புதன், 9 அக்டோபர், 2013

படலம் 29: சைவ சிரார்த்த விதி!

29வது படலத்தில் சைவ சிரார்த்த விதி கூறப்படுகிறது. முதலில் தீட்சிதர்களின் சிரார்த்த விதி. குறிப்பாக கூறப்படுகிறது என்பது கட்டளை. பிறகு சாமான்யமாக சிரார்த்தம் நித்யம் நைமித்திகம், காம்யம் விருத்தி சிரார்த்தம் பார்வணசிரார்த்ததினம் என ஐந்து விதமாக கூறி அதன் செய்முறை விளக்கப்படுகிறது பிறகு. பித்ருக்களுக்காக சிரத்தையோடு கொடுக்கக் கூடிய போஜனம் முதலியவை. சிரார்த்தம் எனப்படும் என சிராத்தத்தின் பொருள் கூறப்படுகிறது. பிறகு ஏகோத்திஷ்டம், வருஷ சிராத்தம், நவசிரார்த்தம், ÷ஷாடச சிராத்தம் இவைகளின் காலலக்ஷணம் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இறந்தவரை குறித்து முன்பு சொல்லிய ஏகோத்திஷ்டம் முதலிய சிராத்தங்கள் செய்யாத, ஸமயத்தில் இறந்தவர்க்கு பைசாச தன்மை கிடைக்கும் என கூறப்படுகிறது. இறந்தவன் இறந்ததினம் முதல் 10 தினங்களில் பிரேதரூபமாகவோ இருந்து வீட்டுவாசலில் விபூதி கிண்ணத்திலும் ஆகாசத்திலும் இருக்கிறான். பிறகு, சபிண்டீ கரணத்திற்கு பிறகு சிவலோகத்தை அடைகிறான் என கூறப்படுகிறது. பின்பு ஸோ தகும்பச்ராத்தம் சபிண்டீகரணம் இந்த கர்மாவின் செய்யவேண்டிய காலம், செய்யவேண்டிய கிரமம், நிரூபிக்கப்படுகிறது. பின்பு ஏகோத்திஷ்டம் சிராத்த முடிவில் வைச்யர்களால் பக்ஷசிராத்தம் செய்ய வேண்டும் சூத்திரர்களால் பக்ஷ சிராத்தம் மாசிக சிராத்தமும் ஏகோத்திஷ்ட சிராத்தம் செய்ய வேண்டும். மற்ற எல்லா சிராத்தமும் பிராமணர்களுடன் கூட மூன்று. வர்ணத்தவர்களுக்கும் ஸமானமான விதி என கூறப்படுகிறது. பிறகு சிராத்த கர்மாவிற்கு உரியகாலம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஆயுதம் அக்னி நக்ஷத்திரம் விழுதல், இடிவிழுதல், ஜலத்தில்பிரவேசம் செய்தல் இவைகளால் இறந்தவர்கள் விஷயத்தில் சதுர்தசி திதியில் அவர்கள் திருப்திக்காக சிராத்தம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. கிரஹண காலத்தில் இரவிலும் சிராத்தம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு சிராத்த அதிகாரியை அனுசரித்து ஸ்ராத்தத்தில் தள்ளத்தக்கதான காலங்கள் கூறப்படுகின்றன. இங்கு மலமாசமானது, பிதுர்களுக்கும் தேவர்களுக்கும் சொல்லப்படுகிறது.

எல்லா கர்மாக்களிலும் தள்ளுபடி செய்ததும் ஆகும், சூர்யன், கன்னியாராசியை அடைந்த பொழுது (பிதுர்க்கள்) ஸ்ராத்த அன்னத்தை சாப்பிடுவதற்காக புத்திரர்களை அடைகிறார்கள் சூர்யன் விருச்சிக ராசியை அடைந்த பொழுது பிதுர்க்கள் ஆசை அற்றவர்களாக நல்ல சாபத்தை கொடுத்து தன்னுடைய இருப்பிடத்தை அடைகிறார்கள் என கூறப்படுகிறது பிதுர்களை உத்தேசித்து யார் சிரார்த்தம் செய்யாமல் இருக்கிறானோ, அவன் சேரில் மாற்றிக்கொண்ட பசுபோல் அழுகிறான் எனப்படுகிறது. பிறகு தெய்வீகமானசிராத்தத்தை முற்பகலிலும் பிதுர்சம்பந்த சிரார்த்தத்தை, பின்பகலிலும் செய்யவேண்டும். ஏகோத்திஷ்ட சிராத்தம் மத்தியாஹ்நிதத்திலும் விருத்தி ஏற்படும் சிராத்தம் என்பதால் காலையிலேயே செய்யவேண்டும். என கூறப்படுகிறது. பிறகு ஆமஸ்ராத்த காலம் அதை செய்பவன் லக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு ஸ்ராத்த விஷயத்தில் பிராம்ணர்களை வரிப்பதில் யோக்ய மானவர்களின் நிரூபணம் விஷயத்தில், கல்பம், அனுகல்பம் என்று இருவிதமாக கூறப்படுகிறது. இங்கு தெய்வீக ஸ்ரார்த்த கர்மாவில் பிராம்ணர்களை பரீசிக்க வேண்டாம் என கூறப்படுகிறது பிறகு சிராத்தத்தை செய்பவனுக்கும் ஸ்ராத்தத்தில் வரித்து பூஜிப்பவனுக்கும் உள்ள நியமங்கள் தள்ள தக்கவைகள் விளக்கப்படுகின்றன. இங்கு ஸ்ராத்தத்தில் சுத்தமாக இருப்பது கோபமில்லாமல் இருப்பது அவசரப்படாமல் இருப்பது ஆகிய மூன்றும் முக்கியமான விஷயமாகும். நடுப்பகல், நல்லதர்பம், எள்ளு இவைகள் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும் என ஸ்ராத்தத்தில் விசேஷமாக நிரூபிக்கப்படுகிறது. வரகு உப்பு, நாவல்பழம் பூசனிக்காய், சொரைக்காய், பச்சை நிற புடலங்காய், எருமைபால், இவைகள் தள்ளுபடி செய்ய தக்க பொருள்களாகும்.

சிராத்தத்தில் சேர்த்துக் கொள் தக்கவையும் தகாதவையான விஷயங்களும் கூறப்படுகின்றன. விரத நியம முறை பெண்வயிற்று பேரனை ஸ்ராத்தத்தில் முயற்சியுடன் சாப்பிடச் சொல்லவும் என கூறப்படுகிறது. பிராம்ணர் களை வரிக்கும் விஷயத்தில் சிரேஷ்டங்கள் நிரூபிக்கப்படுகின்ற பிதுர்களுக்காக மூன்று நபரை நியமித்தால் தேவ விஷயத்தில் இரண்டு நபரை நியமிக்க வேண்டும் என கூறப்படுகிறது. தீட்சிதர்களின் விஷயத்தில் பிதுர்களுக்காக ஈசன் ஸதாசிவன், அனந்தன், என்று மூன்று பெயருடன் பூஜிக்க தக்கவர்கள் ஆகும். விஸ்வே தேவர்களுக்கு ருத்திரனும் அனந்தனும் பூஜிக்கத் தக்கவர் ஆவர். ருத்திரர்களின் விஷயத்தில் பிதுர்களுக்காக ஸ்கந்த, சண்ட, கணேசர்கள், மூவரும் பூஜிக்க, தக்கவர் ஆவர். விஸ்வதேவஸ்தானத்தின் பொருட்டு நந்தி, மஹா காலரை, பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. 5 நபர் கிடைக்காத பட்சத்தில் இரு நபரை அமர்த்தலாம் என கூறப்படுகிறது. பிறகு சாப்பிடுவதற்காக பிராமணர்களை வரிக்கும் முறை கூறப்படுகிறது. இங்கு சிராத்த தினத்திற்கு முன் தினத்திலேயே வரிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு கால் அலம்புவதற்காக மண்டலம் செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு பிதுர்க்களுக்கும் தேவர்களுக்கும் அர்க்யம் கல்பிக்கும் முறையும் கூறப்படுகிறது. பிறகு திரவ்ய சுத்திமுறை சொல்லப்படுகிறது. சாமான்யமாக சிராத்தவிதி விளக்கப்படுகிறது. முதலில் கால் அலம்பும் முறை பின்பு ஆசமனம் செய்த பிறகு சுத்தமான ஆசனத்தில் அமரச் செய்தல் என்ற முறை அவர்களிடம் சிராத்தம் செய்கிறேன் என்ற பிரார்த்தனை. சிராத்தம் செய்யுங்கள் என்று அவர்களிடம் இருந்து உத்தரவு பெற்று. அவர்களுக்கு தர்பாசனம் கொடுத்து ஆவாஹனம் செய்து சிராத்தரøக்ஷக்காக யவையை தூவி அர்க்யம் கொடுப்பது. போன்ற முறை விளக்கப்படுகின்றன. பிறகு சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், ஆகிய உபசார விதியும் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பவித்ரம் வஸ்திரம் மோதிரம் இவைகளை ஆதரவுடன் கொடுக்கவும் பிறகு ஆவாஹனம் முதலியவைகள் கூறப்பட்டு விஸ்வேதேவர்கள் விஷயத்தில் செய்யவேண்டிய எல்லா கிரியையகளும் வலமாகவே, செய்யவும் என அறிவித்து பிதுர்க்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கிரியைகளும் எவ்வாறு செய்ய வேண்டும் என முறைப்படி விளக்கப்படுகிறது.

பிறகு போஜனபாத்திரம் தயார் செய்யும் முறை பிறகு எல்லா சமயல் செய்த பொருளும் சுத்தி செய்வதன் பொருட்டு சிவாக்னியில் நான் ஹோமம் செய்கிறேன் என்று பிராம்ணர்களை கேட்டு, பிறகு செய் என்று. அனுமதி பெற்று ஹோமம் செய்யவும் என கூறி அங்கு செய்ய வேண்டிய ஹோமம் முறை நிரூபிக்கப்படுகிறது ஹோமம் செய்து. மீதியான அன்னத்தை பிதுர்களுக்காகவும், பிண்டத்திற்காகவும் கொடுக்கவும், விஸ்வே தேவர்குக்கு ஹோம சேஷத்தை போடக் கூடாது என கூறப்படுகிறது. பிறகு வரிக்கப்பட்ட பிராம்ணர்களின் போஜன விதி கூறப்படுகிறது. அங்கு ஆபோசனத்திற்காக, முதலில், ஈசான மந்திரத்தினால் பிராம்ணர்களின் கையில் போட்டு, உங்கள் சவுகர்யப்படி சாப்பிடுங்கள் என கூறி அவர்களும் மவுனமாக இருந்து சாப்பிடவும் என கூறப்படுகிறது. பிராம்ணர்கள் சாப்பிடும் காலத்தில் அதிதி வந்தால் அவரை விஜாரிக்காமல் சக்திக்கேற்றவாறு போஜனம் செய்விக்கவும் என கூறப்படுகிறது. ஸ்வாமி, அம்பாள், ஸ்கந்தன், மஹா விஷ்ணு, சாக்ஷõத்காரமான, தர்மன் இவர்கள் அதிதி ரூபமாக சஞ்சரிக்கிறார்கள் ஆகையால் அவர்களை விசாரிக்க வேண்டாம் என அறிவிக்கப்படுகிறது. ஸ்ரரத்த கர்த்தா பிராம்ணர்கள் திருப்தியாக சாப்பிடும் வரை வடக்கு முகமாக இருந்து கொண்டு ஈசான மந்திரத்தை ஜபித்துக்கொண்டு நிற்க்கவும் என கூறப்படுகிறது. அவர்கள் போஜனம் செய்த பிறகு முடிவில் சிறிது அன்னத்தை எடுத்து நீங்கள் திருப்தி அடைந்தீர்களா என்று கேட்டு அவர்களால் திருப்தி அடைந்தோம் என்று கூறப்பட்ட பிறகு அந்த அன்னத்தை பூமியில் போட்டு விடவும். பிறகு எச்சில் இடப்பட்ட இலைக்கு நேராக பிண்டவிதியானது கூறப்படுகிறது. பிறகு போஜனம் செய்த பிராமணர்களை சந்தனம், புஷ்பம், முதலியவைகளால் பூஜை செய்து நமஸ்கரித்து மன்னிக்கவும் என கேட்டு அவர்களை க்ஷமாபிரார்த்தனை செய்யவும்.

பிறகு அவர்களுக்கு ஆசமனம் செய்விக்கவும் அவர்களுக்கு தாம்பூல சஹிதமாக தட்சிணை கொடுக்கும் முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு திருப்தியின் பொருட்டு வீட்டுக்கு உபயோகமாக பசு மாடு, பூமி, தாசிகள், இவைகள் கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஸ்ரார்த்த கர்த்தா கேட்க்க வேண்டிய சொற்களும் அதற்கு பதில் சொல்வாதாக சாபிட்டவர்களால் சொல்ல வேண்டியவைகளும் முறைப்படி கூறப்படுகின்றன. பிறகு இங்கு அன்னசேஷங்களை என்ன செய்ய வேண்டும் என கேட்டு அவர்கள் பந்து ஜனங்களுடன் கூடி சாப்பிடவும் என கூறவும் என்று கூறப்படுகிறது. சிராத்த கர்த்தா சாப்பிட்ட பிராம்ணர்களை பிதுர்சப்த பூர்வமாக யதாஸ்தானம் செய்யவும். பிறகு பிண்டங்களை பிராம்ணர்களுக்கோ பசுக்களுக்கோ, அல்லது அக்னியிலோ, ஜலத்திலோ போட்டு விடவும். இங்கு மத்தியில் உள்ள பிண்டத்தை குலபத்தீனி, நன்கு சாப்பிட்டால் அவளுக்கு நல்ல அழகுடன் கூடியிருக்கும், நல்ல தைர்யசாலியும், புகழை உடையவனும் ஆன புத்திரன் உண்டாகிறான் என்பது கூறப்படுகிறது. பிறகு விருத்தி சிராத்தம் நித்ய, சிராத்தம், நவசிராத்தம், ஏகோத்திஷ்ட சிராத்தம் சபிண்டீகரண சிராத்தம் இவைகளின் விதிமுறை. மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஸ்ராத்தம் செய்பவனுக்கு எல்லா விருப்பபூர்த்தியையும் கிடைக்கிறது. ஸ்ராத்த கர்த்தாவானவன் அழக்கூடாது என கூறப்படுகிறது. பிறகு விபத்தை அடைந்தவனை குறித்து ஸ்ராத்தம் செய்யும் விஷயத்தில் அதிகாரிகள் நிரூபிக்கப்படுகின்றன அங்கு புத்திரன் இல்லாத சமயத்திலும் உபநயனம் ஆக சமயத்திலும் தீட்சை செய்யப்படாத போதிலும் இறந்தவரின் சஹோதரன் ஸ்ரார்த்த கர்மாவில் யோக்யன் என்று கூறப்படுகிறது. சவுச சம்ஸ்காரம் செய்யப்பட்டவன் பிண்டதானம் செய்யும் விஷயத்திலும் யோக்யன் ஆகிறான். அந்த புத்திரன் வேத மந்திரம் இன்றி ஸ்வதா காரத்தினாலே உபயோகிக்கப்பட்டு மந்திரம் சொல்ல வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு ஒரு வேஷ்டியுடன் சாப்பிடக்கூடாது தேவதைகளின் பூஜையும் செய்யக் கூடாது. சிராத்தாலத்திலும் அவிஸ் கொடுக்கும் பொழுதும் பூஜிக்கும். பொழுதும் பார்பதற்கு யோக்யம் இல்லாத சண்டாளன் முதலியவர்களை நிரூபிக்கிறார். பிறகு, குதபகாலம் என்ற கால அளவை நிரூபிக்கிறார். பிறகு 9 விதமான குதபகாலம் பற்றி நிரூபிக்கப்படுகிறது. கல்யாணத்திற்கு பிறகு பெண் தன்னுடைய கோத்திரத்திலிருந்து விடுபடுகிறாள் அவளுடைய கணவன் கோத்திரத்தினாலே பிண்டம், ஜலதர்பணம் முதலியவை செய்யப்படவேண்டும் என கூறப்படுகிறது. ஆசுரம் முதலிய பெயர் உள்ள விவாக விஷயத்தில் சில கார்யங்கள் செய்ய வேண்டும் என கூறி அந்தவிசேஷ கார்யம் விளக்கப்படுகிறது. இவ்வாறாக 29வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. தீக்ஷி தாத்மாக்களுக்கு லேசாக சிராத்தவிதி கூறப்படுகிறது. அந்த சிராத்தமானது நித்யம், நைமித்திகம், காம்யம், வ்ருத்தி, பார்வணம் என்பதாக

2. ஐந்து விதமாக கூறப்பட்டது. இவ்வாறான சிராத்தத்தை அறிந்து சிராத்தகர்மாவை அனுஷ்டிக்கவும். தினந்தோறும் செய்வது நித்ய சிராத்தம். இறந்த தினத்தில் செய்வது நைமித்திகம்.

3. பொதுவாக விருப்பத்திற்காக செய்வது காம்யசிராத்தம். அமாவாசையில் செய்வது பார்வண சிராத்தம் விவாஹாதி சுப தினத்தில் செய்வது வ்ருத்தி சிராத்தம் இவ்வாறாக ஐந்து வித சிராத்தமாகும்.

4. சிராத்த தினத்தன்று சிரத்தையோடு போஜனாதிகளை கொடுப்பது சிராத்தம் எனப்படும். ஆசவுச சுத்தியானது தினம் முதல் மாசம் வர்ஷாதி பேதமாக

5. இறந்த ஸம்வத்ஸரத்தில் பிரதி தினமும் ஏகோத்திஷ்ட சிராத்தம் செய்ய வேண்டும். ஓர் வருட முடிவில் சிராத்த பக்ஷத்தில் சிராத்தம் செயற்பாலது.

6. நவசிராத்தம் முதலிலும், பிறகு சோடஸ சிராத்தத்தையும் செய்ய வேண்டும். நான்காவது, ஐந்தாவது, ஒன்பதாவது, பதினொன்றாவது தினங்களில்

7. இறந்தவரை உத்தேசித்து எந்த தானம் செய்யப்படுகிறதோ அது நவசிராத்தமாகும். நவசிராத்தம் மந்த்ரரஹிதமாகவும் பிண்ட திலோதக விவர்ஜிதமுமாகும்.

8. உதகமின்றியும் தூபமின்றியும் கந்தமால்ய விவர்ஜிதமாகவும் செய்யவும். ஆசவுச தீண்டலுக்கு முடிவில் ஏகோத்திஷ்ட சிராத்தம் செய்ய வேண்டும்.

9. பதினோராவது தினம் நாற்பத்தி ஐந்தாவது தினம், பிரதி மாஸ திதி, ஆறாம் மாசம் வர்ஷ முடிவிலும் ஆக எந்த கர்மா செய்யப்படுகிறதோ

10. அது ÷ஷாடச சிராத்தமாகும். இந்த தினங்களில் எந்த தானங்கள் செய்யப்படுகிறதோ அது ÷ஷாடச சிராத்தமென்றும் ஏகோத்திஷ்ட சிராத்த மென்றும் பெயராகும்.

11. யாருக்கு இந்த நவசிராத்த ÷ஷாடச சிராத்தங்கள் செய்யவில்லையோ அவருக்கு 100 சிராத்தங்கள் செய்தாலும் வெகு நாட்களுக்கு பிறகு பிசாசதன்மை ஏற்படுகிறது.

12. வாசற்படியிலும், விபூதியிலும் ஆகாசத்திலும் முறையாக மும்மூன்று தினமாக பிரேத பூதமாக ம்ருதமானவர் நிற்கிறார்.

13. அவன் ஸ்பிண்டீகரணத்திற்கு பிறகு சிவ லோகத்தை அடைகிறான். மரணமடைந்த தினத்திலிருந்து வர்ஷம் முடியும் வரை பிரதி தினமும்

14. போஜனமும் சோதகும்பமும் தேசிகருக்கு கொடுக்க வேண்டும். பிறகு நவசிராத்தம் ஏகோத்திஷ்ட சிராத்தமும் செய்து

15. ஸோத கும்ப சிராத்த ஸஹிதமாக ஸ்பிண்டீகரண சிராத்தம் செய்ய வேண்டும். பிரம்மசர்யானுஷ்டானத்துடன் சிராத்தாதிகள் செய்ய வேண்டும்.

16. ஆறு மாத முடிவிலோ, மூன்று மாத முடிவிலோ ஒரு மாத முடிவிலோ ஏகோத்திஷ்ட சிராத்தத்தின் இரண்டாம் நாளிலோ ஸபிண்டீகரணம் செய்ய வேண்டும்.

17. யாருக்கு ஒருவர்ஷ முடிவிற்குள் ஸ்பிண்டீ கரண சிராத்தம் செய்யப்படுகிறதோ, அவனுக்கும் ஓர் வருட முடிவு வரை போஜனம் சோத கும்பத்துடன் சிராத்தம் செய்ய வேண்டும்.

18. முன்னதாகவே நவசிராத்த ஏகோத்திஷ்ட சிராத்தத்துடன் ஒரு நபர் அதிகமான போஜனத்துடன் ஸபிண்டீகரணம் செய்ய வேண்டும்.

19. எல்லோரும் சேர்ந்து தேசிகருக்கு விசேஷமாக போஜனம் செய்யவிக்கவும். சிவனுக்கோ அல்லது தீக்ஷிதருக்கோ பிண்டீகரணம் கொடுக்க வேண்டும்.

20. வைச்யர்களுக்கு பக்ஷசிராத்தமானது ஏகோத்திஷ்டசிராத்த முடிவிலாகும். பதினைந்தாம் தின சிராத்தம் மாஸிக சிராத்தமும் சூத்ரர்களுக்கும் அவ்வாறே ஆகும்.

21. மற்ற எல்லாம் பிராம்மணாதி மூன்று வர்ணத்தவர்களுக்கும் பொதுவானதாகும். சூர்யன் கும்பராசி, கன்யாராசியா அடைந்த கிருஷ்ணபக்ஷத்திலும் (மாசி, புரட்டாசி மாதம்)

22. சதுர்த்தி, சப்தமீ நவமீ, த்ரயோதசியிலும் மகாநக்ஷத்திரத்திலும் அமாவாஸ்யையிலும் பித்ரு பக்ஷமாக கல்பிக்க வேண்டும்.

23. அஷ்டமியிலும் மீதமான பர்வதிதிகளும் மாத்ருவர்க்கமாக கல்பிக்கவும். வ்யதி பாதம் அயன காலம், ஸந்த்க்ராந்தி காலத்திலும்

24. விஷுவ புண்யகாலம், கஜச்சாயை, ஸங்கிராந்தி காலத்திலும் செய்யவும். சஸ்திரம் அக்னி, இடி மின்னலேற்பட்ட ஸமயத்திலும் பிரளயகாலத்திலும் மரித்தவர்களுக்கு

25. மேற்கூறிய உபாதி காலத்தில் மரித்தவர்களின் திருப்திக்கு சதுர்த்தசியில் சிராத்தம் செய்யவும். வேறு விதமாக ஸம்பவித்தால் வசு, ருத்ராதித்ய பித்ருக்களுக்கு சிராத்தம் செய்ய வேண்டும்.

26. ராத்ரியில் இரண்டு சந்த்யாகாலத்திலும், ராக்ஷஸ சிராத்தம் செய்யவும். கிரஹண காலமாக இருப்பின் ராத்ரியிலும் சிராத்தம் செய்யலாம்.

27. புத்ரவானான கிருஹஸ்தன் விசேஷமாக திரயோதசி சிராத்தம் செய்யக் கூடாது. மகநக்ஷத்திரத்தில் (மகத்தில்) ஸ்ராத்தம் செய்பவனுக்கு ஜ்யேஷ்ட புத்ரன் அழிவடைகிறான்.

28. மனைவியும், புத்ரனும் நந்தையிலும் சதுர்தசியிலும் நவசிரார்த்தம் செய்தால் மூன்று ஜன்மத்திலும் குலத்தின் அழிவு ஏற்படும்.

29. வெள்ளி, புதன், வியாழன், திங்கட் கிழமை ஆகிய தினங்களில் சிராத்தம் செய்தால் கர்த்தாவானவன் மரணமடைவான்.

30. ரேவதி, புனர்வசு, விசாகம், ரோஹிணி, உத்திரம், உத்ராடம், உத்ரட்டாதி, தன்னுடைய ஜன்ம அனுஜன்ம த்ரிஜன்ம நக்ஷத்திரத்திலும் தன்னுடைய இருபத்தி நான்காவது நக்ஷத்ரமும்

31. இருபத்தி ஏழாவது நக்ஷத்திரத்திலும், சிராத்தகர்மாவை வர்ஜிக்கவும். இந்த நக்ஷத்திரங்களில் சிராத்தம் செய்தால் செய்பவன் மரணத்தை அடைவான்.

32. இரண்டு அமாவாசை ஓர் மாதத்தில் வந்தால் அந்த மாதம், மலினம், பாபஸம்பவம் என்றும் பித்ரு, தேவர்களால் ஒதுக்கப்பட்டதுமாகும். எல்லா கர்மாவிலும் த்யாஜ்யம் செய்யவும்.

33. மலினமான மாதத்தில் நித்ய நைமித்திக கிரியைகளை முயற்சியுடன் செய்யவும். (விசாகமாச) சுக்லபக்ஷ த்ருதீயையிலும் கார்த்திகை மாத சுக்லபக்ஷ

34. நவமியிலும் புரட்டாசி மாச அமாவாஸ்யையிலும், அதே கிருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதியிலும் மாசி மாத அமாவாஸ்யை (பவுர்ணமியிலும்)

35. மூன்று அஷ்டகா திதியிலும் அயனகாலம், சூர்யசந்திர கிரஹணத்திலும் ஆகிய இந்த காலங்களில் திலோதகம் கொடுக்க வேண்டும்.

36. மேற்கூறிய அந்த காலங்களில் செய்யும் சிராத்தம் ஆயிரம் அமாவாஸ்யை சிராத்தபலனை சந்தேகமின்றி அடைகிறான். சூர்யன் கன்யா ராசியை அடையும் போது பித்ருக்கள் புத்திரர்களை அடைகிறார்கள்.

37. பிறகு வ்ருச்சிக ராசியை அடைந்தபோது பித்ருக்கள் ஆசையில்லாதவராக சென்று விடுகிறார்கள். மாளய பக்ஷ மாதத்தில் சிராத்தாதிகள் செய்யவில்லை எனில் பித்ருக்கள் கடுமையான சாபத்தை கொடுக்கிறார்கள்.

38. மேற்கூறிய சிராத்தம் செய்யாதவன் சேற்றில் பசு மாடு நுழைந்தது போலாகிறான். புத்ரனை அடைந்தும் பிப்பல மரத்தில் கிளி, பறவை போலும் ஆகிறான்.

39. மது, மாம்ஸங்கள், அன்னபாகம், பால், பாயஸம், இவைகளால் வர்ஷருதுவிலும் வர்ஷங்களிலும் மாசி மாதத்திலும் நமக்கு கொடுக்கிறவனாகிறான். பயன் மேலே கூறப்பட்டுள்ளது.

40. முற்பகலில் தெய்வீக சிராத்தமும் பிற்பகலில் பித்ருசிராத்தமும் ஏகோத்திஷ்டம் மாத்யா ஹ்னிகத்திலும் காலையில் விருத்தி நிமித்த சிராத்தமும் செய்ய வேண்டும்.

41. சுக்லபக்ஷத்தில் முற்பகலிலும் கிருஷ்ண பக்ஷத்தில் பிற்பகலிலும் சிராத்தம் ஆகும். முற்பகலில் ஆமசிராத்தம் செய்ய வேண்டும்.

42. ஆபத்து ஸமயத்திலும் அக்னி இல்லாத ஸமயத்திலும் புண்யதீர்த்தத்திலும் சந்திர, சூர்ய கிரஹண காலங்களில் அசக்தர்கள் ஆமசிராத்தம் செய்ய வேண்டும். சூத்ரர்கள் முதலியவர்களோவெனில் எப்பொழுதுமே ஆமசிராத்தம் செய்ய வேண்டும்.

43. சிராத்த விஷயத்தில் த்விஜோத்தமர்கள் யாவரும் பிரசஸ்தர்கள் ஆவார். தன் ஜாதியிலிருந்து மேற்பட்டவர்களையோ தன்னுடைய ஜாதியர்களையோ கிரஹிக்க வேண்டும்.

44. ஆசார்ய லக்ஷணத்தில் கூறப்பட்டுள்ள லக்ஷணமுள்ளவர்களும் நிந்திதர்கள் இல்லை. தெய்வீக கர்மாவில் தர்மக்ஞனை ஏற்பது போல் பிராம்மணனை பரிக்ஷிக்கக் கூடாது.

45. பித்ருகர்மா ஏற்படும் போது முயற்சியோடு பரிக்ஷிக்கவும். எது உபகாரயுக்தமாக தானம் செய்யப்பட்டதோ அது ஸாத்விகமாகும்.

46. மகிழ்ச்சியான மனதால் சிவஞான வித்வானுக்கும், அதிகம் படித்தவனுக்கும் தரித்ரனுக்கும் எந்த தானம் செய்யப்படுகிறதோ அது சாத்விகமாகும்.

47. பூர்வோபகாரியான சிவசாஸ்திரமில்லாதவருக்கு, ஸம்ருத்திக்காக எந்த தானம் செய்யப்பட்டதோ அது ராஜஸமாகும்.

48. ஸம்பந்திக்கும், விரதமில்லாதவனுக்கும் பயனை விரும்புபவர்களால் எந்த தானம் செய்யப்படுகிறதோ அது ராஜஸ தானமாகும்.

49. சிவார்ச்சனை முதலான கிரியை யில்லாதவர்க்கும் சிவஞானத்தை அபகரிப்பவர்க்கும் திருடனுக்கும் கொடுக்க படுகிற தானம் தாமஸமெனப்படும்.

50. ரோஷத்துடன் அபஸவ்யமாகவும் அறியாமையாலும் எவர்களால் சேவகனுக்கும் தானம் செய்யப்படுகிறதோ அது தாமஸமாகும்.

51. இவ்வாறு கல்பவிதி கூறப்பட்டு அனுகல்யம் கூறப்படுகிறது. தாய்வழி தாத்தா, மாமா மைத்துனர், ஸகோதரியின் பிள்ளை (மருமகன்) மாமனார் குரு

52. பேரன் (பெண்வயிற்று பேரன்) மாப்பிள்ளை பந்துஜனம், ருத்விகாதிகளையும் வரிக்கவும். வ்ரதஸ்தாயிருந்தாலும் தவுஹித்ரனை, சிராத்தத்தில் முயற்சியோடு போஜனம் செய்விக்க வேண்டும்.

53.மேற்கூறியவர்கள் கிடைக்காமலிருப்பின் பிக்ஷúக்களுக்கும், பிரம்மசாரிக்கும் போஜனம் செய்விக்கவும். தான் சிராத்தம் செய்துவிட்டு வேறு சிராத்தத்தில் மோஹத்துடன் புசிப்பவனுக்கு

54. அவனுடைய பித்ருக்கள் பிண்டோதக கிரியைகளை ஏற்று கொள்ளாமல் நழுவி விடுகிறார்கள். மறுபடியும் உணவருந்துதல், வழி நடைப்பயணம், காவல் காப்பது, அத்யயனம், மனைவியுடன் புணர்தல்;

55. தானம் ப்ரதிக்ரஹம், ஹோமம், சிராத்த போஜனம் இந்த எட்டும் சிராத்த காலத்தில் வர்ஜிக்கவும். சிராத்தத்திற்காக யார் வரித்து விட்டு கொடுக்கவில்லையோ

56. அவனிடம் மன்னிக்கும்படி பிரார்த்திக்கவும். இல்லையேல் கர்த்தா ரவுரவ நகரத்தை அடைகிறான். சிரார்த்தத்திற்காக நமஸ்கரித்து சிராத்தம் செய்யும் போது ஸ்ரார்த்தத்தில் யார் சாப்பிடவில்லையோ

57. அவன் சந்தேகமின்றி கும்பீபாக நரகத்தை அடைகிறான். சிராத்தத்தில் சவுசம் (சுத்தம்) கோபமின்மை சீக்ரமில்லாமை ஆகிய மூன்றும் விசேஷமாகும்.

58. சிராத்தத்தில் நல்ல தர்பம் நெய், திலம் ஆகிய மூன்றும் நல்ல பவித்ரங்களாகும். கடலுப்பும் மனதிலுதித்த நல்ல ஸம்பவமுமாகிய

59. இந்த இரண்டும் பரம பவித்ரமான ப்ரத்யக்ஷமான த்ரவ்யமாகும். பெருங்காயம், பச்சை காய்கறிகளும் சிறந்ததாகும்.

60. சிறிதேனும் க்ருஹத்தில் பக்ஷ்யம் போஜ்ய வஸ்துவையோ தயாரித்தல் பிண்டத்தின் பொருட்டு நிவேதிக்காமல் சாப்பிடக்கூடாது.

61. வரகு, உப்பு, நாவல்பழம், பூஷணி வகை, சுரைக்காய், கத்தரிக்காய், எருமை பாலும்

62. கொய்யாப்பழம், உளுந்து வகை, மிளகு திப்பிலி, தயாரிக்கப்பட்ட உப்பு, மூங்கிற் கொழுந்து இவைகளை எல்லாம் வர்ஜிக்க வேண்டும்.

63. சிகப்பு பொருள்களும், குங்குமமும், சிகப்பு சாம்பிராணி, நேரிடையாய் சேர்க்கப்படும் உப்பு இவைகள் யாவும் தள்ளத்தக்கதாகும்.

64. குப்பையில் இருப்பதும், பாத ஸ்பர்சிதம், வெண்மையானதும், மீதமானதும், புண்ணாக்கும், கடைந்ததையும், அதிக லவணமானதையும் தள்ளவும்.

65. எவர்கள் ஸ்நேகத்தால் உப்பு, காய்கறிகளை கையால் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு கொடுத்த பயனில்லை. புசிப்பவன் பாபத்தை அனுபவிக்கிறான்.

66. கட்டைவிரலின்றி எந்த சிராத்தம் செய்யப்படுகிறதோ வெளிக்கொணர்ந்த முழங்காலுடன் எந்த ஹோமம் செய்யப்படுகிறதோ முழந்தாள் வெளிப்புறமாக கையை சேர்ந்ததாக செய்யப்படும் கர்மாவும் ஆஸுரமாகும்.

67. தானம், தானம் பெற்றுக்கொள்ளுதல் ஹோமம் போஜனம் பலி ஆகிய கர்மாக்கள் கட்டைவிரல் ஸஹிதமாக செய்ய வேண்டும். இல்லையெனில் ஆசுரகர்மாவாகும்.

68. விசேஷமாக உள்ளடங்கிய முழந்தாளுடன் ஆசமனம் செய்யவும். முற்பகலில் சேகரிக்கப்பட்ட தர்ப்பை பவித்ரம், ஹவிஸ்ஸுக்கள் எல்லாம் எப்பொழுதும் விசேஷமாகும்.

69. எந்த பொருட்கள் சிராத்தத்தில் விஹிதமோ அவைகளை உபயோகிக்கவும். தெய்வாராதனையில் மாம்ஸம் வர்ஜ்யம் மாம்ஸம் சேர்க்கப்பட்டிருந்தால் பசுரோம எண்ணிக்கை காலம் நரகமனுபவிப்பான்.

70. சிரோவஸ்திரத்துடன் கூடியதாக போஜனம், தெற்கு முக போஜனம் செய்வித்தல் வாசற்படியில் அமர்ந்தவனாகவும் யார் புசிக்கிறானோ அவனை ராக்ஷஸர்கள் புசிக்கிறார்கள்.

71. ம்ருத்பாத்திரத்தில் சிராத்த காலத்தில் பித்ருக்களை போஜனம் செய்விப்பவன் தேசிகனுடன் அன்னதாதா, புசிப்பவன் யாவரும் நரகத்தை அடைவான்.

72. மண்ணுடன் கூடியதீர்த்தத்தால் பிரோக்ஷணம் விசேஷமாக கூறப்படுகிறது. சிராத்த காலத்தில் கர்மாதிகாரி நாபிக்கு கீழ் தொட்டுக் கொள்ளக்கூடாது.

73. ஆயுள், புத்ரன், தனம், ப்ரக்ஞை, சவுபாக்யம், அதிக கீர்த்தி, நண்பர்கள் ஆரோக்யம் சம்பத், இவைகள் நிந்திக்கப்படாத சிராத்தத்தால் கிடைக்கிறது.

74. நித்யானுஷ்டமான லோபம், மனஸ்தாபம், நண்பநாசம், குறைந்த செல்வம் கலஹம் (வசித்தலின்மை) இவைகள் நிந்திதமான சிராத்தத்தால் கிடைக்கிறது.

75. சிராத்த கர்மாவில் பவுதிகனும் பிரம்ம சாரியும், சிரேஷ்டர்கள் ஆகிறார்கள். சைவரும் ஸாந்தானிகரும் பித்ரு தேவர்களுக்கு யோக்யமாவர்.

76. எந்த புருஷன் நைஷ்டிகனை அதிதியாக அடைந்து ஸேவிக்கிறானோ அவன் மஹாத்மாக்களான சதுர்வேதார்த்த ஞானமுள்ள ப்ராம்மணர்களின் ஆசியை அடைகிறான்.

77. ஆசார்யன் பிராமணனாக வரிக்கப்பட்டு புசித்தால் கர்தாகோடி நன்மையை யடைகிறான். ஸாதகன் போஜனம் செய்தால் லக்ஷ பலனும் தீக்ஷிதன் புசித்தால் பத்தாயிரம் பலனுமாகும்.

78. ஸமயஸ்தன் அதிதியானால் ஆயிரம் பலனும் மாஹேச்வர புருஷனால் நூறுபலனும் ஆகும். விச்வே தேவனுக்காக இரண்டு ஸாதகனையும் பித்ருக்களுக்கு மூன்று தேசிகர்களையும் கல்பிக்க வேண்டும்.

79. சிராத்த விஷயத்தில் எல்லாவிடத்திலும் எப்பொழுதும் ஐவரும் கிடைத்தால் சம்மதிக்கப்படுகிறார்கள். சைவசிரார்த்தத்தில் ஈசன் ஸதாசிவன், சாந்தன் என கூறப்படுகிறார்கள்.

80. ருத்ரன் அனந்தன், என்று விச்வேதேவர்களாக கூறப்படுகிறார்கள். தீக்ஷிதர்களின் விஷயத்தில் மேற்கூறியவர்கள் சொல்லப்பட்டு அவர்கள் ருத்ராம்சர்களுக்காக கூறப்படுகிறது.

81. ஸ்கந்தர், சண்டேசர், கணேசன் என்று பித்ருக்களுக்கு மூன்று பேர் கூறப்படுகிறார்கள். அதில் நந்தி, மஹாகாளர் இருவரும் விச்வேதேவ கணமாகும்.

82. திருப்தியடைந்த மேற்கூறியவர்களால் எல்லாம் சிவானந்த திருப்தியாக பூமியில் ஆகிறது. ஐந்து பேர் கிடைக்காமல் இருக்கும் பக்ஷத்தில் இரண்டு பேரையாவது கல்பிக்கவும்.

83. பாஹுமூல சிரஸ்தானத்தில் மூன்று பேர்களை கல்பிக்கவும். ஓரிடத்திலும் வேறு இடத்திலுமாக இரண்டு ஸ்தானமாக இருவரை கல்பிக்க வேண்டும்.

84. ஓரிடத்தில் பாஹுயுக்மமாகி இருவரையோ ஐவரையோ கல்பிக்கவும். க்ருஹஸ்தர்களுக்கு ஆறு தெய்வதமாகவும் லிங்கிகளுக்கு மூன்று தெய்வமாகவும் கல்பிக்க வேண்டும்.

85. இவ்வாறாக எண்ணி சிரார்த்த கர்மாவை செய்யவும். முதல் நாளே வயதானவர்களை அழைக்க வேண்டும்.

86. துளிர் போன்ற கையால் வ்ருத்தர்களின் முழந்தாளை ஸ்பர்சித்து பிரியமான வார்த்தைகளை கூறி அவர்களை ஆச்வாஸப்படுத்த வேண்டும்.

87. சிராத்தம் செய்கிற ஆசார்யன் அழைத்தவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து பரமேஸ்வரனை ஸ்மரித்தவனாக ராத்ரியில் அவர்களை வசிக்கச் சொல்ல வேண்டும்.

88. அவர்களின் கடாக்ஷத்தால் அனுக்ரஹிக்கப்பட்டவனாக இந்திரியங்களை அடக்கி உறங்க வேண்டும். மறுதினம் ஸ்நானம் பூஜை முதலிய கார்யங்களை முடித்து

89. அபராஹ்னத்தில் ஸ்நானாதி கர்மாக்களை செய்து தன்னால் அழைத்தவர்களுக்கு ஆஸனாதிகளை கொடுத்து ஸ்வாகதார்க்யம் கொடுத்து

90. கால் அலம்புவதற்காக மண்டலாதிகளை செய்ய வேண்டும். க்ருஹமுற்றத்தில் ஸமமாக பசுஞ்சாண ஜலத்தால் மெழுகி பூச வேண்டும்

91. ஸமமான ரேகைகளால் கோடிட்ட பதத்தில் இரண்டு சதுரமான மண்டலம், கிழக்கு பக்கமும் மேற்கில் இரண்டுவட்டமான மண்டலமும்

92. தெற்கு வடக்காக முழங்கை அளவுள்ளதாகி நடுவில் மண்டலம் அமைக்க வேண்டும். ஒவ்வொரு மண்டலங்களில் பன்னிரண்டு அங்குலம் குழி செய்ய வேண்டும்.

93. மாத்ரு சிராத்தம் பித்ருசிராத்தத்தில் மண்டலம் அல்லது குழி அமைக்க வேண்டும். பித்ருக்களுக்காக ஐந்து பாத்திரத்தில் அர்க்யம் கல்பிக்க வேண்டும்.

94. சந்தனம் புஷ்பம், தர்பைநுனி தீர்த்தத்தால் வித்யாங்க ப்ரம்மமந்திரஸஹிதமாக தேவார்க்யத்திற்கு யவையுடனாகவும், பித்ரு அர்க்யத்திற்கு எள்ளுடனும் கல்பிக்க வேண்டும்.

95. வித்யா அங்க மந்திரங்களால் தீர்த்தத்தால் பிரோக்ஷித்தும் அபிமந்திரிக்க வேண்டும். தத்புருஷ மந்திரத்தால் வஸ்திரங்களையும் ஹ்ருதய மந்திரத்தால் சந்தனமும்

96. பிரம்ம மந்திர சிரோமந்திரத்தால் புஷ்பங்களையும் சிகா மந்திரத்தால் தூபதீபமும் கூறப்படாத மற்ற சிராத்தாங்கங்களை ஹ்ருதய மந்திரத்தால் அபிமந்திரிக்க வேண்டும்.

97. இவ்வாறு திரவ்ய சுத்தி செய்து சிராத்த கர்மாவை செய்ய வேண்டும். தர்பை நுனியுடன் அவகீரணம் செய்து யவை, திலங்களையும் தெளித்து

98. குறுக்கு மத்தியில் குசங்களை வைத்து தெற்கே மண்ணுருண்டையை வைக்க வேண்டும். வித்யா அங்க அஸ்திர மந்திரத்தால் தெற்கிலுள்ள சதுரச்ர மண்டலத்தை அர்சிக்க வேண்டும்.

99. வாஸனையுள்ள வெள்ளை புஷ்பங்களாலும் அர்ச்சிக்க வேண்டும். வித்யா. அங்க, ஹ்ருதய மந்திரத்தால் பிரணவாதியால் அந்தந்த பெயரால் வடக்கு முகமாக இருந்து கொண்டு செய்யவேண்டும்.

100. ப்ராசீனா விதமாக ஸ்வாஹாந்தமாக பச்சிம மண்டலத்தில் கையின் பின்புறமாக ஸ்வதாந்தமாக அர்ச்சிக்க வேண்டும்.

101. ஒவ்வொரு பாத்திரத்திலிருந்து தனித்தனியாக எடுத்து அர்க்யத்தை பாதத்தில் விட வேண்டும். அர்க்யம் கொடுத்து மண்ணை எடுத்து சீக்கிரமாக பாத பரக்ஷõலனம் செய்ய வேண்டும்.

102. வடக்கு மண்டலத்திலும் இவ்வாறு காலலம்பி குளிர்ந்தஜலத்தால் ஆசமனம் செய்வித்து தேவபித்ருக்களுடன் தானும் ஆசமனம் செய்து நுழைந்து

103. தக்ஷிண பாகத்தில் மெழுகப்பட்ட சுத்தமான பிரணவாசனத்தில் சுத்தமான காய்ந்த தேசத்தில் அவர்களை அமர்த்த வேண்டும்.

104. பிறகு சிரார்த்தம் செய்யப் போகிறேன் என்று அவர்களை பிரார்த்திக்கவும் பின்பு சிரார்த்தத்தை செய் என்ற உத்தரவை ஏற்றவனாக இரண்டு பேருக்கு தர்ப்பாஸனம் கொடுக்க வேண்டும்.

105. பித்ருக்களுக்கு கையில் தர்ப்பம் ஆஸனமாக தரக்கூடாது. விச்வே தேவர்களுக்கு  ஸத்யோஜாத மந்திரத்தால் வடக்கு நுனியாகவும் ஸவ்யமாகவும் கொடுக்க வேண்டும்.

106. ஆவாஹிக்கிறேன் என்று கூறி அவர்கள் நீ ஆவாஹிக்கவும் என்று உத்தரவு ஏற்றவனாய் அந்த பெயரை ஓங்காரத்துடன் ஆவாஹித்து

107. வாமதேவ மந்திரத்தால் ஸ்தாபனாதி த்ரயம் செய்து, பிறகு ரக்ஷõர்த்தமாக யவைகளை போட வேண்டும்.

108. பிரதக்ஷிணம் செய்து அர்க்யம் கையில் கொடுத்து இருவர்களுக்கு தனித்தனியாக அகோர மந்திரத்தால்

109. விச்வேதேவார்க்யத்தை பாத்திரத்தில் ஏற்று கீழே வைத்து முழங்கால் மடித்து அமர்ந்து அகோர மந்திரத்தால் யவைகளை கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

110. விச்வதேவ அங்க பாதங்களை ஆதரவுடன் பிடித்து விட்டு ஸர்வாங்கமும் கந்தம் பூசி புஷ்பமாலைகளால் அர்ச்சிக்க வேண்டும்.

111. வாமதேவ மந்திரத்தால் தூபமும், அகோர மந்திரத்தால் தீபமும் ஈசான மந்திரத்தால் பவித்ரமும் கொடுக்க வேண்டும்.

112. கவச மந்திரத்தால் வஸ்திரம் மோதிரம் இவைகளை ஆதரவுடன் கொடுத்து அதன் அங்கமாக உபவீதமும் கொடுக்க வேண்டும்.

113. பித்ருக்களுக்கு அபஸவ்யமாக அப்ரத்க்ஷிணம் செய்து இருமடங்காக தர்ப்பைகளை ஸத்யோ ஜாத மந்திரத்தால் கொடுத்து

114. ஆவாஹனத்திற்கு அனுமதி பெற்று அவாஹித்து பித்ருக்களை அந்தந்த மந்திரங்களை ஸ்மரித்து ஸ்தாபனாதி த்ரயம் செய்து வாமதேவ மந்திரத்தால் அப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.

115. ரக்ஷõர்த்தமாக ஈசான மந்திரத்தால் திலம் போட்டு திரும்ப வேண்டும். அர்க்யம் மூவர்களின் ஸன்னிதானத்திற்கு அகோர மந்திரத்தால் அஞ்சலி ஹஸ்தத்தில் கொடுக்க வேண்டும்.

116. முன்பு போல் ஏற்றுக் கொள்வதற்காக அஞ்சலியில் ஸ்தாபித்து மண்டியிட்ட பாவனையால் ஈசான மந்திரத்தால் சிரசுமுதல் முறையாக

117. திலங்களால் அர்ச்சித்து வாமதேவ மந்திரத்தை ஸ்மரித்து கந்தாதிகளை கொடுத்து அகோர மந்திரத்தால் தூபதீபம் கொடுக்க வேண்டும்.

118. ஈசான மந்திரத்தால் பவித்ராதிகளை அபஸவ்யமாகவும் ஸ்வதாந்தமாகவும் அர்பணித்து கர்த்தா பூர்ணமஸ்து என்று கூறக என்பதாகவும் அவர்களால் பூர்ணமஸ்து என்று கூறியதாக பாவித்து

119. பிறகு அவர்களின் அர்க்யத்தை விதிப்படி பாத்திரத்தில் வைத்து பித்ரு ஸ்தான மாகுக என்று பாத்திரத்தை கவிழ்ந்ததாக வைக்க வேண்டும்.

120. ஸுவர்ணம், வெள்ளி, தாமிர பாத்ரமாவது இலைகளால் ஏற்பட்டதுமான சுத்தமான போஜன பாத்திரத்தை எடுத்து போஜனத்திற்கு ஏற்றதாக செய்ய வேண்டும்.

121. ஹஸ்த ப்ரக்ஷõளனத்திற்காக தீர்த்தம் கொடுத்து திரும்பவும் சுத்தி செய்யவும். பங்த்தி தோஷ நிவ்ருத்திக்காக பரிகாரங்களை செய்து

122. எல்லா பாக விசுத்திக்காக சிவாக்ன யாஹுதி பூர்வமாக சிவாக்னியில் ஹோமம் செய்யப்போகிறேன் என்று அவர்களை கேட்டுவிட்டு

123.  அவர்களும் செய்வாயாக என்று அனுமதி பெற்று வஹ்ணியில் ஹோமம் செய்யவேண்டும். ஸோமாய பித்ருமதே ஸ்வதா நம: (ஸ்வாஹா) என்றும்

124. பிறகு யமாய அங்கிரஸே ஸ்வதா நம என்றும் அக்னயே கவ்யவாஹனாய ஸ்வதா நம: என்றும் கூறி ஹோமம் செய்ய வேண்டும்.

125. தத்புருஷ மந்திரம் ஸ்மரித்து ஹுதசேஷ அன்னத்தை போஜனத்திற்காக பித்ருக்களுக்கு மட்டும் வைத்து விட்டு பிண்டத்திற்காக மீதியை வைக்க வேண்டும். விச்வேதேவர்களுக்கு ஹோம சேஷம் தேவையில்லை.

126. கோபமின்றி இஷ்டமான அன்னம், ஹவிஷ்யம் (அபூபம்) தேன் கலந்த அன்னம்) தத்புருஷ மந்திரத்தால் நெய்யுடன் கூடியதாக அர்ப்பணிக்க வேண்டும்.

127. போஜன பாத்திரத்தை அகோர மந்திரத்தால் ஸ்பர்சித்து அந்தபாத்திரத்தை அபிமந்திரிக்க வேண்டும். பவித்ரீகரணத்திற்கு கவிழ்ந்த முகமாக வலது

128. கட்டைவிரலை தன்ஹஸ்தத்தால் எடுத்து பவீத்ரீகரணம் செய்து பிறகு விஸர்ஜித்து வாமதேவ மந்திரத்தையோ ம்ருத்யுஞ்சய மந்திரத்தையோ ஜபிக்க வேண்டும்.

129. அம்ருதத்வத்திற்காக போஜன பாத்திரத்தை சுற்றி கையால் ஜலத்தைக் கொண்டு சுற்ற வேண்டும். பித்ரு தேவர் கையில் முதலில் ஆபோசனத்திற்க்காக தீர்த்தம் கொடுக்க வேண்டும்.

130. சுகமாக போஜனம் செய்யவேண்டும் என்று பிறகு சுகமாக போஜனம் செய்கிறோம் என்பதாக அவர்கள் கூற வேண்டும். சக்திக்கு தக்கவாறு அதிதியை போஜனம் செய்வித்து போஜனகாலத்தில் விசாரணை செய்யாமலிருக்க வேண்டும்.

131. தேவன் தேவீ, குஹன், விஷ்ணு தர்மன் இவர்கள் ஸாக்ஷõத் சரீரத்தையுடையவர்களாக அதிதி ரூபமாக சஞ்சரிக்கிறார்கள். ஆகையால் அவர்களை விசாரிக்கக் கூடாது.

132. வடக்கு முகமாக இருந்து அவர்கள் திருப்தியாக புசிக்கும் வரை ஈசான மந்திரத்தை ஜபித்துக் கொண்டு இருக்க வேண்டும். பிறகு அவர்களை திருப்தி ஆனீர்களா என்று கேட்டு அவர்களும் திருப்தி அடைந்தோம் என்று கூற வேண்டும்.

133. சாப்பிட்ட சேஷ அன்னத்தை பூமியில் விகிரான்னமாக மணலுடன் போட வேண்டும். சாப்பிட்ட இடத்திற்கு முன்பாக பசுஞ்சாணத்தால் மெழுகிட்டு

134. தெற்கு நுனியாக தர்ப்பை பரப்பி ஸத்யோத ஜாத மந்திரங்களால் திலத்தை போட்டு வாமதேவ மந்திரத்தால் எள்ளுடனும் எல்லா அன்னவகைகளுடனும்

135. தக்ஷிணாபிமுகமாக இருந்து தேன் நெய் எள்ளுடன் மூன்று பிண்டத்தையும் எடுத்து வலது காலை மடித்து மண்டியிட்டதாக செய்து

136. தர்ப்பைக்கு மேல் ஈசனாதி மந்திரங்களால் முறையாக வைக்க வேண்டும். வாமதேவ மந்திரத்தால் ஜலதாரை விட்டு பிண்டமிட வேண்டும்.

137. பட்டு அல்லது பருத்தி நூலை வஸ்திரமாகவும் எண்ணையும் அஞ்சனமும் கொடுக்க வேண்டும். கந்த புஷ்பாதிகளால் பூஜித்து நமஸ்கரித்து பிழை பொறுக்கி கேட்க வேண்டும்.

138. க்ஷமத்வம் என்று பித்ருக்களை கேட்டு மந்த்ரவத்தாக ஆசார்யன் முன்னதாக மூன்று பேறுக்கும் ஆசமனம் கொடுத்த பிறகு மற்ற இருவர்க்கும் ஆசமனம் செய்விக்க வேண்டும்.

139. ஆசமனம் செய்து சுத்த ஹஸ்தர்களான பிராமணர்களுக்கு ஆஸ்யசுத்திக்காக தாம்பூலத்தை கற்பூர சஹிதமாகவும் கொடுத்து அதன் அங்கமாக வீட்டிற்குபயோகமானவைகளை கொடுக்கவும்.

140. அவர்களின் திருப்திக்காக கோபூமி, தாச்யாதிகளையும் தக்ஷிணாதிகளையும் கொடுக்க வேண்டும். சிரார்த்தம் செய்பவன் தெற்கு முகமாக இருந்து உதகபூர்வமாந வர்த்தனியை

141. தரித்து ஸ்வதாகாரம் சொல்லுங்கள் என கூறி அவர்கள் ஸ்வதா என கூற வேண்டும். பிறகு ஈசானதித்ரய மந்திரங்களை நான்காம் வேற்றுமை யுடையதாக கூற வேண்டும்.

142. சிரார்த்தகர்தா ஈசாதிபித்ருக்கள் யாவரும் ஸ்வதாவா என்று கேட்டு அவர்கள் ஸ்வதா அஸ்து என்று கூறி பூமியில் ஜலத்தை விட வேண்டும்

143. இவ்வாறு மூன்று முறை செய்து பிறகு கூற வேண்டும். தேவர்களும் ருத்ரர்களும் திருப்தியாக கட்டும் என்று தான் கூற வேண்டும்.

144. எங்களுக்கு கொடையாளிகள் அபிவ்ருத்தியாகட்டும் சைவ சந்ததியும் அபிவ்ருத்தி அடையட்டும். இவ்வாறு கூறிய போது அவர்களால் இந்த வாக்யம் சொல்லப்பட வேண்டும்.

145. பிறகுசிராத்த கர்த்தா இவ்வாறு கூற வேண்டும். சிரத்தை எங்களுக்கு இருக்கட்டும். என்றும் அவகாஹநம் வேண்டாம் நிறையாக கொடுக்கப்பட்டதாக எங்களுக்கு இருக்கட்டும்.

146. என்று கூறி பிரியமான வார்த்தைகள் கூறி நமஸ்கரித்து க்ஷமாபனம் செய்ய வேண்டும். முன்பு அர்க்யபாத்திரத்தில் நிவேசிக்கப்பட்ட ஸம்ஸ்ரவாதிகளை உடைய

147. பித்ரு பாத்ரத்தை உத்தானம் செய்து விஸர்ஜிக்க வேண்டும். பித்ரு பூர்வமாக ஸத்யோஜாத மந்திரத்தால் அனுவ்ரஜிக்க வேண்டும்.

148. சிராத்த கர்த்தாவால் அன்ன சேஷங்களால் என்ன செய்வது என்று கூறப்பட்ட போது இஷ்ட பந்துக்களுடன் புசிக்க வேண்டும் என்று பிராமணர்கள் கூற வேண்டும்.

149. பிண்டங்களை பசு, பிராம்மணர்களுக்கோ கொடுத்து அல்லது அக்னி ஜலத்திலோ போட வேண்டும். குலபத்னீ மத்யம பிண்டத்தை சாப்பிட வேண்டும்.

150. பிறகு அவளுக்கு ருத்ராம்சமான லக்ஷணத்துடன் கூடிய பிள்ளை ஜனிக்கிறான். அவன், தீரன், ஸ்ரீமான், யசஸ்வி, வித்யாஸந்தானபாரகனாகவும் ஆகிறான்.

151. கர்ப்பாதானாதி ÷ஷாடசஸம்ஸ்காரத்தில் வ்ருத்தியாகிற நாந்தீ முகச்ராத்தத்தில் பித்ருக்களுக்கு தர்பணம் செய்யக் கூடாது.

152. மற்ற மங்களகரமான எல்லா கர்மகாலத்திலும் நாந்தீமுகசிராத்தத்தில் தயிர், தேன், கலந்ததும் யவையுடன் கூடிய பிண்டங்களை கொடுக்க வேண்டும்.

153. அபஸவ்யம் செய்வதும் அபிரதக்ஷிணமும் செய்யலாகாது. வ்ருத்தி சிராத்தங்களில் எப்பொழுதும் கிழக்கு முகமாக பிண்டங்களை கொடுக்க வேண்டும்.

154. வ்ருத்தி சிராத்தத்தில் கிழக்கு நுனியான தர்பங்களில் பிண்டபிரதானம் செய்ய வேண்டும். சிராத்தத்தில் பித்ருக்களை ஆராதிக்காமல் மற்ற எல்லா கர்மாவையும் செய்யக்கூடாது.

155. நித்யசிராத்தம் தைவமில்லாததாகும். ஏகோதிஷ்டம் அவ்வாறே ஆகும். ஏகோதிஷ்டசிராத்தம் விச்வதேவரின்றியும், ஏகார்க்ய, ஏகபவித்ரமாகவும் செய்யவேண்டும்.

156. ஆவாஹந அக்னிகார்யம் விலக்கப்பட்டதாகும். அபவஸ்யமும் அம்மாதிரியேயாகும். உத்திஷ்டதாம் அக்ஷய்யம் என்பது (தள்ளுபடியாகும்).

157. அபிரம்யதாம் என்று கர்த்தா கூறியதும் அபிரதாஸ்மஹே என்று சாப்பிட்டவர்கள் கூற வேண்டும். நிமித்த சிராத்தத்தில் ஒரு புருஷனையாவது நிமந்திரிக்க வேண்டும்.

158. முன்பு போல் ஸர்வகர்மாவை தன் பெயரால் செய்தால் அது மஹத்தாகும். கோ, பூமி, ஹிரண்யம், க்ருஹம், வாஹநம் ஆச்சாதனங்களையும்

159. வஸ்திரங்களையும், வெங்கல பாத்ரம் பலவித தான்யங்களையும் ஆஸனம், விசிறி, குடை பாதுகையுடன் கூடியதாக வேண்டும்

160. தலையணியுடன், படுக்கை மற்ற பொருட்களும் தீர்த்தாயுதமாக தக்ஷிணையை கொடுக்க வேண்டும்.

161. ஆசவுசாந்த தினத்தில் இந்த மஹத்தான ஏகோத்திஷ்டமும் அவ்வாறேயாகும். பிண்டோதகம் இல்லாததாகவும் அமந்திர மாகவும் நவசிராத்தம் செய்ய வேண்டும்.

162. உதகதானம் தூபமின்மை சந்தன புஷ்பங்கள் இன்றியும் செய்ய வேண்டும். பிண்ட பாத்திரத்தை வைத்து இருப்பவருக்கு பிண்டோதகம் என கூறப்பட்டுள்ளது.

163. ஜலதாரை பிண்டத்திற்கு மேல் சுற்றுதல் வேண்டியதில்லை. ஸ்வதாகாரம் நமஸ்காரம் தேவையில்லை என்கிறார்.

164. அக்னிகார்யம் செய்வது பிராம்மணர்களை விஜாரிப்பது இவைகள் தேவையில்லை அக்னௌகரிஷ்யே என்ற வாக்யத்தை ஏகோத்திஷ்ட சிராத்தத்தில் ஸம்மதமாகும்.

165. ஹவிஷ்யான்னத்தால் ஒரு மாஸமும் பாயஸத்தால் ஒரு வருஷமும் சிராத்தம் செய்தால் பிதாமஹர்கள் ஆசீர்வாதயுதமாகவும் வணங்கப்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

166. செந்நெல் முதலான அன்னங்களாலும் காய்கறிகளாலும் சிராத்தம் செய்வதால் பித்ருக்கள் மாஸ விருத்தியால் த்ருப்தி அடைகிறார்கள் என்பது சந்தேஹமில்லை.

167. கயாவில் செய்யப்படுகிற சிராத்தம் எல்லா அனந்த பலனை கொடுக்க கூடியதாகும். கந்தோதக திலயுதமாக நான்கு பாத்ரம் அமைக்க வேண்டும்.

168. பித்ரு பாத்திரத்தில் அர்க்யத்திற்காகவும் பிரேத பாத்ரமாக பிரவேஸிக்க வேண்டும். அந்தந்த நாமங்களால் அகோர நாம பூர்வமாகவும் பிறகு பவன் என்ற பெயரோடு கூடியதாக வேண்டும்

169. ஓம் என்று முதலிலும் பித்ரு என்றும் கூறி மிகுதியான கார்யத்தை முன்பு போல் ஆசரிக்கலாம். நிமித்தத்திற்காக பித்ருக்களுக்கு மூன்று பாத்திரம் அமைக்க வேண்டும்.

170. ஸபிண்டீகரணமும் ஏகோத்திஷ்டமும் ஸ்த்ரீக்களுக்கும் செய்யப்படலாம் மற்ற எல்லா கர்மாவுக்கும் முன்பு உதாஹரணம் செய்தது போல் செய்ய வேண்டும்.

171. ஸபிண்டீகரணத்திற்கு முன்பாக அந்த பித்ருகர்மாவால் கர்மாவை செய்ய வேண்டும். பிறகு ஈசாதி பித்ரு நாமத்தால் எல்லா கர்மாவையும் செய்ய வேண்டும்.

172. யார்ஸ்பிண்டீக்ருத பிரேத பிண்டத்தை வேறு பிண்டத்துடன் சேர்க்கிறானோ அவன் பித்ருஹத்தியாகிறான். மாத்ரு ஹத்தி தோஷமுடையவனாகவும் ஆகிறான்.

173. ஆயுஷ்காமன் ஆயுளையும் தனகாமன் ஐஸ்வர்யங்களையும் வித்யாகாமன் மலமில்லா வித்யையும் ரதிகாமன் நல்ல ஸ்திரீகளையும் அடைகிறான்.

174. புத்ரன், சவுபாக்யம், ஆரோக்யம், யசஸ், வீர்யம், ஸ்ரியம் சுகம் இவைகளை நித்ய சிராத்தத்தால் அடைகிறான். துக்கமடைவதில்லை.

175. இறந்த பிதாவுக்கு புத்ரர்களால் சிராத்தம் செய்ய வேண்டும். தீக்ஷிதர்கள் க்ஞாதி பந்து, நண்பன் சிஷ்யன் வேலைக்காரன் ஆசார்யர்களாலும் சிராத்தம் செய்ய வேண்டும்.

176. புத்ரனில்லாத சமயத்தில் பத்னியும் பத்னி இல்லாதசமயத்தில் ஸோதரனும் யோக்யனாவான். அநுபநீதமும் அதீக்ஷிதனும் கூட சிராத்தகர்மா யோக்யனாவான்.

177. உபநயனமின்றி குடுமி மட்டும் வைத்திருப்பவன் உதக பிண்ட தானம் செய்யலாம். ஸ்வத,õகாரம் கூறி மந்திரோச்சாரம் செய்யக்கூடாது.

178. ஒரு வேஷ்டி தரித்தவனாக போஜனமும் தேவதார்ச்சனமும் செய்யலாகாது. தானம் ஆசமனம் ஹோமம், போஜயனம் தேவதார்ச்சனம்

179. மடித்தமர்ந்த பாதத்துடன் செய்ய வேண்டும். ஸ்வாத்யாயம் பித்ரு தர்ப்பணம் நன்கு அமர்ந்ததாகவும் ஜாநுஸகிதமாகவோ ஜங்காஸஹிதமாகவோ செய்ய வேண்டும்.

180. யார் பிறருடைய பிரதேசத்தில் பித்ருக்களுக்கு சிராத்தம் முதலியவைகளை செய்கிறானோ அந்த பூமி இறந்த பித்ருக்களால் சிரார்த்தகர்மாவை அனுபவிக்கப்படுகிறதாகும்.

181. காடு அடர்ந்த காடு, அரண்யம், நதிதீரம் ஆகிய எல்லா இடமும் ஸ்வாமியின் பிரதேசமில்லை அவைகளில் சிராத்தாதிகளை செய்யலாம்.

182. சண்டாளன் பன்றி, கோழி, இவர்களையும் போஜனம் செய்யும் பிராம்மணர்களை ரஜஸ்வலைஷண்டர் இவர்களையும் பார்க்க கூடாது.

183. ஹோமம் தானம், போஜனம், ஆகிய கார்யங்களில் மேற்கூறியவர்கள் பார்க்கப்பட்டால் தெய்வாராதனையிலும் ஹவிஸ்ஸில் பித்ருகர்மாவில் பார்க்கப்பட்டால் அதன் வழிப்படியின்றி சென்று விடும்.

184. கிழவர்கள், சிராவகர்கள், நிர்கந்தர்கள், சாக்யர்கள், வஸிப்பவர்களாகி தர்மத்தை அனுசரிக்காமலிருக்கிறார்களோ அவர் கீழ்தரமான தன்மையை அடைகிறான்.

185. மேற்கூரியவர்களால் அன்னம் ஹவிஸ் நெய் முதலியவை பார்க்கப்பட்டால் பிரதானத்திற்காக விடுதலை செய்ய வேண்டும். ஆபத்து காலத்தில் நமஸ்கரிக்க வேண்டும்.

186. பகலில் எட்டாவது பாகத்தில் சூர்யன் மந்தமான ஸமயமானது குதப காலமாகும். அந்த காலத்தில் பித்ரு கர்மா ஆரம்பிக்க வேண்டும்.

187. அல்லது வேறுவிதமாக குதபம் கூறப்படுகிறது. சிவவாக்யம், சவுசம், அக்ரோதகம் அதில் ஈடுபட்டதாகவும் பாத்ரம் வஹ்னி இவைகளும்

188. திலம், தர்ப்பம், காலம் இந்த ஒன்பதும் குதபம் எனப்படும். பிதா, பிதாமஹர், ப்ரபிதாமஹர் ஆகியவர்களும்

189. கணங்கள் மற்றவர்களுக்கும் ஸர்வ ஸாமான்யராகிறார்கள். ஸ்வபித்ராதிகள் ஸாமான்யர் அல்ல. பித்ராதிகள் ஈசாதிகளாகும். அதே மாதிரி மாதா மஹாதிகளும் ஆவர்.

190. தன்னுடைய கணவனோடு செய்யப்படுகிற சமமான சிராத்தத்தையும் தாயார் அம்ருதத்திற்கு சமமாக உணவருந்தினாலும் அவ்வாறே தன் பிதாமஹி, பிரபிதாமஹி இவர்களும் செய்தாலும் தவறாகும்.

191. மேற்கூறிய மூவரும் பிண்டதேயர்களாகும். இவ்வாறு உள்ள போது பிண்டங்களை செய்தால் மோக்ஷம் அடைவதில்லை. மாத்ரு சிராத்தம் பித்ருச்ராத்தம் இரண்டும் சேர்ந்து செய்தால் கிழக்கு முகமாக

192. மாத்ரு சிராத்தத்தை முன்னதாக செய்து பிறகு பித்ரு சிராத்தம் செய்ய வேண்டும். புத்ரன் இல்லாமல் தாயார் இறந்தால் கணவன் ஸபிண்டீகரணம் செய்யலாம்.

193. ஏகோத்திஷ்டமும், ளபிண்டீகரணமும் பித்ருக்களுக்கு மாதிரி செய்ய வேண்டும். ஸபிண்டீகரணத்திற்கு முன்பாக ஏகோத்திஷ்டம் செய்ய வேண்டும்.

194. பிண்டதானம் தனியாக செய்யக் கூடாது. மேற்படி கூறப்படுகிறது. ஸ்த்ரீயோ புருஷனோ அபுத்ரகர்களாக இறந்தால்

195. அவர்களுக்கு ஏகோத்திஷ்டமும் பிண்ட தானமும் செய்ய வேண்டும். பார்வணம் தேவையில்லை. பித்ராதி த்ரய பத்னிகளுக்கு உணவருந்த மட்டும் உரிமை உள்ளவர்களாகி ஆகிறார்கள்.

196. மாத்ரு சிராத்தத்திலும் ஸ்த்ரீகளுக்கு மேல்கூறியபடி தானம் செய்ய வேண்டும். பெண்ணானவள் உத்வாஹத்திற்கு பிறகு ஸப்தபதியில் தன் கோத்ரத்திலிருந்து விடுபடுகிறாள்.

197. ஸ்த்ரீகளுக்கு கணவன் (புருஷ) கோத்ரத்தினாலேயே அவருக்கு பிண்டோதகக்ரியை செய்ய வேண்டும். சதுர்த்தி ஹோம மந்திரங்களாலும் மாம்ஸ மஜ்ஜாதிகளாலும்

198. கணவனுடன் ஒருமை அடைந்து அந்த கோத்ரமடைந்தவனாகவும் பித்ரு கோத்ராபஹாரி மந்திரங்களால் பாணிக்ரஹணிகை ஆகிறாள்.

199. ஆஸுராதி விவாஹங்களில் விசேஷமாக கூறப்படுகிறது. ஸ்த்ரீகளின் மற்ற பர்த்தாவிற்கு எந்த கோத்ரம் பர்த்தாவால் நிர்வாஹிக்கப்படுகிறதோ அதையே நிர்வஹிக்க வேண்டும்.

200. குறைவில்லாத பிறப்பை உடையவளாகவும், மாற்று இடத்தை சார்ந்தவளாகவும் இருந்து இறந்தால் அவளைச்சேர்ந்த கோத்ரத்தை கூறியே சிராத்தம் பிண்டம் திலோதகம் இவைகளை கொடுக்க வேண்டும்.

201. ஜனனீ இருக்கும் பக்ஷத்தில் ஸ்பிண்டீ கரணாதிகமான பித்ரு கர்மாவை ஊர்தவ கோத்ர பித்ரு கோத்ரமாக பித்ரு தைவாராதனம் செய்ய வேண்டும்.

202. பித்ரு கோத்தரத்தை விட்டு விட்டு பாத்ரு கோத்ர அனுசாரமாக செய்யக்கூடாது.

இவ்வாறு சைவசிராத்த விதியாகிற இருபத்தியொன்பதாவது படலமாகும்.
படலம் 28: பிதுர்யக்ஞ விதி!

28 வது படலத்தில் பிதுர்யக்ஞ விதி நிரூபிக்கப்படுகிறது. அதில் முதலாவதாக லோக மார்க்கத்தை அனுஷ்டிப்பவர்களுக்கும் கிருஹஸ்தவர்களுக்கும் கட்டாயமாக செய்ய வேண்டிய பிதுர்யக்ஞ முறை கூறப்படுகிறது என கூறுகிறார். பிறகு கிருஹத்திலோ, ஓர் அறையிலோ, வெளியிடத்திலோ பிதுர் கிருஹம் ஏற்படுத்தி அங்கு பீடத்திற்கு செய்ய வேண்டிய முறையுடன் மூன்று மேகலையுடன் கூடிய பீடத்தை அமைத்து பிறகு உள்ளங்கை அளவு குழி செய்து பீடமத்தியில் முறைப்படி கூர்ச்சம் வைத்து. பிறகு இறந்தவர்க்கு ஆசனம் கொடுத்து ஆவாஹனம் செய்யும் முறையுடன் தீட்டு இல்லாததும் ஸ்நானம் செய்தவர்களுமான ஸ்தீரிகளால் புதியதான மண்பாண்டத்தில் தயாரிக்கப் பட்டதும் வெல்லம் நெய் இவைகளுடன் கூடியதும் தாம்பூல சஹிதமாயும் பிரதிதினமும் இரண்டு காலத்தில் நிவேதனம், செய்ய வேண்டும் அல்லது ஒரு காலத்திலோ நிவேதனம் செய்யவேண்டும் அன்னத்தை நிவேதனம் செய்யும் முறை மந்திரத்துடன் கூறப்படுகிறது இரண்டு காலத்திலும் செய்யவேண்டிய அன்ன நிவேதனமானம் பகலிலேயே செய்யவேண்டும் என கூறப்படுகிறது அல்லது இங்கு அர்க்யபலியை கொடுக்கவும் என்றும் வேறு இடத்தில் அன்னத்தை கூறப்படுகிறது. பிறகு பீடம் இன்றி குழியை மட்டுமோ செய்து சராவபாத்திரத்தில் கருங்கல்லையோ செங்கல்லையோ வைத்து அங்கு முன்பு கூறப்பட்டுள்ள கூர்ச்சத்தை வைத்து இந்த கர்மாவை அனுஷ்டிக்கவும் மூன்று பிண்டமோ கொடுக்க வேண்டும் என வேறுவிதமாக கூறப்படுகிறது. இந்த கர்மாவானது 7,9,10 ஆகிய தினங்களில் அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு 10 வது தினத்தில் அந்த இடத்திலிருந்து மண்ணைஎடுத்து புஷ்பம் பிண்டம், இஷ்டிகை, முதலியவைகளுடன் அந்தகூர்ச்சம் பாஷாணம் பீடம் இவைகளை பாட்டு வாத்யம் இவைகள் சஹிதமாகவோ இல்லாததாகவோ தீர்த்த மத்தியில் போட்டு விடவேண்டும். இந்த எல்லா கர்மாவும் புண்ய தீர்த்தத்திலோ, புண்ய÷க்ஷத்திரத்திலோ, செய்யவேண்டும் என கூறப்படுகிறது. மேல்கூறி இந்த செயல்முறையானது பிராம்மணர் முதலானவர்களும் பொது விதியாகும். இங்கு பிராம்மணர்கள் விஷயத்தில் 10 பிண்டமும், க்ஷத்திரியர்களுக்கு 12 பிண்டமும், வைஸ்யர்களுக்கு 15 பிண்டமும், சூத்திரர்களுக்கு 30 பிண்டமும் கொடுக்க வேண்டும் என்று விசேஷமாகும் என கூறப்படுகிறது. இவர்களின் பிண்டஜலதர்பண கிரியை யானது தீட்டு முடியும் வரை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு பிண்டதானம் கொடுக்கும் விஷயத்தில் முதல்நாளில் 1 பிண்டமும் இரண்டாம் நாள் 4 பிண்டமும், 3ம் நாள் 5 பிண்டமும் கொடுக்க வேண்டும் என மூன்று தினத்தின் பிண்ட தான முறை கூறப்படுகிறது. முடிவில் 10 தினம் முடிந்த பிறகு ஏகோத்திஷ்ட சிரார்த்தம் செய்தால் 1 பிண்டம் கொடுக்கவும் பிண்டம் பிரதான கொடுக்கும் நாள் வரை தீட்டு உண்டு அறிவிக்கப்படுகிறது. இவ்வாறாக 28வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஹே முனிபுங்கவர்களே! பித்ரு யக்ஞ விதியை கூறுகிறேன். கேளும் என்கிறார். லோக அனுஷ்டானத்தை அதிகரிக்கும் கிருஹஸ்தர்களுக்கு அவச்யமாகும்.

2. வெளிபிரதேச அறையில் அல்லது தனி அறையிலோ வீட்டிலோ பித்ருக்ருஹத்தை செய்யவும். பீடத்திற்காக கூறியபடி பீடமும் மூன்று மேகலையுடன் கூடியதாக செய்யவும்.

3. அதற்கு முன்னதாக தாளமாத்ர அளவில் புதியதாக குழி செய்யவும். கோமய ஜலத்தால் மெழுகி வைக்கப்பட்ட பீடத்தின் மத்தியில்

4. ஐந்து, ஏழு, தர்பங்களால் ப்ராதேசமாத்ர அளவில் கூர்ச்சம் செயற்பாலது. விப்ரர்களின் முறையாக பதினோரு

5. தர்ப்பங்களாலோ, குசங்களாலோ, தெற்கு நுனியாக கூர்ச்சத்தை செய்து ப்ரணவாஸனம் கொடுத்து மூர்த்தியை ஆவாஹிக்க வேண்டும்.

6. அந்தந்த கோத்ரத்துடன் கூடிய தேவதத்தர் முதலான மூர்த்தியின் பொருட்டு ஸ்வதா என்று கூறி அதே போல் ஆத்மா பெயருடன் கூடி

7. அந்த பித்ரு கோத்ர நாமாவை ஓம் என்பதுடன் நியஸிக்கவும். பாத்யாதிகள் கொடுத்து வஸ்திரம், சந்தனம், புஷ்பம், எள்ளுடன் கூடியதும்

8. தூபம், தீபம் கொடுத்து துவரைப்பருப்பு முதலியவைகளால் நிர்மாணிக்கப்பட்டதை நைவேத்யம் அதில் பாதியாகவோ நிர்மாணிக்கப்பட்டதை நைவேத்யம் அல்லது ஆத்மப்ரீதியான நிவேத்யமோ

9. நிவேதித்து வெல்லம், நெய்யுடன் காய்கறிகளுடன் கூடியதாக நிவேதிக்கவும். ஸ்நானம் செய்து ஆசவுசமில்லாதவர்களால் புதிய மண்டபத்தில் தயாரிக்க வேண்டும்.

10. தாம்பூலமின்றி பிரதிதினமும் இரு காலத்திலும் கொடுக்கவும். இருகால நிவேதனமும் பகலிலேயோ, ஒரே காலத்திலேயோ இரண்டு காலத்திலோ நிவேதனமும் செய்யவேண்டும்.

11. இந்த நிவேதனத்துடன் அந்த பித்ரு நாம ஸ்வதாந்தமும் ஹ்ருதய மந்திரத்துடனும் கொடுக்கவும். ஓரிடத்தில் அர்க்யமும் பலியும் மற்ற இடத்தில் அன்னமும் கல்பிக்க வேண்டும்.

12. மூன்று பிண்டங்கள் மட்டுமோ கொடுத்து குழியில் ஸமர்ப்பிக்கவும். இஷ்டகையோ பாஷாணத்தையோ சராவத்தில் வைத்து

13. முன்பு கூறிய கூர்ச்சத்தை கொடுத்து அங்கு இந்த கர்மாவை செய்யவேண்டும். ஏழுநாள் ஒன்பது நாள் பத்துநாள் கணக்கிலோ செய்ய வேண்டும்.

14. அந்தநாள் முடிவின் அபராஹ்னத்தில் முன்பு கூறிய விதிப்படி அர்ச்சித்து அங்கிருந்து மண்ணை எடுத்து புஷ்பசஹிதமான பிண்டத்தை

15. அதன் கூர்ச்சமிஷ்டிகையுடனோ கல்லினுடனோ பீடிகையுடனோ எடுத்துபீடங்களை தூபதீபத்துடன்

16. கும்மியடித்துக் கொண்டு தீர்த்த மத்தியில் விடவும். இந்த எல்லா கர்மாவும் புண்யஸ்தலம் நதிகளிலோ செயற்பாலது.

17. பிராம்மணர் முதலானவர்களுக்கு ஸாமான்யமாக சொல்லி விசேஷம் கூறப்படுகிறது. பிராம்மணர்கள் தசபிண்டமும், க்ஷத்ரியர்கள் பனிரெண்டு பிண்டமும்

18. வைச்யர்கள் பதினைந்து பிண்டமும் சூத்ரர்கள் முப்பது பிண்டம் என கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த தினம் வரை ஆசவுசமோ அந்த தினம் வரை பிண்டோதகக்ரியை செயற்பாலது.

19. முதல் தினத்தில் ஒரு பிண்டமும் இரண்டாம் தினம் நான்கு பிண்டமும் மூன்றாம் தினத்தில் ஐந்து பிண்டமுமாக மூன்று தின விஷயத்தில் விதிக்கப்ப்ட்டுள்ளது.

20. பத்தாம் நாள் ஆதிக்ராந்தமாக ஏகோத்திஷ்டம் செய்தால் ஒரு பிண்டம் கொடுக்கவும்.பிண்டதான ஸம்பனம் வரை ஆவுசமாகும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பித்ருயக்ஞ விதியாகிற இருபத்தியெட்டாவது படலமாகும்.
படலம் 27 : தீக்ஷிதர்களின் அந்த்யேஷ்டி என்ற கிரியையின் விளக்கம்!

27 வது படலத்தில் தீட்சிதர்களின் அந்த்யேஷ்டி என்ற கிரியையின் விளக்கம் கூறுகிறேன் என்பது கட்டளை பிறகு தீட்சிதர்களின் பிராம்ணன் முதலிய 4 வரணத்தவர்களில் கீழ்பட்ட ஜாதிகளில் நிற்கிறார்கள். அவர்களிலும் ஆசார்யன், ஸாதகன், புத்திரகன், சமயீ என்ற நான்கு பிரிவு உடையவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் அந்த்யேஷ்டி தீட்சிதர்களால் செய்யவேண்டும் அதில் ஆசாரியன் ஸாதகன், புத்திரகள், இவர்களின், அத்வ சுத்தியுடன் கூடிய அந்த்யேஷ்டியும் இதரர்களுக்கு அத்வசுத்தி இல்லாததால் அந்த்யேஷ்டி செய்யவேண்டும் என்று வேறுபாடு நிரூபிக்கப்படுகிறது. மறுபடியும் இறந்த ஆசார்ய, ஸாதக, புத்ரக இவர்களில் அறியாமையால் யார் ஆசாரமின்றியும், பிராயசித்தம் செய்யாதவர்களாகவும் இருக்கிறார்களோ அவர்களுக்கு தத்வ சுத்தியுடன் கூடிய அந்த்யேஷ்டி செய்யவேண்டும். மற்றவர்களின் விஷயத்தில் தத்வ சுத்தி இன்றி அந்த்யேஷ்டி செய்யப்படவேண்டும். இவ்வாறு பிராணனை உடனே தியாகம் செய்யும் யோகிகளின் விஷயத்தில் தத்வ சுத்தி செய்ய வேண்டாம் என கூறப்படுகிறது. பிறகு அந்த்யேஷ்டிவிதி கூறப்படுகிறது. முதலில், பஸ்மஸ்னாநம் செய்யவேண்டும். பிறகு ஆசார்யனால் இந்த தீட்சிதன் சிவாக்னியை பரிபாலிப்பவன் சீக்கிரமே சபிண்டீ கரணத்திற்கு பிறகு சிவத்தன்மையை அடையப் போகிறான் என்று பூஜை முதல் கொண்டு பரமேஸ்வரனிடத்தில் தெரிவித்து செய்யவேண்டும் என்பது வசனமாகும். பிராணனைவிடும் சமயத்தில் காதுக்கு அருகில் ஆசார்யனாலோ, மற்றவறாலோ சிவமந்திரம் முதலிய மந்திரங்களை சொல்லவேண்டும் என்பது சொல்லப்படுகிறது. இறந்தவர்களின் ஸ்னாநம் அலங்காரம் முதலியவைகள் செய்யும் முறையும் நிரூபிக்கப்படுகிறது. தீட்சிதர்களுக்கும் சிவனின் கட்டளையை ஏற்று நடத்துபவர்களுக்கு மற்ற புருஷர்களுக்கும் முறைப்படி தாம்பூலத்துடன் கூடியதான மஞ்சள் பொடி கொடுக்க வேண்டும் என்பதான விஷயங்கள் கூறப்படுகின்றன. இறந்தவரை ஸ்ம்சானத்திற்கு அழைத்து செல்வதற்கான ஆசந்தி என்கிற சவத்தை எடுத்துசெல்லவும் திரவ்யம் கூறப்படுகிறது.

சிவயோகி விஷயத்தில் பல்லக்கு செய்யப்பட வேண்டும். ஆசந்திகம் என்கிற மூங்கில் முதலியவைகளால் செய்யப்பட்ட பாடையில் இறந்தவரை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் முறை கூறப்படுகிறது. அதில் துல்லிய ஜாதி எனும் வரை சேர்ந்த ஜாதி உள்ளவர்களாலும் பூணலை இடப்பாகமாக தரித்துக் கொண்ட தீட்சிதர்களால் அந்த பாடையை தூக்கிக்கொண்டு ஈசான திக்கில் கொண்டு செல்லவும் என கூறப்படுகிறது. பாடையைத் தூக்குபவர் களுக்கு அகாலமரணம் ஏற்படுவதில்லை. இறந்தவரிடம் சென்று ஸ்நானம் செய்து வபனம் தர்பணம் செய்வதால் மேல் உலகத்திலும் இங்கும் விரும்பத்தக்க நன்மையை அடைகிறான். ஆனால் உத்தமனால் ஹீநவர்ண ஜாதிகளுடன் வருத்தத்தை விட்டு விட்டு பின் தொடர்ந்து செல்லக்கூடாது. அறியாமையால் பின் தொடர்ந்து சென்றால் பிராயச்சித்தம் செய்யவேண்டும் என கூறி பிராயச்சித்தம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. உதவி இல்லாத சிவயோகியின் உயிர் பிரிந்த போது அவனுக்கு சம்ஸ்காரம் செய்பவனுக்கு துக்க அழிவு ஏற்படுகிறது என்று பலன் கூறப்படுகிறது. பிறகு அருகில் உள்ள நதி முதலான ஜலதீரங்களை அடைந்து அங்கு பந்தலோ, கொட்டகையோ அமைத்து அதில் மத்தியில் குண்டம், ஸ்தண்டிலம் முறைப்படி செய்து குண்டத்தின் தெற்கு பாகத்தில் பிணத்தை புதைப்பதற்காக உள்ள இடம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு தேசிகனால் சிதையை புதைக்கும் பூமிக்கு முன்னதாக செய்ய வேண்டிய பூஜைகள் விளக்கப்படுகிறது. பிறகு வர்தனியில், பாசுபதாஸ்திரம், தசாயுதம் இவைகளை பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு செய்யவேண்டிய சிவ பூஜா முறை, அக்கினிகார்ய முறை இவைகளை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு சிதா பூமியின் பூஜா விதியில் வேறு முறை கூறப்படுகிறது. பிறகு யாக சம்மந்தப்பட்ட விறகுகளாலும் சந்தனம், அதில் இவைகளாலும் சவப்படுக்கை செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு இறந்தவனின் தீட்சை செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு நிவிருத்தி முதலான கலாசுத்தி விவரம் வர்ணிக்கப்படுகிறது. பிறகு சவத்தை படுக்கையில் ஏற்றுவதும் அதன் அக்னி சம்ஸ்கார முறையும் கூறப்படுகிறது.

தகனத்திற்கு பிறகு செய்யவேண்டிய முறையும் கூறப்படுகிறது. அஸ்திர வர்தனியை விட்டு எரிவது நதி தீரத்திற்கு சென்று ஸ்னாநம் செய்வது இறந்தவரை உத்தேசித்து வபனம் ஜலதர்பணம் முதலிய கிரியா விசேஷங்கள் கூறப்படுகின்றன. பிறகு அந்த இறந்தவரை எரித்தவருடன் அனுசரித்து சென்றவர்களுக்கும் சவத்தின் தீட்டு முதலிய முறைகளையும் தன்னுடைய வீட்டுக்கு செல்லும் வரை உள்ள விதியையும் கூறப்படுகின்றன. பிறகு வீட்டின் வாசல்படியை அடைந்து வேப்பிலையை கடிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு சமயத்தை அனுசரித்து சமய தீக்ஷõமாத்திரத்தினால் அனுக் கிரஹிக்கப்பட்டவனும் மேற்பட்டதான தீட்சையால் தீட்சை இல்லாதவனும் நிர்வாண தீட்சை உடையவனும் இறந்த விஷயத்தில் தத்வ சுத்தியுடன் கூடி அந்தயேஷ்டி செய்யவேண்டும் என அந்த்யேஷ்டி கூறப்படுகிறது. ஜலத்தினாலோ, அக்னியினாலோ, ஆயுதத்தினாலோ, விருக்ஷத்தினாலோ யானை, சிங்கம், கரடி, இவைகளாலோ மற்ற சாத்விகமான பிராணிகளாலோ, மரம் விழுதல் முதலாலோ, தன்கையால் அடித்தாலோ, வெட்டினாலோ கயிற்றால் கட்டிப் போட்டு விழுந்தாலும் இப்பேர்பட்ட காரணங்களால் மரணம் அடைந்தவர்களுக்கு பிராயசித்த பூர்வமாக அந்த்யேஷ்டி கூறப்படுகிறது. சரீரம் சேதனம் ஆனவர்களுக்கும் அவயவம் இல்லாதவர்களுக்கும் க்ஷயம், குஷ்டரோகம், வைசூரி முதலிய பெரிய வியாதியுடன் கூடிய சரீரத்துடன் உடையவர்களுக்கு மரணம் ஏற்பட்ட சமயத்தில் தர்பம் முதலிய திரவ்யங்களால் செய்யப்பட்ட சரீரத்தில் அந்த்யேஷ்டி செய்யவேண்டும் என கூறப்படுகிறது. இங்கு வைசூரி முதலான வியாதியில் வித்யாசமான சரீரத்தை உடையவர்கள் இறந்த விஷயத்தில், அந்த்யேஷ்டி செய்வதாவது அக்னியில் மந்திரம் இன்றி தகிப்பது புதைப்பது அல்லது கங்கை ஜலத்தில் போடுவதோ செய்யலாம் என கூறப்படுகிறது. பிறகு தீ குளித்தல் முதலியவைகளால் இறந்தவர்கள் விஷயத்தில் அவர்களால் செய்யப்பட்ட தீக்குளித்தல் முதலியதான கார்யம் புண்யத்திற்காக செய்யப்பட்டதா இல்லையா என அறிந்து கர்மாவை அனுஷ்டிக்க வேண்டும். தர்பை முதலான திரவ்யங்களால் சரீரம் செய்து அதன் சம்ஸ்காரம் கூறப்படுகிறது. பிறகு சவுளம் செய்து கொள்ளாதவர்கள் இறந்த விஷயத்தில் குழியில் புதைப்பதை செய்யவேண்டும். அவர்களுக்கு தீ இடுவதோ பிண்ட பலி கொடுப்பதோ, ஜலதர்பணமோ செய்ய வேண்டியது இல்லை. இவ்வாறு இரண்டு வயதிற்கு உள்ளாக இறந்தவர்களின் விஷயத்திலும் எரிப்பது ஜல தர்பணம் செய்வது வேண்டாம் என கூறப்படுகின்றது. சவுள கர்மா செய்து கொள்ளப்பட்டவர்களுக்கு தீயூட்டுவது, பிண்டம் போடுவது, ஜலதர்பணம் உண்டு என கூறி அங்கு செய்ய வேண்டிய பிண்டம், ஜலதர்பண முறை கூறப்படுகிறது.

பிறகு யதிகள் ஞானிகள் இவர்கள் இறந்த விஷயத்தில் உப்பால் நிரப்பப்பட்ட குழியில் இறக்கி மூடவும் என்று கூறி அவர்களை புதைக்கும் குழிபற்றி விதிப்படி கூறுகிறார். பிறகு யதிகள், ஞானிகள் இறந்தபொழுது புதைக்க குழியில் கிரியைக்கு பிறகு அங்கே ஆலயத்துடன் கூடிய பீடமோ லிங்கமோ, பிம்பரூபமாகவோ ஸ்தாபித்து பூஜிக்கவும் என கூறப்படுகிறது. இந்த சன்யாசிகளை ஞானிகளின் விஷயத்தில் பிண்டம், ஜலதர்பணம் சிரார்த்தம் மற்ற இதர அபர கிரியைகளும் செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இடி, தீ, ஜலம் இவைகளால் இறந்தவர்களுக்கு தீயூட்டும் முறை கூறப்படுகிறது. பிறகு கணவன் வேறு தேசத்திற்கு சென்று அங்கு இறந்ததை அறியாமல் இருந்தால் அவன் மனைவி 12 கழித்து வருடம் விதவைத்தன்மையை அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. இறந்தவனை எரிப்பதற்காக நெருப்பு தயாரிக்கும் முறை கூறப்படுகிறது. தத்வ சுத்தி இல்லாத அந்த்யேஷ்டியுடன் கூடிய மாஹேஸ்வரர்கனின் விஷயத்தில் தகனம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதல்நாள் முதற்கொண்டு 12ம் நாள் வரை இறந்தவரை குறித்து செய்யவேண்டிய தர்பண முறையும் போஜன முறையும் கூறப்படுகிறது. பிறகு இறந்தவரை எரித்த முடிவில் இறந்தவரை குறித்து ஆடையில்லா தன்மையை போக்குவதற்காக குடும்பத்துடன் கூடிய தீட்சிதனுக்கு வேஷ்டி அரிசியுடன், கூடிய தானம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. திலதீர்தத் தர்பணத்திற்கு பிறகு நதீ முதலானவைகளிலோ கிருகத்தில் பலிகொடுக்க வேண்டும் என பலிவிதி கூறப்படுகிறது.

இவ்வாறாக நைஷ்டிகனுக்கு பிரதிதினமும் தர்பணமும் பலியும் கொடுக்கக் கூடாது நைஷ்டிகரை தகனம் செய்த பிறகு அதற்காக தர்பணம் செய்யவும் பிறகு சிவனை பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு இறந்த நைஷ்டிகனை குறித்து பந்துக்களுடன் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது. அழவும் கூடாது என காரணத்துடன் விளக்கப்படுகிறது. பிறகு சாம்பல் கரைக்கும்வரை கூறப்படுகிறது. பிறகு இரண்டாம் தினத்தில் சரீரம் முழுவதும் எரிந்துவிட்டதா இல்லையா என அறிய சந்தேகம் காணப்படுகிறது. அதற்காக மூன்றாவது தினத்திலேயோ சாம்பல் கரைப்பது செய்யலாம் என கூறப்படுகிறது. அஸ்தி முதலிய சாம்பலை, ஜலத்தில் கரைக்காமல் கங்கை முதலிய நதிகளில் கரைப்பதற்காக புதிதான மண்பாண்டங்களில் எலும்புகளை மட்டும் சேகரித்தோ அதை கிராமத்திற்கு வெளியில் வைத்து 6 மாதம் 1 வருடத்திற்கு உள்ளோ அந்த அதற்கு மேலான காலத்திலோ கங்கை முதலிய புண்ய நதிகளில் போடவும் என்று கூறி அதன் விதிமுறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு தீட்டு காக்கும் முறை, அதிகாரத்தை அனுசரித்து விஸ்தாரமாக கூறப்படுகிறது. இவ்வாறு 27வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஹே பிராம்மணோத்தமர்களே! சிவ தீøக்ஷ பெற்றவர்களை பற்றிச் சொல்கிறேன். பிராம்மணர், ஷத்திரியர், வைச்யர், சூத்ரர் அனுலோமத்தில் தோன்றியவர்கள்.

2. ஆச்சாரியர்கள், ஸாதகர்கள், புத்ரகர்கள் சைவசமயநெறி நிற்பவர், இவர்கள் எப்பொழுதும் அவர்களுக்கு ப்ராணன் முடிந்தபின் அவர்களுக்கு தீøக்ஷகளினாலே அந்த்யேஷ்டி என்ற (கடைசீயாகம்) செய்ய வேண்டும்.

3. ஷடத்வ சுத்தியோடு கூடிய ஆசார்ய சமயீபுத்ரகன் இம் மூவர்களுக்கு அத்வ சுத்தி செய்தும் இதரர்களுக்கு அந்தேஷ்டியானது, அத்வ சுத்தியின்றியும் ஆகிறது.

4. எந்த ஆசாரத்தையும் விட்டு விட்டவர்கள் ஆசார்ய முதலிய மூவர் இவர்களும் பிராயச்சித்தம் செய்யாமலே மரணம் அடைகிறார்களோ அவர்களுக்கு அந்த்யேஷ்டி கர்மாவில்

5. நித்யம் முதலிய கர்மானுஷ்டானங்களை நன்றாக அனுஷ்டித்தவர்களுக்கும் தத்வ சுத்தியாவது செய்யவேண்டும். ஸமயானுஷ்டானங்களை கடைப்பிடிக்காத நிஷித்தவர்களாக எவர்கள் இருக்கிறார்களோ அந்த அப்ரமாதிகளுக்கு கவனத்துடனுடையவர்களுக்கு

6. தத்வ சுத்தியை விட்டு விட்டு கேவல அந்தேஷ்டி சொல்லப்படுகிறது. எவர்களினால் ஸத்ய ப்ராணத்யாகம். பிரம்ம ரந்திரம் முதலிய பிளவுகள் வாயிலாக ஆத்மா மேல் நோக்கி பிரிகின்றதோ அவர்களுக்கும்

7. அவர்களுக்கும் யாகங்களை அறிந்தவர்களால் தத்வ சுத்தி சொல்லவில்லை. எவர்க்கு ப்ராணன் வெளியே போகும் காலம் என்பது யமன் ஜந்துக்களோடு உயிரை அழைத்துச் செல்வதாகும்.

8. விதிப்படி ஆக்னேயஸ்நாநம் மந்திரங்களுடன் கூடிய சரீரத்தை உடையவனாகவும் முமுக்ஷúக்களுக்கு அப்படியே ஆக்னேய ஸ்நானத்தை செய்வதாலும் மந்திர கார்யத்தை செய்யவேண்டும்.

9. முமுக்ஷúக்களின் நிமித்தம் பரமேஸ்வரனை அஹிம்சை முதலான எட்டு புஷ்பங்களால் பூஜை செய்ய வேண்டும். தன் கையாலோ அல்லது மற்றவர்களுடைய கையாலோ சந்தனம் முதலியவைகளால்

10. நன்றாக அவருடைய ஹ்ருதயத்தில் லிங்க வடிவமான சந்தன மஹேஸ்வரனை செய்தும் கைகூப்பியும் அவருடைய மஸ்தகத்தில் தலை உச்சியில் சன்னிதாபன முத்திரை காட்டியும்

11. அதன் பொருட்டு இந்த வாக்யத்தை தேவேசனின் சன்னதியில் படிக்க வேண்டும். உங்களால் தீøக்ஷ செய்யப்பட்ட இவர் சிவாக்ஞையை காப்பாற்றுபவர் (பரிபாலனம் செய்பவர்)

12. உடனே சிவதத்வத்தை அடைந்தவாகிறார் பின் சபிண்டீகரணம் செய்யப்படும். இவ்வாறு தேவ தேவனை நோக்கி விக்ஞாபித்து தனக்குறிய இடத்தில் வைக்க வேண்டும்.

13. ஒரே முறையில் அல்லது பலவித முறைகளிலே இவருடைய அந்தேஷ்டி கிரியையை செய்யவேண்டும். ஆன்மா மேலே செல்லும் சமயத்தில் காது சமீபத்தில் ஸம்ஹிதா மந்திரங்களை படித்தல் வேண்டும்.

14. விசேஷமான சிவமந்திரத்தையும் பஞ்சாக்ஷர மந்திரத்தையும் படிக்க வேண்டும். இந்த எல்லாவற்றையும் ஆசர்யனாலோ, மற்றவர்களாலோ விதிப்படி செய்ய வேண்டும்.

15. அவருடைய கோத்திரத்தில் தோன்றியவர்களினாலோ சொல்லப்பட்ட கிரியைகளை செய்கின்ற மற்றவர்களாலோ ப்ராணனை இழந்த அந்த மனிதனின் ஸ்நாநத்திற்காக தீர்த்தத்தை எடுத்து வரவேண்டும்.

16. நூறு குடங்களினால் ஜலத்தை எடுத்து நன்றாக ஸ்நாநம் செய்விக்க வேண்டும். கிரஹஸ்தராக இருப்பின் சவுகிகமான ஸ்நாநத்தை அவர்களால் செய்துவிக்க வேண்டும்.

17. இவ்வாறு குடங்களாலும், கலயங்களாலும் ஸ்நபன விதிப்படி சொல்லப்பட்ட ஸ்நாநத்தை செய்ய வேண்டும். வர்தனி கும்பம் இல்லாமல் தனித்த ஜலகும் பத்தோடு ஸ்நாநம் செய்விக்க வேண்டும்.

18. முதலில் ஸ்தண்டிலத்தில், வஸ்திரத்தோடு ஹிரண்யமும், கூர்ச்சமும் பரப்பிய அக்ஷதையோடும் மாவிலை தேங்காயுடன் கூடிய கும்பத்தில் ஹ்ருதயாதி வித்யாதேக மந்திரங்களினால் அர்சிக்க வேண்டும்.

19. வீட்டிலோ, அல்லது மயானத்திலோ இவ்வாறு ஸ்நாநம் செய்விக்க வேண்டும். அல்லது ஸ்நபனத்தோடு கூடிய கும்பத்தால், ஸ்நாநம் செய்வித்து விபூதி பூசுவதாகிய ஆக்னேய ஸ்நாநத்தையும் செய்தல் வேண்டும்.

20. இவ்வாறு சம்ஹார மார்க்கத்தினால் கவுபீநம் வஸ்திரம் இவற்றை அணிவித்து அக்ஷமாலை முதலிய ஆபரணங்களினாலும் அலங்காரம் செய்துவிக்க வேண்டும்.

21. சிவசாஸனங்களை ஏற்றுக் கொண்டுள்ள தீக்ஷதர்களுக்கும், மற்றவர்களுடன் எப்படி முறையோ அதன்படி ராத்திரி சூர்ணம் (மஞ்சள் பொடி) தைலத்தோடு கூடியதாகவும்

22. தாம்பூல ஸஹிதமாக எல்லா ஜனங்களுக்கும் அப்பொழுதே தர வேண்டும். சவப்பாடை அடக்கம் செய்ய உரிய இடத்தை யாகத்துக்குரிய மரங்களினால் அடுக்க வேண்டும். அல்லது நிந்திக்கப்படாத நல்ல மரங்களினால் அடுக்க வேண்டும்.

23. சவ புருஷனின் அளவில் ஆறங்குல அளவாக அதிகமாக்கி மூன்றுமுழ அளவு வரையிலாக நீளமும் மூன்று, நான்கு, ஐந்து பாக அளவாக

24. நல்ல அகல அளவும், பரிசுத்தமானதும், சவத்தின் ஆசனமாகவும், கொட்டகையை மேற்படி கார்யங்களை செய்வதற்காக சவப்பாடையின் சமீபத்தில் அமைத்து

25. சிவப்பு மாலை, சிவப்பு வஸ்திரம், இவைகளை போர்வையாக போத்தி தொங்கும்படி செய்ய வேண்டும். மற்ற இடங்களில் அமர்ந்த நிலையில் ஜீவன் பிரிந்த சிவயோகிகளை வைத்தும்

26. நல்ல வாசனை புஷ்பங்களால் அலங்கரித்து சுபமான எல்லா ஆபரணங்களினாலே அலங்கரித்து சுத்தமான பல்லக்கை எடுத்து வந்து அதில் சவமான சிவத்தை அமர்த்த வேண்டும்.

27. நல்ல சப்தத்துடன் முரவவாத்ய கோஷங்களுடன் செல்ல சமய நெறி உள்ள நல்லோர்கள் கூட்டத்தோடு பின்னால் வணக்கத்தோடு பணிவோடு செல்ல வேண்டும்.

28. சங்கத்வனியோடும், கானத்தோடும், சிவயோகியின் பெருமை அறிந்தோரும் அவரை பின் தொடர்ந்தும் அசையாத்தலைகளையுடையவர்களாகவும்.

29. கண்ணீர் விட்டும், அக்கண்ணீரால் ஸம்சார ஆசைகள் அடங்கி மேலான பாவத்தில் இருப்பவர்களாக தென்புறம் தலையை வைத்து இரண்டு கட்டை விரல்களை கட்டியநிலையில்

30. தர்பகைகயிறுகளால் அந்த சவத்தை கட்டி பந்துக்களுடன் அபசவ்யமான பூணலுடன் கூடிய தீøக்ஷ பெற்ற தீக்ஷிதர்களினாலே பூணூலை இடமாக போட்டுக் கொண்டு ஈசானதிக்கை அடைய வேண்டும்.

31. அஸ்திரம் அல்லது வேறு மந்திரங்களை ஜபித்து கொண்டு வருபவர்களோடு தண்ணீருடன் கூடிய குடத்தை தூக்கிக் கொண்டு முக்கோணம் போல் அமைத்த உரியில் வைத்து. புகையோடு உள்ள அக்னியை வைத்து அதன் முன்னே செல்லவேண்டும்.

32. தூக்கிச் சென்றதற்காக இளைப்பாற குனிந்து தெற்கே தலை வைத்ததாக சுத்தமான பூமியின் மேல் இறந்தவனை இறக்கி வைக்கவேண்டும்.

33. விரதங்களை அனுஷ்டித்தவனும் அனுஷ்டிக்காதவனும் சிவதீøக்ஷ ப்ராமணர்களுடைய சவத்தை எவன் சுமந்து செல்கிறானோ அவனுக்கு அகால மரணம் எற்படாது.

34. அந்த சிவதீக்ஷித ப்ராம்மணரை தொடர்ந்து சென்று ஸ்நாநம் செய்தும். கொப்பளித்தும் தானங்களை தந்தும் மறைவு குறித்து, தண்ணீரில் மூழ்கியும் வருவதினால் விரும்பிய சுகத்தை அடைகிறான். இங்கு மேலான இடமாக பாவிக்க வேண்டும்.

35. மறைந்தவர் உன்னதமான பெரியோர்களை அனுசரித்து குற்றம், குறை உள்ளவராயினும் விரதங்களை விட்டவராயினும் பின் செல்லக் கூடாது. மேற்கூறியவர்கள் பின் தொடர்ந்தால் ஸ்னானம் செய்து ஸத்யோஜாதமந்திரத்தை நூறு முறை ஜபிகக்க வேண்டும்

36. துணை இல்லாதவரும் தலைவர் இல்லாதவரும், ஆன இறந்த சிவயோகியை தோஷ மற்றவராக நினைத்து, சமபூமிக்கு எடுத்துச் சென்று அந்தயேஷ்டி கர்மாவை யார் செய்கிறானோ அவன் மங்களத்தையடைகிறான்.

37. வைசியர் முதலிய மூன்று வகுப்பிற்கும் வேறு வகுப்பிற்கும் இந்த முறை ஏற்படுத்தப்படுகிறது. பிறகு சவஸ்தானம் வெகு தூரமில்லாமல் தண்ணீருக்கு பக்கத்தில் சுத்தமான சமமான இடத்தில்

38. பந்தல் அல்லது கொட்டகையாகவே அமைத்து இவ்வாறாகவே அதன் நடுவே ஆறு அங்குலம் உயரத்தோடு ஒருமேகலையை நாற்கோணமாக

39. குண்டத்தையும் விதிப்படி ஓர் முழ அளவில் மண்ணினால் அமைத்து அக்னிதிக்கில் ஸ்தண்டிலம் அமைத்து அவ்வாறே நான்கு முழ அளவில் சிதைக் குழியை அமைக்க வேண்டும்.

40. இரண்டு முழ அளவு அகலமும், எட்டங்குல அளவு கனமும் உள்ளதாக அமைக்க வேண்டும். சவக்குழியில் தெற்கு பாகத்தில் குண்டம் அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறாக ஸ்தண்டிலம் குண்டம், சவக்குழி, ஆகிய மூன்றையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

41. சவக்குழிக்கு சமீபமான இடத்தை கோமயத்தால் மெழுகி, ஆசார்யன் ஸ்நாநம் செய்து சுத்தி உள்ளவனாகவும் கையில் அஸ்திர தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு

42. ஸ்தண்டில சமீபம் வரை பிரதட்சிணமாகச் சென்று வடக்கு முகமாக அமர்ந்து மாறுதலான நியாசத்தை செய்து, அஸ்திர மந்திரத்தினால் அவகுண்டனம் செய்து கொண்டு

43. அந்தர்யாகம் செய்து கொண்டு அஸ்திர மந்திரத்தினால் அஸ்திர வர்த்தனியை அபிமந்திரித்து அந்த தீர்த்தத்தால் எல்லா திரவ்யத்தையும் பிரோக்ஷித்து ஆத்ம பூஜையில் சங்கல்பம் செய்து கொண்டு

44. ஸம்ஹிதா மந்திரங்களையும் கலைகளையும் சம்ஹார கிரமமாக கூறி பிரம்மா முதலிய காரணேஸ்வரர்களுடன் கூடியதாக தன்னுடைய சரீரத்தில் செய்து கொண்டு

45. சம்ஹார கிரமமாக சிவஹஸ்தம் பாவனை செய்து ஒரு தடவை சிவத்தை நினைத்து அங்கே தர்பைகள் விபூதி எள்ளு இவைகளை வாரி இறைத்து

46. விதிப்படி சிவத்தை அழைத்து சிதையிலோ பூஜிக்கவும். ஐந்தாகப்பகுப்பட்ட பூமியில் ஐந்து ஐந்தான கோஷ்டத்தில்

47. ப்ருதிவீ முதலிய பஞ்ச பூதங்களுக்குரிய ஐந்து வகை வடிவம் ஐந்துவகை நிறம் இவற்றால் விசித்ரமாக அமைக்கப்பட்ட மண்டவத்தில் வம்ச ரஜ்ஜூ முதலியவற்றிலிருந்து தோன்றிய வாஸ்த்து தேவதைகளை நியாஸம் செய்ய வேண்டும்.

48. அங்கே நடுவில் ஐந்து கோஷ்ட நடுவில் பூமியுடன் கூடியதாக பிரம்மாவையும் நிருருதி திசையில் ஜலத்துடன் கூடியதாக்கி நான்கு கோஷ்டத்தில் விஷ்ணுவையும்

49. நான்கு கோஷ்டங்களில் ஆக்னேயத்தில் அக்னியுடன் கூடிய நான்கு கோஷ்டமத்தியில் ருத்திரர்களையும் வாயு கோணத்தில் நான்கு கட்டத்தின் வாயுவுடன் கூடிய கோஷ்டத்தில் ஈஸ்வரனையும் பூஜை செய்யவேண்டும்.

50. ஈசான கோஷ்டம் நான்கிலும் ஆகாயத்துடன் கூடியதான ஈசானனை பூஜிக்க வேண்டும். கிழக்கு முதலான நான்கு கோஷ்டங்களில் இந்திரன், எமன், வருணன், குபேரன் ஆகிய நால்வரை பூஜிக்க வேண்டும்.

51. சவத்தின் நிஜப் பெயரோடும் வணக்கத்தோடும் நம: என்றும் ஸ்வாஹா முடிவோடு பலியை வைக்க வேண்டும். ஈசான திசையில் வர்தனியை பூஜித்து பாசுபதாஸ்திரத்தையும் பூஜை செய்ய வேண்டும்.

52. சூலத்திலிருந்து வஜ்ராயுதம் வரையுள்ள ஆயுதங்களை எட்டு திக்குகளிலும் வைத்து பூஜை செய்ய வேண்டும். மேலும் கீழும் உள்ள பதத்தை விஷ்ணு பிரம்மாவை பூஜிக்க வேண்டும்.

53. எள்ளு தர்பைகளின் நடுவே பவனை நன்றாக பூஜிக்கலாம். மண்டலத்தில் பவனை பூஜிக்கலாகாது. ஐஸ்வர்யம் முதலிய ஆசனத்தை கொடுத்து தளத்தோடு கூடிய பத்மாஸ னமத்தியில்

54. மனோன்மணி முதல் வாமா வரை உள்ள சக்ரத்தை பூஜை செய்ய வேண்டும். சம்ஹார கிரமாக ஆஸந பூஜையை மேலிருந்து (அபஸவ்யம்) அப்ரதக்ஷிணமாக சங்கரனை சாங்கமாக நன்றாக பூஜை செய்து

55. முன்போல சமஸ்காரம் செய்து குண்டம் சக்தியையும் அங்கே முன்போல குண்டத்தை ஸம்ஸ்காரம் செய்து சக்தியை அர்ச்சித்தும் அங்கே கிரவ்யாதம் சோஜ்ஜிதமான அக்னியை வைத்து அப்ரதக்ஷிணமாக சுற்றி

56. ஐந்து ஸம்ஸ்காரங்களினால் ஸம்ஸ்கரிக்கப்பட்ட அக்னி ஹ்ருதய தாமரையில் சிவஸ்தலமாக அர்ச்சித்து எள்ளினால் தர்பணம் செய்து

57. பிறகு பூர்ணமாக நிரம்பி வழிகின்ற நெய்யினாலே சிதையில் சேர்க்க வேண்டும். அல்லது ஐந்து நிறங்களால் கல்பிக்கப்பட்ட மண்டலங்களை விட்டும்

58. நிரீக்ஷணம் முதலிய சம்ஸ்காரங்களால் ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட வெகு தூரத்திலுள்ள கலசங்களினாலே பின்பு சிதையை அடைந்த பீடத்தில் வைத்து மஹேந்திரபுரம் என்ற ஸ்வர்கத்தை எழுத வேண்டும்.

59. சிவப்பு வர்ண பொடியினால் அதன் நடுவே அக்னி பகவானை எழுதவும் அதனோடு அந்த தேவதைகளை சேர்த்து முளை குச்சிகளை கோணங்களில் சேர்ப்பிக்க வேண்டும்.

60. அக்னி திசை முதற் கொண்டு அபஸவ்யமாக நான்கு காய்ந்த கட்டைகளினால் அக்னிதோன்றுவதற்காக அடிப்பாகம் மேலாகவும் கட்டையின் நுனி கீழாகவும், இருக்கும்படி அஸ்திரமந்திரங்களினால் எடுத்து குறுக்காக ஒவ்வொன்றாக அடுக்க வேண்டும்.

61. ஐந்து அழகான நூலினாலே கவசமந்திரத்தால் சுற்ற வேண்டும் அல்லது சிவப்பு நூலினால் முழுவதும் சுற்றி கட்டவும்

62. சிவாக்னியில் சிவாஹுதியும் ரக்ஷணத்திற்காக ராக்ஷஸர்களுக்காகவும் செய்ய வேண்டும். அங்கே சவப்படுக்கையில் கனமாகப் பரப்பி யாகத்திற்கு உரிய கட்டைகளினால் அடுக்க வேண்டும்.

63. சந்தனம் அகில் இவைகளால் கலந்த அபசவ்யமாக மறைத்து அஸ்திர மந்திரத்தினால் தர்பம், புஷ்பம், எள்ளு இவைகளினால் பூஜித்து

64. இறந்தவரை குழைத்த மண்ணை எடுத்து மேலே அம்மண்ணினால் பூசி கோமயத்துடன் கூடிய ஜலத்தாலும் பூசி அபிஷேகம் செய்தும் தூபம் சமர்ப்பிக்கப்பட்டதுமான பிரேதத்தை புதியவிபூதியால் திலகமிட்டு

65. முன்பிறப்பின் வர்ணத்தை எதிர்நோக்காமல் நல்ல பூணூல் வஸ்திரம் இவைகளை ஸமர்பித்து அக்னேய திக்கில் சிவனை பூஜித்து தெற்கு பாகத்தில் தர்பாஸனத்தில்

66. நிரீக்ஷணம் முதலியவைகளால் சுத்தமானதும் ஐந்து வகையான தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டதும், மந்திரமயமான சரீரமுடைய இந்த பிரேதத்தினுடைய (ப்ருத்வி முதலான) ஹ்ருதய கமலப் பிரதேசத்தில்

67. சுகதுக்க அநுபவ கர்ம வினையால் ஆஸ்ரிதமானதும் திரும்பவும் கிடைக்கப்படாததுமான மஹாஜலத்துடன் கூடிய அந்த லிங்கத்தை ஸமஹரித்து கீழ்வரும்படி எடுத்து வைக்க வேண்டும்.

68. ஓம் ஹூம் ஹம் ஹாம் ஹூம் என்ற மஹாஜாலமாக கருதப்பட்ட மந்த்ரத்தை சொல்லி குருவானவர் முடிவான வணக்கத்தை பாவித்து மரணமானவருக்கான தீøக்ஷயை செய்ய வேண்டும்.

69. வித்யாதேஹத்தை அந்த தேகத்திலிருந்து ஐந்து கலைகளையும் எடுத்து ஷடங்கத்தோடு சிவனை பூஜித்து மூலமந்திரத்தால் நூறுமுறை ஹோமம் செய்யவேண்டும்.

70. பின்பு சைதன்ய சன்னிதானத்தின் பொருட்டு தத்வங்களை சோதனம் செய்தல் வேண்டும். நிவிர்த யாதிகலைகளை முறைப்படியோ ஒரே முறையாகவோ எடுத்து

71. அதிபர்களுடன் கூடியதாக ஐந்து கலைகளை அக்னியில் முன்பு போல் பூஜிக்க வேண்டும். தாடனம் முதலிய ஸம்ஸ்காரங்களால் லிங்கத்திலிருந்து அதனால் அடையாளம் இடப்பட்ட ஆன்மாவை எடுத்து

72. ஜென்மாவின் வினைக்கு அதிகாரமான கலைகளையும் முன்பு போல் சேர்க்க வேண்டும். தொடர்ந்துள்ள தத்வங்களுக்கும் சுத்தியும் லயம், போகம் இவைகளையும் செய்ய வேண்டும்.

73. பாசத்தின் துண்டிக்கும் தன்மையில் பசுத்தன்மையுடைய ஆன்மாவிற்கு திரோபாவமென்கிற மறைப்புத் தன்மையாகிறது. அந்த கலைகளின் அழிவை கீழிலிருந்து மேலாக ஆன்மாவை மேன்மை அடையச் செய்வதற்காக செய்ய வேண்டும்.

74. முன்பு செய்யப்பட்ட நிர்வாண தீøக்ஷயால் ஆன்மாவை விடுபடச் செய்து மேலும் மற்ற பாகங்களையும் சுத்தி செய்ய வேண்டும்.

75. கூறப்பட்ட கர்மமலத்தின் வழியால் இவ்வாறாக தத்வங்களை சிவதத்வம் வரை சோதித்து அந்த தத்வங்களை ஹோமத்தின் முடிவில் அக்னியிலிருந்து எடுத்து சுத்தமான சிவபதத்தில் ஆன்மாவை சேர்க்க வேண்டும்.

76. ஆத்மாவிற்கு எந்த கிரியையால் மறுபிறப்பும் பிறரிடம் அடிமை தன்மையும் ஏற்படாதோ அவ்வாறாகச் செய்ய வேண்டும். மீதமில்லாத பாசங்களை சோதித்து ஈசனை பூஜித்து விசர்ஜனம் செய்ய வேண்டும்.

77. அந்த சரீரத்தில் வித்யாதேஹத்தையும் எடுத்து அதன் பதத்தில் சேர்க்க வேண்டும். ஸ்தண்டிலத்திலும் இவ்வாறாக ஈசனை பூஜித்து ஸம்ஹரித்து அதன் பதத்தில் சேர்க்க வேண்டும்.

78. சிதையில் மேலே சவத்தை எடுத்து வைத்து முன்பு போல் தர்பைகளினால் மூட வேண்டும். தெற்கு திசையில் தலையும் வடக்கு திசையில் பாதமும் இருக்கும்படி சவத்தை வைக்க வேண்டும். ஸ்ருக் ஸ்ருவம் இவற்றோடு கூட ஆகுதிகளை முக்தி அடைந்தவர்களுக்கு செய்ய வேண்டும்.

79. ஆசார்யன் ஸாதகன் அவர்களாலும் மற்ற கார்யத்திற்கு உரியவர்கள் குங்கிலியம் அகில் பச்சை கற்பூரம் சந்தனம் இவற்றை மரக்கட்டைகளோடு பின்கலந்தும்

80. மூடிவிட்டு குண்டாக்னியை சேர்த்து எடுத்து சவத்தின் சிரோபாகத்தில் வைக்க வேண்டும். தேன் தைலம் நெய் இவற்றை அக்னியில் வைத்து நன்றாக ஜ்வலிக்கும்படி செய்யவேண்டும்.

81. நெய் தேன், பால் நிறைவாக ஸ்ருக்கை நிறப்பி பூஜிக்கப்பட்ட பூர்ணாஹூதியாக ஆசார்யன் சவத்தின் தலைபாகத்தில் வடக்கு நோக்கிய முகமாக நின்று கொண்டு

82. கீழே கூறப்பட்டுள்ள வாக்யத்தை சொல்லிக் கொண்டு அக்னியில், நெய்யை விட வேண்டும். ஹே அக்னியே தெக்ஷினாக்கினியான நீர் காலனால் ஈடுபடுத்தப்பட்டுள்ளீர்.

83. மந்திரத்தினால் பரிசுத்தமான சவத்திற்குரிய இந்த மஹாஹூதியை ஏற்றுக் கொள்ளும் என்று கூறி பிறகு அந்த இடத்தில் கீழ் நோக்கிய முகமாக கவிழ்ந்து ஸ்ருக் கருவத்தை போட்டு விட வேண்டும்.

84. ஸ்ரேஷ்டமான ஆசார்யன் எல்லா கர்மாக்களையும் செய்து அரிவாளையும் அஸ்திர கும்பத்தையும் எடுத்து அப்ரதக்ஷிணமாக வந்து

85. மேல் தூக்கி இடது தோளின் மேல் ஓட்டையிடப்பட்ட மேல் பகுதியுடன் சவத்தை பாராமல் ஜலதாரை விட்டுக் கொண்டு தன்னுடன் பிறந்தவர்களுடன் பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

86. அபஸவ்யமாக இடப்பக்கமாக சுற்றி வந்து அந்த வர்தனியை கீழ் நோக்கியபடி கவிழ்த்துவிட வேண்டும். அங்கே அந்த தேசத்தை விட்டு வந்து அஸ்திர வர்தனியை முன் சொன்னபடி வைத்துவிட வேண்டும்.

87. பிறகு ஆற்றங்கரைக்கு சென்று ஸ்நாநம் செய்து ஜலத்திற்கு மேல் நல்லதர்பையை பரப்பி பிரணவத்துடன் கூடிய ஹ்ருதய மந்திரத்தை கூறி

88. சுத்தாத்மன் என்ற பதத்தையும் ஈசன் முதல் ஈசாந்தன் வரை உள்ள பெயர்களாக ஸ்கந்தன், கணேசன் என்ற பெயர்களாகவோ கூறி (ஓஹோம சுத்தாத்மன் ஸ்கந்தோ பவஸ்தா, ஓம் ஹாம் சுத்தாத்மன் சன்டோபவஸ்வதா, ஓம்ஹாம் சுத்தாத்மன் கனாதீசோ பவஸ்வதா)

89. என்று சொல்லிக் கண்டு முறைப்படி ஸ்வதா என்ற முடிவுடன் கூடிய மந்திரத்தை மூன்று முறை உச்சரித்து; தர்பணம் செய்ய வேண்டும். மறுபடியும் ஸ்நாநம் செய்து வடக்கு நோக்கிய முகமாக இருந்து சிவஸம்ஹிதை ஜபம் செய்ய வேண்டும்.

90. அஸ்திரங்களில் ஒன்றையோ அல்லது அகோராஸ்திர மந்திரத்தையோ நூறுமுறை ஜபம் செய்ய வேண்டும். அப்படியே சவத்தை சுவந்தவர்கள் தஹனம் செய்தவர்கள் இருமடங்கு ஜபம் செய்ய வேண்டும்.

91. இறப்பு தீட்டு நீங்கியவர்களாக தன்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும். வீட்டு வாசற்படிக்கு வந்து வேப்பிலையை தின்று நியமத்தோடு துப்பி

92. ஆசமனம் செய்து பிறகு அக்னி ஜலம் கோமயம் வெண்கடுகுகளை தொட்டு கல்லின் மேல் கால்வைத்து மெல்ல பிரவேசம் செய்ய வேண்டும்.

93. நல்லவனாக சமயத்தில் நிலைபெற்றவனாகவும் உத்தர தீøக்ஷயில் நிர்வாண தீøக்ஷ செய்வதற்குரிய விருப்பமானதை குறை உள்ளவனாக உள்ள எனக்கு தர வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

94. மரணமுற்றவனாயினும் அவருக்கு தத்வ சுத்தியோடு கூடிய அந்தேஷ்டி இங்கு சொல்லப்பட்டுள்ளன. ஜலத்தினாலோ நெருப்பினாலோ ஆயுதங்களினாலோ வேறு வகையில் யானை சிங்கம் இவற்றாலோ

95. புலி ஆகிய மிருகங்களினாலோ மரம் முதலியன விழுந்தாலோ தன் கையினாலே ஓங்கி அடித்துக் கொண்டோ கயிறு இறுக்கமாக கட்டியதால் உயிரற்று விழுவதினாலோ

96. இவ்வாறு பலவகையில் துர்மரணம் எவர்களுக்கு ஏற்படுகிறதோ அவர்களுக்கு முன்போல் அந்தேஷ்டி கிரியை சொல்லப்பட்டுள்ளது. சரீரம் காணாமல் மரணமுற்றவர்களுக்கும் அப்படியே சிதைந்து போன உடம்பு உடையவர்களுக்கும்

97. க்ஷயரோகம், குஷ்டம், வைசூரி முதலிய மஹாரோக முள்ள சரீரம் உள்ளவர்களுக்கும் தர்பை முதலியவற்றால் அமைக்கப்பட்ட தேகத்தில் அந்த்யேஷ்டி கிரியைகள் அனைத்தையும் செய்யவேண்டும்.

98. சிதைந்த அங்கம் வைசூரி முதலிய ரோகமுள்ள நோயுள்ள மனிதன் மரணமடைந்தால் மந்திரங்கள் இல்லாமல் கேவலமான அக்னியில் தகனம் செய்தோ கீழே புதைத்தோ அல்லது

99. கங்கை முதலிய தீர்த்தத்தில் பிரேதத்தை போட்டு நெருப்பு முதலியவற்றால் பிரவேசனம் புகுந்து மறைந்ததாக கருதப்படுகிறதோ அப்பொழுதே புண்யத்தின் பொருட்டு அந்தேஷ்டிகர்மாவை நடத்தவேண்டும்.

100. தர்பை கட்டுகளினாலோ பொரச மரத்திலிருந்து எடுத்த இலைகளினாலோ நூலினால் சேர்த்து கட்டியும் பஞ்சகவ்யங்களினால் நனைந்து பிரதிமையை தெளித்து பிரதிஉருவம் போல் செய்து அந்தேஷ்டி செய்ய வேண்டும்.

101. கோமியத்தால் உண்டாக்கிய உருவத்திலே இஷ்டமான உருவங்களை செய்தோ அந்த மரணமுற்றவருக்குரிய கர்மாக்களை அந்தேஷ்டியை முன்பு எப்படி உதாரணமாக சொல்லப்பட்டதோ அப்படியே செய்ய வேண்டும்.

102. பிறகு நெய், தேன், பால் இவற்றால் நனைக்கப்பட்ட அந்த பிரதிமையை தகிக்க வேண்டும். பத்ரை என்ற கரணம் பூரம், பூராடம், பூரட்டாதி இந்த நக்ஷத்திரத்தில் சுக்ரன், அங்காரகன், ப்ருஹஸ்பதி இவர்கள் இருக்கும் பொழுது

103. எவர்களுக்கு மரணமும் தஹநமும் ஏற்படுகிறதோ அது குலக்ஷயம் ஏற்பட காரணமாகின்றது. எனவே அதன் பொருளை உணர்ந்து மறுபடியும் தகநம் செய்வதை ஆதரவோடு செய்ய வேண்டும்.

104. சவுசம் செய்யப்படாத இறந்த மனிதர்களுக்கு அந்த்யேஷ்டிகிரியை குழியில் புதைப்பதை செய்ய வேண்டும். அவர்களுக்கு தகண கிரியையும் பலிதிணேநகம் இவைகள் தேவையில்லை.

105. சவுள வயதிற்குள் உள்ள மனிதர்களுக்கு மரணம் சம்பவித்தால் தகனம் அல்லது குழியில் புதைப்பது. ஆகிய அவடக்கிரியை செய்யலாம் இரண்டு வருடத்தில் குறைந்த பிரதேசத்தில் அக்னிகொண்டு செய்யும் கிரியை இல்லை. உதக கிரியையும் தர்பணமும் இல்லை.

106. யதிகளுக்கும், க்ஞானிகளுக்கும் பூமியினுள் அடக்கம் செய்கின்ற கிரியையான அவடகிரியை செய்ய வேண்டும். உப்பை நிறைய குழியில் சேர்த்து மூடி தண்ணீர் அன்னம் கலந்த பலி இல்லாமல் உத்தரக்கிரியை செய்ய வேண்டும்.

107. சவுள கர்மா செய்து கொண்டவன் இறந்தால் தகனம் பிண்டம் திலதர்பணம் உண்டு. வயதானவர் மரணமுற்ற ஒவ்வொரு ஆண்டிலும், பிண்டப்ர தானம், தர்பணம் முதலிய உதக கர்மாவில் செய்ய வேண்டும்.

108. தசாஹம் (பத்துநாளும்) பிண்டப்ரதானம் உதககர்மா ஆகும். சிறப்பாக பத்து வருடத்தில் அதற்கு மேலும் பூமிக் குழியினுள் அடக்கம் செய்யப்பட்டுள்ள தேகத்தில் எந்தகர்மாவானது செய்யும்படி செய்யப்பட்டுள்ளதோ அந்த சுத்தியை செய்ய வேண்டும்.

109. மணற் கரையில் தர்பங்கள் வடக்கு பாக மஸ்தகமாக அமைத்து சிவிகை முதலியவற்றில் ஒற்றியும் ஸ்மசானத்தில் அல்லது சுத்தமான பூதலத்தில்

110. ஒரு முழ அளவு பூமியை தோண்ட வேண்டும். அதில் படுக்கையாக அதிகமாக விஸ்தாரமில்லாமல் கற்பிக்க வேண்டும். இதில் சவத்தைவைத்து அக்ஷதை முதலியவற்றை கர்த்தாகொடுத்தும் சந்தனம் முதலியவற்றால் அர்ச்சிக்க வேண்டும்.

111. அங்கே மரணம் அடைந்தவறை வைத்து தெற்கே தலையும் வைத்து மண்ணில் மூட வேண்டும். யோகிகளுக்கு ஒரு கோல் அளவு அல்லது பாதி அளவு தோண்ட வேண்டும்.

112. உப்பினால் மேலே மூடி அதன் சமீபமான இடத்தில் அங்கே ஆலயத்தோடு கூடிய பீடத்தையோ லிங்கத்தையோ

113. சிலை ரூபமாகவோ அந்த மரணம் அடைந்தவருடைய ரூபத்தையோ செய்து பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய வேண்டும். அங்கே பிண்டோதகம் சிராத்தையும் செய்ய வேண்டியதில்லை.

114. அவருக்கு கட்டைவிரலை கட்டுவது தாம்பூலம் அளிப்பது முதலிய யாதொரு கார்யம் உண்டோ அதை செய்தல் கூடாது.

115. இடி நெருப்பு ஜ்வாலை முதலியவற்றினால் மரணம் அடைந்தவர்களுக்கு காரண கார்யம் செய்ய வேண்டும். ஓர் வருஷத்திற்கு மேல் மனைவி ஊரில் இருந்து கணவன் வேறு இடத்திற்கோ சென்று வராமலிருந்தால்

116. பன்னிரண்டு வருஷத்திற்கு பிறகு மேற்படி விதவை விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இறந்தவராகவோ மரணம் அடையாமலோ அறியாவிடில் விதவைக்கோலத்தை கடைபிடிக்க வேண்டும்.

117. நான்கு சதுரமண்டலத்தை செய்து அங்கே மூன்று அங்குலம் உயரமாக பாத்திரத்தை வைத்து அதன் நடுவில் உமியை நிரப்பி சிறு குச்சிகளில் அக்னியை ஏற்படுத்தி தகனம் செய்ய வேண்டும்.

118. மரணம் அடைந்தவர்களுடைய தகனத்தின் பொருட்டு இவ்வாறு உள்ள நெருப்பை எடுத்துக் கொண்டு பாலோடு கூடிய அரிசியுடன்

119. காது, மூக்கு, வாய், தொப்புள் இந்த இடங்களில் ஹ்ருதய மந்திரத்தால் ஒன்பது துவாரங்களிலும் தங்கத்தின் துண்டுகளை ஹ்ருதய மந்திரத்தால் வைக்க வேண்டும்.

120. பாலோடு கலந்த அரிசியை வாமதேவ மந்திரத்தினால் வாயில் வைக்க வேண்டும். அகோர மந்திரத்தால் கட்டை விரல் கட்டுகளை அவிழ்த்து விட வேண்டும்.

121. அதன் பிறகு சஹோதரர்களோடு கூட மாலையிடுதலை ஸபிண்டர்கள் செய்ய வேண்டும். வஸ்திரத்தின் நுனியினால் அப்பொழுது எல்லோரும் அதற்கு பிரதட்சிணம் செய்து

122. தாகம் தீர ஜலம் நிரம்பிய கும்பத்தையோ எடுத்துக் கொண்டு மூன்று முறை பிரதட்சிணம் செய்து அஸ்திர மந்திரத்தால் அதன் இடது புறத்தில் வைக்க வேண்டும்.

123. உடைந்த கபாலத்தில் உள்ள தண்ணீரை ப்ராணஸ்தானங்களில் வைக்க வேண்டும். ஸ்நான முடிவில் பஞ்சகவ்யத்தை அல்லது நெய்யை சாப்பிட்டு சிவமந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

124. அப்பொழுதே தன்னால் முடிந்த அளவு தானம் செய்வது சிரமத்திற்காகவும் இறந்து போனவர்களுடைய பெயரோடு கூட தண்ணீர் எள்ளு கலந்த தர்பணத்தையும் கொடுக்க வேண்டும்.

125. இது முதலிய கர்மாக்களை செய்ய தகுந்தது. தத்வசுத்தி இல்லாதவர்களுக்கு கடைசி இறுதி சடங்குகளோடு கூடிய மஹேஸ்வர வடிவம் உள்ளவர்களுக்கு

126. தினந்தோறும் ஈசன் ஸ்கந்தன் முதலிய பெயர்களோடு தர்பணம் செய்ய வேண்டும். முதல் நாளில் தனித்தனியாக மூன்று முறை தர்பணம் செய்ய வேண்டும்.

127. தினந்தோறும் ஒன்றாக கூட்டி பன்னிரண்டு நாள் வரை தனித்தனியாக 75 எண்ணிக்கையோடு கூடிய தர்பணம் செய்து அந்த எண்ணிக்கையால் போஜனம் செய்விக்க வேண்டும்.

128. ஐந்து ஐந்து எண்ணிக்கையோடு கூடிய 200 தர்பணத்தை ஈசான் முதலிய மூன்று பேர் உடைய திருப்திக்காக செய்து தினம் ஒருவரையாவது போஜனம் செய்விக்க வேண்டும்.

129. இறந்தவரை முன்னிட்டு தாகத்தின் முடிவில் வஸ்திரம் அரிசி இவைகளுடன் கூடிய தானத்தை இறந்து சிவதீøக்ஷபெற்ற குடும்பத்தினர்க்கு வஸ்திரமின்றி எரித்ததற்காக நக்ன பிரச்சாதனம் என்ற தானத்தை செய்ய வேண்டும்.

130. தர்பணத்தின் முடிவில் நதி முதலிய தீர்த்த கரையிலோ அல்லது வீட்டிலேயோ பலி கொடுக்க வேண்டும். குடும்பமில்லாத தனிமனிதனுக்கு தினந்தோறும் தர்பணமும் பலியும் செய்யக் கூடாது.

131. ஆனால் ஒரே நாளில் செய்யக் கூடிய சிராத்தத்தில் தகனத்தின் முடிவில் ஈசன் முதலிய மூன்று பேர்களின் பொருட்டு அதற்காக தர்பணம் செய்து அதன் பொருட்டு சிவனை பூஜிக்க வேண்டும்.

132. துக்கமில்லாதவனுக்கும், சாதுக்களுக்கும் கெட்ட மனதுடைய மனிதர்களுக்கும் ஏற்பட்ட மரணத்தை இயற்கையாகவே மரணம் ஏற்பட்டதாக நினைத்து சவகார்யத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

133. எவர்கள் சிவவிரதத்தை அனுஷ்டிக்கின்றவர்களோ எவர்கள் சைவர்களோ எவர்கள் குடும்பத்தோடு கூடியவர்களோடு அவர்களுக்கு துக்கம் கிடையாது. சிறிது விவேகம் இருப்பதினால் துக்கம் கிடையாது.

134. அப்படியே எப்பொழுதும் ஆத்மஞானம் உள்ளவர்கள் எப்பொழுதும் சிவனை போல உள்ளவர்கள் அவன் அழிவை அடைவதில்லை. அப்படியே அழிவுண்டென்றால் முன்புள்ளது போல் நித்ய சிவலக்ஷணமில்லாதவனாகிறான்.

135. போகத்தை காரணமாக இல்லாததால் ஆத்மாக்களுக்கு உபசாரமாக இறப்பு சொல்லப்படுகிறது. தன்னுடைய குணத்துக்கு தக்கவாறு மரணம் ஆவது குறைந்து விடுகிறது. மரணம் இல்லாத நிலை கூடுகிறது.

136. தனக்கு அனுகூலமாகவோ பிரதி கூலமாகவோ சொல்லப்பட்டாலோ அவனுக்கு இடையூறுகள் ஏற்படுவதில்லையோ அந்த விருப்பமானவற்றை அடைகிறான்.

137. எவர்கள் சிவதீøக்ஷ பெற்றவர்களாக சொல்லப்படுகிறார்களோ அவர்கள் முடிவில் எல்லாவற்றையும் அறியக்கூடிய அனுபவிக்க வேண்டிய உடம்பு உடையவர்களாக ஆகிறார். ஆத்மாவை ஆவரணமாக உடையவராகவும் இருக்கிறார்கள்.

138. யார் ஒருவன் தேகத்தோடு கூடியவனோ அவன் மிகவும் குறைவு உள்ளவனாக சொல்லப்படுகிறான். இந்த தேகமானது அழியக் கூடியது. மனித வாழ்க்கையில் வாழைமரம் வளர்ந்து வாழை குலை வெளிவந்தவுடன் தன்னை இழந்து விடுவதுபோல மனித வாழ்க்கை அமைகிறது.

139. சாரம் உள்ளதாக எவன் நினைக்கிறானோ ஜலத்தில் நீர்குமிழி முட்டை ஏற்படுவது போல் ஏமாற்றம் அடைந்து முட்டாளாகிறான். ஐந்து ஆதார ஸம்ஸ்காரத்தால் ஏற்பட்ட சரீரம் மரணத்தையடைந்தால்

140. தன்னுடைய உடம்பினாலே செய்கின்ற கார்யங்களினால் உயர்வோ தாழ்வோ அடைகின்றான். இதற்காக வருத்தப்படுவதேன். மலை, பூமி, கடல் தெய்வங்கள் இவைகள் அழிவதை கண்டு வருந்துவதில்லை.

141. மனித வாழ்க்கை கடல் நுறைபோன்றது. மனிதவாழ்க்கை யாசிக்கப்படுவதில்லை. ஸ்லேஷ்மம், கண்ணீர், பந்துக்கள், இவர்களால் விடுபட்டு யோக்யத்தில் மரணமடைகிறான்.

142. அதனால் அழக்கூடாது. சக்திக்கு தக்கவாறு கிரியைகளை செய்ய வேண்டும். மறுதினம் மற்ற அங்கங்களின் தகனத்தை செய்தோ செய்யாமலோ இருக்கலாம்.

143. இரண்டாவது நாளிலோ அல்லது மூன்றாவது நாளிலோ நெய், பால் இவைகளுடன் கூடிய பிண்டங்களோடு சிதையின் சஞ்சயன கார்யத்தை செய்ய வேண்டும்.

144. மண்ணினால் ஆன பாத்திரத்தை எடுத்து பால் அல்லது தண்ணீர் நிரப்பி அங்கே மூன்று கட்டைகளை வைத்து அதன் மேல் அந்த பாத்திரத்தை வைக்க வேண்டும்.

145. பிறகு சஞ்சயன கார்யமின்றி எலும்பை சேர்ப்பது செய்ய வேண்டும். புதிய மண்பாண்டத்தில் ஒன்று, மூன்று, ஐந்து ஏழாவது நாளில்

146. பிராம்ணன் முதலான வர்ணத்தில் உள்ளவர்கள் இறந்த விஷயத்தில் முறைப்படி எலும்பை சேகரிப்பது செய்ய வேண்டும். ஸத்துமா பொறி அன்னம் அப்பம் இவைகளால் நான்கு திசைகளிலும் பலியை கொடுக்க வேண்டும்.

147. இதற்கு பிசாச பலி என்று பெயர். அந்த பிசாசுகளுடைய திருப்திக்காக அனுஷ்டிக்க வேண்டும். அங்கங்களிலிருந்து அங்கங்களை எடுத்து அந்த மந்திரங்களினாலே எடுத்து வைக்க வேண்டும்.

148. கிராமத்திற்கு வெளியில் கங்கை முதலிய நதிக்கரையில் அந்த தினத்திலோ அல்லது 15 தினங்களுக்கு பிறகோ மூன்று மாதங்களிலோ

149. ஆறு மாதத்திலோ ஒரு வருட முடிவிலோ அதற்கு மேற்பட்ட தினத்திலோ அஸ்தியை போட வேண்டும். அந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து திலங்களால்

150. முன்னோர்களின் தர்பணத்தையும் தேவர்களின் தர்பணத்தையும் செய்ய வேண்டும். முடிந்த அளவு தானம் செய்ய வேண்டும். அந்த பூமியிலேயே பித்ருக்களுக்கு பிண்டம் வைக்க வேண்டும்.

151. குருவின் சிஷ்யர்கள் குருவின் உறவினர்கள் நித்ய அனுஷ்டானம் தவிர மற்றஜபம் முதலியவைகளை மூன்று நாட்கள் அனுஷ்டிக்காமல் இருக்க வேண்டும்.

152. அவர்களின் மற்ற சைவர்களான க்ருஹஸ்தர்களும் பிரும்மசாரிகளும் தீக்ஷிதர்களும் சவத்தீட்டிற்காக ஓர் தினம் நித்யானுஷ்டானம் ஜபங்களை விட வேண்டும்.

153. உலக வாழ்க்கையில் உள்ள கிருஹஸ்தர்கள் குடும்ப பழக்க வழக்கங்களை விட்டுவிடக்கூடாது. ஆகையால் தீக்ஷிதர்கள் லோக வழக்கமான ஆசாரத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

154. சைவானுஷ்டமான வ்ருதத்தை உடையவனுக்கு தன்னுடைய முன்பிறப்பை ஏற்காததாலும் சம்சாரபந்தம் இல்லாமையினாலும் பிறப்பு தீட்டு இறப்பு தீட்டு இரண்டும் கிடையாது.

155. தீøக்ஷயினால் ஸம்ஸ்கரிக்கப்பட்ட பூர்வாஸ்ரமத்தை உடைய கிருஹஸ்தர்க்கு போக்கப்பட்ட ஸம்ஸார பீஜத்தை உடையதும் நல்ல கர்மாக்களை உடைய ஞானிக்கு

156. ஒரு க்ஷணமாத்திரம் பிறப்பு இறப்பு தீட்டு உண்டாகிறது. அதுவும் ஸ்நானம் செய்வதால் நிவர்த்தியாகிறது. பிராமணனுக்கு 10 நாட்கள் தீட்டாகும். க்ஷத்ரியனுக்கு 12 நாட்கள் தீட்டாகும்.

157. வைச்யனுக்கு பதினைந்து தினம் தீட்டு காத்தபிறகு சுத்தியாகும். சூத்திரர்களுக்கு ஒரு மாதம் தீட்டாகும். பிறாமணனால் விவாஹம் செய்து கொள்ளப்பட்ட நான்கு வர்ண பெண்களுக்கும்

158. முறைப்படி பத்து, ஆறு, மூன்று, ஒன்று ஆகிய தினங்களில் தீட்டை அனுஷ்டிக்க வேண்டும். அந்த பிள்ளைகளுக்கு முன்பு தாய்வழியில் கூறியபடி தீட்டை காக்க வேண்டும்.

159. பூர்ண கர்ப்பிணிகளுக்கு குழந்தை இறந்து பிறந்தால் கொஞ்சநேரம் தீட்டு உண்டு. ஸ்நானம் செய்த பின்பு சுத்தி ஏற்படுகிறது. அந்ததாயாருக்கு பெண் குழந்தை ஆண் குழந்தை கர்பசேதனம் ஏற்பட்டால் ஒரு மாதத்திற்கு தீட்டு உள்ளது.

160. குழந்தைக்கு நாமகரணத்திற்கு முன்பும் பல் முளைப்பதற்கு முன்பும் உபநயனத்திற்கு முன்பும் மரணம் ஸம்பவித்தால் முறையே ஸ்நாநம், ஓர் நாள் தீட்டு, மூன்று நாள் தீட்டு காக்கவும் என்பதாக கூறப்பட்டுள்ளது.

161. அதற்கு மேல் ஞாதிகள் மறைந்தால் மூன்று தலைமுறையினருக்கும் 10 நாட்கள் தீட்டு உண்டு. கவுகர்மா வயதிலிருந்து எட்டு வயது வரையிலும் விவாக வயதுக்கு முன்பு வரையிலும் உள்ளவர்கள் மரணம் அடைந்தால்

162. சஹோதரர்களுக்கு பத்து நாள் தீட்டு உண்டு. பெயர் சூட்டியிருந்தால் அந்த குழந்தையின் தகப்பனார் பத்துநாள் தீட்டு உண்டு. அவ்வாறே உடன்பிறந்தவர்கள் அனைவருக்கும் தீட்டு உண்டு.

163. மாமியார் அத்தை இவர்கள் இறந்தால் அத்தை பையன் மாமா மாமா பையனும் அத்தை பையனும் இறந்தால் பக்ஷிணி என்ற ஒன்றரை தினம் தீட்டு காக்க வேண்டும்.

164. இரண்டு பகல் தினத்தின் நடுவில் உள்ள ராத்திரியோ இரண்டு ராத்திரியையுடைய ஓர் தினம் முழுமையுமோ அனுஷ்டிக்கும். தீட்டு பக்ஷிணி என்று கூறப்பட்டுள்ளது.

165. சபிண்டர்களான தன் முன்னோர்களுக்கும் மூன்று நாளும் சமான உதக வர்கம் என்ற பின்தங்கிய தலைமுறையினர்களுக்கு ஓர் நாளும் முறைப்படி தீட்டு காக்க வேண்டும்.

166. பல் முளைத்ததற்கு பிறகு இறந்தவர்களுக்கு ஸ்நானம் மட்டும் கூறப்படுகிறது. பிராம்ணனுக்கு உபநயனம் ஆனபிறகும் க்ஷத்ரியன் வில்லை பிடித்த பிறகும்

167. வைஸ்யன் வியாபாரத்தில் ஈடுபட்ட பிறகும் நான்காம் வர்ணத்தவர் இரண்டு வஸ்திரங்களை கிரஹித்த பிறகும் இறந்தால் முழுமையான தீட்டை அனுசரிக்க வேண்டும்.

168. சவுச கர்மா செய்து கொண்ட க்ஷத்ரியனிறந்தால் ஆறு தினங்கள் தீட்டு உண்டு. அவ்விதமே வைச்யனுக்கு ஒன்பது தினம் தீட்டாகும். சூத்ரருக்கும் பன்னிரண்டு தினங்கள் தீட்டாகும்.

169. இவ்வாறாக எல்லா க்ஞாதிகளுக்கும் ஆசவுச விஷயங்கள் கூறப்பட்டுள்ள ஆசார்யனுக்கு மரணம் ஏற்பட்டால் மூன்று இரவு தீட்டு காத்தல் வேண்டும்.

170. அந்த குருவின் தர்மபத்தினி, புத்திரன் இவர்கள் இறந்தால் ஓர் பகல், இரவு தீட்டு காக்க வேண்டும். இறப்பு தீட்டு ஏற்பட்ட சமயத்தில் பிறப்பு தீட்டு ஏற்பட்டால்

171. இறப்பு தீட்டுடன் பிறப்பு தீட்டு சென்று விடுகிறது. ஆனால் இறப்பு தீட்டு பிறப்பு தீட்டுக்கு சமமாகி செல்லாது. பிறப்பு தீட்டு இருக்கும் பொழுது இன்னொரு பிறப்பு தீட்டு ஏற்பட்டால்

172. முன்பு ஏற்பட்ட பிறப்பு தீட்டுடன் பிறகு ஏற்பட்ட பிறப்பு தீட்டு சமமாகி விடுகிறது. பிறப்பு தீட்டில் இறப்பு தீட்டும் பிறப்பு தீட்டில் பிறப்பு தீட்டும்

173. அந்த நிலையில் எந்த தினம் அதிகமாக உள்ளதோ அதைதீட்டிற்கு அனுஷ்டிக்க வேண்டும். குறைவான தினத்தால் தீட்டு காக்கக்கூடாது. இறந்த தீட்டில் 10 நாட்களுக்கு மேற்பட்டு இறந்த செய்தி அறிந்தால் மூன்று தினம் தீட்டை அனுஷ்டிக்க வேண்டும்.

174. பிறந்த தீட்டு முடிந்தவுடன் ஒருநாள் இருந்தால் போதும். அதற்கு மேலே ஸ்நானம் செய்தால் போதும். இறந்து போனவர்கள் தகனத்திலிருந்து நித்யாக்னி கார்யம் செய்பவர்களுக்கு ஒரு வருஷம் வரை ஸ்நானம் உண்டு.

175. நித்யாக்னி கார்யம் செய்யாதவர்களுக்கு மரணமடைந்த தினத்திலிருந்து ஆசவுசம் அனுஷ்டிக்க வேண்டும். எந்த மாஹேஸ்வர பதவியுடைய நான்காம் வர்ணத்தவர்களும் விபூதி, ருத்திராக்ஷம் தரித்தவர்களும் இறந்தால்

176. அவர்களுக்காக பிறப்பு தீட்டு இறப்பு தீட்டு 15 தினங்கள் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறே ஐந்து ஆசார்ய ஸ்தானங்களையுடைய ருத்ரகன்னிகைகளும் 15 தினம் தீட்டை அனுஷ்டிக்க வேண்டும்.

177. கீழ்த்தரமான அனுலோமத்தவர்களுக்கும் அவ்வாறே விபூதி ருத்திராக்ஷம் தரித்தவர்களுக்கும் மரணம் ஸம்பவித்தால் தொடக் கூடாது. ஸ்பிண்டர்களுக்கும் தகனம் செய்வது கூறப்பட்டுள்ளது.

178. பிறந்த தீட்டைவிட இருமடங்கு இறப்பு தீட்டும் அதை விட இருமடங்கு ஆர்த்வம் என்ற அகால மரணத்தீட்டும் அதை விட இருமடங்கு சூதிகா என்ற தீட்டும் அதைவிட தகன கிரியையும் சம்மந்தம் உள்ளதாக ஆகிறது.

179. இவர்களால் பிரேதத்தை சுமந்து ப்ரேதஸ்பர்சம் செய்யப்பட்டதோ அவர்கள் நக்ஷத்திர தரிசனம் வரையிலோ சூர்ய தரிசனம் வரையிலோ கிராமத்திற்கு வெளியே இருக்க வேண்டும்.

180. பிறகு அக்னியை தொட்டு பஞ்ச கவ்யத்தையும் நெய்யையும் அருந்த வேண்டும். இவ்வாறாக ஸாமான்யமான மனிதர்களின் இறப்பின் ஆசவுச முறை கூறப்பட்டது.

181. எந்த நான்காம் வர்ணத்தவர்கள் மாஹேஸ்வரர்களாக கூறப்படுகிறார்களோ அவர்கள் இஸ்யாத்யர் என கூறப்படுகிறார்கள். சைவ சம்மந்த பாட்டுகளை அறிந்தவர்களுக்கும் அவ்வாறே சிவாஸ்ரமத்தை கடைபிடிப்பவர்களுக்கும்

182. தேவதாசிகளுக்கும் இருபது நாட்களால் சுத்தி ஏற்படுகிறது. தாசன் தாசிகளுக்கு அவர்களை ஆச்ரயித்த குலத்தில் சொல்லப்பட்டதான ஆசவுசத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

183. கீழ்த்தர வர்ணங்களில் ஆசவுசம் கூறப்படவில்லை. ருத்திர கன்னிகைகளில் குலமானது தாய்வழியாக உள்ளபடி கூறப்பட்டுள்ளது.

184. அவ்வாறே தேவதாசிகளுக்கும் தாய்வழியில் உள்ள தன்மையாக தீட்டு கூறப்பட்டுள்ளது. அரசர்கள் பிரோஹிதர்களுக்கும் பிறப்பு இறப்பு தீட்டு கிடையாது.

185. ஸமய தீøக்ஷ பெற்றவனுக்கு நித்யகர்மாக்களில் ஆசவுசம் எப்பொழுதும் ஏற்படவில்லை. க்ருஹஸ்தன் இல்லாதவன் விருதத்துடன் கூடியவனுக்கும்

186. நிர்வாண தீøக்ஷயுடன் கூடியவன் அனுஷ்டானம் செய்பவர்கள் நல்ல ஆத்மாக்கள், க்ருஹஸ்தர்கள் ஆகியவர்களுக்கு நித்ய நைமித்ய கர்மாக்களில் ஆசவுசம் இல்லை.

187. காம்ய கர்மாக்களில் ஆசவுசமானது ஏற்பட்டால் ஸ்நானம் செய்வதால் சுத்தி அடைகிறது. விரதிகளுக்கு ஸ்நானம் கூறப்படவில்லை. தனியாக சமைத்து உண்பவர்க்கு ஆசவுசம் இல்லை.

188. இவ்வாறாக தன்பொருட்டும் பிறர் பொருட்டுமாக ஆசவுச விஷயம் கூறப்பட்டது. பிறர் பொருட்டான பரார்த்தத்தை உலக ஸம்ரக்ஷணத்திற்காக விட்டு விடவேண்டும்.

189. ஸஹோதரர் மகன், தகப்பனார், மற்ற பந்து ஜனங்கள் ஞாதிகள் என்று கூறப்படுகிறார்கள். ஞாதிகளின் ஸ்திரீகளின் பிறப்பு விஷயத்தில் ஆசவுசம் கூறப்படவில்லை.

190. ஏழுதலைமுறை உள்ளவர்களிடமிருந்து உண்டான புருஷர்களின் பிறப்பு இறப்புகளில் தீட்டு அனுஷ்டிக்கப்பட வேண்டும். அவ்விடத்திலும் ஐந்தாம் தலைமுறைக்கு மேல் மூன்று நாள் ஆசவுசம் அனுஷ்டிக்க வேண்டும்.

191. இதற்கு மேல் உள்ள அறிந்ததான பந்துக்களின் ஆசவுசம் ஒன்றரை தினம் பிராமணர்க்கு விவாகமாய் இருப்பினும் அவ்வாறே க்ஷத்திரியர் முதலிய வம்சங்களுக்கும் ருதுவான பிறகும் (விவாகத்திற்கு பிறகு) ஆசவுசம் அனுஷ்டிக்க வேண்டும்.

192. பிராம்ணர் முதலானவர்கள் பிறப்பு விஷயத்தில் ஒன்று இரண்டு, மூன்று என்ற குறைவான முறைப்படியும் முறையில்லாமல் பிறந்தவர்களுக்கு இரண்டு, மூன்று நான்கு என்ற நாட்களின் அதிகப்படியானால் சுத்தி ஏற்படுகிறது.

193. கீழ்த்தரப் பட்டவர்ணத்தவர்களுக்கு ஆசவுசம் இல்லை. ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் ஆசாரம் அற்றவர்களாக இருக்கிறார்கள். ஸாமான்யமான ஸ்திரீகள் எப்பொழுதும் பரிசுத்தமானவர்கள் அல்ல.

194. அபிஷேகத்தினால் சுத்தமாக்கப்பட்ட அரசர்கள் எப்பொழுதும் சுத்தி உள்ளவர்களாக ஆகிறார்கள். மஹான்களும் மந்திரிகளும் மஹேசனிடம் ஆர்வம் பக்தி உள்ளவர்களாக

195. சிவகைங்கர்யத்தில் ஈடுபட்ட எந்த நான்காம் வர்ணத்தவர்கள் விபூதி ருத்திராக்ஷம் இவைகளுடன் கூடியவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் இருபது நாள் முதல் இருபத்தி ஐந்து நாள் வரை ஆசவுசம் அனுஷ்டித்து சுத்தியுள்ளவர்கள் ஆகிறார்கள்.

196. இறப்பு பிறப்பு சம்மந்தமுள்ளவர்கள் நித்ய அனுஷ்டானத்தை எவ்வளவு தினங்கள் அனுஷ்டிக்காமல் இருக்கிறார்களோ அவ்வளவு நாட்கள் சுத்தி உள்ளவர்கள் ஆகிறார்கள்.

197. நித்ய அனுஷ்டானம் செய்யாமல் இருந்ததிற்கு பிராயச்சித்தமாக இரவில் யவையானாலான போஜனமும் மூன்று காலமும் ஸ்நானம் பூஜை ஹோமம் ஜபம்.

198. இவைகளின்றி இடையூறு இல்லாமல் யோகாப்யாசம் செய்து அதன் முடிவில் மூன்று இரவு யோகமின்றி எப்பொழுது குறைவு ஏற்படுகிறதோ அப்பொழுது மூன்று தினங்கள் யோகத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

199. பக்தி ஞானம் வைராக்யம், இவைகளில் ஏதேனும் ஒன்றில் எவனுக்கு நன்கு ஈடுபாடு ஏற்படுகிறதோ அந்த ஸமயதீøக்ஷ உள்ளவனால் பூஜா கார்யம் செய்தல் வேண்டும்.

200. மந்தம், மந்ததரம் என்ற தன்மையோடு எவர்க்கு பக்தி, ஞான வைராக்யம் உள்ளதோ அவர்கள் இரண்டு நாள் அந்தர்யாகம் செய்ய வேண்டும்.

201. ஓர் தினம் யவையை புசித்து அல்லது அவிசயோ புசித்து ஸ்னானத்தின் முடிவில் ஆயிரம் ஆவிருத்தி அகோர ஜபம் செய்து பத்தில் ஓர் பாகமாக 100 ஆவிருத்தியை ஹோமம் செய்ய வேண்டும்.

202. எவனுக்கு சிகாசேதனம் இல்லையோ அந்த பாதார்தகன் என்ற ஸமயதீøக்ஷ பெற்றவனுக்கு மேல் கூறிய முறைப்படி ஜபங்களை அனுஷ்டிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

203. சிகாசேதனம் செய்து கொண்ட நிர்வாணதீøக்ஷ பெற்றுக் கொண்டவனுமான தீக்ஷிதனுக்கு நித்யம், நைமித்திகம், காமியம் மற்றும் எல்லா விசேஷ கிரியைகளுக்கும் யோக்யனாகிறான்.

204. சிகாதேசனம் இல்லாதவனுக்கு நித்ய கர்மாக்களில் மட்டும் யோக்யதை உண்டு. இவ்வாறாக எல்லோர்க்கும் ஆலய பிரவேசமானது.

205. அர்த்த மண்டபத்தின் வெளியில் வரை பிரவேசிப்பது குற்றமில்லை என கூறப்படுகிறது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் அந்த்யேஷ்டிவிதியாகிற இருபத்தியேழாவது படலம்.
படலம் 26: சதாபிஷேக விதி!

26 வது படலத்தில் சதாபிஷேக விதி கூறப்படுகிறது. முதலில் ஆயிரம் சந்தினை கண்ட தீஷிதர்களுக்கு அகால மரணத்தை போக்குவதும், ஆயுள் ஆரோக்யம், இவைகளை விருத்தி செய்வதும், புத்திரன், பேரன், தனம், பயிர்செழிப்பு இவைகளை அதிகரிக்கச் செய்வதுமான சதாபிஷேகம் பற்றி கூறுகிறேன் என்பது கட்டளை உத்தராயண காலத்தில் சுக்லபக்ஷத்தில் நல்ல திதி கிழமை லக்னம் இவைகளுடன் கூடிய நல்ல தினத்தில் அபிஷேகம் செய்யவேண்டும் என காலம் அறிவிக்கப்படுகிறது. பிறகு மண்டபத்திலோ பந்தலிலோ, கொட்டகையிலோ, சுத்தமான தேசத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும் என கூறி, மண்டம் முதலியவைகளை அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு பிராமணன் முதலிய நான்கு ஜாதியில் பிறந்தவர்களும் கீழ் ஜாதியில் பிறந்தவர்களும் அந்தந்த ஜாதியில் உண்டான ஸ்திரிகளும் விசேஷமாக சக்ரவர்த்திகள் மந்திரிகள், அரசர்கள், அமைச்சர்கள், ராஜ புரோகிதர்கள், ஆகிய இவர்களின் ஸ்திரிகளும் சதாபிஷேகம் செய்ய யோக்யமானவர்கள் ஆவார்கள் என கூறப்படுகிறது. எல்லா லக்ஷணத்துடன் கூடியவரும் பஞ்சாங்க பூஷணத்துடன் கூடியவருமான சிவ திவிஜனான ஆசார்யன் அபிஷேகம் அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. அபிஷேக தினத்திற்கு முன்தினம் ராத்திரியில் எஜமானனுக்கும் அவர் மனைவிக்கும் ரக்ஷõபந்தனம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. அதில் சக்கரவர்த்தி விஷயத்தில் முக்யமான மனைவிகள் பலபேர் இருந்தால் அவர்களுக்கும் ரக்ஷõ பந்தனம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. அந்த முன்தின ராத்திரியில் பால் குடித்து கம்பளம் முதலியவைகளால் செய்யப்பட்ட படுக்கையில் யஜமானன், தனியாக தெற்கு பாகத்தில் தலைவைத்துக் கொண்டு தூங்கவும் என கூறப்படுகிறது.

நன்கு அமைக்கப்பட்ட மண்டபத்தில் நூல் பிடித்து அளவு செய்யும் முறையாக மண்டலம் செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு மண்டல மத்தியில் கும்பத்தை வைப்பதற்கு ஸ்தண்டிலம் அமைக்கும் முறையும் சிவ கும்பம் வர்த்தனி மற்ற கலசங்களின் அளவு பற்றியும் அந்த கும்பங்களில் நூல் சுற்றும் முறை ஆகிய பல விஷயங்கள் கூறப்படுகின்றன. சிவ கும்பம் முதலிய கும்பத்தில் நதி முதலியவைகளின் ஜலத்தால் நிரப்புவது உயர்ந்ததாகும் என கூறி அந்த கும்ப தீர்த்தத்தில் சேர்க்க வேண்டிய வாசனை திரவ்யங்கள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு 108 கலச ஸ்தாபன முறையும் தேவதைகளை பூஜிக்கும் முறையும் திரவ்யங்களை சேர்க்கும் முறையும் கும்ப பூஜையும் அதன் மத்தியில் உள்ள கும்பத்தில் ஸர்வாங்க பூஷிதமான சிவனையும் வர்த்தனியில் மனோன்மணியையும் பூஜிக்கவும் யஜமானன் பல மனைவிகளுடன் இருந்தால் பல வர்தனிகள் ஸ்தாபிக்கவும் அந்த எல்லா கும்பங்களிலும் மனோமணியையே பூஜிக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 108 கலசங்களின் பூஜை விஷயத்தில் ருத்திரர்களின் பெயர்களைக் கூறி பூஜிக்கவும் என கூறப்படுகிறது. ஆனால் முதல் ஆவரணத்தில் மட்டும் அஷ்டவித்யேஸ்வரர்களை பூஜிக்கவும் என தனியாக கூறப்படுகிறது. பிறகு யஜமானன் தீட்சிதனாக இருந்தால், தீட்சை செய்யவேண்டாம் என கூறப்படுகிறது. தீட்சை செய்யப்படவில்லை என்றால் அந்த அபிஷேக காலத்தில் தீட்சை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு மண்டபத்தில் செய்யவேண்டிய ஹோம முறையும் நிரூபிக்கப்படுகிறது. ஹோமம் முடிவில் மேற்படி இவ்வாறு முறையாக ஹோமம் செய்து மீதம் உள்ள ராத்திரி பொழுதை கழித்து உத்தமமான ஆசார்யன் தீட்சை செய்யப்படாதவர்களின் விஷயத்தில் பிரதானமான அக்னியால் தீட்சை செய்ய வேண்டும் என கூறி தீட்சை முறையும் முறை கூறப்படுகிறது.

பிறகு சிவ பஞ்சாக்ஷரத்தினாலேயே தீட்சை செய்ய வேண்டும் என அறிவிக்கிறார். பிறகு எஜமானனின் அபிஷேக முறை வர்ணிக்கப்படுகிறது. பிறகு அரசர்களின் அபிஷேகத்தில் தங்கம், வெள்ளி, முதலிய உலோகத்தினால் செய்யப்பட்ட சஹஸ்ர தாரா பாத்திரத்தினால் அபிஷேகம் செய்யவேண்டும் மற்ற எல்லா புருஷர்களுக்கும் சததாரா பாத்திரத்தினால் அபிஷேகம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. அபிஷேகத்திற்கு பிறகு செய்ய வேண்டிய முறை கூறப்படுகிறது. அபிஷேகம் செய்யப்பட்டவரை மனைவியுடன் கூட எல்லா அலங்காரமும் கூட பத்திராசனத்தில் அமர்த்தி தான்யங்கள் மது பாத்திரம் கன்றுடன் கூடி பசு அவைகளை தரிசனம் காண்பிக்கவும் பிறகு பந்துக்களால் பூஜிக்கப்பட்டவரும் சந்தோஷம் அடைந்தவரும் பாட்டு வாத்யத்துடன் கூடியவருமான அரசனை பல்லக்கில் ஏற்றி கிராம பிரதட்சிணம் செய்து வீட்டின் வாசலில் பலகையின் மேல் அமர்த்தி அவனுடைய பாதங்களை பாலாலும் ஜலத்தாலும் அலம்பி, மஞ்சள் நீர் விடுவதன் மூலமும் தீபத்துடன் கூடிய பெண்களால் மூன்று பிரதட்சிணம் செய்வித்து, பாதுகை போட்டுக்கொண்டு தன்னுடைய வீட்டை அடையவும் என்பதான கிரியாவிசேஷங்கள் சதா அபிஷேக விதியில் விவரிக்கப்பட்டுள்ளன. பிறகு அபிஷேக விஷயத்தில் 108 கலசத்தை ஸ்தாபனம் செய்து முறைப்படி செய்யவும் இந்த அபிஷேக முறை உத்தமமாகும். 49 கலசம் அல்லது 25 கலசம் 9 கலசம் 5 கலசம் 1 கலசம் முதலிய எண்ணிக்கை உள்ள கலசங்களால் அபிஷேகம் செய்வது வெவ்வேறு விதமாக கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் மூர்த்திபர்கள் ஜபம் செய்தவர்கள் ஸ்தோத்திரம் செய்தவர்கள் பக்தர்கள் ஆகியவர்களுக்கு தட்சிணை கொடுக்கும் முறை கூறப்படுகிறது. சதா அபிஷேக பயன்கள் விளக்கப்படுகின்றன. இவ்வாறாக 26வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஹே அந்தணர்களே! எதிர்பாராத ஆபத்துக்களை நீக்கவல்லதும் ஆயுள் ஆரோக்யத்தை அதிகமாக தரக்கூடியதுமான சதாபிஷேகத்தை சுருக்கமாக கூறுகிறேன்.

2. தனம் பயிர்களின் வளர்ச்சி புத்திரன் முதலிய ஸந்ததிகளை பெருக்குவது அபிஷேகத்தின் பயனாகும். அபிஷேகத்தின் முன்னதாக ஆயிரம் பிறை சந்திரனை தரிசித்த பெரியோர்களுக்கு சதாபிஷேகம் கூறப்படுகிறது.

3. உத்தராயணகாலத்தில் சுக்ல பக்ஷத்தில் சிறப்பான நல்ல லக்னமுடைய நல்ல கிழமை திதி இவைகளை உடைய நன்னாளில் சதாபிஷேகம் செய்து கொள்ளவேண்டும்.

4. அமைதியான குணம் எல்லா லக்ஷணங்கள் பொருந்திய ஆசார்யர் மங்களாங்குரம் செய்யப்பட்டு நன்கு அலங்கரிக்கப்பட்ட மண்டபத்திலோ

5. கொட்டகையிலோ பந்தலிலோ வளைந்து நீட்டமுள்ள தட்டு பந்தலிலோ அலங்கரிக்க பட்ட நல்ல மண்டபத்தில் ஐந்து முதல் ஐம்பத்தைந்து முழ அளவுள்ள இடத்தில்

6. நான்கு புறமும் அளவுடன் கூடிய நான்கு வாயில்களுடனும் நன்றாக அமைக்கப்பட்டு ஒன்று முதல் இருபத்தி ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு அழகாக உள்ள மண்டபத்தில் சதாபிஷேகம் செய்ய வேண்டும்.

7. அந்தணர், அரசர், வைச்யர், நான்காம் வர்ணத்தவர், அனுலோம பிறப்புடையவர்கள், தனிசிறப்புள்ள அரசர்கள்.

8. ராணி, அரசாங்க மந்திரிகள், அமைச்சர்கள், புரோகிதர்கள், அந்தந்த ஜாதியில் தோன்றிய பெண்களுக்குமோ சதாபிஷேகம் செய்து வைக்கலாம்.

9. (விபூதி) மோதிரம், தோள்வளை, அரைஞான் குண்டலம் யக்ஞோப வீதம் என்பதான ஐந்து அணிகலன்களுடன் கூடியதாக சதாபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகத்திற்கு முன் இரவில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

10. ஆசார்யன் யஜமானனின் வலது கையில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். முதன்மையான ராணிக்கு இடதுகையில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

11. முக்யமான மனைவி பல இருப்பின் அவர்களுக்கும் ரக்ஷõபந்தனம் செய்விக்க வேண்டும். அன்று இரவில் பால் அருந்தி கம்பளம் முதலான படுக்கியில்

12. தெற்கு பக்கம் தலைவைத்து தனிமையாக படுத்து உறங்க வேண்டும். முன்பு கூறப்பட்ட முறைப்படி மண்டபம் அமைத்து

13. சில்பியைத் திருப்தி செய்வித்து புண்யாஹ வாசனம் செய்ய வேண்டும். மேற்கிலிருந்து கிழக்கு நுனியாகவும் தெற்கிலிருந்து வடக்கு நுனியாகவும் பதினான்கு கோடுகள் கல்பிக்க வேண்டும்.

14. இவ்வாறு நூற்றி அறுபத்தி ஒன்பது பதங்களை உடைய மண்டபத்தை நன்கு அமைக்க வேண்டும். இந்த மண்டபத்தில் நடுவில் இருபத்தி ஐந்து பதங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

15. சுற்றிலும் எட்டுத்வாரத்துடன் கூடியதாக ஒவ்வொரு பதத்தைவிட்டு விட்டு த்வாரத்திற்காக எட்டு பதங்களை விட்டு நான்கு திசையிலும் இரண்டு பதங்களால் நான்கு த்வாரங்களை அமைக்க வேண்டும்.

16. இவ்வாறு மண்டலபதங்களை த்வாரம் மத்யபதம் இவைகளுக்கு எடுத்தது போக மீதமுள்ள பதங்கள் நூற்றி எட்டாகும். இருபத்தி ஐந்து பத மத்தியில் ஸ்தண்டிலம் அமைத்து இரண்டு மரக்கால் அளவு நெல்லை பரப்ப வேண்டும்.

17. வர்தநீ கும்பத்திற்கு அதில் பாதி நெல்லும் மற்ற கலசங்களுக்கு ஒரு மரக்கால் ஆகும். ஒரு மரக்கால் நெல் அதமம். இரண்டு மரக்கால் அளவு மத்யமமாகும்.

18. மூன்று மடங்கு அளவு உத்தமாகும் இவ்வாறு உத்தமாதிகளின் அளவு கூறப்பட்டு உள்ளது. ஒரு மரக்கால் அரை மரக்கால் கால்பாக மரக்கால் என்ற அளவு கீழ்தரமாகும்.

19. இந்த நெல் அளவானது கீழ்தரமான அளவென கூறப்பட்டுள்ளது. சாலி என்ற வகை உள்ள நெல் இல்லைஎனில் வ்ரீஹி என்ற நெல்லை உபயோகித்துக் கொள்ளவும் நெல் அளவின் பாதி அரிசியும்

20. அதில் பாதி எள்ளும் அல்லது அரிசியின் நான்கில் ஒரு பங்கு எள்ளுமோ ஏற்றுக் கொள்ள வேண்டும். குறைந்த வருமானமுள்ளவர்கள் எட்டில் ஒரு பங்கு ஸ்தண்டில த்ரவ்யங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

21. முப்பத்திரண்டு படி அளவு நீர்பிடிக்கும் கும்பத்தை நடுவில் சிவகும்பமாக வைக்க வேண்டும். சிவகும்ப நீரளவின் பாதி நீர் கொள்ளளவு கொண்ட கும்பத்தை வர்த்தனீ கும்பமாக ஸ்தாபிக்க வேண்டும்.

22. வெளியில் உள்ள கலசங்கள் நான்கு படி அளவுள்ள நீரில் கொள்ளளவு கொண்டதாக அமைக்க வேண்டும். ப்ரதான கலசங்களை முப்புரி நூலாலும் வர்த்தனிகளை இரண்டு இழை நூலாலும்

23. மற்ற கும்பங்களில் ஓர் இழை நூலாலும் சுற்ற வேண்டும். ஒவ்வொரு கும்பமும் தனித்தனியாக வஸ்திரம். தங்கத்துடன் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

24. சந்தனம் அகில், பச்சகற்பூரம் கீழாநெல்லி, விளாமிச்சைவேர் கோரோஜனை வெண்கடுகு இவைகளை கலந்து நதிதீர்த்தங்களுடன் கும்பத்தை பூரணம் செய்வது உத்தமமாகும்.

25. பலவகையான வாசனைபொருட்கள் பலவித விதைகள் பலவகையான உலோகங்கள் பலவகையான தாதுக்கள் இவைகளோடு கும்பங்களை அமைக்க வேண்டும்.

26. பலதிசைகளில் இருந்து தயாரித்த மருந்துகள் பலவகைப் பழங்கள், புஷ்பங்கள் பசுவின் சம்பந்தப்பட்ட பால் தயிர் நெய் இவைகளோடு கூடியதாக கும்பத்தை அமைக்க வேண்டும்.

27. எல்லா கும்பங்களையும் ஸ்தாபித்து பத்திர புஷ்பங்களால் பூஜை செய்ய வேண்டும். ஸ்தாபித்த கும்பங்களின் பூஜையை நூற்றிஎட்டு ருத்ர நாமார்ச்சனைகளால் செய்ய வேண்டும்.

28. உத்தமமான ஆசார்யன் ஒவ்வொரு த்ரவ்யங்களையும் அந்தந்த அளவு ஸமர்ப்பிக்க வேண்டும். சிவகும்பத்தையும் வர்த்தனியும் இரு வஸ்திரங்களால் அலங்கரிக்க வேண்டும்.

29. ஒன்பது, ஐந்து எண்ணிக்கை உள்ள ரத்னங்களை சிவகும்ப சக்தி கும்பத்தில் சேர்க்க வேண்டும். மற்ற எட்டு கும்பங்களான முதல் ஆவரணத்தில் எட்டு லோஹங்களை சேர்க்க வேண்டும்.

30. தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், துத்தநாகம் ஆகிய இவைகளை அஷ்டவித்யேஸ்வர கும்பங்களில் சேர்க்க வேண்டும்.

31. இரண்டாவது ஆவரணத்தில் (இவ்வாறாக) தாதுக்களை வைக்க வேண்டும். அகில், கந்தகம் அரிதாளம், தேன்மெழுகு, மனஸ்சிலை

32. பாதரசம், அப்ரம், கைரிகை, அஞ்ஜனம் (புனுகு, ஜவ்வாது) ஜாதிலிங்கம், சிந்தூரம், துத்தம், வெங்காரம், படிகாரம்

33. காந்தம் ஆகிய பதினாறுவிதமான பொருட்கள் இரண்டாவது ஆவரணத்தில் வைக்க வேண்டும். கிழக்கிலுள்ள பன்னிரண்டு கோஷ்டங்களில் இரண்டு பக்கமான த்வாரத்தில் இருப்பதாக அமைக்க வேண்டும்.

34. புரசு, கருங்காலி, மாகரம், இச்சி, ஆல், வில்வம், வன்னி, காட்டுவாழை, அரசு இவற்றிலிருந்து உண்டானதும்

35. அத்தி, நார்த்தை, மாதுளவ்ருக்ஷம் ஆகிய இந்த மரங்களின் பட்டைகளை கலசத்திற்குள் வைத்து பூஜிக்க வேண்டும். உள்பக்கம் வாமாதி ருத்ரர்களை பூஜிக்க வேண்டும்.

36. தென்கிழக்கு திசையில் உள்ள ஒன்பது கலசங்களில் ம்ருத்திகைகளை வைக்க வேண்டும். ஆற்றுமண், மாட்டு தொழுவ மண், புற்றுமண், யானை தந்த மண்

37. கடல் மண், உழுத வயல் மண், மலை மண், அரசமரத்தடி மண், புனிதமான இடத்து மண், இவைகளை கும்பத்தில் சேர்க்க வேண்டும். வெள்ளை ஆம்பல், நீலோத்பலம், வெண்தாமரை, செந்தாமரை

38. மகிழம்பூ, அரளிப்பூ, பாதிரிப்பூ, கொக்கு, மந்தாரை, ஜாதி முல்லை, (மல்லிகை) நந்தியாவட்டை பூ இவைகளையும்

39. செண்பகப்பூ ஆகிய பனிரெண்டு புஷ்பங்களை பனிரெண்டு கும்பங்களில் (தெற்கு திசையில்) சேர்க்க வேண்டும். சந்தனம், விளாமிச்சை வேர், கீழாநெல்லி குங்குமப்பூ, கற்பூரம்

40. தக்கோலம், அகில், கிராம்பு, லவங்கப்பட்டை, இவைகளை தென்மேற்கு ஒன்பது கும்பங்களில் வைக்க வேண்டும். மேற்குதிசையில் வைக்க வேண்டியவைகளை இனி கூறுகிறேன்.

41. மூங்கில் அரிசி, உளுந்து கோதுமை, நீண்ட நெல், நாயுருவி, எள், பயறு தினை, வெண்கடுகு, நீவாரம் (ஓர் வகை நெல்)

42. சாமை, துவரை இவைகளை வரிசையாக மேற்குதிக்கில் வைக்க வேண்டும். தாமரை, சங்கு புஷ்பம், விஷ்ணுக்ராந்தை, ஹம்ஸ புஷ்பம்

43. துளசி, செங்கழுநீர் பூ, இந்திரவல்லி, தாமரை, சூர்யாவர்த்தம் இந்த ஒன்பதும் வடமேற்கு திசையில் வைக்க வேண்டும்.

44. பஞ்சகவ்யம், பசுவின் பால், தயிர், கோமூத்ரம், கோசாணம், இளநீர், மாதுளம்பழம், இவைகளும்

45. நார்த்தம்பழம், வில்வம், பலாப்பழம், மாம்பழம், கொய்யாப்பழம் இவைகளை வடக்கில் வரிசையாக கும்பங்களில் வைக்க வேண்டும்.

46. வடகிழக்கு திசையில் ஒன்பது கலசங்களில் வாசனை உள்ள தீர்த்தங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறாக த்ரவ்யங்களை நிரப்பி சிவன் முதலானவர்களை அர்ச்சிக்க வேண்டும்.

47. மூர்த்திபர்களுடன் ஆசார்யன் ஸ்நானம் செய்து விபூதி ருத்ராக்ஷம் அணிந்து புத்தாடை கட்டிக் கொண்டு அங்கவஸ்திரம் தலைப்பாகையுடன்

48. மோதிரம் முதலான பஞ்சாங்க பூஷணங்களுடன் கூடி மண்டபத்தின் த்வாரபூஜை முதலியவைகளை செய்ய வேண்டும்.

49. நடுவில் உள்ள கும்பத்தில் சிவபெருமானை ஸாங்கோபாங்கமாக பூஜிக்க வேண்டும். ஒரே மனைவி இருந்தால் ஒரு வர்த்தனி கும்பத்தில் மனோன்மணியை பூஜிக்க வேண்டும்.

50. பல மனைவிகள் இருப்பின் அவர்களுக்கு உண்டான பூஜையை பல வர்த்தனி கும்பத்தில் மனோன்மணியையோ பூஜிக்க வேண்டும். சதாபிஷேகம் செய்து கொள்ளும் அரசன் தீøக்ஷ செய்து கொள்ளாமல் இருப்பின் அந்த காலத்தில் தீøக்ஷ செய்யப்படவேண்டும்.

51. மண்டலத்தில் கிழக்கிலோ, ஈசான்ய திக்கிலோ வடக்கிலோ, தெற்கிலோ ஹோமகுண்டம் அமைக்க வேண்டும்.

52. பிறகு இவ்வாறாக செய்யாமல் சிவகும்பத்தை மட்டுமாவது பூஜித்து தீøக்ஷக்கு புஷ்பம் போடுவது முதலியவைகளை செய்து விசேஷமாக ஹோமம் செய்ய வேண்டும்.

53. சந்தனம், புஷ்பம், தூபம், தீபம் மற்றும் விசேஷமான மற்ற உபசாரங்கள் செய்து நவாக்னி பஞ்சாக்னி அல்லது ஏகாக்னியையோ கல்பித்து பூஜிக்க வேண்டும்.

54. சமிது நெய், ஹவிஸ், பொறி, எள், மூங்கில் அரிசி, உளுந்து, மற்ற ஹோமத்திற்கு உரியதான த்ரவ்யங்களை முறைப்படி வித்வான் ஹோமம் செய்ய வேண்டும்.

55. அத்தி ஆல், அரசு இச்சி இவைகளை இந்த்ராதி திக்குகளிலும் வன்னி, கருங்காலி நாயுருவி பில்வ்ருக்ஷம் சமித்து முதலியவைகளை ஆக்னேயாதி திக்குகளிலும்

56. புரசு சமித்தால் ப்ரதாந குண்ட ஹோமம் செய்ய வேண்டும். சிவமந்திரம் ஈசனாதி பிரம்ம மந்திரம் ஹ்ருதயம் முதலான அங்க மந்திரம் இவைகளால் முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும். தேவிக்கு பிரதான குண்டத்தில் எல்லா த்ரவ்யங்களையும் ஹோமம் செய்யவேண்டும்.

57. மூலமந்திரத்தால் நூறு, அல்லது ஐம்பது அல்லது இருபத்தி ஐந்து என்ற எண்ணிக்கையால் ஹோமமும் பிரம்ம மந்திர அங்கமந்திரங்களால் பத்தில் ஒரு பாகம் தனித்தனியே ஹோமம் செய்ய வேண்டும்.

58. முறைப்படியே ஹோமம் செய்து இரவு பொழுதை கழித்து பிறகு குருவானவர் அந்த சதாபிஷேக கர்த்தாக்களுக்கு பிரதான அக்னியில் தீøக்ஷ செய்விக்க வேண்டும்.

59. சதாபிஷேகம் செய்து கொள்ளும் கர்த்தா தீøக்ஷ பெறப்படாதவராக இருப்பின் சிவகும்பத்தில் சிவனை பூஜிக்க வேண்டும். பஞ்சாக்ஷரத்தினால் சிவாயை நம: என்று

60. வர்த்தனி கலசத்தில் கவுரியையும் பூஜிக்க வேண்டும். மற்ற கலசங்களில் பஞ்சாக்ஷர மந்திரத்தோடு கூடியதாக ருத்ரனை அர்ச்சிக்க வேண்டும்.

61. தீøக்ஷக்காக நூறு ஆவ்ருத்தி ஹோமம் செய்து தீøக்ஷ தர்சனத்திற்கு எல்லா பாபத்தை போக்குவதற்காக ஸர்வதோபத்ரம் என்ற மண்டலத்தை அமைத்து கொள்ள வேண்டும்.

62. விரும்பிய பயன் எல்லாவற்றையும் அடைவதற்காகவும் மிகவும் நன்கு ஒளிமயமான வாழ்க்கை அமையவும் யோக்யமான ஆடை ஆபரணங்களால் அலங்கரித்தும் காலை ஸ்நானம் செய்து

63. எல்லா அலங்காரத்துடன் கூடி சதாபிஷேக மண்டபத்திற்கு கர்த்தாவை அழைத்து வரவும். கால்களை சுத்தி செய்து கொண்டு ஆசமனம் செய்து அமைதியானமனம் உடையவராக

64. அழைத்து சென்று ஓம்காரத்தினால் தெற்கு வாயிலை பிரோக்ஷித்து அந்த கர்த்தாவினாலேயே புஷ்பாஞ்சலியையும் வலம் வந்து நமஸ்கரிப்பதையும்

65. செய்யச்சொல்லி கும்பம், மண்டலம், வஹ்நி இவைகளில் இருக்கும் சிவனை பூஜித்து ஸ்நான வேதிகையில் ஆசார்யன் கீழ் கூறும் லக்ஷணம் உள்ள பீடத்தில் ஸ்தாபிக்க வேண்டும்.

66. பாலுள்ள மரத்தில் உண்டானதும் மாமரம், பலாமரம், வில்வமரம், நாவல்மரம், அரசமரம், இவைகளினால் ஆன பத்ர பீடத்தில் கர்த்தாவை அமர்த்த வேண்டும்.

67. சதாபிஷேக கர்த்தா அரசனாக இருப்பின் ஸஹஸ்ரதாரை பாத்திரத்தினால் அபிஷேகம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு நூறுத்வாரமுள்ள சததாரை பாத்திரத்தால் அபிஷிக்க வேண்டும்.

68. தங்கம், வெள்ளி அல்லது வேறு உயர்ந்த உலோகமுடைய தாரா பாத்திரத்தினால் அபிஷேகம் செய்ய வேண்டும். கர்த்தாவை எல்லா விதமான அலங்காரத்துடன் கூடியதாக செய்து நெல்லிமுல்லி முதலானவைகளால்

69. மற்ற ஸ்நான த்ரவ்யங்களாலும் ஸ்நானம் செய்வித்து உடம்பிலுள்ள நீரை நல்ல வஸ்திரத்தால் நன்கு துடைத்து கொண்டு அணிந்த வஸ்திரங்களை அவிழ்த்து விட்டு

70. சந்தனம் முதலியவைகளால் உடலில் பூசி வாசனை புஷ்பங்களால் அலங்கரித்து சாணம் மெழுகி அலங்கரிக்கப்பட்ட சுபமான வேறு இடத்தில்

71. ஸ்தண்டிலம் கல்பித்து அங்கே பத்ராஸநத்தை அமைக்க வேண்டும். புலித்தோல் நல்ல வஸ்திரம் ஆகியவைகளை தங்கத்தாமரையும் பத்ராசனத்தில் மேல் வைத்து

72. நடுவில் மனைவியுடன் கூடியதாக அபிஷேகம் செய்யப்பட்டவனை நடுவில் ஸ்தாபிக்க வேண்டும். அந்த கர்த்தாவை ஆசமனம் செய்யச் சொல்லி மந்திரமய சரீரமாக்கி சந்தனம் முதலியவைகளாலும் பலவித மாலைகளாலும்

73. வாசனை உள்ள புஷ்பங்களாலும் எல்லா அலங்காரத்துடனும் அலங்கரித்து பெரிய வஸ்திரத்தால் போர்த்தி அவன் முன்னிலையில் மெழுகப்பட்ட

74. இடத்தில் எல்லா தான்யங்கள் தங்கத்தால் ஆன தேன் பாத்திரத்தை ஸ்தாபிக்க வேண்டும். பால் கறக்க கூடியதும் கூடியபசுவை பார்க்கச் சொல்ல வேண்டும்.

75. பந்துக்களால் பூஜை செய்யப்பட்டவரும் சந்தோஷம் உடையவராக வஸ்திரம் ஸ்வர்ண மோதிரம் ஸ்வர்ண புஷ்பம் இவைகளாலும் மத்தளம், பாட்டு வாத்யம் இவைகளுடன் கூடி

76. பல்லக்கில் ஏறி கிராமப்ரதட்சிணத்தை செய்து மாளிகையின் வாசற்படியிலோ அதற்கு முன்னதாகவோ மெழுகப்பட்டதும் அங்குரார்ப்பணத்துடன்

77. பூர்ணகும்பம், தீபம் இவைகளுடன் கூடி பலகையின் மேல் அமர்த்தி அவரின் பாதங்களை பால் ஜலம் இவைகளினால் அலம்ப வேண்டும்.

78. பின்னர் தீபத்தோடு மஞ்சள் தீர்த்தத்தை ஸ்திரீகள் தெளித்து கொண்டு 3 முறை வலம் வருதல் வேண்டும்.

79. பிறகு பாதுகையோடு தன் கிருஹத்தில் பிரவேசிக்க வேண்டும். நாற்பத்தி ஒன்பது கலசம் அல்லது மேற்கூறியபடி நூறு கலசங்கள் வைத்து பூஜிப்பது ச்ரேஷ்டமானதாகும்.

80. இருபத்தி ஐந்து கலசம் அல்லது ஒன்பது கலசம் அல்லது ஐந்து கலசங்களாலோ அல்லது ஒரே கலசத்தாலோ அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.

81. பிறகு உயர்ந்த உத்தமான சம்பாவணையாகவும் வேலைக்காரி, வேலைக்காரன், பூமி பசு வீடு மற்றும் உபகரணங்களை குருவிற்கு தட்சிணையாக கொடுக்க வேண்டும்.

82. பின்னர் ஆசார்யர்களுக்கும், ஜபம் செய்த அந்தணர்களுக்கும் ஸ்தோத்திரம் சொன்னவர்களுக்கும், பக்தர்களுக்கும் முன்பு கூறியபடி தட்சிணையை அளிக்க வேண்டும்.

83. தன் தகுதிக்கு ஏற்றவாறு பூஜைகள் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு எந்த கர்த்தாவானவர் சதாபிஷேகம் செய்கிறாரோ அவர் தர்மத்தில் நிலைபெற்ற மதியுடன் பூவுலகில் விளங்குகிறார்.

84. இந்த லோகத்தில் தனவானாகவும் குழந்தைகள் உள்ளவராகவும் வெற்றியுடன் கூடியதாகவும், ஆயுள், ஆரோக்யம், கார்யசித்தி மனைவி மக்களுடன் இருந்து மேலான கதியை அடைகிறார்.

85. எந்த இடத்தில் இந்நாட்டில் முறைப்படி சதாபிஷேகம் செய்யப்படுகிறதோ அவருக்கு அக்கால ம்ருத்யு இல்லை. பாபம் செய்பவனும் இருக்க மாட்டான். ஐஸ்வர்யமின்மையும் ஏற்படாது.

86. எங்கும் பயமில்லை, சத்ரு முதலியவரால் துன்பம் இல்லை. உரிய காலத்தில் மழை பெய்ய கூடியதாக மேகமும் சுபிக்ஷமும் அரசன் வெற்றியை உடையவனாகவும் எல்லா உயிர்களும் அமைதியாகவும் பசுக்கள் பால் நிறைந்தவைகளாகவும் நல்ல பயன்கள் ஏற்படும்.

இவ்வாறு உத்தரகாமிகாமக மஹாதந்திரத்தில் சதாபிஷேக முறையாகிற இருபத்தியாறாவது படலமாகும்.