புதன், 9 அக்டோபர், 2024

படலம் 43 தேவீ ஸ்தாபன விதி...

படலம் 43 தேவீ ஸ்தாபன விதி...
 

76. மேற்கூறிய தத்வங்களை மாயாதத்வ, ஸதாசிவதத்வ, சக்தி தத்வம் வரை வியாபித்திருப்பதாக நியாஸிக்கவும். ஆத்மாதிதத்வாதீச்வரியாக கிரியை, க்ஞான, இச்சா சக்திகள் கூறப்பட்டுள்ளன.

77. தாரிகை, தீப்திமதி, அத்யுக்ரா, ஜ்யோத்ஸ்நா, சேதா, பலோத்கடா, தாத்ரீ விப்வீ என்பதான மூர்த்திச்வரிகளோடு கூடியதாக மூர்த்திகளை ந்யாஸம் செய்ய வேண்டும்.

78. பஞ்சகுண்டப்படி மூர்த்திகளை ந்யாஸம் செய்யும் விஷயத்தில் வாமை முதலான மூர்த்திபர்கள் கூறப்பட்டுள்ளன. மூர்த்தீஸ்வரிகளை சந்தனம் புஷ்பம் இவைகளாலும் பிறகு நைவேத்யம் வரையிலுமாக முறைப்படி பூஜிக்க வேண்டும்.

79. தேவியின் மூலமந்திரத்தையும் மூர்த்தி மந்திரத்தையும் மந்திர அங்கமந்திரங்களையும் பூஜிக்கவும். ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி ஹோம கார்யத்தை ஆரம்பிக்க வேண்டும்.

80. ஆதிசைவ குலத்திலுண்டானவனும், முன்பு கூறப்பட்ட அமைப்பு முறையுடனுள்ளவனுமான ஆசார்யன், கிழக்கு முதலான திசைகளில் வேதபாராயணமும், தென்கிழக்கு முதலான திசைகளில் மூலமந்திர ஜபங்களையும் செய்ய வேண்டும்.

81. குண்டஸம்ஸ்காரம், அக்னிஸம்ஸ்காரம் செய்து ஸமித் முதலான பொருட்களால் மூர்த்தியை த்ருப்தி செய்விக்கவும். சமித், நெய், அன்னம், பொறி, எள், கடுகு, யவை இவைகளால் ஹோமம் செய்ய வேண்டும்.

82. புரசு, அத்தி, இச்சி, ஆல் ஆகிய ஸமித்துக்களை கிழக்கு முதலான திசைகளிலும், வன்னி, கருங்காலி, நாயுருவி, பில்வம் ஆகிய ஸமித்துக்களை தென்கிழக்கு முதலான திசைகளிலும்

83. பிரதான (முக்கியமான) குண்டத்தில் புரசும், மற்றும் புரச ஸமித்தையே எல்லா குண்டங்களிலும் ஹோமம் செய்யவும். ஆயிரம், ஐநூறு, நூற்றியெட்டு ஆவ்ருத்தியாக

84. ஆசார்யன் மூலமந்திரத்தினால் ஹோமம் செய்யவேண்டும். மூர்த்திபர்கள் மேற்கூறிய எண்ணிக்கையளவோ, பாதி எண்ணிக்கையாகவோ ப்ரும்ம மந்திர அங்க மந்திரங்களால் எட்டு திசைகளிலும் ஹோமம் செய்ய வேண்டும்.

85. மூர்த்தி, மூர்த்தீஸ்வரிகளை அந்தந்த குண்டங்களில் ஹோமம் செய்து திருப்திபடுத்த வேண்டும். எல்லா தேவர்களுடன் கூடியதாக முக்யமான குண்டத்தில் ஹோமம் செய்ய வேண்டும்.

86. சாந்தி கும்பதீர்த்தத்தால் பிரோக்ஷணம் செய்து அவரவர்களின் மந்திர ஜபத்தை செய்யவும். தர்பங்களால் தொடும்படி செய்வதை ஒவ்வொரு பாகத்திலும் செய்ய வேண்டும்.

87. பிறகு காலையில் மூர்த்திபர்களுடன் கூடிய ஆசார்யன் சுந்தனாக இருந்து தேவியை எழுந்தருளச் செய்து கும்பங்களையும், வஹ்னியையும் முன்போல் பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும்.

88. பூர்ணாஹுதி செய்து ஆலயத்தில் நுழையவும் மானுஷ, தைவிக பிம்ப விஷயத்தில் முன்பு கூறியபடி பூஜை முறைகளை செய்து ஸ்தாபிக்க வேண்டும்.

89. பிரம்ம சிலையை நவரத்ண, ஸ்வர்ணங்களோடு சேர்ந்ததாக பூஜித்து முன்பு போல் ஆலயத்தில் எடுத்துச் சென்று ஈச்வரியை மூலமந்திரத்தை கூறி பீடத்தில் சேர்க்க வேண்டும்.

90. நல்ல முஹூர்த்த லக்னத்தில் மந்திர நியாஸம் செய்யவும், உற்சவ மூர்த்தி பிம்பமாயிருப்பின் ஸ்னான வேதிகையில் ஸ்தாபித்து மந்திரநியாஸம் செய்ய வேண்டும்.

91. தேவிக்கு முன்னதாக கடங்களை ஸ்தாபித்து கும்பத்திலிருந்து மந்திரத்தை கிரஹித்து தேவி ஹ்ருதயத்திலும் மற்ற குடங்களிலிருந்து மந்திரங்களை எடுத்து பீடத்தை சுற்றிலும் நியாஸிக்க வேண்டும்.

92. தத்வதத்வேச்வர, மூர்த்தி மூர்த்தீச்வர நியாஸம் முன்பு போல் செய்யவும். அந்தந்த கும்பஜலங்களால் அந்தந்த இடங்களில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

93. ஸ்நபநாபிஷேகத்தை பின்பு செய்வித்து, அதிகமான நைவேத்யத்தையும், உத்ஸவத்தையும் செய்து, பலவித ஸ்தோத்ரங்களால் புகழ்ந்து பாடி கீழ்வரும் ஸ்லோகத்தை படிக்க வேண்டும்.

94. எந்த காலம் வரையிலும் சந்திரனும், சூர்யனும் பூமியில் இருக்கிறார்களோ, அந்த காலம் வரை ஹே தேவி உம்மால் இந்த ஆலயத்தில் இருக்க வேண்டும் என்று வேண்ட வேண்டும்.

95. தேசிகர்களை பூஜித்து தட்சிணையை கொடுக்கவும். உத்தம முதலான அமைப்புள்ள தேவியை லிங்க ஸ்தாபனத்தில் கூறப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும்.

96. தேவி மட்டும் முக்யமான தெய்வமாயிருப்பின் நான்காம் நாள் கல்யாண உத்ஸவம் செய்யவும். ஸ்வாமியுடன் சேர்ந்திருக்கும் தேவியாயிருப்பின்

97. கல்யாணோத்ஸவத்தை செய்ய வேண்டாம். இவ்வாறாக பிரதிஷ்டை கூறப்பட்டது. இவ்வாறு எந்த மனிதன் செய்கிறானோ அவன் புண்ய கதியை அடைகிறான்.

98. மேற்கூறியபடி எந்த புருஷன் பாவனையோடு பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் தனக்கு விருப்பப்பட்டவைகளை இந்த உலகத்தில் அனுபவித்து முடிவில் சிவபதத்தையாகிறான்.

99. இருபத்தோரு தலைமுறை பித்ருக்களை, முன்னோர்களின் இருப்பிடத்தை அடையச் செய்கிறது. பிறகு தேவியின் நித்யப்படி பூஜையின் முறையை கேளுங்கள்.

100. ஜலமலசுத்தி, ஆசமநம், குளியல், ஸந்த்யாவந்தனம், மந்திரதர்பணம் முதலியவைகளை முன்கூறிய முறைப்படி செய்து ஆலயத்தில் நுழையவும்.

101. கை, கால்களை சுத்தம் செய்து முறைப்படி ஆசமனம் செய்து அங்கந்யாஸம், கரந்யாஸம், ஸாமான்யார்க்கம் செய்முறையும் செய்து

102. வாயிலையும், வாயிற்காப்போர் தேவிகளையும் ஸாமான்யார்க்க ஜலத்தால் பிரோக்ஷித்து வாயிற் படியின் இருபக்கங்களிலும் ஸங்கநிதி, பத்மநிதி இருவர்களை

103. திவார சக்தியாக பூஜித்து, கையில் கத்தி, கேடயம் தரித்திருப்பவர்களாயும், சடாமுடியையுடையவர்களாயும், சிகப்பு கருப்பு நிறமாயும் பயங்கரமாய் உடையவர்களாயும்

104. எல்லா அணிகலன்களையும் எல்லா ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டவளாயும் பூஜித்து, வாயிற் படியின் மேல்பாகத்தில் ஸரஸ்வதியையும், இரண்டு கிளைகளிலும்

105. கங்கையையும், யமுனையையும் பூஜித்து, தேஹளீ பாகத்தில் சக்தியஸ்த்ரத்தையும் அல்லது ஜடாமுடியையுடையவளாக விசாலாக்ஷியை

106. சம்ருத்தியையும், த்ருதியையும் வலது இடது கிளை பாகத்தில் பூஜிக்கவும். ஸரஸ்வதியையும் கங்கையையும் வெண்மை நிறமுடையவர்களாக எண்ணவும்.

107. மற்ற எல்லா தேவதைகளையும் கருப்பு நிறமுள்ளவர்களாயும் எல்லா அணிகலன்களையும் இரண்டு கைகளால் கத்தி, கேடயத்தையும் தரித்தோ, நான்கு கைகளையும் உடையவர்களாகவோ

108. ஸ்வாமிக்காக கூறப்பட்ட திவார தேவதைகளையோ விமலன், ஸூபாஹூவையுமோ கதவுகளிலோ பூஜித்து, வலது அல்லது இடது பக்க வழியாக உள்ளே நுழைய வேண்டும்.

109. வாஸ்து பிரம்மாவை பூஜித்து நல்ல இருக்கையில் வடக்கு முகமாக அமர்ந்து தன்னை சக்தியிடம் சேர்ந்ததாக சேர்த்து முன்பு போல் பூதசுத்தியையும் செய்து

110. ஆத்மாவை அம்ருதத்தால் நனைந்ததாகி செய்து ஆத்மாவை அம்ருதீகரணம் செய்வித்து கரந்யாஸமும், அந்த மந்திரங்களால் சரீரந்யாஸமும் செய்ய வேண்டும்.

111. ஓம்காரத்துடன் அஷ்டத்ரிம்சத்கலா நியாஸத்தை ஐந்து தலை முகமுள்ள தேவியின் பூஜையில் செய்ய வேண்டும்.

112. ஓர் சிரஸ் உள்ள தேவிக்கு ஏகத்ரிம்சத் கலாந்யாஸமென்ற 31 கலைகளின் நியாஸத்தையும் செய்ய வேண்டும். சசினி முதலான கலைகளை மட்டுமே நியாஸம் செய்ய வேண்டும்.

113. அல்லது சிவமந்திரங்களால் சைவ விக்ரஹமாக்கி தேவி, முருகன், வினாயகர் ஆகிய எல்லா தேவதைகளையும் பூஜிக்க வேண்டும்.

114. ஸகளீகரணம் செய்து கொள்ளப்பட்ட சரீரத்தை உடையவனாகி அந்தர்யாகத்தை செய்யவும். ஹ்ருதயத்தில் தேவி பூஜையையும் தொப்பூழ் பிரதேசத்தை ஹோம பாவனையாயும்

115. நெற்றியில் ஈச்வரியை எல்லோரிடமும் இருப்பவளாகவும் வரத்தை கொடுப்பவளாகவும் தியானிக்கவும். ஸ்தான சுத்தி செய்து, விசேஷார்க்யம் செய்ய வேண்டும்.

116. சந்தனம், புஷ்ப, அக்ஷதையிவைகளுடன் கூடிய பொருள்களை விசேஷார்க்ய ஜலத்தால் சுத்தி செய்து ஆத்மாவை பூஜித்து மந்திர சுத்தியையும் செய்ய வேண்டும்.

117. பின்பு பிம்ப சுத்தி செய்து நிர்மால்ய பூஜையை செய்யவும். கணாம்பிகையை வித்மஹே மஹாதபாயை தீமாஹி என்றும்

118. பிறகு தந்நோ தேவீ பிரசோதயாத் என்பது யாக மந்திரத்தை கூறி அர்ச்சித்து நிவேதனம் செய்யவேண்டும்.

119. நிர்மால்ய பொருட்களை நிர்மால்யத்தை சண்டிகேஸ்வரியிடம் ஸமர்ப்பித்து அல்லது விஜர்ஜனம் செய்தோ, தேவியின் அஸ்திரத்தை கூறி பிம்பசுத்தி செய்யவும்.

120. உலோக பிம்பமாயிருப்பின் பர்வ காலங்களில் அபிஷேகமும், சுண்ணாம்புக்கலவை, சுவற்றுச் சித்திரமாயிருப்பின் பூஜை செய்வதே சுத்தியென்றும் கூறப்படுகிறது. (கர்மாச்சையே)

121. அல்லது அஸ்திர மந்திரங்களால் பனை ஓலை விசிறி காற்றினால் சுத்தி செய்யும். அவ்வாறே அங்கு வாடாத மாலையும் அணையா விளக்கு மேற்படுத்தவும்.

122. தினந்தோறும் பூஜிக்காமல் வருடத்திலோர் முறை பூஜிக்கவும். கற்சிலை வடிவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்வது கூறப்படுகிறது.

123. நடுவில் ஆஸனத்தை ஏற்படுத்தி ஆதார சக்தியையும், அனந்தன், தர்மன் முதலியோர்களையும் அனந்தன் முதலியவர்களையும்

124. அதச்சதநம், ஊராத்வசதளம், பத்மம், கர்ணிகை, சக்தி மண்டலத்தையும் இச்சை, ஞான, க்ரியை ஆகிய மண்டல சக்திகளோடு கூடிய வாமை முதலான தேவிகளுடன் கூடியதும்

125. பிறகு தேவ்யாஸநாய நம: என்பது முதற்கொண்டு மூர்த்தி உருவத்தை பூஜித்து பஞ்ச ப்ரும்ம நியாஸமும், கலாந்யாஸமும் முன்பு போல் செய்ய வேண்டும்.

126. பூஜைக்காக உள்ள மூர்த்தியின் வித்யா தேஹ அமைப்பை ஏற்படுத்தி பிரணவ மந்திரத்தினால் அந்த பிம்பத்தில் அனுக்ரஹத்தால் தேவியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

127. மூலமந்திரத்தை புஷ்பாஞ்சலியையுள்ள கையையுடையவனாய் ஹ்ருதயத்திலிருந்து வந்ததாக பாவித்து தேவியிடம் ஆவாஹித்து ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

128. ஸன்னிதானம், ஸன்னிரோதனம், அவகுண்டமிவை ஹ்ருதய மந்திரத்தினால் செய்து ஹ்ருதலம், முதலான மந்திரந்யாஸத்தை செய்து மஹாமுத்ரையை காண்பிக்க வேண்டும்.

129. அர்க்யபாத்ரத்தை வைத்துவிட்டு, ஹ்ருதய மந்திரத்தினால் திருவடியில் பாத்யத்தையும் தத்புருஷ மந்திரத்தினால் முகத்தில் ஆசமனீயமும் ஈசான மந்திரத்தினால் அர்க்யத்தையும் கொடுக்க வேண்டும்.

130. பாத்யம் முதலிய திரவ்யங்களை முன்பு போலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ செய்து ஸமர்ப்பிக்க வேண்டும். சந்தனம், புஷ்பம் இவைகளுடன் சேர்த்து ஹ்ருதய மந்திரத்தினால் தூபம் கொடுக்க வேண்டும்.

131. பஞ்சாம்ருதத்துடன் கூடியதாகவோ பஞ்சாம்ருதம் இன்றியோ அபிஷேகம் செய்விக்கவும். திரு ஒற்றாடை செய்து ஆடை அணிவிக்க வேண்டும்.

132. வாமதேவ மந்திரத்தினால் ஆசமனத்தை சந்தனம், புஷ்பம், தூபம் இவைகளுடன் கொடுக்கவும். தீபத்தையும் நைவேத்யத்தையும் மூலமந்திரத்தினால் கொடுக்க வேண்டும்.

133. ஆமந்திரண ஹவிஸையோ, ஸாமான்ய ஹவிஸையோ நிவேதனம் செய்து பின்பு ஆவரண பூஜையையும் தென்கிழக்கில் ஹ்ருதயத்தையும் பூஜிக்க வேண்டும்.

134. ஈசான திசையில் சிரஸ்ஸையும் தென் மேற்கு திசையில் சிகையையும், வடமேற்கு திசையில் கவசத்தையும் நான்கு திசைகளிலும் அஸ்திரத்தையும் வாமை முதலியோர்களையும் பூஜிக்க வேண்டும்.

135. தேவீகணங்கள், வித்யேசர்கள், திக்பாலர்கள், தசாயுதங்கள் இவர்களைச் சுற்றிலும் பூஜிக்கவும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்பதான ஆவரண பூஜையையோ செய்யவும்.

136. திரும்பவும் தூபம், தீபம், மந்திரம், பாட்டு பாடுதல் இவைகளையுமோ செய்து நைவேத்யம் பலி ஹோமம் முதலியவைகளைச் செய்து நித்யோத்ஸவத்தை செய்யவும்.

137. நித்யோத்ஸவத்திற்காக தேவி அமைக்கப்படவேண்டும். அந்ததேவி ஓர்முகம், நான்கு கை, வரதம், அபயம், சங்கு, சக்கரமிவைகளை தரித்திருப்பவர்களாகவும்

138. தாமரையாஸனத்தில் அமர்ந்திருப்பவளாய் மனோன்மணீயை பூஜிக்கவும். புஷ்பம், அன்னம் அக்ஷதைகளால் லிங்கங்களில் முறையே மேதை, ப்ரக்ஞை, உஷை ஆகிய இவர்களை பூஜிக்கவும்.

139. முன்பு கூறப்பட்ட முறைப்படி ஆலயத்தை வலம் வருதலைச் செய்யவும். பாதுகை பூஜையுடன் கூடியோ ஆலயத்தை அடையவும்.

140. தினந்தோறும் செய்ய வேண்டிய திருவிழாவிற்கான பிம்பங்கள் பலவகை இருப்பின், அவைகளில் அந்த ஆலயத்திற்கு ஏற்றவாறு நல்ல அமைப்புள்ள உற்சவ பிம்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

141. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு காலங்களில் ஏதேனும் ஓர் காலமோ தேவியை எப்பொழுதுமோ பூஜிக்க வேண்டும்.

142. எல்லா விருப்பத்தையும் கொடுக்கக் கூடிய நித்யோத்ஸவம் கூறப்பட்டது. உத்ஸவம், ஸ்நபநம், மரிக்கொழுந்து சாற்றும் முறையையும்

143. பவித்ரோத்ஸவம், க்ருத்திகாதீபோத்ஸவம், வருடாந்திர திருவிழாக்கள், வஸந்தோத்ஸவம்

144. அந்தந்த மாதத்தில் மாத உத்ஸவமும், நவநைவேத்யமுறை, விசேஷமாக பூர நக்ஷத்திர திருவிழாவும் பிராயச்சித்தமும் செய்யவேண்டும்.

145. பழுதடைந்ததை புதுப்பித்தல் செய்வதையும் முன்புபோல் செய்யவும். ஆனால் உத்ஸவக் கொடியில் ஸிம்மத்தையோ, வ்ருஷபத்தையோ வரையவும்.

146. விசேஷமாக பூர நக்ஷத்திரத்தில் தீர்த்த வாரியை செய்யவும். தேவிக்கும், சிவோத்ஸவ முறைப்படி தினந்தோறும் திருவிழாவை நடத்தலாம்.

147. கொடியேற்றுதல், ஹோமம், பலியின்றி வீதிவலத்தை மட்டுமோ செய்ய வேண்டும். தேவிக்கு அஸ்திர சக்தியாக சக்ர ரூபஅஸ்திரத்தையோ, த்ரிசூலாஸ்திரத்தையோ அமைக்க வேண்டும்.

148. உத்ஸவ மூர்த்தி பிம்பமானது முன்பு கூறப்பட்ட முறைப்படி செயற்பாலது. ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட தேவிக்கு கிராமத்தில் வெளியில் வலம் வருதல் கூடாது.

149. எங்கு பலி கொடுக்கப்படுகிறதோ, அங்கு கட்டாயம் வீதிவலம் வருதலை செய்ய வேண்டும். மற்ற இடத்திலேயாவது வீதிவலத்தையும் எல்லாவற்றை ஆலயத்திலேயுமோ செய்ய வேண்டும்.

150. ஒரே பிரகாரமுள்ள ஆலயமாயிருப்பின், பிரகாரத்திற்கு வெளியில் பலி, வீதிவலம் வருதல் உத்தமம். இந்த விதி முறையில் எல்லா தேவர்களுக்கும் பொதுவானதாகும்.

151. ஆலயத்தின் மூர்த்தேஷ்டிகாஸ்தாபனம், ஸ்தூபிஸ்தாபனமிவற்றை முன்பு போல் செய்யவும். எட்டு திசை மூர்த்திகளுடன் கூடியதாகவும், மத்தியில் கும்பத்தையுடையதாகவும் (ஸ்தூபியுடன்)

152. கோபுரஸ்தாபனத்தை முன்பு கூறியுள்ளபடி செய்ய வேண்டும். இந்த தேவியின் பிரதிஷ்டையானது முதன் முதலில் செய்யப்படும் பாலஸ்தாபனத்துடன் கூடியதாகவோ இல்லாமலோ செய்ய வேண்டும்.

153. அரசனுக்கு தேவியின் திருவருளால் எல்லா ராஜ்யத்திற்கும் தலைவனாகும் தன்மை ஏற்படுகிறது. ஆகையால் தேவிக்கு முன்பாக அரசனுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும்.

154. இவ்வாறாக தேவியின் பிரதிஷ்டை முதலிய க்ரியைகள் நன்கு கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தேவியை பிரதிஷ்டை செய்யும் முறையாகிற நாற்பத்தி நான்காவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: