புதன், 9 அக்டோபர், 2024

படலம் 45: விக்னேச்வர பிரதிஷ்டா முறை...

படலம் 45: விக்னேச்வர பிரதிஷ்டா முறை...

45 வது படலத்தில் மஹா கணபதி பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. முதலில் அமைப்பு முறை முதற்கொண்டு விக்னேச ஸ்தாபனம் கூறுகிறேன் என்று பிரதிக்ஞை, பிறகு சிவாலயம் நிழல் தரும் விருக்ஷ பிரதேசங்களில், மற்ற இடங்களிலும் விக்னேஸ்வரரை ஸ்தாபனம் செய்ய உரிய இடமாக நிரூபிக்கப்படுகிறது. பிறகு விக்னேச ஆலயம் அமைக்கும் முறை அங்கு திக்தேவதை மூர்த்தி அமைக்கும் முறை பலவிதமாக கூறப்படுகிறது. பிறகு சுற்றிலும் பரிவாரம் அமைக்க வேண்டும் என கூறி விஸ்வரூபர் முதலான 8 மூர்த்தீஸ்வரர்களின் பெயர்களை கூறி அந்த மூர்த்தீஸ்வரர் களையோ இந்திராதி திக்குகளை அதிஷ்டித்த 8 பீடங்களையோ அமைக்கவும் என பரிவாரம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. வாயில் படியின் முன்பாக மூஷிகம், அவ்வாறே விகடன் பீமன் என்கிற துவார பாலகர்கள் ஈசான திக்கில் நிர்மால்யதாரியாகிய கும்போதரனையும் அமைக்கவும் என்று பரிவார விதி கூறப்படுகிறது. பிறகு விக்னேஸ்வரரின் மூர்த்திபர்கள் ஆமோதன் முதலான 8 மூர்த்திகளும் ஹஸ்தி வக்த்ரன் முதலான 8 மூர்த்திகளும் பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். பின்பு பூதரூபமான துவார பாலகர்கள், மூஷிகம், நிர்மால்யதாரி கும்போதரன், பரிவாரதேவதைகள், இவர்களின் லக்ஷணம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பலிபீடம், மஹாபீடம் இவை இரண்டும் முன்பு போல் அமைக்க வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறாக பரிவாரத்துடன் கூடிய வினாயகர் ஆலயம் அமைக்கும் முறை கூறப்பட்டுள்ளது. பிறகு சிலை, கற்சிலை முதலியவான திரவ்யங்களால் ஐந்து தாளம் என்ற அளவு முறையால் விக்னேச பிம்பம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. இங்கு கர்ப்பக்கிரஹ அளவால் பிம்ப அளவை நிரூபித்து, தூண் வாயிற்படி அளவாலும், லிங்க அளவாலுமோ பிம்பம் செய்யலாம் என கூறப்படுகிறது. பிறகு சிரஸ் முதல் பாதம் வரை சரீர அளவு வர்ணிக்கப்படுகிறது. பிறகு விக்னேஸ்வர மூர்த்தி அமைப்பு கூறப்படுகிறது. இங்கு விக்னேசன் நான்கு கை மூன்று கண் அல்லது இரண்டு கண், நின்ற கோலமோ அமர்ந்த கோலமாகவோ செய்யவேண்டும் என்று கூறி நான்கு கைகளிலும் ஸ்தாபிக்க வேண்டிய வஸ்து விஷயத்தில் ஆயுதம் முறை இரண்டு விதமாக கூறப்படுகிறது.

வினாயகர் மட்டுமோ அல்லது சக்தியுடன் கூடியதாகவோ இருக்கலாம் என்று கூறி இரண்டு சக்தியை உடையதும் ஒரு சக்தியை உடையதுமான விநாயகரை அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டா முறை கூறப்படுகிறது. முதலில் வினாயகர் மட்டும் சக்தியோடு கூடிய வினாயகரை உடையதும் ஆன மூலமந்திரம் வர்ணிக்கப்படுகிறது. பிறகு கணேஸ்வரி முத்திரை, மூலமுத்திரை இவைகளின் லக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு முன்பு கூறப்பட்ட காலத்தில் அங்குரார்ப்பணம் முன்னதாக ரத்னநியாஸவிதி நயனோ மீலன விதியும் கூறப்படுகிறது. நயனோன்மீலன விதியில் தேவியுடன் கூடிய வினாயகர் இருந்தால் அந்த தேவிக்கும் நயனோனந் மீலனம் செய்ய வேண்டும். பிறகு பிம்ப சுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதிவாசம் ஜலாதி வாசத்தில் பிரதான கும்பத்தை சுற்றிலும் திக்பாலகர்களை அதிஷ்டித்த 8 கும்பங்களை வைக்கவும் என ஜலாதி வாச முறை கூறப்பட்டுள்ளது. பிறகு யாகத்திற்காக வேதிகை, குண்டம் இவைகளுடன் கூடிய மண்டபம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. பின்பு சில்பியை திருப்தி செய்து பிராம்மண போஜனம் புண்யாஹப்ரோக்ஷணம் செய்து வாஸ்துஹோமம், பூ, பரிக்கிரஹ கர்மாக்களை செய்து ஜலத்திலிருந்து வினாயகரை மண்டபத்திற்கு அழைத்து சென்று ஸ்நான வேதியில் வைத்து ஸ்நபநம் செய்து, ரக்ஷõபந்தனம் செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலத்திற்கு மேல் அண்டஜம் முதலான ஐந்து சயனங்களால் சயனம் கல்பித்து, அந்த சயனத்தில் வினாயகரை அதிவாசம் செய்யவும். இவ்வாறு சயனாதிவாசம் கூறப்படுகிறது. பிறகு சிகப்பு வஸ்திரத்தால் மூடி வினாயகரின் தலை பாகத்தில் வஸ்த்ர கூர்ச்சத்துடன் கூடியதாக கும்ப ஸ்தாபிக்கவும். கும்பத்தை சுற்றி 8 கடங்கள் ஸ்தாபிக்கவும் கும்பத்தில் மஹா கணபதியையும் அதை சுற்றிலும் இருக்கிற 8 கும்பங்களில் 8 மூர்த்திபர்களையோ பூஜிக்கவும். முன்பு கூறிய முறைப்படி தியானத்துடன் கந்தம், புஷ்பம், நைவேத்தியம் இவைகளால் பூஜிக்கவும் என்று கும்ப அதிவாசமுறை கூறப்படுகிறது. இங்கு இரண்டு அம்பாளுடன் கூடியிருந்தால் விக்னேஸ்வரனின் இரண்டு பக்கத்திலும் இரண்டு வர்த்தனி கும்பம் வைத்து ஒரு அம்பாளுடன் கூடி இருந்தால் வடக்கு பாகத்தில் ஒரு வர்தனி வைத்து பூஜிக்கவும் என்று கூறப்படுகிறது.

பிறகு தத்வதத்வேஸ்வர, மூர்த்தி, மூர்த்தீஸ்வர நியாஸ முறை அதன் பூஜை முறையையும் கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி ஹோமகர்மாவை செய்யவும் என்று ஹோம முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு காலையில் சுத்தமாக உள்ள ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி கும்பம் அக்னி இவைகளை பூஜித்து வினாயகரை எடுத்து ஆலயத்திற்குள் நுழைந்த மானுஷ தைவிக பிம்ப விஷயத்தில் ரத்ன அவுஷதி இவைகளால் நிரம்பிய பிரம்ம சிலையை வைத்து, அந்த சிலைக்கு மேல் வினாயகரை ஸ்தாபனம் செய்யவும். முகூர்த்த லக்னத்தில் மந்திரநியாசம் செய்யவும், சலபிம்பத்தை ஸ்நாநவேதிகையில் வைத்து மந்திர நியாசம் செய்யவும். பிறகு அந்தந்த தேசத்தில் அபிஷேகம் செய்யவும், தத்வதத்வேஸ்வர மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாசம் செய்யவும். பிறகு ஸ்நானம் நைவேத்தியம் உத்ஸவம் ஆகியவைகளும் செய்யவும். இவ்வாறு பிரதிஷ்டாவிதி கூறப்பட்டது. பிறகு இங்கு பாரதி என்று தேவியுட கூடிய கணேச விஷயத்தில், அவ்வாறு ஏகசக்தி உள்ள கணேசஸ்தாபன விஷயத்திலும் செய்ய வேண்டி விசேஷ முறை கூறப்பட்டு விக்னேஸ்வர ஸ்தாபன பலனை கூறுகிறார். பிறகு நித்யார்ச்சனை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு நித்திய அனுஷ்டானமுடைய ஆசார்யனுக்கு துவார பூஜை துவார பாலார்சனை முன்னதாக நுழைவு முறை முதலில் கூறப்படுகிறது. பிறகு துவார பால விஷயத்தில் விகடபீமனையோ ஸ்வாமிக்கு சொல்லப்பட்ட துவாரபாலார்ச்சனையோ செய்யவும் என விசேஷ பூஜா முறை கூறப்படுகிறது. பிறகு பூதசுத்தி செய்யும் முறை வர்ணிக்கப்படுகிறது. பிற பூஜா விஷயத்தில் ஏகத்ரிம்சத்கலந்யாஸம் செய்யவும். பிறகு அந்தர்யாகம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஸ்தான சுத்தி, திரவ்ய சுத்தி, மந்திரசுத்தி முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு பிம்ப சுத்தி முறை கூறப்படுகிறது. நிர்மால்யமான பூஜா திரவ்யங்களை நிர்மால்ய தாரியான குண்பசண்டரிடம் கொடுக்கவும் அல்லது தள்ளுபடி செய்யவும். பிறகு கணேசகாயத்ரி மந்திரம் சந்தர்ப முறையாக கூறப்படுகிறது. உலோகம், சித்திரம், முதலிய பிம்ப விஷயத்தில் சுத்தி செய்யும் முறை விசேஷமாக கூறப்படுகிறது. ஆசனம் அமைப்பது மூர்த்தி பூஜை செய்யும் முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஆவாஹனம் முதலிய மற்ற ஸம்ஸ்கார முறையையும் தூபதீப நைவேத்தியம் வரையிலான பூஜை முறையும் வர்ணிக்கப்படுகிறது.

இந்த பூஜாவிதியில் சந்தனம் முதலான திரவ்யங்களின் அளவு பஸ்ச்சிமதுவார அர்ச்சனையில் கூறப்பட்டபடி கிரஹித்து கொள்ளவும் என கூறப்படுகிறது. பிறகு ஆவரண பூஜை முறை கூறப்படுகிறது. முதலில் பிரதமாவரணத்தில் ஆக்னேயம் நைருதி வாயு ஈசானம் இந்த திக்குகளில் கிழக்கு முதலான திக்குகளிலும் ஈசானாதிகளையும் ஹ்ருதயாதி மந்திரங்களையும் அதற்கு வெளியில் நான்கு ஆவரணங்களிலும் முறையாக ஹஸ்த்திவக்திரன் முதலான 8 மூர்த்திபர்கள் ஆமோதன் முதலானவர்கள் 8 திக்பாலர்கள் அஸ்திரங்கள் இவைகளை பூஜிக்கவும் என கூறப்படுகிறது. ஒன்று இரண்டு மூன்று ஆவரணங்களாலோ பூஜிக்கலாம் என்று கூறப்படுகிறது. பிறகு மறுபடியும் பாட்டுக்களுடன் கூடியதும் நைவேத்ய பலிஹோமத்துடனும் முறைப்படி செய்யலாம் என்று கிரியைகளின் வரிசையை குறிப்பிட்டு ஹோமம விதி சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு நித்யோத்ஸபரிதி விதி கூறப்படுகிறது. ஒரு காலம், இரண்டு காலம், மூன்று காலம், நான்கு காலம், ஐந்து காலம், ஆறு காலம், ஏழுகாலம், எட்டுகாலம் என்றோ அல்லது எப்பொழுதுமோ கணேசனுக்கு நித்ய பூஜை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு சதுர்த்தியில் இஷ்டசித்திக்காக பலவித பக்ஷ்யங்களுடன் கூடிய ஸ்நபன அபிஷேகத்துடன் பூஜை செய்யவும் என்று கூறி ஐந்து, இருபத்தி ஐந்து, ஒன்பது, நாற்பத்தி ஒன்பது ஆகிய எண்ணிக்கையுள்ள ஸ்நபன விஷயத்தில் தேவதைகளை பூஜிக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு 108,ஸ்நபன விஷயங்களில் தேவதையை பூஜிக்கும் முறையை கூறப்படுகிறது. ஸ்நபன விஷயத்தில் இரண்டு சக்தியுடன் கூடிய வினாயகர் விஷயத்திலும் ஒரு சக்தியுள்ள விஷயத்திலும் விசேஷம் கூறிய பிறகு உத்ஸவத்தில் தமநாரோபணம், பவித்ரோத்ஸவம், தீபாரோபனம், வசந்தோத்ஸவம் மாசோத்ஸவம் நவநைவேத்திய கர்மா இவைகளை முன்பு கூறியபடி செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு பிராயச்சித்தம் ஜீரணோத்தாரணம் முதலியவை முன்பு போல் அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு உத்ஸவத்தில் கொடியில் மூஷிகத்தையோ விருஷபத்தையோ வரையவும், சிவோத்ஸவத்திலும், வினாயகருக்காக உத்ஸவம் நித்தியம் செய்யவும் என்று விசேஷம் கூறப்பட விநாயகர் உத்ஸவ விஷயத்தில் சக்ராஸ்திரம், திரிசூலாஸ்திரம், விக்னேசாஸ்திரம் இவற்றில் ஒன்றை ஏற்றுக் கொள்ளவும் என்று கூறப்படுகிறது. உத்ஸவ பிரதிமை லக்ஷணப்படி அமைக்கவும். உத்ஸவ விஷயத்தில் சொல்லப்படாத பலி திரவ்யம், ஹோமம், திரவ்யம் மற்ற எல்லாம் சிவனுக்கு கூறப்பட்டபடி செய்யவேண்டும் என்ற விஷயங்கள் கூறப்படுகின்றன. பிறகு கணேச மந்திரத்தினால் வச்யம், உச்சாடனம், வித்வேஷனம் மாரணம் ஆகிய கர்மாக்களையும் பவுஷ்டிக சாந்தி கர்மாக்களையும் ஸ்தம்பனம் முதலிய கர்மாக்களையும் சாதிக்கலாம் என கூறப்படுகிறது. கணேசனின் பிரதிஷ்டை எல்லா இடத்தில் பாலஸ்தாபனத்துடன் கூடியதாகவோ பாலஸ்தாபனம் இன்றியோ செய்யலாம் என விசேஷ முறை கூறப்படுகின்றன. முடிவில் சைவாலயம் அமைக்கும் முறையின் முதலிலோ விக்னேஸ்வரரையோ ஸ்தாபிக்கவும். இவ்வாறு நாற்பத்தி ஐந்தாவது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. அமைப்பு முறை முதற்கொண்டதாக வினாயகரின் பிரதிஷ்டையை கூறுகிறேன். பட்டணம், எட்டு திசைகள் அதன் முடிவு, அதன் இடைவெளி முதலிய இடங்களில் வினாயகர் ஆலய இருப்பிடமாகும்.

2. சிவாலயத்திலும், எட்டு திக்கிலும், விருப்பமுள்ள இடத்திலும் மண்டபம் முதலிய இடங்களிலும் நிழல் தரும் குளிர்ச்சியான மரங்களின் கீழ்பிரதேசங்களிலோ அல்லது எல்லா ஆலயத்திலுமோ

3. கடைவீதி, தேரோடும் வீதி, வீடு இவைகளிலோ, மற்ற எந்த இடத்திலேயும் அமைக்கலாம். வினாயகர்க்கு நமக்கு விருப்பமான திசையை நோக்கி யுள்ளதான முகம் அமைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

4. பிறகு ஒரு முழம் முதல் முப்பத்தி மூன்று முழு சுற்றளவு உள்ளதாகவும் ஒரு பாகம் முதல் ஒன்பது பாகம் பூமி உடையதாக அணுக வேண்டும்.

5. விசேஷமாக கஜப்ருஷ்டம் போலும் மற்ற உருவமுடையதாகவோ திசைகளில் (கோபுரத்தில்) வினாயகரையுடையதாகவும் ஆக்னேயாதி கோணங்களில் மூஞ்சூறையுடையதாகவும் கோபுரம் அமைக்க வேண்டும்.

6. கணங்களையுடையதாகவோ, ஸ்கந்த ரூபங்களையுடையதாகவோ அமைப்பது அதமாலயம் ஆகும். முன்பு போலவே கர்பந்யாஸமும், ஆத்யேஷ்டிகை பூஜையுடன் கூடியதாக வேண்டும்.

7. இந்திராதி மூர்த்தியுடன் கூடியதாகவோ, மத்தியில் ஸ்தூபி கும்பத்துடன் கூடியதாகவோ அல்லாமலோ, முன் சொன்ன முறைப்படி ஆலய அமைப்புடன் கூடியதாகவோ அமைக்க வேண்டும்.

8. பிரகாரம் மண்டபமிவைகளுடன் கூடியதும், மண்டபம் முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்ட தாகவும், மண்டப உருவமாகவோ, கொட்டகைப் பந்தலமைப்பு உள்ளதாகவோ வினாயகரின் ஆலயத்தை அமைக்க வேண்டும்.

9. சுற்றிலும் பரிவார மூர்த்தி கூறப்பட்டுள்ளது. விசேஷமாக அந்த விபரமும் கூறப்படுகிறது. விச்வரூபர், விசாலாக்ஷர், அக்ஷயர், மதவிப்ரமர்

10. உன்மத்தர், லலிதன், பீமன், தீக்ஷ்ண தம்ஷ்ட்ரன் என்ற முறையாக வினாயகரின் அஷ்ட மூர்த்தீசர்களையோ அல்லது அவர்களை பீடரூபமாகவோ இந்திராதி திக்குகளில் உள்ளவர்களாக

11. முன்பு சொன்ன பிரகாரம் அமைக்கவும். திவாரத்தின் முன்பக்கம் மூஞ்சூறையும் திவாரத்தின் இருபக்கமும் விகடன், பீமன் என்ற திவார பாலகர்களை அமைக்க வேண்டும்.

12. நிர்மால்யதாரியான கும்ப சண்டரை ஈசான திக்கில் ஸ்தாபிக்கவும். ஆமோதன், ப்ரமோதன், ஸூமுகன், துர்முகன் என்றும்

13. அவிக்ணன், விக்னராஜன், பக்ஷ்யாசீ, பஞ்சஹஸ்தன் ஆகிய இவர்கள் அஷ்டமூர்த்திபர்கள் ஆவர், அவர்களை வேறு விதமாகவும் கூறப்படுகிறது.

14. ஹஸ்திவக்த்ரன், ப்ரலம்போஷ்டன், விக்னேசர், கணாதிபர், வினாயகர், ஏகதந்தர், பக்ஷ்ய ப்ரியன், அஹிமேகலர்.

15. ஆகிய இவர்கள் வினாயகரைப் போலுள்ளவர்களாக விக்னேச்வரனின் அஷ்ட மூர்த்திபர்களாவர். வாயிற்படியின் இருபக்கமிருக்கும் திவாரபாலகர்களை பூதரூபமாகவும் இரண்டுகை உடையவர்களாகவும்

16. இடது கையில் உலக்கையும், வலது கையில் தண்டத்தையும் தரித்தவர்களாகவும், உக்ரமான தித்திப் பற்களையுடையவராகவும், சிங்கத்தின் தலைமேல் ஒரு காலை வைத்திருப்பவர்களாகவும்

17. சிவந்த ரூபமும், ரவுத்ர உருவம், விகாரமான முகத்தை உடையவர்களாகத் திவாரபாலகர்களை அமைக்கவேண்டும். மூஷீகமானது, புகைவர்ணம், சிவந்த கண், அழகான தித்திப்பல் இவைகளையும்

18. நீண்டவால், நான்கு கால்கள், சலங்கை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதாக அமைக்கவேண்டும். கும்போதரம், (கும்பசண்டர்) நான்கு கை, உளி, சூலம், கத்தி, தண்டம் இவைகளை தரித்தவராகவும்

19. சிவந்தவர்ணராயும், நன்கு பிரகாசிப்பவராகவும், பத்ர பீடத்தில் அமர்ந்திருப்பவராக அமைக்கப்படவேண்டும். வெண்ணிறமானவர்களாகவும், பெரிய சரீரம், உக்ரமானவர்களாகவும் பலவித அழகான ஆடை தரித்தவர்களாகவும்.

20. பாசம், அங்குசம், தன்னுடைய தந்தம், துடையில் வைத்த கை இவைகளையுடைய கைகளை உடையவர்களாயும் வினாயகமூர்த்திக்கு எதிர்நோக்கி உள்ளவர்களாக பரிவார தேவதைகளை அமைக்க வேண்டும்.

21. பரிவார தேவதைகளின் நடுவில் ÷க்ஷத்ர பாலகர்கள் கூறப்பட்டுள்ளன. பலிபீடம் மஹாபீடம் முன்பு போல் அமைக்க வேண்டும்.

22. பீடத்தின் எட்டுதளங்களிலும் ஆமோதன் முதலிய எட்டு மூர்த்திகளை பூஜிக்கவேண்டும். கர்ணிகை பூதேசனையும் பீடத்தின் வெளியில் திக்பாலர்களையும், தசாயுதங்களையும் பூஜிக்க வேண்டும்.

23. ஹே பிராம்மணோத்தமர்களே, வினாயகரின் அமைப்பு முறை சுருக்கமாக கூறப்படுகிறது. கேளுங்கள், கற்சிலை முதலான திரவ்யங்களால் உத்தமமான பஞ்சதாளம் என்ற அளவால் வினாயகரை செய்ய வேண்டும்.

24. கர்பக்ருஹ அளவில் ஐம்பதாக பிரிக்கப்பட்ட இடத்தில் ஐந்தாவது அம்சத்திலிருந்து ஒருபாகம் அதிகமாக முப்பதாவது பாகம் வரையில் உள்ள அளவு கர்பக்ருஹ அளவாக உதாரணம் காட்டப்பட்டுள்ளது.

25. தூண்களின் அளவாலும், வாயிற்படி அளவாலும் கர்பக்ருஹ அளவு செயற்பாலது. லிங்கம் முதலியவைகளின் அளவுப்படியே அல்லது பிம்ப லக்ஷணப்படியோ செய்தல் வேண்டும்.

26. கேசம் முதல் கால் அடிபாகம் வரை அறுபத்தி நான்கு அம்சமாக பிரிக்க வேண்டும். தலைப்பாகை பாகம் ஓரம்ச மாத்ரம், கேசம் இரண்டு அங்குலத்தினாலும்

27. பன்னிரண்டங்குலத்தால் முகம், இரண்டங்குலத்தால் கழுத்துமாக கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து இதயம் வரை பதினொன்றங்குலமாகும்.

28. ஹ்ருதயத்திலிருந்து தொப்பூழ்வரை பன்னிரண்டங்குலம், குஹ்ய பிரதேசம் ஐந்து அங்குலமாகும். அவ்வாறே முழந்தாள் வரை ஐந்தங்குலம், முழந்தாளின் நீளம் மூன்றங்குலமாகும்.

29. முழந்தாளின் கீழ் பிரதேசம், துடையின் சமமான அளவாகும். பாததளத்தின் உயரம் இரண்டு மாத்ரையாகும். கேசத்திலிருந்து கண் சூத்ரம் வரை நான்கங்குலமாகும்.

30. தந்தத்தின் அடிபாகத்திலிருந்து முழந்தாள் வரையில் துதிக்கையின் நீளமாகும். தந்தத்தின் நீளத்திலிருந்து நான்கு மாத்திரையளவு அந்த நுனியின் அளவாகும்.

31. வலது அல்லது இடது பாகத்தில் ஒரு தந்தம் அமைக்கவும். தலையில் கும்ப சுற்றளவு ஒவ்வொன்றும் மூன்றங்குல சுற்றளவாகும்.

32. கண்ணானது காதின் அடிபாகம் வரையிலாக நான்கு அங்குலமாக கூறப்படுகிறது. பத்து மாத்ரையளவில் காதின் அகல பாகமும், ஒன்பது அங்குலம் காதில் நீளமாகவும் செய்ய வேண்டும்.

33. கையிடுக்கு இரண்டின் இடைவெளி பதினைந்து அங்குலமாக கூறப்பட்டுள்ளது. கையிடுக்கிலிருந்து மேல்பக்கவாட்டுக் கையின் இடைவெளி ஆறங்குலமாகும்.

34. நடுசரீரம் (தொந்தியின்) சுற்றளவு பதினான்கு அங்குலமாகும். இதயத்திலிருந்து தொப்பூழ் அடிபிரதேசம் வரை பத்து அங்குலமாக கூறப்பட்டுள்ளது.

35. நாபிக்கு கீழ் பிரதேசத்திலிருந்து குஹ்ய பிரதேசம் வரை எட்டங்குலமாகும். இரண்டு துடையும் எட்டங்குலம், முழந்தாள் மூட்டு மூன்றங்குலமாகும்.

36. இரு முழந்தாளும் காலின் அடிபாகம் வரை எட்டங்குலமாகும். கஜவக்த்ரனாகவும் கணங்களுக்கு அதிபதியாயும், பூதாகார உருவ அமைப்பும் பெரிய வயிறு படைத்தவராகவும்

37. பாம்பை பூணூலாக அணிந்தவராகவும், கனத்த உருண்டையான துடை, முழந்தாள் உடையவராகவும், கருப்பானவரும் (நீலநிற ஆம்பல் பூபோல் பிரகாசிப்பவரும்) நான்கு கைகளால் பிரகாசிப்பவருமாகவும்

38. வலப்பாக அல்லது இடப்பாகத்தில் வளைந்த துதிக்கையையுடையவராகவும் தாமரை பீடத்தில் அமர்ந்திருப்பவராகவும், தன்னுடைய வலது பக்க இரண்டு கையில் தன் தந்தத்தையும் கோடாலியையும் தரித்திருப்பவராகவும்

39. லட்டு, அக்ஷமாலையையோ, நீலோத்பவ புஷ்பத்தையோ இடது கையில் வைத்திருப்பவராகவும் சிவப்பு வஸ்திரம் அல்லது கருப்பு வஸ்திரம் அல்லது மஞ்சள் வஸ்திரம் தரித்தவராகவோ

40. மஞ்சள் சட்டையணிந்தவராகவும், கிரீட மகுடத்தால் பிரகாசிக்கிறவராயும், வெண்மையான பூணூலையணிந்தவரும், எல்லா ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவறாகவும்

41. தன் கொம்பான தந்தத்தையும் அங்குசத்தையும் வலது கரங்களிலும் இடது கைகளில் பாசம், லட்டு இவற்றை தரித்திருப்பவராகவும், நின்ற கோலத்திலோ அல்லது அமர்ந்த கோலத்திலோ வினாயகரை அமைக்க வேண்டும்.

42. மூன்று கண்களால் பிரகாசிப்பவராகவோ, இரண்டு கண்களை உடையவராகவோ, தாமரையிலமர்ந்த கோலத்திலோ, பீடத்திலமர்ந்தவாறோ, மூஞ்சூறின் மேலமர்ந்தவாறோ

43. விருப்பப்பட்ட ஆஸனத்திலமர்ந்தவாறோ, திருவாசியால் அலங்கரிக்கப்பட்டவராகவோ, சக்தியுடன் கூடியவராகவோ, தனிமையானவறாகவோ வினாயகரை வடிவமைக்க வேண்டும்.

44. வினாயகர் வலது இடதுபாகம் முறையே பாரதீ, ஸ்ரீ என்ற இரண்டு சக்திகளோடு கூடியவராகவோ அல்லது ஒரு சக்தியோடு கூடியவராகவோ அமைக்கவும், அந்த தேவியின் (லக்ஷணம்) அடையாளம் கூறப்படுகிறது.

45. ஆஸநத்தில் அமர்ந்தவளாகவும், ரத்ன கிரீடமகுடங்களால் அலங்கரிக்கப்பட்டவளாகவும் கரு நிறமுள்ளவளாகவும் உள்ள சக்தியை தரித்திருப்பராயும் திசைகளை ஆடையாக உடைவரும் ஆன

46. வினாயகரின் மடியில் அமர்ந்தவளும் எல்லா ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும் திசைகளை வஸ்திரமாக உடையவளும், அழகான திருமுகத்துடனும் இரண்டு கைகளை உடையவரும்

47. எல்லா அவயவ ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், விக்னேச்வரீ என்ற பெயரையுடையவளும் இடது கையில் பாசமும் வலது கையால் (வினாயகரின்) குஹ்ய பிரதேசத்தை

48. தொட்டுக் கொண்டிருப்பவளும் வினாயகரும், அம்பாளின் குஹ்ய பிரதேசத்தை தொட்டுக் கொண்டு இருப்பவராகவும், ஆன மந்த்ர நாயக வினாயகரை தியானிக்க வேண்டும். நான்கு கை, முக்கன், பாசம், அங்குசத்தை தரித்திருப்பவரும்

49. கரும்பு தரித்த கையுடன் இடது கையால் தேவி குஹ்யத்தையும் துதிக்கையாலும் குஹ்யத்தையும் தொட்டு அல்லது கரும்பையோ தொட்டுக் கொண்டதாகவோ

50. இவ்வாறாக வினாயகரை பாவித்து அந்த மந்திரங்களால் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இரண்டாவது வரிசையான கவர்கத்தின் மூன்றாவது எழுத்தான ஹ வும் முதல் ஸ்வரமான (அ)வும்

51. பிந்து நாதம் சேர்ந்த ம் என்ற எழுத்தும் விநாயகரின் பீஜ மந்திரமாகும் பதிமூன்றாவது அச்செழுத்தின் முடிவான அவு என்ற உயிரெழுத்தும் சேர்ந்ததாகவும் வினாயகரின் பீஜ மந்திரத்தை உச்சரிக்கலாம்.

52. கவர்க்கத்தின் மூன்றாவது எழுத்தான க் ம் ர என்ற எழுத்துடன் ஈ என்ற உயிரெழுத்தும் சேர்ந்ததாகவும் க்ரீ என்றும் ஹ்ருதய எழுத்தான ஹகாரத்துடன் ரீ என்று சேர்த்து ஹ்ரீ என்றும்,

53. லக்ஷ்மீ பீஜம் என்கிற ஸ்ரீம் வாக்பீஜமான க்லிம் சேர்ந்ததாக உபயோகிக்கவும். பஞ்ச பிரம்ம ஷடங்க மந்திரங்களை மூலமந்திரத்தை அனுசரித்து கூற வேண்டும்.

54. வக்ரதுண்டாய ஹும் என்று ஹ்ருதய மந்திரங்களால் ஹ்ராம் என்ற எழுத்தாலான ஆறு எழுத்துக்களை கொண்ட நம: ஸ்வாஹா, வஷட், ஹூம், வவுஷட் ஆகியவை முடிவுடன் கூடியதாக ஹ்ருதயம் முதலான மந்திரங்களை

55. பட்காரத்துடன் கூடியதாகவும் கூறவும். இரண்டாவது வர்க்கத்தின் மூன்றாவது எழுத்தான க் அதனுடன் ஆறாவது வர்க்கத்தின் முடிவான ம் சேர்த்து

56. ஏழாவது எழுத்து வர்க்கத்தின் மூன்றாவது எழுத்தான ல் ம், அதே வர்க்கத்தின் நான்காவது, எழுத்தான வ் அந்த வர்க்கத்தின் இரண்டு, ஒன்றாவது எழுத்தான ர ம், ய ம் ஆகிய இந்த ஐந்து (க்,ல்,வ்,ர்,ய்) இவைகளுடன் பதினான்காவது உயிரெழுத்தான அவு என்ற எழுத்துடன்

57. பிந்து நாதமானம் சேர்ந்ததே தசாக்ஷரம் என்ற பீஜமந்திரமாகும். க காரத்துடன் பிரம்ம மந்திரம், அங்கமந்திரங்களை முறையாக கூறவும். (கவும், லவும், வவும், ரவும், யவும்)

58. விரி என்ற சப்தத்தை மூன்று முறை கூறி (விரி விரி விரி) கணபதிம் என்ற சொல்லையும் வரதம் வரத என்ற சொல்லையும் வரத, வரத என்றும் கூற வேண்டும்.

59. ஸர்வ லோக வசம் என்பதுடன் ஆநய என்ற பதத்தையும் ஸ்வாஹா என்ற பதத்தையும் கூறுவது இஷ்டமாகும். இது சக்தி கணபதியின் மூலமந்திரமாகும். (ஓ விரி விரி கணபதே வரத வரத ஸர்வ லோக வசமாநய ஸ்வாஹா)

60. ஓம்காரம் முதற்கொண்டு ஹ்ருதயபீஜ மந்திரமான காம் கா என்ற எழுத்துடன் சேர்ந்ததாக ஹ்ருதயாதி மந்திரங்களை கூற வேண்டும்.

61. கணசாதி பதத்துடன் கூடியதும் பிரதான மந்திரமாகும். (கணேசாதிப:), இக்ஷüததி ஸ்வர்ண த்வீபம், கல்பத்ருமம்

62. ஸிம்மாஸநம் இவைகள் சக்தி கணபதியின் ஆசன மந்திரங்களாகும். வலது கையின் அடிபாகத்தை மூக்கின் மேல் வைத்து

63. சிறிது நுனியை வளைப்பதுபோல் செய்வது கணேச்வரீ முத்ரையாகும். வேறான மூலமுத்ரை கூறப்படுகிறது. நடுவில் விரலை விரித்து

64. மோதிர விரலையும், ஆள்காட்டி விரலையும் சிறிது வளைத்து கட்டை விரலை கொம்பு போல் செய்து காண்பிப்பது போல் மூலமுத்ரையாகும்.

65. இந்த மூலமுத்ரையால் உத்தமமான ஆசார்யன் எல்லா கிரியைகளிலும் உபயோகிக்கவும். பிறகு அங்குரார்ப்பணத்துடன் கூடியதாக பிரதிஷ்டையை செய்ய வேண்டும்.

66. முன்பு கூறப்பட்ட பிரதிஷ்டாகாலத்தில் பீடத்தில் நவ ரத்ன ந்யாஸமோ இல்லையெனில் பஞ்ச ரத்ன ந்யாஸமோ, அல்லது தங்கமோ, தங்க ஊசியுடன் கூடியோ

67. முன்பு கூறியபடி முறையாக இந்திராதி தேவர்களை நினைத்து நியாஸம் செய்யவும். பிறகு (பத்ம) ஜலாதிவாசம் செய்து நயனோன்மீலனம் செய்ய வேண்டும்.

68. பாத்திரத்திலுள்ள நெய், தேன் இவைகளால் ஹ்ருதய மந்திரத்தினாலும் தங்க ஊசியால் நனைத்து நயோன்மீலனத்தை திரையிட்டுச் செய்து தான்யங்களை காண்பிக்க வேண்டும்.

69. வினாயகர் தேவியுடன் கூடி இருந்தால் தேவிக்கும் தனியாக நயோன்மீலனம் செய்யவும். பிறகு பிம்பசுத்தி செய்து கிராம பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

70. லம்ப கூர்ச்சத்துடன் கூடியதாக ஜலாதிவாசம் ஹ்ருதய மந்திரத்தினால் செய்யவும். (பிம்பத்தை) சுற்றிலும் அஷ்டதிக்பாலர்கள் அதிஷ்டிதமான எட்டு கும்பங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

71. யாகசாலைக்காக மண்டபம் ஆலயத்தின் முன்போ இருபக்கத்திலோ அமைக்க வேண்டும். தெற்கிலோ மேற்கிலோ, வடக்கிலோ, அழகுபடுத்தப்பட்ட மண்டபம் அமைக்க வேண்டும். பத்ம குண்டத்துடன் கூடியதாக இருக்க வேண்டும்.

72. குண்டங்கள் ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் அமைக்கவேண்டும். வ்ருத்தகுண்டம் சதுரஸ்ரம், அஷ்டாஸ்ரம் முதலிய குண்டங்களையோ அமைக்க வேண்டும்.

73. எல்லா யாகத்திலும் வ்ருத்த குண்டம் பிரதானமாகும். முன்பு கூறப்பட்ட முறைப்படி மண்டபம் அமைக்க வேண்டும்.

74. சில்பியை திருப்தி செய்வித்து அனுப்பி பிராம்மண போஜனம், புண்யாஹவாசனம் செய்து பிறகு வாஸ்து ஹோமம் செய்ய வேண்டும்.

75. முன்பு கூறியமுறைப்படி பூபரிக்ரஹமும் செய்து, ஜலாதி வாசத்திலிருந்து விநாயகரை எடுத்து வந்து ஸ்நான வேதிகையில் வைக்க வேண்டும்.

76. வடக்கிலுள்ள மண்டபத்தில் முன்புகூறிய முறைப்படி ஸ்நபநம் செய்யவும். ரக்ஷõபந்தனம் செய்து முடிவில் மந்திரந்யாஸம் செய்ய வேண்டும்.

77. சயன வேதிகையில் ஸ்தண்டிலத்தின் மேல் மயிற்தோகை முதலான திரவ்யங்களால் ஐந்து வித சயனம் அமைக்கவும் அல்லது சுத்த வஸ்திரங்களால் சயனம் கல்பித்து விநாயகரை சயன அதிவாஸம் செய்யவும்.

78. சிவப்பான இரண்டு வஸ்திரங்களால் போர்த்தி கும்பந்யாஸம் செய்யவும். வினாயகருடைய தலைப்பக்கம், நூல்சுற்றி கூர்ச்சத்துடன் கூடியதாகவும்

79. கும்பத்தை நல்ல வஸ்திரம், பலா, மாவிலை, அரசிலையுடன் கூடியதாகவும், பஞ்சரத்னோதகமுமோ அல்லது ஸ்வர்ணோதம், மா÷ஷாதகமுமோ

80. மாதுளம் பழத்துடன் கூடியதான எட்டு கடங்களை சுற்றிலும் ஸ்தாபிக்கவும். வஸ்திரம் தங்கம், சந்தனம், புஷ்பம் இவைகளுடன் கூடியதாக பூஜிக்க வேண்டும்.

81. பூதசுத்தியுடன் கூடியதாக வித்யா தேஹ கல்பனமும், கணேசரை ஆவாஹித்தவராகவும் முன்பு கூறப்பட்ட தியான முறையுடன் சந்தனம், புஷ்பம் இவைகளை கொண்டு பூஜிக்க வேண்டும்.

82. பரிவார கும்பங்களில் ஹஸ்தி வக்த்ரன் முதலானவர்களையோ அல்லது ஆமோதன் முதலானவர்களையோ, நைவேத்யம் வரையிலாக உத்தமமான ஆசார்யன் பூஜிக்க வேண்டும்.

83. இரண்டு தேவியுடன் இருந்தால் இரண்டு பக்கத்திலும் வர்த்தனீ கும்பத்தை ஸ்தாபிக்கவும். ஒரே தேவியுடன் இருந்தால் வடக்கு திக்கில் மட்டும் ஒரு கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

84. ஆத்மதத்வம், வித்யாதத்வம், சிவதத்வங்களை அதன் அதிபர்களுடன் கூடியதாக பூஜிக்க வேண்டும்.

85. கணேசன் முதலான தத்வ தத்வேஸ்வரர்களை சதுர்த்தி விபக்தியை முடிவாக கொண்டு அதனுடன் நம: என்ற பதத்துடன் கூடியதாக பூஜிக்கவும். இந்த முறைப்படியே ஆத்மதத்வ, வித்யா தத்வ, சிவதத்வேஸ்வரர்களையும் பூஜிக்க வேண்டும்.

86. மூர்த்தி மூர்த்தீச்வரர்களையும் பூஜிக்க மூர்த்திகள் முன்பு கூறியபடியாகும். இந்திராதி திக்குகளில் ஹஸ்தி வக்த்ராதிகளையோ, ஆமோதாதிகளையோ மூர்த்தியதிபர்களாக பூஜிக்க வேண்டும்.

87. பஞ்சகுண்ட பக்ஷத்தில் மூர்த்தீசர்கள் எட்டு மூர்த்தீசர்களில் முதன்மையாக உள்ள ஐந்து மூர்த்தீசர்களாகும். மூர்த்தி, பஞ்சப்ரம்மம், ஷடங்கங்கள், வித்யாதேஹம், மூலமந்திரம் இவைகளையும் பூஜிக்க வேண்டும்.

88. சந்தனம், புஷ்பாதி திரவ்யங்களால் மூர்த்தி கும்பங்களை பூஜித்து ஹோமம் செய்யவேண்டும். முன்பு கூறப்பட்டுள்ள ஆபரணங்களுடன் கூடிய ஆதிசைவ குலத்தில் உதித்த (பிறந்த)

89. ஆசார்யன் மூர்த்தீபர்களுடன் கூடி ஹோம கர்மாவை செய்யவும். நான்கு திசைகளில் நான்கு வேதபாடங்களையும் ஆக்னேயாதி கோணங்களில் மூலமந்திர ஜபமும் செய்ய வேண்டும்.

90. குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் இவைகளை அக்னிகார்ய முறைப்படி செய்யவேண்டும். கிழக்கு முதலான திசைகளில் தத்புருஷன் முதலான மூர்த்தி மந்திரங்களையும் ஆக்னேயம் முதலான கோணங்களில் ஹ்ருதயம் முதலான மந்திரங்களையும்

91. பிரதான குண்டத்தில் ஈசனான விநாயகரையும் எல்லா தேவர்களையும் மூர்த்தி மூர்த்தீச்வரர்களுடன் ஆவாஹித்து சந்தனம் முதலான திரவ்யங்களால்

92. சமித்து, நெய், அன்னம், பொறி எள், அப்பம், வெல்லம், யவை முதலிய திரவ்யங்களால் த்ருப்தி செய்விக்கவேண்டும். தத்வ தத்வேச்வரன், மூர்த்தீ மூர்த்தீ ச்வரர்களுக்கும் ஹோமம் செய்யவும்.

93. சாந்தி கும்ப பிரோக்ஷணம், அந்தந்த மந்திரங்களின் ஜபம், தர்ப்பையால் ஸ்பரிசிப்பது ஆகியவை ஒவ்வொரு பாகத்திலும் செய்ய வேண்டும்.

94. பிறகு அதிகாலையில் எழுந்து மூர்த்திபர்களுடன் கூடி ஆசார்யன் சுத்திகளை முடித்து கொண்டு சயனாதி வாசத்திலிருந்து விநாயகரை எடுத்து கும்பம், அக்னி இவைகளை பூஜிக்க வேண்டும்.

95. பிராயச்சித்த நிமித்தமாக அகோர மந்திரத்தை நூறு ஆஹுதி செய்யவும். பூர்ணாஹுதி செய்து ஆசார்யன் ஆலயத்தை அடைய வேண்டும்.

96. மானுஷ பிம்பம், தெய்விக பிம்பமாக இருப்பின் முன்புபோல் சம்ஸ்காரங்களை செய்யவேண்டும். பிரம்ம சிலையை முன்பு கூறிய மந்திரத்தினால் நவ ரத்னம், ஓஷதிகள் இவைகள் நிறைந்ததாக செய்ய வேண்டும்.

97. பிறகு விநாயகரை பிரம்ம சிலையுடன் கூடியதாக பிரதிஷ்டை செய்ய வேண்டும். முன்புபோல் விநாயகரின் மூலமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு விநாயகரை ஸ்தாபித்து

98. நல்ல முஹூர்த்த லக்னத்தில் மந்திர ந்யாஸம் செய்யவும். சல உற்சவ பிம்பமாக இருப்பின் ஸ்நான வேதிகையிலேயே மந்திரநியாஸம் செய்ய வேண்டும்.

99. பிம்பத்தின் முன்பாக கடங்களை வைத்து கும்பத்திலிருந்து மூல மந்திரத்தை பிம்ப ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். மற்ற கும்பங்களில் இருந்து மந்திரங்களால் பீடத்தை சுற்றிலும் நியாஸம் செய்ய வேண்டும்.

100. அந்தந்த கும்பதீர்த்தங்களால் அந்தந்த தேசத்தில் அபிஷேகம் செய்யவும். தத்வதத்வேச மூர்த்தீ மூர்த்தீஸ்வர நியாஸம் முன்பு போல் செய்ய வேண்டும்.

101. முடிவில் ஸ்நபனாபிஷேகமும், நைவேத்யம், உற்சவம் (திருவீதிஉலா) செய்ய வேண்டும். விநாயகர், பாரதி, ஸ்ரீ என்ற இருதேவிகளுடன் கூடிஇருந்தால்

102. அதற்கு சொல்லப்பட்ட முறைப்படி உத்தமமான ஆசார்யன் பிரதிஷ்டை செய்ய வேண்டும். விக்னேச்வரீ என்ற தேவியுடன் கூடி இருந்தால் அந்த தேவியின் பெயரால் ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

103. கும்பத்தின் பக்கத்திலுள்ள வர்த்தினீ மந்திரத்தால் பூஜிக்கவும். அம்பாளின் ஹ்ருதயத்தில் விசேஷமாக இந்த மந்திரத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

104. இவ்வாறாக விநாயக பிரதிஷ்டையை யார் செய்கிறானோ அவன் புத்திமானாகவும் ஆகிறான், ஆயுளை விரும்புபவன் ஆயுளை அடைகிறான், தனத்தை விரும்புபவன் தனவான் ஆகிறான்.

105. கல்வியை விரும்புபவன் சுத்தமான கல்வியையும், அழகான பெண்ணை (ஸ்திரீ) விரும்புபவன் அழகான பெண்ணையும், புத்திரர்களை, சவுபாக்கியம், ஆரோக்யம், புகழ், வீர்யம், ஐஸ்வர்யம், சுபம் இவைகளை இந்த லோகத்திலும் அனுபவித்து

106. மேலுலகத்தில் மோக்ஷத்தையும் வினாயகருடைய ஸ்தாபனத்தால் அடைகிறான். விநாயகரின் பூஜை முறையை சுருக்கமாக கூறுகிறேன். ஹேமுனிபுங்கவர்களே கேளுங்கள்,

107. கட்டாயமாக காலையில் எழுந்து (சவுசம்) காலைக் கடன்களையும், ஸ்நானத்தையும் முடித்து ஸந்தியா வந்தனம், மந்திரதர்ப்பணம் இவைகளை முன்பு போல் செய்து

108. ஆலயத்தை அடைந்து நமஸ்காரம் செய்யவும், ஆசமனம் செய்து ஸகளீகரணம் ஸாமாந்யார்க்கியம் உடைய ஹஸ்தத்தினால் ஆசார்யன்

109. திவாரத்தை (வாயிற்படி) ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து விகடனையும், பீமனையும் பூஜித்து, தேவருக்கு கூறப்பட்ட விமலன், சுபாஹூ இவர்களையும் பூஜிக்க வேண்டும்.

110. திரையை ஹ: என்று கூறி அர்ச்சித்து வலது காலால் நுழைந்து வாஸ்த்வீசனை பூஜித்து, தன்னுடைய ஆசனத்தில் வடக்குமுகமாக அமர்ந்து

111. ஆத்மாவை சக்தியுடன் இணைத்து உறுதி நிலை தளர்ந்ததாக பாவிக்க வேண்டும். சக்தியிலிருந்து உண்டான அம்ருதத்தினால் நனைந்த சரீரமுடையவனாக (கூட)

112. அஸ்திர மந்திரத்தினால் கையை சுத்தி செய்து கொண்டு சந்தனத்தினால் அலங்காரம் செய்து கொண்டு ஈசன், தத்புருஷன், அகோரன், வாம தேவ, ஸத்யோஜாத மந்திரங்களை ஐந்து விரல்களிலும் நேத்ர மந்திரத்தையும் உள்ளங்கையிலும்

113. மூலமந்திரத்தையும் உள்ளங்கையிலும், நியஸித்து ஹ்ருதயம், சிரஸ், சிகாகவசம், என இந்த மந்திரங்களை முறையாக பெரிய விரல் முதற்கொண்டு விரல் நுனிகளில் நியாஸம் செய்து மூலமந்திரத்தையும்

114. வித்யாதேஹத்தையும் நியாஸம் செய்து அந்தந்த மந்திரங்களால் சரீரந்யாஸம் செய்து பிறகு விநாயகருக்கு செய்வது போல் ஏக திரிம்சத்கலாந்யாஸம் செய்து கொள்ளவும்.

115. அக்ஷரந்யாஸம் செய்து கொண்டோ, செய்யாமலோ இவ்வாறாக மந்திர மயமான சரீரம் ஏற்படுத்தி விநாயகரை போன்று தன்னை தியானித்து அந்தர்யாகம் செய்து கொள்ளவும்.

116. அல்லது சிவமந்திரங்களால் சிவ சரீர பாவனை செய்து கொள்ள வேண்டும். விநாயகரை ஹ்ருதயம், நாபி, த்வாதசாந்தமான பிந்து ஸ்தானம் இவைகளில் பீஜுத்து ஹோமம் செய்து தியானம் செய்து (ஹ்ருதயம் பூஜை, நாபிஹோமம், பிந்துதியானம்)

117. பிறகு ஸ்தான சுத்தி செய்து, விசேஷார்க்யம் தயார் செய்து ஸமர்பிக்க வேண்டும். முன்பு கூறப்பட்ட திரவ்யங்களுடன் கூடியதாகவோ சந்தனம், புஷ்பம், அக்ஷதை இவைகளுடன் கூடியதாகவோ

118. பாத்யம், ஆசமனத்தையும் அவ்வாறே அர்க்யத்தை மட்டுமோ தயார் செய்து கொண்டு அர்க்ய ஜலத்தினால் ஒவ்வொரு த்ரவ்ய சமூகத்தையும் பிரோக்ஷணம் செய்து

119. ஹ்ருதயம் முதலான மந்திரங்களால் அபிமந்திரிக்கப்பட்ட ஆத்மாவை எல்லா தேவர்கள் அதிஷ்டிதமாக ஸ்மரித்து, மந்திரசுத்தி, பிம்ப சுத்தியையும் செய்யவும்.

120. நிர்மால்ய பூஜையை செய்து வக்ரதுண்டாய வித்மஹே என்றும் ஹஸ்திவக்த்ராய தீமஹி என்றும் பிறகு

121. தன்னோ தந்தி என்ற பதமும் பிறகு ப்ரசோதயாத் என்ற பதத்தையும் சேர்த்து கூறி சாமான்யார்க்யத்தால் பிரோக்ஷித்து பூஜிக்கவும். (வக்ரதுண்டாய) வித்மஹே ஹஸ்திவக்த்ராய தீமஹி, தந்தோ தந்தி - ப்ரசோதயாத்

122. ஹ்ருத மந்திரத்தினால் நிர்மால்ய புஷ்பத் த்ரவ்யங்களை எடுத்து வெளியில் உள்ள நிர்மால்யதாரீ கும்பசண்டரிடம் ஸமர்ப்பிக்க அல்லது வெளியில் போட்டு விட்டு முன்பு கூறியபடி பிம்ப சுத்தி செய்யவேண்டும்.

123. உலோக பிம்பமாயிருப்பின் பர்வ காலங்களில் அபிஷேகம் செய்ய வேண்டும். சித்திரபிம்பம் முதலியவைகளுக்கு கண்ணாடியில் பூஜை செய்யும் க்ரியையால் சுத்தி ஏற்படுவதாக எண்ண வேண்டும்.

124. அஸ்த்ர மந்திரத்தினால் இளங்காற்றாலோ விசிறியாலோ, சித்திராதி பிம்பங்களை சுத்தி செய்ய வேண்டும். இவ்வாறாக ஆத்ம, பூ, த்ரவ்ய, மந்திர, பிம்ப சுத்தியாகும்.

125. மத்தியில் ஆஸனம் கல்பித்து பிரணவம், தர்மாதிகளையும், அதர்மாதிகளையும், அதச்சதனம், ஊராத்வச்சதனத்தையும் மத்தியில் பத்மத்தையும்

126. பிரணவயமான தீர்த்தத்தில் பத்ம கர்ணிகையை மஞ்சள் நிறமாக பாவித்து பூஜிக்க வேண்டும். அம்பாளுடன் கூடி இருந்தால் அதற்கு சொல்லப்பட்ட முறைப்படி ஆஸனம் அமைத்து பூஜிக்க வேண்டும்.

127. பிறகு கணாசநாய என்றும் கணமூர்த்தயே என்றும் ஆவாஹித்து கணபதி முன்புபோல் மந்திரங்களால் வித்யாதேஹம் கல்பித்து

128. பிரணவத்துடன் விக்னேச மூலமந்திரத்தினால் ஆவாஹனம் செய்து ஹ்ருதய மந்திர ஸம்புடிதமாக புஷ்பாஞ்சலி ஹஸ்தமாக பிம்பத்தில் சேர்க்க வேண்டும்.

129. ஹ்ருதய மந்திரத்தினால் நிஷ்டுரையால் முதலானவை செய்து அவகுண்டனமும் செய்யவும், ஹ்ருதயம் முதல் அஸ்திரம் வரை உள்ள மந்திரங்களால் முத்ரைகளை காண்பித்து மஹாமுத்ரையையும் காண்பிக்கவும்.

130. ஹ்ருதய மந்திரத்தினால் பாதங்களில் பாத்யமும், முகத்தில் ஆசமனமும், ஈசான வினாயகரை ஸ்மரித்து (தலையில்) அர்க்யமும் கந்த புஷ்பதூபமும் கொடுக்க வேண்டும்.

131. ஹ்ருதய மந்திரத்தினால் பஞ்சாம்ருதத்துடன் கூடியதாகவோ, அல்லாமலோ ஸ்நானம் செய்விக்க வேண்டும். வஸ்திரத்தால் பிம்பத்தை துடைத்து பிம்பத்திற்கு வஸ்திரம் ஸமர்பிக்க வேண்டும்.

132. முகத்தில் ஆசமனம் கொடுத்து சந்தனம், அகில், கோரைகிழங்கு, பச்ச கற்பூரம் இவைகளின் தூள்களுடன் சேர்ந்ததாகவோ அல்லது சந்தனம் மட்டுமோ ஸ்வாமிக்கு சாற்றி (அர்பணித்து)

133. கருமையான அகிலுடன் கூடிய தூபத்தையோ அல்லது வெட்டிவேர், சந்தனம், நிர்யாஸம் என்ற தூப திரவ்யத்தையும் அதனுடன் கற்பூரமிவைகளுடன் கூடி ஹ்ருதய மந்திரத்திற்கு தூபம் கொடுத்து

134. பலவிதமானதும், வாஸனையுள்ளதும், எல்லா ருதுக்களிலும் உண்டாவதும், (தற்போது) அப்பொழுது மலர்ந்ததுமான புஷ்பங்களை (பூ) முன்பு போல் வினாயகர்க்கு அர்ப்பணிக்க வேண்டும்.

135. நல்லெண்ணையாலோ, நெய்யாலோ பிரகாசிக்கின்ற தீபத்தை ஹ்ருதய மந்திரத்தினால் ஸமர்பித்து, வெண் பொங்கல் முதலியவைகளுடன் கூடிய நைவேத்யத்தை நிவேதனம் செய்ய வேண்டும்.

136. சந்தனம் முதலியவைகளின் அளவு மேற்குத்வார பூஜையில் கூறப்பட்டுள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு தூப தீபத்தின் முடிவில் ஆவரண பூஜையை செய்ய வேண்டும்.

137. ஆக்னேயம், நைருதி, வாயு, ஈசான திக்குகளில் ஹ்ருதயம் முதலான மந்திரங்களையும் அதன் வெளியில் ஹஸ்தி வக்த்ரன், ஆமோதன் முதலானவர்களையும் பிறகு

138. அதன் வெளியில் இந்திராதிகள், தசாயுதங்களையும் நன்றாக பூஜிக்கவும். ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கையுள்ள ஆவரணங்களாலோ விநாயகரை பூஜித்து

139. மறுபடியும் தூப, தீபம் மந்திர ஜபங்களை செய்யவும். நைவேத்யம், பலி ஹோமங்களை முன்பு கூறப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும்.

140. புரசமித்து நெய், அன்னம், பொறி, அவல் இவைகளை மூலமந்திரத்தினால் நூறு ஐம்பது, பத்து என்ற எண்ணிக்கைளிலோ ஆசார்யன் ஹோமம் செய்ய வேண்டும்.

141. மூல மந்திர ஆஹூதியின் பத்தில் ஒரு பங்காக அங்க மந்திரங்களால் ஹோமம் செய்யவும். பிறகு நித்யோத்ஸவம் விநாயகர் உத்ஸவ பேரத்தினால் செய்யவும்.

142. முன்பு கூறிய முறைப்படி அந்த பிம்பத்தில் வினாயகரை பூஜிக்கவும். புஷ்பம், அன்னம், அக்ஷதை ஆகிய லிங்க உருவங்களில் ஹ என்று கணாஸ்திரம் என்ற அஸ்திரத்தை பூஜிக்கவும்.

143. நித்யோத்ஸவம் சலபேர பிம்பத்துடன் கூடியதாகவோ அல்லாமலோ செய்யவும். முன்பு கூறிய முறைப்படி ஆலய (பிரகாரத்தில்) பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

144. அல்லது பாதுகார்ச்சனையுடன் கூடியதாகவோ ஆலய பிரவேசம் செய்யலாம். ஒருகாலம், இரண்டு காலம் அல்லது மூன்று, நான்கு, ஐந்து காலம்

145. ஆறு, ஏழு, எட்டு என்ற எண்ணிக்கையுள்ள ஸந்தியா காலத்திலோ எப்பொழுதுமாவது வினாயகரை அர்ச்சிக்கவும். இவ்வாறாக அறிந்து பூஜைக்குரிய அங்கங்களால் பிரதி தினம் வினாயகரை பூஜிக்க வேண்டும்.

146. வினாயகரின் நித்ய பூஜையானது போகத்தையும் மோக்ஷத்தையும் கொடுக்க கூடியதாகும். வினாயகரின் பூஜை இஷ்ட சித்தியின் பொருட்டு சதுர்த்தி திதியில் செய்ய வேண்டும்.

147. பலவித பக்ஷணங்கள் ஸ்நபனம் முதலியவைகளுடன் கூடியதாகவும் செய்ய வேண்டும். ஸ்நபனத்தை முன்பு போல் செய்ய வேண்டும். ஆனால் மத்யகும்பத்தில் கணேச்வரரையும்

148. ஐந்து கும்ப ஸ்நபனத்தில் ஆமோதன் முதலியவர்களை நான்கு திக்குகளிலும் நவகலச (9) ஸ்நபனத்தில் ஆமோதன் முதலிய எட்டு மூர்த்திகளையும் பூஜிக்கவும். இருபத்திஐந்து கலச ஸ்நபனத்தில்

149. லோக பாலர்களையும் விச்வரூபர் முதலிய எட்டு தேவதைகளையும் எட்டு திக்கிலும் எட்டு திக்கின் இடைவெளியிலும் பூஜிக்க வேண்டும். லோகபாலர்கள், ஆயுதங்கள் (அஷ்ட) வசுக்கள் முதலிய எட்டு பேர்களையும்

150. முன்பு ஆச்ரிதமான (சொல்லப்பட்ட) ஆமோதன், விச்வரூபன், ஹஸ்தி வக்த்ரன் என்ற மூன்று எட்டு தேவதைகளையும் வரிசையாக நாற்பத்தி ஒன்பது கலச ஸ்நபன பூஜையில் தேவதைகளாக பூஜிக்க வேண்டும்.

151. நூற்றி எட்டு கலச ஸ்நபனத்தில் வினாயகர் ஸஹஸ்ரநாமத்தில் உள்ள முதல் நூறு அர்ச்சனைகளை பூஜிக்க வேண்டும். ஆயிரத்து எட்டு (1008) கலசத்தில் (ஸஹஸ்ரநாமத்தில் உள்ளபடி) எல்லா தேவதைகளையும் பூஜிக்க வேண்டும்.

152. பிறகு ஆசார்யன் எல்லா கும்பங்களிலும் விநாயகரையோ (மட்டும்) பூஜிக்க வேண்டும். பாரதீ, ஸ்ரீ என்ற இரு தேவியுடன் வினாயகர் கூடி இருந்தால் இரண்டு வர்த்தினியையும் ஸ்தாபிக்க வேண்டும்.

153. ஒரு தேவியுடன் கூடியதாக இருந்தால் வர்த்தினியை வடக்கு பாகத்தில் ஸ்தாபிக்க வேண்டும். இந்த ஸ்நபனத்தில் கூறப்படாததை முன்பு ஸ்நபனவிதியில் சொல்லி உள்ளபடி செய்ய வேண்டும்.

154. உத்ஸவமானது, தமனாரோஹனம் என்ற மருக்கொழுந்து சாத்துதல், பவித்ரோத்ஸவம் முதலிய கிரியைகளும் தீபாவளி (கார்த்திகை) வஸந்தோத்ஸவம், மாதங்களில் கூறப்பட்ட மாஸோத்ஸவமும்

155. நவநைவேத்ய கர்மாவும் விசேஷமாக பிராயச்சித்தமும் செய்ய வேண்டும். ஜீர்ணம் முதலியவைகளால் அடையாளம் அடைந்திருந்தால் மற்ற க்ரியைகளை (அதற்கு) முன்பு போல் செய்ய வேண்டும்.

156. மேலும் கொடியில் மூஷீகத்தையோ, வ்ருஷபத்தையோ வரைய வேண்டும். சிவோத்ஸவத்திலும் பிரதி தினமும் விக்னேசோத்ஸவம் செய்யலாம்.

157. கொடி ஏற்றுதல், ஹோமம், உத்ஸவபலி, இவையின்றி வலம் வருதல் மட்டும் செய்யலாம். சக்ராஸ்திரமோ அல்லது த்ரிசூலாஸ்திரம் இவற்றை வினாயகரின் அஸ்திர தேவராக செய்யலாம்.

158. முன்பு கூறிய லக்ஷண அமைப்புடன் வினாயகர் உத்ஸவ பிம்பம் அமைக்க வேண்டும். உத்ஸவத்தில் பலித்ரவ்யம் ஹோம திரவ்யங்களான பொருட்கள் எவை

159. இங்கு கூறப்படவில்லையோ அந்த திரவ்யங்களை சிவோத்ஸவத்தில் சொல்லியபடி கிரஹிக்க வேண்டும். வச்யம், உச்சாடனம், வித்வேஷம், மாரணம், பவுஷ்டிகம்

160. சாந்திகம், ஸ்தம்பனம் முதலிய கர்மாக்களை இந்த வினாயக மந்திரத்தினால் செய்ய வேண்டும். எல்லா வியாதியும் ஏற்பட்ட பொழுது இந்த விநாயக மந்திரத்தினால் சாந்தப்படுத்த வேண்டும்.

161. இந்த வினாயக பிரதிஷ்டையானது எல்லா இடத்திலும் ஆத்ய பால ஸ்தாபனத்துடன் கூடியதாகவோ இல்லாமலோ பிரதிஷ்டை செய்யலாம். சிவாலயத்தில் முதலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற காரணத்தால் பாலாலயமின்றி வினாயகரை ஸ்தாபனம் செய்யவும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் விக்னேச்வரப்ரதிஷ்டா முறையாகிய நாற்பத்தைந்தாவது படலமாகும்.

படலம் 44: தேவீ ஸ்தாபன விதி...

படலம் 43: தேவீ ஸ்தாபன விதி...

44 வது படலத்தில் தேவீஸ்தாபனம் கூறப்படுகிறது. முதலில் தேவியின் ஸ்தாபனம் லக்ஷண முறைப்படி கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பிறகு பிம்பத்தை சிலை முதலான திரவ்யங்களால் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு கிராமம் முதலிய இடங்களிலோ சிவாலயத்திலோ, தேவீ ஸ்தாபனத்திற்கு உபயோகமான ஸ்தானங்கள் கூறப்படுகின்றன. பிறகு தேவியின் ஆலய நிர்மாண முறை கூறப்படுகிறது. பிறகு உருண்டை வடிவமாகவோ, நீண்ட வட்ட வடிவமாகவோ, சபையை போன்றோ, கோபுரத்துடன் போன்றதாகவோ ஆலயம் நிர்மாணிக்கவும். பிறகு ஆலயத்தில் கர்பக்கிரஹ சுவர் செய்யும் முறை, இரண்டு தளம் முதலான வாசல், இடைவெளி அமைப்பு உள்ள சுவர்களை அமைக்கும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு ஆலயத்தில் திக் தேவதை அமைக்கும் முறையும் நிரூபிக்கப்படுகிறது. தேவியின் வாஹனம் சிம்மத்தையோ விருஷபத்தையோ பிரதிஷ்டை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ஆலயபிரதிஷ்டையில் ஆலய சுவற்றின் தேவர்களின் எல்லா பிம்பங்களையும் பிரதிஷ்டை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு தேவி ஆலயத்தில் பிரகாரங்கள், பரிவார மண்டபங்கள் செய்யவும் என கூறி பரிவார விஷயத்தில் பலமுறை கூறப்படுகின்றது. பிறகு தேவியின் நிர்மால்ய தாரி என்கிற அசநீ தேவியை குறிப்பிடப்பட்டுள்ளது. மஹாபீடத்தில் விசேஷமாக எல்லா அப்சர ஸ்திரீகளும் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. பிறகு தேவியின் லக்ஷணம் விளக்கப்படுகிறது. பிறகு தேவியின் அளவு லிங்கத்தை அனுசரித்து அமைக்கவும் என கூறி அதில் அளவு முறை கூறப்படுகிறது. பிறகு தேவீ ஸ்வதந்திரமாக இருந்தால் தன்னுடைய ஆலய அளவினாலோ அல்லது அங்குல அளவினாலோ செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு ஆத்மார்த்த பூஜையில் வேறு அளவு கூறப்படுகிறது. பிறகு தேவியின் அமைப்பை கூறும் விஷயத்தில் பல முறைகள் வர்ணிக்கப்படுகின்றன.

இங்கு ஒரு முகம், நான்கு கை, மூன்று கண், ஒரு முகம், இரண்டு கை, இரண்டு கண், ஒரு முகம், ஆறு கை, ஐந்து முகம், பத்து கை என்று நான்கு விதங்களாக ஆயுதத்துடன் விளக்கப்படுகின்றன. பிறகு தேவி ஈஸ்வரனுடன் சேர்ந்ததாகவோ அல்லது தனியாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. தேவி ஸ்வாமிக்கு கூறப்பட்ட அஸ்திரம் ஆசனம் இவைகளை உடையதாகவோ தேவனை ஆலிங்கனத்தில் ஈடுபட்டுள்ளதாகவோ ஸ்வாமியின் துடையில் அமர்ந்ததாகவோ, நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோ, அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு தேவியை அமைக்கும் விஷயத்தில் சூத்திர பாதமுறை கூறப்படுகிறது. பிறகு பிம்பங்களின் விஷயத்தில் உயர அளவு முறை கூறப்படுகிறது. தேவிக்கு மனோன்மனீ, கவுரி இரண்டு பெயர் கூறி அவர்கள் விஷயத்தில் லக்ஷண பேதம் இல்லை என்கிறார். சதாசிவன் விஷயத்தில் தேவி பிம்பம் அமைக்கப்பட்டால் அது மனோன்மணி என்று தேவியின் பெயர் ஆகும். நடராஜமூர்த்தி ஆகிய மூர்த்தி விஷயத்தில் கவுரி என்று பெயர் கூறப்படுகிறது. தேவியின் பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. முதலில் மனோன்மணி, கவுரி விஷயத்தில் மூலமந்திரம் கூறப்படுகிறது. முன்பு கூறியபடி பிரதிஷ்டா காலத்தை அறிந்து பிம்பத்தை மண்டபத்தில் உள்ள ஸ்தண்டிலத்தில் ஸ்தாபித்து செய்ய வேண்டிய ரத்னநியாச முறை, நயனோன்மீலம் மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஆசார்ய பூஜை, சில்பி பூஜையும் யஜமானனால் செய்யப்பட்டு ஆசார்யன் மண் முதலியவைகளால் பிம்பசுத்தி செய்து, கிராமப் பிரதட்சிணம் செய்து பிம்பத்தை ஜல கரைக்கு எடுத்துச் சென்று ஜலாதி வாசம் செய்யவும் என ஜலாதி வாச முறை குறிப்பிடப்படுகிறது. ஜலாதி வாச முறையில் பிம்பத்தை சுற்றிலும் வாமா முதலான சிக்திகளுடன் கூடிய கும்பங்களை ஸ்தாபிக்கவும் பிறகு சயனாதி வாசத்திற்கு மண்டப முறை சொல்லப்படுகிறது. பின்பு சில்பியைதிருப்தி செய்வித்த பிறகு பிராம்மண போஜனம், பசுஞ்சாணத்தால் மெழுகிடுதல், புண்யாஹ பிரோசிணம் வாஸ்த்து ஹோமம் செய்து மண்டபத்தில் வேதிகையில் ஸ்தண்டிலத்தில் சயனம் அமைக்கவும் என்று பூஜை முறை கூறப்படுகிறது.

பிறகு ஜலாதிவாசத்திலிருந்து பிம்பத்தை மண்டபத்திற்கு எடுத்து வந்து, முன்பு போல் ஸ்நபனாபிஷேகம் ரக்ஷõபந்தனம் முடித்து தேவியை, கிழக்கில் தலைவைத்ததாக சயனஸ்தாபனம் செய்யவும் என்று சயன அதிவாச முறை கூறப்படுகிறது. பிறகு பிம்பத்தை சிவப்பு வஸ்திரத்தால் போர்த்தி சந்தனம், இவைகளால் பூஜிக்கவும், பிறகு தேவியின் சிரோபாகத்தில் பிரதான கடத்தை பிம்பலக்ஷண முறைப்படி பூஜிக்கவும். சந்தனாதிகளால் பூஜிக்கவும். அந்த கும்பத்தை சுற்றி எட்டு கடங்களை வாமாதி சக்திகளால் பூஜிக்கப்பட்டதாக ஸ்தாபித்து கந்தனாதிகளால் பூஜிக்கவும் என்று கும்ப அதிவாச முறை விளக்கப்படுகிறது. அங்கு தத்வதத்வேஸ்வரி, மூர்த்தி, மூர்த்தீஸ்வரி, நியாஸம் செய்யும் முறையும் விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்யன் மூர்த்திபர்களுடன் ஹோமகர்மாவை ஆரம்பிக்கவும் என கூறி ஹோமமுறை, திரவ்ய நிரூபணம் செய்யும் விதமாகவும் மந்திரத்துடன் கூடியதாகவும் கூறப்படுகிறது. இங்கு ஹோம காலத்தில் வேதாத்யயனம் நான்கு திக்குகளிலும், ஆக்னேயாதி கோணங்களில் மந்திர ஜபங்கள் என கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டா முறை கூறப்படுகிறது. ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி முன்பு போல் கும்பத்தையும் பூஜித்து தேவியை எடுத்து ஆலயம் நுழைந்து ரத்னம் முதலியவைகளால் நிரம்பிய பிரம்மசிலையில் மூலமந்திரத்தை கூறி ஸ்தாபிக்கவும் பிறகு நல்ல முகூர்த்த லக்னத்தில் மந்திரந் நியாசம் செய்யவும். தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யவும். முடிவில் ஸ்நபனம், அதிகமாக நைவேத்யம் உத்ஸவம் முதலியவைகளை செய்யவும். பலவித ஸ்தோத்திரங்களால் நமஸ்கரித்து சந்திரனும் சூர்யனும் பூமியில் உள்ளவரை உங்களால், ஹே தேவி இந்த ஆலயத்தில் இருக்க வேண்டும் என்று இந்த ஸ்லோகத்தை படிக்கவும் என்று கூறப்படுகிறது. ஆசார்யன் முதலானவர்களுக்கு லிங்க ஸ்தாபனத்தில் கூறப்பட்டுள்ள தட்சிணையை யஜமானன் கொடுக்க வேண்டும், நான்காவது கர்மாவை அறிந்த தேசிகன் கல்யாண கர்மாவை செய்யவும் என்று பிரதிஷ்டாவிதியில் பூஜை வரிசை கூறப்படுகிறது. இங்கு சலபிம்ப பக்ஷத்தில் அந்த பிம்பத்தை ஸ்நான வேதிகையிலேயே வைக்க அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்வதந்திரமானதும் ஸ்வாமியுடன் உள்ளதாகவும் இருக்கும் தேவியின் விஷயத்தில் கல்யாண கர்மா செய்ய வேண்டாம் என கூறப்படுகிறது. பிறகு தேவிபிரதிஷ்டையின் முறை, பயன் விசேஷமாக கூறப்படுகிறது. பிறகு தேவியின் நித்யார்ச்சனை முதலியவைகள் கூறப்படுகிறது.

நித்யானுஷ்டானம் முடித்த ஆசார்யனுக்கு துவாரம், துவார பாலகர்பூஜை முன்னதாக தேவியின் ஆலயம் நுழையும் வரை விதிகள் கூறப்படுகிறது. பிறகு துவார பாலகர், துவார சக்தி இவைகளின் லக்ஷணம் இவைகளை குறிப்பிட்டு ஸ்வாமிக்கு கூறப்பட்ட துவார பாலகர்களையோ பூஜிக்கவும் என கூறப்படுகிறது. கதவின் வலது இடது, பாகத்தில் விமலன், சுபாகு இவர்களை பூஜித்து கர்பக்கிரஹ பிரவேசம் கூறப்படுகிறது. பிறகு பூதசுத்தி முறை வர்ணிக்கப்படுகிறது. ஐந்து முகத்தை உடைய தேவியின் பூஜா விஷயத்தில் அஷ்டத் திரிம்சத்கலான் நியாம், பிரணவத்துடன் கூடியதாக செய்யவும். பிறகு ஒரு முகத்தை உடைய அம்பாளின் பூஜை விஷயத்தில் சசிநீ முதலான 31 கலான் நியாசத்தை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு அந்தர்யாக முறையும் கூறப்படுகிறது. பிறகு ஸ்தான சுத்தி, திரவ்யசுத்தி, மந்திரசுத்தி முறையும் கூறப்படுகின்றன. பிறகு பிம்பசுத்தி முறை கூறப்படுகின்றன. பிறகு உலோக பிம்பம் சுதாபிம்பம், சித்ர பிம்ப விஷயத்தில் விசேஷ முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஆசன மூர்த்தியையும் ஆவாஹனம் முதலிய பத்து சமஸ்காரம் செய்யும் முறையும் வர்ணிக்கப்படுகிறது. பின்பு தூப தீப நைவேத்யம் கொடுக்கும் முறை கூறப்படுகிறது. ஆவரண அர்ச்சன முறையும் கூறப்படுகிறது. கர்ப ஆவரணம் கணங்களின் பூஜை லோகபால பூஜை, அஸ்திரங்கள் முதலியன ஆவரணங்கள் ஆகும் என்று பஞ்சாவரண பூஜை கூறப்படுகிறது. இங்கு கர்ப்பாவரணம் தென்கிழக்கு மூலையில் ஹ்ருதயத்தையும் ஈசான திசையில் சிரசையும் நிருதி திக்கில் சிகையையும், வாயு திக்கில் கவசத்தையும் மற்ற நான்கு திக்கில் அஸ்திரத்தையும் பூஜிக்கவும். அல்லது வாமாதி அஷ்ட சக்திகளை கிழக்கு முதலான திக்குகளில் பூஜிக்கவும்.

பிறகு மறுபடியும் மந்திர படனங்கள் நைவேத்யம் பலி ஹோமம் செய்யவும் என்று கிரியையின் வரிசை குறிப்பிடப் படுகின்றது. பிறகு நித்யோத்ஸவம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. நித்யோத் ஸவத்திற்காக பிம்பம் அமைக்கும் முறை லக்ஷணத்துடன் கூடியதாக கூறப்படுகிறது. தேவிக்கு ஒரு காலமோ இரண்டு காலமோ, மூன்று நான்கு, ஏழு, எட்டு காலமோ அல்லது எப்பொழுதுமோ பூஜை செய்யவும் என்று கூறப்படுகிறது. பிறகு வர்÷ஷாத்ஸவம் ஸ்னபநம் தமனாரோஹணம், பவித்ரோத்ஸவம், கிருத்திகா தீபம், ஸம்வத்ஸரோத்ஸவம் வஸந்தோத்ஸவம், டோலோத்ஸவம், மாஸோத்ஸவம், நவநைவேத்யம் ஆடிபூரகர்மா, முதலிய விதிகள், முறைப்படி அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு உத்ஸவத்தில் கொடியில் சிம்மமோ, விருஷபமோ வரையவும் பூரம் என்கிற பூர்வ பல்குனி நட்சத்திரத்தில் தீர்த்த கர்மா செய்யவும். சிவோத்ஸவத்திலும் பிரதி தினமும் தேவிக்கு உத்ஸவம் செய்யவும். தேவியின் உத்ஸவ விஷயத்தில், சக்கர அஸ்திர தேவி அஸ்திரம் இவைகளோ ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு முன்பு கூறப்பட்டுள்ளபடி உத்ஸவ பிம்பம் அமைக்கவும். ரக்ஷõ பந்தனம் செய்யப்பட்ட தேவிக்கு கிராமத்திற்கு வெளியில் யாத்திரை செய்யக்கூடாது என்று என்பதான விஷயங்கள் கூறப்படுகின்றன. ஜீர்ணோத்தாரணம், பிராயச்சித்த விதி இவைகள் முன்பு கூறியபடி செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறு தேவியின் பிரதிஷ்டா பாலாலயத்துடன் கூடியதாகவோ இல்லாததாகவோ இருக்கும் என்று அறிவிக்கப்படுகிறது. முடிவில் தேவியால் அனுக்கிரகிக்கப்பட்ட அரசனுக்கு சர்வ வல்லமை தன்மை ஏற்படும் ஆகையால் தேவியின் முன்பாக அரசனுக்கு அபிஷேகம் செய்யவும். இவ்வாறு 44வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. தேவியின் பிரதிஷ்டையை அதன் அமைப்பு முறையை உடையதாக கூறுகிறேன். கற்சிலை முதலான பொருள்களை சேகரித்து அவைகளால் பிம்ப உருவத்தை அமைக்க வேண்டும்.

2. கிராமம் முதலிய இடங்களிலும் சிவாலயத்திலும் எட்டுத் திசைகளிலும் அதனிடைவெளியிலும் அழகான விருப்பமுள்ள இடத்திலும் கவுரி பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

3. மூன்று முழ அளவு முதல் ஐம்பது முழ அளவு வரை அகல நீள பரப்பளவு உடையதாகவும், உயர அளவுகளை முன்புள்ள அளவுப்படியுமாகவுள்ளதாகி தேவி ஆலயத்தை அமைக்க வேண்டும்.

4. குறுக்கு வட்ட வடிவமாகவோ, உகந்ததான அமைப்புள்ளதாகவும் அமைக்கவும். வட்ட வடிவமாக இருப்பின் உயரத்தை நான்கு பங்காக்க வேண்டும்.

5. கன அளவு, ஓர் அம்ச அதிகரிப்பாலும் ஆறுபாக அளவுகளால் கர்பக்ருஹம் அமைக்கவும். ஓர் அம்ச அளவு சுவர் என்பதாகவும், உயரத்தை மூன்று பாகமாகவோ பிரிக்க வேண்டும்.

6. இரண்டு பாக அளவினால் கர்பக்ருஹமும், ஓர் பாக அளவினால் சுவற்றையும் ஏற்படுத்தவும். நான்காக பிரிக்கப்பட்ட அகல அளவில் ஆறுபாக அளவிலோ கன அளவை அமைக்க வேண்டும்.

7. கர்பக்ருஹம் எட்டு பதங்களானதாக கூறப்பட்டு வேறொரு முறையும் கூறப்படுகிறது. பரப்பளவில் ஐந்தாக பிரிக்கப்பட்ட இடத்தில் ஆறு பங்குகளாலோ

8. ஏழு, எட்டு, ஒன்பது, பத்து பங்குகளாலோ கர்பக்ருஹம் சுற்றிலும் மீதமுள்ள ஓர் பாக அளவினால் சுவரும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

9. ஆறாக பிரிக்கப்பட்ட இடத்தில் ஓர் பாக முதலான அதிகரிப்பால் இரண்டு மடங்கு அளவினால் கர்பக்ருஹம், சுவற்றின் நீளம் முன்புள்ளபடி அமைத்துக் கொள்ள வேண்டும்.

10. பரப்பளவில் இவ்வாறாக இருபது பாக அளவாக கூறப்பட்டதில் அதனதன் இரண்டு மடங்கு அளவு வரை உயர அகல அளவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

11. இரண்டு தளமுதலான தளங்களையுடைய கோபுர வகை தளத்தில் பல எண்ணிக்கையால் இடைவெளி அழகையும், சுவரையும், கால்பாகம், அரை பாகம், முக்கால் பாக அளவுச் சுற்றாகவும்

12. ஒன்றரை பாகம், ஒன்றே முக்கால், இரண்டு பாக அளவினாலே செய்து கொள்ளவும். இடைவெளிச் சுவரை விட்டு வெளிப்பாகத்தினால் கனமாகவோ எல்லா பாகத்தையும் அமைக்க வேண்டும்.

13. அதிஷ்டானம் முதலான ஆறுவர்கங்களை முன்புள்ள அளவுப்படி செய்யவும். பிரகார மண்டபம் போல் ஸபையைப் போல் கோபுர அமைப்புடன் கூடியதுமாகவோ அமைக்க வேண்டும்.

14. கோபுரத்தின் மேலுள்ள ஸ்தூபியின் எண்ணிக்கை ஒன்று முதல் பதினொன்று வரையிலும் ஆகும். திக்தேவதைகளின் விஷயங்கள் தேவியின் ரூபமாற்றங்களை உள்ளதாக கூறப்படுகின்றன.

15. தேவி விமானத்தில் சிவாலயத்தின் தேவதைகளையோ வினாயகர், முருகனையோ தென் கிழக்கு முதலான திசைகளினால் ஸிம்மம் அல்லது வ்ருஷபத்தை வாஹநமாகவோ

16. கோணங்களில் கிளியையோ அமைத்து மற்ற உருவங்களை முன்பு கூறப்பட்டுள்ளபடி அமைக்கவும். தேவியானவள் கிழக்கு, மேற்கு, தெற்கு முக அமைப்புள்ளதாகவோ

17. வடக்கு முகமாகவோ அமைக்கலாம். எல்லாதிசை முக அமைப்புகளும் எல்லா ஸம்பத்துக்களையும் கொடுக்க வல்லதாகும். கர்பக்ருஹ அமைப்பின்படி செய்யப்பட்டால் அதன் அளவு விசேஷமாக கூறப்படுகிறது.

18. பிம்ப உருவ இலக்கணத்தில் கூறப்பட்டுள்ளபடி ஆயாமம் என்ற கணக்களவை எடுத்து கொள்ளவும். ஆலயத்தில் திக்தேவதைகளை பெண் உருவமுள்ளதாக அமைக்க வேண்டும்.

19. த்வரதசாந்த தளம் என்ற அமைப்புள்ள இடத்தில் ருத்ரன், முருகன், வினாயகர் ஆகிய உருவங்களையும் விமான மூலைகளில் விருஷபத்தையே சிம்மத்தையோ அமைக்க வேண்டும்.

20. மற்ற எல்லா விதமான கர்பக்ருஹ சுவற்றின் தேவதைகளுடைய பிரதிஷ்டை பரமேஸ்வரனின் ஆலயப்ரதிஷ்டையில் கூறப்பட்டுள்ளது.

21. இறைவனின் திருவிளையாடல்களை குறிக்கும் பிரதிஷ்டை கூறப்படவில்லை. திருச்சுற்றுப் பகுதிகள் பரிவார தேவதைகளையும், அவைகளின் மண்டபங்களையும் அமைக்க வேண்டும்.

22. வாமை முதலான சக்திகளையோ பரிவாரத்தில் இருக்கும்படி அமைக்கவும். லக்ஷ்மீ, துர்க்கா, பூமாதேவி. சசினீ, காயத்ரி, உஷா இவர்களையும் அவ்வாறே

23. ஸந்த்யை, ஸரஸ்வதி ஆகிய தேவதைகளையோ பிரதிஷ்டை செய்யப்படவேண்டும். ப்ரக்ஞை, மேதா, ஸ்ருதி. ஸ்வாஹா, வஷட் இவர்களும்

24. த்ருதி, மதி ஆகிய தேவிகள் கிழக்கு முதலான திசைகளில் வரிசைக்கிரமமாக கூறப்பட்டுள்ளன அல்லது ஜ்யேஷ்டா தேவியுடன் கூடிய ஸப்த மாத்ருக்களையும் பிரதிஷ்டை செய்யலாமென கூறப்பட்டுள்ளது.

25. தேஹளீ, பேஷணீ, சுல்லி, கண்டநா, உலூகலீ, முஸலீ, முத்கரீ, வாத்மாநீ, ஆகிய எட்டு தேவதைகளையுமோ பரிவார தேவதைகளாகவும் செய்யலாம்.

26. மேற்கூறிய தேவதைகள் நான்கு கைகளையுடையவர்களாகவும், அவைகளில் விருப்பப்பட்ட ஆயுதங்களையோ, தாமரையை தரித்தவர்களாகவோ அமைக்கவும். வ்ருஷபம், வினாயகர், முருகன் மஹாசாஸ்தா குபேரன்.

27. வீரன், பைரவன், சூர்யன் இவர்களை கிழக்கு முதலான திசைகளிலும், தென் மேற்கு அல்லது தென் கிழக்கிலே வினாயகரை ஸ்தாபிக்கவும்.

28. கிழக்கு முதலான திசைகளில் இந்திரன் முதலான திக்பாலர்களையோ வஜ்ரம் முதலான தசாயுதங்களையோ ப்ரதிஷ்டை செய்து வடகிழக்கு திசையில் அசநீ என்ற நிர்மால்யத்தை தரிக்கும் சண்டிகேஸ்வரியை ஸ்தாபிக்க வேண்டும்.

29. முன்பு கூறப்பட்ட பரிவார தேவதைகளையோ ஸ்தாபிக்கவும். மஹாபலிபீடத்தில் விசேஷமாக எல்லா அப்ஸர தேவதைகளும் இருக்கிறார்கள்.

30. சிவலிங்க அளவை அனுசரித்து தேவியின் அளவு மூன்று அளவாக கூறப்பட்டுள்ளது. பூஜைக்குத் தக்கதான அளவையோ, இரண்டு பாகமோ, மூன்று பாகமாகவோ

31. நான்கு பாகம், ஐந்து பங்கு அளவாகவோ, பூஜையின் அம்ச பாகத்திலிருந்து மேற்பட்ட முக்கால் பாகம், பாதி பாகம், அதற்கு மேற்பட்ட எட்டில் ஓர் பங்காகவோ ஒன்பதில் ஓர் பங்காகவோ அமைக்க வேண்டும்.

32. பூஜையின் அம்சருத்ர பாகத்திற்கு மேல் நூற்று இருபத்தி நான்கு பங்காகவோ பிரித்து, புருவம், கண், வாய், காது பாகம் வரையிலும் தோள் பாகம், கையின்மேல் பாக இடைவெளி, மார்பகம் வரையிலும்,

33. நிஷ்களம் என்ற அமைப்புள்ள தேவியின் உருவ அமைப்பை லிங்கத்தின் அளவை அனுசரித்து செய்யவும். சிவமூர்த்த பிம்பத்தை அனுசரித்து தேவிமானமும் கூறப்பட்டுள்ளது.

34. தேவியானவள் தானே பிரதானமாக இருக்குமாயின் அதன் கோயில் அளவு முறைப்படி செய்யவும். அந்த அளவும் முன்னமே கூறப்பட்டுள்ளது. மானாங்குல அளவினாலோ

35. செய்து, வீட்டில் ஆன்மார்த்த பூஜைக்கு மாத்ராங்குல அளவினாலோ, அமைக்கவும். பிறகு முன்பு கூறப்பட்டுள்ள அளவுப்படி தேவியை அமைக்க வேண்டும்.

36. நான்குகை, மூன்று கண், மிகவும் மலர்ந்த ஓர் முகமும், வெண்பட்டையணிந்தவளாயும், கரண்ட மென்கிற அமைப்புடைய கிரீடத்தையுடையவளாகவும்

37. வரதம், அபயம், பாசம், அங்குசமிவைகளை கையிலுடையவளாகவும் அமைக்கவும். இரண்டுகை, இரண்டுகண் இவைகளையுடனுமோ தொங்குகின்ற கையுடனும்

38. தாமரையைக் கையிலுடையவளாயும் மிகவும் அமைதியாயுடையவளாயும் பொன்னிறமாய் உடையவளாயும் உள்ளதாகவோ தேவி கிளியையும் ஆம்பல் புஷ்பத்தை உடையவளாயுமோ சூலம், பாசமிவைகளை உடையவளாயுமோ

39. விரும்பிய ஆயுதத்தை உடையவளாகவோ, ஆறு கையுடன் உடையவள் சங்கம், சக்ரம் இவைகளையுடையவளாகவோ அமைக்கலாம். ஐந்து முகமாயும் தித்திப்பல்லால் பயங்கரமான முகமும் பத்து கைகள் உடையவளாயும்

40. ஸ்வாமிக்கு கூறப்பட்ட ஆயுதங்களையும் ஆஸனத்தையும் உடையவளாகவோ ஸ்வாமியை ஆலிங்கனம் செய்வளாகவோ, ஸ்வாமியின் மடியில் அமர்ந்தவளாகவோ, நின்ற திருக்கோலம், அமர்ந்த கோலமுடையவளாகவோ

41. தொங்குகிற இடதுகால் அல்லது வலதுகால் இவைகளை உடையவளாகவோ, ஸ்வாமியுடன் கூடியவளாகவோ, தனித்திருப்பவளாகவோ கூறப்பட்டுள்ளன.

42. கருப்பு, வெள்ளை, சிகப்பு முதலிய நிறமுடையதாகவோ, ஸாதகனின் விருப்பமுள்ள வடிவமுடையதாகவோ நிமிர்ந்த தோற்றமுடையவளாகவோ த்விபங்கம் என்ற அமைப்புடன் கூடியதாகவோ

43. மூக்கின் நுனியில் சூத்ரத்தை தொங்கவிட்டு வலதுகால் நின்ற கோலமான இடத்தில் நுதிகால் நடுவில் உள்ள நூல்கோடு சிவசூத்ரமொன்று கூறப்பட்டுள்ளது.

44. அந்த சூத்ரத்திலிருந்து இடது பாகத்திலுள்ள மார்பக மத்ய தேசம் வரை மூன்றங்குலமும், அதே சூத்ரம் தொப்பூழ் நடுபாகம் வரை உள்ளவையாக இருப்பது ஓரங்குலமெனப்படும்.

45. சிவசூத்திரம், ஸ்தன மத்ய சூத்ரமிரண்டின் இடைவெளி நான்கு மாத்ரராங்குலமாகும். சிவசூத்ரம், முழந்தாள் சூத்ரமிரண்டின் இடைவெளி மூன்றங்குலம் எனப்படும்.

46. பாதங்களிரண்டின் கட்டை விரலுடைய இடைவெளி ஏழரை அங்குலமும் ஆகும். அந்த ஏழங்குலத்தின் மூன்று பாகமோ, ஓர் பாகமோ, குதிகால்களின் இடைவெளியாகும்.

47. கடக ஹஸ்திரத்தின் நுனிஉயரம் மார்பக நுனிக்கு ஸமமாகும். தொப்பூழ் பாகத்திலிருந்து மணிக்கட்டு வரை உள்ள இடைவெளி ஏழரை அங்குல அளவாகும்.

48. பக்கவாட்டுக்கை உள்ளடங்கிய நடுஇரண்டு கையின் இடைவெளி ஏழங்குலம் ஆகும். தொங்கும் கையின் நுனியிலிருந்து துடையின் நுனி ஆறங்குல அளவாகும்.

49. முழந்தாள் மூட்டிலிருந்து மணிக்கட்டு பாகம் வரையிலுள்ள இடைவெளி நான்கு அங்குலமாகும். பக்கவாட்டுக் கை, மத்யமக்கைகளின் இடைவெளி ஆறங்குலமாகவும் இருக்கலாம்.

50. கூறப்பட்டுள்ள சூத்ர கணக்கு எடுத்துக் காட்டுக்காகவேயாம். சூத்திரத்தில் நியமமில்லை. தன்னிச்சையான ஆலய தேவியின் இரண்டு விதமாக கூறப்பட்டுள்ளது.

51. மூலஸ்தான தேவியின் அளவு முறை முன்னமே கூறப்பட்டுள்ளது. உத்ஸவ மூர்த்தி தேவி பிம்பங்களின் அளவு மூலஸ்தான பிம்பத்தின் அளவேயாம்.

52. மூலாலய லிங்க அளவுப்படியே மூலஸ்தான தேவியின் அளவுப்படியோ அமைக்கவும். சரீர உருப்புக்களின் அளவு முழந்தாள், துடைபாக அளவு ஸமமாகவோ செய்யவும்.

53. இவ்வாறு தேவியை அமைத்து, அதன் பெயர் இருவிதமாக அறியவும். மனோன்மணீ என்றும் கவுரி என்றும் கூறப்படுகிறது. இருவருக்கும் உருவ அமைப்பில் மாற்றமில்லை.

54. ஸதாசிவ மூர்த்தமான லிங்கம் எங்கு நிர்மாணிக்கப்பட்டு தேவி அமைக்கப்படுகிறதோ அப்பொழுது மனோன்மணா என்ற பெயரை தேவீ அடைகின்றான்.

55. நிருத்த (நடராஜ) மூர்த்தி முதலான உத்ஸவ மூர்த்தி பேதங்களில் கவுரி முதலான பெயரை அடைகிறாள். நல்ல உருவ அமைப்புடன் கூடியதாக தேவியை அமைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

56. ஸாந்தமென்கிற ஹ, ரேபம் ர, மஹாமாயா ஈ, பிந்து நாதம் இரைகளுடன் சேர்ந்ததான ஹ்ரீம் என்றும் மனோன்மணீயின் பீஜமந்திரம் ஹ என்ற எழுத்து இருக்குமிடத்தில் க வின் முடிவான சேர்ந்ததாகவும்

57. க்ரீம் என்பதானது கவுரி மந்திரமாகும். மேற்கூறியவைகள் விஸர்கத்துடன் கூடியதாகவும், என்றிருக்கலாம். வ என்பதற்கு முடிவான ச வும் ரேபமான ர வும் மாயையாகிய ஈ யும், ஸ்ரீம் விஷ்ணு மந்திரமான ஹ்ரீம் கூடிய மந்திரம்

58. எட்டாவது வர்க்கமென்ற ச ச்வர்கத்தின் மூன்றாவது எழுத்தான ஸ வும், நான்காவது உயிரெழுத்தான ஈ யும், பிந்து நாதத்தன்மை உள்ளதாக இருப்பது தேவீ பீஜமாகும். (ஸீம்)

59. ஐம், க்லீம், சவும் என்பதாகவும், ஹம்ஸபீஜ மான ஹ வும், பிந்து நாதத்துடன் கூடியதாகவும், ஸ்ரீம் என்பதாகவுமோ தேவி பீஜத்தை அறிய வேண்டும்.

60. இவ்வாறு நான்கு பீஜ மந்திரம், தேவிக்கு பொதுவானதாகும். இவ்வாறாக மூலமந்திரம் கூறப்பட்டுள்ளது. அதில் பிரம்ம மந்திரம் அங்க மந்திரங்களை கல்பிக்க வேண்டும்.

61. ஹ்ருதய மந்திரத்திற்குட்பட்ட, ஜாதி பீஜம், மூலமந்திரம் இவைகளும் முறையே மூர்த்தி மந்திரம், வித்யாதேஹ மந்திரமாக கூறப்பட்டுள்ளது. ஆதி சக்தியின் மந்திரமாக ஹ்ரீம்முமோ மூலமந்திரமாக ஆகும்.

62. இவ்வாறாக மந்திரம் கூறப்பட்டது. பிறகு பிரதிஷ்டை கூறப்பட்டது. பிரதிஷ்டையின் நேரமும், அங்குரார்ப்பணமும் முன்புள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

63. மண்டபத்திலுள்ள ஸ்தண்டிலத்தில் கிழக்கு முகமாக தேவியை ஸ்தாபிக்கவும். தேவியின் பீடத்தில் மத்தியில் தங்கம், கிழக்கில் இந்த்ர நீலக்கல், முறைப்படி

64. வைடூர்யம், பவழம், முத்து, வைரம், புஷ்பராகம், கோமேதகம், மரகதம் இவைகளை ரத்னந்யாஸம் முறையாக

65. ஹ்ருதய மந்திரத்தினாலும் வாமை முதலான மந்திரங்களினாலோ வைக்கவும். அல்லது எல்லா இடத்திலும் தங்கத்தையோ வைக்கவும். நயனோந் மீலத்தை தங்கத்தினாலான நகத்தினால் செய்ய வேண்டும்.

66. தேன் முதலிய திரவ்யங்களால் பிம்பங்களுக்கு திரையிடப்பட்டவாறு கண் திறக்கவும். பசு, பிராமணர்கள், தான்யம், மனிதர்கள் இவர்களை பிம்பத்திற்கு காட்டுவதையும் முன்பு போல் செய்து

67. ஆசார்யனையும் சில்பியையும் பூஜித்து விட்டு, மண் முதலான பொருட்களால் பிம்ப சுத்தி செய்து கிராம பிரதட்சிணமும் ஜலாதி வாஸமும் செய்ய வேண்டும்.

68. பிம்பத்தை சுற்றிலும் கலசங்களை வாமை முதலான தேவியர்களை பூஜித்ததாகி வைக்க, ஆலயத்தின் நான்கு திசையிலுமோ, தென் கிழக்கு வடகிழக்கு திசையிலோ மண்டபங்களை அமைத்து

69. அதில் யோநி வடிவமாக ஒன்பது, ஐந்து, ஒன்று ஆகியவைகளை மந்திர எண்ணிக்கைகளுக்கு அடிப்படையாக குண்டம் அமைக்கவும். அதற்கு வடக்கு பாகத்தில் அழகாக முன்புபோல் ஸ்னான வேதிகையை அமைக்க வேண்டும்.

70. யாகசாலை அமைத்து சில்பியை த்ருப்தி செய்வித்து, அந்தணர்களுக்கு உணவளித்து, பசுஞ்சாணமெழுகிட்டு, புண்யாஹவாசனமும், வாஸ்து சாந்தியும் செயற்பாலது.

71. வாஸ்து ஹோமம் செய்து, வேதிகையின் மேல் ஸ்தண்டிலத்தில் முன்பு கூறப்பட்டுள்ளபடி சயனத்தை அமைக்க வேண்டும். தேவீ பிம்பத்தை ஜலத்திலிருந்து எடுத்து முன்பு கூறப்பட்டபடி ஸ்நபநம் செய்விக்க வேண்டும்.

72. சந்தனம் புஷ்பமிவைகளால் தேவி பிம்பத்தை பூஜித்து ஹ்ருதிய மந்திரத்தினால் ரக்ஷõபந்தனம் செய்விக்கவும். கிழக்கில் தேவியின் தலை உள்ளதாக சயனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

73. சயன பிம்பத்தை சிகப்புத் துணியால் போர்த்தி சந்தன புஷ்பங்களால் பூஜிக்கவும். தேவியின் சிரோதேசத்தில் பிரதான கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

74. உருவ அமைப்பு முறையாக பிம்பத்தை தியானித்து சந்தனமிவைகளால் பூஜிக்கவும். பிம்பத்தை சுற்றிலும் எட்டு கடங்களை ஸ்தாபித்து வாமை முதலியோர்களை பூஜிக்க வேண்டும்.


படலம் 43 தேவீ ஸ்தாபன விதி...

படலம் 43 தேவீ ஸ்தாபன விதி...
 

76. மேற்கூறிய தத்வங்களை மாயாதத்வ, ஸதாசிவதத்வ, சக்தி தத்வம் வரை வியாபித்திருப்பதாக நியாஸிக்கவும். ஆத்மாதிதத்வாதீச்வரியாக கிரியை, க்ஞான, இச்சா சக்திகள் கூறப்பட்டுள்ளன.

77. தாரிகை, தீப்திமதி, அத்யுக்ரா, ஜ்யோத்ஸ்நா, சேதா, பலோத்கடா, தாத்ரீ விப்வீ என்பதான மூர்த்திச்வரிகளோடு கூடியதாக மூர்த்திகளை ந்யாஸம் செய்ய வேண்டும்.

78. பஞ்சகுண்டப்படி மூர்த்திகளை ந்யாஸம் செய்யும் விஷயத்தில் வாமை முதலான மூர்த்திபர்கள் கூறப்பட்டுள்ளன. மூர்த்தீஸ்வரிகளை சந்தனம் புஷ்பம் இவைகளாலும் பிறகு நைவேத்யம் வரையிலுமாக முறைப்படி பூஜிக்க வேண்டும்.

79. தேவியின் மூலமந்திரத்தையும் மூர்த்தி மந்திரத்தையும் மந்திர அங்கமந்திரங்களையும் பூஜிக்கவும். ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி ஹோம கார்யத்தை ஆரம்பிக்க வேண்டும்.

80. ஆதிசைவ குலத்திலுண்டானவனும், முன்பு கூறப்பட்ட அமைப்பு முறையுடனுள்ளவனுமான ஆசார்யன், கிழக்கு முதலான திசைகளில் வேதபாராயணமும், தென்கிழக்கு முதலான திசைகளில் மூலமந்திர ஜபங்களையும் செய்ய வேண்டும்.

81. குண்டஸம்ஸ்காரம், அக்னிஸம்ஸ்காரம் செய்து ஸமித் முதலான பொருட்களால் மூர்த்தியை த்ருப்தி செய்விக்கவும். சமித், நெய், அன்னம், பொறி, எள், கடுகு, யவை இவைகளால் ஹோமம் செய்ய வேண்டும்.

82. புரசு, அத்தி, இச்சி, ஆல் ஆகிய ஸமித்துக்களை கிழக்கு முதலான திசைகளிலும், வன்னி, கருங்காலி, நாயுருவி, பில்வம் ஆகிய ஸமித்துக்களை தென்கிழக்கு முதலான திசைகளிலும்

83. பிரதான (முக்கியமான) குண்டத்தில் புரசும், மற்றும் புரச ஸமித்தையே எல்லா குண்டங்களிலும் ஹோமம் செய்யவும். ஆயிரம், ஐநூறு, நூற்றியெட்டு ஆவ்ருத்தியாக

84. ஆசார்யன் மூலமந்திரத்தினால் ஹோமம் செய்யவேண்டும். மூர்த்திபர்கள் மேற்கூறிய எண்ணிக்கையளவோ, பாதி எண்ணிக்கையாகவோ ப்ரும்ம மந்திர அங்க மந்திரங்களால் எட்டு திசைகளிலும் ஹோமம் செய்ய வேண்டும்.

85. மூர்த்தி, மூர்த்தீஸ்வரிகளை அந்தந்த குண்டங்களில் ஹோமம் செய்து திருப்திபடுத்த வேண்டும். எல்லா தேவர்களுடன் கூடியதாக முக்யமான குண்டத்தில் ஹோமம் செய்ய வேண்டும்.

86. சாந்தி கும்பதீர்த்தத்தால் பிரோக்ஷணம் செய்து அவரவர்களின் மந்திர ஜபத்தை செய்யவும். தர்பங்களால் தொடும்படி செய்வதை ஒவ்வொரு பாகத்திலும் செய்ய வேண்டும்.

87. பிறகு காலையில் மூர்த்திபர்களுடன் கூடிய ஆசார்யன் சுந்தனாக இருந்து தேவியை எழுந்தருளச் செய்து கும்பங்களையும், வஹ்னியையும் முன்போல் பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும்.

88. பூர்ணாஹுதி செய்து ஆலயத்தில் நுழையவும் மானுஷ, தைவிக பிம்ப விஷயத்தில் முன்பு கூறியபடி பூஜை முறைகளை செய்து ஸ்தாபிக்க வேண்டும்.

89. பிரம்ம சிலையை நவரத்ண, ஸ்வர்ணங்களோடு சேர்ந்ததாக பூஜித்து முன்பு போல் ஆலயத்தில் எடுத்துச் சென்று ஈச்வரியை மூலமந்திரத்தை கூறி பீடத்தில் சேர்க்க வேண்டும்.

90. நல்ல முஹூர்த்த லக்னத்தில் மந்திர நியாஸம் செய்யவும், உற்சவ மூர்த்தி பிம்பமாயிருப்பின் ஸ்னான வேதிகையில் ஸ்தாபித்து மந்திரநியாஸம் செய்ய வேண்டும்.

91. தேவிக்கு முன்னதாக கடங்களை ஸ்தாபித்து கும்பத்திலிருந்து மந்திரத்தை கிரஹித்து தேவி ஹ்ருதயத்திலும் மற்ற குடங்களிலிருந்து மந்திரங்களை எடுத்து பீடத்தை சுற்றிலும் நியாஸிக்க வேண்டும்.

92. தத்வதத்வேச்வர, மூர்த்தி மூர்த்தீச்வர நியாஸம் முன்பு போல் செய்யவும். அந்தந்த கும்பஜலங்களால் அந்தந்த இடங்களில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

93. ஸ்நபநாபிஷேகத்தை பின்பு செய்வித்து, அதிகமான நைவேத்யத்தையும், உத்ஸவத்தையும் செய்து, பலவித ஸ்தோத்ரங்களால் புகழ்ந்து பாடி கீழ்வரும் ஸ்லோகத்தை படிக்க வேண்டும்.

94. எந்த காலம் வரையிலும் சந்திரனும், சூர்யனும் பூமியில் இருக்கிறார்களோ, அந்த காலம் வரை ஹே தேவி உம்மால் இந்த ஆலயத்தில் இருக்க வேண்டும் என்று வேண்ட வேண்டும்.

95. தேசிகர்களை பூஜித்து தட்சிணையை கொடுக்கவும். உத்தம முதலான அமைப்புள்ள தேவியை லிங்க ஸ்தாபனத்தில் கூறப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும்.

96. தேவி மட்டும் முக்யமான தெய்வமாயிருப்பின் நான்காம் நாள் கல்யாண உத்ஸவம் செய்யவும். ஸ்வாமியுடன் சேர்ந்திருக்கும் தேவியாயிருப்பின்

97. கல்யாணோத்ஸவத்தை செய்ய வேண்டாம். இவ்வாறாக பிரதிஷ்டை கூறப்பட்டது. இவ்வாறு எந்த மனிதன் செய்கிறானோ அவன் புண்ய கதியை அடைகிறான்.

98. மேற்கூறியபடி எந்த புருஷன் பாவனையோடு பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் தனக்கு விருப்பப்பட்டவைகளை இந்த உலகத்தில் அனுபவித்து முடிவில் சிவபதத்தையாகிறான்.

99. இருபத்தோரு தலைமுறை பித்ருக்களை, முன்னோர்களின் இருப்பிடத்தை அடையச் செய்கிறது. பிறகு தேவியின் நித்யப்படி பூஜையின் முறையை கேளுங்கள்.

100. ஜலமலசுத்தி, ஆசமநம், குளியல், ஸந்த்யாவந்தனம், மந்திரதர்பணம் முதலியவைகளை முன்கூறிய முறைப்படி செய்து ஆலயத்தில் நுழையவும்.

101. கை, கால்களை சுத்தம் செய்து முறைப்படி ஆசமனம் செய்து அங்கந்யாஸம், கரந்யாஸம், ஸாமான்யார்க்கம் செய்முறையும் செய்து

102. வாயிலையும், வாயிற்காப்போர் தேவிகளையும் ஸாமான்யார்க்க ஜலத்தால் பிரோக்ஷித்து வாயிற் படியின் இருபக்கங்களிலும் ஸங்கநிதி, பத்மநிதி இருவர்களை

103. திவார சக்தியாக பூஜித்து, கையில் கத்தி, கேடயம் தரித்திருப்பவர்களாயும், சடாமுடியையுடையவர்களாயும், சிகப்பு கருப்பு நிறமாயும் பயங்கரமாய் உடையவர்களாயும்

104. எல்லா அணிகலன்களையும் எல்லா ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டவளாயும் பூஜித்து, வாயிற் படியின் மேல்பாகத்தில் ஸரஸ்வதியையும், இரண்டு கிளைகளிலும்

105. கங்கையையும், யமுனையையும் பூஜித்து, தேஹளீ பாகத்தில் சக்தியஸ்த்ரத்தையும் அல்லது ஜடாமுடியையுடையவளாக விசாலாக்ஷியை

106. சம்ருத்தியையும், த்ருதியையும் வலது இடது கிளை பாகத்தில் பூஜிக்கவும். ஸரஸ்வதியையும் கங்கையையும் வெண்மை நிறமுடையவர்களாக எண்ணவும்.

107. மற்ற எல்லா தேவதைகளையும் கருப்பு நிறமுள்ளவர்களாயும் எல்லா அணிகலன்களையும் இரண்டு கைகளால் கத்தி, கேடயத்தையும் தரித்தோ, நான்கு கைகளையும் உடையவர்களாகவோ

108. ஸ்வாமிக்காக கூறப்பட்ட திவார தேவதைகளையோ விமலன், ஸூபாஹூவையுமோ கதவுகளிலோ பூஜித்து, வலது அல்லது இடது பக்க வழியாக உள்ளே நுழைய வேண்டும்.

109. வாஸ்து பிரம்மாவை பூஜித்து நல்ல இருக்கையில் வடக்கு முகமாக அமர்ந்து தன்னை சக்தியிடம் சேர்ந்ததாக சேர்த்து முன்பு போல் பூதசுத்தியையும் செய்து

110. ஆத்மாவை அம்ருதத்தால் நனைந்ததாகி செய்து ஆத்மாவை அம்ருதீகரணம் செய்வித்து கரந்யாஸமும், அந்த மந்திரங்களால் சரீரந்யாஸமும் செய்ய வேண்டும்.

111. ஓம்காரத்துடன் அஷ்டத்ரிம்சத்கலா நியாஸத்தை ஐந்து தலை முகமுள்ள தேவியின் பூஜையில் செய்ய வேண்டும்.

112. ஓர் சிரஸ் உள்ள தேவிக்கு ஏகத்ரிம்சத் கலாந்யாஸமென்ற 31 கலைகளின் நியாஸத்தையும் செய்ய வேண்டும். சசினி முதலான கலைகளை மட்டுமே நியாஸம் செய்ய வேண்டும்.

113. அல்லது சிவமந்திரங்களால் சைவ விக்ரஹமாக்கி தேவி, முருகன், வினாயகர் ஆகிய எல்லா தேவதைகளையும் பூஜிக்க வேண்டும்.

114. ஸகளீகரணம் செய்து கொள்ளப்பட்ட சரீரத்தை உடையவனாகி அந்தர்யாகத்தை செய்யவும். ஹ்ருதயத்தில் தேவி பூஜையையும் தொப்பூழ் பிரதேசத்தை ஹோம பாவனையாயும்

115. நெற்றியில் ஈச்வரியை எல்லோரிடமும் இருப்பவளாகவும் வரத்தை கொடுப்பவளாகவும் தியானிக்கவும். ஸ்தான சுத்தி செய்து, விசேஷார்க்யம் செய்ய வேண்டும்.

116. சந்தனம், புஷ்ப, அக்ஷதையிவைகளுடன் கூடிய பொருள்களை விசேஷார்க்ய ஜலத்தால் சுத்தி செய்து ஆத்மாவை பூஜித்து மந்திர சுத்தியையும் செய்ய வேண்டும்.

117. பின்பு பிம்ப சுத்தி செய்து நிர்மால்ய பூஜையை செய்யவும். கணாம்பிகையை வித்மஹே மஹாதபாயை தீமாஹி என்றும்

118. பிறகு தந்நோ தேவீ பிரசோதயாத் என்பது யாக மந்திரத்தை கூறி அர்ச்சித்து நிவேதனம் செய்யவேண்டும்.

119. நிர்மால்ய பொருட்களை நிர்மால்யத்தை சண்டிகேஸ்வரியிடம் ஸமர்ப்பித்து அல்லது விஜர்ஜனம் செய்தோ, தேவியின் அஸ்திரத்தை கூறி பிம்பசுத்தி செய்யவும்.

120. உலோக பிம்பமாயிருப்பின் பர்வ காலங்களில் அபிஷேகமும், சுண்ணாம்புக்கலவை, சுவற்றுச் சித்திரமாயிருப்பின் பூஜை செய்வதே சுத்தியென்றும் கூறப்படுகிறது. (கர்மாச்சையே)

121. அல்லது அஸ்திர மந்திரங்களால் பனை ஓலை விசிறி காற்றினால் சுத்தி செய்யும். அவ்வாறே அங்கு வாடாத மாலையும் அணையா விளக்கு மேற்படுத்தவும்.

122. தினந்தோறும் பூஜிக்காமல் வருடத்திலோர் முறை பூஜிக்கவும். கற்சிலை வடிவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்வது கூறப்படுகிறது.

123. நடுவில் ஆஸனத்தை ஏற்படுத்தி ஆதார சக்தியையும், அனந்தன், தர்மன் முதலியோர்களையும் அனந்தன் முதலியவர்களையும்

124. அதச்சதநம், ஊராத்வசதளம், பத்மம், கர்ணிகை, சக்தி மண்டலத்தையும் இச்சை, ஞான, க்ரியை ஆகிய மண்டல சக்திகளோடு கூடிய வாமை முதலான தேவிகளுடன் கூடியதும்

125. பிறகு தேவ்யாஸநாய நம: என்பது முதற்கொண்டு மூர்த்தி உருவத்தை பூஜித்து பஞ்ச ப்ரும்ம நியாஸமும், கலாந்யாஸமும் முன்பு போல் செய்ய வேண்டும்.

126. பூஜைக்காக உள்ள மூர்த்தியின் வித்யா தேஹ அமைப்பை ஏற்படுத்தி பிரணவ மந்திரத்தினால் அந்த பிம்பத்தில் அனுக்ரஹத்தால் தேவியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

127. மூலமந்திரத்தை புஷ்பாஞ்சலியையுள்ள கையையுடையவனாய் ஹ்ருதயத்திலிருந்து வந்ததாக பாவித்து தேவியிடம் ஆவாஹித்து ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

128. ஸன்னிதானம், ஸன்னிரோதனம், அவகுண்டமிவை ஹ்ருதய மந்திரத்தினால் செய்து ஹ்ருதலம், முதலான மந்திரந்யாஸத்தை செய்து மஹாமுத்ரையை காண்பிக்க வேண்டும்.

129. அர்க்யபாத்ரத்தை வைத்துவிட்டு, ஹ்ருதய மந்திரத்தினால் திருவடியில் பாத்யத்தையும் தத்புருஷ மந்திரத்தினால் முகத்தில் ஆசமனீயமும் ஈசான மந்திரத்தினால் அர்க்யத்தையும் கொடுக்க வேண்டும்.

130. பாத்யம் முதலிய திரவ்யங்களை முன்பு போலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ செய்து ஸமர்ப்பிக்க வேண்டும். சந்தனம், புஷ்பம் இவைகளுடன் சேர்த்து ஹ்ருதய மந்திரத்தினால் தூபம் கொடுக்க வேண்டும்.

131. பஞ்சாம்ருதத்துடன் கூடியதாகவோ பஞ்சாம்ருதம் இன்றியோ அபிஷேகம் செய்விக்கவும். திரு ஒற்றாடை செய்து ஆடை அணிவிக்க வேண்டும்.

132. வாமதேவ மந்திரத்தினால் ஆசமனத்தை சந்தனம், புஷ்பம், தூபம் இவைகளுடன் கொடுக்கவும். தீபத்தையும் நைவேத்யத்தையும் மூலமந்திரத்தினால் கொடுக்க வேண்டும்.

133. ஆமந்திரண ஹவிஸையோ, ஸாமான்ய ஹவிஸையோ நிவேதனம் செய்து பின்பு ஆவரண பூஜையையும் தென்கிழக்கில் ஹ்ருதயத்தையும் பூஜிக்க வேண்டும்.

134. ஈசான திசையில் சிரஸ்ஸையும் தென் மேற்கு திசையில் சிகையையும், வடமேற்கு திசையில் கவசத்தையும் நான்கு திசைகளிலும் அஸ்திரத்தையும் வாமை முதலியோர்களையும் பூஜிக்க வேண்டும்.

135. தேவீகணங்கள், வித்யேசர்கள், திக்பாலர்கள், தசாயுதங்கள் இவர்களைச் சுற்றிலும் பூஜிக்கவும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்பதான ஆவரண பூஜையையோ செய்யவும்.

136. திரும்பவும் தூபம், தீபம், மந்திரம், பாட்டு பாடுதல் இவைகளையுமோ செய்து நைவேத்யம் பலி ஹோமம் முதலியவைகளைச் செய்து நித்யோத்ஸவத்தை செய்யவும்.

137. நித்யோத்ஸவத்திற்காக தேவி அமைக்கப்படவேண்டும். அந்ததேவி ஓர்முகம், நான்கு கை, வரதம், அபயம், சங்கு, சக்கரமிவைகளை தரித்திருப்பவர்களாகவும்

138. தாமரையாஸனத்தில் அமர்ந்திருப்பவளாய் மனோன்மணீயை பூஜிக்கவும். புஷ்பம், அன்னம் அக்ஷதைகளால் லிங்கங்களில் முறையே மேதை, ப்ரக்ஞை, உஷை ஆகிய இவர்களை பூஜிக்கவும்.

139. முன்பு கூறப்பட்ட முறைப்படி ஆலயத்தை வலம் வருதலைச் செய்யவும். பாதுகை பூஜையுடன் கூடியோ ஆலயத்தை அடையவும்.

140. தினந்தோறும் செய்ய வேண்டிய திருவிழாவிற்கான பிம்பங்கள் பலவகை இருப்பின், அவைகளில் அந்த ஆலயத்திற்கு ஏற்றவாறு நல்ல அமைப்புள்ள உற்சவ பிம்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

141. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு காலங்களில் ஏதேனும் ஓர் காலமோ தேவியை எப்பொழுதுமோ பூஜிக்க வேண்டும்.

142. எல்லா விருப்பத்தையும் கொடுக்கக் கூடிய நித்யோத்ஸவம் கூறப்பட்டது. உத்ஸவம், ஸ்நபநம், மரிக்கொழுந்து சாற்றும் முறையையும்

143. பவித்ரோத்ஸவம், க்ருத்திகாதீபோத்ஸவம், வருடாந்திர திருவிழாக்கள், வஸந்தோத்ஸவம்

144. அந்தந்த மாதத்தில் மாத உத்ஸவமும், நவநைவேத்யமுறை, விசேஷமாக பூர நக்ஷத்திர திருவிழாவும் பிராயச்சித்தமும் செய்யவேண்டும்.

145. பழுதடைந்ததை புதுப்பித்தல் செய்வதையும் முன்புபோல் செய்யவும். ஆனால் உத்ஸவக் கொடியில் ஸிம்மத்தையோ, வ்ருஷபத்தையோ வரையவும்.

146. விசேஷமாக பூர நக்ஷத்திரத்தில் தீர்த்த வாரியை செய்யவும். தேவிக்கும், சிவோத்ஸவ முறைப்படி தினந்தோறும் திருவிழாவை நடத்தலாம்.

147. கொடியேற்றுதல், ஹோமம், பலியின்றி வீதிவலத்தை மட்டுமோ செய்ய வேண்டும். தேவிக்கு அஸ்திர சக்தியாக சக்ர ரூபஅஸ்திரத்தையோ, த்ரிசூலாஸ்திரத்தையோ அமைக்க வேண்டும்.

148. உத்ஸவ மூர்த்தி பிம்பமானது முன்பு கூறப்பட்ட முறைப்படி செயற்பாலது. ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட தேவிக்கு கிராமத்தில் வெளியில் வலம் வருதல் கூடாது.

149. எங்கு பலி கொடுக்கப்படுகிறதோ, அங்கு கட்டாயம் வீதிவலம் வருதலை செய்ய வேண்டும். மற்ற இடத்திலேயாவது வீதிவலத்தையும் எல்லாவற்றை ஆலயத்திலேயுமோ செய்ய வேண்டும்.

150. ஒரே பிரகாரமுள்ள ஆலயமாயிருப்பின், பிரகாரத்திற்கு வெளியில் பலி, வீதிவலம் வருதல் உத்தமம். இந்த விதி முறையில் எல்லா தேவர்களுக்கும் பொதுவானதாகும்.

151. ஆலயத்தின் மூர்த்தேஷ்டிகாஸ்தாபனம், ஸ்தூபிஸ்தாபனமிவற்றை முன்பு போல் செய்யவும். எட்டு திசை மூர்த்திகளுடன் கூடியதாகவும், மத்தியில் கும்பத்தையுடையதாகவும் (ஸ்தூபியுடன்)

152. கோபுரஸ்தாபனத்தை முன்பு கூறியுள்ளபடி செய்ய வேண்டும். இந்த தேவியின் பிரதிஷ்டையானது முதன் முதலில் செய்யப்படும் பாலஸ்தாபனத்துடன் கூடியதாகவோ இல்லாமலோ செய்ய வேண்டும்.

153. அரசனுக்கு தேவியின் திருவருளால் எல்லா ராஜ்யத்திற்கும் தலைவனாகும் தன்மை ஏற்படுகிறது. ஆகையால் தேவிக்கு முன்பாக அரசனுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும்.

154. இவ்வாறாக தேவியின் பிரதிஷ்டை முதலிய க்ரியைகள் நன்கு கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தேவியை பிரதிஷ்டை செய்யும் முறையாகிற நாற்பத்தி நான்காவது படலமாகும்.

படலம் 42: ஸதாசிவ ஸ்தாபன விதி...

படலம் 42: ஸதாசிவ ஸ்தாபன விதி...

42 வது படலத்தில் ஸதாசிவ ஸ்தாபனமுறை கூறப்படுகிறது. முதலில் அமைப்பு முறைப்படி ஸதாசிவ ஸ்தாபனம் கூறுகிறேன் என்று பிரதிக்ஞை, பிறகு முன்பு கூறப்பட்ட முறைப்படி கற்ச்சிலை முதலான திரவ்யங்களால் பிம்பம் அமைக்கவும் என கூறப்படுகிறது, பிறகு ஸதாசிவ மூர்த்தியின் அமைப்பு முறை விளக்கப்படுகிறது, இங்கு ஸதாசிவன் வலது கை ஜந்துகளால் அபயம் வரதம் சக்தி திரிசூலம் கட்வாங்கம் இவைகளையும் இடது பாக ஐந்துகைளால் ஸர்ப்பம், அக்ஷமாலை, உடுக்கை நீலோத்பலம், மாதுளம் பழம் இவைகளையும் தரித்து கொண்டும், ஐந்து முகத்துடனும் மூன்று கண்ணும் சுப்ரஸன்னராயும் ஜடாசூடராயும் ஸ்வேதவர்ணராயும் பத்தபத்மாஸனத்தில் அமர்ந்தவராயும் ஞானசந்திரகலையுடன் கூடியவாராயும் பதினாறு வயது சமானமாக இருப்பவரும், மனோன்மணியுடன் கூடியவராக ஸதாசிவன் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு அர்ச்சனாங்க விதி படலத்தில் கூறியபடியோ வேறுவிதியான முறைபடியோ ஸதாசிவரை அமைக்கவும் என்று கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டா விதி கூறப்படுகிறது, பின்பு முன்பு கூறப்பட்டுள்ளபடி திதி வாரகாலங்களை பரிசித்து அங்குரார்பணம் செய்து அதன் முடிவில் ரத்னநியாசம் நயனோன்மீலனம் பிம்பசுத்தி செய்து கிராமபிரதட்சிண பூர்வமாக பிம்பத்தை ஜலதீர்த்தங்களுக்கு அழைத்து சென்று ஜலாதிவாசம் செய்யவும். பிறகு சயனாதிவாசத்திற்காக வேதிகை குண்டஸஹித மாக மண்டபம் அமைத்து, சில்பியை திருப்தி செய்து சில்பிவிஸர்சனம், பிராமணபோஜனம் புண்யாஹ பிரோக்ஷணம், வாஸ்துஹோமம் முறையாக பூ பரிக்ரஹம் என்ற கிரியையை செய்யவும், இங்கு வேதிகைக்கு மேல் ஸ்தண்டிலம் அமைத்து முன்புபோல் சயனமுறை செய்யவும், பிறகு பிம்பத்தை ஜலத்தில் இருந்து எடுத்து மண்டபத்திற்கு அழைத்து சென்று சுத்தி செய்து, ரக்ஷõபந்தனம் செய்து ஸ்வாமியை கிழக்கு தலைவைத்து ஊர்த்துவ முகமாக சயனாதிவாசம் செய்யவும்.

ஸ்வாமியின் தலைபாகத்தில் ஸதாசிவகும்பம் வைத்து அதில் அவரை பூஜிக்கவும், ஸ்வாமி கும்பத்திற்கு வடக்கில் வர்த்தனியை வைத்து அதில் மனோன்மணியை பூஜிக்கவும். சுற்றிலும் எட்டு கடங்கள் ஸ்தாபித்து அவைகளில் வித்யேஸ்வரர்களை பூஜிக்கவும், பிறகு கும்பங்களில் தத்வ தத்வேஸ்வர மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவும். பிறகு குண்டத்தையும் வஹ்நியையும் ஸம்ஸ்காரம் செய்து ஹோமம் செய்யவும் எனக்கூறி ஹோம திரவ்ய நிரூபண முதன்மையானதாக ஹோமமுறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரண்டாம்நாள் ஆசார்யன் சுத்தி செய்து கொண்டு முன்பு போல் கும்பத்தையும் அக்னியையும் பூஜித்து ஹோமம் செய்யவும் என்று கூறி யஜமானனால் ஆசார்யன் முதலானவர்களுக்கு கொடுக்கப்பட்ட தட்சிணையை பெற்றுக் கொண்டு பிம்பத்தை எடுத்து ஸ்தாபித்து நல்ல முகூர்த்தத்தில் ஸதாசிவகும்பத்திலிருந்து மந்திரங்களை எடுத்து ஸதாசிவ ஹ்ருதயத்தில் ஸ்தாபிக்கவும், பிறகு வர்த்தனி பீஜமந்திரத்தை ஸதாசிவரின் பீடத்தில் ஸ்தாபிக்கவும். அம்பாள் சேர்ந்த பீடமாக இருந்தால் அந்த வர்தனிபீஜத்தை அம்பாளின் ஹ்ருதயத்தில் ஸ்தாபிக்கவும் மற்ற கும்பங்களிலிருந்து மந்திரத்தை எடுத்து பீடத்தை சுற்றிலும் ஸ்தாபிக்கவும். அந்தந்த கடதீர்த்தங்களால் அந்தந்த ஸ்தானத்தில் அபிஷேகம் செய்யவும். பிறகு ஸ்நபநம், அதிகமான நைவேத்தியம், விசேஷபூஜை, உத்ஸவமும் செய்யவும். தேவிக்கும் ஸ்நபனம் செய்யவும். இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்யவும் என்று பிரதிஷ்டாமுறையுடன் கிரியை வரிசைகள் மிகவும் சருக்கமாக அந்தந்த கிரியையை எப்படி செய்யவேண்டும் என்று கூறப்படாமல் குறிப்பிடப்படுகிறது. பிறகு நித்தியார்ச்சனை முதலியவைகள் முன்பு போல செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறு யார் ஸதா சிவபிரதிஷ்டை செய்கிறானோ அவன் இங்கு போகங்களை அனுபவித்து முடிவில் சிவஸாயுஜ்ய பதவி அடைகிறான் என்று பல ஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு 43 வது படலத்தில் ஸதாசிவபிரதிஷ்டை முறை கூறப்படுகிறது! என்று கருத்து சுருக்கமாகும்!!

1. நன்கு லக்ஷணத்துடன் கூடிய ஸதாசிவ ஸ்தாபனத்தை கூறுகிறேன். முன்பு கூறியபடி சிலை முதலிய திரவியங்களை கொண்டு நல்ல முறையில் ஸதாசிவரை செய்ய வேண்டும்.

2. ஐந்து முகத்தோடு வெண்மையாய் கட்டப்பட்ட பத்மாஸனத்துடன் பிங்கள வர்ணமான சடையுடன் பத்துகைகளோடு கூடியவராக

3. அபயம், வரதம், சக்தியாயுதம், த்ரிசூலம் கத்தி, இந்த ஆயுதங்களை வலது பக்க கைகளிலும்

4. நல்ல பாம்பு, அக்ஷமாலை, உடுக்கை, நீலோத்பல புஷ்பம், மாதுளம் பழம் இவைகளை இடது கைகளில் சுப்ரஸன்னமாக தரித்து இருப்பவரும்

5. அர்ச்சனாவிதியில் கூறியுள்ள ரூபதியானம் உடையவராகவோ இச்சாசக்தி, ஞானசக்தி, க்ரியா சக்தி மூன்று சக்திகளின் வடிவமான கண்களை உடையவரும்

6. க்ஞானமயமான சந்திரகலையோடு கூடியவரும் 16 வயதையுடையவராக அழகானவருமாக உள்ளவரை, சுகாசன மூர்த்தியைப்போல் ப்ரும்மசூத்ரம் முதலியவைகளுடன் கூடியதாக ப்ரதிமை கூறப்பட்டுள்ளது.

7. மனோன்மனியுடன் கூடியவராக இந்த பிரகாரம் ஸதாசிவன் செய்ய வேண்டியது. இது மாதிரியாக லக்ஷணம் கூறப்பட்டது. பிரதிஷ்டையை கூறுகின்றேன்.

8. முன்போல் நாள் முதலியனவைகளை கிரஹித்து அங்குரார்ப்பணம், அதன் முடிவில் ரத்ன நியாஸத்தையும், கண் திறப்பதையும் செய்ய வேண்டும்.

9. பிம்ப சுத்தி, கிராம பிரதக்ஷணம், ஜலாதி வாஸம் செய்து பிறகு மண்டபத்தை முன் போல் செய்ய வேண்டும்.

10. மண்டபத்தில் ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற முறையில் குண்டங்கள் நிர்ணயமாகும். அந்த குண்டங்களை வட்டமாகவோ எண்கோணமாகவோ செய்யலாம்.

11. பிறகு சில்பியை விடுவித்து பிராமண போஜனம், புண்யகவாசனம், வாஸ்த்து சாந்தி செய்து பூமியை கிரஹித்து சுத்தி செய்ய வேண்டும்.

12. வேதியின் மேல் ஸ்தண்டிலம் செய்து படுக்கையை முன்போல செய்யவும். பிறகு பிம்ப சுத்தி செய்து ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

13. படுக்கையில் ஈசனை மேல் நோக்கிய முகத்துடன் கிழக்கு பக்கம் தலையை வைத்து படுக்க வைக்க வேண்டும். ஈசனுடைய தலைப் பக்கத்தில் ஸதாசிவ கும்பத்தை வைக்க வேண்டும்.

14. எல்லா விதமான லக்ஷணத்தோடு கூடியவரான ஸதாசிவனை கும்பத்தில் பூஜிக்க வேண்டும், கும்பத்திற்கு வடக்கு பக்கத்தில் வர்த்தினியை வைத்து அதில் மனோன்ணியை பூஜிக்க வேண்டும்.

15. சுற்றிலும் எட்டு கும்பங்களை வைத்து அவைகளில் அஷ்டவித்யேச்வரர்களை பூஜிக்க வேண்டும். தத்வ, தத்வேச்வர, மூர்த்தி, மூர்த்தீச்வரர்களை நியஸித்து ஹோமம் செய்ய வேண்டும்.

16. குண்டம், அக்னியை ஸம்ஸ்காரம் செய்து ஸமித், நெய், அன்னம், எள்ளு, யவை, பொறி இவைகளை ஹோமம் செய்து முடிவில் வெண்கடுகு பால் ஹோமம் செய்ய வேண்டும்.

17. அரசு, அத்தி, இச்சி, ஆல், கிழக்கு முதலிய திசை குண்டங்களிலும் வன்னி, கருங்காலி, நாயுருவி, வில்வஸமித்து முதலியன ஆக்னேயம் முதலான கோணங்களில் உள்ள குண்டங்களிலும்

18. பிரதான குண்டத்தில் புரச ஸமித்தும் எல்லா குண்டங்களுக்கும் புரச ஸமித்தையோ ஹோமம் செய்யலாம். தனித்தனியாக முன்போல் ஹோமம் செய்து இரண்டாவது தினம் ஆசார்யன் சுத்தி உள்ளவனாக

19. பிம்பத்தை சயனத்திலிருந்து எடுத்து முன்போல் அக்னியையும் கும்பத்தையும் பூசை செய்து தேசிகர் முதலானவர்களுக்கு பிறகு தட்சிணையை கொடுக்க வேண்டும்.

20. பிறகு நல்ல முகூர்த்த வேளை வந்தவுடன் கும்பத்திலிருந்து மூல மந்திரத்தை தியானம் செய்ய வேண்டும். கும்பத்திலிருந்து மூலத்தை எடுத்து ஈசன் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

21. வர்த்தனியிலிருந்து மூலத்தை எடுத்து பீடத்தில் சேர்க்க வேண்டும். தேவீ கூட இருந்தால் அவளது ஹ்ருதயத்தில் மூலத்தை சேர்க்க வேண்டும்.

22. மற்ற கும்ப பீஜங்களை எடுத்து பீடத்தை சுற்றிலும் நியஸிக்க வேண்டும். அந்தந்த இடத்தில் அபி÷ஷேகம் செய்ய வேண்டும்.

23. ஸ்நபனம் நிறைய நைவேத்யம் பூஜை உத்ஸவம் செய்ய வேண்டும். தேவிக்கு ஸ்நபனம் செய்து பிறகு கல்யாண உத்ஸவம் செய்ய வேண்டும்.

24. இதில் கூறப்படாதகைகளை ஸாமான்ய ஸ்தாபனத்தில் கூறியபடி செய்யவும். நித்ய பூஜைகள் எல்லாம் முன்பு கூறியுள்ளபடி அனுஷ்டிக்க வேண்டும்.

25. எந்த மனிதன் ஸதாசிவ பிரதிஷ்டையை இது மாதிரி செய்கின்றானோ அவன் இங்கு போகங்களை அனுபவித்து முடிவில் பரமசிவனை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் சதாசிவஸ்தாபன முறையாகிய நாற்பத்தி மூன்றாவது படலமாகும்.

படலம் 41: அங்கலிங்க பிரதிஷ்டை...

படலம் 41: அங்கலிங்க பிரதிஷ்டை...

41 வது படலத்தில் அங்கலிங்கத்தின் பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. முதலில் எங்கு மண்டபங்கள் பரிவாரங்கள் பிராகாரங்கள் (இந்த) கோபுரங்கள் லிங்கத்திற்கு இருக்கின்றனவோ அந்தலிங்கம் பிரதானம் என கூறப்படுகிறது. எந்தலிங்க மானது. ஐந்து பிராகாரத்தின் நடுவில் பரிவார தேவர்கள் இன்றி பிரதான லிங்கத்திற்கு இடையூறின்றி உள்ளதோ அந்தலிங்கம் அங்கலிங்கம் எனப்படும் என்று பிரதான, அங்கலிங்கத்தின் அமைப்பு கூறப்படுகிறது. அங்கலிங்க விஷயத்தில். மேற்கு, வடக்கு, கிழக்கு, திக்குகளில் மூலஸ்தான லிங்க ஆலய அளவில் விமானம் முதலியவைகள் செய்து அங்கு அங்கலிங்கம் ஸ்தாபனம் செய்யவும். அங்கலிங்கம் ஸ்தாபனத்திற்கு உரிய இடத்தில் பிரதிமையையோ, ஸ்தாபிக்கவும் என கூறப்படுகிறது. மூலஸ்தானத்திற்கு மூன்றாவது பிராகாரத்தின் வெளியில் தேவதைகள் ஸ்தாபிக்கப்பட்டு இருந்தால் அங்கு பரிவாரம் முதலியவற்றை சூக்ஷ்மமாக ஸ்தாபித்து பூஜிக்கவும். அங்கு நித்யோத்ஸவம் முதலியவைகளை செய்யவேண்டாம் என கூறப்படுகிறது. பிறகு அங்கலிங்கம் முதலியவைகள் சைவமார்க்கத்தினாலேயே பிரதிஷ்டை செய்யப்படவேண்டும். பாசுபத தந்திரத்தினாலோ மஹாவ்ருத தந்திரத்தினாலோ பிரதிஷ்டை செய்யக் கூடாது. பவுத்த ஆர்கத, காபால, பாஞ்சராத்திர, முதலிய வேறு சித்தாந்த கிரந்த முறையினாலும் பிரதிஷ்டை செய்யக் கூடாது. அறியாமையினால் ஸ்தாபித்தாலும் உடனேயே சைவதந்திரத்தால் பிரதிஷ்டை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு அங்கலிங்க விஷயத்தில் விமானம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. அங்கு ஸார்வதேசிகம் என்ற விமானம் ஆலயம் செய்யப்படவேண்டும். லிங்கமும் ஸார்வ தேசிகமே விரும்பத் தக்கதாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஆலயம் அமைக்கும் விஷயத்தில் தனிமையாக உழுதல் முதலிய கிரியைகள் செய்ய வேண்டுமா என்பது விளக்கமாக கூறப்படுகிறது. ஆத்யேஷ்டிகை முதலிய கார்யங்கள் அங்கு செய்ய வேண்டியதாகும் மூர்த்நேஷ்டிகை முதலிய கார்யம். பிரதிஷ்டை ஜீர்ணோத்தாரணம் ஆகியவைகள் முன்பு கூறப்பட்டுள்ள விதிப்படி. எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறு செய்யவும் என அறிவிக்கப்படுகிறது. மூலஸ்தான லிங்கத்திற்கு பவித்ர சமர்பணம் முதலிய கார்யங்கள் செய்யும் பொழுது அங்கலிங்கம் முதலியவைகளுக்கு பவித்ர ஸமர்பணம். அந்த காலத்தில் செய்ய வேண்டுமா? இல்லையா? என்று விளக்கம் கூறப்படுகிறது. பிறகு தனியாகவோ சாஸ்திர முறைப்படி செய்ய வேண்டும் என்று வேறு விதமாக கூறப்படுகிறது. பிறகு அங்கலிங்கத்தை பிரதிஷ்டைசெய்யும் யஜமானன் ஆயுள், ஆரோக்யம், முதலியவைகளை உடையவராகவும் நல்லவிருப்பத்தை அடைந்த வராகவும் தேகம் அழியும் சமயம் சிவனுடன் சேர்ந்து மகிழ்ச்சி அடைகிறான் என்று பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு 42வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. அங்க லிங்க பிரதிஷ்டையை சுருக்கமாகக் கூறுகின்றேன். லிங்கம் பிரதானம் என்றும் அங்கம் என்றும் இருவகைப்படும்.

2. மண்டபங்கள் பிரகார கோபுரம் முதலியன பரிவாரங்கள் எந்த லிங்கத்திற்கு இருக்கின்றனவோ அது பிரதான லிங்கம் எனக் கூறப்படுகிறது.

3. ஐந்து பிரகாரங்கள் நடுவில் எது பிரதான லிங்கத்திற்கு விரோதம் இல்லாமல் பரிவாரம் இல்லாமல் உள்ளதோ அது அங்க லிங்கம் எனப்படும்.

4. மேற்கு வடக்கு கிழக்கு திக்குகள் சுபமான திசைகள் எனப்படும். சுபதிசையில் பிரதிஷ்டை செய்வது யோகத்தின் பொருட்டும் எல்லா திக்குகளிலும் பிரதிஷ்டைசெய்வது முக்தியின் பொருட்டும் ஆகும்.

5. அவைகளுக்கு விமானம் முதலியவைகள் மூல லிங்கத்திற்கு பெரிதாக இருக்கக் கூடாது. அந்த இடத்தில் லிங்கத்தையோ பிரதமையையோ இரண்டையுமோ பிரதிஷ்டை செய்யலாம்.

6. பரிவார தேவதைகளாகி கூறப்பட்டவைகளை மூன்றாவது பிரகார வெளியில் விரிவு இல்லாமல் செய்ய வேண்டும்.

7. அங்கு நித்யோத்ஸவம் முதலியவை செய்வது விரோதமாகாது. ஆனால் அங்க லிங்கம் முதலியவைகள் சுத்த சைவ முறையினால் செய்ய வேண்டும்.

8. பாசுபதம், ஜைனம், பவுத்தம், ஆர்ஷதம், காபாலிகம், பாஞ்சராத்ரமிவைகளால் முறைப்படி பிரதிஷ்டை ஒருபொழுதும் செய்யக்கூடாது.

9. வேறு மத நூல்களின் முறையறிந்த மற்றவர்களாலும் செய்யக்கூடாது. ஆணவத்தினால் அவர்களால் செய்யப்படுமானால் பிரதிஷ்டை, காலங்கடத்தாமல் உடன் சைவ முறைப்படி செய்ய வேண்டும்.

10. அங்க லிங்கத்தின் பிரமானம் (அளவு) ஓர் முழம் முதல் மூன்று முழம் வரைதான் இருக்க வேண்டும். அதற்கு மேல் உயரமாக செய்யக் கூடாது. செய்தால் எல்லா கெடுதல்களையும் செய்யும்.

11. பதினைந்து முழத்திற்கு மேல் ஆலயமமைக்கக் கூடாது. தனது கர்பகிரஹத்தின் அளவுப்படியோ அங்குல அளவில் செய்ய வேண்டும்.

12. இந்த ஆலயமும் லிங்கமும் ஸார்வதேசிகம் எனப்படும். கர்ஷணம் முதலிய கார்யங்களை தனியாக செய்யலாம் செய்யாமலும் இருக்கலாம்.

13. ஆத்யேஷ்டிகை முதலிய கார்யங்களை செய்து லிங்கம் விமானம் முதலியவை செய்து புத்திமானாவன் ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

14. எதனால் இது முன்பே விதிக்கப்பட்டதோ அதனாலேயே அது பிரதிஷ்டை என சொல்லப்படுகின்றன. மூர்த்தினேஷ்டகா முதலிய செப்பனிடுதல் முதலான கார்யங்களை

15. மேற்கூறிய விதியினால் எல்லா கார்யங்களையும் செய்ய வேண்டும். பவித்ரோத்ஸவம் முதலியன மூலலிங்கத்திற்கு செய்த போதிலும்

16. அங்க லிங்கம் முதலியவைகளுக்கு அந்த காலத்திலே பவித்ராரோபணம் செய்யலாம். தனியாகவும், செய்யத் தகுந்தது. பிராமணோத்தமர்களே அவை சாஸ்திர முறையாகும்.

17. எந்த மனிதன் இந்த பிரகாரம் அங்க லிங்க பிரதிஷ்டை முதலியவைகளை செய்கின்றானோ அவன் வயது, சவுபாக்கியம், வியாதி இல்லாமை, போகம், வம்சாவிருத்தி

18. விரும்பியதை அடைந்து சரீர முடிவில் சிவனோடு கூட ஆனந்தம் அடைகிறான். ஒன்று முதல் ஒவ்வொன்று அதிகமாக்கி பதினொன்று வரையிலும்

19. நூற்று எட்டோ, ஐம்பத்து நான்கோ, இருபத்தி ஏழோ, நூறோ ஐந்பதோ, இருபத்தி ஐந்தோ நூற்றுக்கு மேற்பட்ட அங்க லிங்க பிரதிஷ்டைகளை

20. இது மாதிரி எவன் செய்கிறானோ அந்தக் கிரியைக்கு கர்த்தா நானேதான் ஸந்தேஹம் இல்லை.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் அங்கலிங்க பிரதிஷ்டா முறையாகிய நாற்பத்தியிரண்டாம் படலமாகும்.

படலம் 40: ஸார்வதேசிகலிங்க பிரதிஷ்டை...

படலம் 40: ஸார்வதேசிகலிங்க பிரதிஷ்டை...

40 வது படலத்தில் ஸார்வதேசிக லிங்கம் பிரதிஷ்டை செய்யும் முறை கூறப்படுகிறது. முதலாவதாக ஸார்வ தேசிகலிங்கங்களின் ஸ்தாபனம் கூறப்படுகிறது என்பது பிரதிஞ்ஞையாகும். பிறகு ஸார்வதேசிகம் என்ற பெயருக்கு ஆலயம் லிங்கம், பீடம், இவைகளின் கருங்கல் இவைகளின் விதியோ எல்லா இடத்திலும் ஒத்துக் கொள்ள படுவதாகும் என கூறப்படுகிறது. ஸார்வ தேசிகன் என்ற ஆலயங்களை ஸாத்விகம், ராஜசம், தாமசம், என்ற தேசத்திலோ ஏற்படுத்தவும், ராஜசமான தேசத்தில் அந்த ஆலயத்தின் கல்பனம் விசேஷமாக அரசர்களின் வெற்றிக் காரணத்திற்காகவும், அறம், பொருள், இன்பம் இவைகள் சித்திப் பதற்காகவும் ஆகும். ஆகையால் ராஜசதேசத்தில் அந்த ஆலயங்களின் கல்பனம் எல்லா விருப்பத்தையும் கொடுக்கும் என கூறப்படுகிறது. வேறு இடத்தில் பிரதிஷ்டை செய்வது நடத்துபவன் நடத்திவைப்பவன் ஆகிய இருவருக்கும் உயர்ந்த பதவி கூறப்படுகிறது. பிறகு நாகரம், திராவிடம், வேசரம், ஸார்வதேசிகம் என்ற பெயரை உடையவைகள். முறையாக கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம், ஆகிய யுகங்களின் சம்மதமாக கூறப்படுகிறது. வராடம், காலிங்கம் என்ற பெயர் உடைய விமானம் எல்லா இடத்திலும் சம்மதம் ஆகிறது என்று கூறப்படுகிறது. பிறகு ஸார்வதேசிகம் என்ற பெயர் உடைய விமானம் புகழை விரும்பக் கூடியவர்களால் செய்ய வேண்டிய கார்யம் என கூறப்படுகிறது. ஸார்வதேசிக ஆலய விஷயத்தில் தந்திர சங்கிரஹம் என்ற தோஷம் ஏற்படுவதில்லை என கூறுகிறார். பின்பு ஸார்வதேசிக ஆலயத்தின் அமைப்பு கூறப்படுகிறது. ஸார்வதேசிக ஆலயத்தின் அளவால் கணக்கிடும் முதலியவைகளின் நிரூபணமும் விசேஷமாக ஆயாதி என்ற அளவால் கணக்கிடும் முறையும் கூறப்படுகிறது. பிறகு கர்பக் கிரகத்தின் நிர்மாண முறை நிரூபிக்கப்படுகிறது.

பிறகு ஸார்வதேசிக லிங்கங்களின் அமைப்பு ஆலயம் கர்பக்கிரஹம், வாசல்படி, ஸ்தம்பங்கள் இவைகளின் அளவுகளை அனுசரித்து லிங்கங்களின் அளவு செய்யும் முறையும் நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஸமகண்ட, வர்த்தமான, சைவாதிக்ய, த்ரைராசிக, ஸ்வஸ்திக, சஹஸ்ராக்யம் என தாரா லிங்கங்களின் பெயர்கள் நிரூபிக்கப்படுகின்றன. அவைகளின் கூறப்பட்டமுறையால் லக்ஷணத்துடன் கூடியதாகவும் உபபேதமாகவும் நிரூபிக்கப்படுகிறது. இங்கு ஸஹஸ்ரலிங்க தாராலிங்கத்தின் அமைப்பு முன்பு கூறியபடியே இந்த படல விஷயத்திலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறாக முகலிங்கமும் முன்பு கூறிய முறைப்படி இந்த இடத்திலும் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பின்பு லிங்கங்களின் சிரோவர்தனம் என்கின்ற தலையின் சுற்றளவு முன்பு கூறிய முறைப்படியே செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறாக லக்ஷணத்தின் மேற்பட்ட பரீட்சை முறையானது, சிவலிங்கபிரதிஷ்டையில் கூறப்பட்டுள்ள முறைப்படி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு பீடத்தின் அமைப்பு கூறப்படுகிறது. பிறகு லிங்க உயரத்தின் என்ற அளவாலும், கர்பக்கிரஹத்தின் அளவாலும், பீடத்தின் விஸ்தார தன்மை நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறு பீடத்தின் உயர அளவு சுருக்கமாக கூறப்படுகிறது. பீடத்தின் ஸ்தாபிக்கும் முறையால் அதற்கு அலங்காரம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு கூர்ம சிலை பிரம்ம சிலை இவைகளின் அமைப்பு விளக்கப்படுகிறது. பிறகு லிங்கத்திற்கும் எவ்வாறு நிழல் அடிக்கும் தன்மை ஏற்படாதோ அதன்படி செய்ய வேண்டும் என விசேஷமாக கூறப்படுகிறது. ஸ்வாயம்புவ பாண, காணப, ஆருஷ, லிங்கங்களின், அமைப்பு விரும்பதக்கதல்ல என கூறி அந்த விஷயத்தின் வேறு விசேஷமான விளக்கம் காணப்படுகிறது. முடிவில் ஸார்வதேசிக லிங்கங்களின் பிரதிஷ்டை முன்பு கூறிய முறைப்படியே செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு 41வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா தேசத்திற்கும் உட்பட்டதான பிரதான லிங்கம் முதலியவைகளின் பிரதிஷ்டை நன்கு கூறப்படுகிறது. ஆலயம், லிங்கம், பீடம், கற்கள் இவைகளையுடைய

2. ஸார்வ தேசிகம் என் பெயரையுடையவற்றிற்கு விதிமுறையானது எங்கும் பொதுவானதாகும். ஸாத்விகம், ராஜஸம், தாமஸம், ஆகிய தேசத்திலோ பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

3. சிறப்பாக ராஜஸ தேசத்தில் ஸ்தாபிக்கப்படுவது அரசர்களின் வெற்றிக்கு காரணமாகும். இது அறம், பொருள், இன்பம் கிடைப்பதற்காக ஸார்வகாமிகம் எனக் கூறப்படுகிறது.

4. மற்றவை எல்லாம் செய்கிறவனுக்கும், செய்விப்போனுக்கும் பேரின்பத்தை கொடுக்க கூடியவையாகும். க்ருதயுகத்தில் நாகரம்என்ற அமைப்பும் த்ரேதாயுகத்தில் திராவிடம் என்ற விமான அமைப்பும் ஆகும்.

5. த்வாபரயுகத்தில் வேஸரம் என்ற அமைப்பும், கலியுகத்தில் ஸார்வதேசிகம் என்ற அமைப்பும் கூறப்பட்டுள்ளது. வராடமும், காலிங்கமும் எல்லாவிடத்திலும் பொதுவானதாகும்.

6. மேலும் நாகரம், திராவிடம், காலிங்கம், வேஸரம் இவைகளைக் காட்டிலும் வராடம் என்கிற ஸார்வ தேசிக அமைப்பு விசேஷமாகக் கூறப்படுகிறது.

7. ஸார்வ தேசிகம் என்று கூறப்பட்டு அதன் பயன் விசேஷமாக கூறப்படுகிறது. ஸ்வாயம்புவம், பாணம், தைவிகம் ஆர்ஷம் என்ற லிங்க அமைப்புகள்

8. எவ்வாறு விசேஷமானதோ அவ்விதமே ஸார்வ தேசிக லிங்கம் சிறந்ததாக கூறப்பட்டுள்ளது. மானுஷ லிங்கம் முதலியவைகளிலும் விசேஷமான பயன்கள் சொல்லப்பட்டது.

9. ஆகையால் மேன்மையை விரும்புகிறவர்களால் ஸார்வ தேசிக லிங்க ஸ்தாபநம் செய்யத்தக்கது. அதில் தந்திர கலப்பு குற்றமோ, மந்திர கலப்பு குற்றமோ,

10. ஆசார்ய கலப்பு குற்றமோ, பிரதேச கலப்பு குற்றமோ, காலநேரக் கலப்பு குற்றமோ, யுகக் கலப்பு குற்றமோ

11. மற்றும் வேறுவிதமான குற்றமோ இல்லை. ஆதலால்தான் ஸார்வதேசிக லிங்கம் விசேஷமாக சொல்லப்படுகிறது. ஸார்வ தேசிக ஆலயத்தின் உயர அகல அளவு கூறப்படுகிறது.

12. மூன்று நான்கு கைமுழம் முதல் இரண்டிரண்டு முழமாக அதிகப்படுத்தி ஐம்பது முழம் வரை ஸார்வதேசிக ஆலயத்தின் அளவாகும்.

13. ஸார்வதேசிக ஆலயத்தில் சாந்திகம் முதலான உயர அமைப்புகள் எவைகள் உண்டோ அவைகள், உயரத்தின் இரண்டு பகுதியில் மூன்று பங்கு முதல் ஏழு பங்கு வரை உள்ளது சாந்திகம் முதலான அமைப்புகளாகும்.

14. உயர்ந்த ஆசார்யர்களால் பாதிபாகம் அளவு அதிகரித்து மூன்று மடங்கு வரையிலாகவோ உயர அமைப்புகளை ஒன்று, இரண்டு, மூன்று என்ற முழ அளவுகளால் கூடினதாகவோ, குறைந்ததாகவோ ஏற்க வேண்டும்.

15. ஆயம் என்பது முதலான அளவுகளின் கணக்கு உருவ பிம்பத்திற்கு தேவையில்லை என்பதால் உருவ பிம்பத்தின் அமைப்பை ஆயம் என்பவைகளால் கணக்கிடக்கூடாது. அகலத்திலிருந்தும் உயரத்திலிருந்துமோ, அகலத்தின் உயர அளவாலோ

16. அகலத்தின், நீளத்தின் அளவாகவோ, சுற்றளவாலோ ஆராயவும். சிறிய குறிப்பினால் சிறிய முறையாக ஆயம் முதலியவைகள் கூறப்படுகின்றன.

17. ஒன்பது, எட்டு, ஆறு என்ற அளவுகளால் விருப்பப்படி முறையாக அளவை ஏற்கவும். பதினொன்று, பன்னிரெண்டு, ஐந்து என்ற எண்ணிக்கைகளால் குறைத்து மீதமுள்ள ஆய அளவை அறிய வேண்டும்.

18. மூன்று, எட்டு, ஒன்பது, பத்து, பதினான்கு ஆறு, எட்டு, ஏழு என்ற எண்ணிக்கைகளால் குறைப்பதையோ, அதிகரிப்பதையோ செய்து மீதியை செலவாக அறிய வேண்டும்.

19. பன்னிரெண்டு, ஏழு, ஆறு அளவுகளினாலும், நட்சத்திரங்களினாலும் நாளை எண்ணவும். அரசன், யஜமானனின் ஜன்ம தினத்திலிருந்தோ, வாஸ்து லிங்கங்களின் நக்ஷத்திர தினம் வரையிலோ

20. கிடைத்த நக்ஷத்திரத்தில் முறைப்படி ஜன்மம் முதலான நக்ஷத்திரங்களை எண்ணி அறியவும், கஷ்டம், ஐச்வர்யம், ஆபத்து, நலம், சச்சரவு, அனுகூலம், கொல்லுதல் (துஷ்டி, ஸம்பத், விபத்து, ÷க்ஷமம், ப்ரத்யரம், ஸாதகம், வதம், மைத்ரம், பரமமைத்ரம் என்பது ஒன்பது வித ஜன்ம நக்ஷத்திர பலனாகும்.)

21. நட்பு, மிக நட்பு என்பதாக நக்ஷத்திரத்திலிருந்து க்ரியை செய்யும் நக்ஷத்திரம் வரை கூட்டி ஒன்பதால் வகுக்க மீதம் வரும் எண்ணிக்கைகளின் பலனாகும். மீதமுள்ள எண்ணிக்கையை ஒன்று என்றால் கலஹம் என்றும், இரண்டெனில் ஐஸ்வர்யம் என்றும் முன்புள்ளபடி மீத பலன்களை அறிய வேண்டும்.

22. மூன்றாவதான த்ரிஜன்ம நக்ஷத்திரம் சுபம். லக்னத்தின் எட்டாம் ராசியில் இருக்கும் நக்ஷத்திரம் இறந்ததாகக் கூறப்படுகிறது. வைநாசிக நக்ஷத்திரமின்றி மூன்றாவது நக்ஷத்திரத்திலோ மாறுபட்ட நக்ஷத்திரத்திலோ செய்ய வேண்டும்.

23. மற்றவைகளை நல்லவையென அறிந்து நக்ஷத்திரங்களை உபயோகிக்க வேண்டும். வியோகம் முதலான கெட்ட யோகங்களையும், அசுரகணம், மானுஷ்ய கணங்களையும்

24. விருப்பப் பயனை அடைய விரும்புபவன் தள்ளி வைக்கவேண்டும். மோக்ஷத்தை விரும்புபவன் தன் விருப்பம்போல் செய்யவும். ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, ஒன்பது ஆகிய எண்ணிக்கைகளால் குறைக்கப்பட்டது எதுவோ

25. அவை தஸ்கரம் என்பது முதலான அம்சமாக அறியவும். அந்த அம்சங்களின் பெயரால் அதன் பலன்களை அறியவும். பதினொன்று ஒன்பது, மூன்று, என்பவைகளால் யோநி லக்ஷணங்களின் அதிகரிப்பை எண்ண வேண்டும்.

26. த்வஜம் என்பது முதலான எட்டு யோநிகளும், ஷட்ஜம் முதலான ஏழு யோகிநிகளும் ப்ருத்வீ முதலான ஐந்து யோநிகளுமோ, தக்ஷிணாக்னி முதலான மூன்று அக்னிகளும்

27. நான்கு வகை யோநி அமைப்புகளாக அறியவும். த்வஜம் முதலான முன்பு கூறப்பட்டது போலவே ஆகும். ஷட்ஜம், வ்ருஷபம், காந்தாரம், பஞ்சமம், மத்யமம்

28. நிஷாதம், தைவம் என்பதான ஏழு யோநிகளாகும். அவைகளில் ஷட்ஜம் வ்ருஷபம் இவைகள் சிறந்ததாகும். பூதங்களில் பூமி, நீர் என்பது சிறந்ததாகும்.

29. அக்னிகளில் கார்ஹபத்யமும், ஆஹவநீயமும் சிறந்ததாகும். மண் முதலானவை நம்மால் அறியப்பட்ட ஐந்து யோகிநிகளாகும். அவ்வாறே தட்சிணம் முதலான மூன்று அக்னிகளும் ஆகும்.

30. ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு என்ற அளவு அதிகரிப்பதால் சிவனிடத்தில் வாயிற்படி அமைக்கப்பட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை, சனிக்கிழமை, செவ்வாய்கிழமை ஆகியவைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையல்ல. நல்ல யோகத்துடன் இருப்பின் அவை நல்லதை தருவதாகும்.

31. ஆலயம், மண்டபம், பிரகாரம், கோபுரம், லிங்கம், உருவ பிம்பம் முதலியவைகளில் ஆயம் என்பதான கணக்கிடும் அளவுகளை அமைக்க வேண்டும்.

32. ஆனால் லிங்கத்திலும், பிம்ப உருவத்திலும் உயர அளவாகவே அமைக்க வேண்டும். ஆலயத்தின் மூன்று பங்கு, நான்கில் மூன்று பங்கோ, ஐந்தில் மூன்று பங்கோ, இரண்டு பங்கோ

33. ஆறம்சத்தில் நான்கு பங்கோ, ஏழு பாகத்தில் ஐந்து பங்கோ, நான்கு பாகமோ, மூன்று பாகங்களாகவோ கருவறையை அமைக்க வேண்டும்.

34. ஆலய அமைப்பின் எட்டு பாகத்தில் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு பாகங்களால் கர்பக்ருஹத்தை அமைக்கலாம். கருவறையின் ஒன்பது பாகத்தில் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு பாகத்தால் கோமுகத்தை அமைக்க வேண்டும்.

35. ஓர் கையளவினாலோ இரண்டு கையளவினாலோ கலந்ததாகவோ சுவற்றை அமைக்க வேண்டும். மூன்றில்இரண்டு பங்கோ, ஓர் பங்கோ, ஐந்தம்சத்தில் மூன்று பங்கோ

36. ஆறம்சத்தில் நான்குபங்கோ, ஏழம்சத்தில் மூன்றம்சமுமோ, மத்தியில் நான்கு பங்கு, ஆறு பங்கு, ஐந்து பங்கு அளவாகவோ

37. எட்டாக பிரிக்கப்பட்டதிலும் ஒன்பதாக பிரிக்கப்பட்டதிலும் ஐந்து பாகமோ நான்கு பாகத்தினாலோ நடுவில் பத்ரம் என்ற அமைப்பைச் செய்ய வேண்டும்.

38. கால் பாகமோ, முக்கால் பாகத்தின் பாதி பாகமோ, இரண்டம்சம் வெளியில் பத்ரத்தை தள்ளவும். பத்ரத்தின் இரண்டு பக்கத்திலும் ருத்ர உருவங்களையோ அமைக்க வேண்டும்.

39. விமானத்தின் ஒவ்வோர் தளத்திலும் ருத்ர உருவங்களை அமைக்கவும். கருவறையின் அளவை அனுசரித்து ஸார்வ தேசிக லிங்கங்கள் கூறப்படுகின்றன.

40. ஆலயத்தின் கருவறை அளவில் ஐந்தம்சத்தின் மூன்று பாகங்களால் செய்வது உயர்ந்ததாகும். ஒன்பது பங்கில் ஐந்து பாகங்களால் மத்திய நிலையாகும். பாதியளவால் அமைப்பது அளவாகும்.

41. அதன் இடைவெளி பிரிவினால் பிறவகைகள் ஆறு இருக்கின்றன. அதனிடை வெளிப்பட்ட பிரிவினால் முப்பத்தி மூன்று அளவுகளும் உள்ளன.

42. கருவறையை இருபதாக பிரிக்கப்பட்டதில் பத்து மடங்கு அதம நிலையாகும். பதினொரு பங்குகளால் செய்வது நடுநிலையாகும். பன்னிரண்டு பங்குகளால் அமைப்பது உயர்ந்ததாகும்.

43. எட்டாக பிரிக்கப்பட்ட நடுபாகத்தில் லிங்கங்கள் அமைக்கப்பட வேண்டும். கருவறையை ஒன்பதாகவோ பிரித்து ஒன்பது லிங்கங்களையோ அமைக்க வேண்டும்.

44. கருவறையில் நான்கில் ஓர் பங்கு அதமம் ஆகும். மூன்று பங்கு (முக்கால் பங்கு) உயர்ந்ததாக ஆகும். நடுவில் எட்டாக பிரிக்கப்பட்ட பாகத்தில் அந்தந்த பாகத்திற்கிடைப்பட்ட பிரிவினால்

45. லிங்கங்களுக்கு முப்பத்தி மூன்று அளவுகள் கூறப்பட்டுள்ளன அல்லது கருவறையினுடைய மூன்றிலொரு பாகம் கடைசி அமைப்பாகும்.

46. கருவறையின் பாதிபாகம் நடுநிலையாகவும், ஐந்து மூன்று பங்கு உயர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. முன்பு போல் நடுபாகத்தை முப்பத்தி மூன்று அளவாகச் செய்ய வேண்டும்.

47. லிங்க உயரத்தின் பத்தம்சத்தில் நான்கு, ஐந்து ஆறு பாகங்களால் செய்வது நல்லதாகும். ஓர் முழம் ஆரம்பித்து ஓரோரங்குல அதிகரிப்பால்

48. ஒன்பது முழம் வரையில் லிங்கத்தின் உயர அளவாகும். கருவறை இருபத்தியொரு பங்காக பிரிக்கப்பட்டபொழுது

49. பதிமூன்றம்சம் உயர்ந்ததாகும். பத்தம்சம் அதமம் ஆகும். முன்பு போல் முப்பத்தி மூன்று அளவால் மத்யபாகத்தை செய்து விட வேண்டும்.

50. லிங்க உயரத்தில் பத்து பங்கில் நான்கு, ஐந்து, ஆறு பங்கால் செய்வது உயர்ந்ததாகும். மூன்று பங்கு ஐந்து பாகங்களால் லிங்கத்தின் அகலம் கூறப்பட்டுள்ளது.

51. இருபத்தி நான்காக்கப்பட்ட லிங்க உயரத்தில்ஐந்து பாகங்களால் அகலமாகும் அல்லது பதினெட்டாக பிரிக்கப்பட்ட லிங்க உயரத்தில் ஐந்து பாகமோ

52. நான்கு பாகமோ லிங்க அகலமாக கூறப்பட்டுள்ளது. நீளத்தை இருபத்தியொரு பாகமாக்கி ஆறு, ஐந்து ஏழு பாகங்களினால்

53. லிங்கங்களின் அகலம் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வாயிற்படி, தூண்கள் முதலியவைகளாலும் லிங்கத்தின் அளவை அறிய வேண்டும்.

54. அங்குலங்களால் பிரித்த அளவால் லிங்கங்களை பிரித்தறியவும். ஆயம் என்ற அளவுகளால் சுபமென்ற அளவை அடைய அம்சங்களால் பிரித்தெறிய வேண்டும்.

55. பதினாறாம்சம் முதல் இருபத்தி நான்கு அம்சம் வரையிலாகவும், நூறு பாகமாக பிரித்து ஓர் பாகத்தை சேர்க்க வேண்டும்.

56. மேற்கூறிய அளவுகளால் லிங்கம், பிம்பம் இவைகளின் அளவுகளை அறியவும். ஸமகண்டம், வர்தமாநம், சைவாதிக்யம், த்ரைராசிகம்

57. ஸ்வஸ்திகம், ஸஹஸ்ரம், தாராலிங்கம் என்று லிங்கங்களின் பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. இப்பேர்பட்ட வகையுடன் கூடியதென சிறுகுறிப்பு முறையாக கூறப்படுகிறது.

58. லிங்கத்தின் உயரத்தை மூன்று பாகமாக பிரித்து மூன்று பங்காக்கவும். அந்த பாகத்தின் சமமான உயரத்தையுடையது ஸமகண்டமெனப்படும்.

59. முன்பே கூறப்பட்ட உயரத்தின் அளவுகளை யுடையதும் ஸமகண்டம் எனப்படுகிறது. சிவனின் உயரத்தில் பதினைந்து, பதினான்கு, இருபத்தியொன்று, இருபத்திநான்கம்சமாக உள்ளது.

60. நான்கு, ஐந்து, ஆறு, ஏழு அம்ச பாகங்கள் ப்ரும்ம பாகத்தில் கூறப்பட்டுள்ளன. அந்தந்த விஷ்ணு, ருத்ர பாகங்களின் அதிகரிப்பால் அவைகளின் அளவை அறிய வேண்டும்.

61. நான்கு விதமான வர்தமான அளவுகள் அந்தணர் முதலான நால்வர்களிடத்தில் வரிசையாக கூறப்படுகிறது. வேறு விதமாகவும் வர்த்தமாநம் கூறப்படுகிறது.

62. ஓர் முழத்தில் ஓர் அங்குலமும், இரண்டு மூன்றுமுழத்தில் மூன்று மாத்ரையளவும் நான்கு, ஐந்து முழத்தில் ஐந்து மாத்ரையும் ஆறு, ஏழு முழத்தில் ஏழு மாத்ரையளவும்

63. எட்டு, ஒன்பது முழங்களில் ஒன்பது அங்குலமும் உயர்வாகி உள்ளது என அறியவும். ஆறுபாகமாக்கப்பட்டாதில் ஒன்று, இரண்டு, மூன்று மாத்ரையாக அதிகரித்து

64. ப்ரும்ம, விஷ்ணு ருத்ராம்சத்தில் ஓர் முழமும் முறையாக்கப்பட்டுள்ளது. ஏழு, ஏழு எட்டு என்ற பாகமும், ஐந்து ஐந்து ஆறு என்ற பாகமும்

65. நான்கு, நான்கு, ஐந்து என்ற அம்சமும், மூன்று, மூன்று என்ற பாகமாக அந்தணர் முதலான நான்கு வர்ணத்தவர்களின் முறைப்படியான சிவாதிகம் என்ற லிங்க அமைப்பை அறிய வேண்டும்.

66. லிங்க உயரத்தை ஒன்பது பாகமாக்கி, பிரும்மம் முதலான மூன்று, மூன்று பாகங்களால் ஆறு, ஏழு எட்டு பாகங்களாலும் ருத்ரபாகம் முதலான பாகங்களின் உயரத்தை முறைப்படி அறிய வேண்டும்.

67. மேற்கூறிய அமைப்பு த்ரைராசிகம் என்ற லிங்கமாகும். அது நான்காம் வர்ணத்தவர்களுக்கு உயர்வானதாகும். ஒன்பதாக்கப்பட்ட லிங்க அளவினால் மூன்று, நான்கு பாகங்களால் ப்ரும்ம பாகம் முதலான பாகங்களை அறிய வேண்டும்.

68. மேற்கூறியது ஸ்வஸ்திக லிங்கமாகும். வேறு விதமாகவும் கூறப்படுகிறது. சிவனின் உயரத்தை முப்பது பாகமாக்கப்பட்டதில் ஒன்பது, பத்து, பதினொன்று பாகங்களால்

69. ப்ரும்ம பாகம் முதலியவைகளை கல்பிக்கவும். ப்ரும்மம் முதலான பாகத்திலிருந்து ஒவ்வொரு முறையாக லிங்கத்தில் முப்பத்தி மூன்று பாகமாக்கப்பட்டதில் நான்காம் வர்ணத்தவர்களுக்கு உரியதாக ஸ்வஸ்திகம் என்ற அமைப்பாகும்.

70. ஸஹஸ்ர லிங்கத்தையும் தாரா லிங்கத்தையும் முன்பு கூறப்பட்டுள்ளபடியே அமைக்கப்பட வேண்டும். முகலிங்கமும் முன்பு கூறப்பட்டுள்ளபடியே அமைக்கவேண்டும்.

71. மேற்கூறிய லிங்கங்களுக்கு தலையில் வட்ட வடிவமான (சிரோவர்தநம்) அமைப்பு முன்பு கூறியபடி செய்ய வேண்டும். லிங்கங்களும் சிரோவர்தநம் என்ற பாகமானது அதிகமாக செயற்பாலதாகும்.

72. எல்லாவற்றிற்கும் மூன்றிலோர் பாகத்திற்கு மேற்பட்டதாக சிரோவர்தநம் அமைக்க வேண்டும். சிவலிங்க பிரதிஷ்டையில் கூறப்பட்டுள்ள முறைப்படி சிவலிங்க அமைப்பை செய்ய வேண்டும்.

73. எவ்வாறு லிங்கத்தின் பரப்பளவு உள்ளதோ அந்த அளவு பீடத்தின் பரப்பளவு இருக்க வேண்டும். லிங்க உயர அளவால் மூன்று மடங்காகவும் பரப்பளவு இருக்கலாம்.

74. நான்கு, ஐந்து மடங்காகவோ, இரண்டு மடங்காகவோ பீடத்தின் சுற்றளவு இருக்கலாம். பூஜையின் அம்சத்தில் இரண்டு, மூன்று, நான்கு மடங்காகவோ

75. அதன் கர்ணஅளவு பக்கவாட்டளவாகவோ, உயரத்தின் ஸமமாகவோ உயரத்தின் இரண்டு மடங்கு அளவாகவோ, பீடத்தின் சுற்றளவு கூறப்படுகிறது.

76. அவைகளின் இடைப்பட்ட அளவும் பீடங்களுக்கு கூறப்பட்டுள்ளன. கர்ப்பக்ருஹத்தின் மூறில் ஓர் பங்கோ, நான்கில் ஓர் பங்கோ

77. கருவறையின் பாதியளவோ, பீடத்தின் அகல அளவேயாகும். விஷ்ணு பாகத்தின் ஸமமான உயரமோ, கால் பங்கு, அரை பங்கு அளவுடன் கூடியதாகவோ பீடத்தின் அகலமாகும்.

78. பிரம்மபாக அளவை எட்டாக பிரித்து ஓர் பாக அதிகரிப்பால் ஐந்து பாக உயரமாகவோ, விஷ்ணு பாக உயர அளவால் ஐந்து பாக அதிகரிப்பாகவோ பீடத்தின் அளவை அறிய வேண்டும்.

79. பீடப் பிரதிஷ்டையில் கூறப்பட்டுள்ளபடி அதன் இலக்கண அமைப்புகளை செய்யவும். லிங்கத்தின் உயர அளவால் இரண்டு மடங்கோ, மூன்று மடங்குமோ

80. நான்கு, ஐந்து மடங்காகவோ ஆதார சிலையை அமைக்கவும். அந்தந்த இடைவெளியின் பாகங்களை ஒன்பதாக அமைத்தறிய வேண்டும்.

81. லிங்கத்தின் அகல அளவு சமமாகவோ லிங்கத்தின் உயரஅளவு சமமாகவோ பீடத்தின் சுற்றளவுக்கு ஸமமாக ப்ரும்ம சிலையை அமைக்க வேண்டும்.

82. பீடத்தின் அகல ஸமமாகவோ, முக்கால் பாகம், அரை பாகமாகவோ, கால்பாகமாகவோ உயரமுள்ளதாக ப்ரும்ம சிலை அமைக்க வேண்டும்.

83. அவ்வாறே நடுபாகத்தை நான்கு பங்காக்கி பிரும்ம சிலையின் உயரத்தை அமைக்கவும். லிங்கத்தின் உயர அளவானது பத்தம்சத்திற்கு ஸமமாகும்.

84. ஓர்பாகம் முதல் அதிகரிப்பால் நான்கு பாகம் வரையிலும், ப்ரும்ம சிலையின் (குழியை) த்வாரத்தை அமைக்கவும். உயரத்திலிருந்தும் அகலத்திலிருந்தும் முன்பக்கமாக

85. ஒவ்வொரு யவையளவு அதிகரிப்பால் இரண்டங்குலம் வரை அமைக்கவும். இதில் ஓர் விசேஷமுள்ளது. பூஜைக்கு அம்சமாக எவ்வளவு அளவு நீளமுள்ளதோ

86. அவ்வளவு அளவு வெளிப்பட்டதாக பீடத்தை அமைக்கவும். எவ்வாறு அமைத்தால் லிங்கத்திற்கும், பீடத்திற்கும் நிழல் தெரியும் குற்றம் ஏற்படாதோ அவ்வாறு அமைக்க வேண்டும்.

87. மேற்கூறியபடி அமைத்தால் அரசாங்கம், அரசன், செய்பவன், செய்விப்பவன் ஆகியவர்களுக்கும் உயர்ந்ததான நற்பயன் கிடைக்கிறது. எல்லா லிங்க விஷயத்திலும் இதே முறையாகும்.

88. அவ்வாறே பூஜை பாகத்தின் பாதியிலிருந்து கீழ்பட்டதாக அமைத்தாலும் பூஜை பாகத்திலிருந்து அதிகமான பீடமும், இரண்டு பாகத்திலிருந்தும் குறைவானதாகவோ

89. பீடம் அமைத்தாலும், பீடத்திலிருந்து லிங்கம் அமைத்தாலும் அது மோக்ஷத்தை கொடுக்கும். நற்பயனை அடைய தகுந்ததல்ல. ஸமமாக இருப்பின் ஸோகசித்தியையும், மோக்ஷ சித்தியையும் கொடுக்க கூடியதாகும்.

90. ஆலய அமைப்பு விஷயத்தில் சாந்திகம் முதலான உயர அமைப்புகள் கூறப்பட்டுள்ளது. ஆலய அமைப்பை அனுசரித்து எண்ண வேண்டும். ஆரம்பம், முடிவு என்பது இங்கு கூறப்படவில்லை.

91. ஸார்வதேசிக லிங்க விஷயத்தில் குறைத்தல், கூடுதல் என்ற விஷயத்தில் மிக்க குற்றமில்லை. ஸ்வயம்புலிங்கம், தைவிக லிங்கம், பாண லிங்கம், கணலிங்கம், ரிஷி லிங்கம் ஆகியவற்றின்

92. அகல உயரத்தினாலோ அவைகளுக்கு அமைப்பு முறை விரும்பத்தக்கதல்ல. ப்ரும்ம பாகம் முதலியவைகளால், தலையின் அமைப்பு முறை பேதங்களிலிருந்து

93. ப்ரும்ம நந்தி முதலான சிலைகளால் தனக்குரியதான அமைப்புகளாலும், ப்ரும்ம பாகம் முதலான மூன்று பாகங்களுடனோ, இரண்டு, ஒன்று பாகங்களுடன் கூடியதாகவோ

94. எவ்வாறு விசேஷமாக உருவ அமைப்பு இருக்குமோ அவ்வாறு அமைக்கவும். மேற்கூறியவைகளில் ஆலய பீட அமைப்பில் கருவறையளவு ஏதுண்டோ அவைகளுக்கு

95. ஸார்வதேசிக லிங்கம் இஷ்டமானது. மேற்கூறிய அமைப்புகள் ஸார்வதேசிகம் எனப்படுகிறது. ஆலயம், பீடம் இவைகளுக்கு பழுது குற்றம் மேற்பட்டால்

96. ஜீர்ணோத்தார முறைப்படியே பீடத்தையும் ஆலயத்தையும் அமைக்க வேண்டும். சிலையின் சேர்க்கை இல்லாவிடில் அவைகளின் சேர்க்கை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

97. ஸ்வாயம்புவம் முதலான லிங்கங்களுக்கு கண்ணிற்கு புலப்படுமிடத்திற்கு கீழே தோண்டி பார்ப்பது நன்றன்று. மனிதர்களுக்கு திருட்டு பயத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்தும்.

98. லிங்கத்தில் காணப்படும் பிரதேசமே பிரம்ம ருத்ர விஷ்ணு பாகமாகும். ஆகையால் அதற்கு கீழ் உள்ள அடிபாகத்தை சோதிக்க கூடாது.

99. அறியாமையால் சோதிக்கின்ற காலத்தில் எஜமானனுக்கு மரணம் ஏற்படுமென்பது நிச்சயமாகும். சந்தேகமில்லை, ஸார்வ தேசிக லிங்கங்களுக்கு இவ்வாறு லக்ஷணம் கூறப்பட்டுள்ளது.

100. மேற்கூறிய லிங்கங்களின் பிரதிஷ்டை முறை முன்பு கூறப்பட்ட முறைப்படியே கூறப்படுகிறது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸார்வதேசிகலிங்க ஆலய அமைப்பு முறையாகிற நாற்பத்தியோராவது படலமாகும்.

படலம் 39: லிங்க அளவை அனுசரித்து ஆலயம் அமைக்கும் முறை...

படலம் 39: லிங்க அளவை அனுசரித்து ஆலயம் அமைக்கும் முறை...


39 வது படலத்தில் லிங்க அளவை அனுசரித்து ஆலயம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. அதில் ஸ்வாயம்புவ பாண தெய்வீக ஆருஷ லிங்க விஷயத்தில் அவ்வாறே சித்த வித்யாதரர்களால் லிங்க விஷயத்திலும் லிங்கத்தை அனுசரித்து ஆலயம் அமைக்கவும் என்று கூறி பலவித முறையால் அளவு நிரூபணம் செய்வதை கொண்டு ஆலயம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. இவ்வாறு 40வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. இப்பொழுது லிங்கத்தின் பொருட்டு ஆலயம் அமைப்பதை விசேஷமாக கூறப்படுகிறது. ஸ்வாயம் புவம் பாணலிங்கம், தைவிகம், ஆர்ஷகம் என்றும்

2. சித்த வித்யாதரர்களாலும் மஹாத்மாக்களாலும் ஸ்தாபித்துமான லிங்கங்களை அனுசரித்து ஆலயம் அமைக்க வேண்டும்.

3. பூஜாம்சமான ருத்ரபாகி அளவிலோ கனஅளவிலோ அகலத்தினாலோ, உயரத்தினாலோ இவைகளின் கர்ணமா னங்களாலோ ஆலயம் அமைக்க வேண்டும்.

4. லிங்க உயர ஸமமாகவோ இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆறு மடங்காகவோ இரண்டு மடங்கு முதற்கொண்டோ ஆலயம் அமைக்க வேண்டும்.

5. தேவமானத்தில் எட்டுபாகமாகவோ ஒன்பது பாகமாகவோ, அதன் அரை பாகமாகவோ, கால் பாகமாகவோ முப்பத்தி இரண்டு பாகமாகவோ கூறப்பட்டுள்ளது.

6. பீடஅளவு ஒவ்வொன்றுக்குமாக தனித்தனியாக கூறப்படுகிறது. பீடத்தின் இருமடங்கு அளவோ மூன்று நான்கு மடங்கு அளவோ,

7. ஐந்து, ஆறு மடங்காகவோ கர்ப்ப கிருஹத்தின் அளவை அறியவும். மற்ற இடைவெளியான அளவுகளை முன்பு கூறப்பட்டுள்ளபடி அமைக்க வேண்டும்.

8. கர்ப்ப க்ருஹ அகலத்தில் இரண்டு பாகத்திலிருந்து ஒரு பாகமோ ஆறு மடங்கான பாகங்களிலிருந்து ஒரு பாகமாகவோ

9. ஒரு பாக அதிகரிப்பளவால் இரண்டு மடங்கு அகலமாகவும் சுவற்றின் நடு அளவை முன்பு கூறப்பட்டுள்ளபடி அமைக்க வேண்டும்.

10. லிங்க அளவிலிருந்து பீடமும், பீட அளவிலிருந்து கர்ப்ப க்ருஹ அளவும் அதிலிருந்து சுவற்றின் அளவு நிச்சயித்து ஒன்று முதல் ஏழு யவை அளவு வரை ஒவ்வொரு மாத்திரை அதிகரிப்பால்

11. பீடமும் கர்ப்ப க்ருஹ அளவும் ஆகும். ஆலய அகலத்தில் நீட்டிய விரலையுடைய முழங்கை அளவு முதல் ஏழு மாத்திரை வரை அளவாக செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் லிங்க அமைப்பையொத்து ஆலயம் அமைக்கும் முறையாகிற நாற்பதாவது படலமாகும்.

படலம் 38: பவுருஷலிங்க பிரதிஷ்டை....

படலம் 38: பவுருஷலிங்க பிரதிஷ்டை....

38 வது படலத்தில் புருஷர்களால் பிரதிஷ்டைசெய்யும் லிங்கத்தின் ஆலய நிர்மாணம் கூறப்படுகிறது. முதலாவதாக பக்தியுள்ள மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் பவுருஷம் என்று பவுருஷ லிங்கத்தின் அமைப்பு விவரிக்கப்பட்டுள்ளது. பிறகு தேய்மானம் அடைந்ததான முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயம் நஷ்டமாக இருக்கும் சமயத்தில் அந்த உருவம் அறிந்த போதிலும் பிறகு ஆலயத்தின் அமைக்கும் முறையில் லிங்கத்தை அனுசரித்து ஆலயம் அமைக்கும் முறையும் விளக்கப்படுகிறது. இந்த சமயத்தில் முன்பு கூறிய படலத்தில் உள்ளது போல் லிங்கத்தின் உயர அளவை அனுசரித்து பீடம் அமைக்கும் முறை, பீடத்தை அனுசரித்து சுவர் அமைக்கும் முறை. சுவற்றை அனுசரித்து கோமுகம் அமைக்கும் முறையும் கூறப்படுகின்றது. பிறகு மீதம் உள்ள விஷயங்களை முன்பு போல் அனுசரிக்கவும் என கூறப்படுகிறது. லிங்கத்தை அனுசரித்து பீடம் பீடத்தை அனுசரித்து கர்பக் கிரகமும் கர்பக் கிரஹத்தை அனுசரித்து சுவர் அமைக்கும் முறை ஆகிய விஷயத்தில் அளவு முறையில் அதிகமானது, குறைவானது என்ற முறை விளக்கப்படுகிறது. ஆருஷலிங்க விஷயத்தில் லிங்க அளவை அனுசரித்து ஆலயம் அமைக்கும் விஷயத்தில் பட்டிகையுடன் கூடிய பிரசித்தமான ஆலயம் அமைக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறாக புராண, பவுருஷமானுஷ லிங்க அமைப்பு விஷயத்திலும், ஆலயம் அமைக்கும் விஷயத்திலும் செய்ய வேண்டிய விசேஷமான முறை கூறப்படுகிறது. முடிவில் பிராம்மணர் முதலான மூன்று வர்ணத்தவர்களால் பூஜிக்கப்பட்டலிங்கம் பவுருஷலிங்கம் என கூறப்படுகிறது. இவ்விதம் கூறப்பட்டு அதன் வேறு அமைப்பு முறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு 39வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பவுருஷ லிங்கத்தின் ஆலய அமைப்பு விதி கூறப்படுகிறது. பக்தியுள்ள மனுஷ்யர்களால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் பவுருஷ லிங்கமாகும்.

2. நம்மால் முன்பு அறியப்படாததாக ஸ்தாபித்த லிங்க விஷயத்தில் லிங்கத்தின் அளவைக் கொண்டு ஆலயம் அமைக்க வேண்டும்.

3. லிங்க உயர அளவால் மூன்று பங்கு பீட அகலமாகும். மூன்று பாக அளவில் கோமுக அளவும், மூன்று நான்கு பாக அளவில்

4. சுவற்றின் அகல அளவும் உயரமும் முன்பு கூறியபடி செய்யவும், லிங்க நீள உயரத்தின் குறுக்கு அளவின் ஒன்றரைபாக அரை பாகமான அதிக அளவால்,

5. இரண்டரை பங்கு அளவு வரை பீட அகலமாகும். அந்த அளவிலிருந்து நான்கு, ஐந்து மூன்று மடங்கு அளவிலான

6. கோமுக விலாசமாகும். பீட விஸ்தார அளவிற்கு ஸமமாகவோ இரண்டு மடங்காகவோ சமமாகவோ அரை அளவாகவோ பீட அகலமாகும்.

7. உதயம் முன்போலவேயாகும். வேறு முறையாகவும் கூறப்பட்டுள்ளது. பூஜாம்சத்தின் இரண்டு மடங்கு பீடத்தின் உதயமாகும்.

8. விசாலத்திலிருந்து நான்கு, ஐந்து குணம் (நாளீகேஹமாகும்) கோமுகமாகும், மீதமான எல்லா விபரங்களையும் முன்புபோல் செய்யவும்.

9. லிங்க அளவிலிருந்து பீடமும் பீடத்திலிருந்து கர்ப்க்ருஹமும் கர்ப்பக்ருஹத்திலிருந்து சுவர் அளவும் நிச்சயிக்கவும். ஒன்று முதல் ஏழுயவை அளவுற வரை ஒவ்வொரு மாத்திரை விருத்தியாக

10. மூன்று மாத்திரை வரை விருத்தியாகவோ குறைந்தோ செய்யவும், கர்ப்பக்ருஹத்தில் பீடமும், அதிலிருந்து ஆலயவிஸ்தாரமும்

11. பிராஸத விஸ்தார அளவின் பாதியோ, மூன்றிலொருபாகமோ சுவற்றின் நீள அளவாகும். அந்தர அளவில் எட்டம்ச அளவோ நான்கம்ச அளவோ அமைக்கவும்.

12. ஸ்வாயம் புவாதி லிங்க விஷயத்தில் முகப்பு முன்பே கூறப்பட்டுள்ளது. புருஷ புராணலிங்க விஷயத்திலும் கிராம அளவின்படி செய்ய வேண்டும்.

13. ஆர்ஷ லிங்க ஆலய விஷயத்தில் பட்டிகாங்க அளவுடன் அதிஷ்டானமுள்ளதாகவும் உபாநம், ஜகதீ கண்டம், பட்டிகா குமுதாதிகளில்

14. ஸ்தலம் வரை அமைக்க வேண்டும். புராண பவுருஷலிங்க விஷயத்தில் முன்புபோல் அமைக்கவும். மானுஷலிங்க விஷயத்தில் பட்டிகாந்தம், வ்ருத்யந்தமாக கோமுகமாகும்.

15. ஆலயத்தின் பீடபிரிப்பளவினால் கோமுகத்தில் பிரித்து சேர்த்ததாகவும், கோமுகம் வெளிப்பக்கமாகமாக இருந்தால் சேர்ந்ததாகவோ கூறப்படுகிறது.

16. சேர்ந்திருப்பதை அவ்வாறாகவே இருக்கச் செய்ய வேண்டும், கலக்கக் கூடாது, மூன்று வர்ணத்தவரால் பூஜிக்கப்பட்ட லிங்கம் பவுருஷம் எனப்படும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பவுருஷலிங்க ஆலய அமைப்பாகிற முப்பத்தியொன்பதாவது படலமாகும்.

படலம் 37: ஆர்ஷலிங்க பிரதிஷ்டை...

படலம் 37: ஆர்ஷலிங்க பிரதிஷ்டை...

37 வது படலத்தில் ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட லிங்கத்தின் ஆலய அமைப்பு முறை கூறப்படுகிறது. பிறகு முதலில் ஆர்ஷலிங்க இலக்கணம் கூறப்படுகிறது. அதில் கவுசிகர் முதலான முனிவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டும், மனிதர்களால் இன்றியும் பிரதிஷ்டை செய்யப்பட்டது மான லிங்கம் ஆருஷ லிங்கம் ஆகும். அதிலும் அடிபாகம் நெடுபாகம் மேல் பாகங்களில் பெரியதாகவோ மலிந்ததாகவோ இருக்கும் என கூறப்படுகிறது. பிறகு ஒரு தளம் உள்ள ஆலயம் அமைக்கும் முறையில் ஆருஷலிங்கம் அமைக்கும் முறை அறிவிக்கப்படுகிறது. அதில் லிங்கம், பீடம் விஷயத்தில் அளவை அனுசரித்து கருவறை அமைக்கும் முறையும், சுவர் அமைக்கும் முறையும், கோமுகம் அமைக்கும் முறையும் கூறப்படுகிறது. சுவயம்புவ லிங்கத்திலும் இவ்வாறே. ஒரு தளம் உடைய ஆலயம் அமைக்கும் முறை செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு இந்த விஷயத்தில் இரண்டு தளம் உடைய ஆலயம் அமைக்கும் முறையில் விசேஷமான முறை விளக்கப்படுகிறது. இவ்வாறு 38வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஆர்ஷ லிங்கங்களின் ஆலய விதி கூறப்பட்டுள்ளது. கவுசிகர் எல்லா ரிஷீகளாலும் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆர்ஷ லிங்கம் எனப்படும்.

2. லிங்கத்தின் மூலபாகம் ஸ்தூலமாகவும் சிரோபாக ஸ்தூலமும், மத்யபாக ஸ்தூலமாகவோ மெலிந்ததாகவும், அம்சமில்லாமலும் வ்ருத்தாகாரமாகவும் பழம் போலவும் அளவு சூத்ரமில்லாமலும்

3. இந்த லக்ஷணமுடையதும் மானுஷலிங்கத்திற்கு வேறானதும் ஆன லிங்கம் பற்றி கூறப்படுகிறது. பூஜாம்ச ருத்ரபாகத்தின் இரண்டுபாக பீடமும், த்ரிகுணமாக கர்ப்பக்ருஹமும்

4. அதில் ருத்ராம்சத்தில் பாதிசுவர் அளவாகும், அதன் சமமாகவோ மூன்றம்சமாகவோ அகலத்தில் இரண்டு மடங்காகவோ முக்கால் பாகமதிகமாகவோ

5. பாதி பாகத்திற்கு அதிகமானதாகவோ, ஏழுபாகம் அதிகமாகவோ லிங்க அகல அளவில் மூன்று மடங்காக பீடம் கூறப்படுகிறது.

6. கர்ப்பக்ருஹமானது பீடத்தினுடைய மூன்று பாகத்திலும் இரண்டு பாகத்தால் சுவரின் அமைப்பாகும், முன்பு கூறப்பட்டதுபோல் உயரமும் ஆகும் வேறுவிதமாகவும் கூறப்படுகிறது.

7. லிங்க அகலத்தின் இரண்டளவினாலோ இரண்டின் பாதி அளவாகவும் பீடமாகும், பீடவிஸ்தார அளவினால் ஒன்றரை ஒரு பாகம் அதிகரிப்பினாலும்

8. ஒன்றரை பாகம் இரண்டு பாகம் வரையிலாக பீடத்தின் அகலமாகும். பீடஅகலத்தின் இரண்டு மூன்று, நான்கு மடங்கு அளவாகவோ

9. கோமுகத்தின் அளவாகும். இரண்டு பாகம், முக்கால் பாகம், இரண்டரை பாகம் ஒவ்வொரு அம்சத்தின் சமமாகவோ சுவற்றின் அளவாகும்.

10. கோமுகத்தின் முன்பாகம் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. வேறுவிதமாகவும் கூறப்படுகிறது, லிங்க அளவில் இரண்டு பாக அளவால் பீடத்தின் அளவாகும்.

11. பீடத்தின் மூன்று மடங்களவு கர்ப்ப க்ருஹமாகும். ஐந்தம்சம், மூன்றம்சம், இரண்டு பாகம் ஒரு பாகமான அளவிலோ கர்ப்ப க்ருஹ அளவின்படி சுவற்றின் அகல அளவாகும்.

12. பூஜை அம்சமான ருத்ரபாகத்தின் இரண்டு மடங்கு கர்ணபீடத்தின் அகலமாகும், அதிலிருந்து நான்கு மடங்கு கோமுக அளவாகும், அதன் மூன்று, ஆறு பாகங்களால்

13. ஓர் அம்சமாகும். வேறு விதமாகவும் அளவு கூறப்படுகிறது. லிங்க அளவின் இருமடங்கு அளவு கர்ணபீட அளவாகும்.

14. மூன்று பாக அளவு கோமுகமும் மூன்று நான்கு ஐந்து பாகங்களில் ஓர்பாக அளவு அதன் விஸ்தாரமாகும், வேறு விதமாகவும் கூறப்படுகிறது.

15. சுற்றளவு உயரத்தில் பதினாறு பாகத்தில் பதினான்கு பாகம் கர்ண அளவாகும் பீடத்தின் சுற்றளவு கோமுகத்தின் நான்கு மடங்கு அளவாகும்.

16. அதன் நான்கின் ஒருபாகமோ அல்லது மூன்றில் ஒரு பாகமோ எட்டுபாக அளவில் சுவற்றின் அளவாகும். இரட்டிப்பான அகலத்தில் கர்ண பாகத்தில் பத்தில் ஒரு பங்கை குறைவாக்கி

17. பீடத்தின் நீளத்தையும் அதிலிருந்து ஐந்து பாகம் கோமுகமுமாகும். மேற்கூறிய பாகத்திலிருந்து ஐந்தில் ஒரு பாகம், ஏழில் ஒரு பாகம் சுவற்றின் உயரம் பாதி அளவாகும்.

18. குறைவு இல்லா தன்மையின் இடைவெளியில் உள்ள பத்து பாகத்தின் எட்டில் ஒருபங்கு பீடத்திற்கும் கோமுகத்திற்கும் ஏற்றதாகும். பலவித அளவு இருக்குமேயாயின் சிறந்தவர்களால் விருப்பபட்டபடி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

19. ஸ்வாயம்புவ லிங்க விஷயத்தில் ஒரு தள விமான விஷயமாக கூறப்பட்டுள்ளது. இரண்டுதள விமான ஆலயத்தில்

20. ஆதாரத்துடனும் நிராதாரத்துடனும் ஆலயத்தில் அலிந்தம் என்ற அமைப்புள்ள சுவராகும். முன்பு கூறப்பட்டுள்ள முறைப்படி ஆலயத்தின் நக்ஷத்ரப் பொருத்தப்படி இருதள விமானத்தை அமைக்க வேண்டும்.

இவ்வாறு உத்திரகாமிக மஹாதந்திரத்தில் ஆர்ஷலிங்க ஆலய அமைப்பாகிய முப்பத்தியெட்டாவது படலமாகும்.