திங்கள், 7 அக்டோபர், 2024

யார் யாருக்குச் சொந்தம்...

யார் யாருக்குச் சொந்தம்...

கோவிலில் மந்திரம் சொல்லும் போது நம: என்ற சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் அர்த்தம் என்ன தெரியுமா? சமஸ்கிருதத்தில் நம: என்றால் என்னுடையது என்று பொருள். அதோடு ந என்பதைச் சேர்த்து நம: என்று சொன்னால் என்னுடையது இல்லை என்று அர்த்தம் உண்டாகும். நம: என்பதே நம: என்றானதாகச் சொல்வர். எல்லாம் கடவுளுக்கே சொந்தமானது என்று அறிவிப்பதற்காகவே அர்ச்சனையின் போது நமஹ என்று உச்சரிக்கின்றனர்.கடவுளுக்கு அர்ச்சிக்கும் தேங்காய்,பழம் மட்டுமில்லாமல் வழிபடும் நாமும் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதைக் குறிக்கவே நமஹ என்கின்றனர்.

சரஸ்வதி பூஜை...

சரஸ்வதி பூஜை...
 

சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று ‌வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம். அ‌வ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபடு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ச‌ந்தன‌ம், தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ம், படை‌க்க‌ப்பட வே‌ண்டிய பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இ‌டவு‌ம். பட‌த்‌தி‌ற்கு பூ‌க்க‌ள் வை‌த்து அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம். அன்னையின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழையிலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும். சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவ‌ற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாகப் படைக்கலாம். வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும். எதற்கும் விநாயகரே முதலானவர். எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும். பூஜையின்போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

விஜயதசமி...

விஜயதசமி...

விஜயதசமி கொண்டாடுவது ஏன்: பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒரு பெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன்பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டாள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள். சூலத்தை வீசிக் கொன்றாள். மகிஷனை வதம் செய்ததால் "மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றித் திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். இந்நாளில் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.

சக்தியின் நான்கு வடிவங்கள்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (பிள்ளைகள் செய்யும் தவறை தந்தைக்கு தெரியாமல் தாய் மறைப்பது போல, உலக உயிர்கள் செய்யும் தவறை சிவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்தல்) அருளல் என்னும் ஐந்து தொழில்களை செயல்படுத்த ஆதாரமாகத் திகழ்பவள் சக்தி. எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பதால் அவளை "ஆதிபராசக்தி என்பர். அவள் சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும்போது "பவானி என்றும், அவளே ஆண் தன்மையை ஏற்கும் போது "மகாவிஷ்ணு என்றும், அசுரர்களை அழித்து உலகத்தைக் காத்தருளும்போது "காளி என்றும், வெற்றிவாகை சூடி புன்முறுவல் காட்டும் போது "துர்கா என்றும் பெயர் பெறுகிறாள். பவானி, மகாவிஷ்ணு, காளி, துர்கா ஆகிய நான்கு வடிவங்களும் சக்தியின் வடிவங்களாகும்.

அம்பாள் வழிபாடு அங்கும் இங்கும்..: முதல்வேதமான ரிக்வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் பராசக்தியைப் பற்றிய குறிப்புகள் "தேவி சூக்தம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன. அம்பிகையை மட்டுமே வழிபடும் முறைக்கு "சாக்தம் என்று பெயர். சாக்தத்தில் வாமாசாரம், தட்சிணாசாரம் என்னும் இருவித வழிபாடு உண்டு. தேவியை வாமாசாரமாக வழிபடுவது கடினமானது. இம்முறை வடமாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. அசாமில் வாமாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். மந்திரதீட்சை பெற்றால் தான் அம்பாளை இங்கு வழிபட முடியும். அம்பாளுக்கு பலியிடுவது இவர்களின் வழக்கம். சாத்வீகமான முறையில் அம்பிகையை வழிபடும் முறை தட்சிணாசாரம் ஆகும். இது தென்னிந்தியப் பகுதியில் பின்பற்றப்படுகிறது. இங்கு பெரும்பாலான அம்மன் கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பதில்லை.

விஜயதசமி மரம்: சாதாரணமாக, கோயில்களில் வில்வம், வேம்பு, அரசமரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். பஞ்சபாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னிமரத்தை 21 முறை வலம் வந்தால் எண்ணியது ஈடேறும் என்பர். இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.

முக்குண தேவியர்: ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெயர்களும் உள்ளன. இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள். மனிதனுக்குரிய குணங்களான சத்வம்(மென்மை), ரஜோ(வன்மை), தமோ(மந்தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர். சத்வம் கொண்டவளாய் லட்சுமியும், ரஜோ கொண்டவளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர். எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது. எனவே தான். மூன்று தேவியரையும் நாம் வழிபடுகிறோம்.

ஒழுக்கத்திருநாள்: சிவபக்தனாக ராவணன், தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம். பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை. சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான். இதனால், பார்வதிதேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது. பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள். விஸ்வாமித்திரர் மூலம் சிறுவயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார். அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார். அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள். ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர். வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.

வெற்றிக்குரிய தசமி திதி: எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை "அட்சர அப்யாசம் என்பர். கூத்தனூர் சரஸ்வதிகோயிலில் அட்சர அப்பியாச வழிபாடு மிகவும் விசேஷம். படிப்பு மட்டுமில்லாமல் சுபவிஷயங்களையும் இன்று தொடங்கினால், எளிதில் வெற்றி பெறலாம்.

படலம் 14 : சித்திரை மாத வஸந்தோத்ஸவ முறை...

படலம் 14 : சித்திரை மாத வஸந்தோத்ஸவ முறை...

பதினான்காம் படலத்தில் சித்திரை மாதத்தில் செய்யக் கூடிய வஸந்தோத்ஸவ விதி கூறப்படுகிறது. முதலில் சித்திரை மாசத்தில் வஸந்தோத்ஸவம் செய்ய வேண்டும். அது இஷ்டத்தை (பலத்தை) கொடுக்க கூடியதாகும் என்று சூசிக்கப்படுகிறது. அதில் முதலில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். சூரியன் அஸ்தமன சமயத்தில் ஸ்வாமியை வலம் வரச்செய்து ஸர்வாலங்கார ஸஹிதமாக கிராம பிரதட்சிண பூர்வம் நந்தவனத்தை அடையவும் என்று நந்தவன அலங்காரவர்ணனை கூறப்படுகிறது. நந்தவனத்திலும் செய்ய வேண்டிய உத்ஸவ விதி நிரூபணம் அங்கே வணங்குவதற்காக வஸந்தனும், மன்மதனும் வந்து இருப்பதாக பாவித்து அவ்விருவர்களுக்கும் பூஜை செய்யவேண்டும் என கூறி அந்த பூஜாவிதி வர்ணிக்கப்படுகிறது. பிறகு நாட்யம் வாத்யம் இவைகளால் திவ்யமான பாட்டுகளாலும் காலத்தை போக்கி தேவாலயத்தை அடைந்து ஸ்நபனம் செய்து விசேஷ பூஜை செய்க என்று வஸந்தோத்ஸவத்தில் பூஜை விவரம் கூறப்படுகிறது. உத்ஸவம் செய்பவனுக்கு எல்லா விருப்ப பூர்த்தியும் உத்ஸவ பலனாக ஆகும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 14 வது படல கருத்து தொகுப்பாகும்.

1. இந்த மாதமான சித்திரை மாதத்தில் இஷ்டமான வஸந்தோத்ஸவம் விதிக்கப்பட்டது. முதல் நாள் காப்புக்கட்டி பலவிதமான மரங்களோடு கூடியதும்

2. பலவிதமான மாலைகளோடு கூடியதும் பல விதமான பழங்களோடு கூடியதும், பலவிதமான வாத்யங்களோடும் பலவிதமான பாட்டுக்களோடும் கூடிய

3. பலவிதமான நடனங்களோடும் கூடிய பலவித வாகனங்களோடும் கூடிய பலவித மணத்தோடும் கூடிய பலபூக்களை வாரி இறைக்கப்பட்டதும்

4. கொடிகளோடு கூடியதும் ஜ்வாலையோடு கூடிய தீபங்களால் பிரகாசிப்பதும் ஆஸ்தான மண்டபத்தோடு கூடியும் ஜலக்ரீடா செய்ய வேண்டிய இடத்துடன் கூடியதுமான

5. ஸகலவிதமான அலங்காரத்தோடு கூடிய தேவர்களின் உத்யானவனத்திற்கு கிராமத்தை வலம் வந்து மாலை வேளையில் ஈசனை சேர்ப்பிக்க வேண்டும்.

6. விசேஷமாக ஈச்வரனை அதில் பிரதட்சிண கிரமமாக செய்து சந்தனம், தூபம், மாலைகள் முதலிய உபசாரங்களால் பூசிக்கவேண்டும்.

7. புஷ்ப பாணத்தையுடைய வஸந்தனை தர்சனம் செய்ய வந்திருப்பதாக பாவித்து ஈச்வரனுடைய இடது வலது பக்கம் அனேகவிதமான வாசனை யோடு கூடியதாக முறையோடு

8. தங்கமயமான வஸ்த்திரங்களை உடையவராக அவ்விருவரையும் பூஜிக்கவேண்டும். இரண்டாவது ஸ்தண்டிலத்தில் எல்லாவிதமான புஷ்பங்களோடு கூடியும்

9. நைவேத்யமான பாயஸத்தை வஸ்த்திரத்தினால் மூடி நிவேதனம் செய்யவும் முடிவில் தாம்பூலத்தை நிவேதித்து விசேஷமாக அவர்களை சந்தோஷிக்க செய்ய வேண்டும்.

10. நாட்டியம் இவைகளோடு தேவகானத்தினால் பூசை முடித்து மறுபடி ஈச்வரனை தேவாலயத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

11. சிவனை ஸ்நபனம் செய்து விசேஷமாக பூசை செய்யவேண்டும். இவ்வாறு விசேஷமாக பூசித்து சிரத்தையுடன் சிவாராதனம் செய்யவேண்டும்.

12. இந்த பிரகாரம் எந்த மனிதன் செய்கின்றானோ அவன் எல்லா நன்மைகளையும் இஷ்டங்களையும் அடைகின்றான்.

இவ்வாறு சித்திரை மாத வஸந்தோத்ஸவ முறையைக் கூறும் பதினான்காவது படலமாகும்.

படலம் 13 : சித்திரைமாத மரிக்கொழுந்து பூஜா விதி...

படலம் 13 : சித்திரைமாத மரிக்கொழுந்து பூஜா விதி...

பதிமூன்றாவது படலத்தில் சித்திரை மாதம் தமனபூஜாவிதி பிரதிபாதிக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக மரிக்கொழுந்து தோட்டத்தின் அவதாரம் பற்றி விளக்குவது, பூர்வமாக அந்த பூஜா பலனை நிரூபிக்கிறார். பிறகு தமனம் சேகரிப்பது பற்றி கூறுகிறார். ஸாயங்காலத்தில் அதிவாஸ விதியானது விதிக்கப்படுகிறது. காலையில் அனுஷ்டிக்க வேண்டிய விதியும் நிரூபிக்கப்படுகிறது. பவித்ராரோபண விதிப்படி சிவனை பூஜிக்கவும் என்று அனுஷ்டான கிரமம் சூசிக்கப்படுகிறது. முடிவில் ஹே பகவானே அதிகமானதாகவோ குறைவானதாகவோ என்னால் எந்த தமனார்ப்பண கர்மா செய்யப்பட்டதோ அது ஸம்பூர்ணமாகுக என்று பிரார்த்திக்கவும் என கூறுகிறார். தமநபூஜாவிதிக்கு பிறகு சந்தோஷிக்க படுவதான குருபூஜை, தீட்சிதர்களின் திருப்தியையும் செய்ய வேண்டும். கிருஹஸ்தரோ, பிரம்ம சாரியோ யார் இந்த விதியை ஆசரிக்கிறாரோ அவன் சித்திரை மாத ஜபாதி பலசித்தியையும் அடைவான் என நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறாக 13வது படல கருத்து தொகுப்பாகும்.

1. சித்திரை மாதத்தின் நல்ல பலனையளிக்கக் கூடிய தமனாரோபணம் என்னும் மரிக்கொழுந்து சாற்றும் முறையைக் கூறுகிறேன். முன்பு ஒரு சமயம் சிவனின் கோபத்திலிருந்து தமனன் என்ற பைரவர் தோன்றினார்.

2. அவனால் எல்லா தேவர்களும் அரக்கர்களும் பலசாலிகளும் தன்னடக்கம் உடையவர்களாக ஆனார்கள். திருப்தியடைந்த சிவனால் ஸம்ஸாரமாகிய பூமியில் செடியாக ஆவாய் என்று கூறப்பட்டது.

3. தாந்தநுத்வம் என்கிற மரிக்கொழுந்து வடிவத்தையடைந்து என்னுடைய உபயோகத்திற்காக ஆகப்போகிறாய். எந்த தேவர்கள் உன்கொழுந்துகளால் பூஜிக்கப்போகிறார்களோ

4. அவர்கள் மரிக்கொழுந்து மஹிமையால் உயர்ந்த நிலையை அடையப்போகிறார்கள். எந்த மனிதர்கள் மறுபடியும் குறிப்பிட்ட அளவில் மரிக்கொழுந்து சாற்றும் முறையை செய்யப்போகிறார்களோ

5. அவர்களுக்கு சித்திரை மாதத்தின் பூஜா நற்பயன் என்னால் கொடுக்கப்பட்டதாகும். சப்தமீ திதியிலோ திரயோதசீ திதியிலோ மரிக்கொழுந்து சமீபம் சென்று

6. அஸ்திர மந்திரத்தினால் சுத்தம் செய்து, ஸம்ஹிதா மந்திரத்தால் பூஜித்து சிவவாக்யத்தினால் ஹே தாம! என்பதாக விளிவேற்றுமையோடு கூறி

7. நீ பரமேஸ்வரனின் திருவருளால் இங்கு தயாராயிருப்பாய், சிவனின் உத்தரவால், பரமேச்வரனின் பூஜைக்காக கொண்டுவரப்பட்டிருக்கிறாய்.

8. என்று மரிக்கொழுந்தை அபி மந்திரித்து, ஸம்ரக்ஷணம் செய்து ஆலயத்தை அடைய வேண்டும். மரிக்கொழுந்து இருக்குமிடம் வெகுதொலைவில் இருப்பின் வேர் மண்ணுடன் கூடியதாக எடுத்து வந்து

9. மண் நிரப்பிய பாத்ரத்தில் வைத்து நீர் விட்டுக் கொண்டுவர வேண்டும். பிறகு முன்பு கூறிய முறைப்படி வீட்டிலேயே மந்திரங்களை கூறி அபிமந்திரிக்க வேண்டும்

10. மாலை வேளையில் அதிவாஸம் என்னும் முறையை செய்ய வேண்டும். ஸ்நானம் முதலான கடமைகளை முடித்துக்கொண்டு யாகத்திற்கு உபயோகமாக பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு

11. முறைப்படி சூர்யன், சிவன், அக்னி இவர்களை நன்கு பூஜித்து பரமேஸ்வரனுடைய மேற்கில் வேருடனும், மண்ணுடனும் சேர்ந்த தானமருக் கொழுந்தை

12. ஸத்யோஜாதம் அல்லது ஹ்ருதய மந்திரத்தினால் பூஜித்து வடக்கில் வாமதேவம் அல்லது சிரோமந்திரத்தினால் காம்புடன் கூடிய நெல்லிக்கனியை பூஜித்து

13. தெற்கு பக்கத்தில் அகோரம் அல்லது சிகை மந்திரத்தினால் விபூதிக் கிண்ணத்தையும் தத்புருஷம் அல்லது கவச மந்திரத்தினால் கிழக்கில் புஷ்பத்துடன் கூடியதாக பற்குச்சியை வைத்து பூஜித்து

14. வடகிழக்கு பாகத்தில் மூல மந்திரம், காயத்ரி மந்திரத்தினால் பழத்தை சந்தனத்துடன் சேர்ந்ததாக ஸ்தாபித்து ஐந்து பிரிவுகளை உடைய மருக்கொழுந்தை புஷ்பம் அக்ஷதையிவைகளுடன் சேர்ந்ததாக வணங்கி

15. மரிக்கொழுந்து சாற்றுதலுக்காக பரமேஸ்வரனிடன் தெரிவித்து ஹே! பரமேஸ்வரா என்னால் காலையில் நீவிர் அழைக்கப்பட்டுள்ளீர்!

16. உன்னுடைய உத்தரவினால் மரிக்கொழுந்து திருநாள், மிகுந்த பயனை முழுமையுள்ளதாக செய்யவேண்டும் என்று ஈசனின் தலையில் புஷ்பாஞ்சலியை செய்து வணங்கி

17. சிவமந்திரத்தினால் சேர்த்து ஜபம் முதலியவைகளை செய்ய வேண்டும், மீதமுள்ள மருக்கொழுந்து திரவ்யங்களை பாத்ரத்தில் வைத்து அதை தத்புருஷ மந்திரத்தினால் மூடி

18. பவித்ரோத்ஸவ முறைப்படி கவச மந்திரத்தினால் அவகுண்டநம் செய்ய வேண்டும். இவ்வாறு பாதுகாக்கப்பட்டதாக செய்து பரமேச்வரனிடம் தெரிவிக்க வேண்டும்.

19. பிறகு உணவின்றியோ அல்லது ஹவிஸ்ஸைமட்டுமோ, உண்ண வேண்டும். சிவாலயத்தின் முன்பு தியானம், பாட்டு, ஜபம் முதலியவைகளால் விழித்திருந்து

20. காலை ஸ்நானம், காலை கடமைகளை முடித்து அஷ்ட புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும். விசேஷமாக நித்ய, நைமித்திக பூஜையையும் செய்து

21. மீதமானதும், ஐந்து பிரிவுகளையுடையதுமான மருக்கொழுந்துகளால் தேவனை பூஜிக்கவும், அதிலும் மீதமானதை அருகம்புல், புஷ்பம் அக்ஷதை இவைகளுடன் சேர்ந்ததாக அஞ்சலி ஹஸ்தத்தால் எடுத்து

22. ஐந்து முகமுள்ள ஸதாசிவனை எதிர்நோக்கியுள்ளவராக தியானித்து, ஆத்மதத்வ, வித்யாதத்வ, சிவதத்வங்களாலும் அதன் அதிபதிகளான ஈச்வரர்களாலும்

23. பவித்ரம் சேர்ப்பிக்கும் முறைப்படி பரமேச்வரனை பூஜிக்கவும். முன்கூறிய ஆத்ம தத்வங்களுடன், இரண்டு, நான்கு, ஆறு என்ற தான உயிரெழுத்துக்களோடும் (ஆ,ஈ,ஊ,ஒள) ஓம் ஹளம் ஆத்ம தத்வாயநம: ஓம்ஹளம் ஆத்மதத்வாதிபதயே சிவாயநம: என்று

24. ஷ என்ற எழுத்து வரிசையின் முடிவான ஹவும், ம் என்ற எழுத்தும் சேர்ந்ததாக பவித்ர மந்திரத்தினால் அஞ்சலி கொடுக்கவும் நான்காவது அஞ்சலி மந்திரமாவது ஓம் என்றும், சிவ மந்திரத்துடனும்

25. விருப்பத்தைக் கொடுக்கக்கூடிய யாகம் யாகேஸ்வரனின் பொருட்டு பூர்த்தி செய்து சூலபாணி என்ற பதத்தை நான்காம் வேற்றுமை நம: என்ற பதத்துடன் கூடியதாக கூறவும் சூலபாணயே நம: எறு அர்ச்சிக்க வேண்டும்.

26. சிவனை பூஜித்து நமஸ்கரித்து முறைப்படி ஹோமம் செய்து பிறகு விருப்பப்பயனை தெரிவிக்க வேண்டும்.

27. ஹே பகவானே, என்னால் செய்யப்பட்ட இந்த பூஜை குறைவுபட்டோ, கூடுதலாகவோ இருப்பின், என்னுடைய பர்வ அளவு மருக்கொழுந்து சாற்றும் திருவிழா எல்லாவற்றிலும் நிறைவுள்ளதாக ஆகட்டும்.

28. என்று இவ்வாறு மருக்கொழுந்து பூஜையை செய்து ஆசானை பூஜித்து, திருப்தி செய்வித்து, ஆசார்யர்களையும் சிவதீøக்ஷ பெற்றவர்களையும் திருப்தியடைய செய்ய வேண்டும்.

29. மனைவி மக்களுடையவனாக இருந்தாலும் பிரம்மசாரியாக இருந்தாலும் இந்த பூஜையை முறைப்படி செய்கிறானோ அவன் சித்திரை மாதத்திற்கு உண்டான ஜபம் முதலியவைகளின் நற்பயனை அடைகிறான்.

இவ்வாறு சித்திரை மாத மரிக்கொழுந்து சாற்றும் முறையாகிற பதிமூன்றாவது படலமாகும்.

கொலுமேடைக்கு பூஜை செய்வது எப்படி?

கொலுமேடைக்கு பூஜை செய்வது எப்படி?

நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.

எந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்?

எந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்?

கொலு வைக்கும் போது 5,7,9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர். ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும். கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

முதல் படியில் செடி, கொடி, காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும்
என்பதைக் குறிக்கிறது.

இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம். எதையும் நிதானமாகச் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.

மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள், கரையான் புற்று, சிலந்தி வலை, களிமண்ணில் செய்த எறும்பு, வண்ணத்துப்பூச்சி (காதிகிராப்ட் கடைகளில் மரத்தால் செய்தது கிடைக்கிறது) பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பு போல் சுறுசுறுப்பு, கரையான் புற்றையும், சிலந்தி வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.

நான்காம் படியில் நண்டு,வண்டு, தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும். ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.

ஐந்தாம் படியில் மிருகங்கள், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு, பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.

ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும். முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.

ஏழாம் படியில் மகான்கள், முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ராகவேந்திரர் பொம்மை கடைகளில் கிடைக்கிறது . வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்து பொம்மை செய்யலாம். கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.

எட்டாம் படியில் நாயன்மார்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள்,பெரியாழ்வார்), சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகானாக உயர்ந்தவர் தவம், யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.

ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து, நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும். தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?

நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?

நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா? பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு என்றும் பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் இந்தப் பண்டிகை.. முழுக்க முழுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை. மாலை வேளையானதும் முருகன், கிருஷ்ணன், ராமன், கணபதி, ராதை, அம்மன் போன்ற வேஷங்களுடன் குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள். அந்தத் தெய்வங்களே இவர்களின் உருவில் தங்கள் வீட்டுக்கு வருவதாக எண்ணி மகிழ்வார்கள்.

நவராத்திரி பாடல்...

நவராத்திரி பாடல் (மூன்று தேவியருக்கும் தனித்தனியாக)

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி
கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்
தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்
மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே
சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
இடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.

நவராத்திரி பாடல்

அம்பாள்

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி
காசி விசாலாட்சி கருணாம்பிகையே!
தருணம் இதுவே தயை புரிவாயம்மா!
பொன் பொருள் எல்லாம்
வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!
ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்
என் அன்னை நீயே அம்மா!
மங்களம் வழங்கிடும் மகாசக்தியே!
மங்கலத் தாயே நீ வருவாயே!
என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே!
எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே!
பயிர்களில் உள்ள பசுமையில்
கண்டேன் பரமேஸ்வரி உனையே!
சரண் உனை அடைந்தேன்
சங்கரி தாயே, சக்தி தேவி நீயே!
அரண் எனக் காப்பாய்
அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!

லட்சுமி

செல்வத் திருமகளே! மோகனவல்லியே!
எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!
எண் கரங்களில் சங்கு சக்கரம்
வில்லும் அம்பும் தாமரை
மின்னும் கரங்களில் நிறைகுடம்
தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே!
வரத முத்திரை காட்டியே
பொருள் வழங்கும் அன்னையே!
சிரத்தினில் மணி மகுடம்
தாங்கிடும் சிந்தாமணியே!
பல வரம் வழங்கிடும் ரமாமணியே!
வரதராஜ சிகாமணியே!
தாயே! தனலட்சுமியே!
சகல வளமும் தந்திடுவாய்

சரஸ்வதி

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்.

மூன்று தேவியருக்கான நவராத்திரி ஸ்லோகம்...

மூன்று தேவியருக்கான நவராத்திரி ஸ்லோகம்...

கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!

பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.

மூன்று தேவியருக்கான நவராத்திரி நாமாவளி...

மூன்று தேவியருக்கான நவராத்திரி நாமாவளி...

நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேர மில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.

துர்க்கா தேவி

ஓம் துர்க்காயை நம:
ஓம் மகா காள்யை நம:
ஓம் மங்களாயை நம:
ஓம் அம்பிகாயை நம:
ஓம் ஈஸ்வர்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் க்ஷமாயை நம:
ஓம் கௌமார்யை நம:
ஓம் உமாயை நம:
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் தயாயை நம:
ஓம் ஸ்கந்த மாத்ரே நம:
ஓம் ஜகன் மாத்ரே நம:
ஓம் மகிஷ மர்தின்யை நம:
ஓம் சிம்ஹ வாஹின்யை நம:
ஓம் மாகேஸ்வர்யை நம:
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம:

லெட்சுமி ஸ்ரீதேவி

ஓம் மகாலக்ஷ்மியை நம:
ஓம் வரலெக்ஷ்மியை நம:
ஓம் இந்த்ராயை நம:
ஓம் சந்த்ரவதனாயை நம:
ஓம் சுந்தர்யை நம:
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் பத்மாயை நம:
ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம:
ஓம் சர்வ மங்களாயை நம:
ஓம் பீதாம்பரதாரிண்யை நம:
ஓம் அம்ருதாயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹேமமாலின்யை நம:
ஓம் சுபப்ரதாயை நம:
ஓம் நாராயணப் பிரியாயை நம:

சரஸ்வதி தேவி

ஓம் சரஸ்வத்யை நம:
ஓம் சாவித்ர்யை நம:
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம:
ஓம் ஸ்வேதா நநாயை நம:
ஓம் ஸுரவந்திதாயை நம:
ஓம் வரப்ரதாயை நம:
ஓம் வாக்தேவ்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஹம்ஸ வாகனாயை நம:
ஓம் மகா பலாயை நம:
ஓம் புஸ்தகப்ருதே நம:
ஓம் பாஷா ரூபிண்யை நம:
ஓம் அக்ஷர ரூபிண்யை நம:
ஓம் கலாதராயை நம:
ஓம் சித்ரகந்தாயை நம:
ஓம் பாரத்யை நம:
ஓம் ஞானமுத்ராயை நம:

நவராத்திரி ஐந்தாம் நாள் வழி பாடு...

நவராத்திரி ஐந்தாம் நாள் வழி பாடு...

அம்பிகையை வைஷ்ணவியாக அலங்கரிக்க வேண்டும். இவளை வழி பட்டால் செல்வ வளம் பெருகும். நாளை மதுரை மீனாட்சியம்மன் பிட்டுக்கு மண்சுமந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அரிமர்த்தன பாண்டியன் ஆட்சி செய்த போது, பெருமழை பெய்து வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கரையை அடைக்க வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்புமாறு மன்னர் உத்தரவிட்டார். சிவ பக்தையான வந்தி என்பவள், பிட்டு விற்று பிழைத்து வந்தாள். அவளுக்கு கணவரோ, பிள்ளையோ இல்லை. தன் பங்குக்கு யாரை அனுப்புவது என்று தவித்தாள். சிவனே கூலியாளாக தோன்றி, வந்திக்கு உதவ முன் வந்தார். கூலியாக பிட்டை வாங்கி சாப்பிட்டு விட்டு, கரையை அடைக்காமல் உறங்கத் தொடங்கினார். இதை அறிந்த மன்னன் பிரம்பால் சிவனை அடிக்க, அந்த அடி அனைவரின் உடம்பிலும் விழுந்தது. சிவன் ஒரு கூடை மண்ணைக் கரையில் போட்டதும், வெள்ளம் கட்டுப்பட்டது. இக்கோலத்தை தரிசித்தால் மனக்கவலை விரைவில் நீங்கும்.

நைவேத்யம்: கல்கண்டு சாதம்
தூவ வேண்டிய மலர்: பிச்சிப்பூ

பாட வேண்டிய பாடல்
புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம்மடியார்கள் நடுவிருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.

நவராத்திரி நான்காம் நாள் வழி பாடு...

நவராத்திரி நான்காம் நாள் வழி பாடு...

அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் உண்டாகும். தொழிலில் லாபம் பெருகும். மதுரை மீனாட்சியம்மன் நாரைக்கு முக்தி கொடுத்த அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். சத்தியன் என்னும் தவமுனிவர் ஒருவர் இருந்தார். அவர் தினமும் அச்சோதீர்த்தம் என்னும் குளத்தில் நீராடி, சிவனை தியானத்து வந்தார். அங்கொரு நாரை ஒன்று வசித்து வந்தது. சத்திய முனிவரும், மற்ற தவசீலர்களும் மதுரையின் பெருமையை பேசிக் கொண்டிருந்தனர். அதைக்கேட்ட நாரைக்கும் சிவபக்தி உண்டானது. மதுரை கோயிலுக்கு வந்து பொற்றாமரைக்குளத்தில் நீராடி சிவனை வழிபட்டது. பதினாறாம் நாள் நாரைக்கு காட்சியளித்த சிவன், நாரைக்கு முக்தியளித்தார். இக்கோலத்தை தரிசித்தால் சிவனருளால் பிறவாத நிலை உண்டாகும்.

நைவேத்யம்: புளியோதரை
தூவும் மலர்கள்: செந்தாமரை, ரோஜா

பாட வேண்டிய பாடல்:
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின்
நின்குறையே அன்றி யார் குறை காண் இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎம் சடைமேல் வைத்த தாமரையே.

நவராத்திரி மூன்றாம்நாள் வழி பாடு...

நவராத்திரி மூன்றாம்நாள் வழி பாடு...

அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றி முகம் கொண்ட இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். குலோத்துங்க பாண்டியன் ஆட்சிக் காலத்தில், முதியவர் ஒருவர் வாள் வித்தை கற்பித்து வந்தார். அவரிடம் படித்த சித்தன் என்ற மாணவன், தானும் வித்தை கற்பிக்கும் ஆசிரியரானான். ஒழுக்கமற்ற அவன் ஒருநாள், குருபத்தினியின், கையைப் பிடித்து இழுத்தான். அவளோ, சித்தனை வெளியே தள்ளி கதவைத் தாழிட்டுக் கொண்டாள். சிவனிடம் முறையிட்டு அழுதாள். சிவன் அவளைக் காக்க, குருவின் வடிவில் புறப்பட்டார். சித்தனுடன் வாள்போர் புரிந்து அவனுடைய அங்கங்களை வெட்டி வீழ்த்தினார். இதை அறிந்த மாணிக்கமாலை, ""தன் கணவர் அவ்வாறு செய்ய வாய்ப்பில்லை. அவர் கோயிலுக்குச் சென்றிருக்கிறார், என மறுத்தாள். வழிபாடு முடித்து வந்த குரு, இந்த அற்புதத்தை நிகழ்த்தியது சிவனே என உணர்ந்தார். மன்னன் அத்தம்பதியை யானை மீது அமர்த்தி நகரை வலம் வரச் செய்தான். மதுரை மீனாட்சி பாணனுக்கு அங்கம் வெட்டிய கோலத்தில் காட்சியளிக்கிறாள். இதை தரிசித்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி

பாட வேண்டிய பாடல்:
நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையைப்
பயன் ஒன்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

நவராத்திரி இரண்டாம்நாள் வழி பாடு...

நவராத்திரி இரண்டாம்நாள் வழி பாடு...

அம்பிகையை மயில்வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை கவுமாரி என்றும், குமார கணநாதாம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பவள் இவள். மதுரை மீனாட்சியம்மன் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலையில் காட்சி தருகிறாள். மதுரையை ஆட்சி செய்த சுகுணபாண்டியன், மறுபிறவியில் கருங்குருவியாகப் பிறந்தான். மற்ற பறவைகள் துன்புறுத்தியதால் காட்டிற்கு பறந்த அக்குருவி, ஒரு மரத்தில் தங்கியது. அங்கு வந்த சிவபக்தர் ஒருவர், சிவநாமத்தை ஜெபிக்க கேட்ட குருவி ஞானம் அடைந்தது. குருவியும் மதுரை கோயிலுக்கு வந்து, குளத்தில் நீராடி ஈசனை வழிபட்டது. சிவனும் குருவிக்கு மந்திர உபதேசம் செய்தருளி, குருவியினத்தில் வலிமை மிக்க வலியன் குருவியாக இருக்க வரமளித்தார். இக்கோலத்தை தரிசித்தால் மன வலிமை உண்டாகும்.

நைவேத்யம்: தயிர் சாதம்
தூவ வேண்டிய மலர்: முல்லை

பாட வேண்டிய பாடல்:
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவருக்கும் மேலை இறைவியுமாம்
துவளேன் இனியொரு தெய்வ முண்டாக மெய்த் தொண்டு செய்தே.

நவராத்திரி முதல்நாள் வழிபாடு...

நவராத்திரி முதல்நாள் வழிபாடு...

நவராத்திரியின் முதல் நாளில் அம்பாளுக்கு மகேஸ்வரி பாலா என்று பெயர் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமான இவளை, இந்நாளில் சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்ட சராசரத்துக்கும் அம்பிகையே தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும்.அண்டம் என்றால் உலகம்.சரம்என்றால் அசைகின்ற பொருட்கள்.அசரம்என்றால் அசையாத பொருட்கள். ஆம்.... அன்னை ராஜராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது. இக்கோலத்தை தரிசித்தால் ராஜபோக வாழ்வு கிடைக்கும்.

நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
தூவும் மலர்கள்: மல்லிகை, வில்வம்

பாட வேண்டிய பாடல்:
மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றது
அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடுவெங்கு மாய்முடி வாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே.

ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாட வேண்டும்!

ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாட வேண்டும்!

ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரிஎன்றும் பெயர்.இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும். கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது. புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.

அம்மன் விரும்பும் நவராத்திரி!

நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது. நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம்  சக்தியாலும், வறுமைசெல்வத்தினாலும், அறியாமைஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது ஐதீகம். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.

நம் வாழ்வின் இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளை சொல்லித் தருகிறது நவராத்திரி. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானித்து, பூஜித்து வழிபட வேண்டும்.

நவராத்ரி வ்ரதப் பூமௌ குருதேயோ நரோத்தம
தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ.

நவராத்திரியில் எவ்வாறு அலங்காரம் செய்ய வேண்டும்?

நவராத்திரியில் எவ்வாறு அலங்காரம் செய்ய வேண்டும்?

நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள். நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். மூன்றாவது நாளுக்கு உரியவாராகி, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். நான்காம் நாளில் அருள்பவள், மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். ஆறாவது நாளுக்குரிய தேவிவடிவம். இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம்.பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்கரிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இந்த வடிவங்களில் தேவியைத் தரிசித்து வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ்வர் என்பது ஐதிகம்.

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்...

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்...

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

படலம் 12: பங்குனிமாத சந்தன பூஜை...

படலம் 12: பங்குனிமாத சந்தன பூஜை

பன்னிரெண்டாவது படலத்தில்: பங்குனி மாதத்தில் செய்ய வேண்டிய கந்த பூஜா விதி கூறப்படுகிறது. முதலில் பங்குனி மாதத்தில் உத்தர நட்சத்திரதினத்தில் கந்த பூஜை செய்ய வேண்டுமென கால நிரூபணமாகும். விசேஷ ஸ்நபன விசேஷ பூஜையுடன் கந்த பூஜா விதி அனுஷ்டிக்கவும் எனகூறப்படுகிறது. பிறகு சந்தனத்தில் சேர்க்க வேண்டிய அகில குங்குமம் முதலியவைகளின் கந்தத்ரவ்யங்களின் பிரமாண வசனம். கிருதகம்பள விதிக்கு கூறிய மார்க்கப்படி ஹோமம் செய்க. லிங்கத்திலும் பீடத்திலும் மற்ற எல்லா இடத்திலும் பூசுவதை செய்க. கம்பள வேஷ்டனமின்றி மற்ற எல்லா கர்மாவும் கிருதகம்பள விதி மார்க்கமாக செய்ய வேண்டுமென சூசிக்கப்படுகிறது. எல்லா ரோக சம்பவம், உத்பாத சூசகாத்புதம் காணப்பட்ட சமயம் அபிசாரகிருத தோஷ ஸமயங்களிலும் முன்பு கூறிய தோஷ நிவிருத்திக்காகவும் விருப்பப் பயனையடைவதற்கும் கந்தபூஜா செய்யவும் என்று கந்தபூஜா பலம் நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறாக 12ம் படல கருத்து தொகுப்பாகும்.

1. பங்குனி மாதத்திலே உத்திர நட்சத்திரத்திலே உத்தமமான சந்தனத்தினால் பூஜிக்கவேண்டும். விசேஷ ஸ்நபனத்தோடு கூட விசேஷ ஹோமத்துடன் கூடியதாக இருக்கவேண்டும்.

2. எட்டு பலம் முதல் ஒவ்வொரு பலமாக கூட்டி ஆயிரம் பலம் எடை முடிய சந்தனத்தின் அளவு கூறப்பட்டது அதில் பாதி அகில் சேர்க்க வேண்டும்.

3. அதில் கால்பாகமோ, அதில் பாதியோ குங்கும பூவும் அதில் பாதி கால் பாகத்தில் எட்டில் ஓர் பங்கும் அதில் பாதியோ, கால்பாகமோ மேற்கூறிய திரவ்யம் சேகரித்து

4. பச்சைகற்பூரம் இரண்டு பங்கு பொடி செய்து எல்லா இடத்திலும் தூபம் காண்பிக்கவேண்டும். எல்லா மந்திரங்களாலும் அபிமந்திரணம் செய்யப்பட்டதை அர்பணம் செய்யவேண்டும்.

5. நெய்கம்பள பூஜையில் கூறியபடி ஹோமம் செய்து சந்தனத்தை ஸம்ஸ்கரித்து பீடத்தோடுகூடிய லிங்கத்தை சந்தனத்தினால் சிவமந்தரத்தினால் பூசவேண்டும்.

6. நல்ல வாசனையுள்ள புஷ்ப மாலைகளினால் பீடம் லிங்கம் முதலியவைகளை அலங்கரிக்கவேண்டும். கம்பளி இல்லாமல் (சந்தனத்தினால்) நெய் கம்பளத்தைபோல எல்லாம் நடத்தவேண்டும்.

7. எல்லாவிதமான வியாதி உண்டான காலத்திலும், அத்புதமான காலத்திலும் இஷ்டத்தை அடையும் பொருட்டு ஆபிசாரம் செய்ததினால் ஏற்பட்ட குறை நீங்கவும் இந்த முறையில் செய்யவேண்டும்.

இவ்வாறு பங்குனி மாதம் சந்தனம் சாற்றும் முறையைக் கூறும் பன்னிரண்டாவது படலம்.

படலம் 11: மாசி மாத சிவபூஜா விதி!

படலம் 11: மாசி மாத சிவபூஜா விதி!

பதினொன்றாவது படலத்தில் மாசிமாதத்தில் விதிக்கப்பட்டுள்ள சிவராத்ரி பூஜாவிதி கூறப்பட்டுள்ளது. முதலாவதாக சிவராத்ரி வ்ரதாசரண பலநிரூபணம் மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்தசீ ராத்ரி சிவராத்ரி அந்த தினத்திலே சிவாலயத்தில் சிவலிங்க விஷயமான சிவராத்ரி பூஜா செய்ய வேண்டும் என காலம் நிர்தேசிக்கப்படுகிறது. பிறகு முற்பகலில் ஸ்நான உபவாஸத்துடன் கூடிய சாதகனால் சிரத்தையாக பூஜை செய்ய வேண்டுமென அதிகார நிரூபணம். ராத்ரியில் நான்கு யாமத்திலும் பூஜாவிதி கூறப்படுகிறது. முதல் யாமம், பாயஸாந்நம், இரண்டாம் யாமம் கிருஸரான்னம் மூன்றாம் யாமம் குலான்னம், நான்காம் யாமம், சுத்தான்னம் நிவேதிக்க வேண்டுமென நிவேதனபிரகாரம் சூசிக்கப் படுகிறது. பின்பு பூஜை முடிவில் செய்ய வேண்டிய ஹோமவிதி பிரதிபாதிக்கப்படுகிறது. தான் விரதம் அனுஷ்டிக்க அசக்தனாக இருப்பின் அந்நியனால் தனக்காக வ்ரதாசரணம் செய்ய வேண்டுமென சூசிக்கப்படுகிறது. பிறகு ராத்ரியில் விழித்து ஆசார்ய பூஜை செய்க. வித்த சாட்யமின்றி தட்சிணா தானம் செய்ய வேண்டும். அவ்வாறே லிங்கம் சிவபக்தர்கள், பிராமணர்கள், அதிதிகளிவர்களுக்கு யதாசக்தி பூஜை செய்க. பிறகு சாதக பூஜை நன்கு முறைப்படி முடித்து ஸ்வகிருஹம் சென்று பந்து ஜனங்களுடன் கூட முறைப்படி பாரணம் செய்க என்று சிவராத்திரி பூஜாவிதியில் கிரியாகல்பம் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக பதினாறாவது படல கருத்து தொகுப்பாகும்.

1. பிறகு, பிராமணர்களே, சிவராத்ரி விரதத்தை பற்றி கூறுகின்றேன். விசேஷமாக விரதங்களில் உத்த மோத்தமமானதை நீங்கள் சிரத்தையுடன் கேளுங்கள்.

2. முன்னால் தேவியாலும், பிறராலும், எது அனுஷ்டிக்கப்பட்டதோ (அந்த சிவராத்ரி விரதானுஷ்டத்தால்) என்னோடு கூட தேவி ஸந்தோஷமாயிருந்தால் மற்றவர்கள் விரும்பிய நன்மைகளை அடைந்தார்கள்.

3. விரதம் அனுஷ்டித்தவர்கள் யமன் கட்டளையினால் பாதிக்கப்படுவதில்லை. கிங்கரர்களாலும் பயப்படும்படியான பார்வை உடையவர்களாலும் பார்க்கப்படுவதில்லை. நரகங்களையும் அடைவதில்லை.

4. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதன் முறையை கேளுங்கள் மாசி மாதத்தில் தேய்பிறையில் எந்த தினத்தில் சதுர்த்தசி இருக்கின்றதோ

5. அந்தராத்ரி சிவராத்ரியாகும். எல்லா நல்வினைகளும் சேர்ந்து சுபத்தை கொடுக்கக் கூடியதாகும். அந்த ராத்ரியில் சிவாலயத்தில் சிவலிங்கத்தில் சிவபூஜை செய்யவேண்டும்.

6. ஸ்நானம் செய்து முற்பகலில் நியமமாக உண்ணாமல் விரதமாக இருந்து மிக வேண்டும் சிரத்தையோடு கூட ஸாதகன் உபசாரத்தினால்

7. பிறகு முன்கூறிய முறைப்படி பஞ்ச சுத்தியை முறைப்படி செய்து சிவாஸனம், சிவமூர்த்தி வித்யா தேகம் கல்பித்து பிறகு

8. சிவனை ஆவாஹனம் செய்து ஸன்னிதானம் செய்து பாத்யம் முதலியவைகள் கொடுத்து அர்ச்சிக்க வேண்டும். சந்தனாதி தைலம்பூசி அரிசி மாவினால் தேய்த்து சுத்தி செய்யவேண்டும்.

9. பஞ்சாமிருதத்தினால் பஞ்சகவ்யங்களினால் அந்தந்த முறையோடு அபிஷேகம் செய்யவேண்டும், நெய் முதலியவைகளோடு சந்தன ஜலத்தினால் முறைப்படி அபிஷேகம் செய்யவேண்டும்.

10. ஐந்து அங்கங்களோடு கூடிய பவித்ரங்களாலும் அரிசிமாவினால் மறுபடி இந்த பிரகாரம் நெல்லி முள்ளியினால் தேய்த்து

11. அரிசிமாவினால், தூபம் செய்யப்பட்ட மஞ்மள் பொடியினாலும் அஸ்த்ரமந்திரத்தினால் தேய்த்து ஜலத்தினால் சுத்தம் செய்யவேண்டும்

12. பிறகு ஈச்வரனை இளநீரால் அபிஷேகம் செய்யவேண்டும், பஞ்ச பிரம்ம மந்திரம் ஷடங்க மந்திரம், மூல மந்திரத்தினால் சந்தன ஜலத்தினால் அபிஷேகம் செய்யவேண்டும்.

13. சுத்தமான பஞ்சு ஆடையினால் துடைத்து லிங்கத்தை சுத்தமான ஆடையினால் லிங்கத்தை சுற்றி வஸ்த்ரம் சாத்தவேண்டும்

14. ஒவ்வொரு யாமத்திலும் தனித்தனியாக திரவியங்களாலும் சந்தனம் முதலியவைகளாலும், சந்தனம், அகில், பச்சை கற்பூரம், குங்குமப்பூ முதலியவைகளால் முறைப்படி அர்ச்சிக்கவேண்டும்.

15. மல்லிகைபூ நீலோத்பலம் ஜாதி புஷ்பங்கள் வில்வங்களை அருகம்புல் அரிசி எள்ளும் கூடினதாக நன்கு பூஜிக்க வேண்டும்.

16. குங்குலியம் அகில் சாம்பிராணி மட்டிப்பால் முதலியவைகளினால் தூபம் போட வேண்டும். நல்ல வெண்மையான நூலை நெய்யில் நனைத்து நெய் தீபம் போட வேண்டும்.

17. முதல் யாமத்தில் பாயஸமும் இரண்டாம் ஜாமத்தில் எள்ளு வெல்லம் நெய் கலந்த அன்னமும் மூன்றாம் ஜாம பூஜைக்கு சக்கரை பொங்கலும் நான்காவது ஜாம பூஜைக்கு சுத்தான்னமும் செய்ய வேண்டும்.

18. அதற்கு பிறகு எல்லாவிதமான காய்கறிகளோடும்கூட, நெய், வெல்லத்தோடுகூட, வெற்றிலை பாக்கையும் நிவேதனம் செய்யவேண்டும்.

19. தூபம் தீபாராதனையோடுகூட சிவனின் பொருட்டு அர்ப்பணம் செய்து குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ விசேஷமாக ஹோமம் செய்ய வேண்டும்.

20. குண்ட ஸம்ஸ்காரத்துடன் குண்டத்திலோ, பாத்திரத்திலோ அக்னியில் சிவாக்னியை கல்பித்து அக்னி ஹ்ருதயத்தில் சிவாஸனத்தை கல்பித்து

21. அவ்விடத்தில் ஈசனை நன்கு பூஜித்து அந்த ஜ்வாலையாக இருக்கும் அக்னியில், ஸமித், நெய், அன்னம் நெற் பொறி, எள்ளு இவைகளை மூலமந்திரம் ஷடங்க மந்திரங்கள், பஞ்ச பிரம்ம மந்திரங்களால் ஹோமம் செய்யவேண்டும்.

22. சிவமந்திர ஹோமத்தில் பத்தில் ஓர் பாகம் மற்ற மந்திரங்களும் பத்துமுதல் பத்து பத்தாக அதிகபடுத்தி ஐம்பது ஆகுதிவரை செய்யலாம்.

23. இடைவெளி இல்லாத பூர்ணமான பூர்ணாஹூதியை சிவனுக்காக செய்து வணங்கி அந்த விபூதியை ஈசனுக்கு அர்பணம் செய்து நமஸ்கரித்து

24. ஒவ்வொரு ஜாமத்திலும் மறுபடி மறுபடி இந்த பிரகாரம் பூஜிக்க வேண்டும். நாமே செய்ய இயலாவிடில் நமக்காக பிறரால் செய்விக்கப்பட வேண்டும்.

25. இரவை தூக்கம் இல்லாமல் கழித்து, தெளிவான அதிகாலையில் நித்யானுஷ்டானங்களை செய்து பிறகு முறைப்படி ஸ்நபனம் செய்து

26. ஈச்வரனை முன்போல் பூசித்து பிறகு குரு பூஜையை செய்யவேண்டும். பிறகு பணம் இல்லாத்தன்மை இல்லாமல் பிறகு தட்சிணையை (குருவுக்கு) கொடுக்கவேண்டும்.

27. லிங்கம் கட்டிகள், சிவபக்தர்கள், பிராமணர்கள், அதிதிகளையும் இயன்றளவு பக்தியினால் நன்கு பூசை செய்து

28. பந்துக்களோடு கூட ஸாதகன் தனது வீட்டிற்கு சென்று கை, கால்களை சுத்தம் செய்துகொண்டு சாப்பாட்டை (பாரணை) செய்ய வேண்டும்.

இவ்வாறு மாசிமாத சிவராத்ரி பூஜை முறையைக் கூறும் பதினொன்றாவது படலமாகும்.

படலம் 10: மாசி மாத கிருதகம்பள பூஜா முறை...

படலம் 10: மாசி மாத கிருதகம்பள பூஜா முறை...

பத்தாவது படலத்தில் மாசிமாதத்தில் செய்ய வேண்டிய கிருதகம்பள பூஜா விதி கூறப்படுகிறது. முதலில் மாகமாசத்தில் மகாநட்சத்திரத்தில் கிருத கம்பளம் செய்ய வேண்டுமென கால நிர்தேசமாகும். பிறகு கிருத (நெய்) ஸம்பாதநம் அதன் ஸம்ஸ்காரமும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு பஞ்சகவ்ய பஞ்சாம்ருதத்தால் விசேஷ ஸ்நபனம் விசேஷ பூஜை செய்து ஹோமம் செய்க என கூறி அங்கு செய்ய வேண்டிய ஹோம விதி பிரதிபாதிக்கப்படுகிறது காலை மதியத்தில் முன்பு போல் ஸ்நபனத்துடன் விசேஷ பூஜை செய்து ஸர்வாலங்கார யுதமாக ஆலய பிரதட்சிண பூர்வம் ஸம்ஸ்கரிக்கப்பட்ட நெய்யை லிங்கத்தில் பீடம் வரை எல்லா இடத்திலும் பூச வேண்டும். பிறகு கந்தாதிகளால் பூஜித்து கம்பள வேஷ்டநம் செய்ய வேண்டும். பிறகு தாம்பூல சஹிதம் ஹவிஸ் நிவேதிக்க வேண்டும். பிறகு அடுத்த ஸந்த்யா காலத்திலோ மறுதினத்திலோ கம்பளாதிகளை எடுத்து முன்பு போல் பூஜிக்க வேண்டும். முயற்சிக்கு தக்கவாறு ஆசார்யனுக்கு தட்சிணாதானம் கொடுக்க வேண்டும். இந்த பூஜை அங்குரார்ப்பண ஸஹிதமாகவோ, ரஹிதமாகவோ செய்யலாமென சூசிக்கப்படுகிறது. இவ்வாறாக பத்தாவது படல கருத்து சுருக்கமாகும்.

1. மாசி மாதத்தில் மகாநட்சத்திரத்தில் நெய்யில் (நனைத்த) கம்பளியை சாத்தும் பூஜையை செய்ய வேண்டும். புழு, பூச்சி, இல்லாததும் காராம்பசு வினையுடையதும்.

2. ரோமம் இல்லாமலும், சுத்தமாயும், நல்ல மணத்தோடு நூதனமான நெய்யை ஆசார்யன் அஸ்த்ர மந்திரத்தினால் ஸ்தாபிக்க வேண்டும். ஜலத்தில் வருண மூல மந்திரத்தை கூறிக்கொண்டு

3. அந்த நெய்யை குங்குமப்பூ, அகில், மஞ்சள் பொடி, பச்சை கற்பூரம் இவைகளோடு சேர்த்து உருண்டையாக செய்து (இவைகளால் ஸம்ஸ்கரிக்கப்பட்டு)

4. தங்கபாத்ரம் முதலியவைகளில் வைத்து, பஞ்ச பிரும்மந்திரம் ஷடங்க மந்திரம் சிவமந்திரத்தோடு கூட பூஜித்து தூபம் கொடுத்து அபிமந்த்ரணம் செய்ய வேண்டும்.

5. பஞ்சகவ்ய, பஞ்சாமிருதங்களினாலோ விசேஷமாக ஸ்நபனம் செய்ய வேண்டும். விசேஷ பூஜையை செய்து முடிவில் ஸ்தண்டிலத்திலே நெய்யை வைக்க வேண்டும்.

6. புத்திமானானவன் ஹ்ருதய மந்திரத்தை கூறிக்கொண்டு சந்தனம் முதலியவைகளினால் பூஜிக்க வேண்டும். அதற்கு முன் ஸ்தண்டிலத்தில் சிவாக்னியை ஸ்தாபிக்க வேண்டும்.

7. புரச சமித், நெய், அன்னம், எள்ளு, பொரி இவைகளோடு கூடியதாக நூற்றெட்டு தடவை ஹோமம் செய்து முடிவில் பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

8. பவித்ராரோகணமுறைப்படி நெய்யில் ஸம்பாத ஹோமம் செய்து முன்புறத்தில் ஸ்தண்டிலத்தில் வஸ்திரத்தால் மூடப்பட்ட நெய்யை வைக்க வேண்டும்.

9. காலையிலோ மத்தியானத்திலோ கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்தபிறகு ஈசனை ஸ்னபனம் முதலியவைகளோடு பூஜித்து

10. ஸகலவிதமான அலங்காரத்தோடு விசேஷமாக பூஜைகள் செய்து சிவமந்தரத்தை சொல்லிக் கொண்டு நெய்யுடன் கோயில்வலம்வந்து

11. நெய்யால் லிங்கத்தை எல்லா இடத்திலும் பூசி எல்லா பீடங்கள் முடிவுவரை சந்தனம் முதலியவைகளால் பூஜித்து கம்பளியை சுற்றவேண்டும்.

12. ஈஸ்வரனுக்கு வெற்றிலைபாக்குடன் கூடின நிவேதனத்தை கொடுக்க வேண்டும் (அர்பணிக்கவேண்டும்)

13. அடுத்த ஸந்தியா காலத்திலோ மறுநாளிலோ கம்பளி முதலியவைகளை நீக்கிவிட்டு முன்போல ஈசனை பூஜிக்கவேண்டும். அப்படியே ஆசார்யனை பூஜிக்கவேண்டும்.

14. ஆசார்யனுக்கு சக்திக்கு ஏற்றவாறு தட்சிணையை கொடுக்கவேண்டும். பாலிகை தெளிப்பதுடன் கூடவோ, இல்லாமலோ இதை செய்யவேண்டும்.

இவ்வாறு நெய் சேர்த்த கம்பள பூஜை முறை பத்தாவது படலமாகும்.

படலம் 9: மார்கழி, தை மாத சிவபூஜா விதி...

படலம் 9: மார்கழி, தை மாத சிவபூஜா விதி...

ஒன்பதாவது படலத்தில் மார்கழி மாதம், தை மாதம் செய்ய வேண்டிய விசேஷ பூஜாவிதி கூறப்படுகிறது. அதில் முதலில் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் கூடிய தினத்தில் தேவருக்கு கிருதஸ்நான ஸமந்வித ஸ்நபனம் அல்லது கேவல ஸ்நபனம் செய்து, விசேஷமாக கந்தாதிகளால் தேவரை பூஜித்து பலவித கானங்களுடன் கிராம பிரதட்சிணம் செய்து, தேவரை ஆலய பிரவேசம் செய்க. அல்லது ராத்திரியிலும் பகலிலும் பலிஹோமங்களுடன் கூட ஸர்வாலங்காராயுதமாக பேரபிரதட்சிணம் செய்து சூர்ணோத்ஸவத்துடன் தீர்த்தோத்ஸவம் செய்து தேவாலய பிரவேசம் செய்க என்று கூறப்பட்டுள்ளது. பிறகு அங்கு ஸாயங்காலத்தில் விதிக்கப்பட்டுள்ள டோலரோஹணவிதி பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் டோலாகல்பனபிரகாரம் ஊஞ்சலில் தேவதாயஜனம் கூறப்படுகிறது. பிறகு ஊஞ்சலில் பலகை மேல் சிவன், இடப்பாகம் தேவி, மத்தியில் ஸ்கந்தரையும் ஆரோஹிக்க வேண்டும். அங்கு பலவித ந்ருத்யகான வாத்ய ஸஹிதம் ஈசனை சந்தோஷிக்க வேண்டும் என டோலோத்ஸவ விதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு இந்த ஊஞ்சலுத்ஸவம் வேறு காலத்திலும் செய்ய வேண்டும். பிரதி தினமும் செய்யலாமென பக்ஷõந்தரமாக சூசிக்கப்படுகிறது. பேரா ரோஹநத்தோடு டோலாசலனம் இஷ்டமென்று கூறப்பட்டுள்ளது. இந்த பக்ஷத்தில் ஊஞ்சலில் தேவரை ஆரோஹித்து அந்த ஸாந்நியத்தை தியானிக்கவும் என டோலாரோஹன விதி கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் மகா நட்சத்திரத்தில் ஈச, ஈச்வரிக்கு விசேஷமாக நெய்யுடன் கூடிய பாயசத்தை அர்ப்பணிக்கவும் (தை) புஷ்யமாசத்தில் புஷ்ய நட்சத்திரத்தில் தேனபிஷேகம் மஹாஹவிர் நிவேதனம் நிவேதன முடிவில் பேரயாத்ரை செய்ய வேண்டுமென புஷ்யமாஸவிதி கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒன்பதாவது படல கருத்து தொகுப்பாகும்.

1. மார்கழி மாதத்தில் ஆருத்ரா நட்சத்ரத்தில் முன் கூறிய விதிப்படி நெய் அபிஷேகத்தோடு கூட பரமேஸ்வரனை பூஜிக்க வேண்டும்.

2. விசேஷமாக ஸ்நபனம் மட்டும் செய்து சந்தனங்களால் பூஜித்து, பலவித கானங்களால் ஸந்தோஷிக்கச் செய்ய வேண்டும்.

3. கிராம பிரதட்சிணம் செய்து ஸ்வாமியை ஆலயத்தில் பிரவேசிக்க செய்து அல்லது ராத்திரியிலோ, பகலிலோ பலி, ஹோமம் செய்து

4. எல்லா அலங்காரங்களுடன் கூட, பிம்ப பிரதட்சிணம் செய்து சூர்ணோத்ஸவம், தீர்த்த உத்ஸவம் செய்து ஆலய பிரவேசனம் செய்ய வேண்டும்.
ஸாயங்காலத்தில் ஊஞ்சல் உத்ஸவம் செய்ய வேண்டும்.

5. ஸர்வாலங்காரயுதமாக வேண்டும், ஸ்தம்பல க்ஷணத்துடன் கூடிய இரண்டு ஸ்தம்பம் அமைத்து அதன் நடுவில் குறுக்கு ஸ்தம்பம் அமைக்க வேண்டும்.

6. நான்கு முழ அளவுள்ள ஊஞ்சலை அதன் நடுவில் அமைக்க வேண்டும். நான்கு சங்கிலியுடனும், ஊஞ்சல் மேல் விட்டத்தில் மூடக்கூடிய விதான வஸ்திரத்துடன் கூடியதாயும்

7. பல அலங்காரத்துடனும், இரு முழம் அளவுள்ள ஹம்ஸானத்துடன் அமைத்து புண்யாக பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

8. அஸ்திரமந்திர ஜலத்தால் பிரோக்ஷணம் செய்த பலகையில் ஆஸனத்தை கல்பித்து ஹ்ருதய மந்திரத்தால் அன்னப்பறவை தோகைகளாலான ஹம்ஸா ஸனத்தில் ஹம்ஸத்தை பூஜிக்க வேண்டும்.

9. வலது பக்கத்தில் பிரம்மாவையும், இடது பக்கத்தில் விஷ்ணுவையும் விஷ்டரமாகிய ஆஸன பாகத்தில் ருத்திரனையும், பலகையின் மேல் பாகத்தில் சிவனை பூஜிக்க வேண்டும்.

10. இடது பாகத்தில் தேவியையும், நடுவில் ஸுப்ரஹ்மண்யரையும் பூஜிக்க, அல்லது பலகையின் மேல் தேவியை சந்தனம் முதலியவைகளால் அர்ச்சிக்கவு

11. பலவித கானங்களுடனும், பல நிருத்தங்களுடனும், பலவித வாத்யங்களுடனும், கூட ஈஸ்வரனை மகிழ்விக்க வேண்டும்.

12. மற்ற சமயத்திலும் இஷ்டத்தை தரக்கூடிய ஊஞ்சல் உற்சவம் செய்யலாம். எல்லா விருப்பத்தையும் அடைவதற்காக பிரதிதினமும் செய்யலாம்.

13. பிம்பத்தை எழுந்தருளப்பண்ணியுமோ ஊஞ்சலாட்டுவதை செய்ய வேண்டும். இந்த மார்கழி மாதத்தில் மக நட்சத்திரத்தில் விசேஷமான நெய்யுடன்

14. கூடிய பால் பாயாசத்தை தேவியுடன் கூடிய சம்புவிற்கு அர்பணம் செய்யவேண்டும்.

15. தை மாசத்தில் (பூச) புஷ்ய நட்சத்ரத்தில் தேன் அபிஷேகம் செய்க. மஹாஹவிஸ் நிவேதனம் செய்து ஸ்வாமி திருவீதியுலா செய்ய வேண்டும்.

16. முன் கூறியபடி செய்தால் கர்தா விரும்பிய பயனை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் மார்கழிமாத, தை மாத பூஜைமுறையாகிய ஒன்பதாவது படலமாகும்.

படலம் 8: கிருத்திகா தீபாவளி விதி...

படலம் 8: கிருத்திகா தீபாவளி விதி...

எட்டாம் படலத்தில் கிருத்திகாமாஸ தீபாரோபண விதி படலம் கூறப்படுகிறது. முதலில் தீபாரோபண கால நிர்ணய பிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. அதற்காக நட்சத்ரதிதி நிர்ணய பிரகாரம் வர்ணிக்கப்படுகிறது. பிறகு அங்குரார்ப்பணம் செய்க என கூறப்படுகிறது. தீபா ரோபணத்தின் முன்தினம் அதிவாஸம் செய்தல் வேண்டும். தீப தண்டஸ்தாபன யோக்ய ஸ்தான நிரூபணம், தீபதண்டபிரமாண வாக்யம், தீபதண்டயோக்ய விருக்ஷ நிரூபணம். தீப தண்டத்தில் கீலயோஜநபிரகாரம், அதில் கீலபிரமாணம், கீலபிரமாண வாக்யம் பத்ர தாரணத்திற்கு பிரதிகீலம் சக்ரயோஜந பிரகாரவர்ணணம், பிரதி சக்ரம், தீபிகா யோஜநபிரகார நிரூபணம், தீபிகா ஸங்க்யா வாக்யம், தீபதண்டத்தின் வெளியில் காய்ந்ததான தென்னங்கீற்றுகளால் ஆச்சாதனம் செய்யவேண்டும் என்ற தான விஷயங்கள் கூறப்படுகிறது. பிறகு தீபதண்டத்தில் தக்ஷிண பாகத்தில் தண்டாரோஹ ஸித்திக்காக த்வார கல்பந விஷயத்தில் கல்ப, அனுகல்ப, உபகல்ப மென்றதான மூன்றுவிதம் நிரூபிக்கப்படுகிறது. தீப தண்டஸ்தாபன விஷயத்தில் மாலாகாரமான உருவபேதம் வர்ணிக்கப்படுகிறது. பிறகு ஆலயத்தில் தீபாரோபணம் எங்கெங்கு செய்யவேண்டும் அந்தந்த ஸ்தானங்களின் பெயர் நிரூபிக்கப்படுகிறது. அதில் கிராமாதிகளில் கிராம வெளியில் தீபாரோபணம் செய்ய வேண்டும் என சூசிக்கப்படுகிறது. பிறகு முன்தினமே அதிவாஸம் செய்யவேண்டும் என்ற சூசகத்திற்காக அதிவாஸகர்ம நிரூபணம், அதிவாஸ தீபதண்டஸ்தாபனம் அதனடியில் வேதிகல்பன பிரகாரம் சில்பி விஸர்ஜனத்திற்கு பிறகு அங்கு செய்ய வேண்டிய ஸம்ஸ்கார நிரூபணம், ஹோமவிதி ஆகிய விஷயம் நிரூபிக்கப்படுகிறது.

அதிவாஸத்திற்கு பிறகு இரண்டாம்நாள் நான்கு திக்கிலும் விதிக்கிலும் பந்தல்கள் அமைக்கவும் என கூறி பந்தலமைப்பு பிரகாரவர்ணம் சூர்யன் மறைந்த சமயமான சாயங்காலத்தில் தீபதண்டத்தை பூஜித்து அதில் வஸ்த்ர யுக்ம வேஷ்டநம், பிறகு பந்தலில் ஸ்தண்டிலங்களில் குண்டங்களிலோ அதிவாஸ ஹோமத்துடன் ஹோமம் செய்க என கூறி அங்கு விதிக்கப்பட்ட ஹோம விதி பிரதிபாதிக்கப்படுகிறது. பூர்ணாஹூதி பிரதான முடிவில் எல்லா தீபத்தையும் ஒன்று கூட்டி பாத்திரத்தில் ஸ்தாபனம் பிறகு ஸர்வாலங்கார யுதமாயும் பலவிதவாத்ய ந்ருத்த ஸம்யுதமாயும், பேரயாத்ரா புரஸ்ஸரமாயும், தீபதண்டத்தில் தலையிலிருந்து பாதம் வரை தீபா ரோபணபிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. அதில் பேர யாத்ரையின்றி தீபாரோபணம் விதேயமென பக்ஷிந்தரம் சூசிக்கப்படுகிறது. அங்கு தீபாரோபண கர்த்தாவான பரிசாரகருக்கு தேசிகனால் வஸ்த்ராதிகளால் பூஜைசெயற்பாலது என கூறப்படுகிறது. ஜ்யோதிர்லிங்கத்தை அனுசரித்து முன்புகல்பிக்கப்பட்ட கூடங்களின் தஹநம் விதேயம் என கூறப்படுகிறது. கூட தஹநமின்றி மற்ற கர்மாவை ஆசரிக்கவும் என பக்ஷõந்தரம் சூசிக்கப்படுகிறது. தோரண கீழ்பாகத்தில் தேவனை தீபதண் பிரதட்சிணம் செய்து ஆலய பிரதட்சிண பூர்வமாக ஆஸ்தான மண்டபம் அடைய வேண்டும். ஆலயங்களில் எல்லா இடத்திலும் தீபா ரோபணம் செய்ய வேண்டும். பிறகு பரிவேஷ கிரமமாக தேவனை பேரஸ்தானத்தை அடைவிக்க வேண்டும். பிறகு பேரம், லிங்கத்திற்குமாக நவகலசஸ்நபனம் செய்யவும் என கல்பிக்கப்பட்டுள்ளது. பின்பு தேங்காய் திருவலுடன் கூடிய அவலை ஈஸ்வரனுக்கு நிவேதனம் செய்யவேண்டுமென தீபாரோபணகிரியையில் பூஜா செயல்கள் விளக்கப்பட்டுள்ளது. இந்த தீபாரோபணகிரியை அங்குரார்பணம் இன்றியும் செய்யலாமென கூறப்பட்டுள்ளது. ஆசார்யர்களுக்கு தட்சிணாதானபிரகாரம் கூறப்படுகிறது. இந்த தீபாரோபண கர்மா ராஜகிருஹம், கிராமாதிகளிலும் செய்யவேண்டும், ரோக நிவ்ருத்திக்காக கோசாலையில் தீபாரோபண கர்மா செய்யவேண்டும். முடிவில் தீபாரோபண கால விஷயத்தில் நட்சத்ர, திதிநிர்ணய பிரகாரம் கூறப்படுகிறது. இவ்வாறாக எட்டாவது படல கருத்து சுருக்கமாகும்.

1. தீபாவரிசையை பற்றி கூறுகிறேன் கேளுங்கள். கார்த்திகை மாத கிருத்திகா நக்ஷத்திரத்தில்

2. பூர்ணிமையிலோ பூர்ணிமையோடு சேர்ந்த தினத்திலோ எல்லா விருப்பத்திற்காக சூர்யாஸ்தமன வேளையில் தீபாரோஹணம் செய்ய வேண்டும்.

3. கர்த்தாவின் அஷ்டம ராசிமுதல் லக்ன தோஷம் பார்த்து விருஷ்டி வைநாசிக நக்ஷத்திரங்களையும் பார்க்க வேண்டும்

4. சூர்யாஸ்தமனத்திற்கு முன்னதாகவுள்ள யாமத்தின் கால்பாக நேரமும் அஸ்தமனத்திற்கு பிறகு உள்ள அரையாமமும் தீபவரிசையின் பூஜைக்குரிய காலமாகும்.

5. இவ்வாறு காலத்தை நிச்சயித்து அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும். தீபாராதன தினத்திற்கு முதல் தினம் அதிவாஸம் செய்ய வேண்டும்.

6. இறைவனுக்கு முன்போ ஒவ்வொரு கோபுரத்திலோ, அஷ்டதிக்கிலோ நான்கு திக்கிலோ மூன்று அல்லது இரண்டு இடத்திலோ ஓரிடத்திலோ தண்டத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

7. கொடிமர அளவுபோல் தீபதண்டத்தின் அளவாகும். அந்த தண்டமும் தென்னை பனை, பாக்கு மூங்கில் மரங்களாலோ செய்யவேண்டும்.

8. கொடிமரத்திற்கு சொல்லப்பட்ட மரங்களினாலேயும் தீபவரிசைக்கான மரத்தையும் தயார் செய்து அதில் ஆப்புகுச்சிகளை சேர்க்க வேண்டும். பன்னிரண்டு அங்குலம் முதல் ஐந்தங்குல அதிகரிப்பாக

9. ஐம்பது முழம்வரை தீபவரிசைக்கான மரத்திற்கு வெளியில் ஆப்புகுச்சி இருக்கவேண்டும். இரண்டு மாத்ராங்குல அளவிலிருந்து கால் அங்குல அதிகரிப்பால் ஆறங்குல அளவுவரை

10. தீபமரத்தின் அகலமாகும். அதன் கனம் மூன்றரை பாகமாகும். முக்கால் பாகம் தீபமரத்தின் குறுக்களவாகும். தீபமரம், ஆப்பு குச்சிகளால் இணைக்கப்பட்டதாக வேண்டும் இருக்கலாம்.

11. ஒன்பது ஆப்புகுச்சி முதல் ஒவ்வொர் ஆப்புகுச்சி அதிகரிப்பாக இருபத்தியேழு ஆப்புகுச்சி வரை ஓர்திசையில் பொருத்த வேண்டும்.

12. மற்றமூன்று திசைகளிலும் இவ்வாறு ஆப்புக் குச்சிகளை பொருத்த வேண்டும். மூன்று ஆப்புகுச்சி, நான்கு ஆப்புகுச்சி, விருப்பப்படியான குச்சியுடனோ

13. தீபமரத்தின் நுனியில் பொருத்தி, தீப பாத்ரத்தை சுமப்பதற்காக ஒவ்வோர் ஆப்புக்குச்சியிலும் மரச்சக்ரங்களை பொருத்த வேண்டும்.

14. ஒவ்வொரு சக்ரத்திலும், எட்டு, பண்ணிரெண்டு, பதினாறு எண்ணிக்கையுள்ள தீபங்களை பொருத்த வேண்டும். தீபமரத்தை சுற்றி வெளியில் தென்னங்கீற்று முதலிய காய்ந்த கீற்றுகளால்

15. நன்கு மூடிய பிறகு இடைவெளியின்றி சுழலும் போலுள்ள சக்ரத்தை அமைக்க வேண்டும். ஓர் முழு அகலமும், இரண்டு முழ நீளமும் உள்ளதாக

16. தீப மரத்தின்மேல் ஏறுவதற்காக தென்திசையில் வாயிற்படி அமைக்க வேண்டும். இவ்வாறு கல்பம் என்ற முறை கூறப்பட்டு அனுகல்பம் கூறப்படுகிறது.

17. எல்லா சக்ரங்களையும் விட்டு ஒவ்வோர் ஆப்புக்குச்சியிலும் தீபத்தை சேர்க்க வேண்டும். ஹோமம், கூடாரமின்றி செய்வது உபகல்பமாகும்.

18. தீபமரமின்றி செய்வது அகல்பமாகும். தீபம் வைக்கப்படும் கூடாரங்களை கிழக்கு முதலான திசைகளிலும், தென்கிழக்கு முதலான மூலைகளிலும் நடுவிலும் அமைக்க வேண்டும்.

19. ஒவ்வோர் தெய்வங்களுக்கும் அதிக எண்ணிக்கையுள்ள தீபங்களை செய்ய வேண்டும். தீபங்களை வைப்பதற்கான மரங்களை மாலை போன்ற அமைப்புள்ளதாகவும் செய்யலாம்.

20. தோரணம் போன்றோ, வட்ட வடிவமாகவோ திருவாசி போன்றோ தீபமரங்களை செய்து அதில் தீபங்களை பொருத்த வேண்டும்.

21. விமானம், கோபுரம், பிராகாரம், பரிவாராலயம், மண்டபம் பலி பீடாதிகள், கிணறு, கிருகம் (வீடு) ஆகிய இடங்களிலோ

22. விருஷப முன்பே மடப்பள்ளியிலோ புஷ்ப மண்டபாதிகளிலோ கிராமங்களிலோ மண்டபத்திற்கு வெளியிலோ தீபங்களை கல்பிக்க வேண்டும்.

23. இவ்வாறு தீபவரிசையின் பூஜை செய்ய வேண்டும். தீப பூஜையின் முதல் நாளின் மாலையிலேயே பூஜித்து அஸ்திர மந்திரத்தால் தீபமரத்தை சுத்தி ஓமென்ற மந்திரத்தால் பூஜிக்க வேண்டும்.

24. ஆறு, நான்கு, ஐந்து தாள அளவில் பூமியில் குழி அமைக்க வேண்டும். தீபஸ்தம்பபூஜையின் முதல் நாள் குழியில் தீபமரத்தை நட்டு வேதிகையை அமைக்க வேண்டும்.

25. கொடிமரத்தின் வேதிகைபோல் அல்லது தாமரை போன்ற அமைப்பாகவோ வேதிகை அமைத்து சில்பிக்கு தட்சிணை கொடுத்து அனுப்பிவிட்டு புண்யாஹ வாசனம் செய்ய வேண்டும்.

26. உள்ளே சென்று சந்தனம், புஷ்பங்களால் தீபஸ்தம்பத்தை பூஜிக்க வேண்டும். ரக்ஷõ பந்தனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

27. ஆலயம், மண்டபம், யாக மண்டபம், அழகான இடம், இவைகளை பசுஞ்சாணத்தால் மெழுகி

28. ஸ்தண்டிலம் அமைத்து அஸ்திர மந்திரத்தால் பிரோக்ஷிக்க வேண்டும். ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் அங்கு பாத்திரம் வைக்க வேண்டும்.

29. நீராஜன விதியில் கூறப்பட்டுள்ள பிரம்ம மந்திரம், அங்க மந்திரங்களை, பூஜித்து பிரம்மாவின் மந்திரத்தோடு திக்பாலகர்களின் மந்திரங்களினாலோ, மூர்த்தி, மூர்த்தீஸ்வரர்களையோ, அக்னியுடன் எட்டு வஸீக்களையுமோ வாமை முதலிய எட்டு சக்திகளையுமோ, ஐந்து கலைகள், ஐந்து பூதங்கள், பிரம்மாதி காரணேச்வரர்களையுமோ பூஜிக்க வேண்டும். பாத்ரத்தில் ஓம் என்று கூறி பூஜிக்க வேண்டும்.

30. குண்டத்தில் குண்டஸம்ஸ்காரம், ஸ்ருக் ஸ்ருவஸம்ஸ்காரம் அக்னி ஸம்ஸ்காரம் இவைகளை செய்து சிவாக்னியை பூஜித்து, ஆஸன, ஆவரண பூஜையும், ஹ்ருதயம் முதலிய ஷடங்கமந்திரத்துடன் அக்னியில் சிவனை பூஜிக்க வேண்டும்.

31. சமித், நெய், ஹவிஸ், பருத்திவிதைபால் இவைகளால் நூறு, ஐம்பது, இருபத்திஐந்து ஆஹூதிகளை செய்ய வேண்டும்.

32. மேற்கூறிய எண்ணிக்கையால் மூலமந்திரா ஹூதியும், அதில் பத்தில் ஓர் பங்கு அங்க மந்திரா ஹூதியும், வஹ்நி பீஜமான ரம் என்ற மந்திரத்தால் நூற்றெட்டு ஆஹுதியும் செய்து பூர்ணாஹுதி செய்ய வேண்டும்.

33. பரிவாரதேவர்கள், ஹ்ருதயம் முதலிய ஷடங்க தேவர்களுடன் கூடிய இறைவனை விஸர்ஜனம் செய்து, நல்லெண்ணை அல்லது நெய்யாலோ பாத்ரத்தை நிரப்பி ஸர்வாத்மகரான ஈசனை நினைத்து தீபத்தை ஏற்றவேண்டும்.

34. ரம் என்ற வஹ்நி பீஜத்தை ஸ்மரித்து மத்ய தீபம் முதல் எல்லா தீபங்களையும் சந்தன புஷ்பங்களால் பூஜித்து சிவாக்னியை விசர்ஜனம் செய்ய வேண்டும்.

35. பலவித அலங்காரத்துடன் கூடிய தருண தீபமான மத்ய தீபபாத்ரத்தை ஜ்வாலையுடன் கூடியதாக எடுத்து

36. தண்டத்தின் மேல் ஸ்தண்டிலத்தில் ஹ்ருதயத்தினால் வைக்க வேண்டும். ஹோம முடிவில் தீபதண்டத்திற்கு ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

37. பிறகு இரண்டாம்நாள் நான்கு திக்கிலும், விதிக்கிலும், நான்கு தோரண ஸஹிதமாக நான்கு கூடங்கள் அமைக்க வேண்டும்.

38. கூடாரங்கள் ஐந்து, நான்கு, மூன்று முழ அளவும், விரும்பிய அளவுள்ள இடைவெளி உடையதாகவும் அமைத்து, கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் ஒரு கூடாரம் அமைக்க வேண்டும்.

39. தோரணத்தை கூடத்திற்கு தக்கவாறு விருப்பப்படி அமைக்க வேண்டும். கூடாரத்தை சுற்றி தோரணம், தர்ப்ப மாலைகளால் அலங்கரித்து

40. எல்லா அலங்காரத்துடனும் வாழைமரம், பாக்கு மரத்துடன் கூடியதாக மண்டபம் அமைத்து சூர்யன் மறையும் நேரத்தில்

41. புண்யாஹவாசனம் செய்து கந்தாதிகளால் தண்டத்தை பூஜித்து இரண்டு வஸ்திரத்தால் தண்டத்தின் அடிபாகத்தில் சுற்றி

42. ஸ்வர்ணம் முதலியவைகளால் ஆக்கப்பட்ட பாத்திரத்தை தண்டத்தின் மேல் வைக்க வேண்டும். பருத்தி கொட்டையால் ஆன திரியோடு எண்ணை அல்லது நெய்யை சேர்த்து

43. தீபத்தை கூடத்தில் சேர்த்து குண்டம் ஸ்தண்டிலங்களில் அதிவாச ஹோமத்துடன் ஹோமம் செய்ய வேண்டும்.

44. தென்கிழக்கிலோ, வடகிழக்கிலோ பந்தலில் ஹோமம் செய்ய வேண்டும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஈச்வரன் ஸதாசிவன் இவர்கள்

45. இங்கு ஹோமாதிபர்கள் என கூறப்படுகிறார்கள். தீப தண்டத்தில் ஸதாசிவரை பூஜிக்க வேண்டும். புரசு, ஆல், வன்னி, எருக்கு சமித்துக்களையோ அல்லது எல்லா குண்டத்திலும் வன்னி சமித்தையோ

46. ஹோமம் செய்து வஸ்திரம் தங்கமாபரணங்களால் அசார்யரை பூஜித்து பூர்ணாஹூதி செய்து எல்லா தீபத்தையும்

47. ஒன்று சேர்த்து வஹ்னி பீஜத்தால் (ரம் என்று) ஹ்ருதயத்தால் பாத்திரத்தில் ஸ்தாபிக்க வேண்டும். எல்லா அலங்காரத்துடனும் மங்களாங்குரத்துடனும்

48. விதான த்வஜத்துடனும் சத்ர சாமரத்துடனும் பலவித வாத்யம் பலவித நிருத்தத்துடன் கூடியதாகவும்

49. உத்ஸவ பேரத்துடன், பேரயாத்ரையுடனும் திரு வீதியுலா இன்றியுமோ கிருஹஸ்தரோ பிரம்ம சாரியோ தீபத்தை கையால் எடுத்து

50. தீபமரத்தில் சீக்ரம் ஏறி அதற்கு மேல் வடக்கு நோக்கியவாறு நின்று மரத்தில் மேலுள்ள பாத்ரத்தில் தீபமேற்றி பிறகு அங்கிருந்து இறங்கி

51. மஹேசனிடம் விக்ஞாபித்து அந்த காலத்தில் சக்ரத்திலுள்ள தீபங்களை மூர்த்தாதி பாதம் வரை ஏற்றவும்.

52. ஆசார்யன் தீபமேற்றிய கர்தாவையும் பரிசாரகனையும் வஸ்திராதிகளால் வடக்கு முகமாக இருந்துகொண்டு கவுரவிக்க வேண்டும்.

53. ஜ்யோதிர் லிங்கத்தை ஸ்மரித்து நான்கு கூடத்தையும் சொக்கபானை தஹிக்க வேண்டும் (அல்லது) சொக்கபானை கூட தாஹமின்றி மற்ற எல்லாவற்றையும் அனுஷ்டிக்க வேண்டும்.

54. தோரணத்திற்கு கீழே தேவரை எழுந்தருளச் செய்து தீபமரத்தினின்று பிரதட்சிணமாக தீபத்துடன் கூடி கிராமத்திற்கு செல்ல வேண்டும்.

55. கோயில் பிரதட்சிணம் செய்து ஆஸ்தான மண்டபம் செல்ல வேண்டும். எல்லா கோயில் விமானங்களில் தீபங்களை ஏற்ற வேண்டும்.

56. வலமாக கோயிலையடைந்து, உற்சவ பிம்பத்திற்கு கூறியபடி ஸ்நபனம் செய்துமோ செய்யாமலுமோ இருக்கலாம்.

57. பூர்ணமாக அதிகமான ஹவிஸ் கொடுத்து தாம்பூலம் நிவேதித்து தேங்காயுடன் கூட அவலை தேவனுக்கு நிவேதிக்க வேண்டும்.

58. மிளகு ஜீரகத்துடன் வெல்ல சர்க்கரையுடனும் அவலை நிவேதித்து அங்குரார்ப்பணம் செய்யாமலும் இந்த உத்ஸவத்தை செய்யலாம்.

59. குருவிற்கு தட்சிணை கொடுத்து ஹோமம் செய்பவர்களுக்கும் தட்சிணை கொடுக்க வேண்டும். இந்த உத்ஸவத்தில் ஹோம உயயோகித்த திரவ்யம் கொட்டகை, மூங்கில்குச்சி முதலியவைகளையும்

60. அந்த தீப பூஜையின் அங்கமான மற்ற திரவ்யங்களையும் சேர்த்து ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும். இந்த தீப பூஜையானது அரசரின் அரண்மனையிலும் செய்யலாம்.

61. கிராமம் முதலியவிடங்களில் பிரம்மஸ்தானமான மத்தியில் தீபவரிசை பூஜை செய்யலாம். மற்றும் மனிதர்களுக்கும் வாஹனங்களுக்கும் தீமை ஏற்படும் போதும் செய்யலாம்.

62. மாட்டுத் தொழுவத்தில் பசுக்களின் வியாதியை போக்குவதற்காக செய்ய வேண்டும். எந்த திதியில் சூர்யன் உதிக்கிறானோ!

63. அந்த வளர்பிறை திதி, ஸகலா என்று பெயர்.

64. சூர்யன் மறையும் நேரத்தில் எந்த நட்சத்ரத்துடன் கூடி சூரியன் இருக்கிறானோ அந்த நட்சத்ரத்தை ஸகலம் என்பதாகவும் நட்சத்திரத்தை அறியும் விஷயத்திலும் அவ்வாறேயாகும்.

65. இவ்வாறாக அறிந்து பூஜை முதலிய எல்லா கார்யங்களையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கிருத்திகா தீபாவளி முறையாகிற எட்டாவது படலமாகும்.

படலம் 7: நீராஜன விதி...

படலம் 7: நீராஜன விதி...

ஏழாம் படலத்தில் நீராஜனவிதி கூறப்படுகிறது, அதில் முதலில் நீராஜனத்தின்கால நிரூபணம் பிறகு நீராஜந பாத்ரஸ்தாபநார்த்தம், கர்பக்ரஹம், அர்த்த மண்டபம், ஸ்நபந மண்டபம் பாகசாலை இந்த இடங்களில் ஸ்தண்டிலம் அல்லது மண்டலம் அமைத்து அஸ்த்திர மந்திரத்தால் பிரோக்ஷிக்கவும் எனவும், நீராஜநத்திற்க்காக பலி பாத்ரம் போல் அளவான தீபாதார ஸஹித பாத்திரங்கள் தயார் செய்யவும் என கூறி, அந்தபாத்ர லக்ஷணபிரமாணாதிகள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு நிஷ்கள பிம்பங்களில் விசேஷமாக நடராஜ மூர்த்தி விஷயத்தில், தீபாதாரத்தில் சேர்க்கவேண்டிய திரவ்யம் பிரதிபாதிக்கப்படுகிறது. தீப பாத்ரதேவதாநிரூபணம் தீப பாத்ர சேர்க்கும் திரவ்யபரிமாண நிரூபணம், நீராஜநம் செய்யும் விதம், பிறகு பஸ்மாவால் திலகதாரண விதி கூறப்படுகிறது. பஸ்மாதாந விதி பிரதி பாதிக்கப்படுகிறது. பின்பு ஜ்வாலாஸஹித, ஜ்வாலைரஹித பாத்ரங்களை எடுத்து பீடாக்ரம், விருஷபாக்ரம் கோபுராந்திகம், விருக்ஷமூலங்களிலோ ஸ்தாபிக்கவும் என்று கூறப்படுகிறது நீராஜன உபயுக்த மானதிரவியங்களை குருவிடம் கொடுக்கவும் அல்லது அவரே வஹ்நியில் தஹிக்கவும் என கூறப்படுகிறது. முடிவில் ராஜாபிஷேககாலம், ஆசார்யாபிஷேக காலத்திலும் நீராஜநம் செய்க என கூறிஅந்த நீராஜந விதியில் விசேஷ பிரகாரம் சூசிக்கப்படுகிறது. இவ்வாறு ஏழாம் கருத்து தொகுப்பாகும்.

1. நீராஜனவிதியை கூறுகிறேன். அந்த நீராஜனம் ராத்திரி வேளையில் செய்ய விதிக்கப்படுகிறது. பிரதோஷம் முதலிய காலங்களிலோ, தூப, தீப முடிவு சமயத்திலோ,

2. உத்ஸவாதி காலங்கள் மற்ற மங்கள கார்யங்களிலோ நீராஜனம் செய்தல் வேண்டும். அதற்காக ஸ்தண்டிலம் அல்லது மண்டலம் அமைக்கவேண்டும்.

3. கர்பகிரஹம் அர்த்த மண்டபம், ஸ்நபன மண்டபம் அதன் முன் மண்டபத்திலோ, மடப்பள்ளி மற்ற இடங்களிலும், அஸ்த்ர மந்திரத்தினால் புரோக்ஷணம் செய்து

4. சுத்தமாக தீபத்திற்கு ஆதாரமாக உள்ள பாத்ரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பலிபாத்ர லக்ஷணப்படி பாத்திரங்களை எடுத்து கொள்ள வேண்டும்.

5.  ஒரு மாத்திரை அளவில் பாத்திர மத்தியில் தீப ஆதாரம் கல்பிக்க வேண்டும். கால் அங்குலம் அதிகரிப்பால் ஒன்பது அங்குலம் முடிய வேண்டும்

6. விஸ்தாரமாகும், விஸ்தார ஸமமாகவோ, அதன் பாதி அளவாகவோ உயரமாகும். எட்டாக பிரிக்கப்பட்ட மத்யம பாகத்தில் ஒன்பது விதமான அளவாகும்.

7. இரண்டு யவை அளவிலிருந்து அரையவை யளவு அதிகரிப்பால் மாத்ராங்குலம் வரை பாத்ர விளிம்பின் அளவாகும். பாத்ர அளவிற்கு தகுந்த கனமும், அரை பாக மாத்ரையளவு ஓட்டையுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

8. தாமரைப்போல் உருவமாகவும், பாலிகை பாதம் போலும் கருவூமத்தை பூபோலவோ, சராவம் போல் (மடக்கு) உருவமாகவோ அமைக்கலாம்.

9. நான்கு, எட்டு, இதழுடன், கூடியதாகவும், ஸர்வாலங்காரத்துடன் கூடியதாக ஒரே பாத்திரத்தில் ஒரு தீபாதாரம், ஐந்து தீபாதாரமாகவோ

10. ஒன்பது தீபாதாரமாகவோ செய்ய வேண்டும். அவைகள் இடைவெளியுடன் சேர்ந்ததாக வேண்டும் மாவினாலோ அன்னத்தினா<லுமோ தேவனுக்காக தீபாதாரங்களை அமைக்க வேண்டும்.

11. விசேஷமாக நடராஜருக்கும், மற்ற பிம்பங்களுக்கும் தேவிக்கும் நீராஞ்ஜனம் செய்யலாம். ஓரிடத்தில் எள் மற்றும் கடுகு, உப்பு இவைகளையும்

12. பருத்தி விதையும், கோமயம், மா வேண்டும், பல வர்ணமுள்ள அன்னங்களுடன் ஆல், அரசு இவைகளையும்

13. கிழக்கு முதலிய திக்குகளிலும், அக்னி முதலிய திக்குகளி<லும் வரிசையாக ஸ்தாபிக்க வேண்டும், நடுவில் ஒரு தீபபாத்திரமோ ஐந்து தீபபாத்திரமோ ஸ்தாபிக்க வேண்டும்.

14. சந்தனம், அர்க்யம், புஷ்பம், விபூதி முதலியவைகளை ஆக்னேயாதி விதிக்குகளில் ஸ்தாபிக்க, எல்லா இடத்திலும் ஒன்பது எண்ணிக்கையுடைய ஜ்வாலை உடைய தீபங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

15. அந்த தீபங்களை நெய்யுடனோ, எண்ணையுடனோ கூடி பிரம்ம மந்திர, அங்க மந்திரத்துடன் பிரம்மாவின் மந்திரங்களை நியாஸம் செய்து திக்பாலகர்களையோ மூர்த்தி, மூர்த்தீஸ்வரர்களையோ அர்ச்சிக்க வேண்டும்.

16. அக்னி தேவருடன் எட்டு வஸுக்கள், வாமை முதலிய சக்திகள், ஐந்துகலை, ஐந்து பூதங்கள், அதன் காரணேஸ்வரர்களான பிரும்மாதி தேவர்கள் ஆகியோர்

17. பாத்ராதிதேவர்கள் என கூறப்பட்டுள்ளார்கள். தீபதேவதை அக்னியாகும். கால் ஆழாக்கு முதல் ஆழாக்கு விருத்தியாக (அதிகமாக) மரக்கால் ( குறுணி) அளவுவரை

18. எள்ளின் அளவாகும். கர்த்தாவின் விருப்பத்திற்கிணங்க பாத்ரங்களின் அளவாகும். பொதுவான நிரீக்ஷணம் முதலிய ஸம்ஸ்காரங்களை செய்து முறைப்படி துதித்து

19. ரம் என்ற வன்னி பீஜத்தை ஸ்மரித்து, தீபத்தை தீபத்தினால் யோஜிக்க வேண்டும் (தீபமேற்றவும்) ஸர்வ வாத்யத்துடனும், சங்ககோஷத்துடனும்

20. பாட்டு, நிருத்தத்துடன் கூடி ஸ்த்ரீகளையோ பரிசாரகர்களையோ எடுத்துக்கொண்டு வரச் சொல்லி,

21. இறைவனுக்கு தீபத்தை முக்காலியின் மேல் ஸ்தாபித்து பூஜிக்கவும். ஸத்யோஜாத மந்திரத்தால் பாத்யம் ஹ்ருதயமந்திரத்தால் ஆசமனம்

22. ஸ்வபீஜத்தால் எல்லா தீபங்களை கந்தாதிகளால் அர்ச்சித்து ஹ்ருதய மந்திரத்தால், ஏக வாரமோ, மூன்று தடவையோ இறைவன் தலைக்கு நேராகச் சுற்ற வேண்டும்.

23. ஹஸ்தங்களால் திரவ்யங்களை எடுத்து அந்த தீபபாத்ரங்களை பூஜிக்க வேண்டும். ஆத்மதத்வாதி மந்திரங்களால் சிஷ்யகரத்தில் தீபத்தை கொடுக்க வேண்டும்.

24. சிஷ்யனும் தீபத்தை கிரஹித்து வணக்கத்துடன் கூடியதாக நுழையவும். பிறகு சுத்தமானதும், வெண்மையானதும், நல்லவாஸனையானதும் மணலில்லாததுமான

25. விபூதியை கையினால் எடுத்து சிவனுக்கு எதிரில், மூன்று முறை சுற்றி பிறகு தீபமத்தியில் சேர்க்க வேண்டும்.

26. அங்குஷ்ட (கட்டைவிரல்) அநாமிகை (மோதிரவிரல்) விரலால் விபூதியை பஞ்ச வக்த்ர, நெற்றி, ஹ்ருதயம், கைகள் இவைகளில் வரிசையாக திலக மிட வேண்டும்

27. தேவிக்காக பீடத்திலும், இடது பாகத்திலும் திலகமிடவும் தேவீ உருவ அமைப்போடிருந்தால் தேவீ முன் பாகம் நெற்றியில் திலகம் இட வேண்டும்.

28. கழுத்து பாகத்தில் மூலமந்திரத்தினாலோ ஹ்ருதய மந்திரத்தினாலோ திலகமிட வேண்டும். உற்சவ பிம்பத்தில் நெற்றி ஹ்ருதயம், கை பிரதேசத்தில் திலகமிட வேண்டும்.

29. அந்த விபூதியை எடுத்து கொஞ்சமாக சண்டேச்வராதிகளிடத்திலு<ம் பக்தர்களிடத்திலும் உலோக பிம்பத்திலும் திலகமிட வேண்டும்.

30. பிறகு பக்த ஜனங்களுக்கும் விபூதி கொடுக்க வேண்டும். ஸர்வாலங்காரயுதமாக தேசிகர்கள் முன்போல் பாத்திரங்களை எடுத்து

31. ஜ்வாலையோடோ, ஜ்வாலையில்லாமலோ, சிவாலயத்திலிருந்து எடுத்து பீடமுன்பாகவோ, விருஷபத்தின் முன்பாகவோ கோபுர சமீபத்திலோ

32. மற்ற விருஷ மூலத்திலோ அந்தி தீபங்களை முறையாக வைக்க வேண்டும். காற்றாலும், நெருப்பாலும், தீபங்களை தஹிக்க வேண்டும். திரவ்யங்களை குருவிற்கு அர்ப்பணிக்க வேண்டும்.

33. எள்ளு முதலிய திரவ்யங்களின் அளவு விருப்பப்படி இருக்கலாம். யதேஷ்டமாக ராஜாக்களுக்கும், நீராஜனம் செய்யலாம். அதற்கு தேவதை அக்னி.

34. ராஜாபிஷேக காலம், ராஜவெற்றிக்கும், தேசிகாபிஷேக (ஆசார்ய அபிஷேகம்) காலத்திலும் பகலில் தீப பூஜையின்றியும்

35. தண்டுலங்களால் செய்க, ராத்ரியில் தீபத்துடன் கூடியதாக நீராஜந விதி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் நீராஜனம் செய்யும் முறையாகிற ஏழாவது படலமாகும்.

படலம் 6/5...

படலம் 6/5 : மஹோத்ஸவ விதி

401. மாஸோத்ஸவம் இரண்டு வந்தால் இவ்விதமே செய்ய வேண்டும். ஒருநாள் உத்ஸவத்தை போல் மாஸோத்ஸவம் செய்ய வேண்டும்.

402. ஒரே மாதத்தில் ஒன்றோ பலவோ உத்ஸவம் வந்தால் அங்குரார்பண பூர்வாங்கமாகவோ அல்லது இல்லாமலோ செய்யலாம்.

403. ஒருநாள் உத்ஸவம் பேரீ அடித்தல் முன்னதாக செய்ய வேண்டும். இரண்டு ஸ்தண்டிலங்கள் செய்து சூலத்தை ஒன்றில் வைக்க வேண்டும்.

404. அதன் முன்பு பேரியை வைத்து பிறகு புண்யாஹம் செய்ய வேண்டும். அஸ்த்ர தேவரையும் பேரியையும் பூஜித்து பேரியை அடிக்க வேண்டும்.

405. பிறகு பிரதிஸரம் (காப்பு) தெய்வத்திற்கும் சூலத்திற்கும் முறைப்படி கட்டி பிரகார பிரதட்சிணம் செய்து யாகசாலையில் நுழைந்து

406. ஸ்தண்டிலத்தில் சூலத்தை ஸ்தாபனம் செய்து வேதிகைக்கு மேலே மங்கள கரமான ஸ்தண்டிலத்தில் வர்த்தனீ ஸஹிதமாக சிவகும்பத்தை ஆசார்யன் வைக்க வேண்டும்.

407. சுற்றிலும் எட்டு கலசங்களையோ கடங்களையோ வைக்க வேண்டும். புண்யாகவாசனம் செய்து அஸ்த்ர மந்திரத்தால் பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

408. தங்க பத்மம் முதலியவைகளை இட்டு வஸ்த்ரம் யக்ஞஸூத்ரம் கூர்ச்சம் இவைகளோடு கூடியதாக இரண்டிற்கும் அளித்து

409. கும்பங்களில் மாவிலை பழம், இவைகளை சேர்த்து நடுவில் கும்பத்தில் சிவனையும், வர்த்தனியில் மனோன்மணியையும், அஷ்டவித்யேஸ்வரர்களை கலசங்களிலும் பூஜை செய்ய வேண்டும்.

410. திவாரங்களை பூஜை செய்து நந்தி முதலிய திவார பாலகர்களை ஸ்தலத்திலுள்ள கலசங்களிலும் பூஜை செய்ய வேண்டும். தோரணங்கள் அஷ்டமங்களங்கள் இவைகளை பூஜை செய்ய வேண்டும்.

411. தசாயுதங்களையும் மற்றும் அஷ்டமங்களம் போன்றவையும் வைத்து பூஜை செய்யலாம். இல்லாமலும் செய்யலாம். குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ ஹோமம் செய்ய வேண்டும்.

412. ஐந்து அல்லது ஓர் குண்டத்தில் முன் சொன்ன பொருள்களைக் கொண்டே ஹோமம் செய்ய வேண்டும். பிறகு கிராமபலி செய்ய வேண்டும். பலி பிம்பத்தோடு கூடவோ அல்லது இல்லாமலும் செய்யலாம்.

413. இவ்விதம் இரவில் செய்ய வேண்டும். காலையில் யாகேஸ்வரரை பூஜிக்க வேண்டும். விக்ரஹத்தோடு கூட ஹோமம் பலி இரண்டும் முடிந்தவுடன்

414. ஆசார்யன் ஆலயம் சென்று அங்கு சூர்ணோத்ஸவம் செய்ய வேண்டும். பிறகு தீர்த்தோத்ஸவம் இங்கு சொல்லப்படவில்லையெனில் முன்பு போலவே செய்ய வேண்டும்.

415. பேரீதாடனம் இல்லாமல் அனைத்தையும் காலையிலும் செய்யலாம். உடனே அதிவாஸம் செய்து முன்புபோல் அனைத்தையும் செய்யவேண்டும்.

416. சூர்ணோத்ஸவம் இல்லாமலும் இந்த உத்ஸவம் செய்யலாம். அதன் முறை இங்கு சொல்லப்படுகிறது. ஆலயத்தில் பலிதானம் திருவீதியு லாவையும் செய்யவும். தீர்த்தம் இல்லாமல் உற்சவம் செய்யலாம்.

417. வீதிவலம் பிற்பகலிலோ மாலையிலோ செய்யலாம். தீர்த்தவாரி இருந்தால் ஸ்வாமி வீதி வலம் வருதலும் பலிகாலத்தில் வேறு பிம்பம் வைத்து

418. வலம் வருதலோ செய்யலாம். வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. பலி ஹோமம் முதலியவைகளை செய்யாமல் வலம் வருதலையோ மட்டும் கூட செய்யலாம். தெய்வத்திற்கு ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டுமென தினங்களின் உத்ஸவத்திலும் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.

419. கர்த்தாவின் விருப்ப நாட்களிலும் அதற்கு உரிய நாளிலோ மேற்கூறியபடி செய்யலாம். கர்த்தாவின் ஜன்ம நக்ஷத்திரத்திலோ அல்லது மரண நாளில் அல்லது மாதாந்திர திருவாதிரை நக்ஷத்திரத்திலோ

420. சதுர்தசி, அஷ்டமி, பவுர்ணமி அல்லது அமாவாசை உத்தராயண தட்சிணாயனம் விஷுவ புண்யகாலம், கிரஹணங்கள் தமனோத்ஸவம் என்ற மரிக்கொழுந்து சாற்றுதலிலும்.

421. பவித்ரோத்ஸவம், கார்த்திகை தீபம் மற்றும் வருடசிறப்பு தினங்கள் புதிய தண்ணீர் வருதல்

422. பூரம் நக்ஷத்திரம், நவ நைவேத்ய கர்மாவிலும் மற்ற மங்கள கார்யங்களிலும் ஒருநாள் உத்ஸவம் செய்யலாம்.

423. இவ்விதம் ஒவ்வொரு வருடமும் போகத்திற்கும் அல்லது மோக்ஷத்திற்காகவும் செய்ய வேண்டும். ஞாயிறு முதல் வார பூஜையும் முறைப்படி செய்ய வேண்டும்.

424. பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம் மற்றும் ஸ்நபனங்களால் இறைவனை அபிஷேகம் செய்ய வேண்டும். நிறைய சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் இறைவனை பூஜை செய்ய வேண்டும்.

425. (ரோஜா) தலாரவிந்தம், நாயுருவி, தாமரை துளசி, பில்வ பத்ரம், விஷ்ணுகிராந்தி இவைகள் முறையாக

426. ஞாயிற்றுகிழமை முதலான கிழமைகளில் மேல் கூறிய பத்ரங்களால் பூஜிக்கலாம். ஞாயிற்றுக் கிழமை மாணிக்கமும் திங்கள் முத்துவும்

427. பவழம் செவ்வாய் கிழமையிலும், புதன் கிழமையில் மரகதமும் வியாழக்கிழமை புஷ்பராகமும் வெள்ளிக்கிழமை வஜ்ரமுமாகும்.

428. சனிக்கிழமை இந்த்ர நீலமும், சாத்தலாம். மற்ற எல்லா ரத்னங்களும் எப்பொழுதும் சாத்தலாம் இந்த முறைப்படி சாத்துவது சிறந்தது

429. அந்தந்த நிறமுடைய புஷ்பம் வஸ்திரம் இவைகளை சாத்த வேண்டும்.

430. அந்தந்த நிறமுடைய நைவேத்யம் அந்தந்த வாரத்திற்கு உட்பட்டு நிவேதனம் செய்ய வேண்டும். வாரபூஜையின் முடிவில் வாரோத்ஸவம் செய்ய வேண்டும்.

431. வேண்டியதை அடைய ஞாயிற்றுகிழமை உத்ஸவத்தை மட்டுமோ நடத்தலாம். ஞாயிறு உத்ஸவம் கிருஹணங்களின் பீடை நீங்கவும் சிறப்பாக ஆரோக்யம் பெறவும் ஆகும்.

432. உலக நன்மைக்காகவும் எந்த கிரஹத்தால் துன்பமேற்பட்டுள்ளதோ அந்த கிருஹ வாரத்தில் பூஜை செய்ய வேண்டும். அந்த வார உத்ஸவத்துடன் சேர்த்து செய்ய வேண்டும்.

433. அந்தந்த கிழமைக்கு தக்கவாறு சந்தனம் முதலிய திரவ்யங்களை சேகரிப்பது, செய்தும் செய்யாமலும் இருக்கலாம். ஸம்வத்ஸர உத்ஸவம் கூறி மாஸோத்ஸவத்திலும் அவ்வாறே அனுஷ்டிக்கவும் என்றும்

434. வாரோத்ஸவத்திலும் சிறப்பு சொல்லப்படுகிறது. முற்பகல் பிராமணர்களுக்கும் நடுப்பகல் க்ஷத்ரியர்களுக்கும்

435. மாலை வைச்யர்களுக்கும் மற்றவர்களுக்கும் நடு இரவிலும் கொடி ஏற்றப்பட வேண்டும். கொடியேற்றம் முதலாகவோ

436. பேரீ அடித்தல் முதலாகவோ பாலிகை தெளித்தல் முதலாகவோ பிராம்மணர் முதலான வர்ணத்தவர்களுக்கு செய்யலாம். மற்றவர்களுக்கு பாலிகை தெளித்தல்தான் முதலாவதாக செய்ய வேண்டும்.

437. நகரத்தில் த்வஜம் முன்னதாகவும் மங்கள கார்யங்களில் பேரீதாடனம் முன்னதாகவும் பெரிய நகரங்களில் அங்குரம் முன்னதாகவும் செய்யலாம். அது போல் நான்காவது நிலையில் உள்ளவர்களுக்கும் உண்டு.

438. நான்காயிரம் அந்தணர்களுக்கு மேல் இருக்கும் கிராமத்தில் மற்றும் நகரங்களிலும் உத்ஸவங்களுக்கு கலப்பு தோஷம் இல்லை என கூறப்பட்டுள்ளது.

439. ஏழு ஆறு, ஐந்து அல்லது நான்கு முழத்தில் த்வஜதண்ட வேதிகை கட்டவேண்டும். முதல் மூன்று வர்ணத்தவர் தவிர மற்றவர்களுக்கு இது மாறுதலாக அமையும்.

440. ஒரு த்வஜத்தில் மற்றொரு த்வஜத்தை செய்யக் கூடாது. விருஷபத்வஜருக்கு செய்யலாம். ஒரு உத்ஸவத்தில் மற்றொரு உத்ஸவம் செய்யக்கூடாது. சைவோத்ஸவம் சிறந்தது.

441. எல்லோரும் பொருத்தமான நக்ஷத்திரத்தில் த்வஜாரம்பம் செய்வது சிறந்தது. கொடிக்கு வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மூன்றும் அந்தணர் முதலான வர்ணத்தவர்களுக்கும் பொருந்தும்.

442. நான்காவது வர்ணத்தவர்க்கு மஞ்சள் நிறம் எல்லோர்க்கும் வெண்மை நிறத்தை பொதுவாக வைத்துக் கொள்ளலாம். கொடி ஆரம்பத்தில் விருஷபத்தலையும் வால் அடிப்பகுதியிலும் இருக்க வேண்டும்.

443. த்வஜ பிரதட்சிண காலத்தில் ஆசார்யன் முன்னால் சென்றாலும் செல்லலாம். கிழக்கில் காந்தாரம் தெற்கில் கவுசிகம்.

444. மேற்கில் காமரம், வடக்கில் தர்கராகம், இவ்விதம் ஸ்வரங்கள் சொல்லப்பட்டன.

445. த்வஜாரோஹண காலத்தில் நான்கு ராகமோ ஓர் ராகமோ வாஸித்து த்வஜாரோஹம் முதல் தீர்த்தம் வரையில் இரவில் கிராமபலி போட வேண்டும்.

446. அல்லது வேறு இடத்தில் உத்ஸவம் நடக்கும் போதும் நித்யோத்ஸவமுள்ள இடத்திலும் தேவர்களின் பலி த்வஜத்தின் அடியிலேயே கொடுக்கப்படவேண்டும்.

447. பிராம்மணர் முதலிய பேதங்களில் வடக்கிலிருந்து குண்டமேற்படுத்தி பிரதட்சிண முறையாகவும் ஒரே அக்னி குண்டபூஜையும் செய்யலாம்.

448. நன்கு புசித்த சண்டரூபம் தரித்த பிரம்மசாரி தன்னை சண்டன் போல் தியானித்து த்வஜ தண்டத்தை சேதனம் செய்தாலும் செய்யலாம்.

449. உத்ஸவம் அல்லது பவித்ரம் உத்ஸவம் அல்லது இரண்டையும் செய்யலாம். ஒன்பதாவது நாளில் கொடிக்காக அங்குரார்ப்பணம் செய்து ஏழாவது நாளில் உத்ஸவத்திற்காக அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும்.

450. தீர்த்தாங்குரம், அதே எண்ணிக்கையில் உடைய நாட்களில் செய்யவும் என்ற இந்த முறை எங்கும் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கலாம் நடுப்பகலில் த்வஜ பூஜையையும் ஸோம கும்பத்தில் ஜலத்தை

451. வைத்து பூஜையையும் அந்த கும்ப பூஜை ராத்திரியில் செய்ய வேண்டும். ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட சுவாமியை கிராமத்திலிருந்து வெளியே எடுத்து செல்லுதலும்

452. வேட்டையாடும் உத்ஸவம் விருப்பப்பட்ட காலத்திலும் செய்ய வேண்டும். காமிகாகமத்தில் வருடமானது சவுரம், சாந்தரம் என்பதாக இருகூறாக வகுக்கப்பட்டுள்ளது.

453. சவுரமானம் உயர்ந்ததாகும். சாந்தரமானப்படி செய்வது நடுநிலையாகும். சாவனம் என்ற வருஷக் கணக்கு முறையானது அதமமாகும். ஸாவனமானத்தால் பூஜைகள் செய்யக்கூடாது.

454. உத்ஸவம் முதலிய காலங்களில் பிரதிஷ்டை முதலியவைகளை செய்யக்கூடாது. சாந்தி, ஹோமம் முதலியன செய்து பிரதிஷ்டை முதலியவைகள் வேண்டுமானால் செய்யலாம்.

455. அல்லது மற்றொரு முறையால் உத்ஸவம் சொல்லப்படுகிறது. த்வஜா ரோஹண பூர்வமாக ஒரு கொடியை ஏற்றி

456. கொடியேற்றிய அதே தினத்தில் சூரியன் மறைந்தபொழுது யானை முதலியவைகளில் ஏறப்பட்டவனால் தீர்த்த தினத்தை அறிவிக்கப்படவேண்டும்.

457. மனைவியோடு கூடி யானையின் மேல் ஏறிய சண்டாளன் பேரி முரசை அடித்துக்கொண்டு மிகவும் சப்தமாக கொடியேறிய தினத்திலேயே இரவிலேயே அறிவிப்பை செய்ய வேண்டும்.

458. அஸ்திர தேவரிடத்தின் முன்பாக முன்பு கூறப்பட்டபடி தேவதைகளை ஆவாஹித்து கிராம பலியின்றி தீர்த்த நாளை தெரிவித்து

459. ஆலயத்திலே இதைத் தெரிவித்து அவ்விடமிருந்து நீர் நிலையை அடைந்து அங்கு இரண்டு ஸ்தண்டிலத்தை அமைக்க வேண்டும்.

460. ஒரு இடத்தில் சூலம் மற்றொரு இடத்தில் கலசங்களை வைக்க வேண்டும். ஒன்பது கலசங்களால் சூலத்தை அபிஷேகம் செய்து அந்த சூலத்தை மூழ்க வைக்க வேண்டும்.

461. திருக்கோயிலை அடைந்து அந்த நாளிலிருந்து பத்தாவது நாளிலோ, அங்குரார்பண பூர்வமாக யாகாரம்பம் மறுபடியும் செய்யவேண்டும்.

462. ஒரு ஹோமத்தோடு கூடியதாக கிராமபலி முதலியவைகளை போடவேண்டும். தினமும் காலையில், மாலையிலும் ஸ்வாமி திருவீதியுலா இருக்க வேண்டும்.

463. ஐந்தாவது நாளில் அஸ்தர மந்திரத்தால் அபிமந்த்ரணம் செய்யப்பட்ட மணலை உள்ளும், வெளியேயும் எங்கும் இரைத்தல் வேண்டும்.

464. பதினெட்டாவது தினத்தில் அங்குரார்பணம் செய்யவேண்டும். தீர்த்தத்திற்காக பதினெட்டாவது தினத்தின் இரவில் ஆலயத்தின் எட்டு திசைகளிலும்

465. திக்பாலகர்களுடைய வாகனங்களால் அடையாளம் செய்யப்பட்ட அல்லது அவர்களின் ஆயுதத்தால் அடையாளமிடப்பட்ட அல்லது விருஷபத்தை அடையாளமாக உடைய எட்டுக் கொடிகளை ஆசார்யன் ரித்விக்குகளோடு கூடியவனாய் ஏற்றவேண்டும்.

466. அது முதற்கொண்டு ஹோமம் சிறப்பாக செய்யவேண்டும். அதன் முடிவில் பலிதானமும் திருவீதி உலாவும் செய்யவேண்டும்.

467. இவ்விதம் ஒன்பது நாட்கள் செய்து பத்தாவது நாளில் தீர்த்தம் ஆகும். எட்டு கொடிகளையும் அன்று இரவே அவரோஹனம் செய்து

468. அன்றையிலிருந்து பல வாத்யங்களோடும் பல இசைகளோடும் பல ஆடல்களோடும்,

469. முறைப்படி கிராம பிரதட்சிணம் செய்ய வேண்டும். ஏழாவது நாள் இப்படி செய்து பிறகு தீர்த்தக்கரையை அடைந்து

470. ஜல தீரத்தில் இரண்டு ஸ்தண்டிலங்களை வைக்கவேண்டும். ஒன்றில் சூலத்தையும் மற்றொன்றில் கலசங்களையும் ஸ்தாபனம் செய்யவேண்டும்.

471. ஒன்பது கலசங்களால் சூலத்தை அபிஷேகம் செய்து அந்த சூலத்தை ஜலத்தில் முழுக வைக்கவேண்டும். எல்லா வாத்யங்களுமின்றி ஆலயத்தில் நுழைந்து

472. ஏழுநாட்களுக்கு பிறகு மவுனமாகச் சென்று சண்டிகேஸ்வரரை முன்னிட்டுக் கொண்டு தெய்வ பிம்பங்களோடு சென்று

473. பலி ஹோமம் இல்லாமல் ஏழுநாள் பூஜை செய்ய வேண்டும். ஸ்நபனம் ஹோமம், இவைகளோடு ஏழுநாள் இருக்கவேண்டும்.

474. அதன் முடிவில் திரிசூலத்தோடு தீர்த்தம் கொடுக்கவேண்டும். அன்று இரவில் முன் சொன்ன முறையில் கொடி இறக்குதல் செய்யவேண்டும்.

475. வீதி உலா இல்லாவிட்டாலும் இவ்விதம் விதியை செய்யவேண்டும். புதிய அன்னலிங்கம் செய்தாவது திக்பாலகர்கள், அவர்கள் அஸ்திர தேவதைகளை

476. அந்த திரிசூலத்தினாலோ பலியை கிராமங்களில் செய்யலாம். நித்யோத்ஸவத்தில் அன்னலிங்கம் முதலியவைகளை பத்து எண்ணிக்கைகளாகவோ செய்ய வேண்டும்.

477. பன்னிரண்டு ஆண்டுகளின் முடிவில் த்வஜ ஸ்தாபனம் செய்யலாம். தேய்மானம் மலினமடைந்தால் அதை எடுத்து வேறு புதிய கொடிக் கம்பத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் மஹோத்ஸவ விதியாகிற ஆறாவது படலமாகும்.

 படலம் 6/5 : தொடரும்...

படலம் 6/4...

படலம் 6: மஹோத்ஸவ விதி

301. எல்லா வாத்யங்களோடும் ஆலய பிரதட்சிணம் செய்து வர வேண்டும்.

302. ஸ்தண்டிலத்தின் மேல் வைத்து புண்யாக வாசனம் செய்ய வேண்டும். அர்க்ய ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து சிவமந்திரத்தால் அபிமந்திரிக்க வேண்டும்.

303. சந்தனம் முதலியவைகளால் அர்ச்சித்து கவசமந்திரத்தால் அவகுண்டனம் செய்ய வேண்டும். சமித், நெய், ஹவிஸ் எள், பொறி, வெல்லம் இவைகளினாலோ

304. மூலமந்திரத்தால் நூறு ஆஹுதிகள் செய்தோ அஸ்த்ர ஹோமமோ செய்ய வேண்டும். ஐந்து அக்னியோடு கூடிய ஹோமம் எல்லாவற்றிற்கும் நன்மை பயக்கூடிய ஹோமம் ஆகும்.

305. பிராயச்சித்தம் அகோரமந்திரத்தால் செய்து பூர்ணாஹுதியோடு கூட ஸத்யஜாத மந்திரத்தால் ஸ்பர்சித்து சந்தனம் இவைகளை மூலமந்திரத்தால் கொடுக்க வேண்டும்.

306. கன்றுடன் கூடிய பசு, தங்கம், வெங்கல பாத்திரம், நல்ல வஸ்திரம் எள், நெய், அல்லது மற்றவையோ ஆசார்யன் திருப்திக்காக கொடுக்க வேண்டும்.

307. ஜலத்தானத்துடன் கூடியதாக யாத்ரா தானம் செய்ய வேண்டும். மஞ்சள் உப்பு, எள், கடுகு, இவைகளும்

308. தானம் செய்பவனுக்கு நன்மை தரக்கூடிய தாம்பூலம், அரிசி, சந்தனம், நெய், எள், எண்ணை, இவைகள் சிவதானம் என்று சொல்லப்படும்.

309. யோகிகள், தியானம், செய்பவர்கள், சிவஞானம், அறிந்தவர்கள் இப்படிப்பட்டவர்களுக்கு அந்த பூஜை தானம் எல்லா உயிரினங்களுக்கும் நன்மை பயப்பது ஆகும்.

310. சிறப்பு நாட்களில் தலைப்பாகை வஸ்திரம் முதலியவைகளை ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு தானத்தையும் ஜலத்தோடு சேர்ந்ததாக கொடுக்கப்படவேண்டும்.

311. சிறந்த அறிஞனான ஆசார்யனுக்கு உஷ்ணீஷம் முதலியவைகளை கொடுக்க வேண்டும். ஆசார்யனே சிவனாக ஆவான். ஆகையால் ஆசார்யனுக்கு சிவனுக்கும் வேறுபாடு இல்லை.

312. எவன் இவர்கள் இருவருக்கும் பேதத்தை பார்க்கிறானோ அவன் தாழ்வை அடைவான். எல்லா ஆகமங்களை அறிந்தவனும் அமைதியானவனும் சிவலிங்க வழிபாட்டில் ஈடுபட்டவனும்

313. நித்ய ஹோமத்தோடு கூடியவரும் சிவ பூஜைக்கு நிவேதனம் தயார் செய்பவனும் கிருஹபலி முதலியவைகளை செய்பவரும் பிøக்ஷ அளிப்பவரும் நிந்தனையில்லாதவருமான ஆசார்யனை சிவனாகவே அறிய வேண்டும்.

314. அதிகம் கூறுவானேன்? எங்கு எப்பொழுது இப்பேர்ப்பட்ட ஆசார்யன் திருப்தி அடைந்தவனாக ஆகிறானோ அப்பொழுது பொருள் அளித்தவனுக்கு அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித பெரும் பயனடையும் தன்மை ஏற்படுகிறது.

315. இது உண்மை, உண்மை திருப்பியும் உண்மை என மூன்று முறையாக உண்மை என்று நிச்சயிக்கிறேன். அவரின் பொருளை அபஹரிப்பவன் மூவுல கிலும் திருடன் எனப்படுவான்.

316. தேவனின் சொத்தை அபஹரிப்பதைக் காட்டிலும் ஆசார்யனுக்கு தரவேண்டியதை கொடுக்காமலிருந்தால் நூறு கல்பகோடி காலமானாலும் அந்த பாபத்திலிருந்து மீள முடியாது. ஆகையால் பாபத்தை அறிந்து

317. அவரால் சிரத்தையுடன் கொடுக்கப்பட்ட பொருள் வாங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவன் பாபத்திலிருந்து மீண்டு விடுகிறான் என்ற சொல் கேட்டிருப்பதால் தானம் கிரஹிக்கத் தக்கது. இவ்வாறு யாத்ராதானம் செய்து நைவேத்யங்கள் நிவேதனம் செய்ய வேண்டும்.

318. யாத்ராதானம் சிவலிங்க பிரதிஷ்டை முதலியவைகளில் முதலிலும் முடிவிலும் முக்யம் ஆகும். மற்ற இடங்களில் அரசனின் வெற்றிக்காக செய்யத் தகுந்தது.

319. கிரஹணம் முதலிய காலங்களில் இது மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. எல்லா அலங்காரத்தோடு கூடியதாகவும் முரவ வாத்யத்தோடு கூடியதாகவும்

320. சிவாச்சாரியார்களோடு கூடியவராகவும் பல்லக்கில் ஆரோஹணம் செய்வித்து ஐந்து பிரகாரங்களிலோ அல்லது அதற்கு வெளியிலோ பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

321. எல்லா மங்களங்களோடு கூடியும் அரச வேஷம் தரித்த காவலர்களோடும் பலவகையான ஆடல் பாடல்களோடு கூடியதாகவும்

322. பல்லக்கில் ஏறியவர்களாலும் ஸாமர்த்யமுள்ளவர்களாலும், முன்னும் பின்னும் தொடர்ந்து செல்பவர்களாலும், புஷ்பங்களால், சந்தன நீர்களால் சேவித்து வருபவர்களாலும் ஸ்வாமி வீதிவலம் வருதல் வேண்டும்.

323. அரச வேஷம் தரித்த தன்மையுள்ளவனோடும் முரவ வாத்யம் இல்லாமல் பிறகு ஆலயத்தின் உள்ளே சென்று முன் சொன்னபடி தேவனை ஸ்தாபனம் செய்யவேண்டும்.

324. ரக்ஷõ சூத்திரத்தை அவிழ்த்து விட்டு சந்தனம், புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும். அதன் முடிவில் சுவாமி ஊர்வலமோ அல்லது அதற்கு முன்பு ஊர்வலமோ செய்யலாம்.

325. இரவின் முடிவில் தேவதேவனை நடேச்வரனை தேரில் ஏற்றி முன்பு சொன்ன முறையில் கிராமாதி பிரதட்சிணமும் செய்விக்க வேண்டும்.

326. முடிவில் மறுபடியும் ஸ்னபனம் செய்ய வேண்டும். மற்ற பிம்பங்களுக்கும் சமான முறை இதேதான்.

327. தீர்த்த நடுவில் முதல் நாள் அல்லது அதற்கு முதல்நாளோ யுத்தாரம்பம் முதல் வேட்டையாடுதல் முடிய

328. மற்ற திருநாட்களுக்கான உற்சவ விக்ரகத்தினால் மறுபடியும் செய்ய வேண்டும். சிறப்பாக ஸ்நபனம் முன் சொன்னபடி மறுபடியும் செய்ய வேண்டும்.

329. அந்த இரவில் தீர்த்தத்திற்காக முன் சொன்ன முறையில் அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும். தீர்த்த உத்ஸவத்திற்காக இரவில் ஒன்பது கலசங்களை

330. சூத்ரத்தோடும் கூர்ச்சம், மாவிலை, தேங்காய் வஸ்திரம், மற்றும் வஸ்திரமில்லாமலோ கலசங்களையும் பிரதானத்திற்கு மட்டும் வஸ்திரத்துடனோ வைக்க வேண்டும்.

331. இரவில் தீர்த்தம் அல்லது ஸ்நான சமயத்திலோ காலையில் உதயத்திற்கு முன்போ தீர்த்த கார்யம் செய்யவேண்டும்.

332. தீர்த்த ஸ்தானத்தை அடைந்து பூமியை சுத்தம் செய்து இரண்டு ஸ்தண்டிலம் செய்து சூலத்திற்கு ஒன்று கலசத்திற்கு ஒன்றாக செய்ய வேண்டும்.

333. மேற்கில் சூலத்தையும் கிழக்கில் கலசங்களையும் வைக்க வேண்டும். புண்யாகம் செய்து முன்போல் தேவர்களை அழைக்க வேண்டும்.

334. திருசூலத்தில் எல்லா தீர்த்தங்களும் எல்லா துர்க்கைகளும் கூடியதாகவும், நடுவில் மனோன்மணியையும் சந்தனம் புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.

335. அந்த ஜலத்தால் சூலத்தை அபிஷேகம் செய்து நதியோ அல்லது நீர்நிலைகளில் சென்று கங்கை முதலியவைகளை ஆவாஹணம் செய்து தீர்த்த ஸங்கிரஹணம் செய்யவேண்டும்.

336. ஹே தேவி! கங்கையே! யமுனையே! நர்மதையே! ஸரஸ்வதியே! ஸிந்துவே! கோதாவரியே! காவேரி இந்த நீர் நிலைகளில் (ஆற்றில்)

337. இறைவனுடைய தீர்த்த உற்சவத்திற்கு இங்கு இருந்து அருள்பாலிக்க வேண்டும். சூரியன் மறையும் வரை பாபங்களை போக்க இங்கு இருந்து அருள வேண்டும். என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

338. தீர்த்தம் எடுத்து அதன் நடுவில் கிழக்கு நோக்கிய தலை உடையதாக சிவமந்திரத்தை சொல்லிக் கொண்டு திரிசூலத்தை ஸ்நானம் செய்விக்க வேண்டும்.

339. திரிசூலத்தை ஜலத்திலிருந்து எடுத்து ஜலத்தின் கரையில் வைக்க வேண்டும். தீர்த்த ஸங்க்ரஹணம் செய்து தீர்த்தவாரியை செய்ய வேண்டும்.

340. வெகுதூரத்தில் ஜலமிருப்பினும் தீர்த்தவாரி செய்ய இயலாவிடினும் ஆலயத்திலேயே செய்யவும் எல்லா அலங்காரங்களோடு கூடியதாக ஆலயத்தினுள் நுழைந்து

341. முன் சொன்ன முறையில் ஹோமம் பலிதானம் இவைகள் செய்து தேவ ஆஸ்தான மண்டபத்தில் சூர்ணோத்ஸவம் செய்ய வேண்டும்.

342. இறைவனுக்கு எதிரில் இரண்டு ஸ்தண்டிலம் செய்ய வேண்டும். மேற்க்கில் திரிசூலம், மற்றொரு இடத்தில் உரலை வைக்க வேண்டும்.

343. அதன் நடுவில் மஞ்சளை பொடி செய்வதற்காக வைக்கவேண்டும். வஸ்திரங்களை அணிவித்து வைத்து உரல் நடுவில் மஞ்சள் பொடியையாவது வைக்க வேண்டும்.

344. முதலில் திரிசூலத்தை பூஜை செய்து விட்டு இரவு அதிவாஸம் செய்து உரலில் ஆதார சக்தியை பூஜை செய்ய வேண்டும்.

345. உலக்கையில் ஈசனையும் பூஜை செய்து கிருதசிரோர்பணம் செய்து அருகம்பில், புஷ்பம், நெல், அரிசி, இவைகளோடு

346. இறைவனுக்கு எதிரிலோ அல்லது நேராகவோ சூலமும் (அஸ்திரதேவர்) உரலும் உலக்கையும் இருக்கலாம்.

347. வஸ்திரத்துடனோ அல்லது இல்லாமலோ உலக்கை இருக்கலாம். முதலில் உலக்கையை பூஜை செய்து பிறகு உரலை பூஜை செய்ய வேண்டும்.

348. சிவதத்வம் முதலாகவோ, அல்லது ஆத்ம தத்வம் முதலாகவோ பூஜித்து அருகம்பில்லை ஆசார்யனால் அல்லது அவரால் ஏவப்பட்டவரால் வைக்கப்படவேண்டும்.

349. அரசன் அரிசி, இவர்களாலும் அவர்களால் ஏவப்பட்ட பெரியோர்கள் புரோஹிதர்கள் பக்தர்களாலும் உலக்கையால் இடிக்கப்படவேண்டும்.

350. அரச சன்னதியில் தொண்டு செய்கின்ற பெண்களாலும் எனக்கு பணிவிடை செய்யும் கன்னிகைகளாலும் அல்லது அரசர்களால் ஏவப்பட்ட ருத்திர கன்னிகைகளாலும்

351. தாசிகளாலும் (தொண்டு செய்பவர்களாலும்) பக்தர்களாலும் நேர்மையானவர்களாலும் மற்றும் சுத்தமானவர்களாலும் ஆசார்யன் உத்தரவால் அருஹம்பில் கொடுக்கப்படவேண்டும்.

352. மற்றவிடத்திலும் தெய்வங்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும், ரக்ஷõபந்தனமத்தியிலும் அதன் ஆரம்பத்தில் ஸ்நான காலத்திலும் மங்களத்திற்காக இது செய்யத் தகுந்தது.

353. அதன் முடிவில் மஞ்சளை அஸ்த்ர மந்திரத்தை மூன்றுமுறை சொல்லி இடித்து அருகம்பில்லிற்கு சொன்ன முறையிலேயே மஞ்சளை சூர்ணம் செய்ய வேண்டும்.

354. அந்த சூர்ணத்தை சிவமந்திரத்தை நினைத்து அதிலிருந்து எடுத்து பலவிதமான பாத்திரங்களில் லிங்கத்திற்காகவும் பிரதிமைக்காகவும் வைக்க வேண்டும்.

355. உத்ஸவ பிரதிமைக்காகவும், திரிசூலத்திற்காகவும், பரிவாரத்திற்காகவும் ஒருபாகமும், முறையாக பிரிக்க வேண்டும்.

356. மீதமுள்ளதை ஜனங்களுக்காக கலசங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். வாஸனையுடைய தைலத்தை மட்டுமோ தனி பாத்திரங்களில் எடுத்துக் கொள்ளவேண்டும். அந்திரமந்திரத்தால் பிரோக்ஷித்து ஹ்ருதய மந்திரத்தினால் பூஜிக்க வேண்டும்.

357. தேனு முத்திரையில் - அம்ருதீகரணம் செய்து தாம்பூலம் முதலியவைகளை கொடுத்து முன் சொன்ன முறையிலே ராத்திரி சூர்ணத்தையும் கொடுக்க வேண்டும்.

358. சூர்ணோத்ஸவத்தை திரிசூலத்தால் கிராமத்திலோ ஆலயத்திலோ ஆரம்பத்திலும் விரைவாக செய்யக் கூடிய பரிசாரகர்களால் செய்ய வேண்டும்.

359. ஸமுத்ரம் முதலிய அதிகமான ஜலமுள்ள இடங்களில் செய்யும் தீர்த்த உத்ஸவம் மஹாதீர்த்தம் எனப்படும். சிறிய நீர்நிலைகளில் செய்வதை கவுதுக தீர்த்தம் போல் செய்யக் கூடாது.

360. கொட்டகை முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பிம்பத்தோடும் கலச ஸ்தாபனத்தோடும் தேவதைகளை அழைப்பதோடும் கூடியதாகவும்

361. தீர்த்த கார்யத்திற்காக விக்ரஹமின்றியும் தீர்த்தவாரி செய்யலாம் ஜலத்தின் நடுவில் இருந்து தீர்த்த ஸங்கிரஹணம் செய்யவில்லை எனில்

362. தீர்த்த ஸங்க்ரஹணம் செய்து மஹா தீர்த்தமாக செய்ய வேண்டும். ரக்ஷõ ஸூத்ர விஸர்ஜனம் செய்து பக்தர்களுடன் கூடி

363. சூலம் பேரம், இவைகளோடு மஹா தீர்த்தம் செய்ய வேண்டும். பல தேவாலயங்களிலிருந்து வந்த திரிசூலங்களோடு கூடவோ

364. திரிசூலங்கள் தேவதைகளோடு கூடியதாகவுமோ செய்யலாம். அல்லது பத்மம், என்ற அஸ்திரங்களோடும் சக்ரம் கூடியதாகவும் செய்யலாம்.

365. மஹாமோடி தேவதையுடன் இருப்பின் ராத்திரியில் தீர்த்தம் அனுஷ்டிக்க வேண்டும். பகலிலும் தீர்த்தோத்ஸவம் செய்யலாம். மாத்யாஹ்னிக கால தீர்த்தோத்ஸவம் உத்தமமாகும்.

366. முற்பகலில் தீர்த்தம், மத்யமமாகும். பிற்பகலில் அதமமாகும். சந்திரகிரஹணத்தின் பொழுது தீர்த்தத்தை ராத்திரியில் செய்யும் தீர்த்தம் உத்தமமாகும்.

367. அது வேண்டும் மோடி தேவதையுடன் இருந்தால் உத்தமோத்தமமாகும். ஸமுத்ரத்தில் திதிபிரதானமாகவும் மற்ற இடங்களில் நக்ஷ்த்ரபிரதானமாகவும் ஆகும்.

368. திதி நக்ஷத்ரம் இரண்டும் சேர்ந்து வருவது அரிதாகும். முற்பகலிலோ பிற்பகலிலோ திதி, நக்ஷத்ரம் சேர்ந்திருப்பதை எடுத்துக்கொள்ளவும்.

369. சமுத்திரம் அல்லது நதிகளில் நடுப்பகலில் தீர்த்தம் கொடுப்பது சிறந்தது. நக்ஷத்ரமோ திதியோ பகலில் எது அதிகம் உள்ளதோ அதுவே ஏற்றுக்கொள்ள தகுந்தது.

370. இரண்டு நாட்களில் நக்ஷத்ரம் திதி இவைகளில் நல்ல சேர்க்கை ஏற்படுமானால் சுபயோகங்களுடன் கூடிய சமயத்தில் செய்யலாம் தீர்த்த நக்ஷத்ரம் ஒரு மாதத்தில் இருமுறை வந்தால் பின்னால் செய்வதும் சிறந்ததாகும்.

371. அங்கும் முன்பு உள்ளதில் யோகம் சேர்ந்திருக்குமேயானால் முன்பு உள்ளதையே எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த மாதத்தில் எந்த நக்ஷத்திரத்தில் முன்பு அனுஷ்டிக்கப்பட்டுள்ளதோ

372. அந்த மாசத்தில் அந்த நக்ஷத்திரத்தில் பின்பும் செய்ய வேண்டும். ஸ்வாயம்புவ, தைவிக, ஆர்ஷிக லிங்கம்.

373. மானுஷ லிங்க விஷயத்தில் முன்பு அனுஷ்டித்த தீர்த்த நக்ஷத்திரம், மாத நக்ஷத்ரம் 2 மாதத்தில் ஏற்பட்டால் முன்பு கொடுத்த திதியோ நக்ஷத்திரத்தையோ எடுத்துக் கொள்வது சிறந்தது.

374. ஜலத்திற்கு நடுவில் தீர்த்தத்தை ஆசார்யன் செய்ய வேண்டும். அவகாஹனம் இரண்டாகச் சொல்லப்படுகிறது. பேரத்துடன் கூடியோ (பேரம்) பிம்ப மின்றியோ தீர்த்தவாரி செய்யலாம்.

375. கரையில் தனிமையாக விக்ரஹத்திற்கு ஸ்னபனம் வைத்தும் செய்யலாம். சந்தனம் முதலிய உபசாரங்களால் பூஜை செய்யலாம்.

376. நைவேத்யம் அங்கேயோ அல்லது ஆலயத்திலுமோ கொடுக்கலாம். தீபாராதனைக்கு பிறகு எல்லா மங்களங்களோடும் நந்தவனங்களில் இறைவனை சந்தோஷபடுத்த வேண்டும்.

377. கிராமபிரதட்சிணம் செய்தாலும் செய்யலாம் அல்லது எல்லா பக்த ஜனங்களோடும் சேர்ந்துமோ இல்லாமலும் பிரதட்சிணம் செய்தாலும் செய்யலாம்.

378. எல்லா மங்கள வாத்யங்களோடும் பூர்ணாஹூதியை செய்து சுத்தமான பரிசாரகர்களோடு உள் சுற்று சுற்றி

379. இறைவனையும், இறைவியையும் வித்யேஸ்வரர்களோடு கூட கர்பகிரஹத்தில் வைத்து லிங்கத்தில் பீடத்தில் முறையாக

380. இறைவனையும் இறைவியும், பூஜித்து சுற்றிலும் வித்யேஸ்வரர்களை முறையாக பூஜிக்க வேண்டும். யாகசாலையிலுள்ள அந்தந்த ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து சுத்தமான தீர்த்தத்தால் இறைவனை அபிஷேகம் செய்விக்க வேண்டும்.

381. பிறகு இறைவனை சக்திக்கேற்றவாறு பூஜிக்க வேண்டும். அன்று இரவு த்வஜ அவரோஹணம் (கொடி இறங்குதல்) செய்வது சிறந்தது ஆகும்.

382. மூன்றாவது ஐந்தாவது அல்லது ஏழாவது ஒன்பதாவது நாளில் பதினொன்று பதினான்கு அல்லது பதினைந்தாவது நாளில்

383. அல்லது பதினேழு அல்லது பத்தொன்பதாவது நாளில் செய்யலாம்.

384. மூர்த்தி ஹோமம், பிறகு திசாஹோமம் செய்ய வேண்டும். த்வஜம் முதல் தீர்த்தம் வரையில் தின எண்ணிக்கை இருக்குமேயானால்

385. மறுபடியும் உத்ஸவம் ஆரம்பித்து தீர்த்தம் வரையில் எல்லாம் செய்ய வேண்டும். கொடியிறக்கும் தினத்தில் சுத்த ஸ்நபனம் செய்ய வேண்டும்.

386. லிங்கம், மூர்த்தி, விருஷபம், சூலம், கொடி இவைகளுக்கு அர்ச்சனைபடி ஸ்நபனம் செய்யவேண்டும். புஷ்பமாலைகளால் கோயிலை அலங்கரிக்கவேண்டும்.

387. கர்ப்பகிரஹத்திலிருந்து கோபுரம் வரையில் தன் சக்திக்கு தக்கவாறு கருமையான நற்புகையுடன் கூடிய தூபத்தால் உபசரிக்க வேண்டும்.

388. பலவகை நைவேத்யங்களை முறைப்படி கொடுத்து இறைவனை மகிழ்விக்க வேண்டும். பிறகு சண்டிகேஸ்வர பூஜையை ஹோமத்துடனோ அல்லது ஹோமமில்லாமலோ செய்யலாம்.

389. பிறகு கிராமபலியை அன்ன லிங்கத்தோடு கூடியதாகவும் திரிசூலத்தோடு சண்டநாதரோடு கூடியவராகவும் செய்யவும்.

390. பேரிகை, மத்தளம், படஹம், காளஹம், ஸ்ரீகண்டம், சங்கம், போன்ற வாத்யங்களை பலிகாலத்தில் வாசிக்க வேண்டும்.

391. கிராமத்தை சுற்றியுள்ள பிரம்மா முதலிய தேவர்களை விஸர்ஜனம் செய்து திவஜத்தின் ஆரம்பத்தில் அல்லது முடிவில் பலி கொடுக்க வேண்டும்.

392. கொடியை இறக்கி அந்த விருஷபத்தை விருஷப மூர்த்தத்தில் சேர்க்கவேண்டும். த்வஜாவரோஹணம் செய்யும் முன்போ செய்தபின்போ பலி கொடுக்க வேண்டும்.

393. யஜமானர் ஆசார்யனை வஸ்திரம், பவித்ரம், தர்ஜனி இவைகள் கொடுத்து கவுரவிக்க வேண்டும். அங்குரார்ப்பண காலத்தில் த்வஜாரோஹண காலத்திலும்

394. யாக அதிவாஸ காலத்திலும் ஹோம ஆரம்பகாலத்திலும் இரண்டு ஸந்திகளிலும் அல்லது ஒரு சந்தி கால பூஜைகளிலும் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ

395. நிருத்த மூர்த்தி (நடராஜர்) உத்ஸவத்திலும் தீர்த்தத்திலும் சுத்த ஸ்நபன காலத்திலும் தட்சிணை கொடுக்க வேண்டும். அந்த தட்சிணை மூன்று விதமாகும்.

396. ஆசார்யனுக்கு உயர்ந்த தட்சிணை கொடுக்க வேண்டும். ஐந்து நிஷ்கம் அதமம் இரண்டு மடங்கு மத்யமம், மூன்று மடங்கு உத்தமம்.

397. அதில் பாதி எண்ணிக்கையுடன் கூடியது அதிகமாக சொல்லப்படுகிறது. மேற்கூறியதில் இரண்டு மடங்காக கொடுப்பதும் உத்தமமென்று கூறப்பட்டுள்ளது. வேறு விதமாகவும் தட்சிணை கூறப்படுகிறது.

398. பிரதி தினமும் பாதி நிஷ்கமோ, அதில் பாதியோ கொடுக்க வேண்டும். பக்தோத்ஸவம் பிறகு செய்யலாம் அல்லது பதினைந்து நாட்களுக்கு முன்பாகவோ செய்ய வேண்டும்.

399. உத்ஸவத்தின் ஆரம்பம் அல்லது நடுவிலோ பக்த உத்ஸவம் செய்யலாம் வருடாந்திர உத்ஸவத்தில் மாஸோத்ஸவமானது

400. பலிஹோமம் இவைகளோடு கூடியதாகவுள்ள திருவீதியிலாவுடனுமோ பலியின்றியுமோ பிம்ப திருவீதி உலா செய்யலாம்.

படலம் 6/4 :தொடரும்

படலம் 6/3...

படலம் 6/3 : மஹோத்ஸவ விதி

201. பிரம்மாவிற்கு பிரியமான பாயாசம், மஞ்சள்பொடி, தாமரை புஷ்பம், பொறி, இவைகளை இரண்டாவது நாள் பிரம்மாவிற்கு பலி கொடுக்கப்பட வேண்டும்.

202. நெய்கலந்த வாழைப்பழத்தோடு கூடிய எள் அன்னத்தை பூதங்களின் திருப்திக்காக மூன்றாம் நாளில் பலிகொடுக்க வேண்டும்.

203. மஞ்சள் பொடியோடு கூடியதும், தேங்காயோடு கூடியதுமான எள் அன்னத்தை கந்தர்வர்களின் பிரியத்திற்காக நான்காவதுநாள் பலி கொடுக்க வேண்டும்.

204. தினை கலந்ததும் இந்தர வல்லியோடு கூடியதுமான நெய்யை இந்திரன் பிரியத்திற்காக ஐந்தாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

205. நெய்யோடு கூடியதும் பலாச்சுளைகளோடு கூடியதுமான மூங்கிலரிசி அன்னத்தை ரிஷிகளின் பிரீதிக்காக ஆறாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

206. நெய்யோடும் கூடியதாகவும் கையாந்தரை பழத்தோடு கூடியதுமான சர்க்கரைப் பொங்கலை லட்சுமி பிரீதிக்காக ஏழாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

207. உளுந்து சாதம் நெய்யோடும் கூடியதாகவும், ராக்ஷஸர்களின் பிரீதிக்காக எட்டாவது நாள் பலி கொடுக்கவேண்டும்.

208. சுத்தான்னத்தை தயிர், ஸத்துமா, பொறி, புஷ்பம், இவைகளோடு சிவனுடைய பிரீதிக்காக ஒன்பதாவது நாளில் பலி கொடுக்கவேண்டும்.

209. மற்றொரு முறையில் தேவதைகளுக்கு திரவ்யங்கள் சொல்லப்பட்டுள்ளன. சுத்தான்னம், தயிர், இட்லி, அப்பம் இவைகளோடும் கூடியதாகவும்

210-211. பழங்களோடும், வெல்லம், இவைகள் சேர்த்து கணபதிக்கு பிரியமானதாக ஆகும். பழங்களோடு மஞ்சள்பொடி, நெய்சாதம், தயிர், கலந்த சத்துமா, எள்சாதம் இவைகள் பூதங்களுக்கு பலியுமாகும்.

212. தாமரை கிழங்கு, தர்பை நுனி, நெய்கலந்த அன்னமிவைகளை வாழைப்பழத்தோடு கூடியதாக ரிஷிகளுக்கு பலி கொடுக்க வேண்டும்.

213. மின்னிக்கொடி, மஞ்சள், தினையுடன் நெய் சேர்த்து நான்காவது நாள் இந்திரன் திருப்திக்காக பலி கொடுக்கவேண்டும்.

214. பாயாசம், மஞ்சள்பொடி, தாமரை புஷ்பம், பொறி இவைகளை ஐந்தாவது நாள் பிரம்மாவின் ப்ரீதிக்காக பலி கொடுக்கவேண்டும்.

215. நெய்யோடு கூடிய சர்க்கரை பொங்கல் கையாந்தரை பழம் இவைகளோடு கூட விஷ்ணு பிரீதிக்காக ஆறாவது நாள் பலிகொடுக்க வேண்டும்.

216. எள்ளு சாதம் நெய் கலந்து தேங்காய், பழம் இவைகளோடு கூட சிவபிரீதிக்காக ஏழாவது நாள் பலி கொடுக்கவேண்டும்.

217. மூங்கிலரிசி அன்னத்தை தயிர் கலந்து வாழை, பலா இவைகளோடு கூட ஈஸ்வர திருப்திக்காக எட்டாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

218. சுத்தான்னம், தயிரோடு கூடி பொறி புஷ்பம் இவைகளோடு கூடியதாக சண்டேசரின் திருப்திக்காக ஒன்பதாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

219. ஒன்பது நாட்களுக்கு திரவ்ய பொருட்கள் சொல்லப்பட்டன. அதற்கு பிறகு பன்னிரெண்டு நாட்களுக்கு சொல்லப்படுகிறது.

220. வெண்பொங்கல் இட்லி, மோதகம், வாழை, வெல்லம், இவைகள் சேர்த்து, கணபதி மந்திரத்தை நினைத்து முதல்நாள் பலி கொடுக்க வேண்டும்.

221. மாம்ஸம் எள், அப்பம், நெய், மீன், செம்பருத்தி புஷ்பம் இவைகளோடு கூடிய சிவப்பு அன்னத்தை

222. பைசாச மந்திரத்தை நினைத்து இரண்டாவது நாள் பலி கொடுக்கவேண்டும். பாயாஸம், ஸத்துமா, புஷ்பம் தாமரை பூ, இவைகளோடு கூட

223. பிரம்ம மந்திரம் சொல்லி மூன்றாவது நாள் பலி கொடுக்கவேண்டும். எள்சாதம், நெய், ஸத்துமா, இட்லி, இவைகளோடு கூட

224. கந்தர்வ மந்திரத்தை சொல்லிக்கொண்டு நான்காவது நாள் கொடுக்கவேண்டும். மின்னல் கொடி, மஞ்சள் சாதம் நெய்யோடும், பொறியோடும் கூட

225. பூத மந்திரங்களைச் சொல்லிக்கொண்டு ஐந்தாவது நாள் கொடுக்கவேண்டும். வெல்லம், நெய், தேங்காய் பழம் இவைகளோடு கூட

226. ஸ்கந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு ஆறாவது நாள் கொடுக்கவேண்டும் தர்பை நுனி, நெய் சுத்தான்னம் தயிரோடு, கூட

227. ரிஷிகளின் மந்திரங்களை சொல்லிக் கொண்டு ஏழாவது நாள் பலி கொடுக்கவேண்டும். பால்சாதம், அரிசிமாவு கரும்பு துண்டுகளோடு கூட

228. நாக மந்திரங்களை சொல்லிக்கொண்டு எட்டாவது நாள் பலி கொடுக்கவேண்டும். தயிர் சாதம், வெல்லம் மாதுளம்பழம், இவைகளை

229. இந்திர மந்திரத்தை சொல்லிக்கொண்டு ஒன்பதாவது நாள் பலி கொடுக்கவேண்டும். சர்க்கரை பொங்கல் நெய், வாழை, பலா இவைகளோடு கூட

230. விஷ்ணு மந்திரத்தை சொல்லிக்கொண்டு பத்தாவது நாள் பலி கொடுக்கத் தகுந்தது. சிவப்பு அன்னம் மாம்ஸம், அபூபம், (அப்பம்) எள் பொடி இவைகளை

231. ராக்ஷஸ மந்திரத்தை சொல்லிக்கொண்டு பதினோறாவது நாள் பலிகொடுக்க வேண்டும். அரிசி சாதம், தயிர் சேர்த்து வெல்லகட்டிகளுடன்

232. சிவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு பன்னிரண்டாம்நாள் பலி கொடுக்க வேண்டும். ஏழு, ஐந்து, மூன்று ஓர் இரவு உத்ஸவ காலங்களில்

233. முன்புள்ள தினத்தை விட்டுவிட்டு அடுத்துள்ள தினத்தை தினதேவதை திரவ்யங்களாக கிரஹிக்கவேண்டும். முனிவர்களே, தினதிரவ்யம், பலிதிரவ்யம், இரண்டும் இங்கே சொல்லப்பட்டது.

234. முதலில் பிரும்மாதி தேவர்களுக்கு பலி இவ்விதம் உண்டாகும். தின அதிபதி சூர்யன் முதலானவர்களின் திருப்திக்காக சுத்தான்னத்தை தயிரோடு கூட கொடுக்கப்படவேண்டும்.

235. லோகபாலர்களின் திருப்திக்காக லோக பாலர்களின் மந்திரங்களை சொல்லிக்கொண்டு கொடுக்க வேண்டும். விருஷபம் முதலிய பரிவாரங்களுக்கு திவஜஸ்தம்பத்திலும், பிரம்மா முதலியவர்களுக்கு

236. பலிகொடுத்துவிட்டு அதன் முடிவில் பலி பீடத்தில் முறையாக பலி கொடுக்கவேண்டும். கொடி முதல் பலி பீடம் வரையில் பலி சொல்லப்படுகிறது.

237. பிரம்மா முதல் பலிபீடம் வரையில் அல்லது இந்திரஸ்தானத்திலிருந்து பீடம் வரையிலோ அந்தந்த தினத்தேவதைகளுக்கு பலிபீடத்திலோ பலி கொடுக்கலாம்.

238. தினதேவர்களின் திருப்திக்காக சுத்தான்னத்தால் பலி கொடுக்கலாம். தின தேவர்களுக்குமோ லோகேசர்களுக்குமோ பலி கொடுக்க வேண்டும்.

239. தின தேவரின் பலி பொருளால் லோக பாலர்களுக்கும் பலி கொடுக்கலாம். எல்லா தினங்களுக்கும் தினமும் இரண்டு பலி கொடுக்கவேண்டும்.

240. அவைகளுடன் ஓர் வாத்யத்தோடு திக்பலி தினபலிகளை அளித்தல் காலை, மாலை இருவேளையிலும் பலி கொடுக்க வேண்டும்.

241. பலி கொடுக்கும் போதோ, கொடுத்த பிறகோ சுவாமி புறப்பாடு செய்யவேண்டும். அதன் வாஹன முறை சொல்லப்படுகிறது. முதலில் விருஷப வாஹனம், இரண்டாவது சுற்றக்கூடிய யந்திரமாகும்.

242. ஊஞ்சல் அல்லது சிபிகை (பல்லக்கு) மூன்றாவது நாளிலும், குதிரை நான்காவது நாளிலும், ஸிம்மம் ஐந்தாம் நாளிலும், தீபம் ஆறாம் நாளிலும் ஆகும்.

243. ஆடு வாஹநம் ஏழாம் நாளிலும், ரதம் எட்டாம் நாளிலும் இவ்விதம் ஒன்றுக்கொன்று அழகானதாக செய்யவேண்டும்.

244. மூர்த்திகள் அனேக ரூபங்கள் அதன் முடிவில் சொல்லப்பட்டன. அதன் முடிவில் பலி பீடத்தோடு கூட பலிதானம் செய்யவேண்டும்.

245. அன்ன லிங்கத்தோடு கூடியதாகவும் திரிசூலத்தோடு கூடியதாகவும் பத்து ஆயுதங்களோடு கூடியதாகவும் கோளக (பத்ரலிங்கம்) லிங்கத்தோடு கூடியதாகவும்

246. ரதத்தில் உள்ள கணேசர்களுடனும் முடிவில் நந்திகேஸ்வரர் ரதத்திலோ சிபிகையிலோ எல்லா அலங்காரங்களோடு

247. இவைகளோடு கூட இல்லாமலும் பலி அங்கங்களோடு கூடியதாய் அதன் முடிவில் விருஷபமும் பின்பு நாட்டியத்திற்கு முகரங்கம் என்ற வாத்யத்துடனும்

248. அதன் பின்பு ஸர்வாங்க சுந்தரமான இறைவனின் தேரும் அதன் இரண்டு பக்கங்களிலும் அலங்கரிக்கப்பட்டவர்களும்

249. கையில் சாமரத்தை உடையவர்களுமான எனக்கு பணிவிடை செய்யும் பெண்களால் பிரகாசிக்கின்றதும் நவரத்னங்களினால் பிரகாசிக்கின்ற குடைகளோடு கூடியதும் தொடர்ந்து செல்கின்ற

250. என் அருகிலே உள்ள சிவாச்சார்களோடு சிறப்புற்றும் எனக்கு பின்னால் என் தொண்டில் ஈடுபடுபவர்களான

251. கவனத்தோடு கூடிய பரிசாரகர்களான பக்தர்கள் கூட தாமரை மொட்டுடன் பாசத்தோடு கூடிய கையையுடையவளாலும்

252. புருஷன் போன்ற தோற்றம் கொண்ட கன்னிகையால் என்னுடைய பணிவிடை கன்னிகையுடன்கூடி அழகாக உள்ளதும் என்னுடைய மனைவியான ஈஸ்வரியின் தேருக்கும்

253. அதனருகில் தேவதேவேசி ரதத்திலும் அவ்வாறே அலங்கரிக்கப்பட்டும் அதன் முடிவில் சண்டிகேஸ்வரர் ரதமும் தனியாக அமைக்க.

254. சிவனுக்கு ஏற்பட்ட வேறு பதினாறு பிம்பங்கள் எவையுண்டோ அவையும் பல்வேறு தன்மை கொண்ட சிவபக்தர்கள் உண்டோ அவர்களின் பலவிதமான மஞ்சங்களும்

255. முன்பக்கம் செல்பவையாகவோ பின்பக்கம் வருபவைகளாகவோ செய்து கொண்டு இவைகளில் எது விருப்பமோ அப்படி செல்லலாம். பலிக்கு அங்கமான ரக்ஷõபந்தனமின்றி போகலாம்.

256. பலவாத்யங்களோடு கூடியதாகவும் யானை, குதிரை, ஒட்டகம், இவைகளோடு கூடியதாகவும் வீதி சுத்தம் செய்யப்பட்டதாகவும் தண்ணீர் தெளிக்கப்பட்டதாகவும்

257. ஒவ்வொரு வீடும் பலவித (பொடி) கோலம் சித்ரங்களோடு கூடியதாகவும் மங்கள அங்குரத்தோடும் வர்தனி கும்ப தீர்த்தத்தோடும் கூடியதாகவும்

258. வாழைமரம் பாக்கு, இலை இவைகளோடு கூடியதும் பட்டு வஸ்திரம் இவைகளோடு பிரகாசிப்பதும் தர்பமாலையோடு கூடியதும் முத்துமாலைகளால் பிரகாசிப்பதும்

259. மேலேயும், கீழேயும், ஒவ்வொரு தளத்திலும் தீபதண்டத்தையும், இரவாக இருந்தால் தீபமாலையாலும் அலங்கரிக்கப்பட வேண்டும்.

260. வீட்டினலங்காரம் கூறப்பட்டது. கிருஹம் இல்லாத இடத்திலும் அதன் அலங்காரமானது பலவித கொடிகளோடு கூடியதும் பலவாத்யங்களோடு கூடியதும்

261. பல ராகங்களோடு கூடியதும் பல கூட்டங்களோடு கூடியதும் பல குடைகளோடு கூடியதும் தோகை சாமரத்தோடு கூடியதாக இருப்பதாயும்

262. கொடி ஆலவட்டம், இவைகளோடு கூடியதாகவும் தூபம், தீபம் இவைகளோடு கூடியதாகவும் மற்றும் இரவிலும் பகலிலும் மஹோத்ஸவத்தில் செய்ய வேண்டும்.

263. ரதத்திலோ, பல்லக்கிலோ அல்லது பரிசாரகர் தலையிலோ, ஈசனை எழுந்தருளச் செய்து வலம் வரவேண்டும். இந்த சமயங்களில் தாம்பூலம் பலவித பழங்களையும் கொடுக்கவேண்டும்.

264. திரையிடப்பட்டு பக்ஷணம், அப்பம் முதலியவைகளை கொடுத்து தகுதியுள்ளவை, தகுதியற்றவை என்ற பிரிவில் தக்தம் ஆர்த்ரம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டு

265. சமைக்கப்பட்டு அனைத்தும் அந்தணர்களால் தயாரிக்கப்பட்டதாகவும், நீர்சம்மந்தமான திரவ்யம் சூத்திரர்களாலும் தயாரானதாகவும் தோலுள்ள தோலில்லாத பதார்த்தங்களை நீரீக்ஷணாதி சுத்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

266. சங்கின் ஒலியோடு கூட பாத்யம், ஆசமனம் இவைகளோடு கூடியதும் திரையை எடுத்து நிர்மால்யத்தை நீக்கி

267. எல்லோர்க்கும் பக்தர்களுக்கும், வருபவர்களுக்கும், வந்துள்ள அனைவர்க்கும், எல்லோர்க்கும் அவர்களின் பக்திக்கு ஏற்ற வகையில் பொருளைக் கொடுத்து

268. இறைவனை இளைப்பாற ஆஸ்தான மண்டபம் முதலியவைகளில் எழுந்தருளச் செய்வது, இறைவனுக்கு பாத்யம் முதலியவைகள் கொடுத்து, சாந்திஹோமம் ஸ்நபனம் வைத்து

269. எல்லா தோஷங்களின் நிவிருத்திக்காக தச்சர்களால் ஸ்பர்சிக்கப்பட்ட தேர்முதலிய வாஹனத்தின் தோஷ சாந்திகளாகவும் சண்டாளர் பாணர்களின் திருஷ்டி நிவிருத்திக்காகவும் விசேஷமாக

270. சாந்தி பரிஹாரம், அவசியம் என்று அறிந்து கொள்ள வேண்டும். சாந்தி ஹோமம் இல்லாவிட்டாலும் அல்லது முடியாவிட்டாலும் ஸ்நபனம் செய்ய வேண்டும்.

271. ஐந்து பிரகாரங்களுக்கு வெளியில் ரத ஓட்டம் நடந்தால் ஸ்நபனம் ஐந்து குருணி (15 மரக்கால் அளவு)

272. நாற்பது மரக்கால் ஜலம் அல்லது அதில் பாதி அல்லது அதில் கால் பகுதி அல்லது கொஞ்சம் குறைவு என்ற முறையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.

273. வேட்டையாடுதலும் சிறப்பான ஸ்நபனம் செய்யவேண்டும். அந்தந்த காலத்திற்கு ஏற்றவகையில் இது செய்வது இஷ்டத்தைக் கொடுப்பதாகும் என்று சொல்லப்படுகிறது.

274. காலசந்தி யாகமண்டபம், ரதம் முதலியவைகளில் ஏற்றம் மற்றும் உச்சிகால பூஜை இவை நித்யம் எனப்படும்.

275. ரதத்தில் ஸ்வாமி இருந்தால் தூபம் வரையிலும் ஆலயத்தில் நைவேத்யம் வரையிலும் செய்ய வேண்டும். சிவாலயத்தில் யாத்திரைக்காக ஸ்நபனம் செய்வது பிறகு நைமித்திக பூஜை செய்ய வேண்டும்.

276. நடராஜன் தேர்கால் தர்சனத்திற்கு பிறகு மாலையில் பூஜையும் மறுபடியும் ஹோமம் பிறகு கிராம பிரதட்சிணமும்

277. புறப்பாட்டிற்கான ஸ்நபனம் பூஜை, ஆடல் பாடல் உபசாரம் பிறகு தேவியோடு அருள்பாவித்தல் செய்தல் வேண்டும்.

278. காலத்தில் பதினாறு பங்காக்கப்பட்டதும் அரையாமமாக கூறப்பட்டதுமான காலத்தில் ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட தேவனுக்கு அந்த காலங்களின் செயல்கள் கூறப்பட்டன.

279. இவைகள் உரிய காலத்தில் அனுஷ்டித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். மிகவும் முன்னால் செய்தால் சிறப்பு இல்லை. மிகவும் தாமதமாக செய்தாலும் சுபம் இல்லை.

280. ஆகையால் முயற்சியுடன் முன்சொன்ன அதன் காலத்திலேயே செய்வது சிறந்தது. தன்னுடைய காலத்தில் குற்றம் இருக்கும் ஆனால் இவைகள் பிற்காலத்தில் செய்யப்படவேண்டும்.

281. வாஹனங்களில் செல்லும் காலங்களில் பலியிடும் காலத்தில் முன் சமயங்களில் பரிவாரங்களுக்கு சொன்ன முறையில் பலிபீடத்தில் பலி போடவேண்டும்.

282. மண், மரம், அல்லது உலோகம் இவைகளாலான பீடத்திலோ அல்லது பூமியிலேயே சமப்படுத்தி பலியிடலாம். யாக மண்டபத்தில் நுழைதல் அல்லது உள்ளே செல்ல கோயிலில் நுழைதல்

283. அங்கு தாம்பூலம் முதலியவைகள் கொடுத்தாலும் கொடுக்கலாம். உரிய காலத்தில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். செய்யப்படாவிடில்

284. இரவில் நீராஜநம் தூபதீபமுடிவில் செய்ய வேண்டும். வீதிவலம் வரும் சமயத்தின் முடிவில் பெரியதான பலி (ஹவிஸ்) கொடுக்க வேண்டும்.

285. இவ்விதம் தினமும் செய்துவர வேண்டும். அதன் சிறப்பு இப்பொழுது சொல்லப்படுகிறது. கிராமம் முதலியவைகளிலோ அல்லது அதற்கு வெளியில் ஒரு மண்டபம் தயார் செய்ய வேண்டும்.

286. மண்டபம் முதலான இடங்களில் ஸ்வாமியை அழைத்து சென்று பூஜித்து வினோதமான தர்சனம் செய்வித்து வாஹனத்திலோ அல்லது சிரசில் வைத்தவாறோ கிராமபிரதட்சிணம் செய்யவேண்டும்.

287. மழை பெய்தாலும், மழை பெய்யும் என்ற நிலையிலும் ஒரேஇருட்டாக இருந்தாலும் இவ்விதமே வெளிமண்டபத்தில் வந்து செய்யலாம்.

288. மீதமுள்ள பிரக்ஷிணத்திற்கு சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். யாகாரம்ப தினத்திலும் தீர்த்தம் கொடுக்கும் தினத்திலும்

289. கிராமத்தை முறையாக சுற்றி வரவும். பிராயச்சித்தம் தேவையில்லை. கிராம பிரதட்சிணம் இல்லாவிடில் திசா ஹோமம் செய்ய வேண்டும்.

290. ஆகாயம் நிர்மலமாகவும் சந்திரனுடன் கூடியதாகவும் இருக்கும்போது அவச்யம் சுவாமி புறப்பாடும் பலிதானமும் செய்யப்படவேண்டும்.

291. தீர்த்தம் கொடுக்கும் நாளிலிருந்து முன்னால் ஐந்தாவது அல்லது நான்காவது நாளில் அந்த வாரத்திலோ எண்ணெய் ஸ்நானம் மஞ்சள் பொடியோடும் செய்யலாம்.

292. தாம்பூலம் முதலியவைகளை இறைவனுக்கும் பக்தர்களுக்கும் முறையாக கொடுக்க வேண்டும். த்வஜாரோஹணம் (கொடியேற்றுதல்) முதலியவைகளிலும் கொடுக்க வேண்டும்.

293. தெய்வத்திற்கு எதிரில் தைலத்தை வைத்து ஸ்தண்டிலத்தில் அஸ்த்ர மந்திரத்தால் பிரோக்ஷித்து ஸம்ஹிதா மந்திரத்தை சொல்லி வைக்க வேண்டும்.

294. கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்து ஹ்ருதயமந்திரத்தினால் சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும். மூலமந்திரத்தால் நமோந்தமாகச் சொல்லி சிவதத்வம் முதலியவைகளால் புஷ்பத்தோடு கூட எண்ணையை சிரஸில் வைக்க வேண்டும். தொடர்ந்து மஞ்சள் பொடியையும் இடவேண்டும்.

295. நெற்றியிலிருந்து கால், கை வரையிலும் மற்றும் தேவியின் கழுத்து வரையிலும் அல்லது மற்ற முறையிலோ ஸ்நானம் செய்விக்க வேண்டும். பிறகு பாசிபயிறு நிவேதனம் செய்ய வேண்டும்.

296. தீர்த்த தினத்திற்கு முன் நாள் அல்லது அதற்கு முன்போ அல்லது முதல் நாள் இரவோ நடராஜப் பெருமாள் வீதிவலம் வருதல் செய்ய வேண்டும்.

297. பூஜையின் பொருட்டு எல்லா அணிகலன்களோடும் கூடிய நடராஜபெருமானுக்கு சிறப்பாக ரக்ஷõபந்தனம் செய்விக்க வேண்டும்.

298. ஆகையால் மற்றொரு கூடத்திலோ அல்லது ஆஸ்தான மண்டபத்திலோ எல்லா அலங்காரத்தோடும் கூடியதாக பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

299. அந்த காலத்திலோ அல்லது காலையிலோ தேவதேவனை அழைத்துச் சென்று வினோத தரிசனமும் செய்விக்க வேண்டும்.

300. காலையில் ஸ்நானம் முதலியவைகளை முடித்து விட்டு பலவித அகில் முதலிய வாசனை பொருட்களோடு கூடிய சந்தனத்தாலும் அணிகலன்களாலும் அலங்கரிக்க வேண்டும்.

படலம் 6/3 : தொடரும்