திங்கள், 12 அக்டோபர், 2020

துவாரபாலகர்


துவாரபாலகர்

துவார என்பது "வாயில்" என்றும், பால என்பது "காப்போன்" என்றும் பொருள்படும்.

துவாரபாலகர்

 
மூலவருக்கு முன்பு இருபுறமும் காணப்படும் வாயிற்காவலர்கள் ஆவர்.

முக்தியின் வாசலில் நான்கு துவார பாலகர்கள் உண்டு என்கிறார் வசிஷ்டர்.

அவை:

1. சமம்: புலன்களை தீமையில்லாத நல்ல வழிகளில் திருப்பி கட்டுப்படுத்துதல். ...

2. விசாரம்: எதையும் ஆழமாய் சிந்தித்து தெளிந்து அதன்படி வாழ்தல். கொள்ளத்தக்கன எவை, தள்ளத்தக்கன எவை என்பதில் தெளிவாயிருத்தல்.

3. சந்தோஷம்: வேட்கைகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் பின் ஓடி சஞ்சலப்பட்டு துயரம் கொள்ளாமல் தான் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்து நிறைவாக, சந்தோஷமாய் வாழ்தல்.

4. சத்சங்கம்: உண்மையான சாதுக்கள் மற்றும் அறநெறியில் உயர்ந்தோரை அணுகி இருத்தல்.

இந்த நான்கு வழிகளில் ஒன்றையேனும் முழுமையாகப் பின்பற்றினால் மீதி மூன்றும் தானாகவே அமையும் என்கிறார் வசிஷ்டர்.

துக்க வடிவான சம்சாரத்திலிருந்து விடுதலையைப் பெற ஒரே வழி மனதை வசப்படுத்துதலே என்கிறார் வசிஷ்டர்.

சிவாலயங்களில் உள்ள துவாரபாலகர்கள் .  

சண்டி - முண்டி,

சண்டன் - பிரசண்டன்,

திரிசூலநாதர் - மழுவுடையார்,

நந்தி- மகாகாளர்

உய்யக்கொண்டார் - ஆட்கொண்டார்

ஆகியோர்   இணை துவாரபாலகர்கள்  ஆவர்.

திண்டி தனியான துவாரபாலகர்.

மகா விஷ்ணுவின் ஆலயங்களில் இடம்பெற்றிருக்கும் துவார பாலகர்கள்

ஜயன், விஜயன்.

அம்மன் கோயிலின் வாயிலில் காக்கும் துவார பாலகிகள்

ஹரபத்ரா, சுபத்ரா

ஜெயந்தி வைஜெயந்தி ஆவர்

மகாலெட்சுமிக்கு துவார பாலகிகள்

ஜெயா,விஜயா

முருகனின் துவாரபாலகர்கள்

சுமூகர், சுதேகர்

கோயிலின் முகப்பில் இடம்பெற்றிருக்கும் துவார பாலகர்களின் சிலை கீழ் கண்ட விதங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்.

ஒன்று, சங்கு, சக்கர, கதாயுதத்துடன் ஆயுத பாணிகளாக துவார பாலகர்கள் காட்சி தருவார்கள்.

இன்னொன்று, நிராயுதபாணியாக, தன்னுடைய ஆட்காட்டி விரலை உயர்த்தியபடி ஒரு துவார பாலகர் நிற்பார். இறைவன் ஒருவனே என்பதுதான் இதன் தத்துவம்.

இன்னொரு பாலகர், தன்னுடைய கையை விரித்தபடி இருப்பார். இறைவனைத் தவிர வேறெதுவுமில்லை என்பதே இதன் தத்துவம்.

கோயிலுக்குள் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் துவார பாலகர்களின் எதிரில் நமஸ்கரித்து, உட்செல்ல அனுமதி பெற்று, பிறகே மூல ஸ்தானத்தை வழிபடச் செல்லவேண்டும் என்பது ஆலய தரிசன விதி.

சண்டி - முண்டி,

தாரகாட்சன், கமலாட்சன்,
வித்யுன்மாலி
அரக்கர்கள் வசித்த முப்புரங்களை சிவபெருமான்  தன்னுடைய புன்சிரிப்பால் எரித்தார்.

அப்போது எழுந்த தீயில் பூவாக லிங்கம் தோன்றியது

அதனை இரு அரக்கர்கள் கட்டிப்பிடித்தனர். அவர்களே சண்டி, முண்டி என்ற இரு துவாரபாலகர்களாக ஆனார்கள்.

சண்டன் - பிரசண்டன்,

இவர்கள் வீராதி வீரர்கள். தமிழில் வழங்கப்படும் ஒரு பழமொழி தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட, பிரசண்டன்

இதன்மூலம் இந்த துவாரபாலகர்கள் பற்றிய விவரத்தை முற்காலத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர்

திரிசூலநாதர் - மழுவுடையார்,

திரிசூலநாதர்  சிவபெருமானின் சூலமாவார். இவருடைய சிற்பத்தின் தலைப்பகுதியின் பின்பக்கத்தில் திரிசூல வடிவம் காணப்படுகிறது.

மழுவுடையார்  சிவபெருமானின் கைகளில் இருக்கும் மழு ஆயுதமாவார்.

இவருடைய சிற்பத்தின் நெற்றிப் பகுதியில் மழுவேப் போன்ற புடைப்பு உள்ளது.

நந்தி- மகாகாளர்

நந்தி ஆண் கல்லிலாலும், மகாகாளர் பெண் கல்லாலும் வடிவமைக்கப்பட்டுள்ளார்கள்.

உய்யக்கொண்டார் - ஆட்கொண்டார்

துவாரபாலகர்களுக்கு உரிய கதையுடனும், பின்னிரு கைகளில் ஆயுதங்களையும் தாங்கியபடி உள்ளார்கள்.

திருவையாறு தெற்கு வீதியில்
கோவிலின் நுழைவு வாயிலில் இருக்கின்றனர்.

இவர்களில் ஆட்கொண்டார்
யம பயம் நீக்குபவர்...

இவருக்கு முன்பாக நந்தி விளங்குகின்றது..

இந்த ஆட்கொண்டார் முன்பு
குங்கிலியக் கலயர் அமைத்த குண்டம் இன்றும் இருக்கிறது.

1300 ஆண்டுகளுக்கு மேலாக - திருநாவுக்கரசர் காலத்திலிருந்து புகைந்து கொண்டிருக்கும் குண்டத்தில் குங்கிலியம் இட்டு கோவிலுக்குள் செல்வது மரபு ஆகும்.

குண்டத்தில்  எப்போதும் குங்கிலியம் மணந்து கொண்டே இருக்கும்.

பக்தர்கள் அருகில் உள்ள கடையில்  குங்கிலியம் பொட்டலம் வாங்கி
இங்குள்ள குண்டத்தில்
அர்ப்பணிக்கிறார்கள்..

இதனால் விஷ ஜந்து கடியிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளலாம்

குங்குலியத்தின் பயன்கள்

வெள்ளை குங்கிலியம் தூபம்:

வீட்டில் எந்த ஒரு நல்ல செயலையும் செய்ய விடாமல் தடுக்கும் துஷ்ட ஆவிகள் வீட்டில் இருந்து விலக வெள்ளை குங்கிலியம் தூபம் சிறந்ததாகும்.

இதனால் அந்த ஆவிகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும்..

கண்திருஷ்டியை அழிக்கும்.

வெண் குங்கிலியம், வேப்பிலை கலந்த புகை போடுதல் ஆரோக்கியத்தை உருவாக்கும். இதனை தொடர்ந்து கடைபிடித்தால் கொரோனா உள்ளிட்ட எந்த வைரசும் நம்மை அண்டாது,

ஆட்கொண்டாரின் சிறப்பு

கௌதமி நதி பாயும் நாட்டிலிருந்து சுசரிதன் என்ற அந்தணச் சிறுவன் தந்தையும், தாயும் இறந்தபின்  யாத்திரை மேற்கொண்டான்.

அப்போது வழியில் திருப்பழனம் என்ற ஊரில் தங்கியிருந்தான். ஒருநாள் இரவு அவனது கனவில் யமன் தோன்றி ""இன்றைக்கு ஐந்தாம் நாள் நீ மரணம் அடைவாய்'' என்றார்.

அதுகேட்டு அச்சிறுவன் அஞ்சி வசிஷ்ட முனிவரை அணுக, அவரது அறிவுரையின்படி திருவையாறு சென்று சிவதரிசனம், பஞ்சாக்கர
முதலியன
ஜபம்  செய்து வரலானான். வசிஷ்ட முனிவரும் சிறுவனுக்காக ஜபம் செய்யலானார்.

யமன் ஐந்தாம் நாள் சிறுவன் முன் தோன்றினான். ஐயாற்று எம்பெருமான் துவாரபாலகரை ஏவி அந்தணச் சிறுவனைக் காக்குமாறு பணித்தார்.

அஞ்சாது எதிர்த்த யமனை துவாரபாலகர்கள் அடக்கினர்.

பின் சிவபெருமானும் தெற்கு வாயிலின் மேற்புறத்தே தோன்றி சுசரிதனுக்கு ஆயுள் அருளி, யமனிடமும் சிறுவனை எம பயம் நெருங்காதிருக்குமாறு பணித்து மறைந்தார்.

இவ்விதம் சிறுவனுக்கு எம பயம் தீர்த்த இந்த மூர்த்தியே ஆட்கொண்டேசப் பெருமான் ஆவார். தனது காலின் கீழ் எமனை மிதித்தவாறு அருளும் அவரது திருவுருவம் அற்புதமானது.

இந்தச் சம்பவம் நடந்தது ஒரு கார்த்திகை மாத அஷ்டமி அன்று ஆகும்.

கார்த்திகை மாத காலாஷ்டமி தினத்தன்று காலை காவிரியில் தீர்த்தவாரியும், ஆட்கொண்டார் சந்நிதியில் விசேஷ அபிஷேகங்கள், எண்ணற்ற அளவில் வடை மாலை சாத்துதல் போன்ற வைபவங்களும் இரவு எம வாகனத்தில் ஆட்கொண்டார் உற்ஸவர் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

திண்டி

தமிழ்நாட்டில் திண்டிவனம் நகரில் திந்திரிணீஸ்வரர் சிவாலயத்தில் ஒரே ஒரு துவாரபாலகர் மட்டுமே உள்ளார். திண்டி எனும் பெயருடைய துவாரபாலகர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டமையால், திண்டிவனம் என இவ்வூர் பெயர் பெற்றது.

ஜெயன் & விஜயன்

வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு துவாரபாலகர்களாக இருந்தவர்கள் சனத்குமாரர்களின் சாபத்தினால் மூன்று பிறவிகளில் அசுரர்களாக இருந்து, பின்னர் திருமாலின் சேவைக்கே அவர்கள் வந்து சேர்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த துவாரபாலகர்கள் கரங்களிலே சங்கும் சக்கரமும் கதாயுதமும் ஏந்திக் காட்சி தருகின்றனர்.

கருத்துகள் இல்லை: