ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
3. ஸ்ரீ சர்வக்ஞாத்மநேந்த்ர சரஸ்வதி.
மூன்றாவது ஆச்சார்யர் [கி.மு. 407 - 364]
இவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது ஸ்ரீ சங்கரர் மஹா குருவாகப் பொறுப் பேற்றார். அதாவது சர்வஞான பீடாரோஹணம் கொண்டார். அப்போதே சிறுவனான இவரை அழைத்து அடுத்து பொறுப்புக்கு வர வேண்டியவராக இவரையும் இணைத்துக் கொண்டார். இவருக்கு தானே சர்வக்ஞாத்மநேந்த்ர சரஸ்வதி என்றும் பெயரிட்டார்! சுரேஸ்வராசார்யாவின் மேலான வழிகாட்டுதலிலும், கற்பித்தலிலும் இவர் சகலமும் அறிந்தார்.
சங்கர பகவத் பாதாள் எழுதிய சங்கர ப்ரம்ம சூத்திர பாஷ்யத்துக்கு 1267 அற்புத சுலோகங்களால் விளக்கம் எழுதினார். அதன் பெயர் ''சம்க்ஷேப சரீரகா'' என்பதாகும். சுரேஸ்வராசார்யாருக்குப் பின் பொறுப்பேற்ற இவர் வெகு காலம் மடத்தை நிர்வகித்து வந்தார்.
இவர் கி.மு. 364 ஆம் ஆண்டு, நள வருடம், வைகாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், ஏகாதசி திதியில், அஸ்வினி நக்ஷத்திரத்தில், காஞ்சிபுரத்தில் சித்தி அடைந்தார்....
இவர் 43 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக