செவ்வாய், 8 அக்டோபர், 2024

படலம் 23: நிர்வாண தீட்சை...

படலம் 23: நிர்வாண தீட்சை...

23 வது படலத்தில் நிர்வாண தீட்சை கூறப்படுகிறது. முதலில் உயர்ந்த நற்கதியை கொடுக்க கூடிய நிர்வாண தீட்சையை கூறுகிறேன் என்று உத்தரவு இடுகிறார். பிறகு ஆசார்யன் நித்ய அனுஷ்டானங்களை முடித்து மந்திர தர்பணம் செய்து சூர்யபூஜை செய்து அங்கந்யாஸ கரன்யாசங்களை செய்த சரீரங்களை உடையவனாகவும் சாமாந்யார்க்ய கையுடன் திவாரத்தில் திவாரதேவர்களை பூஜித்து மேற்கு வாயில் வழியாக யாகசாலையில் நுழைந்து பிரம்மாவை பூஜித்து முறைப்படி ÷க்ஷத்ர பாலர்களை காக்கும்படி வேண்டி பூதசுத்தி முதலியவைகளை செய்து விசேஷார்க்யம், ஞானகட்கம், பஞ்சகவ்யம் இவைகளை தயாரித்து விகிரம் இரைத்து பூமிபூஜை செய்து சிவகும்பம் வர்த்தனி பூஜித்து லோகபாலகர்களுக்கு சிவனின் உத்தரவை தெரிவித்து அஸ்திரகும்ப பிரதட்சிணம் செய்து ஞானகட்கம் பூஜித்து மண்டலத்தில் தேவனை பூஜித்து அக்னியில் மந்திரதர்ப்பணம் செய்து பகவானே உன் தயவால் என்னுடைய சரீரத்தில் சிஷ்யர்களின் பாவிதாத்மாக்களுக்கு உன்னால் அனுக்ரஹம் செய்ய வேண்டும் என்று தேவனை வேண்டி உத்தரவு அடைந்தவராக சிஷ்யனுடைய சிரஸில் தலைப்பாகை வைத்து தனக்கும் சிவனுக்கும் ஒன்று சேர்ந்த பாவனையை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு அதிவாஸ கிரியைக்காக சிவனின் கட்டளைப்படி நடக்கும் விதம் கூறப்படுகிறது. பிறகு சிஷ்யனை தனக்கு வலது பாகத்தில் அழைத்து சிவாதி மந்திரங்களுக்கு தீபனத்தை நன்கு செய்ய வேண்டும். என கூறி மந்திரதீபனம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. பின்பு சிஷ்யனுக்கு பாச சூத்தர பந்தன முறையையும் பாச சூத்ரத்தில் ஸூஷும்னாநாடீ சேர்க்கையும் அதே சூத்திரத்தில் சேர்ப்பதும், மந்திர அத்வாதிகளின் வியாப்ய, வியாபக தன்மை சொல்வதும் ஆகிய இந்த விஷயங்கள் கூறப்படுகின்றன. இது பற்றி விளக்குவதில் மந்திரங்கள் முதலிய ஜந்துகளின் அத்வாக்கள் பரம வியாப்திகமாக ஐந்து கலையும் அந்த கலைகளால் கலைகளே தீட்சையால் பாவித்து சோதிக்க தக்கதுமாகும். அந்த சுத்தியாலே அதற்கு உள் அடங்கியவையாகிற ஐந்து அத்வாக்களின் சுத்தி ஏற்படுகிறது என விளக்கப்படுகிறது.

பஞ்சகவ்யம் அருந்துதல் சருப்ராசனம், தந்தசுத்தி, இவைகள் கூறப்படுகின்றன. இதில் பல்குச்சி விழுவதால் நன்மை தீமை என்கிற அடையாளம் தெரிவிக்க படுகிறது. சிஷ்யன் சயனம் செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு குருவானவர் பல் குச்சி விழுந்ததால் தெரிவிக்கப்பட்ட பிரதிகூல சாந்திக்காக செய்ய வேண்டிய பிராயச்சித்தம் செய்து தானும் பஞ்சகவ்ய, சருப்பராஸநம், பல்துலக்குதல் முடித்து முயற்சியோடு சயனம் செய்யவும் இவ்வாறு நிர்வாண தீட்சை என்கிற கிரியை தொகுப்பு காணப்படுகிறது. அனுஷ்டானங்களை செய்த குரு, சிஷ்யர்களை, இரவில் காணப்பட்ட சொப்பனங்களை கேட்டு சுபசொப்பனமாக இருப்பின் முன்பு போல் சிஷ்ய பிரவேசம் முதலியவைகள் செய்ய வேண்டும். கெட்ட சொப்பனமாக இருப்பின் பரிகாரம் செய்து பிறகு சிஷ்ய பிரவேசம் செய்ய வேண்டும். சிஷ்யனை அழைத்து சமீபத்தில் தன்வலப்பக்கத்தில் அமர்த்தி அதிவாசம் செய்யப்பட்ட அந்த சூத்திரத்தை சிஷ்ய சரீரத்தில் தொங்கும்படி செய்து இந்த சிசுவுக்கு அனுக்ரஹம் செய்கிறேன் என்று பகவானை பிரார்த்தனை செய்து பகவானிடம் இருந்து உத்தரவு பெற்றவனாக ஆதார சக்தியை அக்னியில் பூஜிக்க வேண்டும். பின்பு முதலாவதாக, நிவிருத்தி கலாசுத்தி முறை நிரூபிக்கப்படுகிறது. அதில் நிவிருத்தி கலாசுக்தியில் பூஜிக்கக் கூடிய தத்வ, வர்ண, மந்திர, புவன பதங்களில் விளக்கம் கூறப்படுகிறது. செய்ய வேண்டிய ஹோமம் முதலிய கார்யங்களும் விளக்கப்படுகிறது. இவ்வாறகவே பிரதிஷ்டை வித்யா, சாந்தி, சாந்த்ய தீத கலைகளின் சுத்திகிரமம் முறைப்படி விளக்கப்படுகிறது. பிறகு சிகையை கத்தரிக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு சிவனிடம் சேர்க்கும் முறையும் ஸர்வக்ஞம் முதலிய ஆறுகுணம் உண்டாகும் முறையும் கூறப்படுகிறது. பிறகு நிர்வாண தீட்சையில் யோக்யமானவர்கள் விளக்கப்படுகின்றனர். முடிவில் பிற்பட்டவர்களுக்கு அவுத்ரீ என்ற தீட்சையானது செய்யக்கூடாது. சாக்க்ஷúவி தீட்சையை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 23வது படலகருத்து தொகுப்பாகும்.

1. நிர்வாண தீøக்ஷ பற்றி சொல்லுகிறேன். இது பரமமோக்ஷத்தைத் தருவதாகும். ஆசார்யர் நித்யானுஷ்பானங்களை செநய்து மந்திர தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

2. சூர்ய பூஜை செய்து சுத்தனாக சகளீகரண வடிவமாக ஸாமான்யார்க்யம் கற்பித்து நான்கு திவராங்களிலும் திவாரதேவதைகளை பூஜித்துக் கொள்ள வேண்டும்.

3. மேற்கு வாசல் வழியாக யாகசாலையினுள் பிரவேசிக்க வேண்டும். வாஸ்த்து பிரம்மாவை பூஜித்து சுத்தனாக பூமியில் தங்கியுள்ள இடையூறுகளை போக்கி ÷க்ஷத்ர ரøக்ஷ செய்து யாகசாலா ஸ்தானங்களை காத்துவர வேண்டும்,

4. பூதசுத்தி மந்திரந்யாஸங்கள் செய்து விசேஷார்க்யம் கல்பித்து ஞானகட்கம் பஞ்சகவ்யம் ஆகிய பூஜைகளை முறைப்படி செய்து கொள்ள வேண்டும்.

5. விகிரங்களை அபிமந்திரித்து பூமி சுத்தி செய்தும் விகிரங்களை தர்பங்களாலும் தெளித்தும் ஈசான திக்கிலுள்ள யாகேச்வர கும்பபூஜைக்கு தயாராகி

6. பாசுபதாஸ்த்ர கும்பத்தையும் வர்த்தனியையும் பூஜைசெய்க. குருவானவர் எட்டுதிக்குகளிலும் லோகபாலர்களை பூஜைசெய்து அவர்களிடம் அனுமதியை கேட்டு கொள்ள வேண்டும்.

7. அஸ்திரகும்பங்களால் யாக மண்டபத்தை சுற்றிவந்து யாக யாகேஸ்வர கும்பத்தை க்ஞானகட்கத்தையும் நன்கு பூஜிக்க வேண்டும். மண்டலத்தில் சிவபெருமானை பூஜித்து ஹோமாக்னியில் மந்த்ர தர்ப்பணம் செய்ய வேண்டும்.

8. ஹே பரமேஸ்வர; உன் கருணையுடன் என் சரீரத்தில் நுழைந்து தத்வாத்மாக்களான சிஷ்யர்களுக்கு உம்மால் அருள்பாலிப்பது செய்யவேண்டும்.

9. இவ்வாறு விக்ஞாபித்து சிவாக்ஞை பெற்று பரிவட்டம் தலையில் கட்ட வேண்டும். எல்லா காரியங்களுக்கு சாக்ஷியாக உள்ளவர் மண்டலத்தில் உள்ள ஸதாசிவரே.

10. யக்ஞத்துக்கு ரக்ஷகராக கும்பத்திலும் ஹோம காரணமாக அக்னியிலும் இருக்கிறார். சிஷ்யனின் சரீரத்தில் பாச நாசகராவும், என் சரீரத்தில் பாசமோசகராகவும் சதாசிவன் இருக்கிறார்.

11. மண்டலம், கும்பம், அக்னி, சிஷ்யன், ஆசார்யன் ஆகிய ஐந்து இடங்களிலும், ஆதாரமாக நீ பரமேஸ்வரனாக இருக்கிறாய். நானேசதாசிவன் எந்த சிவனுடைய ஹ்ருதயாதி மந்திரங்கள் கரணங்களில் இருந்து தோன்றியதாகுமோ

12. அவ்வாறே என்னிடத்தில் அந்த மந்திரங்கள் உள்ளன. எனது ஆத்மாவிலும் ஈஸ்வரன் சுதந்திரமாக இருக்கிறார் என்று உள்ளும் புறமும் உள்ள வாயுக்களால் தேவனை பாவனை செய்து ஈஸ்வரனை பிரார்த்திக்க வேண்டும்.

13. நிர்வாண தீøக்ஷக்காக வந்தடைந்த சிஷ்யனின் தகுதியை சோதிக்கப்பட்டவன். உயர்ந்த ஜாதி தெய்வாம்சம் சமயங்களின் தராதரம் அறிந்தவனாக சிஷ்யன் இருக்கிறான்.

14. அதே சமயம் சிவ அனுக்ரஹத்திற்காக எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள். முழுமையான உறுதி உடையவனாக வேண்டும் சிவாகமானுஷ்டானங்களை கடைபிடிப்பவனாக இருந்துகொண்டு

15. யாகசாலையில் பிரவேசித்து அக்னிகார்யம் ஆரம்பித்து தனது வலது பாகத்தில் சிஷ்யனுக்கு இடம் தந்து

16. நாடீ சந்தன மார்க்கத்தை அறிந்தவர் பூர்ணாஹுதியுடன் கூடி மந்திரதர்பணம் ஸமர்ப்பிக்க வேண்டும். சிவாதி மந்திரங்களோடு தீபநம் என்ற ஹோம விசேஷங்களை செய்து நிர்வாண தீøக்ஷ செய்யவேண்டும்.

17. அகோராஸ்திரத்தை ஸம்புடமாக ஜெபித்து சிவத்தை ஸாங்கமாக பட் என்ற சொல்லை முடிவில் உள்ளதாக நன்கு பூஜை ஹோமங்களை செய்ய வேண்டும். வளைந்த நெற்றி, புருவம், கைகள், முகம் இவற்றோடு கூடிய அகோர மந்திரத்தை

18. மூன்று முறை ஹோமமும் மந்திர தீபநாஹுதியும் செய்க. கன்னிகா பெண்ணால் தயாரிக்கப்பட்ட நூலை முப்பிரியாகவும் அதை மும்மடங்காகவும் செய்து கொள்ள வேண்டும்.

19. அஸ்திர மந்திரத்தால் பிரோக்ஷணமும் கவசத்தினால் அவகுண்டனமும் மூல மந்திரத்தினால் நன்கு பூஜையும் செய்து ஆத்மாவின் (சிசுவின்) சிரசின் மேலே இருக்கும் சிகையில் சூத்ரத்தை

20. வலது கால் கட்டைவிரல் நுனிவரை அந்த நூலை தொங்கும்படி கட்ட வேண்டும். இந்த நூலை கஷும்நா நாடியாக தியானித்து சிஷ்யனுடைய தேஹத்திலிருக்கிறதாக பாவிக்க வேண்டும்.

21. சுஷும்நாயை நம: என்று கிரஹித்து அவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். சந்தனம் புஷ்பம் இவற்றாலும் நன்கு பூஜித்து கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்க.

22. மூலத்தால் சன்னிதானத்திற்காக மூன்று முறை ஆஹுதி செய்ய வேண்டும். சிஷ்யனுடைய ஹ்ருதய பிரதேசத்தை அஸ்திரமந்திரத்தினால் பிரோக்ஷித்து புஷ்பத்தால்

23. ஹ்ருதயத்தை தட்டி ரேசகத்தால் அவனுடைய ஹ்ருதயத்தை அடைந்து நக்ஷத்ர காந்தியான அவன் சைதன்யத்தை ஹும் என்ற மந்திரத்தைக் கூறிக்கொண்டு

24. அஸ்திர மந்திரத்தால் ஹ்ருதய முடிச்சை மூலமந்திரத்தால் சேதனம் செய்து எடுத்து சிஷ்யனின் ஜீவன ஹ்ருதய ஸம்புடமாக த்வாத சாந்தத்தில் சேர்க்க வேண்டும்.

25. ஸகாரத்தின் முடிவான ஹகாரத்தை சொல்லி சம்ஹார முத்ரையால் அந்த சூத்ரத்தில் சேர்க்க வேண்டும். கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்ய வேண்டும்.

26. மூலமந்திரத்தினால் ஸன்னிதானத்திற்காக மூன்று ஆஹூதி செய்து ஆத்மாவின் போகசரீரத்திலிருந்து உண்டான ஆணவமலம், கர்ம மலர், மாயை ஆகியவைகளையும்

27. சாந்த்ய தீதை முதலிய கலைகளை அந்தந்த மந்திரங்களால் ஸூத்ரத்தில் சேர்க்க வேண்டும். சிவத்தன்மை வாய்ந்த சாந்த்யதீதையை நான்காம் வேற்றுமை ஹும்பட் என்ற சப்தத்துடன் கூடியதாக சொல்லி

28. சாந்த்யதீத கலாயை ஹும்பட் என்று அஸ்திர மந்திரத்தினால் புஷ்பத்தால் அடித்து சிஷ்யனின் சிரஸில் இருக்கும் சிவனைப் பிரணவத்துடன் கூடியதாக ஸம்ஹார முத்ரையால் எடுத்து

29. சாந்த்ய தீத கலாயை நம: என்று புருவ மத்தி ஸமீபம் உள்ள ஸூத்ரத்தில் சேர்க்க வேண்டும்.

30. இந்த முறைப்படி பூத சுத்தியில் கூறியபடியும் நான்கு கலைகளிலும் புஷ்பதாடனம் செய்து எடுப்பது, சேர்ப்பது

31. கழுத்து முதல் ஹ்ருதயம் வரை அவ்விடமிருந்து நாபி அங்கிருந்து முழந்தாள் அதிலிருந்து கால் கட்டைவிரல் வரை சேர்ந்து இருப்பது, சேர்க்கப்படுவது என்ற பாவத்தை அறிந்து செய்ய வேண்டும்.

32. மந்திரங்கள், பதங்கள், வர்ணங்கள், தத்வங்கள், புவனங்கள், வ்யாப்யமாகவும், வ்யாபகமாகவும் இருப்பதோடு கர்மம், ஆணவமலம், மாயை ஆகிய பாசங்களால் கட்டப்பட்டிருக்கின்றதாக அறிய வேண்டும்.

33. ஆணவாதி மலங்கள் வ்யாப்யங்கள் வ்யாபகங்களாக கலைகள் ஐந்தும் கருதப்படுகின்றன. ஆகையால் இவ்விடத்தில் கலைகளை ஸம்ஹரித்தால் ஸ்வீகரித்ததாக ஆகும்.

34. சுத்தமான மந்திரவாதிகளால் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும், இங்கு மறுபடியும் உண்டான சமயத்தில் சுத்தங்களாக ஆகின்றன. ஆகையால் எல்லாவற்றும் அதன் சுத்தி வெளிப்படுகின்றன.

35. அவைகளுக்காக ஓம், முதலாகவும் பட் என்ற முடிவோடும் கூடியதீபனத்தை செய்ய வேண்டும். அகோர மூலமந்திரம் சாந்த்யதீத கலை முதலியவற்றை

36. நான்காம் வேற்றுமை முடிவில் இருக்கும்படி உச்சரித்து ஹும்காரத்தையும் உச்சரித்து மூலத்தால் ந்யாஸம் செய்தபின் அதனதன் பீஜாக்ஷரத்தை நினைத்து கிளைகளை அடைய செய்ய வேண்டும்.

37. மும்முறை ஆஹுதி செய்து பாச பந்தனம் செய்து அஸ்திர மந்திரத்தால் சிஷ்யனின் சிரஸை தட்டி சிவமந்திரத்தை மூன்றுமுறை நினைக்க வேண்டும்.

38. பகவானே மலகர்ம மாயையுடன் கூடிய வ்யாபகமான சாந்த்யதீத கலையை சாந்தி கலையில் உள்ள தத்வம் வரையில் வ்யாபகமான பாசத்தை கட்டுப்படுத்துங்கள். (பகவன் சாந்த்ய தீத மலகர்ம ஸமந்விதம், சாந்தி தத்வா தே: வ்யாபகம் பாசம் பந்தபந்த) என்றும்

39. ஹும்பட் என்று முடிவாக மந்திரத்தை உச்சரித்து சூத்திர முடிச்சை செய்ய வேண்டும். அந்தந்த பீஜாக்ஷரத்தை சிவத்தோடு சம்புடிதமாக சிவபெருமானின் பதத்தில் வைக்க வேண்டும்.

40. சாந்தி கலையிலுள்ள ஆணவமலம், தத்வாதி, வ்யாபகம் உடைய பாசத்தை கட்டுப்படுத்துங்கள் என்பதாகக் கூறி சாந்தி கலா, மலதத்வாதி வ்யாகம், பாசம், பந்தபந்த ஹூம்பட் என்பதாக கூறி

41. இவ்வாறாக தனித்தனியாக மேற்கூறியவாறு பாசக்கயிற்றை முடிச்சு போடவும் அந்த சூத்ரத்தை எடுத்து சராவம் என்ற 2 மடக்கால் மேலும் கீழுமாக மூடி

42. சம்பாத ஹோமம் செய்து அந்த சூத்ரத்தை மண்டலத்தில் உள்ள ஈசனிடம் தெரிவித்து ஆத்மாவை ரக்ஷிப்பதாக சிவகும்ப ஸமீபம் வைக்க வேண்டும்.

43. சிவனுடன் கூடிய சிவகும்பத்தில் சிஷ்யனை நமஸ்காரம் செய்வித்து சிஷ்யனுடன் கூடிய ஆசார்யன் யாகசாலையிலிருந்து வெளியேவந்து

44. சிஷ்யர்களுக்கு ஹவிஸையும் பஞ்சகவ்யத்தையும் கொடுத்து பல்துலக்கும் படி செய்து நல்ல பிரதேசத்தில் தனித்தனியாக மெழுகப்பட்ட பூமியில்

45. போகத்தையும் மோக்ஷத்தையும் அனுசரித்து தனித்தனியாக மண்டலத்தின் அருகில் போகத்திற்காக கிழக்கு முகமாகவும் மோக்ஷத்திற்காக வடக்குமுகமாகவும்

46. அடக்கமான கால் கைகளை முயற்சியுடன் அடக்கி முறைப்படி முழங்கால்களையும் மடக்கியவாறு அமர்ந்தவர்களின் வலது கையில் தர்பத்தை எடுத்து

47. உயரே தூக்கிய பவித்ரம் தரித்த வலது கையினால் சிறிதளவு பஞ்சகவ்யத்தை ஹ்ருதய மந்திரத்துடன் ஓர்முறை கொடுக்க வேண்டும்.

48. அதை பருகியபின் மறுபடியும் முயற்சி உடையவர்களுக்கு அவ்வாறே இரண்டாவதுமுறை சிறிதளவு பஞ்ச கவ்யத்தையும் ஹவிஸ்ஸையும் கொடுக்க வேண்டும்.

49. எட்டுப்பிடி அளவு அரச இலையில் ஹவிஸ்ஸை வைத்து முமுக்ஷúகளுக்கும் போகத்தை விரும்புபவர்களுக்கு பிப்பல வ்ருஷ இலை பாத்திரத்திலும் வைத்து கொடுக்க வேண்டும்.

50. அந்தணர் அல்லாதவர்களின் தொடர்பு இருந்தால் போஜனத்திற்கு பிறகு சுத்திக்காக பாலுல்ளமரத்திலுள்ள குச்சியை

51. சுண்டுவிரல் அளவுள்ள பருமனும் நேர்மையானதும் பூச்சி அரிக்காததும் ருசி உள்ளதாகவும் தயார் செய்து மோக்ஷத்தை விரும்புபவன் எட்டு அங்குல அளவாகவும், போகத்தை விரும்புபவன் பனிரெண்டு அங்குல அளவாக வேண்டும்

52. கடவாய்பல் வரை வெளுப்பாக இருக்கும்படி நன்கு சுத்தி செய்து குச்சியையும் கொப்பளிப்பதையும் எந்த திசையில் செய்கிறார் என்பதை அறிந்து சுபஅசுபத்தை அறிக.

53. கொப்பளிப்பது, ஆக்னேயம், தெற்கு, நிருருதி வாயு திக்குகளில் கொப்பளிப்பதை செய்தால் அசுபமாகும். முகத்திற்கு நேர்பகுதி மற்றும் வேறு திசைகளில் கொப்பளித்தால் கர்மவசத்தால் சுபமென்று அறிக.

54. இவ்வாறு அறிந்து ஆசமனம் செய்து சமாதானமடைந்து சிஷ்யர்களை ஸ்வப்னங்கள் அதன் பலன்களை அறிய இரவில் ரøக்ஷயோடு கூடி படுக்க வைக்க வேண்டும்.

55. சயனம் செய்விக்கும் இடத்தை சாணத்தால் மெழுகி தர்ப்பையாலும் விபூதியாலும் ஸம்ஸ்கரிக்கப்பட்ட கிழக்கு தெற்கு ஆகிய திசைகளில் தலையை வைத்து படுப்பதற்கான படுக்கைகளை

56. ஒருவருக்கொருவர் ஸம்பந்தம் இன்றி இருபக்கங்களிலும் தலையணைகளை வைத்து நான்கு தண்ட அளவு இடைவெளியுடன் மறைவாகவும் இருட்டில் இல்லாமலும் ஆக

57. அஸ்திர மந்திரத்தால் நூறுமுறை அபிமந்திரித்து ஜபிக்கப்பட்ட படுக்கைகளில் ஹ்ருதய மந்திரத்தால் முடியப்பட்ட சிகைகளை உடையவர்களாக படுக்க வைத்து கவச மந்திரத்தினால் அபிமந்திரிக்கப்பட்ட

58. வஸ்திரங்களால் சிஷ்யர்களை போர்த்தி எள், கடுகு இவைகளால் அஸ்திரமந்திரத்தால் அபிமந்திரிக்கப்பட்டதாக சயனத்திற்கு வெளியே மூன்று கோடுகளை போட வேண்டும்.

59. ஸ்வப்னம் கண்ட சிஷ்யனின் பலனை அனுசரித்து அவனை பரிகாரமந்திரத்தை ஜபிக்க கூறி எட்டு திக்குகளிலும் இந்திராதிகளுக்கு முறைப்படி பலி கொடுக்க வேண்டும்.

60. சரு போஜனம், பல்துலக்குதல் இவைகளை செய்து ஸ்வப்ன பலத்தை அனுகூலப்ரதிகூல பலனை அறிந்து ஒவ்வொரு ஜாமத்திற்கு நூறு ஆஹூதி செய்ய வேண்டும்.

61. மூலமந்திரத்தால் நூற்றியெட்டு ஆஹுதி பிராயச்சித்தமாக செய்ய வேண்டும். கை கால் சுத்தி செய்து ஆசமனம் செய்து நல்ல தீர்த்தத்தால் ஸ்நானம் செய்து பிறகு ஆசமனம் செய்ய வேண்டும்.

62. பஸ்ம ஸ்நானமாவது செய்து வெள்ளை வஸ்திரம் தருவித்து உடலை சிவமாக செய்யப்பட்டதாக பாவித்து சமஸ்த வழிகளிலும் உள்ள தேகத்தை சிவமாக செய்ய வேண்டும்.

63. சருபோஜனம் பஞ்சகவ்யம் அருந்துதல், பல்துலக்குதல் இவைகளை தானும் செய்து சுத்தனாக ஆசார்யன் உறங்க வேண்டும்.

64. பிறகு மறுதினம் காலையில் செய்யப்பட்ட நித்ய அனுஷ்டானங்கள் உடையவனாக ஆசார்யன் இரவில் கண்ட ஸ்வப்னங்களை சிஷ்யர்களிடம் கேட்டு கெட்ட ஸ்வப்னமாயிருப்பின் பரிகாரம் செய்ய வேண்டும்.

65. காராம்பசுவின் பால், நெய், தேன், அருகம்பில் இவைகளால் நூறு ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும். சுபஸ்வப்னமாயிருப்பின் முன்புபோல் யாக சாலைக்கு சிஷ்யர்களை பிரவேசிக்க செய்ய வேண்டும்.

66. சிஷ்யனை அழைத்து குண்டத்திற்கு அருகில் தன்னுடைய வலது பாகத்தில் அமரச்செய்து அதிவாஸம் செய்யப்பட்ட பாச சூத்ரத்தை சிஷ்யனின் சரீரத்தில் தொங்கும்படி செய்ய வேண்டும்.

67. ஹேபரமேஸ்வரா இந்த குழந்தைக்கு அனுக்ரஹம் செய்கிறேன் என்று பிரார்த்தித்து சிவனிடம் அனுமதி பெற்றவனாக அக்னியில் ஆதார சக்தியை பூஜிக்க வேண்டும்.

68. நிவ்ருத்தி கலையில் அடங்கிய கலைகள் தத்வங்கள் முதலியவைகளையும் ப்ருத்வீதத்வம் க்ஷகாரம் ஹ்ருதய மந்திரம், ஸத்யோஜாதம்

69. காலாக்னி புவனம் கூஷ்மாண்டம், ஹாடகம், பிராம்மம் வைஷ்ணவம் இவைகளையும் ரவுத்ர புவனம் முடிய உள்ள பிரம்மாண்டத்தினுடைய ஆறு புவனங்கள் ஆச்ரிதமாக இருக்கின்றன.

70. கபாலீசர், அஜர், புத்தர், வஜ்ரதேஹர், பிரமர்தனர், விபூதி, அவ்யயர், சாஸ்தா, பீனாகி, த்ரிதசாதிபர் ஆகிய பத்தும் கிழக்கு திக்கிலும்

71. அக்னிருத்ரர், ஹுதாசனர், பிங்களர், காதகர், ஹரர், ஜ்வலநர், தஹநர், பப்ரு, பஸ்மாந்தகர் க்ஷயாந்தகர் ஆகிய பத்துபேர்களும் ஆக்னேய திக்கிலும்

72. யாம்யர், ம்ருத்யுஹரர், தாதா, விதாதா, கர்தரு சம்ஞகர், சம்யோக்தா, வியோக்தா தர்மா, தர்மபதி ஆகிய பத்து பேர்கள் தெற்கு திக்கிலும்

73. நிருருதி மாரணர், ஹந்தா, க்ரூர த்ருஷ்டி, பயாநகர், ஊர்த்துவகேசர், விரூபாக்ஷர், தூம்ர, லோஹிதர், தம்ஷ்ட்ரிணர் ஆகிய பத்து பேரும் நிருருதி திக்கிலும்

74. பலர், அதிபலர், பாசஹஸ்தர், மஹாபலர், ஸ்வேதர், ஜயபத்ரர், தீர்க்கபாகு ஜலாந்தகர் திக்கிலும்

75. மேகநாதர், சுநாதர், இந்த பத்துபேரும் மேற்கு பாகத்திலும் சீக்ரர், லகு, வாயுவேகர், தீக்ஷ்ணர், சூக்ஷ்மர், க்ஷயாந்தகர்,

76. பஞ்சாந்தகர், பஞ்சசிகர், கபர்த்தி, மேகவாகனர் ஆக பத்துபேர் வாயுதிக்கிலும் நிதீசர், ரூபவான், தன்யர், சவும்ய தேஹர், ஜடாதரர்.

77. லக்ஷ்மீத்ருக், ரத்னத்ருக், ஸ்ரீத்ருக், ப்ரஸாதர், ப்ரகாமதர் ஆக பத்துபேர் வடக்கிலும் வித்யாதிபர், ஈசர், ஸர்வக்ஞர், ஞானபுக், வேதபாரகர்

78. சுரேசர், சர்வர், ஜ்யேஷ்டர், பூதபாலர் பலிப்ப்ரியர் ஆகிய பத்துபேர் ஈசானத்திலும், வ்ருஷர், வ்ருஷதரர், அனந்தர், க்ரோதனர், மாருதாசனர்,

79. க்ரசநர், உதும்பரர், ஈசர், பணீந்த்ரர், வஜ்ர தம்ஷ்ட்ரிணர் ஆக பத்துபேர் அதோபுவனம் சம்பு, விபு: கணாத்யக்ஷர், த்ரியக்ஷர், த்ரிதசேஸ்வரர்

80. ஸம்வாஹர், விவாஹர், நபர், லிப்ஸு த்ரிலோசனர் ஆக பத்துபேர் ஊர்த்துவபுவனம். வீரபத்ரர், பத்ரகாளி, இந்தருத்ரர்கள் மேல் உள்ள பிரம்மாண்டத்தில் உள்ள ருத்ரர்கள் ஆவார்கள்.

81. கபாலீசர் முதலான பத்து ருத்ரர்கள் கிழக்கு திக்கிலும், அக்னி முதலான பத்து ருத்ரர்கள் ஆக்னேய திக்கிலும், யாம்யர் முதலான பத்துபேர் தெற்கு திக்கிலும், நிருருதி முதலான பத்து பேர் நிருருதி திக்கிலும்

82. பலர் முதலானவர்கள் மேற்கு பாகத்திலும், சீக்ரர் முதலானவர்கள் வாயு திக்கிலும் நிதீசர் முதலானவர்கள் வடக்கு பாகத்திலும் வித்யாதிபர் முதலானவர்கள் ஈசான திக்கிலும் இருப்பார்கள்.

83. வ்ருஷர் முதலிய ருத்ரர்கள் கீழ்பாகத்திலும் சம்பு முதலான ருத்ரர்கள் ஊர்வத்திலும் இருப்பார்கள். இவ்வாறு நூற்றிஎட்டு புவனங்களுக்கும் நூற்றி எட்டு ருத்ரர்.

84. எண்பத்தி ஒரு பதமுள்ள வ்யோமவ்யாபி பதந்யாஸத்தில் முடிவில் உள்ள பதத்திலுள்ள ஓம் முதலாக கீழிருந்து மேல் என்றமுறையாக நியாஸிக்க வேண்டும். அதில் நிவ்ருத்தி கலையில் கடைசியில் ஓம் நமோ நம: சிவாய நம: ஓம் என்றும்

85. பத மந்திரங்களில் சர்வத என்ற பதம் பின் சர்வ, சிவ, சூக்ஷ்ம சூக்ஷ்ம, சப்த சப்த, க்ஞானக்ஞான, பிங்க பிங்க என்றும்

86. பதங்க பதங்க, துரு துரு, ஸாக்ஷி ஸாக்ஷி, பூர்வ ஸ்தித பூர்வஸ்தித என்றும்

87. அஸ்துத அஸ்துத, அநர்ச்சிதாநர்ச்சித, ப்ரம்ம விஷ்ணுருத்ரபர, ஸர்வஸாந்தித்யகர என்ற பதங்களையும்

88. ஸர்வ பூத சுகப்ரத, பவோத்பவ, பவ பவ, சர்வ சர்வ, ப்ரதம ப்ரதம என்ற பதங்களையும்

89. முஞ்சமுஞ்ச, யோகாதிபதே, மஹாதேஜ:, ஸத்பாவேச்வர என்ற பதங்களையும்

90. மஹாதேவ என்ற பதம் வரையில் இருபத்தி எட்டு பதங்கள் உள்ளன. நிவ்ருத்தி கலையுடன் தத்வாதிகளுடன் கூடிய புவனங்களை வ்யாபித்துள்ளதாக அறியலாம்.

91. ஓம் ஹ்லாம் நிவ்ருத்தி கலாயை நம: என்று உச்சரித்து நிவ்ருத்தி கலையை பாசசூத்ரத்தில் இருந்து எடுத்து சிவாக்னியில்

92. ஆவாஹநம் செய்து மேற்கூறிய மந்திரபத வர்ணங்களுக்கு மூன்று முறை ஆஹூதி செய்ய வேண்டும். ஆணவம், மாயை, கர்மம் என்ற மூன்று மலங்களுக்கும் இன்ப துன்ப அனுபவம் சரீரத்திலிருந்து தோன்றுகின்றதாக

93. பாவித்து தேவிகர்பத்தை அடைந்த முடிவில்லாத உற்பத்தி ஸ்தானங்களாக கற்பித்து அதில் வியாபித்துள்ள வாகீஸ்வரியை ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

94. ஓம் ஹாம் வாகீச்வர்யை நம: என்று பூஜித்து, பிறகு ஸ்வாஹாந்தமான மந்திரத்தால் ஓம் வாகீச்வர்யை ஸ்வாஹா என்று மூன்று ஆஹூதி செய்து

95. ஹே தேவேசீ பசு அனுக்ரஹ கார்யத்தில் சான்னித்யமாக இருங்கள். இவ்வாறு பிரார்த்தனை செய்து சிஷ்யனை அஸ்திரமந்திரத்தால் பிரோக்ஷித்து ஹ்ருதய மந்திரத்தினால் தடானம் செய்ய வேண்டும்.

96. ஓம் அஸ்த்ராய பட் என்ற மந்திரத்தால் தன்னுடைய ரேசகத்தால் சிஷ்யனுடைய சரீரத்தில் பிரவேசித்து

97. அஸ்திர மந்திரத்தால் ஹ்ருதயத்தை சேதித்து அங்குச முத்ரையால் ஆகர்ஷணம் செய்து மூல மந்திரத்தால் மூன்று ஆஹுதிகளை செய்ய வேண்டும்.

98. புல்லின் நுனியில் உள்ள பிந்து கட்டுப்பட்டிருப்பது போல பிரணவத்தால் சம்புடிதமாக செய்து ஹாம் என்று உச்சரித்து குழந்தையான சிஷ்யனை சம்ஷார முத்ரையினால்

99. பூரகத்தால் தன் ஸ்ருதயத்தில் வைத்து இருக்கும்படியாக கும்பகம் செய்து மூலமந்திரத்தை ஜபித்து தன்னுடைய த்வாத சாந்தத்தில் சேர்க்க வேண்டும்.

100. சிஷ்ய சைதன்யத்தை உத்பவ முத்ரையால் எடுத்து சிசுவாகிய சிஷ்யனுக்கு எல்லா யோநிகளிலும் தொடர்பு சேர்க்கை உண்டு என்றறிந்து சேர்க்க வேண்டும்.

101. ஸ்வாஹாந்தமான மூல மந்திரத்தால் மூன்று ஆஹூதி செய்து பகவானே எல்லா உற்பத்தி ஸ்தானங்களில் (பகவன் தேவதேவேசசிசோ: ஸர்வாஸு யோநிஷுஸம் யோகம் குருகுரு)

102. தொடர்பு உண்டாக்குவது போல் தீக்ஷõ காலத்தில் மோக்ஷத்தை கொடுங்கள். அனைத்து கர்பத்தின் நிஷ்பத்தியின் பொருட்டு மூலமந்திரத்தால் மூன்று ஆஹுதி செய்ய வேண்டும்.

103. ஹே பகவானே இந்த சிஷ்யனுக்கு கர்பத்திலிருந்து விடுபடும் தன்மையை அப்பொழுதே எல்லா யோனிகளிடமிருந்து விடுபடச் செய்து எப்பொழுதும் சிவத்தை அடைந்திருக்க வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

104. பின்நல்ல ஜனனத்திற்காக மூன்று முறை ஆஹுதி செய்ய வேண்டும். ஹே பகவானே எல்லா கர்பங்களுக்குள்ளும் ஜனனத்தை சிஷ்யனுக்கு செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

105. இவ்வாறு ஜனனத்திற்காகவும் பசுக்களுடைய வளர்ச்சிக்காகவும் மூல மந்திரத்தால் மூன்று ஆஹூதி செய்து சிவனை குறித்து இவ்வாறு சொல்ல வேண்டும்.

106. ஹே பகவானே சிஷ்ய தேஹங்களுக்கு ப்ரவ்ருத்தியை செய்யுங்கள் என்று கர்மாக்களை சேமிப்பதற்கு மூலத்தால் ஆஹூதிசெய்ய வேண்டும். (பகவந் சிஷ்ய தேஹாநாம் ப்ரவ்ருத்திம் குருகுரு)

107. ஹே பகவானே! ஆத்மாவிற்கு பலவித போகங்களை செய்யுங்கள் செய்யுங்கள். லோக தீøக்ஷயில் கர்மாவின் சேமிப்பை இவ்வாறு படித்து (பகவன் ஆத்மன: நாநா போகதம் குருகுரு)

108. முன் செய்த வினைகள் தர்ம வடிவமான கர்ம சேமிப்பை செய்யுங்கள். தேசத்தாலும் காலத்தாலும் உடம்பாலும் விஷயத்தாலும்

109. சஞ்சிதம் ஆகாமி பேதத்தால் பலவகை போகங்களை எண்ணி போகங்களை அனுபவித்தலை அடையாளமுள்ள, ஆத்மாவினிடத்தில் சுக துக்கானுபவங்களை தெரிவித்து

110. மூலத்தால் மூன்று ஆஹுதி தந்து சிவனை பிரார்த்திக்கவும் என்று ஹே பகவன் அனோ: போக நிஷ்பத்திம் ஸர்வத்ர குருகுரு என்று

111. பரம ப்ரீதியோடு உருவத்தை போகங்களில் லயமடைந்ததாக நன்றாக நினைத்து பரமப்ரீதி வடிவமாக மூன்று சிவாஹூதிகள் செய்ய வேண்டும். (பரமப்ரீதி ரூபகம் லயம் குருகுரு)

112. நிர்வாண தீøக்ஷயில் லயத்தை செய்யுங்கள் என்று பிராத்தித்து ஜாதி, ஆயுள், போகம் இம்மூன்றின் சம்ஸ்காரத்திற்காக சுத்திக்காக (ஆத்மாவிற்கு) அணுவிற்கு நிஷ்க்ருதியில் லயத்தை செய்யுங்கள்.

113. ஹ்ருதய மந்திரத்தினால் நூறு ஹோமமும் மூலமந்திரத்தால் மூன்று ஆஹுதியும் செய்ய வேண்டும். எல்லா கார்யங்களையும் சுத்தியையும் தெளிவையும் பிராயச்சித்தமாக செய்ய வேண்டும் (ஹேபகவன் அணோ: யோகாபாவாத் நிஷ்க்ருத்யா ஸர்வகர்மஸுசுத்தம் குருகுரு.

114. ஹே பகவானே என்ற வாக்யத்தை முன்புள்ள பதத்தில் சேர்க்க வேண்டும். இங்கு ஆத்மாவிற்கு போகமில்லாததாலும் மாயை என்ற பாசத்திற்கு வெளியில் விடுபட்டதாக பாவிக்க வேண்டும்.

115. மூலத்தால் மூன்று ஆஹுதிக்கு பின் மலத்தைப் போக்க கூடிய கர்மாவை செய்ய வேண்டும். அனுபவிக்கும் தன்மையையுடைய மலகார்யத்தை நினைத்து அதன் சுத்திக்காக ஆஹுதிகளை

116. ஹ்ருதய மந்திரத்தால் பத்து எண்ணிக்கைகளாக செய்ய வேண்டும். மூலமந்திரத்தால் மூன்று ஆஹூதி செய்ய வேண்டும். இவ்வாறு மலத்தை வெளியிடுதல் கூறப்பட்டு கர்மங்களின்விடுபாடு கூறப்படுகிறது.

117. கர்மாக்களின் விடுபாட்டுத் தன்மை மிகவும் குறைவு உள்ளதாக நினைத்து மூலமந்திரத்தை கூறி மூன்று ஆஹுதி செய்ய வேண்டும்.

118. பகவானே ஆத்மாவின் மாயாமல கர்மங்களின் விடுபாட்டுச் செயலை நிர்வாண தீøக்ஷயில் செய்வாயாக என்று கேட்டு பகவன் மலமாயா கர்மாத்மகம் விச்லேஷம் குருகுரு என்பதாகக் கூறி

119. ஆணவாதி மலங்களில் வியாபித்துள்ள நிவ்ருத்திகலா பாசத்தினுடைய சுத்திக்காக அதன் மூலமந்திரத்தினால் மூன்று ஆஹுதி செய்து

120. ஹே பகவானே இங்கு நிர்ருத்தி கலா சேதனத்தை செய்வாயாக என்று பிரார்த்தித்து இவ்வாறு செய்ய வேண்டும். (ஹே பகவந் இஹ நிவ்ருத்திச் சேதநம் குருகுரு)

121. எல்லா சரீரங்களின் அழிவிலும் ஆத்மாவின் ஒருமைப்பாட்டை அறிந்து அவுஷட் என்று முடிவுள்ள சிவாய அவுஷட் என்று பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

122. ஓம் ப்ரம்மணே நம: என்று ஆவாஹணம் செய்து பூஜைகள் தர்ப்பணங்கள் செய்க, ஹேப்ரம்மன் சப்த ஸ்பர்சவு க்ரஹாண ஸ்வாஹா என்ற மந்திரத்தால்

123. மூன்று ஆஹுதிகள் செய்து சிவாக்ஞையை கேட்க வேண்டும், அனாமயமான பதத்தை அடைந்துள்ள காரணேச! உங்களால் இந்த சிஷ்யனுடைய அனாமயமான பிரம்மாவின் பதத்தை

124. தடையாக உள்ளதாக பாவித்து உன் ஆக்ஞையானது பரமேஸ்வரியினிடமிருந்ததாகும். உங்களின் இந்த ஆக்ஞையால் சுத்த தத்வ முகப்பில் உள்ள பிரம்மாவினிடத்தில் விட்டுவிட்டு

125. நிவ்ருத்தி கலாபாசம் விடுபட்டதால் சுத்த ஸ்படிகம் போன்ற ஆத்ம ஸ்வரூபத்தை தியானித்து மூலமந்திரத்தை உச்சரித்து மூன்று ஆஹுதிகள் கொடுக்க வேண்டும். (ஹே பகவன் அஸ்ய ஆத்மன: நிவ்ருத்தி பாசா துத்தாரம் குருகுரு)

126. அந்த ஆத்மாவிற்கு நிவ்ருத்திகலா பாசத்திலிருந்து விடுபாட்டு தன்மையை ஹே பகவானே செய்வாயாக என்று பூரகத்தால் ஸம்ஹார முத்ரையால்

127. ஆத்மாவை அடைந்து பின் சிஷ்யனின் பாச சூத்ரத்தில் கவச மந்திரத்தினால் வைத்து விட வேண்டும். சிஷ்யனின் ஸ்திதிக்காக சிவமூலமந்திரங்களால் மூன்று ஆஹூதிகள் கொடுக்க வேண்டும்.

128. வாகீச்வர்யை நம: என்று பூஜித்து தர்பணமும் மூன்று ஆஹூதியும் செய்ய வேண்டும். வாகீச்வரியை விஸர்ஜநம் செய்ய வேண்டும்.

129. இதன் பிறகு சிஷ்ய தேஹத்திலிருக்கும் பாச சூத்ரத்தில் பிரதிஷ்டா கலையை சுத்தி செய்வதற்காக பார்க்க வேண்டும். இருபத்தி மூன்று தத்வங்களான ஜலம், நெருப்பு, காற்று, ஆகாயம்

130. கந்தம், ரஸம், ரூபம், ஸ்பர்சம், சப்தம், உபஸ்தம், பாயு, பாதம், பாணி, வாக்கு, நாசி, ஜிஹ்வா, சக்ஷú, தீவக், ஸ்ரோத்ரம் ஆகியவையும்

131. மனம், அஹங்காரம், புத்தி, ப்ரக்ருதி வரை மேலாக இருபத்தி மூன்று தத்வங்கள். இவ்வாறு உள்ள தத்வங்கள் பிரதிஷ்டா கலைக்கு உரிய தத்வங்கள் ஆகும் (பிராம்மண ச்ரேஷ்டர்களே)

132. ள முதல் ட வரையிலான இருபத்தி நான்கு எழுத்துக்களும், சிரோமந்திரம் வாமதேவ மந்திரம், அகோரமந்திரம் இந்த மந்திரங்களும் ஐம்பத்தி ஆறு புவனங்கள் பிரதிஷ்டா கலையில் உள்ளன.

133. அமரேச புவனம், ப்ரபாசன், நைமிசன், புஷ்கரன், அவதி, ஆஷாடி, டிண்டி, முண்டி அவ்வாறே பார பூதியும் லகுலீச்வரர்

134. ஹரிச்சந்திரன் ஸ்ரீசைலம், ஜல்பேசன், ஆம்ராதகேஸ்வரன் மத்யமேசன், மஹாகாளர், கேதாரம், பைரவம் அப்படியே

135. கயா, குரு÷க்ஷத்ரம், நாகலம், நகலம், விமலேசம், அட்டஹாசம்மஹேந்திரன் பீமன் (ஸம்ஞகன்)

136. வஸ்திரா பதம், ருத்ர கோடிம், அவி முக்தம், மஹாலயம், கோகர்ணம், பத்ரகர்ணம், ஸ்வர்ணாக்ஷம், ஸ்தானு

137. சலகண்ட, த்வீரண்டம், மாகோடம், மண்டலேச்வரம் காலஞ்சரன், சங்கு கர்ணன், ஸ்தூலேச் வரன், ஸ்தலேச்வரர்

138. பைஸாசம், ராக்ஷஸ, யாக்ஷம், காந்தர்வம், இந்திரன் ஆகிய புவனங்கள் சவும்யம், ப்ராஜேசம், ப்ரம்மனம் இந்த புவனங்களும்

139. அக்ருதம், க்ருதம், பைரவம், ப்ராம்மம் வைஷ்ணவம், கவுமாரம், அவுமம், ஸ்ரீகண்டம் என ஐம்பத்தி ஆறு புவனங்களாகும்.

140. அமரேசம் முதலிய எட்டு புவனங்கள் அப்தத்வத்திலும், அரிச்சந்திர முதலிய எட்டு புவனங்கள் தேஜஸ்தத்வத்திலும், கயா முதலிய எட்டு புவனங்கள் வாயுதத்வத்திலும் வஸ்திர பதா முதலியவைகள் ஆகாச தத்வத்திலும்

141. சலகண்ட முதலிய எட்டு புவனங்கள் அஹங்கார தத்வத்திலும், பைசாசம் முதலிய எட்டு புவனங்கள் மனஸ் தத்வத்திலும், அக்ருதம் முதலிய எட்டு புவனங்கள் ப்ருக்ருதி தத்வத்திலும், இவ்வாறு ஐம்பத்தி ஆறு புவனங்கள் ப்ரதிஷ்டாகலையுள் அடங்கியுள்ளன.

142. மஹேச்வர முதல் அரூபின் வரை இருபத்தி ஒன்று பதம் பிரதிஷ்டாகலையில் அடங்கியவன ஆகும் முதலில் மஹேச்வர பதம்இரண்டாவது பரமாத்மன்

143. சர்வ, சிவ, நிதநோத்பவ, நிதன என்ற பதங்களையும்

144. அநிதந, ஓம் ஸுவ: ஓம் புவ: ஓம் பூ: என்ற பதங்களும்

145. தூ தூ தூ தூ, நாநா நாநா, அநாதே, அபஸ்ம என்ற பதங்களும்

146. அதூம, அநக்னே, அரூப, ஜ்யோதி: ஜ்யோதி: என்ற பதங்களும்

147. தேஜ: தேஜ: ப்ரதம ப்ரதம, அரூபின் அரூபின் என்ற பத மந்திரங்களும் இருபத்தி ஒன்று பதங்களாக பிரதிஷ்டாகலையில் அடங்கி உள்ளன.

148. பிரதிஷ்டா கலையில் இவ்வாறு எல்லாம் வியாபித்து இருப்பதை பாவித்து கொள்ள வேண்டும். இவ்வாறு சொல்லப்பட்ட எண்ணிக்கை உடைய தத்வம், வர்ணம் பதம், மந்திரங்கள் பிரதிஷ்டாகலாதிபதியான விஷ்ணுவால்

149. உள்ளடங்கியதாக அந்த கலையை நினைத்து உபாங்கங்களோடு சேர்க்க வேண்டும். குருவானவர் லகுவாக வேண்டும் சுத்தமானதாகவும் பாசத்தை சோதிப்பதாகவும் எண்ண வேண்டும்.

150. பாசத்தையும் பாசசுத்தியாக உள்ள பிரதிஷ்டா கலையில் இருக்கின்ற வர்ண பத தத்வ புவன மந்திரங்களை அப்படியே உச்சரித்து சோதிப்பதில் சுத்தியை நன்றாக செய்ய வேண்டும் என எல்லா போக சேர்க்கைகளும் அடைவதற்காக உபதேசம் செய்யப்பட்டது.

151. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் என்று நான்காம் வேற்றுமையுடன் கூடிய இரண்டு கலைகளையும் நம: என்ற வாக்யத்துடன் கூடி பூஜித்து மூலமந்திரத்தால் மூன்று ஆஹூதி செய்ய வேண்டும்.

152. பிரதிஷ்டாகலையின் உபஸ்நானம் முதலியவைகளையும் மற்றும் எல்லாக்ரியைகளையும் முன்பு போல் ஆசார்யன் செய்யவேண்டும். சிரோமந்திரத்தினால் பிராயச்சித்தமாக நூறு ஆஹுதி செய்ய வேண்டும்.

153. மஹா விஷ்ணுவிற்கு கப்பம் கொடுப்பது போல் ரசத் தன்மையை கொடுத்து விட்டு வித்யா கலையை சுத்திக்காக அடைய வேண்டும். புருஷ தத்வம் வித்யா கலையில் அடைந்ததாகவும் முதல் தத்வமாகவும் ஆகிறது.

154. ராகம், நியதி, வித்யை, கலா, காலமும், மாயா தத்வமும், ஞ முதல் த வரை உள்ள எழுத்துக்கள் ஏழும் வித்யா கலையில் அடங்கியுள்ளன.

155. சிகாமந்திரம் இருபத்தி ஏழு எண்ணிக்கை உள்ள புவனங்கள் வித்யாகலையில் அடக்கம். வாம புவனம், பீம, உக்ர, பவ, ஈசான, ஏக, வீர இவைகளும்

156. ப்ரசண்ட, உமாபதி, அஜ, அனந்த, ஏகசிவ, க்ரோதேச, ஸம்வர்த்த, ஜ்யோதி, பிங்க இவைகளும்

157. பஞ்சாந்தக, ஏகவீர, சிகேத, மஹாத்யுதி, வாமதேவ, பவ, உத்பவ, ஏக பிங்கள இவைகளும்

158. ஏகேக்ஷண, ஈசான, அங்குஷ்ட மாத்ரக ஆகிய இருபத்தி ஏழு புவனங்கள் வித்யாகலையில் உள்ளன. புருஷ தத்வத்தில் ஆறுபுவனமும், ராகதத்வம், நியதிதத்வம், வித்யாதத்வம், கலா, காலம் ஆகிய தத்வங்களின் முறையே இரண்டு இரண்டு புவனங்களும்

159. மாயா தத்வத்தில் எட்டு புவனமும் இவ்வாறாக புருஷன் முதல் மாயை வரை இருபத்தி ஏழு புவனங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளன. பதமந்திரங்கள் இருபது உள்ளன. அதில் வ்யாபின், வ்யாபின் என்ற பதமும்

160. வ்யோமின், வ்யோமின், அசேதந அசேதந, பரமேஸ்வர பராய

161. ஜ்யோதி ரூபாய, சர்வ யோகாதிக் க்ருதாய, அநிததாய, கோப்த்ரே என்றும்

162. குஹ்யாதி குஹ்யாய ஓம் நமோ நம: ஸத்யோ ஜாத மூர்த்தயே வாமதேவ குஹ்யாய அகோர ஹ்ருதயாய, தத்புருஷவக்த்ராய, ஈசான மூர்த்தாய

163. சிவாய, சர்வ ப்ரபவே ஓம் நம: சிவாய

164. த்யானா ஹாராய என்பதுமாக வித்யா கலையில் உள்ள பதங்கள் கூறப்பட்டுள்ளன. முன்பு கூறப்பட்ட முறைப்படி வர்ணம் தத்வம், புவனம், பதம், மந்த்ரம் இவைகளின் சேர்க்கையை செய்து வித்யா கலையை ஹோமம் செய்ய வேண்டும்.

165. பிராயசித்தமாக சிகா மந்திரத்தால் நூறு ஆஹுதி செய்ய வேண்டும். ருத்ரனிடத்தில் ரூபத்தையும், கந்தத்தையும் எடுத்துக் கொள்ளும் என்று கப்பம் கட்ட வேண்டும்.

166. மூன்று கலைகளுக்கும் உட்பட்ட பவம் என்ற பதத்தை அறிந்து ஆத்மாவை ஸம்சாரத்திலிருந்து கரையேறியவனாக நினைத்து ஆத்ம தத்வத்திற்கு மேல் இருப்பவனாகவும் அறிந்து

167. ஆசார்யன் ஆத்மாவை அனுபவிக்கும் தன்மை உடையவனாகவும், அதிகாரம், மலம் விஷ்டை இவைகளால் கூடியதும் ஐஸ்வர்யத்திற்கு இருப்பிடமானதும் சுத்த இந்திரிய ஸாதனமான போகத்தை உடையவனாகவும் அறிந்து

168. ஒத்துழைப்பு, கலப்பற்ற தன்மை, அடக்கமான ஆற்றல் இவற்றை பரிக்ஷித்து சாந்தி கலையையும் அதற்கு உட்பட்டதான

169. தத்வங்கள் சுத்த வித்யா, ஈச்வர ஸதாசிவ முதலான மூன்று தத்வங்களாகும். க எழுத்துக்கள் மூன்றும், மந்திரங்கள் தத்புருஷம், கவசம் இரண்டுமாகும்.

170. வாமா, ஜ்யேஷ்டா, ரவுத்ரீ, காளீ, கலவிகரனீ, பலவிகரணீ, பலப்ரமதனி மேலும்

171. சர்வபூததமநீ, மனோன்மனீ என்று ஒன்பது புவனங்கள் சுத்த வித்யா தத்வத்தில் இருக்கின்றன. இதே போல் ஈச்வர தத்வத்தில் அனந்த, சூக்ஷ்ம என்ற குறிப்புள்ள புவனமும் மேலும்

172. சிவோத்தம, ஏகநேத்ர, ஏகருத்ர, த்ரிமூர்த்தி, ஸ்ரீகண்ட, சிகண்டர் என்ற எட்டு புவனங்கள் ஈச்வர தத்வத்தில் சாந்தி கலையினுள் அடங்கி உள்ளன.

173. சதாசிவ தத்வத்தில் சாதாக்யம் என்ற புவனம் ஆக சாந்தி கலைக்குரிய பதினெட்டு புவனங்கள் இவ்வாறு அமைந்துள்ளன. அதில் பதினோரு பதமந்திரங்கள் உள்ளன அவையாவன நித்யம் யோகினே என்ற பதமும்

174. யோக பீடஸம்ஸ்தியாய, சாஸ்வதாய, த்ருவாய, அனாச்ரிதாய என்றும்

175. அநாதாய, அனந்தாய, சிவாய, சர்வ வ்யாபிநே என்றும்

176. வ்யோமரூபாயவ்யோம வ்யாபினே என்ற சாந்தி கலையில் பதினொன்று பதங்கள் உள்ளன. நிஷ்க்ருதியாகிய சாந்தியின் பொருட்டு கவச மந்திரத்தால் நூறு ஆஹூதிகள் கொடுக்க வேண்டும்.

177. எல்லாவற்றையும் முன்புபோல் உணர்ந்து புத்தி, அஹங்காரம் இந்த இரண்டையும் காரணேசரான ஈச்வரரிடம் கொடுக்க வேண்டும். பிறகு சாந்த்யதீத கலையினுள் அடங்கிய தத்வம், வர்ணம், மந்திரம், புவனம் எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும்.

178. சாந்த்ய தீதகலையில் சிவதத்வம் மட்டும் சொல்லப்படுகிறது. பதினாறு மந்திரங்கள். ஈசான மந்திரம், அஸ்திர மந்திரம், சிவ மந்திரம் ஆக மூன்று மந்திரங்கள்

179. ஓம் என்ற பதம் சாந்த்ய தீதகலையில் சொல்லப்படுகிறது. புவனங்கள் பதினைந்து அவையாவன: நிவ்ருத்திபுவனம், ப்ரதிஷ்டா புவனம், வித்யா சாந்தி, சாந்தி சாந்த்யதீதம் ஆக ஐந்தும்

180. பிந்துவாகிய சக்தி தத்வத்தில் இந்த ஐந்து புவனங்கள் சொல்லப்படுகின்றன. இதன் பிறகு இந்திகா, ரோசிகா, மோசிகா அவ்வாறே

181. ஊர்த்துவ காமிநீ என்று நாதத்திலிருந்து மேலெழும்பிய புவனங்கள். அவ்வாறே வ்யோமின், வ்யோமரூபா, அனந்தா இதன் பிறகு

182. அநாதா, அனாச்ரிதா என்ற ஐந்து புவனங்களும் சாக்தங்கள் ஐந்தாகவே கருதப்படுகின்றன.

183. இவ்வாறு தத்வமந்திர, பத வர்ண புவனங்கள் கர்ப்பிதமாக உள்ளடங்கி இருப்பது அறிந்து ஓம் ஹ்யைம் ஹெளம் சாந்தி சாந்த்ய தீதாப்யாம் நம: என்று மந்திரத்தை உச்சரித்து

184. மனசால் பூஜைசெய்து மூல மந்திரத்தால் மூன்று ஆஹுதிகள் செய்ய வேண்டும். சாந்த்ய தீத கலையை தன் இருப்பிடத்திற்கு செல்லச் சொல்வதை முன்புபோல செய்ய வேண்டும்.

185. பிராயச்சித்தமாக சிவமந்திரத்தால் நூறு ஆஹுதி செய்ய வேண்டும். அஸ்திர மந்திரத்தால் பூர்ணாஹுதியை பாச சேதத்துக்காக ஹோமம் செய்ய வேண்டும்.

186. பின் நிர் பீஜ தீøக்ஷயில் பூர்ணாஹுதியின் முடிவில் இதை செய்ய வேண்டும். சமயம், சமயாசாரம் இவற்றை பாசாத்மகமான திரோதான சக்தியிடம் கொடுக்க வேண்டும்.

187. ஹே மகேச்வரா ஸமயம், சமயாசார பாச சுத்திம் குருகுரு ஹே மகேச்வரா சமயத்தையும் சமயாசார பாசசுத்தியையும் சிஷ்யனுக்கு செய்யுங்கள் செய்யுங்கள் என்று சொல்லி மஹேச்வரினிடம் கப்பத்தை ஸமர்பிக்க வேண்டும்.

188. சிவ பீஜத்தை உச்சரித்து சதாசிவ பதத்தை மறுபடியும் அடைந்து ஓம் ஹாம் சதாசிவ மனோ க்ருஹாண ஸ்வாஹா என்று மூன்று ஆஹுதிகள் செய்ய வேண்டும்.

189. முன்பு போல் சதாசிவரை விசர்ஜனம் செய்து நிர்மலமான சிஷ்ய ஆத்மாவாக பாச சூத்ரத்தை எடுத்து சிஷ்ய தேஹத்தில் ரேசகத்தால் புகுந்து ஆத்மாவில் வைக்க வேண்டும்.

190. சிஷ்யனுடைய சிரசில் நீரால் பிரோக்ஷணம் செய்து பிறகு சிவாக்னியில் வாகீர்வரியை பூஜித்து தர்ப்பணாஹுதி செய்து பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.

191. சிஷ்யனுக்காக ஹேதேவீ நீர் என்னால் சிரமமடைந்து இங்கு வந்து இருக்கிறீர்கள். தங்களுடைய மூல இடத்திற்கு செல்ல வேண்டும் விக்ஞாபிக்க வேண்டும். சாந்த்யதீத கலையை சக்தி தத்வத்தில் ஒடுங்கியதாக பாவித்து

192. மாயா தத்வம் முடிய உள்ள ஆத்ம தத்வத்தை ஓம் ஹாம் ஆத்மதத்வாய நம: என்று உத்தம ஆசார்யன் எழுந்தருளச் செய்து

193. நம: ஓம் என்ற பிரணவத்தோடும் உச்சரித்து பூஜித்து சன்னிதியில் குறை குற்றங்களின் சுத்தத்திற்காக ஓம் ஹாம் சிவாய ஸ்வாஹா என்று

194. அந்த சப்தத்தை உச்சரித்து நூறு முறை ஹோமம் செய்து மெதுவான உச்சரிப்பால் வித்யா தத்வத்தை அதன் அதிபதியுடன் கூறி நூற்றியெட்டு ஹோமம் செய்து அந்த இடத்திற்குள் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

195. மந்தி ரோச்சாரண குற்றங்கள் விகல்பங்கள் மந்திர உச்சாரணத்தால் சுத்தமாகின்றதினால் சிவதத்வத்தை எழுந்தருள செய்து சக்தி தத்வத்தை மனசால் தியானிக்க வேண்டும்.

196. மனக் குழப்பங்கள் மாற நூற்றியெட்டு ஆஹூதிகள் செய்க. பிறகு சிவ மந்திரத்தால் சீகாச்சேதம் செய்து விடுவிக்க வேண்டும்.

197. அத்வாக்களினுள் இருந்து சர்வவ்யாபி யாகிற வழிக்கு காரணமான சக்தியை தியானித்து சிகையின் நுனியில் இருக்கிற சுத்தஸ்படிகமான

198. சிஷ்ய சைதன்யத்தை எடுத்து கர்த்தரியை கொண்டு சிகையை எடுத்து சிகா மந்திரத்தால் வைத்து சேதித்த பிறகு சிகாமந்திரத்தால் சிஷ்யனை ஸ்நானம் செய்வித்து

199. குருவானவர் ஆசமநம், சகளீகரணத்தை குருவானவர் செய்து பசுஞ்சாணியால் மூடி ஸ்ருக்கின் நுனியில் வைத்து, சிகையை சிவாக்னியில் ஹோமம் செய்து பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

200. பிறகு வெளியே வந்து ஸ்ருக்ஸ்ருவம், கர்த்தீரி இவைகளை அலம்பி சுத்தம் செய்து ஆசமனம் செய்து சிவனை பார்த்து இவ்வாறு சொல்ல வேண்டும்.

201. ஹேபகவானே அத்வசுத்தி சிகோச்சேதம் இவற்றை உங்கள் அனுக்ரஹத்தால் என்னால் செய்யப்பட்டது. சிஷ்யன் மேன்மை அடைய ரக்ஷியுங்கள் என்று சிவபெருமானிடம் தெரிவிக்க வேண்டும்.

202. சிஷ்யனை சேர்த்துக் கொள்ள போகிறேன். இப்போதே விதிப்படி ஆக்ஞை இடுங்கள் அன்றும் இவ்வாறே செய்க என்று அனுமதி பெற்ற குரு மன சந்தோஷத்தோடு அனுக்ரமமாக செய்ய வேண்டும்.

203. சிசுவாகிய சிஷ்யனை அழைத்து சிவாக்னிக்கு முன்பாக சிஷ்யனுக்கு ப்ரோக்ஷணம் சகளீகரணம் செய்து

204. அந்தர்யாகம் நாடீ சந்தானம் மந்திர தர்ப்பணம் இவைகளை செய்ய வேண்டும். சகளீ கரண மந்திரங்களால் ஒவ்வொரு ஆஹுதி கொடுக்க வேண்டும்.

205. சகளீகரண சுத்தியும் செய்து சிவத்திடம் சேர்ப்பிக்க வேண்டும். வித்யாதத்வத்தை காரணமாக கொண்ட ஆசார்யர் பிந்து தத்வத்தை ஆசனத்திலிருந்து கொண்டு

206. இந்திகா, தீபிகா, ரோசிகா, மோசிகா, ஊர்த்துவகாமிநீ சூக்ஷ்மா, சூக்ஷ்மாம்ருதா என்ற கருத்துள்ள பிராசாத மந்திரங்களை நினைத்து பாவித்து

207. பிந்து சக்தி, நாத சக்தி ஆகிய கலைகளினால் இணைக்கப்பட்ட தேஹத்தை உடைய ஆசார்யனாக குருவானவர்.

208. வ்யாபிநி, வ்யோமரூபா, அனந்தா, அநாதா, அநாச்ரிதா என்ற வெளிக்கரணத்தோடு கூடியது.

209. அந்த கரணத்தோடு கூடி சமானமாக இவ்வாறு கற்பித்ததாக ஆத்மதத்வம், உன்மநா ஆகிய எல்லாம் சமமாக நிரம்பிய தேஹத்துடன் கூடியதாக

210. பூரக, கும்பங்களை செய்து நாக்குடன் தொடர்புள்ள இரண்டு உதடுகளை மெல்ல திறந்த முகத்துடன் பற்களை தொடாதராறு (ப்ராசாத மந்திரங்களை உச்சரித்து)

211. நல்ல உயர்ந்த காத்ரமுள்ள குரு தன் ஆத்மாவில் சிசுவாகிய சிஷ்யனைக் கொண்டு ப்ராண வாயுவினால் சுஷும்னாநாடியை ஒன்றாக செய்து சிவ ப்ராசாதத்தை ஜபித்து

212. மந்திரத்துடன் கூடிய சிஷ்யனுடைய சைதன்யத்தை சுத்தஸ்படிக ஸந்நிபமாக நிறைவு செய்து காரணேச்வரர்களை விட்டு யோகத்தால் மந்திரங்களை உச்சரித்து நன்றாக பாவிக்க வேண்டும்.

213. சிஷ்யனை பூரக கும்பத்தால் சிவனிடத்தில் சேர்க்க வேண்டும். வெளியே சென்றுவரும் மனஸை பிராணன், நாதம், சக்தி, கலாத்மகமாக செய்து

214. ஸம்ஹார முத்ரையால் இறந்ததான அழிவை விட்டு ச்ருக் ச்ருவ சமீபத்தில் சுத்தமாக உயர்வாக சிகை கல்பத்தை சிவாக்னியிலிருந்து எடுத்து பரிசுத்தமானதாக அந்த விபூதியை சேர்க்க வேண்டும்.

215. சிஷ்யனின் சரீரத்தில் அஸ்திர மூலமந்திரத்தால் முன்பு போல் சிஷ்யனுக்கு சேர்க்க வேண்டும். அங்கே சிவஸ்வரூபமாக இருந்தாலும் சிவ சமான குணமாக செய்யப்பட்டாலும் அதனால் அனாதி பாசசேர்க் கையால் சர்வக்ஞத்வாதி குணங்கள் சிஷ்யனிடம் இருப்பதற்கு இல்லை.

216. எதுவரை முயற்சியையுடைய சிஷ்யனுக்கு தத்வப்ராப்தியோ அதுவரை பரமேஸ்வர அனுக்ரஹம் உண்டு. சாம்ராஜ்யத்தை அடைந்த உயர்ந்த அரசனுடைய குமாரனுக்கு எப்படி கடமைகள் ஏற்படுகின்றதோ அவ்வாறே சிஷ்யனுக்கும்

217. தன் ஆறு குணங்களை அறியாததால் நூறு வருடமிருந்தும் பிரகாசிப்பதில்லை. வ்யாஹ்ருதி மந்திரத்தால் சிஷ்யனுக்காக ஸ்ருவத்தால் தன் குணத்தையுள்ளதாக ஆறு ஆஹூதிகள் செய்ய வேண்டும்.

218. புத்தி உள்ள ஆசார்யன் கீழ்வரும் இந்த முறைப்படி செய்யவேண்டும். ஸர்வக்ஞன் நித்திய ஸம்போதம், ஸ்வதந்த்ரன் த்ருப்திமான பவ என்றும்

219. அலுப்த ஆனந்த சக்தி இவைகளும், ஹ்ரஸ்வப் ரசாத என்ற ஹாம் எழுத்தை ஆத்மன் என்ற பதத்தையும் ஸ்வாஹா என்ற பதத்தையும் கூடியதாகவும் சொல்ல வேண்டும். ஆத்மன் ஸர்வக்ஞோபவ, ஹிம் ஹாம் ஆத்மன் பரித்ருப் தோபவ, ஹ்ரூம் ஆத்மன் அனாதி போதோபவ, ஹைம் ஆத்மன் ஸ்வதந்த்ரோ பவ, ஹளம் ஆத்மன் அலுப்த சக்திர்பவ ஹ: ஆத்மன் அனந்த சக்திர்பவ என்பதாக ஹோமம் செய்ய வேண்டும்.

220. இவ்வாறு சர்வ பாபங்களையும் போக்கும் நிர்வாண தீக்øக்ஷ சொல்லப்பட்டது. பிறகு நான்கு பிரிவினரான ப்ராம்மணர், க்ஷத்ரியர், வைச்யர், சூத்ரர் இவர்களும் அனுலோமர்களும் இந்த தீக்øக்ஷ செய்து கொள்ள சாஸ்திர சம்மதம் உண்டு.

221. இதற்கு மாறான தவறான பிறப்பினர் தீøக்ஷ செய்து கொள்ள அதிகாரமுள்ளவர்கள் மாப்பிள்ளை, தகப்பனார், மனைவி மோக்ஷத்தை விரும்பும் அனைவரும் தீøக்ஷ பெற யோக்யதை உள்ளவர்கள் ஆகின்றனர்.

222. தீøக்ஷயின் கர்த்தா சிவனாக ஆகிறான். அவர்களுக்கு புத்ரத்வம் என்பது இல்லை. கீழ்தரப்பட்ட வர்ணத்தவர்களுக்கு அவுத்ரீ தீøக்ஷ என்ற மண்டலம் பூஜையுடன் கூடிய தீøக்ஷ இல்லை. ஆனால் அவர்களுக்கு சாக்ஷúஷதீøக்ஷ மட்டும் செய்யலாம்.

இவ்வாறு உத்திரகாமிகாகம மஹாதந்திரத்தில் நிர்வாண தீக்ஷõ முறையாகிய இருபத்திமூன்றாவது படலமாகும்.

படலம் 22: கனவுகள் முறை...

படலம் 22: கனவுகள் முறை...

22 வது படலத்தில் கனவுகள் முறைப்பற்றி கூறப்படுகிறது. முதலில் தீட்சைக்கு முன்பும் விருப்பமான செயல்களிலும் உயர்ந்ததான கனவு காணவும் கூறப்படுகிறது. யாமம் என்ற கால முறைப்படி கனவின் பயன் கூறப்படுகிறது. சுபமான பலனை கொடுக்கக் கூடிய சொப்பனங்கள் கூறப்படுகின்றன. பிறகு அசுபமான பலனை கொடுக்கக் கூடிய சொப்பனங்களும் நிரூபிக்க படுகின்றன. கனவில் தேவர்கள், பித்ருக்கள் முனிவர்கள் பிராம்மணர்கள் அரசன் இவர்கள் என்ன கூறுகிறார்களோ அதன் படியே பயனும் கிடைக்கும் என கூறப்படுகிறது. தாது என்ற தோஷத்தை கொடுக்க கூடிய சொப்பனங்களுக்கு சுபம் அசுபம் என்ற அறிவிப்பு இல்லை என கூறப்படுகிறது. இவ்வாறு முன்பு காணப்பட்ட விஷயத்தை உடையவும் முன்பு கேட்கப்பட்ட விஷயத்தை உடையவும் ஆகிய சொப்பனத்திற்கும் நல்லவை, தீயவை என்ற பயன் இல்லை என கூறப்படுகிறது. ஜாதியில், வயதால், பணத்தினாலோ, சுத்தத்தினால், தர்மத்தினால், கல்வியாலோ யார் உத்தமனோ அவனே முதலில் நல்லவை தீயவையோ சொப்பனத்தை ஆசார்யனிடம் தெரிவிக்க யோக்யனாகிறான் என கூறப்படுகிறது. முறையாக ஒரு ஆசார்யன் சிஷ்யர்களின் ஒருவருக்கொருவர் ஆசரிக்க வேண்டிய நியமங்கள் விளக்கப்படுகின்றன. இவ்வாறாக 22வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பிராம்மணோத்தமர்களே! ஸ்வப்னாத்யாயம் பற்றி கூறுகிறேன் கேளும். தீøக்ஷக்கு முன்போ, காம்ய விஷயத்திலோ உத்தமமான ஸ்வப்நத்தை அறிய வேண்டும்

2. அதில் முதல் யாமத்தில் ஸ்வப்நம் ஏற்பட்டால் அந்தந்த காலத்தில் தன்னுடைய பல பாவத்தை கொடுக்கக் கூடியதாக அறிய வேண்டும்.

3. முதல்யாம ஸ்வப்னம் ஒருவருடத்தில் சித்தியாகும். இரண்டாம் யாம ஸ்வப்னம் ஆறுமாதத்தில் ஸித்தியாகும். மூன்றாம் யாமக் கனவு.

4. ஒரு மாதத்தில் ஸித்தியாகும். நான்காம் யாம ஸ்வப்நம் சந்தேஹமின்றி (நிச்சயம்) சீக்கிரமாக பலனைக்கொடுக்கும்.

5. காந்தியுள்ள சூர்யன், நட்சத்ரங்களுடன் கூடிய சந்திரன், பிரதீப்தமான அக்னிஹோத்ரம் ஜ்வாலையுள்ள தீபம்

6. தாய், தந்தை, மனைவி, புத்ரர்கள், ஸஹோதரர்கள், நல்ல ஜனங்கள் இவர்களை ஸ்வப்னத்தில் கண்டால் குறைவில்லாத லட்சுமி கடாக்ஷம் அடைகிறான்.

7. சந்திரன், சூர்யன், நட்சத்ரமிவைகளின் குறைவும், மாறுதலும், அபகரிப்பதாகவும் இவைகளின் தாரணம் போலும் ஸ்வப்னம் கண்டால் ராஜ்யத்தை அடைகிறான்.

8. வெண்மை நிற புஷ்பமாலை, வெண்மை நிறப்பறவைகள், ஸ்வர்ண மயமான பறவைகள் இவைகளை ஸ்வப்னத்தில் தர்சனம் செய்தால் செல்வத்தை அடைகிறான்.

9. கந்தர்வ நகரம், தேவ, கந்தர்வ ஸ்த்ரீகள் (பெண்கள்) ஸ்வப்னத்தில் கண்டால் அதிகமான லட்சுமி கடாக்ஷமடைகிறான்.

10. ஸ்வர்ணமயமான குடை, வெண்மையான மாலையணிந்ததாகவும் மாமரம் முதலிய புனிதமான விருக்ஷம், இவைகளை ஸ்வப்னத்தில் கண்டாலும்.

11. அந்த விருக்ஷங்களில் ஏறுவதாகவும், அவைகளின் பழங்களை பறிப்பதாகவும், அந்த பழங்களை சாப்பிடுவதாகவும் மலை, மாளிகை, குதிரை, யானை.

12. பசு, சிங்கம், காளைகளை தரிசித்தாலும் அவைகளில் ஏறுவதாகவும் ஸ்வப்னம் கண்டாலும் சிம்மா சனம், யானை, பல்லக்கு இவைகளில் ஆரோஹணம் செய்வதாகவும் ஸ்வப்நம் கண்டாலும் சுபமாகும்.

13. ஸூரியன், சந்திரன், அக்னி சமுத்ரம், ஆகாயம், பூமி, மலை, தர்சனத்தாலும், ஆழமான சமுத்ரத்தை தாண்டுவதாகவும், காட்டையும் ஜலத்தையும் தாண்டுவதாகவும்

14. எருமை மாடு, பசுக்களை துன்புறுத்தாமல் பால் கறக்கும் கர்மாவையும், தன்னுடைய இடத்தில், பெண் சிங்கம், பெண் யானை அதன் பந்துக்களுடன்

15. பிரஸவம் ஏற்பட்டதாகி ஸ்வப்நம் கண்டால் அவைகளுக்கு ஸ்வப்ன பலன் ஐஸ்வர்ய மேற்ப்படுத்தல் ஆகும். காராம் பசுவின் பாலை அதன் கன்றுகுட்டி போல் விளையாட்டாக குடிப்பதாக கண்டாலும்

16. தயிர், பக்வமாகாத மாம்ஸம், நல்ல பாயஸ பக்ஷணமும் இவைகள் கிடைத்தாகவும் ஸ்வப்னம் கண்டாலும்

17. அம்ருதம், ரத்தம், கள் இவைகளின் பானமக (குடித்தல்) மீன் சாப்பிடுதலும் அல்லது இவைகளின் தர்சனமும் ருதிர (ரத்த) ஸ்னானமும்

18. பசுமாட்டின் கொம்பினால் அபிஷேகமும், சந்திரகாந்தியால் ராஜ்யாபிஷேகமும் இவற்றை ஸ்வப்னத்தில் தரிசத்தால் சுபமாகும்.

19. பசுமாடு, சிங்கம், யானை இவைகளை சண்டையில் வெற்றியடைந்து பெருவது போலும் சாஸ்திரங்களை படிப்பது போன்றும் அன்னத்தை புசிப்பது போன்றும்

20. நாபியில் புல் மரமுண்டாவதாகவும், புஷ்பம், தீர்த்தம், கேசம் இவைகள் கையில் ஏற்பட்டது போலவும், வெண்மாலை தரித்தாகவும்

21. வெள்ளை வேஷ்டி தரித்த பிராம்மண தர்சனமும், அவர்களின் சுபமான ஆசீர்வாதமும் வெண்மையான பழங்களின் தர்சனமும், விசிறி, கொடி தர்சனமும்

22. தாமரைக்குடையும், மணிகளாலான கண்ணாடியையும், தீபம், சாமரம் ஆயுதம் தாமரைபுஷ்பம் இவைகளையும்

23. சுத்தமான ஜலதர்சனமும் தடாக தர்சனமும், ராஜாதர்சனமும் அவருடன் பேசுவது போல் ஸ்வப்னம் கண்டால் சுபமாகும்.

24. பிரதிமையுடன் கூடிய தேவலாயத்தையும் வெண்மையான பசுவையும் ஸமுத்ரம் (கடல்) ஜலமுள்ள நீர்வீழ்ச்சியையும் ஸ்வப்னத்தில் தர்சனம் செய்தால் செல்வத்தை அடைவான்.

25. ஸமுத்ரம், நீர்வீழ்ச்சி இவற்றின் நீரை குடிப்பதாக ஸ்வப்னம் ஏற்பட்டால் ராஜ்யமடைகிறான். சங்காபரணமும், ஸ்வேத (வெண்மை) வஸ்த்ர புருஷனையும்

26. அழகும், இளமையுள்ள பெண்களையும், அந்த லக்ஷணமுள்ள லக்ஷ்மியை ஸ்வப்னத்தில் தர்சித்தால் உத்தமமான செல்வத்தை அடைகிறான்.

27. பாம்பை பிடிக்கும் குமாரனையும், யானையையும் ஸ்வப்னத்தில் கண்டால் புத்திரனையடைகிறான். புல்லையும், அதிக தான்யத்தையும், அக்னியுடன் கூடிய வீட்டையும்

28. ஸ்வப்னத்தில் பார்த்தால் லக்ஷ்மியை அடைவான். மின்னலையையும் ஜலமுள்ள பூமியையும் சத்ருநாசனமும், சத்ருக்களை கொல்வதாக வேண்டும்.

29. விவாததூதங்களில் வெற்றியும், யுத்தத்தில் விஜயத்தையும் கண்டால் லக்ஷ்மியை அடைகிறான், பூமியில் சந்திரன் பிரவேசனமும்

30. சுத்தமான ஆகாயம் உணவை அடைவது, இறந்தவன் அக்னியை கிரஹிப்பது இவைகளை கண்டால் அரசத்தன்மையை அடைகிறான்.

31. வீணை முதலிய நரம்பு வாத்யவாதனத்தை மனிதன் ஸ்வப்னம் கண்டால் சுகத்தை அடைகிறான். மரத்தை தாண்டுவதும், அழுவதும் சுபத்தை கொடுக்கும்.

32. அந்நிய ஸ்தீரீகளை ஸ்வப்னத்தில் காண்பது லாபத்தையும் அவர்களின் ஆலிங்கனமும் சங்கிலிகளால் கட்டுண்டு இருப்பது போலும், தான்யம், தனது சரீரம் எரிவது போன்றும்

33. சரீரத்தை விட்டு வெளியில் நிற்பது திசைகள் தாறுமாறாக சுற்றுதல் போன்றும், தானாக வந்த பாம்பினாலோ சிங்கத்தினாலோ (புசிப்பதாக) தன்னை கண்டாலும்

34. பயிர்களின் தர்சனமும் ஹ்ருதயம், தலை இவைகளின் தர்சனமும் ரத்னகற்களாலான பாத்திரத்திலும் வெள்ளி பாத்திரத்திலும் போஜனம் செய்வதும்.

35. ஸ்வர்ணமயமான இலையில் தாமரை இலையில், தயிரன்ன போஜனமும், குதிரையில் (கணைத்தல்) சப்தமும், வெற்றியடை, சாப்பிடு என்ற சப்ததையும் ஸ்வப்னம் கண்டால் சுபமாகும்.

36. முத்ரை, வண்டுகூட்டம், மழை, இவைகளின் ஸ்வப்னதர்சனம் சுபமாகும். பிண்ணாக்கு, விராட்டித்தூள் இவைகளை கண்டால் சுபமாகும். தன் வீடு உயர்ந்ததாகவும் கண்டால் சுபமாகும்.

37. பந்துக்களுடனும், பிரகாசிக்கிறதன்னை வீட்டில் இருப்பவனாகவும் மங்களரமான அங்குரங்களையும், (முளைப்பாலிகை) கல்வி அளிக்கிற சிவாகமத்தையும்

38. ரத்தத்தால் சிகப்பான கால்களையும் (பாதம்) தோலையும் ஸ்வப்னத்தில் ஸ்வப்னத்தில் தர்சனம் செய்தால் சீக்கிரமாக ஐஸ்வர்யத்தையும் பல குழந்தைகளையும் அடைகிறான்.

39. எவனுடைய வலக்கை வெட்டப்பட்டு ரத்தத்துடனாக ஸ்வப்னத்தில் காண்கிறானோ, அவன் புகழையும், ஆயுளையுடைய குழந்தையையும் சீக்கிரமாக அடைகிறான்.

40. எவன் தலையை ரத்தமுடையதாகவும், வெட்டப்பட்டதுமாக ஸ்வப்னம் காண்கிறானோ அவன் க்ஷிப்ராரோக்யமும் பணத்தையும், அபிவ்ருத்தியையும் அடைகிறான்.

41. ஸ்வர்ணமயமாக சரீரத்தை ஸ்வப்னத்தில் தர்சித்தால், ஸர்வாபரண பூஷிதராகவும் ஸ்வப்னத்தில் கண்டால் தனதான்யத்தை அடைகிறான்.

42. கடைவைத்து ஜீவிப்பவனாக தன்னை ஸ்வப்நத்தில் பார்க்கிறவன், கடைவ்யாபார அபிவிருத்தியையும், ஆயுளையுமடைகிறான்.

43. சக்ரம், பூர்ணகும்பம், ஸ்ரீவத்ஸம் ஸ்வஸ்திகம் இவைகளையும், ஸோமபானம், குடிப்பதாகவும் ஸ்வப்ன கண்டால் விருப்பப்பட்ட பலனையடைகிறான்.

44. சிவாகமாதி சப்த சிரவணத்தை ஸ்வப்நத்தில் கண்டால் பணத்தைக் கொடுக்கும், குரு, ஆக்ஞை ஆகமம், தேள், தர்சனமும் சுபமாகும்.

45. தேவஸ்த்ரி, மருத்கணஸ்திரீ, பிராம்மண ஸ்த்ரீ இவர்களோடு பேசுவது போல் ஸ்வப்நம் கண்டால் சுபமாகும். தாம்பூலம், மை, பில்வம், குங்குமம், மண்டலம் இவைகளையும்

46. செங்கல் செய்வது போலும் சுவர், வீடு அமைப்பது போலும், நந்தவனம் அமைப்பது போல் காண்பது சுபமாகும்.

47. செல்லக்கூடாத இடங்களுக்கு செல்வதாகவும் சரீரம் முழுவதும் அம்பு பந்தனமாகவும் பந்துக்களோடு பணத்தை பங்கிட்டுக் கொள்வதாகவும் கன்னிகைக்கு கணவனை அடையச்செய்தலும்

48. ஸ்னாநம் சிவார்ச்சனம், அக்னிதர்பணம், நல்லோர் தர்சனம், கணங்களின் தர்சனம், அறிஞர்களின் தர்சனம், அம்ருதபானம் ஆகாயத்தில் பறப்பது போல் (கனவு)

49. இவ்வாறானவைகளை, ஸ்வப்னத்தில் தர்சித்தால் சுபத்தின் அறிகுறியாகும். பூமி, வஸ்த்ர லாபம், கட்டில், படுக்கை, வஸ்திரம் எரிவதாகவும்

50. ஆஸனம் எரிவதாகவும், படகில் ஏறுவதாகவும் புதிய வெண்மையான ஆடையை தரித்தாகவும் சுத்தமான அன்னம் புசிப்பதாகவும்

51. தேனீ, தாமரை இவை ஜனிப்பதாகவும், பேன் இவைகளை அழிப்பதாகவும் சங்க பத்மநிதி லாபமும் சுபமான ஸ்வப்னமாக கூறப்படுகிறது.

52. பார்த்த பொருள் கிடைக்காததாகவும் அடைந்த (கிடைத்த) பொருள் அபஹரிக்கப்படுவது போலும் ஸ்வப்னம் கண்டால், விருப்பமில்லா அறிகுறியாகும்.

53. லிங்கம், பிரதிமை பின்னமானதாகவும், ராஜா மரணமடைந்ததாகவும் பிண்டிகை அரசி, ராஜ்யத்தின் ஸ்தானங்களின் குழப்பமேற்படுதலை போலும்

54. பந்துக்களின் அழிவையும், புத்ரநாசத்தையும், அக்னிபிரவேசம், கையில் கிடைத்த பொருள் பழம் அழிந்தது போலவும், விபூதி வெல்லம் பழம், காய்கறி இவைகள் கையிலிருந்து நழுவியதாக கனவு கண்டால் விருப்பத்தை தராததாகும்.

55. வெளிதேசத்திற்கு செல்வது போலும், ஜாதியிலிருந்து நழுவதலையும், வியாதி பீடிக்கப்பட்டது போலும், மேல்தூக்கிய விகாரமான பல்லையும், அழுக்குடைய தன்மையையும் கண்டால் அபசகுனம்.

56. தங்கம், வெள்ளி இவைகள் நெருப்பு, மூத்ரம், மலம் இவைகளிலிருந்து வெளிவந்ததாக கண்டால் அசுபமாகும். தலையில் வெண்கலப் பொடியையும் நிர்வாணம், அழுக்குதுணி.

57. எண்ணை தேய்த்துக் கொள்வது போலும், கீழே விழுவது போலும், உயர்ந்த ஊஞ்சலில் ஏறுவது போலும் ஸ்வப்னம் கண்டால் அசுபமாகும். சிகப்பு புஷ்பமரம், சண்டாளன், வேடதர்சனம்

58. பக்வமாம்ஸத்தை புசிப்பது போலும், எண்ணை ரத்தம் இவற்றை கனவில் கண்டாலும் நர்தநமாடுதல், விழுங்குவதாகவும் தனக்கு விவாஹம் (திருமணம்) ஏற்படுவது போலும், பாடுவதுபோலும்

59. நரம்பு மீட்டி வாசிக்கும் வாத்யமல்லாத வாத்யங்களை இசைப்பது குளிப்பது கோமய (பசுமூத்ரம்) ஸ்நானம்

60. முடவன், அன்னம், தாயாரின் மடியில் இருப்பதாகவும் காண்பது அசுபமாகும். (சுடுகாடு) சிதையில் ஏறுவது, மின்னல் விழுவதாக வேண்டும்

61. சூர்யன், சந்திரன், நட்சத்ரங்கள் விழுவதாக ஸ்வப்னம் கண்டால் அசுபமாகும். ஆகாயம் அந்தரிக்ஷம் பூமி இவைகளின் விழுதலை தர்சித்தாலும்

62. தெய்வம், பிராம்மணர்கள், அரசன், குருக்களின் (ஆசார்யர்களின்) கோபம், குமாரியை ஆலிங்கனம் செய்வதாகவும், புருஷர்களின் மைதுனத்தையும்

63. தன்சரீர குறைவையும், விக்கல், வாந்தி எடுத்தலையும் தெற்கு நோக்கி செல்வதாகவும் தொப்பூழ் வியாதி இருப்பதாகவும்

64. வீடுகள் விழுவதாகவும், வீட்டை பெருக்குவதாகவும், பிசாசு, ராக்ஷஸர்கள், குரங்கு மனிதர் இவர்களாலான பீடையையும்

65. பிறரால் உண்டானதும் அதனால் துக்கம் ஏற்பட்டதை போலும், காவியுடை அணிந்ததாகவும் காவியுடை அணிந்த பெண்களுடன் விளையாடுதலை செய்வதாக வேண்டும்

66. அவர்களுடன் ஸ்நேஹம், பானம், குளித்தல், சிவப்பு புஷ்பமாலை தரித்தல் விளையாடுவது நக்குவது வெடிப்பு பசி, தாகத்தால் பரிச்ரமம்

67. நட்சத்ரங்கள் கொடிகள் அருவிகள் செல்லுதலும் மீசை, தாடி கேசவபனம், பிரதாபத்தில் ரஜ்ஜு விடுபடுவதாகவும்

68. நகத்தை நீட்டாக வளர்ப்பதும் ஸ்த்ரீகளை ஸேவிப்பதாகவும் உத்ஸவத்தில் விரூபநரனால் சரீரத்தை ஹிம்சிப்பதையும்

69. பசு, புழு, பறவைகளின் ஸ்தம்பித்தது போலும் மரணத்தையும், தாண்டுவதும், வெடிப்பும் வெளியில் செல்வதுபோலும் ஸ்வப்னம் ஏற்பட்டால் அசுபமாகும்.

70. ஜது பாண்டத்தினால் ஸரஸ்ஸில் விளையாடுவது, நர்த்தனம், செய்வதும் திரவ்ய நாசமாகும். நண்பஹாநியும், நண்பவியோகமும் கருப்பு வஸ்த்ரதாரியும்

71. வெட்டுபட்டகையையும், தாமரையை அபஹரிப்பதும். கிழிந்த கந்தலான வஸ்த்ரத்தையும் கோயில், வீடு, மாடியிலிருந்து இறங்குவது போல் காணும் கனவு அசுபமாகும்.

72. காது, மூக்கு முதலிய இடங்களில் ஸர்ப (பாம்பு) பிரவேசமானது போலும் பருத்தி, எள், கிழங்கு, இரும்பு முதலிய உலோகம் கிடைப்பதுபோலவும்

73. ஸ்வஸ்த புருஷனுக்கு வியாதி ஏற்பட்டது போலும், வியாதிஸ்தன் மரணமடைந்து போலும், கொடி பின்னமானதாகவும், குடைபின்னமானதாகவும் ஸ்வப்னம் கண்டால் அசுபமாகும்.

74. ஒருவரின் தாமரையை தரிப்பது அசுபமாகும். சிரிப்பதும், எள் சாதத்துடன் சாப்பிடுவதும்

75. கீழே தொங்குகிற சிரஸாகவும் அந்த தலையோடு தைலஸ்னானம், செய்வது போலும் பல் உடைந்தது போலும், யானையும், பூமியும், அக்னியால் எரிந்ததாகவும்.

76. மரங்கள், மலை இவைகளின் பீடத்தில் கருப்பிரும்பு, பீடத்தில் இருப்பதாகவும், தேர் கருப்பாக ஆனதாகவும் தேர் கழுதையோடு கூடியதாகவும்

77. வெளியில் செல்வதாகவும், கட்டப்பட்ட கழுத்தாகவும், குள்ளநரி பீடை, ஸர்பபீடனம் நிருத்தம் ஸமஜமில்லததாகவும், நாபிக்கு கீழ் பிரதேசங்களில்

78. புல், மரம், புசுக்கள் உண்டானதாகவும், விளையாடுதாகவும் ருத்ராகாரமாக, கழுதை, குரங்கு, பாம்பு, ஒட்டகம் இவைகளின் போகத்தையும்

79. மற்ற ஸத்வர்களால் இஷ்டமில்லாத சரீரத்தில் பூசுவதும், அசுபமாகும். கோமயலேபனமும், எண்ணை பசையாலும் சேர் குழம்பிய ஜலங்களால் பூசிக்கொள்ளுதல் வேண்டும்.

80. நாக்கு, கைகளின் நகம், ரோமவிச்சேதனம் ஸ்வப்ன தர்சனமும் அசுபமாகும். பாம்பு நம் சரீரத்தின் மேல் ஏறுதலும், நம்மை நுகர்வதும் போல் ஸ்வப்நம் கண்டால் நல்லதல்ல

81. நாய்களாலும், விகாரமான முகமுள்ளவர்களாலும் மிகவும் முகர்ந்ததும், தனக்கு முன் சேர்ந்து இருப்பதாகவும் ஸ்வப்னத்தில் கண்டால் துக்கத்தை அடைகிறான்.

82. எவனுடைய அங்கம் முழுவதும் பிரவிரஜித பிரேதங்களால், குப்புறசயமனமாகவும் ஸ்வப்னம் கண்டால் சமீபவாசியான யமதூதர்களால் இழுக்கிப்படுகிறான்.

83. சிற்றிலவை (இலவமரம்) புரசு, குளிர்ந்த பூவரசு, தேவதாருவிருக்ஷம், புஷ்பங்களோடு கூடியதாகவும் யார் ஏறுவதாக ஸ்வப்னம் காண்கிறானோ

84. இம்மரங்கள் உலர்ந்து வறண்டு போதலையும், பிரமேயமுள்ளவர்கள் தீர்த்தபானமும் செய்வதற்காகவும், வெண்குஷ்டரோகிகள், மஞ்சள் போஜனமும்

85. ரத்த பித்தம், குடிப்பதாகவும் ரத்தக் கலராக இருப்பது போல் தர்சித்தால் அழிவடைகிறான். ஸ்வப்நத்தில் உடைந்தவானத்திலிருந்து இறங்குவது போலும் காண்பது அலக்ஷ்மியைகொடுக்கும்.

86. சூர்ய சந்திர நக்ஷத்ரங்களின், அசுபத்தத் தன்மையை காண்பது அசோபனமாகும். தாமரை ஹவிஸ் கன்னிகை இவர்கள் ஆகாயத்திலிருந்து ஏற்பட்டதாகவோ.

87. கிருஹங்களின் (ஆழ்வும்) கிரஹணமும், ராஜாவிற்கு மரணம் மேற்படுமாகும், அசுபமாகும். அசுபங்களின் தர்சனமும், அவைகளால் ஆலிங்கனம் செய்யப்பட்டதும்

88. காக்கை, கழுகு, பருந்து, பிசாசு, ராக்ஷஸர் பிரதிமை விழுவதாகவும் ஸ்வப்னத்தில் தர்சனம் செய்தால் துக்கத்தை அடைகிறான்.

89. விழுந்ததும், மேலெழுந்துமான, கொடி, மலை, காளை, வீடு, பெரியசுவர் இவைகளை ஸ்வப்னத் தில் கண்டால் பிரதானமானவர்க்கு மரணமேற்படும்.

90. அணைந்த தீபம், வண்ணான், தூது செல்பவன், வர்ணம் தீட்டுபவன், மலேச்சர், அந்த்யஜர், கருப்பு பல், துர்முகர் இவர்களை தர்சித்தால்

91. கபால, பைத்ய வேஷ புருஷனையோ, ஸ்த்ரீயையோ, சூலத்துடன் கூடிய மானையோ ஸ்வப்ந முடிவில் தர்சித்தால் உடனே மரணமேற்படும்.

92. கொல்வதாகவும், தற்கொலை செய்து கொள்வதாகவும் கண்டால் அதே பலிதமாகும். குதிரை, ஒட்டகம், கழுதை, எருமை, நாய்

93. ஓநாய், பெண் எருமை, எண்ணை, கெட்ட நிறம், காக்கை, நரி, காளை, பன்றி, பூஜை, ஆந்தை, கருநிற ஸர்ப்பம்

94. கரும்புழு, கரும்பசு, இவைகளை ஸ்வப்னத்தில் தர்சனம் செய்தால் பயமேற்படும். மேற்க்கண்ட பிராணிகளை ஸ்பர்சித்தாலும், கிரஹித்தாலும் ஆரோஹித்தாலும்

95. ஸ்வர்ண விருக்ஷத்தை ஸ்வப்நத்தில் தர்சித்தாலும், மரணமேற்படும், அக்னி, வாஹனம், தேர், குடை முதலியன பின்னமேற்படாது போலும்.

96. விதவையை, பார்த்தல், விதவை சங்கமுமாக தர்சித்தால் தனக்ஷயமேற்ப்படும். தான் எரிந்து புகைவதாகவும் சிரஸை முண்டநமாகவும்

97. அந்நியர்களால் கட்டியதாகவும் சண்டை போட்டதாகவும் தர்சித்தால் பயமேற்படும். கஞ்சி, மது, குடிப்பதாக தர்சித்தால் தனநாச மேற்படும்.

98. அரிசி, பக்வமாம்ஸம், உமி, நெருப்பு, பயறு, உளுந்து, மிளகு, கடுகு இவைகளை ஸ்வப்னத்தில் கண்டால் அசுபமேற்படும்.

99. குண்டங்களில் குதிப்பது, விருப்பமில்லாதவைகள், கேச விகீர்ணத்வம் (தலைமயிரை அவிழ்த்து போட்டுக் கொள்ளுதல்) திரி, நல்லெண்ணை, மை, முதலியவைகளை பூசிக்கொள்வது போல் கனவு கண்டாலும்

100. இருட்டில் படுத்திருப்பதும், பெரிய வழியில் செல்வதாகவும் ஸன்யாஸி பிரேதங்களோடும், முட் புதர்களில் நுழைவதாகவும்

101. (நட்சத்ரத்தை) தாரத்தை பக்ஷிப்பதாகவும், பிணத்தை பக்ஷிப்பதாகவும் சிகப்பு வர்ணத்ரவ்யம் கிருஷ்ணவர்ணமாவதாகஸ்வப்நம் கண்டால் உயர்வில்லை என்பதாகும்.

102. கிருஷ்ண வஸ்த்து சிகப்பு வஸ்துவானால் அசுபமாகும். வேறுவிதமாக ரத்தத்திலிருந்தும், தாமரையிலிருந்து புரசமரத்திலிருந்தும் ரக்த சந்தனத்திலிருந்துமாக கருப்பு பொருள் ஏற்பட்டாலும்

103. அவ்வாறே, வண்ணான், வர்ணம் தீட்டுபவன், தூதன், ம்லேச்சன், பாஷண்டன் இவர்களை கனவில் கண்டால் அவனுக்கு அசுபமேற்படும்.

104. பாம்புப்புற்று தர்சனம், காய்ந்த விஷவ்ருக்ஷ தர்சனம், பூதங்களின் அழுகை, க்ஷணநேரத்தில் மரம் விழுதலும் இஷ்டமில்லாததாகும்.

105. தேவதைகள், பிராம்மணன், பித்ருக்கள், யோகிகள், அரசன் இவர்களுடன் கனவில் யார் பேசுகிறானோ அவன் அவ்வாறே ஆகும். (நடக்கும்)

106. பிராத்திக்கிற கர்ம விபாகம் சுபாசுபத்திற்கும், ஸ்வப்னத்தில் லிங்கம் தர்சித்தால் தாது லிங்கம் தோஷமில்லை.

107. எந்த சிறந்ததாதுவும் தாதுவால் தூஷிக்கப்பட்டும் அந்த விகாரமாக ஸ்வப்நத்தில் பிரத்யக்ஷமாக காண்பது போல் காண்கிறானோ

108. யார் தூங்கியவனாக பொருளை எடுத்து தர்சித்ததை கேட்டதை, அதே சிந்தனை ஸந்ததியாக ஸ்வப்னத்தில் காண்கிறானோ ப்ரத்யக்ஷமாக பிரகாசிப்பது போல் அனுபவிக்கிறான்.

109. சுபாசுபமான இருவகை ஸ்வப்நவிக்ஞானம் ஆகமத்தில் அபிப்ராயமேதுமில்லை. தர்சன தொகுப்பின் ஞானம், ஆகாயம் வியாபித்தது போல் பிரகாசமாகும்.

110. ஸ்வப்நத்தில் சுபாசுபமாக, யார்சமமாக காண்கிறானோ, அவன் ஒருமைப்பாட்டை விடுபட்டவனாகிறான். அது உண்மையாகும், இது ஒன்றும் விசேஷமில்லை.

111. சுபம், அசுபம், ஆனஸ்வப்னங்களை ஆசார்யனிடத்தில் தெரிவிக்க வேண்டும். பிராம்மணாதி வர்ணக்ரமமாகவோ வயதுக்ரமமாகவோ, பொருளாலோ

112. ஒழுக்கத்தினாலோ, தர்மத்திலோ, வித்யையினாலோ யாருக்கு ஸ்ரேஷ்டத்வம் உள்ளதோ அவனிடம் முதலில் தெரிவிக்க வேண்டும்.

113. இந்த வரிசைக்ரமமாகவே தங்களுடைய ஸ்வப்நத்தை தெரிவிக்க வேண்டும். ஆசார்யனுடைய அனுக்ஞையாலே அவைகளின் ஜ்யேஷ்டத்தை அறிய வேண்டும்.

114. பிராம்மண ஸமயதீøக்ஷ ஸம்ஸ்காரத்துடன் கூடியவன், நிர்வாண தீøக்ஷயோடு கூடியவன் சூத்ரனும், ஒரே பாத்தியதையுடைய இருவரும்

115. மேற்கூரியவர்களின் நடுவில் எவனுக்கு நியோகமேற்படுகிறதோ அவனை குருவை ஆச்ரயிக்க வேண்டும். முதலில் ஸமானதீøக்ஷயுடன் இருந்தாலும்

116. எங்கு நியோக மேற்படுகிறதோ, அந்த சிசுவே முன்னதாகவே உத்தம குருவை நமஸ்கரிக்க வேண்டும், ஜாதி முதலியன சமம், ஸ்மஸ்காரஸமமாக இருந்த போதிலும்

117. எந்த தேசிகனுக்கு நியோகமேற்படுகிறதோ அவனே முதலில் குருவை ஆச்ரயிக்க வேண்டும். பரஸ்பர நமஸ்காரமும், இது மாதிரியான கிரமமாக அறிய வேண்டும்.

118. ஜ்யேஷ்டத்வத்திலும் ஸமஸ்காராதிகள், அவர்களுக்கு குரு அனுமதியுடன் செய்க, குருவிற்கு ஸமானமான நமஸ்காரங்கள் காரணமில்லை.

119. ஓர்தேசிக சிஷ்யர்களின் ஆசாரம் கூறப்பட்டுள்ளது. அதிகமாக கூறுவதேன், தேசிகனால் எது கூறப்படுகிறதோ

120 அவ்வாறே ச்ரேயஸ்ஸை விரும்புகிற சிஷ்யர்களால் எப்பொழுதும் அனுஷ்டிக்கப்படவேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாமக மஹாதந்திரத்தில் ஸ்வப்நாத்யாய விதியாகிற இருபத்தியிரண்டாவது படலமாகும்.

படலம் 21: ஸ்தாலீபாகம் முறை...

படலம் 21: ஸ்தாலீபாகம் முறை...

21வது படலத்தில் ஸ்தாலீபாகம் முறை கூறப்படுகிறது. முதலில் (ஸ்தாலியை) நைவேத்ய பாத்ரத்தை தாமிரம் அல்லது மிருத்பாத்ரம் லட்சணத்துடன் கூடினதாக அமைத்துக் கொள்ளவும். என்று பாத்ர அமைப்பு கூறப்படுகிறது. நைவேத்ய பாத்ரத்தின் ஸம்ஸ்கார முறைப்படி சருபாகம் செய்ய லட்சணம் கூறப்படுகிறது. அதில் நெல், அரிசி இவைகளின் அளவு அமைப்பு தயார் செய்யும் முறை அதிக உஷ்ணத்திற்காக நெய் சேர்த்தல், உஷ்ணம் இல்லாததற்கு நெய் சேர்த்தல் ஆகிய சம்பாத ஹோமங்களின் செய்யும் முறை ஆகிய விஷயங்கள் கூறப்படுகின்றன. இவ்வாறு சம்பாத ஹோமம் செய்யப்பட்ட சருவால் ஹோமம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது. பிறகு சருவில் முதல் பகுதி தேவர்களின் நிவேத்யத்திற்கும் 2ம் பகுதி ஹோம கர்மாவிற்கும் 3ம் பகுதி பரிவார தேவதைகளுக்கும் 4ம் பகுதி ஆசார்யனுக்கும் என்று பிரித்து கூறப்படுகிறது. சரு என்றால் எல்லாவற்றையும் ஈச்வரனுக்கு அர்ப்பணம் செய்யவும் என்று சரு பிரிக்கும் முறை முடிவில் பலனை விரும்பும் சாதகர்களில் பிராணாக்நிஹோத்ரம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறாக 21 வது படல கருத்து தொகுப்பாகும்.

1. நைவேத்ய சருகல்பன முறையில் ஸ்தாலீபாகம் செய்யும் முறையை கூறுகிறேன். தாம்ரம் அல்லது மண்மயமானதும் லக்ஷணத்தோடும் கூடிய நைவேத்ய பாத்திரத்தை (ஸ்தாலி)

2. (பாத்திரத்தை) அஸ்த்ர மந்திரத்தினால் அலம்பி சுத்தி செய்து கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்து, நீரீக்ஷணம் பிரோக்ஷணம் அப்யுக்ஷணம், ஸந்தாடனம் செய்து சந்தனத்தை பூசி

3. கவச மந்திரத்தினால் பட்டு நூலை கழுத்தில் சுற்றி சாணத்தால் மெழுகிடப்பட்டதும் அஸ்தர பிரோக்ஷணம் செய்யப்பட்டதுமான மண்டலத்தில்

4. கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்த பாத்திரத்தை மந்திர நியாஸம் செய்த தர்ப்பத்தில் ஷடுத்தாஸனம் பூஜித்து அதன் மேல் மந்திர ரூபமான பாத்திரத்தை வைத்து

5. ஆவரண ஸஹிதமான சிவனை ஆவாஹித்து பூஜை செய்து, புஷ்பம் முதலிய வஸ்துக்களை எடுத்துவிட்டு நெய்பூசி வடிகட்டிய (சுத்தமான) பாலை ஊற்ற வேண்டும்.

6. அடுப்பை அஸ்திரமந்திரத்தால் உல்லேகனம் (கோடிட்டு) செய்து, அஸ்திரத்தால் பிரோக்ஷணம் அவகுண்டனம் செய்து துடைத்து மெழுகி அடுப்பில் தர்மனையும், அதர்மனையும் பூஜை செய்ய வேண்டும்.

7. (அடுப்பின்) வலது இடது பக்கத்தின் மத்தியில் சிவாக்னியை நியஸித்து பிரணவத்தால் ஆஸனம் கற்பித்து பாத்திரத்தை அடுப்பின் மேல் வைக்க வேண்டும்.

8. துவரையை இரண்டு படி அளவிலோ அல்லது ஐந்து உள்ளங்கை அளவிலோ நான்கு படி அளவு அரிசி முதலான திரவ்யங்களை எடுத்து

9. அஸ்த்ரமந்திரம் ஸ்மரித்து தீர்த்தத்தால் கலைந்து சுத்தி செய்து, அகோர மந்திரத்தை ஸ்மரித்து கிழக்கு முகமாக பக்வம் செய்து மத்ய பக்வம் ஆகும் வரை செய்ய வேண்டும்.

10. ஹவிஸ் மிக உஷ்ணமாயிருப்பின் உஷ்ண சமணத்தின் பொருட்டு நெய்யை விடுதலும், குளிர்ச்சியாக இருப்பின் அதைபோக்குவதற்கு நெய்யை விடுதலும் செய்து அன்னத்தை குண்டத்தின் சமீபம் கொண்டு சென்று சிவாக்னியில் ஸம்ஹிதா மந்திரத்தினால் ஸ்வா என்ற பதத்தை முடிவாக கொண்டதாக ஹோமம் செய்து

11. ஹவிஸில் ஹா என்று ஸம்பாத ஹோமம் செய்து ஸுஸ்விந்நோபவ என்று தப்தாபிகாரமும் இரண்டாவது மண்டலத்தில்

12. பிரோக்ஷணம்செய்து பூஜித்து சருபாத்ரத்தை வைத்து சுசீதளோபவ வளஷட் என்ற மந்திரத்தினால் என்று ஆஹுதியை

13. சீதாபீகாரமாகவே செய்து சம்ஹிதா மந்திரத்தினால் ஸம்பாதஹோமம் செய்து, மண்ணாலும் ஜலத்தாலும் பாத்திரத்தை தேய்த்து (சுத்தி செய்து) தேனுமுத்ரையால்

14. அம்ருதீ கரணம் செய்து குண்டத்திற்கு பூர்வ மண்டலத்தில் மேற்கு திக்கில் ஹ்ருதயாதி மந்திரங்களால் பூஜித்து

15. சிவமந்திரத்தால் நூற்றியெட்டு ஆஹுதி ஸம்பாத ஹோமம் முன்பு போல் செய்யவும். இவ்வாறு ஸம்பாதஹோமம் செய்யப்பட்ட சருவால் ஹோமம் செய்ய வேண்டும்.

16. அரிசி, ஜலத்தினாலும் நித்யம் (தினந்தோறும்) சருபாகம் செய்யவும். ஹவிஸ்ஸின் நான்கிலொருபாகம் ஹோம கர்மாவிற்காக ஆகும்.

17. ஹோம சேஷத்தை ஆசார்யனுக்கு கொடுக்கவும். ஐந்து கோத்ரத்தில் தோன்றியவர்களுக்கும் எல்லா ஆகமமும் அறிந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

18. ஹோம சேஷத்தை இதரர்களுக்கு கொடுத்தால் ஹோமமானது (நிஷ்பலமாகும்) பலனளிக்காது. சருசேஷமின்றி ஹோமம் செய்தால் அந்த ஹோமம் இஷ்டத்தை பூர்த்தி செய்யாது.

19. ஹோம கர்மாவிற்கு ஹவிஸ் மூன்றாவது அம்சம் ஆகும். முதல் பாகம் தைவிகம் (சுவாமி) இரண்டாவது பாகம் ஹோமகர்மாவிற்கும்

20. பரிவாரத்திற்கு மூன்றாவது பாகமும், ஆசார்யனுக்கு நான்காவது பாகமும் தனித்தனியாக பாகம் செய்தாலும் எல்லாவற்றையும் ஈசனுக்கு நிவேதிக்கவும்.

21. பலன் அடைய விரும்பும் சாதர்களால் பிராணாயஸ்வாஹா முதலான மந்திரங்களால் பிராணாக்னி ஹோத்ரம் செய்யவேண்டும். வேறு விதமாக இந்த ஸ்தாலீபாக ஸம்ஸ்காரங்கள் செய்தால் செய்யப்பட்ட ஸம்ஸ்காரங்களின் பலன் மாறுபட்டதாக ஆகும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸ்தாலீபாக முறையாகிற இருபத்தியொன்றாவது படலமாகும்.

படலம் 20: ஸமய விசேஷ தீட்சா விதி...

படலம் 20: ஸமய விசேஷ தீட்சா விதி...

20 வது படலத்தில் சமய விசேஷ தீட்சாவிதி கூறப்படுகிறது. முதலில் சமயத்தை சார்ந்த தீட்சையை கூறுகிறேன் என்று உத்தரவு இடுகிறார். ஆசார்யன் நித்ய அனுஷ்டானத்தின் சாமான்யார்க்ய பாத்ரத்துடன் யாகசாலை நுழைந்து திவார பூஜை இடையூறுகளை நீக்கி யாகசாலைக்கு காப்புதல் செய்து பூதசுத்தி ஸகளீகரண அந்தர்யாகம் செய்து விசேஷார்க்யம் செய்து அந்த தீர்த்தத்தால் தன்னையும் பொருள்களையும் சுத்தி செய்து பிராதேச மாத்ரம் என்ற (சாண் அளவு) உடைய 36 தர்ப்பங்களால் ஞான கட்கம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. முறைப்படி பஞ்சகவ்யம் செய்து பஞ்சகவ்யத்தால் யாகமண்டபத்தை பிரோட்சித்து பொரி, சந்தனம், வெண்கடுகு, விபூதி, தர்பம் புஷ்பம் அட்சதை ஆகிய ஏழு பொருள்களுடன் கலந்த விகிரம் என்ற திரவ்யத்தை அபிமந்தரித்து மண்டபத்தில் அவைகளை வாரி இறைத்து நிரீக்ஷணம் முதலிய கிரியைகளால், யாகமண்டபத்தை ஸம்ஸ்காரம் செய்து அதுபோல் குண்டத்திற்கும் முறைப்படி கிரியைகள் செய்து மண்டபம் அல்லது வேதிகையில் ஈசானத்திலோ, மேற்கு திக்கிலோ சிவகும்பவர்த்தினியையும் வைத்து சந்தன புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும் என்று கும்பம் வர்த்தனியை ஸ்தாபிக்க வேண்டும் என்று கும்பவர்த்தனி அமைக்கும் முறை விளக்கப்படுகிறது. பிறகு பத்து திக்பாலகர்கள் 10 அஸ்திரங்கள் இவைகளுக்கு பூஜை முறையும் கூறப்படுகிறது. பின்பு உங்களால் உங்களுடைய திக்கில் இடையூறை போக்குவதற்காக பொறுமையாக வேள்வி முடியும் வரை இருக்க வேண்டும். என சிவனுடைய உத்தரவை திக்பாலகர்களிடம் தெரிவிக்க வேண்டும் என கூறப்படுகிறது. மண்டபம் ஸ்தண்டிலத்திலோ லிங்கத்திலோ விசேஷ பூஜையுடன் சிவனை பூஜிக்க வேண்டும். அக்னியில் சிவனை பூஜிக்கவும் என கூறி அந்த பூஜை முறை கூறப்படுகிறது. ஹே பகவானே என்னுடைய சரீரத்தில் நுழைந்து இரக்கத்துடன் அனுக்ரஹம் செய்ய வேண்டும் என்று வேண்டி சிவனிடம் இருந்து உத்தரவை பெற்றவனாக ஆசார்யன் ஆத்மா சிவன் இரண்டையும் சேர்ந்ததாக எண்ணவும் என கூறி சிவசரீர அழைப்பு முறை கூறப்படுகிறது.

மண்டபத்தில் செயலின் சாட்சியாகவும், சிவகும்பத்தில் யாகத்தின் சாட்சியாகவும், அக்னியில் ஹோமத்தின் இருப்பிடமாகவும், சிஷ்ய சரீரத்தில் பாச பந்தத்தை விடுவிக்க கூடியதாகவும், என் சரீரத்தில் அருள்பாலிக்கும் தன்மை உடையவராகவும் ஈஸ்வரன் இருக்கிறார். ஐந்து இருப்பிடத்தை உடைய ஈச்வரனானவன் நானே சதாசிவன் என்று வேற்றுமை இல்லா தன்மையாக தன்னை எண்ணிக் கொள்ளவும் என கூறப்படுகிறது. பிறகு தீட்சைக்காக வாயிலில் இருக்கும் சிஷ்யர்களுக்கு யாக மண்டபத்தை நுழையும் பொருட்டு சிவனிடம் வேண்டுதல் மூலம் அவர் உத்தரவை அடைந்தவனாகவும் கூறப்படுகிறது. பிறகு சிஷ்யர்களுக்கு தீட்சை செய்யும் முறை கூறப்படுகிறது. சிஷ்யனுக்கு கண்ணை கட்டும் துணியால் கண்ணை மறைத்து மண்டல சமீபம் அழைத்து சென்று ருத்திர ஈஸ்வர பதத்தை கொடுக்க கூடியதாகிய சிவஹஸ்தத்தை சிஷ்யன் தலையில் வைத்து அவன் அஞ்சலி ஹஸ்தத்தில் புஷ்பங்களை கொடுத்து கண்ணை மூடிய துணியை நீக்கி ஈஸ்வரனை காண்பித்து புஷ்பசமர்ப்பணம் செய்து புஷ்பம் விழுந்த இடத்தை அனுசரித்து பெயர் சூட்டவும் என கூறப்படுகிறது. பிராம்மண ஜாதிகிரமமாக நான்கு வர்ணத்தவர்களுக்கும், பெண்களுக்கும் பெயர் சூட்டும் விஷயத்தில் விசேஷம் கூறப்படுகிறது. பிறகு அங்கு செய்யக் கூடிய கிரியைகளை விசேஷமாக விளக்கப்படுகிறது. பிறகு நாடி சந்தானம், பிராம்மண தன்மை ஏற்படுத்துதல் ருத்திர தன்மை ஏற்படுத்துதல் இவைகள் கூறப்படுகிறது. ஆசார்யனால் பிராணாயாம முறையினால் சிஷ்ய சரீரத்தில் சிவனை சேர்க்கும் முறை கூறப்படுகிறது. ஆசார்யன் சிஷ்யனுக்கு பூணூல் அணிவிக்கவும். பிறகு நூறு, ஆயிரம் முறை மந்திரஹோமம் செய்து சிவ மந்திரத்தினால் பூர்ணாஹூதி செய்க என ஹோம முறையின் முடிவானது காணப்படுகிறது. இப்பேர்ப்பட்ட ஸம்ஸ்காரத்துடன் கூடியவன் சிவபூஜை ஹோமமுறை அத்யயனம், மந்திரத்தை கேட்டல் ஆகிய விஷயங்களில் தகுதியுடையவனாகிறான். அவன் ருத்திர பதம் அடைகிறான். அவனே நிர்வாண தீட்சைக்கு தகுதியாகிறான். முடிவில் எந்த ஆசார்யன் பிராம்மணர்களின் தீட்சா முறைப்படி சூத்ரனுக்கு தீட்சை செய்கிறானோ அவன் சூத்ர தன்மையை அடைகிறான். இவ்வாறு 20வது படல கருத்து சுருக்கமாகும்.

1. இப்பொழுது சமயத்தை சார்ந்தவர்களின் தீøக்ஷ (ஸமயதீøக்ஷ) கூறுகிறேன் என்கிறார். ஆசார்யன் நித்யானுஷ்டானம் மந்த்ராதி தர்ப்பணம் செய்தவராயும்

2. சூர்ய பூஜை செய்து ஏற்றுக் கொள்ளப்பட்ட மந்திரத்தை உடையவனாகவும் ஸாமான்யார்க்யத்தை கையில் எடுத்துக் கொண்டு யாக மண்டபமடைந்து

3. திவாரத்தை அஸ்த்ர மந்திரத்தினால் பிரோக்ஷணம் செய்து திவாரம் திவாராதிபர்களையும் பூஜிக்க வேண்டும். முதலில் சாந்திகலாத்வாராய நம: என்று

4. கிழக்கு நுழைவு வாயிலில் பூஜித்து தெற்கு நுழைவு வாயிலில் வித்யாகலையையும் மேற்கு நுழைவு வாயிலில் நிவ்ருத்தி கலையையும் வடக்கு நுழைவு வாயிலில் பிரதிஷ்டா கலையையும்

5. கிழக்கில் நந்தி, மஹாகாளர், தெற்கில் பிருங்கி, வினாயகர், மேற்கில் விருஷபர், ஸ்கந்தர், வடக்கில் தேவீ, சண்டேஸ்வரர்களையும்

6. முதலில் ஓம்காரமும் நான்காம் வேற்றுமை பதத்துடயன் நம: என்பதை இறுதியிலும் உள்ளதாக முறைப்படி சேர்த்து நந்தி முதலானவர்களை பூஜிக்க வேண்டும். தோரண தேவதைகளை கடங்கள் அல்லது சுவற்றில் உள்ளதாகவோ பூஜிக்கலாம்.

7. மேற்கு திவாரத்தை அடைந்து புஷ்பம் எறிதலை செய்து அஸ்திர மந்திரத்தால் பூமியை மூன்று முறைப்படி காலால் தட்டி அந்த பூமியிலுள்ள

8. இடையூறுகளை போக்கி மூன்றுமுறை கைதட்டுவதால் ஆகாயத்தின் இடையூறு களையும் மூன்று முறை கைசொடுக்குவதால் வெளியிலுள்ள இடையூறுகளை நீக்கி

9. இடது தூண் பக்கமாக வலது காலால் நுழைந்துகீழ் வாசற்படியில் புஷ்பத்தைப்போட்டு

10. மண்டபமத்தியில் வாஸ்தோஷ்பதே பிரம்மணே நம: என்று சந்தனம் புஷ்பங்களால் வாஸ்து பிரம்மாவை பூஜித்து, யாக மண்டபத்தை அஸ்திரமந்திரத்தால் சுற்றியதாகவும் செய்து

11. கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்து யாகசாலையை ஸம்ரக்ஷணம் செய்து வடக்கு முகமாக அமர்ந்து பூதசுத்தியை செய்ய வேண்டும்.

12. அங்கநியாஸ, கரன்யாசம் செய்து அந்தர் யாகம் செய்ய வேண்டும். விசேஷார்க்யமானது யவை வெண் கடுகு அக்ஷதை

13. தீர்த்தம், எள், தர்ப்பை நுனி, பால், புஷ்பம் இவைகளோடு சேர்ந்ததாக கல்பிக்க வேண்டும். அர்க்ய ஜலத்தால் தன்னையும் பூஜை திரவ்யங்களையும் பிரோக்ஷிக்க வேண்டும்.

14. அஸ்திர மந்திரத்தினால் பிரோக்ஷிச்சு கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்து ஹ்ருதய மந்திரத்தினால் அபிமந்திரித்து சந்தனத்தால் திலகமிட்டு கொள்ள வேண்டும்.

15. சிவஹஸ்த கல்பனம் செய்து அந்த சிவ்ஹஸ்தத்தால் தலை முதல் பாதம் வரை சிவபாவனையாக்கிக் கொண்டு ஞானகட்கத்தை முப்பத்திஆறு, முப்பத்தி இரண்டு

16. தர்ப்பைகளால் ஒரு சாண் அளவும் அஸ்திர மந்திரமாகவும் நிர்மாணித்து பஞ்சகவ்யம் தயார் செய்ய வேண்டும். அதன் செய்முறை விளக்கம் கூறப்படுகிறது.

17. மண்டபத்தின் சுபபாகமான திக்கில் ஒன்பது பாகமாக்கப்பட்ட பூமியில் ஐந்து தத்வம் பூஜிக்கப்பட்ட இடத்தில் ஐந்து பாத்திரங்களை வைக்க வேண்டும்.

18. ஐந்து தத்வங்கள் சிவன், சதாசிவன், வித்யை, காலம், புருஷன் ஆகிய கோஷ்ட பூஜை பெயர்களாகும். சுப்ரதிஷ்டம், சுசாந்தம், தேஜோவத், அம்ருதாத்மகம்.

19. ரத்னோதகம் ஆகியவை பாத்திர பூஜை பெயர்களாகும், பால், தயிர், நெய், கோமூத்ரம், கோசாணம் இவைகளை ஈசானம் முதலிய மந்திரங்களால் அபிமந்திரித்து

20. ஒன்று இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்ற வரிசைப்படி பூஜித்து ஆறு தடவை ஜபத்தால் குசோதகத்தை பூஜித்து அம்ருதீகரணமும் சிவ ஒருமைப்பாடும் செய்ய வேண்டும்.

21. பஞ்சகவ்யத்தால் மண்டபத்தை பிரோக்ஷித்து விகிரங்களை அபிமந்திரிக்கவும் நெற்பொறி, சந்தனம், வெண்கடுகு, விபூதி, புஷ்பம், தர்பம், அக்ஷதை.

22. ஆகிய இந்த விகிரத்தின் காரணமான ஏழு பொருட்களை அஸ்த்ர மந்திரத்தினால் கலந்து மண்டபத்தின் நிருருதி திக்கில் இருந்து மண்டப ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

23. நிரீக்ஷணமும் முதலிய ஸம்ஸ்காரங்களை வடகிழக்குமுகமாக நின்று பூஜித்து முன்பு கூறப்பட்டபடி குண்டத்திற்கும் அஷ்டாதசமஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

24. வடகிழக்கு திசையிலிருந்து ஞானகட்கத்துடன் விகிரங்களை இறைக்க வேண்டும். மண்டபத்தில் ஈசான வேதிகையிலோ மேற்கு திக்கு வேதிகையிலோ

25. தங்கம் முதலியவைகளாலான கும்பத்தில் ஜலம் நிரப்பி மாவிலை, தங்கம், வஸ்த்ரம் முதலியவைகளுடன் கூடியதாக ஸ்தாபித்து

26. விகிர பூஜை முடித்து அஸ்த்ர கும்பங்களுக்கு சலாசனம், ஸ்திராஸநம் கல்பிக்க வேண்டும். மூர்த்தி மந்திரத்தால் சிவமூர்த்தயே நம: என்று சிவகும்பத்தை பூஜிக்க வேண்டும்.

27. வஸ்திரம், நூல், தங்கம், தீர்த்தம் இவைகளுடன் கூடிய வர்த்தனியை பிரத்யங்கமான திவாரத்துடன் கூடியதும் அஸ்த்ர மந்திரத்தினால் பூஜிக்கப்பட்டதாக வைக்க வேண்டும்.

28. சந்தனம், புஷ்பம் இவைகளால் சிவகும்பம் அஸ்த்ரகும்பம் இவைகளை பூஜித்து இந்திரன் அக்னி, யமன், நிருருதி வருணன்.

29. வாயு, ஸோமன், ஈசானன் ஆகிய திக்பாலர்களை கிழக்கு முதலான திசைகளில் பூஜித்து ஈசான திக்கின் தெற்கில் பிரம்மாவையும் நைருதி திக்கின் வடக்கில் விஷ்ணுவையும் பூஜிக்க வேண்டும்.

30. இந்திராதிகளை கடம் அல்லது கலசம் இவைகளிலோ கும்பத்தில் இருப்பதாகவோ பூஜிக்க வேண்டும். அதேபோல் வஜ்ரம் முதலிய தசாயுதங்களையும் பூஜிக்க வேண்டும்.

31. ஹே இந்திரனே! உம்மால் உங்களுடைய திசையில் இடையூறுகளை நீக்குவதற்காக யாக பூஜை முடியும் வரை சிவாக்ஞையால் பொறுமையுடன் இருக்கவேண்டும் என்று

32. எல்லா லோக பாலர்களிடமும் சிவாக்ஞையை முறைப்படி அறிவித்து யாகேஸ்வர அஸ்திரகும்பங்களை வலம் வருதல் வேண்டும்.

33. பிறகு யாகேஸ்வரகும்ப வர்த்தனியை முன்பு போல் ஸ்தாபித்து யாகேஸ்வர கும்பம் அஸ்திர கும்பம் இவைகளுக்கு ஸ்திராஸந பூஜையை செய்ய வேண்டும்.

34. சிவமூர்த்தி வித்யாதேஹம் அங்கபூஜை ஸஹிதமாக சிவ ஆவாஹனம் ஆவரணபூஜை அஸ்திர கும்ப பூஜை செய்து இருவர்களின் ஐக்கிய பாவம் கல்பித்து யோநி முத்ரையை காண்பிக்க வேண்டும்.

35. வலது கை முஷ்டி பாகம் பிண்டிகை உருவமான உமாதேவியாகும். கட்டைவிரல் லிங்க உருவமான சிவரூபமாகும். போகத்திற்காக முதலில் அங்குஷ்ட முத்ரையால் சிவ கும்பத்தையும்

36. பிறகு முஷ்டிபாகத்தால் வர்த்தனியை ஹ்ருதய மந்திரத்தால் ஸ்பர்சிக்க வேண்டும். மோக்ஷத்திற்கு முதலில் முஷ்டி பாகத்தால் சிவகும்பத்தையும்.

37. அங்குஷ்டத்தினால் வர்த்தனி கும்பத்தையும் ஸ்பர்சிக்க வேண்டும். உமா பக ரூபிணியாகவும் லிங்க ரூபம் உடையவராக

38. சங்கரரையும் நமஸ்கரித்து பிரார்த்தனை செய்து இந்த யாகத்திற்கு அதிபதி நீங்கள், தங்கள் மூர்த்தி, ஸ்திரமான மூர்த்தியாகும்.

39. இந்த உம்முடைய ஞான கட்கத்தை உம்முடைய ஆயுதமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் யாகம் நடத்துகின்ற என்னால் உம்முடைய யாகம் பிரவ்ருத்திக்கப்பட்டது.

40. யாகம் முடியும்வரை தாங்கள் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டவும், யாகத்தை ரக்ஷிக்கும் விருப்பமுள்ள ஞானகட்கத்தை யாகேஸ்வரரிடமே ஆசார்யன் வைக்க வேண்டும்.

41. அர்க்ய பாத்ரம் கல்பித்து நிரோதனத்திற்காக அர்க்யம் கொடுத்து அர்க்ய பாத்திரத்தை நிரோதனத்திற்காக அங்கேயே வைக்க வேண்டும்.

42. வர்த்தனீகும்ப தீர்த்தம் சுற்றுதல், விகிர திரவ்யம் இரைத்தல், இவைகளால் யாக மண்டபம் முழுவதும் இடையூறு இல்லாததாக நினைத்து பூஜைக்காக பூமியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

43. மண்டலம் ஸ்தண்டிலம் லிங்கம் இவைகளில் சிவனை பூஜிக்க வேண்டும். விசேஷ பூஜையுடன் அக்னியில் சிவனை பூஜிக்க வேண்டும்.

44. ஹே பகவானே உன் தயவினால் என்னுடைய தேஹத்தில் நீவிர் ஆவிர்பவித்து பக்வமான சிஷ்யர்களுக்கு அனுக்ரஹம் செய்ய வேண்டும்.

45. என்று பிரார்த்தித்து அப்படியே செய்கிறேன் என்று அங்கீகரித்ததாகவும் சிவனிடம் இருந்து உத்தரவு பெற்றதாக நினைத்து ஏழுமுறை மூலமந்திரத்தால் மந்திரிக்கப்பட்ட

46. வெண்மையான தலைப்பாகையை தலையில் வைத்து சிவனுடன் சேர்ந்ததாக நினைத்து பிரார்த்திக்க வேண்டும். பரமேஸ்வரன் எல்லா கர்மாவிற்கும் ஸாக்ஷியாக மண்டலத்தில் இருக்கிறார்.

47. யாகத்தை ரக்ஷிப்பவராக சிவகும்பத்தில் இருக்கிறார். ஹோம அதிகாரியாக அக்னியில் பரவி இருக்கிறார்.

48. சிஷ்யனின் சரீரத்தில் அந்த சிஷ்யனின் பாசத்தை விடுவிப்பவராக இருக்கிறார். அருள்பாலிக்கும் தெய்வமாக என் சரீரத்தில் வியாபித்து இருக்கிறார்.

49. ஐந்துவித இருப்பிடத்தில் இருப்பவரான சதாசிவர் ஸோஹம் பாவனையாக இருக்கிறார். ஆத்மா வெவ்வேறாக இல்லாததாகவும் சிவகுணம் ஸமமானதாக உள்ளதாகவும் பாவிக்க வேண்டும்.

50. சாதனமாகிய ஹ்ருதயம் முதலியவைகள் என்னுடையதாகும். சந்தேகமில்லை. சிவனை ஸ்வதந்த்ரரராக பாவித்து சிவனிடம் விக்ஞாபிக்க வேண்டும்.

51. என்னால் எதற்காக இந்த யாகம் பிரவிருத்திக்கப்பட்டதோ அந்த யாகம் உம்முடைய தாகும். இந்த பசுக்கள் வாசற்படியில் இருக்கும் ஜலத்தைபோல் சாந்தர்களாக இருக்கிறார்கள்.

52. சச்சரவில்லாத அடையாளம் உள்ளதுமான உம் கைகளால் உம்மால் தூண்டப்பட்டதுமான பிரகாசமான விருத்திகளை வெகுகாலமாக அறிந்து

53. யோக்யமான அவச்யமான ஸ்நானம் செய்ததாகவும் அனுஷ்டித்த நித்யானூஷ்டானர் களாகவும் வெண்மையான வஸ்திர உத்தரீயம் உடையவர் களாகவும் உன் பாத பத்மத்தை தர்சிக்க விரும்புவர்களாக

54. உள்ள சிஷ்யர்களின் பிரவேசித்ததற்காக ஹேசங்கரா எனக்கு அனுக்ரஹம் செய்வாயாக என்று கூறி உன் பாதாரவிந்த ஸமீபமாக அந்த சிஷ்யர்களை பிரவேசிக்க செய்கிறேன்.

55. சிவனே நான் சிஷ்ய பிரவேசம் செய்ய மங்கள வார்த்தை கூறும் என்று சிவனை பிரார்த்தித்து சிவன் அவ்வாறே ஆகட்டும் என்று கூறியதாக பாவித்து சிஷ்யப் பிரவேசம் செய்ய வேண்டும்.

56. வாயிற்படியை எதிர்நோக்கி வெளியில் பிரணவமிட்ட தர்பாசனத்தில் சிஷ்யனை நிற்கச் செய்து தான் வடக்கு முகமாக நின்று கொண்டு

57. சிகையின் அடிபாகம் முதல் வலது பாத நகநுனிவரையும், பாத நகநனி முதல் சிகை அடிபாகம் வரை தத்வ ஞான த்ருஷ்டியால் சிஷ்யனை பார்க்க வேண்டும்.

58. இந்த ஆத்மா சிவத்தன்மைக்கு உரியவனாகிறான். விடுவிக்கப்பட்ட பந்த பாசங்களை உடையவனாகிறான். பதி சக்தி பிரவேசத்திற்காக பாசக்கூட்டம் என்வசப்படுகிறது.

59. அப்பொழுது இவனை தாம்ரத்திலிருக்கும் தன்னுடைய குண உதயயோக்யமான ஸ்பர்சத்தால் மணியை போல் காந்தி உடையவனாகவும் செய்து சிவனால் நான் தூண்டப்பட்டவனாகிறேன்.

60. ஸ்பர்சத்தால் நிர்மலமாக்கி சீக்கிரமாக தங்கம் போல் நல்ல குணமுள்ளதான மஸ்தக பூஷணத்தை செய்கிறேன்.

61. தர்பையினால் பிரோக்ஷணம் செய்து சிரஸில் விபூதியால் தாடனம் செய்து தர்பையின் நுனி அடிபாகங்களால் ஹ்ருதயத்தின் மேல்கீழ் பாகமாக

62. பிரவ்ருத்திக்கு காரணமான பாசகூட்டத்தை உல்லேகனம் செய்ய வேண்டும். அந்த சிஷ்யனை ஸகளீகரண பாவனையாக செய்து கண்ணை கட்டி

63. அஸ்த்ர மந்திரத்தினால் பிரோக்ஷித்ததும் கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்ததும் ஆன வெண்மையான வஸ்திரத்தினால் மூலமந்திரத்தை ஸ்மரித்ததாக (கண்ணை கட்டி)

64. சிஷ்யனை அழைத்து சென்று மண்டலத்தில் புஷ்ய க்ஷேபம் செய்வித்து சிவமூர்த்தியை காண்பிக்க வேண்டும். சிவமண்டலத்தின் வலதுபக்க மண்டலத்தில் முன்பு போல் செய்ய வேண்டும்.

65. பிரணவத்தை ஸ்தாபித்து உயர்ந்ததான சரீரமுடைய சிஷ்யனை தாரணம் முதலிய பாவனைகளால் சோதித்து அந்த சரீரத்தை ஸகளீகரணம் செய்ய வேண்டும்.

66. தன்னுடைய வலக்கையை சந்தனம் முதலிய வாசனை உடையதாக செய்து ஆஸநம் மூர்த்தி, மூலம் இவைகளுடன் கூடியதாக

67. சிவஹஸ்தமாக பாவித்து போக மோக்ஷமாக ஹ்ருதயத்திலிருந்து புருவம் வரையிலும் பிறகு சிகை வரையிலுமாக

68. எல்லா பாச முடிச்சுகளையும் விடுவிக்கும் பிராஸாத மந்திரத்தை கூறுவதால் ருத்ரேஸ்வர பத வியாப்திகமாக சிரசில் வைக்க வேண்டும்.

69. விசேஷமாக சிஷ்யனுடைய எல்லா அங்கத்தையும் பார்க்க வேண்டும். பிறகு சந்தனம், தூபம், இவைகளால் வாசனை உடைய புஷ்பத்தை அவன் அஞ்சலி ஹஸ்தத்தில்

70. வைத்து ஸர்வாத்மாவான சிஷ்யனால் தனிமையாக பிரார்த்திக்க வேண்டும். சிஷ்யனுடைய நேத்ரத்தை கட்டிய துணியை விலக்கி

71. ஸ்வபாமாகவே தர்சிக்கப்பட்ட ஈசானம் முதலான சிவவக்த்ரங்களை கொண்டு எந்த அங்க பாகம் உள்ளதாகவும் சிவத்தை எதிர்நோக்கியதாகவும் புஷ்பத்தை

72. வெளிப்பட்ட பக்தியாகிற சிவனாகிற தாமரையின் மேல் இருக்கின்ற கிளிபோல் அடைபட்ட அந்த சிஷ்யனை அவனால் முன்பு போடப்பட்ட மண்டல ஸ்தானத்தின் பெயரை சிவபதமுடைய பெயராக வைக்க வேண்டும்.

73. சிவசப்தமான பெயரை பிராம்மணனுக்கு வைத்து க்ஷத்ரிய வைச்ய நான்காம் வர்ணத்தவர்களுக்கு தேவ, கண்ட, கணம் என்று வரிசையாகவும் ஸ்திரீகளுக்கு சக்தி என்று முடிவுடைய பெயராக வைக்க வேண்டும். (ஈசான சிவன் ஈசான தேவன் ஈசான கண்டன் ஈசான கணன் என்பது போல)

74. அல்லது எல்லோருக்கும் எப்பொழுதும் சிவன் என்ற வார்த்தையை முடிவுடையதான பெயரை வைக்க வேண்டும். சிஷ்யனை பிரதட்சிணம் செய்வித்து ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய சொல்லி உபதேசம் செய்ய வேண்டும்.

75. சிஷ்யனை குண்ட சமீபத்தில் தன்னுடைய தென்பாகத்தில் பிரணவாஸநத்தில் அமர்த்தி சிஷ்யனுடைய கையில் தர்பத்தின் அடியை கொடுத்து

76. தர்பை நுனியை தன்னுடைய முழங்கால் இடுக்கில் ஆசார்யன் சேர்த்து கொண்டு சிசுவின் பிராணவாயுவை வெளிக்கொணர்ந்து பிங்களை மத்தியில்

77. தன் தேஹ நாடியில் மூலமந்திரத்தால் சேர்ந்ததாக பாவித்து ஆசார்யன் நாடீசந்தானத்திற்காக மூன்று ஆஹுதி செய்ய வேண்டும்.

78. சிஷ்ய சைதன்ய கிருஹணத்திற்காக ரேசகமும் பூரகமும் செய்ய வேண்டும். மூலமந்திரத்தினால் நூற்றி எட்டு அஹுதியும் அங்க மந்திரத்தினால் பத்து ஆஹுதியும் செய்ய வேண்டும்.

79. சிவமந்திரமான மூலமந்திரத்தால் பூர்ணாஹுதி செய்து பிராயச்சித்த நிமித்தமாக சிவ மூலமந்திரத்தால் நூற்றி எட்டு ஆஹுதி செய்ய வேண்டும்.

80. பிராம்மணாதி வர்ணத்தவர்கள் நான்காவது வர்ணத்தவர்களையும் அவர்களின் குணங்களை அனுசரித்து அவர்களை உத்தாரணம் செய்ய வேண்டும். நான்காவது வர்ணமுள்ள ஜாதித்வத்தை விலக்கி மூலமந்திரத்தால் ஸ்வாஹாந்தமாக

81. மூன்று ஆஹுதி செய்து பிறகு சிவனை நோக்கி இவ்வாறு கூற வேண்டும். உணவு செயல் போன்ற நடத்தையால் யோநி பீஜசரீரத்திலிருந்து

82. சுத்தமான பிராம்மணனாகட்டும், இந்த ஆத்மா ஹே பகவானே பரமேஸ்வரா என கூறவும் ருத்ராம்சம் ஏற்பட்ட சமயத்திலும் மூன்று ஆஹுதி செய்ய வேண்டும்.

83. ஹே பகவானே உன் அனுக்ரஹத்தால் இந்த ஆத்மா ருத்ரனாகட்டும் என்று பிரார்த்தனை செய்து பிரோக்ஷணமும் தாடனமும் செய்ய வேண்டும்.

84. தன் ரேசகத்தால் ஆசார்யன் சிஷ்ய தேஹத்தில் பிரவேசித்து அஸ்திர மந்திரத்தினால் விடுபட்டதாக பாவித்து அங்குச முத்ரையால்

85. சிஷ்ய சைதன்யத்தை ஆகர்ஷித்து த்வாத சாந்த மெடுத்து சென்று உடனே பூஜித்து சிஷ்ய மஸ்தகத்திலிருந்து

86. ஸம்ஹார முத்ரையால் தன் ஹ்ருதயத்தில் பூரகத்தால் பிரவேசிக்க செய்து கும்பகத்தால் சிஷ்யனின் ஒருமைப்பாட்டை ஸ்மரித்து

87. ரேசகத்தால் த்வாதசாந்தத்தில் ஈசானம் முதலான ஸதாசிவர்களை அடைந்து ஆத்மாவை த்வாத சாந்தத்தில் சேர்த்து பிறகு சிவனையும் சேர்த்து

88. ஸம்ஹார முத்ரையால் சிஷ்ய சரீரத்தில் சேர்க்க வேண்டும். மூலமந்திரத்தால் அபிமந்திரிக்கப்பட்ட பூணூலை அணிவிக்க வேண்டும்.

89. நூறு அல்லது ஆயிரம் ஆஹூதி கொடுத்து பூர்ணாஹூதியை சிவமந்திரத்தால் செய்ய வேண்டும். இவ்வாறே சமயதீக்ஷா பெற்றவன் சிவபூஜை

90. ஹோமம் அத்யயனம், மந்திர சிரவணம், இவைகளால் ஒருவன் யோக்யனாகிறான். ருத்ர பதத்தை அடைகிறான்.

91. பிறகு பிராம்மணன் நிர்வாண தீக்ஷாக்கு அதிகாரம் உள்ளவனாகிறான் பிராம்மண விதானப்படி நான்காம் வர்ணத்தவர்க்கு தீக்ஷா செய்தால்

92. சந்தேகமின்றி தீக்ஷா செய்விப்பவனும் நான்காம் வர்ணத்தவருடைய தன்மையை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிகமென்ற மஹாதந்திரத்தில் ஸமயவிசேஷ தீக்ஷா விதியாகிற இருபதாவது படலமாகும்.

படலம் 19: நவ நைவேத்ய விதி...

படலம் 19: நவ நைவேத்ய விதி...

19 வது படலத்தில் நவநைவேத்யமுறை கூறப்படுகிறது. முதலில் ஆடி, மார்கழி, மாசி இந்த மாதங்களை தவிர மற்ற மாதங்களில் நவநைவவேத்ய முறை அனுஷ்டிக்கவும் என காலம் விளக்கப்படுகிறது. ஆசார்யன் அங்குரார்ப்பணம் செய்து நல்ல நட்சத்ர லக்ன முஹூர்த்தம் இவைகளுடைய சிவபக்தர்களுடன் கூடி அஸ்த்ரதேவர் சண்டிகேஸ்வரருடனும் பலவிதமான நாட்டிய, வாத்யங்களுடன் தேவ பூமியை அடைந்து தயிருடன் கூடிய ஹவிஸால் பூத பலி கொடுத்து பலவித காய்கறி சமையல் பொருள்களுடன் தான்ய சங்க்ரஹணம் செய்து கிராம பிரதட்சிணத்துடன் ஆலயத்தை அடையும் என கூறப்படுகிறது. அங்குரார்ப்பணம், அஸ்த்ரதேவர், சண்டீசர் இவர்கள் இல்லாமலும் எல்லா பூஜையும் செய்யலாம் என விளக்கப்பட்டுள்ளது. பிறகு சூர்ணோத்ஸவ முறைப்படி நெல்லை முறைப்படி உரலில் இடித்து அரிசியை தயாரிக்க வேண்டும். பிறகு மிளகு, சீரகம், தேங்காய், வெல்லசர்க்கரை, இவைகளுடன் அரிசியை ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும். ஸ்வாமி அம்பாளுக்கு தண்டுல நிவேதன விதி கூறப்படுகிறது. ஸகல மூர்த்திகளுக்கும் விருஷபம் முதலிய பரிவார தேவதைகளுக்கும் நைவேத்யமுறை கூறப்படுகிறது. அங்கு செய்ய வேண்டிய ஹோமம் செய்யும் முறை பலிகொடுக்கும் முறை உத்ஸவம் செய்யும் முறையும் விளக்கப்படுகிறது. அங்கு பைரவபலி, உலக்கை கிரியையகளின்றி மற்ற எல்லாம் செய்ய வேண்டும். விசேஷமாக வஸ்திரஸ்வர்ண மோதிரம் முதலியவைகளை ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும். யார் முடிவில் இவ்வாறு நவநைவேத்யபூஜை செய்கிறானோ அவன் புண்யமான கதியை அடைகிறான். என்று பலச்ருதி காணப்படுகிறது. இவ்வாறு 19வது படல கருத்து சுருக்கமாகும்.

1. நவ நைவேத்ய லக்ஷணம் பற்றி கூறுகிறேன் என்கிறார். மார்கழி, ஆடி, மாசி மாதங்களை தள்ளுபடி செய்து

2. மற்ற எல்லா மாதங்களிலும், நவநைவேத்ய முறையை கடைபிடிக்க வேண்டும். நிச்சயிக்கப்பட்ட சுபநக்ஷத்திரத்திற்கு முன்தினம் அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும்.

3. அங்குரார்ப்பணம் இல்லாமலும் நல்ல முகூர்த்தத்தில் நல்ல லக்னத்தில் சங்க துந்துபி, நாதம், கீதம் நாட்யம் முதலிய மங்களகரமான சப்தங்கள்

4. பலவிதமான கொடி விதானங்கள், தூப தீப அங்குரங்களுடனும் சிவ பக்தர்கள் புடை சூழ அஸ்த்ர தேவருடன் கூடி

5. சண்டேச்வரனுடன் கூட தேவனுடைய வயல்பூமியை அடைய வேண்டும். சண்டேசர் அஸ்த்ர தேவர் இன்றியும் தேவ÷க்ஷத்ரத்தை அடைந்து

6. தயிருடன் கூடிய ஹவிஸை பூதங்களுக்கு பலிகொடுக்க வேண்டும். பலியை கிழக்கு முதலான எட்டு திசைகளிலும் சந்தனம் புஷ்பம் இவைகளுடன் சேர்ந்ததாக செய்ய வேண்டும்.

7. லக்ஷணத்தோடு கூடினதும் அஸ்த்ர மந்திரத்தினால் பூஜிக்கப்பட்ட அரிவாளோடு கூடி கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ அமர்ந்து ஹ என்று அஸ்த்ர மந்திரத்தை நினைத்து

8. கதிரை (நெல்) அறுத்து மேடையின் மேல் வைக்க வேண்டும். அந்த நெற்கதிருடனும் கூடிய புதிய நெல்லுடன் கூடிய

9. அரிசி முதலானவைகளுடன் பலவித காய்கறி பொருட்களுடனும் தேங்காய் புதிய பாக்குப்பழத்துடனும்

10. மிளகு, வெல்லக்கட்டியுடனும் கரும்பு, பல காய் கனிகள் பலவித உருதுணைப் பொருட்களும் (ஊறுகாய், கறி, கூட்டு முதலியன)

11. தனித்தனியான கிழங்கு பழங்களுடனும், அவ்வாறே பூஜைக்கு உரிய பொருட்களுடனும் ஆச்சர்யமேற்படும் வஸ்துக்கள் பலவித வாத்யங்களிவைகளுடன்

12. நாட்யம், பாட்டு, பலவித கொடிகள், பலவித குடைகள் இவைகளுடன் கூடி நகரம் முதலான பிரதேசங்களை அடைந்து

13. கிராமத்தை வலம் வந்து ஆலயத்தை அடைந்து பூர்ணகும்பம் பலவிதமான தீபங்களுடனும் கூடி

14. வாழைமரம் பலவிதமான மங்களப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட ஆலயத்தை அடைந்து நெற்கதிரிலிருந்து நெல்லை எடுத்து வெய்யிலில் காயவைத்து

15. மூங்கில் முதலானவைகளாலான பாத்திரத்திலோ சாணம் மெழுகப்பட்ட பூமியிலோ மாவினால் கோலமிடப்பட்ட இடத்திலோ வைத்து தீபத்துடன் கூடியதாக

16. சூர்ணோத்ஸவ முறைப்படி நெல்லை குத்தி உமியை நீக்கிசுத்தமான அரிசியை எடுத்து ஜலத்தால் களைந்து சுத்தம் செய்து, மிளகு சீரகம் வெல்லச்சக்கரையுடனும்

17. தேங்காயுடனும் அரிசியை பக்குவம் செய்ய வேண்டும். சுவாமிக்கு ஸ்நபனம் செய்து ஆபரணங்களால் ஸ்வாமியை அலங்கரிக்கவும்

18. நல்ல முகூர்த்தத்தில் பூமியில் நெல்லைப் பரப்பி வஸ்திரத்தை அதன்மேல் வைத்து வாழை இலையை வைக்க வேண்டும்.

19. அஸ்த்ர மந்திரம் கூறி ஜலத்தால் பிரோக்ஷித்து ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை சொல்லிக் கொண்டு கருப்பஞ்சாரினால் நனைத்த பக்குவமான அரிசியை வைத்து

20. கவசாய நம: என்று அவகுண்டனம் செய்து ஹ்ருதயாய நம: என்று பூஜித்து தேனுமுத்திரை காண்பித்து பிரம்ம மந்திரங்களினாலோ அல்லது தத்புருஷ மந்திரத்தாலோ

21. பரமேஸ்வரனுக்கு நைவேத்யம் செய்து தாகசாந்திக்கு தீர்த்தமும் கொடுக்க வேண்டும், மேற்கூரிய மந்திரங்களால் தாம்பூலத்தை சுவாமிக்கு நிவேதிக்க வேண்டும்.

22. புதிய பாக்குப் பழத்துடன் தாம்பூலத்தை தேவிக்கும் நிவேதனம் செய்ய வேண்டும். மற்ற எல்லா ஸகலமூர்த்திகளுக்கு முன்கூறிய விதிப்படி நிவேதிக்க வேண்டும்.

23. அல்லது நைவேத்ய பாத்திரமான ஸ்தாலிகையில் எடுத்து எல்லா மூர்த்தங்களுக்கும் நிவேதிக்க வேண்டும். விருஷபம் முதலிய பரிவார தேவதைகளுக்கு ஹோம கர்மாவுடன் முடிக்க வேண்டும்.

24. நைவேத்யம் செய்து தாம்பூலம் ஸமர்ப்பிக்க வேண்டும். பலிதானம் செய்து அதிதிகளுக்கும் வழங்க வேண்டும்.

25. அன்னமும் தண்டுலமும் நிவேதித்து பிறகு ஹோமமாவது செய்ய வேண்டும். அதன்முடிவில் உத்ஸவம் செய்ய வேண்டும். உத்ஸவமின்றியும் செய்யலாம்.

26. ÷க்ஷத்ர (பைரவஸ்வாமி) பலியின்றியும் உரல் ஸம்ஸ்காரமின்றியும் மற்றகிரியைகளை ஸாமான்யமாக செய்து பிறகு குருவை பூஜிக்க வேண்டும்.

27. வஸ்த்ரம் தங்க மோதிரத்துடன் தட்சிணையை கொடுக்க வேண்டும். இவ்வாறு யார் நவநைவேத்ய விதியை செய்கிறானோ அவன் நல்ல புண்ய கதியை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் நவநைவேத்ய முறையாகிற பத்தொன்பதாவது படலமாகும்.

படலம் 18 : பவித்ரோத்ஸவ விதி...

படலம் 18 : பவித்ரோத்ஸவ விதி...

பதினெட்டாவது படலத்தில் ஆவணி மாதத்தில் செய்ய வேண்டிய பவித்ரோத்ஸவ விதி கூறப்படுகிறது. முதல் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய தோஷத்தின் அழிவிற்காக செய்ய வேண்டிய பவித்ரகர்மா விளக்கப்படுகிறது என உத்தரவு ஆகும். பிறகு பவித்ர கர்மா அனுஷ்டிக்காத சமயத்தில் தேசிகன், சாதகன், புத்ரகன், சமயீ இவர்களுக்கு குற்றம் உண்டாகும் என விளக்கப்படுகிறது. எந்த சொல், மனது சரீரம் இவைகளின் செயல்களால் உண்டாகிற பயன்களில் இருந்து காப்பாற்ற படுகிறதோ அந்த பொருளானது, பவித்ரம் என பவித்ர பயனின் பொருள் விளக்கப்படுகிறது. பவித்ர ஸமர்பணகாலம் நிரூபிக்கப்படுகிறது. பவித்ரம் தயாரிக்க நூல் சேரிக்கும் முறை கூறப்படுகிறது. பவித்ரம் செய்யும் முறை அதன் அதிதேவதை விளக்கப்படுகிறது. ஸ்வாயம்புவ லிங்கங்களை அனுசரித்து நூலின் எண்ணிக்கை விளக்கப்படுகிறது. முடிச்சு போடும் முறையும் செஞ்சந்தனங்களால் நூலை அழகு படுத்தலும் கூறப்படுகிறது. தத்வ சம்பந்தமான யக்ஞசூத்திரமாலை, பாகு மாலை பவித்ரம் இவைகளுக்கு அழகுபடுத்தும் முறை கூறப்படுகிறது. பிறகு க்ஷúத்ரலிங்க விஷயத்தில் விருஷபம் ஸ்வாமி, ஆவரண விஷயம், சண்டிகேஸ்வரர், பைரவர் இவர்களுக்கும் சாத்தக் கூடிய பவித்ரத்தின் விளக்கம் கூறப்படுகிறது. பிறகு திக்பாலகர்கள் பைரவர் இவர்களுக்கு வலமாக ஒன்று மட்டும் அர்ப்பணம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு யாகசாலை, விருஷபம் இருக்கும் இடம், கோபுரம் குண்டம் இவைகளுக்கு எல்லா கும்பங்களுக்கும் முப்புரி நூலில் சுற்ற வேண்டும்.

பிறகு பவித்ரஸமர்ப்பணம் முன் தினம் செய்ய வேண்டிய அதிவாச விதி விளக்கப்படுகிறது. முதலில் மண்டபத்தின் லக்ஷணம் கூறப்படுகிறது. மண்டபத்தில் வேதிகை, குண்டம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. மேற்கு திக்கில் மண்டலம் அமைக்கவும் கிழக்கு திக்கில் பவித்ரத்தை வைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு மண்டப பூஜை செய்யும் முறையில் பூஜைக்கு பிறகு செய்ய வேண்டிய ஹோமம் செய்யும் முறை கூறப்படுகிறது. ஹவிஸ் செய்யும் முறையும் பல்குச்சி, முதலிய விரதத்திற்கு அங்கமான பொருள்களின் அதிவாச முறையும் கூறப்படுகிறது. பிறகு அதிவாசத்தில் பவித்ரத்திற்கு செய்ய வேண்டிய சம்ஸ்காரம் கூறப்படுகிறது. பிறகு சம்பாத ஹோமம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. சூரியன் முதலானவர்களுக்கு கந்தபவித்ர ஸமர்ப்பணம் நிரூபிக்கப்படுகிறது. சிவனுக்கு ஆமந்த்ரண பவித்ரம் ஸமர்பணம் கூறப்படுகிறது. அதில் ஆமந்த்ரத்தின் மந்திர விளக்கம் கூறப்படுகிறது. திக் பாலகர்களுக்கும் அஸ்த்ரங்களுக்கும் பைரவர்க்கும் ஆமந்த்ரண பவித்ரம் ஸமர்பிக்கும் முறை சித்தாந்த புஸ்தகம் தனி ஆசார்யன இவர்களுக்கு பவித்ர ஸமர்ப்பண முறை கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் யாகசாலையிலிருந்து வெளியில் வந்து ஆசமனம் செய்து பஞ்சகவ்யம் அருந்தி ஆசமனம் செய்து சிவமந்த்ரம் ஜபித்து தூங்கவும் என்று அதிவாஸநம் செய்யும் முறை பிறகு மறுதினம் பவித்ர ஸமர்ப்பண முறை கூறப்படுகிறது. முதலில் ஆசார்யன் காலையில் ஸ்நான ஸந்த்யா வந்தனம் முடித்து ஸ்வாமியிடம் இருந்து பவித்ரங்களை எடுத்து சண்டிகேஸ்வரருக்காக ஈசானதிக்கில் உள்ள மண்டல பாத்ரத்தில் வைக்கவும்.

பிறகு முறைப்படி விசேஷ ஸ்நபனத்துடன் சிவனை பூஜிக்கவும் ஜபத்திற்கு பிறகு அக்னிகார்யம் செய்து பூரணாஹூதிக்கு பிறகு சூரியன் நந்தி முதலானவர்களுக்கு பவித்ரம் கொடுத்து வரிசை கிரமமாக பிரம்மா, கும்பவர்த்தினி இவைகளுக்கு பவித்ரம் கொடுக்க வேண்டும். பிறகு சரீரம் குருபரம்பரை இவர்களுக்கு பவித்ரம் ஸமர்ப்பிக்கவும் பிறகு பகவான் சிவனின் பொருட்டு என் விருப்பப் பயன் பூர்த்தி அடைவதற்காக என்று வேண்டுதல் மூலம் விளக்கப்படுகிறது. அங்கு ஆத்மதத்வாதி தத்வத்ரய பவித்ர ஸமர்ப்பண முறை கூறப்படுகிறது. நான்கு மூன்று இரண்டு ஒன்று மாசமோ 15 தினம் 7,5,3,1 தினங்களிலோ ஆரம்பிக்கப்பட்ட காரியம் முடியும் வரை 1 வேளை உணவுடன் சுத்தமாக முடிந்தவரை அனுஷ்டானம் செய்யவும். இந்த விரத அனுஷ்டானமானது பவித்ரத்தை எடுக்கும் வரை செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. பிறகு நான்காவது பவித்ர ஸமர்பண முறையும் பவித்ரோத்ஸவ வரகார்பண விதியும் கூறப்படுகிறது. பிறகு பவித்ராவரோஹண முறை கூறப்படுகிறது. இவ்வாறு பவித்ரோத்ஸவ கிரியைகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறாக 18 வது படல கருத்து தொகுப்பாகும்.

1. ஹே சிறந்த முனிவர்களே! ஆண்டு முழுவதும் செய்யப்பட்ட தீய செயலின் அழிவின் பொருட்டு பவித்ரோத்ஸவத்தை கூறுகிறேன் கேளும்.

2. ஒழுங்குமுறையை கடைபிடிக்காததால் நேர்ந்த பிராயச்சித்தத்தை செய்யத் தவறிய ஆசார்யன் நற்பலனின் குழப்பத்தையடைகிறான் தேசிகன் வியாதியடைகிறான்.

3. புத்ரன் அனுபவிப்புத் தன்மையின்றியும் ஒரே பிறப்பில் சுழலுவதால் ஸமயன் ஸமயஸ்தனின்றி ஆகிறான். மேற்கூறியவை பவித்ர மனுஷ்டிக்காததால் அடைகிறான்.

4. எந்த முறையிலாவது முயற்சியுடன் பவித்ரத்தை கடைபிடிக்க வேண்டும். தினமும் வாக்கு, மனது, உடலிவைகளாலேற்படும் பாபத்தில்

5. விழுவதிலிருந்து எது காப்பாற்றப்படுகிறதோ அது பவித்ரகம் என்ற கிரியையாகும். இதற்கு ஆடி, ஆவணி, புரட்டாசி ஆகிய மூன்று மாதங்கள் உத்தம மத்யம அதமமாகும்.

6. வேறுவிதமாக ஐப்பசி கார்த்திகை மாதமும் கூறப்படுகிறது. ஆடி மாதத்தில் சுக்லபக்ஷ சதுர்தசியில் பவித்ரோத்ஸவம் கூறப்பட்டுள்ளது.

7. மற்ற மாதங்களில் சுக்லகிருஷ்ணபக்ஷங்களில் சதுர்தசி. அஷ்டமிதிதியிலும் பவித்ரோத்ஸவத்தை முறைப்படி செய்ய வேண்டும்.

8. கார்த்திகை தீபோத்ஸவத்திற்கு பிறகு பவித்ரோத்ஸவம் செய்யக் கூடாது. குடும்பமுடையவன் வளர்பிறையிலும், முனிவர்கள் இரண்டு பக்ஷத்திலும் செய்யலாம்.

9. செய்விப்பவன், செய்பவன் இவர்களுக்கு உகந்த நட்சத்ரத்தை கண்டோ காணாமலோ செய்யலாம். பட்டு, பருத்தி இவைகளாலான நூல், முஞ்சை புல்லாலோ இல்லையெனில்

10. தர்ப்பையாலோ, மரவுரி(மரப்பட்டையாலோ) யாலோ நூல்தயாரித்து பவித்ரம் செய்து அதிவாஸம் செய்ய வேண்டும். மூன்றாக உள்ள நூலை மும்மடங்காக சுற்றி அஸ்திர மந்திரத்தினால் சுத்தி செய்ய வேண்டும்.

11. உரோமம் முதலியவைகளை அஸ்திர மந்திரத்தினால் தூய நீரால் அலம்பி ஹ்ருதய மந்திரத்தினால் காயவைத்து அந்த ரோமத்தால் (கம்பளியால்) பவித்ரம் செய்ய வேண்டும்.

12. ஒன்பது நூல்களுக்கு வாமை முதலான ஒன்பது சக்திகள் அதிபர்களாவர். இரண்டு மடங்கான நூல்கள் பத்து முழ அளவினால் அதிகமாகயிருப்பது முதல்

13. நூற்றியெட்டு எண்ணிக்கை வரையுள்ள நூல்கள் உத்தமோத்தமம் ஆகும். பன்னிரண்டுக்கு அதிகமாகி முடிவான பன்னிரண்டு வரை முடிவுள்ளதாக உள்ள

14. நூல்கள் கடைநிலை முறைகளுக்கு ஏற்றதாகும். யவையளவு மெலிந்தான பதினாறு முதல் ஐம்பத்தியொன்று எண்ணிக்கை உள்ளது நடுநிலைக்கேற்றதாகும்.

15. உத்தமமான லிங்கங்களுக்கு எண்பத்தோரு நூல் எண்ணிக்கையுள்ளதாகும். மானுஷ லிங்கங்களுக்கும் அவ்வாறேயாம். ஸ்வாயம்புவம் முதலிய லிங்கங்கள், பாணம், ரத்னம்

16. ஆகிய லிங்கங்களிலும், ஸ்தண்டிலம், மண்டலம் உத்ஸவபிம்பம், மூர்த்தி பிம்பங்களிலும் எல்லா எண்ணிக்கையுள்ளதாகவுமோ சமமாகவோ, சமமின்றியோ ஏற்றுக் கொள்ள வேண்டும்.

17. குடும்பமுள்ளவர்களுக்கும் பரிவார தேவதைகளுக்கும் அவ்வாறே வசதியில்லாத குறைவான லிங்கங்களின் விஷயத்திலும் ஸமமான அளவேயாம்.

18. ஒன்றொன்றாக அதிகரித்து பன்னிரண்டு எண்ணிக்கை வரை நூல்கள், அவ்வாறே நெருக்கமாகவும், புதியதாகவும் பன்னிரண்டு முடிச்சு உள்ளதாகவும் கிரஹிக்க வேண்டும்.

19. ஸம அளவென்ற விஷயத்தில் விரும்பியபடி முடிச்சு போடலாம். முடிச்சின் அளவு ஒன்று முதல் மூன்றங்குல அளவுடையதாக இருக்க வேண்டும்.

20. அறிவாளிகளால் விரும்பிய இடத்தில் முடிச்சுகளை போட வேண்டும். செஞ்சந்தனம் குங்குமப்பூ, கைரிகை, அகில், சந்தனமிவைகளோடு

21. நீலோத்பல கிழங்கு, பச்சை கற்பூரத்துடனும், மஞ்சள் கருஞ்சந்தனத்துடன் ஹ்ருதய மந்திரத்தினால் பூசி அலங்கரித்து அல்லது சிகப்பு நூல்களாலோ

22. மூன்று பவித்ரங்களை ஆத்ம, வித்யா சிவதத்வரூபமாக லிங்க சிரஸில் சமர்ப்பித்து எல்லா தத்வமயமான நான்காவது ஆவுடையாரில் சேர்க்கவும்.

23. பூணூலின் பொருட்டாக சூத்ரமாலை, தோள்பாக பக்க சூத்ர, பவித்ரமாலையை ஸகள விக்ரஹத்திலும் முகலிங்கத்திலும் ஸமர்ப்பிக்க வேண்டும்.

24. முழந்தாள் வரை காந்தியுள்ளதாக வெளியில் தெரியும்படியாக மூன்று முதல் விருப்பப்பட்ட நூல் உள்ளதாக பவித்ரம் ஸமர்ப்பிக்க வேண்டும். யந்திரத்திற்கு லிங்க அளவாகவோ புஷ்பலிங்க அளவாகவோ பவித்ரம் ஸமர்ப்பிக்க வேண்டும்.

25. க்ஷúத்ரலிங்கத்திலும், ஸ்தண்டிலம் முதலியவைகளிலும் விருப்பப்படி பவித்ரம் ஸமர்ப்பிக்க வேண்டும். விருஷபத்திற்கு கொம்பு முதுகு தோள் குளம்பிலுமாக ஒன்றை ஸமர்ப்பிக்க வேண்டும்.

26. எல்லா ஆவரண தேவதைகளுக்கும் ஒரு பவித்ரமாகும். சண்டிகேஸ்வரர்க்கும் பைரவர்க்கும் ஒரு பவித்ரமேயாகும்.

27. ÷க்ஷத்ரபாலர், இந்திரன் முதலான திக்பாலகர்களுக்கு வலமாக ஒரு பவித்ரம் ஆகும். யாகசாலை விருஷபஸ்தான, விமானம், ஆலயம் இவைகளை சேர்ந்த

28. எல்லா காரண தேவதைகளுக்கும் மூவிழை நூலால் சுற்றவும் இவ்வாறு மூர்த்தங்களுக்கு பவித்ர முறையை அறிந்து உத்ஸவத்தின் முன் தினம் அதிவாஸத்தை செய்ய வேண்டும்.

29. ஆலயத்தின் முன்பு அல்லது வலது இடது பக்கத்திலோ மண்டபத்தில் ஐந்து முதல் இருபத்தி நான்கு முழ அளவுள்ளதாக

30. பதினாறு அல்லது பன்னிரண்டு தூண்கள் உடையதாகவும் நடுவில் எல்லா அழகோடு வேதிகையோடு கூடியதான நடுவில்

31. மூன்று பங்கு அளவு நீளமும் இருபது தூணையுடையதும் முன்பே நிர்மாணிக்கப்பட்டதுமான மண்டபத்தில் இரண்டு அல்லது மூன்று முழ அகலமான வேதிகையும்

32. அதைச்சுற்றி நன்கு அமைக்கப்பட்ட ஒன்பது ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையுள்ள குண்டங்களையோ அதே எண்ணிக்கையுள்ள ஸ்தண்டிலத்திலோ வேதிகையுடன் கூடியதாகவோ

33. அமைத்து மேற்கில் மண்டலம் அமைத்து பவித்ரத்தை கிழக்கு நோக்கி வைக்கவும். காலைக்கடன் ஸ்நானம் ஸந்த்யாவந்தனம் மந்திரதர்ப்பணம் முதலியவைகளைச் செய்தவனாகவும்

34. சூர்ய பூஜையுடன் நித்ய பூஜையையும் செய்து சூர்யனை விஸர்ஜனம் செய்து பூத சுத்தியால் மந்திரமய சரீரமுடையவனாக இருந்து கொண்டு

35. யாகத்திற்காக பூமியை ஸ்வீகரித்து, வாயில் வாயிற்காவலர்கள், வாஸ்துநாயகர், லக்ஷ்மீ யாகயாகேஸ்வரர்கள் திக்பாலகர்கள், வினாயகர், ஸப்தகுருக்கள்

36. இவர்களை பூஜித்து வணங்கி வேண்டி அதன்பிறகு மண்டலத்திலும் பரமேஸ்வரனை பூஜித்து முறைப்படி தேவனின் ஸமீபத்தில் நல்ல ஆஸநத்தில் இருந்துகொண்டு

37. பஞ்சாஸனார்ச்சனை ஆரம்பித்து ஆவாஹநம் வரை செய்ய வேண்டும். பஞ்சாம்ருதத்துடன் கூடியதாக விசேஷஸ்னபநத்துடனும்

38. பலவித வாஸனைப் பொருட்களோடும் பலவித பக்ஷண, போஜ்ய, சாதவகைகளோடும் விசேஷமாக பூஜையைச் செய்து குண்ட ஸமீபம் சென்று

39. குண்டஸம்ஸ்காரம் முதல் பூர்ணாஹூதி வரையிலாக ஹோமத்தை செய்யவும், ஸ்மித், நெய், ஹவிஸ், பொறி, எள் கோதுமை முதலான பயிர்வகைகளையும்

40. புரசு, அத்தி, அரசு ஆல் முதலிய சமித்துக்களை கிழக்கு முதலான திசைகளிலும் வன்னி, கருங்காலி, பில்வம், இச்சி முதலிய சமித்துக்களை தென்கிழக்கு முதலான திசைகளிலும்

41. பிரதான குண்டத்தில் புரச சமித்தையும் ஹோமம் செய்க. சிவமூலமந்திரத்தை நூறு அல்லது ஐம்பது ஆவ்ருத்தியும் அங்க மந்திரங்களை சிவமந்திரத்திலிருந்து பத்தில் ஓர் பங்காக ஹோமம் செய்ய வேண்டும்.

42. முன்கூறிய எண்ணிக்கையில் பாதியாக மற்ற குண்டங்களில் தத்புருஷன் முதலானதும் ஹ்ருதயம் முதலானதுமான மந்திரங்களை ஹோமம் செய்ய வேண்டும். ஸ்தாலீபக ஹவிஸ்ஸை செய்து அதை ஹ்ருதய மந்திரத்தினால் மூன்றாக பிரிக்க வேண்டும்.

43. கும்பத்திலுள்ள சிவனின் பாகத்தையும் அக்னிகார்யமாக ஹவிஸ்ஸையும் தேனாலும், நெய்யாலும் கலந்து தன்னுடைய பாகத்தை நெய்யால் மட்டும் கலந்ததாக தயார் செய்து கொள்ள வேண்டும்.

44. ஹ்ருதய மந்திரத்தினால் தேவனின் பாகத்தை பூஜித்து அதை சிவஸமீபம் எடுத்து சென்று ஈச்வரனை பூஜித்து விரதாங்கங்களை தெரிவிக்க வேண்டும்.

45. முறைப்படி தத்புருஷ மந்திரத்தை ஸ்மரித்து கிழக்கில் பற்குச்சியை வைக்க வேண்டும். அகோரமந்திரத்தினால் சுத்தமான பாத்ரத்தில் விபூதியை வைக்க வேண்டும்.

46. மேற்கில் ஸத்யோஜாத மந்திரத்தை நினைத்து சுத்தமான மண்ணை வைக்க வேண்டும். வடக்கில் நெல்லிக்கனியை ஸ்தாபித்து கிழக்கில் ஐந்துவிதமான பக்ஷணங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.

47. தர்பையுடன் கூடியதான எல்லா ஹோமத்ரவ்யங்களையும் மேற்கு திசையிலும், தெற்கு திசையில் தண்டம், ருத்ராக்ஷமாலை, கோவணம், பிøக்ஷ பாத்ரங்களையும்

48. கோரோசனை குங்குமப்பூ, நல்லெண்ணை, ஊசி, சீப்பு, கண்ணாடி, கத்தரிக்கோல், பல், நகம், சுத்தி செய்யும் கருவி, கண்மை இவைகளையும்

49. வேறான மைபாத்ரம் போன்ற பொருட்களை வாமதேவ மந்திரத்தினால் ஸ்தாபிக்க வேண்டும். சுண்ணாம்புடன் கூடிய தாம்பூலத்தை தத்புருஷ மந்திரம் கூறி கொடுக்க வேண்டும்.

50. வடகிழக்கு திசையில் ஆஸனப்பலகை, குடை பாதுகை, யோகவஸ்திரம் இவைகளை ஸ்தண்டிலத்தில் உள்ள பவித்ர சூத்ர சமீபத்தில் சுற்றிலும் அதிவாஸம் செய்து

51. அஸ்திர மந்திரத்தினால் புரோக்ஷித்து கவச மந்திரத்தினால் அவகுண்டநம் செய்து ஹ்ருதய மந்திரத்தினால் பூஜித்து தேனுமுத்ரையால் அம்ருதீகரணமாக்கி சிவாம்சமாக தெரிவிக்க வேண்டும்.

52. தேவதேவனுக்காக பிரம்ம மந்திரங்களால் பவித்ராரோபணம் செய்ய வேண்டும். வேதிகைக்கு மேல் எட்டு மரக்கால் அளவு நெல்லினால் ஸ்தண்டிலம் அமைக்க வேண்டும்.

53. அதன் பாதியளவு 4 மரக்கால் அரிசியும், எள் பொறியுடன் கூடியதாக ஸ்தண்டிலம் அமைத்து அதில் பாத்திரத்தில் பவித்ரங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

54. பவித்ரங்களை மண்டலம், வேதிகையின் மேல் பாகம் கும்பஸமீபமிவைகளிலோ வைத்து அர்க்யஜலத்தால் புரோக்ஷித்து ஸம்ஹிதா மந்திரத்தினால் அபிமந்திரணம் செய்ய வேண்டும்.

55. மான்தோல் முதலியவைகளால் போர்த்தி அக்னிஸமீபம் வைக்க வேண்டும். ஓர் ஆண்டின் குறைவில்லாத எல்லா கார்யத்திற்கும் ஸாக்ஷியாகவும்

56. ரக்ஷிப்பதற்காகவும், கர்மாவின் பயனையடைய நிச்சயித்தின் இருப்பிடமாகவும் சிவனை நினைத்து, சிவமந்திரம், பிரம்ம அங்க மந்திரங்களால்

57. இருபத்தியொரு முறை ஸம்பாத ஹோமம் செய்து மேற்கூறிய மந்திரங்களால் ஹோமம் செய்ய வேண்டும். சூர்யனுக்குகந்த பவித்ரம் கொடுத்து ஆசமனம் செய்து,

58. யாகசாலை, வ்ருபஸ்தானம் பிரகாரம் கோபுரம், அக்னி ஆகியவர்கள் சேர்ந்த காரணதேவர்களை கவச மந்திரத்தினால் ஐந்து சூத்ரத்தினால் சுற்ற வேண்டும்.

59. நந்தி முதலான மூர்த்திகளுக்கு பிரதட்சிணமாக கந்தபவித்ரம் கொடுக்கவும், முன்பு போல் ஆலயத்தில் நுழைந்து பிரம்மாவிற்கு பவித்ரம் கொடுக்க வேண்டும்.

60. ஹே பகவானே இந்த பவித்ரங்களை ஸம்ஸ்கரிக்கப்பட்டவைகளாக்கி குடத்திலிருக்கும் சிவனின் பொருட்டு அர்ப்பணிக்கிறேன் என்று தெரிவிக்கவும்

61. காப்பாற்றும் பொருட்டு தேவர்களுக்கு கந்த பவித்ரத்தை ஸமர்ப்பித்து முதலில் கும்பத்திற்கும் வர்த்தனிக்கும் ஸமர்ப்பித்து சிவஸமீபமடையவும்.

62. தன்மூர்த்தியான சரீரத்திலும் குரு பரம்பரையிலும் கந்த பவித்ரம் கொடுத்து ஓர் முடிச்சையுடையதும் குறைவான நூலால் நிர்மாணிக்கப்பட்டதும்

63. புகையூட்டப்பட்டு புஷ்பத்துடன் கூடியதும், தேனு முத்ரையால் அம்ருதீகரணம் செய்யப்பட்டதுமான ஆமந்திரண பவித்ரத்தை அஞ்சலி ஹஸ்தமாக எடுத்து,

64. அவன் தலையில் சிவனின் பொருட்டு ஏற்றி ரேசககிரியையால் சிவமந்திரத்தினால் ஸமர்ப்பிக்க வேண்டும். தேவனுடைய சன்னதியில் ஆமந்திரண மந்திரத்தை கூற வேண்டும்.

65. ஹே ப்ரபோ எல்லா கார்யங்களின் குறைகளை சரி செய்பவரே யாகத்தை குறித்து உன்னை, உன்னுடைய விருப்பத்தை அடைய காரணனாக ஆமந்திரணம் செய்கிறேன்.

66. அதன் விருப்பப்பயனை நீவிர் அறிவீர். சித்துக்கும், அசித்துக்கும் தலைவரே எல்லாவிடத்திலும் எப்பொழுதும் சம்போ உனக்கு நமஸ்காரம், எனக்கு அருள்பாலிப்பீராக!

67. என்று ஜபித்து நிவேதித்து தேவனை ஸ்தோத்தரித்து நமஸ்கரித்து க்ஷமாபிரார்த்தனை செய்து திக்பாலகர்களுக்கும் தசாயுதங்களுக்கும் பவித்ரார்ப்பணம் செய்ய வேண்டும்.

68. சருவின் மூன்றாவது பாகத்தை வஹ்நியில் இருக்கும் தேவனுக்கு ஸமர்ப்பித்து அக்னியில் இருக்கும் தேவர்க்கும் முன்பு போல் ஆமந்திரண பவித்ரத்தை கொடுக்க வேண்டும்.

69. ஓம் இந்த்ராய நம: பலிம் ஸங்க்ருஹாண என்பதாகவும் மற்ற மூர்த்திகளுக்கும் முறைப்படி பஹிர் பலியைகொடுக்க வேண்டும்.

70. வடமேற்கு திசையில் பைரவருக்காக பலிகொடுத்து ஆசமனம் செய்து பிராயச்சித்தாஹூதி செய்து பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

71. பூ:, புவ: ஸுவ: பூர்புவஸ்ஸுவ, என்ற பதங்களால் தனித்தனியாகவும் சேர்ந்ததாகவும் ஹோமம் செய்ய வேண்டும். அக்னயேஸ்வாஹா, ஸோமாயஸ்வாஹா அக்னீ÷ஷாமாப்யாம் (பூஸ்வாஹா, புவஸ்வாஹா, ஸுவஸ்வாஹா, பூர்புவஸ்ஸுவ ஸ்வாஹா, ஸ்விஷ்டக்ருதேஸ்வாஹா)

72. ஸ்வாஹா என்றும் முன்பு கூறப்பட்ட தீப நாஹுதி மந்திரங்களால் ஹோமம் செய்து மண்டலத்திலுள்ள சிவனோடு அக்னியிலுள்ள சிவனையும் பிறகு

73. நாடீ ஸந்தாநமுறைப்படி சேர்ந்ததாக பரமேஸ்வரனை பாவிக்கவும். ஸித்தாந்த புஸ்தகத்திலும் தன் ஆசார்யனிடத்திலும் பவித்ரத்தை கொடுத்து

74. யாகசாலையிலிருந்து வெளி வந்து ஆசமனம் செய்து பல்துலக்குதல் பஞ்சகவ்யம் ஹவிஸ் புசித்தலை முறைப்படி செய்ய வேண்டும்.

75. பிறகு ஆசமனம் செய்து சிவமந்திரத்தை நினைத்து கொண்டு படுக்க வேண்டும். பிறகு காலையில் செய்யப்பட்ட ஸ்னானம் ஸந்தியாவந்தனம் மந்திர தர்பணமுடையவனாக

76. விஸர்ஜனம் செய்யப்படாத ஈச்வரனிடமிருந்து பவித்ரங்களை எடுக்க வேண்டும். அவைகளை வடகிழக்கு திசையிலுள்ள மண்டல பாத்ரத்தில் சண்டேஸ்வரனுக்காக ஸமர்ப்பிக்க வேண்டும்.

77. தேவனிடம் அஷ்டபுஷ்பம் சாத்தி லிங்கத்திலிருந்து தேவனை விஸர்ஜனம் செய்க. (நிர்மால்ய பூஜைசெய்க) ஆசமனம், மந்திரநியாஸம், ஸாமான்யார்க்கத்தை கையில் எடுத்துக் கொண்டு

78. நித்யானுஷ்டானங்களையும், செய்து ஆசமனத்தையும், மந்திர விக்ரஹபாவனையும் செய்து கொண்டு வாயில் வாயிற்படி தேவதைகளை பூஜித்து அஸ்திரங்களை கும்பத்தையும் பூஜித்து,

79. திக்பாலகர்களையும் தசாயுதங்களையும் முறைப்படி பூஜிக்க வேண்டும். பிரகாசமாந ஆஸனத்தில் வடக்கு முகமாக நேராக அமர்ந்து

80. பூதசுத்தி விசேஷார்க்யம், திரவ்ய சுத்தி, சிவஹஸ்தபாவனை இவைகளையும் செய்து பஞ்சகவ்ய பூஜையையும் செய்து

81. விசேஷமான ஸ்நபனபூஜையுடன் பஞ்சாம்ருதம், பஞ்சகவ்யத்துடன் கூடியதாக அபிஷேக பூஜைகளை செய்ய வேண்டும்.

82. ஜபம் செய்து ஸமர்ப்பித்து ஆசார்யன் குண்ட ஸமீபத்தையடையவும் குண்டத்தை அஸ்திரமந்திரத்தினால் பிரோக்ஷித்து மேகலை, பரிதி இவைகளிலிருக்கும்

83. தேவர்களை பூஜித்து, முறைப்படி ஸ்ருக்ஸ்ருவாஜயஸம்ஸ்காரம் செய்து, பூர்ணாஹூதி செய்து, சிவனை ஆவாஹித்து, பூஜித்து திருப்தி செய்விக்க வேண்டும்.

84. பிராயச்சித்தாஹுதி செய்து பூர்ணாஹுதி செய்ய வேண்டும். பிறகு சூர்யனுக்கு பவித்ரம் கொடுத்து ஆசமனம் செய்து மந்திரமயசரீரமாக்கி கொண்டு

85. நந்தி முதலானவர்களுக்கு பவித்ரம் கொடுத்து உள்ளே நுழைந்து பிரம்மாவிற்கும், சிவகும்ப வர்த்தநீகும்பத்திற்கும் முறைப்படி பவித்ரம் கொடுக்க வேண்டும்.

86. தேவ சமீபம் சென்று தன் ஆஸனத்தில் அமர்ந்து (விபவாநுசாரமாக) சக்திக்கேற்றவாறு விசேஷ பூஜை செய்து

87. ஸ்வமூர்த்தத்திலும் குரு வரிசைகளில் சிவனை ஸ்மரித்து பவித்ரம் கொடுத்து வர்ஷ, ருது, மாஸ, பக்ஷ, தின நாடீ ப்ராணாதி, விக்ரஹமாயும்

88. எல்லாவித கண் முதலான இந்திரியமுள்ள சரீரம் பொருள், செயலின் காரணமாயும், செய்யப்பட்ட செய்யப்படாத சேர்க்கப்பட்ட விடுபட்டகார்யங்களுக்கு ஒரே ஸாக்ஷியாகவும்

89. பூமியை காப்பவருமான ஈசானனை சுத்தமனதை உடையவன் சரணாகதியாக கூறி ஈச்வர முகத்தை நோக்கி பவித்ரத்தை கையில் உடையவனாக இறைவனை

90. காலாத்மாவான உன்னால் ஹேதேவ என்னால் செய்யப்பட்ட இந்த முறையில் பார்க்கப்பட்டு குறைத்து சேர்த்து, அபஹரித்து மறைத்து இவ்வாறாக என்னால் செய்யப்பட்டதை

91. குறைவானது குறைவில்லாதது, செய்யப்பட்டதும், செய்யப்படாததும் ஆன கிரியை நிறைவுள்ளதாக்கி இந்த சர்வாத்மாவான சம்புவினால் உள்இச்சையால் பவித்ரத்தோடு

92. யாகத்தின் விரதபயனை பூர்த்தி செய்யும் என்று இருமுறை கூறி நியமேஸ்வராய ஸ்வாஹா என்றும் கூறி

93. ஆத்மதத்வாதி பதயே சிவாய நம: என்றும் வித்யாதத்வாதிபதயே சிவாய நம: சிவதத்வாதிபதயே சிவாய நம: என்றும் முக்தி விருப்பத்தையுடைய பதமாக கூற வேண்டும்.

94. அனுபவிப்பதை குறிக்கோளாக உடையவர் சிவதத்வம் முதலாக மூன்று பவித்ரத்தை சிரஸில் ஸமர்ப்பிக்கவும். சிவமந்திரத்தை முதலில் கூறி சிவவித்யா ஆத்ம தத்வத்தையும்

95. கூறி, பிறகு ஸர்வதத்வேஸ்வராய என்று கங்காவதாக பவித்ரத்தையும் ஸமர்ப்பிக்க வேண்டும். புஷ்பாஞ்சலி ஹஸ்தத்தோடு பக்தியோடு ஈச்வரனை விஞ்ஞாபிக்க வேண்டும்.

96. சராசரமான உலகில் எல்லா பிறப்புகளுக்கும் உன் கதி ஸ்திரமாயிருக்கிறது. பூதங்களின் உள்புறம் சஞ்சரிப்பவராக நீர் காணப்படுகிறீர்.

97. கர்மா, மனது, வாக்கு இவைகளால் செய்யக்கூடிய செய்கையானது எனக்கு உன்னிடமிருந்து இன்றி வேறில்லை. மந்திர குறைவு, செயல்குறைவு பொருட்குறைவு ஆகியவைகளுடன்

98. ஜபம், ஹோமம், அர்ச்சனை இவைகளின் குறைவை என்னால் உமக்கு நித்யம் செய்யப்பட்டதாகவுள்ளதை செய்யப்படாததாக எண்ணி வாக்யக் குறைவையும் மேற்கூறியவைகளையும் நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

99. ஸுரேஸ்வர பாபத்தை யழிக்கக் கூடியதாகவும் சுத்தமானது பவித்ரம். எல்லா ஸ்தாவரஜங்கமங்களும் உன்னால் சுத்தியாக்கப்பட்டதாகும்.

100. விரதத்தின் குறைவுப்பட்ட சேர்க்கையால், ஹேதேவ, என்னால் எது துண்டிக்கப்பட்டதோ அவை எல்லாம் உன் உத்தரவினால் நிரப்பப்பட்டு ஒன்றாகச் சேர்ந்ததாக ஆகட்டும்.

101. ஜபம் செய்து ஈச்வரனிடம் தெரிவித்து நமஸ்கரித்து ஈச்வரனிடமிருந்து நியமமாக பக்தியோடு இருந்து நமஸ்கரிக்க வேண்டும். நான்கு மூன்று இரண்டு ஒரு மாஸமுமோ

102. பதினைந்து தினம் ஏழுநாள், ஐந்து நாள், மூன்று ஒரு தினமாகவோ, பூஜை ஆரம்பித்து முடியும் வரை நியமத்தை கடைபிடிக்க வேண்டும்.

103. ஒருவேளை உணவு முதல் எந்த நியமமுண்டோ அவற்றை சக்திக்குதக்கவாறு கடைபிடித்து ஈச்வரனிடமிருந்து பவித்ராவரோஹணம் செய்யும் வரை விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

104. தசாயுதங்களிடமிருந்தும் திக்பாலகர்களிடமிருந்தும் ஸூத்ரத்தை எடுத்ததாக நினைத்து அக்னியிலுள்ள சிவனிடம் நான்காவது பவித்ரத்தை கொடுத்து வியாஹருதிகளால் ஹோமம் செய்ய வேண்டும்.

105. வஹ்னியை ஸ்விஷ்டக்ருத்ஹோமம் வரை நிறுத்தி ஹோமம் செய்து உள்ளே நுழைந்து தேவனை பூஜித்து குருவிற்கும் ஸித்தாந்த புஸ்தகத்திற்கும்

106. பவித்ரம் கொடுத்து திக்பாலபலி கொடுத்து ஆசார்யன் ஆசமனம் செய்து பிராயச்சித்தாஹுதி செய்து குறைவை நிறைவு செய்யும் பூர்ணாஹூதியை செய்ய வேண்டும்.

107. மண்டலத்திலுள்ள தேவனை பூஜித்து ஈச்வரனை மன்னித்தருள கேட்க வேண்டும். அதன் முடிவில் உணவு, உடை, மற்றும் உபகரணப்பொருட்களால்

108. தீக்ஷிதர்களை பூஜித்து என்னிடம் ஸதாசிவன் அன்பாக இருக்கக் கடவன் என கூற வேண்டும். லிங்கத்திலிருந்து பவித்ரத்தை எடுத்து நிர்மால்ய குழியில் போட்டதும்

109. ஸ்நானம் செய்யப்பட்டு பூஜித்த காலத்தில் அதை நிர்மால்ய குழியில் வைத்துப் பிரதிதினமும் விஸர்ஜனம் செய்யாமலிருக்கவும் அதிகமான தினங்கள் வரை விரத முடிவில் பூஜித்து

110. விரதத்தை தெரிவிக்கிறேன் என்று கூறி எனக்கு பலனை யளிப்பதாக ஆகட்டும் போகத்தை விரும்புபவன் விரதியாகவும் விருப்பத்தில் கர்மாவிற்கு கட்டுப்பட்டவன் என்றும்

111. மந்திர தர்பணம் வரை செய்து பிராயச்சித்தம் அனுஷ்டிக்க வேண்டும். விபூதி கொடுத்து வஹ்னியிலிருப்பவரை சிவனிடம் சேர்க்க வேண்டும்.

112. வஹ்னியிலிருந்து மந்திரத்தை எடுத்து அதை த்வாதசாந்த ஸமீபம் சேர்த்து ஹ்ருதயத்தில் ஸமர்ப்பித்து அக்னியை விஸர்ஜித்து விஷ்டரத்திலிருந்து தேவர்களை விஸர்ஜித்து

113. பரிதிகளையும் பலிகொடுத்ததாக விஸர்ஜித்து ஆசமனம் செய்து சிவகும்ப அஸ்த்ர வர்த்தநீ கும்ப மந்திரங்களை ஸம்ஹரித்து சேர்க்க வேண்டும்.

114. ஈச்வரனிடத்தில் விருப்பத்தை கூறி மன்னித்தருளும் என்று விஸர்ஜனம் செய்து, லோக பாலகர்களை தசாயுதங்களுடன் சேர்ந்ததாக வேண்டும் வாயிற்படியிலுள்ள திவார தேவதைகளையும்

115. சூர்யன் வரை விஸர்ஜனம் செய்து மஹேச்வரனிடமிருந்து பவித்ரங்களை எடுத்து சண்டேசனிடத்தில் ஸமர்ப்பிக்க வேண்டும்.

116. பவித்ரங்களை நிர்மால்யமாகவும் வேறுவிதமாகவும் செய்யப்படாவிடில் அகோர மந்திரத்தை லக்ஷõவர்த்தி செய்து பத்தில் ஓர் பங்கு ஹோமம் செய்க.

117. நித்யபூஜாங்க பவித்ரத்தை புஷ்பம் முதலியவைகளால் கொடுக்க வேண்டும். நித்ய பவித்ரம் கொடுத்தாலும் ஸம்வத்ஸர பவித்ரத்தையும் கொடுக்க வேண்டும்.

உத்தரகாமிக மஹாமந்திரத்தில் பவித்ர சமர்ப்பண முறையாகிற பதினெட்டாவது படலமாகும்.

படலம் 17: ஆடிமாத பூர நட்சத்ர பூஜா முறை...

படலம் 17: ஆடிமாத பூர நட்சத்ர பூஜா முறை...

பதினேழாவது படலத்தில் ஆடிமாத பூரநட்சத்ர விளக்கப்படுகிறது. முதலில் ஆடிமாத பூர நட்சத்ரம் கூடிய தினத்திலோ ஐப்பசிமாத பூரநட்சத்திரத்திலோ இங்கு பூஜை செய்க என விளக்கமாக காலம் கூறப்படுகிறது. பிறகு தேவிக்கும், அல்லது ஸ்வாமி, அம்பாளுக்குமோ ரக்ஷõபந்தனம் செய்க. காலையில் கன்னிகைகளுக்கு ஸ்வர்ணங்கள் வஸ்திரம் உணவு இவைகளை கொடுத்து தேவிக்கு பால் நிவேதனம் செய்யவும், எல்லா அலங்கார ஸஹிதமாக தேவியை கிராம பிரதட்சிணம் செய்து ஆஸ்தான மண்டபம் சேர்க்கவும், கிராம பிரதட்சிண சமயத்தில் உப்புடன் கூடிய முளைப்பயறு நிவேதனம் செய்ய வேண்டும். ஆஸ்தான மண்டபத்தில் வலம் வருதல் விதிக்கப்படுகிறது. பிறகு சூர்ணோத்ஸவம் இன்றி அரிசி முதலிய தானம் மட்டுமே செய்க என சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு அஸ்த்ரதேவனுடன் கூடி தேவியை நதி முதலான தீர்த்தங்களுக்கு அழைத்து சென்று தீர்த்தவாரி உத்ஸவபடி செய்ய வேண்டும். தீர்த்த விழாவிற்கு பிறகு தேவியை ஆலயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தீர்த்தோத்ஸவம் இன்றி கிராம பிரதட்சிணம் மட்டும் செய்க என வேறுவிதமாக கூறப்படுகிறது. பிறகு ஸ்வாமிக்கும், தேவிக்கும் கிராம பிரதட்சிண பூர்வமாக தீர்த்தோத்ஸவம் செய்யும் முறை வர்ணிக்கப்படுகிறது. தீர்த்தோத்ஸவத்திற்கு பிறகு ஆலயம் அமைத்து அங்கு ஸ்நபனம் செய்து வாசனையுடன் கூடிய தாம்பூலத்துடன் மஹாஹவிஸ் நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு ஆசார்ய பூஜை செய்க என சுருக்கமாக விளக்கப்படுகின்றது. முடிவில் தேவியின் திருப்தி காரணத்திற்காக இந்த பூர நட்சத்திர பூஜா விதானம் எல்லா தீங்கு நிவிருத்திக்காகவும் எல்லா பாப அழிவிற்காகவும் எல்லா கார்ய சித்திக்காகவும், எல்லா விருப்ப பூர்த்திக்காகவும் செய்ய வேண்டும் என பலஸ்ருதி காணப்படுகிறது. இவ்வாறாக 17வது படல கருத்து தொகுப்பாகும்.

1. ஆஷாடம் என்கிற ஆடிமாதத்தில் பூர நட்சத்திரத்திலோ, ஐப்பசி மாத பூர நட்சத்திரத்திலோ இந்த பூரநட்சத்திர பூஜையை செய்யவும்.

2. தேவிக்கு முன்பு கூறிய முறைப்படி இரவில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். தேவனுக்கும் தேவிக்குமாவது ரக்ஷõபந்தனம் செய்து கன்னிகைகளுக்கு தங்கம் முதலியவைகளையும்

3. வஸ்திரம், உணவு முதலியவைகளை கொடுத்து தேவிக்கு பாலை நிவேதனம் செய்ய வேண்டும். எல்லா அலங்காரத்துடன் கூடியதாக தேவியை கிராம வீதி வலம் செய்ய வேண்டும்.

4. அந்த ஸமயத்தில் முளையிட்ட பாசிபயிரை உரிய இலக்கணமுடையதாக அர்ப்பணிக்க வேண்டும். கிராம பிரதட்சிணத்திற்கு முன்பு நைவேத்யம் கொடுத்தோ கொடுக்காமலோ பூஜிக்க வேண்டும்.

5. ஆஸ்தான மண்டபத்தையடைந்து தட்டி சுற்றுதலை செய்க. சூர்ணோத்ஸவ முறைப்படி மஞ்சட் பொடியையும், நல்லெண்ணையையும்

6. தேவனுக்கும், தேவிக்கும் கொடுத்து பிறகு ஜனங்களுக்கும் கொடுக்க வேண்டும். தாம்பூலம், பலவித காய்கறிகள் அரிசி முதலியவைகளுடன் மஞ்சட் பொடியையும் கொடுக்க வேண்டும்.

7. சூர்ணோத்ஸவமின்றியும் அரிசி முதலியவைகளை அளிப்பதுமின்றியுமாக சக்த்யஸ்திரத்துடன் தேவியை நதி முதலான தீர்த்தங் களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

8. நெல் முதலானவைகளால் இரண்டு ஸ்தண்டிலம் அமைத்து அதில் முன்னதாக சூலாஸ்திரத்தையும் தேவியையும் ஸ்தாபித்து அதற்கு முன்பாகத்தில்

9. ஸ்நபன முறைப்படி அந்த குடங்களை முறைப்படி ஸ்தாபித்து ஹ்ருதய மந்திரத்தினால் ஸத்துமாவு, பழங்களுடன் கூடியதாக பூஜிக்க வேண்டும்.

10. பிறகு அந்த கும்ப தீர்த்தங்களால் அந்த சக்தியஸ்திரத்தை அபிஷேகம் செய்வித்து தீர்த்த மத்தியில் ஜனங்களுடன் கூடி சூலத்துடன் ஸ்நானம் செய்து ஆலயத்தை அடைய வேண்டும்.

11. தீர்த்தவாரி கார்யமின்றி, கிராமவீதி வலம் வரையில் அந்த தினத்தில் அணையா விளக்கு, வாடாதமலை இவைகளுடன் கூடியதாகவும் செய்யலாம்.

12. பலியை கொடுப்பதுடன் கூடியதாக ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். அல்லது இரவிலோ பகலிலோ பலி ஹோமமிவைகளுடன் சேர்ந்ததாகவும்

13. எல்லா அலங்காரத்துடன் பிம்பத்தை வீதிவலம் வரச் செய்து எல்லா ஜனங்களுடன் கூடியதாக செய்ய வேண்டும். பலவகையான இனிமையான பழங்களையும்

14. வெல்லக்கட்டியுடன் கூடிய ஸத்துமாவையும் கொடுக்க வேண்டும். பலவித அப்பங்களுடனும் பலவகையான பழங்களையும்,

15. வெல்லம், பழம் ஸத்து மாவையும் தீர்த்தக் கரையில் ஈசனுக்கு நிவேதித்து, தேவதேவிக்கு முன்பாக புதியதீர்த்தத்தில் தீர்த்தவாரி செய்து

16. அல்லது திரிசூலத்துடன் கூடியாவது தீர்த்தவாரி செய்து பின் ஆலயத்தையடைந்து, பூஜையுடன் கூடியதாக ஸ்நபனம் செய்ய வேண்டும்.

17. பிரபூதஹவிஸ் என்ற பாவாடை நிவேதனம் செய்து, முக வாசனையோடு தாம்பூலத்தையும் நிவேதித்து ஆசார்யனை பூஜிக்க வேண்டும்

18. வஸ்திரம், ஸ்வர்ணம், மோதிரமிவைகளோடு தட்சிணையையும் குருவிற்கு கொடுக்க வேண்டும். எல்லா பாபங்களின் அழிவிற்கும், எல்லா கெட்ட கிரியைகளின் நிவ்ருத்திக்கும்

19. எல்லா விருப்ப பயனை அடைவதற்கும் எல்லா செயலும் சித்திப்பதற்காகவும் தேவிக்கு மகிழ்ச்சியையளிக்கக்கூடிய இந்த ஆடிப்பூர பூஜையை செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகமஹா தந்திரத்தில் ஆடிமாத பழ பூஜா முறையாகிற பதினேழாவது படலமாகும்.

படலம் 16 : ஆனி மாத பழ பூஜை...

படலம் 16 : ஆனி மாத பழ பூஜை...

பதினாறாவது படலத்தில் ஆனிமாதத்தில் செய்யவேண்டிய பழ பூஜாவிதி நிரூபிக்கப்படுகிறது. ஆனிமாத மூல நட்சத்ரம் கூடிய தினத்தில் பழபூஜைசெய்ய வேண்டும் என காலநிரூபணம் ஆகும். பஞ்சாம்ருத ஸஹிதம் விசேஷ ஸ்நபனம் செய்து பாயசநைவேத்யத்துடன் விசேஷ பூஜை செய்து சமித், நெய், அன்னம். இவைகளால் விசேஷ ஹோமம் செய்து பலவித பழத்துடன் கூடிய திரவியங்களால் பூர்ணாஹூதி செய்ய வேண்டும். பிறகு பீடத்திலிருந்து லிங்க சிரஸ்வரை பழங்களால் நிரப்பவேண்டும். அதற்கு முன்பாக இரண்டு வஸ்த்ரத்தால் லிங்கத்தையும் பீடத்தையும் மூடவேண்டும், அடுத்த பூஜா காலத்திலும் அல்லது மறுதினத்திலோ பழங்களை வெளியில் கொண்டு வரவேண்டும் பழபூஜை முடிவில் தேசிகனுக்கு வஸ்த்ரஸ்வர்ணங்களால் பூஜை செய்க என பழ பூஜாவிதியில் செய்யவேண்டிய கார்யங்கள் விளக்கப்படுகிறது முடிவில் பழபூஜா விதானத்தில் கர்த்தாவின் மனோபீஷ்டம் சீக்ரம் ஏற்படும் என பலன் கூறப்படுகிறது. இவ்வாறாக 16வது படலகருத்து தொகுப்பாகும்.

1. ஜ்யேஷ்ட மாதமென்கிற ஆனிமாதத்தில் மூல நட்சத்திரத்தில் இனிமையான பழங்களால் பூஜை செய்ய வேண்டும். ஸ்நபநம் பஞ்சாம்ருதத்துடனும்

2. பாயஸ நிவேதனத்துடன் விசேஷ பூஜையுடனும், சமித்து, நெய், அன்னம் இவைகளுடன் கூடிய விசேஷ ஹோமத்துடனும்

3. பலவிதமான பழங்களுடன் கூடிய பொருட்களால் ஹோமம் செய்து பூர்ணாஹூதி செய்து லிங்கத்தின் தலைபாகம் வரை பழங்களால் நிரப்ப வேண்டும்.

4. பழங்களால் லிங்கம் முழுவதும் மூடியதாகவோ, அல்லது லிங்கம் (பாணம்) தவிர மற்ற இடங்களில் பழங்களை நிரப்பி, கவச மந்திரத்தினால் வஸ்திரத்தினால் லிங்கம் பீடம் இவற்றை போர்த்த வேண்டும்.

5. அடுத்த ஸந்தியா பூஜா வேளையிலோ அடுத்த தினத்திலோ அந்த பழங்களை எடுத்து வெளிக் கொணரவும். பூஜை முடிவில் யஜமானன் ஆச்சார்யனை வஸ்திர தட்சிணைகளால் பூஜிக்க வேண்டும்.

5.5. யஜமானனுக்கு எந்த பயன் விருப்பத்தையளிக்க வல்லதாக உள்ளதோ அந்த பயனை சீக்ரம் அடைவான்.

இவ்வாறு உத்தரகாமிகமஹா தந்திரத்தில் ஆனிமாத பழ பூஜா முறையாகிற பதினாறாவது படலமாகும்.

படலம் 15 : வைகாசி மாத சீத கும்ப விதி...

படலம் 15 : வைகாசி மாத சீத கும்ப விதி!

பதினைந்தாவது படலத்தில் வைகாசி மாசத்தில் செய்யவேண்டிய சீத கும்பவிதியை கூறுகிறார். வைகாசி மாசத்தில் விசாக நட்சத்தரம் கூடிய தினத்தில் சீத கும்ப விதி செய்யவேண்டும் என்று காலம் நிரூபிக்கப்படுகிறது. பின்பு கிராமங்கள் தீயினால் நஷ்டமானாலும் கிரஹங்கள் வக்ரமாக நிற்கும் சமயத்திலும், பிராணிகள் வியாதியால் பீடிக்கப்பட்டாலும், காய்ச்சல் வைசூரி போன்றவைகள் சம்பவித்தாலும், அந்த தோஷங்களின் நிவர்த்திக்காக உத்பாதம் முதலிய தோஷ எல்லா அத்புதகாலங்களிலும் எல்லா அசுப நிவிருத்திக்காகவும் பிராயச்சித்த விஷயத்திலும் சீதகும்பவிதி அனுஷ்டிக்கப்படுகிறது. பிறகு சிவலிங்கத்தின் சிரஸ்ஸுக்கு மேல் முக்காலியை வைக்கவும் என கூறி முக்காலி செய்யவேண்டிய விதியையும் தேவதைகளை பூஜிக்கும் பிரகாரத்தையும் வர்ணிக்கப்படுகிறது. பிரதான கும்ப உபகும்பத்தில் அளவு, லக்ஷணம் கூறப்படுகிறது. பின்பக்கத்தில் திவாரத்துடன் கூடியதுமானபிரதான கும்ப உபகும்பத்திலும் செய்யவேண்டிய ஹோமவிதியும் விளக்கப்படுகிறது. ஹோமகாலத்தில் பசுவின் காம்பில் இருந்து விசேஷமாக பாலை கறக்கவும் என கூறப்படுகிறது. அபிஷேகவிதி நிரூபிக்கப்படுகிறது. அபிஷேகத்திற்கு பிறகு செய்யவேண்டிய நைவேத்யவிதி நிரூபிக்கப்படுகிறது. பலவித வாத்யகோஷங்கள் ஜயசப்தங்கள் ஸ்தோத்ரங்கள் நாட்யவிசேஷங்கள் இவைகளால் ஈசனை சந்தோஷிக்க செய்ய வேண்டும் என கூறப்படுகிறது விருப்பப்பட்ட பயனை அடையும் வரை தினம் தோறும் ஈசனை பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு முதல் தினத்தில் செய்யவேண்டிய விசேஷபூஜையை வர்ணிக்கப்படுகிறது. முடிவில் ஏழுதினம் 14 தினம், 21 நாள், 1 மாதம், இரண்டு, மூன்றுமாதமாகவோ, இவ்விதியை அனுஷ்டிக்க வேண்டும். என கூறப்படுகிறது. பிறகு ஆசார்யர்களுக்கு தட்சிணை கொடுக்கும் விதியும் அவர்களின் உணவிற்காக காய்கறிகளுடன் கூடிய அரிசி முதலியவைகளின் தானவிதியும் கூறப்படுகிறது. தினம்தோறும் பக்தர்கள், முனிவர்கள், ஏழை ஆதரவு அற்றவர்கள், ஆகிய ஜனங்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 15வது படலத்தின் கருத்து தொகுப்பாகும்.

1. பிறகு விசேஷமாக சீதகும்பவிதியை கூறுகின்றேன். வைகாசி மாதத்தில் வருகின்ற விசாக நட்சத்திரத்திலும் பஞ்ச மேற்பட்டபொழுதும் இந்த பூஜை செய்யவேண்டும் என்று கூறப்படுகின்றது.

2. ஸகலவிதமான கெடுதல் நாசமடையவும், எல்லா விதமான வால்நட்சத்ரம் முதலியவைகளின் போக்குவதலின் பொருட்டும் பிராயச்சித்தம் முதலிய கார்யங்களிலும், தீவிபத்துகள் ஏற்படுகின்ற காலத்திலும்

3. ஆடு, மாடு, குதிரை முதலிய நாற்கால் பிராணிகளுக்கு வியாதி, ஜ்வரம், அம்மை முதலியன ஏற்பட்ட காலங்களிலும், அந்தந்த கெடுதல்களை போக்குவதற்காக சீத கும்ப முறையானது கூறப்பட்டது.

4. வேள்விகளுக்கு கூறப்பட்ட மரங்களில் முக்காலியானது எட்டு அங்குலம் முதல் ஒவ்வொரு அங்குலமாக கூட்டி ஓர் முழம் வரையில் செய்து லிங்கசிரஸில் வைக்க வேண்டும்.

5. ஆசார்யன் எப்படி இடைவெளி இருக்க வேண்டுமோ அப்படியே அமைத்து ஜலத்தினால் அலம்பி கால்களை வஸ்த்திரத்தினால் மூடி தென்பாகத்தில் பிரம்மாவை பூஜிக்க வேண்டும்.

6. இடது பக்கத்தில் விஷ்ணுவையும் பின்பக்கத்தில் விருஷப தேவரையும் மூன்று கால்களில் இந்த தேவதைகளையும் பலகையின் மேல் பக்கத்தில் எங்கும் பரவலாக மஹாமாயையும் பூஜிக்க வேண்டும்.

7. இதுபோல் முக்காலியை அமைத்து லிங்கத்தின் தலையில் வைக்கவேண்டும். மண்டபத்தில் எட்டு மரக்கால் நெல் போட்டு ஸ்தண்டிலம் அமைத்து

8. அரிசி எள்ளு பொறி இவைகளை போட்டு கும்பத்தை வைக்கவேண்டும். நான்கு மரக்கால் சிரேஷ்டம் மூன்று மரக்கால் மத்யமம்

9. இரண்டு மரக்கால் அளவு அதமமும் ஆகும். நூல் சுற்றியுள்ளதாயும் வஸ்த்திரமாக கூர்ச்சத்தோடு கோவைப்பழம் ஆக்ருதியோடு

10. தங்கத்தாமரை பஞ்சரத்னங்களோடு சுபமாக பின் பாகத்தில் துவாரம் உடையதாய் தங்க (தண்டுடன்) ஓட்டை உடையதாய்

11. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு நிஷ்க மென்ற அளவினால் நான்கு அங்குல நீளத்தினால் ஊசியின் நுனி துவாரத்தோடு கூடியதாகவும் ஓர் பாத்ரத்தை

12. தேங்காய் முதலிய மூடியோடு கூடியதாக இருப்பதாகவும், மாவிலை வஸ்த்திரம் தங்கம் முதலியவைகளோடு கூடியதாகவும் அதன் முன்பாக உபகும்பமும்

13. அடிப்பாகத்தில் துவாரம் இல்லாததாக திவார பாத்ரத்திற்கு தெற்குபக்கத்தில் வைக்கவேண்டும். பிறகு ஆஸனம் மூர்த்தி பூஜையாக கும்பத்தில் ஆவாஹனம் செய்யவேண்டும்.

14. பஞ்சபிரும்ம மந்திரத்தோடும் கலாமந்திரத்துடன் வித்யா தேகத்தை கல்பித்து ஓங்காரத்துடன் சிவனை ஆவாஹனம் செய்து சந்தனம் முதலியவைகளால் அர்ச்சிக்கவேண்டும்.

15. பிரதான கும்பத்திலும் உபகும்பத்திலும் இந்த கார்யங்களை செய்யவேண்டும், சந்தன குழம்பு அல்லது தேன், பால், இவைகளை எல்லா நன்மைகளின் பொருட்டு சேர்க்க வேண்டும்.

16. பிராயச்சித்தம், அத்புத சாந்தி, பாபங்களை நாசம் அடைய செய்வதற்காக சுத்த ஜலமோ பஞ்ச கவ்யமோ நிரப்ப வேண்டும்.

17. வாஸனையுடன் கூடிய சந்தனம் விபூதியோடு கூடவோ கல்பிக்கவேண்டும். அல்லது சந்தனம் மாத்ரம் ஆசமனீயத்திற்காக கல்பிக்க வேண்டும்.

18. முடி இல்லாததும் ஐந்துக்களற்றதுமான திரவியத்தை உப கும்பத்தில் சேர்க்கவேண்டும். சந்தனம் முதலானவைகளை ஹ்ருதயமந்திரத்தினால் பூஜித்து பிறகு அக்னிகார்யத்தை ஆரம்பிக்கவேண்டும்.

19. ஒன்பது, ஐந்து, ஓர் குண்டங்களில் ஸமித், நெய், அன்னத்தோடு கூடிய எள், பொறி, தேன் ஓஷதிகளோடும்

20. அசோக மரத்தின் ஸமித் இவைகளால் வாருண மந்திரத்தினாலும் அமிருத பீஜத்துடன் கூடிய சிவமந்திரத்தினால் ஸம்புடீகரணம் செய்து

21. ஆப்யதாரண மந்திரத்துடன், ஆயிரம், ஐநூறு, நூற்றெட்டு ஒவ்வொரு திரவியங்களையும் ஹோமம் செய்யவேண்டும்.

22. ஆப்யாணுமந்தர ஸம்புடிதமான மூல மந்திரத்தை முன்கூறிய எண்ணிக்கைப்படி செய்யவும், ஜபம் செய்கின்றவர்களான எண்மர்களால் வாருண மந்திரம் ஜபிக்கத்தகுந்தது.

23. ரிக், யஜுஸ், ஸாம, அதர்வண, என்ற நான்கு வேதக்காரர்களும் ஆப்யாயஸ்வ, என்ற மந்திரத்தை ஜபிக்கவேண்டும், ஸ்நானம் செய்தவர்களாயும் (அடக்கமுள்ளவர்களையும்) ஹவிஸ் அன்னத்தை சாப்பிடுபவர்களுமான பிராமணர்களால்

24. ஒரே மனதை உடையவர்களாயும் சாந்தர்களாயும், ஆசார்யருடைய கட்டளையை செயல்படுபவர்களாயும் சிவ தீøக்ஷயுடன் கூடியவர்களும் மழையை விரும்புவர்களுமான (பிராமணர்களால்)

25. திருக்கோயில் முழுமையும் ஜலத்தினால் மெழுகுவதினால் இரவுபகலாக ஜலமயமாக்க செய்ய வேண்டும். அந்த காலத்தில் பசுவின் மடியிலிருந்து விசேஷமாக பாலை கறக்கவும் செய்யவேண்டும்.

26. ஆயிரம், ஐநூறு, நூறு எண்ணிக்கை அளவாக பாலின் கறவை விழுமானால் நல்ல புஷ்டியான மழை பெய்யும்.

27. ஹோம காலத்தில் தினந்தோறும் பிராமண சிரேஷ்டர்கள் இவ்வாறு செய்யவேண்டும். பூஜாகாலத்திலும், வாருணீதாரணாமந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

28. அமிருதமயமான மூல மந்திரத்தை தியானித்து பிறகு வவுஷட் என்பதை முடிவாக கூறி பூர்ணாஹுதி செய்யவேண்டும். தினந்தோறும் சங்கவாத்ய மங்கள கோஷத்துடன் இவ்வாறு செய்யவேண்டும்.

29. நித்ய பூஜை முடிவில் நைமித்திக பூஜையை ஆரம்பிக்கவேண்டும். நைமித்திகம் பெரியதாக இருப்பின் முதலில் நைமித்திகத்தை செய்யவேண்டும்.

30. அனேகவிதமான வாஸனைகளோடு கூடியதும் குளிர்ச்சியான ஜலத்தோடு கூடியதுமாக ஸ்தாபனம் செய்து தேவ தேவனை அமிருதாப்லாவனத்தை நினைத்துக்கொண்டு

31. சந்தனம் அகில் குங்குமப்பூ பச்சைகற்பூரம் இவைகளை அதிகமாகவும் அந்த க்ஷணத்தில் உண்டான சந்தனம் புஷ்பங்கள் இவைகளால் பூஜித்து

32. காரகிலால் உண்டான தூபங்களாலும் இஷ்டமான நெய்யினால் கல்பிக்கப்பட்ட கற்பூரதிரியோடு கூடிய தீபங்களாலும், உடன் தயார் செய்யப்பட்ட பாயாஸ நிவேதனத்தினாலும்

33. மண்பாண்டத்தில் தயார் செய்த சால்யன்னமும் நூதன பாண்டத்தில் உயர்ந்த நைவேத்யமும் குடிப்பதற்கு யோக்யமான வாஸனையுடன் கூடிய குளிர்ச்சியான தீர்த்தமும்

34. வெள்ளையான வெற்றிலையும் வாசனையோடு கூடிய பாக்கும் கூடிய தாம்பூலங்களினாலும் தாம்பூலத்தோடு கூடிய பாட்டு வாத்யங்கள் நாட்டியங்கள்

35. புதிய நடன சிறப்போடும் ஸ்வரத்தோடு கூடிய வேதங்களாலும் ஸ்தோத்ரங்களாலும் ஜபம்செய்பவர்களால் ஜயஜய சப்தங்களாலும் அனேக நமஸ்காரங்களாலும்

36. விரும்பிய பலனை அடையும்வரை தினந்தோறும் ஈச்வரனை பூஜிக்கவேண்டும். அதன் முடிவில் தினந்தோறும் ஹோம கார்யம் செய்யவேண்டிய முறையும் கூறப்பட்டது.

37. முதல் நாள் பூர்ணாஹுதிக்கு பிறகு இரண்டு குடத்தையும் எடுத்து தோளிலோ, தலையிலோ வைத்துக் கொண்டு வலம் வந்து

38. ஆலயத்தில் நல்லநாளில் நல்ல கிழமையில் ஆசார்யன், யஜமானன் இருவருடையவும் அனுகூல நட்சத்திரத்தில்

39. நல்ல திதியில் நல்ல லக்னத்திலோ சிவமந்திரத்தை சொல்லிக்கொண்டு துவாரமுள்ள குடத்தை வைத்து அதில் ஒன்பது கும்பத்தில் இருக்கின்ற ஜலத்தை

40. சிவமந்திரம் சொல்லி அமிர்த தாரணையை திரியோடு கூடிய தீபங்களாலும், உடன் தயார் செய்யப்பட்ட பாயாஸ நிவேதனத்தினாலும்

41. கூறியுள்ள காலம் வரையில் தினந்தோறும் மீதி ஜலத்தை விடவும் ஏழுதினம், பதினான்கு தினம் இருபத்து ஓர்நாள், ஓர் மாதம்

42. இரண்டு மாதமோ மூன்று மாதமோ இந்த முறையை செய்யவேண்டும். முதலில் ஆசார்யனை வஸ்த்திரங்கள் பஞ்சாங்க பூஷணங்களால் பூஜிக்கவேண்டும்.

43. அரசன் முதலில் பத்து நிஷ்கம் முதலான தட்சிணையை கொடுக்கவேண்டும். முடிவில் இரண்டு மடங்கு பூஜையையும் தட்சிணையையும் கொடுக்க வேண்டும்.

44. மற்றவர்களான எல்லோருக்கும் பொன் வஸ்திரம் மோதிரங்கள் ஓர் நிஷ்க தட்சிணையோடு கூட சிரத்தையோடு கொடுக்கவேண்டும்.

45. தினந்தோறும் சாப்பாட்டிற்காக அரிசி காய்கறிகளுடன் அரசன் சிரத்தையோடு வெற்றிலை பாக்கும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

46. பக்தர்கள், யோகிகளுக்கும் தினமும் சாப்பாடு போடவேண்டும். பிறகு ஏழைகள் ஜனனங்களுக்கு தினந்தோறும் சாப்பாடு செய்யவேண்டும்.

47. முடிவில் ஸ்னபனம் செய்து மஹாஹவிஸ் நிவேதனம் செய்யவேண்டும்.

இவ்வாறு வைகாசி மாத சீதகும்ப விதியாகிற பதினைந்தாவது படலமாகும்.

திங்கள், 7 அக்டோபர், 2024

யார் யாருக்குச் சொந்தம்...

யார் யாருக்குச் சொந்தம்...

கோவிலில் மந்திரம் சொல்லும் போது நம: என்ற சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் அர்த்தம் என்ன தெரியுமா? சமஸ்கிருதத்தில் நம: என்றால் என்னுடையது என்று பொருள். அதோடு ந என்பதைச் சேர்த்து நம: என்று சொன்னால் என்னுடையது இல்லை என்று அர்த்தம் உண்டாகும். நம: என்பதே நம: என்றானதாகச் சொல்வர். எல்லாம் கடவுளுக்கே சொந்தமானது என்று அறிவிப்பதற்காகவே அர்ச்சனையின் போது நமஹ என்று உச்சரிக்கின்றனர்.கடவுளுக்கு அர்ச்சிக்கும் தேங்காய்,பழம் மட்டுமில்லாமல் வழிபடும் நாமும் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதைக் குறிக்கவே நமஹ என்கின்றனர்.