திங்கள், 7 அக்டோபர், 2024

படலம் - 6/2

படலம் 6/2 : மஹோத்ஸவ விதி

101. குடம் போன்ற பகுதியில் ஸ்கந்தனையும் அதன் முகப்பகுதியில் வினாயகரையும் தண்டத்தின் நுனியில் மன்மதனையும் தண்டத்தின் நடுவில் பாஸ்கரனையும் பூஜை செய்ய வேண்டும்.

102. தண்டத்தின் மூலபாகத்தில் சண்டேசர், கிழக்கு தளத்தின் நுனி பாகத்தில் லக்ஷ்மி, தெற்கு தளத்தில் ஸப்த மாதா மேற்கு தளத்தில் ஜ்யேஷ்டா தேவியையும்

103. வடக்கு திக்கில் காத்யாயினியும், சூலத்தின் அடிப்பகுதியில் பதினோறுருத்திரன், சூர்யன் பன்னிரண்டும் அஷ்ட வசுக்கள் அச்வினி தேவர்கள் இவர்களும் மற்றும் பதினெட்டு கணங்களையும்

104. முறைப்படி உபசாரம் செய்து வரவேற்பதாக செய்து பேரியில் அந்தந்த தேவதா ஆவாஹணம் செய்ய வேண்டும். பேரியை வஸ்திரத்தால் சுற்றி நடுவில் ருத்திரனை பூஜிக்க வேண்டும். (தோல் கயிற்றில்)

105. வலது பாகத்தில் பிரம்மாவையும், இடது பாகத்தில் விஷ்ணுவையும், வலயத்தின் தெற்கில் சூர்யனையும் வடக்கில் சந்திரனையும் பூஜிக்க வேண்டும்.

106. ஏழு கீலங்களில் ஸப்த மாதாக்களையும் ஒன்பது வலயங்களில் நவகிரஹங்களையும், ருத்திரர்களையும் அதன் எண்ணிக்கையில் பூஜை செய்து சர்ம ஸூத்திரங்களில் வாசுகியையும் பூஜை செய்ய வேண்டும்.

107. அடிக்கும் தண்டத்தில் ஷண்முகனையும் மஸ்தகத்தில் கிழக்கு பக்கமாக பூஜை செய்ய வேண்டும். சந்தனம் புஷ்பம், முதலியவைகளையும் நைவேத்யம் ஹிருதயமந்திரத்தால் தனித்தனியாக கொடுக்க வேண்டும்.

108. அஸ்த்ர மந்திரத்தை நினைத்து பேரிதாடனம் செய்ய வேண்டும். முதலில் ஒரு அடியும் இரண்டாவது இரண்டு அடியும் அடிக்க வேண்டும்.

109. மூன்றாவது முறை மூன்று முறை அடிக்க வேண்டும். மூன்று முறையும் ஒவ்வோர் அடியுமோ அடிக்க வேண்டும். வாசிப்பவனை பஞ்சாக்ஷரத்தை நினைத்து பிரோக்ஷித்து

110. வஸ்திரம், சந்தனம், மாலை, பூணூல் இவைகளை கொடுத்து, அவருடைய கையில் புஷ்பமும் கொடுத்து அஸ்திர மந்திரத்தை நினைத்து

111. பேரியில் புஷ்பத்தை வைத்து ஆசாரியனின் உத்தரவால் பேரியை கழுத்தில் வைத்துக் கொண்டு முறைப்படி எல்லா தாளத்தையும் அறிந்தவனாக வாசிக்க செய்ய வேண்டும்.

112. காந்தாரம் முதலிய ஸ்வரங்களோடும் ஸமதாளம் முதலிய தாளங்களோடும் கீதம், நிருத்தம் இவைகளோடும் அன்னலிங்கங்களோடு கூடியதும்

113. முறையாக மூர்த்திகளுடனோ அல்லது சண்டேசருடனோ அஸ்த்ரராஜரை குடை முதலிய உபசாரங்களோடு எழுந்தருளச் செய்து

114. தூபம் தீபம், மற்றும் மணி, சப்தம் முதலியவைகளோடு பிரம்ம ஸ்தானத்திலிருந்து நகர் வலம் வரவேண்டும்.

115. இந்திரனின் ஸ்தானத்திலிருந்து இந்திரனுக்கு பலிகொடுக்க வேண்டும் பலி தானத்தின் கடைசியில் தாளம், கீதம் இவைகளோடு கூடியதாகவும்

116. நர்த்தனத்தோடு கூடியதாகவும் அந்தந்த திக்குகளில் செய்ய வேண்டும். பிரம்மாவிற்கு பிரம்ம தாளம் மற்றும் மேகராக ஸ்வரத்துடனும்

117. ஸமதாளம், காந்தாரம், கொல்லிபக்தா பணம், ப்ருங்கிணீ, கவுசிகம், நட்டபாஷை, மல்லதாளம்,

118. ஸ்ரீ காமரம், நவதாளம், தக்கேசி, கோடிகம் தர்கராகம், சாலபாளனீஸ்வரம் டக்கரி முதலிய பலவகை ராகங்களோடும், தாளங்களோடும் பலிதானம் செய்யப்படவேண்டும்.

119. கிழக்கு முதலிய திக்குகளில் முன்னதாக முறைப்படி செய்யப்படவேண்டும். த்வஜாரோ ஹணத்தின் முன்னதாக உத்ஸவத்தில் முக்குணமான தினத்தில் செய்யப்படவேண்டும்.

120. பேரீதாடன பூர்வமான உத்ஸவமானால் அதுவே த்விகுணமாக எண்ணப்படும். தெய்வத்திற்கு எதிரில் நான்கு ஸ்தண்டிலும் செய்யப்படவேண்டும்.

121. முதலில் அஸ்த்ரமூர்த்தியும் அதன் எதிரில் த்வஜ படத்தையும் அதன் எதிரில் விருஷப கும்பத்தை வித்யேஸ்வர்களோடும்.

122. அதற்கு முன்னால் எல்லா லக்ஷணங்களோடு கூடிய பேரியை வைக்க வேண்டும். முறையாக இவர்களை சந்தனம், புஷ்பம், இவைகளை எல்லாம் வைத்து பூஜிக்க வேண்டும்.

123. பேரிக்கும் கும்பத்திற்கு நடுவில் ஸ்தண்டிலத்தில் ஹோமம் செய்யலாம். முன் சொன்ன முறையில் பூஜை செய்து தத்வங்களை நியஸிக்க வேண்டும்.

124. திரிசூலத்தில் தேவதாஹ்வானம் செய்ய வேண்டும். (தேவதாஹ்வானம்) பேரிதாடனம் செய்து விருஷபம் முதலியவர்களோடு திரிசூலத்தை எடுத்துக் கொண்டு

125. அன்னலிங்கம் மற்றும் வாத்யங்களோடு கூடவும் அந்தந்த தேவதாவாஹணங்களோடு கூடவும் கிராம பிரதக்ஷிணமாகச் செய்து

126. பலிதானம் முதலியவைகளையும் செய்து கொடியேற்றும் இடம் சென்று முன் சொன்ன முறைப்படி கொடி ஏற்ற வேண்டும்.

127. பேரீதாடன பூர்வாங்கமான இந்த முறை ராத்திரியில் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டது. கொடி சுற்றி வருதல் பகலில் செய்ய வேண்டும்

128. தேவதை ஆஹ்வான காலத்தில் விருஷப பிரமணத்தை விட்டு விட வேண்டும். பிறகு அங்குரார்பணம் இரவில் யாகாரம்ப தினத்தில் செய்ய வேண்டும்.

129. அதற்காக அங்குரார்பணம் செய்ய வேண்டும். கிராம பிரதட்சிணம் தீர்த்தாங்குரத்திற்கு அவசியமாகும்.

130. மற்ற எல்லாவற்றிற்கும் செய்தாலும் செய்யலாம். இல்லாமலும் இருக்கலாம். அங்குரார்ப்பணத்திற்கு முன்னதாக மாலையில்

131. மித்ஸங்க்ரஹணம் செய்து அங்குரங்கன் நன்கு முளைக்க பேரீதாடனுத்துடன் விதைகளை தெளிக்க வேண்டும்.

132. மற்றவை எல்லாம் அங்குரார்பண பூர்வமாக இரவிலேயே செய்ய வேண்டும். சிவனுடைய யாகாரம்பமும் அந்த இரவிலேதான்

133. இவ்விதம் நிச்சயம் செய்து முதல்நாள் அஸ்த்ரராஜரையும் பூஜிக்க வேண்டும். பிறகு யாக சாலையை எதிரிலோ அல்லது பக்கத்திலோ அமைக்க வேண்டும்.

134. இடது பக்கத்தில் அல்லது வலது பக்கத்தில் ஐந்து சாலைகள் உள்ள விருப்பமான இடத்தில் அமைத்துக் கொள்ளலாம். நடுவில் ஐந்து முழ அளவுள்ளதாக இருக்க வேண்டும்.

135. ஒரு முழம் முதல் பதினைந்து முழம் வரை அளவுள்ளதாக யாகசாலை அமைத்து மூன்று ஆவரணங்களோடு கூடியதாகவும் அல்லது ஐந்து ஆவரணங்களோடு கூடியதாயும்

136. சமமாகவோ அல்லது ஒவ்வொரு அங்குல அதிக அளவுள்ளதாக அதிகரித்து ஒன்பது அங்குலம் உடையதாக ஐந்து வரிசைகள் ஏற்படுத்தவும்.

137. ஒரு வரிசையாக இருந்தாலும் பெரிதாக நான்கு வாயில்களை உடையதாகவும் அல்லது ஒரு வாயில் உடையதாகவும் மண்டப அமைப்பை உடையதாகவும் மற்றும்

138. பந்தல், கூடாரம், போன்ற அமைப்பை உடையதாகவும் ஐந்து ஒன்பது அல்லது ஒரு அக்னியோடு கூடியதாகவும் மேற்கட்டிதுணிகள் கொடி இவைகளோடு கூடியதாகவும்

139. தர்ப்பை மாலையோடு கூடியதாகவும் முத்து தோரணங்களோடு கூடியதும் தேங்காயோடு கூடியதும் எல்லா அலங்காரங்களோடு கூடியதாகவும்

140. நடுவில் எட்டு மாத்ராங்குல அளவுடையதாகவும் ஒவ்வொரு அங்குலம் அதிகம் உடைய இருபத்தெட்டு அங்குலம்வரை உள்ள மேடையோடு கூடியதாகவும்

141. யாகசாலையின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு வேதிகையின் உயரமும் பரப்பும் கூறப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கோ ஐந்தில் ஒரு பங்காகவாவது உபவேதிகை இருக்க வேண்டும்.

142. முஷ்டி அளவுள்ளதும் அல்லது ஓட்டை அளவுள்ளதும் அல்லது கையளவு (முழம்) உள்ளதுமான குண்டம் இருக்கலாம். அந்த குண்டம் நாற்கோணமாகவோ அல்லது வட்டவடிவமாகவோ மூன்று மேகலைகளோடு கூடியதாக இருக்க வேண்டும்.

143. மண்டபத்திலோ அல்லது பெரிய இடத்திலோ யாகம் அதிவாஸம் செய்ய வேண்டும். இவ்விதம் எல்லாவற்றையும் சேகரித்து மண்டப ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும். சில்பியை திருப்தி செய்து அனுப்ப வேண்டும்.

144. புண்யாஹவாசனம் செய்து வாஸ்த்து ஹோமம் செய்ய வேண்டும். எல்லா யாகங்களுக்கும் முக்யமான மண் எடுத்தலை செய்ய வேண்டும்.

145. வேதிகையினுடைய மத்தியில் எல்லா லக்ஷணங்களோடு கூடிய ஸ்தண்டிலம் செய்ய வேண்டும். ஒரு மரக்கால் முதல் ஒன்பது மரக்கால் வரை நெல் போடவேண்டும்.

146. அதில் பாதி அரிசியும் அதில் பாதி அளவு எள்ளும் அதே அளவு பொறியும் போட்டு நடுவில் தாமரையை எழுத வேண்டும்.

147. பலநிறமுடைய கர்ணிகைகளோடும் பிரகாசிக்கின்ற தளங்களோடு கூடியதும் எள், பொறி இவைகளால் ஆன கோடுகளை உடையதும் தர்பைகளோடு கூடியதும்

148. ஐந்து முதல் முப்பத்தாறு தர்பைகளோடு கூடிய அதன் நடுவில் சிவ கும்பத்தை வர்த்தனியோடு கூடியதாகவும்

149. அஷ்ட வித்யேச்வரர்களோடு கூடியதாகவும் கும்பங்களின் ஆவரணங்களோடு கூடியதாகவும் சிவகும்பத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டும். மேலும் எல்லா கும்பங்களும் வஸ்திரம் மற்றும் தங்க தாமரை முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

150. மாவிலைகளோடும் கூர்ச்சங்களோடும் கூடியதாகவும், முழுமையான கோவைப்பழத்தின் பொலிவை உடையதாகவும் ஸ்நபனத்திற்கு கூறிய இலக்கணங்களோடு கூடியதாகவும் கும்பங்கள் இருக்கவேண்டும்.

151. சிவகும்பத்தில் ஒன்பது ரத்னங்களும் வர்தனியில் ஐந்து ரத்னங்களும், வெளியில் உள்ள குடங்களில் தங்கத்தையும் போட வேண்டும்.

152. செல்வம் நிறைந்தவர்களால் இவ்வாறு செய்யப்படவேண்டும். சிவகும்பத்திற்கு இரண்டு வஸ்திரங்கள் அணிவிக்கவேண்டும். தோரணம், துவாரகும்பங்கள் லோக பாலர்கள் இவர்களையும்

153. வித்யேஸ்வரர்களோடும், சக்தியோடும் அஷ்டமங்களங்களோடு கூடியதாகவும் தசாயுதங்களோடும், சிவ கும்பத்தை வைத்து பூஜிக்கவும்.

154. இவ்விதம் செய்து ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். தங்கம், வெள்ளி, அல்லது பருத்தி நூல் இவைகளுள் ஏதேனும் ஒன்றினால் காப்பு செய்யப்பட்டதாக இருக்கவேண்டும்.

155. தங்கம், வெள்ளி இவைகள் பிம்ப கையின் அளவிற்கு சிறிது அளவு அதிகமாக உடைய தாக, பாம்பின் படம் உடையதாகவும் இருக்கவேண்டும்.

156. வாலோடு கூடிய அந்த சூத்ரம் ஸர்ப படத்தோடு கூடியதாகவும் இருக்கவேண்டும். சூத்ரத்திற்கு அனந்தன் அதிதேவதையாகும். தங்கத்திலோ வெள்ளியிலோ செய்யப்பட்ட சூத்ரம்.

157. எல்லா விருப்பங்களையும் நிறப்பக்கூடியதாகும். சூத்ரம் ஒன்றாக இருக்கும். சிறப்பானதாகவும் பிடிப்பை ஏற்படுத்தக்கூடிய வலயத்துடன் கூடியதாகவும் இருக்கவேண்டும்.

158. பட்டு முதலிய சூத்ரங்கள் மூன்று தத்துவங்களையும் ஐந்து கலைகளையும் உள்ளடக்கியதாகவும், அமைதியைத்தரவல்லதாகவும் வெற்றியைத் தரவல்லதாகவும் ஆகும்.

159. ஒன்பது நூலிழை உள்ளதாக அமைக்க வேண்டும். இது ஆரோக்யத்தை கொடுக்க கூடியதாகும். ஆறு நூல்களோலோ, ஐந்து அல்லது எட்டு நூல்களாலோ செய்யப்பட்ட ரக்ஷõஸூத்ரம் புத்ரன், நீண்ட ஆயுள் முதலியவற்றை கொடுக்க கூடியதாகும்.

160. கைப்பருமனுக்குத் தகுந்தவாறு ஒன்று, மூன்று, என்று அங்குலங்களில் அளவு வித்யாசங்களால் சூத்ரம் அமைக்கவேண்டும். நன்கு தண்ணீரால் சுத்தி செய்து சந்தனத்தைப் பூசி

161. விபூதி பாத்திரத்தில் நேத்ர மந்திரத்தை உச்சரித்து விபூதியை வைத்து தனியாக ஸ்தண்டிலம் செய்து அதை ஆஸனத்தின் மேல் வைக்க வேண்டும்.

162. மரக்கால் முதலிய அளவுகளாலும் இரண்டு படிக்கு குறையாமலும் நக்ஷத்திரம் போல் பிரகாசமான அரிசியை ஹ்ருதய மந்திரத்தை கூறியவாது நிரப்பி அஸ்த்ர மந்திரத்தால் பாத்திரத்தை வைக்க வேண்டும்.

163. அதன் நடுவில் விபூதி பாத்திரத்தில் சூத்ரத்தை வைக்கவேண்டும். வெட்டப்படாமல் இரண்டு பாக்கு முதலியவைகளோடு கூடியதாகவும்

164. வெட்டப்படாத அடி, நுனி பாகத்தை உடைய வெற்றிலையை வடக்கு, கிழக்கு முகமாக வைத்ததாக ரக்ஷõ சூத்திரத்தையும் வைத்து இவைகளை ஸ்தண்டிலத்தின் மேல் வைக்க வேண்டும்.

165. புண்யாகவாசனம் செய்து ஹ்ருதய மந்திரத்தால் பிரோக்ஷித்து, ஸ்தண்டிலத்தில் சக்தியை பூஜை செய்து யந்திரிகையில் மூன்று தத்வத்தை பூஜிக்க வேண்டும்.

166. பாத்ரத்தில் பிரதானமான மாயா தத்வத்தையும் அரிசியில்சிவனையும் விபூதி பாத்திரத்தில் உமா சக்தியையும் விபூதியில் லகுளீச்வரனையும்

167. சூத்ரத்தில் அனந்தன் முதலிய நாகர்களையும் பூஜை செய்து சந்தனம் முதலிய உபசாரங்களை செய்து பட்டு முதலான வஸ்திரங்களால் பாத்திரத்தை மூடி மாலையை அதன்மேல் வைக்கவேண்டும்.

168. எல்லா அலங்காரங்களோடும், எல்லா வாத்யங்களோடும் கிராம பிரதட்சிணமோ அல்லது ஆலய பிரதட்சிணமோ செய்ய வேண்டும்.

169. அல்லது செய்யாமலும் இருக்கலாம். பிறகு இறைவனை பூஜிக்க வேண்டும். கட்டைவிரல் மோதிர விரலால் இவைகளால் இடதுகையில் எடுத்து

170. விபூதியோடும் வலது இரண்டு விரல்களினால் அந்த ரக்ஷõ சூத்ரத்தை பூச வேண்டும். அனுஷ்டுப்புடன் கூடிய நேத்ர மந்திரத்தால் (த்ரயம்பகம் என்ற மந்திரத்தால்)

171. தெய்வங்களுடைய வலது மணிக்கட்டில் கட்டி அந்த இடத்தில் விபூதியை வைக்கவேண்டும். இது ஆண் தெய்வங்களுக்கு பொருந்தும். பெண் தெய்வங்களுக்கு வலது கையிலோ, இடது கையிலோ கட்டலாம்.

172. ஆசார்யன் முதலியோர் மக்களுக்கு விபூதி கொடுக்க வேண்டும், தாம்பூலம், அப்பம், பழம், தேங்காய், இவைகளையும் கொடுக்க வேண்டும்.

173. தேவனுக்கும் பக்தர்களுக்கும் கொடுக்க வேண்டும். கொடுக்காமலும் இருக்கலாம். ஸோமாஸ் கந்தரிடமோ, ஸ்கந்தரில்லாமலுள்ள உமாமஹேச்வரரிடமோ, சந்திரசேகரிடமோ ரக்ஷõபந்தினம் செய்ய வேண்டும்.

174. தேவியோடு கூடியதாக இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் சிறப்பாக உடைய நர்த்தன ரூபத்திலும் உமாமகேச்வரர் உட்கார்ந்திருக்கும் மூர்த்தி சுகாசீனர், மஹேச்வரன்

175. அல்லது உத்ஸவத்திற்காக ஏற்பட்ட சாந்த உருவமுடைய இறைவனுக்கும் இன்னும் பல மூர்த்திகளுக்கும் விருப்பத்திற்கு ஏற்றவாறு ரக்ஷõ பந்தனம் சொல்லப்படுகிறது.

176. கிராமபிரதட்சிணத்தை ரக்ஷõபந்தனம் முடிந்த பிறகு செய்யவேண்டும். இவை இரண்டும் யாகாரம்ப காலத்தில் (தினத்தில்) செய்யவேண்டும் என சொல்லப்படுகிறது.

177. மற்றொரு நாளில் அல்லது உத்ஸவத்தின் நடுவில் விரும்பிய தெய்வத்திற்கு ரøக்ஷ கட்டிவிடலாம். அல்லது அதற்கு முதல் நாளும் கட்டிவிடலாம்.

178. ரவுத்ர மூர்த்தியினிடத்திலும் சாந்த மூர்த்தியினிடத்திலும், சிவபக்தரிடத்திலும் இந்த விதி பொருந்தும். திரிசூலத்தின் நடுபாகத்திலோ, அதில் உள்ள தெய்வத்தின் கையிலோ ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

179. தசாயுதங்கள் எல்லாவற்றிற்கும், யாக ஆரம்ப முதல் நாளோ அல்லது அந்த நாளிலோ ஸூத்ர பந்தனம் செய்யவேண்டும்.

180. இது இரண்டிற்கும் முன்பு தீர்த்தாங்குரம் செய்யவேண்டும். ஆசார்யன் மூர்த்திபர்களுடன்கூடி (சித்விக்குகளுடன்) ஸகளீகரணம் முதலியன செய்துகொண்டு

181. திவார பூஜையை, செய்து யாகசாலையில் நுழைந்து பிரம்மேஷ்டி (ஸந்த்யாவந்தனம்), பூதசுத்தி, ஸகளீகரணம் முதலியவைகளைச் செய்து

182. பாத்யம், அர்க்யம், ஆசமனம், இவைகளை கொடுத்து, அர்க்ய ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து யாகசாலையில் ஸ்தண்டிலத்தில் சிவாஸனம் செய்து

183. சிவ கும்பத்தில் மூர்த்தியை மூர்த்தி மந்திரத்தால் ஆவாஹனம் செய்து, பஞ்ச பிரம்ம மந்திரங்களையும் நியாசித்து கலாநியாஸமும் செய்ய வேண்டும்.

184. வித்யாதேஹத்தை கல்பித்து பிரணவ ரூபமான சிவபெருமானை ஆவாஹணம் செய்து ஹ்ருதயம், முதலிய மந்திரங்களை நியாஸம் செய்து பாத்யம் முதலிய உபசாரங்களை செய்ய வேண்டும்.

185. இவ்விதம் மனோன்மணியையும், சக்தி மந்திரத்தால், பூஜிக்கவேண்டும். சுற்றிலும் வித்யேச்வரர்களையும் லோகபாலர்களையும் பூஜிக்கவேண்டும்.

186. அவர்களுடைய பத்து ஆயுதங்களையும் கண்ணாடி முதலிய அஷ்டமங்களப் பொருளையும் பூஜிக்கவேண்டும். அவைகளை வேதிகையின் பக்கத்திலும் ஸ்தண்டிலத்திற்கு மேலேயோ அல்லது ஸ்தலத்திலோ

187. எட்டு திக்குகளிலுமோ, அல்லது திக்கிற்கு இரண்டு இரண்டாக வேண்டும் அதன் முடிவில் எட்டு திக்குகளில் ஸ்தண்டிலத்தில் உள்ள தசாயுதங்களை

188. முறையாக பூஜித்து ஆசார்யன்யாக குண்டத்தின் அருகில் சென்று அதன் ஸம்ஸ்காரங்களை செய்து சிவாக்னியை முறைப்படி ஏற்படுத்த வேண்டும்.

189. ஒன்பது, ஐந்து, இவ்விதம் அவரவர்கள் குண்டங்களில் ஆவாஹணம் செய்து சிவனை நன்கு பூஜித்து பிரும்மாங்கங்களோடு சேர்த்து ஹோமம் செய்யவேண்டும்.

190. கிழக்கு முதலிய நான்கு திக்குகளிலும் வக்த்ரம் (தத்புருஷ) முதலிய மந்திரங்களையும் தென்கிழக்கு முதலிய விதிக்குகளில் ஹ்ருதயம் முதலிய மந்திரங்களையும் தன்தன்பிரதானமந்திரங்களோடு பூஜித்து மற்ற எல்லா மந்திரங்களை பிரதான குண்டத்தில் ஹோமம் செய்ய வேண்டும்.

191. மூங்கிலரிசி, பில்வம், யவை, ஸத்துமா, பால், வெல்லம், எள், கடுகு, பயறு இவைகள் எதுவும் ஹோமத்தில் இடம்பெறுபவையாகும்.

192. (பிரும்மசாலி) பெருநெல், யவை அல்லது உளுந்து, நெல், யவை அல்லது எள், கடுகு, பயிறு அல்லது ஸத்துமா மூங்கிலரிசி, வெல்லம், தேன்

193. என்று நான்குவிதமாக ஹோமத்ரவ்யம் சொல்லப்பட்டது. ஸமித்து, நெய், அன்னம், பொறி இவைகளை நான்கு பகுதிகளிலும் ஹோமம் செய்ய வேண்டும்.

194. சிவாங்க மந்திரத்தில் பத்தில் ஒரு பங்கும் மற்றும் 108 முறை மூல மந்திர ஹோமமும் பிரதான குண்டத்தில் செய்து, கலைகளுக்காக மற்ற குண்டங்களிலும் ஹோமம் செய்ய வேண்டும்.

195. திரவ்ய பேதங்களால், மந்திரங்கள் சிவாமத்தில் சில சொல்லப்பட்டன. ஆனால் தந்திரங்களின் பேதத்தால் மந்திரபேதம் இங்கு சொல்லப்படவில்லை.

196. ஹவிஸ்ஹோமம் ஹோமத்தின் முடிவிலோ ஹோமத்தின் ஆரம்பத்திலோ செய்யலாம். அதன் முடிவில் பலிதானம் செய்யவும் அதன் முறை இங்கு சொல்லப்படுகிறது.

197. நித்யோத்ஸவ முறையில் உள்ள ஹவிர்மயமான அன்ன லிங்கத்தை செய்து அங்கு அஸ்திர ராஜரை பூஜித்து திரிசூலத்தோடு கூடிய

198. தசாயுதங்களோடும், தூபதீபங்களோடும், மணிநாதத்தோடும், திரவ்யத்தோடும்

199. குடை முதலிய உபசாரங்களோடும் பலவித வாத்யங்களோடும் நகரம் முதலியவைகளில் ஆசார்யனோ, அல்லது சிஷ்யனோ பிரவேசிக்க வேண்டும்.

200. தேவதா ஆஹ்வானம் செய்யும் இடத்தில் பலியை முறையாக கொடுத்து மோதகம், இட்லி, பயிறு, வெல்லம், சத்துமா கணேச்வரர்க்கும்
                                                                          படலம் 6/2 : தொடரும்...

படலம் 6/1

 படலம் 6/1 : மஹோத்ஸவ விதி

ஆறாவது படலத்தில் மஹோத்ஸவ விதியாகும். அதில் முதலாவதாக த்வஜாரோஹணா வரோஹாந்தகிரியை உத்ஸவம் என உத்ஸவ என உத்ஸவ ஸ்வரூப விவரணம். பிறகு த்வஜாங்குரம் த்வஜாங்கமாகும். ஆகையால் அந்த அங்க கிரியையை த்வஜாரோஹபூர்வம் செய்ய வேண்டும். என த்வஜாங்குரகர்மா சூசிக்கப்படுகிறது. பின்பு தீர்த்த நட்சத்ர திதி நிச்சயித்து த்வஜாரோஹணம் ஆரம்பிக்க என கூறி தீர்த்த நட்சத்ர பிரகாரம் கூறப்படுகிறது. பின்பு அதிவாசத்திற்கு முன்பாக கொடி ஏற்றுக என கூறி த்வஜாதிவாஸவிதி பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் த்வஜபடலக்ஷணம் த்வஜபடத்தில் விருஷபாதி லேகன பிரகாரம் நயனோன்மீலனம் வ்ருஷபயாக காரணம் கூறப்படுகிறது. அந்த சமயம் காலையில் த்வஜபடம் பூஜித்து அதை திரிசூல ஸஹிதம் தேவேச சஹிதம் அல்லது தேவேச வியுக்தமாகவோ, படிசட்டம், பல்லக்கிலோ ஆரோஹித்து பல ந்ருத்த வாத்யஸஹிதமாகி க்ராம ப்ரக்ஷிணம் செய்து ஆலயப்ரவேசம் செய்க என கூறி பிறகு த்வஜாரோஹ தினத்திலோ, அதிவாஸ தினத்திலோ த்வஜதண்டம் ஸ்தாபிக்க என்று கூறி த்வஜதண்ட ஸ்தாபன பிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. அதில் த்வஜதண்டப்ரமாணம், த்வஜதண்டவ்ருக்ஷ, த்வஜயஷ்டி, ஸம்பாதநக்ரமம், ஸ்கந்தவலய பிரகாரம், ரஜ்ஜுஸம்பாதந த்வஜதண்ட ஸ்தாபன விஷயம், கிரியா நிரூபணம், த்வஜ தண்ட ஸ்தாபன யோக்யஸ்தான தண்டமூலத்தில் வேதி கல்பன பிரகாரம் இவ்வாறான விஷயங்கள் கூறப்படுகிறது. பிறகு த்வஜா ரோஹந விதி பிரதிபாதிக்கப்பட்டு அதில் முடிவாக த்வஜாரோஹணம் முதல் த்வஜாரோஹவஸாநம் வரை ஏககாலம், திவிகாலம், திரிகாலமோ, விருஷபத்தை பூஜிக்க என கூறப்படுகிறது. பிறகு பேரீதாடநவிதி கூறப்படுகிறது.

அங்கு பேரீதாடனம் விதிப்படி ராத்ரியில் செய்ய வேண்டும் பேரீதாடநப்ரகாரம், அக்காலத்தில் வினியோகிக்கிறராகதாளாதி பிரயோஜநம் நிரூபிக்கப்படுகிறது உத்ஸவம், பேரீதாடன பூர்வம், த்வஜ பூர்வம் அங்குரார்ப்பணபூர்வம் என திரிவிதமாகும் என கூறி அன்று மூன்று விதத்திலும் செய்யக் கூடிய கிரியா விசேஷம் கூறப்படுகிறது. யாகசாலை நிர்மாண பிரகாரம், வேதிகா ஸ்தண்டில கல்பனபிரகாரம், கும்பஸ்தாபனவிதி, அஷ்டமங்கல, தசாயுத ஸ்தாபன விதி இவ்வாறான விஷயம் கூறப்படுகிறது. பின்பு ரக்ஷõபந்தன விதி கூறப்படுகிறது. ஸூத்ர லக்ஷணம் பஸ்மாதார பாத்ரத்தில் ஸூத்ரந்யாஸ பிரகாரம் தேவதேவியின் ரக்ஷõபந்தனத்தின் விசேஷ நிரூபணம், தசாயுதங்களின் ரக்ஷõபந்தனவிதி இவ்வாறாக விஷயங்கள் சிறப்பாக பிரதிபாதிக்கப்படுகிறது. பிறகு யாகாரம்பத்தின் முன்தினம் அல்லது அந்ததினத்திலோ தீர்த்தாங்குரார்பணம் செய்ய வேண்டுமென தீர்த்தாங்க கர்மா சூசிக்கப்படுகிறது. பிறகு ஹோமவிதிமுடிய செயற்பாலது எனக்கூறி பலிதான விதி விளக்கப்படுகிறது. பின்பு யாகசாலையில் விதிக்கப்பட்ட பூஜாவிதி, ஹோமவிதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஹோமமுடிவில் அல்லது ஹோம ஆரம்பத்திலோ ஹவிஸ் கொடுக்க வேண்டுமென ஹவிஸ்தான விதி கூறப்படுகிறது. ஹோம விதி முடிவில் பலிதானம் செயற்பாலது என்று பலிதான விதி விளக்கப்படுகிறது. நவதின உத்ஸவ விஷயத்திலுமே 12 தின உத்ஸவ விஷயத்திலும் தின தேவர்களின் பலிதிரவ்யங்களின் விசேஷ நிரூபணம் காணப்படுகிறது.

முடிவில் காலை மாலை பலிகொடுக்கவும் என்று பலிதான காலம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பலிதான முடிவில் பலிகாலத்திலோ பேரயாத்ரை செய்தல் வேண்டுமென கூறி பேரயாத்ரை பிரகாரம் விசேஷமாக நிரூபிக்கப்படுகிறது. அதில் வாஹன விதி பேரக்ரமம் இத்யாதி விஷயம் பிரதிபாதிக்கப்படுகிறது. முடிவில் பிரதி தினம் உத்ஸவ காலத்தில் பகலிலும், இரவிலும் பேரயாத்ரை செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது யாநத்தின் முடிவில் தேவர்க்கு அவசியம் ஸ்நபனம் செய்ய வேண்டுமென கூறப்படுகிறது. மிருக யாத்திரையில் விசேஷமாக செய்ய வேண்டும் என சூசிக்கப்படுகிறது. பின்பு ரதாரோஹவிதியில் விசேஷம் பிரதிபாதிக்கப்படுகிறது. யாககாலத்தில் மழை முதலானவை ஸம்பவித்தால் செய்யக்கூடிய பிராயச்சித்த விதி நிரூபிக்கப்படுகிறது. பின்பு தீர்த்த திதியின் முன்பு ஐந்து நான்காம் தினத்தில் தைலாப்யஞ்ஜநம் ஆசரிக்கவும் என கூறி அப்பயஞ்சன விதி கூறுகிறார். பின்பு தீர்த்த திவஸ முன்தினம் செய்யக் கூடிய நடேசப்ரமண விதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஆசார்ய திருப்திக்காகசெய்ய வேண்டிய யாத்ராதான விதி நிரூபிக்கப்படுகிறது. ஆசார்ய சிவ வித்யாச தர்சனத்தில் அதோகதி பிராப்தி அடைவான் என்கிறார். பின்பு தீர்த்தோத்ஸவ விதி பிரதிபாதிக்கப்படுகிறது. சூர்ணோத்ஸவ முறையும் விதிக்கப்படுகிறது. பிறகு ஸமுத்ராதிகளான மஹாஜலத்தில் மஹாதீர்த்தம் செய்ய வேண்டும் என மஹாதீர்த்த விதி கூறுகிறார். பிறகு த்வரோஹண நிரூபிக்கப்படுகிறது. பின்பு அங்குரார்ப்பணம். துவஜாரோஹணம், ஹோம ஆரம்பம் நிருத்தமூர்த்தி உத்ஸவம், தீர்த்தம் சுத்த ஸ்நபனம் காலம் ஆகிய சமயங்களில் ஆசார்யனுக்கு வஸ்த்ர ஹேமாங்குலீயம் கொடுத்து பூஜிக்க வேண்டும். பிறகு ஆசார்ய தட்சிணை விஷயத்தில் உத்தம, மத்யம கந்ய ஸ்க்ரமம் நிரூபிக்கப்படுகிறது.

பின்பு பக்தோத்ஸவ விதி கூறப்படுகிறது. பிறகு ஸம்வத்ஸரோத்ஸவ காலத்தில் மாஸோத்ஸவ காலமேற்பட்டால் மாஸோத்ஸவவிதி பிரகாரம் சுருக்கமாக செய்யுமான பிரதிபாதிக்கப்படுகிறது. ஒரு தின உத்ஸவ விதி சூசிக்கப்படுகிறது. அதில் ஏகாஹோத்ஸவம் கர்த்தா இச்சையால் விருப்பப்பட்ட காலங்களில் செய்ய கூறி க்லுப்தககாலங்கள் கூறப்படுகிறது வாரபூஜை பிரதிபாதிக்கப்படுகின்றது. அதில் பிரதிவாரம் உபயோகிக்க வேண்டிய பத்ரங்கள் ரத்னங்களும் நிரூபிக்கப்படுகிறது. வாரோத்ஸவவம் ஆசரிக்க வேண்டும் என கூறி வாரோத்ஸவ கூறப்படுகிறது. ஸாமாந்யமாக உத்ஸவ விஷயத்தில் த்வஜத்தில் த்வஜமின்றியும் விருஷபத்வஜமே செயற்பாலது. இவ்வாறாக சிவோத்ஸவத்தில் த்வஜாரோஹணம் செய்த சமயத்தில் மற்ற தேவதைகளுக்கு த்வஜா ரோஹணம் செய்யக் கூடாது என்றும் செய்யக்கூடியவை கூடாதவை என விசேஷ விதி கூறப்படுகிறது. இங்கு வத்ஸரம், சவுரம், சாந்திரம், என இரண்டு விதம், அதில் சவுரம் சிரேஷ்டம், சாந்த்ரம்மத்யமம், ஸாவநம் என்ற பிரிவு அதமம் என கூறப்பட்டுள்ளது. உத்ஸவ விஷயத்தில் வேறுவிதமாக பூஜாகிரியை தொகுப்பு பிரதிபாதிக்கப்படுகிறது. முடிவில் த்வஜம் பன்னிரெண்டாவதாண்டின் முடிவில் செயற்பாலது என்கிறார். ஜீர்ணதோஷம் ஏற்பட்டால் வேறு த்வஜம் ஏற்படுத்தவும் என்று கூறியுள்ளது. இவ்வாறாக ஆறாவது படல கருத்து ஆகும்.

1. உரிய முறைப்படி உத்ஸவத்தை பற்றி சொல்லப்போகிறேன். கொடியேற்றுவது முதல் கொடி இறக்குவது வரை உள்ள செயல் உத்ஸவம் ஆகும்.

2. த்வஜ அங்குரம் த்வஜத்திற்கு அங்கமாகும். அந்த அங்குரத்தை கொடியேற்றுவதற்கு முன்பு செய்ய வேண்டும். ஆகையால் அதற்கு முன்பு தீர்த்த நட்சத்திரத்தை நிர்ணயித்து அதற்கு முன் தினத்திலே அங்குரம் செய்ய வேண்டும்.

3. இரட்டைப்படை நாளிலோ அல்லது அந்த நாளிலோ த்வஜாரோஹணம், செய்ய வேண்டும். எல்லா மாத நட்சத்திரம் எல்லா மாதத்திலும் உள்ள திருவாதிரை நட்சத்திரத்திலும்

4. அரசர்களின் பிறந்த நாள், நினைவு நாள் பட்டாபிஷேக நட்சத்திரம் மற்றும் மாசிமாத ஷஷ்டி வரையில் மற்ற எல்லா மாதங்களில் பவுர்ணமி வரையில்

5. விஷுவ புண்யகாலம், தட்சிணாயாண உத்தராயண காலம், சந்திர சூர்ய கிரஹண காலத்திலும் தீர்த்த நட்சத்திர தினத்தாலும் ஐந்து நாளிலும் அஷ்டமியிலும் மற்ற தீர்த்தநட்சத்திரம் வரையிலுமோ

6. முப்படை இரட்டைப்படை, அல்லது அந்த நாளிலோ பகலிலோ இரவிலோ, அதிவாஸன பூர்வமாக த்வஜத்தை ஆசார்யன் ஏற்ற வேண்டும்.

7. ஐந்தும் முழம் முதல் பதினான்கு முழம் வரையில் த்வஜத்தின் அளவாகும். இது தலையிலிருந்து அடிபாகம் வரை உள்ள அளவாகும்.

8. இரண்டும் சேர்ந்த அளவு நான்கு முதல் ஏழுவரை ஆகும். அவைகளைப் பிரிந்து ஒரு பாகம் கொடித்துணியின் பரப்பளவு என்று சொல்லப்படுகிறது.

9. அகல அளவின் சமமாகவோ முக்கால் பாகமாகவோ பாதிபாகமாகவோ ஆகும். அகலத்தின் பாதி அளவு தலை பாகமாகும். இரு வாலுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

10. இரண்டு குச்சியுடன் கூடியதாக அதன் நடுவில் விருஷபத்தை எழுத வேண்டும். நிற்பது போலவோ படுத்திருப்பது போலவோ எழுதலாம். ஆயம் என்ற அளவு முதல் சுபம் என்ற அளவு வரையிலுமோ உள்ளதாகி வரையவேண்டும். ஆயம்: கர்த்தாவின் நட்சத்திரம், வாஸ்த்து நட்சத்திரம் ஸ்வாமியின் நட்சத்திரத்தை சார்ந்து கணக்கிடுவதாகும்.

11. விருஷபம் வெள்ளை சிகப்பு நிறமாகவோ மஞ்சள் நிறமுடைய வாலும் சிவப்பு நிறமுள்ள கொம்புகள் குளம்புகள் இவைகளோடு கூடியதாக விருஷபம் இருக்க வேண்டும்.

12. கிராமத்தின் முக்கிய வீதி வழியாக வலம் வரும் பொழுது கிராமத்தை எதிர்நோக்கியதாக அமைக்க வேண்டும். ஐந்து முதல் முப்பத்தாறு அளவுள்ள மாத்ராங்குல தன்மையோடு கூடியதும்.

13. ஜாதி அம்சங்களோடு கூடியதும் மூன்று வர்ண கண்களோடு கூடியதும் எல்லா லக்ஷணங்களோடு கூடியதும் தங்க மாலையோடு கூடியதும் அந்த விருஷபம் இருக்க வேண்டும்.

14. கொடிமரம் மானாங்குலத்தாலும், விருஷபம் மாத்ராங்குலத்தாலும் செய்ய வேண்டும். கொடிபட விருஷபம் பத்மாஸனத்தோடு கூடியதாகவும் பக்கத்தில் இரண்டு தீபத்துடன் கூடியதாகவும்

15. இரண்டு சாமரங்களோடு கூடியதாகவும் குடையின்கீழ் தலை உடையதாகவும் பூர்ண கும்பத்தோடு கூடியதாகவும் அல்லது திரிசூலம் இதனோடு கூடியதாகவும்

16. இவ்விதம் விருஷபத்தை எழுதி கண்திறந்து சிவனுக்கு எதிரிலோ மண்டபத்திலோ அஸ்திர ஜலத்தால் பிரோக்ஷித்து

17. இரண்டு ஸ்தண்டிலங்களோடு கூடிய இடத்திலோ மனதைக் கவரும் வேறு இடத்திலோ பாத்திரத்தை முக்காலியின் மேல் உள்ள ஸ்தண்டிலத்தில் வைக்க வேண்டும்.

18. கொடி மற்றும் புதிய குடம், வஸ்த்ரம், கூர்ச்சம், ஸ்வர்ணம் ரத்னம், இவைகளோடு கூடியதும் நூல் சுற்றப்பட்டதும் நடுவில் விருஷபத்தை உடையதாகவும் இருக்க வேண்டும்.

19. அதே போல் வஸ்திரம் கூர்ச்சம் மாவிலை இவைகளோடு கூடிய கலசங்கள் எட்டு திக் பாலகர்களுக்காக விருஷப கும்பத்தை சுற்றிலும் வைக்க வேண்டும்.

20. ஆதார சக்தியாதி பூஜை செய்ய வேண்டும். விருஷப ஆசனம் கொடுத்து தர்மாதிகளை பூஜை செய்ய வேண்டும். ஓம் ஹாம் வ்ருஷபாஸநாய நம:) என்று கூறி பூஜிக்க வேண்டும்.

21. ஓம் ஹாம்வ்ரும் வ்ருஷப மூர்த்தயே நம: என்ற மந்திரத்தால் ஆவாஹணம் செய்ய வேண்டும்.

22. மேலே பஞ்ச பிரும்மங்களை பூஜித்து மூலமந்திரத்தால் பூஜிக்க வேண்டும். முறைப்படி ஹ்ருதயம் முதலிய மந்திரங்களை முறையாக பூஜிக்க வேண்டும்.

23. தத்வ தத்வேச்வரர்களோடும் மூர்த்தி மூர்த்தீச்வரர்களோடும் ஆவாஹணம் முதலியவைகளை செய்து விருஷப மூலமந்திரத்தால்

24. விருஷப காயத்திரியாலும் முறையாக நடுவில் பூஜை செய்து சந்தன, புஷ்பங்களால் அர்ச்சித்து சுற்றிலும் லோகபாலகர்களை பூஜை செய்யவேண்டும்.

25. முன்பே அமைக்கப்பட்ட குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ நிரீக்ஷணம் முதலிய ஸம்ஸ்காரங்களால் பரிசுத்தம் செய்து சிவாக்னியை ஸ்தாபிக்க வேண்டும்.

26. அதற்கு நடுவில் விருஷபத்தை ஆவாஹனம் செய்து ஸமித்து, நெய், அன்னம், இவைகளால் 108 ஆஹுதிகள் செய்ய வேண்டும்.

27. தத்வ தத்வேச்வரர்களையும் பூஜை செய்து ஹோமம் செய்து மூலமந்திர ஹோமம் முடிந்தவுடன் எல்லா பலன்களையும் தரக்கூடிய பூர்ணாஹுதியைச் செய்ய வேண்டும்.

28. சந்தனம் புஷ்பம், இவைகளால் பூஜை செய்து படத்திலுள்ள விருஷபருக்கும் குடத்திலுள்ள விருஷப தேவருக்கும் வெண்பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்.

29. காலையில் சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜை செய்து முறையாக உபசாரம் செய்து தாம்பூலம் முதலியவைகளை விருஷப தேவர்க்கு ஸமர்ப்பணம் செய்ய வேண்டும்.

30. பூர்ணாஹுதி செய்த பிறகு எல்லா மங்கள வாத்யங்களோடும் நடனம் வாத்யம் இவைகளோடு கூடியதாக

31. கேடயத்திலோ, பல்லக்கிலோ, விருஷப கொடியை (அஸ்த்ரதேவர்) திரிசூலத்தோடும் இறைவனோடும் அல்லது அல்லாமலும்

32. கிராம பிரதட்சிணம் முதலியவைகளை செய்து ஆலயத்தில் பிரவேசம் செய்து எல்லா லக்ஷணங்களோடும் கூடியதாக த்வஜ தண்டத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

33. (கொடிமரத்தை திவாஜாரோஹண தினத்திலோ) அல்லது அதிவாச தினத்திலோ ஆலய உயர சமமாகவோ, அல்லது அதன் இரண்டு, மூன்று மடங்குகளாகவோ ஸ்தாபிக்கவும். ஆறு, ஏழு, எட்டு, முழு அளவுள்ள தண்டம் அதமமாகும்.

34. ஒன்று முதலான தளம் வரையிலோ, கோபுரம் வரையிலோ பதினொன்று இருபத்திரண்டு கை அளவு உயரம் உள்ளதாகவோ நடுநிலையான கொடி அமைத்து கொடியிலும் கடைநிலையான கொடியிலும் தரையில் புதைத்ததாகவோ புதைக்காததாகவோ அமைக்கலாம்.

35. சூலங்களுக்கு கூறிய எல்லா விருக்ஷத்தினாலுமோ பட்டைகளின் ஸாரம் இவைகளையுடைய பாக்கு மரம் முதலியவைகளின் மரங்களாலோ

36-37. புரசு, கருங்காலி, அரசு, ஆல், சந்தனம், முதலியவைகள், சால விருக்ஷம் இலுப்பை, பனை, மா, மூங்கில், ஜாதி மரங்கள், வன்னி, வில்வம் முதலியவைகள்.

38. சம்பகம் ஆகிய இந்த விருக்ஷங்களால் பதினாறு, இருபத்தினான்கு முழ அளவுள்ளதாகவோ ஸ்வபாவமான நீளத்துடன் மரப்பட்டையுடன் கூடியதாகவும்.

39. த்வஜதண்டம் சொல்லப்பட்ட பிறகு, த்வஜயஷ்டி சொல்லப்படுகிறது. இரண்டு பாகம் முதல் ஒன்பதின் ஒரு பங்கு வரையிலாக தண்டத்தின் நீளம் கூறப்படுகிறது.

40. ஒரு அம்சத்தில் த்வஜ யஷ்டியை சிறந்தவர்கள் செய்ய வேண்டும். ஐந்து அங்குலம் முதல் பதினாறு ஒவ்வோர் அங்குலமாக பதினாறு அங்குலம் வரையிலுமாக

41. எவ்வளவு நீள அளவு உள்ளதோ அந்த அளவில் உபதண்டம் கல்பிக்கவும். ஐந்தம்சத்திலிருந்து பன்னிரண்டு அம்சம் வரை அடிபாகத்தின் அளவாகும்.

42. ஒரே அம்சத்தால் குறைவான அளவு தண்டத்தின் நுனியாகும். இந்த அளவே தண்ட நுனியாகும். மூங்கில் மரம், த்வஜ தண்டத்தின் மரங்களால் த்வஜயஷ்டி அமைக்கலாம்.

43. இரண்டையும் சேர்ப்பதற்கு மூன்று (ஸ்கந்தங்களை) வலயங்களை செய்ய வேண்டும். இரண்டு வலையங்கள் பன்னிரண்டு அங்குல அளவுள்ளதாக இருக்க வேண்டும்.

44. முப்பத்தாறு மாத்ராங்குல அளவு வரையில் கழுத்து (ஸ்கந்த) வலைய நீளத்தை செய்ய வேண்டும். ஏழு அங்குலம் முதல் இருபத்தினான்கு அங்குலம் வரை உள்ளதாக இருக்கவேண்டும்.

45. ஸ்கந்த விஸ்தாரம் கூறப்பட்டு அதன் நுனி, கழுத்து அடிபாகத்தில் மூன்று பாகமாக பாதியிலோ அல்லது மூன்று பகுதியிலோ முக்கால் பங்காகவோ தர்வீ என்ற கரண்டியைப் போல செய்யலாம்.

46. நான்கு மூன்று, இரண்டு என்ற அங்குலத்தில் இதற்கு அளவு சொல்லப்பட்டது. ஆறு, ஏழு, எட்டு என்ற அளவில் தண்டத்திற்கு மண்ணினாலோ பீடம் செய்யலாம்.

47. மூல அக்ரங்களில் திவாரம் கூடியதும் தண்டயஷ்டிக்கு இணையானதும் பாதி வளைவு உள்ள வலயம் வளையும் உள்ளதாகவும் முடிவில் யஷ்டியின் நுனி பிரதேசத்திலும்

48. தண்ட ஓரத்திலோ அல்லது ஸ்கந்தத்திலோ வலயம் இருக்க வேண்டும். பெரிய பிளவுகளாக மூன்று கிளைகள் போல் முக்கால் பங்கு அளவில் இருக்க வேண்டும்.

49. ஆறு அங்குலம் முதல் ஆறங்குல அதிகமான அளவுள்ளதாக தண்டத்தின் அடியில் உள்ள அளவுள்ளதாகி தண்டத்தின் மேலும் வலயம் இருக்க வேண்டும்.

50. அதில் வலையத்திற்கு மேல் யஷ்டியின் நுனி என்று சொல்லப்படும் பூமியில் புதைக்கும் அளவு தண்ட நுனி நீளமாக இருக்க வேண்டும்.

51. குறைந்த அளவினாலோ பூமியில் ஊன்றக்கூடாது. வல்யம், ஸ்கந்தம் இவைகள் தண்டத்தின் நுனி வரையில் இருக்கும்படி நடவேண்டும்.

52. இருபத்தைந்து மாத்திரைகள் முதல் மூன்று மூன்று அங்குலம் வளர்ச்சியால் இரண்டு மடங்காகவும் செய்யலாம். பூமியின் அளவுவரை இருப்பதாகவும் உள்ள அளவு பூமிக்குள் புதைப்பதின் அளவாகும்.

53. ஒரு அங்குலம் முதல் கால், கால், மாத்ராங்குல அளவாக வளர்ச்சி அடைந்து மூன்று மாத்திரை அங்குலம் வரையில் உள்ள வலயம், மற்றும் கீலம் இவைகளோடு கூடியும்

54. வளையத்தின் இடைவெளியானது வலயத்தின் தகுந்த பலம் உள்ளதாக இருக்கவேண்டும். கயிறு வலயத்தின் நடுவில் இருக்கும், இரண்டங்குலம் முதல் அதிகரிக்கப்பட்ட கயிறு அளவு கனத்துடன் கூடியதாக அமைய வேண்டும்.

55. த்வஜாரோஹணத்திற்கு ஏற்ற நீளம் உடையதாக கயிறு இருக்க வேண்டும். கொடிப்பட கயிறு பலமான முப்பிரி உள்ளதாக இருக்க வேண்டும். இல்லாவிடில் கட்டுவதற்கு தகுதியானதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

56. இவ்விதம் கயிறை தயார்செய்து த்வஜ தண்டத்தை சுத்தி செய்து தர்பை கயிறு, தர்பை, மற்றும் மாலைகளால் மேலிருந்து முறையாக சுற்றவேண்டும்.

57. நூறு தர்ப்பைகளால் ஆன கூர்ச்சத்தை யஷ்டியின் நுனியில் வைக்க வேண்டும். அஸ்த்ர மந்திரத்தால் பிரோக்ஷித்து சிவதத்வமாக நியாஸம் செய்ய வேண்டும்.

58. தண்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். மூன்று பிரிவிலும் நுனி முதலாக சிவதத்வ தத்வாதி பத்ரயங்களை பூஜிக்க வேண்டும். ஸ்கந்த திரயத்தில் சிவதத்வ தத்வாதிகளை அர்ச்சிக்க வேண்டும். வலயத்தில் சூர்யனை பூஜிக்க வேண்டும்.

59. தண்டநாயகனான சிவனுக்கு கயிறு சக்தியாகும். சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும். பிறகு பிரதிஷ்டை ஆரம்பிக்க வேண்டும்.

60. ரத்னந்யாஸம் தண்டமூர்த்தியனடியில் செய்ய வேண்டும். தேவாலயத்திற்கு எதிர்நோக்கியது போல் தங்கம் முதலியவைகள் குண்டுமணி எடை முதல் பவுன் எடை வரை வைக்க வேண்டும். ஆமையையோ, விருஷபத்தையோ பிரதிமையாக தண்டத்தினடியில் வைக்க வேண்டும்.

61. தண்டத்தின் அடிப்பாகத்தில் அந்தந்த மந்திரங்களால் அதோமுகமாக அர்ச்சிக்க வேண்டும். யஷ்டி நுனி பாகத்திலிருக்கும்படி தண்டத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

62. தேவாலயத்தை நோக்கி விருஷபத்தின் எதிரிலோ அல்லது பக்கமோ அப்படியே கோபுரத்திற்கும் மஹாமண்டபத்திற்கு அருகிலோ ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

63. உள்ளே உள்ள மண்டலத்திலும் பிரகாரத்தின் ஆதியிலும் கோபுரத்தின் நடுவிலேயும் ஒன்பது, ஐந்து, என்ற முறையில் எட்டு திசையில் அல்லது நாலு திக்குகளில் உள்ளவாறு ஸ்தாபிக்க வேண்டும்.

64. முன் உளது பிரதானமாகும். கொடிகள் எட்டு எண்ணிக்கை உள்ளதாய் இருக்கும். வித்யேஸ்வரர்களாகவும் நான்காக இருப்பின் தத்புருஷர்கள் அதிபதிகளாவர்.

65. தண்டாதிபர்கள் இவ்விதம் சொல்லப்பட்டார்கள். த்வஜபடத்தில் விருஷபம் அதிபதி தண்டத்தின் அடியில் வேதிகை இருக்க வேண்டும். அது பலவிதமாகும்.

66. ஒரு முழம் முதல் மூன்று, மூன்று அங்குலமாக இரண்டு முழம் வரையில் வேதிகை அளவு கூறப்படுகிறது.

67. கொடியின் சமமான உயரமுடையதும் அல்லது முக்கால் பங்கோ எட்டு, ஏழு, ஐந்து, நான்கு மூன்று என்று அம்சங்கள் உடையதாகவும் அல்லது அதில் பாதியாகவோ வேதிகை சொல்லப்பட்டது.

68. மூன்று மேகலைகளோடு கூடியதாக வேதிகை இருக்க வேண்டும். ஒவ்வொரு மேகலையும் எட்டு அங்குல அளவுள்ளதாகவோ அல்லது இரண்டு மூன்று, அங்குலம் குறைந்த அளவுள்ளதாகவோ மேகலை அளவு இருக்கவேண்டும்.

69. மேகலை இல்லாத பீடத்தில் அடியில் உபவேதிகை அமைக்கவேண்டும். இரண்டு அங்குலம் முதல் கால் அங்குலம் அதிகரித்ததாக அல்லது ஆறு அங்குலம் வரை இருக்கலாம்.

70. கால், அல்லது பாதி அல்லது முக்கால் அளவு உயரம் இருக்க வேண்டும். வேதிகைக்கு மேல் நான்கு அங்குல அளவில் தாமரை செய்ய வேண்டும்.

71. ஐந்தங்குலம் முதல் பதினெட்டு அங்குலம் வரையில் தாமரையின் உயரமாகும். விஸ்தாரம் வேதிகைக்கு சமமாகவும் இருக்கவேண்டும்.

72. ஒவ்வொரு அங்குல அளவினால் பதினொன்று அங்குலம் அளவு வரையில் கர்ணிகைகளோடு கூடியதாக பத்மம் இருக்க வேண்டும். பத்ம அமைப்புக் கூறப்பட்டது.

73. கர்ணிகை தண்டத்திலிருந்து ஒரு அடி வெளிவந்ததாக இருக்க வேண்டும். மூன்று அங்குலம் வரையில் இதன் உயரம் இருக்கலாம்.

74. நான்கு அல்லது எட்டு பத்து தளமாகவும் அல்லது வட்ட வடிவமாகவும் நாற்பட்டையாகவும் தளசுற்று இருக்க வேண்டும்.

75. அப்படியே உபதளங்களோடும் அல்லது இல்லாமலும் இருக்கலாம். இவ்விதம் பீடத்தை செய்து சில்பியை திருப்தி செய்ய வேண்டும்.

76. புண்யாகவாசனம் செய்து வேதிகையை அஸ்திர மந்திரத்தால் புரோக்ஷித்து செய்து தர்பையினால் த்வஜதண்டத்தை சுற்றி (விருஷ கும்பம், படம்,)

77. திரிசூலம் மங்கள அங்குரம் இவைகளோடு கூடிய விருஷபகும்பத்தையும் படத்தையும் பிரதட்சிண முறையாக தண்டத்திற்கு எதிரில் கொண்டு வரவேண்டும்.

78. ஆதாரசக்தி அனந்தன் முதலியவர்களை கூர்மாசனத்தில் பூஜிக்க வேண்டும். கோணங்களின் தர்மம் முதலியவைகளையும் நடுவில், அதர்மம் முதலியவைகளையும் பூஜை செய்ய வேண்டும்.

79. எட்டு தளங்களில் வாமை முதலியவர்களை பூஜிக்க வேண்டும். கர்ணிகையில் மனோன்மணியை பூஜிக்க வேண்டும். தண்டத்தில் ஸதாசிவ பெருமானையும் சந்தனம் புஷ்பத்தால் பூஜை செய்யவும்.

80. பாத்யம், அர்க்யம், ஆசமனமாகிய மூன்று வகைகளோடு கூடிய ஸ்நபன முறையில் கூறப்பட்ட முறைப்படி பூஜை செய்து

81. விருஷப படத்தை விருஷப காயத்ரி மந்த்ரம் சொல்லி கயிற்றால் கட்டி சிறிய மணியை கட்டி அஸ்திர மந்திரத்தை சொல்லிக் கொண்டு

82. கும்பத்திலிருந்து பீஜத்தை எடுத்து விருஷபத்தை தியானித்துக் கொண்டு ஆசார்யன் விருஷபத்தின் ஹ்ருதயத்தில் விருஷப பத்திரத்தை வைத்து சந்தனம் புஷ்பம் முதலியவற்றால் பூஜிக்க வேண்டும்.

83. விருஷப மூலத்தால் ஆசார்யன் விரைவாக கொடியை ஏற்ற வேண்டும். அல்லது முதலில் தொட்டு விட்டு மற்றவரைக் கொண்டு ஏற்றச் சொல்லலாம்.

84. கீழ்நோக்கியதாக விருஷபமிருப்பின் பூமியின் திருப்தியையும் அரசனுக்கு அமைதியையும் கொடி மேல் நோக்கியதாக இருப்பின் தேவர்களின் திருப்திக்காகவும் அரசனின் வெற்றிக்கும் ஆகும்.

85. கொடி செல்லும் திசை மேற்கு, வடக்கு, ஈசானம், கிழக்கு நோக்கி இருக்குமேயானால் நன்மை கிடைக்கும். ÷க்ஷமம், ஆரோக்யம் வெற்றி புஷ்டி இவைகள் முறையான பலன் ஆகும்.

86. அக்னி கோணத்தில் கொடி செல்லுமானால் ஜ்வரம் அல்லது வருத்தம், மரணம், நோய் முதலியன உண்டாகும். வாயு திக்கில் சென்றால் பயம் உண்டாகும். வாலிற்கும் இந்த பலன் உண்டு.

87. கொடி ஏற்றும் பொழுது ஆசார்யன் குறைவினால் தடங்கல் ஏற்படுமானால் அதற்கு சாந்தியை அகோரமந்திரத்தை ஸ்மரித்து செய்ய வேண்டும்.

88. நூற்றெட்டு ஆஹுதி பிரம்ம மந்திரங்களால் ஸமித், நெய், அன்னம், முதலியவைகளோடு ஹோமம் செய்து விருஷப கும்ப தீர்த்தத்தால் தண்டமூலத்தை பிரோக்ஷிக்க வேண்டும்.

89. கிழக்கு முதலான திக்குகளில் உள்ள தளங்களில் அஷ்டவித்யேச்வர்களை பூஜித்து அந்தந்த தீர்த்தங்களால் அந்தந்த தளங்களில் உள்ள வித்யேஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

90. சந்தனம் புஷ்பங்களால் அர்ச்சித்து பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். புண்யாகம் முதல் நைவேத்யம் வரையில்

91. எல்லா சிறப்பு வாத்யங்களோடும் கூடியதாகவும் பாடலோடு கூடியதாகவும் நான்கு திக்குகளில் நர்த்தனம் செய்யவும். அதிலும் சிறப்பான சுத்த நர்த்தனம் சொல்லப்படுகிறது.

92. அதன் பிறகு தீர்த்தம் வரையில் (கொடி இறக்கும் வரையில் ஒருகாலம், இரண்டு காலம், மூன்று காலமோ விருஷபத்தை பூஜை செய்ய வேண்டும்.

93. எங்கு எந்த நாட்டில் (த்வஜாரோஹணம் செய்யப்படுகிறதோ) த்வஜயஷ்டி வைக்கப்படுகிறதோ அங்கு அகால மரணம் ஏற்படாது. செல்வம் கிடைக்கும் பாபம் செய்கிறவர்களிடத்தும் இவைகள் ஏற்படும்.

94. திருட்டு பயம் முதலியன ஏற்படாது. அவமானம் கலக்கம், ஏற்படாது. மாறுபட்ட கருத்து உடையவர்கள் கூட சமாதானம் அடைவார்கள். நோயாளிகள் கூட குணமாகி விடுவார்கள்.

95. மேகங்கள் தக்க காலத்தில் மழை பொழியும் அரசனுக்கு வெற்றி உண்டாகும். சுபிக்ஷம் ஏற்படும் எல்லா உயிரினங்களும் (எல்லா பாபங்களும்) பசுக்கள் நன்கு பால் கொடுக்கும்.

96. செய்நன்றி மறந்தவன், பிராமணனைக் கொன்றவன் பசுவை கொன்றவன் போன்ற பாபங்களை ஒருவன் செய்திருந்தாலும் கொடியேற்றத்தை பார்ப்பதால் பாபம் நீங்கும். யஜமானுடைய இரண்டு குலமும் நன்கு விளங்க பலன் கொடுக்கும்.

97. இரவில் பேரீதாடனம் (பேரியை அடித்தல்) உரிய முறைப்படி செய்யப்படவேண்டும் தேவனுடைய ஸன்னிதியில் இரண்டு ஸ்தண்டிலங்கள் செய்ய வேண்டும்.

98. ஒரு பக்கத்தில் (ஸ்தண்டிலத்தில் ஒன்றில்) சூலத்தையும் மற்றொரு ஸ்தண்டிலத்தில் பேரியை வைக்க வேண்டும். சூலம், பேரி, இவைகளில் ஷடுத்தா ஸனம் பூஜை செய்ய வேண்டும்.

99. கிழக்கு மேற்காகவும் தெற்கு முகமுடையதாகவும் பேரியை வைக்க வேண்டும். புண்யாஹம் செய்து திரிசூலத்தில் தேவதையை பூஜை செய்ய வேண்டும்.

100. மத்ய பத்திரத்தில் ருத்ரன் வலது பத்திரத்தில் பிரம்மா இடது பத்திரத்தில் விஷ்ணு பாலிகையில் பார்வதி இவர்களை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

                                     படலம் 6:தொடரும்

53.ஸ்ரீ பூர்ணானந்த சதாசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

53.ஸ்ரீ பூர்ணானந்த சதாசிவேந்திர
ஸரஸ்வதி ஸ்வாமிகள்  [கி.பி. 1417 - 1498]

ஸ்ரீ பூர்ணானந்த சதா சிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், நாகாரண்யம் என்ற ஊரில் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் "நாகநாதர்". இவர் இந்தியா முழுவதும் பாத யாத்திரை செய்துள்ளார். அவரது நேபாளத்திற்கு விஜய யாத்திரையாக செல்வதற்கு முன் அங்கே கடும் சுபிட்க்ஷமில்லாமல் இருந்துள்ளது. இதை ''புண்ய ஸ்லோக மஞ்ஜரி'' எடுத்துரைக்கிறது. நேபாள மன்னர் இவரைப் பூர்ண கும்ப மரியாதையோடு எதிர் கொண்டு பாத பூஜை செய்திருக்கிறார். அதற்குக் காரணம் நேபாளத்தில் நிலவிய சுபிட்சம் இல்லாத நிலை [துர்ப்பிக்ஷம்], ஸ்ரீ பூர்ணானந்தர் கால் வைத்ததுமே விலகி விட்டதால் அரசரே நேரடியாக வந்து மரியாதை செய்தார்.

இவர் கி.பி 1498 ஆம் ஆண்டு, பிங்கள வருடம், ஆனிமாதம், வளர்பிறை தசமி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 81 ஆண்டு காலம் பீடத்தை அலங்கரித்துள்ளார். 



நவராத்திரி 75...

நவராத்திரி 75...




1. நவராத்திரியானது வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சிசிரருது நவராத்திரி என்று 4 வகையாக இருந்தது. தற்போது சாரதா நவராத்திரி கொண்டாடப்படுவது மட்டுமே வழக்கத்தில் உள்ளது.

2. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒன்றி ணைந்து மகிஷாசுர வர்த்தினி சக்தியாக உருவெடுத்து மகிஷனை அழித்ததே சாரதா நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

3. நவராத்திரி 9 நாட்களும் பூஜிக்க முடியாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி (7, 8,9) நாட்களில் வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் 8-வது நாள் அஷ்டமி அன்று நிச்சயம் தேவியை ஆராதிக்க வேண்டும்.

4. நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை சக்திகளாக நினைத்து கவுரவிக்க வேண்டும். அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து அனுப்ப வேண்டும்.

5. நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பது குடும்பத்துக்கு நல்லது.

6. நவராத்திரி 9 நாட்களும் தினமும் 9 பெண்களுக்கு நலங்கு வைத்து மஞ்சளிட்டு அன்னதானம் கொடுப்பது தேவியை மகிழ்விக்கும்.

7. நவராத்திரி முதல் நாளன்று ஒருவர், 2-வது நாள் ரெண்டு பேர் என்று அதிகரித்து 9-வது நாள் 9 பேரை பூஜிப்பது நல்லது.

8. மைசூரில் நவராத்திரியுடன் 10-வது நாளான விஜயதசமியையும் சேர்த்து கொண்டாடுகிறார்கள். 10-வது நாள் தசமி என்பதால் அன்றைய தினம் தசராத்திரி என்கிறார்கள். அதுவே சுருக்கமாக தசரா என்று அழைக்கப்படுகிறது.

9. மேற்கு வங்கத்தில் நவராத்திரியை துர்க்கா பூஜை, காளி பூஜை என்று பிரமாண்டமாக கொண்டாடுகிறார்கள்.

10. ராவணனை ராமபிரான் அழித்தது விஜயதசமி தினத்தன்று தான் இதை நினைவு கூறும் வகையில், உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விஜயதசமி தினத்தன்று "ராம்லீலா'' கொண்டாடுகிறார்கள்.

11. விஜய தசமி தினத்தன்று மனம் உருகி பூஜித்தால் 16 வகை செல்வங்களையும் பெறலாம்.

12. விஜயதசமி தினத்தன்று வன்னி மரத்தை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும்.

13. நவராத்திரி நாட்களில் தேவி மகாத்மியம் தேவி பாகவதம் படிப்பதும், கேட்பதும் பாவங்களை விரட்டும்.

14. நவராத்திரி 9 நாட்களும் முறைப்படி சுலோகம் சொல்லி பூஜித்தால் நிச்சயம் சொந்த வீடு அமையும்.

15. நவராத்திரி கொலு வைப்பது பெண்களின் மன இறுக்கத்தை தளர்த்தும்.

16. நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம் இருப்பதால் வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போட்டு விடுவார்கள்.

17. நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளைப் பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது. தற்போது அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.

18. நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

19. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாட வேண்டும்.

20. வட நாட்டில் ஒரு பிரிவினர் நவராத்திரி 9 நாட்களும் உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பதுண்டு.

21. இந்தியாவில் சரசுவதி தேவிக்கு இரண்டே இரண்டு இடங்களில் தான் கோவில் உள்ளது. ஒன்று தமிழ்நாட்டில் உள்ள கூத்தனூர், மற்றொன்று ஆந்திராவில் பாசர் என்னும் கிராமத்தில் உள்ளது.

22. தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலுவை வைக்கிறார்கள். நம்மூர் சரசுவதி போல அங்கு பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரசுவதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

23. "ஓம் ஸ்ரீமகா சரஸ்வதி சரணம்'' என்ற நாமத்தை மாணவ-மாணவிகள் தினமும் 9 தடவையும், வேலையில் இருப்பவர்கள் 18 தடவையும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் 108 தடவையும் சொல்லி வந்தால் பொன், பொருள் சேர்க்கையுடன் புத்திக் கூர்மை உண்டாகும்.

24. சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டது.

25. அக்பர் காலத்தில் தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.

26. காளியை மேற்கு வங்க மக்கள் மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடுவதால் அம்மாநில மக்கள் சக்தி வணக்கக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

27. குஜராத்தில் நவராத்திரி 9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து நடனமாடுவார்கள். இந்த நடனத்தக்கு கரவோ என்று பெயர்.

28. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

29. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால், அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

30. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஜஸ்வர்யம் உண்டாகும்.

31. கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

32. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.

33. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

34. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

35. நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

36. நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டியத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானியங்களை மண் கலசங்களில் வளர்ப்பார்கள். விஜய தசமியன்று அவற்றை ஊர்வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.

37. நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களுக்கு தாம்பூலம் கொடுப்பதன் மூலம் பெண்களிடம் விருந்தோம்பல் , ஒற்றுமை உணர்வு அதிகரிக்கும். 38. உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

39. விஜயதசமி தினத்தன்று தான் அர்ஜுனன், தனது போர் கருவிகளை பூஜித்து வணங்கினான். அந்த போர் கருவிகளை எடுத்துச் சென்று சண்டையிட்டதால்தான் அர்ஜுனனுக்கு பாரதப் போரில் வெற்றி கிடைத்தது.

40. நவராத்திரியில் வரும் மூல நட்சத்திர தினத்தன்று சரசுவதியை வணங்கினால் கல்விச் செல்வம் தடையின்றி கிடைக்கும்.

41. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

42. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள். ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னால் போதும், உரிய பலன் கிடைக்கும்.

43. நவராத்திரி 9 நாட்களும் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை அம்பிகையாக கருதி, குமாரி பூஜை நடத்தி வந்தால், செல்வம், பூமி, செல்வச் செழுமை, சரஸ்வதி கடாட்சம், மகான்களின் ஆசீர்வாதம் ஆகியவை கிடைக்கும்.

44. நெமிலியில் திரிபுரசுந்தரி கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப்படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

45. நவராத்திரியின் போது கல்விக்கு அதிபதியான ஹயக்கிரீவரை வணங்க வேண்டியது அவசியம். செங்கல்பட்டு அருகில் செட்டி புண்ணியம் என்ற கிராமத்தில் ஹயக்கிரீவருக்கு என்றே தனி விசேஷ கோவில் உள்ளது. உங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க இங்கு சென்று வணங்கலாம்.

46.தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.

47.கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்காதேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.

48.காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள சரஸ்வதிக்கு "சியாமளா'' என்று பெயர். 49.திருவிடைமருதூர் மகாசிங்கேஸ்வரர் கோவிலில் சரஸ்வதி தேவி 4 தலைகளுடன் வீனை ஏந்தி காட்சி அளிக்கிறார்.

50.நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவி யரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

51.சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

52. நவராத்திரி விரதம் நவமியுடன் முடிவதால் மகாநவமி தேவி பூஜை என்றும், சரசுவதி பூசையுடன் பூர்த்தியாவதால் சரசுவதி பூஜை என்றும் கடைசி நாளில் ஆயுதங்களைப் பூசிப்பதால் ஆயுத பூஜை என்றும் வழங்கி வருகிறது.

53. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடை பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

54. நவராத்திரி விரதம் இருந்தால் வீரம், செல்வம் கல்வி முதலியவற்றை இந்த பிறயிலேயே பெறுவது உறுதி.

55. ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேதி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்த யோகத்தை கற்றதால் சித்த யோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது, தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்ஙகும்.

56. கொலுவுக்கு வரும் இளம் பெண்களின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம், இவற்றை பெரியவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிக்கும் வழக்கம் சில ஊர்களில் உள்ளது.

57. விஜயதசமியன்று பால் நிவேதித்து பொம்மை ஒன்றை படுக்க விடுவார்கள். அப்போதுதான் மறுநாள் பொம்மைகளை உள்ளே எடுத்து வைக்க முடியும் என்பது ஐதீகம்.

58. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம் அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

59. கொலுவுக்குப் போனால் சும்மா உட்கார்ந்திராமல் பொம்மைகள் தொடர்பான புராணக் கதைகளை நினைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக, முன்பு எல்லாம் ராவணன் தர்பாரில் வாலினை மேடையாக்கி அனுமன் அமர்ந்ததிருப்பது, பழத்துக்காக முருகன் கோபித்தது, கஜேந்திர மோட்சம் போன்ற செட் பொம்மைகள் அமைப்பதுண்டு. தற்போது அது மறைந்து வருகிறது.

60. திபெத் நாட்டில் சரஸ்வதியை யங்சன்ம என்ற பெயரிலும் வழிபட்டு மகிழ்கிறார்கள். பாலித்தீவுப் பகுதியில் கலங்கன் என்று சரஸ்வதியைத் துதிக்கின்றனர்.

61. நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு முடி நீக்குதல் ஆகாது. மருந்துண்ணல் கூடாது. பொய் நீக்கிய வாழ்வும் அன்னை புகழ் பேசும் நாவும் கொண்டு விளங்க வேண்டும்.

62. நவராத்திரி 9 நாள் இரவில் பட்டினி பின் சிற்றுணவு கொள்வதுண்டு. இந்த ஒன்பது நாட்களிலும் பாகனமும், தேனும் நிவேதிப்பது மிகவும் அவசியம்.

63. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் பகலிலும் இரவிலும் செய்யும் பூஜைகள் அனைத்தும் தேவிக்கே உரியவையாகும்.

64.தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

65.எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவன் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்.

66.நவராத்திரி நாட்களில் ஒரு வேளை மட்டுமே உணவு அல்லது உப்பில்லாத உணவில் விரதம் இருக்கலாம். மவுன விரதம் இருப்பது மிகச் சிறப்பு.

67.கோவில்களில் மட்டுமின்றி வீடுகளிலும் 9 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படும். ஒரே பண்டிகையாக நவராத்திரி விளங்கி வருகிறது.

68.சுகமாகவும் சுலபமாகவும் வழிபடத்தக்கவள் அம்பிகை. ஆதலால் லலிதா சகஸ்ர நாமம் அவளை சுகாராத்யா என்று போற்றுகிறது.

69.காவிரிக்கரை மாவட்டங்களில் கொலுவைச் சிவை ஜோடிப்பு என்றே குறிப்பிடுகிறார்கள். சிவை என்ற பராசக்தி பல விதங்களில் அலங்கரிக்கப்படுகிறாள் என்பது அதன் பொருளாகும்.

70.சரஸ்வதி பூஜையன்று தொண்டை நாட்டுக் கோவில்களில் கம்பா நதி சிவ பூஜைக் காட்சி என்ற அலங்காரம் செய்கிறார்கள். காஞ்சிபுரத்தில் மாமரத்தடியில் மண்ணால் சிவலிங்கம் பிடித்து வைத்து காமாட்சி பூஜை செய்கிறாள். அப்போது இறைவன் அந்தப் பகுதியில் வெள்ளைப்பெருக்கை ஏற் படுத்துகிறாள். காமாட்சி திடுக்கிட்டு, வெள்ளத்தில் சிவலிங்கம் சிதைந்து விடக் கூடாது எனக்கருதி அதைத் தட்டித் தழுவிக் காப்பாற்றுகிறாள். அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் தனது உண்மை உருவத்தைக்காட்டி அன்னையை மணந்து கொள்கிறான். காமாட்சி கல்யாண வைபவத்தை நினைவு கொள்ளும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

71. மது கைடப சம்ஹாரத்தில் வரக்கூடியவள் துர்க்கையாகவும், அடுத்து மஹிஷனை மாய்த்தவள் மகாலட்சுமி ஆகவும், மூன்றாவது கதையில் வரும் சும்பநிசும்பனை சம்ஹாரம் செய்தவள் மகாசரஸ்வதியாவும் தேவி பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

72. அரக்கர்களை கடும் போரிட்டு வதம் செய்த கதைகளின் தொகுப்பே தேவி மகாத்மியம் ஆகும். தேவி மகாத்மிய பாராயணத்தை ஏழு தேவி மகாத்மிய பாராயணத்தை ஏழு பகுதிகளாகப் பிரித்தோ அல்லது முழுவதுமாகவோ நவராத்திரி நாட்களில் படிப்பவர்கள் தங்கள் குலத்தின் பாவ மூட்டைகளை எரிக்கிறார்கள். எவன் ஒருவன் இந்தத் தேவி மகாத்மியம் படிக்கப்படும் இடத்தில் அமர்ந்து கேட்கிறானோ அவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான். பணக்கவலையும், மனக்கவலையும் தீர தேவிமகாத்மிய பாராயணமே சிறந்த வழி.

73. பிரம்மா, விஷ்ணு, சிவபெருமானின் சக்தி ஒன்றாக இணைந்து அக்னி பிழம்பாக அதிலிருந்து தேவி வெளிவந்து, பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், எமதர்மராஜா முதல் அனைத்து தேவர்களும் தெய்வங்களும் தங்கள் ஆயுதங்களையும் அவருக்கு அளித்து சக்தி அனைத்தையும் துறந்த பொம்மைகளாக மாறி நின்றனர். அதனால் நவராத்திரி நாட்களில் அம்பாளைத் தவிர மற்ற தெய்வங்களை பொம்மைகளாக கொலு என்று வைப்பதாக ஐதீகம்.

74. ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

75. வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் நவராத்திரி பூஜையை தினமும் முறைப்படி சங்கல்பம், கணபதி பூஜை, ப்ரதான பூஜை, கண்டா பூஜை ப்ராணப் பிரதிஷ்டை, அங்கபூஜை, அஷ்டோத்திர நமாவளி, நவதூர்கா பூஜை, ஜோதி பூஜை என்று விஸ்தாரமாகச் செய்யலாம்.

பரிவாரத் தலங்கள் அமைந்துள்ள ஊர்கள்...

பரிவாரத் தலங்கள் அமைந்துள்ள ஊர்கள்...

தமிழகச் சிவாலயங்களில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலைக் கருவறையாகக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள கோயில்களை பரிவாரத் தலங்களாகக் கொள்ளும் மரபு நிலவுகிறது.

விநாயகர் - திருவலஞ்சுழி
முருகன் - சுவாமிமலை
நந்தி தேவர் - திருவாடுதுறை
சண்டிகேசுவரர் - திருச்சேய்ஞ்ஞலூர்
நடராஜர் - சிதம்பரம்
தியாகராஜர் - திருவாரூர்
தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி
பைரவர் - சீர்காழி
அம்பிகை - திருக்கடவூர்
சூரியன் - - சூரியனார் கோயில் ஆடுதுறை
சனி - திருநள்ளாறு

அபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்...

அபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்...

கோயில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோயில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம். புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோயில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து செல்வாராம். இக்கோயில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார். மயிலாப்பூர் ஆலயத்தில் வள்ளுவன் வாசுகி சிலைகள் உள்ளன. ஒவ்வொர் ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோயிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர்முன் வைத்து பூஜை செய்வார்கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோயில் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோயிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்ச்சி இது.

மயிலம் முருகன் கோயிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள். அனைவருக்கும் மேலான ஈஸ்வரனே கோயில் எழுப்பி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, தன்னைத் தானே வழிபட்ட தலம் மதுரையிலுள்ள இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். சிவனும் பார்வதியும் ஒன்றாக அமர்ந்து சிவபூஜை செய்யும் காட்சி இங்கு மூல விக்ரமாக இருக்கிறது. இக்கோயில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முற்பட்ட கோயிலாகும். நேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிவாலயம் இரண்டு அடுக்குகள் கொண்டது. இந்தக் கோயிலின் கூரை தங்கத்தால் வேயப்பட்டது. கதவுகள் வெள்ளியால் ஆனது. சன்னதிக்கு நேராகக் காட்சி தரும் நந்தி பஞ்சலோகத்தில் ஆனது. இங்கு அருள்பாலிக்கும் சிவனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவர் பெயர் பசுபதிநாதர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கட்டழகப் பெருமாள் கோயில். இங்கு சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள இக்கோயிலுக்கு 247 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். தமிழ் எழுத்துகள் 247-ஐ தத்துவார்த்தமாக உணர்த்தும் விதமாக அமைந்துள்ளன இப்படிகள். இம்மலையிலுள்ள சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் நாவல் மரப் பொந்திலிருந்து வருகிறது. கோயிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.

1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால்  30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.

7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.

8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.

9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.

10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.

11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.

12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.

13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.

14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.

15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.

16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.

17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.

18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.

19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும்  மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.

20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது. எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.

21. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.

அரவானின் தியாகம்!

அரவானின் தியாகம்!

பாண்டவர்களின் தர்ம யுத்த வெற்றிக்காக தன்னுயிரையே பலி கொடுத்த அரவான்! அரவானின் தியாகம் தான் பாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம் என்று புராணம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான். சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் பாரதப் போருக்காக களப்பலியான கதை சற்று வித்தியாசமானது. பாண்டவர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் போர் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கண்ணன் பல யுக்திகளைக் கையாண்டார். பாண்டவர்களில் ஒருவரான ஜோதிட மேதை சகாதேவனைச் சந்தித்தார் கண்ணன். சகாதேவா! இந்தப் போரில் நாம் வெற்றி பெற வழி என்ன? சாஸ்திரப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். ஓலைச்சுவடிகளை எடுத்து ஆராய்ந்த சகாதேவன், சாமுத்திரிகா லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்றான். சாமுத்திரிகா லட்சணம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கண்ணன் யோசித்தார். அப்படிப்பட்டவர்கள் இரண்டே பேர் தான். ஒருவன் அர்ச்சுனன்; மற்றொருவன் அவன் மகன் அரவான். அர்ச்சுனனை களப்பலி கொடுக்க முடியாது. ஏனெனில் இந்தப் போருக்கு அச்சாணியாக விளங்குபவன் அவன்.

வெற்றிவாகை சூடக்கூடிய திறமையும் அர்ச்சுனனிடம் மட்டுமே உள்ளது.மேலும் கண்ணனின் தங்கையான சுபத்ராவின் கணவன் அவன். எனவே, அரவாணைத் தேர்ந்தெடுத்தார் கண்ணபிரான். அரவான் இளைஞன்; அழகன்; அனைத்து அம்சங்களும் பொருந்தியவன். அரவானைச் சந்தித்த கண்ணபிரான் தன் நிலையைச் சொன்னார். மறுபேச்சு பேசாமல் களப்பலிக்குத் தயார் என்று சம்மதம் தெரிவித்தவன், அதே சமயம் இரண்டு நிபந்தனைகளும் விதித்தான். நான் திருமணமாகாதவன். பெண் சுகம் என்றால் என்னவென்று அறியாதவன். ஆகவே, என்னை எவளாவது ஒருத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுடன் நான் ஓரிரவாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அடுத்து களப்பலி ஆனதும் வெட்டுப்பட்ட என் தலைக்கு போர் முடியும் வரை போர்க்காட்சிகளைக் காணும் சக்தியைத் தர வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஏற்பாடு செய்தால் நாளைக்கே நான் களப்பலிக்குத் தயார் என்றான். கண்ணன் யோசித்தார். இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றி விடலாம். ஆனால் முதல் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது? நாளை சூரிய உதயத்தில் போர் ஆரம்பமாகப் போகிறது. விடியற்காலையில் களப்பலியாகப் போகும் அரவானை எந்தப் பெண் மணப்பாள்? ஆழ்ந்து சிந்தித்தார். பிறகு அவனிடம், உன் ஆசைகள் நிறைவேறும். இன்றிரவு உன்னைத் தேடி ஓர் அழகிய பெண் வருவாள். அவளை நீ காந்தர்வ விவாகம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இரு. அதோ, அங்கே தெரிகிறது பார் ஒரு மாளிகை. அங்கு நீ அவளை எதிர்நோக்கி இருக்கலாம் என்றார். அரவானும் மகிழ்ச்சியுடன் அந்த மாளிகையை நோக்கிச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு மெள்ள மெள்ள தலை காட்டியது. அப்பொழுது, அரவான் தங்கியிருந்த மாளிகை நோக்கி ஒரு அழகிய பெண் சென்றாள். அவள் நடந்து வரும் அழகை ரசித்த அரவான் அவளை நெருங்கினான். கைகோர்த்தான்; சந்தனத்தின் சுகந்தம் அவன் மனதை நிலை தடுமாறச் செய்தது. அங்கேயே மாளிகைக்கு முன் உள்ள நந்தவனத்தில் நிலவின் சாட்சியாக அவளை காந்தர்வ விவாகம் செய்துகொண்டு, அவளை அழைத்துக் கொண்டு மாளிகைக்கு சென்றான். இரவு இதமான தென்றல் வீசியது. மாளிகையில் விளக்குகள் அணைந்தன.

அரவான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். அரவானை காந்தர்வ விவாகம் செய்து கொண்ட அந்த அழகி யார்? அரவானின் ஆசையை நிறைவேற்ற கண்ணன் தன் மாய சக்தியால் ஒரு அழகிய பெண்ணை உருவாக்கி அனுப்பினார் என்றும்; கண்ணனே பெண்ணாக மாறினார் என்றும் புராணத் தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்தாலும் அரவான் முழுமையாக மகிழ்ச்சியடைந்தான். விடிந்ததும் கண்ணனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நீராடி, தூய ஆடை அணிந்து களப்பலிக்குத் தயாரானான் அரவான். முறைப்படி அவளை களப்பலி கொடுத்தனர். பாண்டவர்களுக்கும் துரியோதனர் கூட்டத்திற்கும் போர் ஆரம்பமாயிற்று. பதினெட்டு நாட்கள் நடந்த இந்தப் போரினைத் தான் பாரதப் போர் என்று வரலாறு சொல்கிறது. பாரதப் போருக்காக களப்பலியான அரவானின் தலை, போர் முடியும் வரை உயிருடன் இருந்தது. போரில் நடந்த நிகழ்ச்சிகளை அரவான் கண்டு மகிழ்ந்தான். போர் முடிந்து பாண்டவர் வெற்றி பெற்றதும் கண்ணன், அரவானை உயிர்ப்பித்தான் என புராணம் கூறுகிறது. இதனை நினைவூட்டும் வகையில் சித்திரை மாத பவுர்ணமி அன்று விழுப்புரம் அருகிலுள்ள கூவாகம் என்னும் கிராமத்திலிருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் அரவாணிகள் (திருநங்கையர்கள்) திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் வாழும் அரவாணிகள் பலரும் கூத்தாண்டவர் கோயிலை நோக்கி வருவது வழக்கம். பாரதப்போரில் களப்பலியான அரவான் தான் தங்கள் கணவன் என்றும்; களப்பலிக்கு முன் அழகிய பெண்ணாக மாறிய கண்ணனின் வாரிசுகள் தான் தாங்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

பகவான் பாடிய பகவத் கீதை!

பகவான் பாடிய பகவத் கீதை!

பகவத் கீதா என்பதற்கு பகவான் பாடியது என்று பொருள். கீதம் என்றால் பாட்டு. கீதம் என்று சொல்லாமல் கீதா என்று சொன்னதன் காரணம் என்ன? கீதை உபநிஷத்துகளின் சாரம். உபநிஷத் என்பது பெண்பாலாக உள்ள வட சொல். ஆகவே, கீதா என்பதும் பெண் பாலில் இருப்பது; உபநிஷத்துகளின் மாற்று உருவமே கீதை என்பதைக் காட்டுகிறது. பாண்டவர்களை துரியோதனன் நாடு கடத்திவிட்டான். அவர்கள் வனவாசமும் அஞ்ஞாத வாசமும் செய்து திரும்பினார்கள். பிறகு, தம் ராஜ்ஜியத்தைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கிருஷ்ண பகவானைத் துரியோதனனிடம் தூது அனுப்பினார்கள். ஆனால், பேராசை கொண்ட துரியோதனன், பாண்டவர்களுக்கு ஊசிமுனை இடம் கூட தரமாட்டேன் என்றான். இனி, யுத்தம் செய்தே நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்று பாண்டவர்கள் முடிவு செய்தார்கள். துரியோதனனும் அர்ஜுனனும் கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்காக துவாரகைக்குச் சென்றனர். பகவான், நான் ஆயுதம் எடுப்பதில்லை. நிராயுதபாணியான நான் வேண்டுமா? அல்லது என் சேனை அனைத்தும் வேண்டுமா? என்று கேட்டார். துரியோதனன், அவருடைய சேனையே தனக்கு வேண்டும் என்றான். அர்ஜுனன், கண்ணபிரானின் உதவிதான் தேவை என்றான்.

யுத்தம் தொடங்க, இரு திறத்தாரின் சேனைகளும் அணிவகுத்து நின்றனர். கிருஷ்ணரின் ரதத்தில் அர்ஜுனன் அமர்ந்து, இரு பக்கத்து சேனையில் இருப்பவர்களையும் பார்த்தான். அவர்கள் எல்லோருமே தனது உறவினர்களாகவும் ஆசிரியர்களாகவும் இருப்பதைக் கண்டான். அவனுடைய மனம் கலங்கியது. எனக்குப் போர் வேண்டாம்; அரசு வேண்டாம்; போகங்கள் வேண்டாம்; என்றெல்லாம் பலவாறு வருந்தினான். அர்ஜுனனின் அந்த வருத்தமே, அர்ஜுன விஷாத யோகம் என்ற, பகவத்கீதையின் முதல் அத்தியாயமாக உருவெடுத்தது. இந்த அர்ஜுன விஷாத யோகமே, அடுத்துப் பதினேழு அத்தியாயங்களில் பகவான் சொல்லிய  உபதேசமான பகவத் கீதைக்கு வித்து போன்றது. வித்து என்றால் விதை. வித்தினால் வித் (ஞானோபதேசம்) உண்டாயிற்று. அர்ஜுனனை நிமித்தமாகக் கொண்டு பகவான் உபதேசித்த ஆத்ம ஞானத்தையே பகவத் கீதை என்ற பெயரால் நாம் போற்றுகிறோம். பகவத் கீதை என்பது தனிப் புத்தகமாக எழுதப்பெறவில்லை. மகாபாரதத்தில் பீஷ்ம பர்வம் 25-ஆம் அத்தியாயம் தொடங்கி 42-ஆம் அத்தியாயம் வரையிலான ஒரு பகுதியாகவே பகவத் கீதை அமைந்திருக்கிறது. பாரத: பஞ்சமோ வேத என்றபடி, பாரதம் ஐந்தாவது வேதம். வேதமோ ஞான காண்டம், கர்ம காண்டம் என்று இரு வகையாகப் பிரிந்திருக்கிறது. வேதத்தில் உள்ள ஞான காண்டம் போலவே, பாரதத்திலுள்ள பகவத் கீதை என்பதும் ஞான காண்டமாகும். வேதத்தில்  அந்த பாகத்தை உபநிஷத் என்கிறார்கள்.

ஆகவே, பகவத் கீதையைப் பெரியோர்களிடம் உபதேச ரூபமாக முதலில் கிரகித்து, அதன் பொருளையும் நன்கறிந்து தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால், சகல உபநிஷத்துகளையும் பாராயணம் செய்வதால் உண்டாகும் நற்பலன்கள் நமக்குக் கிட்டுவது உறுதி. பகவத் கீதைக்கு அன்று முதல் இன்று வரை எத்தனையோ உரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றை ஓரளவு மட்டுமே கணக்கிட்டு, மூவாயிரத்துக்கும் அதிகமான உரைகள் இருக்கின்றன. பகவத்கீதைக்கு சங்கரர், ராமானுஜர், மத்வாசாரியார் என்ற ஆசார்யர்கள் முறையாக எழுதிய பாஷ்யங்களையே உயர்ந்தவையாகவும் குருமூலமாக உபதேச முறையில் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டியவையாகவும் கருதிப் போற்றுகிறார்கள். ஸ்ரீ சங்கராசாரியர் அத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ஸ்ரீராமானுஜர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும்; ஸ்ரீமத்வாசாரியர் துவைத சித்தாந்தத்தைப் பின்பற்றியும் கீதைக்கு பாஷ்யங்களை இயற்றியிருக்கிறார்கள். இவர்களுக்குப்பின் இந்த ஆச்சார்ய பரம்பரையில் வந்த சில மகான்கள், இந்த ஆச்சார்யர்களின் கீதா பாஷ்யங்களுக்கு டீகா என்ற விளக்க உரை எழுதியிருக்கிறார்கள். இந்த வைதீக சம்பிரதாய முறையிலான உரைகளைத் தவிர, சமஸ்கிருதத்திலும், கிரீக், ஜெர்மன், லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்யன் முதலிய பல வெளிநாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராட்டி, வங்காளி, குஜராத்தி போன்ற நம் நாட்டு மொழிகளிலும் ஆயிரக்கணக்கில் பகவத் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள். லோகமான்ய பால கங்காதர திலகர் எழுதிய கர்ம யோகம், மகாத்மா காந்தி எழுதிய அநாஸக்தி யோகம், ராஜாஜி எழுதிய கை விளக்கு ஆகிய கீதை உரைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் பகவத் கீதையின் மகிமையைப் பறைசாற்றுகின்றன.

ராமர் பட்டாபிஷேகம் எப்படி நடந்தது?

ராமர் பட்டாபிஷேகம் எப்படி நடந்தது?

ஸ்ரீராமபிரானுக்கு பட்டாபிஷேகம் எப்படி நடந்தது? எத்தனையோ ராமயணங்கள் இருந்தாலும், அதில் வால்மீகி ராமாயணத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காவியத்தில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடந்ததை வால்மீகி எப்படி வர்ணிக்கிறார்?

அதிகாலையின் அற்புதம் திவ்யமாக இருக்கிறது. மதுரமான இசையாலும், கருவிகளின் ஒலிகளாலும், தங்க ஆபரணங்கள் அணிந்து உத்தமப் பெண்களின் நாட்டியங்களாலும், தாங்கள் எழுப்பப்டுவதைக் கண்டு நாங்கள் சந்தோஷம் கொள்கிறோம்.  வானவீதியில் முழுமையான ஒளிக்கிரணங்களுடன் அனைத்து உலகுக்கும் தேஜஸையும் ஆயுளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நடுப்பகல் சூரியன் போன்று, தாங்கள் பட்டாபிஷேகப் பெரும் வைபவத்தோடு, சிம்மாசனத்திலிருந்து எங்கள் அனைவருக்கும் அருள்பாலித்து நலம் புரிவதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறோம். பூமி உள்ள வரையிலும் தாங்கள் பரிபாலனம் நடத்த வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை! இவ்வாறாக பரதன், தலைமீது கரங்களைக் கூப்பியவண்ணமாக ஸ்ரீராமனிடம் வேண்டினான்.

பூஜிதா மாமிகா மாதா
தத்தம் ராஜ்யம் இதம் மம
தத் ததாமி புனஸ் துப்யம்
யதாத்வம் ததா மம

முன்பு எனக்கு அரசு தந்து என் தாயைப் போற்றினாய். அதை அப்படியே உனக்குத் தருகிறேன். பரதனின் சரணாகதியை அயோத்தி ராமனும் ஏற்றார். ஆசனத்தில் அமர்ந்தார். பட்டாபிஷேகத்துக்குரிய பணிவிடைகள் எல்லாம் சீராகத் தொடங்கின. ராம லக்ஷ்மண பரத சத்ருக்னார்களுடைய அலங்காரம் நடந்தேறியது. சீதாதேவிக்கு, தசரத பத்தினிகளே அலங்காரம் செய்தனர். வந்திருக்கும் வானரப் பெண்களுக்கும் அழகு செய்கிறாள் கௌசல்யை.

ததோ வானர பத்னீனாம்
ஸர்வாஸாமேவ சோபனம்
சகார யத்னாத் கௌஸல்யா
ப்ரஹ்ருஷ்டா புத்ரவத்ஸலா

சத்ருக்னருடைய ஆணையின் பேரில் இஷ்வாகு குலத்தின் தேரோட்டியான சுமந்திரர், கம்பீரமான குதிரைகள் பூட்டிய ரதத்தைக் கொணர்ந்தார். கதிரவன் போன்று ஒளிமயமாகக் காட்சிதரும் அந்த ரதத்தில் ஸ்ரீராமன் ஏறி அமர்ந்தார். சுக்ரீவனும் அனுமனும் உடன் சென்றனர். சுக்ரீவன் மனைவியும் சீதாபிராட்டியும், திவ்யமான அலங்காரத்துடன் அவர்களுடனே சென்றனர். ஸ்ரீராமனுக்கு சகல நலங்களும் சுகமும் தனமும் பெருகுவதற்கும், அயோத்தி நகரமும் அந்த நாடும் என்றும் மங்கலம் பெறுவதற்கும் உரிய சுப காரியங்களைச் செய்யுமாறு அனைவரும் வசிஷ்டரிடம் வேண்டினர். அமைச்சர்கள் பின்தொடர ஜய விஜயபீவ என்ற முழக்கம், ஜயகோஷமுமாகக் காற்றுடன் அலை மோதியது. ரகுராமனான, கல்யாண ராமனான, சீதா ராமனான, தசரத ராமனான, கல்யாண குனோஜ்வலனான, பித்ருவாக்ய பரிபாலனான, ஏக பத்னி விரதனான, சர்வஜன ரக்ஷகனான ஸ்ரீராமன் அயோத்தி நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார். மஞ்சள் கலந்த அட்சதையுடன் பிராமணர்களும் உடன் சென்றனர். பசுக்களும் கோலாகலத்தில் கலந்து சென்றன. குடிமக்களின் குதூகலம் பொங்க, ஸ்ரீராமன் அரண்மனைக்குள் அடியெடுத்து வைத்து, கௌசல்யாதேவி, சுமித்ரா தேவி, கைகேயி தேவி மூவரையும் நமஸ்கரித்தார். சத்ருக்னர், ராமருடைய அபிஷேகத்துக்காக சுக்ரீவனிடம் வானரர்களை அனுப்பப் பணித்தார். பொழுது புலரும் முன் வானரர்கள், ரத்னமும் தங்கமும் இழைத்த குடங்களில், கடலிலிருந்தும் நதிகளிலிருந்தும் புண்ணிய தீர்த்தத்தைக் கொணர்ந்தார்கள். ஜாம்பவான், அனுமன், வேகதர்சீ, சிஷபன் ஆகியோர் ஐந்நூறு நதிகளிலிருந்து புண்ணிய தீர்த்தத்துடன் வந்தார்கள். ஸுஷேணன், ரிஷபன், கவயன், நளன் நால்வரும் முறையே நாலா திசை சமுத்திரங்களிலிருந்தும் புனித நீரைக் கொணர்ந்தார்கள்.

பேரருள் பெற்றவரும் தசரத குல குருவுமான வசிஷ்ட மகரிஷி, புலன்களையும் புத்தியையும் சமன் செய்து, பிராமணர்களின் சம்மதத்துடன் ஸ்ரீராமனை ரத்தின ஒளிவீசும் சிம்மாசனத்தில் அமரும்படி செய்தார்.

ராமம் ரத்னமயே பீட
ஸஹஸுதம் ந்யவேசயத்

பட்டாபிஷேக வைபவம் பவித்திரமாகத் திகழ்ந்தது. வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர், காத்யாயநர், ஸுயஜ்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய எட்டு மகா ஞானியர்களும் நிகழ்த்திய பட்டாபிஷேகம். எண்மரும் வேதச் சீர்மையுடன் மந்திரங்களை உச்சாடனம் செய்து ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை மணமிகுந்த திரவியங்கள் கலந்த புண்ணிய தீர்த்தத்தால் நெறிமுறைகளின்படி பட்டாபிஷேகத்தை நிறைவேற்றினார்கள். வானத்தில் திக்பாலர்களும் தேவகணங்களும் பேருவகை கொண்டார்கள். சத்ருக்னர் வெண்குடை பிடித்தார். சுக்ரீவன் வெண் சாமரம் வீசினார். வாயுபகவான் தங்கத் தாமரைகளாலான ஒளி கூடிய மாலைகளையும், ஒன்பது ரத்தினம் சேர்ந்த முத்து மாலையையும் கொணர்ந்தார். பூமி செழித்தது. மரங்களில் கனிகள் நிறைந்தன. பசுக்களையும், கன்றுகளையும், தங்க நாணயங்களையும், ஆபரணங்களையும் ஸ்ரீராமன் தானமாக வழங்கினார். சுக்ரீவனுக்குத் தங்க மாலையையும், அங்கதனுக்குத் தங்கத்தோள் வளைகளையும் வழங்கினார். சீதாதேவியிடம் சந்திரன் போன்று பிரகாசமான முத்துமாலையை வழங்கினார். பிராட்டியும் மணாளனின் விருப்பத்தை ஜாடையால் அறிந்து, அம்மாலையை அனுமனுக்கு அளித்தாள். விபீஷணர், ஸ்ரீரங்க விமானத்தைப் பெற்று லங்காபுரி சென்றார். தசரத குமாரனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, குடிமக்கள் அனைவரையும் தமது குழந்தைகளாக நினைத்து பரிபாலனம் நடத்தி வந்தார். லக்ஷ்மணனை இளவரசாக இருக்கக் கோரினார். லக்ஷ்மணர் இசையவில்லை. பரதனுக்கு இளவரசுப் பட்டம் நிகழ்ந்தது. சிம்மாசனத்தைத் தாங்கி நிற்கிறான் அனுமன். அங்கதன் வாள் ஏந்த, பரதன் வெண்குடை தாங்க, மற்ற இரு சகோதர்களும் சாமரம் வீச, சீதையின் உவகை ஓங்க, வசிஷ்டர் மகுடம் சூட்டுகிறார். அச்வமேதம், வாஜபேயம் போன்ற யாகங்களைப் புரிந்து, ஸ்ரீராமன் ஆட்சி ராமமயமாகவே இருந்தது.

சித்ரகுப்தனின் அருள்பெற...

சித்ரகுப்தனின் அருள்பெற....

உலக மக்களின் கர்மபலன்களை நியாயம் தவறாமல் நிர்ணயிப்பவர் சித்ரகுப்தர் ஆவார். என்றும் பதினாறு சிரஞ்சீவியாக மார்க்கண்டேயர் இருப்பது போல், இவரும் பன்னிரண்டு வயது சிரஞ்சீவியாகத் திகழ்பவர். தேவ ஸ்வரூபர். பிரம்ம குரு. அனைத்து லோகங்களின் அமைப்பைப் பரிபாலனம் செய்பவர். உலகத்து உயிரினங்கள் அன்றாடம் செய்யும் பாவ புண்ணிய செயல்களைத் தொகுத்து தனது பதிவேட்டில் பதிய வைக்கும் தலையாய பணியைப் பொறுமையுடன் செயல்படுத்துபவர். மனிதர்கள் தங்களுக்குத் தானே ஆத்ம விசாரம் செய்துகொள்வதற்கு வித்திடுபவரும் இவரே! நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் கர்மவினைகளை இம்மியும் பிசகாமல் குறிப்பெடுப்பது அவ்வளவு எளிதா என்ன! சித்ரகுப்த மகராஜர் சாதாரணமாகக் கிரீடம் தரித்த தோற்றத்தில் காட்சியளிப்பார். மராட்டிய புண்ணிய புருஷர்களான ஏகநாதர், நாமதேவர் அணிந்திருப்பது போன்று துணியிலான தலைப்பாகையிலும் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கும் கோலமும் உண்டு.

உமாமகேஸ்வரரின் அருளால் தோன்றியவர்! பார்வதி தேவியின் ரூபமாகவும் பராசக்தியின் அவதாரமாகவும் அறியப்படும் இவர், தன் எட்டுக் கரங்களிலும் சித்தர்களை அமர்த்திக் கொண்டுள்ளதோடு, எட்டாவது கரத்தில் கார்க்கினி தேவியை அமுதக்கலசமாகவும் கொண்டு அன்ன வாகனத்தில், ஆயுர்தேவியின் சந்நிதானத்தில் தலைப்பாகை, எழுதுகோல் ஏட்டுடன் அமர்ந்திருக்கும் சிறப்புக் கோலத்திலும் சித்ரகுப்தரைத் தரிசிக்கலாம்! சித்ரகுப்தருக்கு பட்டுப் பீதாம்பரத் தலைப்பாகை வந்து சேர்ந்ததற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணியும் உண்டு! ஒருமுறை பலகோடி ஜீவன்களின் கர்மவினைகளைக் கணக்கெழுதும் போது, அவருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. அந்த வினைப்பயன் கணக்கில் பெரும் பகுதி தீவினையாகவே இருப்பதைக் கண்டு கலங்கினார். தனது எழுதுகோலால் புண்ணிய ஆத்மாக்களின் கணக்கை எழுதவே முடியாதோ? இது என்ன சோதனை? இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக்கொண்டு விட்டோமே என வருந்தியவர், தன் தலையில் ஓங்கிக் குட்டிக்கொண்டார். அவ்வளவு தான்! தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்காமல் ஏன் விசாரப்பட வேண்டும் என இறைவன் நினைத்தாரோ என்னவோ, அவருக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துவிட்டார். அழுத்திக் குட்டிக்கொண்டதில் சித்ரகுப்தருக்கு தீராத மண்டையிடி ஏற்பட்டுவிட்டது.

தாங்கிக்கொள்ள முடியாத வலியால் அவதிப்பட, தனது அன்றாட வேலையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் கர்மங்கள் தேக்கமடைய, அனைத்து லோகங்களும் செயலிழக்க ஆரம்பித்தன. பதற்றமடைந்த சித்ரகுப்தர் ஸ்ரீகிருஷ்ணரை மானசீகமாகத் தொழுது வேண்டிக்கொண்டார். பரந்தாமன் மனமிரங்காமல் இருப்பாரா? சித்ரகுப்தர் முன் தோன்றினான் கேசவன்! சித்ரகுப்தா! தலைவலி ரொம்பப் பலமோ? என்று புன்முறுவலுடன் வினவிய மாயவனை அடிபணிந்த கணக்கர், பிரபோ! என்னை இந்த இக்கட்டிலிருந்து காத்தருளுங்கள் சுவாமி! என வேண்டினார். முறுவலித்த மாதவன், தன் இடையில் அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரக் கச்சையை அவிழ்த்து, சித்ரகுப்தரின் சிரசில் கிரீடமாக அணிவித்தார். அதுவரை வாடிய முகத்துடன் தென்பட்டவர், மனம் லேசாகிப் போனதை உணர்ந்தார். வாட்டியெடுத்த தீராத் தலைவலி, உடனே அகன்றது. தலைக்கு வந்த வலி, தலைப்பாகையை அணிவித்ததும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! அகமகிழ்ந்த சித்ரகுப்தன், மாலவனைத் தொழுதுப் போற்றினார். இன்றிலிருந்து உன்னை வழிபடுவோருக்கு, தங்கள் குறைகளைக் களைந்து அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளும் பக்குவம் உண்டாகட்டும்! என்ற வரத்தை அருளினார் பரந்தாமன். மறுபடியும் கணக்கர் வேலையில் மூழ்கிவிட்டார் சித்ரகுப்தர். ஆகவே வேணுகானம் இசைக்கும் ஸ்ரீகிருஷ்ணரைத் தினமும் வழிபட்டால், சித்ரகுப்தரின் அருட்பார்வை நம்மீது பரவும் என்பது ஐதீகம்.

பூஜை இல்லாவிடில்...

பூஜை இல்லாவிடில்..

15.  1. பூஜை செய்ய வகுக்கப்பட்டுள்ள முறைகளே ஐயனின் ஐந்தொழில் திறனைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன; 1. படைத்தல் - அபிஷேகம்.

2. காத்தல் - நைவேத்யம்

3. ஸம்ஹாரம் - பலி போதல்

4. திரோபாவம் - தீபாராதனை

5. அனுக்ரஹம் - ஹோமம், பூஜைகளைச் செவ்வனே செய்யவிடின் ஐயன் ஐந்தொழில் புரிந்து நமக்கேன் அருள வேண்டும் ?

15.2. பூஜை இல்லாவிடில் ரோகமும், புஷ்பம் இல்லாவிடில் குல நாசமும், சந்தனம் இல்லாவிடில் குஷ்டிரோகமும், ஜலம் இல்லாவிடில் துக்கமும், தூபம் இல்லாவிடில் சுகத்தின் நாசமும், தீபம் இல்லாவிடில் பொருள் நாசமும், நைவேத்யம் இல்லாவிடில் பஞ்சமும், மந்திரம் இல்லாவிடில் தரித்திரமும், வஸ்திரம் இல்லாவிடில் மகா ரோகமும், ஹோமம் இல்லாவிடில் குல நாசமும், பலி இல்லாவிடில் கிராம நாசமும், நெய் இல்லாவிடில் மரணமும், வில்வம்-அறுகு-அக்ஷதை இல்லாவிடில் பகைவர் பயமும், மணி இல்லாவிடில் செவிட்டுத்தன்மையும், முத்திரை இல்லாவிடில் அசுர பயமும், நித்திய அக்கினி இல்லாவிடில் அரசர்க்கும் நாட்டுக்கும் தீங்கும், மற்ற திரவியங்கள் இல்லாவிடில் தேவதைகளுக்குக் கோபம் ஏற்பட்டு அதனால் ஒவ்வா விளைவுகளும் உண்டாகும்.

15.3. 1. சந்தனம் இல்லையென்றால் பயம் உண்டாகும்.

2. ஆபரணம் இல்லையென்றால் தரித்ரம் உண்டாகும்.

3. புஷ்பம், தூபம் இல்லையென்றால் ராஜ்யம் க்ஷீணிக்கும்.

4. தீபம் இல்லையென்றால் தனம் இல்லாதொழியும்.

5. நைவேத்தியம் இல்லையென்றால் க்ஷõமம் (பஞ்சம்) உண்டாகும்.

6. அக்நிகார்யம் இல்லையென்றால் சங்கடங்கள் உண்டாகும்.

7. பலி இல்லையென்றால் ஆள்பவர்களுக்குக் கெடுதல் உண்டாகும்.

8. ந்ருத்தம் (கலை நிகழ்ச்சிகள்) இல்லையென்றால் துக்கம் உண்டாகும்.

9. மந்திரங்கள் இல்லையென்றால் மரணபயம் உண்டாகும்.

10. கிரியைகள் இல்லையென்றால் வியாதிகள் உண்டாகும்.