செவ்வாய், 15 அக்டோபர், 2024

55. ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு

காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

55. ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு

ஐம்பத்தி ஐந்தாவது ஆச்சார்யர் [கி.பி.1507 - 1524]

ஸ்ரீ சந்திர சூடேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு, தென்னாற்காடு மாவட்டத்தில் மணி முக்தா நதிக்கரையில் உள்ள அஸ்மசாலா என்ற ஊரில் "புராரி - ஸ்ரீ மதி" தம்பதிகளின் மகனாக பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் "அருணகிரி".

அப்போது விஜய நகரத்தை ஆண்டவர் "கிருஷ்ண தேவராயர்". அவர்கள் ஸ்ரீ மடத்திற்கு ‘'பொடவூரை'' நிவந்தமாக [மானியமாக] அளித்ததை [கி.பி. 1514] கீழம்பிக் கல்வெட்டு விளம்புகிறது.

காட்டுப்பத்து, அம்பிகாபுரம் ஆகிய ஊர்களை மான்யமாக அளித்ததுடன் ‘'சகல சாஸ்திரங்களையும் முற்றிலுமாகக் கற்ற மகாத்மா'’ எனவும் இவரைப் போற்றி செப்பேட்டில் பதித்திருக்கிறார் கிருஷ்ண தேவராயர்.

இவர் 1524 ஆம் ஆண்டு, சுபானு வருடம், பங்குனி மாதம், வளர்பிறை, ஏகாதசி திதி அன்று சித்தி அடைந்தார்.

இவர் 17 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார். 



கருத்துகள் இல்லை: