திங்கள், 14 அக்டோபர், 2013

படலம் 80: புஷ்யாபிஷேக விதி

80வது படலத்தில் புஷ்யாபிஷேக விதி கூறப்படுகிறது. கிரஹணம் முதலிய எல்லா அபசகுனத்தை போக்குவதற்கும் பாபத்தைப் போக்கக்கூடிய பரிசுத்தமான புஷ்யாபிஷேகம் பற்றி கூறுகிறேன் என்று பிரதிக்ஞையாகும். பிறகு அரசனின் அபிஷேகத்திற்காக புண்யமான தேசத்தில் பந்தல் அமைக்கும் விதி கூறப்படுகிறது. இங்கே 12 கால்களை உடையதாக, நடுக்கால் இன்றி நடுவில் வேதிகை அழகாக அமைத்து, பந்தல் அமைக்கவும் பந்தலின் மேற்கு பாகம், தெற்கு பாகத்திலும் இரண்டு வேதிகை அமைத்து பக்கத்தில் படி உள்ளதாகவும் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு தைமாசத்தில் பூச நக்ஷத்திரத்தில் புண்யமான தீர்த்தங்களில் பரிசுத்தமான இடத்திலும் நந்தவனங்களிலும் சிவாலயத்திலும் கிழக்கு, வடக்கு, வடகிழக்கு பிரதேசங்களிலோ, ஆசார்யன் ஜ்யோதிஷனுடன் கூடி அபிஷேக ஆரம்பத்திற்கு முன் தினம் சந்தனம் புஷ்பம், இவைகளுடன் தயிர், பொறி அக்ஷதையுடன் கூடின பலியை தேவாதிகளுக்கு கொடுத்து பலிதான விஷயத்தில் கூறப்படுகிற தேவதைகளின் ஆஹ்வான மந்திரம் கூறப்படுகிறது. பலிதானத்திற்கு பிறகு ராத்திரியில் அரசனுடைய கனவை பரீக்ஷித்து சுபமான கனவாக இருப்பின் கர்மாரம்பத்தை ஆரம்பம் செய்யுவும். கெட்ட கனவாக இருப்பின் பரிஹாரம் செய்து அதற்கு பிறகு அபிஷேக கார்யாரம்பம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. முன்பு ஏற்படுத்தப்பட்ட பந்தலையோ, மண்டபத்தையோ தோரணங்கள் கூடியதாக அழகு படுத்தவும் பிறகு முன்பு கூறியபடி மங்களாங்குரார்ப்பண கார்யம் செய்யவேண்டுமென்று அங்குரார்ப்பணம் செய்வது நிரூபிக்கப்படுகிறது. பத்திராசனத்தை அதன் தெற்கு பாகத்தில் படியுடன் கூடிய பாதத்தை உடையதான ஆசனமும் செய்யவும் என்று கூறி பத்திராசனம், ஆசனம் இவைகளின் செய்யும் முறை விரிவாக கூறப்படுகிறது. அதில் பத்திராசனத்தில் முன்னும் பின்னுமாக இரண்டு படி அமைத்துச் செய்யவும் எனக் கூறப்படுகிறது. பின்பு அபிஷேக தினத்தின் முன்தினம் அபிவிருத்திக்காகச் செய்ய வேண்டிய சிரார்த்தம் முறைப்படி வேண்டும் என கூறப்படுகிறது. அந்த நாளில் இரவில் ரக்ஷபந்தனமும் செய்ய வேண்டும் என அறிவிக்கிறார். மறுதினம் காலையில் ஹோமம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு மண்டலம் அமைக்கும் முறை விளக்கப்படுகிறது. அங்கே ஆறு கை அளவு மண்டல அளவு செய்து, அதை நூறு பாகமாக பிரித்து, அந்த நூறு பாகங்களில் ஜம்பூத்வீபத்தை எழுதும் முறை வர்ணிக்கப்படுகிறது.

பாரதவருஷம், இமயமலை, கிம்புருஹ வருஷம், ஹேமகூடமலை, ஹரிவருஷம் நிஷத மலை, குரு வருஷம் சிருங்கமலை, ஹிரண்ய வருஷம் வெண்மையான மலை, ரம்யவர்ஷம் நீலவர்ண மலை, பத்ர வருஷம், மால்யவான் மலை, கேதுமாலவருஷம் கந்தமாதன மலை, இலாவிருத விருஷம், மேருபர்வதம் இவைகளின் கல்பனத்தை வலமாக விளக்குகிறார். இவ்வாறு நூறு பாகம் உடைய ஜம்பூத்தீபத்திற்கு வெளியில் லவண சமுத்திரம் வர்ணிக்கப்படுகிறது. த்வீபங்களுக்கு பிறகு தயிர் சமுத்திரம், அதற்கு பிறகு தீபம், விஷயமாக உப்பு, பால், நெய், கருப்புஞ்சாறு, நல்ல தீர்த்தமாகிய ஆறு சமுத்திரங்களும் சாக, குச, கிரவுஞ்ச, சால்மலி, கோமேத புஷ்கலம், ஆகிய ஆறு த்வீபங்களும் இருக்கின்றன என்றும் ஏழு த்வீபம், ஏழு சமுத்திரங்களின் இருப்பிடம் வர்ணிக்கப்படுகிறது. சுத்த ஜப சமுத்ரத்திற்கு பிறகு தேவர்களின் விளையாட்டிற்காக பத்து கோடி அளவுள்ள லோகாலோக பர்வதம் பிரகாசிக்கிறது என்று வர்ணிக்கப்படுகிறது. பிறகு இமயமலையில் நாற்பத்தி மூன்று எண்ணிக்கையுள்ள பிசாசர்கள் இருக்கிறார்கள் என்று கூறி அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு பூஜை செய்வித்து ரக்ஷõ சூத்ரங்களுடன், மாம்சான்னம், கள் இவைகளால் பலி கொடுக்கவேண்டும் என கூறப்படுகிறது. ரக்ஷõசூத்ரம், வஸ்திரம், கொடி, ஆபரணம் பூணூல் என்று ரக்ஷõபந்தனம் முதலான பொருள்களின் விபரம் இந்த படலத்தில் 103வது ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது. பிறகு ச்வேதாசலத்தில் அறுபத்தி நான்கு எண்ணிக்கை உள்ள திதியின் புத்ரர்களான அசுரர்கள் இருக்கிறார்கள் எனக் கூறி அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களுக்கு முன்பு கூறியபடி பூஜை முதலாக பலியைக் கொடுக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. பிறகு ச்ருங்கவான் என்ற மலையில் 31 பித்ருக்கள் வசிக்கிறார்கள் என்று கூறி அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு ரக்ஷõபந்தனம் முதலியவைகளால் நல்லெண்ணெய், மாம்சங்களாலும், அன்னங்களாலும், பூஜை முன்னிட்டதாக பலி கொடுக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இங்கு ஆதித என்ற பித்ருக்கள் முதற்கொண்டு பெயர்களைக் குறிப்பிட்டு இவர்கள் தனித்தனியாக மூன்று பெயர்களை உடையவரான கனங்களாக இருக்கிறார்கள்.

ஆகையால் இவர்கள் இருபத்தி ஒன்று பெயர்கள் எனக் கூறப்படுகிறது. பிறகு பத்து பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆக மொத்தம் முப்பத்து ஒரு எண்ணிக்கை உள்ள பித்ருக்கள் கூறப்படுகிறார்கள். பிறகு நீலாசலத்தில் நாற்பத்து ஒன்று எண்ணிக்கையுள்ள முனிவர்கள் வசிக்கிறார்கள் என்று கூறி அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு சந்தனங்களாலும் ரக்ஷõபந்தனங்களாலும், அவர்அவர்களின் பெயர்களால் ரிக், யஜுர், ஸாம வேத மந்த்ரங்களாலோ, பூஜை செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. பிறகு நிஷதபர்வதத்தில் அனந்தன் முதலான எட்டு நாகர்கள் வசிக்கிறார்கள் என்று கூறி அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு ரக்ஷõபந்தனம் கொடுத்து சர்க்கரை, தேன், நெய், நைவேத்யம் இவைகளைக் கொடுப்பதன்மூலம் பலவிதமான சந்தன, புஷ்பங்களால் பூஜிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. மஹாமேரு பர்வதத்தில், எட்டு வசுக்கள், பதினொரு ருத்ரர்கள். பனிரண்டு சூரியர்கள், பிரஜாபதி, வஷட்காரம் என்று முப்பத்தி மூன்று தேவர்கள் வசிக்கிறார்கள் என்று கூறி அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு ரக்ஷõபந்தனம் கொடுத்து, தூபம், நமஸ்காரம் இவைகளால் பூஜித்து, அவர்களைக் குறித்து, அக்னியில் நெய்யால் ஹோமம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு ஹேமகூடம் வரையில் கந்தர்வர்கள், அப்சரஸ்திரீகள் பூஜிக்கப்படுபவர் என்று கூறி சித்ரசேனன் முதலிய இருபத்தி ஏழு பெயர்களைக் குறிப்பிடப்படுகின்றன. அப்சர ஸ்திரீகளின் விஷயத்தில் அக்ருத்தியர்கள் 14பேர், மேனகை முதலானோர் 24 பெயர் என கூறப்படுகின்றன. பிறகு மறுபடியும் நீலாசலத்தில் இருக்கின்ற சித்தர்கள் 8 நபர்களை பலவர்ண பலிதானத்தினால் பூஜித்து அவர்களுக்கு ரக்ஷõபந்தனம் முதலிய கொடுக்கவும் என கூறப்படுகிறது. திரும்பவும் மேரு பர்வதத்தில் இருக்கின்ற சூரியன் முதலிய நவகிரஹங்கள் அபிஜித் நக்ஷத்திரத்தோடு கூடிய 27 நக்ஷத்ரங்கள் சப்த மாத்ருக்களோடு, வீரபத்ரன், கணபதி, இந்திரன் முதலான எட்டு திக் பாலகர்களோடு, பிரம்மா, விஷ்ணு, மஹாதேவன், ஸ்கந்தன் இவர்களையும் பதினான்கு தேவ ஸ்திரீகளுடன் கூடிய தச்சர் இருவர்களையும் பெயரோடு குறிப்பிட்டு அவர்களுக்கு முறையாக ரக்ஷõபந்தனம் கொடுத்து ஐந்துவித வர்ண அன்னங்களைப் பலி கொடுக்கவேண்டும் எனக் கூறப்படுகிறது.

இங்கு மண்டல கர்மத்தில் கூறப்பட்டுள்ள மால்யவான். கந்தமாதனபர்வதம் இன்றி மற்ற ஹிமாலயம் முதலிய ஏழுமலைகள் பூஜையில் உபயோகிக்கப்படுகின்றன. நீலாசல மேரு பர்வதம் இரண்டு முறை கூறப்பட்டுள்ளன. இந்த விஷயம் ஆராய்ச்சிக்கு தகுந்தது அல்ல. பிறகு முன்பு ஏற்படுத்தப்பட்ட கூடத்தில் மேற்கில் உள்ள கூடத்தில் மேற்கில் உள்ள வேதிகையில் நூல் வஸ்திரம், தேங்காய், மாவிலை இவைகள் கூடிய நெய் நிரப்பப்பட்ட எட்டு அல்லது இருபத்தெட்டு, நூற்று எட்டு கடங்களை ஸ்தாபித்து மூளைகளில் நூல், வஸ்திரம் முதலியவைகளோடு கூடிய பதினாரு கடங்களை ஸ்தாபித்து அதில் திரவ்யங்களை அர்பணிக்கவும் என்று கூறி அங்கு அர்பணிக்க வேண்டிய முக்கியமான மருந்துவகைகள் கூறப்பட்டு இருக்கின்றன. பிறகு அந்த வேதிகையில் விருஷபத்தின் தோல், சிங்கத்தின் தோல், புலித்தோல், யானைத்தோல் ஆகிய நான்கு தோல்களை விரிக்கவும் எனக் கூறியுள்ளார். அதற்கு மேல் பத்திரபீடத்தில் சிம்மாசனம்வரை ஆசனம் பூஜித்து மிருத்ஞ்ஜிய மந்திரம் கூறி கந்த புஷ்பங்களால் பூஜிக்கவும் என கூறி பிறகு சார்வபவும மண்டல விஷயத்தில் ஆசனம் பூஜிப்பது உயர்ந்தது, மத்யமமானது என பேதமாக கூறப்பட்டு உள்ளது. ஆசனத்தில் மேல் மத்தியில் ஸ்வர்ண புஷ்பம் வைத்து அங்கு புரோஹிதர் முதலான ஜோஸ்யர்களால் சைன்யங்களுடன் கூடிய அரசர்களாலும், அமைச்சர்களாலும் சூழப்பட்ட அரசனை அமர்த்தவும். பிறகு அரசரின் அபிஷேக முறை கூறப்படுகிறது. ஆசார்யன் ஐந்து அணிகலன்கள் அணிந்து வெட்டப்படாத வெண்பட்டை தரித்து வேத புண்யாக மந்திர சப்தங்களாலும் நாட்ய, வாத்ய, பாட்டு முதலிய மங்களமான சப்தங்களாலும் கூறி வடக்கு முகமாக கம்பளத்தினால் ராஜாவை போர்த்தி நெய்யின் மந்திரத்தைக் கூறி நெய் குடங்களை அபிஷேகம் செய்யவும். கம்பளத்தை எடுத்து பூஜிக்கப்பட்ட கும்ப தீர்த்தத்தினாலும் பலவித மெதுவான பழங்களாலும், வாசனையுள்ள புஷ்பங்களாலும் அபிஷேகம் செய்யவேண்டும் என கூறி அபிஷேகம் செய்யும் சமயத்தில் சொல்லவேண்டிய மந்திரங்களும் கூறப்பட்டுள்ளன. இங்கு முடிவில் இந்த மந்திரங்களாலும் மற்ற அதர்வண வேத மந்திரங்களாலும் ருத்திரபாராயணத்திலோ மற்றவர்கள் செய்யவும் என பல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன.

ஜல சமுத்திரத்திற்கு பிறகு யக்ஷரர்களை பலநிறம் உடைய தானத்தினால் பூஜித்து ரக்ஷõபந்தனம் அவர்களுக்கு கூறி யக்ஷர்களின் பெயர் விளக்கப்படுகின்றன. பிறகு நீலாசலம் என்ற மலையில் இருக்கும் 8 சித்தர்களை பலநிறம் உடைய பலிதானத்தால் ரக்ஷõபந்தனம் முதலியவைகள் கொடுத்து அவர்களை பூஜிக்கவும் என கூறப்படுகிறது. மறுபடியும் மேருமலையில் ஆதித்யாதி நவக்கிரஹங்கள் அபிசித் நக்ஷத்திரத்துடன் கூடிய 27 நக்ஷத்திரங்கள் ஸப்த மாதாக்களுடன் கூடின வீர, விக்னேசர் திக்பாலகர்களுடன் கூடின பிரம்மா, விஷ்ணு, மஹாதேவன் இவர்கள் 14 தேவ ஸ்திரீகளுடன் கூடிய இரண்டு வைத்யர்கள் ஆகிய இவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு முறையாக ரக்ஷõபந்தனம் முதலியவை கொடுத்து 5 நிறம் உடைய ஹவிஸ் பலி கொடுத்து பூஜை செய்யவும் என கூறப்படுகிறது. இங்கு மண்டலம் அமைக்கும் முறையில் மால்யவான், கந்தமாதன பர்வதம் இன்றி மற்ற இமயமலை முதலிய ஏழுமலைகள் பூஜை விஷயத்தில் விளக்கப்படுகின்ற நீலாசலமும், மேரு பர்வதமும் இவை இரண்டும் இருமுறை கூறப்படுகிறது. இந்த விஷயமானது விமர்சிப்பதற்கு பிறகு முன்பு தயாரிக்கப்பட்ட பந்தலில் மேற்கு வேதிகை வஸ்திரம் தேங்காய், மாவிலை, இவைகளால் அலங்கரிக்கப்பட்ட நெய்யால் நிரப்பப்பட்ட 8,28,108, என்ற எண்ணிக்கையாலோ ஸ்தாபித்து அங்கு ஆக்னேயாதி கோணங்களில் நூல் வஸ்திரம் முதலியவையுடன் கூடிய 16 கும்பங்களை ஸ்தாபித்து அதில் திரவ்யங்களை நிரப்பவும் எனக் கூறிஹோமவிதி முதலிய விசேஷமான திரவ்யங்களை கூறப்படுகிறது. பிறகு அந்த வேதிகையில் விருஷபத்தின், சிங்கத்தின் தோல், புலித்தோல், யானைத்தோல், ஆகிய நான்கு தோல்களை விரிக்கவும் எனக்கூறியுள்ளார். அதற்கு மேல் பத்திரபீடத்தில் சிம்மாசனம் வரை. ஆசனம் பூஜித்து மிருத்ஞ்ஜிய மந்திரம் கூறி கந்த புஷ்பங்களால் பூஜிக்கவும் என கூறி பிறகு சார்வபவும மண்டல விஷயத்தில் ஆசனம் பூஜிப்பது உயர்ந்தது, மத்யமமானது என பேதமாக கூறப்பட்டுள்ளது.

ஆசனத்தின் மேல் மத்தியில் ஸ்வர்ண புஷ்பம் வைத்து அங்கு புரோஹிதர் முதலான ஜோஸ்யர்களால் சைன்யங்களுடன் கூடிய அரசர்களாளும் அமைச்சர்களாலும் சூழப்பட்ட அரசனை அமர்த்தவும். பிறகு அரசரின் அபிஷேக முறை கூறப்படுகிறது. ஆசார்யன் ஐந்து அணிகலன்களை அணிந்து வெட்டப்படாத வெண்பட்டை தரித்து வேத, புண்யாக மந்திர சப்தங்களாலும் நாட்ய, வாத்ய, பாட்டு முதலிய மங்களமான சப்தங்களாலும் கூறி வடக்கு முகமாக கம்பளத்தினால் ராஜாவை போர்த்தி நெய்யின் மந்திரத்தை கூறி நெய் குடங்களை அபிஷேகம் செய்யவும். கம்ளபத்தை எடுத்து பூஜிக்கப்பட்ட கும்ப தீர்த்தத்தினாலும் பலவித மெதுவான பழங்களாலும் வாசனையுள்ள புஷ்பங்களாலும் அபிஷேகம் செய்யவேண்டும் என கூறி அபிஷேகம் செய்யும் சமயத்தில் சொல்லவேண்டிய மந்திரங்களும் கூறப்படுகின்றன. இங்குமுடிவில் இந்த மந்திரங்களாலும் மற்ற அதர்வண வேத மந்திரங்களாலும் உருத்திராத்யயத்தினாலோ மற்றவர்கள் செய்யவும் என பல மந்திரங்கள் கூறப்படுகின்றன. அபிஷேகத்திற்கு பிறகு லோகாலோகமலையில் தேவர்கள் விளையாடுவதற்கு பத்து கோடி தண்டம் அளவுள்ள இடம் பிராசிக்கிறதாக வர்ணிக்கப்படுகிறது. இமாலயத்தில் 34 எண்ணிக்கையுள்ள பிசாசர்கள் இருக்கிறார்கள் அவர்களின் பெயரும் குறிக்கப்பட்டு அவைகளின் பூஜை முறைப்படி வர்ணிக்கப்பட்டு மாம்சான்னம், கள் இவைகளால் பலிகொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. ரக்ஷõபந்தனம், வஸ்திரம் பூஷணம் பூணல், என்றும் ரக்ஷõபந்தனம் முதலிய விவரணங்கள் இந்த படலத்திலே நூற்றி மூன்றாவது ஸ்லோகத்தில் காணப்படுகிறது. பிறகு ஸ்வேதாசலத்தில் அறுபத்தி நான்கு அசுரர்கள், தானவர்கள் இருக்கிறார்கள் எனக் கூறி அவர்களின் பெயர் குறிப்பிட்டு அவர்களுக்கு முன்பு போல் பூஜை செய்யும் விதியும் பலியும் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு சிருங்கவத்யசலம் என்ற மலையில் 31 எண்ணிக்கை உள்ள பிதுர்க்கள் வசிக்கிறார்கள் என்று கூறி அவர்களின் பெயரையும் கூறி அவர்களுக்கு ரக்ஷõபந்தனம் முதலியவைகளாலும் நல்லஎண்ணை, அன்னம், மாம்சம், இவைகளாலும் பூஜைமுறைப்படி பலிகொடுக்கவும் என கூறப்படுகிறது. இங்கு ஆதிதர் என்ற பிதுர் தேவர்கள் முதல் கொண்டு ஏழு பேர்களையும் குறிப்பிட்டு இவர்கள் தனித்தனியாக மூன்று எண்ணிக்கை உடைய கணங்களாக ஆகிறார்கள்.

ஆகையால் இவர்கள் 21 எண்ணிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. பிறகு 10 பெயர்கள் கூறப்படுகின்றன. பிறகு 10 பெயர்கள் கூறப்படுகின்றன. ஆக மொத்தம் 21 எண்ணிக்கை உள்ளன. பிதுர்க்கள் சித்திக்கிறார்கள். பிறகு நீலாசலம் என்ற மலையில் உள்ள முனிவர்கள் வசிக்கிறார்கள் என்று கூறி அவர்களின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களை சந்தனம், ரக்ஷõபந்தனம் இவைகளாலும் அவரவர் பெயர்களாலும் ரூக், யஜூஸ், ஸாம, மந்திரங்களாலுமோ, பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். பிறகு நிஷத பர்வதத்தில் அனந்தாதி எட்டு நாகர்கள் வசிப்பதாக கூறி அவர்களின் பெயர்களையும் கூறி அவர்களுக்கு ரக்ஷõ பந்தனம் முதலியவை கொடுத்து சர்க்கரை, தேன், நெய் இவைகளின் நைவேத்ய அர்பண பிரகாரம், கலப்படம் இல்லாத கந்த புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு மஹாமேரு பர்வதத்தில் அஷ்டவசுக்கள், பதினோருத்திரர்கள், பன்னிரண்டு ஆதித்யர்கள், பிராஜாபதி, வஷட்காரம் என முற்பத்திமூன்று தேவர்கள் வசிக்கிறார்கள் என்று கூறி அவர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்களுக்கு ரக்ஷõ பந்தனம் முதலியவை சமர்பித்து நமஸ்காரங்களாலும் தூபங்களாலும் பூஜித்து அவர்களை குறித்து அக்னியில் நெய்யால் ஹோமம் செய்யவும் என கூறப்படுகிறது. பின்பு ஹேமகூடமலையில் கந்தர்வர் அப்ஸரஸ்திரீகள் பூஜிக்கப் படுபவர்களாக கூறி சித்ரசேனம் முதலிய 27 பெயரை உடைய கந்தர்வர்கள் கூறப்படுகின்றன. அப்ஸர ஸ்திரீகளின் விஷயத்தில் அகிருத்யம் முதலியவர்கள் 14 பேரும் மேனகை முதலியவர்களுமான 24பேரும் கூறப்படுகின்றன. முன்பு கூறப்பட்ட கந்தர்வர்கள் அப்ஸரஸ்திரீகள் இவர்களுக்கு ரக்ஷõபந்தம் கொடுத்து நல்ல வாசனை உடைய சந்தனங்களாலும், புஷ்பங்களாலும் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு மறுபடியும் ஹேமபர்வ அல்லது ஹேம கூடபர்வதத்திலோ இருக்கும். அபிஷேகத்திற்குப் பிறகு சத்திரியர்களின் அரசன் பருத்தி ஆடை அணிந்து புண்யாக மந்திரங்கள் சங்கத்வணி பெரியதாக சப்தத்துடன்கூடி ஆசமனம் செய்து தேவர்களை ஆசார்யன் பிராம்மணர்களையும் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. கொடி, ஆயுதம், வெண் கொடை இவைகளையும் முன்பு கூறிய மந்திரங்களால் பூஜிக்கவும் என கூறப்படுகிறது.

முன்பு துர்கா பூஜா படலத்தில் கொடி முதலியவைகளின் மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. பிறகு ஹோம வேதிகையை அடைந்து அங்கு விருஷபம் , கலைமான், கருப்பு கலைமான், சிம்மம், புலி, இவைகளின் தோல்களை உரித்து அமர்ந்து அங்கு குண்டத்திலோ, ஸ்தண்டிலத்திலோ நாபிஸ்தானத்தில் அமர்ந்து உத்தம ஆசார்யன் சமித்நெய், இவைகளால் நூறு எண்ணிக்கையாக ஹோமம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. இங்கு ஹோம விஷயத்தில் மிருத்யுஞ்சய மந்திரமே உயர்ந்ததானது அறிவிக்கப்படுகிறது. பிறகு ஹோம முடிவில் உத்தம ஆசார்யன் அஞ்சலிகையுடன் கூட எல்லா தேவகணங்களும் இந்த பூஜையை கொண்டு பூமியிலிருந்து செய்யட்டும். அதிகமான சித்தியை கொடுத்து விட்டு மறுபடியும் வரவேண்டும், என கூறவும் என்று அந்த பூஜாகாலத்தில் ஆசார்யனுக்கு தட்சிணை கொடுக்கவும் என கூறுகிறார். விசேஷமாக பிராமணர்களுக்கு தானம் செய்யவும். எல்லா ஜனங்களையும் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கவும். ஸ்வாமியை வணங்கி அவருக்கு கிராமம், ஸ்வர்ணம் முதலியவைகளை சமர்பிக்கவும். பிறகு சந்தோஷமனதை உடையவனும் கிரீடம் முதலிய ஆபரணங்கள் அணிந்தவனுமாக யானையின் மேல் ஏறி மாளிகையை அடையவும் என்பதான கார்ய தொகுப்பு புஷ்யாபிஷேக விதியின் முடிவில் எல்லா அபசகுனம் நீங்குவதற்கும் எல்லா வியாதி நீங்குவதற்கும், ஸார்வபவும பிரசித்தத்திற்கும் ஆயுள், ஆரோக்ய சித்திக்கும், எதிரிகளை ஜயிப்பதற்கும், அந்த இடத்தில் அரசனுக்கு புஷ்பாபிஷேகம் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கவும் என்று பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறாக 80வது படல கருத்து சுருக்கமாகும்.

1. பரிசுத்தமானதும் பாபத்தை போக்கக் கூடியதும், உத்பாதம் முதலிய அபசகுணங்களை அழிக்க வல்லதுமான புஷ்யாபிஷேகம் பற்றி கூறுகிறேன். ஹே பிராம்மண உத்தமர்களே கேளுங்கள்.

2. அழகான புண்ய தேசத்தில் பன்னிரண்டு (12) முழம் அளவுள்ளதாக பக்தியுடன் சுபமான கொட்டகை அமைக்கவும். மத்ய ஸ்தம்பமும் அமைக்க வேண்டும்.

3. மத்தியில் வேதிகை அமைத்து பன்னிரண்டு ஸ்தம்பம் அமைக்கவும். கண்ணாடி போல் அழகாக அலங்கரிக்கப்பட்டதாக அமைக்க வேண்டும்.

4. அதன் மேற்கு பாகத்திலும் தெற்கிலும் மண்டபத்திற்கு வெளியாக இரண்டு வேதிகை ஐந்து, ஆறு முழ அளவுள்ளதாக அமைக்க வேண்டும்.

5. ஒரே அளவான நாற்கோணமாகவும் இரண்டு முழம் உயரம் உள்ளதாகவும் இரண்டு பக்கமும் இரண்டு படிக்கட்டுள்ளதாகவும்

6. இவ்வாறாக எல்லாவற்றையும் அமைத்து ராஜாபிஷேகம் செய்யவும், புஷ்ப மாதமான தை மாதத்தில் பூச நக்ஷத்திரத்தில் நீண்டதான தீர்த்த நதிக்கரைகளிலும், கோயில்களிலும்

7. நந்தவனங்களிலும், புண்ய÷க்ஷத்திரங்களிலும், சிவஸ்தானங்களிலும், விசேஷமாக ஆசார்யன் மந்திரத்துடன் கூடியவனாக வடக்கு, கிழக்கு வட கிழக்கு திசைகளில்

8. அபிஷேக ஆரம்ப முதல் நாளில் தைவக்ஞனால் பலி கொடுக்க சொல்ல வேண்டும். நல்ல புத்திமானாவான் தயிர், பொறி அக்ஷதையுடன் சந்தன, புஷ்பம் இவைகளுடன் பலி கொடுக்க வேண்டும்.

9. இங்கு பூஜையில் விருப்பமுள்ளவர்களான எல்லா தேவர்கள் திசையிலுள்ள நாகர்கள் யானைகள், மற்ற எல்லா அம்சத்தை உடையவர்களும் வாருங்கள் (வரவேண்டும்)

10. என்று ஒரே மனதை உடையவனாக எல்லா தேவாதிகளையும் ஆவாஹனம் செய்யவும். முதலில் தன்னுடைய பூஜையை முடித்து, அரசனுடைய சாந்தியை செய்ய வேண்டும்.

11. இவ்வாறாக மேற்கூறியவாறு பலி கொடுத்து ராத்திரியில் ஸ்வப்னத்தின் பயனை அறியவும். சுபமாயிருத்தால் காலையில் ஆரம்பம் செய்யவும். அசுபமாயிருப்பில் பரிஹாரத்துடன் ஆரம்பிக்க வேண்டும்.

12. திவாரம், தோரணம், இவைகளுடன் கூடிய மண்டபத்தை அலங்கரிக்கவும். முன்பு கூறப்பட்ட முறைப்படி அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும்.

13. ஹே அந்தணர்களே! யக்ஞவ்ருக்ஷத்திலிருந்து, தயார் செய்ததான பத்ராஸநம் அமைக்கவும். ஐந்து ஆறு, மாத்ராங்குலம் முதல் இருபத்தைந்து கை அளவுள்ளதாக

14. பத்ராஸநத்தில் அளவு கூறப்பட்டது அதை பத்திரத்துடன் கூடியதாகவோ பத்ர அமைப்பின்றியோ அமைக்கலாம். விசேஷமாக முன்பக்கமோ பின் பக்கமோ படியுள்ளதாக அமைக்க வேண்டும்.

15. அதன் வடக்கு பாகத்தில் காலுடன் கூடியதாக ஆஸனம் அமைக்கவும். விருப்பப்பட்ட அளவுடன் கூடியதாக படி அமைக்க வேண்டும்.

16. வ்ருத்தி சிராத்தம் என்ற நாந்தி சிராத்தம் செய்வதெனில் முறைப்படி முன்தினமே செய்ய வேண்டும். எல்லா அலங்காரத்துடன் கூடியதாக அங்குரார்ப்பணம் செய்யவேண்டும்.

17. அதிகாலை நவக்ரஹ ஹோமம் முறைப்படி செய்யவும், நான்கு முழம் முதல் ஆறு அங்குலம் வரை அதிகரித்ததாக

18. ஆறு கை அளவு வரையிலாக உள்ளது. மண்டலத்தின் அளவாகும். தெற்கு திசை முதலானதாக நூறு பாகம் செய்யவேண்டும்.

19. தெற்கு திசை முதலாக ஒன்பது அம்சத்தில் தங்கக் கலரில் பாரதவர்ஷம் அமைக்கவேண்டும். வெள்ளை வர்ணமாக இரண்டு பாகத்தில் ஹிமயமலை அமைக்கவும்.

20. ஒன்பதம்சத்தினால் கிம்புருஷவர்ஷம் செய்யவும் அது தங்க கலராகும். இரண்டு பாக அளவில் ஹேம கூடம் என்ற மலை அமைப்பு ஆகும்.

21. ஹேமகூடம் கூறப்பட்டு வடக்கில் ஹரிவர்ஷம் அமைக்கவும். அது தங்ககலர் என கூறப்பட்டு இரண்டு பாகமென்றும், நான்கு பாகத்தால் நிஷதம் அமைக்கவேண்டும்.

22. மேற்கிலிருந்து கிழக்காக இவைகளின் அமைப்பு ஆகும். வடக்கிலுள்ள பாகத்திலிருந்து ஒன்பதம்சம் குருவர்ஷம்.

23. தங்கக் கலராகவும், இரண்டு பாகத்தால் ச்ருங்கவான் என்ற மலையும் மயில் நிறமாக அமைத்து தங்கமயமாக அமைக்க வேண்டும்.

24. ஒன்பது அம்சம் உடைய ஹிரண்யமோ தங்க மயமாகவோ கூறப்பட்டுள்ளது. இரண்டு பாகத்தினால் தங்கநிறமும் வெள்ளையும் கூடியதாக ஸ்வேதாசலம் என்ற மலை அமைப்பை அமைக்க வேண்டும்.

25. ஒன்பது பாகத்தினால் தங்க நிறமுள்ளதாக ரம்யவர்ஷம் அமைக்கவும், இரண்டு பாகத்தினால் வைடூர்யம் போல் நீலாசல மலையும் அமைத்து

26. மீதியுள்ள முற்பத்தி நான்கு பாகத்தில் மத்யமமாக அமைக்கவும், கிழக்கு திசை முதல் முப்பத்தி இரண்டு பாகத்துடன் கூடியதாக

27. வெள்ளை நிறமுள்ள பத்ரவர்ஷம் அமைக்கவும், மேற்கு பாகத்தில் கருப்பு வர்ணமுடையதாக மால்யவான் என்ற மலையை அமைக்க வேண்டும்.

28. மேற்கு திசையிலிருந்து ஆரம்பித்து கேது மாலவர்ஷத்தை அமைக்கவும். முற்பத்திரண்டு பத அளவினால் க்ருஷ்ணவர்ணமாக கந்தமாதன பர்வதம் அமைக்க வேண்டும்.

29. ஸமமாக ஒரு பாகத்தினால் இளாவ்ருத வர்ஷம் அமைக்கவும். ஒரு பாகத்தினால் வெள்ளை வர்ணம் அமைக்கவும், நடுவில் சதுரமான பாகத்தினால்

30. முப்பத்திரண்டு பாகாம்சத்தில் மேருபர்வதம் அமைக்கவும். வடமேற்கு திசையிலிருந்து தென்கிழக்கு திசை வரை வட்டமாக சூத்ரமிட வேண்டும்.

31. அவ்வாறே தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசை வரை மூலை திசைகளின் சூத்ரம் அமைக்கவும். கிழக்கில் வெள்ளை வர்ணமும் தெற்கில் தங்க நிறமும்

32. மேற்கில் கருப்பு வர்ணமும், வடக்கில் சிவப்பு வர்ணமும் மீதமுள்ள எல்லா தேவர்களும் மஞ்சள் நிறமாக சொல்லப்பட்டுள்ளது.

33. நூறு பாக அளவில் ஜம்பூத்வீபமானது கூறப்பட்டுள்ளது. ஜம்பூத்வீப ஸம அளவினாலே லவண சமுத்ரமாகும்.

34. ஜம்பூத்வீப ஸமமாக சாகத்வீபமாகும், அதனிரண்டு மடங்கு அளவினால் ஏழு எண்ணிக்கையுள்ள ஸமுத்ரமும், தீபமும் ஆகும்.

35. லக்ஷம் யோஜனை பரப்பளவுடைய ஜம்பூத்வீபம் கூறப்படுகிறது. அதற்கு வெளியில் அந்த அளவினால் லவண சமுத்ரமும் கூறப்படுகிறது.

36. லவண ஸமுத்திரத்திலிருந்து இரண்டு மடங்கு பாற்கடலும், பாற்கடலைப் போல் இரண்டு மடங்கு தயிர் கடலும், தயிர் கடலிலிருந்து இரண்டு மடங்கு நெய்யும், நெய்யைப் போல் இரண்டு மடங்கு கரும்புச்சாறு கடலும்,

37. கரும்புசாறு கடலிலிருந்து இரண்டு மடங்கு தேன்மயமான கடலும், தேன்மயமான கடலிலிருந்து நல்ல நீர் கடலும் ஜம்பூ த்வீபத்திலிருந்து சாகத்வீபமும் சாகத்வீபத்திலிருந்து குசத்வீபமும்

38. குசத்வீபத்திலிருந்து, கிரௌஞ்சத்வீபமும் கூறப்பட்டு க்ரௌஞ்சத்திலிருந்து சால்மலித்வீபமும் சால்மலியிலிருந்து கோமேதகமும், கோமேதகத்திலிருந்து புஷ்பராகமும் உள்ளதாக அறிய வேண்டும்.

39. சுத்த ஜல ஸமுத்ரத்திற்கு வெளியில் லோகா லோகம் என்ற மலை என்று அறியவும். நடுவில் சிவப்பு வர்ணமும் வெளியில் கருப்பு வர்ணமும்

40. பத்து கோடி யோஜனை அளவு பிரதேசமானது தேவர்களின் விளையாட்டிற்கு ஏற்றதாகும். அதிலிருந்து அத்திரிகிரியும், லோக லோகமும் ஆகும்.

41. பத்தாயிரம் யோஜனை விஸ்தீர்ணம் உடைய தேசம் தேவர்களின் ஆச்ரமமாக ஆகும். இமாலயத்தில் பிசாசுகள் இருக்கின்றன. அவர்களின் பெயர்கள் பின் வருமாறு ஆகும்.

42. த்வஜன், சண்டன், கம்லாஸன், கதலீ, பகன் என்பவனும் படபாமுகன், த்விபாதன், விபாதன், காரகன், என்றும் (விபாதன் என்றும்)

43. ஜ்வாலா, கும்பபாத்ரன், கும்பீ, ப்ரதுந்திகன், ப்ரதுந்திகோபன், உபவீரன், ப்ரவீரன், உலூகலன் என்றும்

44. உலூகலீ, மார்கடீ, மார்கடன், சக்ரஷண்டகன், சக்ரஷண்டீ, பாணிபத்ரன், பாணிபத்ரி, வாஸுகன்

45. வாஸுகி, பாம்சுமன், பாம்சுமதினீ, நிபுணன், நிபுனி, (பலிபுக்) உச்சேஷணா,

46. ப்ரஸ்கந்த: ஸ்கந்திகா என்ற முற்பத்தி நான்கு பெயர் உதாரணமாக்கப்பட்டுள்ளது. இவர்களை மாம்ஸான்னங்களால் கவுரவித்து கள் முதலியவை அளித்து ரக்ஷõபந்தன கயிறுகளால் பூஜிக்க வேண்டும்.

47. ச்வேதாசலத்தில் அசுரர்களும் ராக்ஷஸர்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளன. ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன்

48. இந்த இரண்டு பேரும் திதியின் பிள்ளையாக அறியவும், அசுரர்கள் விப்ரசித்தன் த்வீமூர்த்தா, சம்பரன் சங்குசிரன்,

49. யமன், சங்கு கர்ணன், த்விபாதன், கவேஷ்டி, மேஷ வக்த்ரன், மகவான், கபிலன்,

50. வாமனன், மரீசி, இக்ஷீபன், பாகன், அபாகன், சாவாக்ரஹன் என்று அறிய வேண்டும்.

51. தி÷க்ஷõபன், சுகேசன், கேதுவீர்யன், சதஹ்ரதன், மந்திரஜிது, அச்வஜிது, ராஜி,

52. தேவசித், ஏகவக்தரன், ஸுபாஹு, வாரகன், வைச்வாநரன், சுலோமா, த்ரவினன், மஹாசிரன்,

53. ஸ்வர்பானு, பூஷபூர்வன், த்விபுஜன், த்ருதராஷ்டகன், சந்திரதாபனன், சூக்ஷமன், நிச்சந்திரன்

54. ஸ்வர்ண நாபண், மஹாகிரி, ஆபிலோகன், சுகேசன், மலையன், மலகன்,

55. நயன், நகமூர்தா, மஹோதரன், ப்ரமோதன், குமுதன், அச்வக்ரீவன், வைச்ரவன்,

56. விரூபாக்ஷன், சருபதன், ஹரன், ராஜா, ஹிரண்யயுக், சதமகன், சம்பரன், சரபன், மயன்,

57. சரபன், சூர்யன், சந்திரன் ஆகிய நான்கு பேருக்கும் முன்பு போல் பூஜிக்க வேண்டும்.

58. ச்ருங்கவதி மலையில் பித்ருக்களை பூஜிக்கவும். சுபாஸ்வரர்களை, அமிருதர்கள் அக்னி ஷ்வாத்தர்கள், உபஹூதர்கள்,

59. ஸோமபர்கள், சுகாலிகர்கள், க்ரவ்யாதர்கள், ஆஜ்யபர்கன், தனித்தனியாக மூன்று விதமாக கூறப்பட்டுள்ளன.

60. ஏழு கணங்களால் இருபத்தி ஓர் எண்ணிக்கையாக சொல்லப்பட்டுள்ளன. அக்னி ஸ்வாத்தர்கள் பர்ஹிஷதர்கள், ஸோமபர்கள்,

61. ஹவிஸ்மந்தர்கள், ஆஜ்யபர்கள், சுகாலிகர்கள், அக்னி, அனக்னி, ஹவ்யவாஹனர்கள், ஹவிஸ், ஸளம்யர்கள் பத்து நபர்களாகும்.

62. நல்லெண்ணை, அன்னம், மாம்சம், ரக்ஷõ பந்தன, சூத்திரம் இவைகளால் மேற்கூறியவர்களை பூஜிக்க வேண்டும். நீலாசலத்தில் காச்யபர் முதலான ரிஷிகள் பூஜிக்கப்படவேண்டும்.

63. காச்யபர், அத்ரி, வசிட்டர், பாரத்வாஜர் கவுதமர், விச்வாமித்ரர் ஜமதக்னி, மரீசி,

64. புலஸ்த்யர், புலகர், க்ரது, ஆங்கிரஸ், சனத்குமாரர், சனகர், சனந்தனர், ஸனாதனர்,

65. தக்ஷன், ஜைகீஷவ்யன், தஹனன், ஏகதன், தீவிதர்த்ரிதர், ஜாபாலீ, துர்வாஸர், துர்வனீதகன்,

66. கண்வர், காத்யாயனர், மார்கண்டேயர், தீர்க்கதமர், சுனர், சேபர், விதுரர், சாத்வர், ஸம்வர்தர் என்றும்

67. ச்யவனர், பராசரர், த்வைபாயனர், யவக்ரீதர், தேவராதி, தேவராதா, ஜயன்

68. ஆகிய நாற்பது முனிவர்களை, சந்தனம் ரக்ஷõசூத்திரம் இவைகளாலும் அவரவர் பெயர்களாலும் ரிக், யஜுர், சாம, வேத மந்திரங்களாலோ பூஜிக்க வேண்டும்.

69. நிஷத பர்வதத்தில் அனந்தன் முதலான நாகர்கள் கூறப்பட்டுள்ளன. அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன்

70. பத்மன், மஹாபத்மன், சங்கபாலன், குளிகன் ஆகிய எட்டு நாகர்களை கலப்படமான சந்தன, புஷ்பங்களால்

71. சர்க்கரை, தேன், நெய், இவைகளை ரக்ஷõ சூத்ரத்துடன் கொடுக்கவும், மஹாமேரு, பர்வதத்தில் முற்பத்தி மூன்று தேவர்களை பூஜிக்க வேண்டும்.

72. தரன், த்ருவன், ஸோமன், ஆபன், அனிலன், அணலன், ப்ரத்யூஷன், ப்ரபாசன், ஆகிய எட்டு வசுக்களும்

73. அஜைகபாதன், அஹிர்புத்னி, விருபாக்ஷன், ரைவதன், ஹரன், பஹிரூபன், த்ரயம்பகன், ருத்ரன்.

74. ஜயந்தன், சாவித்ரன், பினாகி, அபராஜிதன், ருத்ரன் ஆகிய ஏகாதச ருத்ரர்களும், இந்திரன் தாதா, பகன்

75. த்வஷ்டா, மித்ரன், வருணன், விவஸ்வாந், ஸவிதா, பூஷா அம்சுமான், விஷ்ணு: ஆகிய பன்னிரண்டு சூர்யன்களும்

76. ப்ரஜாபதி, வஷட்காரன், ஆகிய முற்பத்தி மூன்று தேவர்களும் யஷ்டி நமஸ்கார தூபங்களாலும் ஆஜ்யாஹுதிகளாலும்

77. அர்க்யமும், ரக்ஷõசூத்ரமும், கொடுக்க வேண்டும், ஹேம கூட பர்வதத்தில் கந்தர்வர்களும் அப்ஸரஸ்திரீகளும் பூஜிக்க தக்கவர்கள் ஆவார். சித்ரசேனன், அக்னிசேனகன்

78. சுவர்ணன், கணபன், த்ருதராஷ்டரன், சூர்யவர்ச்சஸன், யுகபுத்திரன், சுசிராமன், அமரநந்தினன்.

79. த்வேதாமதி, சித்ரரதன், பர்ஜன்யன், உர்வீசன், கலி, பர்வதன், நாரதர்

80. சாதனன், சந்தி, குஹரன், கராளன், க்ருதவீர்யன், ப்ரம்மசாரீ, சுபர்ணன், மீனன்

81. ஹிரண்யன், சுசந்திரன், என்று இருபத்தேழு கந்தர்வர்கள் அக்ருதயன், உதயன், கந்தவத்யன்

82. ஊர்ஜன், யுவதயர்கள், ஹேதுகார்யன், ஸ்தவர்கள், அம்ருதர்கள், மோதகர்கள், சுசிவர்கள்

83. ரூபர்கன், பீரவர்கள், சவுர்யர்கள், ஸத்யர்கள், ஆகிய பதினான்கு பேர்களும் மேனகா, சகஜன்யா சகஜஸ்தலா புஞ்சிகஸ்தலா

84. க்ருதஸ்தலா, க்ருதாசீ, விச்வாசீ, பூர்வ சித்திகா, ப்ரம்லோசந்தி, அனும்லோசந்தி, மோசயந்தீ, அனுகா

85. ருத்ரா, அருணா, ப்ரியா, அத்ரஸா, சுபகாதாஸ்யரிஷ்டா, மநோவர்த்தி, சுகேசா திலோத்தமா

86. அக்னிபர்த்தீ, ஹேமா, மேனகா, ஊர்வசீ, இவர்களுக்கு சந்தனம் மாலைகளாலும் இருபத்தினான்கு, அப்சரஸ்திரீகளை வாசனை உள்ள புஷ்பம் சந்தனங்களாலும்

87. ரக்ஷõபந்தனம் முதலியவைகளால் ஹேம கூடமலையில் பூஜிக்கவும். யக்ஷர்களை பூஜிக்கவும். அவர்கள் மஹா வைச்ரவணன்

88. மானிபத்ரன், சுசிரன், ஐவர்களான, பண்டகன், வித்ருதன், பூர்ணபத்ரன், விரூபாக்ஷன், (அஷ்டயக்ஷராட்) என்ற யக்ஷர்களை

89. எல்லா நிறங்களும், உள்ளதான அன்னபலி நீலாசலத்தில் சித்தர்களை பூஜிக்க வேண்டும். மந்த்ரக்ஞன், மந்த்ரவித்தமன்

90. ப்ராக்ஞன், ஹம்ஸராஜன், சித்தபூஜிதன், சித்தவான், பரமசித்தன், கேசரபத்ரகன்

91. ஆகிய எட்டு சித்தர்களை பல வர்ணமுடைய பலிகளால் பூஜிக்கவும். ரக்ஷõசூத்ரம் முதலியவை கொடுக்கவும். மேருமலையில் நவக்கிரஹத்துடன் கூடியதும்

92. நக்ஷத்ரங்கள் சிரேஷ்டமான வினாயகர் இவைகளுடனும், ப்ரும்மா விஷ்ணு மாத்ருதேவர்கள் மஹாதேவன் விசாகன் லோகபாலகர்கள்

93. தேவஸ்தீரிகள் இவர்களை (ஹ்ரஸ்வ மந்திரங்களாலும்) ஏழ்மையினின்றும் காப்பாற்றுபவர்களாலும் பலவர்ண பலிகளாலும் முறைப்படி

94. ரக்ஷõபந்தனம், முதலியவைகளையும், கொடுக்கவும். அந்த தேவர்களின் பெயர் கீழ் உள்ள படியாகும். ஆதித்யன், ஸோமன், அங்காரகன், புதன்,

95. ப்ருஹஸ்பதி, சுக்ரன், சுனைச்சரன், ராஹு, கேது இவர்கள் நவக்ரஹங்கள் ஆவார். க்ருத்திகை (அதன்பிறகு ரோஹினி முதல் மூலம் வரை புஸ்தகத்தில் விடுபட்டுள்ளது)

96. பூராடம், உத்ராடம், அபிஜித், திருவோணம் இவைகளும் அவிட்டம், சதயம், பூரட்டாதி,

97. உத்ரட்டாதி, ரேவதி, அச்வனி, பரணி, இவைகளை நான்கு திக்கிலுமாகும். ப்ராம்ஹி, மாஹேஸ்வரி,

98. வாராஹி, வைஷ்ணவி, கவுமாரி, மாஹேந்திரி, சாமுண்டி, வீரபத்ரன், விநாயகர்,

99. ஸ்கந்தர், மஹாவிஷ்ணு, மஹாதேவன், பிரம்மா, விசாகன், இந்திரன் அக்னி, யமன், நிருருதி, வருணன்,

100. வாயு, குபேரன், ஈசானன், ஆகிய எட்டு லோக பாலர்களையும், (சசி) இந்தராணி, பாஜி, வனஸ்கந்தா, தூம்ரா, மண்டலவர்த்தனி,

101. பூர்ணா, சினிவாலீ, குஹு, ராகாநுமதி, ஆயதா, வ்யயநீ, ப்ரக்ஞா, மேநா, பலா,

102. இந்த தேவஸ்த்ரீகள், பதினான்கு எண்ணிக்கையாக கூறப்பட்டுள்ளன. நாஸத்யௌ அச்விநௌ, தஸ்ரௌ, இவர்களை முறையாக

103. ரக்ஷõ சூத்திரம், வஸ்திரம், கொடி, அணிகலன்களால் பூஜிக்கவும். உயர்ந்த ஆசிரியன் எல்லோர்க்கும் பூணூலை கொடுக்க வேண்டும்.

104. ஐந்து வர்ணங்களால் ஆன ஹவிஸ்ஸும் கொடுக்கவும், பிறகு மேற்குபக்க வேதிகையில் நெய் நிரம்பிய குடங்களை

105. நூல் சுற்றி வஸ்திரம், சாற்றி மாவிலை, தேங்காய் இவைகளை உடையதாக, இருபத்தி எட்டு, எட்டு, நூற்றிஎட்டு என்ற எண்ணிகை உடையதாகவோ

106. ஸ்தாபித்து அதன் நான்கு கோணங்களிலும் பதினாறு எண்ணிக்கை உள்ள நூல் வஸ்திரம், இவைகளுடன் கூடிதான கடங்களை ஸ்தாபித்து அதில் திரவ்யங்களை சேர்க்க வேண்டும்.

107. மூன்று ஜ்யோதிஷ்டோமத்தையும் அபயா, அபராஜிதாவையும், ஜீவா, விச்வேச்வரி, வாரா, சமாங்கா, விஜயா

108. சகா, சகதேவா, பூர்ணா, கோசசதாவரி, அதிஷ்டா, சிவா, பத்ரா ஆகிய இவைகளை கும்பங்களில் ஸ்தாபிக்க வேண்டும்.

109. ப்ராம்மீ க்ஷமா (பூமி) யையும், ஸர்வபீஜங்களையும், தங்கத்தையும், கிடைக்கக் கூடிய மங்களப் பொருட்களையும் எல்லா ஓஷதிரஸங்களையும்,

110. எல்லா செஞ்சந்தனங்களையும், பில்வம் விகங்கதம் இவைகளை ஸமீபமாக வைக்க வேண்டும்.. பெயரைக் கூறிக் கொண்டதாக ஹிரண்யம் மங்கள பொருட்களையும்,

111. ஆயுளுள்ள மூப்புள்ள காளைக்கன்றுக்குட்டியின் தோலை நன்கு லக்ஷணம் உடையதாக கிழக்கில் தலை வைத்ததாகவும் அமைக்கவேண்டும்.

112. பிறகு, அரசனுக்காக புதியதும் பட்டாலானதும் நாற்புறமும் சிவந்தும் மூன்றாவதாக ஸிம்மத்தோலையும், புலித்தோலையும்,

113. இவ்வாறாக நான்கு தோல்களை அந்த வேதிகையின் மேல் விரிக்கவும். ம்ருத்யுஞ்சய மந்திரத்தை கூறிக் கொண்டு சந்தன புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும்.

114. அதற்கு மேல் ஸிம்மாஸனத்திலிருக்கும் பத்ரபீடத்தை ஸ்தாபிக்கவும் தங்கம், வெள்ளி, தாம்பரம், இவைகளாலும் பாலுள்ள மந்திரத்தினாலும்

115. ஒன்னேகால் ஒன்றரை முழ அளவிலோ ஓர்முழ அளவிலோ உயரம் அமைக்கவும். சார்வபவும மண்டலம் உத்தமம்.

116. சாமான்ய மண்டலம் அதமமாகும். அனந்த ரசிதமண்டலம் மத்யமம் என அறிந்து அமைக்கவும். உத்தமம், மத்யமம், என்ற பேதத்தினால் எல்லாவற்றையும் அமைக்கலாம்.

117. அதற்கு மேல் புஷ்பம் வைத்து அதன் மத்தியில் தங்கத்தை வைக்கவும். ஸ்னானம் சந்தனாதி அலங்காரத்துடன் உள்ள

118. அரசனை கிழக்கு முகமாக அமர்த்தவும். ஜ்யோதிஷர்கள், மந்திரி, அமைச்சர்கள், ப்ரோஹிதர்களிவர்களுடன் கூடி

119. புண்யாஹ வேத மந்திர கோஷங்களால் நாட்யம், வாத்யத்துடன் கூடியதாகவும் பாட்டு முதலிய மங்கள சப்தங்களால் சிவஸ்தாபன முறைகளாலும்

120. புதியதான வெண்பட்டும், பஞ்சாங்க பூஷணத்துடன் உள்ள ஆசார்யன் கம்பளத்தினால் ராஜாவை போர்த்தி வடக்கு முகமாக நின்று அபிஷேகம் செய்ய வேண்டும்.

121. நெய், தேஜஸ்ஸாக கூறப்பட்டு மேலான பாபத்தை போக்கக் கூடியதாகவும், நெய் தேவர்களுக்கு உணவாகவும், நெய் உலகத்தில் பிரஸித்தியாகிறது.

122. பூமி அந்தரிக்ஷம், ஆகாயம் இவைகளில் எந்த பாபங்கள் உண்டோ அவைகள் நெய் ஸ்பர்சம் ஏற்படுவதால் நாசத்தை அடையட்டும்.

123. கம்பளத்தை எடுத்து விட்டு முன்பு ஸ்தாபிக்கப்பட்ட கும்ப தீர்த்தங்களாலும் பலவித பழம் புஷ்பமிவைகளால் மிருதுவானதும் வாசனையுள்ளதுமாக அபிஷேகம் செய்ய வேண்டும்.

124. இந்த மந்திரத்தினால் ஆசார்யன் ராஜாவை அபிஷேகம் செய்யவும், தேவர்கள் புராதன மாக ஸித்தர்கள் எவர்களுள்ளனரோ அவர்கள் அபிஷேகம் செய்ய வேண்டும்.

125. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஸாத்யன், மருத்கணர்கள், ஆதித்யர்கள், வஸுக்கள், ருத்ரர்கள், அச்வினீ தேவர்கள் உத்தமமான வைத்யர்கள்,

126. அததி, தேவமாதா, ஸ்வாஹா, ஸந்தி, ஸரஸ்வதி, கீர்த்தி, லக்ஷ்மி த்ருதி ஸ்ரீ, ஸிநிவாலீ, குஹு,

127. நக்ஷத்ரங்கள், முஹூர்த்தங்கள், பக்ஷம், அஹோராத்ரம், ஸந்தி, ஸம்வத்ஸரம் தினேசர்கள் (கிழமை தேவதைகள்) கலை, காஷ்டா, க்ஷணம், லவம்,

128. ஆகிய இவைகள் எல்லாம் உன்னை அபிஷேகம் செய்விக்கட்டும். காலத்தின் சுபமான அவயங்களும், அதிதி, ஸுரஸா, விநதா, கத்ரு,

129. தேவபத்னிகள், தேவமாத்ருக்கள், ஆகிய இவர்கள் உம்மை அபிஷேகம் செய்விக்கட்டும் சுபமாந அப்சரகணங்களும்,

130. வைமாநிகர்கள் ஸுகணங்கள், மனுக்கள், ஸாகரர்கள், ஸரித்துகள், மஹாபாகர்கள், கின்னரர்கள், புருஷர்கள்,

131. மஹாபாகர்களான, வைகானஸர்கள், பிராம்ணர்கள், ஹாயஸர்கள், ஸப்த ரிஷிக்கள், ரிஷி பத்தினிகள், த்ருவஸ்தானர்கள்,

132. மரிசீ, அத்ரி, புலகர், புலஸ்த்யர், க்ரது, அங்கிரஸ், குரு, ஸநத்குமாரர் ஸநகர், ஸநந்தகர்,

133. ஸநாதனர், தக்ஷர், ஜைகிஷவ்யர், ஜலம், ஏகதன் த்ரிதன், ஜாபாலி, காச்யபர்,

134. துர்வாஸர், துர்விநீதா, கண்வர், காத்யாயனர், மார்கண்டேயர், தீர்கதமர், சுனர், சேபர், விதுரன்,

135. அவுர்வர், ஸம்வர்த்தகர், ச்யவநர், அத்ரி, பராசரர், த்வைபாயநர், யவக்ரீதர், தேவராதர் ஸஹாநுஜர்

136. இந்த மற்ற எல்லா தேவர்களும் புண்ய பயனை கூறுபவர்களாக தீர்த்தங்களால் உன்னை அபிஷேகம் செய்விக்கட்டும். எல்லா உத்பாதங்களை நீக்கவல்ல

137. அந்த அதர்வண வேத மந்திரங்களால், ருத்ராத்யாய, மந்திரத்தினாலும், கோசூத்த (பசு) மந்திரத்தினாலும் கூஷ்மாண்ட மந்திரத்தினாலும் குபேர ஹ்ருதய மந்திரங்களாலும்

138. ஹிரண்யவர்ணா, என்றும் ஆபோஹிஷ்டா என்ற மந்திரங்களாலும், ஜபித்து, சிவமந்திரம், அகோர மந்திரம் மிருத்யுஞ்சய மந்திரமோ ஜபித்து

139. ராஜாவை அபிஷேகம் செய்வித்து நிரீக்ஷணம் செய்து, ஸ்னானம் செய்விக்க ராஜா பருத்தி வஸ்திரம், இரண்டை அணிந்து

140. புண்யாஹ சப்தங்கள், சங்கநாத கோஷங்களுடன் கூடி ஆசமனம் செய்து தேவர்களையும் ஆசார்யன் பிராம்ணர்களையும் பூஜித்து

141. பிறகு கொடி, ஆயுதம், வெண்கொற்றக் குடை, இவைகளையும் மற்ற தன்னுடைய உபகரணங்களையும் முன்பு கூறிய மந்திரங்களால் பூஜிக்கவும்.

142. இரண்டு வஸ்திரங்களை உடுத்தி எல்லா ஆபரணங்களையும் அணிந்து எல்லா அலங்காரத்துடனும் ஹோம வேதிகையை அடைந்து,

143. வ்ருஷபம் (பூனை) கலைமான், கவரிமான் சிங்கம், புலி, இவைகளில் தோலை பரப்பி அதில் அரசனை அமர்த்தி

144. கிழக்கு அல்லது வடக்கு முகமாக ஆசார்யன் குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ ஸமித், நெய், இவைகளால் நூறு ஆஹுதி ஹோமம் செய்ய வேண்டும்.

145. உயர்ந்ததான மிருத்யுஞ்சய மந்திரத்தால் புரசு சமித்தை ஹோமம் செய்யவேண்டும், ஹோம முடிவில் அஞ்சலி ஹஸ்தமாக இருந்து கீழ்கண்டபடி ஆசார்யன் கூற வேண்டும்.

146. எல்லா தேவ கனங்களும் பூஜையை ஏற்றுக் கொண்டு பூமியிலிருந்து செல்லட்டும். ஏராளமான சித்திகளைக் கொடுத்து சென்று மறுபடியும் திரும்ப வரட்டும்.

147. ஹோம காலத்தில் குரு திருப்தியடைவதற்காக அவர்க்கு தட்சிணையை கொடுக்கவும். அரசன் பிராம்ணர்களுக்கு விசேஷமாக தானம் கொடுக்க வேண்டும்.

148. எல்லா ஜனங்களையும் விடுவிக்கவும். ஈஸ்வரனை வணங்கி அவனுக்கு கிராமம், தங்கம் முதலியவைகளை

149. கொடுத்து, மகிழ்ச்சி அடைந்த மனதை உடையவனாக கிரீடம் முதலானவைகளால் அலங்கரித்துக் கொண்டு யானைமேல் அமர்ந்து அரண்மனையை நோக்கி செல்ல வேண்டும்.

150. எல்லா துன்பங்கள் அழிவதற்கும் எல்லா நோயும் நீங்குவதற்கும் பிரசித்தமான சக்ரவர்த்தி ஆகும் தன்மைக்கும் ஆயுள், ஆரோக்ய சித்திக்கும்,

151. எல்லா சத்ருக்கள் அழிவதற்கும் ராஜாவின் வெற்றிக்காகவும் புண்ய ஸ்தலத்தில் ஒவ்வொரு வருடமும் புஷ்யாபிஷேகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் புஷ்யாபிஷேக முறையாகிற எண்பதாவது படலமாகும்.
படலம் 79: அரசனுக்கு நீராஜனம் செய்யும் முறை

79வது படலத்தில் அரசனுக்கு நீராஜனம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. முதலில் சாமர்த்யமான ராஜ விஷயத்திலும், ஸார்வ பவும ராஜ விஷயத்திலும் நீராஜன விதி கூறப்படுகிறது என்பது கட்டளை. பிறகு வேதிகையில் தோரண மாலையால் அலங்கரிக்கப்பட்ட அழகான ஆசார்யன் புதிதாக வஹ்நியை ஏற்படுத்தி அந்த அக்னியை வளர்ந்ததாகவும், மேல் எழுந்ததும் பிரகாசம் ஆனதுமாக சமித்துக்களால் ஜ்வாலை செய்து பத்திர, புஷ்ப, அக்ஷதைகளாலும், இலந்தை சமித்துக்களாலும் கூர்ச்சங்களாலும் மந்திரத்துடன் கூடி ஹோமம் செய்க என கூறப்படுகிறது. இதில் ஹோம விதியானது கூறப்படவில்லை. பிறகு பகவானான பவனை, கந்தபுஷ்பங்களால் பூஜித்து நீராஜன கர்மாவை செய்யவும். பிறகு கவுரியை முன்புபோல் பூஜித்து நீராஜன கர்மாவை அனுஷ்டிக்கவும். பிறகு மஹாவிஷ்ணு, லக்ஷ்மி, குஹன், பிரம்மா, கணபதி, சண்டிகை, சூரியன், யக்ஷர்கள், மாதுர்கணங்கள் மற்றும் எல்லா பித்ருக்களுக்கும் முன்புபோல் பூஜித்து நீராஜன விதியை மணியினால் பெரிய சப்தத்துடன் இடையூறு கூட்டத்தை போக்க எருமை மாடு, இவைகளுக்கு நீராஜனம் செய்யவும். பிறகு உத்தமமான ஆசார்யன் அரசனின் யானை, குதிரை, இவைகளுக்கும் ராஜ சின்னங்களுக்கும் நீராஜன கர்மா அனுஷ்டிக்கவும். அமைச்சர் முதலியவர்களால் சூழப்பட்டவரும் சிம்மாசனத்தில் அமர்ந்தவருமான அரசனை பலஸ்திரீகளால் அல்லது அழகு, யவுவனம், உடைய தாசீ நீராஜனம் செய்யவும் என கூறப்படுகிறது. நீராஜன விதியானது இந்த கிரந்தத்தில் ஏழாவது படலத்தில் கூறப்படுகிறது. முடிவில் நீராஜன கர்மா எந்த ராஜ்யத்தில், புரத்தில், கிராமத்தில், செய்யப்படுகிறதோ, அந்த ராஜ்ய ராஜா சுகமாக இருப்பார், சுபிக்ஷம் ஏற்படும் என கூறப்படுகிறது. பிராம்ணர் முதலிய நான்கு வர்ணத்தவர்களுக்கும் வியாதி ஏற்பட்ட சமயத்திலும் அதை போக்குவதற்காக நீராஜன கர்மா செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறாக 79வது படல கருத்து சுருக்கமாகும்.

1. கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ த்வாதசி திதியில் இரவு வேளையின் ஆரம்பமான பிரதோக்ஷ வேளையில் வேதிகையின் மேல் தோரணம், புஷ்பமாலை இவைகளால் சதுரச்ரமான வேதிகையை அலங்கரித்து

2. புதியதான அக்னியை மந்திரங்களால் உத்தமமான ஆசார்யன் ஹோமம் செய்து, நன்கு வளர்ந்த மரங்களால் பிரகாசிக்கின்ற அக்னியை

3. இலந்தை மரங்களாலும் கூர்ச்சம், இலை, புஷ்பம், அக்ஷதை இவைகளாலும் சந்தனம், புஷ்பம் இவைகளாலும் ஈச்வரனை முன்பு கூறியபடி நீராஜனம் செய்ய வேண்டும்.

4. அந்த அக்னியினாலே அதை சிவனை அனுசரிக்கின்ற கவுரி விஷ்ணு, லக்ஷ்மி, பிரம்மா, வினாயகர், சண்டிகை, சூர்யன், யக்ஷர்கள், மாத்ரு கணங்கள்

5. அவ்வாறே குஹன், பித்ருகணங்கள், ஸர்ப்ப தேவதைகள், ஆகிய எல்லாவற்றிற்கும் பசுவிற்கும் எருமைக்கும் நீராஜனம் செய்ய வேண்டும்.

6. மணி அடிப்பதால் உண்டான பெரிய சப்தங்களால் இடையூறுகளை போக்கி உத்தமமான ஆசார்யன் விசேஷமாக அரசனுக்கு நீராஜனம் செய்ய வேண்டும்.

7. குதிரைகள், யானைகள், ராஜசின்னங்கள் இவைகளுக்கும் சிம்மாசனத்தில் இருப்பவரும், அமைச்சர்களுடன் கூடியவருமான ராஜாவிற்கு நீராஜனம் செய்ய வேண்டும்.

8. சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்கப்பட்ட தாயும் குலஸ்த்ரீகளாலும், இளமையான ஸ்த்ரீகளாலும் அழகான தாசிகளாலும் நீராஜனம் செய்யவேண்டும்.

9. எந்த ராஜ்யம், பட்டணம், கிராமங்களில் இந்த நீராஜனம் செய்யப்படுகிறதோ அங்குள்ளவர்களின் ராஜா சுகம் அடைகிறான், சுபிக்ஷத்தை அடைகிறான், நான்கு வர்ணத்தவர்களுக்கும் வ்யாதி ஏற்பட்ட பொழுது இந்த நீராஜனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ராஜநீராஜன விதியாகிற எழுபத்தி ஒன்பதாவது படலமாகும்.
படலம் 78: குதிரைக்கு நீராஜனம் செய்யும் முறை

78வது படலத்தில் குதிரைக்கு நீராஜனம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் குதிரைகளுக்கு நீராஜனம் என்ற சாந்திகர்மா கூறப்படுகிறது. பிறகு ஒவ்வொரு வருடமும் ஐப்பசிமாதத்தில் சுக்லபக்ஷத்தில் அஷ்டமி, நவமி அல்லது துவாதசி பவுர்ணமி ஆகிய இந்த தினங்களில் இந்த நீராஜன கர்மா செய்யவேண்டும் என்று காலம் விளக்கப்படுகிறது. நகரத்தின் வடக்கு கிழக்கு, வடகிழக்கு திசையிலோ மற்ற இடங்களிலோ இந்த பூஜை செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு யாகசாலை அமைக்கும் முறையும் அங்கு வேதிகை குண்டம் அமைக்கும் முறையும் கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் ரக்ஷõபந்தனம் செய்துகொண்டு நல்ல கற்புள்ள பெண்களுடன் கூடி சலங்கைமருந்து இவைகளுடன் கூடி குதிரையைகார்யாரம்பம் செய்யும் முன்னதாகவே நதீதீரம் அழைத்துச்சென்று பிறகு முன்பு முறைப்படி செய்யப்பட்ட கிழக்குமுகமாக வேதிகையை அடைந்து அங்கு குண்டசம்ஸ்காரம் அக்னி ஸம்ஸ்காரம் செய்து ஏழுதினம் காலையிலும் மாலையிலும் ஹோமம் செய்யவும், பலிவிதியும் செய்யவும் என கூறி ஹோம முறை பலி கொடுக்கும் முறை கூறப்படுகிறது. இந்த ஏழுதின வேளையிலும் நதீ, சமுத்திரம், குளம், நீர்வீழ்ச்சி இவைகளிலோ குதிரைக்கு ஸ்நானம் செய்வித்து அதிகமான மருந்துகளாலும், எள்ளு, கடுகு, தயிர், பயறு இவைகளால் நன்கு தேய்த்து, தேய்த்ததால் போக்கப்பட்ட அசுத்தங்களை உடையதும், மஞ்சள்நீராட்டியதும் ஆன குதிரைகளை அவைகளின் இருப்பிடத்திலிருந்து அழைத்து, அங்கு பிரும்மசர்யத்துடன் கூடிய ஆசார்யன் ரøக்ஷக்காகவும் வீர்யத்திற்காகவும் கட்டப்பட்ட ஓக்ஷதிகளை அந்த குதிரையின் மேல் கட்டவும் என கூறப்படுகிறது. பிறகு வெளியில் நல்லமுகூர்த்தத்தில் வேதகோஷங்களால் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட தினத்தில் சூர்யசந்திரர்களின் கிரணங்கள் குதிரைகளின் மேல் படாதவாறு வலம்வர செய்யச் சொல்லவும். காலையிலும் மாலையிலும் இரண்டு காலத்திலும் முக்யமான குதிரைக்கு ஸ்நானம் செய்விப்பது முக்யமாகும். தினம்தோறும் ஸ்தோத்திர ஆசீர்வாத மங்களகரமான மந்திரங்கள் முடிந்தபிறகு சுக்லபக்ஷ அஷ்டமியில் காலையில் ஸ்நானம் அனுஷ்டானம் முடித்த ஆசார்யன் வெண்கடுகாலும் கோமூத்திரத்தினாலும் குதிரைகளை ஸ்னானம் செய்வித்து நவமியில் உத்திராட நக்ஷத்திரமும் திருவோண நக்ஷத்திரமும் கூடும் சமயத்தில் நகரத்திற்கு வெளியில் அவைகள் வசிக்கட்டும் என கூறி, அவைகள் வசிக்கும் இடம் முறைப்படி கூறப்படுகிறது.

அங்கு தோரணம் மாலைகளால் அலங்காரம் செய்யப்படவேண்டும். பிறகு அரசன் எல்லா மங்கள வாத்யங்களுடன் நகர ஜனங்களுடனும் கூடி உச்சமான சங்க நாதங்களுடனும் கூடி முன்பு விதிப்படி செய்யப்பட்ட சாந்தி செய்யும் யாகக்கிரஹத்தை அடைந்து வஸ்திரம் முதலியவைகளுடன் கூடிய 8 கலசத்தில் ஓஷதிகளை ஸ்தாபித்து அந்த பூஜையை முறைப்படி செய்து முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் ஹோமம் செய்யவும் எனக்கூறி அரசனால் செய்யவேண்டிய ஹோம விதிகள் நிரூபிக்கப்படுகின்றன. அரசன் புலித்தோலின் மேல் அமர்ந்து ஆசார்யனுடன் கூடி கிழக்கு முகமாக வேத விதவான்கள், குதிரை வைத்யர்களுடன் கூடி ஹோமம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு அரசன் பூர்ணாஹுதியின் முடிவில் அக்னியின் சுபாசுபத்தை அறிந்து வெள்ளைச்சந்தனம் வெள்ளை மாலை இவைகளுடனும் வெள்ளை வஸ்திரத்துடன் கூடின உயர்ந்ததான குதிரையின் மேல் ஏறி தோரண சமீபம் செல்லவும். அங்கு பாட்டு வாத்யங்களால் மெதுவாக அமைதியான வார்த்தைகளால் ஹோம சேஷத்தை, பால், தயிர், வாழைப்பழம் இவைகளுடன் கூட்டி பிண்டமாக அமைத்து அந்த உத்தமான குதிரைக்கு கொடுக்கவும். அந்த குதிரை சீக்ரமாக சாப்பிட்டால் அப்பொழுது ராஜா விஷயத்தை அடைவான் என கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் சாந்திகம் பவுஷ்டிகம் என்ற மந்திரங்களால் சாதாரண கும்ப தீர்த்தத்தால் ராஜாவையும், குதிரையையும் பிரோக்ஷணம் செய்யவும். பிறகு சைன்யங்களையும் பிரோக்ஷணம் செய்யவும். பிறகு ஆபிசார மந்திரத்தினால், மிருன்மயமான குதிரையை கூர்மையான சூலத்தினால் மார்பு பகுதியில் குத்தவும். இவ்வாறு குதிரைக்கு ரøக்ஷ செய்து அதன் மேல் ஏறி வெற்றி அடைவதற்காக அரசன் கிழக்கு முதலான திசைகளை அடையவும் என கூறப்படுகிறது. இவ்வாறாகவே யானை முதலியவைகளுக்கும் அரசன் நீராஜனம் என்ற சாந்திகர்மாவை செய்யவும் என கூறி அங்கு செய்ய வேண்டிய விசேஷ பூஜை முறை கூறப்படுகிறது. இவ்வாறு 78வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. குதிரைகளின் சாந்தியான கெட்ட பார்வைகளை நீக்கும் முறை பற்றி கூறுகிறேன். ஒவ்வொரு வருடமும் ஆசார்யன் ஐப்பசி மாதத்தில் செய்ய வேண்டும்.

2. நவமி, அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமியிலோ, திவாதசியிலோ விசேஷமாக வளர்பிறையில் செய்ய வேண்டும்.

3. நகரத்தின் கிழக்கு, வடக்கு, ஈசான திக்கிலோ அல்லது வேறு இடத்திலோ செய்யவும். அதன் செய்முறை கூறப்படுகிறது.

4. அகலம் எட்டு முழ அளவும், நீளம் பத்து முழ அளவு உயரமும் நீளபாகம் இருபது முழ அளவாகவும் யாக சாலை அமைக்க வேண்டும்.

5. ஆறு முழ அளவுள்ள நான்கு வரிசையில் மூன்று முழ மத்யமாக வேதிகை அமைக்கவும். அதன் பாதி உயரமுள்ளதாக அரசனுக்கு வேதிகை அமைக்க வேண்டும்.

6. நீண்டதான வேதிகைகளின் மத்தியில் குண்டத்திற்கு இடம் அமைக்கவும். அந்த குண்டம் ஒருமுழ அளவும் மூன்று மேகலையுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

7. முதலில் காப்பு கட்டுதலை செய்து சலங்கை மருந்துப் பொருள்களுடன் கூடியதும், நல்ல பெண்களுடன் கூடியதுமான குதிரையை நீரின் அருகில் அழைத்து வந்து

8. வலமாக தீர்த்த கரையில் கிழக்கு முகமாக வேதிகை அமைக்கவும். அதற்கு முன்னதாக ஹோமத்திற்காக குண்டம் அமைத்து, முன்பு கூறிய முறைப்படி செய்ய வேண்டும்.

9. குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து உயர்வான ஆசார்யன், ஹோமம் செய்யவும். நல்ல தேஜஸ்ஸையுடைய அக்னியில் கீழே கூறுபவர்களுக்கு ஹோமம் செய்யவும், இந்த ஹவிஸை பிரம்மாவிற்கும்

10. பிறகு விஷ்ணு, அக்னி, ருத்ரன். இந்திரன், வருணன், வாயு, மலையரசன், ஸ்கந்தன், குபேரன் இவர்களுக்கும்

11. நாகர்கள், நதிகள், பிரம்மா முதலானவர்கள் ஆகிய இவர்களுக்கும் முறையே இந்த ஆஹுதி, பலி இவைகளை செய்ய வேண்டும்.

12. நதீ, சமுத்திரம், குளம், தடாகம், நீர்வீழ்ச்சி இவைகளிலோ குதிரையை ஸ்நானம் செய்வித்து நிறுத்தி வைக்கவும். முன்பு கூறப்பட்ட அவுஷதிகளாலும்

13. எள், கடுகு, மாதுளை, விதை, இவைகளாலும் தயிராலும் இந்த குதிரைகளை தேய்க்கவும், அங்கு தேய்க்கப்பட்ட சுத்தமானதும் குளித்து ஆகாரங்களை பருகி, மூழ்கியதுமான குதிரைகளை

14. பிரம்மசர்யத்துடன் கூடி குதிரை லாயத்திற்கு அழைத்துச் சென்று வீர்யத்திற்காகவும், ரøக்ஷக்காகவும் இந்த குதிரைகளுக்கு முன்பு வைக்கப்பட்ட மருந்துகளை கட்டிவிட வேண்டும்.

15. காலையிலும், மாலையிலும் ஏழுதினம் முதலாக ஹோமம் செய்யவும். நெய்யை தர்பைகளால் சுத்தம் செய்து தர்பைகளால் நெய்யை ஸமர்பிக்க வேண்டும்.

16. சமித்துக்களாலும், அக்னியில் நன்கு ஜ்வாலை உள்ளதாக இரண்டாவது தினம் ஹோமம் செய்யவும், மூன்றாவது தினம் ஸ்ருக்கினால் நெய் ஹோமம் செய்து சிவந்த நிறமானதாக குதிரையை கிரஹித்துக் கொள்ள வேண்டும்.

17. தயிர், அப்பம், அன்னம் இவைகளால் ஹோமம் செய்து நான்காவது தினம் அதிகாலையில் அருணோதய வேளையில் பிரம்ம கோஷங்களால் சப்திக்கப்பட்ட சமயத்தில்

18. சூர்யன், சந்திரன், இவைகளுடைய காந்தி குதிரைகளின் மேல் படாதவாறு அவைகளை நகர்வலம் வரச் செய்யவும். காலையில் ஸ்நானம் செய்விப்பது முக்யமாகும்.

19. இரண்டு காலத்திலும் விசேஷமாக பிரதானமாக குதிரைக்கு பிரதி தினமும் ஸ்வஸ்தி வாக்யம், ஆசீர்வாதம், மங்கள வாத்யத்துடன் கூடியதாக புண்யாகவாசனம் செய்ய வேண்டும்.

20. ஏழாவது இரவு முடிந்தவுடன் ஸ்நானம் செய்து முன்புறமாய் இருந்து கொண்டு எட்டாவது நாளில் வெண்கடுகு, கோரோஜனை இவைகளால் ஸ்நானம் செய்விக்க வேண்டும்.

21. உத்திராட நக்ஷத்ரம் சேர்ந்த திருவோண நக்ஷத்திரத்தில் சுக்லபக்ஷ நவமி திதியில் நகரத்திற்கு வெளியில் வசிக்க செய்ய வேண்டும்.

22. கிழக்கிலோ, வடக்கிலோ முன்பு கூறப்பட்டுள்ள சுத்தமான ஆவரணத்துடன் பிரதட்சிண மான தீர்த்த கரையின் வடக்கில் விசாலமான மரக் கூட்டத்தில்

23. தோரணம் அமைத்து பத்து கை நீளமும், எட்டுகை அகலமும், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், கிழக்கு நோக்கியதுமான

24. இரண்டு பக்கத்திலும் உள்ளதுமாக கொட்டகையை அமைத்து அங்கு முன்பு போல் பூஜை கார்யத்தை செய்யவும், எல்லா மங்கள வாத்யத்துடனும் பட்டணத்து ஜனங்களுடன் கூடிய அரசன்

25. விருப்பப்பட்ட வீட்டை சங்கவாத்யங்களால் சந்தோஷப்பட்டவனாக அடைந்து, சாந்தி க்ருஹத்தில் நுழைந்து இந்த பூஜை முறையை ஆசரிக்க வேண்டும்.

26. சந்தனம், கீழாநெல்லி, மஞ்சமெழுக்கு, மனச் சிலை, ஹரிதாளம், வசம்பு, தந்தம், சீந்திக்கொடி, தினை, அர்ஜீனம்

27. மஞ்சள், ஸ்வர்ண புஷ்பம், வஹ்னிமந்தம், என்ற திரவ்யம், தர்பம், கிரிகர்ணிகை, வெட்டி வேர், கடுகு, லோஹிணி என்ற திரவ்யம்

28. ஸகதேவி, நாகபுஷ்பம், விளாம்பழம், தண்ணீர்விட்டான் (சராவரீ) ஸோமவல்லி ஆகிய திரவ்யங்களை கும்பங்களில் சேர்க்க வேண்டும்.

29. எட்டு கும்பங்களிலோ வஸ்திரம், முதலியவைகளுடன் கூடியதாகவும் சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யங்களோடு கூடியதாயும்

30. பலவித அப்பம், முதலிய திரவ்யங்களால் பலி கொடுக்கவும், குண்டத்தில் முன்போல் முன்பு கூறிய திரவ்யங்களால் முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும்.

31. ராஜாவானவன், புலித்தோலிலமர்ந்த வனாகவும், குரு அமைச்சர்களுடன் கூடியவனாகவும், வேத வித்வான், குதிரை வாத்யர் இருவர்களுடன் கூடியவனாகி கிழக்கு முகமாக இருந்து

32. ஹோமாக்னியின் சுப, அசுப சகுனமறிந்து, பூர்ணாஹுதி முடிந்த பிறகு சிரேஷ்டமான குதிரையின் மேல் அமர்ந்து தோரண வாயில் சமீபம் அடைந்து

33. மெதுவாக, நல்லவார்த்தைகளாலும், கானம் வாத்யமிவைகளுடன் கூடியும், வெள்ளை சந்தன, வெள்ளை மாலை தரித்தவனாகவும் வெள்ளை வேஷ்டி அணிந்தவனாகவும்

34. ஹோமத்தின் மீதியான உருண்டையை, பால் தயிருடன் கூடியதாகவும் வாழைப்பழத்துடன் கூடியதாகவும் உயர்வான குதிரைக்கு கொடுக்கவும்.

35. சீக்கிரமாக சாப்பிட்டால் அது வெற்றியை கொடுக்கவல்லதாகும். மற்ற குதிரைகளை அத்திமரக்கிளை கொம்புகளால் நனைந்த தீர்த்தங்களால்

36. பிரோக்ஷணம் செய்து ஆசார்யன், சாந்திகம், பவுஷ்டிகம் ஆகிய மந்திரங்களால் ராஜாவையும் குதிரையும் சேனையையும் பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

37. பிறகு பிராம்மணன் மண்ணினால் செய்யப்பட்ட குதிரையை அதன் மார்பு பகுதியில் சூலத்தினால் குத்தவும், ஆபிசார மந்திரங்களாலும் பெரிய கருமை நிறத்தால்

38. குதிரைக்கு ரøக்ஷயை கொடுத்து கிழக்கு முகமாக அதன் மேல் ஏறி மங்கள வாத்யங்களுடன் கூடியவனாகி ராஜாவானவன் வெற்றி அடைவதற்கு செல்ல வேண்டும்.

39. இவ்வாறாகவே யானைகளுக்கும் செய்து அதை அழைத்து வந்து அதில் அரசனை ஏற்றவும், ஆனால் அந்த யானைக்கு செய்யும் நீராஜனம் கார்த்திகை மாஸத்தில் அஸ்வினீ நக்ஷத்திரத்தில் செய்ய வேண்டும்.

40. முன்பு கூறப்பட்ட எல்லா திதிகளிலும் செய்யவும், யானையின் மேல் வலம் வருதலில் விசேஷமாக சதுரஸ்ரமான கொட்டகை அமைக்க வேண்டும்.

41. வேதிகையும், சதுரஸ்ரமாக அமைத்து பிறகு யானையின் இருப்பிடம் கூறப்படுகிறது. நூறு முழ அளவு சதுரஸ்ரமாக செய்யவேண்டும்.

42. ஐம்பது அல்லது இருபத்தி ஐந்து எண்ணிக்கை உள்ள சமமான சமித்துக்களை யானைக்காக ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் குதிரைக்கு நீராஜன விதியாகிற எழுபத்தெட்டாவது படலமாகும்.
படலம் 77: துர்கா பூஜை முறை

77வது படலத்தில் துர்கையின் பூஜா முறை கூறப்படுகிறது. முதலில் துர்காபூஜையின் காலம் விளக்கப்படுகிறது. அதில் ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் அஷ்டமியிலும், நவமியிலும் உலகத் தாயான துர்கையை பூஜித்தால் அரசன் துக்கம் இல்லாதவனாகவும், எதிரியை ஜயித்தவனாகவும் ஆகிறான் என கூறப்படுகிறது. பிறகு துர்க்கா பூஜைக்காக உபயோகிக்கப்படுகிற எருமை முதலான பிராணிகள் வதம் செய்தால் அவைகள் நல்ல கதியை அடைகின்றன. அதனால் பாபம் ஏற்படாது என கூறப்படுகிறது. துர்க்கைக்கு எதிராக தேவர்கள் உயிரை விடுகிறார்களோ அவர்களுக்கு ஸ்வர்கவாசம் அப்ஸரஸ்திரீகளின் பிரயமும் ஏற்படுகின்றன. பிறகு துர்க்கா பூஜைக்காக ஒவ்வொரு நகரத்திலும் கிராமம் வீடு பலஇடங்கள் ஆகியவற்றிலும் கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ மண்டபம் அமைக்கவும் என கூறி மண்டபம் அமைக்கும் முறையும் அதில் வேதிகை குண்டம் அமைக்கும் முறையும் விளக்கப்படுகிறது. வேதிகையின் மேல் அரசு சின்னங்களான எல்லா ஆயுதங்களையும் அதிவாசம் செய்து பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு துர்க்கா பூஜை செய்யும் முறை ஹோம முறையும் சுருக்கமாக கூறப்படுகிறது. ஹோம சேஷத்தை குதிரை யானை முதலியவைகளுக்கு கொடுக்கவும் என கூறப்படுகிறது. பிறகு பலவித வாத்ய கோஷசப்தங்களுடன் ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட ஐந்து யானை, குதிரை இவைகளை அலங்காரம் செய்து நகரத்தில் பிரதிதினமும் சுற்றிவர செய்யவும். பிரதிதினமும் அரசன் தங்களுடைய பிதுர்தேவர்களை பூஜித்து ராஜசின்னங்களை பழம் புஷ்பம் மாலை சந்தனம் இவைகளாலும் அப்பம் போன்ற பலவித  பக்ஷ்யவிசேஷங்களாலும் வெற்றிலையுடன் கூடிய பல நைவேத்தியங்களாலும் பூஜித்து ஹோம சேஷத்தை யானைக்கு கொடுக்கவும் என கூறப்படுகிறது.

இவ்வாறு துர்காபூஜையில் கார்யங்களின் சுருக்கம் கூறப்படுகிறது. பிறகு பூஜையின் மந்திரங்களை கூறுகிறேன் என்று சொல்லி குடை, குதிரை, கொடி, யானை, பதாகம், கத்தி, கவசம், துந்துபி என்ற வாத்யம், வில், சங்கு, சாமரம், கத்தி, ஸ்வர்ணதண்டம் சிம்மாசனம் இவைகளின் மந்திரங்கள் விளக்கப்படுகின்றன. பிறகு அரசன் அஷ்டமி தினத்தில் துர்காதேவியை பழம், நைவேத்யம், புஷ்பம், தூப தீபம், சந்தனம் இவைகளால் பூஜிக்கவும் என கூறி இந்த பூஜையின் முறை வர்ணிக்கப்படுகிறது. அங்கு தங்கம், வெள்ளி, தாமிரம், கருங்கல், மரம், மிருத்திகை இவைகளால் ஆன பிரதிமைகளில் ஏதாவது ஒரு பொருளால் சக்திக்கு தக்கவாறு பூஜிக்கவும் என கூறப்படுகிறது. அல்லது சித்திரமாகவரையப்பட்ட பிரதிமையையோ பூஜிக்கவும். முன் பகலிலோ மாத்யாஹ்னிகத்திலோ இந்த பூஜையை செய்யவும் என கூறப்படுகிறது. தியானம் செய்வதற்காக உருவத்தின் லக்ஷணம் நன்கு கூறப்படுகிறது. பிறகு பலவிதமான நாட்டிய சங்கீதங்களால் இரவை போக்கி காலையில் அருணோதய வேலையில் பிரதிமையின் முன்பாக எருமையையும், ஆட்டையும் பலி கொடுப்பதாக வெட்டவும். பிறகு மாலை வேளையில் நவமியில் அம்பாளை தேரில் ஏற்றி ராஜ்யத்தை சுற்றிவர செய்யவும். தேர் ஓடும் சமயத்தில் ராஜா சைன்யத்துடனோ அல்லது அவனால் ஏவப்பட்ட வீரனுடனோ, 8 திக்கிலும் பூதங்களுக்கு தேன் நெய் கலந்த அன்னத்தை இந்த மந்திரத்தினால் பலிகொடுக்கவும் என கூறிபலிகொடுக்கவும் மந்திரங்கள் விளக்கப்படுகின்றன. முடிவில் மனிதர்களால் சுமக்கப்பட்டதாகவோ அம்பாளை வலம் வரச்செய்யும் என வேறுவிதமாக கூறப்படுகிறது. இவ்வாறு 77வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஹே உயர்ந்த அந்தணர்களே, எல்லா விதமான விருப்ப பயனை தரக்கூடியதும் உலகத்திற்கு ஆபிசாரத்திற்காக ஸ்ரீ துர்கா தேவியின் பூஜை முறையை நான் கூறுகிறேன்.

2. சூரிய பகவான் கன்யா ராசியை அடைந்த பொழுது, புரட்டாசி மாத மூல நக்ஷத்ரம், சுக்ல அஷ்டமியுடன் கூடிய ஸமயம், அந்த புண்ய காலம், மஹா நவமி என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.

3. அல்லது ஐப்பசி மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் மூலம், அஷ்டமி இவைகளுடன் கூடிய புண்யகாலம், மஹாநவமி எனப்படும் இந்த புண்யகாலம் மூவுலகிலும் கிடைப்பது அரிது.

4. ஐப்பசி மாதத்தில் அஷ்டமியிலும், நவமியிலும் ஜகன்மாதாவான துர்கா பரமேச்வரியை ஆராதித்து, துன்பம் முதலான கஷ்டங்கள் நீங்கியவனாய் தன் எதிரிகளை வெல்கிறான்.

5. ஹூங்காரங்களால் கூட்டமாக கைகளைத் தூக்கிக் கொண்டு கத்தியை தரித்த அந்த தேவிக்காக, எருமை முதலிய பிராணிகள் பலியிடப்படுவதால்

6. பாபம் இல்லாமல் அந்த எல்லா பிராணிகளும் நல்ல நிலையை அடைகின்றன. தேவியின் ஆலயத்தின் எந்த பிராணிகள் உயிரை விடுகின்றனவோ

7. அம்பாளுக்கு பலியான அந்த பிராணிகளுக்கு ஸ்வர்கலோகத்தில் வசிக்கும், அப்சரஸ் ஸ்திரீகளுக்கு பிரியமானவர்களாக ஒவ்வொரு இடத்திலும் பட்டணங்களிலும் எல்லோராலும் மரியாதை செய்யப்படுகிறார்கள்.

8. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு காட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் சவுக்யத்தை அளிப்பதிலேயே நாட்டமுள்ள பதினொன்று, எட்டு, ஏழு, கை அளவுகளால் வடக்கு, கிழக்கு திசைகளில் ஆசார்யன்

9. மண்டபத்தை நிர்மாணித்து ஆக்னேய திசையில் (தென் கிழக்கில்) கை அளவிற்கு மேகலை யுடன் கூடிய அரசிலை போல் யோனி குண்டத்தை அமைக்க வேண்டும்.

10. எல்லா ராஜ பரிவார அடையாளங்களையும், எல்லா அஸ்திரங்களையும், எங்கும் வேதிகையின் மேல் பூஜிப்பதற்காக எல்லா இடங்களிலும் அவைகளை இருக்கச் செய்ய வேண்டும்.

11. ஆசார்யன் ஒவ்வொரு தினமும் அந்தந்த மந்திரங்களால் சந்தனாதி வாஸனை திரவியங்களால் அந்த அஸ்திரங்களைப் பூஜிக்க வேண்டும். துர்கை அம்மனுக்கு அந்த மந்திரங்களால் ஹோமம் நடத்தவும்.

12. ஸமித், நெய், ஹவிஸ், பாயசம் ஆகிய இவைகளால் ஹோமம் செய்ய வேண்டும். ஹோம மீதியை யானைகளுக்கும், குதிரைகளுக்கும் காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும்.

13. ரக்ஷõபந்தனம் செய்த ஐந்து யானைகளையும் ஐந்து குதிரைகளையும் நன்கு அலங்கரித்து பலவிதமான வாத்ய கோஷத்துடன் நகரத்தில் தினம் சுற்றி வரும்படி செய்ய வேண்டும்.

14. அரசர் ஒவ்வொரு நாளும் தன்னுடைய பித்ரு தேவதைகளை பூஜித்து விட்டு ராஜ சின்னங்களை பழம், புஷ்பம், சந்தனம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.

15. பலவித அப்பம் முதலிய நிவேதனங்களால் தாம்பூலத்துடன் கூடிய நைவேத்யங்களால் பூஜித்த பிறகு, ஹோம மீதியை பட்டத்து யானைக்கு கொடுக்க வேண்டும்.

16. அந்த யானைக்கு ஹோம மீதியை கொடுப்பதால் அரசருக்கு வெற்றி கிடைக்கிறது. அந்த பூஜை மந்திரங்களை சொல்ல இருக்கிறேன்.

17. எப்படி ஆகாயம் பூமியின் நன்மைக்காக பூமியை மறைத்துக் கொண்டு இருக்கிறதோ, அவ்வாறே குடையாகிய நீ, வெற்றி ஆரோக்கிய அபிவிருத்திக்காக அரசனை நீ மறைத்துக் கொண்டு இரு. ஓம் சம் சத்ராய நம:

18. நீ கந்தர்வ குல ஜாதியில் பிறந்தவன் பிர்மா, ஸோமன், வருணன் ஆகியோருடைய ஸத்ய வாக்யத்தால் ராஜ வம்சத்துக்கு அணியாக விளங்குகிறாய். ஓம் தும் துரங்காய நம:

19. ஹே அச்வ, அக்னி பகவானின் மகிமையாலும், ஸூர்ய பகவானுடைய தேஜஸாலும், முனிவர்களுடைய தபஸாலும் விசேஷமாக வெற்றி பெறுவாயாக.

20. பரமேஸ்வரனுடைய, பிரம்ஹசர்யத்தாலும் வாயு பகவானின் பலத்தாலும் கவுஸ்துபம் என்ற ரத்னத்தை ஸமுத்திர ராஜனின் மகனாகிய நீ ராஜகுமாரன் என்றாலும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு

21. ராஜ்யத்திற்கு ஜீவாதாரமான விஷயத்தில் பொய் பேசுபவனும் ராஜ்யத்தின் நலத்தில் கவனம் செலுத்தாத, க்ஷத்ரியன், ப்ரும்மஹத்தி பாபம் செய்தவன் மாத்ரு ஹத்தி, பித்ரு ஹத்தி செய்தவன் எந்த பாப லோகங்களுக்கு செல்வானோ அங்கு பொய் பேசி ஜனங்களுக்கு நன்மை செய்யாத அரசன் போகிறான்.

22. சூர்யனும், சந்திரனும் வாயு பகவானும், எவ்வளவு காலம் நீ செய்த பாபங்களை பார்பார்களோ, அவ்வளவு நாள் காட்டில் வாழ வேண்டிய கதியை விரைவில் அடைவாய். அவர்களது வேகம் உனக்கு இருக்க வேண்டும்.

23. ஹே குதிரையே எங்களுக்காகப் பிராயச்சித்தத்தை அடையுங்கால் யுத்தத்தில் எதிரிகளை வென்று எஜமானருடன் சுகமாய் இரு. ஓம் அம் அச்வாய நம:

24. மஹா பலசாலியான தேவேந்திரனுடைய கொடியே ஸ்வர்கலோகத்தில் உள்ளவரும் ஸ்ரீமன் நாராயணனுடைய த்வஜமாகியுள்ள கருடபகவான் உன்னிடத்தில் சான்னித்யம் கொண்டுள்ளார். ஓம் த்வம் த்வஜாய நம:

25. காச்யபருடைய, புத்ரனும் அமிர்தத்தை அபஹரித்துக் கொண்டு வந்தவரும் மஹாவிஷ்ணுவின் வாஹநமும், போரில் யாராலும் ஆக்ரமிக்க முடியாத வவும், அளவிடமுடியாத எதிரிகளை ஒழித்துக் காட்டியவரும்

26. பலம் நிறைந்த இறக்கைகளை உடையவரும் வாயுவுக்கு ஸமமான வேகம் படைத்த கருடபகவான் த்வஜமாகிய உன்னருகில் எதிரிகளை அழிப்பவைகளே, அச்வதர்மமறிந்த வீரர்களை ரக்ஷிக்க வேண்டும்.

27. குமுதன், ஐராவதம், புஷ்ப தந்தன், வாமணன், சுப்ரதீகன், அஞ்சனன், நீலன், நாகன் ஆகிய எட்டு தேவலோகத்து யானைகள் ஆகும்.

28. இந்த யானைகளின் எட்டு வகையான புத்ரர்களும், பவுத்ரர்களும், காட்டில் பத்ரம், மந்திரம், மிருகம், கருப்பு ஜாதியில் பிறந்த யானைகளாக இருக்கின்றன.

29. வேறுவேறு வனத்தில் பிறந்தவை அந்த யானைகள் காட்டிலுண்டான அந்தக் காட்டனைகளும் வஸீ, ருத்ர, ஆதித்யர்களும் உன்னை ரக்ஷிக்கட்டும்.

30. ஏ யானை சிரேஷ்டனே, தலைவனை ரக்ஷி. உடன்பாடு கடைபிடிக்கட்டும். யுத்தத்தில் வெற்றி அடைவாயாக, நடையில் மங்களங்களை மேற்கொள்.

31. சோமனிடமிருந்து செல்வத்தையும், மஹா விஷ்ணுவிடமிருந்து பலத்தையும் சூர்யனிடமிருந்து தேஜஸ்சையும், வாயுவிடமிருந்து வேகத்தையும் மேரு மலையிலிருந்து ஸ்திரத் தன்மையையும் ருத்ரனிடமிருந்து வெற்றியும் தேவேந்திரனிடமிருந்து

32. யுத்த காலத்தில் உள்ள யானைகளும் திக் தேவதைகளுடன் திக்குகளும் அச்வினி தேவர்களும் கந்தர்வர்களும் நாற்புறமும் பாதுகாக்கட்டும். ஓம் ஹம் ஹஸ்திநே நம:

33. அக்னி பகவான், அஷ்ட வஸூக்கள், ருத்ரர்கள், வாயு, ஸோமன், மஹரிஷிகள், நாகர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பூத கணங்கள், நவக்கிரஹங்கள் ஓம் கம் கஜாய நம:

34. ஆதித்யர்களுடன் கூடிய பிரதம கணங்களும், அஷ்டமாத்ருக்களுடன் கூடிய பைரவரும், சேனாதி பதியான சுப்ரமண்யரும், வருணனும், உன்னிடம் வாஸம் செய்து (புகழை உமக்குத் தரட்டும்)

35. எல்லா எதிரிகளையும் அரசன் கொல்லட்டும், வெற்றி அடையட்டும், எதிரிகளால் நாற்புறமும் வெல்லப்பட்ட தூஷனைகளையுடைய நாய்களே

36. உன்னுடைய தேஜஸால், தூஷணைகள் தொலைந்தன. அவை எதிரிகளின் மேல் காலநேமிவதத்திலும் திரிபுரஸம்ஹாரத்திலும் நடந்தது போல் விழட்டும்.

37. ஹிரண்யகசிபு, யுத்தத்திலும் தேவாசுர யுத்தத்திலும், எப்படி பிரகாசித்தாயோ அப்படி இப்பொழுது உன் பிரதிக்ஞையை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

38. நீலமாகவும் வெண்மையாகவும், உள்ள இந்த கொடியை பார்த்தே அரசனது பகைவர்கள் அழியட்டும். பலவித அஸ்திரங்களாலும் பயங்கர வியாதிகளாலும் யுத்தத்தில் ஜயிக்கப்பட்டவர்களாக ஆகட்டும்.

39.  உன்னால் ஜயிக்கப்பட்டவர்கள் உன்னை அடைந்தால் சுத்தர்களாகி உடனே நன்மை அடைந்தவர்களாக ஆகிறார்கள். பூதநா, ரேவதீ, காளராத்ரி என்று எண்ணப்படுகிறார்களோ ஏ கொடியே எல்லா எதிரிகளையும் அழித்து நீ என்னை அண்டியவனாயிருக்கிறாய். ஓம் பம் பதாகாய நம:

40. அஸி:, விசிஸந:, கட்க:, தீக்ஷணதர்மா, துராஸதி:,

41. ஸ்ரீ கர்ப:, விஜய:, தர்மதார:, என்ற எட்டு நாமாக்கள் பிரம்மாவால் உனக்கு கூறப்பட்டுள்ளன. ஓம் கம் கட்காய நம:

42. உனக்கு நக்ஷத்திரம் கிருத்திகை உனக்கு குரு பரமேஸ்வரன் உன்னுடைய உடல் தங்கமயமானது, பிரம்மா, விஷ்ணு உனக்கு

43. தந்தையும் பாட்டனாரும் நீ எங்களை எப்பொழுதும் காப்பாற்று. ஹே கவசமே யுத்தத்தில் எல்லா ஆபத்தையும் அழிக்கிறாய்.

44. என்னை ரக்ஷி, நான் ரக்ஷிக்கத்தக்கவன், குற்றமற்றவனே உனக்கு நமஸ்காரம், ஓம் வம் வர்மனே நம: ஹே துந்துபி வாத்யம் உன்னுடைய கோஷம் எதிரிகளின் உள்ளத்தைக் கலக்க வைக்கிறது.

45. மஹாராஜாக்களுடைய அரண்மனை உனக்கு வாசஸ்தலம், நீ வெற்றியை அளிப்பவன், மேகத்தின் இடியோசையால் உயர்ந்த யானைகள் எவ்வாறு சந்தோஷமடைகின்றனவோ

46. அவ்வாறு உன்னுடைய சப்தத்தால் எங்களுக்கு ஆனந்தம் உண்டாகட்டும். இடியோசை எப்படி ஸ்திரீகளுக்கு பயத்தை கொடுக்கிறதோ அவ்வாறே

47. உன்னுடைய ஒலியானது, எதிரிகளை ருத்ரருடைய கோபத்தால் பயம் உள்ளவர்களாகச் செய்யட்டும். (ஓம் தும் துந்துபயே நம:) எல்லா ஆயுதங்களுக்கும் பெரியவரே (எல்லா வில்லுக்கு நமஸ்காரம்) எல்லா ஆயுதங்களையும் அழிப்பவரே.

48. பாணத்துடன் கூடிய நீங்கள் என்னை எப்பொழுதும் காப்பாற்றுவீர்ராக, இது சாபமந்திரம், ஓம் சம் சாபாய நம: ஹே சங்கே புண்ய ஸ்வரூபமாய் மங்களத்திற்கு மங்களமாகவும்

49. மஹாவிஷ்ணுவால் எப்பொழுதும் தரிக்கப்பட்டதாயும் உள்ள தாங்கள் எனக்கு மன அமைதியை தருவீராக. இது சங்க மந்திரம், ஓம் சம் சங்காய நம:, சந்திரனை போல் பிரகாசிக்கிறவரும் பனிக்கட்டி போல் வெண்மை ஆனதும்

50. தேவர்களுக்கு பிரியமானவருமான ஹே சாமரமே என்னுடைய பாபங்களை விரட்டுவீராக, ஓம் சம்சாமராய நம: இது சாமர மந்திரம், எல்லா ஆயுதங்களுக்கும் முதன்மையான நிர்மாணிக்கப்பட்டது பரமேஸ்வரனால்

51. சூலாயுத நுனியிலிருந்து எடுத்து நல்ல பிடியை தயாரித்து துஷ்டர்களை கொல்வதற்காக சண்டிகா தேவியிடம் கொடுக்கப்பட்டவளாய் இருக்கிறாய்.

52. உன்னால் விஸ்தரிக்கப்பட்ட கத்தியானது தேவர்களுக்கு அளிக்கப்பட்டதாகும். நீ எல்லா தத்வத்திற்கும் அங்கமாகவும், எல்லா அசுபத்தையும் போக்குபவளாயும் இருக்கிறாய்.

53. ஹே கத்தியே என்னை எப்பொழுதும் காப்பாற்று எனக்கு மன அமைதியைக் கொடு என கத்தியின் மந்திரம், ஓம் க்ஷúம் க்ஷúரிகாய நம: துஷ்டர்களை விரட்டுவதற்கும் சாதுக்களை அழைப்பதற்கும்

54. பிரம்மாவால் படைக்கப்பட்டிருக்கிறாய், நீ எனக்கு புகழ், சவுக்யம் முதலியவைகளை கொடு, நீ அரசனுக்கு தேவனாக இருக்கிறாய்.

55. எல்லா எதிரிகளையும், அழிப்பாயாக, தங்க தண்டமே உனக்கு நமஸ்காரம். இவ்வாறு தங்க தண்டமந்திரம் ஓம் கம் கனக தண்டாய நம: எதிரிகளால் தாக்க முடியாததை தர்மத்திற்கு கட்டுப்பட்டது. அமைதியான ஸ்வாபம் உடையவை. சத்ருக்களை கொல்லக்கூடியது.

56. துக்கத்தை அழிக்கவல்லது, தர்மத்தை தரவல்லது அமைதியானது, எல்லா எதிரிகளையும் அழிக்கவல்லது, ஆகிய எட்டு பலம் பொருந்திய எட்டு ஸிம்மங்கள் உன்னிடம் இருக்கிறது.

57. பிராம்மணர்களால் வேதங்களில் ஸிம்மாஸனத்தின் புகழை பாடப்படுகிறது. உன்னிடம் சிவன் பிரத்யக்ஷமாக இருக்கிறான், தேவர்களின் தலைவனாக இந்திரனும் இருக்கிறான்.

58. உன்னிடம் மஹா விஷ்ணு வஸிக்கிறார், உனக்காக தவம் அனுஷ்டிக்கப்படுகிறது. எங்கும் மங்களமயமான உனக்கு நமஸ்காரம், அரசே உனக்கு மங்களம் உண்டாகட்டும்.

59. மூன்று உலகங்களையும் வெற்றி கொள்வாயாக, சாந்நித்யமாக இருக்கும் உனக்கு நமஸ்காரம், இது சிம்மாஸன மந்திரம், மந்திரத்தை முன்னிட்டதாக இந்த உலகபிரசார கர்மாவால் செய்ய வேண்டும்.

60. பழங்கள், புஷ்பங்கள், சந்தனம், தூப, தீப, நைவேத்யம் இவைகளால் அஷ்டமியில் தங்கத்தால் செய்யப்பட்ட துர்கா தேவியை பூஜிக்க வேண்டும்.

61. அல்லது தன்னுடைய சக்திக்கு ஏற்றவாறு வெள்ளியிலோ, செப்பிலோ, கல்லாலோ, மரத்தாலோ அல்லது களிமண்ணாலோ தேவியை நிர்மாணித்து ஆராதிக்கலாம்.

62. அரசர், ஸ்நானம் செய்து எல்லா ஆபரணங்களை தரித்தவராக கரந்நியாஸம் அங்கந்நியாசம் செய்து கொண்டவராக முற்பகலிலோ அல்லது மதியத்திலோ இந்த துர்கா பூஜையை செய்ய வேண்டும்.

63. துர்கை அம்மனுக்கு திவ்ய பரிமளம் நிறைந்த சந்தனம், அகில், பச்சகற்பூரம், ஜவ்வாது, குங்குமப்பூ, முதலியவைகளை காப்பு சாத்தி வாசனை நிறைந்த புஷ்பங்களாலும்

64. நீலோத்பலங்களாலும் வாசனை நிறைந்த பூக்களாலும் தூப, தீபாதிகளுடன் பழங்களுடன், கூடிய விசேஷ நைவேத்யங்களாலும், நர்தனம், கானம் மங்கள வாத்யம் ஆகியவைகளுடன்

65. தும்பை பூக்களாலும், பில்ப பத்ரங்களுடன் எட்டு கைகளுடன் கூடியவளும், மகிஷாஸூரனை வதம் செய்பவளாகவும்

66. சூலத்தை மஹிஷாஸுரன் மார்பில் குத்தியவாறு மேலே தூக்கிய வண்ணம் இருப்பவளும் கபாலம், சூலம் தரித்திருப்பவளும், வில், அம்பு, கத்தி, கேடயம் தரித்திருப்பவளும்

67. சங்கு, சக்ரம் தரித்திருப்பவளும், எல்லா விதமான ஆபரணங்களையும் அணிந்திருப்பவளும் வரத முத்ரையை தரித்திருப்பவளும், ஜபமாலையை ஒலித்துக் கொண்டிருப்பவளும் மஹிஷாஸுரனின் தலைமீது நின்று கொண்டிருப்பவனும்

68. ஸிம்மாஸனத்தில் வீற்றிருப்பவளும், மூன்று கண்களை உடையவளும், எல்லா எதிரிகளையும் அழிப்பவளும் அல்லது வரத, அபய முத்திரையுடன் கூடிய நான்கு புஜங்களுடன் கூடியவளும்

69. சங்கு, சக்ரம் ஆகியவைகளை தரித்திருப்பவளாயும் பக்தி நிறைந்தவர்களுக்கு பிரியமானவளும், அமைதி தரும் தேவதையும் ஆன மஹிஷாஸுர மர்தினியை பலவிதமான கானங்களாலும் நர்தனங்களாலும்

70. இவ்விதம் ஆராதனையால் இரவை கழித்து காலையில் அருணோதய காலத்தில் மிருதுவான கழுத்தை உடைய ஆட்டையும், மஹிஷத்தையும் கத்தியால் வெட்ட வேண்டும்.

71. நூறு, ஐம்பது, இருபத்தி ஐந்து, பன்னிரெண்டு இஷ்டபிரகாரம் பலியிடலாம். பிறகு பிற்பகலில் நவமியில், தேரில் அமர்ந்திருக்கும்.

72. துர்கையை, அரசர், சைன்யங்கள், சூழ ஊர்வலம் நடத்த வேண்டும். ராஜாவால், ஏவப்பட்ட வீரன்

73. நெய்யுடன் கூடியதும், தேன் நிறைந்ததுமான அன்னத்தை நான்கு திசைகளிலும் நான்கு மூலைகளிலும் இந்த மந்திரத்தைச் சொல்லி பூதங்களுக்கு பலி போடவேண்டும்.

74. இந்த பலியை தேவர்களும் ஆதித்யர்களும் வஸீக்களும், மருத்துக்களும், அசிவீனி தேவர்களும், ருத்திரர்களும், ஸூபர்ணர் (என்ற கருடனும்) நாகர்களும் கிரஹங்களும்

75. அஸீரர்களும், ராக்ஷஸர்களும் மாத்ரு தேவதைகளும், பாம்புகளும், பிசாசங்களும், டாகினீகளும், பைரவர்களும், யோகினிகளும், பெண் தெய்வங்களும், பெண் நரிகளும்

76. ஆண் நரிகளும், ஸித்தர்களும், கந்தர்வர்களும், வீரர்களும், வித்யாதரர்களும், மனிதர்களும், திக்பாலர்களும், லோகபாலர்களும் மற்றும் உள்ள வினாயக தேவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

77. உலகத்திற்கு சாந்தியை அளிக்கும் சத்கர்மாக்களை பிராம்மணர்கள், மாமுனிவர்கள் செய்யட்டும் எனக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனக்கு எதிரிகள் இருக்க வேண்டாம்.

78. பூதங்கள், பிரேதங்கள் அஸூரர்கள் திருப்தி அடைந்து சாந்தர்களாக இருக்கட்டும் என்று பிராத்தனையுடன் தேவியை ஊர்வலமாக எழுந்தருளச் செய்ய வேண்டும், அல்லது பக்தர்களால் தூக்கப்பட்டு எல்லா விதமான விக்னங்களையும் போக்கடிக்கும் தேவியை ஊர்வலமாக எழுந்தருளச் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் துர்காபூஜா விதியாகிற எழுபத்தி ஏழாவது படலமாகும்.
படலம் 76: அரசர்களின் ரக்ஷõ முறை

76வது படலத்தில், அரசர்களினுடைய ரக்ஷ விதியை கூறுகின்றேன். நல்ல உத்தமமான குருவானவர் அரசனின் பொருட்டு நெற்றி, முகம், ஹ்ருதயம், நாபி, கைகளின் அடி இரண்டிலும் மந்திரத்தை நினைத்துக் கொண்டு விபூதியை கொடுக்க வேண்டும் என்பதைக் கூறி திருநீற்றின் லக்ஷணம், நினைக்க வேண்டிய மந்திரம், திருநீறு கொடுக்க வேண்டிய முறை, அங்கு, விரல்களின் தேவதைகள் என்பன போன்ற விஷயங்களை விளக்கப்படுகின்றன. பிறகு பிராமணன் க்ஷத்திரியர், வைசியர்கள், சூத்ரர்கள் விஷயங்களில் கூட ரøக்ஷயின் முறை, பூணூல் அணியும் முறை மந்திரத்தோடு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அங்கு அரசர் விஷயத்தில் உத்தரீயம் இரண்டு பூணூல் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த பிரகாரம் எழுபத்து ஆறாவது படல கருத்து சுருக்கமாகும்.

1. அரசர்களுக்கான ரøக்ஷயை சுருக்கமாக கூறுகிறேன். சாஸ்திரோக்த முறையில் தயாரிக்கப்பட்ட விபூதியை வஸ்திர காயம் செய்யப்பட்டு மிருதுவாக இருப்பதும் நல்ல வாசனை உள்ளதும், பஞ்சாக்ஷராகி மந்திரங்களால் ஸம்ஸ்காரம்

2. செய்யப்பட்டதும், கொஞ்சம் சிவந்ததுமான விபூதியை அரசருக்கு, தொப்புளுக்கு மேலும் நெற்றி, முகம், மார்பு, தொப்புள் கைகளின் மூலப்பரதேசங்களிலும்

3. ஈசானாதி மந்திரத்துடன் ஜபித்துக் கொண்டும், அல்லது தனக்கு இஷ்டமான மந்திரத்தையும் ஜபித்துக் கொண்டும், ஆசார்யன், பிரம்ம, விஷ்ணு, ருத்ர ஸ்ரூபமான மூன்று நடு விரல்களால் விபூதியை பூசிக்கக் கொடுக்க வேண்டும்.

4. பிரம்மா, விஷ்ணு, ஈச்வரர்களை தியானித்துக் கொண்டு ஈசானாதி மந்திரங்களை ஜபித்துக் கொண்டு, மும்மூர்த்தீஸ்வரூபமான, மோதிர விரலுடன் கூடிய கட்டை விரலால் விபூதியை கொடுக்க வேண்டும்.

5. மோதிர விரலின் அடிபாக பர்வாக்களிலிருந்து, வரிசையாக மூன்றுபர்வாக்களிலும் (கணுக்களிலும்) மூன்று மூர்த்திகள் இருக்கின்றனர். அதற்கேற்றவாறு மந்திரங்களைச் சொல்லி யஜமானுக்கு, ஏற்ற வகையில் விபூதியை கொடுக்க வேண்டும்.

6. நான்கு வர்ணத்தாருக்கும் விபூதி விநியோகம் செய்யும் பொழுது எல்லா மந்திரங்களையும் சொல்லலாம். வேதவித்தான பிராம்ணர்களுக்கு விபூதி தரும் பொழுது ஓம் என்ற பிரணவம் முதல் நம: என்று முடிவு வரையிலாக உச்சரிக்க வேண்டும்.

7. க்ஷத்திரியனுக்கு விபூதி கொடுக்கும் பொழுது ஸ்வாஹா என்ற சொல்லை கடைசியாக கொண்டும், வைச்யனுக்கு வவுஷட் என்ற சொல்லை முடிவாக கொண்டும், நான்காம் வர்ணத்தவர்களுக்கு

8. அவரவர்களின் தேவதைகளை தியானித்துக் கொண்டும் விபூதி கொடுக்கலாம். அவரவர்களின் தேவதைகளின் மந்திரத்தால் ஜபிக்கப்பட்ட பூணூலைக் கொடுக்க வேண்டும்.

9. அரசர்க்கு இஷ்ட தேவதையின் மந்திரத்தால் ஜபிக்கப்பட்ட இரண்டு பூணூல்களை கொடுக்கவும். நல்ல உத்தரீயங்களையும் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் அரசனின் ரøக்ஷ முறையாகிய எழுபத்தி ஆறாவது படலமாகும்.
படலம் 75: நோய்களை தீர்க்கும் முறை

75வது படலத்தில் நோய்களை தீர்க்கும்முறை முறைப்படி கூறப்படுகிறது. முதலில் எல்லா மனிதர்களுக்கும் விசேஷமாக அரசர்கள், பசு, யானை, நாய், ஆடு, எருமை முதலிய பிராணிகளுக்கும் ஜுரம், வைசூரி, கிருஹ ஆவேசம், அபஸ்மாரம், இவைகளிலும் விசேஷமாக, குஷ்டரோகம் முதலிய வியாதி ஏற்பட்டாலும், வியாதி நிவர்த்திக்காகவும், ரோகம் ஏற்படாமல் இருப்பதற்கும், புஷ்டிக்காகவும், பலத்திற்காகவும் குறுகிய முறை கூறப்படுகிறது என்று பிரதிக்ஞை ஆகும். பிறகு தேவாலயம், நதிக்கரை மலை, காடு, இவைகளிலோ மற்ற புண்ய தேசத்திலோ அந்தந்த இருப்பிடத்தில் ரøக்ஷயுடன் கூடிய தன்னுடைய வீட்டில் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட சுத்தமான இடத்தில் லிங்கம், மண்டலத்திலோ, கும்பம், ஸ்தண்டிலம், பலகை முதலியவைகளிலோ சிவன் முதலான தேவர்களை ஆவாஹித்து முன்பு போல் சந்தனம், புஷ்பம் தூபம், தீபம், நைவேத்யம், இவைகளுடன் கூடியதாக பூஜித்து தன்னுடைய இஷ்ட தேவரை பஞ்சகவ்ய பஞ்சாமிருதம் இவைகளால் ஸ்நபன ஸஹிதம் பூஜை செய்து ஜபம் செய்யவும் என கூறி ஜபம் செய்யும் முறை, அங்கு செய்யவேண்டிய ஹோமம் முறை விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்யன் கும்ப ஸமீபம் சென்று தேவனை வணங்கி நமஸ்கரித்து கும்ப தீர்த்தத்தால் வியாதியால் பீடிக்கப்பட்ட புருஷனை பிராக்ஷித்து, பிறகு மந்திரம் தியானத்துடன் கூடிய அங்குள்ள விபூதியை பூசவும். பிறகு ருத்திராதி தேவர்களுக்கு நெய்யுடன் கூடின தயிர் அன்னத்தை பலி கொடுக்கவும் என்று மனுஷ்யர்களுடன் விஷயமான வியாதி நாசன விதியில் செய்யவேண்டிய ஒரு விதி விளக்கப்படுகிறது. இங்கு ஹோமம் முடிவிலோ ருத்திராதிகளுக்கு பலி கொடுக்கவும் என்று வேறு விதமாக அறிவிக்கப்படுகிறது. பிறகு வியாதியால் பீடிக்கப்பட்ட புருஷ உருவத்திற்கு சமமாக மாவினால் உருவம் செய்து சந்தன புஷ்பம் இவைகளால் பூஜைவரை பூஜித்து பிரதிதினமும் மூன்று சந்த்யாகாலத்திலோ ஒரு காலத்திலோ பலவித காய்கறிகளுடன் கூடி பாயசம் (மிளகு) வெண் பொங்கல் சுத்தான்னம் இவைகளை நாற்சந்தியிலோ, நிழல் தரும் மரத்தின் அடியிலோ, தேரோடும் வீதியிலோ, சப்த கன்னிகைகள் கோயில் சமீபத்திலோ, சுடுகாடு முதலிய இடங்களிலோ மந்திரத்தை கூறி பலிதான முறைப்படி பலியை வைக்கவும் என கூறப்படுகிறது. இங்கு பலிதான மையத்தில் சொல்லக்கூடிய மந்திரம், சாதாரணமாக எந்த சத்வன் தேவதத்தனை அறிந்து இங்கு இருக்கிறானோ அவனுக்கு இந்த பலி ஆகட்டும் என கூறப்படுகிறது.

இந்த பலியானது ஒரு தினம் முதல் 10 தினம் வரையிலும், ஒருமாசம் முதல் வருஷம் முடியும் வரையிலும், ஒரு வருஷம் நூறு வருஷம் வரையிலும் பிராணிகளின் விஷயத்தில் விதி கூறப்படுகிறது. இவ்வாறு பலிதான விதிபிரகாரம் ஒன்று மனுஷ்யர்களுக்கு வியாதி நாச விதியாக கூறப்படுகிறது. பிறகு லிங்கம் முதலியவைகளில் தேவனை பூஜித்து ஜபஹோமம் முடிந்து லோபித்தன்மை இன்றி தங்கத்தாலோ வெள்ளியாலோ வியாதியால் பீடிக்கப்பட்டவனின் உருவத்தையும், யமரூபத்தையும் சக்ரம் போன்றோ பிரதிபிம்பம் ஏற்படுத்தி முன்பு கூறிய விதிப்படி பூஜித்து அந்த பிரதிபிம்பத்தை சிவனுக்கு தானம் செய்யவும். பிறகு வியாதி அடைந்தவன் வியாதி இல்லாதவனாக ஆகிறான். இது சந்தேகம் இல்லை எனக் கூறுகிறார். இவ்வாறு பிரதி பிம்பதான வடிவம் வேறுவிதமாக மனுஷ்யர்களின் வியாதி போக்கக் கூடிய விதியில் விளக்கப்படுகிறது. இங்கு வெறும் பலிதானம் மட்டும் நான்கு மாதம் வரையிலோ ஆறுமாதம் வரையிலோ வியாதி முடியும் வரையிலோ செய்யவேண்டும் என சுருக்கமாக வேறுவிதமாக கூறப்படுகிறது. பிறகு இரண்டு பக்ஷத்திலும் அஷ்டமி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி, அவ்வாறு சூர்ய, சந்திர கிரஹணங்கள், விஷுவபுண்யகாலம், இரண்டு அயனங்களிலும் தன்னுடைய ஜன்ம நக்ஷத்திரம், அனுஜன்ம நக்ஷத்திரம், சுத்தமான அழகான, கோசாணம் மெழுகப்பட்ட ஸ்தண்டிலம் அமைத்து, லக்ஷணத்துடன் கூடிய 25 கலசங்களையோ, அல்லது ஐந்து, ஒன்பது கலசங்களை ஸ்தாபித்து அவைகளை முறைப்படி அந்தந்த மந்திரங்களுடன் கூடி சந்தன புஷ்ப தூப, தீபங்களுடன் விசேஷமாக பூஜித்து, அதன் முன்பாக நான்கு திக்கிலும், ஸ்தண்டிலம் அல்லது குண்டத்திலோ, சமித்து நெய் அன்னம் இவைகளால் ஹோமம் செய்யவும். அந்தகுண்டத்திலே உள்ள விபூதியால் அதன் வடக்குதிக்கில் உள்ள வியாதியால் பீடிக்கப்பட்ட புருஷனை ஸ்நானம் செய்விக்கவும். யவம் முதலிய மாவுகளால் பூசி அந்த தியானத்துடன் கூடியதாக அந்தந்த மந்திரத்தை ஸ்மரித்து அபிஷிக்கவும் அல்லது சம்ப்ரோக்ஷிக்கவும். பிறகு அங்குள்ள விபூதியை பூசவும். பிறகு ரோகி ஆசார்யனை பூஜிக்கவும். இந்த வியாதியை போக்கும் விதியானது பட்டத்தில் உள்ள அரசர்களுக்கும் அஷ்டோத்தர சதகலச ஸ்தாபனமோ ஐம்பது கலஸஸ்தாபனமோ செய்து எல்லா கலசத்திலும் ஒரே மந்திரத்தை பூஜிக்கவும் என்று அரசர்கள் விஷயத்தில் கூறப்படுகிறது.

இவ்வாறு சாதாரணமான மனிதர்களுக்கும் விஷயத்தில் செய்யவேண்டிய முறை, விபூதிஸ்நானம் கும்பதீர்த்தாபிஷேகம் தீர்த்தபிரோக்ஷணம், விபூதி பூசுதல் ஆகிய வியாதியை போக்கக் கூடிய முறைகள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு அரசர், சாதாரண மனுஷ்யர்கள் விஷயத்தில் வியாதியை போக்குவதற்கு ஜலத்தின் நடுவில் நின்று கொண்டு மந்திரஜபத்தால் சாதிக்கக் கூடிய வேறு விதி வர்ணிக்கப்படுகிறது. அங்கு செய்யவேண்டிய ஹோமவிதி மந்திர தர்பணவிதி கூறப்படுகிறது. பிறகு காட்டு புரசு இலையில் மந்திரத்தினை எழுதி தங்கம், வெள்ளி இவைகளால்சிறு உருண்டை மாதிரி செய்து புரசபத்திரத்தில் எழுதியதை நுழைத்து அந்த உருண்டையை (ரøக்ஷயை) கழுத்து, காது, சிகையிலோ கட்டிக் கொள்ளவும் எனக் கூறி அங்கே செய்யவேண்டிய ஹோமம் மந்திர தர்பணம் ஜபம் வரை கூறப்படுகின்றது. இந்த கர்மாவில் பிறரை அனுக்கிரஹம் செய்யவேண்டிய விஷயத்தில் ஈடுபட்ட ஆதி சைவனே ஆசார்யனாக ஆவான் என உயர்ந்ததாக கூறப்படுகிறது. பிறகு யானைகளின் விஷயத்தில் வியாதியை போக்கக் கூடிய முறை கூறப்படுகிறது. யானை கட்டும் இடத்தின் மத்தியிலோ சிவன் கோயிலிலோ, சூலம் ஸ்தாபிக்கப்பட்ட இடத்திலோ, விஷ்ணு, துர்கை, சூர்யன், மஹாகணபதி, சாஸ்தா, சப்தமாத்திருக்கள், இவர்களின் ஆலயத்திலோ ஆற்றங்கரையிலோ, குளத்தங்கரையிலோ, ஸ்வாமி நந்தவனத்திலோ, கோசாணம் மெழுகப்பட்ட இடத்திலோ முறைப்படி ஸ்தண்டிலம் அமைத்து ஓர் கும்பம் அமைத்து அங்கு அங்கபூஜை சஹிதம் அகோராஸ்திரத்தை பூஜிக்கவும் என்று கூறி அகோராஸ்திரத்யான முறை, செய்யவேண்டிய பூஜாமுறையும் கூறப்படுகிறது. பிறகு ஹோமம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. பூர்ணாஹுதியின் முடிவில் அஸ்திர கும்பதீர்த்தத்தால் சம்ப்ரோக்ஷணம் அங்கு இருக்கும் விபூதியை பூசுதல் யானைகளுக்கு செய்யவேண்டும்.

அப்பொழுது வியாதிகள் அழிந்து போகின்றன. யானைகளுக்கு ஆயுள் அபிவிருத்தியும் புஷ்டியும் ஏற்படுகிறது. அவைகளின் தலைவன் விஜயத்தை அடைவான் என கூறப்படுகிறது. பிறகு அங்கு செய்யவேண்டிய பலிமுறை கூறப்படுகிறது. முடிவில் இந்த பூஜை முறையே குதிரைகளை காப்பாற்றுவதற்கும் உள்ள விதியாகும். ஆனால் புகைக்கலர் உள்ள அகோராஸ்திரத்தை உத்தமமான ஸாதகர்களால் தியானிக்கப்படவேண்டும் என்று விசேஷம் விளக்கப்படுகிறது. பிறகு வியாதியை போக்கும் விஷயத்தில் அகோரமந்திர, அகோராஸ்திர மந்திரங்களின் பூஜையால் சாதிக்க வேண்டிய பிரயோகமும், அவ்வாறே கருங்கல் முதலிய திரவ்யங்களில் அகோரமூர்த்தியை ஏற்படுத்தி ஸ்தாபித்து அந்த பூஜையால் சாதிக்கக்கூடிய பிரயோகம் ஆவரணத்துடன் கூடிய அகோர மூர்த்தியின் பூஜையின் முறையும் விளக்கப்படுகிறது. அங்கு செய்யவேண்டிய ஜப, ஹோம, பலி முறைகள் கூறப்படுகின்றன. பிறகு சாதாரண மனிதர்களுக்கும், விசேஷமான அரசர்களுக்கும், கால்நடைகளுக்கும் வியாதியை போக்கும் முறைகளில் பலவித பிரயோக விஷயங்கள் கூறப்படுகின்றன. முடிவில் அகோரமந்திரம், அகோராஸ்திர மந்திரம், இவைகளுக்கு எந்த ராஜ்யத்தில் ஹோம பலியுடன் கூடிய பூஜை நடைபெறுகிறதோ, அங்கு ஆயுள் அபிவிருர்த்தி, நோயின்மை ஏற்படும். இதற்கு சமமாக வியாதியை போக்குவதற்கு காரணமான வேறுபிரயோகம் இல்லை என்கிறார். ஆகையால் முயற்ச்சியுடன் இந்த பிரயோகத்தை அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு 75வது படல கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா மனிதர்களுக்கும், அரசர்களுக்கும் உண்டாகும் நோயைப் போக்கும் முறையை சுருக்கமாகவும், விசேஷமாகவும் கூறுகிறேன்.

2. பசு, எருமை, யானை, குதிரை, ஆடு, எருது, முதலிய பிராணிகளுக்கு உண்டாகும், ஜ்வரம், மாரி, க்ருஹ பீடைகள், வலிப்பு முதலிய நோய்களைப் போக்கும் முறைகளை கூறுகிறேன்.

3. க்ஷயம் குஷ்டம் போன்ற நோய், சோகை, வயிற்றுவலி, மண்ணீரம் நோய், பைத்யம், வாத, பித்த, கபங்களின் ஆதிக்கம், தீ புண், மயக்கம், மதம் பிடித்த தன்மை, காயங்கள் இவைகளுக்கும்

4. மஹோத்ரம், இரத்தக் குழாய் வீக்கம், நீர்கட்டு இது போன்ற இன்னும், பெரிய நோய்களும், தலை, கண், பல் முதலியவைகளில் தோன்றும் நோய்கள்

5. முகம், வாய், கைகால்கள், இவைகளில் உண்டாகும் நோய்களுக்கும் கூறப்படாத நோய்களுக்கும், விசேஷமாக உண்டாகும் நோய் மற்றும் அரசர் முதலியவர்களுக்கும்

6. நோய்களை போக்குவதற்கும், மேற் சொன்ன பிராணிகளுக்கு இவை போன்ற நோய்கள் உண்டாகாமல் இருப்பதற்கும் சரீரபுஷ்டி ஏற்படுவதற்கும், உடலில் பலம் உண்டாவதற்கும் சாஸ்திர முறைப்படி விதிமுறை சுருக்கமாகக் கூறப்படுகிறது.

7. ஆலயத்திலாவது, புண்ய நிதிக்கரையிலாவது அல்லது மலை, காடு, வேறு புண்ய தேசம் இவைகளிலாவது அந்த பிராணிகள் வியாதி ஏற்பட்ட இடத்திலாவது தன் வீட்டிலாவது

8. பசுஞ்சாணத்தினால் மெழுகப்பட்ட சுத்தமானதும் மனதிற்கு நிறைவை அளிக்கக்கூடியதும், மறைவானதும் இடையூறு ஏற்படாமல் காப்பாற்றப்பட்ட, இடத்தில் லிங்கத்தில் அல்லது மண்டலத்தில், கும்பத்தில், ஸ்தண்டிலத்தில் பலகை முதலியவைகளிலோ

9. ஈஸ்வரன் முதலிய தேவதைகளை ஆவாஹனம் செய்தும், சந்தனம், புஷ்பம், தூபதீப, ஹவிர் நிவேதனம் முதலியவைகளால் பூஜித்தும்

10. பஞ்ச கவ்யம், ஸ்நபனம், அபிஷேகம் முதலியவைகளால் ஈஸ்வரனை ஆராதித்து, மந்திர ஜபமும் செய்ய வேண்டும்.

11. பத்தாயிரமோ அல்லது ஐயாயிறமோ அல்லது இரண்டாயிரத்து ஐநூறோ, அல்லது ஆயிறமோ அல்லது ஐநூறோ அல்லது நூற்றியெட்டு ஆவ்ருத்தியாவது

12. அந்த மந்திரங்களுக்கு தகுந்தவாறு ஜபம் செய்ய வேண்டும். பிறகு அந்தந்த மந்திரங்களை உச்சரித்து நோய் உண்டானவனுடைய நிலையையும் சொல்லி நோயை நாசம் செய், நாசம் செய் என்று கூறி பிறகு

13. தேவதத்தனுடைய என்ற பதத்தை விசேஷமாக படித்து ஜபத்தை செய்து விருப்பமான (இஷ்டதேவதை) தேவனிடத்தில் தெரிவிக்க வேண்டும்.

14. பிறகு ஜபத்தை சந்தனம், புஷ்பம், அக்ஷதை, அருகு இவைகளோடு இறைவனிடத்தில் அர்பணம் செய்து இறைவனை வணங்கி ஹோமம் செய்ய அனுமதி பெற்று ஹோமம் செய்யும் இடத்தை அடைய வேண்டும்.

15. ஆராதிக்கப்பட்ட ஈச்வரனுக்கு முன்புபோல் அல்லது ஈசான்ய திக்கிலாவது நான் கோண வடிவில் அல்லது வட்டவடிவ குண்டத்தில் அல்லது ஸ்தண்டிலத்திலாவது முறைப்படி சிவாக்னியை ஏற்படுத்தி

16. அதில் இஷ்ட தேவதையை ஆவாஹனம் செய்து சாஸ்திரத்தில் கூறப்பட்டபடி சந்தனம், சமித்து, அன்னம், நெய், என்று முதலியவைகளால் ஆராதிக்க வேண்டும்.

17. ஜபம் செய்ததில் பத்தில் ஒருபங்காவது அல்லது நூற்றி எட்டு ஆவ்ருத்தியாவது ஹோமம் செய்து பூர்ணாஹூதியும் செய்து, அதிலிருந்து ரøக்ஷயை எடுத்து

18. கும்பத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட ஈஸ்வரனிடம் சென்று ஹோமகர்மாவை விக்ஞாபித்து துதித்து வணங்கி (ஈஸ்வரனுக்கு பரான் முகார்யம் கொடுக்க வேண்டும்)

19. கும்பத்தில் உள்ள தீர்த்தத்தால் நோயாளியை ஸ்நானம் அல்லது பிரோக்ஷணம் செய்து ஹோம பஸ்மாவினால் தகுந்த மந்திரங்களைச் சொல்லி உடம்பில் பூச வேண்டும்.

20. ஹோமத்தின் முடிவில் நெய் கலந்த தயிர் அன்னத்தால் ருத்திரன் முதலிய தேவதைகளுக்கு பலி கொடுக்க வேண்டும். இது ஓர்முறையாகும். வேறு முறையும் இப்பொழுது கூறப்படுகிறது.

21. நோயாளியின் உருவப் படிவம் போல் மாவினால் ஓர் உருவத்தையமைத்து சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து, பலி பூஜை வரையிலுமாவது பூஜித்து,

22. பலவிதமான காய்கறி, பக்ஷணவகைகளுடன் பாயஸம், பாசிபயிறுடன் சுத்தான்னம், நெய், தயிர், அப்பம் இவைகளுடன்

23. தினந்தோறும் மூன்று ஸ்ந்த்யா காலங்களில் அல்லது ஒருகாலத்திலாவது நாற் சந்தியிலோ யக்ஞத்திற்கு தகுந்த புண்ய விருக்ஷத்தின் அடியிலாவது

24. ஸப்தமாதர்கள் ஆலயத்தின் ஸமீபத்திலோவது, மயானத்திலாவது, எது தேவதத்தனை பிடித்திருக்கிறதோ

25. அதற்கு இந்த பலி ஆகட்டும் என்பது மந்திரத்தோடு மேற்கூறிய பொருட்கள் கொடுக்க வேண்டும். பலி ஓர் தினம் முதல் பத்து நாள் வரையிலும், ஓர்மாதம் முதல் ஓர் ஆண்டு வரையிலுமாகவும்

26. ஓர் ஆண்டு முதல் நூறு வருடம் வரையிலும், மனிதர்களுக்கு பிராணிகளுக்குமாக தூப, தீபத்துடன் கூடியதாக இந்த பலியானது, கூறப்பட்டது.

27. பதாகம் என்ற உபசார கொடியை எடுத்து வந்து மேற்கூறிய பலிகளை செய்வது பொதுவானதாகும். இன்னும் வேறு விதமாகவும், நோயை தீர்க்கும் தன்மை கூறப்படுகிறது.

28. லிங்கத்திலோ அல்லது கும்பத்திலோ இறைவனை ஆவாஹனம் செய்து, ஜபஹோமங்களை முடித்துக் கொண்டு நூறு நிஷ்க்க அளவு தங்கத்திலாவது வெள்ளியிலாவது

29. ஐம்பது நிஷ்கத்திலாவது அல்லது இருபத்தைந்து நிஷ்கத்திலாவது பத்து நிஷ்கத்திலாவது ஐந்து நிஷ்கத்திலாவது

30. 2, 1/2 நிஷ்கத்தில் ஒரு நிஷ்கத்திலாவது அவரவர்கள் சக்திக்கு தக்கவாறு வ்யாதி உள்ளவனுடைய உருவம் செய்ய வேண்டும். பணக்குறைவை செய்யக்கூடாது. (நிஷ்கம் என்பது எண்பது குண்டுமணி எடை)

31. வியாதியால் பீடிக்கப்பட்டவர்களின் உருவத்தை நிர்மாணித்தோ, யமனுடைய உருவத்தையோ, பூமி சக்ரம் போன்றோ வேறு உருவத்தையோ

32. முன்கூறப்பட்ட முறைப்படி துதித்து இறைவனிடம் அர்ப்பணம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் ரோகம் போய் ரோகமில்லாது இருப்பது நிச்சயம்

33. இவ்விதம் செய்ய முடியாவிடில் நான்கு, ஐந்து, ஆறுமாதம் வரை பலிதானம் மட்டும் செய்தாலும் நோய் தீர்ந்து விடும்.

34. மற்றொரு விதத்தாலும் நோய் போவதற்கு முறை கூறப்படுகிறது. அஷ்டமியிலாவது, சதுர்த்தியிலாவது இரண்டு பக்ஷங்களின் பர்வாக்களிலாவது

35. கிரஹண காலத்திலாவது, விஷுவ புண்ய காலத்திலாவது, இரண்டு அயனங்களிலாவது ஜன்ம நக்ஷத்திரத்திலாவது அனு ஜன்ம நக்ஷத்திரத்திலாவது

36. பசுஞ்சாணத்தினால் மனதிற்கு நிம்மதியாக உள்ள இடத்தை அஸ்த்ர மந்திரத்தை சொல்லி பிரோக்ஷணம் செய்து, அங்கு ஸ்தண்டிலம் அமைத்து ஒன்பது கலசங்களையோ

37. இருபத்தி ஐந்து கலசங்கள் அல்லது ஐந்து கலசங்களையோ இரண்டு மரக்கால் அளவு ஜலம் பிடிக்கும் ஒரு கலசத்தையாவது வைத்து பூஜை செய்ய வேண்டும்.

38. எல்லா கலசங்களும் நூல் சுற்றப்பட்டு வஸ்த்ரங்கள் சந்தனம், அக்ஷதை, அலங்கரிக்கப்பட்டு தங்க பிரதிமைகளோடும் மருந்துகளோடும் பலவித விதைகளோடும்

39. கூர்ச்சம், மாவிலைகளோடும் சந்தனம், அக்ஷதை, இவைகளோடும் வாசனை பொருள் நிறைந்த ஜலம், உள்ளதுமான அந்த கலசங்களை அதற்கு தகுந்த மந்திரங்களாலும்

40. சந்தனம், புஷ்பம், தூபம் இவைகளாலும் விசேஷமாக பூஜித்து அந்தந்த மந்திரங்களை நூறுமுறை கூறி அதற்கு முன்போ, நான்கு திசைகளிலுமோ

41. குண்டமோ, ஸ்தண்டிலமோ, அமைத்து சிவாக்னியை ஆவாஹனம் செய்து, அதில் சமித்து, நெய் அன்னங்களோடு ஹோமம் செய்ய வேண்டும்.

42. அதிலிருந்து பஸ்மாவை எடுத்து வடக்கு பக்கத்தில் பசுஞ்சாணம் மெழுகப்பட்ட இடத்தில் பலகையில் இருக்கின்ற நோயுள்ளவர்களுக்கு ஸ்நானம் செய்வித்து

43. அந்தந்த மேற்பட்ட தேசத்திலுள்ள நோயால் பீடிக்கப்பட்டவனை ஸ்னானம் செய்விக்க வேண்டும். யவை முதலான திரவ்யங்களினால் ஆன மாவுகளாலும் பசுஞ்சானத்தாலும்

44. வியாதிக்கு தகுந்த மந்திரத்தினால் தியானத்தோடு சொல்லி எடுத்த ரøக்ஷயை உடம்பில் பூசவேண்டும்.

45. பிறகு நோய் உள்ளவன், ஆசார்யனை பூஜிக்க வேண்டும். பட்டம் சூட்டிய ராஜாக்களும் சிற்றரசர்களுக்கும் இன்னும் மஹான்களுக்கும்

46. நூற்றியெட்டு கலசங்களையாவது அல்லது ஐம்பதுக்கும் குறையாத கசலங்களை வைத்து பூஜை செய்தல் வேண்டும்.

47. எல்லா கலசங்களிலும் ஒரே மந்திரந்தான் பூஜிக்கப்படுகிறது. ஆனால் நடுவில் உள்ள கலசத்தில் விசேஷமாக பூஜிக்கப்பட்டு அந்த தீர்த்தங்களால் மேற் கூறியவர்களை ஸ்னானம் செய்விக்க வேண்டும்.

48. நோயை போக்குவதற்கு வேறு முறையும் கூறப்பட்டுள்ளது. சூர்ய உதயத்திலிருந்து ஜலத்தில் நின்று கீழ்வரும் முறைப்படி மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

49. பத்தாயிரம் அல்லது ஐயாயிரம் அல்லது இருபத்தி ஐந்தாயிரம் அல்லது ஆயிரம், நூற்றியெட்டு ஆவ்ருத்தியானது மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

50. ஹோம எண்ணிக்கைக்கு ஸமமாகவோ ஜப எண்ணிக்கைக்கு ஸமமாகவோ தர்பணம் செய்ய வேண்டும்.

51. சக்தி உள்ளவனாக இருந்தால் ஜலமத்தியில் நின்று நித்யம் ஜபம் செய்ய வேண்டும். இந்த விதமாகவோ காட்டுப் பூவரசுத்தோல் முதலியவைகளில்

52. நோயுள்ளவனுக்கு தக்கவாறு நல்ல நேரத்தில் நல்ல லக்னத்தில் அவரவர்களின் தேவனின் பூஜை முறைப்படியான எழுத்துக்களை குங்குமத்தால் எழுத வேண்டும்.

53. முன்பு கூறப்பட்ட ஜபம், தர்பணம், ஹோமத்துடன் கூடியும், ஜபத்தை மட்டுமோ, கோரோசனையால்

54. ஊசியால், அம்பினால், மந்திரங்களை எடுத்து எழுதி சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து மாத்திரை போன்றோ (தாயுத்து போன்றோ)

55. தங்கத்தினாலோ வெள்ளியிலோ, தாமிரத்திலோ, பஞ்சால் ஆன நூலோ அரக்கினாலோ கட்டி வியாதி தீரும்வரை தரித்துக் கொள்ள வேண்டும்.

56. பலமில்லாதவன் பலமுள்ளவனாகவும், பூமியில் எல்லோர்களாலும் பூஜிக்கப்படுகிறான். காதிலோ கழுத்திலோ, சிகையிலோ அல்லது கையிலாவது ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

57. ஆனால் மந்திர ஸான்னியத்தை முன்னிட்டு இடுப்பின் கீழே கட்டுதல் கூடாது. இப்படி தினமும் பூஜிரக்கப்படும் மந்த்ரம் எல்லா பயனையும் அளிக்க கூடியது.

58. கடமையுணர்வோ கூடினவனாய் தினமும் பூஜை ஜபம் மட்டுமோ அல்லது பூஜை, ஜபம், ஹோமம், தர்பணம் இவைகளை செய்விக்க வேண்டும்.

59. இவ்வாறு எவன் செய்கிறானோ அவன் தீமைகளிலிருந்து விடுபட்டவனாகிறான். துர்பலம் உள்ளவன், பலமுள்ளவனாகவும் எல்லோராலும் மதிக்கப்படுபவனாகவும் ஆகிறான். அரசனாக இருந்தால் பலமுள்ளவனாகவும் எல்லோராலும் விரும்பத்தக்கவனாகவும் தர்மத்தில் அதிகம் ஈடுபட்டவனாகவும் ஆகிறான்.

60. சக்தியில்லாதவர்களுக்கு அவர்களால் அதிகாரம் கொடுக்கப்பட்ட ஆசார்யன் இந்த கர்மாவில் அதிகாரமுள்ளவனாக ஆகிறான், அதிலும் விசேஷமாக ராஜாவை முன்னிட்டு செய்யும் கர்மாக்களில் வேறு யாருக்கும் இடமில்லை.

61. ஆகையால் பிறர்க்கு அனுக்ரஹம் புரிவதையே குறிக்கோளாகக் கொண்ட ஆதி சைவனிடத்தில் எப்பொழுதும் பூர்ணமான நம்பிக்கை வைக்க வேண்டும். அவனே எப்பொழுதும் ஆதிசைவன் என கூறப்படுகிறான்.

62. யானைகளுக்கு உண்டாகும் நோய்களுக்கு சாந்தி சொல்லப்படுகிறது. யானைக் கொட்டாரத்தின் நடுவில் அல்லது அழகான இடத்திலும்

63. சிவாலயம், விஷ்ணு ஆலயம், துர்கை, ஸூர்யன், சாஸ்தா அவர்களின் ஆலயத்திலாவது ஸப்தமாதாக்களின் ஆலயத்திலாவது

64. நதிக்கரை, குளக்கரை, நந்தவனம், இவைகளுள் ஏதேனும் ஒன்றை பசு சாணத்தால் மெழுகி அஸ்த்ர மந்த்ரத்தை கொண்டு ஜலத்தைப் பிரோக்ஷித்து

65. முறைப்படி நெல், அரிசி முதலியவைகளால் ஸ்தண்டிலம் ஏற்படுத்தி மரக்கால் அளவு ஜலம் கொண்டதும் பொறி, தர்பம் இவைகளுடன் சேர்த்தும்

66. கூர்ச்சம், வஸ்த்ரம், வாசனைப் பொருள் நிறைந்த ஜலம் நிறைந்ததும் ஏலம், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் இவைகளை மூன்று பல அளவோடும்

67. அருஹம் புல்லுடன் வெள்ளை அரிசியுடனும் சேர்த்து கும்பத்தில் அகோராஸ்ரத்துடன் கூடியதாக நன்கு பூஜிக்க வேண்டும்.

68. பத்மாஸனத்தில் வீற்றிருப்பவராகவும் ஆறு கைகள் மூன்று கண்கள், உள்ளவராக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவராகவும் பூர்ண சந்திரனுக்கு சமமான காந்தியுள்ளவராகவும்

69. கபாலம், சூலம், வில், அம்பு, கத்தி, கேடயம் இவைகளோடு கூடியவராகவும் மேல் நோக்கிய கேசபாசத்தை உடையவராகவுமாக

70. மேற்கூறிய முறைப்படி அகோராஸ்த்ர உருவ அமைப்பை தியானித்தோ முன்கூறிய உருவ அமைப்புடன் வெண்மை நிறமாகவோ

71. சந்தனம், புஷ்பம், தூப தீபங்களால் உபசரித்து உபதம்சத்துடன் தாம்பூலத்துடனும் நைவேத்யத்தை நிவேதனம் செய்ய வேண்டும்.

72. தினமும் ஆயிரம் அல்லது ஐநூறு அல்லது நூற்றியெட்டு ஆவ்ருத்தியாவது அஸ்திர மந்திரத்தை ஜபம் செய்தல் வேண்டும்.

73. அதன் முன்போ அல்லது அதன் ஈசான்ய திக்கிலோ வட்டவடிவ குண்டமாவது நாற்கோணகுண்டமாவது, அமைத்து அதில் சிவாக்னியை ஆவாஹித்து ஹோமம் செய்தல் வேண்டும்.

74. ஸமித்து, நெய், அன்னம், எள், அரிசி முதலியவைகளால் ஹோமம் செய்ய வேண்டும். பாலுள்ள மரத்திலுண்டான புரசு முதலான மரங்களிலிருந்து பில்வம் முதலியவைகளிலிருந்தும் உண்டான

75. ஸமித்துக்கள் மிக மேலானது அல்லது அருஹம்பில் மேலானது என அறியவும். ஆயிரம் அல்லது ஐநூறு அல்லது நூற்றியெட்டு ஆவ்ருத்தி முன் சொன்ன பொருளால் ஹோமம் செய்ய வேண்டும்.

76. பிறகு பிராயச்சித்தாஹுதி செய்து பூர்ணாஹுதியும் செய்ய வேண்டும். ஹோம பஸ்மாவை எடுத்து கும்பத்தில் சேர்த்து இறைவனுக்கு பராங்முகார்க்யம் கொடுக்க வேண்டும்.

77. அந்த தீர்த்தத்தால் ஸ்நானம் செய்வித்து தினமும் அந்த ஹோம பஸ்மாவை தரித்துக் கொள்ள துஷ்டக்ரஹங்கள் விலகுகின்றன. நோய்கம் அழிகின்றன. அதுமட்டுமில்லாமல் சரீரபலமும் ஏற்படுகிறது, மேலும்

78. வேறு நோய்களும் ஏற்படுவதில்லை, ஆயுள் வளர்ச்சியும் உண்டாகிறது. எங்கு இது போன்று கார்யங்கள் செய்யப்படுகிறதோ அங்கு யஜமானன் வெற்றி உள்ளவனாக ஆகிறான்.

79. கோமயத்தால் மெழுகப்பட்ட மண்டபத்தில் ருத்ரன் முதல் ÷க்ஷத்ரபாலர் வரையும் உள்ள தேவதைகளுக்கு பலி கொடுத்து திக்பாலர் பலியும் கொடுக்க வேண்டும்.

80. அல்லது யானைகொட்டாரத்தின் ஸமீபத்தில் அல்லது ஹோமம் செய்த இடத்தில் பலியை கொடுக்கவும். குதிரை முதலியவைகளுக்கும் இந்த விதியே பொருந்தும்.

81. ஆசார்யரால் தூம்ரவர்ணம் (புகை கலர்) உள்ள ஈஸ்வரன் தியானிக்கத்தக்கவர், யானை கூட்டம், குதிரை, பசு, எருமை, ஆடு இவைகள்

82. அஸ்த்ர ராஜாவின் கருணையால் நன்கு காப்பாற்றப்பட்டும், அவைகள் நோய் நீங்கியதோடு அல்லாமல் நன்கு புஷ்டியாகவும் ஆகிவிடும்.

83. முற்பகலில் அல்லது நடுபகலில் அல்லது இரவில் இதை செய்ய வேண்டும். ஒருகாலம் அல்லது இரண்டு காலம் மூன்று காலம் செய்வது விசேஷமானது.

84. அரசன் இதை தினமும் செய்வானேயானால் புண்யம் செய்தவனாய் எங்கும் வெற்றி பெற்றவன் ஆவான். யஜமானன், ஸாதகன், திருப்தியடையும்படி பூஜிக்க வேண்டும்.

85. குதிரைகளுக்கும், யானைகளுக்கும் வேறு விதமாகவும் காக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது. முதலில் ஜலத்தினால் தர்பணம் செய்த பிறகு

86. சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்ட ஸ்தண்டிலத்தில் பதினாறு மரக்கால் அல்லது எட்டு மரக்கால் அல்லது நான்கு மரக்கால் அல்லது இரண்டு மரக்கால்

87. அல்லது ஒருமரக்கால் ஏழையாக இருந்தால் அதிலும் பாதி நெல் பரப்பி, பரப்பிய நெல்லில் பாதியுள்ள அரிசியையும் பரப்பி

88. எள், பொறியையும், பரப்பி அதன் மேல் இரண்டு மரக்கால் கொள்ளளவு உள்ள கும்பத்தை வைத்து

89. தேங்காய், வஸ்த்ரம், கூர்ச்சம், மாவிலைகளோடு கூடியதும் வாசனைப் பொருள்களோடு ஜலம் நிறைந்துள்ளதும், முன்பு கூறப்பட்ட திரவ்யங்களோடு கூடியதுமாக அமைத்து

90. அதில் முன்கூறப்பட்ட தியானத்தோடு அகோரத்தை ஆவாஹித்து சந்தனம், புஷ்பம், தூபதீபங்களோடும்

91. பாயசத்தை தாம்பூலத்துடன் நைவேத்யம் செய்து, பிறகு ஹோமத்தை நிறைவு பெறச் செய்ய வேண்டும்.

92. ஸமித், நெய், அன்னம், எள்ளு, கடுகு, பொறி, பால் உள்ள மரத்தின் ஸமித்துக்கள் அல்லது அருகு இவைகளாலும்

93. ஆயிரம் அல்லது ஐநூறு அல்லது நூற்றிஎட்டு அல்லது ஐம்பது அல்லது இருபத்தி ஐந்து ஆவ்ருத்தியாவது

94. ஒவ்வொரு திரவ்யத்தை அகோர மந்திரத்தால் அதே எண்ணிக்கையுள்ள அகோராஸ்த்ர மந்திரத்தையும் உச்சரித்துக் கொண்டு

95. இரண்டு குண்டத்திலாவது ஒரு குண்டத்திலாவது ஹோமம் செய்யவும். பிரதான மந்திரத்தால் பூர்னாஹுதியையும் தர்பணத்தையும் செய்து

96. அல்லது தனியாக பூர்ணாஹூதி செய்து, மத்தியில் நெய்யோடு கூடிய அன்னம் பலி கொடுத்து எட்டு திக்குகளிலும் பலி கொடுக்க வேண்டும்.

97. ஸ்வாஹா என்ற சொல்லை முடிவுடையதாக அகோராஸ்த்ர மந்திரத்தால் குண்டத்திற்கு ஈசான திக்கில் பலி கொடுத்தல் கூறப்பட்டுள்ளது.

98. பெரிய ஜ்வாலையுள்ள தீயையே சிகையாகக் கொண்ட ஹே அகோராஸ்த்ர தேவரே எவனால் பூஜிக்கப்பட்டு தர்பணத்தாலும், பலியாலும் ஸந்தோஷம் அடைந்தீர்களோ அப்பேற்பட்ட நீங்கள்

99. அந்த யஜமானனையும் அவன் யானைகளையும் காப்பாற்றுங்கள் என்றும் வேண்டிக் கொள்ளவும், ஸ்வாஹா என்று விசேஷமாகக் கூறி பலி, தர்பணம் கொடுக்க வேண்டும்.

100. இந்த கர்மாவை முதற்பகலிலோ, நடுபகலிலோ இரவிலோ செய்தல் வேண்டும். மஹாபலி கொடுக்க வேண்டுமானால் நடு இரவில் கொடுத்தல் வேண்டும் எப்படி எனில்

101. தேன், நெய், தயிர், பொறி, வாழைப்பழம், வடை இவைகளோடு கூடிய அன்னத்தை

102. பலவிதமான, வாத்ய கோஷங்களோடும் நாய்கள் பின்தொடர தீபமில்லாமல் கிராமத்தின் ஆரம்பத்தில் பலி கொடுத்தல் வேண்டும்.

103. ஹே பிராம்மண உத்தமர்களே அதிலும் குறிப்பாக அரண்மனையில் தீங்கு வராமல் காப்பாற்றப்பட வேண்டிய இடத்தில் அகோராஸ்த்ர தேவரின் கொடியோடு மவுன வ்ருதத்தை கடைபிடித்து

104. ÷க்ஷத்திர பாலர்களுக்கும் ருத்திரர், முதலியவர்களுக்கும் பலி கொடுத்தல் வேண்டும். பிறகு கும்பத்தில் உள்ள புண்ணிய தீர்த்தத்தால் நோயுள்ளவர்களை பிரோக்ஷிக்க வேண்டும்.

105. அகோர மந்திரத்தையும், அகோரஸ்த்ர மந்திரத்தையும் ஜபித்துக் கொண்டு, நோயுள்ளவனுக்கு பிரோக்ஷணம் செய்தும், பிறகு அந்த மந்திரங்களால் அபிமந்திரம் செய்யப்பட்ட விபூதியை அந்த இரண்டு மந்திரங்களையும் தியானித்து கொடுக்க வேண்டும்.

106. பிறகு ஹோம ரøக்ஷயும் கொடுத்தல் வேண்டும். அவர்கள் நோயிலிருந்து விடுபட்டவர்கள் ஆவார்கள். பிறகு கர்த்தா போஜனம் தட்சிணை முதலியவைகளால் ஆசார்யரை சந்தோஷிக்க செய்ய வேண்டும்.

107. ஆசார்யன் ஸந்தோஷம் அடைந்தால், அசையும் பொருள், அசையா பொருள் எல்லாம் மகிழ்ச்சி அடையும், கோயில்களிலும் அகோர தேவதை சிலாவிக்ரஹமாக அமைத்து

108. ஹோமம் பலி முதலியவைகளை செய்தல் வேண்டும். கும்பத்திலும் ஆவாஹித்து பூஜை ஹோமம் முதலியவைகளைச் செய்யலாம்.

109. இப்படி தர்பணம், ஹோமம், முதலியவைகளோடு பூஜை செய்தால் இப்பிறவியில் நோய்களும், எல்லாப் பீடைகளும் அழிந்து விடுகின்றன.

110. பூஜை ஹோமம், பலிமட்டுமாவது தினந்தோறும் செய்ய வேண்டும். எல்லா மனிதர்களுக்கும் இந்த ஹோமம் பலி கூறப்படுகிறது.

111. பூஜையின் முடிவில் ஜபத்தையும் ஹோமத்தையும் செய்ய வேண்டும். அல்லது எல்லா தீங்குகளும் நீங்குவதற்கு ஜபம் மாத்திரமாவது செய்ய வேண்டும்.

112. யானைகளின் நோய் தீருவதற்கு மற்றொரு விதமும் இங்கு கூறப்படுகிறது. தூய்மையான இடத்தையடைந்து பசுஞ்சாணத்தால் மெழுகிவிட வேண்டும்.

113. கோவை பழம் போல் செந்நிறம் உள்ளதும் இரண்டு மரக்கால் கொள்ளளவு உள்ளதுமான கும்பத்தை நூல் சுற்றி இரண்டு மரக்கால் நெல்

114. ஒரு மரக்கால் அரசி அரை மரக்கால் எள்ளு கால் மரக்கால் பொறியுள்ள ஸ்தண்டிலத்தில் ஸ்தாபிக்க வேண்டும்.

115. கும்பத்தின் மேல், ஐந்து தர்பங்களால் கூர்ச்சம் நிர்மாணம் செய்யப்பட்டும் கும்பத்தில் சந்தனம்

116. முப்பழங்களோடும், கீழாநெல்லி, விளாமிச்சவேர், ஏலம், லவங்கம் முதலிய வாசனைப் பொருளின் தூள்களையும், கும்பத்தில் ஸமர்பித்து

117. வஸ்திரம் உடுத்தி ஆதார சக்தி அனந்தாஸனம் தர்ம, ஞான, வைராக்ய ஐச்வர்யம் முதலிய ஆஸனங்களையும் கல்பித்து

118. அதர்மாதி நான்கையும் கல்பித்து அதச்சதனம் (கீழ்இதழ்) ஊர்ச்வச்சதனம் (மேல் இதழ்) இவைகளோடு கூடியும் தண்டு தளம், கர்ணிகை முதலியவைகளோடு

119. கூடிய பத்மாஸனத்தை பூஜித்து முன் சொன்ன தியானத்துடன் கும்பத்தை இறைவனுடைய மூர்த்தமாக நினைக்க வேண்டும்.

120. கும்பத்தின் நடுவில் பிரணவஸ்வரூபமான வரும், தெற்கு நோக்கியவருமான அகோர மூர்த்தியை ஆசாரியர் அகோர மந்திரத்தை உச்சரித்து பாத்யம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும்.

121. சந்தனம், விளாமிச்சவேர், இவைகளோடு கூடிய தீர்த்தத்தை பாத்யமாகக் கொடுக்க வேண்டும். ஏலம், இலவங்கம் மூன்று வகை பழங்களுடன்

122. தீர்த்தத்தை ஆசமனமாக கொடுத்து பிறகு நீர், பால், தர்பை நுனி, அக்ஷதை புஷ்பம் எள்ளு இவைகளும்

123. யவை, வெண்கடுகு, இவைகளுடன் எட்டு பொருள்களுடன் கூடிய அர்க்யத்தை இங்கு கூறப்பட்டுள்ளது. சந்தனம் கோரக் கிழங்கு கீழாநெல்லி ஆகிய மூன்று சந்தனங்களை சாத்தி,

124. பலவித புஷ்பங்களால் பூஜித்து, தூபதீபம், முதலிய உபசாரம் செய்து அந்த பத்மத்தின் தளத்தில் அகோராஸ்திர மந்திரத்தை உச்சாடனத்துடன்

125. அகோராஸ்திரத்தை பூஜித்து முன் போலவே பாத்யம், ஆசமனம் அர்க்யம் கொடுத்து ஆவரணத்தோடோ, ஆவரணமில்லாமலோ பூஜித்து

126. கிழக்கு திசை முதல் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், க்ரோத பைரவர், உன்மத்த பைரவர்

127. கபால பைரவர், பீஷணபைரவர், ஸம்ஹார பைரவர், என்ற எட்டு பைரவர்களையும் பூஜித்து பத்மத்திற்கு வெளியில் திக்பாலர்களையும் அதற்கு வெளியில் அவரவர்களின் ஆயுதங்களையும்

128. அஸ்த்ராவணம் மட்டுமோ, லோகபாலகர், பைரவர் வரையிலுமோ சந்தனம் முதலியவைகளாலும் தூபம் நெய் தீபம் முதலியவைகளால் உபசாரம் செய்து

129. காய்கறி வகைகளுடன் ஆஜ்யத்தோடு கூடியதுமான நிவேதனத்தை ஈச்வரனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். அகோர தேவர்க்கும் அகோராஸ்த்ரத்திற்கும் பருக நீர் முதலியவற்றை நிவேதிக்க வேண்டும்.

130. பிறகு தாம்பூலம் கொடுத்து நூற்றெட்டு ஆவ்ருத்தி அகோர மந்த்ரத்தையும் அகோராஸ்த்ர மந்த்ரத்தையும் ஜபித்து அதை அந்தந்த தேவதைகளுக்கு ஆசார்யன் ஸமர்பிக்க வேண்டும்.

131. கும்பத்தின் முன் ஐந்து ஸம்ஸ்காரங்கள் சுத்தம் செய்யப்பட்ட மணலாலான ஸ்தண்டிலத்தில் குண்டஸம்ஸ்காரமும் செய்து

132. முன் கூறிய விதம் அக்னியில் இறைவனை ஆவாஹனம் செய்து பாலுள்ள மரத்தின் ஸமித்துகளாலும் ஆஜ்யத்தாலும் அன்னத்தாலும்

133. பொறி, அக்ஷதையோடு கூடிய எள்ளாலும், நூற்றெட்டு ஆவ்ருத்தி ஹோமம் செய்து கடைசியாக அஸ்த்ரரூபமான இறைவனுக்கு தாம்பூலமும் நிவேதனம் செய்து

134. கடைசியில் பூர்ணாஹுதியும் செய்ய வேண்டும். அகோர மந்திரத்தால் ஹோமபஸ்மத்தை எடுத்து அஸ்த்ரமந்திரத்தால் அதை ரட்சிக்கவும் வேண்டும்.

135. போகாங்க பூஜையும், லயாங்க பூஜையும் செய்து அக்னியை விஸர்ஜனம் செய்ய வேண்டும். பிறகு ஹோம கர்மாவை அகோர ரூபியான கும்பத்தில்

136. அர்ப்பணம் செய்து விரும்பியதைப் பிரார்த்தித்துக் கேட்டு உத்தரவு பெற்று பராங் முகார்க்யம் கொடுத்து போகாங்க பூஜைகளை ஒடுக்கிக் கொண்டு

137. லயாங்க பூஜை செய்து உபஸம்ஹரணம் செய்ய வேண்டும். அஸ்த்ர மந்திரத்தையும் அகோர மந்திரத்தையும் மற்ற மந்திரங்களையும் ஹ்ருதய கமலத்தில் சேர்த்து

138. கும்ப தீர்த்தத்தால் நோயுள்ளவனை ஸ்னானம் செய்விக்க வேண்டும். தினந்தோறும் இவ்வாறு அந்த தீர்த்தத்தால் பிரோக்ஷணமும் செய்து கொள்ளலாம்.

139. எல்லாவற்றிற்குமோ யானைகளின் இடம் முதலிய இடங்களிலும் புரோக்ஷித்து அகோர தேவரை விட்டு அகோராஸ்த்ரத்தையாவது பூஜிக்க வேண்டும்.

140. இவ்வாறு ஒரு நாள் அல்லது மூன்று நாட்கள் ஐந்து அல்லது ஏழு நாட்கள் அல்லது பக்ஷம் ஒரு மாதம் அல்லது இரண்டு மூன்று மாதம் தினந்தோறும் இவ்வாறு.

141. தினந்தோறும் செய்தால் அரசன் முதலானவர்களுடைய நோயும் யானை முதலியவைகளுடைய நோயும் தீர்ந்துவிடும்.

142. அரசனும் யானைகளும், நோயின்றி பலம் பொருந்திய சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.

143. இதுவே குதிரை எருமை, ஆடு முதலிய பிராணிகளுக்கு உண்டாகும் நோயைப் போக்கவும் முடியும்

144. யாகத்தில் உபயோகித்து மிச்சமுள்ள பொருள் ஆசார்யனுக்கு கொடுப்பதோடு உணவும், நெய் முதலியவற்றையும் தினம் கொடுக்க வேண்டும்.

145. கடைசியில் சக்திக்கு தக்கவாறு தட்சிணையும் கொடுக்க வேண்டும். இவ்வாறு பகலிலும் இரவிலும் இக்கர்மாவை செய்ய வேண்டும்.

146. ஹோமத்தின் முடிவில் இரவில் தினந்தோறும் யானைக் கொட்டாரத்திலோ குதிரை லாயத்திலோ அல்லது

147. அதன் சமீபத்திலோ ஆஜ்யத்தோடு கூடிய அன்னம் பலியாகக் கொடுக்க வேண்டும். சுத்தமான கோமயத்தால் மெழுகப்பட்ட அஸ்த்ரமந்திரத்தால்

148. அகோர தேவரையும் அகோராஸ்த்ர தேவரையும் பரிவாரத்துடன் சந்தனம் புஷ்பங்களால் பூஜித்து வஜ்ரம் முதல் சக்ரம் வரையிலான ஆயுத ஆவரணத்துடன் கூடிய

149. ஸ்வாஹாந்தமாக பலிதானம் செய்ய வேண்டும். மேற்கிலோ, வடமேற்கிலோ ÷க்ஷத்திரபாலகருக்கு பலிதானம் செய்ய வேண்டும்.

150. அகோரமந்திரமின்றி அகோராஸ்த்ரத்தை மட்டுமாவது நடுவில் வைத்து அஸ்த்ராவண தேவதைகளுக்கும் ருத்திரன் முதலியவர்களுக்கு பலிதானம் செய்ய வேண்டும்.

151. எந்த ராஜ்யத்தில் இவ்விதம் பலிதானம் செய்யப்படுகிறதோ அங்கு ருத்திர பாதங்களால் உண்டான பயமும் நோயின் உபத்ரவமும் நிச்சயம் ஏற்படாது.

152. ஏதேனும் நோய், செய்கிறவனுக்கும் செய்விப்போனுக்கும் உண்டாகுமேயானால் அது உடனே நசித்து விடும். ஐயமில்ல.

153. எந்த அரசனின் ராஜ்யத்தில் அகோரதேவருக்கு அகோரசாஸ்த்ரத்திற்கும் பூஜையும் ஹோமமும் பலிதானமும் நடைபெறுகிறதோ

154. அங்கு ஆயுள் விருத்தியும் நோயற்ற தன்மையும் உண்டாகும். இதற்கு சமமாக நல்லது செய்யக் கூடியது வேறொன்றும் இல்லை ஆகையால் இதை முயற்சியுடன் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் வியாதிநாச விதியாகிற எழுபத்தி ஐந்தாவது படலமாகும்.
படலம் 74: வைசிஷ்ய விதாந விதி

74வது படலத்தில் வைசிஷ்ய விதாநவிதி கூறப்படுகிறது. ஆசார்யன், ஸாதகன், புத்ரகன், ஸமயி, மஹேச்வரன், என்ற ஐவரும் ஸம்ஸ்காரத்தினால் ஒருவருக்கொருவர் குணமிகுதியினால் விசேஷமாக கூறப்பட்டது. ஆசார்யலக்ஷண படலத்தில் (உ.கா 24-53 பூர்வம் - 54) ஜாதி உயர்வு இல்லாதவர்கள் சாதாரணமாக சமயீ மஹேஸ்வர: என்று மாஹேஸ்வரலக்ஷணம் இவ்வாறு கூறப்பட்டது. பிறகு பிராம்மணாதி சதுர்வர்ணத்தவர்கள் அனுலோமர்கள் ஆறுவகைப்படும். இவர்களில் ஒருவர்க்கு ஒருவர் ஜாதியினால் உயர்வு கூறப்பட்டது. பிறகு வயதினால், படிப்பினால், பக்தியினால், வைராக்யத்தினால், யோகத்தினால், கிரியையினால், நடத்தையினால் ஒன்றுக்கொன்று விசேஷம் உண்டு என்று கூறப்பட்டது. பிறகு ராஜகுரு, ராஜா, ராஜபத்தினி, ராஜ புரோஹிதர், ராஜபுத்திரர், மந்திரி இவர்களும் கூட வரிசையாக ஒருவருக்கொருவர் விசேஷமானவர். பிறகு சிவாலயத்தில் ஆசார்யன் நிஷ்களார்ச்சகர், சகளார்ச்சகர், ஜோஸ்யர் இவர்கள் ஒருவர்க்கு ஒருவர் உயர்ந்தவர். பிறகு மடாதிபதி ராஜா, ராஜாவினால் ஏற்படுத்தப்பட்டவர், நைஷ்டிகர், சிவ பக்தர்கள், பவுதிகர்கள், பரிசாரகர்கள், பூஜகர்கள், பக்தர்கள், பஞ்சாசாரியர்கள், ருத்திர கன்னிகைகள், தேவருக்குப் பணிவிடை செய்பவர்கள் இவர்கள் வரிசையாக அவர்களுடைய கார்யங்களில் விசேஷம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் கூறப்படாத மற்றவர்களும் கூட அவரவர்களுடைய கார்யத்தின் வடிவிலே பிராம்மணர்கள் கிரமாக விசேஷம் அறிந்து ஆதரவுடன் பூஜிக்க வேண்டும் என கூறுகிறது. இவர்கள் அனைவரும் ஈஸ்வரனுடைய கல்யாணம், பவித்ரோத்ஸவம் முதலியவைகளில் தேசிகருடைய கட்டளையினால் விசேஷம் உண்டு என்பது தெரிகிறது. ஆகையினால் தேசிகனே சிவன் என்று அறிய வேண்டும். தேசிகனுடைய கட்டளை சிவனுடைய ஆக்ஞை என்று சிவாகமங்களில் கூறப்படுகிறது. ஆகையினால் தேசிகர் சிவனைபோல பூஜிக்க தகுந்தவர் என்று கூறப்படுகிறது. பிறகு சன்மார்க்கம் முதலியவைகளில் கிரமமாக விசேஷம் இங்கு சம்மதம் என்று கூறி சன்மார்க்கம், புத்திரமார்க்கம், ஸஹமார்க்கம், தாசமார்க்கம் என்று கூறி இந்த நான்கின் தனிப்பட்ட லக்ஷணம் கூறி கிரமமாக ஒருவருக்கொருவர் விசேஷம் என்று கூறப்படுகிறது. இந்த அனேக பிரகாரத்தினால் குணத்தோடு கூடின சைவர்களோடு கூட விசாரித்து விசேஷம் நிர்ணயிக்கவும் என்று கூறப்படுகிறது.

1. பிறகு எல்லா கார்யங்களிலும் யாவருக்கும் விசேஷம் விதிக்கப்படுகின்றது. ஆசார்யன், சாதகன், புத்ரகன், சமயி என்றும்

2. மஹேச்வரன் என இந்த ஐவரும் ஒருவருக்கொருவர் குணம் அதிகமுடையவர். ஸம்ஸ்காரத்தினால் விசேஷமாக யாகம் முதலியவைகளில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.

3. பிராம்மணர் முதலிய நான்கு பிரிவினர்கள் அனுலோமத்தினர் ஆறுபேர்கள் முன்பு போலவே குணம் அதிகமுள்ள பிரிவினர்கள் விசேஷமாக கூறப்படுகின்றது.

4. வயதினால், படிப்பினால், பக்தியினால், வைராக்யத்தினால், யோகத்தினால், கார்யத்தினால் பிறகு நடத்தையினாலும் விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

5. முதலில் ராஜகுரு, ராஜா, ராஜமஹிஷி அவர்களது புரோஹிதர் அவர்கள் புத்ரர்கள், மந்திரிகள் இவர்களை கிரமமாக விசேஷமாக கூறப்படுகிறது.

6. ஸகலமாகவோ, நிஷ்கலமாகவோ லிங்கமுள்ள சிவன் கோயிலில், ஆசார்யன், அர்ச்சகன், ஜோஸ்யரும், வரிசையாக விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

7. பிறகு மடாதிபதி, ராஜா அவரால் நியமிக்கப்பட்டவர், எனது பக்தர்கள் நைஷ்டிகர்கள், பவுதிகர்கள் கூலி இல்லாதவர்கள்.

8. பரிசாரகர், அர்ச்சகர்கள், பக்தர்கள், கூலி உடையவர்கள், தானாக பாடகூடியவர்கள் வீணை, மந்திரம், பாட்டு இவைகளில் முழுமையாக ஈடுபட்டவர்கள்.

9. பஞ்சாசார்யர்கள் எனது பெண்களான தேவதாசிகள், பாடுகின்றவர்கள், வாத்யம் வாசிக்கிறவர்கள் இவர்கள் முறையாக அவரவர் வேலைகளில் விசேஷமாக கூறப்பட்டுள்ளனர்.

10. ஆகையால் மற்றவர்கள் அவரவர் வேலையை அனுசரித்து பிராம்மணர் முதலியவைகளை கிரமமாக அறிந்து ஆதரவுடன் விசேஷமாக கூறப்படுகின்றது.

11. ஈச்வரனுடைய கல்யாணம், பவித்ரோத்ஸவம் முதலியவைகளை உசிதப்படி பூஜித்து ஈஸ்வரனுடைய கட்டளையால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

12. உத்தமமான குருவானவர் எதனால் தான் தேசிகன் என கூறினாரோ, ஈச்வர ஆக்ஞையே என்னுடைய ஆக்ஞையாக சிவாகமத்தில் கூறப்பட்டுள்ளது.

13. அதனால் என்னைப்போல் முதலில் எல்லோருக்கும் பூஜிக்கத் தகுந்தவர் நன்னடத்தை முதலியவைகளினாலும் வரிசையாக விசேஷமாக உள்ளவர் இங்கு ஸம்மதமாவர்.

14. ஸன் மார்க்கி, புத்ர மார்க்கீ, ஸஹ மார்க்கீ, தாச மார்க்கீ இவர்களை முறைப்படி விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

15. நன் நடத்தை உள்ளவன் ஸம்ஸ்காரமின்றி பக்தி உள்ளவன் யோக்யமானவன் ஒருமைப்பாட்டு உணர்வை உடையவன். அஹங்காரமின்றி சிவயோகத்தில் ஈடுபட்டுள்ளவன்.

16. எல்லா சிவாகமங்களையும் கற்றுணர்ந்த புத்ரமார்க்கீயானவன் புத்ரனுடைய அமைப்பால் செய்யப்பட்ட மனிதன் சைவாசார்யன் என்றும் சாந்தானிகர் என்றும் கூறப்படுகிறார்கள்.

17. அக்னி கார்யம் ஜபம் ஹோமம் மிகவும் ஈடுபட்டுள்ளவர் பிரவேசகர் சிவக்ஞானி அவுப தேசிகர் எனப்படுகிறார்கள்.

18. நந்தவனம் சிவலிங்கம் பிம்பம் ஆலயம் இவைகளை அமைப்பது சைவ சம்பந்த நடனங்கள் பாட்டுக்கள், ஸ்தோத்ரங்கள் வாத்யங்கள் இவைகளை செய்பவர் தாசமார்க்கீயாகும்.

19. இவ்விதமாக பலமுறைப்படி சைவர்கள் விசாரணை செய்து விசேஷமான பூஜை கார்யங்களை செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்த்ரத்தில் வைசிஷ்ய விதான விதியாகிற எழுபத்தி நான்காவது படலமாகும்.