வெள்ளி, 11 அக்டோபர், 2024

படலம் 53 : சிவபக்த பிரதிஷ்டை...

படலம் 53 : சிவபக்த பிரதிஷ்டை...

51. பரிவார கும்பங்களில் பூஜிக்கத்தக்கவர்கள், அஷ்டவஸுக்களும் ஏற்புடையன. ஸ்தீரீகளின் பரிவாரங்களில் லோகபாலர்களின் மனைவிகள் கூறப்படுகிறார்கள். (1. சசீதேவி, 2. ஸ்வாஹாதேவி, 3. ஸ்வர்காதேவி, 4. வர்காதேவி, 5. காலகண்டி, 6. நிர்மிணீ, 7. நாரிணீ, 8. சுககேதிநீ)

52. ஆண் விஷயத்தில் லோகபாலர்களையோ எட்டு கும்பங்களில் பூஜித்து சந்தனம் புஷ்பம் முதலியவற்றால் தத்வ தத்வேச்வரர்களையும் பூஜிக்க வேண்டும்.

53. ஆத்ம, வித்யா, சிவம் என்பவை தத்வத்ரயம் என கூறப்படுகிறது. ஆத்மா, அந்தராத்மா, பரமாத்மா இவர்களை பரமாத்மனம் எனவும் தத்வாதிபர்களாவர்.

54. தத்வ தத்வோச்வரர்களாக முறையாகப் பூஜிக்கவும், ஸ்திரீகளுக்கும் இம்மாதிரி ஆகும், க்ஷ்மா முதலான மூர்த்திகளும் சம்மதமே.

55. எட்டு மூர்த்திகள் என்ற விஷயத்தில் க்ஷ்மா முதலானோர்களும், அதிபர்கள் இந்தரன் முதலானோர்களும் ஆவர். ஐந்து மூர்த்திகள் என்ற விஷயத்தில் ப்ருத்வீ, முதலானோர்களும் நிவ்ருத்தி முதலான கலைகளும் ஆகும்.

56. அந்தந்த மூர்த்திபர்கள் அவரவர்களின் குண்ட மூர்த்தி ஹ்ருதயத்தில் அதற்குரிய பிரம்ம மந்திரங்களை நியஸித்து பூஜிக்கவும். அ முதல் க்ஷ வரை தலை முதலான பாகங்களில் முறைப்படி நியாஸம் செய்ய வேண்டும்.

57. ஜீவன்யாஸத்தை மூலமந்திரத்தாலும் அங்க மந்திரங்களையும் நியாஸம் செய்யவேண்டும். சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து வஸ்த்ரத்தால் கவச மந்திரம் சொல்லி மூடி

58. பிறகு குண்ட சமீபத்தை அடைந்து அக்னி கார்யங்களை ஆரம்பிக்கவும். முன்போல் குண்ட ஸம்ஸ்காரத்தையும் பின் சிவாக்னியையும் ஸ்தாபித்து

59. அக்னி மத்தியில் பக்தரை ஆவாஹித்து ஹோமம் செய்யவும். சமித்து, நெய், அன்னம், பொறி, எள் முதலிய திரவ்யங்களை மூர்த்திபர்களோடும்

60. புரசு, அத்தி, ஆல் முதலியவற்றை கிழக்கு முதலாகவும், வன்னி, கருங்காலி, நாயுருவி, வில்வம் முதலிய சமித்துக்களால் ஆக்னேயம் முதலாகவும்

61. பிரதானத்தில் புரசு சமித்தையும் நூறு, ஐம்பது, இருபத்தைந்து என்ற எண்ணிக்கையில் ஹோமம் செய்யவேண்டும், பூர்ணாஹுதி செய்து தத்வேசர் களுக்குத் தனியாகவும்

62. மூர்த்தி மூர்த்தீச்வரர்களுக்கு தனியாகவும் மூன்று ஆஹூதிகளையும் செய்து அகோர மூலத்தால் மூன்று ஆவ்ருத்தி பிராயச்சித்த ஆஹுதிகளாக ஆசார்யர் கொடுக்க வேண்டும்.

63. சிரோபாகம் முதல் பாதம் முடிய சாந்தி கும்ப ஜலத்தால் புரோக்ஷித்து பிறகு குருவானவர் அந்தர்பலி, பஹிர்பலியையும் கொடுத்து

64. மீதமுள்ள இரவைக் கழித்து காலையில் குருவானவர் ரித்விஜர்களுடன் ஸ்நானம் செய்து ஸந்தியா வந்தனம் மற்றும் செய்ய வேண்டியவற்றைச் செய்து

65. கவுசிகர் முதலான ஐந்து கோத்திரத்தில் பிறந்தவர்களும் தலைபாகை உத்திரீயம் அணிந்தவராய் பஞ்சாங்க பூஷணர்களாய் தட்சிணையால் மகிழ்ச்சி அடைந்த மனதுடையவராய்

66. அவ்வாறே பூஜிக்கப்பட்டு மகிழ்ச்சியடைந்த மூர்த்திபர்கள், மந்திரம் ஜபிப்பவர்கள் வேதபாராயணம் செய்பவர்கள் ஜ்யோதிடர்கள் சிற்பிகள் ஆகிய இவர்களோடும்

67. ஆசார்யரானவர் த்வாரபூஜை, த்வாரபாலர் பூஜை, கும்பபூஜையும் செய்து அக்னி குண்டத்தில் பூஜையையும் பூர்ணாஹுதியையும் முறைப்படி செய்யவும்.

68. சயனத்திலிருக்கும் பிம்பத்தை எழுப்பி உசித முறையில் வாகனத்திலேற்றி ஆலயம் முதலான இடங்களுக்கோ எடுத்துச் சென்றோ ஸ்நான மண்டபத்திற்கோ கொண்டு வர வேண்டும்.

69. ரத்ன நியாஸத்தை முன்போல் செய்து ஸ்நபனத்தை செய்யவும். ஆஸனத்தில் பிரணவத்தை செய்து மூர்த்தி மூலத்தை பூஜிக்க வேண்டும்.

70. மாத்ருகா நியாஸத்தையும் பிறகு ஜீவன் யாஸத்தையும் செய்யவும். கும்ப ஜலத்தால் அபிஷேகம் செய்து சுற்றியுள்ள கும்பங்களையும் அபிஷேகித்து

71. வஸ்த்ர சந்தன புஷ்பங்களாலும் தூபதீப நைவேத்யங்களாலும் உபசாரங்களாலும் மற்றவைகளாலும் சிவபக்தரைப் பூஜிக்க வேண்டும்.

72. முடிவான உத்ஸவத்தை சக்திக்கு தகுந்தவாறு செய்யவும். அது முதல் கொண்டு அந்த பக்தரை தினந்தோறும் பூஜிக்க வேண்டும்.

73. ஆதிசைவ குலத்தில் தோன்றிய ஐந்து கோத்திரத்திலுதித்தவர்கள் அவசியமான மலவிஸர்ஜநாதிகள், சவுசம், ஸ்நானம், ஸந்தியாவந்தனம் இவற்றை

74. முடித்துக் கொண்டு ஆசார்யன் ஆலயத்தில் பிரவேசித்து ஸாமான்யர்க்கத்தை உடையவராய் திவாரத்திற்கு இருபுறமும் உள்ள புருஷன், ப்ரக்ருதி என்பதான வாயிற்காப்போரை பூஜித்து

75. கர்பகிரஹத்துள் நுழைந்து அழிவில்லாத பரமாத்மரூபியான வாஸ்துவை நடுவில் பூஜித்து பூதசுத்தியை செய்து

76. மந்திர சரீரம் உடையவராய் ஸ்தான சுத்தியையும் செய்து புஷ்பம் அக்ஷதை, ஜலத்துடன் கூடிய விசேஷார்க்யத்தைச் செய்து

77. ஆசார்யர் முன்சொன்னபடி அனைத்து திரவ்யங்களையும் பிரோக்ஷிக்க வேண்டும். பிரணவத்தை முன் கொண்டு நம என்பதை முடிவாகக் கொண்ட மந்திரங்களை மந்திர சுத்தியின் பொருட்டு சொல்ல வேண்டும்.

78. அஸ்த்ர மந்த்ர மயமான ஜலத்தால் பிம்ப சுத்தியின் பொருட்டு சிலை முதலானவற்றை அபிஷேகிக்க வேண்டும். முன்கூறியபடி ஷடுத்தாஸநத்தைப் பூஜித்து

79. அதன் மத்தியில் குருவானவர் மூர்த்தியை அந்தந்த உருவமுடையவராய் அந்தந்த மூலமந்திரத்தாலும் மூர்த்தி மந்திரத்தாலும் பூஜித்து

80. பிறகு ஜீவன்யாஸத்தை செய்து ஹ்ருதயாதிகளையும் பூஜிக்கவும். ஹ்ருதய மந்திரத்தால் பாத்யம் ஆசமனம் அர்க்யங்களை கொடுக்க வேண்டும்.

81. சுத்த ஜலத்தால் அபிஷேகித்து பஞ்சகவ்யங்களை அபிஷேகித்து, பிம்பத்தை துடைத்து வஸ்த்ரம், சந்தனம், புஷ்பம், தூபம்

82. தீப ஸஹிதம் நைவேத்யம் கொடுக்க வேண்டும். உபசாரமாக தாம்பூலத்தையும் இவ்வாறு மூன்று காலங்களிலோ இரண்டு காலங்களிலோ செய்ய வேண்டும்.

83. அல்லது ஒரு கால பூஜை செய்வதானாலும் பலி உத்ஸவத்துடனோ, இல்லாமலோ தீபாந்தமாகவோ நிவேத்யாந்தமாகவோ, சக்திக்கேற்ப பூஜிக்க வேண்டும்.

84. அயனத்திலும், விஷுவ காலத்திலும், மாத பிறப்பிலும் கிரஹணம் முதலானவைகளிலும் முன் கூறியபடி பூஜையை செய்ய வேண்டும்.

85. நடுகும்பத்தில் பக்தரையும் க்ஷ்மா முதலானவர்களை, முதல் ஆவரணத்திலும், பதினாறு ஸ்வரங்களை அதற்கு வெளி ஆவரணத்திலும் அதற்கு அடுத்த ஆவரணத்தில் ககாராதிகளையும் பூஜிப்பது ஏற்புடையது.

86. இவ்வாறு பூஜிப்பது உத்தமமாகும். இரண்டு ஆவரணத்துடன் பூஜை செய்வது மத்யமமாகும். ஒரு ஆவரணத்துடன் பூஜிப்பது அதமம் எனக் கூறப்படுகிறது.

87. உத்ஸவத்தை விமரிசையாகவெனில் ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டும். பக்தருடைய ஜன்மதினத்திலோ கர்த்தாவின் ஜன்ம தினத்திலோ செய்ய வேண்டும்.

88. ஸம்வத்ஸரோத்ஸவ கார்யமானது வொரு வருடமும் கல்யாணத்துடன் ஒன்பது ஏழுநாள், ஐந்துநாள், மூன்று நாள் விழாவாகவோ

89. அல்லது ஒருநாள் விழாவாகவோ பலிஹோமத்துடன் த்வஜாரோஹனம் முதலாக அனைத்தையும் கர்த்தாவின் விருப்பப்படி செய்ய வேண்டும்.

90. எல்லா உத்ஸவங்களிலும் கொடிச் சீலையில் வ்ருஷபத்தை எழுதி அந்தந்த இனத்திற்குச் சொல்லப்பட்ட அஷ்டமங்கலப் பொருட்களுடன் கூடியதாக எழுத வேண்டும்.

91. ராத்திரியில் பக்தரின் அஸ்த்ர தேவருடன் கூட பேரீதாடனத்தைச் செய்து இந்திராதிகளுக்கு சந்தனம், புஷ்பங்களுடன் கூட பலியையும் கொடுக்க வேண்டும்.

92. உத்ஸவத்தின் முதல்நாள் இரவில் யாக அதிவாஸத்தை செய்ய வேண்டும். வேதிகையுடன் கூட யாகசாலையை முறைப்படி அமைத்து

93. கிழக்கு குண்டம் முதலான எட்டு குண்டமோ அல்லது ஐந்து குண்டங்களுடனோ எல்லா மங்களமும் பொருந்தியதாக யாகசாலை அமைத்து அங்குரார்பணத்தை செய்ய வேண்டும்.

94. பலியின் பொருட்டும் உத்ஸவத்தின் பொருட்டும் சிவபக்தர் உருவ சிலையை சிறியதாகவோ, பெரியதாகவோ செய்து ஆசார்யர் முறைப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

95. பிறகு ரக்ஷõபந்தனம் செய்து வேதிகையின் நடுவில் நெல் முதலியவைகளால் ஸ்தண்டிலம் அமைத்து கும்பங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

96. பிரதிஷ்டா விதியில் கூறிய முறைப்படி அவைகளை பூஜிக்கவும். ஒவ்வொரு நாளிலும் தேவர்களை காலையிலும் மாலையிலும் ஆசார்யர் பூஜிக்க வேண்டும்.

97. சந்தனம், பூக்கள் முதலியவைகளுடன் கடைசியில் ஹோமத்தை செய்ய வேண்டும். இப்பூஜையில் திரவ்யங்கள் பிரதிஷ்டையில் கூறியபடியே ஆகும்.

98. க்ஷúத்ர (மூர்த்தங்களுக்கு) பிம்பத்துடன் கூடியவைகளுக்கு மாலையிலும் காலையிலும் பலியையும் கொடுக்கவும். பலியின் முடிவில் எல்லா அலங்காரத்துடனும் கூடி மூர்த்திகளுக்கு உத்ஸவத்தைச் செய்ய வேண்டும்.

99. வாத்யம், நாட்யத்துடன் கூடியதாக வீதிவலம் வருதலை செய்யவும். முடிவில் சூர்ணோத்ஸவமும் தீர்த்தவாரியும் செய்ய வேண்டும்.

100. ஒவ்வொரு நாளும் மூல பேரத்திற்கு விசேஷமான பூஜையை செய்ய வேண்டும். முடிவில் மூலபேரத்திற்கு சுத்த ஸ்நபனத்தைச் செய்ய வேண்டும்.

101. முனீச்வரர்களே கொடியேற்றமோ, பலிஹோமமோ செய்ய இயலவில்லை என்றால் உத்ஸவம் மாத்ரமோ செய்ய வேண்டும்.

102. எந்த மனிதர் சிவபக்தபிரதிஷ்டையை செய்கிறாரோ அவர் ஆயுள், ஆரோக்யம், வெற்றி; ஐஸ்வர்யம், கீர்த்தி முதலிய பலன்களை அடைவார்கள்.

103. கடைசியில் சிவனுடன் இரண்டறக் கலப்பர். இதில் சந்தேகம் என்பது இல்லை.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் சிவபக்த பிரதிஷ்டை முறையாகிற அறுபத்தாறாவது படலமாகும். 

கருத்துகள் இல்லை: