வெள்ளி, 13 செப்டம்பர், 2013

அரிசியில் ஆண்டவன்!

"அன்னம் பரபிரம்ம சொரூபம் என்று சொல்வது மரபு. அதாவது, அன்னம் வேறு; ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்று தான் இதையே நாட்டுப்புறங்களில் "சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்கநாதர் என்றும் குறிப்பிடுவர். சிவபெருமானுக்கு, ஐப்பசிமாதம் பவுர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள பெரிய லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடப்பதைக் காண ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அன்னம் இட்ட கை சின்னம் கெட்டுப் போகாது. ஒருவர் செய்த அன்னதான புண்ணியபலன் பல பிறவிகளுக்கும் தொடரும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்னம் அரிசியிலிருந்து தயாராகிறது. "அரிசி என்ற சொல்லில் இருவித மந்திரங்கள் சேர்ந்துள்ளன. "அரி என்பதை விஷ்ணு என்றும், சிங்கம் என்றும் கூறலாம். பிரகலாதனைக் காப்பதற்காக பெருமாள் எடுத்த அவசரத்திருக்கோலம் சிங்க முகத்துடன் கூடிய நரசிம்ம அவதாரம். "சிஎன்பது சிவபெருமானைக் குறிக்கும். மகான்களுக்கு மட்டும் "சி என்ற மந்திரம் சொல்லி சிவனை வழிபட உரிமை இருக்கிறது. "சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று சாப்பாட்டு ராமன்களுக்கு உதாரணம் காட்டி சொல்வார்கள். உண்மையில், சோறால் அபிஷேகம் நடக்கும்  சிவலிங்கத்தை தரிசிப்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதையே இப்படி குறிப்பிட்டனர்.
ஆண்டிக்கோல முருகனை வணங்க தயக்கமா?

முருகன் தனது பலவிதமான கோலங்களில் அழகாக காட்சி தந்தாலும், அவரது ஆண்டிக்கோலத்தை (தண்டபாணி) வணங்கிட பெரும்பாலான பக்தர்கள்
யாரும் விரும்புவதில்லை. இக்கோலத்தில் உள்ள முருகனை வணங்கினால் அவரைப்போல நாமும், பொருள், செல்வங்களை இழப்போம் என நம்பிக்கை
கொண்டுள்ளனர். இது தவறாகும். பழநியில் கூட முருகனை ராஜ அலங்கார கோலத்தில் காட்டுகின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரரை வணங்கி விட்டு வெளியே வந்ததும் பிரகாரத்தில் இருக்கும் ஆண்டி முருகனை பார்க்காமலேயே சிலர் சென்று விடுவர். இது தவறான செயல். தண்டபாணியின் இக்கோலம் மாயையான உலகில் இருக்கும் நாம் நமது ஆணவம், கர்வம் போன்றவற்றை துறந்து போலியில் பற்றின்றி
வாழவேண்டும் என்பதையே உணர்த்துகிறது. மேலும், எத்தனை வேண்டுதல்களைச் செய்து எவ்வளவு செல்வங்களைப் பெற்றாலும், பிணமாய் எரியும்  போது எப்படி நிர்வாணமாய் வந்தோமோ அப்படி நிர்வாணமாகவே இறைவனை அடைவோம் என்பதையே ஆண்டிக்கோலம் காட்டுகிறது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்.

பேயாழ்வார் (1)
1. வேளுக்கை (அருள்மிகு அழகிய சிங்கர் திருக்கோயில், வேளுக்கை, காஞ்சிபுரம்)
திருமழிசை ஆழ்வார் (2)
1. கபிஸ்தலம் (அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம், தஞ்சாவூர்)
2. அன்பில் (அருள்மிகு வடிவழகிய நம்பி திருக்கோயில், அன்பில், திருச்சி)
நம்மாழ்வார் (17)
1. ஸ்ரீவைகுண்டம் (அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில் (நவ திருப்பதி), ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி)
2. நத்தம் (அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோயில் (நவ திருப்பதி), வரகுணமங்கை, நத்தம், தூத்துக்குடி
3. திருப்புளியங்குடி (அருள்மிகு காசினி வேந்தன் திருக்கோயில், (நவ திருப்பதி), திருப்புளியங்குடி, தூத்துக்குடி
4. திருத்தொலைவில்லி மங்கலம் (அருள்மிகு  ஸ்ரீநிவாசன் திருக்கோயில்(நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி , தூத்துக்குடி
5. திருத்தொலைவில்லி மங்கலம் (அருள்மிகு அரவிந்த லோசனன் திருக்கோயில், (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி,, தூத்துக்குடி
6. பெருங்குளம் (அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில், (நவ திருப்பதி), பெருங்குளம், தூத்துக்குடி)
7. தென்திருப்பேரை (அருள்மிகு மகா நெடுங்குழைக்காதர் திருக்கோயில்(நவ திருப்பதி), தென்திருப்பேரை, தூத்துக்குடி)
8. திருக்கோளூர் (அருள்மிகு வைத்த மாநிதிப் பெருமாள் திருக்கோயில்(நவ திருப்பதி), திருக்கோளூர், தூத்துக்குடி)
9. வானமாமலை (அருள்மிகு தோத்தாத்ரி நாதன் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி)

10. திருப்பதிசாரம் (அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருப்பதிசாரம், நாகர் கோவில், கன்னியாகுமரி)
11. திருவட்டாறு (அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, கன்னியாகுமரி)
12. திருவனந்தபுரம் (அருள்மிகு  அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம், கேரளா மாநிலம்)
13. ஆரம்முளா (அருள்மிகு  திருக்குறளப்பன் திருக்கோயில்,திருவாறன் விளை,பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்)
14. திருவண்வண்டூர் (அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர்,ஆழப்புழா, கேரளா மாநிலம்)
15. திருக்கடித்தானம் (அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்,கோட்டயம், கேரளா மாநிலம்)
16. திருக்காக்கரை (அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
17. திருச்செங்குன்றூர் (அருள்மிகு  இமையவரம்பன் திருக்கோயில்,செங்கனூர், திருச்சிற்றாறு, ஆழப்புழா, கேரளா மாநிலம்)
குலசேகர ஆழ்வார் (1)
1. திருவித்துவக்கோடு (அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு,பாலக்காடு, கேரளா மாநிலம்)
பெரியாழ்வார் (2)
1. திருவெள்ளறை (அருள்மிகு பூண்டரிகாக்ஷன் திருக்கோயில், திருவெள்ளறை, திருச்சி)
2. கடிநகர் (அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், தேவப்பிரயாகை, உ.பி.)
திருமங்கை ஆழ்வார் (45)
1. திருக்காவளம்பாடி (அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், திருக்காவளம்பாடி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
2. திருவெள்ளக்குளம் (அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், திருவெள்ளக்குளம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)
3. கீழைச்சாலை (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருத்தேவனார் தோகை, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
4. திருப்பார்த்தன் பள்ளி (அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், திருப்பார்த்தன் பள்ளி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
5. திருமணிக்கூடம் (அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருமணிக்கூடம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)
6. மணிமாடக் கோயில் (அருள்மிகு நாராயணன் திருக்கோயில், மணிமாடக் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
7. அரியமேய விண்ணகரம் (அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், அரியமேய விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
8. வன் புருத்÷ஷாத்தமம் (அருள்மிகு புருத்÷ஷாத்தமன் திருக்கோயில், வன் புருத்÷ஷாத்தமம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்
9. திருத்தேற்றி அம்பலம் (அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருத்தேற்றி அம்பலம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
10. வைகுந்த விண்ணகரம் (அருள்மிகு வைகுண்டநாதன் திருக்கோயில், வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்
11. செம்பொன் சேய் கோயில், (அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில், செம்பொன்சேய் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
12. தலைசிங்க நான்மதியம் (அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயில், தலைச்சங்காடு, நாகப்பட்டினம்)
13. இந்தளூர் (அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திருஇந்தளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்)
14. தேரழுந்தூர் (அருள்மிகு தேவதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம்)
15. காழிச்சீராம விண்ணகரம் (அருள்மிகு திரிவிக்ரமன் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம்)
16. திருவஹீந்தபுரம் (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருவகிந்திபுரம், கடலூர்)
17. திருச்சிறுபுலியூர் (அருள்மிகு அருள் மாகடல் திருக்கோயில், திருச்சிறுபுலியூர்,  திருவாரூர்)
18. திருக்கண்ணங்குடி (அருள்மிகு லேகநாதப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, திருவாரூர்)
19. திருக்கண்ண மங்கை (அருள்மிகு பக்தவத்ஸலப்  பெருமாள் திருக்கோயில், திருக்கண்ண மங்கை, திருவாரூர்)
20. திருச்சேறை (அருள்மிகு சாரநாதன் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர்)
21. திருநறையூர் (அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், திருநறையூர், தஞ்சாவூர்)
22. திருவெள்ளியங்குடி (அருள்மிகு கோலவல்வில்லி ராமன் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர்)
23. நந்திபுர விண்ணகரம் (அருள்மிகு ஜகந்நாதன் திருக்கோயில், நந்திபுர விண்ணகரம், நாதன் கோயில், தஞ்சாவூர்)
24. ஆதனூர் (அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், ஆதனூர், தஞ்சாவூர்)
25. திருப்புள்ளபூதங்குடி (அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில், திருப்புள்ளபூதங்குடி, தஞ்சாவூர்)
26. திருக்கூடலூர் (அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர், தஞ்சாவூர்)
27. கண்டியூர் (அருள்மிகு ஹரசாப விமோசனர் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர்)
28. திருஎவ்வுள் (அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர்)
29. தின்னனூர் (அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்)
30. திருத்தண்கா (அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
31. திருப்பரமேஸ்வர விண்ணகரம் (அருள்மிகு பரமபதநாதன் திருக்கோயில், திருப்பரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம்)
32. திருப்பவள வண்ணம் (அருள்மிகு பவள வண்ணர் திருக்கோயில், திருப்பவள வண்ணம், காஞ்சிபுரம்)
33. திரு நீரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
34. திரு காரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
35. திருக்கார் வானம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
36. திருக்கள்வனூர் (அருள்மிகு  கள்வப்பெருமாள் திருக்கோயில்கள்,  காமாட்சி அம்மன் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)
37. நிலாத்திங்கள் துண்டான் (அருள்மிகு சந்திர சூடப் பெருமாள் திருக்கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)
38. திருப்புட்குழி (அருள்மிகு விஜய ராகவப் பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி, காஞ்சிபுரம்)
39. திருப்புல்லாணி (அருள்மிகு கல்யாண ஜகன்னாதர் திருக்கோயில்,  திருப்புல்லாணி, ராமநாதபுரம்)
40. திருமயம் (அருள்மிகு  சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை)
41. திருக்கரம்பனூர் (அருள்மிகு புரு÷ஷாத்தமன் திருக்கோயில், உத்தமர் கோயில், திருச்சி)
42. திருக்கோழி (அருள்மிகு அளகிய மணவாளர் திருக்கோயில்,  உறையூர், திருச்சி)
43. சிங்கவேள்குன்றம் (அருள்மிகு பிரகலாத வரதன்,நரசிம்மர் திருக்கோயில், அகோபிலம், கர்நூல், ஆந்திரா)
44. நைமிசாரண்யம் (அருள்மிகு தேவராஜர் திருக்கோயில், நைமிசாரண்யம், உ.பி.)
45. ஜோதிஷ்மட், திருப்பிரிதி(அருள்மிகு பரமபுருஷர் திருக்கோயில், நந்தப்பிரயாக், உ.பி.)
திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் (4)
1. திருநீர்மலை (அருள்மிகு நீர்வண்ணன் திருக்கோயில், திருநீர்மலை, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்)
2. திருவிடந்தை (அருள்மிகு லட்சுமி வராகர் திருக்கோயில், திருவிடந்தை, காஞ்சிபுரம் மாவட்டம்)
3. திருக்கடல் மல்லை (அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்)
4. அத்திகிரி (அருள்மிகு வரதராஜப்  பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. காஞ்சிபுரம் (அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், அஷ்டபுஜம், காஞ்சிபுரம்)
திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
1. திரு ஊரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
பேயாழ்வார், திருமங்கையாழ்வார் (1)
1. திருக்கடிகை (அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில், சோளிங்கபுரம், வேலூர்  மாவட்டம்)
1. திருமோகூர் (அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், மதுரை)
2. திருப்புலியூர் (அருள்மிகு  மாயப்பிரான் திருக்கோயில்,திருப்புலியூர்,ஆழப்புழா, கேரளா மாநிலம்)
3. திருவல்லவாழ் (அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், வல்லப ÷க்ஷத்திரம், பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்
4. திருமூழிக்களம் (அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
5. திருநாவாய் (அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம், கேரளா மாநிலம்)
பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (3)
1. பத்ரிநாத் (அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், பத்ரிநாத், உ.பி,)
2. சாளக்கிராமம், முக்திநாத் (அருள்மிகு மூர்த்தி திருக்கோயில், சாளக்கிராமம், நேபாளம்)
3. திருக்கூடல் (அருள்மிகு கூடல் அழகர் பெருமாள் திருக்கோயில், திருக்கூடல், மதுரை)
திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார் (2)
1. திருச்சித்ர  கூடம் (அருள்மிகு கோவிந்த ராஜ பெருமாள் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)
2. திருவாழித் திருநகரி, (அருள்மிகு லட்சுமி நரசிம்மர், தேவராஜன் திருக்கோயில், திருவாழித் திருநகரி, நாகப்பட்டினம்)
திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் (1)
1. திருத்தங்கல் (அருள்மிகு குண்றின்மேல் நின்ற நாராயணன் திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர்)
நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் (1)
1. ஆழ்வார் திருநகரி (அருள்மிகு ஆதி நாதன் திருக்கோயில், (நவ திருப்பதி), ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி)
பெரியாழ்வார், ஆண்டாள் (1)
1. ஸ்ரீவில்லிபுத்தூர் (அருள்மிகு வடபத்ரசாயி திருக்கோயில் (ஆண்டாள்), ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்
ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. திருஆய்பாடி (அருள்மிகு நவமோகனகிருஷ்ணன் திருக்கோயில், கோகுலம், உ.பி.)
பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. திருவல்லிக்கேணி (அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை)
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம்)
பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் (1)
1. திரு விண்ணகர் (அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோவில், தஞ்சாவூர்)
பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. வெண்ணாற்றங்கரை (அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சைமாமணி கோயில், தஞ்சாவூர்)
நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)
1. துவாரகை (அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்)
2. திருவடமதுரை (அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.)
பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
1. திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள்  திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)
திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)
1. திருப்பேர் நகர் (அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்)
2. திருக்குறுங்குடி (அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி)
திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
1. திருப்பாடகம் (அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், காஞ்சிபுரம்)
பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் (1)
1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)
பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)
பூதத்தாழ்வார், பெரியாழ்வார்,  திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார் (1)
1. திருக்கோஷ்டியூர் (அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர், சிவகங்கை)
ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் (1)
1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை
ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார் (1)
1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)
1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்(அருள்மிகு பாற்கடல் வண்ணன், க்ஷீராப்திநாதன், திருப்பாற்கடல், விண்ணுலகம்)
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)
1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)
எட்டு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம்(1)
1. பரமபதம் (அருள்மிகு பரமபதநாதன், வைகுண்டம், பரமபதம்)
ஒரு ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம்          - 68
2 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள்  - 20
3 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள்   -   5
4 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள்   -   6
5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள்   -   3
6 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள்   -   1
7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள்   -   1
8 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம்           -   1
10 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள் -   2
11 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள் -   1
   
மொத்தம் மங்காளாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள் 108
இதில் திருப்பாற்கடல், பரமபதம் இரண்டு திவ்ய தேசங்களும் இப்பூவுலகில் இல்லை. எவன்ஒருவன் இப்பூமியில் உள்ள 106 திவ்ய தேசங்களை தரிசிக்கின்றானோ, அவன் இப்பூவுலகை விட்டு செல்லும் போது, அவனை பெருமாளே திருப்பாற்கடலுக்கும், பரமபதத்திற்கும் அழைத்து சென்று, தரிசனம் கொடுத்து தன்னுடனேயை வைத்துக்கொள்வதாக ஐதீகம்.









அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரத் தலங்களின் விபரம்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் சேர்ந்து பாடிய  தேவாரத் தலங்கள் (44)
1. திருக்கச்சியேகம்பம் (அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்)
2. திருக்கழுக்குன்றம் (அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுகுன்றம்,காஞ்சிபுரம் மாவட்டம்)
3. திருவாலங்காடு (அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு,திருவள்ளூர் மாவட்டம்)
4 திருவொற்றியூர் (அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில், திருவொற்றியூர்,திருவள்ளூர் மாவட்டம்)
5. நெல்øவாயில் அருத்துறை (அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை,கடலூர் மாவட்டம்)
6. திருவதிகை (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை,கடலூர் மாவட்டம்)
7. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம்,கடலூர் மாவட்டம்)
8. கோயில் (அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்,கடலூர் மாவட்டம்)
9. திருக்கழிப்பாலை (அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை,கடலூர் மாவட்டம்)
10. திருஆமாத்தூர் (அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர்,விழுப்புரம் மாவட்டம்)
11. திருவெண்காடு (அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவெண்காடு,நாகப்பட்டினம் மாவட்டம்)
12. சீகாழி (அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)
13. திருநின்றயூர் (அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர்,நாகப்பட்டினம் மாவட்டம்)
14. திருப்புன்கூர் (அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், திருப்புன்கூர்,நாகப்பட்டினம் மாவட்டம்)
15. திருவாவடுதுறை (அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை,நாகப்பட்டினம் மாவட்டம்)
16. திருத்துருத்தி (அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
17. திருநனிபள்ளி (அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில், புஞ்சை,நாகப்பட்டினம் மாவட்டம்)
18. திருவலம்புரம் (அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம் மாவட்டம்)
19. திருக்கடவூர் (அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர்,நாகப்பட்டினம் மாவட்டம்)
20. திருக்கடவூர்மயானம்  (அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
21. திருப்புகலூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்,நாகப்பட்டினம் மாவட்டம்)
22. நாகைக்காரோணம் (அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்)
23. வலிவலம் (அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
24. திருக்கோளிலி (அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை,நாகப்பட்டினம் மாவட்டம்)
25. திருமறைக்காடு (அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
26. திருப்புறம்பயம் (அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பிறம்பியம்,தஞ்சாவூர் மாவட்டம்)
27. திருச்சோற்றுத்துறை (அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை,தஞ்சாவூர் மாவட்டம்)
28. திருநாகேச்சரம் (அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், திருநாகேஸ்வரம்,தஞ்சாவூர் மாவட்டம்)
29. திருவிடைமருதூர் (அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில், திருவிடைமருதூர்,தஞ்சாவூர் மாவட்டம்)
30. திருவையாறு (அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு,தஞ்சாவூர் மாவட்டம்)
31. அரிசிற்கரைப்புத்தூர் (அருள்மிகு படிக்காசுநாதர் திருக்கோயில், அழகாபுத்தூர்,தஞ்சாவூர் மாவட்டம்)
32. திருமழபாடி (அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி,அரியலூர் மாவட்டம்)
33. திருஆனைக்கா (அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருவானைக்கா,திருச்சி மாவட்டம்)
34. திருப்பைஞ்ஞீலி (அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி,திருச்சி மாவட்டம்)
35. கற்குடி (அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், உய்யக்கொண்டான் மலை,திருச்சி மாவட்டம்)
36. திருநள்ளாறு (அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு,காரைக்கால்,புதுச்சேரி மாநிலம்)
37. திருவீழிமிழலை (அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவீழிமிழலை,திருவாரூர் மாவட்டம்)
38. ஸ்ரீ வாஞ்சியம் (அருள்மிகு வாஞ்சிநாதர் திருக்கோயில், ஸ்ரீவாஞ்சியம்,திருவாரூர் மாவட்டம்)
39. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்)
40. திருப்பூவணம் (அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்புவனம்,சிவகங்கை மாவட்டம்)
41. பாண்டிக்கொடுமுடி (அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி,ஈரோடு மாவட்டம்)
42. நொடித்தான்மலை  (அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாயம், திபெத்)
43. திருப்பருப்பதம் (அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம், கர்நூல் மாவட்டம் ஆந்திரா)
44. திருக்காளத்தி  (அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி,கர்நூல் மாவட்டம், ஆந்திரா மாநிலம்)
ஞான சம்பந்தர், அப்பர் சேர்ந்து பாடிய தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் (52)
1. திருமாற்பேறு (அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், திருமால்பூர்,வேலூர் மாவட்டம்)
2. திருப்பாசூர் (அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில், திருப்பாசூர்,திருவள்ளூர் மாவட்டம்)
3. திருவான்மியூர் (அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர்,சென்னை காஞ்சிபுரம் மாவட்டம்)
4. திருக்கோவலூர் (அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்கோவிலூர்,விழுப்புரம் மாவட்டம்)
5. பெண்ணாகடம்  (அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம்,கடலூர் மாவட்டம்)
6. திருப்பாதிரிப்புலியூர் (அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர்,கடலூர் மாவட்டம்)
7. திருவேட்களம் (அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம் (சிதம்பரம் நகர்),கடலூர் மாவட்டம்)
8. ஓமாம்புலியூர் (அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், ஓமாம்புலியூர்,கடலூர் மாவட்டம்)
9. திருநாரையூர் (அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், திருநாரையூர்,கடலூர் மாவட்டம்)
10. கடம்பூர் (அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர்,கடலூர் மாவட்டம்)
11. திருவண்ணாமலை (அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை)
12. திருச்சாய்க்காடு (அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
13. புள்ளிருக்குவேளூர் (அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், வைத்தீசுவரன்கோயில்,நாகப்பட்டினம் மாவட்டம்)
14. கீழைத்திருமணஞ்சேரி(அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி,நாகப்பட்டினம் மாவட்டம்)
15. திருநல்லம் (அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
16. மயிலாடுதுறை (அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை,நாகப்பட்டினம் மாவட்டம்)
17. திருச்செம்பொன்பள்ளி (அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொனார்கோவில்,நாகப்பட்டினம்
 மாவட்டம்)
18. ஆக்கூர் (அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், ஆக்கூர்,நாகப்பட்டினம் மாவட்டம்)
19. திருமருகல் (அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், திருமருகல்,நாகப்பட்டினம் மாவட்டம்)
20. திருவாய்மூர்  (அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்,நாகப்பட்டினம் மாவட்டம்)
21. பந்தணைநல்லூர்  (அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர்,தஞ்சாவூர் மாவட்டம்)
22. திருக்கோடிகா (அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,தஞ்சாவூர் மாவட்டம்)
23. திருமங்கலக்குடி (அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், திருமங்கலக்குடி,தஞ்சாவூர் மாவட்டம்)
24. இன்னம்பர் (அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில், இன்னம்பூர்,தஞ்சாவூர் மாவட்டம்)
25. விசயமங்கை (அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை,தஞ்சாவூர் மாவட்டம்)
26. திருப்பழனம்  (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம்,தஞ்சாவூர் மாவட்டம்)
27. நெய்த்தானம்  (அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம்,தஞ்சாவூர் மாவட்டம்)
28. திருக்கானூர் (அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர்,,தஞ்சாவூர் மாவட்டம்)
29. மேலைத்திருக்காட்டுப்பள்ளி (அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி,தஞ்சாவூர் மாவட்டம்)
30. திருக்கண்டியூர் (அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், கண்டியூர்,தஞ்சாவூர் மாவட்டம்)
31. திருவேதிகுடி (அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேதிகுடி,தஞ்சாவூர் மாவட்டம்)
32. திருக்கருகாவூர் (அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்,தஞ்சாவூர் மாவட்டம்)
33. திருநல்லூர் (அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், நல்லூர், கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம்)
34. திருவலஞ்சுழி (அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி,தஞ்சாவூர் மாவட்டம்)
35. குடமூக்கு (அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம்)
36. தென்குரங்காடுதுறை (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆடுதுறை,தஞ்சாவூர் மாவட்டம்)
37. திருக்கோழம்பம் (அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோழம்பியம்,தஞ்சாவூர் மாவட்டம்)
38. திருச்சிவபுரம் (அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில், சிவபுரம்,தஞ்சாவூர் மாவட்டம்)
39. திருச்சேறை (அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை,தஞ்சாவூர் மாவட்டம்)
40. திருஅன்னியூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், வன்னியூர்,திருவாரூர் மாவட்டம்)
41. செங்காட்டங்குடி (அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்காட்டங்குடி, திருவாரூர் மாவட்டம்)
42. கீழ்வேளூர் (அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில், கீழ்வேளூர்,திருவாரூர் மாவட்டம்)
43. பெருவேளூர் (அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், மணக்கால்ஐயம்பேட்டை,திருவாரூர் மாவட்டம்)
44. அவளிவணல்லூர் (அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர்,திருவாரூர் மாவட்டம்)
45. வெண்ணி  (அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில்வெண்ணி,திருவாரூர் மாவட்டம்)
46. திருப்பராய்த்துறை (அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருப்பராய்த்துறை,திருச்சி மாவட்டம்)
47. திரிசிராப்பள்ளி  (அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில், திருச்சி)
48. அன்பிலாலந்துறை (அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில்,திருச்சி மாவட்டம்)
49. திருஆலவாய் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை)
50. திருப்புத்தூர் (அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புத்தூர்,சிவகங்கை மாவட்டம்)
51. இராமேஸ்வரம்  (அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம்,ராமநாதபுரம் மாவட்டம்)
52. திருக்கோகர்ணம்  (அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில், திருக்கோகர்ணம்,உத்தர் கன்னடா, கர்நாடகா மாநிலம்)
ஞானசம்பந்தர், சுந்தரர் சேர்ந்து பாடிய தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் (13)
1. திருக்குருகாவூர் (அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில், திருக்குருகாவூர்,நாகப்பட்டினம் மாவட்டம்).
2. திருக்கோலக்கா (அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்கோலக்கா, சீர்காழி,நாகப்பட்டினம் மாவட்டம்)
3. வேள்விக்குடி (அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், வேள்விக்குடி,நாகப்பட்டினம் மாவட்டம்)
4. திருக்கருப்பறியலுர்  (அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு,நாகப்பட்டினம் மாவட்டம்)
5. வாழ்கொளிப் புத்தூர் (அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர்,நாகப்பட்டினம் மாவட்டம்)
6. திருப்பாச்சிலாச் சிராமம்  (அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருவாசி,திருச்சி மாவட்டம்)
7. திரு நறையூர்ச்சித்தீச்சரம் (அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர்,தஞ்சாவூர் மாவட்டம்)
8. பனையூர் (அருள்மிகு சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருப்பனையூர்,திருவாரூர் மாவட்டம்)
9. திருப்பரங்குன்றம் (அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருப்பரங்குன்றம்,மதுரை மாவட்டம்)
10. திருப்புனவாயில்  (அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புனவாசல்,புதுக்கோட்டை மாவட்டம்)
11. கானப்பேர் (அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில்,சிவகங்கை மாவட்டம்)
12. திருக்கேதாரம் (அருள்மிகு கேதாரநாதர் திருக்கோயில், கேதார்நாத், ரிஷிகேஷ், உத்தராகன்ட்)
13. திருக்கேதீச்சரம்  (அருள்மிகு கேத்தீஸ்வரர் திருக்கோயில், கேதீஸ்வரம், இலங்கை)
அப்பர், சுந்தரர் சேர்ந்து பாடிய தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் (2)
1. திருக்கச்சிமேற்றளி  (அருள்மிகு திருமேற்றளிநாதர் திருக்கோயில், திருக்கச்சிமேற்றளி, காஞ்சிபுரம்)
2. திருநீடூர் (அருள்மிகு அருட்சோமநாதர் திருக்கோயில், நீடூர், நாகப்பட்டினம் மாவட்டம்)
ஞான சம்பந்தர் மட்டும் பாடிய தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் (112)
1. திருவலிதாயம் (அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி, திருவலிதாயம்,சென்னை)
2. மயிலாப்பூர் (அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர்,சென்னை)
3. திருவேற்காடு (அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு,சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்)
4. திருஇடைச்சரம் (அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம்,காஞ்சிபுரம் மாவட்டம்)
5. அச்சிறுபாக்கம்  (அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம்,காஞ்சிபுரம் மாவட்டம்)
6. கச்சிநெறிக்காரைக்காடு (அருள்மிகு சத்யநாதர், திருக்காலீஸ்வரர்  திருக்கோயில்,காஞ்சிபுரம்)
7. மாகறல் (அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல்,காஞ்சிபுரம் மாவட்டம்)
8. இலம்பையங்கோட்டூர்  (அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், எலுமியன்கோட்டூர்,காஞ்சிபுரம் மாவட்டம்)
9. குரங்கணில்முட்டம் (அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், குரங்கணில்முட்டம்,திருவண்ணாமலை மாவட்டம்)
10. திருவோத்தூர் (அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு,திருவண்ணாமலை மாவட்டம்)
11. திருவல்லம் (அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், திருவல்லம்,வேலூர் மாவட்டம்)
12. திருவூறல் (அருள்மிகு சலநாதீஸ்வரர் திருக்கோயில், தக்கோலம்,வேலூர் மாவட்டம்)
13. திருவிற்கோலம் (அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில், கூவம்,திருவள்ளூர் மாவட்டம்)
14. திருக்கள்ளில் (அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம்,திருவள்ளூர் மாவட்டம்)
15. திருவக்கரை (அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை,விழுப்புரம் மாவட்டம்)
16. அரசிலி (அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழிந்தியாம்பட்டு,விழுப்புரம் மாவட்டம்)
17. இரும்பைமாகாளம் (அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை,விழுப்புரம் மாவட்டம்)
18. நெல்வெண்ணெய்  (அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், நெய்வணை,விழுப்புரம் மாவட்டம்)
19. அறையணிநல்லூர் (அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், அறகண்டநல்லூர்,விழுப்புரம் மாவட்டம்)
20. புறவார்பனங்காட்டூர் (அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம்,விழுப்புரம் மாவட்டம்)
21. திருக்கிளியன்னவூர், கிள்ளியநல்லூர் (அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், கிளியனூர்,விழுப்புரம் மாவட்டம்)
22. எருக்கத்தம்புலியூர் (அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், இராஜேந்திர பட்டினம்,கடலூர் மாவட்டம்)
23. திருச்சோபுரம் (அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், திருச்சோபுரம்,,கடலூர் மாவட்டம்)
24. திருமாணிகுழி (அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி,கடலூர் மாவட்டம்)
25. நெல்வாயில் (அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை,கடலூர் மாவட்டம்)
26. நல்லூர்ப்பெருமணம்  (அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில், ஆச்சாள்புரம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
27. மயேந்திரப்பள்ளி  (அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப் பள்ளி,நாகப்பட்டினம் மாவட்டம்)
28. தென் திருமுல்லைவாயில் (அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல்,நாகப்பட்டினம் மாவட்டம்)
29. கலிக்காமூர் (அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அன்னப்பன்பேட்டை,நாகப்பட்டினம் மாவட்டம்)
30 பல்லவனீச்சரம் (அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில், பூம்புகார்,நாகப்பட்டினம் மாவட்டம்)
31. கீழைத்திருக்காட்டுப்பள்ளி  (அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி,நாகப்பட்டினம் மாவட்டம்)
32. கண்tர்கோயில் (அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி,நாகப்பட்டினம் மாவட்டம்)
33. கடைமுடி (அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில், கீழையூர்,நாகப்பட்டினம் மாவட்டம்)
34. திருவழுந்தூர் (அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர்.,நாகப்பட்டினம் மாவட்டம்)
35. திருவிளநகர்  (அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், திருவிளநகர்,நாகப்பட்டினம் மாவட்டம்)
36. திருப்பறியலூர் ((அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கீழப்பரசலூர்,,நாகப்பட்டினம் மாவட்டம்)
37. வைகல்மாடக்கோயில் (அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில், திருவைகல்,நாகப்பட்டினம் மாவட்டம்)
38. திருத்தலைச்சங்காடு (அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், தலைச்சங்காடு,நாகப்பட்டினம்  மாவட்டம்)
39. திருச்சாத்தமங்கை (அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை,நாகப்பட்டினம் மாவட்டம்)
40. சிக்கல் (அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல்,நாகப்பட்டினம் மாவட்டம்)
41. திருச்சிற்றேமம் (அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில், சித்தாய்மூர்,நாகப்பட்டினம் மாவட்டம்)
42. அகத்தியான்பள்ளி (அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அகஸ்தியன் பள்ளி,நாகப்பட்டினம் மாவட்டம்)
43. திருப்பனந்தாள் (அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்,தஞ்சாவூர் மாவட்டம்)
44. சேய்ஞலூர் (அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், சேங்கனூர்,தஞ்சாவூர் மாவட்டம்)
45. திருந்துதேவன்குடி அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி,தஞ்சாவூர் மாவட்டம்)
46. திருவியலூர் (அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர்,தஞ்சாவூர் மாவட்டம்)
47. திருவைகாவூர் (அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில், திருவைகாவூர்,தஞ்சாவூர்)
48. வடகுரங்காடுதுறை (அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில், வடகுரங்காடுதுறை,தஞ்சாவூர் மாவட்டம்)
49. பெரும்புலியூர் (அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், பெரும்புலியூர்,தஞ்சாவூர் மாவட்டம்)
50. தென்குடித்திட்டை (அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை,தஞ்சாவூர் மாவட்டம்)
51. திருப்புள்ளமங்கை (அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதிகோயில்,தஞ்சாவூர் மாவட்டம்)
52. சக்கரப்பள்ளி (அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி,தஞ்சாவூர் மாவட்டம்)
53. ஆவூர்பசுபதீச்சரம் (அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர் (கோவந்தகுடி),தஞ்சாவூர் மாவட்டம்)
54. பட்டீச்சுரம் (அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டீசுவரம்,தஞ்சாவூர்  மாவட்டம்)
55. குடந்தைக்காரோணம் (அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம்)
56. பேணுபெருத்துறை (அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை,தஞ்சாவூர் மாவட்டம்)
57. கருக்குடி (அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், கருக்குடி,தஞ்சாவூர் மாவட்டம்)
58. நாலூர்மயானம் (அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம்,தஞ்சாவூர் மாவட்டம்)
59. இரும்பூளை  (அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி,தஞ்சாவூர் மாவட்டம்)
60. பரிதிநியமம் (அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், பரிதியப்பர்கோவில்,தஞ்சாவூர் மாவட்டம்)
61. திருப்பழுவூர் (அருள்மிகு ஆலந்துறையார்(வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர்,அரியலூர் மாவட்டம்)
62. திருமாந்துறை (அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், மாந்துறை,திருச்சி மாவட்டம்)
63. திருப்பாற்றுறை (அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாற்றுறை,திருச்சி மாவட்டம்)
64. ஈங்கோய்மலை  (அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், ஈங்கோய்மலை,திருச்சி மாவட்டம்)
65. மூக்தீச்சுரம் (அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர்,திருச்சி மாவட்டம்)
66. நெடுங்குளம் (அருள்மிகு நெடுங்களநாதர் திருக்கோயில், திருநெடுங்குளம்,திருச்சி மாவட்டம்)
67. வடுகூர் (அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், திருவண்டார்கோயில்,புதுச்சேரி மாநிலம்)
68. வேட்டக்குடி  (அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி,புதுச்சேரி மாநிலம்)
69. திருத்தெளிச்சேரி (அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிச்சேரி,,காரைக்கால்,புதுச்சேரி மாநிலம்)
70. தருமபுரம் (அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம்,காரைக்கால்,புதுச்சேரி மாநிலம்)
71. கோட்டாறு (அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொட்டாரம்,திருவாரூர்  மாவட்டம்)
72. அம்பர்பெருந்திருக்கோயில் (அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், அம்பர், அம்பல்,திருவாரூர் மாவட்டம்)
73. அம்பர்மாகானம் (அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில், திருமாகாளம்,திருவாரூர் மாவட்டம்)
74. திருமீயச்சூர் (அருள்மிகு திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோயில், திருமீயச்சூர்,திருவாரூர் மாவட்டம்)
75. திருத்திலதைப்பதி (அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், சிதலப்பதி,திருவாரூர் மாவட்டம்)
76. திருப்பாம்புரம் (அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம்,திருவாரூர் மாவட்டம்)
77. சிறுகுடி (அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், செருகுடி,திருவாரூர் மாவட்டம்)
78. திருவிற்குடி  (அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி,திருவாரூர் மாவட்டம்)
79. திருப்புகலூர்வர்த்த  மானீச்சரம் (அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்,திருவாரூர் மாவட்டம்)
80. இராமனதீச்சரம் (அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், திருக்கண்ணபுரம்,திருவாரூர் மாவட்டம்)
81. அரதைப்பெரும்பாழி (அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம்,திருவாரூர் மாவட்டம்)
82. தேவூர் (அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்,திருவாரூர் மாவட்டம்)
83. திருவிளமர் (அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், விளமல்,திருவாரூர் மாவட்டம்)
84. கரவீரம் (அருள்மிகு கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், கரைவீரம்,திருவாரூர் மாவட்டம்)
85. குடவாயில் (அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல்,திருவாரூர் மாவட்டம்)
86. பாதாளேச்சரம் (அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி,திருவாரூர் மாவட்டம்)
87. திருக்களர் (அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர்,திருவாரூர் மாவட்டம்)
88. திருவுசாத்தானம் (அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர்,திருவாரூர் மாவட்டம்)
89. இடும்பாவனம் (அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில், இடும்பாவனம்,திருவாரூர் மாவட்டம்)
90. கடிக்குளம் (அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர்குளம்,திருவாரூர் மாவட்டம்)
91. தண்டலைநீணெறி  (அருள்மிகு நீள்நெறிநாதர் திருக்கோயில், தண்டலச்சேரி,திருவாரூர் மாவட்டம்)
92. கோட்டூர் (அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கோட்டூர்,திருவாரூர் மாவட்டம்)
93.திருவெண்டுறை (அருள்மிகு வண்டுறைநாதர் திருக்கோயில், திருவண்டுதுறை,திருவாரூர் மாவட்டம்)
94. கொள்ளம்பூதூர் (அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர்,திருவாரூர் மாவட்டம்)
95. கொள்ளிக்காடு (அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு,திருவாரூர் மாவட்டம்)
96. திருத்தெங்கூர்  (அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தங்கூர்,திருவாரூர் மாவட்டம்)
97. நெல்லிக்கா (அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில், திருநெல்லிக்கா,திருவாரூர் மாவட்டம்)
98. திருக்காறாயில் (அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல்,திருவாரூர் மாவட்டம்)
99. கைச்சின்னம் (அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், கச்சனம்,திருவாரூர் மாவட்டம்)
100. திருவிடைவாய் (அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவிடைவாசல்,திருவாரூர் மாவட்டம்)
101.  ஆப்பனூர் (அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை)
102. திருஏடகம்  (அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில், திருவேடகம்,மதுரை மாவட்டம்)
103. கொடுங்குன்றம் (அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை,சிவகங்கை மாவட்டம்)
104.  திருஆடானை (அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை,ராமநாதபுரம் மாவட்டம்)
105. திருக்குற்றாலம் (அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில், குற்றாலம்,திருநெல்வேலி மாவட்டம்)
106. திருநெல்வேலி (அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி)
107. திருநணா (அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில், பவானி,ஈரோடு மாவட்டம்)
108. கொடிமடச்செங்குன்றூர் (அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு,நாமக்கல் மாவட்டம்)
109. கருவூர் (அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்)
110. இந்திரநீலப்பருப்பதம் (அருள்மிகு நீலாச்சல நாதர் திருக்கோயில், இந்திரநீலப்பருப்பதம், இமயமலைச்சாரல்)
111. அநேகதங்காபதம் (அருள்மிகு அருண்மன்னேஸ்வரர், அநேகதங்காபதம், இலங்கை)
112. திருக்கோணமலை (அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், திருக்கோணமலை, இலங்கை)
அப்பர் மட்டும் பாடிய தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் (28)
1. திருக்குறுக்கை (அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கொருக்கை,நாகப்பட்டினம் மாவட்டம்)
2. குரக்குக்கா (அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில், திருக்குரக்கா,நாகப்பட்டினம் மாவட்டம்)
3. திருப்பயற்றூர் (அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில், திருப்பயத்தங்குடி,நாகப்பட்டினம் மாவட்டம்)
4. வாட்போக்கி (அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், அய்யர் மலை,கரூர் மாவட்டம்)
5. கடம்பந்துறை (அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை,கரூர் மாவட்டம்)
6. திருஎறும்பியூர் (அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருவெறும்பூர்,திருச்சி மாவட்டம்)
7. கஞ்சனூர் (அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர்,தஞ்சாவூர் மாவட்டம்)
8. திருஆப்பாடி (அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில், திருவாய்பாடி,தஞ்சாவூர் மாவட்டம்)
9. கொட்டையூர் (அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில், கொட்டையூர்,தஞ்சாவூர் மாவட்டம்)
10. ஆலம்பொழில் (அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாலம் பொழில்,தஞ்சாவூர் மாவட்டம்)
11. திருப்பூந்துருத்தி (அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருப்பூந்துருத்தி,தஞ்சாவூர் மாவட்டம்)
12. திருப்பாலைத்துறை (அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில், பாபநாசம்,தஞ்சாவூர் மாவட்டம்)
13. திருச்சத்திமுற்றம் (அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், திருச்சத்தி முற்றம்,தஞ்சாவூர் மாவட்டம்)
14. பழையாறைவடதளி (அருள்மிகு சோமேசர் திருக்கோயில், கீழ்பழையாறை வடதளி,தஞ்சாவூர் மாவட்டம்)
15. குடந்தைக்கீழ்க்கோட்டம் (அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம்)
16. திருநீலக்குடி (அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருநீலக்குடி,தஞ்சாவூர் மாவட்டம்)
17. மீயச்சூர் இளங்கோயில் (அருள்மிகு சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருமீயச்சூர்,திருவாரூர் மாவட்டம்)
18. வன்னியூர் (அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், வன்னியூர்,திருவாரூர் மாவட்டம்).
19. கருவிலி (அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில், கருவேலி,திருவாரூர் மாவட்டம்)
20. கொண்டீச்சரம்  (அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொண்டீஸ்வரம்,திருவாரூர் மாவட்டம்)
21. பள்ளியின்முக்கூடல் (அருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில், திருப்பள்ளி முக்கூடல்,திருவாரூர் மாவட்டம்)
22. திருவாரூர்அரநெறி (அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோயில், தூவாநாயனார் கோயில்,திருவாரூர் மாவட்டம்)
23. திருத்தலையாலங்காடு  (அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், திருத்தலையாலங்காடு,திருவாரூர் மாவட்டம்)
24. கடுவாய்க்கரைப்புத்தூர் (அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில்,திருவாரூர் மாவட்டம்)
25. திருப்பூவனூர் (அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில், பூவனூர்,திருவாரூர் மாவட்டம்)
26. பேரெயில் (அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர்,திருவாரூர் மாவட்டம்)
27. கன்றாப்பூர் (அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், கோயில் கண்ணாப்பூர்,திருவாரூர் மாவட்டம்)
28. முண்டீச்சரம் (அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம்,விழுப்புரம் மாவட்டம்)
சுந்தரர் மட்டும் பாடிய தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் (25)
1. ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரம் ) (அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி,காஞ்சிபுரம் மாவட்டம்)
2. கச்சிஅநேகதங்காவதம் (அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்)
3. திருக்கச்சூர் (அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில், திருக்கச்சூர்,காஞ்சிபுரம் மாவட்டம்)
4. திருவெண்பாக்கம் (அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில், பூண்டி,திருவள்ளூர் மாவட்டம்)
5. வடதிருமுல்லைவாயில் (அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில்,சென்னை)
6. வன்பார்த்தான்பனங்காட்டூர் (அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம்,விழுப்புரம் மாவட்டம்)
7. திருநாவலூர் (அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர்,விழுப்புரம் மாவட்டம்)
8. திருஇடையாறு (அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில், டி. இடையாறு,விழுப்புரம் மாவட்டம்)
9. திருவெண்ணெய்நல்லூர்  (அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், வெண்ணெய்நல்லூர்,விழுப்புரம் மாவட்டம்)
10. திருத்துறையூர் (அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில், திருத்தளூர்,கடலூர் மாவட்டம்)
11. கூடலையாற்றூர் (அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர்.,கடலூர் மாவட்டம்)
12. திருத்தனை நகர் (அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தனகிரி,கடலூர் மாவட்டம்)
13. கானாட்டு முள்ளூர் (அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர்,கடலூர்)
14. எதிர்கொள்பாடி (அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், மேலத்திருமணஞ்சேரி,நாகப்பட்டினம் மாவட்டம்)
15. பழமண்ணிப்படிக்கரை (அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைபட்டு,நாகப்பட்டினம் மாவட்டம்)
16. திருக்கோடி  (அருள்மிகு கோடிக்குழகர் திருக்கோயில், கோடியக்காடு,நாகப்பட்டினம் மாவட்டம்)
17. கலயநல்லூர் (அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், சாக்கோட்டை,தஞ்சாவூர் மாவட்டம்)
18. நன்னிலம் (அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில், நன்னிலம்,திருவாரூர் மாவட்டம்)
19. ஆருர்ப்பரவையுண்மண்டளி (அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர் கீழ வீதி,திருவாரூர் மாவட்டம்)
20. நாட்டியத்தான்குடி (அருள்மிகு ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி,திருவாரூர் மாவட்டம்)
21. திருச்சுழியல் (அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி,விருதுநகர் மாவட்டம்)
22. அவிநாசி (அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி,கோயம்புத்தூர் மாவட்டம்)
23. திருமுருகன்பூண்டி (அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில், திருமுருகன்பூண்டி,கோயம்புத்தூர் மாவட்டம்)
24. வெஞ்சமாக்கூடல்  (அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர்,கரூர் மாவட்டம்)
25. திருவஞ்சைக்களம்  (அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், திருவஞ்சிக்குளம்,திருச்சூர், கேரளா மாநிலம்)
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியது -  44
ஞான சம்பந்தர், அப்பர் பாடியது   -  52
ஞானசம்பந்தர், சுந்தரர் பாடியது    -  13
அப்பர், சுந்தரர் பாடியது                      -    2
ஞான சம்பந்தர் மட்டும் பாடியது - 112
அப்பர் மட்டும் பாடியது                     -   28 
சுந்தரர் மட்டும் பாடியது                    -   25
மூவரும் பாடிய தேவாரத் தலங்கள் - 276

அம்மனின் 51 சக்தி பீடங்கள்.

1. மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
13.  வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்
17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
48. மந்த்ரிணி-கயை-  (திரிவேணிபீடம்) பீகார்
49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உ.பி.
51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்
பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்


ஜோதிர் லிங்கங்கள்
1. அருள்மிகு ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம்-623 526
குறிப்பு: கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகிப்பது வழக்கம். இங்கு மட்டும் கடலில் எந்நாளும் என்நேரமும், நீராடலாம். ஆஞ்சனேயர் கொண்டு வந்த லிங்கத்திற்கும், சீதை மணலால் செய்த லிங்கத்திற்கும் ராமர் பூஜை செய்தது சிறப்பு.
2. அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ சைலம்-518 101, கர்நூல் மாவட்டம். ஆந்திரா - கர்நூல் மாவட்டம் நந்தியாவிலிருந்து 70 கி.மீ.
குறிப்பு: நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம்.
3. அருள்மிகு பீமசங்கரர் திருக்கோயில், பீமசங்கரம், மஹாராஷ்டிரம் புனாவிலிருந்து 140 கி.மீ.
குறிப்பு: கருவறைக்கு முன் நந்திக்கு பதில் ஆமை. அவசரப்படாமல் வழிபட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக.
4. அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில், திரியம்பகம்-422 212, மஹாராஷ்டிரம்.நாசிக்கிலிருந்து 29 கி.மீ.
குறிப்பு: சுயம்பு லிங்கம். லிங்கக் கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறுகிறது. சிவனே மலையாக இருப்பதாக தலம், கோதாவரி உற்பத்திக்கும் ஸ்நானம்.
5. அருள்மிகு குஸ்ருணேஸ்வரர் திருக்கோயில், குஸ்ருணேஸ்வரம்(வேரூன்)-431 102, மஹாராஷ்டிரம்-எல்லோரா குருகே.
குறிப்பு: அம்பிகை குங்குமப்பூவால் வழிபட்ட தலம். (குஸ்ருணம்-குங்குமம்) கருவறையின் சுவற்றில் அன்னையின் திருவுருவம் உள்ளது.
6. அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், ப்ராபாச பட்டினம் (விராவெல்) குஜராத்
குறிப்பு: கடற்கரை தலம். சந்திரன் சாபம் தீர்த்த தலம். அமாவாசை கூடிய திங்கட்கிழமை தரிசனம் மிகவும் சிறப்பு. மிகச்சிறிய சுயம்பு மூர்த்தி.
7. அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், ஓனண்டா-396 526, குஜராத்
குறிப்பு: தெற்கு நோக்கிய லிங்கம். நாமதேவர் வணங்குவதற்காகத் திரும்பிய கோலம்.
8. அருள்மிகு ஓம்காரேஷ்வரர் (அமலேஸ்வரர்) திருக்கோயில், ஓங்காரம், மத்திய பிரதேசம் உஜ்ஜயினிலிருந்து 281 கி.மீ.
குறிப்பு: மலைமுகட்டில் சுயம்புலிங்கம். பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2000 லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விடப்பட்டவையே சாளக்கிராமங்களாக மாறியதாக வரலாறு.
9. அருள்மிகு மஹாகாளர் திருக்கோயில், உஜ்ஜயினி (அவந்தி)-456 001, மத்திய பிரதேசம்
குறிப்பு: கார்த்திகை பவுர்ணமி தரிசனம் விசேஷம். 5 அடுக்கு கோயில். தோல் வியாதிகளை நீக்கும் கோடித் தீர்த்தம்.
10. அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், சித்த பூமி (தேங்கர்) பீகார்
குறிப்பு: பல மாநிலங்களில் வைத்தியநாதம் இருப்பதாகக் கூறினாலும் சிவபுராணத்தில் குறிப்பிட்டுள்ளது இதுவே. திருமாலின் லீலையால் ராவணன் கொண்டுவந்த லிங்கம் தங்கி விட்ட தலம்.
11. அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், காசி(வாரணாசி)-221 003, உத்திரப்பிரதேசம்
குறிப்பு: இங்கு இறப்பவருக்கு ஈசனே தாரக மந்திரம் ஓதுகிறார். தாங்களே அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரி தரிசனம் விஷேசம். ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை த்ரிவேணியில் கரைப்பது வழக்கம்.
12. அருள்மிகு கேதாரேஸ்வரர் திருக்கோயில், கேதார்நாத், உத்திரப்பிரதேசம்
குறிப்பு: இமயமலையில் சுயம்பு பனிலிங்கம். அம்மன் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம். 6 மாத மானிட பூஜை. 6 மாதம் தேவ பூஜை.
அரசமரத்தை சுற்றுவது எப்படி?

குழந்தையில்லாத பெண்மணிகள் அரசமரத்தை சுற்றிவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன.
1. அரசமரத்தை வலம்வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும்.
2. கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும்.
3. சக பெண்களுடன் பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. இதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வர வேண்டும்.
4. குறைந்தபட்சம் 7 முறை வலம்வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றிவரலாம்.
5. சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின்மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை. மலட்டுத்தனத்திற்கு காரணமான பீடைகள் நீங்கிவிடும்.
6. அரசமரத்தை காலை வேளையில்தான் வலம்வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம்வரக்கூடாது.
7. ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம்வந்தால் கடன் தொல்லை நீங்கும். பயஉணர்ச்சி அகன்று விடும். தீராத நோய்கள் தீர்ந்துவிடும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோக உயர்வு கிடைக்கும்.

நெற்றியில் மூன்றுபட்டை போடுவதற்கு காரணம் தெரியுமா?

கோயில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக அடித்துக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும். இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு சாமவேதம், நடுவிரல் யஜீர் வேதம், மோதிரவிரல் சாமவேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. முப்பட்டையிடுவது வேதங்கள் மட்டுமின்றி மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிப்பதாக உள்ளது.
அவற்றுள் சில,
1. பிரம்மா, விஷ்ணு, சிவன்,
2. சிவன், சக்தி, ஸ்கந்தர்
3. அறம், பொருள், இன்பம்
4. குரு, லிங்கம், சங்கமம்
5. படைத்தல், காத்தல், அழித்தல்.
இறை வழிபாட்டு முறை
 
கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமான மூன்று வழிமுறைகள் உள்ளதாக ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
1. உத்தம நமஸ்காரம்: லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து, இதயத்திற்கு
அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து, மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை ஒருநொடியேனும் மனதார வணங்க வேண்டும்.
மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்குவதை இறைவன் செவிசாய்த்து கேட்பான் என்பது ஐதீகம்.
2. அஷ்டாங்க நமஸ்காரம்: இவ்வகையான நமஸ்காரமுறை ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. இம்முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம்  எட்டு;
அங்கம்  உடற்பாகம்) தரையில் படும்படியாக வீழ்ந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு
தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாதநுனி ஆகிய உடற்பாகங்களை தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு இறைவனின்  திருப்பாதத்தை சரணடைந்தால் வாழ்வில் பாவங்கள் நீங்கி நற்கதி உண்டாகும்.
3. பஞ்சாங்க நமஸ்காரம்: இந்த நமஸ்காரமுறை பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வகையான வணங்கல் முறையில் பெண்கள் தங்களது பஞ்சாங்கத்தையும் (பஞ்சம்  ஐந்து; அங்கம்  உடற்பாகம்) இறைவனிடம் முழுமையாக சமர்ப்பணம் செய்து வணங்க வேண்டும். இம்முறையில் தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனிகளை பூமியில் வைத்து இறைவனை வணங்கிட நற்பலன்கள் கிட்டும்.
மதுரையில் சுழலும் லிங்கம்!

இறைவன் இல்லாத இடம் ஏதுமில்லை. நம் கண்களுக்கு புலப்படாத அணுவிலும் அணுவாக உள்ள மிகச்சிறிய பொருளிலும் கூட அவர் வியாபித்திருக்கிறார். ஒருசமயம் அவ்வைப்பிராட்டி, சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றார். நீண்டதூரம் நடந்து வந்ததால், களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார். இதைக்கண்ட பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது.  அவ்வையிடம் வந்த பார்வதி, அவ்வையே! உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான், அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே! இது அவரை அவமரியாதை செய்வது போலல்லவா உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள் என்றாள்.  இதைக்கேட்ட அவ்வை சிரித்தார்.
அம்பிகையிடம், தாயே! என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து காலை நீட்டுவதா? அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே! அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே சொல்லுங்கள்! அத்திசை நோக்கி என் காலை நீட்டிக்கொள்கிறேன், என்றார்.  அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது. இவ்வாறு இறைவன் எங்கும் இருப்பதை உணர்த்தும் விதமான சிவலிங்க ஓவியம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரையப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் செல்லும் சிவன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் (முக்குறுணி விநாயகர் சன்னதி அருகில்) மேற்கூரையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.  பேரொளியுடன் கூடிய ஒரு வட்டத்தின் மத்தியில், சிவலிங்கம் இருக்கும்படியாக இந்த ஓவியம் வரைப்பட்டுள்ளது. லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது.
இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும், சிவலிங்கத்தின் ஆவுடை(பீடம்) நம்மை நோக்கியிருப்பது போல தோன்றும் என்பது தான் இதன் ஸ்பெஷாலிட்டி. கிழக்கு நோக்கி நீங்கள் நின்றால் உங்கள் பக்கம் ஆவுடை திரும்பி விடும், மேற்கே சென்றால் அங்கு வந்து விடும். குறுக்காக நின்று பார்த்தால் அந்தப் பக்கமாக வந்துவிடும். இப்படி ஒரு அதிசய ஓவியம் இது. சிவன் எங்குமிருக்கிறார் என்பதை இந்த ஓவியம் சுட்டிக்காட்டுகிறது. இந்த சிவலிங்க ஓவியத்துக்கு, மானசீகமாக அபிஷேகம் செய்வதாக  கற்பனை செய்தபடியே வழிபட்டால், அபிஷேக நீர் நம் மீது விழுவது போலவே இந்த அமைப்பு உள்ளது. சுற்றிச்சுற்றி எந்த திசையிலிருந்து பார்த்தாலும், நம்மை நோக்கி சுழன்றபடி காட்சியளிப்பதால் இதற்கு, சுழலும் லிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர்.  புராதனமான வரலாறுகள், சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய லீலைகள், காண்போர் வியக்கும் நுணுக்கமான கட்டடக்கலை, அற்புதமான சிற்பங்கள் என கணக்கிலடங்காத சிறப்புக்களுடன், அன்னை மீனாட்சியும், தந்தை சொக்கநாதரும் ஆட்சி செய்யும் புண்ணியத்தலமான மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு இந்த ஓவியம் மேலும் சிறப்பு சேர்க்கிறது.

பிரகாரம் எதற்கு?
தெய்வத்தை வணங்கிய பிறகு, பிரகாரத்தைச் சுற்றுவது தான் நடைமுறையில் பழக்கமாக இருக்கிறது. ஆனால், பிரகாரத்தை சுற்றிய பிறகு தான் கருவறைக்குச் செல்ல வேண்டும் என்பதே நிஜமான நியதி. ஏனெனில், பிரகாரங்களைச் சுற்றிவரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கருவறையில் சென்று தெய்வத்தை வணங்க வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே நெஞ்சில் நிறைந்திருக்கும். இதன் தத்துவம் என்ன? இந்த உலகில் எங்கே சுற்றினாலும் சரி... இறுதியில், நீ அடையப்போவது தெய்வத்தின் சன்னதியை என்பதையே குறிக்கிறது.