ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

ஸ்ரீ மஹா பெரியவா தர்மமே தெரியல!}

பகவான் நாமா கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ, மருந்தோ உதவி பண்ணாது. பகவான் நாமா பிழைக்கவும் வைக்கும் அதே ஸமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில் பகவானின் திருவடிப் பேற்றையும் ஸுலபமாக அளித்து விடும்.  

{ஸ்ரீ மஹா பெரியவா தர்மமே தெரியல!}

ஸ்ரீ மஹா பெரியவாளை தர்ஸனம் பண்ண ஒரு பக்தர் வந்தார். கூட்டம் அதிகம் இல்லை. அப்பா எப்டியிருக்கார்? அப்பாக்கு ரொம்ப ஒடம்பு முடிலே பெரியவா...ப்ரக்ஞை இல்லே; அதுனால ஆஸ்பத்ரில சேத்திருக்கேன்... மேலே சொல்லு என்பது போல் ஸ்ரீ மஹா பெரியவா உன்னிப்பாக கேட்டார். பணம் பணம்ன்னு ஆஸ்பத்ரில பிடுங்கி எடுக்கறா...ட்ரிப்ஸ் ஏத்தறதுக்கு பணம், ஆக்ஸிஜன் வெக்கறதுக்கு பணம் அதுக்கு இதுக்குன்னு நின்னா ஒக்காந்தா பணம் ஒண்ணு தான் கேட்டுண்டே இருக்கா பெரியவா! ஏகப்பட்ட செலவாயிடுத்து. அப்பாவுக்கு என்ன வயஸ்?"ஸதாபிஷேகம் ஆய்டுத்து" அவரை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிண்டு வந்துடு! ஆத்துல ஒரு கட்டில்ல அவருக்கு ஸ்ரமம் இல்லாதபடி ஸௌகர்யமா படுக்க வை ஜாஸ்தி சூடு இல்லாம வெதுவெதுன்னு கஞ்சி, பால் இதுமாதிரி நீர்க்க குடு அவரோட காதுல விழறா மாதிரி தெனோமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லு ஆத்துல எல்லாருமா பகவன் நாமாவை சொல்லுங்கோ ஆத்மார்த்தமா ஸுஸ்ருஷை பண்ணு இப்படி பண்ணினியானா...ஒனக்கும் பணச்செலவு இல்லே! அவரும் கடைசி காலத்தை நிம்மதியா கழிப்பார்...மகன் மன த்ருப்தியோடு ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு சென்றார். அவர் போனதும் பக்கத்தில் இருந்தவர்களிடம் ஸ்ரீ மஹா பெரியவா சொன்னார்... இப்போல்லாம் யாருக்கும் தர்மமே தெரியறதில்லே! ஒடம்புக்கு கொஞ்சம் அஸௌகர்யம் வந்துடுத்துன்னா... ஒடனே ஆஸ்பத்ரில சேத்துடறா! வ்யாதிக்கு மருந்து வேணுந்தான்... வாஸ்தவம். ஆனா...அருமருந்து ஒண்ணு இருக்குங்கறதே யாருக்கும் தெரியறதில்லே!... பகவான் நாமா கைகுடுப்பது போல் எந்த டாக்டரோ மருந்தோ உதவி பண்ணாது. பகவான் நாமா பிழைக்கவும் வைக்கும் அதே ஸமயம் ஆயுஸ் முடியப்போகும் தருணத்தில் பகவானின் திருவடிப் பேற்றையும் ஸுலபமாக அளித்து விடும். எனவே உடல் நிலை ஸரியில்லாதவர்களை குறிப்பாக வயஸான நம் பெற்றோர், தாத்தா,பாட்டி போன்றோரை வயஸான காலத்தில் கஞ்சி குடுத்தாலும் அதை அன்போடு குடுத்து பகவானின் நாமத்தை ஸதா கேட்கவோ சொல்லவோ வைத்து அவர்களை நிம்மதியாக வைத்துக் கொள்வதே கடவுளுக்கு மிகவும் பிடித்த கைங்கர்யம். அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் வேண்டாம் விதவிதமான உணவு வகைகள் வேண்டாம். உண்மையான அன்போடு ஒரு பத்து நிமிஷமாவது அவர்களுக்காக ஒதுக்கி "ஸாப்பிட்டீர்களா? ஏதாவது வேண்டுமா?" என்று கேட்பதே அவர்களை மனஸார நம்மை வாழ்த்த வைக்கும். அவர்கள் வாழ்ந்த வீட்டை விட அது குச்சு வீடாக இருந்தாலும் ஸரிதான் தன் மக்களை விட்டு விட்டு வேறு எந்த பெரிய ஆஸ்பத்ரியிலும் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது. ஓம் நமோ பகவதே ஸ்ரீ காஞ்சி காமகோடி சந்த்ரசேகராய! ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர !ஜெய ஜெய சங்கர! ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர! ஜெய ஜெய சங்கர!ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர .. ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சங்கர. ஸ்ரீ மஹா பெரியவா எனக்கு அபயம் கொடுத்து காத்து ரக்ஷிப்பாய் பரம கருணா சாகரா.

ஸ்ரீ மஹா பெரியவா சரணாரவிந்தங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.
 
கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
     பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
     வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
     நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
     தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.

புரூரவஸ்...

புரூரவஸ்!

நவக்கிரஹங்களில் ஒருவரான புதனின் புதல்வன் புரூரவஸ், நீதிநெறி தவறாது அரசாண்டவன். தேவலோக நடன மங்கை ஊர்வசியின் அழகில் சித்திரா வருணர்கள் மையல் கொண்டனர். அவர்கள் ஆசையை ஊர்வசி நிராகரிக்கவே, அவர்கள் சினம் கொண்டு சிலகாலம் மானிடனின் மனைவியாகக் கடவது என சபித்தனர். சாபம் பெற்ற ஊர்வசி புரூரவஸின் அழகிலும், குணத்திலும் மனதைப் பறிகொடுத்தாள். புரூரவஸும் ஊர்வசியின் சவுந்தர்யத்தில் மயங்கினான். பெண்ணே! நீ யார்? என்னை மணந்து கொள்வாயா? என வினவினான். நான் தேவலோக அப்சரஸ் ஊர்வசி. உங்களை மணக்க ஒப்புக்கொள்கிறேன். அதற்கு இரு நிபந்தனைகள் உண்டு. முதலாவது, நான் வளர்க்கும் இரு ஆட்டுக் குட்டிகளும் என் படுக்கை அறையில்தான் இருக்கும். அதில் ஒன்று காணாமல் போனால் கூட நான் உங்களை விட்டுப் பிரிந்து விடுவேன். முகம் கோணாமல் பராமரிக்கும் ஆட்களை அவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியது உமது கடமை.

தவிர, நெய்யைத் தவிர வேறு ஆகாரம் எதையும் சாப்பிடும்படி என்னை வற்புறுத்தக் கூடாது. அதோடு திகம்பரனாக வெளிச்சத்தில் உங்களை நான் பார்க்கக் கூடாது என்றாள் அவள். அனைத்துக்கும் சம்மதித்து அவளை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான் புரூரவஸ். ஊர்வசி கருவுற்றாள். அமர லோகத்தில் ஊர்வசி இல்லாமல் குழு நடனங்கள் சிறக்கவில்லை. ஊர்வசியின் ஆடுகளை இரவில் தம்பதிகள் சுகித்திருக்கையில் கவர்ந்து வந்து விடுவோம். நிர்வாணமாயிருக்கும் புரூரவஸால் தடுக்க இயலாது. மீறி விரட்டினால் மின்னலை வீசுவோம் என்று திட்டம் தீட்டினான் விசுவாவசு. சரி, மின்னலை நீ பாய்ச்சத் தயாராயிரு. நான் ஒரு ஆட்டுக் குட்டியைத் திருடிக் கொண்டு வருகிறேன் என்றான் ஊர்ணாயு. நிபந்தனை எப்படியும் உடைய வேண்டும். ஊர்வசி பார்வை படும் தூரத்தில் மின்னலைப் பாய்ச்சினால்தான் பலன் என்று எச்சரித்தான் சித்திரசேனன்.

திட்டமிட்டபடியே அன்றிரவு எல்லாம் நடந்தது. ஆட்டின் கதறல் கேட்டு புரூரவஸைத் தள்ளி விட்டாள் ஊர்வசி. கலைந்து கிடந்த உடையைத் தேடுவதற்குள் மின்னலை வீசினான் விசுவாவசு. அதே நேரம் இரண்டாவது குட்டியையும் சித்திரசேனன் தூக்கிச் செல்ல ஊர்வசி துக்கித்தாள். ஆத்திரத்தோடு வாளை உருவிக் கொண்டு போனான் புரூரவஸ். இதற்கிடையே சாபம் நீங்கியதால் தேவலோகத்துக்கு பறந்து சென்று விட்டாள் ஊர்வசி. குட்டிகளோடு அந்தப்புரம் வந்த புரூவரஸ், ஊர்வசியைத் தேடித் திரிந்தான். குரு க்ஷேத்திரத்திலுள்ள ஒரு தாமரைப் பொய்கையில் தோழிகளுடன் நீராடுவது கண்டு அவளை அழைத்தான். மகனைப் பெற்றெடுத்து உங்களிடம் கொடுத்து விட்டு ஒருநாள் உங்களைத் திருப்திப்படுத்துவேன். அதோடு என்னை விட்டுவிட வேண்டும். பங்குனி கடைசியில் வாருங்கள் என்றாள் ஊர்வசி. அதன்படி, ஆயுசு வைப் பெற்று புரூரவஸுவிடம் ஒப்படைத்தாள். அப்போது கந்தர்வர்கள், அரசனிடம் தங்களை ஏமாற்றிய தோஷம் நீங்க வரமொன்று கொடுக்க விரும்புகிறோம் என்று கூற, ஊர்வசியோடு வாழ வரம் தாருங்கள் என்று கோரினான். அவர்கள் வன்னிமரக் குச்சியொன்றை அளித்து இந்தக் கொம்பை மூன்றாக்கி, வேத மந்திரங்களை உச்சரித்து இஷ்டகாமிய ஹோமம் செய்ய, உங்கள் விருப்பம் நிறைவேறும் எனக் கூறிச் சென்றனர். வேதவிதிப்படி ஹோமம் செய்து கந்தர்வ லோகம் சென்று ஊர்வசியோடு சுகித்திருந்தான் புரூரவஸ். 




ஆளவந்தார்....


 ஆளவந்தார்!

சோழ மன்னன் ஒருவரின் ஆஸ்தான வித்வானாக இருந்தார் ஆக்கியாழ்வான் என்ற வடமொழிப் புலவர் ஒருவர். சாஸ்திர ஞானமும் சகலகலா வல்லமையும் பெற்றிருந்தாலும், தான் என்னும் மமகாரகுணம் கொண்டிருந்த ஆக்கியாழ்வான் அனைத்துப் புலவர் பெருமக்களையும் தனக்குப் பணி விடை செய்யும் அளவுக்கு அடிமைப்படுத்தி வைத்திருந்தார். அவருடன் வாதிட்டு வெல்ல முடியாதோர் அவருக்கு கப்பமும் கட்டி வந்தனர். அவ்வாறாக கப்பம் கட்ட முடியாத ஏழ்மை நிலையில் இருந்த மாபாடியார் என்ற ஆசிரியப்பெருமான் ஒருவரைக் காப்பாற்ற எண்ணினான் சின்னஞ் சிறுவனாகிய யமுனைத்துறைவன் ஆக்கியாழ்வானிடம் சொற்போர் தொடுக்க சம்மதமும் தெரிவித்தான்.
தன்னுடன் வாதம் செய்ய வந்துள்ளது ஒரு சின்னஞ்சிறுவன் என்பதனைக் கண்ட ஆக்கியாழ்வான் எள்ளி நகையாடியதுடன் தான் கேட்கும் சாதாரண கேள்விக்கு முதலில் பதில் சொல்ல வேண்டும். அதே சமயம், தான் சரி என்று சொல்வதை தவறு என்றும், தவறு என்பதை சரி என்றும் நிரூபணம் செய்யும் அளவுக்கு பேச வேண்டும் என்று கூறினார். வாதத்திற்கு ஒப்புக்கொண்ட யமுனைத்துறைவன். அரசவையில் சோழ மன்னனும் அரசியும் பார்த்திருக்க வாதமேடையில் ஏறி கம்பீரமாக அமர்ந்தான்.

சின்னஞ் சிறுவனாகிய நீயே முதலில் கேட்கலாம்... என்றார் ஆக்கியாழ்வான். உன் அன்னை மலடியல்ல; சோழ அரசி கற்புடை மாது; சோழ மன்னன் தர்மவான் என்னும் மூன்று வாக்கியங்களை முன் வைத்தான் யமுனைத்துறைவன். போட்டியின் நிபந்தனையின் படி, அன்னை மலடி என்றும் அரசி கற்பில்லாதவள் என்றும், மன்னன் அதர்மவான் என்றும் ஆக்கியாழ்வான் வாதிட வேண்டும். இந்த மூன்றுக்குமே பதில் சொல்ல முடியாமல் முழித்தார் ஆக்கியாழ்வான். ஏனென்றால், மகனைப் பெற்ற அன்னையை மலடி என்று கூற முடியாது; அரசியை கற்பற்றவள் என்றோ, அரசன் அதர்மவான் என்றோ கூறினால் மரணதண்டனையே கிடைக்கும். பயந்து போன ஆக்கியாழ்வான் நீயே இவைகளுக்கான பதிலைக் கூறு என்றார். ஒரே பிள்ளையைப் பெற்றவள் மலடிக்குச் சமம் என்றும், பொதுவாக பெண்கள் முதலில் வெண்மதிக்கும், பின்பு கந்தர்வருக்கும் மானசீகத் தொடர்பில் இருந்த பின்பே மனிதனுக்கு மனையாளவதால் அரசியும் கற்பற்றவளே என்றும், தன்னுடைய குடிமக்கள் செய்யும் குற்றங்களுக்கான பலன்களில் நாடாளும் மன்னனுக்கும் பங்குண்டு என்பதனால் அரசனும் அதர்மவானே என்றும் கூறி தனது வாதத்தை முடித்து ஆக்கியாழ்வானை வெற்றி கண்டான் யமுனைத்துறைவன். அரசவையில் அமர்ந்திருந்த அரசி மிக்க மகிழ்வுடன் யமுனைத் துறைவனை அழைத்து, உச்சிமோந்து, எனை ஆளவந்தீரே... என்று புகழ்ந்தார். 

ஆக்கியாழ்வானின் ஆணவம் அன்றோடு அழிந்தது. நாலாயிர திவ்யப்ரபந்தங்களை சேகரித்தளித்து வைணவம் காக்க அவதரித்த முதல் ஆசார்யனான ஸ்ரீமந்நாதமுனிகள் அவர்களின் திருப்பேரனே இந்த ஆளவந்தான். சோழநாட்டில் சதுர் வேத மங்கலம் என்று அழைக்கப்பட்ட காட்டுமன்னார் கோவில் என்ற திவ்யத்தலமே அவரது அவதாரத்தலம்.

பிற்காலத்தில் ஆளவந்தாரின் சீடர்கள் வரிசையில் முன் நின்ற பெரிய திருமலை நம்பியும் அவர் சகோதரி மகனாகவும் இறையம் சத்துடன் (ஆதிசேஷனின் அவதாரம்) திருப்பெரும்பூதூரில் (ஸ்ரீபெரும் பூதூரில்) நல்லதோர் திருவாதிரை நாளில் அவதரித்த ஸ்ரீ ராமானுசர் என்ற எம்பெருமானார் அருளாலும் இன்று வரை வைணவம் தழைத்து நிற்கிறது என்பது முற்றிலும் உண்மை. ஆளவந்தாரின் அந்திமக் காலத்தில் உடனிருந்து திருவரங்களத்தில் (ஸ்ரீரங்கம்) காவிரிக் கரையில் அவரது உடலை திருப்பள்ளிப்படுத்தி உய்வு கண்டார் உடையவர் என்றும் யதிராசர் என்றும் புகழப்பட்ட ராமாநுசர்! ஆளவந்தார் திருவடிகளே சரணம்!

 

 

அனந்தராம தீட்சிதர்!

அனந்தராம தீட்சிதர்!

சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் உபன்யாசம், 1940-65ம் ஆண்டுகளில் மிகவும் புகழ் பெற்றது. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஸ்காந்தம், தேவிபாகவதத்தை சங்கீத உபன்யாசமாக நடத்தினார். இவருக்கே உரித்தான மகிஷாசுரமர்த்தினி இன்னிசை, காலத்தால் அழியாதது. குருவாயூரப்பன் பக்தரான இவர், நாராயணீயத்தை மக்களிடம் பரப்பினார். 1903ல், சுப்ரமண்ய தீட்சிதர்-சுப்புலட்சுமி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த இவர், கடலங்குடி நடேச சாஸ்திரிகளிடம் பாடம் படித்தார். (சாஸ்திரிகள், தீட்சிதருக்கு மாமனாரும் ஆவார்) அக்னிஹோத்ர யாகம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த தீட்சிதர், வேதவல்லுநராகத் திகழ்ந்தார். இவருடைய உபன்யாசத்தை மும்பை, கோல்கட்டா, சென்னை நகரங்களில் மாதக்கணக்கில் மக்கள் கேட்டு மகிழ்ந்தனர். பரந்தமனம் படைத்த இவர், செல்வந்தர்களிடம் ஏழை எளியவருக்கு அறத்தொண்டு செய்யும்படி வலியுறுத்தினார். சடங்கு சம்பிரதாயத்தை முறையாக செய்ய வேண்டுமென வழிகாட்டினார். அமிர்தவர்ஷினி உபன்யாச சக்கரவர்த்தி, வைதீக தரம் சம்ரட்சன ப்ரவசன தாத்ர உபன்யாசகா ஆகிய பட்டங்களைப் பெற்றிருந்தார். ருத்ர சமகம், ஸ்கந்த புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். காஞ்சிப்பெரியவர், சிருங்கேரி சுவாமிகள், நேருஜி, டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, பிரகாசம், சி.சுப்ரமண்யம், கல்கி சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, காசா சுப்பாராவ் ஆகியோர் இவரது உபன்யாசத்தை ரசித்ததில் குறிப்பிடத்தக்கவர்கள். பக்திப்பயிர் செழிக்க பாடுபட்ட இவர் 1969, அக்.30ல் இறைவனுடன் கலந்தார். ஸ்ரீஜயமங்கள ஸ்தோத்திரம் என்னும் அரிய பொக்கிஷத்தை நம்மிடையே விட்டுச்சென்ற, அந்த ஆன்மிகச் செல்வத்தை, நன்றியோடு போற்றுவோம். 




43. ஸ்ரீ ஆனந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

43. ஸ்ரீ ஆனந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

நாற்பத்தி மூன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 978 - 1014]

ஸ்ரீ ஆனந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் துங்கபத்ரா நதிக் கரையிலுள்ள அவதரித்தவர். இவரின் தந்தையான பெயர் ''சுதேவபட்டர்'' என்பவரைக்கு மகனாக பிறந்தார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''சங்கர பண்டிதர்’'.

இவர் பீடத்தல் இருந்து போது பெரும், புகழோடு குரு பீடத்தை அலங்கரித்தார். இவரைப் பற்றியும் நமக்கு கூடுதலாக எந்த விதமான தகவலும் கிடைக்காதது நமது துரதிர்ஷ்டவசமாக உள்ளது.

இவர் கி.பி. 1014  ஆம் ஆண்டு, பிரமாதீச வருடம், சித்திரை மாதம், வளர்பிறை நவமி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 39 ஆண்டு காலம் காஞ்சி பீடத்தை அலங்கரித்துள்ளார்.

 


 

42.ஸ்ரீபிரம்மானந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

42.ஸ்ரீபிரம்மானந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு

நாற்பத்தி இரண்டாவது ஆச்சார்யர் [கி.பி. 950 - 978]

ஸ்ரீ பிரம்மானந்த கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு, இவரின் தந்தையின் பெயர் ''சுப்ரமண்யர்''.  பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''நரசம் பட்டர்''.

இவரைப் பற்றியும் நமக்கு கூடுதலாக எந்த விதமான தகவலும் கிடைக்காதது நமது துரதிர்ஷ்டவசமாக உள்ளது.

இவர், கி.பி. 978 ஆம் ஆண்டு, ஈஸ்வர வருடம், கார்த்திகை மாதம், வளர்பிறை, அஷ்டமி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 28 ஆண்டு காலம் காஞ்சி பீடத்தை அலங்கரித்துள்ளா

 


 

 

 

 

 

 

 

 

 

ர்.

41. ஸ்ரீ கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

41. ஸ்ரீ கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

நாற்பத்து ஒன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 915 - 950]

ஸ்ரீ கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், பீமா நதி தீரத்திலுள்ள தோரூரில் பிறந்தவர். கர்நாடக அந்தணர். தந்தையின் பெயர் ''உமேச பட்டர்''. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ‘'அப்பண்ணா'’.

அப்போது கன்னோசி நாட்டை [கி.பி.903 - 917] "மகேந்திர பாலன்", "மகிபாலன்" என்னும் சகோதரர்கள் ஆண்டனர். இவர் கன்னோசிக்கு விஜயம் செய்த போது அவரிடம் ராஜ சேகரன் என்னும் புலவரை அறிமுகப் படுத்தினர் மன்னர்கள்.

"ஸ்வாமி''! இவர் பெயர் "ராஜசேகரன்". பெரும் புலவர். குருடராக இருந்தும் இவர் சொல்லி பால இராமாயணம், பிரசண்ட பாண்டவம், கர்ப்பூர வெளி வந்திருக்கின்றன.

தங்களின் தவவலிமையால் பல மஞ்சரி ஆகிய நூல்கள் அற்புதங்கள் நிகழ்ந்ததாகக் கேள்வியுற்றோம்.

''ஞானக்கண் பெற்ற இவர் புறக்கண்களாலும் காணும் படி அருள வேண்டும்” மன்னர்கள் பிரார்த்தித்தனர்.

கமண்டலத்தில் இருந்து  தீர்த்தத்தை அவர் முகத்தில் அடித்து விபூதி இட்டு, ''ஓம் சந்திரசேகராய நம:'' என்று நூற்றி எட்டு முறை ஜபித்து விட்டுக் “கண்ணைத்திற” என்றருளினார் ஆசார்யர்.

அவ்விதமே செய்த ராஜ சேகரன் பார்வை பெற்றார். கூடியிருந்தோர் வியந்தனர்.

இவர் கி.பி.950 ஆம் ஆண்டு, செளம்ய வருடம், ஆவணி மாதம், வளர்பிறை பிரதமை திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 35 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.... 

 



40. ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

40. ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு




நாற்பதாவது ஆச்சார்யர் [கி.பி. 873 - 915]

ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு...

இவர் கர்நாடக மாநிலத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் ''கண்ணையா''. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ''சிவராம பட்டர்''.

இவர் நீண்ட காலம் தவம் செய்து அதன் மூலமாக பெற்ற தேஜஸினால், தபோ பலம், ஞானத்தால் இவரை மக்கள் ''சோபன மகாதேவர்'', ''உஜ்வல மஹாதேவர்'' என்று பெருமையோடு அழைக்கப்பட்டார். இவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல் படுத்தினார்...

இவர் கி.பி. 915 ஆம் ஆண்டு, பவ வருடம் வைகாசி மாதம், வளர் பிறை, சஷ்டி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 43 ஆண்டுகள் காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்துள்ளார்....

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

திருவானைக்காவல் உள்ள சங்கர மடத்தின் உண்மை வரலாறு

திருவானைக்காவல் உள்ள சங்கர மடத்தின் உண்மை வரலாறு:




The math at Thiruvanaikaval was called Narpathennayira matam (ARE 486 of 1908). “Ascetics, Devotees and Lords of Matams” by Michille L. Folk has this to say about the matha.

“Among the rare exceptions of Chola-period inscriptions at maṭams are two records from the Śaṁkarācāryasvāmin maṭam at Tiruvanaikkaval (Jambukesvaram) in Tiruchirappalli district. Both inscriptions are located on the west wall of the maṭam and record a donation for the building of the Naṟpatteṇṇāyiravaṉ maṭam on the northern side of the temple at Tiruvanaikkaval.

The first inscription is attributed to the rule of Tribhuvanachakravartin Konerinmaikondan. It records that the maṭam was built by Avūruṭaiyāṉ Coḻakoṉ and explains that ascetics were to be fed therein (ARE 486 of 1908).

The second inscription refers to the building of this same maṭam and is dated in the reignal year of the same ruler (ARE 487 of 1908). These inscriptions also indicate that the people of this maṭam were the disciples of Namaśśīvāyadevar of the Śaiva Tiruccattimuṟṟattu Mutaliyār lineage.

12 The editors of the Annual Report on Indian Epigraphy for the year 1909 write that there can be no doubt that the present-day Śaṁkarācāryasvāmin maṭam is the Naṟpatteṇṇāyiravaṉ maṭam of the inscriptions (ARE 1909, 103).

13 On the basis of their examination of other inscriptions, they suggest that the ruler of the inscriptions is later than the Chola king Kulottunga I (r.y. 1070-1120), though it is difficult to determine whether he was Chola or Pandya.

The fact that both inscriptions describe the people who presided over the maṭam as disciples of Namaśśīvāyadevar of the Tiruccattimuṟṟattu Mutaliyār lineage suggests that its earliest date may be the thirteenth century since it is only in the thirteenth century that the word mutaliyār (he who is first) appears in the inscriptions in relation to maṭams and lineage.

In a court case, the Kumbakonam math stated that Sri Sankara adorned the Ambal in Gajaranya Kshetra atThiruvanaikonil and established a matha there. Did Sankara found a matha there? Was the math from 1101 BC (Sivarahasya says so).

Thiruvachaka Mani, Sru K.M. Balasubramanian writes in detail (“Life of J.M. Nallasamy Pillai”) about the saiva mathas and declares as follows:

“Thus it becomes apparent that the present mutt of Sankarcharya swami at Thiuvanaikaval had belonged originally to the saiva mutt at Thiruchattimutram and was presided over by th teachers of the lineage of the mudaliyars of that place.”

Dr. T.V. Mahalingam, in his review of 135 of 36-7 in JOR related to the changes in the management and right of worship in Jambukeswaram temple.Lakshadyayi Sampradaya monks managed for a long time and then was placed in the hands of a grahasta Chandrasekara Guru. This guru died in1605. Inscriptions mention the gurus of this line till 1714(130 of 36-7). The Kumbakonam this saiva math as Lokaguru Sankaracharya Swami Mutt.

ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்...

 ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகள், ஸ்ரீ மஹா பெரியவா, ஸ்ரீ பரமாச்சார்யாள், என்று உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் போற்றி வணங்கப்படும் நடமாடும் தெய்வம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தன்னை இச்சா சக்தி என்றும் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை கிரியா சக்தி என்றும் போற்றியுள்ளார். இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தமது குரு ஸ்ரீமஹா ஸ்வாமிகள் அவர்களால் மார்ச் மாதம் இருபத்தி இரண்டாம் தேதி ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பத்தி நான்காம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடத்தின் அறுபத்தி ஒன்பதாவது ஆச்சார்யராக நியமிக்க பட்டதில் இருந்து பாரத தேசம் முழுவதும் யாத்திரைகள் பல செய்து நமது சனாதன மதத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு இங்கே சொல்லி மாளாது. இருப்பினும் அடியேனுக்கு தெரிந்ததை சொல்கிறேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்னற்ற பாடசாலைகள், சங்கரா பள்ளிகள், சங்கரா சிபிஎஸ் பள்ளி பாடங்களுடன் சேர்த்து வேத பாடசாலைகள், சங்கரா கல்லூரிகள், சங்கரா கண் மருத்துவமனைகள், சங்கரா முதியோர் இல்லங்கள், சங்கரா ஆயூர் வேதா கல்லூரிகள், ஜன கல்யான், சங்கரா சாரிட்டபுள் டிரஸ்ட், சங்கரா மருத்துவமனைகள், பாரத தேசம் முழுவதும் சங்கர மடங்கள் நிருவியது, சங்கரா கல்யாண மண்டபங்கள், காலடியில் ஆதிசங்கரருக்கு கீர்த்தி ஸ்தம்பம்  என்று நம் நம் புது பெரியவாளால் தொடங்கப்பட்டு இன்று வரை  ஏராளமான மக்களுக்கு பல நல திட்ட உதவிகளை செய்து வருவது நம் புது பெரியவாளால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. ஒரு சன்யாசியாக மட்டும் இல்லாமல் நம் சனாதன மதத்திற்கு இவர் ஆற்றிய சேவை இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து. இது போல் இன்னும் ஏராளமான பணிகளை செய்தது காஞ்சி காமகோடி பீடத்தின் அறுபத்தி ஒன்பதாவது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரி ஸ்வாமிகளால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்றால் அது மிகையாகாது.


அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில்



108 திவ்ய தேசங்கள் : அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில்

மூலவர்: ஸ்ரீ வைகுண்டநாதர் (நின்ற திருக்கோலம்)
உற்சவர்: ஸ்ரீ கள்ளப்பிரான்
தாயார்:வைகுந்த நாயகி, சோரநாத நாயகி
தீர்த்தம்:தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு மேல்
ஊர்: ஸ்ரீ வைகுண்டம்
மாவட்டம்: தூத்துக்குடி
மாநிலம்: தமிழ்நாடு
பாடியவர்கள்:நம்மாழ்வார், மணவாள மாமுனிகள்,மங்களாசாசனம்

புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை யாள்வாய் எனக்கருளி நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே.-நம்மாழ்வார்
 
விழா:வைகுண்ட ஏகாதசி, தை தெப்பத்திருவிழா   
       
சிறப்பு:பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரியது.   
       
திறக்கும் நேரம்:காலை 07.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி: அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில்,ஸ்ரீ வைகுண்டம் - 628601,தூத்துக்குடி மாவட்டம்.போன்:+91 4630 256 476  
      
தகவல்:சூரியத்தலம்:நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரியது. இங்கு ஸ்வாமி, இந்திர விமானத்தின் கீழ் நின்ற நிலையில் காட்சி தருகிறார். கையில் தண்டம் இருக்கிறது. தலைக்கு மேலே ஆதிசேஷன் குடையாக இருக்கிறார். ஸ்வாமியுடன் தாயார்கள் கிடையாது. பிரகாரத்தில் வைகுந்தவல்லித்தாயார் சன்னதி இருக்கிறது. சித்திரை மற்றும் ஐப்பசி மாத பவுர்ணமியன்று காலையில் சூரிய ஒளி வைகுண்டநாதர் பாதத்தில் விழும். இதற்கு ஏற்றாற்போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம், பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

கள்ளனாக வந்த பிரான்: வைகுண்டநாதர் பக்தனான காலதூஷகன் என்ற திருடன், தான் திருடியதில் பாதியை கோவில் சேவைக்கும், மீதியை தான, தர்மங்கள் செய்யவும் செலவிட்டான். ஒரு சமயம் மணப்படை என்ற ஊரில், அரண்மனை பொருட்களைத் திருடச் சென்ற போது, அவனுடன் சென்றவர்கள் சிக்கிக் கொண்டனர். கால தூஷகனைத் தேடி அரண்மனை சேவகர்கள் வந்தனர். இவ்வேளையில் இத்தலத்து பெருமாளே, திருடன் வடிவில் அரண்மனைக்குச் சென்றார். மன்னன் முன் நின்றவர், "மன்னா! நான் திருடியதாக குற்றம் சாட்டுகிறீர்களே! எதற்காக திருடினேன் என்று தெரியுமா? நாட்டில் ஒருவனுக்கு பணப்பற்றாக் குறை இருக்கிறதென்றால், அந்நாட்டு மன்னனின் ஆட்சி சரியில்லை என்று தான் அர்த்தம். என்னிடம் பொருள் இல்லாததால் தான் நான் திருடினேன். ஆகவே என்னை என குற்றப்படுத்த முடியாது,'' என்றார். இதைக்கேட்ட மன்னர் திடுக்கிட்டு, ஒரு திருடனால் இப்படி தைரியமாகப் பேச முடியாது எனப்புரிந்து கொண்டு, வந்திருப்பது யார் எனக்கேட்டார். ஸ்வாமி தன் சுயரூபம் காட்டியருளினார். மன்னன் உண்மை அறிந்து மன்னிப்பு வேண்டினான். திருடன் வடிவில் வந்ததாலும், பக்தர்களின் உள்ளங்களை கவரும் அழகுடன் இருப்பதாலும் ஸ்வாமிக்கு, "கள்ளபிரான்' என்ற பெயர் ஏற்பட்டது.

108 போர்வை அலங்காரம்: தை முதல் நாளில் கள்ளபிரானுக்கு, 108 போர்வைகள் அணிவித்து பூஜிப்பர். பின் அவர் கொடிமரத்தைச் சுற்றி வருவார். அதன் பின் ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தைக் கலைப்பர். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும், இந்நாளில் கள்ளபிரான் வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.

ஆச்சாரியாரின் அழகிய விளக்கம்: நம்மாழ்வார் தனது பாசுரத்தில், "புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று'' என்று மங்களாசாசனம் செய்துள்ளார். "பசியாக இருக்கும் ஒருவர் சமையல் முடியும் வரையில் படுத்திருந்து காத்திருப்பார். பசி கூடும் போது ஆர்வத்தில் எழுந்து அமர்ந்து கொள்வார். சமையல் முடிய இன்னும் தாமதமானால் பொறுமையிழந்து எழுந்து நிற்பார். இதைப்போலவே நம்மாழ்வாருக்கு அருள வந்த பெருமாள் அவர் பக்தியில் உயர் நிலை அடையும் வரையில் முதலில் புளியங்குடியில் கிடந்தும் (படுத்த கோலம்) பின் வரகுணமங்கையில் அமர்ந்தும், இத்தலத்தில் நின்றும் காட்சி தருகிறார்,'' என வைணவ ஆச்சாரியாரான அழகிய மணவாளப்பெருமான் நம்மாழ்வாரின் பாசுரத்திற்கு விளக்கம் சொல்லியுள்ளார்.

நம்மாழ்வார் மங்களாசாசனம்: சித்திரை விழாவின் போது நம்மாழ்வார் அவரது பிறந்த தலமான ஆழ்வார் திருநகரியிலிருந்து அத்தலத்து பெருமாள் பொலிந்து நின்ற பிரானுடன் இங்கு எழுந்தருளுவார். ஸ்வாமியை மங்களாசாசனம் செய்த பின், அன்ன வாகனத்தில் எழுந்தருளுவார். அவ்வேளையில் கள்ளபிரான், பொலிந்து நின்ற பிரான், வரகுணமங்கை வெற்றிருக்கை பெருமாள், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் ஆகிய நால்வரும் கருட சேவை சாதிப்பர். பக்தர்கள் பிறவாநிலை (மோட்சம்) கிடைக்க, இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை வணங்குகின்றனர், ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
      
ஸ்தல பெருமை:நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.  

அதன்படி
1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
3. செவ்வாய் : திருக்கோளுர்
4. புதன் : திருப்புளியங்குடி
5. குரு : ஆழ்வார்திருநகரி
6. சுக்ரன் : தென்திருப்பேரை
7. சனி : பெருங்குளம்
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்கலம்)
9. கேது : 2 . இரட்டைத் திருப்பதி
இங்கு பெருமாள் சந்திர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும். பொதுவாக பெருமாள் ஆதிசேஷனில் சயனித்தபடி இருப்பார். ஆனால் இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனி சிறப்பாகும்.

வைகுண்டமும் உண்டு... கயிலாயமும் உண்டு: காவிஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம். சிவபெருமானுக்குரியது கயிலாயம். பக்தர்கள் பிறவாநிலை (மோட்சம்) கிடைக்க இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு ஸ்வாமியை வணங்குகின்றனர். இத்தலத்தில் ஸ்வாமியே, வைகுண்டநாதராக அருளுவதால், இங்கு வேண்டிக்கொள்பவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் கிடைப்பதாக நம்பிக்கை. தவிர, இந்த ஊரிலேயே கயிலாசநாதர் [நவகைலாய தலம்] கோவிலும் உள்ளது. இந்தக் கோவிலில் வேண்டிக் கொள்பவர்களுக்கு கயிலாயத்தில் இடம் கிடைக்கும். இவ்வாறு ஒரே ஊரில் வைகுண்டம், கயிலாயம் என இரண்டையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மணித்துளி தரிசனம் வைகுண்ட ஏகாதசியன்று உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வர். இவ்வேளையில் சன்னதியை அடைத்து விடுவர். பின் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடை திறந்து, ஸ்வாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர். ஒரு சில மணித்துளிகளுக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்து விடும். இவ்வேளையில் ஸ்வாமியை தரிசித்தால் பிறப்பில்லா நிலை கிடைப்பதாக நம்பிக்கை.

ஸ்தல வரலாறு:சோமுகன் என்னும் அசுரன், பிரம்மாவிடமிருந்து வேத சாஸ்திரங்களைத் திருடிச்சென்றான். இதனால் படைப்புத் தொழில் நின்று போனது. வருந்திய பிரம்மா, மகாவிஷ்ணுவை வேண்டி பூலோகத்தில் தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த ஸ்வாமி, அசுரனை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். பிரம்மாவின் வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளி, "வைகுண்டநாதர்'' என்ற திருநாமம் பெற்றார்.

பால்பாண்டி தென்னகத்தில் குறிப்பாக மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் பால்பாண்டி என்ற பெயரை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் வழக்கம் உள்ளது. இது இத்தலத்து பெருமாளின் பெயராகும். பல ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் வழிபாடின்றி மறைந்து போனது. ஸ்வாமி சிலையும் ஆற்றங்கரையில் ஓரிடத்தில் புதைந்திருந்தது. இவ்வேளையில் இங்கு மேய்ச்சலுக்கு வந்த அரண்மனை பசு, தொடர்ச்சியாக இங்கிருந்த புற்றில் பால் சுரந்தது. இதையறிந்து வந்த பாண்டிய மன்னன், அவ்விடத்தில் ஸ்வாமி சிலை இருந்ததைக் கண்டு கோவில் எழுப்பினான். அன்றிலிருந்து தினமும் ஸ்வாமிக்கு பால் அபிஷேகம் செய்து பூஜித்தான். இதனடிப்படையில் தற்போதும் தினமும் காலையில் இவருக்கு பால் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது. பாண்டியன் பால் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தமையால் இந்த ஸ்வாமிக்கும் "பால்பாண்டி' என்ற பெயர் ஏற்பட்டது.