புதன், 25 செப்டம்பர், 2024

45. ஸ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று ...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

45. ஸ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று

நாற்பத்தி ஐந்தாவது ஆச்சார்யர் [கி.பி. 1040 - 1061]

ஸ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று, "சிவ சம்பு பண்டிதர்" என்பவருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ''ஸ்ரீகண்டர்''.

இவர் காவிரி உற்பத்தி ஆகும் சஹ்யமலைத் தொடரிலுள்ள ஒரு குகையில் நீண்ட காலம் கடும் தவமிருந்தார். ''சோம தேவர்'' என்ற ஒரே ஒரு சிஷ்யரை மட்டும் தன்னுடன் இருக்க சம்மதித்தார். "சோமதேவர்" என்பர் தான் கடைசி வரை உடன் இருந்து இந்த ஆச்சார்யருக்கு கைங்கர்யம் செய்து வந்துள்ளார். இந்த ஒருவருக்கு மட்டும் எப்பேர்ப்பட்ட பாக்கியம் கிடைத்துள்ளது. அப்படி என்றால் அவரும் ஒரு மஹானாக தான் இருந்திருக்க வேண்டும்... த


னக்கு இறுதிக் காலம் நெருங்குவதை உணர்ந்த ஸ்வாமி ஸ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் காஞ்சிக்கு வந்து சித்தி அடைந்தார்.

இவர் கி.பி. 1061 ஆம் ஆண்டு, சர்வதாரி வருடம், ஐப்பசி மாதம், வளர்பிறை, சப்தமி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 21 ஆண்டுகள் காஞ்சி பீடத்தை அலங்கரித்துள்ளார். 


கருத்துகள் இல்லை: