செவ்வாய், 18 செப்டம்பர், 2018

சூரியன் கோயில்களில் எப்போது வழிபட வேண்டும்?

தை மாதத்தில் சூரியன் தன் பயணப் பாதையைத் தென் திசையிலிருந்து வடக்கு திசைக்கு மாற்றிக் கொள்வதால், இதனை உத்தராயண புண்ணிய காலம் என்று போற்றுவர்.சூரியனுக்கு ஆயிரம் திருப்பெயர்கள் உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன. அதில் இருபத்தோரு பெயர்கள் மிகவும் சிறப்பானவை என்று சூரிய புராணம் கூறுகிறது. விகர்தனன், விவஸ்வான், மார்த் தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப் பிரகாசன், ஸ்ரீமான், கிரிகேஸ்வரன், லோகரட்சகன், திரிலோகன், கர்த்தா, அர்த்தா, தமிஸரகன், தாபனஸ், சசி, சப்தஸ்வர வாகனன், தாபனஸ், கபஸ்தி ஹஸ்தன், பிரம்மா, சர்வ தேவன், லோக சாட்சிகன் என்பவையாகும். பல சிறப்புப் பெயர்களைப் பெற்ற சூரியனுக்கு, இந்தியாவில் பல திருத்தலங்களில் கோயில்கள் உள்ளன. அதே போல், சூரியன் வழிபட்ட கோயில்களும் உள்ளன. இருந்தாலும், உதயம், மதியம், அஸ்தமனம் ஆகிய மூன்று காலங்களிலும் வழிபடக்கூடிய கோயில்கள் வட இந்தியாவில் உள்ளன.
செவ்வாய் வருவாய் நலம் பல தருவாய்!

செவ்வாயில் பொருள் வாங்கி வருவாயை உயர்த்துவோம்: தமிழகத்தில் செவ்வாய் கிழமையில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை, பொருட்கள் வாங்குவதில்லை என்று வழக்கம் இருக்கிறது. உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன் பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். செவ்வாய்கிழமையை மங்கள்வார் என்று குறிப்பிடுவர். அந்நாளில், வடமாநிலங்களில் மங்கல நிகழ்ச்சி நடத்த தயங்குவதில்லை. தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். கல்வியறிவு மிக்க இந்த மாநிலத்தில் செவ்வாய் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆடியை சூன்ய மாதம் என்பர். ஆனால், தள்ளுபடி விற்பனையோ அமோகமாக நடக்கிறது.

நிலம் வழங்கும் கிரகம்: பெருமாளின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை ஒதுக்குவது பூமித்தாயைப் புறக்கணிப்பதாகும். இந்நாளில் மங்கலப்பொருட்களை வாங்குவதும், சுபநிகழ்ச்சி நடத்துவதும் நம்மைச் சுமக்கும் பூமித்தாய்க்கு செலுத்தும் நன்றிக்கடனாகும். பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடுவது நன்மை தரும். பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம் தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர்.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அங்காரகன் ஆச்ரயாமி என்று செவ்வாயைப் போற்றுகிறார். நலத்தைத் தருபவனே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! எளியவர்களைக் காப்பவனே! என்று பாடுகிறார். செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.ஜாதகத்தில், செவ்வாயின் பலத்தை பொறுத்தே  நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும். ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி. ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ளது. செவ்வாயை வழிபட்டால் ரத்தஅழுத்தம், உஷ்ணம், கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

கிழமை ஒரு தடையல்ல:அட்சயதிரிதியை, ஆடிப்பெருக்கு நாட்களில் மக்கள் பொன், பொருளை வாங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். 1988 ஏப்ரல்19, 1992 மே5, 1995 மே2ல், அட்சயதிரிதியை செவ்வாயன்று வந்தது. 2010 ஆகஸ்ட்3ல் ஆடிப்பெருக்கு செவ்வாயில்அமைந்தது. இந்த நாட்களில் பொன், பொருள் வாங்கியவர்கள், கிழமையை மனதில் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், செவ்வாயன்று பொருள் வாங்கும் சிலர் வழக்கத்தை விட அதிக பலனே பெறுகின்றனர்.
அன்னதானத்தின் அவசியம் தெரியுமா?

அனைவருக்கும் கேட்டவரம் அனைத்தையும் அளித்த கொடையாளி கர்ணன். தன் வாழ்நாளின் ஒருவரை அமர்வித்து உணவளித்து அன்னதானம் செய்ததில்லை. இறந்தபின் சொர்க்கம் அடைந்தான். அங்கு அனைவரும் பசி, தாகம் இன்றி சுகமாக இருந்தனர். ஆனால் கர்ணனுக்கு மட்டும் கடும் பசி எங்கு தேடியும், யாரை கேட்டும் உணவு கிடைக்கவில்லை. நாரதரை கண்டு, எனக்கு மட்டும் சொர்க்கத்தில் ஏன் இந்த அவல நிலை? எனக் கேட்டான். நாரதர், கர்ணா! உனது ஆள்காட்டி விரலை வாயில் இட்டு சுவை என்றார். கர்ணனும் அப்படியே செய்ய பசியும் தீர்ந்தது. ஆனால் வாயிலிருந்து விரலை எடுத்தாலோ மீண்டும் பசித்தது. காரணம் கேட்ட கர்ணனிடம் நாரதர் நீ உனது வாழ்நாளில் ஒருவருக்காவது அன்னதானம் செய்ததில்லை. ஒரு சமயம் துரியோதனன் வீட்டில் அன்னதானம் நடைபெற்றது. பசியால் வாடிய ஒருவன் உன்னிடம் வந்து விசாரித்த போது, அன்னதானம் நடக்கும் இடத்தை நீ உனது ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டினாய். அந்த பெரும் புண்ணியம் உனது ஆள் காட்டி விரலில் தொற்றியுள்ளது. அந்த விரலைச் சுவைத்தவுடன் பசி நீங்குகிறது. எனவே தான் தானத்தின் சிறந்தது அன்னதானம் என்றார். எனவே தான் கர்ணன், அன்னதானம் செய்வதற்காகவே மறுபிறவி எடுக்க விரும்பி, சிவனிடம் வரம் கேட்டுப் பெற்றான். கர்ணனின் மறுபிறவியே சிறுத்தொண்ட நாயனார். பக்தரின் அன்னதான அவசியத்தை உலகுக் உணர்த்தவே சிவன் வீர சைவ அடியாராக வந்து பிள்ளைக்கறி கேட்டு அருள் புரிந்தார். இக்கதையையே சீராளன் கதை என கிராமங்கள் தோறும் பல நூற்றாண்டுகளாக சிவபக்தர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
வீடு கட்டுவதற்குறிய மனையடி சாஸ்திரப் பலன்!

மனையடி சாஸ்திரப் பிரகாரம் வீடு கட்டுவதற்கும் வீட்டிற்குள் அறைகள் கட்டுவதற்கும் அவ்வீட்டின் எஜமானனால் காலடி அளந்ததன் பேரில் அடியைக் கண்டு அறிந்துள்ள அகலத்திற்கும் நீளத்திற்கும் பலன்கள் அறியவும். 6- அடி நன்மை, 7- அடி தரித்திரம், 8- அடி நல்ல பாக்கியம் தரும், 9- அடி கெடுதல் தரும், 10- அடி ஆடுமாடு சுபிட்சம், 11- அடி பால்பாக்கியம், 12- அடி விரோதம், செல்வம் குறையும், 13- அடி ஆரோக்கியம் குறைவு, 14- அடி சஞ்சலம், மனக்கவலை நஷ்டம், 15- அடி காரியபங்கம், பாக்கியம் சேராது, 16- அடி மிகுந்த செல்வமுண்டு, 17- அடி அரசனைப்போல் பாக்கியம் சேரும். 18- அடி அமர்ந்த மனை பாழாம், 19- அடி மனைவி, புத்திரர், கவலைதரும், 20- அடி ராஜயோகம், 21- அடி பசுக்களுடன் பால் பாக்கியம் தரும், 22- அடி எதிரி அஞ்சுவான். மகிழ்ச்சி 23- அடி வியாதிகளுடன் கலங்கி நிற்பான், 24- அடி வயது குன்றும், மத்திம பலன், 25- அடி தெய்வ கடாக்ஷமில்லை, 26- அடி இந்திரனைப் போல் வாழ்வார், 27- அடி மிக்க செல்வ சம்பத்துடன் வாழ்வார், 28- அடி செல்வம் சேரும், 29- அடி பால்பாக்கியம், செல்வம் தரும், 30- அடி லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று வாழ்வார், 31- அடி சிவ கடாக்ஷத்துடன் நன்மை பெருகும், 32- அடி முகுந்தனருள் பெற்று வையகம் வாழ்வார், 33- அடி நன்மை, 34- அடி விட்டோட்டும், 35- அடி தெய்வகடாக்ஷமுண்டு, 36- அடி அரசரோடு அரசாள்வார், 37- அடி இன்பமும் லாபமும் தரும், 38- அடி பேய் பிசாசு குடியிருக்கும், 39- அடி இன்பம் சுகம் தரும், 40- அடி என்றும் சலிப்புண்டாகும், 41- அடி இன்பமும் செல்வமும் ஓங்கும், 42- அடி லக்ஷ்மி குடியிருப்பாள், 43- அடி சிறப்பில்லை, தீங்கு ஏற்படும், 44- அடி கண் போகும், 45- அடி துர்புத்திரர் உண்டு, 46- அடி வீடு ஓட்டும், 47- அடி எந்நாளும் வறுமை தரும், 48- அடி வீடு தீப்படும், 49- அடி மூதேவி வாசம், 50- அடி பால்பாக்கியம் ஏற்படும், 51- அடி வியாஜ்யம், 52- அடி தான்யமுண்டு, 53- அடி வீண்செலவு, 54- அடி லாபம் தரும், 55- அடி உறவினர் விரோதம், 56- அடி புத்திரர் உற்பத்தி, 57- அடி புத்திர அற்பம், 58- அடி விரோதம், 59- அடி சுபதரிசனம், 60- அடி பொருள் விருத்தி உண்டு, 61- அடி விரோதமுண்டு 62- அடி வறுமை தரும், 63- அடி இருப்பு குலையும், 64- அடி நல்ல சம்பத்து தரும், 65- அடி பெண் நாசம், 66- அடி புத்திரபாக்கியம், 67- அடி பயம், 68- அடி திரவிய லாபம், 69- அடி அக்னி உபாதை, 70- அடி அன்னியருக்கு பலன் தரும், 71- அடி இராசியுப்பிரியம், 72- அடி வெகுபாக்கியம், 73- அடி குதிரை கட்டி வாழ்வான், 74- அடி பிரபல விருத்தி, 75- அடி சுகம், 76- அடி புத்திர அற்பம், 77- அடி யானை கட்டி வாழ்வான், 78- அடி புத்திர அற்பம், 79- அடி கன்று காலி விருத்தி, 80- அடி லக்ஷ்மிவாசம், 81- அடி இடி விழும், 82- அடி தோஷம் செய்யும், 83- அடி மரண பயம், 84- அடி சௌக்கிய பலன், 85- அடி சீமானாவான் 86- அடி இம்சை உண்டு, 87- அடி தண்டிகை உண்டு, 88- அடி சௌக்கியம், 89- அடி பலவீடுகள் கட்டுவான், 90- அடி யோகம், பாக்கியம் தரும், 91- அடி வித்துவாம்சமுண்டு, 92- அடி ஐஸ்வரியம், 93- அடி தேசாந்திரம் வாழ்வான், 94- அடி அன்னிய தேசம் போவான், 95- அடி தனவந்தன், 96- அடி பிறதேசம் செல்வான், 97- அடி கப்பல் வியாபாரம், விலை மதிப்புள்ள வியாபாரம் போவான், 98- அடி பிறதேசங்கள் போவான், 99- அடி இராஜ்ஜியம் ஆள்வான், 100- அடி ÷க்ஷமத்துடன் சுகத்துடன் வாழ்வான்.

அவரவர்கள் ஜனித்த ராசிக்கு வாசற்கால் வைக்கும் திக்குகள் விவரம்

ரிஷபம். மிதுனம், கடக ராசியில் ஜெனனமானவர்கள் வடக்கு வாயில் வீடும், சிம்மம், கன்னி, துலாம் ராசியில் ஜெனனமானவர்கள், கிழக்கு வாயில் வீடும், தெற்கு வாயில் வீடும், விருச்சிகம், தனுசு, மகர ராசியில் ஜெனனமானவர்கள் தெற்கு வாயில் வீடும், கும்பம், மீனம் மேஷ ராசியில் ஜெனனமானவர்கள் தெற்கு வாயில் வீடும் கட்டினால் சுபங்கள் விசேஷமாக நடக்கும்

வீடு கட்ட வேண்டிய மாதங்கள் விவரம்:

வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, உத்தமம்?
எல்லோருக்கும் சொந்தமான பிள்ளை(யார்)!

மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும் சாணியிலும் கூட பிள்ளையாரைப் பிடித்துப் பூஜை செய்து விடலாம். அவர் எளிதில் சந்தோஷப்படுகிறவர். எங்கே, எப்படி, எதில் கூப்பிட்டாலும் உடனே வந்து அந்தக் கல்லோ, களிமண்ணோ அதற்குள்ளிருந்து கொண்டு அருள் செய்வார். பாவித்த மாத்திரத்தில் எந்த மூர்த்தியிலும் அவர் வந்து விடுகிறார் என்று சொல்வதுண்டு. மற்ற ஸ்வாமிகளைத் தரிசனம் செய்வது என்றால், நாம் அதற்காக காலம் பார்த்து குளித்து முழுகி, அர்ச்சனை சாமான்கள் வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போனாலும் நேரே அந்த ஸ்வாமியிடம் போய்விட முடியாது. பிரகாரம் சுற்றிக் கொண்டு உள்ளே போக வேண்டும். அப்போதும் கூட ஸ்வாமிக்குப் பக்கத்தில் போகக் கூடாது. கொஞ்சம் தள்ளித் தான் நிற்க வேண்டும். பிள்ளையார் இப்படி இல்லை, தெருவிலே நடக்கும் போது தற்செயலாகத் தலையைத் தூக்கினால் அங்கே ஒரு முக்கில் பிள்ளையார் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஒரு பேதமும் இல்லாமல் யாரும் கிட்டே போய்த் தரிசிக்க முடிகிறது. பிள்ளையாருக்கு எல்லோரும் சொந்தம். பிள்ளையார் எல்லோருக்கும் சொந்தம். குழந்தைகளுக்காக நீதி நூல்களைச் செய்த ஒளவையார் பெரியவர்களுக்குக் கூட எளிதில் புரியாத பெரிய யோக தத்துவங்களை வைத்துப் பிள்ளையார் மீதே ஒரு ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். அதற்கு விநாயகர் அகவல் என்று பெயர். அளவில் சின்னது தான் அந்த அகவல் ஸ்தோத்திரம். எல்லோரும் அகவல் சொல்லி அவரை வழிபடவேண்டும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதில் அதிக உரிமை உண்டு. அவ்வை பெண்ணாகப் பிறந்ததால் பெண்கள் எல்லோருக்கும் அவளுடைய இந்த ஸ்தோத்திரத்தில் பாத்தியதை ஜாஸ்தி. கொஞ்சம் கட முட என்றிருக்கிறதே, அர்த்தம் புரியவில்லையே என்று பார்க்க வேண்டாம். அர்த்தம் புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவ்வையின் வாக்குக்கே நன்மை செய்யும் சக்தி உண்டு என்று நம்பி அகவலை பொட்டை நெட்டுருப் போட்டுச் சொன்னாலும் போதும் அதனால் ÷க்ஷமம் அடையலாம். சொல்லச் சொல்ல தானே அர்த்தம் புரியும். பிள்ளையாரே அது புரிவதற்கான அநுக்கிரஹத்தைச் செய்வார்.
வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!

1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.

2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.

3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.

4. முருகன்: முருகு  அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.

5. குருபரன் : கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.

6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.

7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.

8. கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.

9. கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.

10. சரவணபவன் : சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.

11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.

12. சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.

13. செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.

14. சேந்தன் : செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.

15. சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.

16. விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.

17. வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.

18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.

19. சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.

20. சுப்ரமணியன் : சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.

21. வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.

22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.

23. மயில்வாகனன் : மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.

24. தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின்  12 தோள்களை குறிக்கும்.  18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும்.  ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

பாம்பன் சுவாமிகள் விளக்கம்

ஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.
ஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.
சௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.
க்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.
ஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்.
வரலாற்றுப் பார்வையில் வேதங்களின் காலம்!

இந்தியாவின் தர்மம் இலக்கியம், கலை, கல்வி போன்றவற்றிற்கு மூலகாரணமாக இருப்பவை வேதங்கள். இவை பற்பல மகரிஷிகளால் இயற்றப்பட்டவை. தங்கள் ஞானக் கண் திருஷ்டியால் அறிந்து அனுபவித்தவற்றை அவர்கள் வேதமாக்கினர். பழமையும், புனிதமும் கொண்டிருப்பதால் வேதங்களை அபௌருஷம் என்பார்கள். மனிதனால் இயற்றப் பெறாமல் இறைவனால் அருளப் பெற்ற ஞானக் களஞ்சியம் என்பது பொருள். இந்து தர்மங்கள் என்னென்ன என்பதை எடுத்துரைக்கும் மனு ஸ்மிருதி எனப்படும் மனு தர்மம், வேதங்களையே அடிப்படையாகக் கொண்டது. வேதங்களில் உள்ள கருத்துகள் பெரும்பாலும் தார்மிக காரியங்களில் பயன்படுபவை. இந்தியாவில் தோன்றியுள்ள அத்தனை மதங்களும் சம்பிரதாயங்களும் வேதங்களிலிருந்து உண்டானவையே. வேதங்களைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் அனைவரும் ஒரே கோட்பாட்டை உடையவர்களாகவே உள்ளனர். ஆனால், வேதங்கள் தோன்றிய காலத்தைப் பற்றிக் கூறும்போது தான் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகுள் எழுகின்றன. இந்தியப் பண்பாட்டுப் பராம்பரியத்தைப் போற்றும் அறிஞர்கள், வேதங்களின் காலத்தை நிர்ணியக்கும் விஷயத்தில் மௌனமாக இருக்கிறார்கள். அவர்கள் இதைப் பற்றி பேச விரும்புவதில்லை.

வேதங்கள் அபௌருஷம் என்பதிலேயே அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். வேத காலத்து மகரிஷிகள் வேத மந்திரங்களைக் கண்டறிந்தவர்களே தவிர, படைத்தவர்கள் அல்லர் என்பது இவ்வகை அறிஞர்களின் ஒருமித்த கருத்து. வரலாற்றுப் பார்வையில் வேதங்களை ஆராய்ந்த மேல்நாட்டு அறிஞர்களும், இந்திய அறிஞர்களும் வேத காலத்தை நிர்ணயிக்க முயன்றிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துப்படி, வேதங்களில் பழமையானது ரிக் வேதம். அது தோன்றிய காலம் கி.மு. 1200. மாக்ஸ்முல்லர், ரிக்வேதம் இயற்றப்பட்ட காலம் 3200 ஆண்டுகளுக்கு முன் என்று நிர்ணயிக்கிறார். ஆனால் வேத-ஸம்ஹிதைகளிலும், கிரந்தங்களிலும் ஜோதிடம் பற்றிய பல குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு லோகமான்ய பால கங்காதர திலகர், ஜெர்மானிய அறிஞர் யாகோவி ஆகிய இருவரும் தனித்தனியே வேதத்தின் ஆரம்ப காலம் கி.மு. 4000 என்று நிர்ணயித்திருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் புகழ்மிக்க ஜோதிடராக விளங்கிய பாலகிருஷ்ண தீட்சிதர், சதபத கிரந்தத்தைக் கொண்டு ஜோதிடபூர்வமான ஆராய்ச்சி நடத்தி ரிக்வேத காலம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதிப்படுத்துகிறார். இது திலகர் குறிப்பிட்ட காலத்துக்கும் சிறிது முற்பட்டது. திலகர் ரிக்வேதத்தைக் கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தி, பல பிரமாணங்களை சேகரித்தார். அவற்றை ஆதாரமாகக் கொண்டு அவர் கூறுகிறார்: வசந்த காலத்தில் மிருகசீரிஷ நட்சத்திர நாளில் ரிக்வேதம் தோன்றியது. தைத்திரீய ஸம்ஹிதையின் படி, பால்குன (பங்குனி) பவுர்ணமியன்று வருஷப் பிறப்பு கொண்டாடி வந்திருக்கிறார்கள். ஆகவே, தேவர்களின் தாய் அதிதியின் காலம் இந்தியப் பண்பாட்டின் மிகப் பழமை பொருந்திய காலமாக இருக்க வேண்டும் என்றும் அது கி.மு. 6000-4000 இரண்டுக்கும் இடைப்பட்ட காலமாக இருக்க வேண்டும் என்றும் திலகர் கூறுகிறார். ஆனால் மகா சூத்ரங்கள் குறிப்பிட்டுள்ள துருவ நட்சத்திரத்தின் தோற்றத்தை ஆதாரமாகக் கொண்டு வேதகாலத்தை கி.மு. 4000 என்று ஜெர்மன் அறிஞர் யோகோவி அறுதியிடுகிறார்.

திலகர் வேதகாலத்தை நான்கு பிரிவுகளாகக் கொள்கிறார்.

1. அதிதி காலம் (கி.மு. 6000-4000)
2. மிருகசீரிஷ காலம் (கி.மு. 4000-2000)
3. கிருத்திகை காலம் (கி.மு. 2500-1400)
4. கடைசி காலம் (கி.மு. 1400-500).
விரதங்களும் அவற்றின் பலனும்!

நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.

சோமவார விரதம்

நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்

தெய்வம் : சிவபெருமான்

விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.

பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை

சிறப்பு தகவல் :  கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.

பிரதோஷம்

நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.

தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்

விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.

பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.

சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.

சித்ரா பவுர்ணமி விரதம்

நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்

தெய்வம் : சித்திரகுப்தர்

விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.

தை அமாவாசை விரதம்

நாள் : தை அமாவாசை

தெய்வம் : சிவபெருமான்

விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்

பலன் : முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி

சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

கந்தசஷ்டி விரதம்

நாள் : ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்

தெய்வம் : சுப்பிரமணியர்

விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.

பலன் :  குழந்தைப்பேறு

மங்களவார விரதம்

நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்

தெய்வம் : பைரவர், வீரபத்திரர்

விரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்

பலன் : பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்

உமா மகேஸ்வர விரதம்

நாள் : கார்த்திகை மாத பவுர்ணமி

தெய்வம் : பார்வதி, பரமசிவன்

விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.

பலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

விநாயக சுக்ரவார விரதம்

நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டித்தல்

தெய்வம் : விநாயகர்

விரதமுறை : பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.

பலன் : கல்வி அபிவிருத்தி

கல்யாணசுந்தர விரதம்

நாள் : பங்குனி உத்திரம்

தெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)

விரதமுறை : இரவில் சாப்பிடலாம்

பலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்

சூல விரதம்

நாள் : தை அமாவாசை

தெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்

விரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்

பலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்

இடப விரதம்

நாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி

தெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்

விரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.

பலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு

சுக்ரவார விரதம்

நாள் : சித்திரை மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்

தெய்வம் : பார்வதி தேவி

விரதமுறை : பகலில் ஒருபொழுது மட்டும் சாப்பிடலாம்

பலன் : மாங்கல்ய பாக்கியம்

தைப்பூச விரதம்

நாள் : தை மாத பூச நட்சத்திரம்

தெய்வம் : சிவபெருமான்

விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.

பலன் : திருமண யோகம்

சிவராத்திரி விரதம்

நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி

தெய்வம் : சிவன்

விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.

பலன் : நிம்மதியான இறுதிக்காலம்

திருவாதிரை விரதம்

நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்

தெய்வம் : நடராஜர்

விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.

பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்

சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.

கேதார விரதம்

நாள் : புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.

தெய்வம் : கேதாரநாதர்

விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.

பலன் : தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்

விநாயகர் சஷ்டி விரதம்

நாள் : கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள்

தெய்வம் : விநாயகர்

விரதமுறை : ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு கடைசிநாள் முழுமையாக பட்டினி இருக்க வேண்டும்.

பலன் : சிறந்த வாழ்க்கைதுணை, புத்திசாலியான புத்திரர்கள் பிறத்தல்.

முருகன் சுக்ரவார விரதம்

நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.

தெய்வம் : சுப்ரமணியர்

விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.

பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

கிருத்திகை விரதம்

நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.

தெய்வம் : சுப்பிரமணியர்

விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்

பலன் : 16 செல்வமும் கிடைத்தல்

நவராத்திரி விரதம்

நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை

தெய்வம் : பார்வதிதேவி

விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம். 9ம் நாளான மகாநவமி அன்று (சரஸ்வதி பூஜை) முழுமையாக சாப்பிடக் கூடாது.

பலன் : கல்வி, செல்வம், ஆற்றல்.
ஆலயமும் அர்ச்சகர்களும்...

ஆலயத்தைப் பற்றிய இவ்விஷயத்தில் அர்ச்சகரைப் பற்றியும் சொல்ல வேண்டியது அவசியம்.

இறைவனுக்கும், பக்தனுக்கும் நடுவில் தரகரைப் போல அர்ச்சகர் எதற்கு என்று ஒரு சில அறிவு ஜீவிகள் கேள்வி கேட்கிறார்கள். இவர்கள் ஆலயத்தில் அர்ச்சகரின் பங்கு என்ன என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் தரகர் என்பவர் ஒரு பொருளை வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையில் செயல்படுபவரே. அப்படியானால் ஆலயத்தில் விற்கப்படும் பொருள் என்ன? விற்பவர் யார்? என்பதெல்லாம் தெரியவில்லை.

மற்றொரு சாரார் அர்ச்சகர்கள் தாங்கள் உலக நன்மையின் பொருட்டு பூஜை செய்கிறோம் என்று கூறுகிறார்கள் அவர்கள். எங்களை காப்பாற்றிக் கொள்ள எங்களுக்கு தெரியும் எங்களுக்காக அர்ச்சகர்கள் பூஜை செய்ய வேண்டாம். நாங்கள் செய்து கொள்கிறோம் என்கிறார்கள். இவர்கள் உலகம் என்பது இவர்கள் மட்டுமே என்று நினைப்பார்கள் போலும்.

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற காரணத்தினாலோ என்னவோ? ஆனால் ஆலய வழிபாட்டிற்கு அடிப்படையாக விளங்கும் ஆகமங்கள் அர்ச்சகரைப் பற்றியும், ஆலய வழிபாட்டின் நோக்கத்தை பற்றியும் தெளிவாக விளங்குகின்றன.

ஆலய வழிபட்டின் நோக்கம்.

सर्वेशाम् रक्ष्णार्थाय ग्रामाधिशु विसेशध:
स्थापिधम् विढिना लिन्गम् सुरैर्वा मुनिबिर्नरै:
स्वयमुध्बूथ लिन्ग्न्ज प्रथिमान्जैस्वराथ्मकम्
थथ्परार्थम् समाक्याथम् सर्वेशाम् आथ्मन: फलम्.

சர்வேஷாம் ரக்ஷணார்த்தாய, க்ராமாதிஷு விசேஷத:.
ஸ்தாபிதம் விதிநா லிங்கம், சுரைர்வா முநிபிர்நரை:.
ஸ்வயமுத்பூத லிங்கஞ்ச ப்ரதிமாஞ்சேஸ்வராத்மகம்..

பொருள்.

{உலகிலுள்ள} அனைவரின் நல்வாழ்வின் பொருட்டு கிராமம் {நகரம், பட்டணம்} போன்ற இடங்களில் விஷேசமான முறையில் தேவர்களாலோ, முனிவர்களாலோ, அல்லது மனிதர்களாலோ முறைப்படி ஸ்தாபிக்கப்பட்ட லிங்கத்தினையோ. தான் தோன்றியாகிய ஸ்வயம்பு லிங்கத்தினையோ, இறை தன்மை பொருந்திய சிலைகளையோ {பூஜை செய்வது} என்பது பரார்த்தம் எனப்படும். {அந்த பரார்த்த பூஜையின்} பலன் அனைத்து உயிர்களுக்கும் உரியதாகும்.

அர்ச்சகர் யார்? அவரது பணி என்ன?

சிவாலயங்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு ஆதிசைவர்கள், சிவப்ராஹ்மணர், சிவேதியர், சிவ விப்ரர், சிவாசார்யர் போன்ற பல பெயர்கள் உண்டு. அவர்கள் பரார்த்த பூஜை எனும் திருக்கோயில் பூஜை செய்தவர்கள் பொருட்டு சிவபெருமானால் நேரடியாக தீக்ஷிக்கப் பெற்ற கௌசிகர் முதலான ரிஷிகளின் வம்சத்தில் வந்தவர்கள் என்றும் பூஜையானது அவர்களாலேயே செய்யப்பட வேண்டும் என்பதும் ஆகமங்களும் பெரிய புராணமும் கூறும் செய்தி.

“பரார்த்த யஜனம் கார்யம், சிவ விப்ரைஸ்து நித்யச:”_சிவாகமம்.

परार्थम् यजनम् कार्यम्, सिव विप्रैस्थु निथ्यस:

பரார்த்த பூஜை எனும் திருக்கோயில் பூஜையானது ஆதிசைவரான சிவவிப்ரராலேயே தினமும் செய்யப்பட வேண்டும்.

எப்போதும் இனியபிரான் இன்னருளால் அதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே,
அப்போதைக் கப்போதும் ஆர்வமிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார் முதற்சைவராம் முனிவர்._ சேக்கிழார் ஸ்வாமிகள் {பெரிய புராணம்}

தெரிந்துனரின் முப்போதும் செல்காலம் நிகழ்காலம்
வருங்காலமானவற்றின் வழிவழியே திருத்தொண்டின்,
விரும்பியவர்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன அப்
பெருந்தகையார் குலப்பெருமை யாம் புகழும் பெற்றியதோ._ சேக்கிழார் ஸ்வாமிகள் {பெரிய புராணம்}

மேற்கூறிய கருத்துக்களின் மூலம் அர்ச்சகர் தரகர் அல்ல என்பதும் அவர் சிவபெருமானின் ஆணையால் தான் உலக நன்மைக்கான பரார்த்த பூஜைகளைச் செய்கிறார் என்பதும் தெளிவாக விளங்குகிறது.

இனி ஆலய பூஜையில் அர்ச்சகரின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.

திருகோவிலுள் ப்ரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகள் {விக்ரஹங்கள்} மூன்று காரணங்களால் தெய்வத்தன்மையை அடைகிறது என்று ஆகமங்கள் கூறுகின்றன.

“ அர்சகஸ்ய ப்ரபாவேந அர்சநஸ்யாதி சாயநாத், ஆபிருப்யாச்ச பிம்பாநாம் சிலாபவதி தேவகி"

अर्शकस्य प्रभावेन, अर्शस्याथि सायानाथ्
आभिरुप्यास्स बिम्बानाम्, सिलाभवथि धेवकि.

அர்ச்சகருடைய மனோபாவனையாலும், அர்ச்சனையின் சிறப்பாலும், விக்ரஹத்தின் அழகினாலும் சிலையானது தெய்வத்தன்மை அடைகிறது.

இறைவனது ஸாந்நித்யம் நிலை பெறுவதற்கு ஆச்சார்யனின் தவ வலிமையே காரணம் என்கிறது.

மற்றொரு வாக்யம்

“அர்சகஸ்ய தபோயோகாத், தேவ சாந்நித்ய ம்ருச்சதி:”

अर्शस्य थपोयोगाथ्, धेव सान्निढ्य म्रुछथि.

மூர்த்திகளை {விக்கிரஹங்களை} எண்ணை தேய்த்து, நீராட்டி, வஸ்த்திரம் சாற்றி தன் குழந்தைகயைப் போல கவனிக்கும் ஆச்சார்யன் {அர்ச்சகர்} தன்னை பல்வேறு நேரங்களில் எவ்வாறு நினைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

“ஆவாஹனாதி காலேது ஆசார்யோ குரு ரூப த்ருத்
அபிஷேகாத்யலங்காரே ஆசார்யோ மாத்ரு ரூபவாநு,
நைவேத்ய தூப தீபாதௌ அர்ஸ்நே மந்த்ர ரூபவாநு
ஸ்தோத்ர ப்ரதக்ஷிணே காலே ஆசார்யோ பக்த ரூபவாநு. _சிவாகமம்.

आवाहनाथि कालेधु आशार्यो गुरु रूप ध्रुक्
अभिशेकाध्यलन्गारे थ्वाशार्यो माथ्रु रूपवानु
नैवेध्य प्रधक्षिणे कालेथ्वाशार्यो भक्थ रूपवानु.

ஆவாஹனம் முதலான காலத்தில் ஆச்சார்யன் குரு ரூபமாகவும், அபிஷேக, அலங்கார காலத்தில் தாயைப் போலவும், நைவேத்யம் முதலான சமயத்தில் மந்த்ர ரூபமாகவும், ஸ்தோத்ரம், மற்றும் ப்ரதக்ஷிண காலத்தில் பக்தனைப்போலவும் ஆச்சார்யன் {அர்ச்சகர்} தன்னை பாவித்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வாக்யமோ இன்னும் ஒரு படி மேலாக 7 வித லிங்கங்களில் அர்ச்சகனும் ஒன்று என்று கூறுகிறது.

“ கோபுரே சிகரே த்வாரே, ப்ராகாரே பலி பீடகே.
அர்ச்சகே மூல லிங்கேச சப்த லிங்கஸ்ய தர்ஸநம்.”

गोबुरे सिखरे ध्वारे प्राकारे बलिपूटके
अर्श्के मूल लिन्गेश सप्थ लिन्गस्य धर्स्नम्.

அதையே "அர்ச்சகஸ்து ஹரஸ்ஸாக்ஷாத்" அதாவது அர்ச்சகர் சிவபெருமானே என்று ஒரு பழமொழி தெளிவு படுத்துகிறது.

இவ்வளவு பெருமை கொண்ட அர்ச்சகர்கள் இன்று கூலிக்கு வேலை செய்பவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அது அவர்கள் பிழை அல்ல. காலத்தின் கோலமே என்பதையும் அதன் காரணத்தையும் கீழ்க்காணும் திருக்குறள் உணர்த்துகிறது.

“ ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்,
காவலன் காவான் எனின்"_திருக்குறள்.

இதையே பாரதியும் சொன்னான்

“ பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்த்திரங்கள்" என்று. அது உண்மையே என்பதை நம்மால் நிதர்சநமாக காணமுடிகிறது. என்ன நடந்தாலும் நடக்கட்டும் ஆண்டவனே துணை என்பதை உணர்ந்து அர்ச்சகர்கள் தன் கடமையை செவ்வனே செய்யட்டும்.
அருள் தரும் அய்யனார் வழிபாடு!

அய்யனார் என்ற சொல்லானது அய்(ஐ) அன், ஆர் என்ற மூன்றால் ஆனதாகும். இதில் ஐ என்ற எழுத்து தலைவன் என்றும் அன் என்பது ஆன்பால் ஈரு ஆகும். ஆர் என்பது மரியாதைக்குரிய விருதியாகும். கிராமங்களில் ஊருக்கு வெளியே காடுகளிலும் கண்மாய் கரைகளை அடுத்தும் கோவில்கள் அமைத்து அய்யனார் கிராமத்தைக் காப்பவராகவும் விளைச்சலைப் பெருக்குபவராகவும்  கால்நடைகளைக் காப்பாற்றுபவராகவும் திகழ்கின்றன.கிராமத் தேவதை வழிபாடு விரைந்து பயனளிக்கும் என்ற நம்பிக்கை கிராமத்து மக்களிடம் மிகுந்து காணப்படுவதால் கருப்பர், வீரபத்திரர், காளியம்மன், மாரியம்மன் முதலியவைகளைக் காவல் தெய்வமாய் கருதி உத்திராயண காலத்தில் சிவராத்ரி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் பச்சை வாழை இலையைப் பரப்பி பொங்கல், பயறு வகைகள் வைத்துப் படைத்து தங்களுடைய வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகள் நன்கு நடைபெற வேண்டுமென்றும், தங்களுடைய கால்நடைச் செல்வங்களான மாடு, ஆடு, சேவல் முதலியவைகளை நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டுஎமன்றும் தங்களுக்குச் சொந்தமாயுள்ள கால்நடைகளைத் தானமாய் நேர்த்திக்கடன் என்று ஒன்றைவிட்டுச் செல்கின்றனர். இவைகளை கோயில் நிர்வாகம் ஏற்றுக் கொள்கின்றது. வழிபடல் சிறப்புற்று விளங்குகின்றது.

பழங்காலம் முதற்கொண்டே அய்யனார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் இலக்கியங்களில் இருக்கின்றன. சமணர்கள் கோயிலிலும் அய்யானர் தெய்வத்தைப் பரிவாரத் தெய்வமாய் வைத்து வழிபட்டு  வந்திருக்கின்றார்கள்அவர்கள் இவரை பிரம்மயட்சணர் என்றும் அழைத்து வருகின்றார்கள். யானை வாகனம் அவருக்குரியது என்றும் கூறி வழிபட்டு வருகின்றார்கள். அய்யனார் வழிபாட்டில் கருப்பர் மிகவும் முக்கியமானவராகும். இவர் பக்தர்களான சாமியடிகள் மீது இறங்கி வந்து அருள் பாலிப்பார். கிராமத்து விதிகளில் சாமியடிகள் மூலம் வலம் வந்து அங்குள்ள பேய், பிசாசு, ஏவல், பில்லி, சூன்யம், காலரா, அம்மை, பிளாக் நோய்களைத் தரும் தீயசக்திகளை விரட்டி விடுகின்றார் என்று கருதுகிறார்கள். எனவே இவ்வழிபாட்டு நாட்களில் சாமியாட்டம் சிறப்பாய் நடத்தப்படுகின்றது.தமிழகத்தில் உள்ள அய்யனார் வழிபாட்டிற்கும், மலையாளத்தில் உள்ள அய்யப்பன் வழிபாட்டிற்கும் அநேக ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அய்யப்பன் கோயிலிலும் பதினெட்டு படிகளாகும். அழகர்மலை கோயிலிலும் பதினெட்டுப்படிகளாகும். தமிழகத்தில் அய்யானருக்கு பூரணை, புஷ்கால  என்ற மனைவியர் உண்டு. கேரளாவில் ஆரியங்காவிலும் பூரணை புஷ்கலையுடன் ஐயப்பன் இருக்கிறார். தமிழகத்திலுள்ள சிறுதெய்வ வழிபாடு முழுவதும் அழகர்மலையிலுள்ள பதினெட்டாம்படி கருப்பர் வழிபாட்டிற்குக் கட்டுப்பட்டதேயாகும். அய்யனார் கோயில்களில் இருக்கும் தெய்வச்சிலைகள், எல்லாம் களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் வைத்து சுட்டு செய்யப்பட்டவைகளாய் இருந்து வருகின்றன.

அய்யப்பன்  என்ற சொல்லானது அருந்தமிழ் மொழிச் சொல்லாகும். அய் என்ற முதல் நிலையோடு அப்பன் என்ற இடை நிலையும் இணைந்து அய்யப்பன் என்றாயிற்று. அய்யனார் அய்யப்பன், அரிகரபுத்திரன், சாத்தன், சாஸ்தா போன்ற சொற்கள் எல்லாம் ஒருவரையே குறிக்கும் பல பெயர்களாகும். சாஸ்தா  என்ற சொல்லானது பிராகிருத மொழிக்குரியதாகும். இதற்கு சாத்தன் குதிரை வாகனன் என்று பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சொல் விளக்க அகராதி நூல்களான திவாகர நிகண்டு, பிங்கள நிகண்டு ஆகியவைகளில் பொருள் கூறப்பட்டுள்ளது.

அரனாகிய சிவபெருமானுக்கும், அரியாகிய மகாவிஷ்ணுவிற்கும் தோன்றிய அவதாரப் புருஷர் அய்யப்பனார் ஸ்வாமி ஆகும். அய்யப்பர் பரசுராமர் பூமி என்று கூறப்படும் கேரள மாநிலத்தில் பல அவதாரப் புருஷராய் விளங்குகின்றார். யோக நிலை அய்யப்பன், புலிவாகன அய்யப்பன், தவக்கோல அய்யப்பன், பூரணை புஷ்கலா தேவிகள் சமேதரராய் விளங்கும் அய்யப்பன் போன்ற அவதாரங்களில் இருந்து வருகின்றார்.

குளத்துப்புழையில் பாலகனாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
பந்தளத்தில் பாலகனாய் நின்ற கோலத்துடன் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றார். எருமேலியில் மகிஷியை வதம் செய்யும் கோலத்தில் காட்சியளித்துக் வருகின்றார். ஆரியங்காவில் பூரணை தேவி, புஷ்கலை தேவி சமேதகராய் குடும்பக் கோலத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றார். சபரிமலையில் சூரியன் தனுர்ராசியில் இருந்து மகரராசிக்கு மாறும் மகர சங்கிரம வேளையில் நெய் அபிஷேகம் செய்து கொண்டு அருட்பாலிக்கும் சாஸ்தாவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அச்சன்கோயிலில் பூர்ணா புஷ்கலா தேவிகளோடு தேரோட்டம் திருவிழா காணும் அருளாளராய் காட்சியளித்து வருகின்றார். இவரை பக்தர்கள் நாற்பத்தோறு தினங்கள் கருப்பு வஸ்திரம் அணிந்து கொண்டு இருமுடி கட்டி வந்து பதினெட்டுத் திருப்படிகள் வழியாக ஏறி வந்து விரதமாய் இருந்தே வழிபட்டு அருள் பெற்றுச் செல்கின்றனர்.

இங்கே கூறப்பட்டுள்ள அய்யனார் அய்யப்பன் இரு தெய்வங்களுடையத் திருப்பெயர்களைத் பொறுத்தமட்டில் இரண்டு சொற்களுமே ஒரே தெய்வத்திற்குரியதாகும். சொல் சேர்க்கையில் தான் வித்தியாசம் உள்ளதே தவிர சொற்கள் உணர்த்தும் பொருள் ஒன்றே தான். சோழ நாடு, பாண்டிய நாடுகளில் பூகோள நில அமைப்பு நீர்வளம்மிக்க நிலப்பரப்பாய், பசுமை வளம் மிக்க வனப்பரப்பாய் உள்ளது. இவர் இங்கு கிராமம்தோறும் கோயில் கொண்டுள்ளார். உள்ளூரிலேயே எல்லைப்புறங்களில் உள்ளார். இங்கு இருமுடி கட்டி எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அய்யப்பர் திருக்கோயில்கள் சேரநாட்டுப் பூகோள நில அமைப்பு மலைப்பகுதிகளாய் உள்ளது. அடர்ந்த காடுகள், அகலமான பாதையற்ற நடைபாதை, குன்றுகள் நிறைந்த மலைமீது உள்ளார். அங்கு போய் சேர அதிகத் தூரம் பயணம் செய்ய வேண்டிய அவசியம் <உண்டாகின்றது. இங்கு இருமுடி கட்டி எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் <உள்ளது. இருவரும் வீராசனத்தில் யோகப்பட்டையுடன் அபய வரதத் திருக்கரங்களுடன் தலையில் மகுடத்துடன் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். இருவருடைய உருவ வடிவ அமைப்பும் எல்லாம் ஒன்று போலவே உள்ளது. இருவர் கோயில்களும் குறிப்பிட்ட சில காலம் நேரங்களில் மட்டுமே நடை திறந்து பூஜைகள் செய்து நடை சாத்தியும் வழிபாட்டு முறைகள் நடத்தப்பட்டும் வருகின்றன.

தெய்வம் உள்ளது. எங்கும் எல்லாமுமாய் உள்ளது. தெய்வங்களை வழிபடுதல், உணர்தல், பூஜித்தல் என்பது அவரவர் அனுபவமாகும். இவர்கள் இருவரும் ஒருவரே. வெவ்வேறானவர் அல்ல. இவ்விரண்டிலும் கருத்துப் பேதம் எதுவுமே இல்லை. ஆனால் இத்தெய்வங்களை வழிபடும் முறைகள் பற்றி ஆன்மிகர்கள் அவர் பெற்ற அனுபவத்திற்கேற்ப பல படிகளைச் சொல்லி இருக்கின்றார்கள். அந்தந்தச் சூழ்நிலைக்கேற்ப வடிவங்கள் அவதார உருவங்கள் உள்ளன. தமிழகத்து அய்யனார் வழிபாட்டு முறைகளும், சபரிமலை அய்யப்பன் வழிபாட்டு முறைகளும் ஒன்றுபோலவே விளங்குகின்றன. இரண்டும் அந்தந்தக் சூழ்நிலைக்கேற்ப வளர்ச்சி பெற்று இன்று புகழ் பெற்று விளங்குகின்றன.
------------------------------------------------------------
 
மக்கள் காளிக்கு பயந்தது ஏன்?

ஒரு காலத்தில் காளிகோயில், துர்கை கோயில் என்றால் அதன் பக்கமே யாரும் போக மாட்டார்கள். அது பலி வாங்கி விடும், ரத்தத்தை குடித்து விடும் என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்பட்டதுண்டு. இந்த வதந்திக்கு காரணமானவர்கள் யார் தெரியுமா ? சாட்சாத் நமது பஞ்ச பாண்டவர்கள் தான். துரியோதனனிடம் சூதாடி நாட்டை இழந்தனர். அது மட்டுமின்றி , அவர்கள் காட்டுக்கு சென்று 12 ஆண்டுகள் யார் கண்ணிலும் படாமல் வாழ வேண்டிய நிலையும் ஏற்பட்டது. தவ முனிவர்களைத் தவிர மற்றவர் கண்ணில் பட்டால், அவர்களின் வனவாசம் மேலும் நீட்டிக்கப்படும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. அர்ஜூனன் தனது வலிமை மிக்க ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தின் புதரில் ஒளித்து வைத்தான். காலம் வரும் போது அவற்றை எடுத்துக் கொள்ளலாம் என இருந்தனர். அந்த வன்னிமரம் தான் அவர்கள் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த ஆயுதங்களைப் பாதுகாக்கும் பெட்டகமாக இருந்தது. அவர்கள் முனிவர்களின் ஆலோசனையின் பேரில், துர்க்கை அல்லது காளியின் இருப்படிமான குகைகளில் மறைந்து வாழ்ந்தார்கள். அந்த கோயில்களுக்குள் பயந்து போய் யாரும் நுழைவதில்லை. பாண்டவர்களுக்கு இனி வசதியாயிற்று. அஞ்சாநெஞ்சம் கொண்ட அவர்களைப் பாராட்டி பராசக்தியின் வடிவமான அந்த காளிதேவியே காட்சி கொடுத்தாள். காளியின் காட்சியை மனக்கண்ணால் கண்டால் கூட போதும். அவர்களைத் துன்பம் தொடராது. ஏழ்மை என்பதே இருக்காது. துக்கம், பயம் இதெல்லாம் நெருங்காது.

மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட 27 ஸ்லோகம் கொண்ட துர்கா நட்சத்திரமாலிகா ஸ்துதியை பக்தியுடன் ஒன்பது இரவுகள் சொன்னார்கள். அந்த இரவுகளே நவராத்திரி ஆயிற்று. அவர்களை அவள் ஆசிர்வதித்தாள். வெற்றிக்கு துணை நின்றாள்.
------------------------------------------------------------