற்கு 3-ல் உள்ள சனிபலம் பெற்றிருக்க வேண்டும்.

12. 4-ல் உள்ள சனி மகிழ்ச்சியைக் கெடுப்பார். அமைதியைக் குலைப்பார். கவலையைக் கொடுப்பார். குடும்பத்திலிருந்து பிரிய வைப்பார்.

13. 4-ஆம் இடத்தில் உள்ள சனியால், தந்தை வழி நலம் குறையும். சொத்துக்கள் சேர்மானம் இராது. இருதயநோய் ஏற்படக்கூடும். வயிற்றுவலியும் உண்டாகக்கூடும்.

14. 4-ஆம் இடத்தில் உள்ள சனியினால் அந்நிய தேசவாசம் ஜாதகருக்கு உண்டாகும்.

15. பலம் பொருந்தியவராக உள்ள சனி 4-ல் இருப்பாரானால் ஜாதகருக்குச் சுபிட்சமும், செல்வமும் வாகனவசதியும் ஏற்படத் தடையிராது.

16. 5-ல் சனி மக்கள் பாக்கியத்தைக் குறைப்பார். புத்திர தோஷம் உண்டாகக் கூடும். மேலும் செல்வம் சந்தோஷம் இவைகள் குறையும்.

17. 5-ல் உள்ள சனி ஜாதகருக்குப் புத்தி மந்தத்தை உண்டு பண்ணுவார். பகைவரால் தொல்லையை உண்டாக்க கூடும். மனநலம் திருப்திதராது. நேர்வழியில் சிந்தனை செல்லாது. மனோவியாதி உண்டாக கூடும்.

18. 5-ல் உள்ள சனியின் மூலம் வயிற்றுநோய் உண்டாகலாம். ஆனால் பொதுவாக ஓர் உன்னதமான வாழ்க்கை பெறுவதற்குச் சந்தர்ப்பமுண்டு.

19. 8-ல் உள்ள சனி உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்தாரானால் கெட்ட பலன்கள் பெருமளவுக்கு குறைந்து விடும். நல்ல பலன்கள் இடம்பெறும்.

20. 6-ஆம் இடத்தில் சனிக்குப் பலம் இருக்குமானால் ஜாதகர் பகைவரை வெற்றிக் கொள்வார். பலம் குறைந்த சனியினால் ஜாதகர் பகைவரால் ஒடுக்கப்படுவார்.

21. 6-ல் உள்ள சனி பகைவருடைய வீட்டிலோ, நீச்ச நிலையிலோ இருப்பாரேயானால், பிறந்த குடிக்கே நாசம் தேடுவார். மேலும் வாழ்வில் சோதனையை ஜாதகர் சந்திக்கக்கூடும்.

22. பொதுவாக 6-ஆம் இடம் சனிக்கு ஏற்புடைய இடமாகையால் ஜாதகர் கவுரவமாகவும், செல்வ சுகங்களோடும் வாழக்கூடும். ஜீரண சக்தியும் ஜாதகருக்கு இருக்கும்.

23. 6-ஆம் இடத்தில் உள்ள சனியினால் தாய் நலம் பாதிக்கப்படும். வயிற்றுப்புண் ஏற்படக்கூடும். இந்தச் சனி பலமுள்ளவராக இருந்தால் ஜாதகருக்கு நோய் நொடிகள் உண்டாகாமல் ஆரோக்கியம் இருந்து வரும்.

24. 7-ல் உள்ள சனியினால் நன்மைகள் குறையும். செல்வ சுபிட்சம் குறையும். அலைச்சல்கள் அதிகமாகும்.

25. 7-ஆம் இடத்தில் உள்ள சனி, ஆண் ஜாதகருக்குத் தகாத பெண் சேர்க்கையை உண்டாக்கும். கீழ்த்தரமான செயல்களை ஜாதகர் செய்ய நேரும்.

26. 8-ல் உள்ள சனியால் கண்பார்வை மங்கக்கூடும். வயிற்றுக் கோளாறு உண்டாகக் கூடும்.

27. 8-ல் உள்ள சனி ஜாதகருக்குப் பணத்தைச் சேர்த்துத் தருவாரே தவிர மதிப்பை தர மாட்டார். ஜாதகர் அடிமைவேலை செய்ய வேண்டியிருக்கும். சுயமாக பெரிய காரியங்களை நிர்வகிக்கக்கூடிய ஆற்றல் இல்லாமல் போகும்.

28. 8-ல் உள்ள சனி இளம் வயதில் ஜாதகருக்கு மகிழ்ச்சியை தரமாட்டார். ஆயுளை தீர்க்கமாகக் கொடுப்பார்.

29. 9-ல் உள்ள சனியால் ஜாதகருக்குப் பணம் குவியும். மகிழ்ச்சி ஏற்படும். மக்களால் மகிழ்ச்சியுண்டாகும்.

30. சனி 9-ல் இருக்கப் பிறந்தவர்களுக்கு வேதாந்த மனப்பான்மை ஏற்படும். ஜோதிடம் போன்ற கலைகளில் பாண்டித்யம் உண்டாகும்.

31. 9-ல் உள்ள சனி பலவீனம் பெற்றிருந்தால் ஜாதகருக்கு அதிர்ஷ்டக்குறைவு உண்டாகும். மற்றவர்களுக்கு ஜாதகரால் தொல்லை விளையக்கூடும்.

32. பெரும்பாலும் 9-ல் உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டில் யோகத்தை உண்டு பண்ணுவார்.

33. 10-ஆம் இடத்தில் உள்ள சனியானவர் விவசாயம் மற்றும் தானியங்கள், எண்ணெய், உரம் ஆகியவற்றின் மூலம் ஜாதகர் பொருள் திரட்ட சந்தர்ப்பத்தைத் தேடித்தருவார்.

34. 10-ல் உள்ள சனி ஜாதகருக்கு சாத்திர ஞானத்தை உண்டு பண்ணுவார். சிறந்த கல்வி ஜாதகருக்கு உண்டாகும். தைரியம் புகழும் ஜாதகரை வந்து சேரும்.

35. 10-ல் உள்ள சனி ஜாதகரை பணக்காரராக்குவார். உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுப்பார். பெரிய நிர்வாகியாக விளங்குவார்.

36. 10-ஆம் இடத்தில் சனி உள்ளவர்கள் சமூகத்திற்குத் தலைமை தாங்க முடியும். பெரிய குழுவுக்கு ஜாதகர் தலைமை தாங்கும் சக்தி ஏற்படக் கூடும்.

37. 10-ல் உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டு வாசத்தை உண்டு பண்ணுவதற்கும் சந்தர்ப்பமுண்டு.

38. சனி 11-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் நிறையச் சம்பாதிப்பார். சொத்துக்கள் சேர்ப்பார். நிறைய வருமானம் அடையப் பெறுவார்.

39. 11-ஆம் இடத்தில் உள்ள சனி மூலம் ஜாதகர் தைரியசாலியாக வாழ முடியும். சரீர சுகம் அமையும். ஆனால் இளமையில் உடல் உபாதை ஏற்படக் கூடும்.

40. பொதுவாக 11-ஆம் இடத்தில் உள்ள சனியால் ஒரு ஜாதகர் வியாபாரத் துறையில் விற்பன்னராக முடியும். இரும்பு, விவசாயம், எண்ணெய், உலோகங்கள் ஆகிய துறைகளின் மூலம் ஜாதகர் நிறையப் பொருள் திரட்டும் வாய்ப்பு ஏற்படும்.

41. 11-ஆம் இடத்தில் உள்ள சனி பல நிலைகளிலும் சிறப்பைத் தருவார். என்றாலும், குடும்பத்தில் ஜாதகருக்குச் சிறப்பை உண்டாக்க மாட்டார். ஜாதகரால் குடும்பத்தாருக்கு நலம் உண்டாகவும் விடமாட்டார்.

42. 12-ல் உள்ள சனி ஜாதகருக்கு நல்லொழுக்கத்தை உண்டாக்க மாட்டார். தொழில்களிலும் வீழ்ச்சியை உண்டு பண்ணுவார்.

43. 12-ல் உள்ள சனியினால் ஜாதகருக்கு கடும் செலவு உண்டாகக் கூடும். அறிவாற்றல் மங்கியிருக்கும். பகைவரால் தொல்லை விளையக்கூடும்.

44. 12-ஆம் இடத்தில் உள்ள சனிக்கு சுபர் பார்வை ஏற்பட்டு ஆட்சி அல்லது உச்சநிலை ஏற்பட்டிருக்குமானால், குறைகள் பெரும்பாலும் குறையும். சில நன்மைகள் தலைகாட்டும்.

45. நவகோள்களிலும் ஈஸ்வரப்பட்டம் சனியைத் தவிர வேறு எந்தக் கிரகத்திற்கும் கிடையாது.

46. ஒருவரது ஜென்மராசிக்கு 1, 2, 12 ஆகிய ராசி வீடுகளில் தலா 2 வருட வீதம் 32 1/2 என்ற சஞ்சரிக்கும் காலம் 7 சனி காலமாகும்.

47. ஒருவரின் ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்த்தாஸ்டமச்சனி என சொல்லப்படும். 8ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அட்டமத்துச் சனி எனக் கூறப்படும்.

48. ஒருவரது ராசிக்கு 3, 6, 11ஆம் வீடுகளில் சனிக்கிரக சஞ்சாரம் இடம்பெறும் காலம் நற்பலன்களை கூட்டி வழங்குவார்.

49. இந்தியாவில் திருநள்ளாறில் தனி ஆலயமாக சனீஸ்வரன் மிகப் பிரசித்தம் பெற்று விளங்குகின்றார். இலங்கையில் திருக்கோணமலையில் மரத்தடியில் சனீஸ்வரனுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

50. சனிக்கிரகம் பூமியில் இருந்து 97 கோடியே 90 லட்சம் மைல்கள் தொலைவில் உள்ளது. இதனைச் சுற்றி 3 வளையங்கள் உள்ளன. இதன் நடுவில் இருள் படலம் உள்ளது. 75000 மைல்  விட்டமும் 700 பங்கு கன பரிமானம் உள்ளது. பூமியைப் போல் 100 மடங்கு எடையுள்ளது. இது ராசி மண்டலத்தைச் சுற்றிவர 29 வருடம் ஆகிறது.

51. சங்கடங்கள் தீர்க்கும் சனிபகவானை சனிக்கிழமைகளில் விசேஷமாக புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து எள்ளு எரித்து சனிபகவானின் கெடுபலனிலிருந்து விடுபடுவதால் நற்பலனை பெறலாம்.

52. சனீஸ்வரரின் அருளை வேண்டி வழிபடுபவர்கள் அவசியம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையும் வேண்டுதல் செய்வது நல்லது.

53. சனிபகவான் தொல்லை நீங்க வேண்டுமானால் விபூதி அணிய வேண்டும்.வைதீக வாத்தியார்.
லட்சுமி வாசம் செய்யும் இடம் எது தெரியுமா?

புதுமனை கட்டி, காம்பவுண்டு சுவர் எடுத்து, வாசல் பக்கத்து சுவற்றில் சலவைக் கல்லில், லட்சுமி நிவாஸ் என்று எழுதிய பெயர் பலகை பதிக்கப்பட்டு விட்டது. அதாவது, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று அதற்கு அர்த்தம். ஆனால், மகாலட்சுமி தான் வசிக்கும் இடங்களையும், வசிக்காத இடங்களையும் பற்றி ருக்மணியிடம் சொன்னதாக ஒரு கதை உள்ளது. அந்த கதையை நாமும் தெரிந்து கொள்வோமே! லட்சுமிதேவி கூறுகிறாள்: அழகும், தைரியமும், வேலைத் திறமையுள்ளோர், வேலை செய்து கொண்டிருப்போர், கோபமில்லாதவர், தெய்வ பக்தி உள்ளோர், நன்றி மறவாதோர், புலன்களை அடக்கியோர், சத்வ குணமுள்ளோரிடமும் நான் வசிக்கிறேன். பயனை கருதாமல், தர்மத்தை அனுஷ்டிப்போர், தர்மம் தெரிந்து, அதன்படி நடப்போர், காலத்தை வீணாக்காதோர், தியானம், தத்துவ ஞானத்தை விரும்புவோர் மற்றும் பசுக்கள், வேத பிராமணர்களிடம், அன்பும், ஆதரவுமாக உள்ளவர்களிடமும் நான் வசிக்கிறேன்.

பக்தியுள்ளவர்கள் வீடுகளிலும், வீட்டையும், வீட்டிலுள்ள பாத்திரங்களையும் சுத்தமாக வைத்து, பசுக்களைப் போஷித்து, தான்யங்களை சிதறாமல் வைத்துக் கொள்ளும் வீடுகளிலும் நான் வசிக்கிறேன். பெரியோர் களுக்குப் பணிவிடை செய் தும் அடக்கமும், பொறுமையும், கடமை உணர்வும், தர்மத்தின் சிரத்தையும் உள்ள பெண்களிடம் நான் வசிக்கிறேன். பண்டங்களை வீணடிப்போர், கோபமுள்ளோர், தேவதைகள், பெரியோர்கள், வேத பிராமணர் களை பூஜிக்காத, மரியாதை செய்யாத பெண்களிட மும், கணவனுக்கு எதிராகவோ, விரோத மாகவோ இருக்கும் பெண்களிடமும் நான் வசிப்பதில்லை. எப்போதும் படுத்திருப்பவளும், சதா அழுகையும், துக்கமும், தூக்கமும் உள்ள பெண்களிடமும், நான் வசிப்பதில்லை. வாசற்படியில் தலை வைத்து தூங்குகிற வீடுகளிலும், நடக்கும் போது தொம், தொம்மென்று பூமி அதிர நடக்கும் பெண்களின் இல்லங் களிலும் நான் வசிப்பதில்லை.

வாகனங்களிடத்தும், ஆபரணங்களிடத்தும், மேகங்களிடத்தும், தாமரை, அதன் கொடிகளிடத்தும், அரசர்களின் சிம்மாசனத்திலும், அன்னங்களும், அன்றில் கூவுதலினுள்ள தடாகங்களிலும், சித்தர்கள், சாதுக்களால் அடையப்பட்ட ஜலம் நிரம்பியும், சிம்மங்கள், யானைகளால் கலக்கப் பட்ட நதிகளிலும் நான் வசிக்கிறேன். யானை, ரிஷபம், அரசன், சிம்மாசனம், சாதுக்கள் இவர்களிடம் வசிக்கிறேன். எந்த வீடுகளில் தினமும் அக்னிஹோத்ரம் செய்யப் பட்டு தேவதா பூஜை, அதிதி பூஜை வேதாத்யானம் செய்யப்படுகிறதோ அவ் வீடுகளிலும், நீதி தவறாத சத்ரியர், விவசாயத்தில் கருத்துள்ளோரிடமும் வசிக்கிறேன். என்னிடத்தில் எவர் பக்தியுடன் இருக்கிறாரோ, அவர் புண்ணியம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் பெறுகிறார், என்கிறார். இதையெல்லாம் கவனமாக படித்துப் பார்த்து, லட்சுமிதேவியின் அருள் பெறவும், நம் வீடுகளில் அவள் வாசம் செய்யவும் முயற்சி செய்யலாம் வெறும் போர்டு போட்டு விட்டால் அவள் வந்து விடுவாளா?
அவதாரங்களும் அவற்றின் ஆதார சக்திகளும்!

அம்பிகை பண்டாசுரனுடன் யுத்தம் செய்தபோது அவன், ஸர்வ அசுராஸ்திரம் எனும் அஸ்திரத்தால், ராவணன், பலி, ஹிரண்யாக்ஷன் முதலிய அசுரர்களை உண்டுபண்ணிப் போருக்கு அனுப்பினான். அவர்களை எதிர்க்க அம்பிகை தன் பத்து விரல்களிலிருந்து விஷ்ணுவின் பத்து அவதாரங்களை ஆவிர்பவிக்கச் செய்தாள்.

கராங்குளி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி : என்கிறது லலிதா சகஸ்ரநாமம். எந்த அவதாரத்திற்கு ஆதார சக்திகள் யார் யார் என்பதை அம்பாள் அஷ்டகம் விளக்குகிறது.

மத்ஸ்யாவதாரம் - கமலாத்மிகா: இவள் மகாலட்சுமியே. பொருள் மற்றும் அறிவு வறுமைகளையும் நீக்குபவள். அறிவுக் களஞ்சியமான வேதத்தைக் காக்க சக்தி அளிப்பவள்.

கூர்மாவதாரம் - பகளாமுகி: இவளை வழிபட்டால் ஜல ஸ்தம்பனம், அக்னி ஸ்தம்பனம் ஆகியவை செய்து நீரிலும் நெருப்பிலும் நிலை குலையாமல் வாழும் சித்தி கைகூடும். தன் அங்கங்களை உள்ளே சுருக்கி, ஸ்தம்பனம் செய்து கொள்ளும் பிராணி ஆமைதானே. பகளாமுகியே கூர்மாவதாரத்தின் உட்சக்தி.

வராஹ அவதாரம் - புவனேஸ்வரி: இவள் இதயாகாசத்தில் திகழும் ஞான வெளி. அன்பர்களுக்காகச் சிவந்த அன்னையாக வந்தவள். புவனம் முழுவதையும் நாசிமுனையில் தூக்கிய வராஹ அவதாரம் புவனேஸ்வரியின் ஆவிர்பாகம்.

நரசிம்ம அவதாரம் - திரிபுர பைரவி: திரிபுர பைரவி அன்பின் வடிவம். ஆனால் அச்சமூட்டக்கூடியவள். பைரவம் என்றால் அச்சமூட்டுதல். நரசிம்மமும் அப்படியேதான். அச்சமூட்டும் வடிவமானாலும் காருண்யமூர்த்தி.

வாமன அவதாரம் - தூமாவதி: நம் சிந்தனை என்கிற தவிட்டைப் புடைத்து, உண்மையான ஆத்ம அரிசியை நிற்கச் செய்யும் அனுக்கிரகம் செய்பவள் தூமாவதி. இவளைப் புகை சக்தி என்பர். ஒளிமய அக்னி இன்றிப் புகை ஏது? மஹாவிஷ்ணுவின் யோகநித்திரை இவள். இவளே வாமன சக்தி.

பரசுராம அவதாரம் - சின்னமஸ்தா: தன் தலையைத் தானே வெட்டிக் கொண்டு விளங்கும் வித்யுத் (மின்) சக்தியான இவளே பரசுராம சக்தி.

பரசுராமர் தன் அன்னையின் தலையை வெட்ட நேர்ந்ததல்லவா?

ராமாவதாரம் - தாரா: இவளது மந்திரமே ப்ரணவ தாரக மந்திரமான ஓம். தாரக நாமம் ராம நாமமே. அதற்கேற்ப ராமர் தாராவின் சக்தியாகக் கூறப்படுகிறார்.

கிருஷ்ணாவதாரம் - காளி: அழகும் அன்பும் உருவான கண்ணனே இவளது சக்தியைப் பெற்றவர். இவர் விளையாடியே காளியின் தொழிலாகிய சம்ஹாரத்தை மேற்கொண்டவர். காளியும் கருப்பு, இவரும் கருப்பு. காலோஸ்மி என்று கீதையில் கிருஷ்ணன் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்கிறார்.

பவுத்தாவதாரம் - மாதங்கி: வாக்தேவி மாதங்கியே பவுத்த அவதார உட்சக்தி.

கல்கி அவதாரம் - திரிபுரசுந்தரி: காமமாகிய மன்மதன் எரிந்ததும் அந்தச் சாம்பலிலிருந்து காமத்தின் விளைவே குரோதம் என்று காட்டவே பிறந்தான் பண்டாசுரன். இவனை திரிபுரசுந்தரி சம்ஹரித்தாள். மாதுளை நிறத்தவளான இவள் செவ்வாடையும் செம்மலரும் பூண்டு, இதயச் செம்மையின் உருவாக பிரும்மத்தின் எண்ணமற்ற சாந்தத்தில் தோன்றிய முதல் எண்ணமாகிய தன் உணர்வு என்ற சிவப்பாகத் திகழ்கிறாள்.

கலியுக முடிவில் கருமையான அந்தகாரம் சூழும்போது மனச் செம்மையை மீண்டும் உண்டாக்க அவதரிக்கும் கல்கி, இவள் அருள் விலாசமே ஆவார்.
காசிக்குக் காவலரான ஆந்திரா காலபைரவர்!

காலபைரவர் கோயில்கள் இந்தியாவில் மட்டுமல்ல. இந்தோனேஷியா, நேபாள் முதலான வெளிநாடுகளிலும் உள்ளன. இந்தியாவில் காசி ÷க்ஷத்திரத்தை அடுத்து, ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் இஸன்னபல்லி என்னும் கிராமத்தில் உள்ள காலபைரவர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹைத்ராபாத் நகரிலிருந்து சுமார் 116 கிலோ மீட்டர் தொலைவில் நிஜாமாபாத் நெடுஞ்சாலையில் உள்ளது இக்கோயில். காசிக்குக் காவலரான கால பைரவர் இங்கு எப்படி வந்து கோயில் கொண்டார்? மற்றொரு கிளைக் கதை கர்நாடகத்தை ஆண்ட பாமினி சுல்தான்களுக்கு தோமகொண்டா என்ற சமஸ்தானத்தை தங்களின் கீழ் பரிபாலித்து, வரி வசூலித்துத் தர சமஸ்தானாதிபதி ஒருவர் தேவைப்பட்டார். எனவே, அங்கே பிரபலமான காச்சா ரெட்டி என்பவரை அழைத்து சமஸ்தானத்தைப் பரிபாலிக்கும் உரிமையை அஹமத் ஷா மற்றும் அவரது மகன் அஹமத் கான் ஆகியோர் அளிக்கின்றனர். இது கி.பி 1415-1435 ல் நடந்ததாக வரலாறு கூறுகிறது.

காச்சா ரெட்டிக்குப் பின் அவர்களின் வம்சாவளியில் வந்த காமி ரெட்டிக்கு(1550-1600) பகைவர்களிடமிருந்து சமஸ்தானத்தைக் காப்பாற்றுவது இயலாத காரியமாகப் பட்டது. இந்தக் குழப்பத்தில் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நின்ற காமி ரெட்டியின் கனவில்காலபைரவர் தோன்றி காசிக்குப் போய் தன் சிலையைக் கொண்டுவந்து இங்கு பிரதிஷ்டை செய்தால், அவர்களது சமஸ்தானத்தையும் அவர்களையும் தான் காப்பாற்றுவதாக உறுதி கூற, காமி ரெட்டி தன் சகோதரர் ராமி ரெட்டியுடன் காசிக்குச் சென்று சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வருகிறார்கள். அவர்களின் சமஸ்தானத்தை நெருங்கும் போது ஓர் இடத்தில் வண்டிச் சக்கரங்கள் தரையில் புதைந்து நின்று விடுகின்றன. எவ்வளவு முயன்றும் வண்டி நகரவில்லை. சிலையும் அசையவில்லை அதனால், பைரவருக்குக் கோயில் அங்கேயே எழுப்பப்பட்டது. அந்த இடம்தான் இஸன்னபல்லி

ஒவ்வொரு பிறப்பிலும் மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களும் உடற்பிணிகளும், பில்லி சூன்யம் முதலியவற்றால் ஏற்படும் துயரங்களும் காலபைரவரை வழிபடுவதன் மூலம் தீரும் என்பது நம்பிக்கை. கிராமங்களில் எட்டு திக்கும் பிரதிஷ்டை செய்யப்படும் அஷ்டதிக் பாலர்களும் காலபைரவர் உறுதுணையுடனே செயல்பட்டு, கிராமங்களை கெடுதல்களிலிருந்து காப்பதாக நம்பிக்கை. மார்கழி மாதம் தேய்பிறையின் 8-ம் நாள் கடும் விரதம் அனுஷ்டித்து, கண் விழித்து காலபைரவரைத் தியானித்து, அருகிலுள்ள புஷ்கரிணியில் நீராடி, பைரவருக்கு தேங்காய், மலர்கள், கடுகு எண்ணெய், கறுப்பு எள் முதலியவற்றைப் படைத்து வழிபட, ஒவ்வொரு பிறவியிலும் செய்த பாவங்கள் விலகும். கெட்ட ஆவிகள் தரும் தொல்லை நீங்கும். எடுத்த காரியங்களும் வெற்றிபெறும். சிறைப்பட்டவரும் விடுதலை பெறுவர். இந்தப் புஷ்கரணியில் நீர் கோடையிலும் வற்றுவதில்லை. இதில் முழுகி எழுந்தால் பாவங்கள் மறையும் என்பதும் ஒரு நம்பிக்கை. காலபைரவரின் சக்தியால்தான் புஷ்கரணியில் நீர்மட்டம் குறைவதில்லை என்கின்றனர். சுண்டுவிரலில் பிரம்மாவின் துண்டிக்கப்பட்ட தலையுடனும், பைரவ (நாய்) வாகனத்துடனும் சித்தரிக்கப்படும் காலபைரவர், நேபாளத்தில் சுப்ரீம் ஜட்ஜ். இவர் சன்னிதியில் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டால், அவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.
தியான சுலோகங்கள் (பகுதி-2)

நாரதமுநிவரசாபாத்
யமளார்ஜுநௌ வ்ருக்ஷபாவமாபன்நௌ
யக்ஷஸுதௌ ஸுவிசித்ரம்
தாம்நா பத்தோஸப்யமோசயத்பந்தாத்

காளீய-நர்த்தன-க்ருஷ்ண-தியானம்

வாமபாதேன க்ருஹ்ணந்தம் புச்சம் வாமேன பாணினா
தக்ஷிணாபயதம் ஹஸ்தம் ந்ருத்யந்தம் காரயேத்புத:

வேணுகான-க்ருஷ்ண-தியானம்

ஈஷத்குஞ்சிதவாமாங்க்ரிம் இதரேண ருஜுஸ்திதம்
கச்சந்தமபி காயந்தம் வம்சேன பரமாத்புதம்
வீணாவாதநதத்த்வஜ்ஞம் கானமோஹித மன்மதம்
பார்ச்வே விசிந்தயேத்தேவீம் ராதிகாம் பரதேவதாம்

ஜகந்மோஹந-க்ருஷ்ண-தியானம்

விந்யஸ்யைகம் புவிபுவனப்ருத் பாதமேகம் ச ஹஸ்தம்
மாத்ராஜாநுப்ரணி ஹிதமதஸ் வாதுஹய்யங்கவீனம்

ஹஸ்தே க்ருஹ்ணன் ஸகலஜகதாம் ஸாரபோக்தாஹமாத்மே
த்யாசக்ஷõணோ விஹரதி ஜகந்மோஹனோ நந்த ஸூநு:

ராஜகோபால - தியானம்

பிப்ரத்தக்ஷிணபாணினா பஹுவிதை: புஷ்பை: க்ருதம் தண்டகம்
பூம்யுத்தம்பித ஹேமயஷ்டிசிரஸி ந்யஸ்தான்ய ஹஸ்தாம்புஜ:

நாநாரத்னவிராஜமாநமகுடோ திவ்யாங்கராகோஜ்வல:
பாயான்மாம் ஸஹ பீஷ்மகஸ்ய ஸுதயா ஸ்ரீராஜகோபாலக:

ச்யாமாபாம் ரக்தசேலம் த்ரிநதமபிநவம் பர்ஹிபர்ஹாவசூடம்
பாமா ருக்மிண்யதீசம் விஹரணரஸிகம் ச்ராவணேரோஹி ணீஜம்
யஷ்டிம் பாணாவவாமே தததமிதரதோ: கூர்பரே ஸத்யபாமா
மாலம்பயாஸீனமீடே க்ரதிகசபரம் க்ருஷ்ணமத்யந்தரம்யம்

லீலாயஷ்டிம் கரகிஸலயே தக்ஷிணே ந்யஸ்ய தந்யாம்
அம்ஸே தேவ்யா புளகருசிரே ஸன்னிவிஷ்டான்யபாஹு:
மேகச்யாமோ ஜயதி லலிதோ மேகலா தத்தவேணு:
குஞ்ஜாபீடஸ்ப்புரிதசிகுரோ கோபகந்யா புஜங்க:

திஷ்ட்டந்தம் ருக்மிணீ ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் ப்ரபும்
ஈஷத்குஞ்சித வாமாங்க்ரிம் ஸுஸ்திதேதரமத்புதம்

மேகச்யாமம் விசாலாக்ஷம் பீதவஸ்த்ரம் சதுர்புஜம்
தேவீ ஸவ்யபுஜம் ந்யஸ்தவாமஹஸ்த ஸரோருஹம்

ருக்மிணீம் தக்ஷிணே பார்ச்வே ஸத்யபாமா ததோத்தரே
விநதாநந்தநம் வாபி பாகே திவ்யே ப்ரகல்பயேத்

ருக்மிணீ தியானம்

ருக்மாபாம் தவலாம்பராம் ஸரஸிஜம் வாமே கரே பிப்ரதீம்
க்ருத்வா தக்ஷிணமாததம் ஸ்திதவதீமுத்பத்த தம்மில்லகாம்

நாமாத்யக்ஷரமஞ்ஜுலாம் ஸுவிலஸத்தாராதிபூ ÷ஷாஜ்வலாம்
த்யாயேத்தக்ஷிணத: ப்ரியஸ்ய கமலா சிஹ்நாந்விதாம் ருக்மிணீம்

ஸத்யபாமா தியானம்

உச்சைர்பத்தகசாம் கரே வித்தீம் வாமேதரே ஹல்லகம்
விஸ்தீர்ணாந்யகராம் ஸபீஜஸஹிதாம் ரக்தாம்சுகாம் ச்யாமலாம்

உந்மீலந்மணிநூபுராதி விவிதாலங்காரரம்யாக்ருதிம்
பாமாம் ஸத்யபதாதிமாம் நதஜநத்ராணோத்யதாமாச்ரயே

அன்னாதிபதி தியானம்

பூர்ணேந்துபிம்பமத்யஸ்தே ஸிதபத்மே விகஸ்வரே
ஆஸீனம் தவளாகாரம் நீலகுஞ்சிதமூர்தஜம்

துகூலöக்ஷளமவஸனம் பாலயோக்யவிபூஷணம்
கலதௌதமயம் பாத்ரம் பாயஸான்னேன பூரிதம்

பிப்ராணம் தக்ஷிணேஹஸ்தே தத்யோதநமதேதரே
த்யாயேத் லக்ஷத்ரயம் தீமாந் ஜபேத்தத்கதமாநஸ:

அன்னேன ஜுஹுயாச்சாக்நௌ நியதம் மந்த்ரவித்தம:
பஹ்வன்னத்வமவாப்நோதி ஸர்வமிஷ்டம் லபேத ச

அன்னாதிபதி -தியானம் (அ) யசோதா-பாலக்ருஷ்ண - தியானம்

பாணௌ பாயஸபக்தமாஹி தரஸம் பிப்ரன்முதா தக்ஷிணே
ஸவ்யே சாரத சந்த்ரமண்டலநிபம் ஸஹய்யங்கவீநம் ததத்
கண்டே கல்பிதபுண்டரீகநகமப்யுத்தாமதீப்திம் வஹந்
தேவோ திவ்யதிகம்பரோ திசது ந: ஸெளக்யம் யசோதா சிசு:

அன்னாதிபதி-தியானம் (அ) பாலக்ருஷ்ண - தியானம்

பாலக்ருஷ்ணம் ச நீலோந்தீவரஸன்னிபம்
ரத்னாபரண ஸந்தீப்தம் த்விபுஜம் நீலகுந்தலம்
பாயஸம் நவநீதம் ச கராப்யாம் தததம் ஸ்மரேத்

அன்னாதிபதி (அ) அன்னபூர்ணா தியானம்

ஆதாய தக்ஷிணகரேண ஸுவர்ணதர்வீம்
துக்தான்னபூர்ணமிதரேண ச ரத்னபாத்ராம்

பிக்ஷõப்ரதானநிரதாம் நவஹேமவர்ணாம்
ஆவிஸ்தராம் கிரிஸுதாம் பவதீம் பஜாமி

அன்னாதிபதி (அ) மீனாக்ஷி தியானம்

ஹஸ்தேநாதாய தர்வீம் கனகவிரசிதாம் தக்ஷிணேநேதரேண
ப்ரோத்யோதம் ரத்னபாத்ரம் க்ருதகுடஸஹிதம் பாயஸம் ஹேமபூஷே,
ஸர்வேப்யோ தானசீலே ஹிமகிரிதநயே தப்தஜாம்பூநதாபே
மாதர்மீனாக்ஷி மஹ்யம் பகவதி வரதே தேஹி கல்யாணி நித்யம்.

நவநீதக்ருஷ்ண - தியானம்

பாலாயநீலவபுஷே நவகிங்கிணீ ஸா
ஜாலாபிராமஜ்கதீச திகம்பராய
சார்தூலதிவ்யநகபூஷ ணபூ ஷிதாய
மந்தஸ்மிதாய நவநீதமுஷே நமஸ்தே

ததிவாமன மூர்த்தி தியானம்

முக்தாகௌரம் நவமணிவிலஸத்பூஷணம் சந்த்ரஸம்ஸ்த்தம்
ப்ருங்காகாரைரலகநிகரை: சோபிவக்த்ராரவிந்தம்
ஹஸ்தாப்ஜாப்யாம் கனககலசம் சுத்ததோயாபிபூர்ணம்
தத்யன்னாட்யம் கனகசஷகம் தாரயந்தம் பஜாம:

ததிபக்தஹயக்ரீவ தியானம்

ஸவ்யேனஹஸ்தேன ஸுதாகரீரம்
அன்யேன தத்யோதனமாததான:
சசாங்கமத்யே ஸிதபத்மஸம்ஸ்த:
பாயாத் ஸிதாப: துரகானனோ ந:

ஹயக்ரீவ தியானம் (கல்வி நன்றாக வளர)

வந்தே பூரித சந்த்ரமண்டலகதச்வேதாரவிந்தாஸனே
மந்தாகின்யம்ருதாப்ஜகுந்த குஸுமக்ஷீரேந்துபாஸம் ஹரிம்

முத்ராபுஸ்தகசங்கசக்ரவிலஸத் ச்ரீமத்புஜாமண்டலம்
நிர்யான் நிர்மலபாரதீபரிமலம் விச்வேசமச்வானனம்

வித்யாப்ரதான ஸங்கர்ஷணமூர்த்தி தியானம்

சங்க்ககோக்ஷீரதவளம் சதுர்பாஹும் கிரீடினம்
வஸானம் வாஸ: öக்ஷளமம் ச பூர்ணசந்த்ர நிபானனம்

முக்தாபூயிஷ்டமாகல்பம் ஸெளவர்ணமதிசோபநம்
ததானம் முக்யஹஸ்தேன ஞானமுத்ராஸமன்விதம்

புஸ்தகம் வாமஹஸ்தேன பிப்ராணம் புஜயோர்த்வயோ:
ஊர்த்வயோ: ஸ்பாடிகம் சங்க்கமக்ஷ மாலாம் யதாததம்

தவளை: காலஜை: புஷ்பைச்சோபிதம் வனமாலயா
ச்வேதபத்மே ஸுகாஸீனமேவம் த்யாயேத மந்த்ரவித்

த்யாயதோ புத்தி: அமலா பவேத் ஞாநம் ச புஷ்கலம்

கல்கி மூர்த்தி தியானம்

கல்கினம் து சதுர்பாஹும் பஹுதூணம் தனுர்தரம்
சங்கசக்ரதரம் குர்யாத் ததா கட்கதரம் ப்ரபும்
த்விபுஜம் வா ஹயாரூடம் கட்கபாணிம் ஸுரேச்வரம்

ஹரிஹரமூர்த்தி தியானம்

ருத்ரார்ததேஹம் வா குர்யாத் சதுர்பாஹும் ஜனார்தனம்
ஈசாநம் தக்ஷிணே பார்ச்வே குர்யாச்சூல்லோஷ்ட தாரிணம்

கதாசக்ரதரம் சான்யம் முகுடேந விபூஷிதம்
ஜடாசந்த்ரதரம் ரௌத்ரம் வைஷ்ணவம் ரத்னமண்டிதம்

குண்டலோத்யோதிதம் சைகம் அபரம் நாககுண்டலம்
வ்யாக்ரசர்மபரீதானம் அபரம் வஸ்த்ரபூஷிதம்

ப்ரஹ்மஸூத்ரதரம் சைகம் அன்யத் நாகோபவீதகம்
கௌரீ சைகேன பார்ச்வேன லக்ஷ்மீசைகேந ஸம்ஸ்திதா

ஏவம் லக்ஷணஸம்யுக்தம் காரயேத் ஹரிசங்கரம்

ப்ரஹ்மதேவ தியானம்

சதுர்முக: சதுர்பாஹு: ப்ருஹஜ்ஜடரமண்டல:
ஊர்த்வபத்தஜடாஜூடோ லம்பகூர்சஸ்ஸமேகல:

சோபநம் தக்ஷிணேஹஸ்தே தத்யாதஸ்யாக்ஷ ஸூத்ரகம்
ஸ்ருசம் ச தக்ஷிணே தத்யாத் வாமஹஸ்தே ச குண்டிகாம்

ஆஜ்யஸ்தாலீம் குசோபேதாம் வாமஹஸ்தே நியோஜயேத்
சங்கசக்ரகதாபாணி: கார்யோ வாத சதுர்முக:

ஸரஸ்வதீ ச ஸாவித்ரீ வாமதக்ஷிணஸம்ஸ்திதே
கர்த்தவ்யா முனயோ வாத பரிவாரவ்யவஸ்திதா:
விநிவிஷ்ட ஸ்ததா ப்ரஹ்மா கார்யோ நேஷ்டஸ்ததோந்யதா

சதுர்புஜராம லக்ஷணம்

தக்ஷிணோர்த்வே பவேச்சக்ரம் வாமோர்த்வே சங்க்கமேவ ச
தக்ஷிணாதோ பவேத்பாண: வாமாதோ தனுரேவ ச
த்விபுஜம் சரஹஸ்தம் வா ராமம் குர்யாத்ஸகார்முகம்

பலராமலக்ஷணம்

வாமோர்த்வம் லாங்கலம் தத்யாத் அதச்சங்கம் ஸுசோபனம்
முஸலம் தக்ஷிணோர்த்வம் து சக்ரம் சாதஸ்ஸுசோபனம்
கதாம் க்ருபாணம் வா தத்யாத் ஸம்ஸ்த்தானே சங்கசக்ரயோ:

(ஸ்தாநக) ஸீதாலக்ஷணம்

ஸீதா ஸ்ரீரிவ கர்த்தவ்யா கல்யாண பஹுலக்ஷணா
கரண்டிகாமௌலிதரா கபரீ வாலகைர்புதா

பிப்ராணா வாமஹஸ்தேன ஸரஸீருஹ குட்மலா
ஊருப்ரதேச விச்ராந்த வாமேதரபுஜாதவா

ராமலக்ஷணம் தியானம்

லக்ஷ்மணம் காரயேத் வாமே ததா லக்ஷணலக்ஷிதம்
ஜானகீம் தக்ஷிணேபார்ச்வே தேவீம் வேதிஸமுத்திதாம்

பரதம் தக்ஷிணே பித்தௌ ஸஸுக்ரீவ விபூஷணம்
சத்ருக்னம் சாங்கதம் சைவ ஹனுமந்தம் ச வாமத:

திவ்யே பாகே ஸ்திதஸ்யைவ பரிவாராதி கல்பனம்
பதராஸனே ஸமாஸீனம் த்யக்த்வா தத்ஸசரம் தநு:

அபயோ தக்ஷிணோ ஹஸ்தோ வாமஸ்து வரதோ பவேத்
ஜானகீ து ஸுகாஸீனா பவேத் தக்ஷிணபார்ச்வத:
லக்ஷ்மணோ வாமபார்ச்வே து ஸ்திதஸ்ச ரசிதாஞ்ஜலி:

போகவாமன தியானம்

நீலவர்ண: சதுர்பாஹு: சங்கசக்ரகதாப்ஜத்ருக்
ஸர்வான் போகான் ததாத்யேஷ பக்தானாம் போகவர்தன:

விச்வவாமன தியானம்

பீதாம்பரோத் தரீயோஸஸெள மௌஞ்ஜீ கௌபீனத்ருக் ஹரி:
கமண்டலும் ச தத்யன்னம் தண்டம் சத்ரம் கரேததத்
யஜ்ஞோபவீத தத்வாங்கோ த்யாதவ்யோ வாமனஸ்ஸதா

தைவிகவாஸுதேவன் தியானம்

சதுர்புசதரம் தேவம் சங்க்கசக்ர கதாதரம்
அபயம் தக்ஷிணம் ஹஸ்தம் வாமம் கட்யவலம்பிதம்

வாஸுதேவன் தியானம்

அஸ்ய தக்ஷிணஹஸ்தாக்ரே சக்ரஞ்சாதஸ் திதோம்புஜம்
தாமோர்த்வ சங்கமன்யஸ்மிந் கதாஸ்ய சாப்யதோமுகம்

ச்ரியம் து தக்ஷிணேபார்ச்வே வாமே புஷ்டிம் து விந்யஸேத்
சஷ்டிம் வா வாமபார்ச்வே து காரயேன்முனிஸத்தம

ஸ்ரீதேவி தியானம்

ராமேநாம் புருஹம் கரேண தததீம் விஷ்ணோ: ஸ்திதாம் தக்ஷிணே
வாமம் ஸுஸ்திதமேவ பாதமபரம் கிஞ்சித் விதத்யஸ்திதம்,

பாணிம்தக்ஷிணமாததம் விததீம் ஸந்தப்தஹேம ப்ரபாம்
பத்ராய ச்ரியமாச்ரயே பகவதீம் நாநா விபூ÷ஷாஜ்வலாம்.

பூதேவீ தியானம்

வந்தே தக்ஷிணபாணிநா குவலயம் புல்லம் ஸுமம் பிப்ரதீம்
குர்வாணம் விததம் கரம் ததிதரம் வ்யாலம்பமாநாங்க்ரிகாம்
ச்யாமாபாம் ஹரிணீம் ததந்யசரணம் ஸுஸ்தாபயந்தீ ஹரே
நித்யம் பார்ச்வமுபேயுஷீம் ப்ரணமதாம் கல்யாணஸந்தாயிகாம்

நரஸிம்மமூர்த்தி தியானம் (ஒரு நொடியில் காரியம் சித்திக்க)

ஸ்ரீபூமீப்யாம் ஸஹாஸீனம் பத்தபர்யங்கபந்தனம்
யத்வா பூமிதலே பாதமேகம் ஸம்ஸ்த்தாப்ய தக்ஷிணம்

அபரேண ஸுகாஸீநோ விஷ்டரே விபுலே த்ருடம்
யத்வா ப்ரஸார்ய ஜாநூர்த்வமுத் க்ஷிப்யோபரி ஜாநுந:

வாமேஹஸ்தம் ப்ரஸார்யான்யஹஸ்தம் க்ருத்வாஸபயப்ரதம்
தக்ஷிணம் ஜாநுநோஸதஸ்தாத் ஸ்தாபயித்வா ததாஸனே

தன்வந்த்ரி தியானம் (வியாதி குணமடைய)

சங்கம் சக்ரம் ஜலூகாம் தததம்ருதகடம் சாபி தோர்பிச்சதுர்பி:
ஸூக்ஷ்மஸ்வச்சாதிஹ்ருத்யாம் சுகபரிவிலஸன் மௌலிமம்போஜநேத்ரம்

காலாம்போதோஜ்வலாங்கம் கடிதடவிலஸச்சாரு பீதாம்பராட்யம்
வந்தே தன்வந்தரிம் தம் நிகிலகதவனப்ரௌட தாவாக்னி நீலம்

த்ரிவிக்ரமன் தியானம்

ப்ரஹ்மாண்டாந்தரமேதினீ கதபதாம்போஜம் நபோமண்டலம்
ப்ரக்ஷிப்தான்யபதம் த்ருதீயபதவிந்யாஸம் பலேர்மூர்த்தனி

குர்வாணம் கலசோபிகௌஸ்துபதரம் வக்ஷஸ்தலக்ஷ்மீயுதம்
சங்கம் சக்ரமபீதிமீப்ஸிததரம் ஹஸ்தைர்வஹந்தீம் பஜே

ப்ரஹ்மாண்டப்ருத்வீகதபாத பங்கஜம்
வாமாங்க்ரிணாஸஸக்ராந்தந போஸவகாசம்
த்ருதீயபாதாங்கித தைத்யமஸ்தகம்
த்ரிவிக்ரமம் தம் சரணம் ப்ரபத்யே

பக்ஷிராஜ தியானம்

அம்ருதகலசஹஸ்தம் காந்தி ஸம்பூர்ணதேஹம்
ஸகலவிபுதவந்த்யம் வேதசாஸ்த்ரைரசிந்த்யம்
விபுதஸுலபபøக்ஷர்தூயமாநாண்டகோளம்
ஸகலவிஷவிநாசம் சிந்தயேத்பக்ஷிராஜம்

சாஸ்தா தியானம்

யுவானம் ஸுந்தரம் ஸெளம்யம் புஷ்பகுச்சதரம் ப்ரபும்
யோகவேஷ்டிததிவ்யாங்கம் ஸுக பத்மாஸனஸ்த்திதம்

பூர்ணாஞ்ச புஷ்கலாம் தேவீம் க்ருத்வா தக்ஷிணவாமயோ:
பார்ச்வயோர் ப்ராஜமானம் தம் சாஸ்தாரம் நௌமி பூதயே

த்வாதச ஆதித்யா: தியானம்

வைகர்தநோவிவஸ்வாம்ச்ச மார்தாண்டோ பாஸ்கரோ ரவி:
லோகப்ரகாசகச்சைவ லோகஸாக்ஷீ த்ரிவிக்ரம:

ஆதித்யச் சைவ ஸூர்யச்ச அம்சுமாலீ திவாகர:
ஏதேவைத்வாதசாதித்யா: ப்ரத்யேகம் மாஸகாமின:

உஷாப்ரத்யுஷாஸஹித ஸூர்ய தியானம்

பத்மராகப்ரபாம் ஸெளம்யாமேக வக்த்ராம்த்விநேத்ரகாம்
பீமாஹஸ்தத்ருதாம்போஜாம் பஜேத்தேவீம் உஷாம்ஸதா

க்ருஷ்ணவர்ணாம் த்விஹஸ்தாம் ச த்விநேத்ராம் ஏகவக்த்ரகாம்
பிப்ராணாமுத்பலம்த÷க்ஷ ப்ரத்யூஷாம் பாவயேத்ஸதா

உஷாப்ரத்யூஷகே ஸ்வஸ்ய பார்ச்வயோர் தக்ஷவாமயோ:
க்ருத்வா யோ பாஸதே லோகே தம் தினேச மஹம் பஜே

ஸூர்ய தியானம்

ரக்தவர்ணாம் யௌவனம் ச வர்துலாகாரமஸ்தகம்
பங்கஜம் ஹஸ்தயுக்மேச கர்ணயோஸ்வர்ண குண்டலம்

ப்ரத்யூஷாவாம பார்ச்வே ச த÷க்ஷகௌரீ ச பத்மினீ
நாநாபரண ஸம்யுக்தம் ஸூர்யமூர்த்தி மஹம் பஜே

ரக்தாம்புஜாஸநமசேஷகுணைகஸிந்தும்
பாநும் ஸமஸ்தஜகதாமதிபம் பஜாமி
பத்மத்வயாபயவராந்ததாநம் கராப்ஜை:
மாணிக்யமௌலிமருணாங்கருசிம் த்ரிணேத்ரம்

ஸூர்ய தியானம்

ரக்தமம்போருஹாரூடம் தாடிமீகுஸுமப்ரபம்
ஸ்புரத்ரக்தமஹாதேஜோ வ்ருத்தமண்டலமத்யகம்

ஹம்ஸாரக்த ஸ்புடத்பத்மவராபய கரத்வயம்
ஏகாஸ் யஞ்சிந்தயேத்பானும் த்விநேத்ரம் ரக்தவாஸஸம்

ஆதித்யம் பிம்பமத்யஸ்தம் ரக்தமூர்த்திம் அஹம் பஜே

ஸூர்யாதி தேவதா அக்னி தியானம்

பிங்கப்ரூசமச்ருகேசச்ச பிங்காக்ஷி த்ரிதயோ(அ)ருண:
சாகஸ்த: ஸாக்ஷஸூத்ரச்ச வரத: சக்திதாரக:

ஸூர்ய ப்ரத்யதிதேவதா ருத்ர தியானம்

பஞ்சவக்த்ரோ வ்ருஷாரூட: ப்ரதிவக்த்ரம் த்ரிலோசன
கபாலசூலகட்வாங்கபிநாகீந்துசிரா: சிவ:

சந்திர தியானம்

ச்வேதாங்கம் கம்ரரூபம் ச கோமளாங்கஞ்ச யௌவநம்
சீர்ஷஞ்ச வர்துலாகாரம் மந்தஹாஸயுதானனம்

உத்பலம் ஹஸ்தயுக்மே ச ஸப்தவிம்சதிலக்ஷணம்
சக்திலீலா ஸமாயுக்தம் சந்த்ரரூபமஹம் பஜே

கர்பூரஸ்படிகாவதாமநிசம் பூர்ணேந்து பிம்பாநநம்
முக்தாதாமவிபூஷிதேநவபுஷா நிர்முலயந்தம் தம:

ஹஸ்தாப்யாம் குமுதம் வரஞ்சதததம் நீலாலகோத்பாஸிதம்
ஸ்வஸ்யாங்கஸ்த ம்ருகோதிதாச்ரயகுணம் ஸோமம் ஸுதாப்திம் பஜே

சந்திரனின் அதி தேவதையான அப்புக்களின் (ஜலம்) தியானம்

ஆப: ஸ்த்ரீரூபதாரிண்ய: ச்வேதா மகரவாஹனா:
ததாநா: பாசகலசௌ முக்தாபரணபூ ஷிதா:

சந்த்ரப்ரத்யதிதேவதா தியானம்

அக்ஷஸூத்ரஞ்ச கமலம் தர்பணஞ்ச கமண்டலும்
உமா பிபர்தி ஹஸ்தேஷு பூஜிதா த்ரிதசைரபி

அங்காரக தியானம்

பூமிஜாதம் ரக்தவர்ணம் கட்ககேடக ஹஸ்தகம்
ரக்தநேத்ரம் ரக்தகேசம் பீமஞ்ச ரௌத்ரரூபகம்

யக்ஞசூத்ரதரம் ஹாரநூபுராதிதரம் குஜம்
பத்மஸ்வஸ்திகஸம்யுக்தம் பௌமரூபம் ஸமாச்ரயேத்

ரக்தமால்யாம் பரதர: சக்திசூலகதாதர:
சதுர்புஜோ மேஷகம: வரத: ஸ்யாத் தராஸுத:

அங்காரகாதி தேவதா பூமி தியானம்

சுக்லவர்ணா மஹீகார்யா திவ்யாபரண பூஷிதா
சதுர்புஜா ஸெளம்யவபுச்சண்டாம் கஸத்ருசாம்பரா

ரத்நபாத்ரம் ஸஸ்யபாத்ரம் பாத்ரமோஷதிஸம்யுதம்
பத்மம் கரே ச கர்தவ்யம் புவோ யாதவநந்தந

திக்கஜாநாம் சதுர்ணாம் ஸா கார்யாப்ருஷ்ட கதா ததா

அங்காரக ப்ரத்யதி தேவதா ஸ்கந்த தியானம்

குமாரஷ்ஷண்முக: கார்ய:சிகிகண்ட விபூஷண:
ரக்தாம்பரதரோ தேவ: மயூரவர வாஹன:

குக்குடச்சததா கண்டா தஸ்ய தக்ஷிணஹஸ்தயோ:
பதா கா வைஜயந்தீஸ்யாத் சக்தி: கார்யா ச வாமயோ:

புத தியானம்

பீதவஸ்த்ர பீதகாத்ர பீதமால்ய கட்கத்ருத்
ஸிம்ஹவாஹ ஸெளம்யரூப சந்த்ரரோகிணீ ஸுத
ப்ராங்முகேஷு மண்டலப்ருஹ்ருஷ்டஹ்ருச்ச சதுர்புஜ
ஹஸ்தசோபி புஸ்தகக்ரஹேச பாகிமாம் புத

பீதமால்யாம் பரதர: கர்ணிகாரஸமத்யுதி:
கட்கசர்மகதாபாணி: ஸிம்ஹஸ்தோ வரதோ புத:

புத அதிதேவதா விஷ்ணு தியானம்

விஷ்ணு: கௌமோதகீபத்ம சங்க சக்ரதர: க்ரமாத்
ப்ரதக்ஷிணம் தக்ஷிணாத: கராதாரப்ய நித்ய ச:

புத ப்ரத்யதி தேவதா புரு÷ஷாத்தம தியானம்

புருஷமூர்த்தி: ஸ்வர்ணவர்ண: சதுர்புஜ: சங்கசக்ர கதாதர: கார்ய:

பிருகஸ்பதி தியானம்

ஸ்வர்ணவர்ண ஸெளம்யரூப தண்டஹஸ்ததக்ஷிணம்
குண்டிகாக்ஷவாமஹஸ்தஸ்மேரசாப ஸுஸ்திதம்

பீதவஸ்த்ர ஸுந்தராங்க திவ்யரூப தேஜஸம்
ப்ரும்மவம்சதீபகஞ்ச தேவதேசிகம் பஜேத்

அஷ்டபி: பாண்டரைர்யுக்த: வாஜிபி: காஞ்சநே ரதே
திஷ்டந் தரதி வை வர்ஷம் ராசௌ ராசௌ ப்ருஹஸ்பதி:

தேவதைத்யகுரூ சுத்தௌ பீதச்வேதௌ சதுர்புஜௌ
தண்டிநௌ வரதௌ கார்யௌ ஸாக்ஷஸூத்ர கமண்டலூ

ப்ருஹஸ்பதி அதிதேவதா இந்த்ர தியானம்

சதுர்தந்தகஜாரூடோ வஜ்ராங்குசலஸத்கர:
ப்ராசீபதி: ப்ரகர்தவ்ய: நாநாபரணபூஷித:

ப்ருஹஸ்பதி ப்ரத்யதிதேவதா ப்ரும்ம தியானம்

பத்மாஸநஸ்தம் ஜடிலம் சதுர்முகம்க்ஷமாலாஸ்ருவ
புஸ்தக கமண்டலுதரம் க்ருஷ்ணாஜிநவாஸஸம்
பார்ச்வஸ்தித ஹம்ஸம் ப்ருஹ்மாணம் பாவயேத்

சுக்ர தியானம்

சுப்ர வஸ்த்ர சுப்ரதேஹ சுக்ல மால்ய பார்கவ
தண்டகுண்டிகா த்ருதாக்ஷமாலிகாகரேஷ்டத
தைத்யஸத்குரோ கவே ஜடாதரைக நேத்ரக
நீதிசாஸ்த்ரவக்த்ரு சுக்ரபாகி மாம் சுபப்ரத

ஸவரூதஸ்ஸாநுகர் ÷ஷாயுக்தோ பூஸம்பவைர்ஹயை:
ஸோபாஸங்க பதாகஸ்து சுக்ல: ஸ்யாத்து ரதோ மஹாந்

தேவதைத்யகுரூசுத்தௌ பீதச்வேதௌ சதுர்புஜௌ
தண்டிநௌ வரதௌ கார்யௌ ஸாக்ஷஸூத்ர கமண்டலூ

சுக்ர அதிதேவதா இந்த்ராணீ தியானம்

வாமே சச்யா: கரே கார்யா ஸெளம்யா ஸந்தாநமஞ்சரீ
அபயா மண்டிதா கார்யா த்விபுஜா ச ததா சசீ

சுக்ர ப்ரத்யதிதேவதா இந்த்ர தியானம்

ச்வேதஹஸ்தி ஸமாரூடம் வஜ்ராங்குசலஸத்கரம்
ஸஹஸ்ரநேத்ரம் பீதாபமிந்த்ரம் ஹ்ருதி விபாவயே

சனைச்சர தியானம்

க்ருஷ்ணவர்ண பீமரூப க்ருத்ரவாஹ வாமந
கட்கசூல சாபஹஸ்தசாந்தஹ்ருச்சதுர்புஜ
பங்குபாத ஸூர்யபுத்ர நீலபூஷ க்ரூரத்ருக்
காலஸோதர ப்ரகோப பாஹிமாம் சனைச்சர

இந்த்ர நீலத்யுதி: கட்கீ வரதோ க்ருத்ரவாஹந:
பாணசாபதரோ வீர: கர்தவ்யோர்கஸுதஸ்ஸதா

சனைச்சராதி தேவதா யம தியானம்

ரக்தத்ருக் பாசஹஸ்தச்ச யமோ மஹிஷவாஹந:
கால: கராளவதந: நீலாங்கச்சாதிபீஷண:

சனைச்சர ப்ரத்யதி தேவதா பிரஜாபதி தியானம்

ஹம்ஸயானேனகர்தவ்ய: ந ச கார்யச்சதுர்முக:
ஸாவித்ரீ தஸ்ய கர்தவ்யா வாமோத்ஸங்ககதா சுபா
ப்ரஹ்மோக்தம் ஸகலகார்யம் ரூபம் ஸர்வம் ப்ரஜாபதே:
யக்ஞோபவீதீ ஹம்ஸஸ்த: ஏகவக்த்ரச்சதுர்புஜ:
அக்ஷஸ்ரஜம் ஸ்ருவம் பிப்ரத்குண்டிகாம் புஸ்தகம் ததா

ராகு தியானம்

நீலவஸ்த்ர தூம்ரவர்ண நீலபூஷணப்ரிய
கட்கசூல சர்மஹஸ்த சந்த்ரஸூர்யபீடக
சாகவாஹ தைத்யராஜதுஷ்டக்ருச் சதுர்புஜ
ஸிம்ஹிகாதனூஜ பாஹி ராகு தேவ ஸர்வதா

கராளவதந: கட்கசர்மசூலீவரப்ரத:
நீலஸிம்ஹாஸநஸ்தச்ச ராகுர்மேஸ்யாச் சுபப்ரத:

ராகு அதிதேவதா ஸர்ப தியானம்

அக்ஷஸூத்ரதராஸ்ஸர்பா: குண்டிகாபுச்ச பூஷணா:
ஏகபோகாஸ்த்ரி போகா வா ஸர்வேகார்யாச்சபீஷணா:

ராகு ப்ரத்யதி தேவதா கால தியானம்

கால: கராளவதந: நீலாங்கச் சாதிபீஷண:
பாசதண்டதர: கார்ய ஸர்பவ்ருச்சிக ரோமவாந்

கேது தியானம்

சித்ரவர்ண சித்ரகந்த சித்ரமால்ய சோபித
ஹே ! கபோதவாஹநத்வஜாக்ருதே கரத்வய
தக்ஷிணே கரே கதாம்ச வாமகே வரம் தரம்
கேதுதேவபாஹி மாம் ரவீந்துபீடநோத்ஸுக

தூம்ராஸ்ஸுகாவஹாஸ்ஸர்வே கதிநோ விக்ருதாநநா
கபோதவாஹநா நித்யம் கேதவஸ்யர்வரப்ரதா:
ஸர்வே கிரீடிந: கார்யா க்ரஹா: லோகஹிதாவஹா:

கேத்வதி தேவதா ப்ரும்ம தியானம்

விரிஞ்சிம் வாக்பதிம் ச்வேதபங்கஜஸ்தம் மஹாப்ரபம்
அக்ஷஸ்ரக்குண்டிகா பீதிதாநஹஸ்தம் விசிந்தயேத்

கேது ப்ரத்யதி தேவதா சித்ரகுப்த தியானம்

அபீச்யவேஷம் ஸ்வாகாரம் த்விபுஜம் ஸெளம்யதர்சனம்
தக்ஷிணே லேகிநீம் சைவ ததம் வாமே ச பத்ரகம்
பிங்களச்மச்ரு கேசாக்ஷம் சித்ரகுப்தம் விபாவயேத்

÷க்ஷத்ரபால தியானம்

ஆசாம்பரம் த்ரிணயனம் ஊர்த்வகேசம் சதுர்புஜம்
டக்காசூலகபாலோக்ரம் வந்தேஹம் ÷க்ஷத்ர பாலகம்

÷க்ஷத்ரபாலம் சதுர்பாஹும் கரண்டீமகுடோஜ்வலம்
தம்ஷ்ட்ராம் கராளவதனம் ப்ரகுடீகுடிலேக்ஷணம்

வாமே கரே தண்டதரம் முக்யே வாமேதரே கரே
ததானம் தர்ஜநீமுத்ராம் பாசாங்குசமமுக்யயோ:

அப்பரடிகள் தியானம்

பத்தாஞ்சலிகராம்போஜம் பூதிருத்ராக்ஷதாரிணம்
வ்ருத்தாக்ருதிம் ப்ரசாந்தஞ்ச த்ருணச்சேத்ரீகரம் சுபம்

சிவமந்திரஸம்சுத்திகரம்(அ)பர்யாப்த வாஸஸம்
வாகீசம் த்ராவிடாசார்யம் மானஸே பாவயே ஸதா

ஸுந்தரர் தியானம்

கிரீட மகுடோபேதம் கர்ணபூஷாதி பூஷிதம்
பஞ்சகச்சத்ருதக்öக்ஷளமமுத்தரீயதரம் சுபம்

தக்ஷிணேபுஷ்ப குச்சம்ச கரேவாமே ச வேத்ரகம்
தரந்தம் த்ராவிடாசார்யம் சுந்தரம் நௌமிசாம்பவம்

ஞானஸம்பந்தர் தியானம்

புரச்சூடாமநோக்ஞாங்கம் பாலம் ஹாராதிபூஷிதம்
திவ்யாம்பரதரம் ஸ்வர்ண தாளவாத்யகரம் சுபம்

ஈஷதுத்தித தக்ஷõங்க்ரிம் க்வணந்நூபுரமண்டிதம்
வந்தேஹம் த்ராவிடாசார்யம் ஞாநஸம்பந்தமந் வஹம்

மாணிக்கவாசகர் தியானம்

தக்ஷிணே ஜபமாலாஞ்ச கரே வாமே ச தாளகம்
பத்ரம் தரந்தம் ஸ்த்தவிரம் பூதிருத்ராக்ஷதாரிணம்

ஸ்வச்ச ச்வேதாம்பரம் சாந்தம் சிவாநந்தரஸப்ரதம்
மாணிக்க(க்ய)வாசகம் வந்தே த்ராவிடாசார்யமந் வஹம்

சரப தியானம் (தொழில்களில் வெற்றி பெற)

சந்த்ரார்காக்னித்ரித்ஷ்ணௌ குலிசநகவரம் சஞ்சலயுத்யுக்ரஜிஹ்வா
காலீ துர்கா ச பöக்ஷள ஹ்ருதய ஜடரகௌ பைரவோ பாடவாக்னி:

ஊருஸ்தௌ வ்யாதிம்ருத்யூசடுலநகவரா சண்டவாதாதி வேகா:
ஸம்ஹர்தா ஸர்வசத்ரூன் ஸுஜயதி சரப: ஸாளுவோ பக்ஷிராஜ:

வீரசரப - தியானம் (எதிரிகளை வெல்ல)

அஷ்டாங்க்ரிச்ச ஸஹஸ்ரபாஹுரநலசாயா சிரோ யுக்மப்ருத்
த்வித்ரிய÷க்ஷõதிஜவோ த்விபுச்ச உதித: ஸாக்ஷõந்ந்ருஸிஹ்மம் ஸஹ

அர்தேநாபி ம்ருகாக்ருதி: புனரதோப்யர்தேந பக்ஷ்யாக்ருதி:
ஸ்ரீவீரச்சரப: ஸ பாது ருசிரம் நீத்வா ஸதா மாம் ஹ்ருதி

குபேர தியானம் (குபேர சம்பத்து பெருக)

ஸுபீனதேஹோ ய÷க்ஷசோ ஹாரகேயூரபூஷித:
ஸர்வலக்ஷணஸம்பூர்ணோ கதாசங்கதரோஸநக:

நாநாரத் நோஜ்வலேநாத மகுடேனவிபூஷித:
கர்தவ்யோ வாமநாகாரோ த்விபுஜோ நரவாஹன:

லிங்க தியானம்

நராகாரம் ஜ்யோதிர்மயம் கமலமத்யந்தமமலம்
மஹாதீர்கம் ஸ்தூலம் நிரவயவமத்யந்தருசிரம்
மஹாநாதம் லிங்கம் சமய ந முனித்யேயமதுலம்
மனோ மார்காதீதம் ஹரிஹரஹயன்நௌமி லிங்கம் ச ஹ்ருதயே

கருட தியானம்

பிங்களாக்ஷம் கருத்மந்தம் ஸ்வர்ணவர்ணஸமப்ரபம்
குஞ்சிதம் வாமபாதம் து தக்ஷிணம் ப்ருஷ்டத: ஸ்திதம்

அநந்தோ வாமகடகம் யஜ்ஞஸூத்ரம் து வாஸுகி:
தக்ஷகோ கடிஸூத்ரம் ச ஹார: கார்கோடகஸ்ததா

பத்மோ தக்ஷிணகர்ணே து மஹாபத்மஸ்து வாமகே
சங்க: சிர: ப்ரதேசே து குளிகஸ்து புஜாந்தரே

ஏவம் த்யாயேத் த்ரிஸந்த்யாயாம் கருடம் க்ஷ்வேடநாசகம்

பஞ்சமுகஹநுமத் தியானம்

வந்தே வானரநாரஸிம்ஹ ககராட்க்ரோடாச்வ வக்த்ராஞ்சிதம்
திவ்யாலங்கரணம் த்ரிபஞ்சநயனம் தேதீப்யமானம் ருசா

ஹஸ்தாப்ஜைரஸிகேட புஸ்தகஸுதாகும் பாங்குசாதீந்ஹலம்
கத்யோகம்(கட்வாங்கம்)பணிபூரஹம் (ஹெள)ச தததம் ஸர்வாரி கர்வாபஹம்

வீராஞ்சநேய தியானம்

ச்யாமம் வர்ண ஸுவர்ணகுண்டலதரம் கௌபீனமௌஞ்ஜீதரம்
புச்சம் ச்ரோணிதரம் த்ரிசூலவதனம் யஜ்ஞோபவீதாந்விதம்
ஊர்த்வம் தக்ஷிணமுத்த்ருதாபயகரம் வாமே கரே பங்கஜம்
லங்காம் ராவணராக்ஷஸஸ்ய ஹநுமத்த்யாநம் பஜேத்ஸந்ததம்

ஹநுமத் தியானம்

சந்த்ராபம் சரணாரவிந்தவதனம் கௌபீநமௌஞ்ஜீதரம்
பாலம் ச்ரோணிதரம் த்ரிசூலவதனம் யஜ்ஞோபவீதாந்விதம்
ஹஸ்தாப்யாமவலம்ப்ய ஸாஞ்ஜலிபுடம் ஹாராவளீகுண்டலம்
பச்சால்லம்பசிக: ப்ரஸந்நவதனம் ஸ்ரீவாயுபுத்ரம் பஜேத்



அஷ்டாஷ்டவிக்ரஹ தியானம் ***************

லிங்கம் லிங்கோத்பவம் சைவ முகலிங்கம் ஸதாசிவம்
மஹாஸதாசிவம் ஸோமம் மஹேச்வரமத: பரம்

ஸுகாஸீனம் உமேசச்ச ஸோமாஸ்கந்தம் ததைவ ச
சந்த்ரசேகரமூர்த்திம் ச வ்ருஷாரூடம் வ்ருஷாந்திகம்

புஜங்கலலிதம் சைவ புஜங்கத்ராஸமேவ ச
ஸந்த்யாந்ருத்தம் தாண்டவம் ச ஜாஹ்நவீதரமேவ ச

கங்காவிஸர்ஜநம் சைவ த்ரிபுராந்தகமேவ ச
கல்யாணஸுந்தரம் சைவ அர்தநாரீச்வரம் ததா

கஜயுத்தம் ஜ்வராபக்னம் சார்தூலஹரவிக்ரஹம்
ததா பாசுபதம் சைவ கங்காலம் கேசவார்தகம்

பிக்ஷõடநம் ச ஸிம்ஹக்நம் சண்டச்வரப்ரஸாதகம்
தக்ஷிணாமூர்த்திகம் சைவ யோகவீணாதரம் ததா

காலாந்தகம் ச காமாரிம் லகுலீசம் ச பைரவம்
ஆபதுத்தரணம் சைவ வடுகம் ÷க்ஷத்ரபாலகம்

... மகோசஸ்த தக்ஷயஜ்ஞஹரஸ்ததா
கிராதம் குருமூர்த்திம் ச அச்வாரூடம் கஜாந்திகம்

ஜலந்தரவதம் சைவ ஏகபாதம் த்ரிமூர்த்திகம்
அமூர்த்திமேகபாதம் ச ததா கௌரீவரப்ரதம்

வஜ்ரதாநம் ................................
சக்ரதானஸ்வரூபம் ச கௌரீலீலாஸமன்விதம்
விஷாபஹரணம் சைவ புரம் தாஹனமேவ ச

ததா ப்ரம்மசிரச்சேதம் கூர்மஸம்ஹாரமேவ ச
மத்ஸ்யாரிம் ச வராஹாரிம் ப்ரதானமூர்த்திமேவ ச

ரக்தபிக்ஷõப்ரதானம் ச சிஷ்யபாவம் ததைவ ச
ஷடானனம் ததா சைவமஷ்டாஷ்டவிக்ரஹம் ததா

ஏகாதசருத்ர நாமானி

மஹாதேவோ ஹரோ ருத்ர: சங்கரோ நீலலோஹித:
ஈசானோ விஜயோ நாம தேவதேவோ பவோத்பவ:
கபாலீசஸ்ச விக்ஞேய: ருத்ரோ ஏகாதசஸ்ததா

ஸப்ததாண்டவ நாமானி

ஆனந்ததாண்டவம் பூர்வம் ஸந்த்யாதாண்டவகம் பரம்
கௌரீதாண்டவகம் ப்ரோக்தம் ததா த்ரிபுரதாண்டவம்

காளீதாண்டவமேவோக்தம் முனீனாம் சைவ தாண்டவம்
ஸம்ஹாரதாண்டவம் சைவ இத்யேதே ஸப்ததாண்டவம்

மஹாஸதாசிவ தியானம்

ப்ரஸன்னபஞ்சவிம்சதி: ஸ்புடானனம் ஜடாதரம்
ஸபஞ்சஸப்ததீக்ஷணம் கபோல குண்டலாங்கிதம்
சதார்தபூஷிதம் கரம் வராபயான்விதம் ஸ்திதோ
புஜங்கபூஷணம் பரம் பஜே மஹாசதாசிவம்

சிவாஷ்டவித்யேச்வர தியானம்

அனந்தேசஸ்ததாஸூக்ஷ்மோ சிவோத்தமம் சைகநேத்ரக:
ஏகருத்ராக்ஷ்யமூர்த்திஸ்ச ஸ்ரீகண்டஸ்ச சிகண்டின:

அனந்தவித்யேச்வர - தியானம்

அனந்தேசம் சதுர்வக்த்ரம் ஜடாமகுடமண்டிதம்
கண்டேந்துமௌலினம் தேவம் கங்காபத்மாஸனஸ்திதம்
கட்ககேடதனுர்பாணம் கமண்டல்வக்ஷசூத்ரிணம்
வராபயகரம் தேவம் சூலம் பங்கஜதாரிணம்

ஸூக்ஷ்மவித்யேச்வர தியானம்

ரக்தாங்கம் ஸூக்ஷ்மதேஹம் ச வராபயகராப்ஜகம்
சூலாக்ஷம் கண்டிகாம் சைவ ஸர்வாவயவஸுந்தரம்

கட்ககேடதநுர்பாணம் ஜடாசந்த்ரகலாதரம்
பத்மாஸனஸமாயுக்தம் பத்மமாலாவிபூஷிதம்

சிவோத்தமவித்யேச்வர தியானம்

சிவோத்தமம் நீலவர்ணம் கங்காவர்ணஜடாதரம்
சாபபாணபாரபீதி கட்ககேடாப்ஜகண்டிகம்

த்ரிசூலமக்ஷமாலாம் ச ததானம் கரபங்கஜை:
ப்ரஸன்னாஸ்யம் த்ரிணேத்ரம் ச பங்கஜாஸனஸம்ஸ்திதம்

ஏகநேத்ரவித்யேச்வர தியானம்

ப்ருங்காபமேகநேத்ரம் வைசாக்ஷமாலாம் கமண்டலும்
கட்ககேடதனுர்பாணம் வரதாபயசூலகம்
இந்துகங்காதரம் தேவம் ப்ரஸன்னவதான்விதம்

ஏகருத்ரவித்யேச்வர தியானம்

சசாங்கமேகருத்ரம் ச கங்காசந்த்ரதரம் சுபம்
கட்ககேடதனுர்பாணம் அக்ஷமாலாம் கமண்டலும்
பத்மம் சூலாபயஞ்சைவ வரதம் பங்கஜாஸனம்

அமூர்த்தி தியானம்

ஹேமாபாங்கம் அமூர்த்திம் ச ஜடாமகுடசோபிதம்
அபயாக்ஷவரம் கட்கம் தனுர்பாணம் ச கேடகம்
கண்டாப்ஜசூலஹஸ்தம் ச ததானம் பத்மஸம்ஸ்திதம்

ஸ்ரீகண்டவித்யேச்வர தியானம்

ஸ்ரீகண்டம் ரக்தவர்ணம் ச கங்காஸோம ஜடான்விதம்
அபயாக்ஷவரம் கட்கம் கேடகம் சாபபாணகம்
பங்கஜம் சூலகண்டீம் ச பிப்ராணம் ஸர்வபூஷணம்

சிகண்டிவித்யேச்வர தியானம்

சிகண்டீ ஸிதவர்ணம் ச வராபயகராப்ஜகம்
கட்ககேடதநுர்பாணம் சூலாக்ஷம் குண்டிகாட்யகம்
பத்மமத்யே ஸ்திதம் தேவம் ஜடிலம் வக்த்ரபங்கஜம்

ஸ்கந்தாஷ்டவித்யேச்வரர்கள் தியானம்

ஜயந்தோக்னிசிகீ சைவ க்ருத்திகாபுத்ரகஸ்தத:
பூதபதிச்ச ஸேனானீச்சாக்னிபூச்ச ததைவ ச
வஹ்னிசூலவிசாலாக்ஷõ: ஸ்கந்தவித்யேச்வராஷ் டகா:

ஜயந்தவித்யேச்வர தியானம்

ஜயந்தம் குங்குமப்ரக்யம் சதுர்புஜஸமன்விதம்
கரண்டமகுடோபேதம் அபயம் வரதான்விதம்
வஜ்ரசக்திஸமாயுக்தம் ஸர்வாபரணபூஷிதம்

அக்னிசிகீவித்யேச்வர தியானம்

ரக்தவர்ணஞ்சாக்னிசிகம் சதுர்புஜஸமந்விதம்
கரண்டமகுடோபேதம் வஜ்ரசக்த்யபயான்விதம்

க்ருத்திகாபுத்ரவித்யேச்வர தியானம்

க்ருத்திகாபுத்ரரூபம் து அபயம் வரதான்விதம்
வஜ்ரசக்திதரோபேதம் ஸர்வாபரணபூஷிதம்

பூதபதிவித்யேச்வர தியானம்

க்ருஷ்ணவர்ணஸமாயுக்தம் கட்ககேடகதாரிணம்
அபயம் வரதோபேதம் வஜ்ரசக்திதரான்விதம்

ஸேனானிவித்யேச்வர தியானம்

ஸேனாபதி சுக்லவர்ணம் வஜ்ரசக்த்யபயம் பஜே
ஹாரகேயூரகடகம் ஸர்வலக்ஷணஸம்யுதம்

அக்னிபூவித்யேச்வர தியானம்

வித்ருமாபம் குணோபேதம் கரண்டமகுடான்விதம்
அபயம் வரதோபேதம் வஜ்ரசக்திதரம் பஜே

ஹேமசூலவித்யேச்வர தியானம்

ஹேமசூலம் விசாலாக்ஷம் அபயம் வரவஜ்ரகம்
சக்திஹஸ்தஸமோபேதம் ஸர்வாபரணபூஷிதம்

விசாலாக்ஷவித்யேச்வர தியானம்

விசாலாக்ஷம் சதுர்ஹஸ்தம் அபயம் வரதான்விதம்
சக்திவஜ்ரதரம் சுப்ரம் ஸர்வாபரணபூஷிதம்

இந்த்ர தியானம்

ஐராவதகஜாரூடம் ஸ்வர்ணவர்ணம் கிரீடினம்
ஸஹஸ்ரநயனம் சக்ரம் வஜ்ரபாணிம் விபாவயேத்

அக்னி தியானம்

ஸப்தார்சிஷம் ச பிப்ராணம் அக்ஷமாலா கமண்டலும்
ஜ்வாலமாலாகுலம் ரக்தம் சக்திஹஸ்தம் அஜாஸனம்

யம தியானம்

க்ருதாந்தம் மஹிஷாரூடம் தண்டஹஸ்தம் பயானகம்
காலபாசதரம் க்ருஷ்ணம் த்யாயேத் தக்ஷிணதிக்பதிம்

நிர்ருதி தியானம்

ரக்தநேத்ரசவாரூடம் நீலோத்பலதளப்ரபம்
க்ருபாணம் பாணிமஸெள கம் பிபந்தம் ராக்ஷஸேச்வரம்

வருண தியானம்

நாகபாசதரம் ஹ்ருஷ்டம் ரத்னௌகத்யுதிவிக்ரஹம்
சசாங்கதவளம் த்யாயேத் வருணம் மகராஸனம்

வாயு தியானம்

ஆபீனம் ஹரிதச்சயா விலோலத்வஜதாரிணம்
ப்ராணபூதம் ச பூதானாம் ஹரிணஸ்தம் ஸமீரணம்

குபேர தியானம்

குபேரம் மனுஜாஸீனம் ஸகர்வம் கர்வவிக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம் உத்தராசாபதிம் ஸ்மரேத்

ஈசான தியானம்

ஈசானம் வ்ருஷபாரூடம் த்ரிசூலம் வ்யாளதாரிணம்
சரச்சந்த்ரவதாகாரம் சந்த்ரமௌலிம் த்ரிலோசனம்

வஜ்ர தியானம்

வஜ்ரம் ஸ்யாத் புருஷஸ்தூல: கர்க்கசோஸதித்ருடோ பலி:

சக்தி தியானம்

சக்திஸ்து யோஷிதாகாரோ லோஹி தாங்க்ரித்ரி கோணகா
தண்ட தியானம்

தண்டோஸபி புருஷ: க்ருஷ்ணோ வபுர்லோஹி தலோசன:

கட்க தியானம்

கட்கம் ச புருஷச்ச்யாமசரீர : க்ருத்தலோசன:

பாச தியானம்

பாஸஸப்தபணோபேத: புருஷ: புச்சஸம்யுத:

த்வஜ தியானம்

த்வஜஸ்து புருஷ: பீத: வ்யாப்ருதாம்ஸோ மஹாபுஜ:

கதா தியானம்

கதா பீதப்ரபா கன்யா ஸ்த்ரீபீனே ஜகனஸ்தலாம்

த்ரிசூல தியானம்

சூலஸ்து புரு÷ஷா திவ்யோ நபச்யாமகளேபர:

பத்ம தியானம்

பத்மம் ச புரு÷ஷா திவ்யோ சுக்லாங்கம் சுபலோசனம்

சக்ர தியானம்

சதாரசக்ரப்ருன்மூர்த்நிசக்ரச்யாமதநு: புமான்

விமான தியானம்

த்விபாதம் ச த்ரிணயனம் பஸ்மபாண்டரவிக்ரஹம்
சூலம் சக்திதநுர்பாணம் பாசசக்ரகதாப்ஜத்ருக்

அஷ்டஹஸ்தஸமோபேதம் ஸ்தூப்யாந்தம் மகுடான்விதம்
ரக்தவர்ணம் விசாலாக்ஷம் ஸ்தூலலிங்காக்ருதிம் பவேத்

உபானமங்க்ரிம்தேசஸ்து குமுதம் ஜங்கதேசகே
பத்மாந்தம் சைவ மூர்தா து மகுடே மகுடம் ததா

த்விபார்ச்வம் கரயுக்மம் ச ஏவம் வை சிவரூபகம்
ஏவம் த்யாத்வா விசேஷேண ஸ்தூலலிங்கஸ்ய பூஜனம்

பீடசக்தி தியானம்

சதுர்புஜாம் ப்ரஸன்னாக்ஷீம் த்விநேத்ராம் த்விபுஜான்விதாம்
ரக்தவர்ணாம் த்ரிபங்க்யாங்கீம் சித்ரவஸ்த்ரேண வேஷ்டிதாம்
ஸுமுகாம் கந்தபுஷ்பாட்யாம் கோமளாலகபூஷிதாம்
பத்மோத்பலதராம் வாபி வரதாபயபாணி னாம்
இதி த்யாத்வா விசேஷேண த்யாயேத் தேவீம் மனோன்மணீம்

இடும்ப தியானம்

குங்குமாபம் த்விநேத்ரம் ச கிரீடம் மகுடாந்விதம்
தக்ஷிணே தர்ஜனீஹஸ்தம் வாமஹஸ்தே ததா தரம்

உக்ரபீமம் மஹாகோரம் ராக்ஷஸம் குஹவாஹனம்
ஸர்வாபரணஸம்யுக்தம் இடும்பம் தம் அஹம் பஜே

ஸப்தர்ஷீணாம் நாமானி

அகஸ்த்யச்ச புலஸ்த்யச்ச விச்வாமித்ர பராசர:
ஜமதக்நிச்ச வால்மீகீ ஸனத்குமாரச்ச ஸப்த ச

பில்வ தியானம்
சிவபெருமானுக்குரிய பில்வம் மகாலட்சுமி குடியிருப்பதால் செல்வம் வளரும்

தர்சநாத்பில்வவ்ருக்ஷஸ்ய ஸ்பர்சநாத் பாபநாசனம்
அகோரபாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ச்சனம்

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிணேத்ரம் ச த்ரயாயுதம்
த்ரிஜன்மபாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ச்சனம்

ஸிம்ஹ தியானம்

பீதவர்ணம் சதுஷ்ப்பாதம் லம்போதரகஜாந்தகம்
தம்ஷ்ட்ராம் கராளமத்யுக்ரம் ஸிம்ஹரூபம் விபாவயேத்

வீரன் தியானம்

ஸாந்த்ரநீரதஸங்காசம் கர்ணவிச்ராந்தச்மச்ருகம்
தம்ஷ்ட்ராகராளவக்த்ரம்சப்ருகுடீக்ருத நேத்ரகம்

கரசோபிகனித்ரஞ்ச தண்டினம் நீலவாஸஸம்
வஸநஜக்ருதோட்யாணம் வீரமீடே த்ரிபங்கிகம்

ஜபாகுஸுமஸங்காசம் மீனகேதும் ஸ்வலங்க்ருதம்
இஷுசாபாங்குசோபேதம் வீரம் புஷ்ப்பசரம் பஜே

பூதாகாரம் ப்ரஸந்நாஸ்யம் த்ரிபுண்ட்ரவிலஸந்முகம்
குடாரதாரிணம் தேவம் பத்தாஞ்சலிபுடம் சுபம்

ச்வேதாம்பரதரம் வீரம் சிவபக்தாக்ரகாமிநம்
த்ராவிடோக்திப்ரவீணஞ்ச ஸ்வாமிநம் வீரமாச்ரயே

ஏகவக்த்ரம் த்விநயனம் த்விபாகும் தூம்ரவர்ணகம்
உத்பத்தகேசம் ஸச்மச்ரும் கர்ணகுண்டல பூஷிதம்

ஸூகரம் தக்ஷஹஸ்தே ச வாமஹஸ்தே கதாதரம்
க்ருஷ்ணாம்பர கச்சயுதம் பானபாத்ரகரம் சுபம்

நிகுஞ்சிததக்ஷஜாநும் பூஸ்ப்ருஷ்ட வாமஜங்ககம்
ப்ருகுடீக்ருத நேத்ரோக்ரம் வீரம் சாஸ்தாரமாச்ரயே

கருப்பண்ணஸ்வாமி தியானம்

வ்ருத்தாயதத்விநேத்ரம் ச வ்யாளபத்தஸுகுந்தளம்
நீலம் ஸகஞ்சுகம் பீமம் த்ரிபுண்ட்ரவிலஸந்முகம்

குந்தம் தரந்தம் வாமே ச க்ருகரம் தக்ஷிணேகரே
ஒட்யாணபத்த கச்சம் ச ஸர்வாலங்கார பூஷிதம்

தப்தசாமீகராபஞ்ச சக்தித்வய ஸமன்விதம்
கருப்பண்ணஸ்வாமிநம் தம் வந்தே பீடேஸுஸம்ஸ்திதம்

கனக காஞ்சன ப்ரபா சக்தித்வய ஸமன்விதம்

காத்தவராயஸ்வாமி தியானம்

ரக்தவர்ணம் த்விநயநம் வ்ருத்தாளகவிபூஷிதம்
தீர்கக்ருஷ்ணத்ருடச்மச்ரும் க்ரூரத்ருஷ்டியுதம் சுபம்

கட்கம் தண்டஞ்ச பிப்ராணம் ஸர்வாலங்கார சோபிதம்
ஸுரத்நபாதுகாரூடம் வீராஸநப்ரதிஷ்டிதம்

வாணிஜ்யவிப்ரகன்யேதி சக்தித்வய ஸமந்விதம்
காத்தவராயாக்யம் தேவம் கௌமாரீ புத்ரகம் பஜேத்

கருப்பன் ஸ்வாமி தியானம்

ரக்தாக்ஷம் க்ருஷ்ணவஸ்த்ரஞ்ச த்விபுஜம் மோஹனாக்ருதிம்
கட்கம் தண்டஞ்சபிப்ராணம் ஸர்வாலங்கார சோபினம்

பார்ச்வே குக்குடஸம்யுக்தம் மஹாவிக்ரமசாலினம்
கருப்பன்னிதி விக்யாதம் ஸவாமிநம் பாவயேத் ஸதா

வாளிமுனி தியானம்

ரக்தவர்ணம் த்விநேத்ரம் ச ஜடாமகுடமண்டிதம்
க்ருஷ்ணாம்பரகச்சயுதம் கம்பீராக்ருதி சோபிதம்

கட்கம் கேடஞ்ச பிப்ராணம் கர்ணகுண்டலபூஷிதம்
நிகுஞ்சித வாமஜாநும் பூஸ்ப்ருஷ்டதக்ஷஜங்ககம்

சக்தித்வயஸமாயுக்தம் பார்ச்வயோருபயோரபி
ஸர்வாலங்கார ஸம்யுக்தம் பஜேத் வாளிமுனீச்வரம்

காட்டேரீ தியானம்

ரக்தவர்ணாம் த்விபாகும் ச கோரவக்த்ராம் த்ரிநேத்ரகாம்
ஊர்த்வோத்பத்த ஸுகேசாம்ச வ்யாவ்ருத்தாஸ்யாம் குரூபிணீம்

சுஷ்கோதராம் ஸூக்ஷ்மவஸத்ராம் த்ருதசங்காக்ஷமாலிகாம்
தண்டசக்ராப்ஜ சூலாஸி டக்கா கேடாதிகம் ததா

கண்டாளி மணயச்சைவ ததாநாம் தக்ஷவாமயோ:
காட்டேரீம் பாவயே கர்ப்ப சிசுமாம்ஸாஸ்ருகத்திநீம்.