செவ்வாய், 8 அக்டோபர், 2013

படலம் 6: மஹோத்ஸவ விதி

ஆறாவது படலத்தில் மஹோத்ஸவ விதியாகும். அதில் முதலாவதாக த்வஜாரோஹணா வரோஹாந்தகிரியை உத்ஸவம் என உத்ஸவ என உத்ஸவ ஸ்வரூப விவரணம். பிறகு த்வஜாங்குரம் த்வஜாங்கமாகும். ஆகையால் அந்த அங்க கிரியையை த்வஜாரோஹபூர்வம் செய்ய வேண்டும். என த்வஜாங்குரகர்மா சூசிக்கப்படுகிறது. பின்பு தீர்த்த நட்சத்ர திதி நிச்சயித்து த்வஜாரோஹணம் ஆரம்பிக்க என கூறி தீர்த்த நட்சத்ர பிரகாரம் கூறப்படுகிறது. பின்பு அதிவாசத்திற்கு முன்பாக கொடி ஏற்றுக என கூறி த்வஜாதிவாஸவிதி பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் த்வஜபடலக்ஷணம் த்வஜபடத்தில் விருஷபாதி லேகன பிரகாரம் நயனோன்மீலனம் வ்ருஷபயாக காரணம் கூறப்படுகிறது. அந்த சமயம் காலையில் த்வஜபடம் பூஜித்து அதை திரிசூல ஸஹிதம் தேவேச சஹிதம் அல்லது தேவேச வியுக்தமாகவோ, படிசட்டம், பல்லக்கிலோ ஆரோஹித்து பல ந்ருத்த வாத்யஸஹிதமாகி க்ராம ப்ரக்ஷிணம் செய்து ஆலயப்ரவேசம் செய்க என கூறி பிறகு த்வஜாரோஹ தினத்திலோ, அதிவாஸ தினத்திலோ த்வஜதண்டம் ஸ்தாபிக்க என்று கூறி த்வஜதண்ட ஸ்தாபன பிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. அதில் த்வஜதண்டப்ரமாணம், த்வஜதண்டவ்ருக்ஷ, த்வஜயஷ்டி, ஸம்பாதநக்ரமம், ஸ்கந்தவலய பிரகாரம், ரஜ்ஜுஸம்பாதந த்வஜதண்ட ஸ்தாபன விஷயம், கிரியா நிரூபணம், த்வஜ தண்ட ஸ்தாபன யோக்யஸ்தான தண்டமூலத்தில் வேதி கல்பன பிரகாரம் இவ்வாறான விஷயங்கள் கூறப்படுகிறது. பிறகு த்வஜா ரோஹந விதி பிரதிபாதிக்கப்பட்டு அதில் முடிவாக த்வஜாரோஹணம் முதல் த்வஜாரோஹவஸாநம் வரை ஏககாலம், திவிகாலம், திரிகாலமோ, விருஷபத்தை பூஜிக்க என கூறப்படுகிறது. பிறகு பேரீதாடநவிதி கூறப்படுகிறது.

அங்கு பேரீதாடனம் விதிப்படி ராத்ரியில் செய்ய வேண்டும் பேரீதாடநப்ரகாரம், அக்காலத்தில் வினியோகிக்கிறராகதாளாதி பிரயோஜநம் நிரூபிக்கப்படுகிறது உத்ஸவம், பேரீதாடன பூர்வம், த்வஜ பூர்வம் அங்குரார்ப்பணபூர்வம் என திரிவிதமாகும் என கூறி அன்று மூன்று விதத்திலும் செய்யக் கூடிய கிரியா விசேஷம் கூறப்படுகிறது. யாகசாலை நிர்மாண பிரகாரம், வேதிகா ஸ்தண்டில கல்பனபிரகாரம், கும்பஸ்தாபனவிதி, அஷ்டமங்கல, தசாயுத ஸ்தாபன விதி இவ்வாறான விஷயம் கூறப்படுகிறது. பின்பு ரக்ஷõபந்தன விதி கூறப்படுகிறது. ஸூத்ர லக்ஷணம் பஸ்மாதார பாத்ரத்தில் ஸூத்ரந்யாஸ பிரகாரம் தேவதேவியின் ரக்ஷõபந்தனத்தின் விசேஷ நிரூபணம், தசாயுதங்களின் ரக்ஷõபந்தனவிதி இவ்வாறாக விஷயங்கள் சிறப்பாக பிரதிபாதிக்கப்படுகிறது. பிறகு யாகாரம்பத்தின் முன்தினம் அல்லது அந்ததினத்திலோ தீர்த்தாங்குரார்பணம் செய்ய வேண்டுமென தீர்த்தாங்க கர்மா சூசிக்கப்படுகிறது. பிறகு ஹோமவிதிமுடிய செயற்பாலது எனக்கூறி பலிதான விதி விளக்கப்படுகிறது. பின்பு யாகசாலையில் விதிக்கப்பட்ட பூஜாவிதி, ஹோமவிதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஹோமமுடிவில் அல்லது ஹோம ஆரம்பத்திலோ ஹவிஸ் கொடுக்க வேண்டுமென ஹவிஸ்தான விதி கூறப்படுகிறது. ஹோம விதி முடிவில் பலிதானம் செயற்பாலது என்று பலிதான விதி விளக்கப்படுகிறது. நவதின உத்ஸவ விஷயத்திலுமே 12 தின உத்ஸவ விஷயத்திலும் தின தேவர்களின் பலிதிரவ்யங்களின் விசேஷ நிரூபணம் காணப்படுகிறது.

முடிவில் காலை மாலை பலிகொடுக்கவும் என்று பலிதான காலம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பலிதான முடிவில் பலிகாலத்திலோ பேரயாத்ரை செய்தல் வேண்டுமென கூறி பேரயாத்ரை பிரகாரம் விசேஷமாக நிரூபிக்கப்படுகிறது. அதில் வாஹன விதி பேரக்ரமம் இத்யாதி விஷயம் பிரதிபாதிக்கப்படுகிறது. முடிவில் பிரதி தினம் உத்ஸவ காலத்தில் பகலிலும், இரவிலும் பேரயாத்ரை செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது யாநத்தின் முடிவில் தேவர்க்கு அவசியம் ஸ்நபனம் செய்ய வேண்டுமென கூறப்படுகிறது. மிருக யாத்திரையில் விசேஷமாக செய்ய வேண்டும் என சூசிக்கப்படுகிறது. பின்பு ரதாரோஹவிதியில் விசேஷம் பிரதிபாதிக்கப்படுகிறது. யாககாலத்தில் மழை முதலானவை ஸம்பவித்தால் செய்யக்கூடிய பிராயச்சித்த விதி நிரூபிக்கப்படுகிறது. பின்பு தீர்த்த திதியின் முன்பு ஐந்து நான்காம் தினத்தில் தைலாப்யஞ்ஜநம் ஆசரிக்கவும் என கூறி அப்பயஞ்சன விதி கூறுகிறார். பின்பு தீர்த்த திவஸ முன்தினம் செய்யக் கூடிய நடேசப்ரமண விதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஆசார்ய திருப்திக்காகசெய்ய வேண்டிய யாத்ராதான விதி நிரூபிக்கப்படுகிறது. ஆசார்ய சிவ வித்யாச தர்சனத்தில் அதோகதி பிராப்தி அடைவான் என்கிறார். பின்பு தீர்த்தோத்ஸவ விதி பிரதிபாதிக்கப்படுகிறது. சூர்ணோத்ஸவ முறையும் விதிக்கப்படுகிறது. பிறகு ஸமுத்ராதிகளான மஹாஜலத்தில் மஹாதீர்த்தம் செய்ய வேண்டும் என மஹாதீர்த்த விதி கூறுகிறார். பிறகு த்வரோஹண நிரூபிக்கப்படுகிறது. பின்பு அங்குரார்ப்பணம். துவஜாரோஹணம், ஹோம ஆரம்பம் நிருத்தமூர்த்தி உத்ஸவம், தீர்த்தம் சுத்த ஸ்நபனம் காலம் ஆகிய சமயங்களில் ஆசார்யனுக்கு வஸ்த்ர ஹேமாங்குலீயம் கொடுத்து பூஜிக்க வேண்டும். பிறகு ஆசார்ய தட்சிணை விஷயத்தில் உத்தம, மத்யம கந்ய ஸ்க்ரமம் நிரூபிக்கப்படுகிறது.

பின்பு பக்தோத்ஸவ விதி கூறப்படுகிறது. பிறகு ஸம்வத்ஸரோத்ஸவ காலத்தில் மாஸோத்ஸவ காலமேற்பட்டால் மாஸோத்ஸவவிதி பிரகாரம் சுருக்கமாக செய்யுமான பிரதிபாதிக்கப்படுகிறது. ஒரு தின உத்ஸவ விதி சூசிக்கப்படுகிறது. அதில் ஏகாஹோத்ஸவம் கர்த்தா இச்சையால் விருப்பப்பட்ட காலங்களில் செய்ய கூறி க்லுப்தககாலங்கள் கூறப்படுகிறது வாரபூஜை பிரதிபாதிக்கப்படுகின்றது. அதில் பிரதிவாரம் உபயோகிக்க வேண்டிய பத்ரங்கள் ரத்னங்களும் நிரூபிக்கப்படுகிறது. வாரோத்ஸவவம் ஆசரிக்க வேண்டும் என கூறி வாரோத்ஸவ கூறப்படுகிறது. ஸாமாந்யமாக உத்ஸவ விஷயத்தில் த்வஜத்தில் த்வஜமின்றியும் விருஷபத்வஜமே செயற்பாலது. இவ்வாறாக சிவோத்ஸவத்தில் த்வஜாரோஹணம் செய்த சமயத்தில் மற்ற தேவதைகளுக்கு த்வஜா ரோஹணம் செய்யக் கூடாது என்றும் செய்யக்கூடியவை கூடாதவை என விசேஷ விதி கூறப்படுகிறது. இங்கு வத்ஸரம், சவுரம், சாந்திரம், என இரண்டு விதம், அதில் சவுரம் சிரேஷ்டம், சாந்த்ரம்மத்யமம், ஸாவநம் என்ற பிரிவு அதமம் என கூறப்பட்டுள்ளது. உத்ஸவ விஷயத்தில் வேறுவிதமாக பூஜாகிரியை தொகுப்பு பிரதிபாதிக்கப்படுகிறது. முடிவில் த்வஜம் பன்னிரெண்டாவதாண்டின் முடிவில் செயற்பாலது என்கிறார். ஜீர்ணதோஷம் ஏற்பட்டால் வேறு த்வஜம் ஏற்படுத்தவும் என்று கூறியுள்ளது. இவ்வாறாக ஆறாவது படல கருத்து ஆகும்.

1. உரிய முறைப்படி உத்ஸவத்தை பற்றி சொல்லப்போகிறேன். கொடியேற்றுவது முதல் கொடி இறக்குவது வரை உள்ள செயல் உத்ஸவம் ஆகும்.

2. த்வஜ அங்குரம் த்வஜத்திற்கு அங்கமாகும். அந்த அங்குரத்தை கொடியேற்றுவதற்கு முன்பு செய்ய வேண்டும். ஆகையால் அதற்கு முன்பு தீர்த்த நட்சத்திரத்தை நிர்ணயித்து அதற்கு முன் தினத்திலே அங்குரம் செய்ய வேண்டும்.

3. இரட்டைப்படை நாளிலோ அல்லது அந்த நாளிலோ த்வஜாரோஹணம், செய்ய வேண்டும். எல்லா மாத நட்சத்திரம் எல்லா மாதத்திலும் உள்ள திருவாதிரை நட்சத்திரத்திலும்

4. அரசர்களின் பிறந்த நாள், நினைவு நாள் பட்டாபிஷேக நட்சத்திரம் மற்றும் மாசிமாத ஷஷ்டி வரையில் மற்ற எல்லா மாதங்களில் பவுர்ணமி வரையில்

5. விஷுவ புண்யகாலம், தட்சிணாயாண உத்தராயண காலம், சந்திர சூர்ய கிரஹண காலத்திலும் தீர்த்த நட்சத்திர தினத்தாலும் ஐந்து நாளிலும் அஷ்டமியிலும் மற்ற தீர்த்தநட்சத்திரம் வரையிலுமோ

6. முப்படை இரட்டைப்படை, அல்லது அந்த நாளிலோ பகலிலோ இரவிலோ, அதிவாஸன பூர்வமாக த்வஜத்தை ஆசார்யன் ஏற்ற வேண்டும்.

7. ஐந்தும் முழம் முதல் பதினான்கு முழம் வரையில் த்வஜத்தின் அளவாகும். இது தலையிலிருந்து அடிபாகம் வரை உள்ள அளவாகும்.

8. இரண்டும் சேர்ந்த அளவு நான்கு முதல் ஏழுவரை ஆகும். அவைகளைப் பிரிந்து ஒரு பாகம் கொடித்துணியின் பரப்பளவு என்று சொல்லப்படுகிறது.

9. அகல அளவின் சமமாகவோ முக்கால் பாகமாகவோ பாதிபாகமாகவோ ஆகும். அகலத்தின் பாதி அளவு தலை பாகமாகும். இரு வாலுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

10. இரண்டு குச்சியுடன் கூடியதாக அதன் நடுவில் விருஷபத்தை எழுத வேண்டும். நிற்பது போலவோ படுத்திருப்பது போலவோ எழுதலாம். ஆயம் என்ற அளவு முதல் சுபம் என்ற அளவு வரையிலுமோ உள்ளதாகி வரையவேண்டும். ஆயம்: கர்த்தாவின் நட்சத்திரம், வாஸ்த்து நட்சத்திரம் ஸ்வாமியின் நட்சத்திரத்தை சார்ந்து கணக்கிடுவதாகும்.

11. விருஷபம் வெள்ளை சிகப்பு நிறமாகவோ மஞ்சள் நிறமுடைய வாலும் சிவப்பு நிறமுள்ள கொம்புகள் குளம்புகள் இவைகளோடு கூடியதாக விருஷபம் இருக்க வேண்டும்.

12. கிராமத்தின் முக்கிய வீதி வழியாக வலம் வரும் பொழுது கிராமத்தை எதிர்நோக்கியதாக அமைக்க வேண்டும். ஐந்து முதல் முப்பத்தாறு அளவுள்ள மாத்ராங்குல தன்மையோடு கூடியதும்.

13. ஜாதி அம்சங்களோடு கூடியதும் மூன்று வர்ண கண்களோடு கூடியதும் எல்லா லக்ஷணங்களோடு கூடியதும் தங்க மாலையோடு கூடியதும் அந்த விருஷபம் இருக்க வேண்டும்.

14. கொடிமரம் மானாங்குலத்தாலும், விருஷபம் மாத்ராங்குலத்தாலும் செய்ய வேண்டும். கொடிபட விருஷபம் பத்மாஸனத்தோடு கூடியதாகவும் பக்கத்தில் இரண்டு தீபத்துடன் கூடியதாகவும்

15. இரண்டு சாமரங்களோடு கூடியதாகவும் குடையின்கீழ் தலை உடையதாகவும் பூர்ண கும்பத்தோடு கூடியதாகவும் அல்லது திரிசூலம் இதனோடு கூடியதாகவும்

16. இவ்விதம் விருஷபத்தை எழுதி கண்திறந்து சிவனுக்கு எதிரிலோ மண்டபத்திலோ அஸ்திர ஜலத்தால் பிரோக்ஷித்து

17. இரண்டு ஸ்தண்டிலங்களோடு கூடிய இடத்திலோ மனதைக் கவரும் வேறு இடத்திலோ பாத்திரத்தை முக்காலியின் மேல் உள்ள ஸ்தண்டிலத்தில் வைக்க வேண்டும்.

18. கொடி மற்றும் புதிய குடம், வஸ்த்ரம், கூர்ச்சம், ஸ்வர்ணம் ரத்னம், இவைகளோடு கூடியதும் நூல் சுற்றப்பட்டதும் நடுவில் விருஷபத்தை உடையதாகவும் இருக்க வேண்டும்.

19. அதே போல் வஸ்திரம் கூர்ச்சம் மாவிலை இவைகளோடு கூடிய கலசங்கள் எட்டு திக் பாலகர்களுக்காக விருஷப கும்பத்தை சுற்றிலும் வைக்க வேண்டும்.

20. ஆதார சக்தியாதி பூஜை செய்ய வேண்டும். விருஷப ஆசனம் கொடுத்து தர்மாதிகளை பூஜை செய்ய வேண்டும். ஓம் ஹாம் வ்ருஷபாஸநாய நம:) என்று கூறி பூஜிக்க வேண்டும்.

21. ஓம் ஹாம்வ்ரும் வ்ருஷப மூர்த்தயே நம: என்ற மந்திரத்தால் ஆவாஹணம் செய்ய வேண்டும்.

22. மேலே பஞ்ச பிரும்மங்களை பூஜித்து மூலமந்திரத்தால் பூஜிக்க வேண்டும். முறைப்படி ஹ்ருதயம் முதலிய மந்திரங்களை முறையாக பூஜிக்க வேண்டும்.

23. தத்வ தத்வேச்வரர்களோடும் மூர்த்தி மூர்த்தீச்வரர்களோடும் ஆவாஹணம் முதலியவைகளை செய்து விருஷப மூலமந்திரத்தால்

24. விருஷப காயத்திரியாலும் முறையாக நடுவில் பூஜை செய்து சந்தன, புஷ்பங்களால் அர்ச்சித்து சுற்றிலும் லோகபாலகர்களை பூஜை செய்யவேண்டும்.

25. முன்பே அமைக்கப்பட்ட குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ நிரீக்ஷணம் முதலிய ஸம்ஸ்காரங்களால் பரிசுத்தம் செய்து சிவாக்னியை ஸ்தாபிக்க வேண்டும்.

26. அதற்கு நடுவில் விருஷபத்தை ஆவாஹனம் செய்து ஸமித்து, நெய், அன்னம், இவைகளால் 108 ஆஹுதிகள் செய்ய வேண்டும்.

27. தத்வ தத்வேச்வரர்களையும் பூஜை செய்து ஹோமம் செய்து மூலமந்திர ஹோமம் முடிந்தவுடன் எல்லா பலன்களையும் தரக்கூடிய பூர்ணாஹுதியைச் செய்ய வேண்டும்.

28. சந்தனம் புஷ்பம், இவைகளால் பூஜை செய்து படத்திலுள்ள விருஷபருக்கும் குடத்திலுள்ள விருஷப தேவருக்கும் வெண்பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.

29. காலையில் சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜை செய்து முறையாக உபசாரம் செய்து தாம்பூலம் முதலியவைகளை விருஷப தேவர்க்கு ஸமர்ப்பணம் செய்ய வேண்டும்.

30. பூர்ணாஹுதி செய்த பிறகு எல்லா மங்கள வாத்யங்களோடும் நடனம் வாத்யம் இவைகளோடு கூடியதாக

31. கேடயத்திலோ, பல்லக்கிலோ, விருஷப கொடியை (அஸ்த்ரதேவர்) திரிசூலத்தோடும் இறைவனோடும் அல்லது அல்லாமலும்

32. கிராம பிரதட்சிணம் முதலியவைகளை செய்து ஆலயத்தில் பிரவேசம் செய்து எல்லா லக்ஷணங்களோடும் கூடியதாக த்வஜ தண்டத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

33. (கொடிமரத்தை திவாஜாரோஹண தினத்திலோ) அல்லது அதிவாச தினத்திலோ ஆலய உயர சமமாகவோ, அல்லது அதன் இரண்டு, மூன்று மடங்குகளாகவோ ஸ்தாபிக்கவும். ஆறு, ஏழு, எட்டு, முழு அளவுள்ள தண்டம் அதமமாகும்.

34. ஒன்று முதலான தளம் வரையிலோ, கோபுரம் வரையிலோ பதினொன்று இருபத்திரண்டு கை அளவு உயரம் உள்ளதாகவோ நடுநிலையான கொடி அமைத்து கொடியிலும் கடைநிலையான கொடியிலும் தரையில் புதைத்ததாகவோ புதைக்காததாகவோ அமைக்கலாம்.

35. சூலங்களுக்கு கூறிய எல்லா விருக்ஷத்தினாலுமோ பட்டைகளின் ஸாரம் இவைகளையுடைய பாக்கு மரம் முதலியவைகளின் மரங்களாலோ

36-37. புரசு, கருங்காலி, அரசு, ஆல், சந்தனம், முதலியவைகள், சால விருக்ஷம் இலுப்பை, பனை, மா, மூங்கில், ஜாதி மரங்கள், வன்னி, வில்வம் முதலியவைகள்.

38. சம்பகம் ஆகிய இந்த விருக்ஷங்களால் பதினாறு, இருபத்தினான்கு முழ அளவுள்ளதாகவோ ஸ்வபாவமான நீளத்துடன் மரப்பட்டையுடன் கூடியதாகவும்.

39. த்வஜதண்டம் சொல்லப்பட்ட பிறகு, த்வஜயஷ்டி சொல்லப்படுகிறது. இரண்டு பாகம் முதல் ஒன்பதின் ஒரு பங்கு வரையிலாக தண்டத்தின் நீளம் கூறப்படுகிறது.

40. ஒரு அம்சத்தில் த்வஜ யஷ்டியை சிறந்தவர்கள் செய்ய வேண்டும். ஐந்து அங்குலம் முதல் பதினாறு ஒவ்வோர் அங்குலமாக பதினாறு அங்குலம் வரையிலுமாக

41. எவ்வளவு நீள அளவு உள்ளதோ அந்த அளவில் உபதண்டம் கல்பிக்கவும். ஐந்தம்சத்திலிருந்து பன்னிரண்டு அம்சம் வரை அடிபாகத்தின் அளவாகும்.

42. ஒரே அம்சத்தால் குறைவான அளவு தண்டத்தின் நுனியாகும். இந்த அளவே தண்ட நுனியாகும். மூங்கில் மரம், த்வஜ தண்டத்தின் மரங்களால் த்வஜயஷ்டி அமைக்கலாம்.

43. இரண்டையும் சேர்ப்பதற்கு மூன்று (ஸ்கந்தங்களை) வலயங்களை செய்ய வேண்டும். இரண்டு வலையங்கள் பன்னிரண்டு அங்குல அளவுள்ளதாக இருக்க வேண்டும்.

44. முப்பத்தாறு மாத்ராங்குல அளவு வரையில் கழுத்து (ஸ்கந்த) வலைய நீளத்தை செய்ய வேண்டும். ஏழு அங்குலம் முதல் இருபத்தினான்கு அங்குலம் வரை உள்ளதாக இருக்கவேண்டும்.

45. ஸ்கந்த விஸ்தாரம் கூறப்பட்டு அதன் நுனி, கழுத்து அடிபாகத்தில் மூன்று பாகமாக பாதியிலோ அல்லது மூன்று பகுதியிலோ முக்கால் பங்காகவோ தர்வீ என்ற கரண்டியைப் போல செய்யலாம்.

46. நான்கு மூன்று, இரண்டு என்ற அங்குலத்தில் இதற்கு அளவு சொல்லப்பட்டது. ஆறு, ஏழு, எட்டு என்ற அளவில் தண்டத்திற்கு மண்ணினாலோ பீடம் செய்யலாம்.

47. மூல அக்ரங்களில் திவாரம் கூடியதும் தண்டயஷ்டிக்கு இணையானதும் பாதி வளைவு உள்ள வலயம் வளையும் உள்ளதாகவும் முடிவில் யஷ்டியின் நுனி பிரதேசத்திலும்

48. தண்ட ஓரத்திலோ அல்லது ஸ்கந்தத்திலோ வலயம் இருக்க வேண்டும். பெரிய பிளவுகளாக மூன்று கிளைகள் போல் முக்கால் பங்கு அளவில் இருக்க வேண்டும்.

49. ஆறு அங்குலம் முதல் ஆறங்குல அதிகமான அளவுள்ளதாக தண்டத்தின் அடியில் உள்ள அளவுள்ளதாகி தண்டத்தின் மேலும் வலயம் இருக்க வேண்டும்.

50. அதில் வலையத்திற்கு மேல் யஷ்டியின் நுனி என்று சொல்லப்படும் பூமியில் புதைக்கும் அளவு தண்ட நுனி நீளமாக இருக்க வேண்டும்.

51. குறைந்த அளவினாலோ பூமியில் ஊன்றக்கூடாது. வல்யம், ஸ்கந்தம் இவைகள் தண்டத்தின் நுனி வரையில் இருக்கும்படி நடவேண்டும்.

52. இருபத்தைந்து மாத்திரைகள் முதல் மூன்று மூன்று அங்குலம் வளர்ச்சியால் இரண்டு மடங்காகவும் செய்யலாம். பூமியின் அளவுவரை இருப்பதாகவும் உள்ள அளவு பூமிக்குள் புதைப்பதின் அளவாகும்.

53. ஒரு அங்குலம் முதல் கால், கால், மாத்ராங்குல அளவாக வளர்ச்சி அடைந்து மூன்று மாத்திரை அங்குலம் வரையில் உள்ள வலயம், மற்றும் கீலம் இவைகளோடு கூடியும்

54. வளையத்தின் இடைவெளியானது வலயத்தின் தகுந்த பலம் உள்ளதாக இருக்கவேண்டும். கயிறு வலயத்தின் நடுவில் இருக்கும், இரண்டங்குலம் முதல் அதிகரிக்கப்பட்ட கயிறு அளவு கனத்துடன் கூடியதாக அமைய வேண்டும்.

55. த்வஜாரோஹணத்திற்கு ஏற்ற நீளம் உடையதாக கயிறு இருக்க வேண்டும். கொடிப்பட கயிறு பலமான முப்பிரி உள்ளதாக இருக்க வேண்டும். இல்லாவிடில் கட்டுவதற்கு தகுதியானதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

56. இவ்விதம் கயிறை தயார்செய்து த்வஜ தண்டத்தை சுத்தி செய்து தர்பை கயிறு, தர்பை, மற்றும் மாலைகளால் மேலிருந்து முறையாக சுற்றவேண்டும்.

57. நூறு தர்ப்பைகளால் ஆன கூர்ச்சத்தை யஷ்டியின் நுனியில் வைக்க வேண்டும். அஸ்த்ர மந்திரத்தால் பிரோக்ஷித்து சிவதத்வமாக நியாஸம் செய்ய வேண்டும்.

58. தண்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். மூன்று பிரிவிலும் நுனி முதலாக சிவதத்வ தத்வாதி பத்ரயங்களை பூஜிக்க வேண்டும். ஸ்கந்த திரயத்தில் சிவதத்வ தத்வாதிகளை அர்ச்சிக்க வேண்டும். வலயத்தில் சூர்யனை பூஜிக்க வேண்டும்.

59. தண்டநாயகனான சிவனுக்கு கயிறு சக்தியாகும். சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும். பிறகு பிரதிஷ்டை ஆரம்பிக்க வேண்டும்.

60. ரத்னந்யாஸம் தண்டமூர்த்தியனடியில் செய்ய வேண்டும். தேவாலயத்திற்கு எதிர்நோக்கியது போல் தங்கம் முதலியவைகள் குண்டுமணி எடை முதல் பவுன் எடை வரை வைக்க வேண்டும். ஆமையையோ, விருஷபத்தையோ பிரதிமையாக தண்டத்தினடியில் வைக்க வேண்டும்.

61. தண்டத்தின் அடிப்பாகத்தில் அந்தந்த மந்திரங்களால் அதோமுகமாக அர்ச்சிக்க வேண்டும். யஷ்டி நுனி பாகத்திலிருக்கும்படி தண்டத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

62. தேவாலயத்தை நோக்கி விருஷபத்தின் எதிரிலோ அல்லது பக்கமோ அப்படியே கோபுரத்திற்கும் மஹாமண்டபத்திற்கு அருகிலோ ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

63. உள்ளே உள்ள மண்டலத்திலும் பிரகாரத்தின் ஆதியிலும் கோபுரத்தின் நடுவிலேயும் ஒன்பது, ஐந்து, என்ற முறையில் எட்டு திசையில் அல்லது நாலு திக்குகளில் உள்ளவாறு ஸ்தாபிக்க வேண்டும்.

64. முன் உளது பிரதானமாகும். கொடிகள் எட்டு எண்ணிக்கை உள்ளதாய் இருக்கும். வித்யேஸ்வரர்களாகவும் நான்காக இருப்பின் தத்புருஷர்கள் அதிபதிகளாவர்.

65. தண்டாதிபர்கள் இவ்விதம் சொல்லப்பட்டார்கள். த்வஜபடத்தில் விருஷபம் அதிபதி தண்டத்தின் அடியில் வேதிகை இருக்க வேண்டும். அது பலவிதமாகும்.

66. ஒரு முழம் முதல் மூன்று, மூன்று அங்குலமாக இரண்டு முழம் வரையில் வேதிகை அளவு கூறப்படுகிறது.

67. கொடியின் சமமான உயரமுடையதும் அல்லது முக்கால் பங்கோ எட்டு, ஏழு, ஐந்து, நான்கு மூன்று என்று அம்சங்கள் உடையதாகவும் அல்லது அதில் பாதியாகவோ வேதிகை சொல்லப்பட்டது.

68. மூன்று மேகலைகளோடு கூடியதாக வேதிகை இருக்க வேண்டும். ஒவ்வொரு மேகலையும் எட்டு அங்குல அளவுள்ளதாகவோ அல்லது இரண்டு மூன்று, அங்குலம் குறைந்த அளவுள்ளதாகவோ மேகலை அளவு இருக்கவேண்டும்.

69. மேகலை இல்லாத பீடத்தில் அடியில் உபவேதிகை அமைக்கவேண்டும். இரண்டு அங்குலம் முதல் கால் அங்குலம் அதிகரித்ததாக அல்லது ஆறு அங்குலம் வரை இருக்கலாம்.

70. கால், அல்லது பாதி அல்லது முக்கால் அளவு உயரம் இருக்க வேண்டும். வேதிகைக்கு மேல் நான்கு அங்குல அளவில் தாமரை செய்ய வேண்டும்.

71. ஐந்தங்குலம் முதல் பதினெட்டு அங்குலம் வரையில் தாமரையின் உயரமாகும். விஸ்தாரம் வேதிகைக்கு சமமாகவும் இருக்கவேண்டும்.

72. ஒவ்வொரு அங்குல அளவினால் பதினொன்று அங்குலம் அளவு வரையில் கர்ணிகைகளோடு கூடியதாக பத்மம் இருக்க வேண்டும். பத்ம அமைப்புக் கூறப்பட்டது.

73. கர்ணிகை தண்டத்திலிருந்து ஒரு அடி வெளிவந்ததாக இருக்க வேண்டும். மூன்று அங்குலம் வரையில் இதன் உயரம் இருக்கலாம்.

74. நான்கு அல்லது எட்டு பத்து தளமாகவும் அல்லது வட்ட வடிவமாகவும் நாற்பட்டையாகவும் தளசுற்று இருக்க வேண்டும்.

75. அப்படியே உபதளங்களோடும் அல்லது இல்லாமலும் இருக்கலாம். இவ்விதம் பீடத்தை செய்து சில்பியை திருப்தி செய்ய வேண்டும்.

76. புண்யாகவாசனம் செய்து வேதிகையை அஸ்திர மந்திரத்தால் புரோக்ஷித்து செய்து தர்பையினால் த்வஜதண்டத்தை சுற்றி (விருஷ கும்பம், படம்,)

77. திரிசூலம் மங்கள அங்குரம் இவைகளோடு கூடிய விருஷபகும்பத்தையும் படத்தையும் பிரதட்சிண முறையாக தண்டத்திற்கு எதிரில் கொண்டு வரவேண்டும்.

78. ஆதாரசக்தி அனந்தன் முதலியவர்களை கூர்மாசனத்தில் பூஜிக்க வேண்டும். கோணங்களின் தர்மம் முதலியவைகளையும் நடுவில், அதர்மம் முதலியவைகளையும் பூஜை செய்ய வேண்டும்.

79. எட்டு தளங்களில் வாமை முதலியவர்களை பூஜிக்க வேண்டும். கர்ணிகையில் மனோன்மணியை பூஜிக்க வேண்டும். தண்டத்தில் ஸதாசிவ பெருமானையும் சந்தனம் புஷ்பத்தால் பூஜை செய்யவும்.

80. பாத்யம், அர்க்யம், ஆசமனமாகிய மூன்று வகைகளோடு கூடிய ஸ்நபன முறையில் கூறப்பட்ட முறைப்படி பூஜை செய்து

81. விருஷப படத்தை விருஷப காயத்ரி மந்த்ரம் சொல்லி கயிற்றால் கட்டி சிறிய மணியை கட்டி அஸ்திர மந்திரத்தை சொல்லிக் கொண்டு

82. கும்பத்திலிருந்து பீஜத்தை எடுத்து விருஷபத்தை தியானித்துக் கொண்டு ஆசார்யன் விருஷபத்தின் ஹ்ருதயத்தில் விருஷப பத்திரத்தை வைத்து சந்தனம் புஷ்பம் முதலியவற்றால் பூஜிக்க வேண்டும்.

83. விருஷப மூலத்தால் ஆசார்யன் விரைவாக கொடியை ஏற்ற வேண்டும். அல்லது முதலில் தொட்டு விட்டு மற்றவரைக் கொண்டு ஏற்றச் சொல்லலாம்.

84. கீழ்நோக்கியதாக விருஷபமிருப்பின் பூமியின் திருப்தியையும் அரசனுக்கு அமைதியையும் கொடி மேல் நோக்கியதாக இருப்பின் தேவர்களின் திருப்திக்காகவும் அரசனின் வெற்றிக்கும் ஆகும்.

85. கொடி செல்லும் திசை மேற்கு, வடக்கு, ஈசானம், கிழக்கு நோக்கி இருக்குமேயானால் நன்மை கிடைக்கும். ÷க்ஷமம், ஆரோக்யம் வெற்றி புஷ்டி இவைகள் முறையான பலன் ஆகும்.

86. அக்னி கோணத்தில் கொடி செல்லுமானால் ஜ்வரம் அல்லது வருத்தம், மரணம், நோய் முதலியன உண்டாகும். வாயு திக்கில் சென்றால் பயம் உண்டாகும். வாலிற்கும் இந்த பலன் உண்டு.

87. கொடி ஏற்றும் பொழுது ஆசார்யன் குறைவினால் தடங்கல் ஏற்படுமானால் அதற்கு சாந்தியை அகோரமந்திரத்தை ஸ்மரித்து செய்ய வேண்டும்.

88. நூற்றெட்டு ஆஹுதி பிரம்ம மந்திரங்களால் ஸமித், நெய், அன்னம், முதலியவைகளோடு ஹோமம் செய்து விருஷப கும்ப தீர்த்தத்தால் தண்டமூலத்தை பிரோக்ஷிக்க வேண்டும்.

89. கிழக்கு முதலான திக்குகளில் உள்ள தளங்களில் அஷ்டவித்யேச்வர்களை பூஜித்து அந்தந்த தீர்த்தங்களால் அந்தந்த தளங்களில் உள்ள வித்யேஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

90. சந்தனம் புஷ்பங்களால் அர்ச்சித்து பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். புண்யாகம் முதல் நைவேத்யம் வரையில்

91. எல்லா சிறப்பு வாத்யங்களோடும் கூடியதாகவும் பாடலோடு கூடியதாகவும் நான்கு திக்குகளில் நர்த்தனம் செய்யவும். அதிலும் சிறப்பான சுத்த நர்த்தனம் சொல்லப்படுகிறது.

92. அதன் பிறகு தீர்த்தம் வரையில் (கொடி இறக்கும் வரையில் ஒருகாலம், இரண்டு காலம், மூன்று காலமோ விருஷபத்தை பூஜை செய்ய வேண்டும்.

93. எங்கு எந்த நாட்டில் (த்வஜாரோஹணம் செய்யப்படுகிறதோ) த்வஜயஷ்டி வைக்கப்படுகிறதோ அங்கு அகால மரணம் ஏற்படாது. செல்வம் கிடைக்கும் பாபம் செய்கிறவர்களிடத்தும் இவைகள் ஏற்படும்.

94. திருட்டு பயம் முதலியன ஏற்படாது. அவமானம் கலக்கம், ஏற்படாது. மாறுபட்ட கருத்து உடையவர்கள் கூட சமாதானம் அடைவார்கள். நோயாளிகள் கூட குணமாகி விடுவார்கள்.

95. மேகங்கள் தக்க காலத்தில் மழை பொழியும் அரசனுக்கு வெற்றி உண்டாகும். சுபிக்ஷம் ஏற்படும் எல்லா உயிரினங்களும் (எல்லா பாபங்களும்) பசுக்கள் நன்கு பால் கொடுக்கும்.

96. செய்நன்றி மறந்தவன், பிராமணனைக் கொன்றவன் பசுவை கொன்றவன் போன்ற பாபங்களை ஒருவன் செய்திருந்தாலும் கொடியேற்றத்தை பார்ப்பதால் பாபம் நீங்கும். யஜமானுடைய இரண்டு குலமும் நன்கு விளங்க பலன் கொடுக்கும்.

97. இரவில் பேரீதாடனம் (பேரியை அடித்தல்) உரிய முறைப்படி செய்யப்படவேண்டும் தேவனுடைய ஸன்னிதியில் இரண்டு ஸ்தண்டிலங்கள் செய்ய வேண்டும்.

98. ஒரு பக்கத்தில் (ஸ்தண்டிலத்தில் ஒன்றில்) சூலத்தையும் மற்றொரு ஸ்தண்டிலத்தில் பேரியை வைக்க வேண்டும். சூலம், பேரி, இவைகளில் ஷடுத்தா ஸனம் பூஜை செய்ய வேண்டும்.

99. கிழக்கு மேற்காகவும் தெற்கு முகமுடையதாகவும் பேரியை வைக்க வேண்டும். புண்யாஹம் செய்து திரிசூலத்தில் தேவதையை பூஜை செய்ய வேண்டும்.

100. மத்ய பத்திரத்தில் ருத்ரன் வலது பத்திரத்தில் பிரம்மா இடது பத்திரத்தில் விஷ்ணு பாலிகையில் பார்வதி இவர்களை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

101. குடம் போன்ற பகுதியில் ஸ்கந்தனையும் அதன் முகப்பகுதியில் வினாயகரையும் தண்டத்தின் நுனியில் மன்மதனையும் தண்டத்தின் நடுவில் பாஸ்கரனையும் பூஜை செய்ய வேண்டும்.

102. தண்டத்தின் மூலபாகத்தில் சண்டேசர், கிழக்கு தளத்தின் நுனி பாகத்தில் லக்ஷ்மி, தெற்கு தளத்தில் ஸப்த மாதா மேற்கு தளத்தில் ஜ்யேஷ்டா தேவியையும்

103. வடக்கு திக்கில் காத்யாயினியும், சூலத்தின் அடிப்பகுதியில் பதினோறுருத்திரன், சூர்யன் பன்னிரண்டும் அஷ்ட வசுக்கள் அச்வினி தேவர்கள் இவர்களும் மற்றும் பதினெட்டு கணங்களையும்

104. முறைப்படி உபசாரம் செய்து வரவேற்பதாக செய்து பேரியில் அந்தந்த தேவதா ஆவாஹணம் செய்ய வேண்டும். பேரியை வஸ்திரத்தால் சுற்றி நடுவில் ருத்திரனை பூஜிக்க வேண்டும். (தோல் கயிற்றில்)

105. வலது பாகத்தில் பிரம்மாவையும், இடது பாகத்தில் விஷ்ணுவையும், வலயத்தின் தெற்கில் சூர்யனையும் வடக்கில் சந்திரனையும் பூஜிக்க வேண்டும்.

106. ஏழு கீலங்களில் ஸப்த மாதாக்களையும் ஒன்பது வலயங்களில் நவகிரஹங்களையும், ருத்திரர்களையும் அதன் எண்ணிக்கையில் பூஜை செய்து சர்ம ஸூத்திரங்களில் வாசுகியையும் பூஜை செய்ய வேண்டும்.

107. அடிக்கும் தண்டத்தில் ஷண்முகனையும் மஸ்தகத்தில் கிழக்கு பக்கமாக பூஜை செய்ய வேண்டும். சந்தனம் புஷ்பம், முதலியவைகளையும் நைவேத்யம் ஹிருதயமந்திரத்தால் தனித்தனியாக கொடுக்க வேண்டும்.

108. அஸ்த்ர மந்திரத்தை நினைத்து பேரிதாடனம் செய்ய வேண்டும். முதலில் ஒரு அடியும் இரண்டாவது இரண்டு அடியும் அடிக்க வேண்டும்.

109. மூன்றாவது முறை மூன்று முறை அடிக்க வேண்டும். மூன்று முறையும் ஒவ்வோர் அடியுமோ அடிக்க வேண்டும். வாசிப்பவனை பஞ்சாக்ஷரத்தை நினைத்து பிரோக்ஷித்து

110. வஸ்திரம், சந்தனம், மாலை, பூணூல் இவைகளை கொடுத்து, அவருடைய கையில் புஷ்பமும் கொடுத்து அஸ்திர மந்திரத்தை நினைத்து

111. பேரியில் புஷ்பத்தை வைத்து ஆசாரியனின் உத்தரவால் பேரியை கழுத்தில் வைத்துக் கொண்டு முறைப்படி எல்லா தாளத்தையும் அறிந்தவனாக வாசிக்க செய்ய வேண்டும்.

112. காந்தாரம் முதலிய ஸ்வரங்களோடும் ஸமதாளம் முதலிய தாளங்களோடும் கீதம், நிருத்தம் இவைகளோடும் அன்னலிங்கங்களோடு கூடியதும்

113. முறையாக மூர்த்திகளுடனோ அல்லது சண்டேசருடனோ அஸ்த்ரராஜரை குடை முதலிய உபசாரங்களோடு எழுந்தருளச் செய்து

114. தூபம் தீபம், மற்றும் மணி, சப்தம் முதலியவைகளோடு பிரம்ம ஸ்தானத்திலிருந்து நகர் வலம் வரவேண்டும்.

115. இந்திரனின் ஸ்தானத்திலிருந்து இந்திரனுக்கு பலிகொடுக்க வேண்டும் பலி தானத்தின் கடைசியில் தாளம், கீதம் இவைகளோடு கூடியதாகவும்

116. நர்த்தனத்தோடு கூடியதாகவும் அந்தந்த திக்குகளில் செய்ய வேண்டும். பிரம்மாவிற்கு பிரம்ம தாளம் மற்றும் மேகராக ஸ்வரத்துடனும்

117. ஸமதாளம், காந்தாரம், கொல்லிபக்தா பணம், ப்ருங்கிணீ, கவுசிகம், நட்டபாஷை, மல்லதாளம்,

118. ஸ்ரீ காமரம், நவதாளம், தக்கேசி, கோடிகம் தர்கராகம், சாலபாளனீஸ்வரம் டக்கரி முதலிய பலவகை ராகங்களோடும், தாளங்களோடும் பலிதானம் செய்யப்படவேண்டும்.

119. கிழக்கு முதலிய திக்குகளில் முன்னதாக முறைப்படி செய்யப்படவேண்டும். த்வஜாரோ ஹணத்தின் முன்னதாக உத்ஸவத்தில் முக்குணமான தினத்தில் செய்யப்படவேண்டும்.

120. பேரீதாடன பூர்வமான உத்ஸவமானால் அதுவே த்விகுணமாக எண்ணப்படும். தெய்வத்திற்கு எதிரில் நான்கு ஸ்தண்டிலும் செய்யப்படவேண்டும்.

121. முதலில் அஸ்த்ரமூர்த்தியும் அதன் எதிரில் த்வஜ படத்தையும் அதன் எதிரில் விருஷப கும்பத்தை வித்யேஸ்வர்களோடும்.

122. அதற்கு முன்னால் எல்லா லக்ஷணங்களோடு கூடிய பேரியை வைக்க வேண்டும். முறையாக இவர்களை சந்தனம், புஷ்பம், இவைகளை எல்லாம் வைத்து பூஜிக்க வேண்டும்.

123. பேரிக்கும் கும்பத்திற்கு நடுவில் ஸ்தண்டிலத்தில் ஹோமம் செய்யலாம். முன் சொன்ன முறையில் பூஜை செய்து தத்வங்களை நியஸிக்க வேண்டும்.

124. திரிசூலத்தில் தேவதாஹ்வானம் செய்ய வேண்டும். (தேவதாஹ்வானம்) பேரிதாடனம் செய்து விருஷபம் முதலியவர்களோடு திரிசூலத்தை எடுத்துக் கொண்டு

125. அன்னலிங்கம் மற்றும் வாத்யங்களோடு கூடவும் அந்தந்த தேவதாவாஹணங்களோடு கூடவும் கிராம பிரதக்ஷிணமாகச் செய்து

126. பலிதானம் முதலியவைகளையும் செய்து கொடியேற்றும் இடம் சென்று முன் சொன்ன முறைப்படி கொடி ஏற்ற வேண்டும்.

127. பேரீதாடன பூர்வாங்கமான இந்த முறை ராத்திரியில் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டது. கொடி சுற்றி வருதல் பகலில் செய்ய வேண்டும்

128. தேவதை ஆஹ்வான காலத்தில் விருஷப பிரமணத்தை விட்டு விட வேண்டும். பிறகு அங்குரார்பணம் இரவில் யாகாரம்ப தினத்தில் செய்ய வேண்டும்.

129. அதற்காக அங்குரார்பணம் செய்ய வேண்டும். கிராம பிரதட்சிணம் தீர்த்தாங்குரத்திற்கு அவசியமாகும்.

130. மற்ற எல்லாவற்றிற்கும் செய்தாலும் செய்யலாம். இல்லாமலும் இருக்கலாம். அங்குரார்ப்பணத்திற்கு முன்னதாக மாலையில்

131. மித்ஸங்க்ரஹணம் செய்து அங்குரங்கன் நன்கு முளைக்க பேரீதாடனுத்துடன் விதைகளை தெளிக்க வேண்டும்.

132. மற்றவை எல்லாம் அங்குரார்பண பூர்வமாக இரவிலேயே செய்ய வேண்டும். சிவனுடைய யாகாரம்பமும் அந்த இரவிலேதான்

133. இவ்விதம் நிச்சயம் செய்து முதல்நாள் அஸ்த்ரராஜரையும் பூஜிக்க வேண்டும். பிறகு யாக சாலையை எதிரிலோ அல்லது பக்கத்திலோ அமைக்க வேண்டும்.

134. இடது பக்கத்தில் அல்லது வலது பக்கத்தில் ஐந்து சாலைகள் உள்ள விருப்பமான இடத்தில் அமைத்துக் கொள்ளலாம். நடுவில் ஐந்து முழ அளவுள்ளதாக இருக்க வேண்டும்.

135. ஒரு முழம் முதல் பதினைந்து முழம் வரை அளவுள்ளதாக யாகசாலை அமைத்து மூன்று ஆவரணங்களோடு கூடியதாகவும் அல்லது ஐந்து ஆவரணங்களோடு கூடியதாயும்

136. சமமாகவோ அல்லது ஒவ்வொரு அங்குல அதிக அளவுள்ளதாக அதிகரித்து ஒன்பது அங்குலம் உடையதாக ஐந்து வரிசைகள் ஏற்படுத்தவும்.

137. ஒரு வரிசையாக இருந்தாலும் பெரிதாக நான்கு வாயில்களை உடையதாகவும் அல்லது ஒரு வாயில் உடையதாகவும் மண்டப அமைப்பை உடையதாகவும் மற்றும்

138. பந்தல், கூடாரம், போன்ற அமைப்பை உடையதாகவும் ஐந்து ஒன்பது அல்லது ஒரு அக்னியோடு கூடியதாகவும் மேற்கட்டிதுணிகள் கொடி இவைகளோடு கூடியதாகவும்

139. தர்ப்பை மாலையோடு கூடியதாகவும் முத்து தோரணங்களோடு கூடியதும் தேங்காயோடு கூடியதும் எல்லா அலங்காரங்களோடு கூடியதாகவும்

140. நடுவில் எட்டு மாத்ராங்குல அளவுடையதாகவும் ஒவ்வொரு அங்குலம் அதிகம் உடைய இருபத்தெட்டு அங்குலம்வரை உள்ள மேடையோடு கூடியதாகவும்

141. யாகசாலையின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு வேதிகையின் உயரமும் பரப்பும் கூறப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கோ ஐந்தில் ஒரு பங்காகவாவது உபவேதிகை இருக்க வேண்டும்.

142. முஷ்டி அளவுள்ளதும் அல்லது ஓட்டை அளவுள்ளதும் அல்லது கையளவு (முழம்) உள்ளதுமான குண்டம் இருக்கலாம். அந்த குண்டம் நாற்கோணமாகவோ அல்லது வட்டவடிவமாகவோ மூன்று மேகலைகளோடு கூடியதாக இருக்க வேண்டும்.

143. மண்டபத்திலோ அல்லது பெரிய இடத்திலோ யாகம் அதிவாஸம் செய்ய வேண்டும். இவ்விதம் எல்லாவற்றையும் சேகரித்து மண்டப ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும். சில்பியை திருப்தி செய்து அனுப்ப வேண்டும்.

144. புண்யாஹவாசனம் செய்து வாஸ்த்து ஹோமம் செய்ய வேண்டும். எல்லா யாகங்களுக்கும் முக்யமான மண் எடுத்தலை செய்ய வேண்டும்.

145. வேதிகையினுடைய மத்தியில் எல்லா லக்ஷணங்களோடு கூடிய ஸ்தண்டிலம் செய்ய வேண்டும். ஒரு மரக்கால் முதல் ஒன்பது மரக்கால் வரை நெல் போடவேண்டும்.

146. அதில் பாதி அரிசியும் அதில் பாதி அளவு எள்ளும் அதே அளவு பொறியும் போட்டு நடுவில் தாமரையை எழுத வேண்டும்.

147. பலநிறமுடைய கர்ணிகைகளோடும் பிரகாசிக்கின்ற தளங்களோடு கூடியதும் எள், பொறி இவைகளால் ஆன கோடுகளை உடையதும் தர்பைகளோடு கூடியதும்

148. ஐந்து முதல் முப்பத்தாறு தர்பைகளோடு கூடிய அதன் நடுவில் சிவ கும்பத்தை வர்த்தனியோடு கூடியதாகவும்

149. அஷ்ட வித்யேச்வரர்களோடு கூடியதாகவும் கும்பங்களின் ஆவரணங்களோடு கூடியதாகவும் சிவகும்பத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டும். மேலும் எல்லா கும்பங்களும் வஸ்திரம் மற்றும் தங்க தாமரை முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

150. மாவிலைகளோடும் கூர்ச்சங்களோடும் கூடியதாகவும், முழுமையான கோவைப்பழத்தின் பொலிவை உடையதாகவும் ஸ்நபனத்திற்கு கூறிய இலக்கணங்களோடு கூடியதாகவும் கும்பங்கள் இருக்கவேண்டும்.

151. சிவகும்பத்தில் ஒன்பது ரத்னங்களும் வர்தனியில் ஐந்து ரத்னங்களும், வெளியில் உள்ள குடங்களில் தங்கத்தையும் போட வேண்டும்.

152. செல்வம் நிறைந்தவர்களால் இவ்வாறு செய்யப்படவேண்டும். சிவகும்பத்திற்கு இரண்டு வஸ்திரங்கள் அணிவிக்கவேண்டும். தோரணம், துவாரகும்பங்கள் லோக பாலர்கள் இவர்களையும்

153. வித்யேஸ்வரர்களோடும், சக்தியோடும் அஷ்டமங்களங்களோடு கூடியதாகவும் தசாயுதங்களோடும், சிவ கும்பத்தை வைத்து பூஜிக்கவும்.

154. இவ்விதம் செய்து ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். தங்கம், வெள்ளி, அல்லது பருத்தி நூல் இவைகளுள் ஏதேனும் ஒன்றினால் காப்பு செய்யப்பட்டதாக இருக்கவேண்டும்.

155. தங்கம், வெள்ளி இவைகள் பிம்ப கையின் அளவிற்கு சிறிது அளவு அதிகமாக உடைய தாக, பாம்பின் படம் உடையதாகவும் இருக்கவேண்டும்.

156. வாலோடு கூடிய அந்த சூத்ரம் ஸர்ப படத்தோடு கூடியதாகவும் இருக்கவேண்டும். சூத்ரத்திற்கு அனந்தன் அதிதேவதையாகும். தங்கத்திலோ வெள்ளியிலோ செய்யப்பட்ட சூத்ரம்.

157. எல்லா விருப்பங்களையும் நிறப்பக்கூடியதாகும். சூத்ரம் ஒன்றாக இருக்கும். சிறப்பானதாகவும் பிடிப்பை ஏற்படுத்தக்கூடிய வலயத்துடன் கூடியதாகவும் இருக்கவேண்டும்.

158. பட்டு முதலிய சூத்ரங்கள் மூன்று தத்துவங்களையும் ஐந்து கலைகளையும் உள்ளடக்கியதாகவும், அமைதியைத்தரவல்லதாகவும் வெற்றியைத் தரவல்லதாகவும் ஆகும்.

159. ஒன்பது நூலிழை உள்ளதாக அமைக்க வேண்டும். இது ஆரோக்யத்தை கொடுக்க கூடியதாகும். ஆறு நூல்களோலோ, ஐந்து அல்லது எட்டு நூல்களாலோ செய்யப்பட்ட ரக்ஷõஸூத்ரம் புத்ரன், நீண்ட ஆயுள் முதலியவற்றை கொடுக்க கூடியதாகும்.

160. கைப்பருமனுக்குத் தகுந்தவாறு ஒன்று, மூன்று, என்று அங்குலங்களில் அளவு வித்யாசங்களால் சூத்ரம் அமைக்கவேண்டும். நன்கு தண்ணீரால் சுத்தி செய்து சந்தனத்தைப் பூசி

161. விபூதி பாத்திரத்தில் நேத்ர மந்திரத்தை உச்சரித்து விபூதியை வைத்து தனியாக ஸ்தண்டிலம் செய்து அதை ஆஸனத்தின் மேல் வைக்க வேண்டும்.

162. மரக்கால் முதலிய அளவுகளாலும் இரண்டு படிக்கு குறையாமலும் நக்ஷத்திரம் போல் பிரகாசமான அரிசியை ஹ்ருதய மந்திரத்தை கூறியவாது நிரப்பி அஸ்த்ர மந்திரத்தால் பாத்திரத்தை வைக்க வேண்டும்.

163. அதன் நடுவில் விபூதி பாத்திரத்தில் சூத்ரத்தை வைக்கவேண்டும். வெட்டப்படாமல் இரண்டு பாக்கு முதலியவைகளோடு கூடியதாகவும்

164. வெட்டப்படாத அடி, நுனி பாகத்தை உடைய வெற்றிலையை வடக்கு, கிழக்கு முகமாக வைத்ததாக ரக்ஷõ சூத்திரத்தையும் வைத்து இவைகளை ஸ்தண்டிலத்தின் மேல் வைக்க வேண்டும்.

165. புண்யாகவாசனம் செய்து ஹ்ருதய மந்திரத்தால் பிரோக்ஷித்து, ஸ்தண்டிலத்தில் சக்தியை பூஜை செய்து யந்திரிகையில் மூன்று தத்வத்தை பூஜிக்க வேண்டும்.

166. பாத்ரத்தில் பிரதானமான மாயா தத்வத்தையும் அரிசியில்சிவனையும் விபூதி பாத்திரத்தில் உமா சக்தியையும் விபூதியில் லகுளீச்வரனையும்

167. சூத்ரத்தில் அனந்தன் முதலிய நாகர்களையும் பூஜை செய்து சந்தனம் முதலிய உபசாரங்களை செய்து பட்டு முதலான வஸ்திரங்களால் பாத்திரத்தை மூடி மாலையை அதன்மேல் வைக்கவேண்டும்.

168. எல்லா அலங்காரங்களோடும், எல்லா வாத்யங்களோடும் கிராம பிரதட்சிணமோ அல்லது ஆலய பிரதட்சிணமோ செய்ய வேண்டும்.

169. அல்லது செய்யாமலும் இருக்கலாம். பிறகு இறைவனை பூஜிக்க வேண்டும். கட்டைவிரல் மோதிர விரலால் இவைகளால் இடதுகையில் எடுத்து

170. விபூதியோடும் வலது இரண்டு விரல்களினால் அந்த ரக்ஷõ சூத்ரத்தை பூச வேண்டும். அனுஷ்டுப்புடன் கூடிய நேத்ர மந்திரத்தால் (த்ரயம்பகம் என்ற மந்திரத்தால்)

171. தெய்வங்களுடைய வலது மணிக்கட்டில் கட்டி அந்த இடத்தில் விபூதியை வைக்கவேண்டும். இது ஆண் தெய்வங்களுக்கு பொருந்தும். பெண் தெய்வங்களுக்கு வலது கையிலோ, இடது கையிலோ கட்டலாம்.

172. ஆசார்யன் முதலியோர் மக்களுக்கு விபூதி கொடுக்க வேண்டும், தாம்பூலம், அப்பம், பழம், தேங்காய், இவைகளையும் கொடுக்க வேண்டும்.

173. தேவனுக்கும் பக்தர்களுக்கும் கொடுக்க வேண்டும். கொடுக்காமலும் இருக்கலாம். ஸோமாஸ் கந்தரிடமோ, ஸ்கந்தரில்லாமலுள்ள உமாமஹேச்வரரிடமோ, சந்திரசேகரிடமோ ரக்ஷõபந்தினம் செய்ய வேண்டும்.

174. தேவியோடு கூடியதாக இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் சிறப்பாக உடைய நர்த்தன ரூபத்திலும் உமாமகேச்வரர் உட்கார்ந்திருக்கும் மூர்த்தி சுகாசீனர், மஹேச்வரன்

175. அல்லது உத்ஸவத்திற்காக ஏற்பட்ட சாந்த உருவமுடைய இறைவனுக்கும் இன்னும் பல மூர்த்திகளுக்கும் விருப்பத்திற்கு ஏற்றவாறு ரக்ஷõ பந்தனம் சொல்லப்படுகிறது.

176. கிராமபிரதட்சிணத்தை ரக்ஷõபந்தனம் முடிந்த பிறகு செய்யவேண்டும். இவை இரண்டும் யாகாரம்ப காலத்தில் (தினத்தில்) செய்யவேண்டும் என சொல்லப்படுகிறது.

177. மற்றொரு நாளில் அல்லது உத்ஸவத்தின் நடுவில் விரும்பிய தெய்வத்திற்கு ரøக்ஷ கட்டிவிடலாம். அல்லது அதற்கு முதல் நாளும் கட்டிவிடலாம்.

178. ரவுத்ர மூர்த்தியினிடத்திலும் சாந்த மூர்த்தியினிடத்திலும், சிவபக்தரிடத்திலும் இந்த விதி பொருந்தும். திரிசூலத்தின் நடுபாகத்திலோ, அதில் உள்ள தெய்வத்தின் கையிலோ ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

179. தசாயுதங்கள் எல்லாவற்றிற்கும், யாக ஆரம்ப முதல் நாளோ அல்லது அந்த நாளிலோ ஸூத்ர பந்தனம் செய்யவேண்டும்.

180. இது இரண்டிற்கும் முன்பு தீர்த்தாங்குரம் செய்யவேண்டும். ஆசார்யன் மூர்த்திபர்களுடன்கூடி (சித்விக்குகளுடன்) ஸகளீகரணம் முதலியன செய்துகொண்டு

181. திவார பூஜையை, செய்து யாகசாலையில் நுழைந்து பிரம்மேஷ்டி (ஸந்த்யாவந்தனம்), பூதசுத்தி, ஸகளீகரணம் முதலியவைகளைச் செய்து

182. பாத்யம், அர்க்யம், ஆசமனம், இவைகளை கொடுத்து, அர்க்ய ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து யாகசாலையில் ஸ்தண்டிலத்தில் சிவாஸனம் செய்து

183. சிவ கும்பத்தில் மூர்த்தியை மூர்த்தி மந்திரத்தால் ஆவாஹனம் செய்து, பஞ்ச பிரம்ம மந்திரங்களையும் நியாசித்து கலாநியாஸமும் செய்ய வேண்டும்.

184. வித்யாதேஹத்தை கல்பித்து பிரணவ ரூபமான சிவபெருமானை ஆவாஹணம் செய்து ஹ்ருதயம், முதலிய மந்திரங்களை நியாஸம் செய்து பாத்யம் முதலிய உபசாரங்களை செய்ய வேண்டும்.

185. இவ்விதம் மனோன்மணியையும், சக்தி மந்திரத்தால், பூஜிக்கவேண்டும். சுற்றிலும் வித்யேச்வரர்களையும் லோகபாலர்களையும் பூஜிக்கவேண்டும்.

186. அவர்களுடைய பத்து ஆயுதங்களையும் கண்ணாடி முதலிய அஷ்டமங்களப் பொருளையும் பூஜிக்கவேண்டும். அவைகளை வேதிகையின் பக்கத்திலும் ஸ்தண்டிலத்திற்கு மேலேயோ அல்லது ஸ்தலத்திலோ

187. எட்டு திக்குகளிலுமோ, அல்லது திக்கிற்கு இரண்டு இரண்டாக வேண்டும் அதன் முடிவில் எட்டு திக்குகளில் ஸ்தண்டிலத்தில் உள்ள தசாயுதங்களை

188. முறையாக பூஜித்து ஆசார்யன்யாக குண்டத்தின் அருகில் சென்று அதன் ஸம்ஸ்காரங்களை செய்து சிவாக்னியை முறைப்படி ஏற்படுத்த வேண்டும்.

189. ஒன்பது, ஐந்து, இவ்விதம் அவரவர்கள் குண்டங்களில் ஆவாஹணம் செய்து சிவனை நன்கு பூஜித்து பிரும்மாங்கங்களோடு சேர்த்து ஹோமம் செய்யவேண்டும்.

190. கிழக்கு முதலிய நான்கு திக்குகளிலும் வக்த்ரம் (தத்புருஷ) முதலிய மந்திரங்களையும் தென்கிழக்கு முதலிய விதிக்குகளில் ஹ்ருதயம் முதலிய மந்திரங்களையும் தன்தன்பிரதானமந்திரங்களோடு பூஜித்து மற்ற எல்லா மந்திரங்களை பிரதான குண்டத்தில் ஹோமம் செய்ய வேண்டும்.

191. மூங்கிலரிசி, பில்வம், யவை, ஸத்துமா, பால், வெல்லம், எள், கடுகு, பயறு இவைகள் எதுவும் ஹோமத்தில் இடம்பெறுபவையாகும்.

192. (பிரும்மசாலி) பெருநெல், யவை அல்லது உளுந்து, நெல், யவை அல்லது எள், கடுகு, பயிறு அல்லது ஸத்துமா மூங்கிலரிசி, வெல்லம், தேன்

193. என்று நான்குவிதமாக ஹோமத்ரவ்யம் சொல்லப்பட்டது. ஸமித்து, நெய், அன்னம், பொறி இவைகளை நான்கு பகுதிகளிலும் ஹோமம் செய்ய வேண்டும்.

194. சிவாங்க மந்திரத்தில் பத்தில் ஒரு பங்கும் மற்றும் 108 முறை மூல மந்திர ஹோமமும் பிரதான குண்டத்தில் செய்து, கலைகளுக்காக மற்ற குண்டங்களிலும் ஹோமம் செய்ய வேண்டும்.

195. திரவ்ய பேதங்களால், மந்திரங்கள் சிவாமத்தில் சில சொல்லப்பட்டன. ஆனால் தந்திரங்களின் பேதத்தால் மந்திரபேதம் இங்கு சொல்லப்படவில்லை.

196. ஹவிஸ்ஹோமம் ஹோமத்தின் முடிவிலோ ஹோமத்தின் ஆரம்பத்திலோ செய்யலாம். அதன் முடிவில் பலிதானம் செய்யவும் அதன் முறை இங்கு சொல்லப்படுகிறது.

197. நித்யோத்ஸவ முறையில் உள்ள ஹவிர்மயமான அன்ன லிங்கத்தை செய்து அங்கு அஸ்திர ராஜரை பூஜித்து திரிசூலத்தோடு கூடிய

198. தசாயுதங்களோடும், தூபதீபங்களோடும், மணிநாதத்தோடும், திரவ்யத்தோடும்

199. குடை முதலிய உபசாரங்களோடும் பலவித வாத்யங்களோடும் நகரம் முதலியவைகளில் ஆசார்யனோ, அல்லது சிஷ்யனோ பிரவேசிக்க வேண்டும்.

200. தேவதா ஆஹ்வானம் செய்யும் இடத்தில் பலியை முறையாக கொடுத்து மோதகம், இட்லி, பயிறு, வெல்லம், சத்துமா கணேச்வரர்க்கும்

201. பிரம்மாவிற்கு பிரியமான பாயாசம், மஞ்சள்பொடி, தாமரை புஷ்பம், பொறி, இவைகளை இரண்டாவது நாள் பிரம்மாவிற்கு பலி கொடுக்கப்பட வேண்டும்.

202. நெய்கலந்த வாழைப்பழத்தோடு கூடிய எள் அன்னத்தை பூதங்களின் திருப்திக்காக மூன்றாம் நாளில் பலிகொடுக்க வேண்டும்.

203. மஞ்சள் பொடியோடு கூடியதும், தேங்காயோடு கூடியதுமான எள் அன்னத்தை கந்தர்வர்களின் பிரியத்திற்காக நான்காவதுநாள் பலி கொடுக்க வேண்டும்.

204. தினை கலந்ததும் இந்தர வல்லியோடு கூடியதுமான நெய்யை இந்திரன் பிரியத்திற்காக ஐந்தாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

205. நெய்யோடு கூடியதும் பலாச்சுளைகளோடு கூடியதுமான மூங்கிலரிசி அன்னத்தை ரிஷிகளின் பிரீதிக்காக ஆறாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

206. நெய்யோடும் கூடியதாகவும் கையாந்தரை பழத்தோடு கூடியதுமான சர்க்கரைப் பொங்கலை லட்சுமி பிரீதிக்காக ஏழாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

207. உளுந்து சாதம் நெய்யோடும் கூடியதாகவும், ராக்ஷஸர்களின் பிரீதிக்காக எட்டாவது நாள் பலி கொடுக்கவேண்டும்.

208. சுத்தான்னத்தை தயிர், ஸத்துமா, பொறி, புஷ்பம், இவைகளோடு சிவனுடைய பிரீதிக்காக ஒன்பதாவது நாளில் பலி கொடுக்கவேண்டும்.

209. மற்றொரு முறையில் தேவதைகளுக்கு திரவ்யங்கள் சொல்லப்பட்டுள்ளன. சுத்தான்னம், தயிர், இட்லி, அப்பம் இவைகளோடும் கூடியதாகவும்

210-211. பழங்களோடும், வெல்லம், இவைகள் சேர்த்து கணபதிக்கு பிரியமானதாக ஆகும். பழங்களோடு மஞ்சள்பொடி, நெய்சாதம், தயிர், கலந்த சத்துமா, எள்சாதம் இவைகள் பூதங்களுக்கு பலியுமாகும்.

212. தாமரை கிழங்கு, தர்பை நுனி, நெய்கலந்த அன்னமிவைகளை வாழைப்பழத்தோடு கூடியதாக ரிஷிகளுக்கு பலி கொடுக்க வேண்டும்.

213. மின்னிக்கொடி, மஞ்சள், தினையுடன் நெய் சேர்த்து நான்காவது நாள் இந்திரன் திருப்திக்காக பலி கொடுக்கவேண்டும்.

214. பாயாசம், மஞ்சள்பொடி, தாமரை புஷ்பம், பொறி இவைகளை ஐந்தாவது நாள் பிரம்மாவின் ப்ரீதிக்காக பலி கொடுக்கவேண்டும்.

215. நெய்யோடு கூடிய சர்க்கரை பொங்கல் கையாந்தரை பழம் இவைகளோடு கூட விஷ்ணு பிரீதிக்காக ஆறாவது நாள் பலிகொடுக்க வேண்டும்.

216. எள்ளு சாதம் நெய் கலந்து தேங்காய், பழம் இவைகளோடு கூட சிவபிரீதிக்காக ஏழாவது நாள் பலி கொடுக்கவேண்டும்.

217. மூங்கிலரிசி அன்னத்தை தயிர் கலந்து வாழை, பலா இவைகளோடு கூட ஈஸ்வர திருப்திக்காக எட்டாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

218. சுத்தான்னம், தயிரோடு கூடி பொறி புஷ்பம் இவைகளோடு கூடியதாக சண்டேசரின் திருப்திக்காக ஒன்பதாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

219. ஒன்பது நாட்களுக்கு திரவ்ய பொருட்கள் சொல்லப்பட்டன. அதற்கு பிறகு பன்னிரெண்டு நாட்களுக்கு சொல்லப்படுகிறது.

220. வெண்பொங்கல் இட்லி, மோதகம், வாழை, வெல்லம், இவைகள் சேர்த்து, கணபதி மந்திரத்தை நினைத்து முதல்நாள் பலி கொடுக்க வேண்டும்.

221. மாம்ஸம் எள், அப்பம், நெய், மீன், செம்பருத்தி புஷ்பம் இவைகளோடு கூடிய சிவப்பு அன்னத்தை

222. பைசாச மந்திரத்தை நினைத்து இரண்டாவது நாள் பலி கொடுக்கவேண்டும். பாயாஸம், ஸத்துமா, புஷ்பம் தாமரை பூ, இவைகளோடு கூட

223. பிரம்ம மந்திரம் சொல்லி மூன்றாவது நாள் பலி கொடுக்கவேண்டும். எள்சாதம், நெய், ஸத்துமா, இட்லி, இவைகளோடு கூட

224. கந்தர்வ மந்திரத்தை சொல்லிக்கொண்டு நான்காவது நாள் கொடுக்கவேண்டும். மின்னல் கொடி, மஞ்சள் சாதம் நெய்யோடும், பொறியோடும் கூட

225. பூத மந்திரங்களைச் சொல்லிக்கொண்டு ஐந்தாவது நாள் கொடுக்கவேண்டும். வெல்லம், நெய், தேங்காய் பழம் இவைகளோடு கூட

226. ஸ்கந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு ஆறாவது நாள் கொடுக்கவேண்டும் தர்பை நுனி, நெய் சுத்தான்னம் தயிரோடு, கூட

227. ரிஷிகளின் மந்திரங்களை சொல்லிக் கொண்டு ஏழாவது நாள் பலி கொடுக்கவேண்டும். பால்சாதம், அரிசிமாவு கரும்பு துண்டுகளோடு கூட

228. நாக மந்திரங்களை சொல்லிக்கொண்டு எட்டாவது நாள் பலி கொடுக்கவேண்டும். தயிர் சாதம், வெல்லம் மாதுளம்பழம், இவைகளை

229. இந்திர மந்திரத்தை சொல்லிக்கொண்டு ஒன்பதாவது நாள் பலி கொடுக்கவேண்டும். சர்க்கரை பொங்கல் நெய், வாழை, பலா இவைகளோடு கூட

230. விஷ்ணு மந்திரத்தை சொல்லிக்கொண்டு பத்தாவது நாள் பலி கொடுக்கத் தகுந்தது. சிவப்பு அன்னம் மாம்ஸம், அபூபம், (அப்பம்) எள் பொடி இவைகளை

231. ராக்ஷஸ மந்திரத்தை சொல்லிக்கொண்டு பதினோறாவது நாள் பலிகொடுக்க வேண்டும். அரிசி சாதம், தயிர் சேர்த்து வெல்லகட்டிகளுடன்

232. சிவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு பன்னிரண்டாம்நாள் பலி கொடுக்க வேண்டும். ஏழு, ஐந்து, மூன்று ஓர் இரவு உத்ஸவ காலங்களில்

233. முன்புள்ள தினத்தை விட்டுவிட்டு அடுத்துள்ள தினத்தை தினதேவதை திரவ்யங்களாக கிரஹிக்கவேண்டும். முனிவர்களே, தினதிரவ்யம், பலிதிரவ்யம், இரண்டும் இங்கே சொல்லப்பட்டது.

234. முதலில் பிரும்மாதி தேவர்களுக்கு பலி இவ்விதம் உண்டாகும். தின அதிபதி சூர்யன் முதலானவர்களின் திருப்திக்காக சுத்தான்னத்தை தயிரோடு கூட கொடுக்கப்படவேண்டும்.

235. லோகபாலர்களின் திருப்திக்காக லோக பாலர்களின் மந்திரங்களை சொல்லிக்கொண்டு கொடுக்க வேண்டும். விருஷபம் முதலிய பரிவாரங்களுக்கு திவஜஸ்தம்பத்திலும், பிரம்மா முதலியவர்களுக்கு

236. பலிகொடுத்துவிட்டு அதன் முடிவில் பலி பீடத்தில் முறையாக பலி கொடுக்கவேண்டும். கொடி முதல் பலி பீடம் வரையில் பலி சொல்லப்படுகிறது.

237. பிரம்மா முதல் பலிபீடம் வரையில் அல்லது இந்திரஸ்தானத்திலிருந்து பீடம் வரையிலோ அந்தந்த தினத்தேவதைகளுக்கு பலிபீடத்திலோ பலி கொடுக்கலாம்.

238. தினதேவர்களின் திருப்திக்காக சுத்தான்னத்தால் பலி கொடுக்கலாம். தின தேவர்களுக்குமோ லோகேசர்களுக்குமோ பலி கொடுக்க வேண்டும்.

239. தின தேவரின் பலி பொருளால் லோக பாலர்களுக்கும் பலி கொடுக்கலாம். எல்லா தினங்களுக்கும் தினமும் இரண்டு பலி கொடுக்கவேண்டும்.

240. அவைகளுடன் ஓர் வாத்யத்தோடு திக்பலி தினபலிகளை அளித்தல் காலை, மாலை இருவேளையிலும் பலி கொடுக்க வேண்டும்.

241. பலி கொடுக்கும் போதோ, கொடுத்த பிறகோ சுவாமி புறப்பாடு செய்யவேண்டும். அதன் வாஹன முறை சொல்லப்படுகிறது. முதலில் விருஷப வாஹனம், இரண்டாவது சுற்றக்கூடிய யந்திரமாகும்.

242. ஊஞ்சல் அல்லது சிபிகை (பல்லக்கு) மூன்றாவது நாளிலும், குதிரை நான்காவது நாளிலும், ஸிம்மம் ஐந்தாம் நாளிலும், தீபம் ஆறாம் நாளிலும் ஆகும்.

243. ஆடு வாஹநம் ஏழாம் நாளிலும், ரதம் எட்டாம் நாளிலும் இவ்விதம் ஒன்றுக்கொன்று அழகானதாக செய்யவேண்டும்.

244. மூர்த்திகள் அனேக ரூபங்கள் அதன் முடிவில் சொல்லப்பட்டன. அதன் முடிவில் பலி பீடத்தோடு கூட பலிதானம் செய்யவேண்டும்.

245. அன்ன லிங்கத்தோடு கூடியதாகவும் திரிசூலத்தோடு கூடியதாகவும் பத்து ஆயுதங்களோடு கூடியதாகவும் கோளக (பத்ரலிங்கம்) லிங்கத்தோடு கூடியதாகவும்

246. ரதத்தில் உள்ள கணேசர்களுடனும் முடிவில் நந்திகேஸ்வரர் ரதத்திலோ சிபிகையிலோ எல்லா அலங்காரங்களோடு

247. இவைகளோடு கூட இல்லாமலும் பலி அங்கங்களோடு கூடியதாய் அதன் முடிவில் விருஷபமும் பின்பு நாட்டியத்திற்கு முகரங்கம் என்ற வாத்யத்துடனும்

248. அதன் பின்பு ஸர்வாங்க சுந்தரமான இறைவனின் தேரும் அதன் இரண்டு பக்கங்களிலும் அலங்கரிக்கப்பட்டவர்களும்

249. கையில் சாமரத்தை உடையவர்களுமான எனக்கு பணிவிடை செய்யும் பெண்களால் பிரகாசிக்கின்றதும் நவரத்னங்களினால் பிரகாசிக்கின்ற குடைகளோடு கூடியதும் தொடர்ந்து செல்கின்ற

250. என் அருகிலே உள்ள சிவாச்சார்களோடு சிறப்புற்றும் எனக்கு பின்னால் என் தொண்டில் ஈடுபடுபவர்களான

251. கவனத்தோடு கூடிய பரிசாரகர்களான பக்தர்கள் கூட தாமரை மொட்டுடன் பாசத்தோடு கூடிய கையையுடையவளாலும்

252. புருஷன் போன்ற தோற்றம் கொண்ட கன்னிகையால் என்னுடைய பணிவிடை கன்னிகையுடன்கூடி அழகாக உள்ளதும் என்னுடைய மனைவியான ஈஸ்வரியின் தேருக்கும்

253. அதனருகில் தேவதேவேசி ரதத்திலும் அவ்வாறே அலங்கரிக்கப்பட்டும் அதன் முடிவில் சண்டிகேஸ்வரர் ரதமும் தனியாக அமைக்க.

254. சிவனுக்கு ஏற்பட்ட வேறு பதினாறு பிம்பங்கள் எவையுண்டோ அவையும் பல்வேறு தன்மை கொண்ட சிவபக்தர்கள் உண்டோ அவர்களின் பலவிதமான மஞ்சங்களும்

255. முன்பக்கம் செல்பவையாகவோ பின்பக்கம் வருபவைகளாகவோ செய்து கொண்டு இவைகளில் எது விருப்பமோ அப்படி செல்லலாம். பலிக்கு அங்கமான ரக்ஷõபந்தனமின்றி போகலாம்.

256. பலவாத்யங்களோடு கூடியதாகவும் யானை, குதிரை, ஒட்டகம், இவைகளோடு கூடியதாகவும் வீதி சுத்தம் செய்யப்பட்டதாகவும் தண்ணீர் தெளிக்கப்பட்டதாகவும்

257. ஒவ்வொரு வீடும் பலவித (பொடி) கோலம் சித்ரங்களோடு கூடியதாகவும் மங்கள அங்குரத்தோடும் வர்தனி கும்ப தீர்த்தத்தோடும் கூடியதாகவும்

258. வாழைமரம் பாக்கு, இலை இவைகளோடு கூடியதும் பட்டு வஸ்திரம் இவைகளோடு பிரகாசிப்பதும் தர்பமாலையோடு கூடியதும் முத்துமாலைகளால் பிரகாசிப்பதும்

259. மேலேயும், கீழேயும், ஒவ்வொரு தளத்திலும் தீபதண்டத்தையும், இரவாக இருந்தால் தீபமாலையாலும் அலங்கரிக்கப்பட வேண்டும்.

260. வீட்டினலங்காரம் கூறப்பட்டது. கிருஹம் இல்லாத இடத்திலும் அதன் அலங்காரமானது பலவித கொடிகளோடு கூடியதும் பலவாத்யங்களோடு கூடியதும்

261. பல ராகங்களோடு கூடியதும் பல கூட்டங்களோடு கூடியதும் பல குடைகளோடு கூடியதும் தோகை சாமரத்தோடு கூடியதாக இருப்பதாயும்

262. கொடி ஆலவட்டம், இவைகளோடு கூடியதாகவும் தூபம், தீபம் இவைகளோடு கூடியதாகவும் மற்றும் இரவிலும் பகலிலும் மஹோத்ஸவத்தில் செய்ய வேண்டும்.

263. ரதத்திலோ, பல்லக்கிலோ அல்லது பரிசாரகர் தலையிலோ, ஈசனை எழுந்தருளச் செய்து வலம் வரவேண்டும். இந்த சமயங்களில் தாம்பூலம் பலவித பழங்களையும் கொடுக்கவேண்டும்.

264. திரையிடப்பட்டு பக்ஷணம், அப்பம் முதலியவைகளை கொடுத்து தகுதியுள்ளவை, தகுதியற்றவை என்ற பிரிவில் தக்தம் ஆர்த்ரம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டு

265. சமைக்கப்பட்டு அனைத்தும் அந்தணர்களால் தயாரிக்கப்பட்டதாகவும், நீர்சம்மந்தமான திரவ்யம் சூத்திரர்களாலும் தயாரானதாகவும் தோலுள்ள தோலில்லாத பதார்த்தங்களை நீரீக்ஷணாதி சுத்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

266. சங்கின் ஒலியோடு கூட பாத்யம், ஆசமனம் இவைகளோடு கூடியதும் திரையை எடுத்து நிர்மால்யத்தை நீக்கி

267. எல்லோர்க்கும் பக்தர்களுக்கும், வருபவர்களுக்கும், வந்துள்ள அனைவர்க்கும், எல்லோர்க்கும் அவர்களின் பக்திக்கு ஏற்ற வகையில் பொருளைக் கொடுத்து

268. இறைவனை இளைப்பாற ஆஸ்தான மண்டபம் முதலியவைகளில் எழுந்தருளச் செய்வது, இறைவனுக்கு பாத்யம் முதலியவைகள் கொடுத்து, சாந்திஹோமம் ஸ்நபனம் வைத்து

269. எல்லா தோஷங்களின் நிவிருத்திக்காக தச்சர்களால் ஸ்பர்சிக்கப்பட்ட தேர்முதலிய வாஹனத்தின் தோஷ சாந்திகளாகவும் சண்டாளர் பாணர்களின் திருஷ்டி நிவிருத்திக்காகவும் விசேஷமாக

270. சாந்தி பரிஹாரம், அவசியம் என்று அறிந்து கொள்ள வேண்டும். சாந்தி ஹோமம் இல்லாவிட்டாலும் அல்லது முடியாவிட்டாலும் ஸ்நபனம் செய்ய வேண்டும்.

271. ஐந்து பிரகாரங்களுக்கு வெளியில் ரத ஓட்டம் நடந்தால் ஸ்நபனம் ஐந்து குருணி (15 மரக்கால் அளவு)

272. நாற்பது மரக்கால் ஜலம் அல்லது அதில் பாதி அல்லது அதில் கால் பகுதி அல்லது கொஞ்சம் குறைவு என்ற முறையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.

273. வேட்டையாடுதலும் சிறப்பான ஸ்நபனம் செய்யவேண்டும். அந்தந்த காலத்திற்கு ஏற்றவகையில் இது செய்வது இஷ்டத்தைக் கொடுப்பதாகும் என்று சொல்லப்படுகிறது.

274. காலசந்தி யாகமண்டபம், ரதம் முதலியவைகளில் ஏற்றம் மற்றும் உச்சிகால பூஜை இவை நித்யம் எனப்படும்.

275. ரதத்தில் ஸ்வாமி இருந்தால் தூபம் வரையிலும் ஆலயத்தில் நைவேத்யம் வரையிலும் செய்ய வேண்டும். சிவாலயத்தில் யாத்திரைக்காக ஸ்நபனம் செய்வது பிறகு நைமித்திக பூஜை செய்ய வேண்டும்.

276. நடராஜன் தேர்கால் தர்சனத்திற்கு பிறகு மாலையில் பூஜையும் மறுபடியும் ஹோமம் பிறகு கிராம பிரதட்சிணமும்

277. புறப்பாட்டிற்கான ஸ்நபனம் பூஜை, ஆடல் பாடல் உபசாரம் பிறகு தேவியோடு அருள்பாவித்தல் செய்தல் வேண்டும்.

278. காலத்தில் பதினாறு பங்காக்கப்பட்டதும் அரையாமமாக கூறப்பட்டதுமான காலத்தில் ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட தேவனுக்கு அந்த காலங்களின் செயல்கள் கூறப்பட்டன.

279. இவைகள் உரிய காலத்தில் அனுஷ்டித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். மிகவும் முன்னால் செய்தால் சிறப்பு இல்லை. மிகவும் தாமதமாக செய்தாலும் சுபம் இல்லை.

280. ஆகையால் முயற்சியுடன் முன்சொன்ன அதன் காலத்திலேயே செய்வது சிறந்தது. தன்னுடைய காலத்தில் குற்றம் இருக்கும் ஆனால் இவைகள் பிற்காலத்தில் செய்யப்படவேண்டும்.

281. வாஹனங்களில் செல்லும் காலங்களில் பலியிடும் காலத்தில் முன் சமயங்களில் பரிவாரங்களுக்கு சொன்ன முறையில் பலிபீடத்தில் பலி போடவேண்டும்.

282. மண், மரம், அல்லது உலோகம் இவைகளாலான பீடத்திலோ அல்லது பூமியிலேயே சமப்படுத்தி பலியிடலாம். யாக மண்டபத்தில் நுழைதல் அல்லது உள்ளே செல்ல கோயிலில் நுழைதல்

283. அங்கு தாம்பூலம் முதலியவைகள் கொடுத்தாலும் கொடுக்கலாம். உரிய காலத்தில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். செய்யப்படாவிடில்

284. இரவில் நீராஜநம் தூபதீபமுடிவில் செய்ய வேண்டும். வீதிவலம் வரும் சமயத்தின் முடிவில் பெரியதான பலி (ஹவிஸ்) கொடுக்க வேண்டும்.

285. இவ்விதம் தினமும் செய்துவர வேண்டும். அதன் சிறப்பு இப்பொழுது சொல்லப்படுகிறது. கிராமம் முதலியவைகளிலோ அல்லது அதற்கு வெளியில் ஒரு மண்டபம் தயார் செய்ய வேண்டும்.

286. மண்டபம் முதலான இடங்களில் ஸ்வாமியை அழைத்து சென்று பூஜித்து வினோதமான தர்சனம் செய்வித்து வாஹனத்திலோ அல்லது சிரசில் வைத்தவாறோ கிராமபிரதட்சிணம் செய்யவேண்டும்.

287. மழை பெய்தாலும், மழை பெய்யும் என்ற நிலையிலும் ஒரேஇருட்டாக இருந்தாலும் இவ்விதமே வெளிமண்டபத்தில் வந்து செய்யலாம்.

288. மீதமுள்ள பிரக்ஷிணத்திற்கு சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். யாகாரம்ப தினத்திலும் தீர்த்தம் கொடுக்கும் தினத்திலும்

289. கிராமத்தை முறையாக சுற்றி வரவும். பிராயச்சித்தம் தேவையில்லை. கிராம பிரதட்சிணம் இல்லாவிடில் திசா ஹோமம் செய்ய வேண்டும்.

290. ஆகாயம் நிர்மலமாகவும் சந்திரனுடன் கூடியதாகவும் இருக்கும்போது அவச்யம் சுவாமி புறப்பாடும் பலிதானமும் செய்யப்படவேண்டும்.

291. தீர்த்தம் கொடுக்கும் நாளிலிருந்து முன்னால் ஐந்தாவது அல்லது நான்காவது நாளில் அந்த வாரத்திலோ எண்ணெய் ஸ்நானம் மஞ்சள் பொடியோடும் செய்யலாம்.

292. தாம்பூலம் முதலியவைகளை இறைவனுக்கும் பக்தர்களுக்கும் முறையாக கொடுக்க வேண்டும். த்வஜாரோஹணம் (கொடியேற்றுதல்) முதலியவைகளிலும் கொடுக்க வேண்டும்.

293. தெய்வத்திற்கு எதிரில் தைலத்தை வைத்து ஸ்தண்டிலத்தில் அஸ்த்ர மந்திரத்தால் பிரோக்ஷித்து ஸம்ஹிதா மந்திரத்தை சொல்லி வைக்க வேண்டும்.

294. கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்து ஹ்ருதயமந்திரத்தினால் சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும். மூலமந்திரத்தால் நமோந்தமாகச் சொல்லி சிவதத்வம் முதலியவைகளால் புஷ்பத்தோடு கூட எண்ணையை சிரஸில் வைக்க வேண்டும். தொடர்ந்து மஞ்சள் பொடியையும் இடவேண்டும்.

295. நெற்றியிலிருந்து கால், கை வரையிலும் மற்றும் தேவியின் கழுத்து வரையிலும் அல்லது மற்ற முறையிலோ ஸ்நானம் செய்விக்க வேண்டும். பிறகு பாசிபயிறு நிவேதனம் செய்ய வேண்டும்.

296. தீர்த்த தினத்திற்கு முன் நாள் அல்லது அதற்கு முன்போ அல்லது முதல் நாள் இரவோ நடராஜப் பெருமாள் வீதிவலம் வருதல் செய்ய வேண்டும்.

297. பூஜையின் பொருட்டு எல்லா அணிகலன்களோடும் கூடிய நடராஜபெருமானுக்கு சிறப்பாக ரக்ஷõபந்தனம் செய்விக்க வேண்டும்.

298. ஆகையால் மற்றொரு கூடத்திலோ அல்லது ஆஸ்தான மண்டபத்திலோ எல்லா அலங்காரத்தோடும் கூடியதாக பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

299. அந்த காலத்திலோ அல்லது காலையிலோ தேவதேவனை அழைத்துச் சென்று வினோத தரிசனமும் செய்விக்க வேண்டும்.

300. காலையில் ஸ்நானம் முதலியவைகளை முடித்து விட்டு பலவித அகில் முதலிய வாசனை பொருட்களோடு கூடிய சந்தனத்தாலும் அணிகலன்களாலும் அலங்கரிக்க வேண்டும்.

301. எல்லா வாத்யங்களோடும் ஆலய பிரதட்சிணம் செய்து வர வேண்டும்.

302. ஸ்தண்டிலத்தின் மேல் வைத்து புண்யாக வாசனம் செய்ய வேண்டும். அர்க்ய ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து சிவமந்திரத்தால் அபிமந்திரிக்க வேண்டும்.

303. சந்தனம் முதலியவைகளால் அர்ச்சித்து கவசமந்திரத்தால் அவகுண்டனம் செய்ய வேண்டும். சமித், நெய், ஹவிஸ் எள், பொறி, வெல்லம் இவைகளினாலோ

304. மூலமந்திரத்தால் நூறு ஆஹுதிகள் செய்தோ அஸ்த்ர ஹோமமோ செய்ய வேண்டும். ஐந்து அக்னியோடு கூடிய ஹோமம் எல்லாவற்றிற்கும் நன்மை பயக்கூடிய ஹோமம் ஆகும்.

305. பிராயச்சித்தம் அகோரமந்திரத்தால் செய்து பூர்ணாஹுதியோடு கூட ஸத்யஜாத மந்திரத்தால் ஸ்பர்சித்து சந்தனம் இவைகளை மூலமந்திரத்தால் கொடுக்க வேண்டும்.

306. கன்றுடன் கூடிய பசு, தங்கம், வெங்கல பாத்திரம், நல்ல வஸ்திரம் எள், நெய், அல்லது மற்றவையோ ஆசார்யன் திருப்திக்காக கொடுக்க வேண்டும்.

307. ஜலத்தானத்துடன் கூடியதாக யாத்ரா தானம் செய்ய வேண்டும். மஞ்சள் உப்பு, எள், கடுகு, இவைகளும்

308. தானம் செய்பவனுக்கு நன்மை தரக்கூடிய தாம்பூலம், அரிசி, சந்தனம், நெய், எள், எண்ணை, இவைகள் சிவதானம் என்று சொல்லப்படும்.

309. யோகிகள், தியானம், செய்பவர்கள், சிவஞானம், அறிந்தவர்கள் இப்படிப்பட்டவர்களுக்கு அந்த பூஜை தானம் எல்லா உயிரினங்களுக்கும் நன்மை பயப்பது ஆகும்.

310. சிறப்பு நாட்களில் தலைப்பாகை வஸ்திரம் முதலியவைகளை ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு தானத்தையும் ஜலத்தோடு சேர்ந்ததாக கொடுக்கப்படவேண்டும்.

311. சிறந்த அறிஞனான ஆசார்யனுக்கு உஷ்ணீஷம் முதலியவைகளை கொடுக்க வேண்டும். ஆசார்யனே சிவனாக ஆவான். ஆகையால் ஆசார்யனுக்கு சிவனுக்கும் வேறுபாடு இல்லை.

312. எவன் இவர்கள் இருவருக்கும் பேதத்தை பார்க்கிறானோ அவன் தாழ்வை அடைவான். எல்லா ஆகமங்களை அறிந்தவனும் அமைதியானவனும் சிவலிங்க வழிபாட்டில் ஈடுபட்டவனும்

313. நித்ய ஹோமத்தோடு கூடியவரும் சிவ பூஜைக்கு நிவேதனம் தயார் செய்பவனும் கிருஹபலி முதலியவைகளை செய்பவரும் பிøக்ஷ அளிப்பவரும் நிந்தனையில்லாதவருமான ஆசார்யனை சிவனாகவே அறிய வேண்டும்.

314. அதிகம் கூறுவானேன்? எங்கு எப்பொழுது இப்பேர்ப்பட்ட ஆசார்யன் திருப்தி அடைந்தவனாக ஆகிறானோ அப்பொழுது பொருள் அளித்தவனுக்கு அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித பெரும் பயனடையும் தன்மை ஏற்படுகிறது.

315. இது உண்மை, உண்மை திருப்பியும் உண்மை என மூன்று முறையாக உண்மை என்று நிச்சயிக்கிறேன். அவரின் பொருளை அபஹரிப்பவன் மூவுல கிலும் திருடன் எனப்படுவான்.

316. தேவனின் சொத்தை அபஹரிப்பதைக் காட்டிலும் ஆசார்யனுக்கு தரவேண்டியதை கொடுக்காமலிருந்தால் நூறு கல்பகோடி காலமானாலும் அந்த பாபத்திலிருந்து மீள முடியாது. ஆகையால் பாபத்தை அறிந்து

317. அவரால் சிரத்தையுடன் கொடுக்கப்பட்ட பொருள் வாங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவன் பாபத்திலிருந்து மீண்டு விடுகிறான் என்ற சொல் கேட்டிருப்பதால் தானம் கிரஹிக்கத் தக்கது. இவ்வாறு யாத்ராதானம் செய்து நைவேத்யங்கள் நிவேதனம் செய்ய வேண்டும்.

318. யாத்ராதானம் சிவலிங்க பிரதிஷ்டை முதலியவைகளில் முதலிலும் முடிவிலும் முக்யம் ஆகும். மற்ற இடங்களில் அரசனின் வெற்றிக்காக செய்யத் தகுந்தது.

319. கிரஹணம் முதலிய காலங்களில் இது மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. எல்லா அலங்காரத்தோடு கூடியதாகவும் முரவ வாத்யத்தோடு கூடியதாகவும்

320. சிவாச்சாரியார்களோடு கூடியவராகவும் பல்லக்கில் ஆரோஹணம் செய்வித்து ஐந்து பிரகாரங்களிலோ அல்லது அதற்கு வெளியிலோ பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

321. எல்லா மங்களங்களோடு கூடியும் அரச வேஷம் தரித்த காவலர்களோடும் பலவகையான ஆடல் பாடல்களோடு கூடியதாகவும்

322. பல்லக்கில் ஏறியவர்களாலும் ஸாமர்த்யமுள்ளவர்களாலும், முன்னும் பின்னும் தொடர்ந்து செல்பவர்களாலும், புஷ்பங்களால், சந்தன நீர்களால் சேவித்து வருபவர்களாலும் ஸ்வாமி வீதிவலம் வருதல் வேண்டும்.

323. அரச வேஷம் தரித்த தன்மையுள்ளவனோடும் முரவ வாத்யம் இல்லாமல் பிறகு ஆலயத்தின் உள்ளே சென்று முன் சொன்னபடி தேவனை ஸ்தாபனம் செய்யவேண்டும்.

324. ரக்ஷõ சூத்திரத்தை அவிழ்த்து விட்டு சந்தனம், புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும். அதன் முடிவில் சுவாமி ஊர்வலமோ அல்லது அதற்கு முன்பு ஊர்வலமோ செய்யலாம்.

325. இரவின் முடிவில் தேவதேவனை நடேச்வரனை தேரில் ஏற்றி முன்பு சொன்ன முறையில் கிராமாதி பிரதட்சிணமும் செய்விக்க வேண்டும்.

326. முடிவில் மறுபடியும் ஸ்னபனம் செய்ய வேண்டும். மற்ற பிம்பங்களுக்கும் சமான முறை இதேதான்.

327. தீர்த்த நடுவில் முதல் நாள் அல்லது அதற்கு முதல்நாளோ யுத்தாரம்பம் முதல் வேட்டையாடுதல் முடிய

328. மற்ற திருநாட்களுக்கான உற்சவ விக்ரகத்தினால் மறுபடியும் செய்ய வேண்டும். சிறப்பாக ஸ்நபனம் முன் சொன்னபடி மறுபடியும் செய்ய வேண்டும்.

329. அந்த இரவில் தீர்த்தத்திற்காக முன் சொன்ன முறையில் அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும். தீர்த்த உத்ஸவத்திற்காக இரவில் ஒன்பது கலசங்களை

330. சூத்ரத்தோடும் கூர்ச்சம், மாவிலை, தேங்காய் வஸ்திரம், மற்றும் வஸ்திரமில்லாமலோ கலசங்களையும் பிரதானத்திற்கு மட்டும் வஸ்திரத்துடனோ வைக்க வேண்டும்.

331. இரவில் தீர்த்தம் அல்லது ஸ்நான சமயத்திலோ காலையில் உதயத்திற்கு முன்போ தீர்த்த கார்யம் செய்யவேண்டும்.

332. தீர்த்த ஸ்தானத்தை அடைந்து பூமியை சுத்தம் செய்து இரண்டு ஸ்தண்டிலம் செய்து சூலத்திற்கு ஒன்று கலசத்திற்கு ஒன்றாக செய்ய வேண்டும்.

333. மேற்கில் சூலத்தையும் கிழக்கில் கலசங்களையும் வைக்க வேண்டும். புண்யாகம் செய்து முன்போல் தேவர்களை அழைக்க வேண்டும்.

334. திருசூலத்தில் எல்லா தீர்த்தங்களும் எல்லா துர்க்கைகளும் கூடியதாகவும், நடுவில் மனோன்மணியையும் சந்தனம் புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.

335. அந்த ஜலத்தால் சூலத்தை அபிஷேகம் செய்து நதியோ அல்லது நீர்நிலைகளில் சென்று கங்கை முதலியவைகளை ஆவாஹணம் செய்து தீர்த்த ஸங்கிரஹணம் செய்யவேண்டும்.

336. ஹே தேவி! கங்கையே! யமுனையே! நர்மதையே! ஸரஸ்வதியே! ஸிந்துவே! கோதாவரியே! காவேரி இந்த நீர் நிலைகளில் (ஆற்றில்)

337. இறைவனுடைய தீர்த்த உற்சவத்திற்கு இங்கு இருந்து அருள்பாலிக்க வேண்டும். சூரியன் மறையும் வரை பாபங்களை போக்க இங்கு இருந்து அருள வேண்டும். என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

338. தீர்த்தம் எடுத்து அதன் நடுவில் கிழக்கு நோக்கிய தலை உடையதாக சிவமந்திரத்தை சொல்லிக் கொண்டு திரிசூலத்தை ஸ்நானம் செய்விக்க வேண்டும்.

339. திரிசூலத்தை ஜலத்திலிருந்து எடுத்து ஜலத்தின் கரையில் வைக்க வேண்டும். தீர்த்த ஸங்க்ரஹணம் செய்து தீர்த்தவாரியை செய்ய வேண்டும்.

340. வெகுதூரத்தில் ஜலமிருப்பினும் தீர்த்தவாரி செய்ய இயலாவிடினும் ஆலயத்திலேயே செய்யவும் எல்லா அலங்காரங்களோடு கூடியதாக ஆலயத்தினுள் நுழைந்து

341. முன் சொன்ன முறையில் ஹோமம் பலிதானம் இவைகள் செய்து தேவ ஆஸ்தான மண்டபத்தில் சூர்ணோத்ஸவம் செய்ய வேண்டும்.

342. இறைவனுக்கு எதிரில் இரண்டு ஸ்தண்டிலம் செய்ய வேண்டும். மேற்க்கில் திரிசூலம், மற்றொரு இடத்தில் உரலை வைக்க வேண்டும்.

343. அதன் நடுவில் மஞ்சளை பொடி செய்வதற்காக வைக்கவேண்டும். வஸ்திரங்களை அணிவித்து வைத்து உரல் நடுவில் மஞ்சள் பொடியையாவது வைக்க வேண்டும்.

344. முதலில் திரிசூலத்தை பூஜை செய்து விட்டு இரவு அதிவாஸம் செய்து உரலில் ஆதார சக்தியை பூஜை செய்ய வேண்டும்.

345. உலக்கையில் ஈசனையும் பூஜை செய்து கிருதசிரோர்பணம் செய்து அருகம்பில், புஷ்பம், நெல், அரிசி, இவைகளோடு

346. இறைவனுக்கு எதிரிலோ அல்லது நேராகவோ சூலமும் (அஸ்திரதேவர்) உரலும் உலக்கையும் இருக்கலாம்.

347. வஸ்திரத்துடனோ அல்லது இல்லாமலோ உலக்கை இருக்கலாம். முதலில் உலக்கையை பூஜை செய்து பிறகு உரலை பூஜை செய்ய வேண்டும்.

348. சிவதத்வம் முதலாகவோ, அல்லது ஆத்ம தத்வம் முதலாகவோ பூஜித்து அருகம்பில்லை ஆசார்யனால் அல்லது அவரால் ஏவப்பட்டவரால் வைக்கப்படவேண்டும்.

349. அரசன் அரிசி, இவர்களாலும் அவர்களால் ஏவப்பட்ட பெரியோர்கள் புரோஹிதர்கள் பக்தர்களாலும் உலக்கையால் இடிக்கப்படவேண்டும்.

350. அரச சன்னதியில் தொண்டு செய்கின்ற பெண்களாலும் எனக்கு பணிவிடை செய்யும் கன்னிகைகளாலும் அல்லது அரசர்களால் ஏவப்பட்ட ருத்திர கன்னிகைகளாலும்

351. தாசிகளாலும் (தொண்டு செய்பவர்களாலும்) பக்தர்களாலும் நேர்மையானவர்களாலும் மற்றும் சுத்தமானவர்களாலும் ஆசார்யன் உத்தரவால் அருஹம்பில் கொடுக்கப்படவேண்டும்.

352. மற்றவிடத்திலும் தெய்வங்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும், ரக்ஷõபந்தனமத்தியிலும் அதன் ஆரம்பத்தில் ஸ்நான காலத்திலும் மங்களத்திற்காக இது செய்யத் தகுந்தது.

353. அதன் முடிவில் மஞ்சளை அஸ்த்ர மந்திரத்தை மூன்றுமுறை சொல்லி இடித்து அருகம்பில்லிற்கு சொன்ன முறையிலேயே மஞ்சளை சூர்ணம் செய்ய வேண்டும்.

354. அந்த சூர்ணத்தை சிவமந்திரத்தை நினைத்து அதிலிருந்து எடுத்து பலவிதமான பாத்திரங்களில் லிங்கத்திற்காகவும் பிரதிமைக்காகவும் வைக்க வேண்டும்.

355. உத்ஸவ பிரதிமைக்காகவும், திரிசூலத்திற்காகவும், பரிவாரத்திற்காகவும் ஒருபாகமும், முறையாக பிரிக்க வேண்டும்.

356. மீதமுள்ளதை ஜனங்களுக்காக கலசங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். வாஸனையுடைய தைலத்தை மட்டுமோ தனி பாத்திரங்களில் எடுத்துக் கொள்ளவேண்டும். அந்திரமந்திரத்தால் பிரோக்ஷித்து ஹ்ருதய மந்திரத்தினால் பூஜிக்க வேண்டும்.

357. தேனு முத்திரையில் - அம்ருதீகரணம் செய்து தாம்பூலம் முதலியவைகளை கொடுத்து முன் சொன்ன முறையிலே ராத்திரி சூர்ணத்தையும் கொடுக்க வேண்டும்.

358. சூர்ணோத்ஸவத்தை திரிசூலத்தால் கிராமத்திலோ ஆலயத்திலோ ஆரம்பத்திலும் விரைவாக செய்யக் கூடிய பரிசாரகர்களால் செய்ய வேண்டும்.

359. ஸமுத்ரம் முதலிய அதிகமான ஜலமுள்ள இடங்களில் செய்யும் தீர்த்த உத்ஸவம் மஹாதீர்த்தம் எனப்படும். சிறிய நீர்நிலைகளில் செய்வதை கவுதுக தீர்த்தம் போல் செய்யக் கூடாது.

360. கொட்டகை முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பிம்பத்தோடும் கலச ஸ்தாபனத்தோடும் தேவதைகளை அழைப்பதோடும் கூடியதாகவும்

361. தீர்த்த கார்யத்திற்காக விக்ரஹமின்றியும் தீர்த்தவாரி செய்யலாம் ஜலத்தின் நடுவில் இருந்து தீர்த்த ஸங்கிரஹணம் செய்யவில்லை எனில்

362. தீர்த்த ஸங்க்ரஹணம் செய்து மஹா தீர்த்தமாக செய்ய வேண்டும். ரக்ஷõ ஸூத்ர விஸர்ஜனம் செய்து பக்தர்களுடன் கூடி

363. சூலம் பேரம், இவைகளோடு மஹா தீர்த்தம் செய்ய வேண்டும். பல தேவாலயங்களிலிருந்து வந்த திரிசூலங்களோடு கூடவோ

364. திரிசூலங்கள் தேவதைகளோடு கூடியதாகவுமோ செய்யலாம். அல்லது பத்மம், என்ற அஸ்திரங்களோடும் சக்ரம் கூடியதாகவும் செய்யலாம்.

365. மஹாமோடி தேவதையுடன் இருப்பின் ராத்திரியில் தீர்த்தம் அனுஷ்டிக்க வேண்டும். பகலிலும் தீர்த்தோத்ஸவம் செய்யலாம். மாத்யாஹ்னிக கால தீர்த்தோத்ஸவம் உத்தமமாகும்.

366. முற்பகலில் தீர்த்தம், மத்யமமாகும். பிற்பகலில் அதமமாகும். சந்திரகிரஹணத்தின் பொழுது தீர்த்தத்தை ராத்திரியில் செய்யும் தீர்த்தம் உத்தமமாகும்.

367. அது வேண்டும் மோடி தேவதையுடன் இருந்தால் உத்தமோத்தமமாகும். ஸமுத்ரத்தில் திதிபிரதானமாகவும் மற்ற இடங்களில் நக்ஷ்த்ரபிரதானமாகவும் ஆகும்.

368. திதி நக்ஷத்ரம் இரண்டும் சேர்ந்து வருவது அரிதாகும். முற்பகலிலோ பிற்பகலிலோ திதி, நக்ஷத்ரம் சேர்ந்திருப்பதை எடுத்துக்கொள்ளவும்.

369. சமுத்திரம் அல்லது நதிகளில் நடுப்பகலில் தீர்த்தம் கொடுப்பது சிறந்தது. நக்ஷத்ரமோ திதியோ பகலில் எது அதிகம் உள்ளதோ அதுவே ஏற்றுக்கொள்ள தகுந்தது.

370. இரண்டு நாட்களில் நக்ஷத்ரம் திதி இவைகளில் நல்ல சேர்க்கை ஏற்படுமானால் சுபயோகங்களுடன் கூடிய சமயத்தில் செய்யலாம் தீர்த்த நக்ஷத்ரம் ஒரு மாதத்தில் இருமுறை வந்தால் பின்னால் செய்வதும் சிறந்ததாகும்.

371. அங்கும் முன்பு உள்ளதில் யோகம் சேர்ந்திருக்குமேயானால் முன்பு உள்ளதையே எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த மாதத்தில் எந்த நக்ஷத்திரத்தில் முன்பு அனுஷ்டிக்கப்பட்டுள்ளதோ

372. அந்த மாசத்தில் அந்த நக்ஷத்திரத்தில் பின்பும் செய்ய வேண்டும். ஸ்வாயம்புவ, தைவிக, ஆர்ஷிக லிங்கம்.

373. மானுஷ லிங்க விஷயத்தில் முன்பு அனுஷ்டித்த தீர்த்த நக்ஷத்திரம், மாத நக்ஷத்ரம் 2 மாதத்தில் ஏற்பட்டால் முன்பு கொடுத்த திதியோ நக்ஷத்திரத்தையோ எடுத்துக் கொள்வது சிறந்தது.

374. ஜலத்திற்கு நடுவில் தீர்த்தத்தை ஆசார்யன் செய்ய வேண்டும். அவகாஹனம் இரண்டாகச் சொல்லப்படுகிறது. பேரத்துடன் கூடியோ (பேரம்) பிம்ப மின்றியோ தீர்த்தவாரி செய்யலாம்.

375. கரையில் தனிமையாக விக்ரஹத்திற்கு ஸ்னபனம் வைத்தும் செய்யலாம். சந்தனம் முதலிய உபசாரங்களால் பூஜை செய்யலாம்.

376. நைவேத்யம் அங்கேயோ அல்லது ஆலயத்திலுமோ கொடுக்கலாம். தீபாராதனைக்கு பிறகு எல்லா மங்களங்களோடும் நந்தவனங்களில் இறைவனை சந்தோஷபடுத்த வேண்டும்.

377. கிராமபிரதட்சிணம் செய்தாலும் செய்யலாம் அல்லது எல்லா பக்த ஜனங்களோடும் சேர்ந்துமோ இல்லாமலும் பிரதட்சிணம் செய்தாலும் செய்யலாம்.

378. எல்லா மங்கள வாத்யங்களோடும் பூர்ணாஹூதியை செய்து சுத்தமான பரிசாரகர்களோடு உள் சுற்று சுற்றி

379. இறைவனையும், இறைவியையும் வித்யேஸ்வரர்களோடு கூட கர்பகிரஹத்தில் வைத்து லிங்கத்தில் பீடத்தில் முறையாக

380. இறைவனையும் இறைவியும், பூஜித்து சுற்றிலும் வித்யேஸ்வரர்களை முறையாக பூஜிக்க வேண்டும். யாகசாலையிலுள்ள அந்தந்த ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து சுத்தமான தீர்த்தத்தால் இறைவனை அபிஷேகம் செய்விக்க வேண்டும்.

381. பிறகு இறைவனை சக்திக்கேற்றவாறு பூஜிக்க வேண்டும். அன்று இரவு த்வஜ அவரோஹணம் (கொடி இறங்குதல்) செய்வது சிறந்தது ஆகும்.

382. மூன்றாவது ஐந்தாவது அல்லது ஏழாவது ஒன்பதாவது நாளில் பதினொன்று பதினான்கு அல்லது பதினைந்தாவது நாளில்

383. அல்லது பதினேழு அல்லது பத்தொன்பதாவது நாளில் செய்யலாம்.

384. மூர்த்தி ஹோமம், பிறகு திசாஹோமம் செய்ய வேண்டும். த்வஜம் முதல் தீர்த்தம் வரையில் தின எண்ணிக்கை இருக்குமேயானால்

385. மறுபடியும் உத்ஸவம் ஆரம்பித்து தீர்த்தம் வரையில் எல்லாம் செய்ய வேண்டும். கொடியிறக்கும் தினத்தில் சுத்த ஸ்நபனம் செய்ய வேண்டும்.

386. லிங்கம், மூர்த்தி, விருஷபம், சூலம், கொடி இவைகளுக்கு அர்ச்சனைபடி ஸ்நபனம் செய்யவேண்டும். புஷ்பமாலைகளால் கோயிலை அலங்கரிக்கவேண்டும்.

387. கர்ப்பகிரஹத்திலிருந்து கோபுரம் வரையில் தன் சக்திக்கு தக்கவாறு கருமையான நற்புகையுடன் கூடிய தூபத்தால் உபசரிக்க வேண்டும்.

388. பலவகை நைவேத்யங்களை முறைப்படி கொடுத்து இறைவனை மகிழ்விக்க வேண்டும். பிறகு சண்டிகேஸ்வர பூஜையை ஹோமத்துடனோ அல்லது ஹோமமில்லாமலோ செய்யலாம்.

389. பிறகு கிராமபலியை அன்ன லிங்கத்தோடு கூடியதாகவும் திரிசூலத்தோடு சண்டநாதரோடு கூடியவராகவும் செய்யவும்.

390. பேரிகை, மத்தளம், படஹம், காளஹம், ஸ்ரீகண்டம், சங்கம், போன்ற வாத்யங்களை பலிகாலத்தில் வாசிக்க வேண்டும்.

391. கிராமத்தை சுற்றியுள்ள பிரம்மா முதலிய தேவர்களை விஸர்ஜனம் செய்து திவஜத்தின் ஆரம்பத்தில் அல்லது முடிவில் பலி கொடுக்க வேண்டும்.

392. கொடியை இறக்கி அந்த விருஷபத்தை விருஷப மூர்த்தத்தில் சேர்க்கவேண்டும். த்வஜாவரோஹணம் செய்யும் முன்போ செய்தபின்போ பலி கொடுக்க வேண்டும்.

393. யஜமானர் ஆசார்யனை வஸ்திரம், பவித்ரம், தர்ஜனி இவைகள் கொடுத்து கவுரவிக்க வேண்டும். அங்குரார்ப்பண காலத்தில் த்வஜாரோஹண காலத்திலும்

394. யாக அதிவாஸ காலத்திலும் ஹோம ஆரம்பகாலத்திலும் இரண்டு ஸந்திகளிலும் அல்லது ஒரு சந்தி கால பூஜைகளிலும் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ

395. நிருத்த மூர்த்தி (நடராஜர்) உத்ஸவத்திலும் தீர்த்தத்திலும் சுத்த ஸ்நபன காலத்திலும் தட்சிணை கொடுக்க வேண்டும். அந்த தட்சிணை மூன்று விதமாகும்.

396. ஆசார்யனுக்கு உயர்ந்த தட்சிணை கொடுக்க வேண்டும். ஐந்து நிஷ்கம் அதமம் இரண்டு மடங்கு மத்யமம், மூன்று மடங்கு உத்தமம்.

397. அதில் பாதி எண்ணிக்கையுடன் கூடியது அதிகமாக சொல்லப்படுகிறது. மேற்கூறியதில் இரண்டு மடங்காக கொடுப்பதும் உத்தமமென்று கூறப்பட்டுள்ளது. வேறு விதமாகவும் தட்சிணை கூறப்படுகிறது.

398. பிரதி தினமும் பாதி நிஷ்கமோ, அதில் பாதியோ கொடுக்க வேண்டும். பக்தோத்ஸவம் பிறகு செய்யலாம் அல்லது பதினைந்து நாட்களுக்கு முன்பாகவோ செய்ய வேண்டும்.

399. உத்ஸவத்தின் ஆரம்பம் அல்லது நடுவிலோ பக்த உத்ஸவம் செய்யலாம் வருடாந்திர உத்ஸவத்தில் மாஸோத்ஸவமானது

400. பலிஹோமம் இவைகளோடு கூடியதாகவுள்ள திருவீதியிலாவுடனுமோ பலியின்றியுமோ பிம்ப திருவீதி உலா செய்யலாம்.

401. மாஸோத்ஸவம் இரண்டு வந்தால் இவ்விதமே செய்ய வேண்டும். ஒருநாள் உத்ஸவத்தை போல் மாஸோத்ஸவம் செய்ய வேண்டும்.

402. ஒரே மாதத்தில் ஒன்றோ பலவோ உத்ஸவம் வந்தால் அங்குரார்பண பூர்வாங்கமாகவோ அல்லது இல்லாமலோ செய்யலாம்.

403. ஒருநாள் உத்ஸவம் பேரீ அடித்தல் முன்னதாக செய்ய வேண்டும். இரண்டு ஸ்தண்டிலங்கள் செய்து சூலத்தை ஒன்றில் வைக்க வேண்டும்.

404. அதன் முன்பு பேரியை வைத்து பிறகு புண்யாஹம் செய்ய வேண்டும். அஸ்த்ர தேவரையும் பேரியையும் பூஜித்து பேரியை அடிக்க வேண்டும்.

405. பிறகு பிரதிஸரம் (காப்பு) தெய்வத்திற்கும் சூலத்திற்கும் முறைப்படி கட்டி பிரகார பிரதட்சிணம் செய்து யாகசாலையில் நுழைந்து

406. ஸ்தண்டிலத்தில் சூலத்தை ஸ்தாபனம் செய்து வேதிகைக்கு மேலே மங்கள கரமான ஸ்தண்டிலத்தில் வர்த்தனீ ஸஹிதமாக சிவகும்பத்தை ஆசார்யன் வைக்க வேண்டும்.

407. சுற்றிலும் எட்டு கலசங்களையோ கடங்களையோ வைக்க வேண்டும். புண்யாகவாசனம் செய்து அஸ்த்ர மந்திரத்தால் பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

408. தங்க பத்மம் முதலியவைகளை இட்டு வஸ்த்ரம் யக்ஞஸூத்ரம் கூர்ச்சம் இவைகளோடு கூடியதாக இரண்டிற்கும் அளித்து

409. கும்பங்களில் மாவிலை பழம், இவைகளை சேர்த்து நடுவில் கும்பத்தில் சிவனையும், வர்த்தனியில் மனோன்மணியையும், அஷ்டவித்யேஸ்வரர்களை கலசங்களிலும் பூஜை செய்ய வேண்டும்.

410. திவாரங்களை பூஜை செய்து நந்தி முதலிய திவார பாலகர்களை ஸ்தலத்திலுள்ள கலசங்களிலும் பூஜை செய்ய வேண்டும். தோரணங்கள் அஷ்டமங்களங்கள் இவைகளை பூஜை செய்ய வேண்டும்.

411. தசாயுதங்களையும் மற்றும் அஷ்டமங்களம் போன்றவையும் வைத்து பூஜை செய்யலாம். இல்லாமலும் செய்யலாம். குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ ஹோமம் செய்ய வேண்டும்.

412. ஐந்து அல்லது ஓர் குண்டத்தில் முன் சொன்ன பொருள்களைக் கொண்டே ஹோமம் செய்ய வேண்டும். பிறகு கிராமபலி செய்ய வேண்டும். பலி பிம்பத்தோடு கூடவோ அல்லது இல்லாமலும் செய்யலாம்.

413. இவ்விதம் இரவில் செய்ய வேண்டும். காலையில் யாகேஸ்வரரை பூஜிக்க வேண்டும். விக்ரஹத்தோடு கூட ஹோமம் பலி இரண்டும் முடிந்தவுடன்

414. ஆசார்யன் ஆலயம் சென்று அங்கு சூர்ணோத்ஸவம் செய்ய வேண்டும். பிறகு தீர்த்தோத்ஸவம் இங்கு சொல்லப்படவில்லையெனில் முன்பு போலவே செய்ய வேண்டும்.

415. பேரீதாடனம் இல்லாமல் அனைத்தையும் காலையிலும் செய்யலாம். உடனே அதிவாஸம் செய்து முன்புபோல் அனைத்தையும் செய்யவேண்டும்.

416. சூர்ணோத்ஸவம் இல்லாமலும் இந்த உத்ஸவம் செய்யலாம். அதன் முறை இங்கு சொல்லப்படுகிறது. ஆலயத்தில் பலிதானம் திருவீதியு லாவையும் செய்யவும். தீர்த்தம் இல்லாமல் உற்சவம் செய்யலாம்.

417. வீதிவலம் பிற்பகலிலோ மாலையிலோ செய்யலாம். தீர்த்தவாரி இருந்தால் ஸ்வாமி வீதி வலம் வருதலும் பலிகாலத்தில் வேறு பிம்பம் வைத்து

418. வலம் வருதலோ செய்யலாம். வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. பலி ஹோமம் முதலியவைகளை செய்யாமல் வலம் வருதலையோ மட்டும் கூட செய்யலாம். தெய்வத்திற்கு ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டுமென தினங்களின் உத்ஸவத்திலும் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.

419. கர்த்தாவின் விருப்ப நாட்களிலும் அதற்கு உரிய நாளிலோ மேற்கூறியபடி செய்யலாம். கர்த்தாவின் ஜன்ம நக்ஷத்திரத்திலோ அல்லது மரண நாளில் அல்லது மாதாந்திர திருவாதிரை நக்ஷத்திரத்திலோ

420. சதுர்தசி, அஷ்டமி, பவுர்ணமி அல்லது அமாவாசை உத்தராயண தட்சிணாயனம் விஷுவ புண்யகாலம், கிரஹணங்கள் தமனோத்ஸவம் என்ற மரிக்கொழுந்து சாற்றுதலிலும்.

421. பவித்ரோத்ஸவம், கார்த்திகை தீபம் மற்றும் வருடசிறப்பு தினங்கள் புதிய தண்ணீர் வருதல்

422. பூரம் நக்ஷத்திரம், நவ நைவேத்ய கர்மாவிலும் மற்ற மங்கள கார்யங்களிலும் ஒருநாள் உத்ஸவம் செய்யலாம்.

423. இவ்விதம் ஒவ்வொரு வருடமும் போகத்திற்கும் அல்லது மோக்ஷத்திற்காகவும் செய்ய வேண்டும். ஞாயிறு முதல் வார பூஜையும் முறைப்படி செய்ய வேண்டும்.

424. பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம் மற்றும் ஸ்நபனங்களால் இறைவனை அபிஷேகம் செய்ய வேண்டும். நிறைய சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் இறைவனை பூஜை செய்ய வேண்டும்.

425. (ரோஜா) தலாரவிந்தம், நாயுருவி, தாமரை துளசி, பில்வ பத்ரம், விஷ்ணுகிராந்தி இவைகள் முறையாக

426. ஞாயிற்றுகிழமை முதலான கிழமைகளில் மேல் கூறிய பத்ரங்களால் பூஜிக்கலாம். ஞாயிற்றுக் கிழமை மாணிக்கமும் திங்கள் முத்துவும்

427. பவழம் செவ்வாய் கிழமையிலும், புதன் கிழமையில் மரகதமும் வியாழக்கிழமை புஷ்பராகமும் வெள்ளிக்கிழமை வஜ்ரமுமாகும்.

428. சனிக்கிழமை இந்த்ர நீலமும், சாத்தலாம். மற்ற எல்லா ரத்னங்களும் எப்பொழுதும் சாத்தலாம் இந்த முறைப்படி சாத்துவது சிறந்தது

429. அந்தந்த நிறமுடைய புஷ்பம் வஸ்திரம் இவைகளை சாத்த வேண்டும்.

430. அந்தந்த நிறமுடைய நைவேத்யம் அந்தந்த வாரத்திற்கு உட்பட்டு நிவேதனம் செய்ய வேண்டும். வாரபூஜையின் முடிவில் வாரோத்ஸவம் செய்ய வேண்டும்.

431. வேண்டியதை அடைய ஞாயிற்றுகிழமை உத்ஸவத்தை மட்டுமோ நடத்தலாம். ஞாயிறு உத்ஸவம் கிருஹணங்களின் பீடை நீங்கவும் சிறப்பாக ஆரோக்யம் பெறவும் ஆகும்.

432. உலக நன்மைக்காகவும் எந்த கிரஹத்தால் துன்பமேற்பட்டுள்ளதோ அந்த கிருஹ வாரத்தில் பூஜை செய்ய வேண்டும். அந்த வார உத்ஸவத்துடன் சேர்த்து செய்ய வேண்டும்.

433. அந்தந்த கிழமைக்கு தக்கவாறு சந்தனம் முதலிய திரவ்யங்களை சேகரிப்பது, செய்தும் செய்யாமலும் இருக்கலாம். ஸம்வத்ஸர உத்ஸவம் கூறி மாஸோத்ஸவத்திலும் அவ்வாறே அனுஷ்டிக்கவும் என்றும்

434. வாரோத்ஸவத்திலும் சிறப்பு சொல்லப்படுகிறது. முற்பகல் பிராமணர்களுக்கும் நடுப்பகல் க்ஷத்ரியர்களுக்கும்

435. மாலை வைச்யர்களுக்கும் மற்றவர்களுக்கும் நடு இரவிலும் கொடி ஏற்றப்பட வேண்டும். கொடியேற்றம் முதலாகவோ

436. பேரீ அடித்தல் முதலாகவோ பாலிகை தெளித்தல் முதலாகவோ பிராம்மணர் முதலான வர்ணத்தவர்களுக்கு செய்யலாம். மற்றவர்களுக்கு பாலிகை தெளித்தல்தான் முதலாவதாக செய்ய வேண்டும்.

437. நகரத்தில் த்வஜம் முன்னதாகவும் மங்கள கார்யங்களில் பேரீதாடனம் முன்னதாகவும் பெரிய நகரங்களில் அங்குரம் முன்னதாகவும் செய்யலாம். அது போல் நான்காவது நிலையில் உள்ளவர்களுக்கும் உண்டு.

438. நான்காயிரம் அந்தணர்களுக்கு மேல் இருக்கும் கிராமத்தில் மற்றும் நகரங்களிலும் உத்ஸவங்களுக்கு கலப்பு தோஷம் இல்லை என கூறப்பட்டுள்ளது.

439. ஏழு ஆறு, ஐந்து அல்லது நான்கு முழத்தில் த்வஜதண்ட வேதிகை கட்டவேண்டும். முதல் மூன்று வர்ணத்தவர் தவிர மற்றவர்களுக்கு இது மாறுதலாக அமையும்.

440. ஒரு த்வஜத்தில் மற்றொரு த்வஜத்தை செய்யக் கூடாது. விருஷபத்வஜருக்கு செய்யலாம். ஒரு உத்ஸவத்தில் மற்றொரு உத்ஸவம் செய்யக்கூடாது. சைவோத்ஸவம் சிறந்தது.

441. எல்லோரும் பொருத்தமான நக்ஷத்திரத்தில் த்வஜாரம்பம் செய்வது சிறந்தது. கொடிக்கு வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மூன்றும் அந்தணர் முதலான வர்ணத்தவர்களுக்கும் பொருந்தும்.

442. நான்காவது வர்ணத்தவர்க்கு மஞ்சள் நிறம் எல்லோர்க்கும் வெண்மை நிறத்தை பொதுவாக வைத்துக் கொள்ளலாம். கொடி ஆரம்பத்தில் விருஷபத்தலையும் வால் அடிப்பகுதியிலும் இருக்க வேண்டும்.

443. த்வஜ பிரதட்சிண காலத்தில் ஆசார்யன் முன்னால் சென்றாலும் செல்லலாம். கிழக்கில் காந்தாரம் தெற்கில் கவுசிகம்.

444. மேற்கில் காமரம், வடக்கில் தர்கராகம், இவ்விதம் ஸ்வரங்கள் சொல்லப்பட்டன.

445. த்வஜாரோஹண காலத்தில் நான்கு ராகமோ ஓர் ராகமோ வாஸித்து த்வஜாரோஹம் முதல் தீர்த்தம் வரையில் இரவில் கிராமபலி போட வேண்டும்.

446. அல்லது வேறு இடத்தில் உத்ஸவம் நடக்கும் போதும் நித்யோத்ஸவமுள்ள இடத்திலும் தேவர்களின் பலி த்வஜத்தின் அடியிலேயே கொடுக்கப்படவேண்டும்.

447. பிராம்மணர் முதலிய பேதங்களில் வடக்கிலிருந்து குண்டமேற்படுத்தி பிரதட்சிண முறையாகவும் ஒரே அக்னி குண்டபூஜையும் செய்யலாம்.

448. நன்கு புசித்த சண்டரூபம் தரித்த பிரம்மசாரி தன்னை சண்டன் போல் தியானித்து த்வஜ தண்டத்தை சேதனம் செய்தாலும் செய்யலாம்.

449. உத்ஸவம் அல்லது பவித்ரம் உத்ஸவம் அல்லது இரண்டையும் செய்யலாம். ஒன்பதாவது நாளில் கொடிக்காக அங்குரார்ப்பணம் செய்து ஏழாவது நாளில் உத்ஸவத்திற்காக அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும்.

450. தீர்த்தாங்குரம், அதே எண்ணிக்கையில் உடைய நாட்களில் செய்யவும் என்ற இந்த முறை எங்கும் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கலாம் நடுப்பகலில் த்வஜ பூஜையையும் ஸோம கும்பத்தில் ஜலத்தை

451. வைத்து பூஜையையும் அந்த கும்ப பூஜை ராத்திரியில் செய்ய வேண்டும். ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட சுவாமியை கிராமத்திலிருந்து வெளியே எடுத்து செல்லுதலும்

452. வேட்டையாடும் உத்ஸவம் விருப்பப்பட்ட காலத்திலும் செய்ய வேண்டும். காமிகாகமத்தில் வருடமானது சவுரம், சாந்தரம் என்பதாக இருகூறாக வகுக்கப்பட்டுள்ளது.

453. சவுரமானம் உயர்ந்ததாகும். சாந்தரமானப்படி செய்வது நடுநிலையாகும். சாவனம் என்ற வருஷக் கணக்கு முறையானது அதமமாகும். ஸாவனமானத்தால் பூஜைகள் செய்யக்கூடாது.

454. உத்ஸவம் முதலிய காலங்களில் பிரதிஷ்டை முதலியவைகளை செய்யக்கூடாது. சாந்தி, ஹோமம் முதலியன செய்து பிரதிஷ்டை முதலியவைகள் வேண்டுமானால் செய்யலாம்.

455. அல்லது மற்றொரு முறையால் உத்ஸவம் சொல்லப்படுகிறது. த்வஜா ரோஹண பூர்வமாக ஒரு கொடியை ஏற்றி

456. கொடியேற்றிய அதே தினத்தில் சூரியன் மறைந்தபொழுது யானை முதலியவைகளில் ஏறப்பட்டவனால் தீர்த்த தினத்தை அறிவிக்கப்படவேண்டும்.

457. மனைவியோடு கூடி யானையின் மேல் ஏறிய சண்டாளன் பேரி முரசை அடித்துக்கொண்டு மிகவும் சப்தமாக கொடியேறிய தினத்திலேயே இரவிலேயே அறிவிப்பை செய்ய வேண்டும்.

458. அஸ்திர தேவரிடத்தின் முன்பாக முன்பு கூறப்பட்டபடி தேவதைகளை ஆவாஹித்து கிராம பலியின்றி தீர்த்த நாளை தெரிவித்து

459. ஆலயத்திலே இதைத் தெரிவித்து அவ்விடமிருந்து நீர் நிலையை அடைந்து அங்கு இரண்டு ஸ்தண்டிலத்தை அமைக்க வேண்டும்.

460. ஒரு இடத்தில் சூலம் மற்றொரு இடத்தில் கலசங்களை வைக்க வேண்டும். ஒன்பது கலசங்களால் சூலத்தை அபிஷேகம் செய்து அந்த சூலத்தை மூழ்க வைக்க வேண்டும்.

461. திருக்கோயிலை அடைந்து அந்த நாளிலிருந்து பத்தாவது நாளிலோ, அங்குரார்பண பூர்வமாக யாகாரம்பம் மறுபடியும் செய்யவேண்டும்.

462. ஒரு ஹோமத்தோடு கூடியதாக கிராமபலி முதலியவைகளை போடவேண்டும். தினமும் காலையில், மாலையிலும் ஸ்வாமி திருவீதியுலா இருக்க வேண்டும்.

463. ஐந்தாவது நாளில் அஸ்தர மந்திரத்தால் அபிமந்த்ரணம் செய்யப்பட்ட மணலை உள்ளும், வெளியேயும் எங்கும் இரைத்தல் வேண்டும்.

464. பதினெட்டாவது தினத்தில் அங்குரார்பணம் செய்யவேண்டும். தீர்த்தத்திற்காக பதினெட்டாவது தினத்தின் இரவில் ஆலயத்தின் எட்டு திசைகளிலும்

465. திக்பாலகர்களுடைய வாகனங்களால் அடையாளம் செய்யப்பட்ட அல்லது அவர்களின் ஆயுதத்தால் அடையாளமிடப்பட்ட அல்லது விருஷபத்தை அடையாளமாக உடைய எட்டுக் கொடிகளை ஆசார்யன் ரித்விக்குகளோடு கூடியவனாய் ஏற்றவேண்டும்.

466. அது முதற்கொண்டு ஹோமம் சிறப்பாக செய்யவேண்டும். அதன் முடிவில் பலிதானமும் திருவீதி உலாவும் செய்யவேண்டும்.

467. இவ்விதம் ஒன்பது நாட்கள் செய்து பத்தாவது நாளில் தீர்த்தம் ஆகும். எட்டு கொடிகளையும் அன்று இரவே அவரோஹனம் செய்து

468. அன்றையிலிருந்து பல வாத்யங்களோடும் பல இசைகளோடும் பல ஆடல்களோடும்,

469. முறைப்படி கிராம பிரதட்சிணம் செய்ய வேண்டும். ஏழாவது நாள் இப்படி செய்து பிறகு தீர்த்தக்கரையை அடைந்து

470. ஜல தீரத்தில் இரண்டு ஸ்தண்டிலங்களை வைக்கவேண்டும். ஒன்றில் சூலத்தையும் மற்றொன்றில் கலசங்களையும் ஸ்தாபனம் செய்யவேண்டும்.

471. ஒன்பது கலசங்களால் சூலத்தை அபிஷேகம் செய்து அந்த சூலத்தை ஜலத்தில் முழுக வைக்கவேண்டும். எல்லா வாத்யங்களுமின்றி ஆலயத்தில் நுழைந்து

472. ஏழுநாட்களுக்கு பிறகு மவுனமாகச் சென்று சண்டிகேஸ்வரரை முன்னிட்டுக் கொண்டு தெய்வ பிம்பங்களோடு சென்று

473. பலி ஹோமம் இல்லாமல் ஏழுநாள் பூஜை செய்ய வேண்டும். ஸ்நபனம் ஹோமம், இவைகளோடு ஏழுநாள் இருக்கவேண்டும்.

474. அதன் முடிவில் திரிசூலத்தோடு தீர்த்தம் கொடுக்கவேண்டும். அன்று இரவில் முன் சொன்ன முறையில் கொடி இறக்குதல் செய்யவேண்டும்.

475. வீதி உலா இல்லாவிட்டாலும் இவ்விதம் விதியை செய்யவேண்டும். புதிய அன்னலிங்கம் செய்தாவது திக்பாலகர்கள், அவர்கள் அஸ்திர தேவதைகளை

476. அந்த திரிசூலத்தினாலோ பலியை கிராமங்களில் செய்யலாம். நித்யோத்ஸவத்தில் அன்னலிங்கம் முதலியவைகளை பத்து எண்ணிக்கைகளாகவோ செய்ய வேண்டும்.

477. பன்னிரண்டு ஆண்டுகளின் முடிவில் த்வஜ ஸ்தாபனம் செய்யலாம். தேய்மானம் மலினமடைந்தால் அதை எடுத்து வேறு புதிய கொடிக் கம்பத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் மஹோத்ஸவ விதியாகிற ஆறாவது படலமாகும்.

திங்கள், 7 அக்டோபர், 2013

படலம் 5: நித்யோத்ஸவ விதி

ஐந்தாவது படலத்தில் நித்யோத்ஸவ விதி பிரிதிபாதிக்கப்படுகிறது. முதலில் நித்யோத்ஸவம், நித்ய பூஜாங்கங்களில் உத்தமம் என ப்ரஸஸ்தி கூறப்படுகிறது. பிறகு சிவனுக்கு முன்போ அதின் இடப்பாகம் பிரஸாத மண்டங்களிலேயோ கோசாணம் மெழுகி விட்டதான ஸ்தலத்தில் லக்ஷணமுடைய பாத்ரம் ஸ்தாபிக்க வேண்டும் என கூறி அன்னலிங்க அக்ஷதலிங்க பாத்ரநிர்மாண பிரகாரம் அன்னலிங்க அக்ஷதலிங்க நிர்மாண பிரகாரமும் கூறப்படுகிறது. இவ்வாறாக புஷ்பலிங்க நிர்மாண பிரகாரமும் சூசிக்கப்படுகிறது. பிறகு நித்யோத்ஸவ விஷயத்தில் அன்னலிங்க, அக்ஷதலிங்க, புஷ்பலிங்கத்தின் உபயோக காலம் நிரூபிக்கப்படுகிறது. பின்பு புஷ்பாக்ஷத லிங்க அன்னலிங்கத்தில் சந்திரசேகர யுக்தம், தத்விஹீநமாகவோ பாசுபதாஸ்திரம் பூஜிக்க வேண்டுமென கூறி அந்த விஷயத்தில் தியானத்திற்கு மிச்ராசாந்தி உக்ரமூர்த்திகளின் ரூபம் நிரூபிக்கப்படுகிறது. அல்லது பாசுபதாஸ்திரமூர்த்தி, சந்திரசேகர மூர்த்தியும் கல்பனீயமென கூறப்படுகிறது. பிறகு பாதுகாநிர்மாண பிரகாரம் கூறப்படுகிறது. பாதுகைகளில் விருஷபரையோ அநந்தரையோ பூஜித்து சுற்றி லோகபாலர்களை பூஜிக்க வேண்டும் என்கிறார். பின்பு நித்யோத்ஸவ விதி பிரகாரம் கூறப்படுகிறது. அதில், லிங்க, பாசுபதாஸ்திர சந்திரசேகரமூர்த்தி, பாதுகம் முதலிய நான்குடன் கூடியதாகவோ பாசுபதாஸ்திரத்துடன் மட்டுமே நித்யோத்ஸவம் செய்ய வேண்டுமென விகல்பிக்கப்படுகிறது. பிறகு உத்ஸவ காலத்தில் கூறிய ராகதாளத்தின் நிரூபணம் பிரதட்சிண பிரகார நிரூபணம், பிரதட்சிணத்திற்குப்பின் செய்ய வேண்டிய கிரியைகளின் நிரூபணம் முடிவில் ஸகளமூர்த்த தேவதேவிகளின் விஷயத்தில் நித்யோத்ஸவ கரண பிரகார சூசனம் இவ்வாறாக ஐந்தாம் படல கருத்து தொகுப்பாகும்.

1. நித்யபூஜைக்கு அங்கமானதும், உத்தமமானதுமான நித்யோத்ஸவ விதியை சொல்கிறேன். சிவனுக்கு எதிரில் அல்லது இடது பாகத்தில் வலது பாகத்தில் சுத்தமான இடத்தில்

2. ஆலயத்தின் முன்போ அல்லது மண்டப ஆரம்பத்திலோ கோமயத்தினால் மெழுகப்பட்ட இடத்தில் எல்லா லக்ஷணங்களோடு கூடியதும் அஸ்திர மந்திரத்தால் பிரோக்ஷிக்கப்பட்டதுமான பாத்திரத்தில்

3. ஸ்வர்ணம், வெள்ளி, தாமிரம், வெண்கலம் இவைகளில் ஒன்றினால் பதினைந்து அங்குலம் முதல் ஓர் அங்குல அதிகரிப்பால்

4. முப்பத்திரண்டு அங்குலம் வரையில் அளவுடையதாக பாத்திரம் இருக்க வேண்டும். விருப்பமுள்ள கனமுடையதாகவும் வட்ட வடிவமாகவும் கர்ணிகை தளங்களோடு கூடியதாகவும் இருக்க வேண்டும்.

5. அந்த பாத்திரத்தில் ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று என்பவைகளாக பிரிக்கப்பட்டு இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்ற பகுதிகளால் கர்ணிகை இருக்கும்.

6. மற்றவைகளால் எட்டு தளமும், பத்து தளமும் ஆகும். அரைபாகம், முக்கால்பாகம், இரண்டு மாத்திரை அளவினாலோ கர்ணிகையின் உயரமாகும்.

7. அவ்வாறே ஓரத்தோடு கூடியதும் அல்லது சாதாரணமானதுமான பாத்திரத்தில் 2 ஆழாக்கு என்ற அளவு முதல் ஓர் ஆழாக்கு வரையிலும் குருணி என்ற அளவுள்ள (3 மரக்கால்) வரை

8. அன்னலிங்கத்திற்காக அன்னமும் அக்ஷதை லிங்கத்திற்காக அரிசியையும் கல்பிக்க வேண்டும். தேன், நெய், இவைகளோடு கலந்து அன்னத்தை பாத்திரத்தின் நடுவில் வைக்க வேண்டும்.

9. அதனால் அன்ன லிங்கம் செய்ய வேண்டும். லிங்கம் ஐந்து மாத்திரை அளவு, உடையதாகவும் ஒரு அங்குலம் முதல் பதினெட்டு அங்குலம் வரை நீளமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

10. மூன்று அங்குலம் முதல் பதினைந்து அங்குலம் வரையில் பரப்பு உடையதாகவும், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஐந்து அல்லது ஆறுவரை நுனியின் அளவுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

11. சிறப்பு, பொது என இருவகைக்கும் அன்னலிங்கம் சொல்லப்படுகிறது. மூன்று காலத்திற்கும் அல்லது, காலை, மதியம் என்ற முறையிலோ செய்யலாம்.

12. மதியம் அல்லது காலையில் புஷ்பலிங்கம் சொல்லப்படுகிறது. பிரதோஷ காலத்தில் மாலையில் அக்ஷதையிலான லிங்கமும் அதில் பாசு பதாஸ்ரத்தையும் பூஜிக்க வேண்டும்.

13. சந்திரசேகருடன் கூடியதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். பாசுபதம் மிச்ரம், சாந்தம், உக்ரஹேதுகம் என்று மூவகைப்படும். அழகாகவும் கருணைக் கண்களோடு கூடியதாகவும் இரண்டு அல்லது நான்கு கைகளோடு கூடினவராகவும்,

14. மின்னல் போல் வெண்ணிறமும் ஜடை மகுடம் இவைகள் தரித்தவராகவும், வலது பாகத்தில் அபயம் அக்ஷமாலை இவைகளுடனும் இடது பக்கம் வரதம், பாசம் இவைகளை உடையவராகவும்

15. வரதம், அபயம் முதலிய கைகளோடு கூடியவராகவுமோ, அல்லது அக்ஷமாலை, பாசம், இவைகளை விடுத்து பத்மம், மணி, இவைகளை உடையவராகவுமோ எல்லா லக்ஷணங்களோடு கூடியவராகவும்.

16. அழகுடன் கூடிய சவும்ய மூர்த்தியின் உருவம் சொல்லப்பட்டது. உக்ரமூர்த்தி என்றால் சூலத்தின் அடிபாகமும், அபயமும் வலது பாகத்திலும் சூலத்தில் நுனி, வரதம் இடது பாகத்திலும்

17. கோரமான பார்வையும் மேல் நோக்கிய ஜ்வாலா கேசங்களும் கையில் உள்ள சூல திரிசூலமும் மாறுபட்டதாகவும் அசுமாலையும்கையில் உள்ளதாகவும் ரவுத்திர உருவத்தை மூன்றாக வழிபடலாம்.

18. இவ்விதம் ரவுத்ரம் மிச்ரமானதாகவும் பரசு, சூலம் இவைகளை தரித்து வலது பாகத்தில் பாசம் இடது கையில் மிருகம் இவைகளை உடையதாகவும் மற்றொரு முறை சொல்லப்படுகிறது.

19. வலது பாகத்தில் திரிசூலம், அபயம், பாசம், வரதம் இடது பாகத்தில் என்று இரண்டாக சொல்லப்பட்டது. பிறகு மிஸ்ரம் என்றும் பாசுபதாஸ்திரம் மூன்று விதமாக கூறப்பட்டுள்ளது.

20. புஷ்பம், அக்ஷதை, அன்னம், முதலிய லிங்கங்களிலும் அந்தந்த மந்திரங்களால் பூஜிக்க வேண்டும். அல்லது அந்த அளவிற்கு பிம்ப உருவமைக்கலாம்.

21. வட்ட வடிவமான பீடத்தோடு கூடியதாகவும் பீடமின்றியும் பூஜிக்கலாம். அன்னலிங்க அளவில் அடியும் நுனியும் சமமான அளவுள்ளதாக இருக்க வேண்டும்.

22. கை அளவோடு கூடியதும் எல்லா லக்ஷணங்களோடு கூடியதும் ஸ்தாலிகையின் அளவு கோலோடு கூடியதுமாகவோ பூஜிக்கலாம்.

23. பிரதிமைக்கு உரிய இலக்கணங்களோடு இந்துசேகர மூர்த்தி (சந்திரசேகரமூர்த்தி) இருக்க வேண்டும். பாதுகை 3 அங்குலம் முதல் ஒவ்வொரு அங்குலம் பெரியதாக

24. பதினைந்து அங்குலம் வரை உள்ளதாக கனம் சொல்லப்பட்டிருக்கிறது. கனத்திற்கு தகுந்த அகலமும் அகலத்திற்கு அரைபாகம் நீளமுமாக அமைக்க வேண்டும்.

25. எட்டு அம்சத்திற்கு அதிகமான நடுஅளவைக்காட்டிலும் ஒன்பது அங்குலம் அதிகமாக இருக்கவேண்டும். அதில் விருஷபத்தை பூஜை செய்ய வேண்டும் அல்லது அனந்தனையும் பூஜை செய்யலாம்.

26. சுற்றிலும் லோக பாலகர்கள் பூஜிக்கப்படவேண்டும். பூஜை ஆரம்பம் அல்லது முடிவு இவைகளில் பூஜித்தாலும் புதிய அன்ன லிங்கத்தோடு கூடியதாக நித்யோத்ஸவம் செய்ய வேண்டும்.

27. இப்படி எல்லாவற்றோடும் கூடியதாக நித்யோத்ஸவம் செய்ய வேண்டும். இரண்டு மூன்று, அல்லது நான்கு என்ற காலகணக்கு முறையில் முற்பகலிலோ அல்லது மாலை வேளையிலோ

28. மதிய வேளையிலோ பாசுபதன் என்ற நித்யோத்ஸவ தேவன் பூஜிக்கப்படுபவனாவான். மஞ்சத்திலே, பல்லக்கிலோ, பரிசாரகன் சிரஸிலோ

29. எழுந்தருளச்செய்து அலங்காரம் முடித்து விதானத்துடன் கூடியதாகவும் குடை சாமரம் பலவித கொடிகளோடு கூடியதாக வேண்டும்

30. பாட்டு ஆடல் இவைகளோடும், வாத்யம், கீதம், இவைகளோடும் தூபம் தீபம், இவைகளோடும் பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

31. முதல் பிரதட்சிணம் மங்கிணி தாளத்தோடு கூடியதாக செய்ய வேண்டும். விருஷபத்திற்கு பிரம்மதாளமும் அக்னிக்கு பிருங்கிணீ தாளமும்

32. பெண் தெய்வங்களுக்கு சண்டவாத்யமும் விநாயகருக்கு டக்கரி வாத்யமும் ஷண்முகருக்கு உத்கடவாத்யமும் ஜேஷ்டா தேவிக்கு குஞ்சித தாளமும்

33. துர்கா தேவிக்கு தடபிரஹாரமும் சண்டேஸ்வரர்க்கு விஷமதாளம் செய்ய வேண்டும். கிராமத்திலோ அல்லது நகரத்திலோ அல்லது பிரகாரத்திலோ

34. இரண்டாவதுசுற்று பெரிய பீடத்தின் வரையிலான பிரதட்சிணமாகும். ஒன்றோ இரண்டோ அல்லது மூன்றோ சபரீதாளத்துடன் கூடியதாகவோ பிரதட்சிணம் செய்யலாம்.

35. அல்லது பலிபீடத்துடன் பிரம்ம தாளத்தோடோ அல்லது கணதாளத்துடனோ இரண்டுடனோ பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

36. பைசாசங்களுக்கு மட்டுமே ஓர் பிரதட்சிணத்துடன் சபரீதாளமாகும். கோபுரத்தில் வாத்யமில்லாமலோ அல்லது சங்கத்வனியோடு கூடவோ செய்யலாம்.

37. இந்திரனுக்கு சமதாளமும் காந்தாரஸ்வரமும் ஆகும். அக்னிக்கு பத்தாபணம் தாளமும் பண்கொல்லியும் ஆகும்.

38. தெற்கில் (யமதிக்கில்) பிருங்கிணி தாளம் பண் கவுசிகம். நைருதியில் மல்லதாளமும் பண் நட்டபாடையும் ஆகும்.

39. மேற்க்கில் (வருணதிக்கில்) நவதாளமும் பண்காமரம். வாயுதிக்கில் பலிதாளமும் பண் தக்கேசியும் ஆகும்.

40. வடக்கில் (குபேரதிக்கில்) கோடிகதாளமும் பண் தக்காராகமும், ஈசானத்தில் டக்கரி தாளமும் பண் சாலாபாணியும் ஆகும்.

41. இவ்வாறு பிரதட்சிணம் செய்து மூன்றாவது சுற்றில் உள்ளே நுழைய வேண்டும். கால்களை அலம்பி கொண்டு சிவாலயத்தில் நுழைய வேண்டும்.

42. அல்லது மண்டபத்தின் முகப்பில் பீடத்தில் உள்ள மூர்த்திகளுக்கு பாத்யம் முதலிய உபசாரங்கள் செய்து பிரவேசிக்க வேண்டும்.

43. அன்னம் முதலிய லிங்கத்திலிருந்து தேவனை லிங்கத்தின் வலது பக்கத்தில் பாவிக்க வேண்டும். சிவனுடைய பாதங்கள் (பாதுகைகள்) வலது, இடது பக்கங்களில் பூஜிக்க தகுந்தவைகள்.

44. மற்ற தெய்வங்களுக்கும் தேவியர்களுக்கும் மூலபிம்பம் போல அந்தந்த பிரதிஷ்டா படலங்களில் கூறியபடி வேறு உருவ பிம்பங்களை, நித்யோத்ஸவம் செய்வதற்காக தயார் செய்யலாம்.

45. அதன் மூலமாக நித்யோத்ஸவத்தையும் நடத்தலாம். அந்த அன்னலிங்கம், முதலியவைகளில் அஸ்திரத்தை பூஜிக்க வேண்டும் வாஹனத்தை (விருஷபம் முதலியவைகளை)

46. பாதுகை இரண்டிலும் பூஜிக்கப்பட வேண்டும். மற்றவை எல்லாம் பொதுவானதாகும்.

இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் நித்யோத்ஸவ முறையாகிற ஐந்தாவது படலமாகும்.
படலம் 4: ஸ்நபன விதி

நான்காம் படலத்தில் ஸ்நபன விதி கூறப்படுகிறது. அதில் முதலில் அஷ்டமி முதலான திதிகள், விஷுவ அயந ஸங்க்ரமணாதி கால விசேஷங்களிலும் துர்பிக்ஷம், பூகம்பாதி துர்நிமித்தத்திலும், ஜ்வர மார்யாதி ரோக பீடத்திலும், பஞ்சமேற்பட்ட காலத்திலும் அந்ததோஷ நிவ்ருத்திக்காகவும், பிரதிஷ்டா முடிவிலும், உத்ஸவாந்தத்திலும், நித்ய, நைத்திக, காம்ய காலங்களில் ஈசனுக்கு ஸ்நபனம் செயற்பாலது என்று ஸ்நபனத்தின் நிமித்தத்தை சொல்லி உள்ளார். அதில் ஸ்நபனம் அநேக விதமாக விதிக்கப்படுகிறது. மஹாஸ்நபநகர்மாக்களில் அங்குரார்பணம் செய்யுமாறு சூசிக்கப்படுகிறது. பின்பு மண்டப விதாநம், அதன் ஸம்ஸ்காரமும் வர்ணிக்கப்படுகிறது. அதில் சூத்ர ந்யாஸம் முதலாக பஞ்சகலச, நவகலச, பஞ்சவிம்சதிகலச, நான்பத்தொன்பது கலச ஸ்நபனங்களில் கலச ஸ்தாபன விதி நிரூபிக்கப்படுகிறது. இங்கு பஞ்சகலசஸ்நபனம் முதல் ஒவ்வொரு ஆவரணத்தின் அதிக கல்பனத்தால் 49 கலச ஸ்நபனாந்தம் கலச ஸ்தாபன பிரகாரம் கூறப்பட்டுள்ளதாக சூசிக்கப்படுகிறது. பிறகு அஷ்டோத்தர ஸ்நபனவிஷயத்தில் முதல் முறை கூறப்படுகிறது. அதில் முதலில் எட்டு கிரமமாக ஆவரணத்ரயம் கல்பநீயம் என கூறப்படுகிறது. பின்பு ஆயிரத்தெட்டு ஸ்நபன விதியில் பிரதமபிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. அதில் சூத்ரந்யாஸ முதலாக சதுரமண்டலத்தில் 40 வியூஹங்கள் கல்பிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு வ்யூஹத்திலும் இருபத்தைந்து கலசங்கள் ஸ்தாபிக்கபடவேண்டுமென கூறப்பட்டுள்ளது. பின்பு அஷ்டோத்திர ஸ்நபன விஷயத்தில் இரண்டாம் விதி பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் நான்கு திவாரம் கல்பித்து மத்தியில் இருபத்தைந்து கலசம், கோணங்களில் இருபத்தியொரு கலசங்கள் ஸ்தாபிக்கவேண்டும் என்று கலசஸ்தாபனம் சூசிக்கப்படுகிறது. பிறகு ஆயிரத்தெட்டு ஸ்நபன விஷயத்தில் இரண்டாவது விதி கூறப்படுகிறது.

அதில் சூத்ரந்யாஸம் முதலாக சதுரஸ்ர மண்டலத்தில் பதினான்கு ஆவரணத்தில் கலச ஸ்தாபன பிரகாரம் கூறப்படுகிறது. பிறகு கும்பஸ்தாபனத்தின் ஸ்தண்டில கல்ப விஷயத்தில் நெல் அளவு நிரூபணம், அதன் அனுசாரமாக எள், அரிசி அளவு விஷயம், கும்ப அளவு, தோண்டி அளவு விஷயம் கும்பத்தில் சூத்ரவேஷ்டந கூர்ச்சந்யாஸ பிரகாரம் த்ரவ்ய ந்யாஸ, ரத்னந்யாஸ பிரகாரம் இம்மாதிரியான விஷயங்கள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு இருபத்தைந்து கலச ஸ்நபனத்தில் சொல்லிய ஆவரணத்யாகத்தால் ÷ஷாடசஸ்நபன கலச ஸ்தாபனவிதி சித்திக்கிறது. என ÷ஷாடசஸ்நபனவிதி கூறப்படுகிறது. ÷ஷாடசஸ்நபன விஷயத்தில் த்ரவ்ய நிரூபணம் சொல்லப்பட்டுள்ளது. பின்பு நாற்பத்தொன்பது கலச ஸ்நபன விஷயத்தில் த்ரவ்யங்கள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பஞ்சகலச நவகலச. பஞ்சவிம்சதி நாற்பத்தொன்பது கலசஸ்நபன விஷயங்களில் தேவதாந்யாஸ பிரகாரம் வர்ணிக்கப்படுகிறது. அதில் குறிப்பாக முப்பத்தி இரண்டு கலசபிரகாரம் கூறப்படுகிறது. 108 ஸ்நபன விஷயத்தில் த்ரவ்ய நிரூபணம் மூன்று விதமாக கூறப்படுகிறது. அஷ்டோத்தர ஸ்நபன விஷயத்தில் குறிப்பாக தேவதைகள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு எண்பத்தி ஒரு ஸ்நபன விதி நிரூபிக்கப்படுகிறது. ஒன்பது வ்யூஹம் கல்பிக்கவும், பிரதிவ்யூகத்திலும் ஒன்பது கலசம் ஸ்தாபிக்கவும் எட்டுதிவாரங்கள் உண்டென்று கூறப்படுகிறது. அஷ்டோத்திர ஸஹஸ்ரஸ்நபன விஷயத்தின் த்ரவ்ய நிரூபணம் குறிப்பாக த்ரவ்ய நிரூபண விஷயத்தில், ரத்னோதக லோஹோதக, தாதூதக, பீஜோதக, கந்தோதக, ம்ருதூதக மார்ஜனோதக, பத்ரோதக, புஷ்போதக, மான்யோதக, அஸ்திரோதக, பலோதக, கஷாயோதக, ஆட்யோதக, காந்தோதக, மூலோதக, பிரம்மகூர்ச்ச, வல்கலோதகம், முதலிய உதகங்களின் லக்ஷணம் கூறப்பட்டுள்ளது. பின்பு அஷ்டோத்தர ஸஹஸ்ரஸ்நபன விஷயத்தில் மூன்றாவது பிரகாரம் விருத்த மண்டலத்தால் கல்பிக்கவும் என பிரதிபாதிக்கப்படுகிறது.

அதில் பதினான்கு ஆவரணங்களில் கலசஸ்தாபனபிரகாரம், கலசசங்க்யை நிரூபணத்துடன் திரவ்யம் கூறப்படுகிறது. ஆயிரத்தி எட்டு ஸ்நபனத்தில் தேவதான்யாஸ பிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. ஐநூற்றி எட்டு ஸ்நபனம், இருநூற்றி எட்டு ஸ்பனத்திலும் வியூஹக்ரமமாக கலச விந்யாச பிரகாரம் கூறப்படுகிறது. திரவ்யங்களின் அளவு நிரூபிக்கப்படுகிறது. பிறகு கூறிய திரவ்யா பாவத்தில் கிரஹிக்ககூடிய திரவ்ய நிரூபணம் பிறகு த்ரவ்யந்யாஸ பிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஹோம நிரூபணம் அங்கு குண்டம் அல்லது ஸ்தண்டிலத்திலோ ஹோமம் செய்யவும் என்று விகல்பிக்கப்படுகிறது. ஹோம த்ரவ்யங்களின் அளவுமுறை, அவ்வாறே அஷ்டகுண்ட, பஞ்சகுண்ட நான்கு குண்டாநுஸாரமாக ஸமித்நிர்தேசம் ஹோம கர்மபிரகாரம் காணப்படுகிறது. பிறகு லிங்க விஷயத்தில் ஸ்நபன கலசாபிஷேகவிதி கூறப்படுகிறது. பிறகு ஸகல விஷயத்தில் ஸ்நபன கலசாபிஷேகபிரகாரம் சூசிக்கப்படுகிறது. அதில் சித்ராதி ஸகள பிம்பங்கள் விஷயத்தில் தர்பணாதிகளில் ஸ்நபனம் செய்யவேண்டுமென கூறப்படுகிறது தேவிஸ்நபனத்தில் த்ரவ்ய பேதமில்லை தேவாதாபேதம் மட்டும் கூறப்படுகிறது. தேவதா நிரூபணத்தில் விசேஷம் பிரதிபாதிக்கபடுகிறது. ஸர்வாபீஷ்ட சித்திக்கும், க்ஷீராதிகளால் ஸர்வதோஷ நிவ்ருத்திக்கும் ஸ்நபன விசேஷங்களால் பரமனை ஸ்நபனம் செய்க என கூறி அவைகளின் ஸ்நபன விசேஷமும் வேறு பயனும் கூறப்படுகிறது.

அந்தஸ்நபனங்களின் செய்யக்கூடிய கால நிர்தேசம். ஸ்நபன முடிவில் விசேஷதர்சனம் கூறப்படுகிறது. நித்ய கர்மாவில் இருபத்தைந்து கலச ஸ்நபனம் பிரசஸ்தியாகும். உத்தமோத்தம பூஜையில் அஷ்டோத்திரசதம் வரைஸ்நபனம் செய்தல் வேண்டும். நைமித்திக கர்மாவில் பஞ்சவிம்சதி சங்க்யை முதல் ஆயிரத்தெட்டு ஸ்நபனம் வரை செய்தல் வேண்டும். என்ற விஷயங்கள் ஸ்நபன விஷயத்தில் சூசிக்கப்படுகிறது. இவ்வாறு ஸ்நபன விஷயத்தில் நித்யம், நைமித்திகம், காம்யம் என்று மூன்று விதம் பிராயச்சித்த நிவாரணத்திற்காக நித்ய நைமித்திகத்திற்காக ஸ்நபனம் செய்யவேண்டும் காம்யத்திற்காக காம்ய ஸ்நபனம்சூசிக்கப்படுகிறது கிரியா மந்த்ராதி பேதத்தால் தந்திர பேதமும் ஏற்படுகிறது. அதில் சைவ வசனமே செய்ய வேண்டும், வேறு சாஸ்திரத்தால் செய்யக்கூடாது என்று சூசிக்கப்படுகிறது. பிறகு ஸ்நபனாதிகர்ம நிர்வஹிப்பதற்கு கிரஹிக்க வேண்டிய குரு நிரூபணம் விசேஷ பூஜையும் அப்பேற்பட்ட ஆசார்யனாலேயே நிர்வாஹிக்க வேண்டுமென கூறி விசேஷ பூஜாவிதியும் கூறப்படுகிறது. பின்பு நித்ய நைமித்திக கர்மா சரணத்தில் செய்யவேண்டியது நிரூபிக்கப்பட்டுள்ளது அதில் நைமித்திக கர்மாசாரண காலம் இரண்டு விதம் என கூறி அதன் காலவிசேஷம் பிரதிபாதிக்கப்படுகிறது. ஆசார்ய பூஜாவிஷயம் கூறப்படுகிறது. அதில் யாகசாலைக்கு உபயோகிக்கப்பட்ட ஸ்வர்ணாம் பராதிகம் ஆசார்யனுக்கு தரவேண்டும். மற்ற போகத்திற்கு உபயோகிக்க கூடாது என்பதாக நான்காவது படல கருத்து சுருக்கமாகும்.

1. பிறகு பரமேஸ்வரனுக்கு அனுஷ்டிக்கப்படவேண்டிய ஸ்நபனத்தை பற்றி சொல்லப்போகிறேன். அஷ்டமியிலோ சதுர்தசியிலோ விஷுவ புண்யகாலத்திலோ அல்லது அயன சங்க்ரமண காலத்திலோ மாதப் பிறப்பிலுமோ.

2. கிரஹணத்தில் மாஸத்தின் நக்ஷத்திரத்தில் திருவாதிரை, இரண்டு பர்வங்கள், பூர்ணிமா, அமாவாசை, நல்ல யோகத்தில் ஞாயிற்றுக்கிழமை அல்லது உத்ஸவத்தின் முடிவில் மூன்று நாட்கள்.

3. யஜமானனின் பிறந்த நாள், இறந்தநாள், அல்லது அதற்கு தொடர்ந்த நாள், அரசன் பட்டாபிஷேக நக்ஷத்திரம், வறுமை, தீமை நிமித்தம் தோன்றிய காலங்களில்

4. பூகம்பம், தீபற்றுதல், ஜ்வரம், வைசூரி முதலிய துன்பங்களாலும் துன்புறுத்தப்பட்டபொழுதும் பிரதிஷ்டையின் முடிவிலும், நோய்கள் ஏற்படும் காலத்திலும் அத்புத சாந்தி காலத்திலும், பஞ்சமேற்படும்பொழுதும்

5. நித்யம், நைமித்தியம், காம்யம் என்ற மூன்று வகைகளிலும் சிவனுக்கு உரிய முறைப்படி ஸ்நபன பூஜை செய்து அபிஷேகம் செய்யவேண்டும். அது பலவகைப்படும். ஸ்னபன பூசை அபிஷேகத்தின் பொருட்டு கலசங்களை வைத்து பூசிப்பது ஆகும்.

6. (அங்குரார்ப்பணம் செய்து) மஹா ஸ்நபனம் கார்யத்தில் முதலில் அங்குரார்ப்பணம் செய்யவேண்டும் முன்பு சொன்ன மண்டபத்திலோ வேதிகை இல்லாமலுமோ செய்யலாம். அல்லது அளவை நோக்காமல் ஸ்நனத்திற்காக முன்பே ஏற்படுத்தபட்ட இடத்தில்

7. ஐந்து முழத்திலிருந்து ஆறு ஏழு முழ அழவுள்ள தாகவும் நான்கு முதல் எட்டு வரையுள்ள காத்ர அளவுள்ளதுமான (காத்ரம் என்பது தேஹம் என்பதாகும்) (தேஹ ஸப்தம் என்பது சுமாராக ஒன்பது தாள அளவாகும். ஒரு தாள அளவு பனிரெண்டு அங்குலம்)

8. எல்லா அலங்காரங்களோடும் கூடியதும் தோரணங்களோடு கூடியதும் நிருத்தம் வாத்யம் முதலியவைகறோடு கூடியதும் இசை ஒலி முதலியவைகளோடு கூடியதும் ஆன மண்டபத்தில்

9. அஸ்திர மந்திரத்தால் பூமியை சுத்திசெய்து வாமதேவ மந்திரத்தால் மெழுகி அகோர மந்திரத்தால் தாள மாத்ர இடைவெளிப்படி (தாளம் என்பது 9 அங்குலமாகும் என்றும் ஓர் அளவு கூறப்படுகிறது) சூத்ர நியாஸம் செய்யவேண்டும்.

10. இரண்டு தாள அளவு சிவ கும்பத்திற்கும், வர்த்தனீ கும்பத்திற்கு ஒரு தாள அளவும், மூன்று தாளம் கர்ணிகைக்கும் உள்ளது ஸாதாரண அளவாகும்.

11. அல்லது கும்பஸ்தாபனம் வடக்கிலுள்ள வீதியில் இருக்குமேயானால் அப்பொழுது கும்பஸ்தாபன நிலை ஏற்றாற்போல இரண்டு தாள அளவு கர்ணிகை யின் அளவாக ஆகும்.

12. நான்கு திக்குகளில் உள்ள தாளங்களில் வைக்கப்படும் ஒவ்வோர் கலசங்களோடு நடுவில் ஓர் கலசமாக பஞ்ச கலச அமைப்பும் மூல திசைகளிலும் ஒன்றாக சுற்றியும் எட்டு வைக்கும் முறையும் நவகலச ஸ்னபனமாகும்.

13. இருபத்தி ஐந்து எண்ணிக்கை வரையில் சுற்றிலும் உள்ளதாக வைக்கப்படுவதும், நாற்பத்தி ஒன்பது கலசங்கள் மற்றும் நூற்றி எட்டு கலசங்களின் அமைப்பும் உண்டு.

14. இரண்டு சுற்றாக வெளியில் வைக்க வேண்டும். நடுவில் உள்ள இருபத்தி ஐந்து கலசங்களை

15. விடுத்து மற்றவைகளை இரண்டாகவோ அல்லது ஒன்றாகவோ சுற்றிலும் வைத்துவிட வேண்டும். எட்டு வாயில்களை உடையதாகவும் மூன்று வெளி சுற்று உடையதாகவும் வைக்க வேண்டும்.

16. கோணங்களில் ஒன்பது சூத்திரத்திலும் மத்தியில் பதினைந்து சூத்திரத்திலும், கும்பங்களை வைக்க வேண்டும். நடுவில் பதினைந்து என்றால் நடுவில் உள்ள மூன்றை விட்டுவிட வேண்டும்.

17. நூற்றி எட்டின் முறை இது. ஆயிரமாக இருந்தால் நாற்பது வியூஹம் ஆகும். ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக இருபத்தி ஐந்து பதம் போட வேண்டும்.

18. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்ற முறையிலும் வியூஹம் உண்டு. நடு வியூஹத்தை சுற்றியும் நான்கு அல்லது எட்டு குண்டங்களை

19. அந்தந்த எண்ணிக்கைக்கு இணையாக வியூஹத்தில் ஹோமத்திற்கு வசதி செய்து கொள்ள வேண்டும். நடுவில் வழி அமைத்து பாதை அமைத்து கொள்ள வேண்டும்.

20. சிவவியூஹத்தை சுற்றிலும் பதினாறு சூத்திர அளவு விட்டுவிடவேண்டும். சூத்திரமுறையில் வைப்பது இதுவரை சொல்லப்பட்டது மற்றொரு முறையும் உண்டு.

21. நூற்றி எட்டின் முறையே நடுவில் இருபத்தி ஐந்தும், வெளியில் ஆக்னேய கோணங்களில் இருபத்தியொன்று என்ற பாதையின் முறையிலிருக்க வேண்டும்.

22. நான்கு திக்குகளிலும் நான்கு வாயில்களாகும். ஆயிரம் முறையில் மீண்டும் சொல்லப்படுகிறது. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்ற திக்குகளில் இரண்டு சூத்திரங்கள் வைக்கவேண்டும்.

23. ஒன்றரை முழ அளவு அல்லது ஓர்முழ அளவுள்ளதாக பதினான்கு எண்ணிக்கையில் முறைப்படி வெளிவீதியாக அமைக்கப்படவேண்டும்.

24. அதன் வெளியில் நான்கு பக்கங்களிலோ அல்லது எட்டு பக்கங்களில் ஹோமம் செய்யலாம். தத்புருஷ மந்திரத்தால் ஸ்தண்டிலம் அமைத்து நெல் நான்கு படி அளவுள்ளதாக செய்வது சிறந்ததாகும்.

25. மூன்றுபடி அளவுள்ளது மத்யமமாகும். அதற்கு அடுத்தது இரண்டுபடி குறைவான அளவாகும். அதை காட்டிலும் மிகவும் தாழ்ந்து ஒருபடி நெல் அளவாகும்.

26. நெல்லின்அளவு இதுவே என்ற காரணத்தால் இதற்கு குறைவாக போடக்கூடாது. அப்படி செய்தால் ஆபிசாரதோஷம் ஏற்படும். இது நிச்சயம்!

27. இரண்டுபடி பிடிக்கும் அளவுடைய குடம் முதல் பத்துபடி பிடிக்கும் அளவு வரை சிவகும்பத்தின் அளவு ஆகும். அதற்கு மேற்பட்டது கரகம் எனப்படும்.

28. நெல்லின் பாதி அளவு அரிசி ஆகும். அதில் பாதி எள். அதில் பாதிஅளவு பொறி இருக்கவேண்டும். ஸஹஸ்ர கலசத்தில் எட்டு மரக்கால் என்று சொல்லப்படுகிறது.

29. எட்டுக்கு அதிகமான சிவவியூஹத்தில் நெல்லின் அளவு சொல்லப்பட்டது. ஹ்ருதய மந்திரத்தால் ஸ்வர்ணம் முதலியவைகளினால் ஆன கும்பங்களை வைக்கவேண்டும்.

30. சிவம் என்ற அளவு முதல் ஒவ்வொருபடி அளவாக இருபத்திஏழு வரை அளவுள்ள தன்மை சிவகும்பத்திற்கு ஆகும். அதில் பாதி (தோண்டி) கரகம் எனப்படும்.

31. நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற அளவில் உடைய கலசங்களில் மூன்று, இரண்டு, ஒன்று என்ற முறையில் நூலை சுற்றவேண்டும்.

32. இல்லாவிட்டால் ஒரு நூலால் மூன்று முறை கவச மந்திரத்தினால் சுற்றிய பிறகு கும்பங்களை ஹ்ருதய மந்திரத்தால் வைக்கவேண்டும்.

33. ஈசான மந்திரத்தால் முப்பத்தாறு தர்பங்களை உடைய கூர்ச்சங்களை மூன்றாக பிரித்தவாறு வைக்க வேண்டும். திரவ்யத்தை மூல மந்திரத்தால் வைக்க வேண்டும்.

34. மாணிக்கம், இந்திரநீலம், வைடூர்யம், பவழம், முத்து என்ற ஐந்து ரத்தினங்கள், இல்லாவிடில் தங்கமும் போடலாம்.

35. நிஷ்கம் என்ற அளவில் ஸ்வர்ணத்தை கால் பங்கு அல்லது அதில்பாதி பத்துஉளுந்து அளவோ அல்லது எட்டு உளுந்து அளவோ ஐந்து, நான்கு அளவோ இரண்டு உளுந்து அளவோ மிகவும் குறைந்ததான பட்சத்தில் ஓர் உளுந்து அளவோ ஸ்வர்ணம் போடவேண்டும்.

36. மேற்கூறிய அளவிலிருந்து பாதி அளவு கரகங்களில் போடவேண்டும். திரவ்யங்கள் இருக்க வேண்டிய கலசங்களாவன, பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்ச கவ்யம் ஆகியவை நான்கு திசைகளிலும் இருக்க வேண்டும்.

37. சந்தனம் கலந்த தீர்த்தம் அல்லது சுத்தமான தண்ணீர் முதலில் சொல்லப்பட்டது. தர்ப்பை தண்ணீர், பால், தயிர், சிறிது சூடான நெய் இவைகளுமாகும்.

38. சந்தனம் கலந்த தீர்த்தம் முதலில் மூலைகளில் முறையாக எட்டு இடங்களிலும் ஆகும். இரண்டாவது ஸ்தாபன முறை சொல்லப்பட்டது. மூன்றாவது முறை சொல்லப்படுகிறது.

39. தேன், பொறி, சாணத்தூள், மஞ்சள் மற்றும் சத்துமாவு, மஞ்ச்பொடி போன்றவைகள் விபூதி, கரும்புச்சாறு, வாழைப்பழம், எள், பலா, கடுகு முதலியனவும்.

40. விபூதி, நல்லெண்ணை, வாழை, எள், கடுகு, தேங்காய், இருவிதமான நார்த்தம்பூ மாதுளை முதலியவைகளை வைக்கலாம்.

41. மாதுளை மற்றும் பக்கத்தில் பலா, மா, இஞ்சி, வாழை, வரகு, பாக்கு மற்றும் இளநீர் கடுகு இவைகளும்

42. எள், பில்வம் அதற்கு பிறகு நார்த்தை இரண்டு (எலுமிச்சை, நார்த்தை) யவை, நீவாரம், பொறி

43. ஸத்துமாவு, முதலிலோ அல்லது கடைசியிலோ மற்றும் தேன் கீழாநெல்லி, வெல்லம், பால் பிறகு கடுகு, கிராம்பு இவைகளும்.

44. தக்கோலம், தயிர், தண்ணீர், எள், விளாமிச்சை வேர், நெய், சாணத்தூள் ஸத்துமாவு, தேங்காய், மஞ்சள் பொடி இவையும்

45. இவ்விதம் மும்முறையிலும் மூறு, இருபத்தி ஐந்துகளாகும் இருபத்தி ஐந்தின் நடுவில் நடுவரிசைகளை விட வேண்டும்.

46. இவ்விதம் செய்த ஸ்தாபனத்தில் கலசங்கள் பதினாறு ஆகும். நான்கு திக்குகளிலும் நான்கு கோணங்களிலும், பாத்யம் முதலியவைகள் எட்டு ஆகும்.

47. இவைவெளிகளில் நடுவிலிருந்து எட்டு எண்ணிக்கை உடையதாகவும் மேலும் நாற்பத்தி ஒன்பது கும்பங்கள் முறையாக சொல்லப்படுகின்றன.

48. வெல்லம், சந்தனம், உலோகம் கீழாநல்லி கச்சோலம், புஷ்பம், பத்ரம், பச்சை கற்பூரம் மற்றும் தண்ணீர் ஜடாமாஞ்சி, மரிக்கொழுந்து சிற்றேலம் அருகம்பில்

49. வன்னி, அருகு, வெள்ளெருக்கு பில்வம், செண்பகம், சங்கங்குப்பி என்ற திரவ்யம், நாயுருவி, விஷ்ணுகிராந்தை, ஊமத்தை.

50. நந்தியாவட்டை, வெண்தாமரை, நாற்பத்தி ஒன்பதாகும் அல்லது வேறு வழியிலும் சொல்லப்படுகிறது.

51. பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்ச கவ்யம், கிழக்கு முதலான திக்குகளிலும் பால், தயிர், நெய், தேன் முதலியவைகள் அக்னி முதலிய திக்குகளிலும்

52. தக்கோலம், விபூதி, சாம்பிராணி, மஞ்சரி, தேங்காய் பில்வம், நாவல் பாதிரி, வெட்டிவேர், பூங்கொத்து கச்சோலம்

53. புண்ணை பூ, சங்கு புஷ்பம், பில்வம் புலிநகக் கொன்றை, ஊமத்தை ஆகிய பதினாறும் இங்கு சொல்லப்பட்டது.

54. அருகு, கடுகு, மா, நார்த்தை, பலா, வாழை, தாமரை, தாழை, வெண்லோத்ரம் (வெள்ளொளுத்தி)

55. கரும்புச்சாறு, பொறி, சண்பகம், சந்தனாதி வாசனைத் தைலம், நீவாரம், குங்குமம், எள், ஸத்துமாவு ஜடாமாஞ்சி, சிற்றேலம்.

56. மாதுளை, சந்தனம், அகில், விளாமிச்சை, மஞ்சள்பொடி இவை கலந்த திரவ்யங்களாகும். ஐந்து கலச ஸ்னபநத்தில் பஞ்ச பிரம்மங்களை ஈசானத்தை விட்டு மற்ற பிரம்ம மந்திரங்களை பூஜிக்க வேண்டும்.

57. எட்டுகலசங்களில் வித்யேசர்களை பூஜிக்க வேண்டும். வெளியில் மூர்த்தீச்வரர்கள், நடுவில் வாம தேவர் முதலியவர்களையும் பூஜிப்பது இருபத்தி ஐந்து எண்ணிகையுள்ள கலச பூஜையாகும்.

58. எட்டு கணேச்வரர்கள் வெளியில், அங்குஷ்ட மாத்ரர் முதலான எட்டு புவனாதிபதிகளையும் கிரோதனன் முதலான எட்டு எண்ணிக்கையுள்ள சத்ருத்ராதிபர் களையோ பூஜிக்க வேண்டும்.

59. ஸ்நபனத்தில் நாற்பத்தி ஒன்பது கலசத்திற்கு தேவதாபூஜை முறை சொல்லப்பட்டது. முப்பத்தி ஆறு பதங்கள் செய்து நடுவில் உள்ள நான்கு அம்சத்தை விட்டுவிட வேண்டும்.

60. முப்பத்தி இரண்டு பதங்களில் பாத்யம் முதலியவைகளை வைக்கவேண்டும். தெற்கில் அரைபாக அளவு ஆரம்பித்து, வடக்கில் அரை பாகம் அளவு வரையில்

61. இங்கு சொல்லப்படாததை நாற்பத்தி ஒன்பது கலச பூஜையைப் போல் சமமாக எண்பத்தியோரு கலச ஸ்னபநமுறை அறிவிக்கப்படுகிறது.

62. நூற்றி எட்டு கலச பூஜை முறைக்கும் மூன்று வகைகள் உள்ளன. சந்தனம், அகில், கீழாநெல்லி, கச்சோலம், புஷ்பம், பத்ரங்கள்.

63. கற்பூரம், வெட்டிவேர், மரிக்கொழுந்து, ஜடாமஞ்சி, சிற்றேலம் அருகம்பில் ஆவரண திரவ்யங்கள் 12 ஆகும்.

64. சண்பகம், சிறுகுறிஞ்சி, தாமரை, கோரோசனை, பில்வம், யவை, வன்னி அருகு தக்கோலம் துங்குமுஸ்தை.

65. நெல்லிப்பழம், வாழைப்பழம், பில்வம், நிலத்தாமரை, சித்தரத்தை செவியம், பொரசு, வெள்ளெருக்கு, அரளி.

66. தாழம்பூ, தும்பப்பூ, ஊமத்தை, லோத்ரம், நாயுருவி, அர்ஜுநம், இச்சி, யானை திப்பிலி, விஷ்ணுகிராந்தை.

67. அரசு, நாகபுஷ்பம் நான்காவது ஆவரண திரவ்யமாகும். துளசி, ஆணைவணங்கி, பெருங் குரும்பை, தேஜநீ என்ற திரவ்யமும்.

68. வாயு விளங்கம், சீரகம், கருப்பு ஜீரகம், தக்கோலம், தேவதாருபிசின், சந்தனக்குழம்பு, குப்பமேனி, செஞ்சந்தனம்

69. கலப்பை மண், புலிநகம், கொன்றை, வல்லகீ என்ற கொடி, தங்கபுஷ்பம், வெண்டைக்காய், சிப்பி, சங்க நகமென்கிற கந்த திரவ்யம், சர்க்கை பெருங்கோரை கிழங்கு.

70. குங்குலியம், திராøக்ஷ, சர்க்கரை, விஷ்ணுக்ராந்தை, ஆல், விருஷபா என்ற ஒஷதி கிடாரங்காய், நாவல், மனச்சிலை.

71. சங்ககுப்பி, கையாந்தரை, செந்நெல், சிவப்பான சிலாவிகாரம் மாம்பழம், வாழைப்பழம், ஜாதி, பாதிரி வெள்ளொளுத்தி முதலியவைகளை

72. இது ஐந்தாவது ஆவரணதிரவ்யமாகும். வேறுவிதமாக கூறப்படுகிறது. வன்னி, அருகு, எருக்கு, பில்வம், சம்பகம் சங்கு புஷ்பம்.

73. நாயுருவி, விஷ்ணுகிராந்தி, கருவூமத்தை, நந்தியாவட்டை, வெண்தாமரை.

புன்னாகம், ஜாதி புஷ்பம், பாதிரி, சிறு குறிஞ்சித் தாழை

74. தாமரை பில்வம், தரைத்தாமரை, தாழம்பூ, துளசி, (அரளீ) மல்லிகை மற்றும் கருப்புக்கொடி நாயுருவி புஷ்பம், விஷ்ணுகிராந்தி, கருவூமத்தை, நந்தியாவட்டை, வெண்டாமரை இவைகளும்.

75. நெரிஞ்சல், தண்ணீர்முட்டான், நீர் வணங்கி, பெருந்தும்பை, தும்பை, பெருங்குமிழிஞ் செடி, குமிழிஞ் செடி

76. இந்த்ரவல்லி, பில்வம், நெல்லிக்காய், கடுக்காய், புலிநகக் கொன்றை, மஞ்சமெழுக்கு, சிவதை என்ற திரவ்யம் (மஞ்சள் கீழாநெல்லி)

77. வெண்ணெய், கச்சோலம், தக்கோலம், ஆடாதொடை, என்ற திரவியங்களில் சஞ்சலா, அதிபலா, பலா என்ற தேவர்களை பூஜிக்க வேண்டும், மேலும் சிம்மம், தினை

78. வெள்ளொளுத்தி மரம், மகிழம், புன்னை மரம், நாகபுஷ்பமரம், நாவல் விளாமரம், அரசு, குங்குலியம், கருப்பு ஜீரகம், சத்துமாவு.

79. எள்ளுடன் கூடிய குங்குமம், துங்க முஸ்தை என்ற திரவ்யம், கருப்பு கோரோஜனை, அகில், பில்வம், சந்தன குழம்பு, திப்பிலி, யானை திப்பிலி.

80. கருப்பு அகில், மனஸ்சிலை, செஞ்சந்தனம், கிராம்பு மஞ்சள்பொடி, தகரம் என்ற கந்தகப்பொருள்.

81. கஷாயோதகம், மார்ஜநோதகத்தை ஹ்ருதய மந்திரத்தால் முடிவில் ஸ்தாபிக்க வேண்டும். கஷாயோ தக மாவது: நான்கு பாலுள்ள மரப்பட்டையால் நீரூடன் கலந்து ஸ்தாபித்து பூஜிப்பதாகும்.

82. மா, நாவல், மரப்பட்டை அதன் சாரமும் சொல்லப்படுகிறது. அருகு, எள், தர்ப்பை நுனி இவைகளுடன் தீர்த்தத்துடன் கலந்து பூஜிப்பது மார்ஜநோதகமாகும்.

83. எண்பத்தி ஒரு குடங்களில் அதிபலர்வரை பூஜிக்க வேண்டும், பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்ச கவ்யம் திக்குகளிலும், விதிக்குகளில்

84. தயிர், நெய், தேன் பால் இவைகøளை ஆக்னேய திக்கில் வைக்க வேண்டும். எள், வில்வம், சந்தனம், துங்க முஸ்தம் என்ற திரவ்யம்.

85. சண்பகம், வெட்டிவேர், கடுகு, தக்கோலம், பழம், கீழாநெல்லியையும், லோகம் என்ற பெயருள்ள கச்சோலம்.

86. லவங்கம், லவங்க பத்ரம், பச்சை கற்பூரம், வெளியில் பதினாறு திரவ்யங்களை வைக்க வேண்டும். மூன்றாவது ஆவரணத்தில் ஸத்துமாவை அக்னி பாகத்தில் ஐந்து கடங்களில் ஸ்தாபிக்க வேண்டும்.

87. நெல்லிமுள்ளி, விபூதி, மஞ்சள்பொடி, கோசாணத்தூள், இவைகளையும் தேங்காய், எலுமிச்சை மாதுளை.

88. அதன் வெளியில் அக்னி முதலிய கோணங்களில் ஏழு கலசங்களில் வைக்கவேண்டும். வில்வம், சிறுகுறிஞ்சித்தாழை, விஷ்ணுகிராந்தை முதலியவைகளை முறையாக வைக்கப்படவேண்டும்.

89. வில்வத்தோடு கூடியதாக நான்கு ஒன்பது கலசங்களில் வைக்க வேண்டும். குந்துமணி முதல் நிஷ்க அளவுவரை பாத்யம் முதலியவற்றிற்கு தேவையான திரவ்யங்களின் பிரமாணமாகும்.

90. ஒன்று, இரண்டு, மூன்று நான்குபடி வரை பஞ்சகவ்யம் முதலியவைகளுக்கு அளவாகும். முன்கூறிய அளவில் கால் அளவு அல்லது அதில் பாதி மத்யமமாகும்.

91. நெய், எண்ணை அளவும் அவ்விதமே செய்ய வேண்டும். கற்பூரம் குங்குமம் இவைகளுக்கு அளவு விருப்பம்போல் ஆகும்.

92. நடுவில் அஷ்டவித்யேச்வரர்கள் பூஜிக்கதக்கவர்கள். நூறு ருத்திரர்கள் வெளியில் பூஜிக்க வேண்டும். இவ்விதம் மூன்று வகையில் நூற்றி எட்டு கலச முறை வந்துள்ளது.

93. ஒன்பது எண்ணிக்கைகளால் ஒன்பது வியூகங்களோடு இரு திசைகளில் நடுவில் இடைவெளி உடைய இவைகள் எட்டு வாயில்களோடு கூடியதாகவும் எண்பத்தி ஒன்று பூஜிக்கப்படுகிறது.

94. ஆயிரத்தி எட்டு கலச முறை இப்பொழுது சொல்லப்படுகிறது. ஜாதிக்காய், சிற்றேலம், பச்சைக் கற்பூரம், மரப்பட்டைகள், ஏலக்காய், விளாமிச்சை வேர்.

95. இவைகளுடன் கூடியதும் சிவ மந்திரத்தால் அபி மந்திரிக்கப்பட்டதுமான சிவ தீர்த்தத்தால் கும்பங்களையும் வர்த்தனி கலசங்களையும் நிரப்ப வேண்டும்.

96. பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்சகவ்யம், தர்ப்பை தண்ணீர், பால், தயிர், நெய் இவைகளை முதல் ஆவரணத்தில் வைக்க வேண்டும்.

97. தேன், யவை, வெல்லம், தர்ப்பை, வாழைப் பழம், கடுகு, தேங்காய், மஞ்சள், மாதுளை.

98. பொறி, மாதுளை, ஸத்து, மா, பலா, விபூதி இவைகள் நடுவில் உள்ள இருபத்தி ஐந்துக்கும் இந்த திரவ்யங்கள் பதினாறு ஆகும்.

99. ரத்னோதகம் லோஹோதகம், தாதூதகம் இவைகள் மற்றும் கந்தோதகம் (சந்தனதீர்த்தம்) முன்பு சொல்லப்பட்ட இவைகள் முறையாக கிழக்கில் உள்ள வியூஹங்களில் இரண்டு கோணங்களில் விடப்பட்டதாக ஸ்தாபிக்க வேண்டும்.

100. மிருதோதகம், மார்ஜனோதகம், பரிமார்ஜனோதம், பத்ரோதகம், புஷ்போதகம் இவைகளை தெற்கிலும், மேற்கில் மான்யோதகம் அஸ்த்ரோதகம், பலோதகம்

101. கஷாயோதகம், ஆட்யோதகம் என்று வைத்தல் வேண்டும். வடக்கில் காந்தம், மூலோதகம் பிரம்ம கூர்ச்சம், சாந்த்யோதகம், வல்கலோதகம் என்பனவாகும்.

102. மாணிக்கம், இந்த்ர நீலம், முத்து, வைடூர்யம், வைரம், புஷ்பராகம், பவழம், ஸ்படிகம், மரகதம் இவைகளையும் சேர்த்து நவரத்னமென்றும் அதில் ஐந்தை

103. உடையது பஞ்சரத்னமென்று சொல்லப்படுகிறது. முதலில் கூறப்பட்ட நவரத்னமோ அல்லது பஞ்சரத்துடனோ கூடிய ஜலம் ரத்னோதகம் எனப்படும். அடுத்து லோஹோதகம் கூறப்படுகிறது. பஞ்சரத்னம் : மாணிக்கம், இந்தரநீலம், வைடூர்யம், பவழம், முத்து இவைகளாகும்.

104. தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, தகரம், ஈயம் பித்தளை வெண்கலம் இவைகளுடன் தீர்த்தம் சேர்ந்தது லோஹோதகம் எனப்படும்.

105. சவுராஷ்டிரம், அஞ்சனம் என்ற கருப்புப் பொடி, மை, மஞ்சள் ஹரிதாளம், மனச்சிலா, கோரோஜனை இவைகளுடன் நீர் கலந்து தாதூதகம் எனப்படும்.

106. நெல், வரகு, செந்நெல், திணை, எள், கடுகு, சாமை, யவை இவை எட்டும் பீஜோதகம் எனப்படும்.

107. வெண்ணை, பச்சை கற்பூரம், அகில், ஏலக்காய், நாகப்பூ, கீழாநெல்லி, விளாமிச்சைவேர், ஜாதிக்காய், கோரைக்கிழங்கு.

108. குங்குமப்பூ வெட்டிவேர், கோரோஜனை, கச்சோலம், ஜாதிக்காய் இவைகளை பொடிசெய்து கலக்கப்பட்ட ஜலம் கந்தோதகம் எனப்படும்.

109. மலை மண் ஆற்றுகரை மண், புற்றுமண், நண்டுவளைமண், காளை முட்டிய மண், ஸமுத்திர மண், நல்ல இடத்திலுள்ள மண், யானை தந்த மண்.

110. இந்த எண்வகை மண் கலந்த நீர்,மிருதோதகம் என்று கூறப்பட்டுள்ளது. நெரிஞ்சில், சிறு குறிஞ்சித்தாழை, விஷ்ணுகிராந்தம், யானை வணங்கி

111. கருநெய்தல், வாகை, மஞ்சள் இவைகளுடன் கூடியது மார்ஜனோதகமாகும். அருகு, தளிர், தாமரை, தர்ப்பை நுனி, வெண் கடுகு இவையும்

112. குமிழஞ்செடி, யானை வணங்கி ஆகியவைகளுடன் கூடியது பரிமாணோதகம் என்று கூறப்பட்டுள்ளது. துளசி, வில்வம், தமாலவிருக்ஷ புஷ்பம், ஜடாமாஞ்சி

113. நாயுருவியோடு கூடியது பத்ரதோயம் எனப்படும். தாமரை, செந்தாமரை, பாதிரி, சண்பகம் இவைகளும்

114. புன்னை, மருதாணி, நார்த்தை, நந்தியா வட்டை, மல்லிகை, வெள்ளெருக்கு, மகிழம்பூ இவைகளோடு கூடியது (புஷ்பதோகம்) புஷ்போதகம் எனப்படும்.

115. கீழாநெல்லி, பெருங்கோரை, தங்கம், சந்தனம், குங்குமம் (பூ) பச்சை கற்பூரம், விளாமிச்சை வேர், இவைகளுடன் கூடியது மாந்யோதகம் எனப்படும்.

116. சூலம், கபாலம், மான், வில் கோடாரி, பாசம், அக்ஷமாலை இவைகளை தங்கத்தால் செய்யப்பட்டதாக தீர்த்தத்துடன் சேர்ப்பது அஸ்திரோதகமாகும்.

117. பலா, தேங்காய், மாதுளை இரண்டு வகை, நார்த்தை இரண்டு வகை, வாழை முதலியன பலோதகம் எனப்படும்.

118. பொரசு, அத்தி, அரசு நாயுருவி, இச்சி, பாதிரி, நாவல் ஆகிய இந்த பட்டைகளோடு கூடியது கஷாய உதகம் ஆகும்.

119. தகடு சம்பந்தப்படுத்த மூன்று திரவ்யங்கள் மூன்று வகை மெழுக்கு, மூன்று சந்தன திரவ்யங்களுடன் கூடியது ஆட்யோதகம் எனப்படும்.

120. சூர்ய காந்தம், சந்திர காந்தம், அயஸ் காந்தம், பிராமகம், நிகுந்தம் என்ற காந்தம் ஆகிய ஐந்தும் காந்தோதகம் என்று சொல்லப்படும்.

121. விளாமிச்ச வேர், வெட்டிவேர், பீவரி என்ற ஒரு வகையான வேர் தாமரை புஷ்பம் சந்தனம் இவைகளுடன் கூடியது மூலோதகமாகும்.

122. கோமூத்ரம், கோமயம், பசும்பால், பசுந் தயிர், நெய் தர்ப்பை - தண்ணீர் இந்த ஆறு பொருட்களோடு கூடியது பிரம்ம கூர்ச்சம் எனப்படும்.

123. மயில்தோகை, பூவரச மரப்பட்டை, கோரோ சனை, கையாந்தகரை ஆனை வணங்கி இவை ஐந்தும் சேர்ந்தது வல்க லோதகம் எனப்படும்.

124. அக்னி மூலையிலிருந்து முறையாக எண்ணெய், பால், தயிர், நெய் இவைகளை வைக்க வேண்டும். நடுவில் உள்ள கலச திரவ்யம் நாற்பது வியூஹங்களுக்கு ஆகும்.

125. பில்வம், குமிழஞ்செடி, தர்பம், மரிக்கொழுந்து, செந்நெல், சம்பகம் விபீதை, நெரிஞ்சில் இவைகள் எட்டும் கர்பாவரண திரவ்யங்களாகும்.

126. சிவப்பு தாமரை, வன்னி, தாமரை, நந்தியாவட்டை, நாயுருவி, அருகு, அரளி, ஸுரஸம் என்ற புஷ்பம்

127. யவை, தும்பைப்பூ, விஷ்ணுகிராந்தை மல்லிகை, ஜாதிபுஷ்பம், பில்வம், வெள்ளெருக்கு, ஓரிதழ் தாமரை.

128. இந்த திரவ்யங்கள் பதினாறும் ஒவ்வொரு வியூகத்திற்கும் மூன்றாவது வரிசையாக வரும். அடுத்து விருத்த கிரமம் சொல்லப்படுகின்றது. சிவகும்பத்தை (வட்டவடிவமாக) நடுவிலும்

129. இதற்கு இடதுபக்கம் வர்த்தனியாகும். ரத்னங்களை எட்டிலும் போடவேண்டும். மாணிக்கத்துடன் கூடிய பஞ்ச ரத்னங்கள் சிவகும்பத்தில் போடவேண்டும்.

130. கர்ணிகையின் வெளியிடத்திலும் தள மத்யத்தில் எட்டு திக்குகளிலும் பாத்யம் முதலியவைகள் ஆயிரம் கலச ஸ்நபனத்தின் வெளியில் வைக்க வேண்டும்.

131. பாத்யம், ஆசமனம், அர்க்யம், பஞ்ச கவ்யம், தர்ப்பை ஜலம், பால், தயிர், நெய் இவைகளை முதல் சுற்றில் வைக்க வேண்டும்.

132. இரண்டாவது ஆவரணத்தில் பதினாறு எண்ணிக்கையுள்ள பதங்களில் தங்கமும், இருபத்தி நான்கு எண்ணிக்கையுள்ள மூன்றாவது ஆவரணத்தில் தேங்காயையும் வைக்க வேண்டும்.

133. நான்காவது ஆவரண முப்பத்தி இரண்டு கடங்களில் கரும்புச்சாறு ஸ்தாபித்து பூஜிக்க வேண்டும். ஐந்தாவது ஆவரண ஐம்பத்தி ஆறு கடங்களில் தேனை ஸ்தாபித்து பூஜிக்க வேண்டும்.

134. அறுபத்தி நான்கு வெளியில் பலமலர்களோடு கூடியதாகவும் ஆறாவது ஆவரணத்தில் பூஜிக்க வேண்டும். எழுபத்தி இரண்டு கலசங்களில் எல்லா விதைகளையும் போட்டு ஏழாவது ஆவரணத்தில் பூஜிக்க வேண்டும்.

135. எட்டாவது ஆவரணத்தில் எண்பத்தி நான்கு கும்பங்களில் வாழைப்பழத்தையும் ஒன்பதாவது ஆவரணத்தில் தொண்ணூற்றி ஆறில் விபூதியையும்

136. பத்தாவது ஆவரணத்திலுள்ள நூறு கலசங்களில், பஞ்சகவ்யமும், நூற்றி நான்கு கலசங்களில் பஞ்சகவ்யமுமாக பதினொன்றாவது ஆவரணத்திலும்

137. 12 ஆவது ஆவரண வெளி நூற்றிஎட்டில் கஷாய உதகமும், பின் உள்ள பதிமூன்றாவது ஆவரணத்திலுள்ள நூற்றி பதினாறில் தாதூதகமும், லோஹோதகமும்

138. வெளியில் உள்ள பதினான்காவது ஆவரணத்தில் உள்ள நூற்றி இருபதில் மிருதோதகம் ஆகும். எல்லா வாசனைகளும், சந்தனம் மற்றும் பொருட்களும் எல்லாவற்றிலும் போடவேண்டும்.

139. நாற்பது வியூஹத்தில் ஒவ்வொர் வியூஹத்திலும் இருபத்தைந்து கலசங்களையோ கடங்களையோ உள்ள வியூஹமாக அமைக்கவேண்டும்.

140. இங்கு வர்த்தனி, சுவர்ணம், கூர்ச்சம், இவைகளோடு கூடியதாக அந்த அந்த திரவ்யங்களுடன் கூடியதாகவும் வைக்க வேண்டும்.

141. திரவ்யங்கள் கலசங்களில் போடும் விஷயத்தில் சதுரம், வட்ட வடிவம் இரண்டுமே சிறந்ததாகும். விஷயத்தில் கூறப்பட்ட திரவ்யங்கள் எல்லாம் கிடைத்து சேர்ப்பது சிறந்த தன்மையை தரும்.

142. பாதியாக இருந்தால் மத்யமம், அதில் பாதி அதாவது கால்பாகம் அதமமாகும். நடுவில் தேவர்கள் வித்யேசர்கள் அதற்குமேல் மற்றகும்பங்களில் மந்திர மஹேச்வரர்களை பூஜிக்க வேண்டும். மத்தியில் சிவனை பூஜிக்க வேண்டும்.

143. அவரே ஆயிரம் நாமங்களால் சிறப்பிக்கப்படுகிறார்கள். ஆகையால் சிவனுடைய பல்வேறு பெயர்களாலேயே பூஜிக்கவேண்டும்.

144. மந்திரம் பொருள் மறைவான அக்ஷரங்களுடன் கூடியதாயும் நான்காம் வேற்றுமையுடனும் பிரணவத்தை முன்னிட்டும், நம: என்ற பதத்தை முடிவில் உள்ளதாயும், ஹோமங்களில் ஸ்வாஹா என்ற பதத்தையும் உபயோகிக்க வேண்டும்.

145. ஆயிரத்தெட்டு என்ற முறையில் ஆசார்யன் வெளிச்சுற்றைவிட வேண்டும். அங்கு தென்கிழக்கு முதலிய நான்கு மூலைகளில் நான்கு வியூகம் ஏற்படுத்த வேண்டும்.

146. உள்ளே உள்ள நாற்கோணங்களில் இவ்வியூ கத்திற்கு வெளியில் இவைகளுக்கு இடைவெளியில் ஹோமத்திற்காக ஸ்தாபிக்க வேண்டும்.

147. அதற்கு வெளியில் பதினாறு வியூஹங்கள் முன்போலவே செய்யவேண்டும். மற்றவை எல்லாம் சமானமாகும். இவை ஐநூற்றி எட்டு ஸ்தானத்தில் ஆகும்.

148. இருநூற்றி எட்டு நடுவில் உள்ள எட்டும் அதன் வெளியில் இருபத்தி ஐந்து கும்பங்கள் திக்குகள், மற்றும் விதிக்குகளில் வைக்க வேண்டும்.

149. வெளியில் பதினாறு எண்ணிக்கை உள்ள தாக திக்கு விதிக்குகளில் வைக்கவேண்டும். எட்டு வியூகங்களாக இருப்பின் இவ்விதம் சொன்ன முறைப்படி ஆகும்.

150. திரவ்யங்களின் அளவு மறுபடியும் விரிவாக சொல்லப்படுகிறது. ரத்னங்கள் உயர்ந்தவைகளாக அதன் தன் அளவால் சொல்லப்படுகிறது.

151. பத்து உளுந்தின் அளவு முதல் நிஷ்கம் என்ற அளவு வரை அதிகரித்ததாக உலோகத்தின் அளவாகும். உலோகத்தின் அளவு எவ்வளவோ அதுவே பாஷாணத்தின் அளவாகும்.

152. நிஷ்கத்தின் கால்பாக அளவிலிருந்து பலம் வரையில் விதை யளவு சொல்லப்படுகிறது. அது வரை அரிசியின் அளவும் சர்க்கரையின் அளவுமாகும்.

153. ஆனால் ஏழு பலம் அளவின் இரண்டு மடங்கு வெல்ல அளவும் வாசனை பொருள் அளவு தாதுக்களை போல் அளவுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

154. பழங்கள், பத்ரசூர்ணங்கள், அதேபோல் பொறி, சத்துமாவு, எள், கடுகு, மஞ்சள் மற்றும் சாணத்தூள் இவைகள் விபூதி அளவுப்படியாகும்.

155. பஞ்சகவ்யம், தயிர், பால் இவைகள் விபூதியை போன்ற அளவாகும். பாலை போலுள்ள அளவையும் அல்லது பாதி அளவிலுமோ நெய்யின் அளவும் பாலின் கால் பாக அளவோ பலம் என்ற அளவினாலோ தேனின் அளவுமாகும்.

156. பழம் இல்லையானால் கிடைத்ததை வைத்து மீதியை தண்ணீரால் நிரப்ப வேண்டும்.

157. நெய்யை போல எண்ணெயின் அளவாகவோ எல்லாம் பாத்திர அளவை பொறுத்தோ சிறந்தது. அரை, கால், அல்லது அதில் பாதி அளவாகவோ ஆகும். புஷ்பம் கை அளவாகும்.

158. மூலிகைகள் அதற்கு இணையாகவும் மருந்துகளில் அதன் உருவ அளவேயாகும். அதேபோல் அதன் பாத்திர அளவுமோ ஆகும். வேர் அளவு சந்தனத்தை போல ஆகும்.

159. காய்ந்த புஷ்பம், பழம், இவைகளின் அளவும் சந்தனத்தை போலாகும். மண் அளவும் முன் போலவே சந்தனத்தை போல் என்று மற்றவையும் இப்படியே என ஊகிக்கலாம்.

160. வைரம் எல்லா ரத்தனங்களுள்ளும் உலோகங்களுக்கும் ஸ்வர்ணமுமாகும். யவை எல்லா விதைகளுக்கும் தாதுக்களுக்குள் ஹரிதாளமும் சிறந்தது ஆகும்.

161. மூலிகைகள் இல்லாவிட்டால் (ஸஹதேவி) நற்குறிஞ்சிதாழை சிறப்பாக சொல்லப்படுகிறது. பழங்கள் இல்லையெனில் வாழைப்பழம் பத்திரங்கள் இல்லை யானால் பில்வ பாத்திரங்கள் ஆகும்.

162. புஷ்பங்களில் நீலோத்பலம் அல்லது தாமரையையோ சொல்லலாம். எல்லா வாசனை பொருட்களின் சந்தனம் சிறந்தது. மண்களில் தர்ப்பையடிமண் சிறந்ததாகும்.

163. மரப்பட்டைகளில் அரசமரப்பட்டை, கிழங்குகளில் பெருங்கோரை கிழங்கும், சர்க்கரை இல்லையெனில் வெல்லத்தையும், கரும்பு தேன் இவையில்லாவிடினும் வெல்லத்தை கிரஹிக்கலாம்.

164. பழம், புஷ்பம், இவைகள் கிடைக்காவிட்டால் அந்த பத்ரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த திரவ்யங்கள் எல்லாவற்றையும் மூலமந்திரத்தால் போட வேண்டும்.

165. பீஜமந்திரத்தினால் மடக்கினாலோ (பாத்திரம்) மாந்தளிர்களாலோ மூடி, ஹ்ருதய மந்திரத்தினால் பலவித வஸ்திரங்களை அணிவிக்க வேண்டும்.

166. வஸ்திரங்களை மிகுந்த கருப்பானவைகளையும் குறைவான வஸ்திரங்களையும் விடுத்து அஸ்திர மந்திரத்தினால் சந்தனம் புஷ்பம், தூபம் இவைகளை அந்தந்த மந்திரங்களாலும் கொடுக்க வேண்டும்.

167. தீபத்தை காண்பித்து லிங்க முத்திரையையும் காண்பித்து கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்து ஹோமம் ஆரம்பிக்க வேண்டும்.

168. எல்லா லக்ஷணங்களோடும் கூடிய குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ ஆயிரம் கவச விதானத்தில் ஐநூறு முறை ஹோமம் செய்ய வேண்டும்.

169. குண்டத்திற்கு உரிய முறையில் சொல்லப்பட்டபடி அக்னி ஸம்ஸ்காரங்கள் செய்து சமித், ஆஜ்யம், அன்னம், பொறி இவைகளை முறையாக ஹோமம் செய்ய வேண்டும்.

170. பொரசு, அத்தி, அரசு, ஆல் இவைகளை கிழக்கு முதலான திசைகளிலும், வன்னி, கருங்காலி, நாயுருவி வில்வம் இவைகளை அக்னி பாகத்திலிருந்து முறையாக சமித்துக்களை உபயோகிக்க வேண்டும்.

171. எட்டு பக்ஷத்தில் கூறிய ஸமித்துக்களில் முன்பு கூறப்பட்ட பக்ஷத்தில் கோணங்களை விட்டு விட வேண்டும். முதல் ஐந்து சமித்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வன்னி முதலான சமித்துக்களை விட்டு விடவேண்டும்.

172. நான்கு ஹோம விதானத்தில் பிரதானத்திலோ அல்லது கிழக்கிலோ நூறு அல்லது அதில் பாதி மூலமந்திரத்தால் ஹோமம் செய்ய வேண்டும்.

173. மூலமந்திர ஹோமத்தில் பத்தில் ஒரு பங்கு பஞ்ச பிரம்ம மந்திரங்களால் நேத்ரமந்திரங்களால் அதே போல் ஆறு அங்க மந்திரங்களாலும் ஹோமம் செய்து திவார பூஜை செய்து உள்ளே செல்ல வேண்டும்.

174. கர்ப்பகிருஹத்தில் நுழைந்து லிங்கத்தை சுத்தி செய்து ஸங்கல்பம் செய்து பீடத்தை அர்ச்சித்து மூர்த்தியை ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

174. பஞ்ச பிரம்ம மந்திரங்களால் ஸகளீ கரணம் செய்து பிறகு வித்யா தேஹ கல்பனை செய்ய வேண்டும்.

175. பாத்யம், அர்க்யம், ஆசமனம் இம்மூன்றையும் கொடுத்து சந்தனம் புஷ்பம், தூபம், தீபம் இவைகளை மூல மந்திரங்களினால் கொடுத்து எல்லா வாத்யங்களோடும்

176. நடனம், பாட்டு இவைகளோடும் சங்க வாத்ய சப்தத்தோடும் வேதம் ஸ்தோத்திரம் இந்த பாராயணத்தோடும் மணி சப்தத்தோடும்

177. ஜய சப்தத்தோடு கூடியதாகவும் சிவ கும்பம் வர்த்தனி இரண்டையும் எடுத்து இறைவனுக்கு எதிரே முக்காலியின் மேல் வைக்க வேண்டும்.

178. கடத்தில் உள்ள இறைவனுக்கும் தேவிக்கும் பாத்யம் முதலியவைகளையும் சந்தனம் புஷ்பம் தூபம், தீபம் இவைகளையும் கொடுத்து

179. ஆசார்யன் வலது கையால் கும்பத்தை மூடியுள்ள மடக்கு அல்லது மாவிலைகளை எடுத்து கூர்ச்சம் புஷ்பம் இவைகளை சிவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு

180. எடுத்து தத்வ சித்தத்தோடு லிங்கத்தின் தலையில் வைக்க வேண்டும். தேவியையும் இறைவனுக்கு இடது பாகத்தில் பூஜிக்க வேண்டும்.

181. சிவமந்திரத்தை நினைத்துக் கொண்டு கும்பதண்ணீரால் இறைவனை (ஸ்தாபனம்) அபிஷேகம் செய்ய வேண்டும். தேவியை பிண்டிகை ரூபினியாக நினைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

182. ஸத்யோஜாத மந்திரத்தினால் பாத்யத்தை இரண்டு பாதங்களிலும் ஈசானமுதல் ஸத்யோஜா தம் வரையிலான ஐந்து மந்திரங்களால் ஐந்து முகங்களில்

183. ஆசமனத்தையும் சிகையில் அர்க்யத்தையும் கொடுக்க வேண்டும். பஞ்சகவ்ய அபிஷேகம் முதலிய ஆரம்பத்திலும் பெரிய மணி சப்தத்தோடு சிரசில் அர்க்யம் கொடுக்க வேண்டும்.

184. எழுப்புதலோடு கூடிய தூபத்தை வைக்கலாம். ஆவரணபூஜை முடிவில் கட்டாயம் தூபத்துடன் கூடியதாக உபஸ்தானம் செய்ய வேண்டும்.

185. பல்வேறுவகையான பழங்கள், பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம் இவைகள் இருப்பின் அவைகளால் பரமேஸ்வரனை அபிஷேகம் செய்ய வேண்டும்.

186. வாசனாதி (பன்னீர்) சந்தன தீர்த்தத்தால் பிரோக்ஷித்து சந்தனத்தால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து அர்ச்சனை விதியில் கூறப்பட்டபடி செய்து ஹோமத்துடன் நிறைவு செய்ய வேண்டும்.

187. ஸகள ஸ்நபனம் என்றால் ஸகளஸ் தாபன முறையில் கூறியபடி ஆஸனம் முதலியவைகளை செய்து கும்பத்தில் மூர்த்தியை தியானிக்க வேண்டும்.

188. பஞ்ச பிரம்ம மந்திரங்களால் ஸகளீகரணம் செய்து அந்த கலைகளை அங்கு வைக்கவேண்டும். (நியாஸம் செய்ய வேண்டும்)

189. வித்யா தேஹத்தை கல்பனை செய்து அந்தந்த உருவத்தோடு கூடியதாக இறைவனை தியானம் செய்து ஆசார்யன் பாத்யம் முதலியவைகளை ஹ்ருதயமந்திரத்தினால் கொடுக்க வேண்டும்.

190. சந்தனம் தூபம், தீபம், அர்க்யம் இவைகளை செய்து லிங்க முத்திரையையும் காண்பித்து கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்ய வேண்டும்.

191. கவுரியை வர்த்தினியில் பூஜை செய்து யோனி முத்திரை காண்பித்து கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்து ஆவரண தேவதைகளான ருத்ரர்களை பூஜிக்க வேண்டும்.

192. முன்பு சொன்ன முறையினாலும் முறையாக ஸகளமூர்த்தியின் அருகில் சென்று ஆசனம், மூர்த்தி இவைகளால் பூஜை செய்ய வேண்டும்.

193. சகளீகரணம் செய்து வித்யாதேஹ சரீரத்தை கல்பனை செய்துகொண்டு ஸ்நபனம் முதலியவைகளை செய்து பிறகு பாத்யம், ஆசமனம் அர்க்யம் இவைகளையும் கொடுக்க வேண்டும்.

194. சந்தனம், புஷ்பம், தூபம், தீபத்துடன் மற்றும் இவைகளால் உபசாரம் செய்ய வேண்டும். முன்பு போல் குடத்தையும் எடுத்து சென்று சிவனின் ஹ்ருதயத்தில் மந்திரத்தை ஸமர்ப்பிக்க வேண்டும்.

195. அந்தந்த தேவதையின் மந்திரத்தை அந்த தேவியின் ஹ்ருதயத்தில் ஸமர்ப்பணம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்த பிறகு பாத்யம் முதலியவைகளை கொடுக்க வேண்டும்.

196. ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து மீதமுள்ள கடதீர்த்தங்களை ஈச்வரியிடமும் அபிஷேகம் செய்யலாம் அம்பாளுக்கு தனியாகவும் இருக்கும்போது தேவிக்கும் ஸ்தாபித்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

197. சித்திரத்தில் கண்ணாடி முதலியவைகளான ஸ்வாமிக்கு அதன் பாதத்தின் அடியில் சந்தனம் முதலியவைகளால் ஸ்நபனத்தில் கூறியபடி செய்ய வேண்டும்.

198. தேவியினிடத்தில் ஸ்நபனத்தில் கும்பத்தையோ கரகத்தையோ வைக்க வேண்டும். திரவ்யங்களில் பேதம் இல்லை. தேவதைகளில்தான் பேதம் உண்டு.

199. சாந்தி கலை முதலியவைகள் ஐந்து கும்பம் என்ற தன்மையிலும், ஒன்பதாக இருந்தால் வாமை முதலியவர்களும், தாரிகா முதலியவர்களையும் திக்குகளிலும் பூஜிக்க வேண்டும்.

200. அனந்தன் முதலியவர்களை விதிக்குகளின் கோணங்களில் பூஜிக்க வேண்டும். இது 25 கலச பூஜா முறையாகும். பிருத்வி முதலிய முக்கிய தேவர்களை இடது புறத்திலிருந்து பூஜிக்க வேண்டும்.

201. மேற்படியுள்ள தேவர்களை பெண்பால் உடையதாக பூஜிக்க வேண்டும். இங்கும் பால் முதலியவைகளால் ஸ்நபனம் (அபிஷேகம்) சொல்லப்படுகிறது பிராம்மணர்களே.

202. பால், தயிர், நெய், தேன் பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம், கரும்புச்சாறு பழங்கள் எல்லா தான்யம் பொறி சத்துமாவு மற்றும் எல்லாவகை பொருட்களாலும்

203. மஞ்சள் பொடியாலும், பல்வேறு புஷ்பங்களாலும் இளநீர்களாலும் நல்ல பழங்களாலும் சிறந்த இடங்களில் இருக்கின்ற தண்ணீர்களாலும்

204. சந்தனம் மூலிகைகளோடு கூடியதாகவும் சுத்தமான தண்ணீராலும் சந்தனாதி தைலத்தாலும் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களாலும் முன் சொன்ன முறையில்

205. எல்லா தோஷங்கள் அகலவும் நினைத்தது நடக்கவும் அரசர்களுக்கு வெற்றி ஏற்படவும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

206. நீண்ட ஆரோக்யம் பெறவும், நீண்ட ஆயுள் பெறவும் எல்லா நலன்களையும் பெறவும் பலம், காந்தி இவைகள் பெற வேண்டும்.

207. நாட்டின் வறுமை போக்கவும், அதன் துஷ்டர்களை அழிக்கவும் நாட்டின் கலகமேற்பட்ட போதும் ஆச்சர்யமான சமயத்திலும் கெட்ட சகுனங்களிலும்

208. எல்லா உலகங்களையும் வசப்படுத்துவதற்கும் யானை, குதிரை, இவைகளின் வளர்ச்சிக்காகவும் அவைகளின் ரோகங்கள் போவதற்காகவும் நோய் உண்டாகமல் இருப்பதற்கும்.

209. சண்டைகளின் முயற்சிக்கும் தன் ஸேனையின் பலத்திற்கும் இறப்பின்மைக்கும் எதிரி சேனையின் குறைவிற்காகவும் பயத்திற்காகவும் மயக்கத்திற்காகவும்.

210. ஆண் பெண் விலங்குகள் மற்றும் அனைத்தின் நலனிற்காகவும் பிறந்த நாளிலோ அரசன் பட்டாபிஷேக நாளிலோ

211. அந்தந்த சந்திராஷ்டம தினங்களிலோ வைநாசிக நக்ஷத்திரத்திலுமோ அந்த கிரஹண காலங்களிலோ மற்றும் அயன விஷுவகாலங்களிலும் பிரதிஷ்டாகாலங்களிலுமோ

212. உத்ஸவம், பவித்ரோத்ஸவம், மரிக்கொழுந்து சாத்துதல், கிருத்திகா தீபம் மற்றும் மாச நக்ஷத்திரங்களிலும்

213. அஷ்டமி அல்லது சதுர்தசி அல்லது (அமாவாசையை) பவுர்ணமி மார்கழி மாதத்தில் சிறப்பான திருவாதிரையிலும்

214. பிராயச்சித்தமாக செயல்களிலும் நவநைவேத்ய கர்மாவிலும் மக்களுக்கு நன்மை தரும் காலங்களிலும் மக்களை காப்பாற்ற வேண்டிய சமயத்திலும்

215. சிறப்பு பூஜை காலங்களிலும் பக்த உத்ஸவ சமயங்களிலும் ஸ்வாமி வீதி யுலா காலங்களிலும் சிறப்பான வேட்டை உற்சவ நிகழ்ச்சிகளிலும்

216. தினமும் மூன்று வேளைகளிலுமோ அல்லது இரண்டு அல்லது ஒன்று என்ற முறையில் ஆசார்யர்கள் இறைவனுக்கு ஸ்நபனம் செய்ய வேண்டும்.

217. முன்பு சொன்ன முறையிலும் சில சிறப்புக்கள் சொல்லப்படுகின்றன. ஓர் கும்பத்தையோ அல்லது ஐந்து கலசங்களை ஸ்தாபித்து

218. முன் சொன்ன திரவ்யங்களுடனோ அல்லது வர்த்தனீ கும்பத்துடனோ பஞ்ச பிரம்மம் கூடிய ஐந்து கலசங்களுடனோ

219-220. ஒரு திரவ்யத்துடனோ அல்லது வர்த்தனி யோடும் இஷ்டமான பொருள்களை நடுவிலும் குறைந்த பொருட்களுடனோ ஓர் திரவ்யத்தை நான்கு திசைகளிலுமோ வெவ்வேறு திரவ்யங்களையுமோ பாத்யம், ஆசமனம், அர்க்யம் பஞ்சகவ்யம் இவைகளை வைத்தோ செய்யலாம்.

221. ஒன்பது கும்ப விதானத்திலும் இந்த முறை சரியானதே முன்பு கூறியவைகளில் குறைந்தாலும் திக்குகளில் பாத்யம் முதலியவைகளை செய்தாலும் செய்யலாம்.

222. தங்கம் முதலிய பாத்திரங்களில் செய்வது மிகவும் சிறந்ததாகும். முன் சொன்ன பாத்யாதி கர்மாக்களிலும் நித்யகர்மாவில் பாத்யாதிகர்மாக்களை செய்வது சிறப்புற்றதாகும்.

223. இருபத்தி ஐந்து கலசபூஜை முறையிலும் தினச்செயல் முறைகளில் சிறப்பு பெற்றதாகும் மிகச் சிறந்த பூஜையில் நூற்று எட்டு வரையில் செய்யலாம்.

224. தினபூஜைக்கு ஸ்நபனம் செய்தாலும் செய்யலாம். சிறப்பு பூஜைக்கு முன்பு சொன்ன முறையும் சிறந்தது.

225. இருபத்தி ஐந்து முதல் ஆயிரத்தெட்டு வரையில் இடையில் சில சிறப்புக்கள் சொல்லப்படுகின்றன.

226. நாற்கோணங்களை சேர்த்தாவது விட்டாவது இறைவனை தண்ணீரால் முன் சொன்ன முறைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும்.

227. சிரேஷ்டமான பூஜை செய்யுமிடத்தில் ஸ்நபன பூர்வமாக செய்தல் ஆகும். அது சிறந்த பலனை கொடுக்கும். உத்ஸவம் முதலியவைகளில் கார்ய குறைவை விட வேண்டும்.

228. குறைவான பூஜாகாலங்களில் நல்ல கிரியைகள் உயர்ந்ததல்ல. நித்யம், நைமித்திகம், காம்யம் என்று மூன்று விதமாக ஸ்நபனம் படிக்கப்படுகிறது.

229. நித்ய நைமித்திக கார்யங்களில் அனுசரித்து பாபங்கள் போவதற்கு செய்ய வேண்டும். உலக நன்மைக்காக வேண்டும் தான் விரும்பிய பலனுக்காகவும் காம்ய பூஜை செய்ய வேண்டும். தாழ்ந்ததை ஒரு பொழுதும் செய்யக்கூடாது.

230. அவச்யம் செய்ய வேண்டியதை செய்ய வேண்டுமா, வேண்டாமா என்ற சந்தேகம் வருமே யானால் செய்ய வேண்டியதை செய்தால் மேன்மையும் செய்யாத பொழுது குற்றமும் ஏற்படும்.

231. லோகம், சாஸ்த்ரம் இரண்டிற்கும் சமமாக இருக்குமானால் அதை செய்வது நியாயமாகும். லோக சாஸ்திரங்களால் அதற்கு பொருத்தமில்லையானால் சந்தேகத்தை விட்டு விடலாம்.

232-233. கிரியை மந்திரம் இவைகள் சாஸ்திர பேதமாக இல்லாமலிருந்தாலும் கிரியை மந்திரம் இவைகள் பேதங்களுடன் தந்த்ர பேதமும் இருந்தால் ஆகையால் இவை மூன்றுமே சைவசாஸ்த்ரத்தில் செய்ய வேண்டும். மற்ற சாஸ்திரங்களை கூடாது உரிய முறைப்படி சைவ சாஸ்திரத்தில் உயர்வாக கூறாததை வேறு சாஸ்திர உயர்வை ஏற்கலாம்.

234. சாஸ்த்ர விதிக்கும் அனுபவத்தியிருக்குமேயானால் மற்ற சாஸ்திரத்தினால் உபபத்தி கூற வேண்டும். சாஸ்திரத்தில் பிராயசித்தம் முதலியவைகள் விரிவாக சொல்லப்படவில்லை என்றால் பிற சாஸ்த்ரங்களில் இருந்து எடுத்து கொள்ளலாம்.

235. சாஸ்த்ர முறையில் பொருள் நன்கு இருக்கும் பொழுது அதற்கு அங்கமாக ஸ்ருக் ஸ்ருவம் முதலியவைகள் தன் சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டபடி ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு சாஸ்தரங்களில் இருந்து கூறப்பட்டவைகளை எடுத்து கொள்ளக்கூடாது.

236. இவ்விதம் எல்லாவற்றையும் ஆராய்ந்து எந்த அரசன் செய்கிறானோ அவன் வெகுநாட்கள் சக்ரவர்த்தி யாக இருப்பான்.

237. அவருக்கு நீண்ட ஆயுள் நோயின்மை மனதில் நினைத்த கார்யம் வெற்றி, சந்தோஷம் சிவனிடத்தில் நிலையான பக்தி உடையவராக இருப்பான்.

238. மாறுபட்ட செய்கைகளை கண்டு யார் அலட்சிய படுத்துகிறானோ அந்த அரசன் நிச்சயம் அழிவை அடைவான் இதில் சந்தேகமில்லை.

239. புலன்களை வென்றவரும் ஐந்து கோத்ரத்தினால் பிறந்தவரும் சைவாகமத்தின் ஞானத்தை கரை கண்டவரும் ஆன சிறந்த அனுஷ்டானமுடையவராக ஆசார்யரைக் கொண்டு

240. தன் நாட்டு மக்கள் நன்மைக்காக செயல்களை நிறைவேற்ற செய்ய வேண்டும். ஆசார்யர்களிலே சிறந்த ஆசார்யனை சிவசாஸ்த்ரத்தில் தேர்ச்சி பெற்ற வரை கரஹிக்க வேண்டும்.

241. அவர் மூலமாகவே ஸ்நபனம் முதலியவைகளையும் செய்ய வேண்டும். சிறப்பு பூஜை அவராலேயே நினைத்ததை நிறைவேற்றுவதற்கு அனுஷ்டிக்க பட வேண்டும்.

242. பால், தயிர், நெய், தேன், நெல்லி மாவு, முதலியவைகளால் இறைவனை நன்கு ஸ்நான வேதிகையின் மேல் வைத்து அபிஷேகம் செய்விக்க வேண்டும்.

243. சந்தனம் மற்றும் வாஸனை தீர்த்தத்தால் சிவனை அபிஷேகம் செய்து சுத்த துனியால் ஒத்தி எடுக்க வேண்டும். சந்தனம் முதலியவைகளால் பூசி பட்டு முதலியவைகளால் சிவனை அலங்கரிக்க வேண்டும்.

244. சந்தனம் புஷ்பம், மாலைகள் இவைகளுக்கு பிறகு தூபம் தீபம் முதலிய உபசாரங்களும் கற்பூர ஹாரத்தி தீபாராதனை முதலியவைகளை செய்ய வேண்டும்.

245. ஐந்து வகையான சாதங்கள், பாயசம், சுத்தான்னம் இவைகளுடன் பலவகை காய்கறி பக்ஷணங்கள் மற்றும் பலவித பழங்களுடன் காய்கறிகளுடன் கொடுத்து

246. இவைகளை கொடுத்து தாம்பூலம் முகவாஸம் முதலியவை கொடுக்க வேண்டும். ஏலக்காய், லவங்கம், கற்பூரம், ஜாதிபத்திரி தக்கோல சூர்ணம் மற்றும் வாசனை பொருட்கள்

247. சுண்ணாம்புடன் சேர்ந்தது முகவாஸம் எனப்படும். வணங்கி அனுமதி பெற்று ஹோமத்திற்காக குண்டத்தின் அருகில் செல்ல வேண்டும்.

248. ஸ்மித், நெய், ஹவிஸ், எள், இவைகளால் நூற்றிஎட்டு முறை ஹோமம் செய்து நிறைவாக பூர்ணாஹுதி செய்ய வேண்டும்.

249. அதிலிருந்து விபூதி ரøக்ஷ எடுத்து எஜமானருக்கு கொடுக்க வேண்டும். வேண்டியதை பிரார்த்தித்து மீண்டும் மீண்டும் வணங்க வேண்டும்.

250. ஒரு நாள் முதல் ஆரம்பித்து ஏழுநாள் வரை செய்ய வேண்டும். இருமுறை அல்லது மூன்று அல்லது நான்கு ஐந்து என்ற முறைகளினாலோ செய்யலாம்.

251. ஆறு ஏழு என்ற எண்ணிக்கையானது செயலின் பலன் கிடைப்பதற்கு ஆகும். முன்பு கூறப்பட்ட பலனை கொடுக்க கூடியதானது விசேஷமான பூஜையாகும்.

252. நித்யத்தின் முடிவில் விரோதமின்றி நைமித்திகமாகும். நித்யம் செய்து கொண்டு இருக்கும்பொழுது நைமித்திகம் செய்ய வேண்டி இருந்தால்

253. நித்யத்தை சுருக்கமாக முடித்துக் கொண்டு நைமித்திகத்தை செய்ய வேண்டும். நித்ய சந்த்யாபூஜை அதன் பூஜா காலத்தின் முன்பு நைமித்திகமும் நித்ய பூஜையும் ஏற்பட்டால்

254. நைமித்திகம் தன்னுடைய காலத்தில் நிச்சயமாக செய்யவேண்டும். ஸந்தியை கூட குறுகிய காலத்தில் மற்றொரு கிரியை பகுதியில் செய்ய வேண்டும்.

255. இரு இடங்களிலும் தந்திரங்களாலேயே அனுஷ்டானம் செய்ய வேண்டும். தூபம் நைவேத்யம் வரை உள்ள நித்ய கர்மாவை செய்யவேண்டும்.

256. உரிய காலத்தில் செய்து நைமித்திக செயல்களை பிறகு செய்ய வேண்டும் நைமித்திக பூஜை பெரியதாக இருப்பின் அதன் காலத்தில் ஆரம்பித்து

257. ஒன்று முதலான ஆவரணத்துடன் கூடியதாகவே ஸந்த்யை பூஜை முதலியவைகளை முடித்து ஸந்தியாபூஜை முடிவில் எல்லா கலசங்களாலும் கூறிய முறைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும்.

258. நைமித்திகம் இரண்டு வந்தால் பெரியதை முதலில் செய்ய வேண்டும். சிறியதை பிறகு செய்ய வேண்டும் அல்லது இரண்டுமே சமமாக இருந்தால் விருப்பப்படி செய்யலாம்.

259. நைமித்திக காலமும் இரண்டு வகைப்படும். சிறியது பெரியது என்ற பிரிவில் அயனம் முதலியவைகள் சிறியவை ஆகும்.

260. கிரஹணம் முதலியவைகள் பெரிய காலங்கள் ஆகும். சூர்யகிரஹணத்தின் ஆரம்பத்திலும் சந்திர கிரஹணம் விடும் பொழுதும் விசேஷ பூஜை செய்ய வேண்டும்.

261. தட்சிணாயனம் வருவதற்கு முன்பும் உத்தராயனம் வந்த பின்பும் விஷுவம் போன்ற காலங்களில் நடுவிலும் ஸ்நபனம் முதலியவைகள் செய்ய வேண்டும்.

262. கன்னி, மிதுனம், மீனம், தனுசு இவைகளில் கடைசியிலும் சிம்மம், விருச்சிகம், கும்பம், விருஷபம் இவைகளில் முதலிலும் ஸ்நபனம் செய்யலாம்.

263. பாதி, ஒன்று அல்லது இரண்டு என்ற முடிவான யாமங்களிலோ அல்லது அரை ஒன்று அல்லது இரண்டு என்ற நாழிகை கணக்கிலோ ஆரம்பத்திலோ முடிவிலோ ஸ்நபனம் முதலிய செயல்களில் எடுத்து கொள்ள வேண்டும்.

264. ஆசார்யனை தங்க அணிகலன்கள் வஸ்திரங்கள் கொடுத்து உபசரிக்க வேண்டும். யாகத்தில் உபயோகப்படுத்தப்பட்ட தங்கம் ஆடைகள் முதலியவைகளை

265. ஆசார்யனுக்காக கொடுக்க வேண்டும். வேறு ஒன்றுக்கும் உபயோகபடுத்தக் கூடாது. யாகத்தில் உபயோகிக்கப்பட்ட பொருள் அணிகலன் மற்றும் யாக மண்டபத்தில் உள்ள

266. ஸ்தண்டிலம் ஆடை, தங்கம், கும்பமோ, அல்லது கலசமோ முதலியவைகள் தோரணம், ஸ்ருக்ஸ்ருவம் அஷ்டமங்களம் நவரத்னங்கள்

267. ஹோமத்திற்கு செய்த ஹவிஸ், நைவேத்யம் மற்றும் கொட்டகை வலயங்கள் அங்கு உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள்

268. ஐந்து கோத்ரத்தில் பிறந்த ஆசார்யனுக்கே இவைகளை கொடுக்க வேண்டும். ஓர் நிஷ்கம் முதல் பத்து மடங்கு தட்சிணை ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும்.

269. எட்டின் ஒரு பகுதி நிஷ்கதானம் ஹீனமாகும். அதில் பாதி அதமமாகும். ஒன்பது விதமாக தட்சிணை க்ஷீத்ரக்ரமமாக கூடி இறைப்பது கீழ்பட்ட செயலாக கூறப்படுகிறது.

270. தினமும் செய்து வந்தால் அபிவ்ருத்தியையும் மனஸ் சந்தோஷத்தையும் கொடுக்கும்.

இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் ஸ்நபன முறையாகிற நான்காவது படலமாகும்.