திங்கள், 5 அக்டோபர், 2020

அருள் தரும் அன்னை


அருள்தரும் அன்னை ஶ்ரீ முப்பிடாதி அம்மன் திருவரலாறு

அனைவருக்கும் வணக்கம்.

மக்களை காப்பவன் மன்னன். மழை, வெள்ளம், புயல், வெயில் மற்றும் நோய், நொடி என அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காத்து மனமகிழ்ச்சியோடு வைத்து இருந்து அழகு பார்ப்பவள் அனைத்துலகிற்கும் அன்னையான அம்மன்.

மண்ணுலக மக்கள் வணங்கும் அம்மன் அவதாரங்கள் எத்தனையோ என்றாலும் நெல்லைச் சீமையில் 'முப்பிடாதி’ என்ற பெயர் மிகப் பிரசித்தம். எண்ணற்றோருக்கு குலதெய்வமாகத் திகழும் இந்த அம்மன், அசுரர்கள் மூவருக்கு காவல் தெய்வமாக திகழ்ந்தவள். அந்த மூன்று  அசுரர்களின் இரும்பு, பொன், வெள்ளியாலான மூன்று கோட்டைகளுக்கும் காவலாக இருந்தவள் இந்த அம்மன் என்கிற ஒரு தகவல் உண்டு. 

முப்புரங்களையும் காத்ததால், முப்புராரி என்று பெயர். அதுவே பிறகு முப்புடாதி, முப்பிடாரி என்றும் மாறியதாகச் சொல்வர். இது தவிர, நெல்லைச் சீமையில் பல்வேறு பகுதியில் கோயில் கொண்டிருக்கும் இந்த அம்மனுக்கு, அந்தந்த பகுதிகளுக்கே உரிய தனிக்கதைகளும் உண்டு.முப்பெரும் சக்தி அன்னைகளான சரஸ்வதி, இலட்சுமி, பார்வதி எனும் தெய்வங்களை திருநெல்வேலி பகுதி மக்கள், தங்களுடைய பண்பாட்டிற்கு ஏற்ப முப்பிடாரி என்று பெயரிட்டு வணங்கி வருகிறார்கள் என்றும் கூறுவது உண்டு. நெல்லை வட்டார பகுதிகளில் முப்பிடாரி, முப்பிடாத்தி, முப்புடாதி என்கிற பெயர்கள் ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுப்பெயராகி இன்றும் வழங்கி வருகிறது.

ஸ்ரீ முப்பிடாதி அம்மன்  காயத்ரி மந்திரம்
“ஓம் த்ரிவதனாயை ச வித்மஹே
த்ரிஸூல ஹஸ்தாயை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்”

அருள்மிகு ஶ்ரீ முப்பிடாதி அம்மன் திருவரலாறு

அஷ்ட காளியரில் மூன்றாவதாக மூன்று தலைகளுடன் அவதரித்தவள் முப்பிடாதி. பிடரி என்றால் தலை என்று பொருள். மூன்று தலைகள் இருந்தமையால்  முப்பிடரி என்று அழைக்கப்பட்ட இந்த அம்மன் பின்னர் முப்பிடாரி என்று அழைக்கப்படலானார். இதுவே மருவி முப்பிடாதி என்றானது. இந்த அம்மனுக்கான  கோயில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் அமைந்துள்ளன.

கயிலாயம் விட்டு வந்த அஷ்ட காளியர்கள் பொதிகை மலைக்கு வந்து  சேர்ந்தனர். அங்கிருந்து ஒவ்வொருவரும் பூலோகத்தில் பல்வேறு இடங்களுக்குப் பெயர்ந்தனர். விரும்பிய இடத்தில் அமர்ந்துகொண்டு தான் வந்ததை அப்பகுதி  மக்களுக்கு உணர்த்தி கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றனர். மகிசாசுரனை அழிக்க அம்பிகை எட்டு பெண் குழந்தைகளாக நாகலோகத்தில் பிறந்தாள். அவர்களில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைதான் முப்பிடாதி.

அசுரர் குலத்துப் பெண் தானாவதி தனக்கொரு ஆண் வாரிசு வேண்டும் என்று பிரம்மனை நோக்கித் தவம் இருந்தாள்.தானாவதியின் கடும் தவத்தினை கண்ட பிரம்மதேவன் அவள் முன் தோன்றி, தானாவதி கேட்ட வரத்தைக் கொடுத்தார். வரத்தின் பயனாக தானாவதிக்கு மகனாக மகிஷாசுரன் பிறந்தான். வேதங்களையும், அனைத்து கலைகளையும் கற்றுணர்ந்த மகிஷாசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். மகிஷாசுரனின் தவத்தைக்கண்டு சிவபெருமான் அவன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தார். வரங்களைபெற்ற மகிஷாசுரன், " ஊர்வன, பறப்பன உள்ளிட்ட எந்த இனத்தாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. பெண் வயிற்றில் பிறக்காத பெண்ணால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும் " என்று வரம் கேட்டான். அதனைக் கேட்ட சிவபெருமான், " அப்படியே ஆகட்டும் " என்றார்.

வரங்களை பெற்ற மகிஷாசுரன் தனக்கு மரணம் நேர வாய்ப்பே இல்லை. என்ற ஆணவத்தில் தான் ஆண்டு வந்த மகேந்திர கிரிபர்வதம் (தற்போதைய மைசூர், மகிஷன் ஆண்டு வந்த ஊர் என்பதால் மகிஷா ஊர் என்று அழைக்கப்பட்டது. அது மருவி மைசூர் என்றானது) பகுதியில் தான் எண்ணியபடி ஆட்சி புரிந்தான். தனது சுயநலத்திற்காக கொடுஞ் செயல்கள் புரிந்து வந்தான். தேவர்களை துன்புறுத்தினான். மகிஷாசுரனின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். 

இதனிடையே ஒருநாள் கயிலாய மலையில் பார்வதிதேவி, விநாயகர், முருகன் சகிதமாக வந்தபோது சிவபெருமான் இருகண்களும் திறந்திருந்த நிலையில் ஆழ்ந்த தியானநிஷ்டையில் இருந்ததைக் கண்ட விநாயகப் பெருமான், அன்னை சக்தியிடம், “ தாயே, தந்தை ஏன் கண்களை திறந்தபடி தியானம் செய்கிறார்.  தியானம் என்றாலே கண்களை மூடித்தானே செய்ய வேண்டும் என்று வினா தொடுத்தார்.” அதற்கு பார்வதி தேவி, “தந்தையின் கண் ஒளியினால் தான் அண்ட சராசரங்கள் இயங்குகிறது. அவர் கண்களை மூடினால் அகிலமும் இருட்டாகும்” என்றார். 

அப்போது குறுக்கிட்ட முருகன், “தாயே, அப்படியென்றால் தந்தை ஒரு முறை கண்களை மூடிக்காட்டட்டும் பார்ப்போம்” என்றார். “இதை எப்படி தந்தையிடம் கூற, என்று விநாயகர் கேட்க, அவரிடம் சொல்ல வேண்டாம், அதை நானே செய்கிறேன் என்று கூறியபடி, பார்வதி தேவி, சிவபெருமானின் கண்களை, தனது கரங்களால் மூடினார். மறு கணமே அகிலமும் இருளில் மூழ்கியது. உடனே சக்தியின் கரங்களை விலக்கிக் கொண்டு கண்ணை திறந்தார் சிவன். “என்ன விளையாட்டு இது” சினம் கொண்டார், சிவன். பணிந்தார் பார்வதிதேவி, “சுவாமி, பிள்ளைகள் கேட்டதற்காக செய்தேன். தாங்கள் பொறுத்தருள வேண்டும்.” என்றார். 

இந்த செயலுக்காக நீ வருந்தியே ஆக வேண்டும் என்ற சிவன்,  " நாகக்கன்னியின் வயிற்றில் அஷ்ட காளியாக பிறக்க வேண்டும் " என்று சபித்தார். " இந்தச் சிறிய தவறுக்கு மானிடப் பிறப்பா, அதுவும் நாகத்தின் வழியாகவா " என்று வருத்தமுற்ற பார்வதி தேவி, அவ்விடத்திலிருந்து எழுந்து நகர முற்பட்டார். அப்போது சிவபெருமான் கடுஞ்சினம் கொண்டு நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து வெளியான தீப்பிழம்புகள் பார்வதிதேவியின் மேனியை எட்டு பிண்டங்களாக்கின. அந்த எட்டு பிண்டங்களையும் கையில் எடுத்துக்கொண்டார் சிவன். பாதாள லோகத்தில் நாகக்கன்னி பிள்ளை வரம் வேண்டி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவள் முன் தோன்றிய சிவன், தன்னிடமிருந்த எட்டுப்பிண்டங்களையும் சாப்பிடுமாறு கொடுத்தார். அதை உண்ட நாகக்கன்னியின் வயிற்றில் அது எட்டு முட்டைக்களாக உருமாறி வெளி வந்தன. நாகக்கன்னி அந்த எட்டு முட்டைகளையும் அடைகாத்து வந்தாள்.

நான்காவது நாள் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எட்டு முட்டையிலிருந்து எட்டு பெண் குழந்தைகள் பிறந்தன. முதலாவதாக பிறந்தாள் முத்துமாரி என்ற மாரிமுத்தாரம்மன், இவளை முத்தாரம்மன் என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு. இரண்டாவதாக பிறந்தாள் மாகாளி என்ற பத்திரகாளி, மூன்றாவதாக மூன்று முகத்துடன் பிறந்தாள் முப்பிடாதி (பிடாரி, பிடதி - என்றால் தலை என்று பொருள்). மூன்று தலைகள் இருந்ததால் முப்பிடதி, முப்பிடரி என்று அழைக்கப்பட்டது, இதுவும் மருவி முப்பிடாரி என்றும் முப்பிடாதி என்றும் அழைக்கப்படலாயிற்று. நான்காவதாக பிறந்தாள் உலகளந்தாள் என்ற உலகமாதா, இவளை உலகநாயகி என்றும் அழைப்பதுண்டு. ஐந்தாவதாக பிறந்தாள் அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி, அன்னை இவளே நாகாத்தம்மனாகவும், நாகவல்லியாகவும் அழைக்கப்படுகிறாள். ஆறாவதாக பிறந்தாள் செண்பகவல்லி என்ற வடக்கு வாசல் செல்வி, இவள் செல்லியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். ஏழாவதாக பிறந்தாள் சந்தனமாரி. இவளே சடைமாரி, ஆகாசமாரி என அழைக்கப்படுகிறாள். கடைசியாக பிறந்தாள் காந்தாரி.

பிள்ளைகள் எட்டுபேரையும் நாகக்கன்னி, அன்போடும், அரவணைப்போடும் வளர்த்து வந்தாள். வளர்ந்து வந்த பிள்ளைகள் கன்னியர் ஆகினர். " அம்மா, எங்கள் முகமும் உங்க முகமும் வேறுபட்டு உள்ளதே " என்று கேள்வி எழுப்ப, " எல்லாம் அந்த சிவனார் செயல் " என்றாள் நாகக்கன்னி. உடனே, " நம்மை  ஏன், தாயைப்போல் நாககன்னிகளாக படைக்காமல் மனிதகுல பெண்களாக படைக்க வேண்டும். இந்த நாகலோகத்தில் மனித பிறப்பு எடுத்து என்ன பயனைப் பெறப் போகிறோம். அதை அந்த சிவனிடமே கேட்போம் " என்று கூறி, அக்காள் தங்கை எட்டு பேரும் சிவலிங்கத்தை வைத்து பூஜித்து சிவனை நோக்கி தவமிருந்தனர். 

அவர்களின் தவத்தைக் கண்ட சிவன் அவர்கள் முன் தோன்றினார். அஷ்ட காளிகள் சிவனிடம் தங்களின் பிறப்பு குறித்து கேட்க, " மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டு வரும் மகிஷாசுரனை வதம் செய்யவே உங்கள் படைப்பு " என்று சிவனும் பதில் கூறினார்.  அஷ்டகாளிகளும், " தங்களின் வேண்டுகோளை ஏற்று மகிஷாசுரனை நாங்கள் அழித்து வந்த பின் எங்கள் எட்டு பேரையும் நீங்கள் மணமுடிக்க வேண்டும் " என்றனர். அதற்கு சிவனும் ஒப்புதல் அளித்தார். மேலும் மகிஷாசுரனை அழிக்கும் வகையில் அனைத்து வரங்களையும் நல்கினார் சிவபெருமான்.

சிவபெருமான் ஆணைப்படி மகேந்திரகிரி பர்வத மலைக்கு வந்த அஷ்டகாளிகளுக்கும், மகிஷாசுரனுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடக்கிறது. தனித்தனியாக நிற்பதை விட, ஒரு சேர நின்றால் தனது வலிமை அதிகம் என்பதை உணர்ந்து அஷ்ட காளிகள் எட்டுபேரும் ஒருசேர அமைந்து சாமுண்டீஸ்வரியாக மாறி மகிஷாசுரனை வதம் செய்தனர். இறக்கும் தருவாயில் அரக்கன் மகிஷாசுரன், " தாயே என்னை மன்னித்து விடுங்கள். வாழும் வரை மனித குலத்தில் ராஜாவாக இருந்தேன். இனி கானகத்தில் வாழும் உயிர்களுக்கு ராஜாவான சிங்கமாக மாறி, தாயே உம்மை சுமக்கும் பாக்கியம் தந்தருள வேண்டும் " என்றான். ஆங்கார ரூபினியாக இருந்த அன்னை சாமுண்டீஸ்வரி, சாந்த ரூபினியாக மாறினாள். மகிஷாசுரனை மன்னித்து சிங்கமாக்கி, தனது வாகனமாக்கிக் கொண்டாள். அன்றிலிருந்து அஷ்டகாளிகள் எட்டு பேரும் ஒரு சேர நின்ற கோலத்தில் உள்ள தேவி மகிஷாசுரமர்த்தினி என்ற நாமத்தில் அழைக்கப்பட்டாள்.

கொஞ்சம் படியுங்கள்

கொஞ்சம் படிங்க

உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை.

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.

போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை

ஆகவே  சிக்கனமாக
இருக்காதீர்கள்.

செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!

எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!

நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை.

நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.

உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.

உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.

அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!

சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.

பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!

ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.

அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே
போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

பணம், புகழ்,
சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும்
இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.

நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,
அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
 
மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !

உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது.

நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை
வாழவைக்கும்!!

அதற்கு மேல் என்ன வேண்டும்இ சொல்லுங்கள்?

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை  நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

வரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்!!!!!


60,70,80 வயதில் ஆணும் & பெண்ணும்


ஆணும்  பெண்ணும் எவ்வளவு உயர் பதவி, பொருளாதரத்தில் மேலோங்கி இருந்தாலும் அவர்களின் 60 - 70 - 80 வயதுக்கு மேல் எப்படி இருப்போம் என்பது தான் . இது ஒரு கண்ணோட்டம் எனவே மனதை இப்போது தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
                                                       

*ஒருவரின் பணி ஓய்வுக்குப் பின் அதாவது 60ஐ கடந்து முதிர்ந்து கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என இப்போதே தெரிந்து வைத்திருப்பது, எது வந்தாலும் அஞ்சாமல் அவற்றை எதிர் கொள்ள உதவும்.*

1. *முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக விடை பெற்றுச் சென்றிருப்பார்கள்... பின் நம்மை  ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத் தொடங்குவார்கள். மிச்சம் இருப்பவர்களில் சிலர் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள். நமக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையிலே அதிக கவனம் செலுத்துவார்கள். உங்கள் மனைவியோ அல்லது கணவரோ உங்களுக்கு முன்னால் காலமானால் அனைத்தும் சூன்யமாகி விட்டது போல் உணர்வீர்கள்.*

*அதனால் அப்போது தனிமையில் வாழவும், அதையே ஏற்றும், ரசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்*

2.  *காலப் போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் உங்கள் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம்.*
*நீங்கள் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருப்பினும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருப்பினும்  முதுமை உங்களை ஒரு சராசரி*
*வயதான மனிதராக மாற்றி விடும். நீங்கள் மெதுவாக குடும்பத்தால் சமூகத்தால் ஓரங்கட்டப் பட்டு மறக்கப் படுவீர்கள்.*
*உங்கள் இடத்துக்கு மற்றவர்கள் வந்து விட்டதைப் பார்த்து நீங்கள் பொறாமைப் படவோ முணுமுணுக்கவோ செய்யாமல் உங்களை கட்டுப் படுத்திக் கொண்டு வாழ வேண்டும்*

3.  *அழையா விருந்தாளியாக பல வகை நோய்களும் உடல் உபாதைகளும் உங்களை அண்டும். ஒதுக்கித் தள்ள முடியாத அவைகளுடன் நட்பு கொண்டு வாழ்வதற்கு பழகி கொள்ளவும். உங்கள் உடல் இளமைக் காலத்தில் இருந்தது போலவே இப்போதும் தொல்லையில்லாமல் இயங்கும் என கனவு காணாதீர்கள். அதற்காக அதைப் பற்றியே நினைத்து கவலைப் பட்டுக் கொண்டே  இருக்காமல், எல்லாமே சரியாகவே நடக்கும்   என்ற மனப்பக்குவம் பெறுங்கள். ஒரு இடத்தில் முடங்கி விடாமல் சுறுசுறுப்பாக இயங்கி உங்கள் நலத்துக்குத் தேவையான உடற் பயிற்சியைப் பெறுங்கள்.*

4. *இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு நிலை வரும். அப்போது நம்மால் எழுந்து நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை வரலாம். நாம் பிறந்தபோது இருந்தோமே அது போல. ஒரு முக்கிய வித்தியாசம் நாம் குழந்தையாய் இருந்த போது நம்மை அன்போடு சீராட்டி பராமரிக்க நம் அன்னை இருந்தாள். ஆனால் இந்த படுக்கை சீசன்- 2 வில் சம்பளத்துக்கு வேலை செய்யும் நர்சுகள் தான் அனேகமாக இருப்பார்கள்.*

*அவர்களை நன்றி பாராட்டுவதுடன், அவர்கள் தங்கள் பணியினை செய்து முடிக்க உங்கள் ஒத்துழைப்பை நல்குங்கள்.*

5.  *கடைசி காலங்களில் உங்களது முதுமையைப் பயன் படுத்தி உங்கள் பணம் மற்றும் உடமைகளை உங்களிடம் இருந்து பறிக்க சிலர் முயற்சிக்கலாம்.  அது போன்ற மனிதர்களிடம் உஷாராக இருக்கவும். உங்களுக்கு இனி தேவை இல்லாதவற்றை நீங்களாகவே மற்றவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்*.

 *மிக முக்கியமாக, பற்றற்று வாழப் பழகுங்கள்.*

*வாழ்வின் கடைசி காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குறைந்து இருள் சூழும் நேரம் நெருங்கும். அச்சமயத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்துவது ஒரு யுகமாகத் தோன்றும்.*

*ஆகவே 60ஐத் தாண்டியவர்கள் வாழ்க்கை என்றால்  என்ன என்று இந்நேரம் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.*

*உங்களுக்குக் கிடைத்த வாழ்வை மகிழ்வோடு ஏற்று அனுபவியுங்கள்.*

*நம் பிள்ளைகள் என்னாவார்களோ, நம் பேரன் பேத்திகள் எவ்வளவு மார்க் வாங்குவார்களோ என்றெல்லாம் இனிக்  கவலைப் படாதீர்கள்.*

*ஊரில் ஊழல் மலிந்து விட்டதே, அரசியல்வாதிகள் அநியாயம் பண்றாங்களே என்றெல்லாம் நினைத்து மனதை வருத்திக் கொள்ளாதீர்கள்*.

*இனி நீங்கள் வாழப் போகும் எஞ்சிய காலத்தை மகிழ்வோடு வாழுங்கள்.* *மற்றவர்களை மதியுங்கள்.*
*பணிவோடு நடந்து கொள்ளுங்கள்.* *உங்கள் வயதைக் காரணம் காட்டி உங்களை உயர்த்திக் கொள்ள எண்ணாதீர்கள். யார் மனமும் புண்படும் விதமாக நடக்காதீர்கள்.*
*வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து சஞ்சலமற்ற மனநிலையையும் அமைதியையும் தேடுங்கள்.*

*வாழ்க்கை வாழ்வதற்கே.*

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 22

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 22

தஞ்சம்மாளின் பிரிவிற்குப் பின் இளையாழ்வான் என்ன செய்தார்? இன்று உலகமே போற்றும் 'இராமானுஜர்'  எனும் பட்டம் யாரால் கிடைக்கிறது?
 துறவறம் மேற்கொள்ளுதல்

சன்னியாசஆஸ்ரமத்தை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்தார் இளையாழ்வான். வேதசரஸ் புஸ்கரணிக்குச் சென்றார். அங்கு நீராடினார். அங்கிருந்து பேரருளாளனை நோக்கி பிரார்த்தித்தார்.

'தான் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசி ஆகிவிடுவோம். இனி அதைக்கொண்டு தான் சம்பிரதாயத்தை வளர்க்க வேண்டும்' என்று திருவுளம் கொண்டு தேவராஜப்பெருமாளை பிரார்த்தித்தார்.

பேரருளாளன் சன்னிதிக்குச் சென்று "இவ்வளவு நாள் தாய், தந்தை, மக்கள் என்று இருந்தேன். இனி எனக்கு எந்த உறவும் இல்லை. இந்த பிறவியும் வேண்டாம்"  என்று பிரார்த்தித்தார்.

காஞ்சி பேரருளாளனே ஆச்சாரியனாக வந்து விண்ணப்பம் செய்ய, தேவனே - காஷாயம், திரிதண்டம் - இரண்டையும் இளையாழ்வானுக்குக் கொடுத்தார். ஒருவர் சன்னியாசனம் ஆக வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் ஆச்சாரியானிடத்திலேதான் திரிதண்டம் - காஷாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இளையாழ்வானோ எங்கே, யாரைப் போய்த் தேடுவார்? அதனால்தான் காஞ்சி தேவப்பெருமாளே ஆச்சாரியானாக வந்துவிட்டார் இளையாழ்வானுக்காக.

ஆச்சாரியானாக வந்த தேவப்பெருமாளை இளையாழ்வான் சேவிக்க, அவரோ திரிதண்டத்தை அர்ச்சகர் மூலம் கொடுத்து, "இனி நீர் உள்ளவரையும் தரிசிக்கப்படுவீர். உமக்கு 'இராமானுஜ முனி' என்று திருநாமம் உகந்தருளினோம்!" "இனி இராமானுஜரை மடத்திலேயே வைத்து வாரும்" என்று திருக்கச்சி நம்பிகளுக்கும் அருளினார்.

காஞ்சி தேவப்பெருமாளே ஆச்சாரியானாக உகந்தருளிய 'இராமானுஜர்' என்ற திருநாமமே இன்று உலகம் முழுவதும் அனைவராலும் போற்றப்படுகிறது.

இளையாழ்வான் திரிதண்டத்தைப் பெற்றுக்கொள்ளும் பொழுது நம் மருமகன் முதலியாண்டானைத் தவிர மற்ற அனைத்து சொந்தங்களையும் இழந்தோம் என்றார். முதலியாண்டானைப் பற்றி பிறகு பார்க்கலாம்.

🌻🍁 ஸ்ரீ வைஷ்ணவ சன்னியாசம்

சாதாரணமான சன்னியாசம் மேற்கொள்பவர்கள் வைத்திருக்கும் தண்டத்தில் ஒரு கொம்பு தான் இருக்கும். ஆனால், வசிஷ்டாத்வைதத்தில் சன்னியாசி வைத்திருப்பதில் மூன்று கொம்புகள் இருக்கும்.

'சத்தியம் ஒன்று' என்பது ஆதிசங்கரருடைய கொள்கை. அதனால் ஏக தண்டம்.

'தத்துவங்கள் மூன்று' என்பது இராமானுஜரின் கொள்கை. சித்து, அசித்து, ஈஸ்வரர்கள் என்பது மூன்று கொம்பின் தத்துவமாகும். திரிதண்டத்தை எப்பொழுதும் கையிலிருந்து நழுவ கூடாது. காஷாயத்தை எப்பொழுதும் நிலையிலிருந்து மாற்றக்கூடாது.

சிகை - குடுமி உண்டு. யக்ஜோபவீதம் - பூணூல் உண்டு. இடுப்பில் காஷாய வஸ்திரம் உண்டு. கையில் எப்பொழுதும் திரிதண்டத்தைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இவற்றைதான் இராமானுஜர் பெற்றுக் கொண்டார். இப்பொழுது இராமானுஜரை சேவித்துப் பார்த்தால் உயர்ந்த சூரியன் பளபளவென்று விடிவதெற்குத் தயாராக இருப்பது போல் இருக்கிறார்.

இளையாழ்வான் என்று இதுவரை அழைத்தோம். இப்பொழுதிருந்து இளையாழ்வானை "இராமானுஜர்" என்று அழைப்போம்!

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை விரிவாக்க இராமானுஜர் எடுக்கும் முயற்சிகளை இனிவரும் பதிவில் காணலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🙏💐


ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 21


ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 21

இன்றைய பதிவில் தஞ்சம்மாள் செய்த மூன்றாவது பிழை என்ன என்பதை அறியலாம்.

மூன்றாவது பிழை

பெரிய நம்பிகள் தம் மனைவியுடன் இளையாழ்வான் வீட்டில் தங்கியிருந்தபோது, ஒருநாள் இளையாழ்வான் ஸ்ரீ பெரும்புத்தூர் சென்றிருந்தார். அந்த சமயத்தில் இளையாழ்வானின் மனைவியும், பெரிய நம்பிகளின் மனைவியும் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது இரண்டு வாளியும், நீர் இறைக்கும் பொழுது ஒன்றுடன் ஒன்று உரசி நீர் தெளித்தது. இதைக்கண்ட தஞ்சம்மாள் பெரிய நம்பிகளின் மனைவியிடம் பேச ஆரம்பித்தார். இவள் பேச பதிலுக்கு பெரிய நம்பிகளின் மனைவி பேச வாதம் விவாதமானது.

இதை தெருவில் குடியிருந்தோர் அனைவரும் கேட்டு விட்டனர். இளையாழ்வானின் மனைவி தஞ்சம்மாளை சற்று அதிகமாகவே விவாதம் செய்து விட்டாள். இதை அறிந்த பெரிய நம்பிகள், தன் மனைவியைக் கோபித்துக் கொண்டார்.

"வா! நாம் திருவரங்கம் செல்லலாம்" என்று கூறி, பெரிய நம்பிகள் தன் மனைவியை அழைத்துக் கொண்டு இளையாழ்வான் வீட்டை விட்டுக் கிளம்பினார். ஸ்ரீ பெரும்புத்தூர் சென்றிருந்த இளையாழ்வான் வரும்முன்னே பெரிய நம்பிகள் சென்றுவிட்டார்.

தன் வீட்டிற்கு வந்திருந்த பெரிய நம்பிகளை வீட்டில் அழைத்தபோது இல்லை. "எங்கே சென்றார்?" என்று அருகில் இருந்தோரிடம் விசாரித்த பொழுது, அவர் திருவரங்கம் புறப்பட்டுச் சென்றதையும், தஞ்சம்மாள் நடந்து கொண்டதையும் அருகிலிருப்போர் கூற, தஞ்சம்மாளிடம் பெரிய நம்பிகள் பற்றி விசாரித்தார். தஞ்சம்மாளும் நடந்ததைக்கூற, இளையாழ்வானுக்கு அதிகமாகவே கோபம் வந்துவிட்டது.

"ஆச்சாரியனைத் தேடி தேடி அலைந்து கொண்டிருந்ததற்கு பரிசாக, இறைவனே பெரிய நம்பிகளை ஆச்சாரியனாக ஆக்கிக் கொடுத்தார். அந்த ஆச்சாரியனுக்கே பெரிய பாவத்தை பண்ணிவிட்டாய்" என்று கூறினார். வைஷ்ணவ சம்பிரதாயத்தை பொறுத்தவரை, பாகவதன் பாவத்தை விடவும், ஆச்சாரியானுக்குச் செய்யும் பாவத்தைத் தொலைக்கத்தான் பிராயச்சித்தம் இல்லை. அதற்கு என்ன பரிகாரம் செய்தாலும், செய்த பாவத்தைத் தொலைக்க முடியாது. "இந்த பாவத்தை நான் எப்படி நான் தொலைப்பேன்? என்ன செய்வேன்?" என்றெல்லாம் உரைத்தார்.

தஞ்சம்மாளுடன் குடும்பப் பொறுப்பில் இருக்கும் வரையில், தம்முடைய நோக்கமும், பிரார்த்தனைகளும், ஸ்ரீ வைஷ்ணவ செயல்பாடுகளும் முழுமையாக செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். "இனி, நீ உன் பிறந்தகம் செல்லலாம்" என்று தஞ்சம்மாளிடம் கூறிவிட்டார். தஞ்சம்மாளுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து, அவரது வீட்டில் உள்ளவர்களை வரவழைத்து அவர்களுடன் தஞ்சம்மாளை அனுப்பி வைத்து விட்டார்.

'தஞ்சம்மாளுக்கும் எனக்கும் இருக்கும் உறவு முறிந்துவிட்டது. இனி, ஸ்ரீ வைவஷ்வ சம்பிரதாயங்களில் சுதந்திரமாகச் செயல்படலாம்' என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அதன் பின் இளையாழ்வான் செய்த செயல் என்ன? இளையாழ்வானுக்கு இன்று உலகமே போற்றும் இராமானுஜர் எனும் பட்டம் யாரால் கிடைக்கிறது?  நாளைய பதிவில் அறியலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 20

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 20

 தஞ்சம்மாளின் செயல்கள்

மந்திர ரத்தினத்தின் ரகஸ்யத்தைக் கேட்டு உய்ந்த இளையாழ்வான், குருவையும் அவர் பத்தினியையும் காஞ்சிபுரத்திற்கு அழைத்தார். பெரிய நம்பிகளும் இளையாழ்வானின் வேண்டுகோளுக்கிணங்க காஞ்சிபுரத்திற்கு வந்தார்.

காஞ்சிபுரம் வந்த பெரிய நம்பிகளையும், அவரது பத்தினியையும் தம் இல்லத்தின் ஒரு பகுதியில் தங்குமாறு இளையாழ்வான் சொல்ல அவரும் சம்மதித்தார். இளையாழ்வான் வீட்டில் அவர்கள் தங்கினார்கள். இளையாழ்வான் பெரிய நம்பிகளிடம் வீட்டில் இருந்தவாறே காலட்சேபம் பயின்று வந்தார். நம்பிகள் வியாச சூத்ர அர்த்தத்தை கற்றுக் கொடுத்தார்.

ஒரு சமயம் வீட்டிற்கு ஸ்ரீ வைஷ்ணவர் வர, அவருக்கு உணவிடும் படி தஞ்சம்மாளிடம் சொன்னார் இளையாழ்வான். ஆனால், தஞ்சம்மாளோ உணவு ஏதும் இல்லை என்று கூறிவிட்டாள். அப்போது இளையாழ்வான் உள்ளே சென்று பார்த்த பொழுது ஒரு பாத்திரம் நிறைய பழைய சாதம் இருப்பதைக் கண்டார். "வீட்டில் உணவை வைத்துக்கொண்டே, ஸ்ரீ வைஷ்ணவருக்கு உணவில்லை என்று சொல்வது அபச்சாரம் இல்லையா?" என்று தஞ்சம்மாளிடம் தன் சினத்தை வெளிப்படுத்தினார். வீட்டிற்கு வந்த பாகவதற்கு உணவில்லை என்பது பெரிய அபச்சாரம்.

ஆனால், எல்லை மீறிய சினத்தை இளையாழ்வான் கட்டுப்படுத்திக் கொண்டு தஞ்சம்மாளை திட்டுவதோடு விட்டுவிட்டார். இது தஞ்சம்மாள் செய்த இரண்டாவது பிழை. முதல் பிழை திருக்கச்சி நம்பிகள் உணவருந்திய போது இலையைக் கையால் எடுக்காமல் கோலால் எடுத்து, குப்பையில் போட்டு வீட்டை சுத்தம் செய்து, தானும் சுத்தப்படுத்திக் கொண்டது.

இப்போது நடக்கும் சம்பவத்தின் மூலம் தஞ்சம்மாள் பெரிய பிழையைச் செய்கிறாள். அதுதான் அவள் இளையாழ்வானைப் பிரிய காரணமாக அமைந்தது. இளையாழ்வானின் மனைவி தஞ்சம்மாள் அப்பேற்பட்ட மனம் படைத்தவளா என்று எண்ண வேண்டாம். ஆளவந்தார் காஞ்சிபுரம் வந்தபொழுது ஸ்ரீ வைஷ்வண சம்பிரதாயத்திற்கு இளையாழ்வானைத்தான் ஆக்கிக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார் அல்லவா?  அந்த வேண்டுதல் தான் இப்போது தஞ்சம்மாளுக்கும், இளையாழ்வானுக்கும் உண்டான பிரிவு மூலம் நிறைவேறப் போகிறது.

காஞ்சி பேரருளாளன் எதைக் கேட்டாலும் கொடுக்கக் கூடியவர். ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவ சாம்ராஜ்யம் உருவாவதற்கு இந்த காஞ்சி பேரருளாளனின் அருள் தான் காரணம். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சிறப்பு பெற்ற ஆச்சாரியர்கள், 12 ஆழ்வார்களில் மூன்று ஆழ்வார்கள் அவதாரம் பண்ணியது என்ற எல்லா சிறப்பும் காஞ்சிபுரத்திற்கு உரியதே. எல்லோருடைய பிரார்த்தனை எதுவானாலும் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடியவர் காஞ்சி பேரருளாளன். அவர் தான் இப்பொழுது ஆளவந்தாரின் பிரார்த்தனையை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

சரி, தஞ்சம்மாள் செய்த மூன்றாவது பிழை என்ன?

!!  சாதீயத்திற்காக சம்சாரபந்தத்தை துறந்த ஸ்ரீமத் பகவத் ராமானுஜர் !!

சாதி ஏற்றத்தாழ்வை ராமானுஜர் கடுமையாக எதிர்த்தார். சாதி ஏற்றத்தாழ்வை தம்முடைய மனைவி கொண்டிருந்தார் என்பதே அவரின் துறவறத்துக்கு ஒரு காரணம். அவரின் தாம்பத்ய வாழ்வில் மூன்று முறை ராமானுஜரின் மனைவி இத்தகைய சாதி ஏற்றத் தாழ்வை வெளிப்படுத்துகிறார்.

திருக்கச்சி நம்பிகளுக்கு வீட்டின் நடையிலேயே உணவு அளிக்கிறார் ராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பாள். அதன் பின், வைணவர் ஒருவருக்கு ஆகாரம் அளிக்குமாறு கூற வீட்டில் ஒன்றுமில்லை என்று பொய் சொல்லிவிடுகிறார்.

ராமானுஜரின் குரு பத்தினியாருடன் சேர்ந்து கிணற்றிலிருந்து நீர் அள்ளும் போது தகாத சொற்கள் கூறி அதன்காரணமாக அவர்கள் வீட்டை விட்டே வெளியேறுவதற்குக் காரணமாயிருக்கிறார். இந்த மூன்று நிகழ்வுகள் அவரை துறவறத்துக்கு தூண்டுவதாக அமைந்தன.

ராமானுஜரின் மனைவி தஞ்சம்மாளோ மிகுந்த ஆசாரமான குடும்பத்திலிருந்து வந்தவள்.

 ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளோடு பேசுவதையே விரும்பாதவள்; அவரையே குருவாக ஏற்றுக் கொண்டது அவளுக்குத் துளியும் பிடிக்கவில்லை.

இந்த நிலையில் ராமானுஜர் தஞ்சம்மாளிடம், ‘திருக்கச்சி நம்பிகளை அமுதுண்ண அழைத்துள்ளேன். விரைவில் தளிகை (சமையல்) செய்’ என்றார்.

 தஞ்சம்மாள் வேண்டா வெறுப்பாக தளிகை செய்ய, ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளை அழைத்து வர புறப்பட்டுப்போனார். நம்பிகளோ, வேறு வேலை இருந்ததால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ராமானுஜரின் வீட்டிற்கு வந்துவிட்டார்.

தஞ்சம்மாள் இரண்டு திண்ணைகளுக்கிடையில் இருக்கும் நடைபாதையில் அவரை அமரச் செய்து உணவிட்டாள். திருக்கச்சி நம்பிகள் சென்றபின் அவர் சாப்பிட்ட இலையைக் கோலால் எடுத்தெறிந்து, வீடு முழுவதும் சாணம் தெளித்து சுத்தம் செய்து, தானும் குளித்துவிட்டு, புதியதாக சமையல் செய்து ராமானுஜரின் வருகையைப் பார்த்துக் காத்திருந்தாள்.

 விவரம் அறிந்த ராமானுஜர் கோபம் கொண்டார். தன் பக்தி மார்க்கத்திற்கும் மனித நேயத்திற்கும் வைணவ வளர்ச்சிக்கும் தஞ்சம்மாள் உறுதுணையாக இருக்கமாட்டாள்; உபத்திரமாகத்தான் இருப்பாள் என்று எண்ணிக் கொண்டார்.

இன்னொரு சமயம், ராமானுஜருக்கு எண்ணெய்த் தேய்க்க ஒரு வைணவர் வருவார். ஒருநாள் அந்த வைணவர் பசிக்கிறது என்றுகூற, ராமானுஜர் தஞ்சம்மாளை அன்னமிடச் சொல்கிறார்.

 அவளோ தளிகை இன்னும் செய்யவில்லை என்கிறாள். அப்படியா? சரி! பழைய சாதம் இருக்குமே! அதைப் போடு என்கிறார்.

தஞ்சம்மாள் அதுவும் இல்லை என்று கூறிவிட்டு வெளியில் சென்றாள். அப்போது உள்ளே சென்று பார்த்த ராமானுஜர், உணவு மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டார்.

மற்றொரு சமயம் பெரிய நம்பிகளிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்ட ராமானுஜர் அவரையும் அவரது மனைவி விஜயாம்பாளையும் தம் இல்லத்திற்கு அழைத்து வந்தார்.

அவர்களை வீட்டில் இருக்கச் செய்து மேல்மாடியில் பெரிய நம்பிகளிடம் உபதேசம் பெற்று வந்தார். ஒருநாள் ராமானுஜர் ஸ்ரீ பெரும்புதூர் சென்றிருந்தார்.

அப்போது தஞ்சம்மாளுக்கும் விஜயம்பாளுக்கும் கிணற்றங்கரையில் தண்ணீர் எடுக்கச் சென்றிருந்த போது மனஸ்தாபம் ஏற்பட்டது.

விஜயம்பாள் எடுத்த குடத்து நீர்த்துளிகள் தஞ்சம்மாளின் குடத்து நீரில் சிந்திவிட்டன. மிகுந்த ஆசாரம் பார்க்கும் தஞ்சம்மாள், விஜயாம்பாள் பிராமணளாக இருப்பினும் தன்  தாழ்ந்தவள்; செல்வத்திலும் தனக்குச் சமமாக இல்லை என்று கருதி, ‘ஏம்மா! குரு பத்தினி என்ற நினைப்போ?’ என்று கேட்டுவிட்டாள்.

பெரிய நம்பிகளும் விஜயம்பாளும் ராமானுஜர் வருவதற்கு முன் கிளம்பிவிட்டனர்.
ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து வந்த ராமானுஜர் செய்தி அறிந்து மிகவும் விசனப்பட்டார். சாதி வேறுபாடுகளை பார்க்கக் கூடாது என்ற தம் கொள்கைகளுக்கு தன் மனைவியே எதிரி என்று புரிந்து கொண்ட ராமானுஜர்,

‘சற்றே ஏறுமாறாக நடப்பாளேயாகில் கூறாமல் சந்நியாசம் கொள்’

 என்பதற்கேற்ப துறவறம் மேற்கொண்டார். ஓடும் உதிரத்தில் உருண்டு விழும் கண்ணீரில் சாதி தெரிவதுண்டோ? என்ற உண்மை தஞ்சம்மாளை போன்று பலருக்குப் புரியாமல் இன்றளவும் இருப்பது புரியாத புதிரேயாகும்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏


ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 19

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 19

பெரிய நம்பிகள் இளையாழ்வான் சந்திப்பு

வாழியெதிராசன் வாழியெதிராசன்

திருக்கச்சி நம்பிகள் மூலம் பெரிய நம்பிகளையே குருவாக ஏற்றுக்கொள்ளும்படி பேரருளாளன் இட்ட கட்டளையை மேற்கொண்டு, பெரிய நம்பிகளை சந்திக்கப் புறப்பட்டார் இளையாழ்வான்.

இந்த சமயத்தில் திருவரங்கத்திலுள்ள ஸ்ரீ  வைஷ்ணவர்கள் ஆளவந்தாரின் விசேஷ கடாக்ஷம் பெற்ற இளையாழ்வாரை அழைத்துக் கொண்டு வரவேண்டுமென்று பெரிய நம்பிகளிடம் விண்ணப்பித்தனர். பெரிய நம்பிகளும் அதனை ஏற்றுக் கொண்டு தன் மனைவியுடன் இளையாழ்வானைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றார்.

பெரிய நம்பியும் அவரது மனைவியும் மதுராந்தகம் (காஞ்சிபுரம் மாவட்டம்) சென்றடைந்தனர். அங்கு எழுந்தருளியுள்ள ஏரிகாத்த பெருமாளின் சந்நிதியில், அவர்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். இளையாழ்வானும் அப்பொழுது மதுராந்தகம் ஏரிகாத்த பெருமாளின் கோவிலுக்கு வந்தடைந்தார், பெரிய நம்பிகளைச் சந்தித்தார். இந்த எதிர்பாராத சந்திப்பினால் பெரிய நம்பிகளும் இளையாழ்வானும் மகிழ்ந்தனர். பெரிய நம்பிகளைச் சந்தித்தது பேரருளாளன் கருணையே என்று மகிழ்ந்த இளையாழ்வான் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

பெரிய நம்பிகளும் இளையாழ்வானை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார். பெரிய நம்பிகள்,  "காஞ்சி பேரருளாளன் சந்நிதி முன்பு 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்து கொள்ளலாம்" என்றார். இளையாழ்வானோ "எனக்கு இவ்ளோ நாள் தவம் செய்து இப்போது தான் குருவாக தாம் கிடைத்திருக்கிறீர். காஞ்சிபுரம் செல்லலாம் என்றால், அதற்குள் என்ன நடக்கும் என்று தெரியாது. அதனால் இந்த மதுராந்தகத்திலேயே பஞ்ச சம்ஸ்காரம் செய்துவிடலாமே" என்று வேண்ட, பெரியநம்பிகளும் ஏரிகாத்த ராமர் கோவிலிலுள்ள மகிழ மரத்தடிக்கு அழைத்துச் சென்று 'பஞ்ச சம்ஸ்காரம்' செய்தார்.

🌺🌺 பஞ்ச சம்ஸ்காரம்

பஞ்சசம்ஸ்காரம் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்திலுள்ள முக்கிய சம்பிரதாயம் ஆகும்.

🍁 சங்கு - சக்கரம்

தீயிலிட்டு நன்கு பழுக்க காய்ச்சிய சங்கினை இடது தோளிலும், சக்கரத்தினை வலது தோளிலும் இடுவார்கள். பெரிய நம்பிகள் இளையாழ்வானின் வலது, இடது தோளில் சக்கரம், சங்கினை இட்டார்.

🌻 திருமண் காப்பிடல்

சீடரின் நெற்றி, கழுத்து, மார்பு, முதுகு, தோள்பட்டை, வயிறு ஆகிய இடங்களில் 12 திருமண் காப்புகளை, விஷ்ணுவின் 12 சிறப்புப் பெயர்களைக்கூறி ஆச்சாரியர் காப்பிடுவார். பெரிய நம்பிகள் இளையாழ்வானுக்கு திருமண் காப்பிட்டார்.

🌹 தாஸ்யநாமம் சூட்டுதல்

ஆண் பக்தர்களுக்கு இராமானுஜ தாஸன் என்றும், பெண் அன்பர்களுக்கு இராமானுஜ தாசி என்று பெயரிடுவார்கள். விஷ்ணு பக்தரின் பிறப்புப்பெயர் வாசுதேவன் இருப்பின் வாசுதேவ இராமானுஜ தாசன் என்று பெயரிடுவார்கள். இராமானுஜர் தங்கள் தொடர்புடையவர் என்பதைக் குறிக்க இராமானுஜ தாஸ்யப் பெயர் புதிதாக ஆச்சாரியாரால் சூட்டப்படுகிறது.

ஆனால், இளையாழ்வானான இராமானுஜர் அவதரித்து வைஷ்ணவ ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் வரை "தாஸன்" "தாசி" என்ற திருநாமத்தை இட்டுக் கொள்வார்கள். "இளையாழ்வான் தாஸன்" என்ற திருநாமத்தை பெரிய நம்பிகள் இளையாழ்வானுக்கு இட்டார்.

🌺 மந்திரதீட்சை அளித்தல்

மூன்று தெய்வீக புனித இரகசியத் திரய மந்திரங்கள் (இரகசியத் திரயம்) எனும் எட்டெழுத்து மந்திரம், துய மந்திரம் மற்றும் சரம ஸ்லோகம் ஆகிய மந்திரத்தை தீட்சை பெறும் சீடரின் காதுகளில் மட்டும் கேட்கும்படி ஆச்சாரியார் மந்திர தீட்சை அளிப்பார்.

இளையாழ்வானின் காதில் துய மந்திரம், சரம ஸ்லோகம் மந்திரங்களை பெரிய நம்பிகள் கூறினார். எட்டெழுத்து மந்திரம் இளையாழ்வான்  திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் கற்றார். அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்.

🍁 யக்ஹம்

திருமாலை வழிபடும் முறைகள், உணவு நியமம் மற்றும் பிற வைஷ்ணவ அடியார்களுடன் நடந்து கொள்ளும் முறைகளை ஆச்சாரியன் சீடருக்கு விளக்குவார். இவற்றையெல்லாம் இளையாழ்வானுக்கு பெரியநம்பிகள் எடுத்துக் கூறினார்.

ஆளவந்தாரின் கருணை தம்மூலம் இளையாழ்வானுக்கு பிரகாசித்து அருளுகிறது என்று கூறி, சர்வமந்திரம், த்வய மந்திரம் அனைத்தையும் உபதேசித்தார் பெரிய நம்பிகள்.

மந்திர ரத்தினத்தின் ரகஸ்யத்தைக் கேட்டு உய்ந்த இளையாழ்வான், குருவையும், அவர் பத்தினியையும் காஞ்சிபுரத்திற்கு அழைத்தார்.


ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
       திருப்பாணாழ்வார் அருளிச்செய்த
             அமலனாதி பிரான்
             🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
               பெரிய நம்பிகள்
         அருளிச்செய்த தனியன்

ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயானம் மத்யேகவேர துஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிஸ்சிகாய மநவை முநிவாஹனம் தம்

விளக்கவுரை :
எந்த ஒரு திருப்பாணாழ்வார் திருக்காவேரியின் மத்தியில் திருப்பள்ளி கொண்டிருக்கின்ற
அழகிய மணவாளப் பெருமாளை,
திருவடி தொடங்கி திருமுடி வரைக்கும்
கண்குளிர அனுபவித்த மகிழ்ந்த சிந்தையராய், தமது கண்கள் அப்பெருமாளை தவிர வேறு ஒன்றையும் பார்க்காது என்று திடமாக சொன்னாரோ , அப்படிப்பட்டவரும்,
லோகசாரங்க முனிவரை வாஹனமாக உடையவருமான திருப்பாணாழ்வாரை
சிந்திக்க கடவேன்.

             திருமலைநம்பிகள்
         அருளிச்செய்த தனியன்

காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி*
தேட்டரும் உதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்*
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து*
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே.

விளக்கவுரை :
லோகசாரங்க முனிவரின் தோளில் ஏறி, தனியே திருவரங்கனின் சந்நிதியிலே புகுந்து, அம்முனிவர் திருவரங்கனை காண்பிக்கவே,
தான் கண்ட திருவரங்கனின்
திருவடித் தாமரைகள்,
நல்ல பீதாம்பரம்,
திரு உந்திக்கமலம்,  கிடைத்தற்கு அரிய பொன் அரைநாண், பிராட்டி வாழ்கின்ற மார்பு,  திருக்கழுத்து, சிவந்த திருவாய், சோர்வில்லாத திருக்கண்கள் இவற்றை பாசுரங்களாக பாடி மகிழும் திருப்பாணாழ்வாருடைய திருவடிகளை துதிக்கப் பெற்றோமே.
         மலர்க்கண்ணில் வேறொன்றும்
              வையாதான் வாழியே!

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏


ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 18

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 18

காஞ்சி தேவப்பெருமாள் சொன்ன வார்த்தைகள்
======
இளையாழ்வான் திருக்கச்சி நம்பிகளிடமே தன் பிரச்சினையைத் தீர்க்க உபாயம் சொல்லவேண்டி வரதராஜரான தேவப்பெருமாளிடம் கேட்டுச் சொல்லும்படி சொல்ல, திருக்கச்சி நம்பிகளும் தேவப்பெருமாளுக்கு பரிவட்டம் வீசச் செல்லும் பொழுது கேட்பதாக உறுதியளித்தார்.

நம்பிகள் வழக்கம்போல காஞ்சி பேரருளாளனுக்கு ஆலவட்டம் வீசும் பணியைச் செய்து முடித்தார். முடிந்ததும் உடனே கிளம்பாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். இதைக் கண்ட தேவப்பெருமாள் "நீர் இன்னும் கிளம்பலையா? இங்கேயே நிற்கிறீர்? எதுவும் முக்கியமான விசயமா?" என்று தன் திருவாய் மலர்ந்தார். திருக்கச்சி நம்பிகளும் இளையாழ்வான் தன் சந்தேகத்தைத் தீர்க்கச் சொன்னதைப் பற்றி சொன்னார். "அவருக்கு என்ன சந்தேகம்? எதில் சந்தேகம்?" என்று புரியாதவாறு கேட்டார் மாயக்கண்ணன் தேவப்பெருமாள்.

திருக்கச்சி நம்பிகளும், "இளையாழ்வானிடம் கேட்டால் உங்களுக்குத் தெரியும். தேவரீர் நிச்சயம் தீர்த்து வைப்பீர் என்று சொல்கிறார். நீரோ என்னிடம் என்னவென்று கேட்கிறீர்!" என்றார்.

🌾🌾 உரைத்த ஆறு

காஞ்சி வரதராஜப் பெருமாள் உரைத்த ஆறு விசயங்கள் புகழ் பெற்றவை. திருக்கச்சி நம்பியிடம் இராமானுஜர் கீழ்க்காணும் நான்கு கேள்விகளைத் தம் பொருட்டுக் கேட்டார்.

1. உபாயங்களில் எது நல்லது?
2. மோட்சம் அடைவதற்கு முன் அந்திமஸ்ருதி வேண்டுவது எப்போது?
3. எந்த ஜென்மத்தில் மோட்சமடைவது?
4. எந்த ஆச்சார்யரை நான் ஏற்றுக் கொள்வது?

இக்கேள்விகளை இராமானுஜர் கேட்பதாக திருக்கச்சி நம்பிகள் தேவப்பெருமாளான வரதரிடம் கேட்க அவர் 6 வார்த்தைகளில் பதில் கூறுகிறார்.

1. அஹம் மேவபரம்தத்வம்
2. தர்சனம் பேத ஏவச
3. உபாயேஷ் பேத ஏவச
4. அந்திமஸ்மருதி வர்ஜனம்
5. தேக வஸானே முக்தில் ஸ்யாத
6. பூர்ணசச்யார்ய ஸமாச்ரய

🥀🥀 அதன் விளக்கமானது:

👉 அஹம் மேவபரம்தத்வம்

"நானே பரம்பொருள்!"

ஸ்ரீமந் நாராயணனான நானே உலகிற்கும், உலக காரணிகட்கும் தத்துவமாய் விளங்கும் பரம்பொருள் என்பதாகும். முடிவான உண்மை நானே.

👉 தர்சனம் பேத ஏவச

"ஜீவாத்மா, பரமாத்மா (ஜீவன்-ஈஸ்வரன்) இரண்டும் வெவ்வேறானவை"

(ஜீவாத்மாக்களும்/அசேதனங்களும் என்னிலிருந்து வேறுபட்டவை. அவை என்னுடைய சரீரமாக விளங்குபவை). நாம் எல்லாம் ஜீவாத்மா. எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் ஒருவரே பரமாத்மா.

👉 உபாயேஷ் பரப்த்திய ஸ்யாத்

"என் ஒருவனையே தஞ்சமாகப் பற்றுவாய்” என்னிடத்தில் சரணம் அடைவது ஒன்றே என்னை அடைவிக்கும் வழி.

பகவானை அடைய (மோட்சம் அடைய) சரணாகதியே சிறந்தவழி. அதைத்தான் ப்ரபத்தியே உபாயம் என்பார்கள். எம்பெருமானிடம் நாம் "பூரண சரணாகதி" அடைந்தாலே போதும்.

👉 அந்திமஸ்மருதி வர்ஜனம்

மரணத்தருவாயில் இருக்கும் சரணாகதர்களுக்கு, என்னைப்பற்றிய சிந்தனை கட்டாயமில்லை. வராஹ சரம ஸ்லோகத்தில் நானே அறிவித்தது போல, "உன்னுடைய அந்திம காலத்தில் நானே உன்னைப்பற்றிய சிந்தனையை ஏற்கிறேன்." (நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர்கள் நமக்கு காட்டிச்சென்ற இனிமையான பாதை – நாம் எல்லா நேரத்திலும் நம்முடைய ஆச்சார்யாரைப் பற்றியே சிந்தித்தபடி இருக்கவேண்டும்).

ஒரு மனிதனின் அந்திமகாலத்தில் பெருமாளை நினைக்க முடியாவிட்டால் தவறில்லை. இந்த ஜீவனானது சரீரத்தில் இருக்கும் இளமைக் காலங்களில் எம்பெருமானைத் துதித்தால் போதும். ஆகையால் அந்திமக் காலத்தைப் பற்றி நினைக்காமல், நம்முடைய கடமையைச் செய்தும், இறைவனுக்குத் தொண்டு செய்யலாம்.

👉 தேக வஸானே முக்தில் ஸ்யாத

சரணாகதர்கள் தற்போதுள்ள தங்களுடைய இந்த சரீரத்தின் முடிவிலேயே முடிவில்லாத பரமாத்மாவிற்கு கைங்கர்யம் செய்வதற்கான பரமபதத்தை அடைவர்.

"என்னை உபாயமாகக் கொண்ட இத்தகைய பக்தருக்கு இந்த உடல் கழிந்தவாறே (இப்பிறவி முடிந்ததும்) மோட்சத்தை நானே அருளுகிறேன்."

இறுதிக் காலத்தில் நாம் பகவானை நினைக்காமல் விட்டாலும் பகவான் நம்மைத் தேடி வந்து நமக்கு "மோட்ச சாம்ராஜ்ஜியமான சரீர விடுதலை" அளிக்கிறார்.

👉 பூர்ணசச்யார்ய ஸமாச்ரய

"நற்குண பண்டிதராய் இருக்கும் மகா பூர்ணரான பெரிய நம்பியை ஆச்சார்யராக ஏற்றுக் கொள்வாயாக."

🍁🍁 திருக்கச்சி நம்பிகளின் மகிழ்ச்சி

இவ்வாறு ஆறு வார்த்தைகள் கேட்ட திருக்கச்சி நம்பிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

"இளையாழ்வானோ ஆதிசேனின் அவதாரம், அவரோ உம்மிடம் கேட்காமல் என்னிடம் கேட்கிறார். நீரோ அவருக்கு எதையும் உணர்த்தாமல், என் மூலம் இளையாழ்வானின் சந்தேகங்களுக்கு விடையளித்து, கட்டளையிடுகிறீர். உங்கள் இருவருக்கும் இடையில் நானா? நான் பாக்கியம் பெற்றிருக்கிறேன்" என்று அருளாளப்பெருமாளிடம் கூறினார்.

நம்பிகள் இளையாழ்வாரிடம் சென்று பகவானின் இந்த ஆறு கட்டளைகளையும் தெரிவித்தார்.  இளையாழ்வாரும் திருக்கச்சி நம்பிகளின் பேருதவிக்காக நன்றி தெரிவித்தார்.

அதே சமயம், இளையாழ்வாரும் பெரிய நம்பிகளை குருவாக ஏற்பது  தன்னுடைய விருப்பமும் கூட என்று கூற, திருக்கச்சி நம்பிகள் பகவானின் திருவுள்ளமும் இளையாழ்வாரின் திருவுள்ளமும் ஒரே விதமாக இருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

*வந்தாரை வாழ்விக்கும் பேரருளாளர்*

ஆளவந்தாரின் சீடரான திருமலையாண்டானிடம் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியையும், திருவரங்கப் பெருமாள் அரையரிடத்தே ஏனைய மூவாயிரம் பாடல்களையும், ராமானுஜர் கற்றார். பின், யஜ்ஞமூர்த்தி எனும் அத்வைத வித்வான் கங்கைக்கரையில் உள்ள பண்டிதர்களை எல்லாம் வென்று திருவரங்கத்தில் வந்து ராமானுஜரோடு வாதிட்டார். வாதப்போர் பதினேழு நாட்கள் ஆகியும் தொடர்ந்தது. கவலையுற்ற ராமானுஜரின் கனவில் காஞ்சி தேவப்பெருமாள் தோன்றி வேதாந்தத்தின் கருத்தான வசிஷ்டாத்வைதத்தின் ஆழ்பொருளை உணர்த்தினார். அடுத்த நாள் அக்கருத்துகளைக் கேட்ட யஜ்ஞமூர்த்தி  மனம் மாறினார். ராமானுஜர் திருவடிகளைப் பற்றினார். அவரையணைத்த உடையவர், ஸ்ரீவைஷ்ணவ மரபுப்படி பஞ்சஸம்ஸ்காரம் செய்து தன் பெயரையும் தேவப்பெருமாள் திருநாமத்தையும் சேர்த்து " அருளாளப் பெருமாள் எம்பெருமானார் " என்று பெயர் சூட்டினார். அன்று முதல் தன் பூசைக்குரிய பெருமாளையே அவரிடம் ஒப்படைத்து திரு ஆராதனம் செய்து வரச் சொன்னார். வந்தாரை அரவணைத்து ஏற்றுக் கொள்ளும் பேரருளை நினைத்து சீடர்கள் போற்றினர்.
"

அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?..."

தேவராஜ! தயாஸிந்தோ!  தேவதேவ ஜகத்பதே!

"ஹஸ்து ஸ்ரீஸ்தந கஸ்தூரீ
வாஸநாவாஸிதோரஸே

ஸ்ரீ ஹஸ்திகிரி நாதாய தேவராஜாய மங்களம்"

-காஞ்சி ஸ்ரீ தேவப்பெருமாள் திருவடிகளே சரணம்

*ஸ்ரீ உடையவர் திருவடிகளே சரணம்.*

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏


ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 17

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 17

வாழியெதிராசன் வாழியெதிராசன்
 
திருக்கச்சி நம்பிகளைச் சந்தித்தல்

யாதவப் பிரகாசரிடம் அத்வைதம் கற்றுக் கொண்டிருக்கும் போதே, இளையாழ்வானின் அன்னை காந்திமதியும் இறைவனடி அடைந்துவிட்டார். அதன் பின் திருக்கச்சி நம்பிகளிடம் சிஷ்யராகக் கேட்க அவரும் மறுத்து விட்டார்.

ஆளவந்தாரையாவது குருவாக ஏற்றுக்கொண்டு, அவரிடம் ஸ்ரீ வைஷ்ணவ காலட்சேபம் பண்ணலாம் என்றால் அதுவும் முடியவில்லை. மனதில் ஆயிரம் குழப்பம் இருந்தாலும், காஞ்சிபுரம் வந்தடைந்தபின் பேரருளானனுக்கு சாலக்கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கைங்கரியம் செய்தார்.

அப்போது திருக்கச்சி நம்பிகளை வழக்கம் போலச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். திருக்கச்சி நம்பிகள் ஆளவந்தாரைப் பற்றி விசாரித்தார். இளையாழ்வானும் தான் திருவரங்கம் சென்றதையும், அங்கு நடந்த சம்பவங்களை பற்றியும் சொன்னார்.

திருக்கச்சி நம்பிகளும் ஆளவந்தார் இறைவனடி அடைந்ததை நினைத்து வருத்த மடைந்தார்.  நம்பிகளுடைய குரு அல்லவா ஆளவந்தார்? திருக்கச்சி நம்பிகளும் சில மணி நேரம் கழித்து மன  சாந்தியடைந்தார்.

இளையாழ்வான் ஆளவந்தாரின் மூன்று ஆசைகள் நிறைவேறாததை அங்கிருந்தோர்களிடம் இருந்து தெரிந்து கொண்டதாகவும், அந்த மூன்று ஆசைகளை தான் நிறைவேற்றுவதாக சபதம் சொன்னதையும், அப்போது மடங்கிய மூன்று விரல்களும் நிமிர்ந்தன என்பதையும் சொன்னார்.

🌺🌾 வசிஷ்டாத்வைதம்

பிரம்ம சூத்திரத்திற்குப் பாஷ்யம் எழுத வேண்டும் என்றால், அதற்குத் தம்மை முதலில் தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இளையாழ்வானின் மனதில் விஸ்வரூபம் எடுத்தது. ஆதிசங்கரருடைய அத்வைதத்துடன் மாறுபட வேண்டும் என்றால், அதற்கு முதலில் தம்மைச் சிறந்த முறையில் தயார் செய்ய வேண்டும்.

அப்படித் தயார் செய்தால்தான், அவருக்கு இணையான ஞானத்தைப் பெற முடியும். இதனால், இளையாழ்வான் வசிஷ்டாத்வைத வியாக்யானம் எழுதுவது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.

திருக்கச்சி நம்பிகளிடம் அதைப்பற்றி தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார். நம்பிகளும் "தொடர்ந்து கைங்கரியம் செய்து கொண்டிரு, இளையாழ்வா! தக்க காலம் வரும் வரை காத்திரு" என்றார். இளையாழ்வானும் "காத்திருக்கிறேன்" என்று கூறினார்.

ஆனால், இளையாழ்வானுக்கு ஆளவந்தார் இறுதி சடங்கில் சபதம் செய்த நினைவு வந்து கொண்டே இருக்கவே, 'தன்னால் இந்த மூன்றையும் நிறைவேற்ற முடியுமா? யாரை குருவாக ஏற்றுக் கொண்டால் இது நிறைவேறும்?' என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

சில தினங்களில் திருக்கச்சி நம்பிகளிடமே தம்முடைய குழப்பத்தைச் சொல்லி, அவர் காஞ்சி பேரருளாளனிடம் கேட்டு தன்னுடைய குழப்பத்திற்குத் தீர்வு சொல்லும்படி  கேட்குமாறு வேண்டினார். நம்பி அதற்கு ஒப்புக்கொண்டார். இளையாழ்வானும் மகிழ்ச்சி அடைந்தார்.

நாளை காஞ்சி பேரருளாளன் தன் திருவாய் மலர்ந்து இளையாழ்வானின் சங்கடத்தைத் தீர்த்து வைத்தாரா  என்பதைப் பற்றி அறியலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

 மாசி மிருகசீரிடம்-
ஶ்ரீதிருக்கச்சி நம்பிகள்
திருஅவதார திருநட்சித்திரம்.

ஸ்வாமிகளின் தனியன்:
"தேவராஜ தயாபாத்ரம் ஶ்ரீ காஞ்சிபூரணம் உத்தம ம்,
ராமானுஜ முநேர் மாந்யம்
வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம்"
"தேவப் பெருமாளுடைய திருவருளுக்குக் கொள்கலமானவரும்,
ஶ்ரீ காஞ்சிபூரணர் என்னும் மிகச் சிறந்தவரும்,ராமானுஜருக்குப் பூஜ்யரும்,சத்வகுணமுடையவர்களுக்கு
ஆச்ரயபூதருமானவரைத் தொழுகிறேன்"
பொதுவாகத் தனியனில் போற்றப்படும் ஸ்வாமிகளின், ஆச்சார்யரைப் பற்றிய குறிப்பு இருக்கும்.ஆனால் நம்பிகளின் தனியனில் அவரது அற்புதச் சீடர் ராமானுஜரைப் பற்றிப் பாடியிருப்பதே
ராமானுஜருக்கும்,இவருக்கும் உள்ள தெய்வீக உறவைக் காட்டுகிறது
(தனியனை இயற்றியதும் இராமானுசப்பிள்ளை என்னும் பெயருடைய ஒருவர்)

திருக்கச்சி நம்பிகள் இளையாழ்வாருக்குப் பல வகையிலும் புருஷகாரம் செய்து அவரை அகிலம் போற்றும் இராமானுஜர் ஆக்கினார்.
அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1.ஐகதாசார்யாருக்கு,முதல் ஆசார்யர்
            
ராமானுஜர் யாதவப்பிரகாசர் குருகுலத்தில் பயிலும் போதே,அவருக்கு இருந்த ஐயங்களுக்கு நம்பிகளிடம் விளக்கம் கேட்பார்.ஒரு கட்டத்தில் யாதவப்பிரகாசரின் போக்கை ஒத்துக்கொள்ளாத ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளையே ஆசார்யராக வரித்து தம்மைச் சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார்
உயர்ந்த அந்தணர் குலத்தில் பிறந்த
ராமானுஜருக்கு,வைசிய குலத்தில் பிறந்த தாம் ஆசார்யராக முடியாது என்று மறுத்து விட்டார்.ஆயினும் தம் முயற்சியை விடாத ராமானுஜர்,அவர் பிரசாதப்பட்ட தளிகையின் சேஷத்தை(மிச்சத்தை)த் தாம் உண்டு அவரிடம் சீடராகிவிடலாம்(ஆசார்ய சேஷப்பிரசாதம் சீடர்களுக்கு மஹாபிரசாதம்) என விழைந்தார்.
நம்பிகளை தம் திருமாளிகைக்கு எழுந்தருளுமாறு வேண்டினார்.
அவ்வாறே அவர் ராமானுஜர் திருமாளிகைக்கு வந்து
பிரசாதப்பட்டார்.ஆனால் ராமானுஜர் அவர் சேஷத்தை உண்பதற்குள் அவர் துணைவியார் தஞ்சமாம்பாள்,நம்பிகள் பிரசாதப்பட்ட மிச்சத்தைத் வெளியே எறிந்துவிட்டு,அவர் அமர்ந்து உண்ட இடத்தையும் கழுவித் துடைத்துவிட்டார்(அந்தக்கால வைதீக க்குடும்பங்களில் இருந்த வழக்கப்படி).ஆனால் எப்படியும் நம்பிகளையே தம் (முதல்)ஆசார்யராக
மனதளவில் வரித்துவிட்டார்.

2.ஞானசீலர் ராமானுஜரை கைங்கர்ய சீலராக்கிய கஜேந்திரதாசர்
(நம்பிகளின் இயற்பெயர்)
           
ஶ்ரீ வைஷ்ணவத்தின் மேலான சிறப்பே
ஞானம்/பக்தி/அனுஷ்டானம் எல்லாவற்றையும் விட கைங்கர்யத்துக்கு(பகவத்/ஆசார்ய/பாகவத) உள்ள ஏற்றம் தான்.சிறந்த
ஞானவானான ராமானுஜரை தேவப்பெருமாளுக்கு தீர்த்தக்கைங்கர்யம் செய்யும் பணியில்
ஈடுபடுத்தினார் நம்பிகள்.
கோவிலிலிருந்து இரண்டு மைல்
தொலைவில் உள்ள சாலைக்கிணற்றிலிருந்து,தினமும்
பெரியகுடத்தில் ராமானுஜர் தீர்த்தம்
கொண்டு வந்தார்.மேலும்
ராமானுஜருக்கு பூமாலை/ந ந்தவனக் கைங்கர்யங்களைச் செய்யத் தூண்டியதும்,நம்பிகள் தேவப்பெருமாளுக்கு செய்த பூமாலைக் கைங்கர்யமே.ராமானுஜர்
திருவாய்மொழி வியாக்யானம் செய்தபோது 'சிந்துபூமகிழும் திருவேங்கடத்து'என்னுமிடத்தில் நிறுத்தியவர் ,அனந்தாழ்வானை,தம் சீடர்களுள் 'ஆண்பிள்ளை' என்று போற்றி ,திருவேங்கடத்துக்கு பூமாலைக் கைங்கர்யம் செய்ய அனுப்பினார் என்பது வரலாறு.ஆனால் இதற்கு ஆதாரமாக இருந்த து,திருக்கச்சி நம்பிகளின் பூமாலைக் கைங்கர்யமே.

3.கலங்கி நின்ற ராமானுஜருக்கு,
வரதராஜரிடம் 'ஆறு வார்த்தைகள்'
பெற்று கலக்கம் போக்கிய 'பார்க்கவ
பிரியர்'(நம்பிகளின் தந்தையார்,
திருமழிசை ஆழ்வார் மீது வைத்திருந்த
பக்தியால் இந்தப் பெயராலும் அழைத்தார்):
              
ராமானுஜருக்கு நம்பிகள் செய்த
ஈடு,இணையற்ற புருஷகாரம் இதுவே.
ராமானுஜருக்கு ஏற்பட்ட ஐயங்களுக்கு,தேவப்பெருமாளிடம் இருந்து ஆறு விடைகளைப் பெற்று
அவரிடம் உரைத்தார் நம்பிகள்:
1.அஹம் ஏவ பர த த்வம்(நானே பரமாத்மா)
2.தர்சனம் பேத ஏவ சா(சித்,அசித்,ஈஸ்வரன் மூன்றுக்கும் இடையே பேதமுள்ளதே நம் மதம்-விசிஷ்டாத்வைதம்)
3.உபாயேதி பிரபத்திஸ்யாத்(என்னை அடைவதற்கு சரணாகதியே உபாயம்)
4.அந்திம ஸ்மிருதி வர்ஜனம்(என்னைச் சரண டைந்தோர்,இறக்கும் தருவாயில் என்னை நினைக்காவிட்டாலும் அவர்களுக்கு மோட்சமுண்டு).
5.தேஹ வாஸநே முக்திஸ்யாத்(இந்தப் பிறவியின் இறுதியிலேயே,உயிர்,
உடலைப் பிரிந்தவுடன் மோட்சம்)
6.பூர்ணாசார்ய ஸமாஸ்ரயே
(மஹாபூரணர் என்னும்
பெரிய நம்பிகளை ஆசார்யராக ஏற்றுக்கொள்)

4.ஆளவந்தாருக்கு 'ஆம் முதல்வனை'
க்காட்டிய காஞ்சீபூரணர்
             
நம்மாழ்வார்,நாதமுனிகளுக்குக் காட்டிய ,நாதமுனிகள் (உய்யக்கொண்டார்,மணக்கால் நம்பி மூலம்) ,ஆளவந்தாருக்குக் காட்டிய பவிஷ்யத ஆசார்யரைக் காணத் தவம் இருந்தார் ஆளவந்தார்.அவர் காஞ்சிக்கு எழுந்தருளிய போது,சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த இளையாழ்வாரைக் காட்டினார் காஞ்சிபூரணர்.இளையாழ்வாரின் பொருந்திய தேசைக் கண்ட ஆளவந்தார்"ஆம்,முதல்வன்"(இவரே சம்பிரதாயத் தலைவர்) என்று கொண்டாடினார்.

5.இளையாழ்வாரை ராமானுஜர்/எதிராசர் ஆக்கிய பேர ருளாள தாசர்(
பேர ருளாளர் வரதர் மேலிருந்த பக்தியினால் ,ஆசார்யர் ஆளவந்தார் சூட்டிய திருநாம ம்)
        
குறிப்பு 1 ல் கூறியது போல்,நம்பிகளின் சேஷத்தை ஏற்க விடாமல் செய்த தம் துணைவியார் மீதும்/இல்லற வாழ்க்கை மீதும் விரக்தியில் இருந்தார் இளையாழ்வார்.விரைவில்
மேலும் இரண்டு நிகழ்வுகளிலும் தஞ்சமாம்பாள்,இளையாழ்வார் எண்ணப்படி நடந்து கொள்ளாத தால்,இளையாழ்வார் சந்யாசம் பூணத்துணிந்தார்.தேவப்பெருமாள்
திருவடிகளில் வணங்கி,கோவில்
அமிர்தசரஸ் புஷ்கரணியில் தீர்த்தமாடி
காவி வஸ்திரம் தரித்து,திரிதண்டம் ஏந்தி உதய ஞாயிறாக ஒளிர்ந்தார்.
அப்பொழுது அங்கு வந்த நம்பிகள்
தேவப்பெருமாள் அருளிய 'எதிராசரே'
'ராமானுஜரே' என்னும் திருநாமங்களிட்டு அழைத்தார்

6.அதியற்புத சீடர்,கூரத்தாழ்வானை ராமானுஜர் திருவடிகளில் சேர்த்த காஞ்சீமுனி(காஞ்சியில் முனிவர் போல் தவ வாழ்வில் இருந்தார்)
      
காஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள கூரம் கிராமத்தில் திருமறுமார்பன் என்னும் சிற்றரசரும்,சிறந்த ஶ்ரீவைஷ்ணவரும் ஆன கூரேசர் திருமாலுக்கும் திருமால் அடியார்களுக்கும் பல கைங்கர்யங்களைச் செய்து வந்தார்.அவருடைய திருமாளிகையில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில்
இருந்து நடு இரவு வரை அடியார்களுக்குத் த தீயாராதனை
(உபசரிப்பு) நடந்து கொண்டே இருக்கும்.ஒரு நாள் ,காஞ்சியில் கோவில் கதவுகளை மூடியபின்,
இரவில் கூரத்தில் கூரேசரின் திருமாளிகைக் கதவுகள் மூடும் ஒலி தேவப் பெருமாளுக்கும்,
பெருந் தேவித் தாயாருக்கும் கேட்டது.தாயார்,பெருமாளிடம் 'இது என்ன?நம் கோவில் கதவுகளின் ஒலியைவிடப் பெரிய ஒலியாக உள்ளதே;இவ்வளவு பெரிய திருமாளிகையுடைய செல்வந்தர் யார்?'என்று கேட்க,பெருமாள் கூரேசரின் பெருமைகளைத் தாயாரிடம் கூறினார்.
ஆலவட்டம்(விசிறி) கைங்கர்யம் செய்து கொண்டிருந்த
திருக்கச்சி நம்பிகள் இதைச் செவியுற்றார்.மறுநாள் கூரேசரிடம்
பெருமாளும்,தாயாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசியதைச் சொன்னார்.இதைக் கேட்ட கூரேசர்
திவ்யதம்பதிகள் பேசும் அளவுக்கு தம் செல்வம் பெரிதா என்று
பதைபதைத்தார்.உடனே
அனைத்தையும் துறந்துவிட்டு,
உடுத்திய ஆடையுடன்,தம் துணைவியார் ஆண்டாளையும் அழைத்துக் கொண்டு ராமானுஜர் திருவடிகளில் வந்து தஞ்சமடைந்து விட்டார்.கூரேசர் முக்குறும்பு அறுத்து,
சிறந்த சீடருக்கு இலக்கணமாகத் திகழ்ந்து கூரத்தாழ்வானாக உயர்ந்த தற்கு,மூலகாரணம் தேவப்பெருமாள் நம்பிகளை விட்டுப் பேச ச்ச்செய்த தாகும்.

படங்கள்:
1.அவதார ஸ்தலமான பூவிருந்தவல்லியில் கோவிலும்,
நம்பிகளும்.
2.&3.காஞ்சீபுரத்தில் நம்பிகள் சந்நிதி.வரதராஜப் பெருமாள் கோவிலில் நம்பிகள்.
4.ஆறு வார்த்தை பெற்றவரும்,
பெற்றுக்கொடுத்தவரும்,
சொன்னவரும்.
5,6,:ஶ்ரீரங்கத்தில் திருக்கச்சி நம்பிகள்

உய்ய ஒரேவழி உடையவர் திருவடி💐🙏


அருந்ததி நட்சத்திரம்


அருந்ததி நட்சத்திரம்...


வசிஷ்டரின் மனைவியான அருந்ததி கற்பில் சிறந்தவள். அவளது கற்புத்திறனை உலகத்திற்கே தெரிய வைக்க வேண்டும் என்ற ஆவலுடன், இந்திரன், சூரியன், அக்னி ஆகியோர் பூலோகம் வந்தனர். 

அருந்ததி தண்ணீர் எடுப்பதற்காக, இடுப்பில் குடத்துடன் நின்று கொண்டிருந்தாள். வசிஷ்டர் அப்போது ஆஸ்ரமத்தில் இல்லை. 

இந்திரன் அவளிடம் ""அருந்ததியே! உன் புகழ் தேவலோகத்தையே எட்டி விட்டது. எனவே உன்னைப் பார்க்க வந்துள்ளோம்,'' என்றான்.
""நான் தண்ணீர் எடுத்து வரும் வரை ஆஸ்ரமத்தில் காத்திருங்கள். வந்து விடுகிறேன்,'' என்று சொல்லி புறப்பட்டாள்.

"ஆற்றுக்கு செல்ல வேண்டாம். தானாகவே தண்ணீர் குடத்தில் நிரம்பட்டும்,'' என்று சொல்லி சூரியன் கையைக் காட்ட, குடத்தில் கால்பங்கு நிரம்பியது. 

இந்திரன் தன் பங்குக்கு கால் பங்கு தண்ணீரை நிரப்ப, அரைகுடம் ஆனது. அக்னியால் முக்கால்பங்கை எட்டியது. அதன் பின் மூவரும் எவ்வளவோ முயற்சித்தும் குடம் முழுமை அடையவில்லை.

அருந்ததி அவர்களிடம்,
"" தேவர்களின் தெய்வீக சக்தியை விட, கற்பின் சக்தி மகத்தானது '' என்று சொல்லி முழுக்குடமும் நிரம்பட்டும் என்றாள். அது நிறைகுடம் ஆனது. கற்புக்கரசியான அவளே நட்சத்திர அந்தஸ்து பெற்று வானில் மின்னிக் கொண்டிருக்கிறாள். திருமண நாளன்று மணமக்கள் அருந்ததியை வணங்குகின்றனர்...

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 16

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 16

 
இளையாழ்வானை திருவரங்கத்திற்கு அழைத்துச் செல்லுதல்

பெரிய நம்பியிடம் இளையாழ்வான் ஆளவந்தார் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.

"இந்தத் தெய்வத் திருமனிதரைக் காணும் நாள் எந்நாளோ?" என்றார் இளையாழ்வான். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவரைக் காண விருப்பம் இருந்தால் உடனே புறப்பட்டு வரும்படியும் கூறினார் பெரிய நம்பி.

இளையாழ்வான் திருக்கச்சி நம்பிகளை வணங்கி அவரிடம் அனுமதி பெற்று பெரிய நம்பிகளுடன் திருவரங்கத்திற்குச் சென்றார்.

திருவரங்கத்து எல்லையை அடைந்தவுடன், கொள்ளிடம் ஆற்றின் அருகே கூட்டம் கூட்டமாக சீடர்கள், மக்கள் திரண்டிருந்தனர். அங்கு பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சந்தித்துப் பேசுவதை அறிந்த இவர்கள் "என்ன என்று விசாரிக்கலாம்" என்று, பெரிய நம்பி விசாரித்தார். அவர்கள் கூறிய செய்தி பேரிடியாக இருந்தது.

ஆளவந்தார் இறைவனடி அடைந்து விட்டார். "விதி நம்மை வஞ்சித்து விட்டது" என்று புலம்பினார் இளையாழ்வான். ஆளவந்தாருக்குச் செய்யும் சம்பிரதாய சடங்குகளைச் சீடர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.

🌺🌹 மடங்கிய மூன்று விரல்கள்

காஞ்சியிலிருந்து வந்த இளையாழ்வானுக்கு  ஆளவந்தாரின் திருமேனி தரிசனம் மட்டுமே  கிடைத்தது. ஆளவந்தாரின் வலக்கையில் மூன்று விரல்கள் முடங்கியிருந்ததை இளையாழ்வான் கண்டார். அப்போது அருகில் உள்ள சீடர்கள்களிடம் விசாரித்தார். ஒருவருக்கும் அதுபற்றிய சரியான காரணம் கூற இயலவில்லை.

"ஆளவந்தாருக்கு ஏதேனும் மனக்குறை உண்டோ?"  என்று கேட்டார் இளையாழ்வான். அப்போது ஒரு சிஷ்யன் கூறினார்:

1. வியாச சூத்திரத்திற்கு வசிஷ்டாத்வைத வியாக்யானம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அது முடியாமல் போய்விட்டது.

2. பராசருடைய திருநாமமும், திருவாய்மொழியை அருளிச் செய்த நம்மாழ்வாருடைய திருநாமமும் விளங்கும்படியாக, அப்பெயர்களை இரண்டு பிள்ளைகளுக்குச் சாத்த வேண்டும்.

3. அவர்களுடைய கல்வி அறிவுக்கான நிர்வாகத்திற்கும் பொறுப்பேற்க விரும்பினார்.

"இம்மூன்றும் நடைபெறாமலே போய்விட்டது" என்றார் அந்த சீடன்.

இதைக்கேட்ட இளையாழ்வான், ஆளவந்தாரை வணங்கினார். அவரது மனதில் ஓர் உறுதி ஏற்பட்டது. அந்த மன உறுதியுடன், "இறைவன் திருவருள் எனக்குக் கிடைக்குமானால் இம்மூன்றையும் நான் நிறைவேற்றுவேன்!" என்றார். உடனே, ஆளவந்தாரின் மடங்கிய மூன்று விரல்களும் நிமிர்ந்தன. இதைக்கண்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தார்கள்.

அருகிலிருந்த அனைவருக்கும் இளையாழ்வான் இதைச் செய்து முடிக்கக் கூடியவர் என்று தான் தோன்றியது. ஆளவந்தாருக்குப் பிறகு வைஷ்ணவ இயக்கத்தைத் தலைமை ஏற்கும் தகுதி உடையவர் இளையாழ்வானே என்று அங்குள்ள பெரியோர்கள் கருதினார்கள்.

ஆளவந்தாரின் சாமக் கிரியைகள் நடைபெற்றது. இளையாழ்வான் மிகுந்த வருத்தம் கொண்டிருந்தார். 'தனக்கு குருவும் சரியாக அமையவில்லை. இனியாவது இவரை குருவாக பற்றிக் கொள்ளலாம் என்று பார்த்தால், இவரின் திருமேனி தரிசனம் மட்டுமே நமக்குக் கிடைத்தது' என்று நொந்து கொண்டார்.

'எனக்குக் குருவாக ஆளவந்தாரைக் கொடுக்காத இந்த திருவரங்கத்துப் பெருமாளை இப்போது தரிசிப்பதில்லை. அவர் நினைத்திருந்தால் குருவிடம் சிஷ்யனாக இருக்கும் பாக்கியத்தைக் கொடுத்திருப்பார் அல்லவா? எனக்குக் குரு தரிசனம் கொடுக்காத, திருவரங்கத்து பெரிய பெருமாளைத் தரிசிக்கப் போவதில்லை' என்று சொல்லிக்கொண்டு, காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டார்.

நாம் சாதாரணமாகவே திருவரங்கத்திற்குச் செல்ல நேரிட்டால், நிச்சயம் அரங்கனைத் தரிசித்துவிட்டு வருவோம். இல்லையெனில் கோபுரத்தைப் பார்த்தாவது தரிசித்துவிட்டு வருவோம்.

ஆனால், வைஷ்ணவர்களுக்கு குரு இல்லையேல் பெருமாளே இல்லை. குருவின் தரிசனம் கிடைத்தால்தான் அரங்கனைத் தரிசிப்பார்கள். குரு அவ்வளவு உயர்ந்தவர்கள். இப்போது, இளையாழ்வானும் குரு தரிசனம் கிடைக்காததால் காஞ்சிபுரத்தில் இருந்து, திருவரங்கத்திற்கு இவ்வளவு தூரம் நடந்து வந்தும், அரங்கநாதனை தரிசிக்கவில்லை என்றால், குருவின் தரிசனம் எவ்வளவு அவசியமானது?!

கே.13:−  இளையாழ்வார் என்னும் இராமானுஜரின் உடன் பிறந்தோர் எத்தனைப் பேர்? அவர்களின் பெயர்கள் என்ன?.

விடை:− இராமானுஜருக்கு இரண்டு இளைய சகோதரிகள் இருந்தார்கள்.
அவர்களது பெயர் பூமிநாச்சியார், கமலாம்பாள் என்பதாகும்.

கே.14:− இராமானுஜரின் சிற்றன்னையாகிய பெரிய பிராட்டியின் முதல் குழந்தைக்குப் பெயர் சூட்டியது யார்? என்ன பெயர் சூட்டினார்?

விடை:− பெரியபிராட்டியின் முதல் குழந்தைக்கு, "கோவிந்தன்" என்ற திருநாமத்தை,  தாய்மாமன் ஆகிய பெரிய திருமலை நம்பிகளே சூட்டியருளினார்.

கே.15:− குழந்தைக்கு அந்தப் பெயரிடக் காரணம் என்ன?

விடை:− சத் ஆத்ம குணங்களை உடைய அக்குழந்தை, சர்வ வித்தைகளிலும் தேர்ந்தவனாய், வைதிக பட்சத்தில் நிலை நிற்பான் என்கிற தீர்க்க த்ருஷ்டியால், இப்பெயர் இடப்பட்டது.

கே.16:− குழந்தை "கோவிந்தன்" யாருடைய அம்சம்? அவர் எப்போது அவதரித்தார்?

விடை:− குழந்தை "கோவிந்தன்" கருடனின் அம்சமாகும்.
அவர் இராமானுஜர் அவதரித்து எட்டு,ஆண்டுகளுக்குப் பின்னர், கலியுகம் 4127,  குரோதன ஆண்டு (1025ம் ஆண்டு), தைத்திங்கள், பௌர்ணமி திதி, திங்கட்கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தார்.

கே.17:− இராமானுஜரின் சிற்றன்னையின் இரண்டாவது குழந்தையின் பெயர் என்ன? அவரது திருநட்சத்திரம் என்ன?

விடை:− இரண்டாவது குழந்தையின் பெயர் சிறிய கோவிந்தன் என்னும் சிறிய கோவிந்தப் பெருமாள் ஆகும்.
அவர் மாசிமாதம் அச்வினி நட்சத்திரத்தில் அவதரித்தார்

கே.18:− இளையாழ்வார் இராமானுஜர் இளமையில் யாரிடம் வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றார்? எந்த வயது வரை?

விடை:− இராமானுஜர், தமது தந்தை கேசவ சோமாயாஜியிடம், தமது பதினைந்தாவது வயது வரையிலும் வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்தார்.

கே.19:− இராமானுஜரின் கைங்கர்யங்களால் ப்ரீதி அடைந்த ஶ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள், இராமானுஜருக்கு இட்ட திருநாமம் என்ன?

விடை:−  "ஶ்ரீபூதபுரீசர்"

கே.20:− இராமானுஜரின் தங்கைகள் யாருக்கு வாழ்க்கைப் பட்டனர்?

விடை:− முதல் தங்கை பூமிநாச்சியார், புருஷமங்கலம் என்று கொண்டாடப்படுகின்ற மதுரமங்கலம் வாதூல கோத்ரம் அனந்த தீட்சிதருக்கும்,
இரண்டாவது தங்கை கமலாம்பாள், திருக்கச்சி நடாதூர் அக்ரஹாரம் ஶ்ரீவத்ஸ கோத்ரம், குருகைக் காவலப்பரின் திருக்குமாரர் மஹாதயாதீசருக்கும் வாழ்க்கைப்பட்டனர்.

கே.21:− இளையாழ்வார் இராமானுஜருக்கு எந்த வயதில் திருமணமானது?

விடை:− இராமானுஜருக்கு, அவரது 16வது வயதில், தஞ்சாம்பாள் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தேறியது.

கே.22:− இராமானுஜரின் திருத்தகப்பனார் எப்போது திருநாடு அலங்கரித்தார்? (பரமபதித்தார்?)

விடை:− இராமானுஜருக்குத் திருமணமான மறுமாதமே, அவரது திருத்தகப்பனார் பரமபதித்தார்.

கே.23:− திருத்தகப்பனாரின் மறைவுக்குப் பிறகு, இராமானுஜரையும், அவரது தாயையும் தேற்றிய இரு நம்பிகள் யார்?

விடை:− பெரிய திருமலை நம்பிகளும், திருக்கச்சி நம்பிகளும் இராமானுஜரையும், அவரது தாயையும் தேற்றினர்.

கே.24:− தந்தை மறைந்த சோகத்திலிருந்து விடுபட, இராமானுஜரும், அவரது தாயாரும் செய்தது என்ன?

விடை:− ஶ்ரீபெரும்புதூரை விட்டு, திருக்கச்சி என்னும் காஞ்சீபுரம் வந்து குடியேறினார்கள்.

கே.25:− இராமானுஜர் யாரிடம் தமது வேதாந்தக் கல்வியைத் தொடர்ந்தார்?

விடை:− "வேத விருட்சம்"  "வேத சாகரம்" என்றெல்லாம் தொண்டை மண்டலத்திலும், அண்டை மண்டலங்களிலும் புகழ் பெற்றவரான, காஞ்சிக்கு மேற்கே சுமார்
9 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருப்புட்குழியின் "யாதவப்ரகாசர்" என்னும் அத்வைத வேதாந்தியிடம், தமது கல்வியை இராமானுஜர் தொடர்ந்தார்.

கே.26:− இராமானுஜர் கூடவே தங்கியிருந்து, உடன்சென்று, யாதவப்ரகாசரிடம், வேதாந்தக் கல்வியைப் பயின்றவர் யார்?.

விடை:− இராமானுஜரின் சிற்றன்னையின் முதல் புதல்வரான கோவிந்தன்.

ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.

இளையாழ்வார் அத்வைத சந்நியாசியான யாதவப்பிரகாசரிடம் பாடம்  கற்றபோது உலகில் பேதம் கிடையாது. பரமாத்மா மட்டுமே உண்மை. மற்றவை பொய் என்று அத்வைத சித்தாந்தத்தை போதித்தார். இந்த அத்வைத விளக்கத்தில் இளையாழ்வார் திருப்தி அடையவில்லை. அந்த விளக்கங்களில் எழும் கேள்விகளுக்குப் பதில்களையே தேவப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலம் தந்தருளினார்.
சித்தாகிய ஜீவாத்மா  ஈச்வரனாகிய பரமாத்மாவில் இருந்து வேறுபட்டது என்பதை புரிய வைக்க இவ்விரண்டாவது வார்த்தையை அருளினார் பேரருளாளன். அதோடு ஜடப்பொருட்களான அசித் மற்றும் சித்தாகிய ஜீவாத்மாவுடன் கூடிய (விசிஷ்ட) பரமாத்மாவே முழுமையான உண்மை. அதாவது  விசிஷ்டாத்வைதமே பூர்ணமான மதம் என்பதை தேவப்பெருமாளே ஸ்தாபித்து கொடுத்தார்.

இதை நம் பூர்வாச்சாரியர்கள் பல வழிகளில் விளக்கியுள்ளார்கள். ஒரு எடுத்துகாட்டை பார்ப்போம். அத்வைதத்தில் கயிறு பாம்பாகத் தோன்றுவதாகச் சொல்லப்படும் ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
 _கயிறு மாத்திரம் தான் உள்ளது. அது பாம்பாகத் தெரிகிறது. இதேபோல ப்ரம்ஹம் மட்டுமே உள்ளது, அது உலகாகத் தோன்றுகிறது என்பது அத்வைத விளக்கம்._

அப்படி பாம்பாக கயிறு தோன்றுவது யாருக்கு? ப்ரம்ஹத்தைத் தவிர இரண்டாவதாக யாராவது இருந்தால் தானே அது சாத்தியமாகும். அப்படி இரண்டாவதாக இருப்பவன் தான் ஜீவன் என்பது விசிஷ்டாத்வைதக் கொள்கை.



இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏