புதன், 9 அக்டோபர், 2024

படலம் 28: பிராயச்சித்த விதி...

படலம் 28: பிராயச்சித்த விதி...

301. தீபாராதனையோ அல்லது அதன் அங்கமோ குறைந்தால் தேசத்தில் அக்னிபயம் உண்டாகும். ஆசார்யன் ஈசனை பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்து பணிவுடன் ஆராதிக்க வேண்டும்.

302. குறைந்த பொருட்களை இருமடங்காக பகவானுக்கு ஸமர்பிக்க வேண்டும். சாந்தி ஹோமமோ, மூர்த்தி ஹோமமோ செய்ய வேண்டும்.

303. ஆராத்ரிக்ரியையில் ரøக்ஷபஸ்மம் கொடுக்காமல் இருந்தால் அகோரமந்திரத்தால் நூறு தடவை ஜபிக்க வேண்டும். ஸ்வாமிக்கு உபசாரமாக கண்ணாடி, குடை, சாமரம் முதலியவைகள் கொடுக்காமல் இருந்தால்

304. அகோரமந்திரத்தை ஆயிரம் (1000) தடவை ஐநூறு தடவை (500)யோ ஜபம் செய்து இருமடங்காக உபசாரங்களை செய்ய வேண்டும். வாடிபோன பூக்களால் ஈச்வரனுக்கு பூஜை செய்தால் ராஜ்யத்தில் தடுமாற்ற நிலை உண்டாகும்.

305. அப்பொழுது சுவாமிக்கு ஸ்நபந அபிஷேகம் செய்து சாந்தி ஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும். கர்பகிருஹத்தில் நிர்மால்ய சுத்தி செய்யப்படாமல் இருந்தால், தேவதா ஸாந்நித்யம் இருக்காது.

306. அப்பொழுது ஸ்தலசுத்தி செய்து விசேஷமாக பகவானை பூஜித்து தோஷ சாந்தியின் பொருட்டு ஆயிரம் (1000) தடவை அகோரமந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

307. நிர்மால்யம் கலந்த புஷ்பாதிகளால் பகவான் பூஜிக்கப்பட்டால் அந்த தேசத்தில் வசிக்கும் மக்கள் சத்ருக்களால் துன்புறுத்தப்படுவார்கள்.

308. க்ஷயம், குஷ்டம் முதலிய வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்களாலும் செவிடர்களாலும், பாபரோகங்கள் உள்ளவர்களாலும் அபஸ்மாரம் என்ற வலிப்பு நோயால் தாக்கப்பட்டவர்களாலும் அவலக்ஷணம் நிறைந்தவர்களாலும்

309. குறைந்த அவயவம் உடையவர்களாலும், வளர்ச்சியடைந்த அங்கமுள்ளவர்களாலும், சிகையில்லாதவர்களாலும் செய்யப்பட்ட பூஜை ராஜ்யத்தில் குழப்பம் ஏற்படக்காரணமாக அமைகின்றன. அதன் பிராயச்சித்தம் கூறப்படுகிறது.

310. அதற்கு பரிஹாரமாக ஒரு தடவை நடத்தப்பட்ட முறைதவறிய பூஜைக்காக ஆசார்யன் நூறு தடவை அகோரமந்திர ஜபம் செய்ய வேண்டும், அதற்கு மேல் காலப்போக்கை அனுசரித்து நூறு தடவை ஜபிப்பதை மறுபடியும் ஜபித்து பூஜை செய்ய வேண்டும்.

311. ஒரு பக்ஷத்திற்கு மேல் முறைதவறி நடந்தால் ஸம்ஹிதா ஹோமமும், மாஸதேதிற்கு மேல் போனால் சாந்தி என்ற ஹோமமும் செய்ய வேண்டும். ஆறு மாதத்திற்கு மேல் ஆனால் சாந்தி ஹோமத்தையும் அதற்கு மேல் போனால் மூர்த்தி ஹோமத்தையும் செய்ய வேண்டும்

312. உரியதான குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் செய்யும் யாகமே விரும்பிய பயனை கொடுப்பதாகும். மற்ற தேசத்தில் வேறுகாலத்தில் செய்யப்படும் யாகம் விரும்பிய பயனை கொடுக்காததாகும்.

313. ஸந்தியா காலத்தில் நேரத்தை தவறவிட்டு சாந்தி ஹோமாதிகள் செய்தால் தோஷம் ஏற்படும். அதற்காக ஆயிரம் முறை அகோர மந்திரத்தை ஜபிக்க வேண்டும். ஸந்த்யை ஐந்து வகைப்பட்டது என்றும் சாஸ்திரத்தில் பாலை என்ற வேறுபாடாக வேண்டும் கூறப்படுகிறது.

314. அவை பாலா, அதிபாலா, யுவதி, அதிவ்ருத்தா, ச்ரேயஸீ என்று ஐந்து வகைப்படும். அதிபாலை, அதிவ்ருத்தை இவைகளுடன் மற்ற மூன்றும் 1.05 நாழிகை கொண்டவைகள் ஆகும்.

315. சூர்யோதத்திற்கு முன்னதாகவுள்ள 0.5 நாழிகை சமயமும், நடுவில் உள்ளதான யுவதீ என்ற ஸந்த்யைக்கு முன்னதாக உள்ள அதிபாலை, பாலை என்ற காலம் நித்ய, நைமித்திய, காம்ய ஆகிய மூன்று விதமான பூஜைகளில் ஏற்று கொள்ளாததாகும்.

316. சூர்யனுக்கு பின்புறமாக யுவதீ முதலிய ஸந்த்யைகள் செல்லுகின்றன. அந்த ஸந்தியா காலங்களில்தான் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். அந்த பூஜையையும் முற்பகலிலேயே செய்ய வேண்டும்.

317. ச்ரேயஸீ என்ற ஸந்த்யையில் ஆரம்பிக்கப்பட்ட பூஜை உத்தமமானது. யுவதி, அவ்ருத்தா ஸந்த்யைகளில் செய்யப்பட்ட பூஜை மத்யமமானது. பூஜா ஆரம்பத்திற்கு அதிபாலை, அதிவ்ருத்தை, அர்ஹதை அற்றவைகள்.

318. அப்படி இருஸந்தியா காலங்களிலும் பூஜையை ஆரம்பித்தால் முன்பு கூறப்பட்டபடி பரிஹாரம் செய்ய வேண்டும். ஸந்த்யாகால ஆரம்பத்திலும், அதைத்தவிர வேறு ஸமயத்திலும் ஸம்ஹிதா ஹோமம் செய்ய வேண்டும்.

319. ஆதிசைவ குலத்தில் உதித்தவர்கள் அல்லாதாரால் பரார்த்தமாக சிவபூஜை செய்யப்பட்டாலும் ஒருகால ஸந்த்யாகால பூஜை செய்யப்பட்டாலும் அந்த குற்றத்தின் பொருட்டு

320. ஸம்ஹிதா ஹோமம் செய்யவேண்டும். நாட்கள் அதிகமாகி ஆதிசைவரல்லாதவர்களால் செய்த பூஜைக்கு ஏற்றவாறு ஹோமமும் விருத்தியடையும். ஒரு பக்ஷத்திற்கு மேல் போனால் சாந்தி என்ற ஹோமத்தையும், மாஸத்திற்கு மேல் போனாலும் சாந்தி ஹோமத்தையும்

321. இரண்டு மாஸங்கள் ஆனால் மூர்த்தி ஹோமமும் நான்கு மாதத்தில் பூஜை செய்யப்பட்டால் திசா ஹோமமும், ஆறுமாதத்திற்குமேல் ஆதிசைவரல்லாதவர்களால் பூஜிக்கப்பட்டால் ஸம்ப்ரோக்ஷணமும் செய்ய வேண்டும்.

322. ஆறு மாதத்திற்கு பிறகும் ஆதிசைவரல்லாதவர்களால் பூஜை செய்யப்பட்டால், தேவலகன் என்ற அனுசைவரிடத்தில் கூலிக்கு பூஜை செய்யப்படாமல் இருப்பின் அதிகாரமானது உண்டு.

323. மத்ய தேசத்தில் பிறந்த சைவர் பூஜைக்கு அதிகாரியாக ஆகிறார். ஆத்மார்த்த லிங்கபிரதிஷ்டையிலும், தீøக்ஷயிலும் எல்லா தேசத்தவர்களுக்கும் அதிகாரம் உண்டு.

324. விந்தியமலைக்கு தெற்கில் க்ஷத்திய வம்சத்தில் உதித்தவர்களான அரசர்களுக்கும், விந்திய மலைக்கு வடக்கில் வைச்யர்களுக்கும் ஸாந்தாநிகர்களுக்கு எல்லா இடத்திலும் பூஜைக்கு அதிகாரம் உண்டு. சூத்ர ஜாதியில் பிறந்தவர்க்கு தீøக்ஷயில் அதிகாரம் கிடையாது.

325. அதிகாரம் இல்லாதவனால் அனுஷ்டிக்கப்பட்ட கர்மா அனுஷ்டிக்கப்படாததாக ஆகும். கூலிக்கு பூஜை செய்பவனாகின்ற ஆசார்யர்கள் லிங்க பிரதிஷ்டை முதலிய கார்யங்கள் செய்திருந்தால்

326. மறுபடியும் லிங்க பிரதிஷ்டை செய்து சாஸ்திரோக்தமாக பூஜையைச் செய்ய வேண்டும். பூஜை செய்ய அதிகாரம் இல்லாதவர்களால் பூஜை செய்யப்பட்டால் முன்பு கூறியபடி பிராயச்சித்தம் அனுஷ்டிக்க வேண்டும்.

327. இவ்வாறு நித்யானுஷ்டான முறையில் பிராயச்சித்தம் கூறப்பட்டது. அஷ்டபந்தனம் முதலியவற்றிற்கு குறைவு ஏற்பட்டால் பிராயச்சித்தம் வரிசையாக கூறப்படுகிறது.

328. அஷ்டபந்தனம் சிதிலமடைந்து லிங்கமோ பிம்பமோ, திருடர்களால் திருடப்பட்டால் (லோ) அம்பாள் மட்டும் திருடப்பட்டாலோ

329. அம்பாளை விட்டுவிட்டு ஸ்வாமி மட்டும் திருடனால் திருடப்பட்டிருந்தால் அந்த ஸமயத்தில் தேவாலயத்திற்கு சிறிதளவோ அல்லது அதிகமாகவோ சேதம் வெடிப்பு ஏற்பட்டிருந்தாலும்

330. ஆலய ஸ்தூபியின் அவயவம் வெட்டப்பட்டிருந்தால் ஸ்தூபிகள் கீழே விழுந்தால் கர்பக்ருஹதள அடி வரிசையில் ஜலம் கீழே சென்றால் ஸ்தூபியின் அங்கங்களும் எல்லா பொருளும் கீழே விழுந்தாலும்

331. ஆவுடையார் கீழே விழுந்தாலும் பரிவாரமின்றி இருந்தாலும் பலிபீடம் இல்லாமல் போனாலும் ஜீர்ணமானாலும் பலிபீடம் உடைந்திருந்தாலும்

332. அந்த பலிபீடம் எரிந்து போயோ அல்லது விழுந்தாலோ, பிராகாரம் கோபுரம், பாதிக்கப்பட்டிருந்தாலும் கோபுரம், பிராகாரம் பழுதடைந்து விழுந்தாலும் வெடிப்பு கண்டிருந்தாலும்

333. குரங்கு கோழி, புறா பன்றி, நாய், ஆந்தை, கழுகு, காக்கை, வீட்டுவிலக்குள்ள பெண், திருடன் கழுதை இவைகளாலும்

334. தள்ளப்பட்டவர்கள், பாபிகள், பிரேதம் தூக்குகிறவர்கள், தீட்டுள்ளவர், நல்ல பிறப்பு இல்லாது மறைமுகமாக பிறந்தவர்கள், பாபரோகம் உள்ளவர் மட்டமான மனிதர்கள், கலப்பு ஜாதியில் பிறந்தவர்

335. குரு முதலானவர்களுக்கு த்ரோஹம் செய்தவர்கள், சிவதீøக்ஷ இல்லாத பிராம்மணர்கள் நான்கு கால் பிராணிகள், குதிரைகள், பறவைகள், பாம்புகள்

336. தாழ்ந்த ஜாதியினர், தீøக்ஷ இல்லாதவர்கள், சில்பிகள், வியாபாரி, சண்டாளர், வண்ணான் ஆகிய இவர்களால்

337. பீடம், லிங்கம், பிம்பங்கள் முதலியவைகள் கர்பக்ருஹத்தில் தொடப்பட்டாலும் கர்பக்ருஹத்திலும், உத்ஸவ பேர மண்டபத்தில் பிரவேசித்தாலும்

338. பரிவாராலயத்திலோ உள்மண்டபத்திலோ இரண்டாவது மண்டபத்திலும் பிரவேசித்தாலும் மடப்பன்ளியில் நுழைந்தாலும் பீடங்களைத் தொட்டாலும்

339. நிர்வாண தீøக்ஷ இல்லாதவர்களாலும் ஸமயதீøக்ஷ உள்ள சூத்ரர்களாலும் நாட்டு நலனுக்காக ஸ்தாபிக்கப்பட்ட திருக்கோயில் மூலவர் தொடப்பட்டாலும் கர்பக்கிருகத்தில் பிரவேசித்தாலும்

340. உள்மண்டபம் பிரகாரங்கள் இவைகளிலும் மாளிகைகளிலும் மண்டபத்திலும் வெகுகாலம் தங்கி அசுத்தமான பதார்த்தங்களை போட்டாலும்

341. கர்பக்ருஹம் அர்த்தமண்டபம், பிம்பமண்டபத்திலும், வெளிமண்டபத்திலும் மலம், நச்சுகொடிகள் கபங்கள், கள் சிந்துதல், பிரஸவம் ஏற்பட்டாலும்

342. ஆசவுசம் என்ற சாவுத்தீட்டு உள்ள பிராஹ்மண க்ஷத்ரியவைச்ய என்ற த்ரிவர்ணத்தாரால் உள்மண்டபப் பிரவேசம் செய்தாலும் கோபுரம், கர்பக்ருஹம் அர்த்தமண்டபம் பிரதிமாமண்டபத்திலும்

343. கோபுரவேதியிலும், மாளிகையுடன் கூடிய சுற்றுபிரகாரத்திலும் பிம்பத்திலும் பீடத்திலும், பலிபீடத்திலும் நந்திகேஸ்வரரிடத்திலும் அவரின் ஆலயத்திலும்

344. பரிவாரங்களின், ஆலயத்திலும், தேவாலய கிணற்றிலும், மடப்பள்ளியிலும், உற்சவ ஆஸ்தான மண்டபத்திலும் அரண்மனையிலும் வீட்டிலும்

345. ஸபையிலும், சுவற்றிலும் புற்று உண்டாகியிருந்தாலும் பழுதடைந்திருந்தாலும் தேன்கூடு கட்டியிருந்தாலும்

346. பெரிய கொடிய எறும்புகள் க்ஷúத்ர ஜந்துக்கள் சிவந்த ஸ்திரீகள் வாயிற்படி தேசத்திலும் பள்ளியறையிலும் உண்டானாலும்

347. எண்ணை, நெய், ஹவிஸ், வைக்கப்படும் இடத்திலும் திவாரத்திலுள்ள தண்டு பாகத்திலும் காற்று செல்லுமிடத்திலும் ஆடுபசுஎருமை கொட்டகையிலும் கிராமத்தின் நடுவிலும்

348. மரத்தாலான லிங்கம் பிம்பங்கள், வீதி, நிழல்தரும் மரத்திலும், மடம், தண்ணீர்பந்தல் நந்தவனம்

349. லிங்கத்தின் அடிபாகம், ஆகியவைகளிலும் பாம்புப் புற்று ஏற்பட்டிருந்தால் நித்ய, நைமித்திக காம்ய பூஜைகளில் ஸ்நபனம் லோபமானாலும்

350. தான்யங்களால் ஏற்படுத்தக் கூடிய ஸ்தண்டிலம் அதன் அங்கம் இல்லாமல் இருந்தாலும் கும்பங்கள் இல்லாமல் இருந்தாலும் கும்பங்கள் (பரிமாணம்) குறைந்திருந்தாலும்

351. ஸ்தாபிக்கப்பட்ட சிவகும்பம் வர்தனீகலசம் உடைந்திருந்தாலும் பின்பாகம் உடைந்திருந்தாலும்

352. கரையான், எறும்புடன் கூடிய சங்குகளாலும், ஸ்வர்ணபாத்ரங்களாலும், யக்ஞவ்ருக்ஷபத்ரங்களால் ஆன பாத்ரங்களால் மூர்த்திக்கு ஸ்நாநம் செய்விக்கப்பட்டாலும் நூல் சுற்றப்படாத கலசத்தால் ஸ்நபனம் செய்யப்பட்டாலும்

353. கலசங்கள் குறைவான நூலால் சுற்றப்பட்டிருந்தாலும் பிரதான கூர்சம் இல்லாமல் இருந்தாலும் அந்த கூர்ச்சம் தயாரிக்கும் முறை குறைந்தாலும்

354. கடங்களில் நவரத்னம் தங்கம், வஸ்திர லோபம் ஏற்பட்டாலும் பால், நெய் முதலிய திரவ்யங்களின் லோபம் இருந்தாலும் புண்யாஹவாசனம் இல்லாமல் இருந்தாலும்

355. கும்பம், பூஜை செய்யப்படாமல் இருந்தாலும் மந்திர நியாஸம் இல்லாமல் இருந்தாலும் ஆடி முதல் கார்த்திகை முடிய மாதங்களில் செய்ய வேண்டிய

356. அரசாங்க குழப்பம் காரணமாக பவித்ரோத்ஸவம் இல்லாமல் இருந்தாலும் தமனாரோஹணம் என்ற மரிக்கொழுந்து சாத்துதல் இல்லாமலிருந்தாலும் கார்த்திகை தீபம் தடைபட்டிருந்தாலும்

357. அரசாங்க குழப்பங்கள் காரணமாக மூர்த்தங்கள் பூமிக்கடியிலோ தண்ணீரிலோ அல்லது குகையிலோ பாதுகாக்கப்பட்டாலும் சிவலிங்கத்தின் சிரசில் புஷ்பம் இல்லாமல் இருந்தாலும் மழைநீரால் லிங்கம் நனைக்கப்பட்டாலும்

358. உடைந்துவிட்ட ஆலயத்தில் சிவலிங்கம் இருந்தாலும், மிருகங்கள், பறவைகள், பாம்புகள், பசு முதலியவைகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வேறு தேவதையால் சிவனுக்கு பூஜை தடைபட்டாலும்

359. இது போன்ற ஸம்பவங்களில் பிராயச்சித்தம் விதிக்கப்படுகிறது. அஷ்டபந்தனம் விடுபட்டு இருந்தால் ராஜ்யம் தடுமாற்றத்தில் இருக்கும்.

360. அஷ்டபந்தனத்தையோ அல்லது த்ரிபந்தனத்தையோ செய்து கடைசியில் ஸ்வாமிக்கு ஸ்நபந அபிஷேகம் செய்ய வேண்டும். பழைய அஷ்டபந்தன மருந்தை நீக்கிவிட்டு சாஸ்திரபிரகாரம் அஸ்திர மந்திரத்தையும்

361. அகோர மந்திரத்தையும் நூறு தடவை ஜபம் செய்து, சமித், நெய், எள்ளு, அன்னம் இவைகளால் ஹோமம் செய்ய வேண்டும். லிங்கமோ, பிம்பமோ (மூர்த்தயோ) எதிரியால் கைப்பற்றப்பட்டிருந்தால்

362. அந்த தேசம் அழிந்து அரசர் எதிரிகளால் துன்புறுத்தப்படுவார். ஆகையால் எப்படியாவது முயற்சி செய்து எதிரியால் கைப்பற்றப்பட்ட லிங்காதிகளை கொண்டு வந்து அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

363. லிங்கம், பிம்பம் முதலியவைகள் கிடைத்தால் அவைகள் ரகஸ்யமான பாதுகாப்பு ஸ்தலத்தில் வைத்து லிங்கத்தை இடத்திலிருந்து பெயர்த்ததால் ஏற்பட்ட தோஷசாந்தியின் பொருட்டு அகோர மந்திரத்தால்

364. ஆயிரம் (1000) ஆவ்ருத்தி ஹோமமும் நெய், எள்ளு, ஹவிஸ், ஆகியவைகளால் நூறு ஸங்க்யை ஹோமமும் தேன்பால் சர்க்கரை கலந்தும் அருகம்பில்லாலும் ஆயிரம் (1000) ஆஹுதியை

365. ஹோமம் செய்து முடிவில் ஸ்தாபன முறைப்படி முன்பு உள்ள பூமியிலேயே ஸ்தாபிக்க வேண்டும். பிம்ப லக்ஷணத்தை பரிக்ஷிப்பது கண்திறப்பது, ஜலப்ரவேசம்

366. ஆகிய இவைகள் இல்லாமல் ஸ்தாபிக்க வேண்டும். தத்வ தர்சிகளால் எதிரியால் கைப்பற்றப்பட்ட லிங்கமும் மூர்த்தங்களும் கிடைக்காவிடில் வேறு புதிய லிங்க பேரங்களைக் கொண்டு ஸ்தாபிக்க வேண்டும்.

367. ஒரு மாஸத்துக்குக் குறைந்தாலும் அதிகமாக போனாலும் மூன்று மாஸத்திற்குள்ளாகவும் கிடைக்காவிடில் ஒவ்வொரு நாளும் சாந்தி ஹோமத்தை லிங்க பிம்ப ஸ்தாபனம் செய்யும் வரை செய்ய வேண்டும்.

368. அதற்கு மேல் பாலலிங்க பிரதிஷ்டை கூறப்படவில்லை ஆகையால் எப்படியாவது மூன்று மாதங்களுக்குள்

369. பாலாலய விதிப்படி பாலலிங்கத்தை ஸ்தாபித்து அந்த லிங்கம் யாரால் கைப்பற்றப்பட்டது. திருடர்கள் எங்கே, அந்த லிங்கம் எப்பேற்பட்டது.

370. பிம்பங்கள் முகலிங்கமோ அல்லது பாண லிங்கமோ என்று பிரதி தினமும் நிச்சயம் தேடி அந்த லிங்கம் கிடைத்தால்

371. சண்டைபோட்டு வென்றோ பணம் கொடுத்தோ அல்லது அன்பினாலோ லிங்கத்தையும் மூர்த்தத்தையும் முன்பிறந்த இடத்திலேயே ஸ்தாபிக்க வேண்டும்.

372. மூன்று வருஷங்களுக்குள் விடாமுயற்சி செய்து கிடைத்தாலும் அதே இடத்தில் ஸ்தாபிக்க வேண்டும். மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் கிடைக்காவிடில்

373. மூலஸ்தானத்தில் முன்புள்ளது போல் அந்த திரவ்யங்களால் வேறு மூலலிங்கம் முதலியவைகளை ஸ்தாபித்து பூஜா முறைப்படி அர்ச்சிக்க வேண்டும்.

374. முன்பு இருந்த லிங்கத்தின் அளவும், ஆக்ருதியும் தெரியாவிடில் ஆசார்யன் தேவாலயத்திற்கு ஏற்றவாறோ யஜமானனுக்கு ஏற்றவாறுமோ

375. லிங்கத்தை விதிப்படி நிர்மாணித்து முன் கூறிய பிரகாரம் செய்ய வேண்டும். ஸர்வகார்ய ஸித்திக்காக பாணலிங்கத்தையாவது ஸ்தாபிக்கலாம்.

376. அதே ரீதியில் மூர்த்தத்தையும் பீடத்தையும் செய்விக்க வேண்டும். அம்பாள் இல்லாமல் ஈச்வரனோ அல்லது அம்பாள் மட்டுமோ

377. எதிரிகளால் கைப்பற்றப்பட்டால் முன் பிருந்த மூர்த்தத்திற்கு சமமான மற்றொரு மூர்த்தத்தை தயாரித்து பிரதிஷ்டை செய்து

378. ஆசார்யன் சாஸ்திரோக்தமாக கல்யாண மஹோத்ஸவத்தை செய்ய வேண்டும். புதிய மூர்த்தம் தயார் செய்து பிரதிஷ்டையான பிறகு திருடர் வசமிருந்து மூர்த்தம் கிடைக்கப் பெற்றால் அதை

379. அதன் ஸமீபமான இடத்தில் ஸ்தாபனம் செய்து சிரத்தையுடன் தினமும் பூஜிக்க வேண்டும். லிங்கத்துடன் பீடம் இல்லாவிடில் லிங்கத்திற்கு வேறு பீடம் இணைக்கலாம்.

380. ஸ்வாமியின் ஆலயம் கிழக்கு திசையில் வெடிப்புடன் இருந்தால் அரசனுக்கு பயம் உண்டாகும். தென்கிழக்கு மூலையில் வெடிப்பு ஏற்பட்டால் அக்னி உபாதையும், தெற்கு திசையில் வெடிப்பு இருந்தால் ராஜ்யத்தில் கலகமும் ஏற்படும்.

381. தென்மேற்கு திசையில் வெடிப்பு ஏற்பட்டால் தனநாசமும் மேற்கு திசையில் ஊழியர் நாசமும் வடமேற்கு மூலையில் வெடிப்பு ஏற்பட்டால் சத்ரு வ்ருத்தியும் வடதிசையில் வெடிப்பு இருந்தால் புத்ர நாசமும்

382. வடகிழக்கில் வெடிப்பு இருந்தால் அரசனுக்கு துக்கமும் உண்டாகும். ஆகையால் உத்தமம் என்பது முதலான ஸ்தான பேதமறிந்து அவைகளுக்கு ஏற்றவாறு முன்கூறியபடி சாந்திஹோமம் முதலியவைகளைச் செய்ய வேண்டும்.

383. சாந்தி ஹோமத்துடன் கூடியதாக முடிவில் ஆலயத்தில் வெடிப்புள்ள இடத்தை சீர்திருத்தம் செய்து அனுகர்ம விதிப்படலத்தில் கூறியுள்ளபடி முறையாக ஆலயம் அமைக்க வேண்டும்.

384. ஆலயத்தில் சிறிதளவு வெடிப்பு இருந்தாலும் சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும். ஆலயத்தின் பாதி அம்சமோ அல்லது முக்கால் பாகமோ அல்லது கால்பாகமோ அல்லது அரைக்கால் பாகமோ வெடிப்பு ஏற்பட்டிருந்தால்

385. வெடிப்புள்ள இடத்தை சீர்படுத்தி ஆறு, ஐந்து, நான்கு மூன்று தடவை முன்பு கூறிய முறைப்படி பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

386. ஸ்தூபி முதலானவை அதன் அவயவம் பின்னமாகியிருந்தால் ஒரு தினம் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். தரையின் கீழே ஜலம் பெருகினாலும் தண்ணீரில் கீழே விழுந்தாலும்

387. ஸ்தூபியின் அங்கம் தண்ணீரில் மூழ்கினாலும் பூமியில் தோஷம் உண்டாகிறது. ஸ்தூபியே நீரில் மூழ்கினாலும் மூன்று நாட்கள் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

388. ஈசனை கும்பத்தில் ஆவாஹணம் செய்து ஸ்தலத்தை செப்பனிட்டு சுத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஸந்தி பூஜா காலத்திலும் அஸ்திர தீர்த்தத்தால் ஸ்நானத்திற்காக பிரோக்ஷிக்க வேண்டும்.

389. சில்பிகளால் செப்பனிடப்பட்ட ஸ்தலத்தை புண்யாஹமந்திரங்களால் பிரோக்ஷணம் செய்து ஸ்தலகர்மாவின் முடிவில் ஸம்புரோக்ஷணம் செய்ய வேண்டும்.

390. ஆவுடையார் என்ற பிண்டிகை தன் இடத்திலிருந்து கீழே விழுந்தால் தேசத்திற்கு எதிரிகளால் துன்பம் உண்டாகும் ஆகையினால் ஆசார்யன் சிவனை கும்பத்திலும் அம்பாளை வர்த்தனியிலும்

391. அஷ்ட வித்யேச்வரர்களுடன் கூடியதாக கும்பத்தில் ஆவாஹனம் செய்து ஆவுடையார் என்ற பிண்டிகையை அதன் இடத்தில் பொருத்த வைத்து மூன்று நாட்கள் மந்திர நியாஸத்துடன் சாந்தியை செய்ய வேண்டும்.

392. சில்பி முதலியவர்களின் ஸ்பர்சம் ஏற்பட்டால் ஸம்ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும். பரிவாரம் குறைந்தால் அரசாங்கத்தின் ஊழியர்கள் அழிவார்கள்.

393. பரிவாரங்களைத் தயாரித்து பிரதிஷ்டை செய்ய வேண்டும். பலிபீடம் இல்லாவிடில் எல்லாவித தோஷங்களும் உண்டாகும்.

394. முன்பு இருந்தது போல் ஏற்பாடு செய்து பீடத்தை அதன் இடத்தில் ஸ்தாபிக்க வேண்டும். அந்த பலிபீடம் பழுதானாலும் விரிசல் கண்டிருந்தாலும் தீயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கீழே விழுந்திருந்தாலும்

395. அப்பொழுது சாந்தி ஹோமத்தை செய்து ஸம்ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும். பிராகாரம், கோபுரம், பழுதடைந்து கீழே வீழ்ந்திருந்தாலும் வெடிப்பு கண்டிருந்தாலும்

396. அரசருக்கு பயம் உண்டாகும். அதற்காக சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். வெடிப்பு கண்ட இடங்களிலும் மற்றவற்றையும் சீர்திருத்தம் செய்து ஸம்ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

397. பஞ்சகவ்யத்தினால் பிரோக்ஷணம் செய்து ஒருநாள் சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும். குரங்கு, கோழி, புறா, பன்றி, நாய்

398. ஆந்தை, கழுகு, காகம் வீட்டுக்காகாத ஸ்திரீ, திருடன், கழுதை, பாபம் செய்தவர், பிரேதம் தூக்குபவர், தள்ளப்பட்டவன், பிரஸவ தீட்டுள்ளவர்

399. மறைமுகமாக பிறந்தவர்கள், மட்டமான மனிதர்கள், பாபரோகிகள், கலப்பு ஜாதியினர் குரு முதலானவர்களுக்கு துரோகம் செய்தவர்கள், தீøக்ஷ இல்லாத அந்தணர்

400. இரண்டு கால, நான்கு கால் பிராணிகள், பறவைகள், பாம்பு, கீழ்த்தரமான ஜாதியில் பிறந்தவர்கள், மற்ற வேறு தீøக்ஷயால் தீக்ஷிக்கப்பட்டவர்களாலும்

401. சில்பிகள், சண்டாளர், வண்ணான், வியாபாரி, ஆகியோர்களால் பீடமோ, லிங்கமோ மூர்த்தங்களோ தொடப்பட்டால் அங்கு வசிக்கும் மக்கள்

402. அந்த தேசத்து ஜனங்கள் அனைவரும் எதிரிகளால் துன்புறுத்தப்படுவார்கள். மேலே கூறப்பட்டவர்களால் தொடப்பட்ட மண்பாண்டங்களையும் அவர்கள் பாத்ரஸமீபத்தில் வந்தாலும் உபயோகிக்க கூடாது.

403. பசுஞ்சாணத்தை அந்த பாத்திரங்களில் பூசி ஆசார்யன் புண்யாஹ வாசனம் செய்து பஞ்சகவ்யத்துடன் ஸ்நபனம் செய்து ஸம்ப்ரோக்ஷணம் செய்யவேண்டும்.

404. ரஜஸ்வலா தீட்டுடன் கூடியபெண், பாபி. ஆசவுசம் என்ற தீட்டுடன் கூடியவர் வண்ணான், சில்பி ஆகியோரால் தொடப்பட்டால் சாந்திஹோமத்தை செய்யவேண்டும்.

405. சண்டாளன் வியாபாரி ஆகியோர் கர்பகிருஹத்திலுள்ள பிரவேசித்தால் சாந்தி ஹோமத்துடன் ஸ்நபனாபிஷேகம் செய்யவேண்டும்.

406. குரங்கு, கோழி ஆகியவைகள் கர்பகிருஹத்தில் பிரவேசித்திருந்தால் ஸம்ப்ரோக்ஷணம் இல்லாது சாந்திஹோமத்தையும் தீட்டுபெண் பாபி முதலியவர்கள் கர்பகிருஹத்தினுள் நுழைந்தால்

407. முன்பு கூறப்பட்டபடி ஸம்ப்ரோக்ஷணம் மட்டும் செய்யவேண்டும். சண்டாளன், வண்ணான், முதலியவர்களால் கர்பகிருஹம் பிரவேசிக்கப்பட்டிருந்தால் சாந்தி ஹோமத்துடன் ஸம்ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

408. சாந்திஹோமம், திசாஹோமம், ஸம்ப்ரோக்ஷணம் என்று மூன்று பிரகாரமாக பிராயச்சித்தம் கூறப்பட்டுள்ளது.

409. மேற்கூறியவர்கள் அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்தால் சாந்தி, சாந்திஹோமம் என்ற ஹோமம் செய்ய வேண்டும். சண்டாளனுக்காக உள்ள பிராயச்சித்தத்தையும் செய்ய வேண்டும்.

410. ரஜஸ்வலை ஸ்திரீ ஸ்பர்சம் ஏற்பட்டால் சாந்தி ஹோமம் செய்யவேண்டும். சாந்திஹோமம், திசாஹோமம் ஸம்ப் ரோக்ஷணம் ஆகிய மூன்று விதமான பரிஹாரத்தை பிம்பமண்டப பிரவேசம் செய்தால் செய்ய வேண்டும்.

411. மூர்த்தி ஹோமம், சாந்திஹோமம், திசா ஹோமம், ஆகியவைகளை தீøக்ஷயில்லா ஆசார்யன் செய்யக்கூடாது. அவர்களை ஒதுக்கிவிட்டு தீøக்ஷயுள்ள ஆசார்யன் கிரியைகளை செய்யவேண்டும்.

412. பரிவாரதேவைகளின் ஆலயத்தில் பிரவேசித்தற்காக மேற்கூறிய பிராயச்சித்தத்தை செய்ய வேண்டும். புறா, காகம், பாம்பு முதலிய பிராணிகளின் பிரவேசம் தோஷத்தை உண்டாக்காது.

413. உள்மண்டபத்தில் சண்டாளர், வண்ணான் முதலியவர்கள் பிரவேசித்தால், மூர்த்திஹோமத்துடன் சாந்திஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

414. எல்லா கார்யங்களிலும், பசுஞ்சாணம், பூசுவது பொதுவானது. மடப்பள்ளியில் சண்டாளர் வண்ணான் முதலியவர் பிரவேசித்தால் பரிவார ஆலயபிரவேசத்தில் கூறப்பட்டபடி பரிஹாரம் செய்ய வேண்டும்.

415. மடப்பள்ளி பிராயச்சித்தத்திற்கு ஸமமாகி பலிபீடங்களை தொடுவது முதலியவைகளுக்கு பரிஹாரங்களை செய்ய வேண்டும், நிர்வாணதீøக்ஷ இல்லாதவர்களும், சமயதீøக்ஷயுள்ள சூத்ரர்களும்

416. பரார்தமாக ஆலயங்களில் ஸ்தாபிக்கப்பட்ட சாச்வதமான லிங்கத்தை தொட்டாலும் மேலே கூறப்பட்டவர்கள், கர்பகிருஹத்தில் நுழைந்தாலும் ஸ்வாமிக்கு ஸ்நபன அபிஷேகம் செய்து சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும்.

417. அர்த்த மண்டப பிரவேசத்தில் தோஷம் இல்லை. உள்மண்டபம், பிராகாரம், மாளிகைபோல் அமைப்புள்ள இடம், மண்டபம் இவைகளிலும் தோஷம் இல்லை.

418. மண்டபத்தின் நடுவே வெகுநேரம் வஸித்தால் அசுத்தமான பொருளை போட்டாலும் அசுத்தம் இருந்த இடத்தை சீர்படுத்தி பசுஞ்சாணத்தால் அலம்பவேண்டும்.

419. இடையூறுக்கு அனுகுணமாக புண்யாஹ வாசனத்தையும், சாந்திஹோமத்தையும் செய்ய வேண்டும். கர்பகிருஹத்திலோ, அர்த்த மண்டபத்திலோ, மூர்த்தங்களின் மண்டபத்தில்

420. மலமோ, ப்ரஸவித்தலோ, நச்சு கொடியின் ஜலமோ, கபம், கள் போன்றவை முதலியவைகள் சிதறிக் கிடந்தால் ஸம்ப்ரோக்ஷணம் செய்து, திசாஹோமம், மூர்த்தி ஹோமம், சாந்திஹோமத்தையும் செய்ய வேண்டும்.

421. பசுஞ்சாணத்தால் சுத்தி முதலியவைகளை முன்பு போலவே சொல்லப்பட்டுள்ளது. ஆசவுசம் உள்ள மூன்று வர்ணமுள்ள தீக்ஷிதர்களின்

422. உள் பிரகார நுழைவு குற்றத்தை ஏற்படுத்தாது. தீøக்ஷ இல்லாதவர்கள் பிரவேசம் செய்தால் பஞ்சகவ்யத்தால் அந்த இடத்தில் தெளிக்க வேண்டும்.

423. அதற்கு வெளியில் பிரவேசித்தால் தோஷமில்லை என்று கூறப்படுகிறது. சிவசின்னத்தை தரித்திருக்கும் சூத்ரர்களோ, கலப்பு ஜாதியினரோ,

424. த்ரிவர்ணத்தவரால் தீøக்ஷ செய்து வைக்கப்பட்டாலும், அவர்கள் தீøக்ஷ இல்லாதவர்களுக்கு இணையானவர்கள் ருத்ரகன்னிகைகள் மந்திரமின்றி தீøக்ஷ செய்யப்பட்ட தேவதாஸிகளுக்கு இணையானவர்கள்

425. தீøக்ஷ இல்லாத பிராம்மணர் முதலியவர்களால் ஐந்து ஆசார்யர்களும் தீøக்ஷ செய்யவிக்கப்பட்டால் தீøக்ஷ செய்யப்பட்டதாக ஆகாது. கோயில், கர்பகிருஹத்திலும், அர்த்தமண்டபத்திலும் உத்ஸவ மூர்த்தி மண்டபத்திலும்

426. மாளிகையுடன் கூடிய பிராகாரத்திலும் கோபுரத்தின் பக்கத்திலும், பிம்பத்திலும், தேவாலய வாசலில் உள்ள பீடத்திலும், விருஷபத்திலும், விருஷபம் இருக்கும் இடத்திலும், பலிபீடத்திலும்

427. பரிவார தேவதைகளின் ஆலயத்திலும் கிணற்றிலும், மடப்பள்ளியிலும், ஆஸ்தான மண்டபத்திலும் அரசருடைய மாளிகையிலும், வீட்டிலும்

428. ஸபையிலும், அதற்கு மேற்பட்ட பிரதேசத்திலும் பாம்பு புற்று ஏற்பட்டாலும் கட்டிடங்களில் வெடிப்பு, விரிசல் ஏற்பட்டாலும், தேன்கூடு ஏற்பட்டாலும்

429. பெரிய எறும்பு, கொடியசிகப்பு ஸ்தீரி முதலிய கொடிய ஜந்துக்கள் பூமியிலிருந்து கிளம்பி இருந்தாலும் மனிதர்களுக்கு எல்லாவிதமான தோஷங்களும் உண்டாகும்.

430. நடுப்பகுதி, கிழக்கு முதல் இவைகளுக்கு பலனைக் கேளுங்கள், வியாதி, பயம், தீவிபத்து, பந்துக்களின் அழிவு, பணவரவு

431. புத்ரநாசம், நண்பர்களின் லாபம், தான்யலாபம், பொருள் அழிவு, ஆகிய பலன்களாகும். நடுவிலிருந்து ஈசானதிசை வரை பாம்புபுற்று தெரிந்தால் மேற்கூறிய பலனாகும்.

432. நடுவில் விடுபட்டு இருந்தால் ஸுகம் உண்டாகும். அதற்குமேல் பிராணிகளுக்கு நாசம், கிழக்கு திக்கில் பயம் உண்டாகும்.

433. தென்கிழக்கு மூலையில் இருந்தால் நண்பர் வரவு, அதற்குமேல் இருந்தால் ராஜ்யத்தில் குழப்பம் ஏற்படும் தெற்குதிசையில் பொருள்லாபம்.

434. அதற்கு மேலே இருந்தால் எஜமானுடைய மனைவிக்கு மரணம் ஸம்பவிக்கும், நிர்ருதி திக்கில் அபிவிருத்தி, அதற்குமேல் இருந்தால் அர்த்த மற்றதான பயன் ஆகும்.

435. மேற்கில் இருந்தால் தனலாபம், ஆரம் பத்தில் இருந்தால் திருட்டுபயம், வாயுதிக்கில் இருந்தால் கன்னிகைகளுக்கு தீங்கு, வடக்கு திக்கில் சத்ருக்களால் பயம்

436. அதற்கு மேல் தான்யலாபம், ஈசானத்தில் பெரும்பயம், வாசலில், இருந்தால் கிருஹத்திற்கு அழிவு சயனஸ்தானத்தில் (படுக்கை அறை) இருந்தால் மரணம்

437. எண்ணை, நெய், ஹவிஸ் ஆகியவைகளிருக்கும் இடத்தில் எரும்பு, கரையான்புற்று இருந்தால் நான்குகால் பிராணிகளுக்கு அழிவு ஏற்படும். வாசல் பிரதேசத்தில் இருந்தால் மனைவி மரணம், வேலைக்காரர்களுக்கு தீமை ஏற்படும்.

438. பசு, ஆடு, எருமை முதலிய பிராணிகள் கொட்டகைகளில் எள் செடி முளைத்திருந்தால் கண்நோய், வரும். கிராம மத்தியிலும், தேவலாயத்திலும் எள் செடி முளைத்தால்

439. அதற்கங்கமான ராஜாங்கத்திற்கு பயமேற்படும், லிங்கத்திலும், அரசவையிலும் நிழல்தரும் மரத்திலும், பெரியவீதியிலும், மடத்திலும்

440. தண்ணீர்பந்தல், நந்தவனம், கிணறு, சிவ லிங்கத்தின், அடிபாகத்திலும், எள்செடி ஏற்பட்டிருந்தால் தேசத்தின் நிலை சீர்கெட்டிருக்கும். அரசருக்கும் பயம் உண்டாகும்.

441. தேன்கூடு ஏற்பட்டிருந்த விஷயத்திலும் மேலே கூறப்பட்ட பலன்கள் உண்டாகும். வாசல் முதலியவைகளில் பாம்பு புற்று ஏற்பட்டிருந்தால் முன்பு கூறப்பட்ட பலனாகும்.

442. தோண்டுவதற்கு தகுந்த இடத்தைத் தோண்டி எடுத்து உப்பு முதலியவைகளால் சுத்த மண் கலந்து முன்போல் மறுபடியும் உண்டாகாமல் இருக்கும்படி அமைக்கவேண்டும்.

443. புண்யாஹவாசனம் செய்து தீர்த்தால் பிரோக்ஷணம், பஞ்சகவ்ய பிரோக்ஷணமும் செய்து கலசங்களால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து மூர்த்தி ஹோமத்தைச் செய்யவேண்டும்.

444. பாலாலய மூர்த்தம், லிங்கம், பீடம், ஆலயம், கர்பகிருஹம், த்வாரங்களில் தேன்கூடு, பாம்புபுற்று ஏற்பட்டால் முன்பு கூறியபடி மூர்த்தி ஹோமத்தை ஏழுநாட்கள் செய்ய வேண்டும்.

445. அர்த்த மண்டபத்திலும், மூர்த்தி மண்டபத்திலும் தேன்கூடு, பாம்பு புற்று ஏற்பட்டால் மூன்று தினங்கள், ஹோமங்களையும், வேறு இடத்தில் ஏற்பட்டால் மூர்த்தி ஹோமத்தையும், பிறகு ஒரு நாள் சாந்தி ஹோமத்தையும் செய்யவேண்டும்.

446. அரசருடைய மாளிகையில் தேன்கூடு புற்று இருந்தால் பதினான்கு (14) நாட்கள் திசாஹோமத்தைச் செய்து தேன்கூடு இருந்தால் அந்த இடத்தில் அதை எடுத்து

447. இடத்தை நன்கு சீர்திருத்தி பசுஞ்சாண ஜலத்தால் நன்கு அலம்பி சுத்தம் அஸ்திர ஜலத்தால் பிரோக்ஷித்து ஈசனுக்கு அபிஷேகம் செய்து, திசாஹோமத்தை செய்ய வேண்டும்.

448. பாம்புப் புற்றுக்கு கூறியபடி தின எண்ணிக்கையால் தேன்கூட்டிற்கு பிராச்சித்தம் செய்யவும் நித்யநைமித்தியகாம்ய பூஜையில், ஸ்வாமிக்கு ஸ்நபன அபிஷேகம் நின்று போயிருந்தால்

449. ஸ்நபன கர்தாவிற்கு மஹாவியாதி உண்டாகும். அதன் நிவ்ருத்திக்காக சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். முன்பு கூறிய பிரகாரம் மறுபடியும் விருப்பப்பட்ட நாளில் ஸ்வாமிக்கு ஸ்நபன அபிஷேகம் செய்ய வேண்டும்.

450. ஸ்நபன அங்கத்திற்கு குறைவு ஏற்பட்டால் தேசமக்கள் பாபகாரியங்களில் ஈடுபடுவார்கள் அதற்காக (300) மூன்னூறு தடவை அகோரமஹாமந்திரத்தை ஜபித்து ஸ்வாமிக்கு பூர்ணமாக ஸ்நபன அபிஷேகம் செய்ய வேண்டும்.

451. நெல் முதலிய தான்யங்களால் நிர்மாணிக்கப்படும் ஸ்தண்டிலத்திற்கும் அதன் அங்கத்திற்கும் குறைவு ஏற்பட்டால் அகோரமந்திரத்தால் (1000) ஆயிரம் ஆவ்ருத்தி ஹோமம் செய்து முறைப்படி ஸ்தண்டிலத்தை சீர்செய்யவேண்டும்.

452. சாஸ்திரத்தால் கூறப்பட்ட கும்பம் முதலியவைகள் உரிய முறைப்படி இல்லையெனில் ராஜ்யத்தில் சண்டை ஏற்படும். அதற்காக 1000 ஆவ்ருத்தி அகோர மந்திரம் ஜபித்து

453. மறுபடியும் ஸ்வாமிக்கு கும்பம், அஸ்த்ரவர்தனீகளால் ஸ்நபன அபிஷேகம் செய்ய வேண்டும். சாஸ்திரத்தில் கூறப்பட்ட பிரமாண அளவுடன் கூடிய கலசங்களால் இருமடங்கு திரவ்யங்களைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

454. கும்பம் முதலியவைகளின் அளவு குறைவுபட்டிருந்தால் கும்பத்திற்கு முன்னூறு ஆவ்ருத்தி, வர்தநீக்கு, 200 தடவையும் கலசத்திற்கு 100 ஆவ்ருத்தி என்பதாக

455. மந்திர மறிந்த ஆசார்யன் அவைகளின் அளவு ஸித்திப்பதற்காக முறைப்படி அகோரமந்திர ஜபம் செய்ய வேண்டும். சிவகும்பத்திலோ அல்லது வர்த்நீ கலசத்திலோ,

456. பின்னங்கள் ஏற்பட்டாலும் அடிபாகம் இல்லாததாகவோ இருந்தால் அரசருக்கும் மஹா ராணிக்கும், கார்யகர்தாக்களுக்கும் தோஷம் உண்டாகும்.

457. அப்பொழுது ஆசார்யன் அகோரமந்திரத்தால் ஐநூறு (500) இருநூறு (200) நூறு தடவையுடன் மேலும் அந்த ஆசார்யன் இருமடங்காகவும் ஜபிக்க வேண்டும்.

458. வேறு ஒரு கும்பத்தைக் கொண்டு வந்து அந்தந்த திரவியங்களுடன் வைக்க வேண்டும். மடக்கு போன்ற பாத்ரம், சங்கு, தங்கம், முதலான பாத்ரம் அல்லது பலாசமரம் முதலான பாத்ரங்களில்

459. பகவானை ஸ்தாபித்து நூறு ஆவ்ருத்தி, அகோரமந்திரத்தினால் ஜபம் செய்து அபிஷேகம் செய்ய வேண்டும். நூல் சுற்றப்படாத கும்பங்கள் உபயோகிக்கப்பட்டால் சத்ருக்களை விருத்தி செய்யும்.

460. அதற்கு அகோர மந்திரத்தால் நூறு (100) தடவை ஜபம் செய்யவேண்டும். ஸ்வல்பமாக நூல் சுற்றப்பட்டவைகளாக கும்பங்கள் இருந்தால் அதற்கு 100 தடவை அகோர ஜபம் செய்யவேண்டும்.

461. மாவிலை, தேங்காய், முதலான திரவ்யங்களால் கும்பத்தை சரியாக மூடாதிருந்தால் ஆசார்யன் அகோரமந்திரத்தால் நூறுதடவை ஜபிக்க வேண்டும். கூர்ச்சம் இல்லாமல் இருந்தால் தேவதாஸான்னித்யம் இல்லாமல் போகும்.

462. உள்ளேபோடும் கூர்சம், முதலான கூர்சங்களை மாற்றி வைத்திருந்தாலும் முன்புகூறிய, சத்ருவ்ருத்தியும், தேவதாஸான்னித்யம் இல்லாமையும் ஏற்படும். அதன் பரிஹாரமாக ஹ்ருதய மந்திரத்தால் 200 தடவையோ அல்லது 300 முறையோ ஜபிக்க வேண்டும்.

463. ரத்னம், தங்கம் ஆகியவை கலசத்தில் இல்லாமல் இருந்தால் அரசன் தரித்ரனாக ஆவான். அவ்வாறே கலசம், வஸ்திரம் இல்லாததாக இருந்தால் அரசனுக்கு தாரித்ரியம் ஏற்படும். அந்த தோஷநிவ்ருத்திக்காக (1000) ஆயிரம் தடவை ஹ்ருதய மந்திரத்தால் ஜபம் செய்ய வேண்டும்.

464. தங்கம், ரத்னம் ஆகியவைகளுடன் கூடிய கலசத்தால் மறுபடியும் சுவாமிக்கு ஸ்நபனம் அபிஷேகம் செய்ய வேண்டும். பஞ்சகவ்யம் முதலிய திரவியங்கள் இல்லாமல் இருந்தால் தேசத்தில் சண்டை சச்சரவு உண்டாகும்.

465. அப்பொழுது அகோர மந்திரத்தை நூறு தடவை ஜபித்து பால்நெய் முதலியவைகளை பகவானுக்கு சேர்ப்பிக்க வேண்டும். புண்யாஹவாசனம், பிரோக்ஷணம் இல்லாமல் இருந்தால் மறுபடியும் நூறு தடவை அகோரமந்திரம் ஜபம் செய்ய வேண்டும்.

466. கும்பங்களினால் பூஜை செய்யப்படாமல் இருந்தால் ஸ்நபனம் செய்யப்படாதாக ஆகும். மந்திரங்களால் நியாஸம், செய்யப்படாமல் இருந்தால் சாந்திஹோமம் செய்யவேண்டும்.

467. அகோர மந்திரத்தை நூறு தடவை ஆசார்யன் ஜபித்து தேவதாஸான்னித்யம் ஏற்படச் செய்ய வேண்டும். ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் முடிய (5) ஐந்து மாதங்களில்

468. பவித்ரோத்ஸவம் செய்யப்படாமலிருந்தால் கோயில், வீடு முதலிய இடங்களில் எந்த கிரியைகள் கோயிலில் இருக்கின்றனவோ அந்த எல்லா கர்மாக்களும் பயனற்றவைகளாக ஆகும்.

469. விதிப்படி ஸ்வாமிக்கு பூஜை நடத்தி திசாஹோமத்தைச் செய்யவேண்டும். பிறகு தனக்கு சவுகர்யமாக ஐந்து மாதத்திற்குள் அபிப்ராயப்பட்ட மாதத்தில் பவித்ராரோஹணம் நடத்த வேண்டும்.

470. தமநாரோஹணம் என்ற மரிக்கொழுந்து சாற்றும் உற்சவமின்றி இருந்தாலும் திசாஹோமம் செய்யவும் கிருத்திகாமாத தீபபூஜை இல்லாமல் இருந்தால் ஜனங்கள் எதிரிகளால் துன்புறுத்தப்படுவார்கள்.

471. அப்பொழுது மூர்த்திஹோமத்தைச் செய்து கிடைத்த மாதத்தில் தீப பூஜையை நடத்த வேண்டும். அரசாங்கக் குழப்பம், சத்ருக்கள் திருடர்கள் இவர்களால் ஒருவர்க்கொருவர் விரோதம் காரணமாக

472. சிலை, முதலியவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற சந்தேகம் ஏற்பட்டால் குகையிலோ, தண்ணீரிலோ, பூமியிலோ மறைத்து வைத்து காப்பாற்ற வேண்டும். அந்த இடத்தில் கீழ்வரும் கிரியையை செய்ய வேண்டும்.

473. பிறகு அந்த மூர்த்தங்களின் எதிரில் தயாரிக்கப்பட்ட ஸ்தண்டில பீடத்தில், சந்தனம் முதலியவைகளால் மூர்த்தத்தை பூஜித்து கும்பம், வர்தநீ, வித்யேச கலசங்களுடன் கூடியதாகவோ, வித்யே சாவரண மின்றியோ

474. கூர்ச்சத்துடன் நூல் சுற்றிய கலசங்களால் உமையுடன் கூடிய மஹேச்வரனை அஷ்டவித்யேச்வரர்களுடன் அந்தந்த வேதமந்திரங்களால் பூஜிக்க வேண்டும்.

475. அந்த பிம்பத்திற்கு முன்னதாக ஸ்தண்டில அமைத்து சிவாக்னி கல்பித்து சிவமந்திரத்தால் (100) நூறு ஆவ்ருத்தியும் மனோன்மணீ மந்திரத்தால் ஐம்பது (50) ஆவ்ருத்தியும் பிரும்மந்திரம் அங்க மந்திரத்தோடும்

476. அஷ்டவித்யேச்வரர்களுடன் சுவாமிக்கு ஒவ்வொரு மந்திரமும் நூறு ஆவ்ருத்தி ஸமித் நெய் அன்னம் இவைகளால் செய்து கடைசியில் பூர்ணாஹுதியை செய்யவேண்டும்.

477. கும்பத்திலோவர்த்தநியிலோ களிமண் முதலான திரவ்யங்களினால் செய்யப்பட்ட பீடத்திலோ, செங்கல் முதலான கற்களால் செய்யப்பட்ட பீடத்திலோ, லிங்கத்திலோ மந்திரத்தை சொல்லி நியாஸம் செய்யவேண்டும்.

478. ஆசார்யன் அந்த கும்பத்தில் உள்ள ஜலத்தாலேயே பீடம் முதலியவைகளை அபிஷேகம் செய்ய வேண்டும். பீடமாயிருப்பின் பீடத்தின் கீழோ, லிங்கமாயிருப்பின் தேவியை ஆவுடையாரிலோ வைத்து பூஜிக்க வேண்டும்.

479. அதற்காக ஒவ்வொரு நாளும் லிங்கத்திலோ, பீடத்திலோ பூஜை செய்யவேண்டும். உருவ அமைப்புள்ள மூர்த்திகளும் தேவதாஸான்னித்யம் ஏற்படுவதாக இந்த கர்மா கூறப்பட்டது.

480. எந்த ராஜ்யத்தில் சிவலிங்கம் புஷ்பம் இல்லாத சிரசுடன் இருக்கிறதோ அந்த தேசத்தில் எப்பொழுதும் அதிவ்ருஷ்டி, புயல், காற்று கடும் வெய்யில் இவைகளால் பல வித துன்பங்கள் ஏற்படும்.

481. மழை முதலியவைகளால் பாதிக்கப்பட்டதும் பழுதடைந்ததும், இடித்ததுமான ஆலயத்தில் இருப்பதும் விலங்கு, பறவை, பாம்பு, மாடு ஆகியவை களால் பாதிக்கப்பட்டது. இதரதேவதைகளால் பாதிக்கப்பட்டதுமான சிவலிங்கம்.

482. முக்கியஸ்தர்களை பாதிக்கும் வசதியுள்ளவர்களையும் பாதிக்கும். ஆகையினால் அரசர் ஸம்ப்ரோக்ஷணம் முதலிய காரியங்களைச் சீக்கிரமாக செய்யவேண்டும்.

483. பிறகு ஸம்ப்ரோக்ஷணம் ஆனது முதல் தேசத்தின் தன்னுடைய நன்மைக்காக, உத்தமமாகவோ அல்லது நடுத்தரமாகவோ, அல்லது அதமமான சாதாரண முறையிலோ பூஜையை நடத்தவேண்டும்.

484. ஒருவேளையோ, இருவேளைகளிலோ அல்லது மூன்று வேளைகளிலும் ஜபத்துடனும் சந்தனத்துடனும் செய்யப்படும் பூஜை விசேஷமானது. பூஜை தூபத்துடனும் செய்யப்பட்டால் முன் கூறியதைவிட உயர்ந்ததாகும்.

485. தீபத்துடன் செய்தால் உயர்ந்ததாக ஆகும். நைவேத்யத்துடன் பூஜை சிறந்தாகும். தாம்பூலத்துடன் செய்யப்படும் பூஜை முன்பைவிடச் சிறந்தது. பலியுடன் செய்யப்படும் பூஜையும் சிறந்தது.

486. ஹோமங்களால் பகவானை ஆராதித்து, உத்ஸவம் முதலியவைகள் நடத்தப்பட்டால் முன்பு கூறியதை விட உயர்ந்ததாகும். சுத்தந்ருத்தம் என்ற சவுக்யகர்மாவுடன் பூஜை செய்தால் முன்பு கூறியதை விட மிகமிக உயர்ந்ததாகும். இவ்வாறு அறிந்து ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும்.

487. மழை முதலியவைகளால் பாதிக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு கோயில் அமைக்க வேண்டும். மற்றும் ஒவ்வொரு நாளும் தவறாமல் தீர்த்தம் புஷ்பம், பில்வபத்ரம் ஆகியவைகளை ஸமர்பித்து பரமசிவனை ஆராதிக்க வேண்டும்.

488. பழுதடைந்து இடிந்து போனதும், மாடு, ஆடு முதலியவைகளால் பாதிக்கப்பட்ட தேவாலயத்தை ஜீர்ணோத்தாரணம் செய்து கதவு தாழ்ப்பாள் முதலியவைகளை செய்து லிங்கத்தைப் பாதுகாக்க வேண்டும்.

489. முன்பு ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் முதலிய பிம்பங்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் பிரம்மாதி மூர்த்தங்களை வேறு இடத்தில் ஸ்தாபிக்க வேண்டும்.

490. சிவ÷க்ஷத்திரத்தில், சிவபெருமானுடைய, நந்தவனத்தில் சிவஸாந்நித்யம் உள்ள கிராமத்தில் ப்ராம்மணோத்தமர், விஷ்ணு, பிரும்மா, இந்திரன், புத்தர், ஜைனர்.

491. மற்ற தேவதைகளை தாமே உயர்ந்தவர் என்பதாக பிரதிஷ்டை செய்யக்கூடாது. அப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டியிருந்தால் தூர பிரதேசத்தில் பிரதிஷ்டை செய்யவேண்டும்.

492. அதனால் அரசருக்கு அமைதியும், தேசக்களுக்கு நிம்மதியும் ஏற்படும். சிவனை தவிர்த்த விஷ்ணு இதரதேவதைகள் சிவஸ்தானத்திற்கு தூரத்தில் ஸ்தாபிக்கப்பட்டால் தேசத்திற்கு நலன்கள் ஏற்படும்.

493. ஏனென்றால் பரமேஸ்வரர் எல்லோருக்கும் தலைவர், ஒப்பற்றமகிமை உடையவர். அவருடைய ஸ்தானத்தில் அவரைதவிர வேறு எந்த தேவதைக்கும் இடமில்லை.

494. விஷ்ணு மூர்த்தத்தையோ, பிரம்மமூர்த்தத்தையோ, பவுத்தர், ஜைனர், சூர்யன் ஆகிய தேவதைகளை இந்திர கிழக்கு திசையிலோ, ஆக்னேய மூலையிலோ, தெற்கு திசையிலோ

495. நிர்ருதியிலோ, வருணனுடைய திசையிலோ, வாயுதிசையிலோ, குபேரதிசையிலேயும், பார்வதீ, துர்கை, ÷க்ஷத்ரபாலர், சந்திரன்

496. ஜ்யேஷ்டாதேவி, லக்ஷ்மி, பூமி, மன்மதன், கணபதி, சுப்ரமணியர், நந்திகேசர், அஷ்டவஸுக்கள், நாகராஜா ஆகியோர்க்கு ஸ்தானம் ஏற்பாடு செய்வது உத்தமம்.

497. மேற்கூறிய ஸ்தானங்களே முனிவர்கள், மனிதர்கள், அஸுரர்கள், ஆகியோருக்கும் ஸ்தானமாக செய்வதால் ஈசனுடைய ஸ்தானத்திற்கு தகுதி சிறந்ததாக விளங்குகிறது.

498. ஏனென்றால் எல்லா சாஸ்திரத்திலும் பரமேச்வரனை எல்லோரை காட்டிலும் சிறந்தவராக கூறப்படுகின்றன. சிவபெருமானை எல்லா தேவதைகளை போல் ஸாமான்யமாக நினைப்பவர்கள் நரகத்தை அடைவார்கள்.

499. பிரம்ஹதேவரும் விஷ்ணுபகவானும், ருத்ரரும், ஸமமானவர்கள் என்று கூறுபவர்கள் துர்புத்தியுள்ளவர்கள். அவர்கள் பாபமயமான நரகத்தில் வஸிப்பார்கள்.

500. மேற்கூறியபடி சிவனை முக்யமின்றி மற்ற தேவர்களை பூஜிப்பவர்களுக்கு ரவுரவம் முதலிய நகரமே வாஸமாகும். மோக்ஷம் கிடைப்பதில்லை. சிவனையே சரணாகதியாக இருப்பவர்களுக்கு சிவன் பூஜிக்கத்தக்கவராக இருக்கிறார்.

501. 80 வயதுக்கு மேற்பட்டவரும் பதினாறு 16 வயதுக்கு குறைந்த சிறுவனும் வியாதியால் பீடிக்கப்பட்ட பெண்களும் அரைபாகம் பிராயச்சித்தம் செய்ய தகுதியுள்ளவர்கள்.

502. அதிலும் சிரமம் இருந்தால் பாதி, அதிலும் பாதி செய்யலாம். தான் செய்வதற்கு கஷ்டமாக இருந்தாலும் ஆசார்யன் வேறொருவன் மூலம் இரண்டு மடங்காக செய்யச் சொல்லவேண்டும்.

503. இடம், நேரம், வயது, சக்தி, ஜாதி, பக்தி, கர்மானுஷ்டான வரிசைகளை நன்கு யோஜித்துச் செய்ய வேண்டும். வியாதியுடன் கூடியவனிடத்தில் உபவாஸம் வேண்டாம்.

504. பிராயச்சித்தம் செய்யமுடியாதவனுக்கு தந்தை, சகோதரன், பந்துக்களாலும் பிராயச்சித்தர்களை பிரித்து கொடுக்கப்பட வேண்டும். மற்ற ஜனங்களால் இருமடங்காக செய்யவேண்டும்.

505. சிறுவர்களாயினும், பெண், முதியோராக இருந்தாலும். வியாதியால் பீடிக்கப்பட்டிருப்பவராக இருந்தாலும் அவர்கள் சிவனிடம் பக்தி உள்ளவர்களாக இருந்தால் கால்பாகமாக பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

506. 11 வயதுக்கு குறைந்தவராக இருந்தாலும், ஐந்து (5) வயதுக்கு மேற்பட்டவராக இருந்தாலும் அவருக்கு சகோதரனோ, தந்தையோ, அல்லது, நண்பரோ, பிராயச்சித்தத்தை செய்யவேண்டும்.

507. ஆகையால் சிறுவனுக்கு குற்றம் கிடையாது. பாபமும் கிடையாது அரசாங்கத்தால் அவனுக்கு தண்டனையும் கிடையாது, பிராயச்சித்தமும் கிடையாது.

508. குறிப்பிடும் பொருள் (தேசம்) எவனால் கட்டளையிடப்படுகிறதோ அவன் தேசிகன் என கூறப்படுகிறான். தேசமும் பலவிதமாகும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதில் முக்திஸ்தானம் விசேஷமாகும்.

509. சரீரம் சுகானுபவஸ்தானமாகும் அவ்வாறே வேறு ஸ்தானங்கள், ஹ்ருதம்ய, கழுத்து, தாடை, இருபுருவங்களின் இடைவெளி பிரம்மரந்தரம் என்று வரிசையான ஸ்தானமாகும்.

510. நாபி, புருஷசின்னம், மூலாதாரஸ்தானம் தேசம் என்று கூறப்படுகிறது. ஒருமுறை ஸந்தியா லோபத்தில் மேற்பட்ட ஸத்யோஜாத மஹா மந்திரத்தை நூறு (100) தடவை ஜபிக்க வேண்டும்.

511. அறியாமையால் ஸந்த்யா லோபம் ஏற்பட்டால் ஒவ்வொரு ஸந்த்யாகாலத்திலும் ஸத்யோ ஜாத மந்திரம் ஜபிக்க வேண்டும். ஸந்த்யாலோபம் தெரிந்து செய்தாலும் ஒவ்வொரு தேவதார்ச்சனை லோபமா னாலும் உபவாஸம் அனுஷ்டிக்க வேண்டும்.

512. ஒரு காலம் மட்டும் பூஜை செய்பவராகிலும், ஒருதினத்திலும், இருகாலங்களிலும், பூஜை செய்பவர்க்கு அறியாமல் லோபம் ஏற்பட்டாலும் அகோரமந்திரத்தால் ஆயிரம் (1000) முறை ஜபம் செய்ய வேண்டும்.

513. மனமறிந்து பூஜை அனுஷ்டிக்கப்படாவிடில் உபவாஸம் அனுஷ்டிக்கவும், வெகுகாலமாக பூஜை செய்பவராக இருந்தாலும் இரண்டு காலங்கள் முதலான பூஜாலோபம் ஏற்பட்டால்

514. எவ்வளவு நாட்கள் பூஜை செய்யப்படவில்லையோ, அதற்கு ஏற்றவாறு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். இரண்டு நாட்கள் பூஜை முதலான பூஜைகள் லோபம் ஏற்பட்டால் ஆயிரம் (1000) தடவை அகோரமந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

515. பதினைந்து நாள் பூஜை இல்லாமல் இருந்தால் ஒவ்வொரு நாளும் 150 தடவை அகோர மந்திரத்தை ஜபிக்க வேண்டும். ஒருமாதம் பூஜா லோபம் ஏற்பட்டால் பத்தாயிரம் (10000) தடவை அகோர மந்திரத்தை ஜபிக்கவேண்டும்.

516. ஒரு வருடம் அதற்கு மேலும் தினத்தில் லோபமேற்பட்டால் தீøக்ஷயால் சுத்தி செய்வது விரும்பத்தக்கது, ஆத்மார்த்தலிங்கம், இடத்தை விட்டு நழுவியிருந்தாலும் அல்லது கண்ணுக்குத் தெரியாத இடத்தில் இருந்தாலும் அக்னியால் பாதிக்கப்பட்டிருந்தாலும் எதிரிகளால் அபஹரிக்கப்பட்டிருந்தாலும்

517. மனிதர், குரங்கு, காகம் முதலியவைகளால் தொடப்பட்டாலும், அகோரமந்திர ஜபம் செய்து வேறு லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அதனால் சுத்தி ஏற்படுவதில் சந்தேகமில்லை (சுத்தி ஏற்படும்)

518. கையிலிருந்து லிங்கம் விழுந்தாலும், ஒரங்குலம், இரண்டு அங்குலம் என்ற அதிகப்படியான கணக்கில் விழுந்தாலும் ஆயிரம் தடவை அகோர மந்திரம் ஜபத்தை அதிகமானதாக இருமடங்கு ஜபம் செய்யவேண்டும்.

519. பீடத்துடன் லிங்கம் விழுந்தால், ஒவ்வொரு தான அளவிற்குமாக (10000) பத்தாயிரம் முறை அகோர ஜபம் செய்ய வேண்டும். பீடம் இல்லாமல் இருந்தால் இருமடங்கு ஆசார்யனால் ஜபம் செய்து பீடம் தயாரிக்க வேண்டும்.

520. ஒரு கையளவு முதலோ அல்லது இரண்டு கையளவு உயரத்திலிருந்தோ லிங்கம் விழுந்தால் லக்ஷம் ஆவ்ருத்தி அகோரமந்திர ஜபம் செய்து, பஞ்சகவ்யத்தினாலும் பஞ்சாம்ருதத்தினாலும்

521. ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து, விசேஷமாக அர்ச்சனை செய்ய வேண்டும். உரிய அங்கமில்லாததாக இருந்தாலும் மேற்கூறியபடி செய்ய வேண்டும்.

522. இரண்டுமுழ கையளவுக்கு மேற்பட்ட உயரத்திலிருந்து விழுந்து சேதமடைந்தால் லக்ஷம் ஆவ்ருத்தி அகோர மந்திரம் ஜபம் செய்து, ஸம்ஸ்காரத்தினால் சுத்தப்படுத்தலாம். அல்லது லிங்கத்தை பிரதிஷ்டை செய்வது சாஸ்திர ஸம்மதமாகும்.

523. எதிர்பாரத வகையில் லிங்கம் பிண்டிகை ஆவுடையார் பீடம், உடைந்திருந்தால் முன்பு கூறிய பரிஹாரத்தை இருமடங்காக செய்ய வேண்டும். தெரிந்தபடியே லிங்கம் பீடம் உடைந்தால் பிராயச்சித்தமில்லை.

524. சிவதீøக்ஷ இல்லாத பிராம்மணர் முதலியவர்களால் லிங்கம் தொடப்பட்டாலும் நூறு ஸங்க்யை அதிகப்படுத்தி சிரமத்தை அனுசரித்து அகோர மந்திரத்தை ஜபம் செய்யவேண்டும்.

525. சிவலிங்கம் காலால் ஸ்பர்சிக்கப்பட்டால் அல்லது தாண்டப்பட்டாலும் (20000) இருபதாயிரம் தடவை அகோரஜபம் செய்ய வேண்டும். காலில் இருக்கும் புழுதி லிங்கத்தில் பட்டால் (10000) பத்தாயிரம் எண்ணிக்கை அகோர மந்திரஜபம் செய்ய வேண்டும்.

526. கபம் முதலிய அசுத்த பதார்த்தத்தால் லிங்கம் கெடுக்கப்பட்டிருந்தால் புண்யாஹம் செய்து தீர்த்த்தால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து (50000) ஐம்பதாயிரம் தடவை அகோரமந்திரஜபம் செய்ய வேண்டும்.

527. சிறுநீரால் லிங்கம் பாதிக்கப்பட்டால் (30000) முப்பதாயிரம் தடவை அகோரமந்திரம் ஜபம் செய்யவேண்டும். ரத்தம், சிறுநீர், ரஜஸ், சுக்லமிவைகளால் லிங்கம் தொடப்பட்டால் 50000 ஆவ்ருத்தி ஜபம் செய்ய வேண்டும்.

528. மேற்கூறிய அசுத்தத்துடன் கூடிய ஜலம் லிங்கத்தில் பட்டால், 1/4 பாகத்தை குறைத்து அதாவது, 37,500 தடவை அகோரஜபம் செய்ய வேண்டும். மலஸ்பர்சம் ஏற்பட்டால் லக்ஷம் ஆவ்ருத்தியும் விஷ்டை ஜலம் பட்டால் 75,000 தடவை அகோர மஹாமந்திர ஜபம் செய்ய வேண்டும்.

529. நிர்மால்யம் நிறைந்த பள்ளத்தில் லிங்கம் விழுந்து இருந்தால் முன்புபோல் 75,000 தடவை அகோர ஜபம் செய்யவேண்டும். விஷ்டை முதலானவை நிறைந்த குழியில் (பள்ளத்தில்) விழுந்திருந்தாலும் 1.05 லக்ஷம் ஆவ்ருத்தி அகோர மந்திரத்தை ஜபம் செய்யவேண்டும்.

530. (அனுலோம) கலப்பு இனத்தில் பிறந்தவனால் லிங்கம் தொடப்பட்டால் தாயார் வம்சத்தை அனுசரித்து பரிஹாரம் செய்ய வேண்டும். தாழ்ந்த ஜாதியினரால் ஸ்பர்சம் ஏற்பட்டால் லக்ஷம் ஆவ்ருத்தி அகோர மஹாமந்திரத்தை ஜபம் செய்யவேண்டும்.

531. வாமாசாரம், தக்ஷிணாசாரம் என்ற மரபு வழிகளில் பிறந்தவர்களால் லிங்கம் தொடப்பட்டால் பத்தாயிரம் தடவை ஜபமாகும். சண்டாளன், வியாபாரி, முதலியவர்களால் தொடப்பட்டால் கத்திக்காக பிரதிஷ்டை செய்யவேண்டும். அகோரஜபமும் செய்ய வேண்டும்.

532. அந்த தொடப்பட்ட குற்றம் நீங்குவதற்கு ஸ்திரமான லிங்கத்தை எடுத்து, அதையே ஸ்தாபித்து லிங்கம் விழுந்ததால் ஏற்பட்ட அசுத்தத்தை நீக்கி லக்ஷம் அகோரஜபமும் நித்ய ஹோமம், இல்லாமல் இருந்தால் நித்யம் செய்வது போல் ஹோமம் செய்து பரிஹாரம் செய்ய வேண்டும்.

533. அஷ்டமி, சதுர்தசி, பவுர்ணமி, அமாவாஸ்யை, உத்தராயணம், தக்ஷிணாயனம், விஷுவ புண்யகாலம், கிரஹணம் ஆகிய இவைகளில் நித்ய ஹோமம் இல்லாமல், இருந்தால் நான்குமடங்கு அதிகப்படியாக ஹோமம் செய்ய வேண்டும்.

534. மற்ற புண்யதினங்களில் இப்படியே நித்ய ஹோமத்திற்கு குண்டத்திலுள்ள அக்னி அணைவது போன்ற லோபம் ஏற்பட்டால் நான்கு மடங்காக மேற்கூறிய பிராயச்சித்த ஹோமத்தை செய்ய வேண்டும்.

535. சிவபெருமானுக்கு பலி இல்லாமல் இருந்தால் 108 சிவ காயத்ரீ ஜபிக்க வேண்டும். விரத நியமலோபம் ஏற்பட்டாலும் மற்ற பூஜாக்ரியைகளில் லோபம் நடந்திருந்தாலும்

536. 108 காயத்ரீயால் பூஜா கார்யங்கள் சுத்தமாகிறது. ஆஷாடம் என்ற ஆடிமுதல் கார்த்திகை முடிய ஐந்து மாதங்களில் பவித்ரோத்ஸவம் செய்யாமல் இருந்தால்

537. அகோரமந்திரத்தினால் மூன்று லக்ஷம் ஜபித்து சாந்திராயண விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். பவித்ரோத்ஸவம் இல்லாமல் இருந்தாலும் மூன்று லக்ஷம் அகோரமந்திரத்தை ஜபித்து பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

538. அதே பவித்ரோத்ஸவம் வேறு மாதங்களில் செய்யப்பட்டால் லக்ஷம் ஆவ்ருத்தி அகோரமந்திர ஜபம் செய்ய வேண்டும். ஆனால் சாந்திராயண விரதம் அனுஷ்டிக்கத் தேவையில்லை.

539. அர்க்ய பாத்ரம் சுத்தி செய்யப்படாமல் இருந்தால் 200 ஆவ்ருத்தி அகோரமந்திர ஜபமும் அர்க்ய பாத்ரம் கெட்டுபோனால் ஆயிரம் ஆவ்ருத்தியும், இல்லாமலேயே இருந்தால் 500 ஆவ்ருத்தியும் அகோரஜபம் செய்ய வேண்டும்.

540. ருத்ராக்ஷ மாலை அறுந்தால் முன்பு லிங்கத்திற்காக கூறிய ஜபம் 1/4 பாகம் அதாவது 100 தடவை அகோர மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். புதிய நூல் அறுந்து போனால் 1000 தடவை ஜபம் செய்ய வேண்டும்.

541. பழுதடைந்த நூலானால் 100 தடவையும், கையிலிருந்து மாலை கீழே விழுந்தாலும், 100 தடவை அகோரமந்திரத்தையும் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்த ருத்ராக்ஷமாலையை சந்தனக் குழம்பால் அலம்ப வேண்டும்.

542. நூறு சிவகாயத்ரீ மந்திரஜபமும் தோஷத்தை நிவிருத்தி செய்யும். பூஜாமணிசரியாக ஒலிக்காமல் இருந்தால் லிங்கத்திற்கு சொல்லப்பட்ட பிராயச்சித்தத்தில் 8ல் ஓர் பாகம் செய்வதால் சுத்தி ஏற்படும்.

543. பூஜா ஸாதனங்கள் ஸ்வாமிபீடம் முதலியவை தன்னையறியாமல் கால்களால் தொடப்பட்டிருந்தால் 200 தடவையும், தெரிந்து தொடப்பட்டிருந்தால் 1000 தடவையும் அகோரமந்திர ஜபம் செய்யவேண்டும்.

544. பகவானுக்கு தூபம் காட்டும் பொழுது அந்த தூபத்தில் ஜந்துக்களின் அவயவம் தவறுதலாக இருந்தால் ஸத்யோஜாத மந்திரத்தை 100 தடவையும் கேசம், மாமிசம், எலும்பு, புழுபூச்சி இவைகளால் தோஷமடைந்து தென்பட்ட நைவேத்யம்.

545. தெரிந்தவாறு செய்தால் 10,000 தடவையும் அறியாமல் செய்து இருந்தால் 100 தடவையும் அகோர ஜபம் செய்ய வேண்டும். நித்யம் தயாராகும் நைவேத்யத்தின் அளவு குறைந்தாலும் உற்சவகால நிவேத்ய அளவு குறைந்தாலும் செய்ய வேண்டும்.

546. 10,000 தடவை அகோரமந்திர ஜபத்தைச் செய்து நைவேத்ய அளவு குறைவால் ஏற்பட்ட தோஷத்தை போக்கவேண்டும். ஆசார்யனையும் பகவானையும் சிவாகம கிரந்தத்தையும் அறியாமல் காலால் தொடப்பட்டால்.

547. 20,000 தடவை அகோரமந்திரத்தையும் அறிந்தபடியே மேற்கூறியவைகளை செய்தால் 1,20,000 தடவை அகோரமந்திரஜபத்தையும் பரமேச்வரன், குரு, சண்டிகேச்வரர் ஆகியோருடைய உத்தரவை மீறினால் லக்ஷம் ஜபமும் செய்ய வேண்டும்.

548. சிவன்குரு சண்டிகேஸ்வரர் ஆகியோருடைய பூஜைக்காக சேகரிக்கப்பட்ட பொருளை சாப்பிட்டால் 75,000 தடவையும் அறியாமையால் நிர்மால்யத்தை சாப்பிட்டால் 10,000 தடவையும் அகோரமந்திரஜபம் செய்யவேண்டும்.

549. பூஜா திரவியங்களை தானம் செய்தால், சாப்பிட்டதின் பிராயச்சித்தத்திற்கு சமமான பிராயச்சித்தமாகும். மேற்கூறிய திரவ்யங்களை பார்த்தாலும் பாதிபாகம் பிராயச்சித்தம் அனுஷ்டிக்கவும், அல்லது மனப்பூர்வமின்றி பூஜாதிரவ்யங்களை சாப்பிட்டால் ஸத்யோஜாதாதி பஞ்சமந்திரங்களையும்.

550. 1000 தடவையோ அல்லது 1500 தடவையோ ஜபிக்க வேண்டும். தெரிந்தபடியே புசித்தால் தீøக்ஷயால் சுத்தமாக ஆகிறான். நிர்மால்யத்தைத் தாண்டினால் 5000 முறை அகோரமந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

551. நிர்மால்யத்தை விலைக்கு கொடுத்தல், ஸ்பர்சித்தல் இவைகளுக்கு மற்ற புசித்ததின் பிராயச்சித்த சமமாகும். ஒரே விதமாக மேல் கூறிய பரிகாரம் ஆகும். தேவதைகளின் சொத்து, தேவதைகளின் பொருள், நிவேதனம் செய்தது நிவேதனம் செய்வதற்காக வைத்துள்ள பொருள்

552. சண்டிகேச்வரருடைய திரவியம், ஸ்வாமிக்கு ஸமர்ப்பித்தது என்று நிர்மால்யம் ஆறுவிதமாகக் கூறப்பட்டுள்ளது. கிராமம் முதலியவை பகவானுக்கு தேவஸ்வம் பகவானுக்கு வஸ்திரம் முதலியவை தேவ திரவியம்.

553. ஸ்வாமிக்கு நிவேதனத்திற்காக தயார் செய்தது தேவோச்சிஷ்டம், நைவேத்யம் செய்யப்பட்டது என்று ஆறுவகையாகும். சுவாமிக்கு பூஜித்து சண்டிகேச்வரருக்காக வைக்கப்பட்டது சண்டிகேசருடைய திரவியம் வெளியில் எறியப்பட்ட பொருள் நிர்மால்யம் எனப்படும்.

554. பலிபீடத்தில் உள்ள அன்னத்தையும் ஸ்வாமியிடம் விஸர்ஜனம் செய்ததும் ஆவுடையாரில் இருப்பவைகள் நிர்மால்யம். நிர்மால்யதானம் செய்தால் ராக்ஷஸனாக பிறப்பான். அதை சாப்பிட்டால் யானையாகப் பிறப்பான்.

555. நிர்மால்யத்தைத் தாண்டினால் மந்திர ஸித்தி முதலியவற்றின் குறைவும் நிர்மால்யத்தை விற்றால் வேடனாகவும் பிறப்பான். நிர்மால்யத்தை தொட்டால் பெண்ணாகும் தன்மை ஏற்படும். இவ்வாறு நிர்மால்யத்தின் ஸந்தேஹமில்லாத தோஷ பலன் கூறப்பட்டுள்ளது.

556. எந்தப் பொருள் நிர்மால்யத்தால் ஸ்பர்சிக்கப்பட்டதோ அதை மனிதன் புசித்தாலும் நிர்மால்ய ஸ்பர்சம், தாண்டுதல், சாப்பிடுதல் ஆகியவைகளால் ஏற்பட்ட தோஷம் நீங்க முன் சொன்ன பரிஹாரத்தில் 3/4 பங்கு செய்யவும் (7500 தடவை)

557. பக்ஷணம் இரு (2)விதமாகும். பகவானுக்கு நிவேதனம் செய்யாமல் இருப்பதும் மற்றது நைவேத்யம் செய்யப்பட்டதும் ஆகும். ஸ்வாமிக்கு சொந்தமான கிராமத்தில் உற்பத்தியாகும்.

558. தான்யம் (நெல் முதலியவை) களை ஏதோ ஒரு காரணத்தினாலோ, ஸ்வீகரித்துக் கொள்ளுகிறானோ அதுவும் நிவேத்யத்தை சாப்பிடுவதற்கு ஒப்பானதாகும். அந்த மூடன் சிவனுடைய சொத்தைத் திருடுபவன் ஆகிறான்.

559. பகவானுக்காக தயாரிக்கப்பட்ட அரிசியையோ அல்லது அன்னத்தையோ எவன் சாப்பிடுகிறானோ அல்லது வேறு யாருக்காவது கொடுக்கிறானோ அவனும் திருடன் என கூறப்பட்டுள்ளது.

560. எனக்கு நிவேதனம் செய்யப்பட்டதை புசித்த பாபத்தை விட அதிகமான தோஷத்தைக் கொடுக்கக் கூடியதாகும். அதனால் அவர்கள் நான்கு வேதங்கள் அத்யயனம் செய்திருந்தாலும் அந்த வேதங்கள் அனைத்தும் மறந்து போகும்.

561. சிவபெருமானுக்கு நைவேத்யத்தை தயாரித்து அதை பகவானுக்கு அர்பணித்து விட்டு ஒவ்வொரு நாளும் நிவேதன சேஷத்தை பக்தியுடன் புஜிக்கிறானோ

562. அவன் எனக்கு (சிவபெருமானுக்கு) ஸமமானவனாகவும் ஆகிறான். யக்ஞ சேஷமான ஹவிஸை சாப்பிட்டவனும் எனக்கு சமமானவனாக ஆகிறான். சிவசேஷத்தையும் எவன் பேராசையால் சாப்பிடுகிறானோ

563. அவன் பாபீ, துஷ் புத்தியுள்ளவன். முன்பு கூறிய முறைப்படி நல்ல பலனல்ல எனப்படுகிறது. சுத்தமான மனதுள்ள பிராம்மணன் இது பரிசுத்தமானது என்று சிவசேஷத்தையும் சண்டசேஷத்தையும்

564. சந்தேஹம் இல்லாமல் பக்தியுடன் சாப்பிடுகிறானோ அவனுக்கு பாபம் சீக்கிரம் விலகுகிறது. நல்ல மனது இல்லாதவனும் ஆசாரம் இல்லாதவனுமான மனிதன் பரிசுத்தமான சிவசேஷத்தை அறியாமையால்

565. சாப்பிடுவானானால் விஷம் (பாதரஸம்) சாப்பிட்டவன் போல் அவன் இறந்து போவான். சிவஸ்வரூபத்தை தரித்திருப்பவர்களும் சிவனையே கதியாக உடையவர்களும்

566. சிவனையே சரணமாகக் கொண்ட ஆசார்யர்கள் விஷயத்தில் நைவேத்ய பக்ஷணம் உசிதமாகும். மற்றவர் விஷயத்தில் இல்லை. ஆகையால் என் நிர்மால்யத்தை புசித்தால் பிராயச்சித்தம் அனுஷ்டிக்க வேண்டும்.

567. ஆகையால் நான்கு வர்ணத்தவரான ஆசார்யர்களுக்கு சிவநிர்மால்ய பக்ஷணம் செய்தால் பிராயச்சித்தத்தை செய்ய வேண்டும். அந்த பிராயச்சித்தத்தை சொல்ல இருக்கிறேன் கேளுங்கள்.

568. மவுனமாக இருத்தல், மூன்று வேளை ஸ்நானம், சிவாக்னி குரு ஆகியோரை பூஜித்தல் கோமயத்தால் மெழுகப்பட்ட பிரதேசத்தில் அமர்ந்து பத்தாயிரம் (10,000) தடவை அகோர மந்திரத்தை ஜபம் செய்து

569. பஞ்சகவ்யத்தை உபயோகித்து ஹவிஸ்ஸையும் புசித்து பல்துலக்குதல் செய்யவும். பாபம் நீங்குவதற்கு ஒவ்வொரு நாள் இரவும் இந்த விரதத்தை செய்ய வேண்டும்.

570. அக்னிகார்யம் இல்லாவிடினும் அகோர மந்திரஜபம் மட்டுமாவது செய்ய வேண்டும். இதற்கு விரதம் என்று பெயர். இது பத்து மடங்கு பெரியதானால் அனுவிரதம் என்று பெயர்.

571. உபவிரதம் என்றும் பெயர் உண்டு. இதைவிட பத்துமடங்கு பெரியது மஹாவிரதம் எனப்படும். மஹாபாபம் செய்தவர்களுக்கு சிவாகமத்தில் மஹாவிரதம் கூறப்பட்டுள்ளது.

572. ஸாதாரண பாபிகளுக்கு அனுவிரதம் முதலியவை கூறப்பட்டது. பிரம்மஹத்தி (பிராம்ஹணவதம்)கள் குடித்தல், திருடுதல், குருபத்னீகமனம்

573. இவைகள் நான்கும் மஹாபாபங்கள், அந்த நான்கு பாபம் செய்தவனுடன் ஸஹவாசம் செய்பவனும் ஐந்தாவது மஹாபாபியாகிறான். வேண்டுமென்றே பாபங்களை செய்தவனுக்கு மஹாவிரதம் அனுஷ்டிக்க வேண்டும். அறியாமையால் பாபம் செய்தவர்களுக்கு முன் கூறிய பரிஹாரத்தில் பாதி போதுமானது.

574. க்ஷத்திரியனை ஒருவன் கொன்றால் பிரும்மஹத்தி தோஷத்தில் 1/4 பாகம் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். வைச்ய வதத்தில் முன் கூறியதில் பாதி சூத்ரவதத்தில் அதிலும் பாதி

575. அனுலோம ஜாதி வதத்தில் அவர்கள் தாய்வழியில் கூறிய பரிஹாரம். மறைவாக பிறந்தவர் விஷயத்தில் முன்கூறியதில் பாதி. நீச ஜாதியில் பிறந்தவர் விஷயத்தில் அதிலும் பாதி.

576. சிவதீøக்ஷ உடையவர்கள் விஷயத்தில் எல்லாவற்றிலும் இருமடங்கு பரிஹாரம். ஆசார்யபிஷேகம் செய்து கொண்டவரை வதம் செய்தால் தீக்ஷிதருக்கு கூறப்பட்ட பரிஹாரம் செய்ய வேண்டும்.

577. பலாப்பழம், திராøக்ஷ, தேன், பேரீச்சை, வெல்லம், கரும்பு, பனங்கற்கண்டு இளநீர், கள் இவைகள் திராøக்ஷ, கண்டங்கத்தரிக்காய், முள் உள்ளவை.

578. ஆகிய 11 போதைப்பொருட்கள் ஸாமான்ய போதை பொருள்களாகும். 12வது கள் இது எல்லாவற்றையும் விட தாழ்ந்தது இந்தக்கள்ளை பிராம்மணன் சாப்பிட்டால் பிராயச்சித்தமாக

579. மாவு மயமான கள்ளைக் குடித்து மஹா விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். பிராம்மணன் தவறுதலாக முன் கூறிய 11 போதை பொருட்களால் ஆன ஸுரையை பானம் செய்தால் முன் கூறிய பரிஹாரத்தில் 10ல் ஒரு பாகம் பரிஹாரம் செய்ய வேண்டும்.

580. மாவுமயமான ஸுரைக்கள்ளைக் குடித்து பசுவின் சிறுநீர், பார்லி இவைகளை ஆகாரமாகக் கொண்டு பத்துநாட்களில் தூய்மையை அடைகிறான்.

581. இரண்டு தடவை இந்தபிரயோகத்தை செய்தால் தினங்கள் அதிகமாக விசேஷமாக கூறப்பட்டுள்ளது. க்ஷத்திரியர்கள் முதலான அனைவருக்கும் முன்பு கூறிய பரிஹாரம் பொருந்தும்.

582. நூற்றுக்கு மேற்பட்ட தங்கத்தை அபஹரித்தவனை கொல்வதே க்ஷத்திரியர் முதலானவர் விஷயத்தில் கூறப்பட்டுள்ளது. பிராம்ஹணர்களுக்கு கொல்வது கூறப்படவில்லை.

583. நிஷ்கம் (வராகன்) தங்கம் திருடினால் 10000 ஆவ்ருத்தி ஜபம். 5 நிஷ்கம் திருடினால் லக்ஷம் தடவை ஜபம். 10 நிஷ்கம் திருடினால் 10 லக்ஷம் ஜபம். அதற்கு மேற்பட்டு திருடினால் 10 மடங்கு அதிகமானதான

584. கோடி மந்தரஜபமும் ப்ராம்மணன் திருடும் விஷயத்தில் கூறப்பட்டுள்ளது. க்ஷத்ரியாதி வர்ணத்தவர்கள் ஸ்வர்ணத்தை திருடினால் 100,50,25 என்ற முறைப்படி குறைவான எண்ணிக்கையில் அகோர ஜபம் செய்ய வேண்டும்.

585. வெள்ளியை திருடினால் தான்யத்தை திருடின பரிஹாரத்தின் இருமடங்கு பரிஹாரம் செய்ய வேண்டும். தங்கம் வெள்ளி தான்யம் இவைகளை 111 தடவை அகோர ஜபம் செய்ய வேண்டும்.

586. திருடின ஏழைக்கு உகந்தவாறு இருமடங்கு அதிகமாக அகோர மந்திர ஜபம் செய்ய வேண்டும். குருதார கமனம் செய்யாமல் அன்ஸயஸ்தீரீ ஸங்கமத்தில் இந்த பாபம் கிடையாது.

587. ஹோமம் நடத்திக் கொடுப்பது (விவாஹம்) வேதாத்யயனம், சேர்ந்து புஜித்தல், ஆகியவைகளை பாபிகளுடன் செய்பவனும் பாபியாகிறான்.

588. ஒரு வருஷம் அல்லது அதற்கு பிற்பட்டதாக இருந்தால் பாதியோ, அல்லது கால்பங்கோ பரிஹாரம் செய்யலாம். அனுபாதம் என்ற பாபத்தின் சுத்திக்காக அனுவிரதம் கூறப்பட்டுள்ளது.

589. தாயின் சகோதரி, தன் சகோதரி, தன் மகள், தந்தையின் சகோதரியான அத்தை, ஆகிய இந்த நால்வருடன் யோநி ஸம்பந்தம் வைத்திருந்தால் அனுபாதகம் என்று கூறப்படுகிறது.

590. பிராம்மண ஸ்தீரிகமனம், பந்து ஸ்த்ரீ கமனம், தன்னை அண்டியிருப்பவனை வதம் செய்தல், சண்டாளன், வியாபாரி, வண்ணான் ஏனையோருடைய சாப்பிட்ட மீதத்தை புசித்தால் அனுபாதகம் எனப்படும்.

591. லிங்கம், ஆவுடையார், மூர்த்தம் ஆகியவைகளை கைகளால் வெறுப்பினால் அசைந்து பிடுங்கினால் அது பாதகம் என்ற பாபத்தை விட அதிகமானதாகும்.

592. அரசாங்க பீதி, சோர (திருட்டு) பயகாலத்தில் அதை செய்து கெட்ட இடத்தில், மூழ்கி னாலும் அதை போக்குவதற்கு அதை பெயர்த்தெடுத்து வெகு தூரத்தில் அவற்றை பிரதிஷ்டை செய்து

593. விதிப்படி ஸ்தாபித்து அகோரமஹாமந்திரத்தை லக்ஷம் ஆவ்ருத்தி ஜபித்து சுத்தனாகிறான். கோயில் நிலத்தை ஆக்ரமித்து அபஹரித்தல், ஸ்வாமிக்கு உபயோகப்படும் பூஜா ஸாதனங்கள் திருடுதல்,

594. சிவாகம புஸ்தகத்தை திருடுதல், சிவலிங்கத்தை அபஹரித்தல் இவைகளை செய்த சைவம் முதலிய நான்கு வர்ணத்தவர்களுக்கு தடியால் அடிப்பது தண்டனையாகும்.

595. உபபாதகம் என்ற குற்றத்தை போக்க உபவ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். சித்தப்பாவின் தோழி, சிஷ்ய, ஸ்த்ரீ, மருமகள், அடைக்கலம் புகுந்தவள்,

596. அரசி, அரசரால் தேசத்தை விட்டு வெளியேற்றப்பட்டவள், காப்பவள், உயர்ந்த ஜாதி பதிவ்ரதை, ஸமான கோத்ரமுள்ளவள், மாமனின் மனைவி, ஸமான ரிஷிப்ரவரமுள்ளவள்.

597. ஆகியோரின் சேர்க்கை உபபாதகம் எனக் கூறப்படுகிறது. அண்ணனுக்கு கல்யாணம் ஆகாமல் இருக்கையில் கல்யாணம் செய்து கொண்ட தம்பி அவர்களுடைய சந்ததியிடம் யாசகம் செய்வதும்

598. அவர்களுக்கு கன்யகாதானம் செய்வதும், சிவாக்னி, சிவாகமம் ஆகியவைகளை நிந்திப்பதும், குருவுக்குப் பிரதிகூலமாக இருப்பதும் ஒருவர் ரஹஸ்யமாக வைத்திருக்கும்பொருளை கைப்பற்றிக் கொள்வதும்

599. தந்தை, தாய், குரு ஆகியோரைக் கைவிடுதலும், பொய்யான ஸாக்ஷியத்தில் ஸத்யம் செய்தலும், கோழிச் சொல்லுதல், தள்ளப்பட்டவன் அவனுடன் சேர்தலும் சேராமல் இருப்பதும்

600. பூமி, வீடு, ரத்னம், கிணறு (குட்டை) மரங்கள் இவைகளை கைப்பற்றுவதும் குளம், கிணறு, ஏரி முதலியவைகளை அபஹரிப்பதும் உபபாதகம் எனக் கூறப்படும்.

படலம் :தொடரும்

கருத்துகள் இல்லை: