புதன், 9 அக்டோபர், 2013

படலம் 24: ஆசார்ய அபிஷேக முறை!

24வது படலத்தில் ஆசார்ய அபிஷேக முறை கூறப்படுகிறது. முதலில் எந்த கர்மாவால் ஆசார்ய தன்மை ஏற்படுகிறதோ அப்பேர்ப்பட்ட ஆசார்ய அபிஷேக விதியானது கூறப்படுகிறது. என்று பிரதிக்ஞை செய்யப்படுகின்றது ஆர்யாவர்த்த தேசத்தில் உண்டானவரும் நல்ல அழகுடன் கூடிய ஸ்ரீமான்களை தேசிகனாக உண்டாவது பெருந்தன்மையாகும் என கூறி ஆர்யாவர்த்த தேசத்தில் லக்ஷணம் கூறப்படுகிறது. எங்கு நல்ல ஆசாரமுடைய பிராம்மணர்கள் தபஸ்விகள், முனிவர்கள் வசிக்கிறார்களோ எங்கு வேதங்களும் தேவர்களும் கொண்டாடப்படுகிறார்களோ அதுவே ஆர்யாவர்த்தமாகும். விந்திய மலையின் சமுத்திர மத்தியில் இருக்கும் தேசம் ஆர்யாவர்த்த மென்று கூறப்படுகிறது. பிறகு க. முதல் எட்டு எண்ணிக்கையில் விருப்பப்பட்ட தேசம் ஆர்யாவிருத்தம் என கூறி ககாரம் முதலிய தேசங்களின் அளவு கூறப்படுகிறது. பிராம்மணர் முதலிய நான்கு வர்ணத்தவர்கள் அவரவர் அனுஷ்டானங்களில் மட்டும் உரியவர்கள் ஆவர்கள். ஆதிசைவ குலத்தில் ஜனித்தவர்கள் மட்டுமே ஸ்தாபனம் முதலிய கர்மாக்களின் உயர்ந்தவர்கள் என கூறி ஸ்தாபனம் முதலிய கர்மாக்களின் உயர்ந்தவர்கள் என கூறி ஸ்தாபனம் முதலிய கார்யங்கள் விளக்கப்படுகிறது. பிராம்மணர் முதலிய நான்கு வர்ணத்தவர்களுக்கு எந்தஎந்த கார்யங்களில் அதிகாரம் என்று விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்ய அபிஷேக விஷயத்தில் தள்ளுபடி செய்யப்படும் அதிகாரிகளின் லக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு ஆசார்ய அபிஷேக விதி கூறப்படுகிறது. அங்குரார்ப்பணத்துடன் நல்ல லக்னத்துடன் கூடிய தினத்தில் செய்யவும் என்று காலம் கூறப்படுகிறது.

பிறகு இரண்டு வேதிகைகளுடன் கூடிய மண்டபம் அமைக்கும் முறை நன்கு சிவபூஜை ஹோம லக்ஷணம் விடுபட்ட கிரியையுடன் கூடிய சிஷ்ய விஷயத்தில் தீட்சை செய்யும் விஷயம் அந்தர்பலி, பஹிர்பலி செய்யும் வரை ஆகிய விசேஷ கார்யங்கள் செய்யவேண்டும் என்பதாக விளக்கப்படுகிறது. பிறகு சுத்தி செய்யும் விஷயத்தில் உபயோகிக்க வேண்டிய பொருள்களின் விளக்கம் மண்டபத்தில் கும்பஸ்தான முறை கூறப்படுகிறது. அங்கு கும்ப லக்ஷணம் கூறியபடி 9,5 குடமோ ஸ்தாபிக்க வேண்டும் அல்லது ஒரு கும்பமோ வைக்க வேண்டும் கும்பங்களின் பூஜை செய்ய வேண்டிய தேவதைகளும் பூஜை முறையும் கூறப்படுகின்றன தென்பாகம் உள்ள வேதிகையில் கும்பஸ்தாபனம் வடக்கு பாகம் உள்ள வேதிகையில் சிஷ்யனை அமர சொல்லவும். சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும். ஆர்த்தி எடுக்கும் முறை என்பதான கிரியா விசேஷங்கள் விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்யனால் சிஷ்யனுக்கு தலைப்பாகை முதலியவைகளை அளக்கும் முறையும் அரச சின்னங்களாகிய குடை, சாமரம் முதலியவைகளை கொடுக்கும் முறைகளையும் கூறப்படுகிறது. ஆசார்யனால் ஹே தேசிகரே இன்று முதல் தீட்சை சிவாகம இலக்கணம் முதலிய கார்யங்களை முறைப்படி செய்வாயாக என உத்தரவு பிறப்பித்த முறையாக அவ்வாறே இவன் உன்னுடைய அனுக்ரஹத்தால் இடையூறு இன்றி அதிகாரம் செய்யட்டும் என்று ஸ்வாமியிடம் தெரிவிக்கும் முறையும் கூறப்படுகிறது. பிறகு அங்கு செய்ய வேண்டிய ஹோம முறையும் விளக்கப்படுகிறது. ஆசார்யனால் சிஷ்யனுக்கு தன் அதிகாரத்தை ஸமர்ப்பணம் செய்வது, பிராயச்சித்த ஹோமவிதி என்பதான அபிஷேகத்திற்கு பிறகு செய்ய வேண்டிய விசேஷ பூஜைகள் விளக்கப்படுகின்றன. பின்பு இந்த முறையாலேயே ஸாதக அபிஷேகமும் கூறப்படுகிறது. ஆனால் அங்கு சாத்யமான மந்திரத்தால் பூஜிக்கப்பட்ட கடங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று சாதகாபிஷேக விதி அதிகமாக சுருக்கமாக காணப்படுகிறது. பிறகு புத்ரகன், ஸமயி, மஹேஸ்வரன் பரிசாரகன் இவைகளின் லட்சணம் கூறப்பட்டுள்ளது. அதில் பரிசாரகர்கள் லிங்க அர்ச்சனையில் யோக்யர்கள் இல்லை. இவ்வாறு தீட்சை முதலியவைகளில் யோக்யர் ஆவார்கள் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் சிவபிராம்மண குலத்தில் உண்டான மாஹேஸ்வரர்கள் சிருஷ்டி ஆரம்பத்தில் பரமேஸ்வரனால் தீட்சை செய்யப்பட்டவர்கள் அப்படி இருந்தும் என்னை அர்ச்சிப்பதற்காக அவர்களின் சக்தியின் பொருட்டு தீட்சை மறுபடியும் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பின்பு அனுபவிக்கும் விஷயத்தில் பிரம்மசாரியோ, கிருஹஸ்தர்களுக்கு தேசிகன் ஆகிறான்.

பிறகு கிருஹஸ்தாஸ்ரம குரு ஸாந்தானிக குரு முண்டிவிரதி, விரதார்பகன் ஆதிசைவன் இவர்களின் அமைப்பு கூறப்படுகிறது. பின்பு எல்லா விரதங்களின் உத்தமமான ஆசார்ய விரதத்தின் அமைப்பு கூறப்படுகிறது. பிறகு ஆசார்ய, சாதக புத்ரக, ஸமயீ, இவர்களால் கர்மாக்களின் லக்ஷணம் கூறப்படுகிறது. நித்யநைமித்திக கர்மாக்களின் அதிகாரி நிரூபணம் அதில் ஆசார்ய ஸாதகனும் நித்ய நைமித்திக கர்மாக்களின் அதிகாரி நிரூபணம் அதில் ஆசார்ய சாதகனும் எல்லா கர்மாவிலும் நன்கு யோக்யமானவன் என்று கூறப்படுகிறது. லக்ஷம் ஸ்லோகம் அறிந்தவன் என்று குறித்து கூறப்படுகிற குருவின் அமைப்பு கூறப்படுகிறது. பின்பு நான்கு பிரிவை உடைய காமிகம் முதலிய ஆகமங்கள் சம்ஹிதை என்று சம்ஹிதா லட்சணம் கூறப்படுகிறது. பிறகு சைவம், பாசுபதம், சோம ஸித்தாந்தம், லாகுலம் என்று சைவம் நான்கு விதமாகும். இந்த நான்கு விதமான சைவ தந்திரம் மஹேஸ்வரனுடைய நான்கு முகத்திலிருந்து உண்டானதாகும். இந்த நான்கு கிரந்தங்களில் ஒன்றுக்கொன்று முன்னதானதாக சிறந்த குணத்தை உடையதாகும். இந்த நான்கு வித கிரந்தமும் வாம, தட்சிண சித்தாந்தபேதத்தினால் ஒவ்வொன்றும் மூன்று விதமாகும். அவைகளில் சித்தாந்தம் சிரேஷ்டமாகும். அந்த சித்தாந்தத்திலும் சைவ சித்தாந்தம் எல்லாவற்றிலும் உத்தமோத்தமாக கூறப்படுகிறது. பிறகு சித்தாந்த அதிமார்க்க, அத்யாத்ம வைதிக, லௌகீகம் முதலிய ஐந்து வகைகளில் ஒன்றுக்கொன்று உச்சநீச்ச பாவமும் அவைகளை கூறியவரும், அவைகளில் ஏற்பட்ட முறையும் லக்ஷணமும் விளக்கப்படுகிறது. அங்கே லௌகீக, வைதீக, அத்யாத்ம, அதிமார்க்க சித்தாந்தங்களுக்கு முறையாக பிரம்மா விஷ்ணுருத்திரன் ஈஸ்வரன் ஸதாசிவம் ஆகியவர்கள் ஐந்து காரணேஸ்வரர்கள் சொல்லப்பட்டவர்களாக கூறப்படுகிறது. பிறகு வாமம், எல்லா சாஸ்திரத்திலும், அதமம் வாமத்திலிருந்து தட்சிணம் உத்திரம், தட்சிணத்திலிருந்து கவுளம், சிரேஷ்டம் கவுளத்திலிருந்து மஹாகவுலிம் சிரேஷ்டம், பூர்வாம்ணாயம், சிரேஷ்டம், பூர்வாம்ணாயத்திலிருந்து சித்தாந்தம் உத்தமம் ஆகிறது என்று சித்தாந்தத்தின் உன்னத தன்மை விளக்கப்படுகிறது. இங்கு சித்தந்தாத்திலிருந்து உன்னத ஞானம் வேறு இல்லை என்று சாஸ்திரகுறிக்கோள் ஆகும் என கூறப்படுகிறது. பிறகு சித்தாந்தம் வேதசாரம் சித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ள ஆசார அனுஷ்டானம், வைதிக ஆசாரம் என கூறி வைதீக கர்மா சைவகர்மாக்களின் செயல்படும் முறையில் ஆதரிக்கும் முறை கூறப்படுகிறது.

பிறகு காமிகம் முதல் வாதுளம் வரையிலான 28 ஆகமங்களும் சிவனுடைய அங்கமாக விளக்கப்பட்டுள்ளது. இங்கு பூர்வ காமிகாகமத்தில் தந்திராவதார படலத்தில் காமிகம் பாதயுக்மம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படலத்திலோ காமிகம் ஊர்த்வ மகுடம் என கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் முரண்பாட்டிற்கு பரிகாரம் கூறவேண்டும் என்று முனி சிரேஷ்டர்களின் வேண்டுதலாகும். அங்கு ஸ்ருஷ்டி, ஸம்ஹார பேதத்தால் (இரண்டு விதமாக) போக மோக்ஷ ஸித்திக்காக ஞானமய சித்திக்காக ஞானமய மானது தியான பேதத்தால் இரண்டு விதமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. பிறகு மனுஷ்யர்களால் ரிஷி வாக்யமும், ரிஷிகளால் தேவவாக்யமும், தேவர்களால் பிரம்ம வாக்யமும், பிரம்மாவால் விஷ்ணு வாக்யமும் விஷ்ணுவால் சிவவாக்யமும் பாதிப்பதற்கு சக்தி இல்லை என கூறப்படுகிறது. காமிகம் முதல் வாதுளம் வரை 28 ஆகமங்களும் ஈசானம் முதலிய ஐந்து முகங்களில் இருந்து உண்டானது பற்றி விளக்கப்படுகிறது. உபபேதத்துடன் 28 ஆகம தந்திரங்களை எந்த குருவானவர் அறிகிறானோ அந்தகுரு சிவனாக ஆகிறான் என கூறப்படுகிறது. பிறகு விசேஷமான ஆசார்யனால் ஆரம்பிக்கப்பட்ட கார்யத்தில் ஹீனமான குருவிற்கு அதிகாரம் இல்லை ஹீனமான குருவால் தொடங்கப்பட்ட கார்யத்தில் விசேஷ குருவிற்கு அதிகாரம் உண்டு என்று கூறப்படுகிறது. விசேஷமான குருவிற்கு மரணாதி முதலிய சம்பவங்கள் ஏற்பட்டால் வேறு குருவை அடையும் பொழுதும் பெரும் இழப்பு ஏற்படும். அதனால் அரசன், அரசாங்கம் கிராமத்தை அதிகாரம் செய்பவன் இவர்களுக்கு பெரும் (நஷ்டம்) குற்றம் ஏற்படுமென கூறப்படுகிறது. உலக பிரஸித்தமான வித்தைகள் குருவிற்கு கொடுக்கப்பட்ட அணு அளவு திரவியமும் அரசனுக்கு, புகழ் ஸெளக்யம் இவைகளை அதிகமாக ஏற்படுத்துகிறது. அந்த குருவிற்கான தானாமானது உத்தமோத்தமமாகும். யாரால் குருவினுடைய திரவ்யம் அபகரிக்க படுகிறதோ, அவன் பாபி. மட்டமான மனிதனாக அறிய வேண்டும். அவன் எல்லோராலும் வெளியேற்றப்பட்டவனாகிறான் என கூறப்படுகிறது. இவ்வாறாக 24 வது படல கருத்து சுருக்கமாகும் !!

1. எந்த அபிஷேக கிரியையால் பூமியில் தேசிகனாக ஆகிறானோ. அந்த அபிஷேக விதியை கூறுகிறேன். அந்த தேசிகன் ஆர்யா வர்தோத்பவன். ஸ்ரீமான் ஸர்வலக்ஷணம் உடையவனாக வேண்டும் ஆகிறான்.

2. எங்க ஸதாசார ப்ராம்மணர்கள், யதிகள், தபோதனர்கள், தேவர்கள், இருக்கின்றார்களோ வேதங்களின் இருக்கின்றனவோ அந்த தேசம் ஆர்யாவர்த்தம் எனப்படும்.

3. இந்த பிரதேசமானது விந்தியகடலை மட்டும் மத்தியாக உள்ளதாக கூறவில்லை. பிரஸங்கமாக க என்ற எழுத்தை உடைய எட்டுதேசமும் ஆர்யாவர்த்தம் எனப்படுகிறது.

4. கர்நாடகம், கலிங்கம், கச்சத்தீவு, காஷ்மீர், கொங்கணம், கர்ஹாடம் (கோவா) குக்குடம், கங்கதேசம் என்று கூறப்பட்டுள்ளது.

5. பிரதிஷ்டா ஸ்தாபனாதிகளில் ஆதிசைவ குலஜாதிஸ்தர்கள் ச்ரேஷ்டர்கள், ப்ராம்மணாதி நான்கு வர்ணத்தவர்கள் ஸ்வகர்மானுஷ்டான யோக்யர்கள்.

6. எல்லா மனிதர்களின் தீøக்ஷ, பிரதிஷ்டை, உத்ஸவம், ஸ்நபனம், பிராயச்சித்தம், அபிஷேகம்.

7. வியாக்யானம் ஆகிய கர்மாக்களிலும் ஆத்மார்த்த பூஜை ஸர்வ தேவார்சனமான பரார்த்த பூஜைகளில் ஆதிசைவகுருவே சிறந்தவராவர்.

8. பிராம்மணாதி மூன்று வர்ணத்தவர்கள் தீøக்ஷ, ஸ்தாபனங்களில் பிராம்மணர், க்ஷத்ரியர்களுக்கும், க்ஷத்ரியர் சூத்ர வைச்யர்களுக்கும்

9. வைச்யன் சூத்ரனுக்கும், ஸ்வ ஜாதிகளுக்கும் தீøக்ஷயில் யோக்யனாகிறான். ஆத்மார்த்த இஷ்டமான சலலிங்க பிரதிஷ்டையில் பிராம்மணாதி மூவரும் யோக்யர்கள்.

10. சூத்ரனும் சூத்ர தீøக்ஷயிலும் ஆத்மார்த்த சலலிங்க பிரதிஷ்டையிலும் யோக்யனாவான் நைஷ்டிகன் பாணலிங்கமும் க்ஷணிகலிங்கமும் ஸ்தாபிக்கலாம்.

11. ஆசார்யன் கோளகன் கருணை உள்ளவனாயும் பரிவர்த்தம் செய்பவனாயும் இருக்கிறான். அவ்வாறே பாரவேத்தா (அண்ணனுக்கு முன் தான் விவாஹம் செய்து கொள்ளுபவன்) சம்பளம் பெற்று பூஜை செய்பவன். மறுபிறப்புள்ளவன்.

12. பக்ஷ்ய நிஷித்தத்தை பக்ஷிப்பவன், குண்டம், பஸ்மஅங்குரம் கத்தியை வைத்திருப்பவன் கருப்பு பல்லை உடையவன், ஆரூடன், தள்ளப்பட்டவன்.

13. சோம்பேறி வ்ருஷலன், வ்ராத்யன், வேச்யாபதி, அசத்து, சஸ்திரத்தை உடையவன் நபும்ஸகன், வ்யாதிஸ்கன், விகார நகமுடையவன்

14. துக்கமுடையவன், பிறர்மனைவியையுடையவன், வ்ருஷலீபதி, சித்திரகாரன், பாடுபவன், நாட்டியமாடுபவன் ஆகியவர்களை விட்டுவிட வேண்டும்.

15. வேறு தேசமுடையவன், அசுத்த புத்தி, தாந்திரிகள், பிறரை குறை கூறுபவன், பலநோயை உடையவன்.

16. பிறப்பு தீட்டையுடையவன், காமுகன், வைத்யன், குதர்கம் பேசுபவன், கெட்ட வார்த்தை பேசுபவன், பவுத்தாதி சாஸ்திர விருப்பமுடையவன், சன்யாஸி, விரதத்திலுள்ளவன்,

17. சபலபுத்தியையுடையவன், முட்டாளாக சஞ்சரிப்பவன், கூலிவாங்கி பிழைப்பவன் கப்பம் வாங்குதலில் விருப்பமுடையவன், நியாஸம், வைசேஷிகம்

18. ஸாங்கயம், பலவித பேத மாயாவாதம், ஆர்ஹதமதம், பவுத்தமதம், லோகாயத சாஸ்திரம், மீமாம்ஸை

19. மற்ற குதர்க மார்க்கங்கள், காபால மதம், பாஞ்சராத்ரம், ஸோம சித்தாந்தம், பூர்வாம்னாயம் பச்சிமாம்னாயம்

20. பைரவம், கவுலசாஸ்திரம் மற்ற அனாதரவான சாஸ்திரங்களில் ஈடுபாடுடையவன் சித்தபிரமேய ஜாலத்தில் நிரந்தரமான விருப்பமுடையவன்

21. காவ்ய நாடகத்தில் ஈடுபாடுள்ளவன் பரதநாட்யத்தில் விருப்பமுடையவன், காமசாஸ்திரத்தில் பயிற்சியுள்ளவன் பதவியை பறிப்பவன்

22. ஜ்யோதிடன், புராண ஹிதமான மனதை உடையவன் ஆகிய மேற்கூறிய விஷய புருஷார்த்தங்களில் ஈடுபாடுடையவனுக்கு தீக்ஷõ செய்விக்கும் முயற்சியை விட்டுவிட வேண்டும்.

23. காமிகாதி சிவக்ஞானத்தையும் வேதார்த்த ஞானத்தையும் அறியாமையால் யா ர் ஸமமாக எண்ணுகிறானோ அவனை பிரயத்னத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

24. சிவனால் கூறப்பட்ட ஸம்சித்த ப்ரமேயமான சைவசிந்தாந்த ஸம்சித்த ஞான, யோக கிரியை, சர்யைகளில்

25. எப்பொழுதும் விசாரம் செய்து, சிவாச்சார்யரை விட்டு வேறு இடங்களில் நியாஸாதிகளை செய்யும் துர்மதிஸ்தனை வர்ஜிக்க வேண்டும்.

26. நியாயமின்றி சிவத்ரவ்யாபஹாரியையும் கொலையாளி போலுள்ளவனையும் அல்ப வித்யா ஞானமுடையவனையும், பொறாமையுடைய வனையும். அழகில்லாதவனையும் விவர்ஜிக்க வேண்டும்.

27. ஜ்யோதிஷன், நாவிதன், சிந்திக்கும் அறிவு இல்லாதவன், ஸமானகோத்ர சம்பந்தமுடைய வனையும், பூ விழுந்த கண்ணை உடையவனையும் வர்ஜிக்க வேண்டும்.

28. மேற்கூறிய சுபலக்ஷணம் உடையவனை பகலில் நல்ல லக்ன உதயத்தில் அங்குரார்ப்பண பூர்வமாக ஆசார்யாபிஷேகம் செய்ய வேண்டும்.

29. கிழக்கு ஈசான்யம், மேற்கு, வடக்கு ஆகிய திக்கில் விதானத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில்

30. பாதிமுழ அளவுள்ள உயரமும், சதுரச்ரமாகவும் அர்த்தஹஸ்த சுற்றளவுள்ள இரண்டு வேதிகையும், நான்கு முழ விஸ்தாரமும் அதற்கு வடக்காக

31. நான்கு திக்கிலும், ஸ்வஸ்திக சின்னமும் அழகாக அமைத்து தீபமும் ஸ்தாபித்து பூமிபரிக்ரஹம் செய்து மண்டபத்தில் சிவனை பூஜித்து அக்னியிலும் பூஜிக்க வேண்டும்.

32. தீக்ஷõ ஸம்ஸ்காரத்தால் செய்யப்பட்ட க்ரியைகளை உடைய அந்தர்பலி பஹிர்பலி கொடுத்து மேற்படி இந்த விதானத்தை ஆச்ரயிக்க வேண்டும்.

33. மூஞ்சிப்பில் அன்னம், மண், விபூதி, தூர்வை கோமய கோளகம், வெண்கடுகு தயிர் இவைகளை நிமஜ்ஜனம் செய்து

34. ஒன்பது அல்லது ஐந்து தான்யங்களின் மேல் கடத்தையோ, கலசத்தையோ கூர்ச்சம் தேங்காய்

35. நூல் சுற்றி, தீர்த்தம் நிரப்பி சந்தனம் ரத்னம், ஸ்வர்ணம் இவைகளோடு கூடியதும் மாவிலை அரசிலை பலாச பத்ரத்துடனும் மாதுளம் பழத்துடன் கூடியதாக வைத்து

36. ஈசான மந்திரத்தாலும் ஒன்பது ஐந்து பவித்ரங்களால் வித்யேசர்களையும் பஞ்சபக்ஷத்தில் நிவ்ருத்யாதி கலைகளாலும் அபிமந்திரிக்க வேண்டும்.

37. ஸ்நபன விதிப்படி நூற்றி எட்டு கலசங்களை பூஜித்தோ அல்லது ஒரு கடத்தை சிவார்ச்சனமாக பூஜித்து

38. தட்சிண வேதிகையில் ஸ்தாபித்து வடக்கு வேதிகை சமீபம் சிசுவை ஸ்தாபிக்க வேண்டும். பத்ரபீடத்தில் சாங்கமாக சிவனை அதிஷ்டிதமாக

39. ஆஸனத்துடன் விரிவாக நன்கு பூஜித்து ஜலத்தால் சுத்தி செய்யப்பட்ட வர்ணமிட்ட சராவங்களால்

40. சுத்த நீரால் ஸ்நாபித்து தேசாந்தரத்திலிருந்து தயாரித்த நூல்கள் உத்தரீயம், மாலை (புஷ்பஹாரம்)

41. வெள்ள சந்தனம் பூசிய சரீரத்தையும், பஸ்மோத்தூளமாக அணிந்து இருப்பவனுமான சிஷ்யனை தென்பாகமுள்ள பத்ரபீடத்தில் அமர்த்த வேண்டும்.

42. கிழக்கு முகமாக (நின்று) இருந்து கந்த புஷ்பாதிகளால் பூஜிக்க வேண்டும். நல்ல திரிகளோடு கூடிய தான ஜ்வாலாமயமான தீபங்களால் ஆராதனை செய்து

43. பிறகு சிஷ்யனுக்கு தலைப்பாகை முதலியவைகளை கொடுக்க வேண்டும், கர்தரிக்கோல் என்ற கருவி, சிறிய மணி, ஸ்ருக்ஸ்ருவம்

44. தர்ப்பை புஸ்தகம் அக்ஷ (மாலை) ஸூத்ரம், கிரீடம், பாதுகை, சாமரம், குடை, யானை, பல்லக்கு முதலிய

45. ராஜாங்க சின்னத்தையும், உரியகாலத்தில் ச்ரத்தையுடன் கொடுக்க வேண்டும். தேசிகன் ஆரம்ப காலம் முதல் ச்ரத்தையோடும் ஆக்ஞையோடும்

46. தீøக்ஷ வ்யாக்யானங்களை அறிந்து பரீக்ஷித்து முறைப்படி செய்ய வேண்டும். அவ்வாறே தேவதேவனுக்கும் தேசிகனுக்கும் என்னால் செய்யப்பட்டதும்

47. உன்னுடைய அதிகாரத்தால் அவிக்னமான அதிகாரத்தை கொடு என்று விக்ஞாபித்து கொண்டு பிறகு குண்டசமீபம் சென்று

48. நிவ்ருத்யாதி கலைகளுக்கு தனித்தனியே ஆஹுதி செய்ய வேண்டும். அந்தந்த மந்த்ராஹுதியும் செய்து பூர்ணாஹுதி முடித்து சிஷ்யனின் வலக்கையில்

49. எரிந்த தர்ப்பையால் பஞ்சப்ரம்மஷடங்க மந்திரங்களால் கட்டைவிரல் முதலான விரல்களில் அடையாளம் செய்ய வேண்டும். சிவஹஸ்தம் ஸங்கல்பித்து தன் அதிகாரத்தை ஸமர்ப்பிக்க வேண்டும்.

50. அதற்காக விதிப்படி பிராயச்சித்தம் செய்ய வேண்டும். சிவாஸநம். அங்கமந்திரங்களாலும் தேவ நாமங்களாலும் பூஜித்து

51. அங்க மந்திரங்களால் தசாஹுதியும் சிவ மந்திரத்தால் தசாஹுதியும், சிவமந்திர பூர்ணஹுதி செய்து முடிவில் பகவானிடத்தில் மன்னித்தருளும்படி செய்ய வேண்டும்.

52. இந்த பிராகாரமாக சாதகனை அபிஷிக்க வேண்டும். ஸாத்ய மந்திரத்துடன் கூடிய கடங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

53. தீக்ஷிதன் புத்ரகனாகவும் ஸம்ஸ்ரிக்கப்பட்டவன் ஸமயீயாகவும், ஸாமான்ய ஸமயீ மாஹேச்வரன் என்றும் கூறப்படுகிறான்.

54. எவன் ஜாதி உத்தாரண விஹீநநாக இருக்கிறானோ. அவன் ஸாமான்யஸமயீயாவான் அதிலும் விசேஷமாக சாக்ஷúஷ தீøக்ஷயுடன் யார் இருக்கிறானோ

55. அந்த சாக்ஷúஷ தீøக்ஷகளால் தீட்சிக்கப்பட்டவன் பரிசாரகன் என்ற பெயருடையவனாகிறான். லிங்கார்ச்சனைக்கு யோக்யமில்லாமல் இருக்கிறார்கள். தீக்ஷõகர்மாவில் ஈடுபடுவது கூறவேண்டியதில்லை.

56. சாபானுக்ரஹ கர்த்தாவாயிருந்தால் குரு முதலானவர்களையும் தீக்ஷிக்கலாம். சிவத்விஜ குல ஜாதீயர்களாயிருப்பின் மாஹேச்வரர்கள் எனப்படுவர்.

57. ஸ்ருஷ்டிக்கு முன்பு சிவனால் எல்லோரும் தீட்சிக்க பட்டவராகிறார்கள். சிவத்விஜர்களுக்கு என் பூஜைக்காக சுத்திக்காக தீøக்ஷ கூறப்பட்டுள்ளது.

58. øக்ஷ செய்தும் சரீரபந்த மாயிருப்பின் பிராயசித்தம் அனுஷ்டிக்கவும் யார் பலவிதத்தில் தீட்சிக்கபடுகிறானோ அவன் சீக்ரம் சிவனை அடைகிறான்.

59. பவுதீகன், பிரம்மச்சாரி, தேசிகன், கிரஹஸ்தர்களுக்கும் நைஷ்டிகாசாரத்தில் நைஷ்டிகனும் புக்தி முக்தியில் வரிசைக்ரமமாக இருக்கிறார்கள்.

60. புத்தி, முக்தி பிரஸித்திக்காக கிருகஸ்தனை குருவாக கூறுகிறார். எல்லோரையும் அனுக்ரஹிப்பவர் ஸாந்தானிக குருவாகிறார்.

61. அனுலோமக்ரமமாக தீøக்ஷ செய்யவும். பிரதிலோமமாக, தீøக்ஷ செய்யலாகாது. பத்னி ஸஹிதமாயும் நல்ல கேசமுடையவனையும் ஜடை, ருத்ராக்ஷம், தண்டயுதமாக வேண்டும்

62. கவுபீநம், ஒட்யானத்தையும் பரித்யக்தமாக யார் இருக்கிறானோ, அவன் கிருஹஸ்தனாகிறான். சிகைகள் இன்றியும் ஜடையுடன் கூடியதாகவுமோ

63. விரதராயும் பத்னீ ரஹிதராயும், பிக்ஷõன்னம் புசிப்பவராயும் இருக்கவேண்டும். அவன் விரதியாவான் விரதத்தை அனுஷ்டிக்க இயலாதவன் முறைப்படி விரதத்தை அனுஷ்டித்து

64. பிறகு விவாஹம் முடித்தவனாக இருப்பவன் விரதார்ப்பகன் எனப்படுகிறான். ஸ்ருஷ்டி முடிவு காலத்தில் எந்த கவுசிகாதிகள் இவனால் தீட்சிக்க பெற்றவர்களாக ஆனோர்களோ

65. (சிவனால்) அந்த குலோத்பவராக ஆகிறார்களோ, அவர்கள் சைவர்களாயும், ஸாந்தாநிகர்களாயும் ஆதிசைவர்களாயும் ஸர்வானுக்ரஹர்களாயும் இருக்கிறார்கள் என அறிய வேண்டும்.

66. அவர்களில் வர்ணாசார விரதர்கள், வர்ணாசார ரஹிதர்கள் என்று இருவகைப்படும். மூன்று பக்ஷம் கீழே படுத்து இருப்பவராயும், இரவில் சருவை புசிப்பவராயும்

67. மவுநியாகவும் மூன்றுகால ஸ்நானம் செய்பவராயும், சிவாக்னி குரு பூஜகராயும் தன் சக்தியால் ஸமூர்த்தியுடன் கூடியதாக உள்ள சிவனைஸாங்கமாக (பூஜித்து)

68. விரதங்களில் உத்தமமாக இருப்பது ஆசார்ய விரதமாகும். ஆசார்யன், ஸாதகன் புத்ரகன் ஸமயீ என ஆசார்யன் வகுக்கப்படுகிறான்.

69. நித்யம் லிங்காதிகளை பூஜிப்பதும் நித்யம், நைமித்திகத்தில் லிங்கபூஜைகள் கூறவில்லை. பிரதிதினமும் நன்கு அனுஷ்டிக்கப்படுவது நித்யமாகும்.

70. ஸ்நபனம், உத்ஸவம் சாந்த்யாதி கர்மா நைமித்திகமாகும். பிராயச்சித்தத்திலும் தன்நித்ய அனுஷ்டானத்திலும் நைமித்திகத்திலும் அதிகாரியாகிறான்.

71. ஆத்மார்த்த நைமித்தகத்தில் புத்ரகன் யோக்யனாகிறான். மற்ற கிரியைகளில் தகுதி இல்லாதவனாகிறான். ஆசார்யன், ஸாந்தானிகனும் நைமித்திகத்தில் யோக்யனாகிறான்.

72. ஆத்மார்த்திலும், பரார்த்திலும் ஸ்தாபனாதிகள் இல்லாத கார்யங்களிலும், ஆசார்ய அதிகாரமுள்ள எல்லா ஸ்தாபனாதி கிரியைகளிலும்

73. அதற்கென்று அங்கமான ஹோம கார்யங்களில் மேற்கூறிய இருவர் சாந்தாநிகர்கள் தேசிகாக்ஞையால் யோக்யனாக ஆகிறார்கள். ஸ்தாபனாதி அங்க பூதமான மங்களாங்குராதிகளில்

74. தேசிகாக்ஞை இருப்பின் அந்த இருவருக்கும் அதிகாரமுள்ளது என்கிறார். ஆசார்யன் எல்லா கிரியைக்கும் யோக்யராகிறார். ஸாந்தானிகளும் யோக்யனாகிறான்.

75. சாதகனும் அவ்வாறே இருந்து எல்லாகர்மாக்களிலும் யோக்யனாகிறார். மஹாசைவர்கள் தீக்ஷிதர்கள் நித்யகர்ம யோக்யராகிறார்கள்.

76. மஹாசைவாதிகளால் நைமித்திகம் செய்யப்பட்டால் தோஷ கல்பிதமாகும். லக்ஷ ஸ்லோகத்தை படித்தவனாயும் போகத்தையும் மோக்ஷத்தையும் கொடுக்க கூடியவரே குரு ச்ரேஷ்டர் ஆவார்.

77. ஐம்பதாயிரம் ஸ்லோகத்தை படித்தவன் மத்யமரென்றும் இருபத்தி ஐந்தாயிரம் ஸ்லோகத்தை படித்தவன் அதமம் என்று கூறப்பட்டு உள்ளது. ஸம்ஹிதா பாரகராகவோ லக்ஷõத்யாயி உபதேசகராகவோ இருக்கலாம்.

78. ஸம்ஹிதையானது நான்கு பாதத்தை உடைய காமிகம் முதலான க்ரந்தங்களாகும். சைவம் நான்கு வகைப்படும். அவை சைவம், பாசுபதம்.

79. சோம சித்தாந்தம், லாகுலம் என நான்கு வகைப்படும். இது பரமேஸ்வரனுடைய நான்கு முகங்களான தத்புருஷாதி முகத்திலிருந்து உண்டானதாகும்.

80. அந்த நான்கு பேதத்தில் ஒன்றுக்கொன்று முதன்மையான உயர்வுடையதாகும் ஒவ்வொன்றும் மூன்றுவிதமாகும்.

81. பலசித்தாந்தங்களில் சைவ சித்தாந்தம் என்கிற சித்தாந்தம் எல்லாவற்றிலும் உத்தமோத்தமமானதாகும்.

82. ஸித்தாந்தமென்பது மந்திர தந்திரமாகும். அதிமார்க்கம் அதமமானதாகும். அத்யாத்மம் மேற் சொன்னதிலிருந்து நீசம், அதிலிருந்து வைதிகமும் ஆகும்.

83. வைதீகத்திலிருந்து லவுகிதம் ஹீநமாகும். இவைகளை கூறியவர் பிரம்மாதி பஞ்சதேவதைகள் ஆகும். அந்த லவுகிகாதிகளின் பேதம் கூறப்படுகிறது.

84. ஸத்யோஜாதி மந்திரத்திலிருந்து உண்டானது அகிலார்த்தமான பிரம்மா உண்டானார். அந்த எல்லா பொருளையும் அறிந்த பிரம்மா ஞானத்திலிருந்து லவுகிக சாஸ்திரமானது, மனுஷ்யலோகத்தில் அவதரிக்கப்பட்டது.

85. சப்த சாஸ்திரம், அலங்கார சாஸ்திரம் நிருக்தம் சந்தஸ், கவுடில்யம், பரத சாஸ்திரம் ஜ்யோதிஷ சாஸ்திரம், வாத்ஸ்யாயனம் முதலியவைகள்

86. ஆயுள் சாஸ்திரம், தனுஸ்சாஸ்திரம், வ்யவசாய சாஸ்திரம், லோகாயதம், ஸாங்க்யம் ஆர்ஹதமதம்,

87. மீமாம்ஸை, தண்டநீதி, வார்த்தாத்யம், லவுகிக மதம், வாமதேவ மந்திரோத்பவமானதாகும். விஷ்ணு இரண்டாவது காரணேசர் ஆவர்.

88. அவரால் வைதிகம் கூறப்பட்டு உள்ளது. அவை அஷ்டாதச புராணம், தர்மசாஸ்திரம், வேதாந்தம், பாஞ்சராத்ரம், பவுத்தம் ஆகியவைகளாகும்.

89. அகோரமந்திரத்திலிருந்து ருத்ரன் அவதரித்து அத்யாத்ம சாஸ்திரத்தை இயற்றினார். நியாயம் வைசேஷிகம், ஸாங்க்யம் ஸேஸ்வரம் இவற்றை இயற்றினார்.

90. தத்புருஷ மந்திரத்திலிருந்து ஈச்வரன் உற்பத்தியாகி அதிமார்க்கத்தை இயற்றினார். பஞ்சார்த்தம், லாகுலம், பாசுபதம், ஆகியவையாகும்.

91. பகவான் சதாசிவர் மந்திர தந்திர பாலனம் செய்கிறார். ரிக்வேதம், யஜூர்வேதம், சாமவேதம், அதர்வண வேதங்கள் தத்புருஷாதி முகத்திலிருந்து உற்பத்தியானதாகும்.

92. பச்சிமமுக சாஸ்திரத்திலிருந்து வாமமுக சாஸ்திரமும், வாமமுகசாஸ்திரத்தில் இருந்து தட்சிணமுக சாஸ்திரமும், தட்சிணமுக சாஸ்திரத்திலிருந்து கவுலகம் அதிலிருந்து மஹா கவுலம் ச்ரேஷ்டமாகும்.

93. அதில்இருந்து பூர்வமுக சாஸ்திரம் சிரேஷ்டம், அதிலிருந்து சித்தாந்தம் உத்தமம், சித்தாந்தத்திலிருந்து உன்னதமான ஞானம் சாஸ்திரத்தில் நிச்சயமாக இல்லை.

94. மற்ற தந்த்ர சாஸ்திரங்களில் யார் முக்தர்களோ, ஸிந்தாந்தத்தில் பசுக்களாகிறார். வேதசாரமே ஸிந்தாந்தமாகும். மற்ற வேதங்கள் தள்ளப்பட்டதாகும்.

95. ஸித்தாந்த விஹிதமான ஆசாரம் வைதிகா சாரமாகும். கர்ப்பாதானாதிகர்மா, சிராத்தங்கள் செய்வித்தல் வரையிலுள்ள கர்மாக்கள்

96. வைதீக கர்மப்படி ஆசரிக்கவும் (அல்லது) சைவானுஷ்டானப்படியாவது ஆசரிக்க வேண்டும். அவனுக்கு ஜாதகர்மாதி கிரியையும் தீøக்ஷயும் செய்யப்பட வேண்டும்.

97. சமய தீøக்ஷயோடு கூடின ஸ்த்ரீயாயிருப்பின் தீøக்ஷயுடன் கூடிய புருஷனோடு விவஹாமாயிருந்தால் தீøக்ஷயுடன் கர்பாதான கிரியை செய்யப்படவேண்டும்.

98. அவ்வாறே பும்ஸவனாதி கிரியையும் சைவ முறைப்படி செய்ய வேண்டும். அவன் புத்ரனுக்கு ஜாககர் மாதி கிரியை செய்யப்படவேண்டும்.

99. புருஷார்த்த பிரஸித்திக்காக அவனுக்கும் கிரியைகள் செய்யப்படவேண்டும். வைதிகாதிகளின் ஆரம்பத்திலோ முடிவிலோ லவுகிகாதிகளை செய்ய வேண்டும்.

100. பார்யை தீøக்ஷவிஹீநமாயிருப்பின் அவளுக்கும் புத்திரனுக்கும் பர்த்தா தீக்ஷிதனாக இருப்பின் வைதீகாதி கிரியைகளை அனுஷ்டிக்க வேண்டும்.

101. கூறப்பட்டுள்ள அனுலோம ஜாதிகளுக்கு வைதீக கிரியை இஷ்டமில்லை. நல்லபிறப்புடையவனையும் ஜ்யோதிஷனையும் விட்டுவிட்டு வைதீக கிரியைசெய்யவேண்டும்.

102. எல்லா கர்மாக்களுடனும் சைவத்தில் கேவலசைவியாகும், ஸ்ருதி ஸ்ம்ருதிகளை முதற்கொண்டு எந்த அனுஷ்டானங்களை உண்டோ அவையாவன

103. அவச்யமானவைகளில் சவுசம் ஸ்நானம் ஆசமனம் ஸந்தியாவந்தனம், தர்ப்பணம், ஹோம கர்மா இவைகளிலும்

104. கர்ப்பா தானங்களை முதற்கொண்டு சரீரதஹணம், ஸ்ராத்த கர்மா, அஷ்டகாகரணம், நித்ய நைமித்திகைகளிலும்

105. வேதாத்யயன ஸம்ஸ்காரம் சோமயாகம் இவைகளில் த்விஜர்களுக்கு எது விதிக்கப்பட்டு உள்ளதோ அந்த வேதாத்யயனாதிகளிலும்

106. அந்த எல்லா கர்மாவும் வைதீக கர்மப்படி செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். அனுஷ்டானம் அனுஷ்டிக்க வேண்டும். சைவகர்ம விரோதியாக எந்த கர்மாவையும் அதற்கு

107. மாறுதலாக இருப்பின் த்யாஜ்யம் செய்யவும், சைவானுஷ்டானத்தை பரித்யாகம் செய்ய கூடாது. சைவத்துக்கு விரோதமில்லாத வைதிககார்ய மெல்லாம் அனுஷ்டிக்கலாம்.

108. சைவம் வைதிகமாகவும், வைதிகம் சைவமாகவும் ஆகும். வைதீகத்திலிருந்து வெளிப்பட்டது சைவமில்லை. சைவத்திலிருந்தே சைவம் உண்டானதாகும்.

109. அவ்வாறே வைதீகத்திலிருந்து சிரேஷ்டம், சைவம், சைவத்திலிருந்து உத்தமம் எதுவும் இல்லை. காமிகாதி கிரந்தங்கள் சித்தாந்தமாகும் அதிலிருந்து மிக உயர்ந்தது ஏதுமில்லை.

110. சைவம் மூல பூதமாகும். சதுர்வேதம் அதிலிருந்து உண்டானவைகளாகும். அவ்வாறே வேத சாரமென்ற வாக்யத்தால் வைதிகம் எனப்படுகிறது.

111. எல்லா இடத்திலும் அர்த்தத்துடன் கூடியதான சைவசாஸ்திரம் கூறப்பட்டுள்ளது. எல்லா காமிகாதிகளிலும் சிவதேஹத்வமாக கூறப்படுகிறது.

112. அந்த சிவதேஹம் இரு விதங்களாகும். ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம் எனப்படும் காமிகாதி வாதுளம் வரையில் வாதுளம் முதல் காமிகம் வரையிலும் ஆகி கூறப்பட்டுள்ளது.

113. காமிகம் மேல் மகுடமும் யோகஜாகமம் தத்புருஷ வடிவ மகுடமும், சிந்த்யாகமம் அகோர மகுடம் காரணாகமம் வாமதேவ முக மகுடம்

114. அஜிதாகமம் ஸத்யோஜாத முகத்தின் மகுடமும் ஆகும். தீப்தாகமம் அதேபோல் ஈசான வக்த்ரம், சூக்ஷ்மாகமம் தத்புருஷ முகமும் ஸஹஸ்ராகமம் தட்சிணமுகமும் ஸஹஸ்ராகமம் தட்சிண முகமும்

115. அம்சுமானாகமம், வாமதேவமுகமும், சுப்ரபேதாகமம் ஸத்யோஜாத முகமும் ஆகிறது. மேலும் விஜயாகமம் காதாகவும், நிச்வாஸாகமம் கழுத்து பாகமாகவும்

116. ஸ்வாயம்புவாகமம் ஹ்ருதயம், அனலாகமம், நாபியாகும், வீராகமம் இடுப்பு பிரேதசமாகும், ரவுரவாகமம் ப்ருஷ்டபாகமாகும்.

117. மகுடாகமம் வலது துடை பிரதேசம், விமலாகமம் இடது துடை, சந்திரக்ஞானாகமம் இடது துடையின் நுனிபாகம் பிம்பாகம் வலது துடையின் நுனிபாகமாகும்.

118. ப்ரோத்கீதாகமம் வலது ஜானுபாகம் லலிதாகமம் இடது ஜானுபாகம் சித்தாகமம் வலது முழந்தாளாகும், சந்தானாகமம் இடதுமுழந்தாளாகும்.

119. வலது முழந்தாளின் நுனிபாகம் சார்வோக்தாகமம், இடது முழந்தாளின் நுனிபாகம் பாரமேஸ்வராகமம், கிரணம் வலது பாத தளபாகம், வாதுளாகமம், வாகபாத தளமாகும்.

120. ஸ்ருஷ்டி பேதமாக சிவன் கூறப்பட்டுள்ளது. ஸம்ஹார பேதமாக வேறுபட்டதாக கூறப்பட்டுள்ளது. ரிஷிகள் கூறினார்கள். தந்த்ராவதாரபடலத்தில் முன்பு காமிகம் பாதயுக்மம்

121. என்று கூறியதெல்லாம் பரஸ்பர விரோதமாக உள்ளதே! என்று கேட்கிறார்கள் ஈச்வரன் கூறுகிறார்: உங்களுக்காக அவதரிக்கப்பட்டவைகளை பலவிதமாக கூறப்பட்டுள்ளது.

122. எனக்கு எல்லா இடத்திலும் மகுடம், நேத்ரம் அவ்வாறே பாதம் ஹஸ்தம் த்யான முறைப்படியாகும்.

123. ஸ்ருஷ்டி ஸம்ஹாரமார்கமாக என் தேஹம் விபேதாக கூறப்படுகிறது. போக மோக்ஷ பிரசித்தக்காக எனக்கு ஞான தேஹமாக இருக்கிறது.

124. உருவமில்லாததும், ஞானமும், ஸங்கரமானதும் அதை உபாசிப்பதில் இருந்து பரஸ்பர விரோதமென்று மதியீனர்களால் கூறப்படுகிறது.

125. எந்த ஈச்வர வாக்ய முண்டோ அது பூஜித வாக்யமாக உத்தமர்களால் எண்ணப்படுவதாகும். புருஷர்கள், ரிஷிகள் இவர்களின் வாக்யம் தெய்வீக வார்த்தையற்றதாகும்.

126. தேவர்களால் பிரம்மவாக்யம் பாதிக்கப்படுவதில்லை. பிரம்மாவாக்யம் விஷ்ணுவாக்யத்தால் பாதிக்கப்படுவதில்லை. விஷ்ணுவால் சிவவாக்யம் பாதிக்கப்படுவதில்லை.

127. எல்லாவற்றிலும் மேன்மேலும் விசேஷமாக கூறப்பட்டுள்ளது. காமிகம் முதல் அஜிதாகமம் வரை ஈசான வக்த்ரத்திலிருந்து ஏற்பட்டவைகளாகும்.

128. தீப்தாகமம் முதல் சுப்ரபேதாகமம் வரையிலுள்ள ஆகமங்கள் தத்புருஷமுகத்திலிருந்து உண்டானவைகளாகும். விஜயாகமத்திலிருந்து வீரதந்தரம் வரை ஐந்தும் அகோர வக்த்ரத்திலிருந்து உண்டானதாகும்.

129. ரவுவத்திலிருந்து முகபிம் பாகமம் வரை வாமதேவமுகோத்பவமாகும். பிரோத்கீதம் முதல் எட்டு ஆகமம் ஸத்ய வக்த்ரத்திலிருந்து உண்டானதாகும்.

130. தந்த்ராவதார படலத்தில் ஸத்யாதி சப்தங்களால் ஈசானதிகளாக அறிய வேண்டும். இருபத்திஎட்டு ஆகம தந்திரம், உபாகமத்தையும் எவன் அறிகிறானோ

131. அவரே குருவாகவும், சிவனாகவும், ஆகிறார். அவரை முயற்சியோடு அறியவும் மற்ற குருவால் ஆரம்பமானதாயிருப்பினும் அவரே அதிகார தன்மையை அடைகிறார்.

132. விசிஷ்டகுருவால் ஆரம்பிக்கப்பட்ட கார்யத்தில் ஹீநருக்கு அதிகாரித்வமில்லை. ஹீநரால் ஆரம்பிக்கப்பட்ட கர்மாவில் விசிஷ்டனுக்கு தான் அதிகாரமாகும் என்கிறார்.

133. விசிஷ்டர் மரணாதி ஸம்பவத்தில் வேறான குரு பிரவேசிக்கலாம். விசிஷ்டர் இருக்கும் பக்ஷத்தில் பலாத்காரமாக அறியாமையால் பிறரிடம் பிரவேசிக்கக் கூடாது.

134. அவ்வாறு பிரவேசித்தால் பெரிய குற்றமும் அவனுக்கு பலவித சேர்க்கைகளும், குருடு ஊமைத்தன்மையும் ஏற்படும். அதனால் ராஜாதோஷ வானாகவும் ராஜ்யத்திற்கு பயமும் ஏற்படும்.

135. கிரியை கர்த்தாவிற்கும், செய்விப்பவனுக்கும், கிராமத்திற்கும் தோஷமேற்படும் லோக பிரஸித்திக்கும் ஞானத்திற்காக குருவிடம் மந்திரம் ஸ்வீகரித்து

136. திரவ்யத்தையும், நல்ல சுகம் எல்லா உலகத்திற்கு சமமான புகழ் இவைகளை செய்கிற ராஜாவானவன், உத்தமோத்தமான ராஜ்யதானம் செய்ய வேண்டும்.

137. சிவன் சொத்தை (பணம்) எவன் எடுக்கிறானோ, அவன் பாபீ கெட்ட புத்தியுடையவன், ஈனஜாதியுடையவன் எல்லோராலும் தள்ளப்பட்டவன் என அறிய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் ஆசார்யாபிஷேக முறையாகிற இருபத்தி நான்காவது படலமாகும்.

24.அ. ஞான தீக்ஷõமுறை

1. அந்தணர்களே! ஞானதீøக்ஷயை கூறுகிறேன். நல்லகிழமை, நல்லதினம், பக்ஷம், நல்ல முஹூர்த்தத்தில் விசேஷமாக

2. தனிமையாக, ஜனங்களில்லா இடத்தில், நடு நிசி ஆரம்பத்தில், நல்ல ஆசிரியன், நல்ல சீடர்களுக்கு விசேஷமாக அறிவூட்ட வேண்டும். (உபதேசிக்கவும்)

3. சிவன் கோயில், குருவின் இருப்பிடம், சக்திபீடம், மடம், வீடு, தூய்மையான இடம், முதலிய இடங்களில், நன்கு அமர்ந்த கோலமாகவும், ஐந்து கோத்ரத்திலுதித்தவராயும்:

4. இருந்துகொண்டு தர்பாஸனம், புலித்தோல், கூர்மாஸனத்தில், பீட மத்தியிலோ ஸத்குரு வாஸஸ் தலத்தில் க்ஞானத்தை நினைத்து வஸிக்க வேண்டும்.

5. ஸ்நான உபசாரங்கள், பட்டு, ஆபரணங்கள், சந்தனபுஷ்பமிவைகளால் யோகபீடமத்தியில் பூஜித்து

6. பாயஸம், அப்பம், தாம்பூலம் இவைகளை நிவேதித்து, குருபாதங்களை, பதினாறு விதமான உபசாரங்களால் பூஜிக்க வேண்டும்.

7. உயர்ந்த ஆசிரியர் விசேஷமாக க்ஞானதீøக்ஷயை செய்ய வேண்டும். சரீரம், பொருள், ப்ராணன் இவற்றை ஸத்குருவிடம் ஸமர்பித்து விட வேண்டும்.

8. வெட்கமின்றி ஸாஷ்டாங்கமாக குருவின் ஸன்னதியில் நமஸ்கரிக்கவும் நல்ல சீடனுக்கு விசேஷஞானம் போதிக்க வேண்டும்.

9. சந்தனம், புஷ்பத்துடன் கூடிய கையை சிஷ்யனின் தலையில் ஸ்தாபித்து சிவகரார்பணம் செய்க. சிஷ்யனால் பூஜிக்கப்பட்ட பாதத்தை சிஷ்யனின் தலையின் மத்தியில் ஸ்தாபிக்க வேண்டும்.

10. அதன் பிறகு ஸத்பாவ க்ஞானத்தை சிஷ்யனுக்கு போதிக்க வேண்டும். முதலில் தத்வரூபம் இரண்டு தத்வதர்சனம்.

11. மூன்றாவது தத்வசுத்தி, நான்காவது ஆத்ம லக்ஷணம், ஐந்தாவது ஆத்மதர்சனம் ஆறாவது ஆத்ம சோதனம்.

12. ஏழாவது சிவ ரூபம், எட்டாவது சிவதர்சனம், ஒன்பதாவதாக சிவயோகம், பத்தாவது சிவபோகமாகும்.

13. மூன்று மூன்று பேதங்களால் நான்கு விதமாக பதி, பசு, பாசம் என்று மூன்றை விளக்கி குருவின் சொல்லின் செயலாலேயே ஜீவன் முக்திபிரகாசமேற்படுகிறது.

14. இவ்வாறு பத்துபொருள் உள்ளதாக க்ஞான மார்கத்திற்கு விதிக்கப்படுகிறது.
படலம் 23: நிர்வாண தீட்சை!

23 வது படலத்தில் நிர்வாண தீட்சை கூறப்படுகிறது. முதலில் உயர்ந்த நற்கதியை கொடுக்க கூடிய நிர்வாண தீட்சையை கூறுகிறேன் என்று உத்தரவு இடுகிறார். பிறகு ஆசார்யன் நித்ய அனுஷ்டானங்களை முடித்து மந்திர தர்பணம் செய்து சூர்யபூஜை செய்து அங்கந்யாஸ கரன்யாசங்களை செய்த சரீரங்களை உடையவனாகவும் சாமாந்யார்க்ய கையுடன் திவாரத்தில் திவாரதேவர்களை பூஜித்து மேற்கு வாயில் வழியாக யாகசாலையில் நுழைந்து பிரம்மாவை பூஜித்து முறைப்படி ÷க்ஷத்ர பாலர்களை காக்கும்படி வேண்டி பூதசுத்தி முதலியவைகளை செய்து விசேஷார்க்யம், ஞானகட்கம், பஞ்சகவ்யம் இவைகளை தயாரித்து விகிரம் இரைத்து பூமிபூஜை செய்து சிவகும்பம் வர்த்தனி பூஜித்து லோகபாலகர்களுக்கு சிவனின் உத்தரவை தெரிவித்து அஸ்திரகும்ப பிரதட்சிணம் செய்து ஞானகட்கம் பூஜித்து மண்டலத்தில் தேவனை பூஜித்து அக்னியில் மந்திரதர்ப்பணம் செய்து பகவானே உன் தயவால் என்னுடைய சரீரத்தில் சிஷ்யர்களின் பாவிதாத்மாக்களுக்கு உன்னால் அனுக்ரஹம் செய்ய வேண்டும் என்று தேவனை வேண்டி உத்தரவு அடைந்தவராக சிஷ்யனுடைய சிரஸில் தலைப்பாகை வைத்து தனக்கும் சிவனுக்கும் ஒன்று சேர்ந்த பாவனையை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு அதிவாஸ கிரியைக்காக சிவனின் கட்டளைப்படி நடக்கும் விதம் கூறப்படுகிறது. பிறகு சிஷ்யனை தனக்கு வலது பாகத்தில் அழைத்து சிவாதி மந்திரங்களுக்கு தீபனத்தை நன்கு செய்ய வேண்டும். என கூறி மந்திரதீபனம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. பின்பு சிஷ்யனுக்கு பாச சூத்தர பந்தன முறையையும் பாச சூத்ரத்தில் ஸூஷும்னாநாடீ சேர்க்கையும் அதே சூத்திரத்தில் சேர்ப்பதும், மந்திர அத்வாதிகளின் வியாப்ய, வியாபக தன்மை சொல்வதும் ஆகிய இந்த விஷயங்கள் கூறப்படுகின்றன. இது பற்றி விளக்குவதில் மந்திரங்கள் முதலிய ஜந்துகளின் அத்வாக்கள் பரம வியாப்திகமாக ஐந்து கலையும் அந்த கலைகளால் கலைகளே தீட்சையால் பாவித்து சோதிக்க தக்கதுமாகும். அந்த சுத்தியாலே அதற்கு உள் அடங்கியவையாகிற ஐந்து அத்வாக்களின் சுத்தி ஏற்படுகிறது என விளக்கப்படுகிறது.

பஞ்சகவ்யம் அருந்துதல் சருப்ராசனம், தந்தசுத்தி, இவைகள் கூறப்படுகின்றன. இதில் பல்குச்சி விழுவதால் நன்மை தீமை என்கிற அடையாளம் தெரிவிக்க படுகிறது. சிஷ்யன் சயனம் செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு குருவானவர் பல் குச்சி விழுந்ததால் தெரிவிக்கப்பட்ட பிரதிகூல சாந்திக்காக செய்ய வேண்டிய பிராயச்சித்தம் செய்து தானும் பஞ்சகவ்ய, சருப்பராஸநம், பல்துலக்குதல் முடித்து முயற்சியோடு சயனம் செய்யவும் இவ்வாறு நிர்வாண தீட்சை என்கிற கிரியை தொகுப்பு காணப்படுகிறது. அனுஷ்டானங்களை செய்த குரு, சிஷ்யர்களை, இரவில் காணப்பட்ட சொப்பனங்களை கேட்டு சுபசொப்பனமாக இருப்பின் முன்பு போல் சிஷ்ய பிரவேசம் முதலியவைகள் செய்ய வேண்டும். கெட்ட சொப்பனமாக இருப்பின் பரிகாரம் செய்து பிறகு சிஷ்ய பிரவேசம் செய்ய வேண்டும். சிஷ்யனை அழைத்து சமீபத்தில் தன்வலப்பக்கத்தில் அமர்த்தி அதிவாசம் செய்யப்பட்ட அந்த சூத்திரத்தை சிஷ்ய சரீரத்தில் தொங்கும்படி செய்து இந்த சிசுவுக்கு அனுக்ரஹம் செய்கிறேன் என்று பகவானை பிரார்த்தனை செய்து பகவானிடம் இருந்து உத்தரவு பெற்றவனாக ஆதார சக்தியை அக்னியில் பூஜிக்க வேண்டும். பின்பு முதலாவதாக, நிவிருத்தி கலாசுத்தி முறை நிரூபிக்கப்படுகிறது. அதில் நிவிருத்தி கலாசுக்தியில் பூஜிக்கக் கூடிய தத்வ, வர்ண, மந்திர, புவன பதங்களில் விளக்கம் கூறப்படுகிறது. செய்ய வேண்டிய ஹோமம் முதலிய கார்யங்களும் விளக்கப்படுகிறது. இவ்வாறகவே பிரதிஷ்டை வித்யா, சாந்தி, சாந்த்ய தீத கலைகளின் சுத்திகிரமம் முறைப்படி விளக்கப்படுகிறது. பிறகு சிகையை கத்தரிக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு சிவனிடம் சேர்க்கும் முறையும் ஸர்வக்ஞம் முதலிய ஆறுகுணம் உண்டாகும் முறையும் கூறப்படுகிறது. பிறகு நிர்வாண தீட்சையில் யோக்யமானவர்கள் விளக்கப்படுகின்றனர். முடிவில் பிற்பட்டவர்களுக்கு அவுத்ரீ என்ற தீட்சையானது செய்யக்கூடாது. சாக்க்ஷúவி தீட்சையை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 23வது படலகருத்து தொகுப்பாகும்.

1. நிர்வாண தீøக்ஷ பற்றி சொல்லுகிறேன். இது பரமமோக்ஷத்தைத் தருவதாகும். ஆசார்யர் நித்யானுஷ்பானங்களை செநய்து மந்திர தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

2. சூர்ய பூஜை செய்து சுத்தனாக சகளீகரண வடிவமாக ஸாமான்யார்க்யம் கற்பித்து நான்கு திவராங்களிலும் திவாரதேவதைகளை பூஜித்துக் கொள்ள வேண்டும்.

3. மேற்கு வாசல் வழியாக யாகசாலையினுள் பிரவேசிக்க வேண்டும். வாஸ்த்து பிரம்மாவை பூஜித்து சுத்தனாக பூமியில் தங்கியுள்ள இடையூறுகளை போக்கி ÷க்ஷத்ர ரøக்ஷ செய்து யாகசாலா ஸ்தானங்களை காத்துவர வேண்டும்,

4. பூதசுத்தி மந்திரந்யாஸங்கள் செய்து விசேஷார்க்யம் கல்பித்து ஞானகட்கம் பஞ்சகவ்யம் ஆகிய பூஜைகளை முறைப்படி செய்து கொள்ள வேண்டும்.

5. விகிரங்களை அபிமந்திரித்து பூமி சுத்தி செய்தும் விகிரங்களை தர்பங்களாலும் தெளித்தும் ஈசான திக்கிலுள்ள யாகேச்வர கும்பபூஜைக்கு தயாராகி

6. பாசுபதாஸ்த்ர கும்பத்தையும் வர்த்தனியையும் பூஜைசெய்க. குருவானவர் எட்டுதிக்குகளிலும் லோகபாலர்களை பூஜைசெய்து அவர்களிடம் அனுமதியை கேட்டு கொள்ள வேண்டும்.

7. அஸ்திரகும்பங்களால் யாக மண்டபத்தை சுற்றிவந்து யாக யாகேஸ்வர கும்பத்தை க்ஞானகட்கத்தையும் நன்கு பூஜிக்க வேண்டும். மண்டலத்தில் சிவபெருமானை பூஜித்து ஹோமாக்னியில் மந்த்ர தர்ப்பணம் செய்ய வேண்டும்.

8. ஹே பரமேஸ்வர; உன் கருணையுடன் என் சரீரத்தில் நுழைந்து தத்வாத்மாக்களான சிஷ்யர்களுக்கு உம்மால் அருள்பாலிப்பது செய்யவேண்டும்.

9. இவ்வாறு விக்ஞாபித்து சிவாக்ஞை பெற்று பரிவட்டம் தலையில் கட்ட வேண்டும். எல்லா காரியங்களுக்கு சாக்ஷியாக உள்ளவர் மண்டலத்தில் உள்ள ஸதாசிவரே.

10. யக்ஞத்துக்கு ரக்ஷகராக கும்பத்திலும் ஹோம காரணமாக அக்னியிலும் இருக்கிறார். சிஷ்யனின் சரீரத்தில் பாச நாசகராவும், என் சரீரத்தில் பாசமோசகராகவும் சதாசிவன் இருக்கிறார்.

11. மண்டலம், கும்பம், அக்னி, சிஷ்யன், ஆசார்யன் ஆகிய ஐந்து இடங்களிலும், ஆதாரமாக நீ பரமேஸ்வரனாக இருக்கிறாய். நானேசதாசிவன் எந்த சிவனுடைய ஹ்ருதயாதி மந்திரங்கள் கரணங்களில் இருந்து தோன்றியதாகுமோ

12. அவ்வாறே என்னிடத்தில் அந்த மந்திரங்கள் உள்ளன. எனது ஆத்மாவிலும் ஈஸ்வரன் சுதந்திரமாக இருக்கிறார் என்று உள்ளும் புறமும் உள்ள வாயுக்களால் தேவனை பாவனை செய்து ஈஸ்வரனை பிரார்த்திக்க வேண்டும்.

13. நிர்வாண தீøக்ஷக்காக வந்தடைந்த சிஷ்யனின் தகுதியை சோதிக்கப்பட்டவன். உயர்ந்த ஜாதி தெய்வாம்சம் சமயங்களின் தராதரம் அறிந்தவனாக சிஷ்யன் இருக்கிறான்.

14. அதே சமயம் சிவ அனுக்ரஹத்திற்காக எனக்கு அனுக்ரஹம் செய்யுங்கள். முழுமையான உறுதி உடையவனாக வேண்டும் சிவாகமானுஷ்டானங்களை கடைபிடிப்பவனாக இருந்துகொண்டு

15. யாகசாலையில் பிரவேசித்து அக்னிகார்யம் ஆரம்பித்து தனது வலது பாகத்தில் சிஷ்யனுக்கு இடம் தந்து

16. நாடீ சந்தன மார்க்கத்தை அறிந்தவர் பூர்ணாஹுதியுடன் கூடி மந்திரதர்பணம் ஸமர்ப்பிக்க வேண்டும். சிவாதி மந்திரங்களோடு தீபநம் என்ற ஹோம விசேஷங்களை செய்து நிர்வாண தீøக்ஷ செய்யவேண்டும்.

17. அகோராஸ்திரத்தை ஸம்புடமாக ஜெபித்து சிவத்தை ஸாங்கமாக பட் என்ற சொல்லை முடிவில் உள்ளதாக நன்கு பூஜை ஹோமங்களை செய்ய வேண்டும். வளைந்த நெற்றி, புருவம், கைகள், முகம் இவற்றோடு கூடிய அகோர மந்திரத்தை

18. மூன்று முறை ஹோமமும் மந்திர தீபநாஹுதியும் செய்க. கன்னிகா பெண்ணால் தயாரிக்கப்பட்ட நூலை முப்பிரியாகவும் அதை மும்மடங்காகவும் செய்து கொள்ள வேண்டும்.

19. அஸ்திர மந்திரத்தால் பிரோக்ஷணமும் கவசத்தினால் அவகுண்டனமும் மூல மந்திரத்தினால் நன்கு பூஜையும் செய்து ஆத்மாவின் (சிசுவின்) சிரசின் மேலே இருக்கும் சிகையில் சூத்ரத்தை

20. வலது கால் கட்டைவிரல் நுனிவரை அந்த நூலை தொங்கும்படி கட்ட வேண்டும். இந்த நூலை கஷும்நா நாடியாக தியானித்து சிஷ்யனுடைய தேஹத்திலிருக்கிறதாக பாவிக்க வேண்டும்.

21. சுஷும்நாயை நம: என்று கிரஹித்து அவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். சந்தனம் புஷ்பம் இவற்றாலும் நன்கு பூஜித்து கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்க.

22. மூலத்தால் சன்னிதானத்திற்காக மூன்று முறை ஆஹுதி செய்ய வேண்டும். சிஷ்யனுடைய ஹ்ருதய பிரதேசத்தை அஸ்திரமந்திரத்தினால் பிரோக்ஷித்து புஷ்பத்தால்

23. ஹ்ருதயத்தை தட்டி ரேசகத்தால் அவனுடைய ஹ்ருதயத்தை அடைந்து நக்ஷத்ர காந்தியான அவன் சைதன்யத்தை ஹும் என்ற மந்திரத்தைக் கூறிக்கொண்டு

24. அஸ்திர மந்திரத்தால் ஹ்ருதய முடிச்சை மூலமந்திரத்தால் சேதனம் செய்து எடுத்து சிஷ்யனின் ஜீவன ஹ்ருதய ஸம்புடமாக த்வாத சாந்தத்தில் சேர்க்க வேண்டும்.

25. ஸகாரத்தின் முடிவான ஹகாரத்தை சொல்லி சம்ஹார முத்ரையால் அந்த சூத்ரத்தில் சேர்க்க வேண்டும். கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்ய வேண்டும்.

26. மூலமந்திரத்தினால் ஸன்னிதானத்திற்காக மூன்று ஆஹூதி செய்து ஆத்மாவின் போகசரீரத்திலிருந்து உண்டான ஆணவமலம், கர்ம மலர், மாயை ஆகியவைகளையும்

27. சாந்த்ய தீதை முதலிய கலைகளை அந்தந்த மந்திரங்களால் ஸூத்ரத்தில் சேர்க்க வேண்டும். சிவத்தன்மை வாய்ந்த சாந்த்யதீதையை நான்காம் வேற்றுமை ஹும்பட் என்ற சப்தத்துடன் கூடியதாக சொல்லி

28. சாந்த்யதீத கலாயை ஹும்பட் என்று அஸ்திர மந்திரத்தினால் புஷ்பத்தால் அடித்து சிஷ்யனின் சிரஸில் இருக்கும் சிவனைப் பிரணவத்துடன் கூடியதாக ஸம்ஹார முத்ரையால் எடுத்து

29. சாந்த்ய தீத கலாயை நம: என்று புருவ மத்தி ஸமீபம் உள்ள ஸூத்ரத்தில் சேர்க்க வேண்டும்.

30. இந்த முறைப்படி பூத சுத்தியில் கூறியபடியும் நான்கு கலைகளிலும் புஷ்பதாடனம் செய்து எடுப்பது, சேர்ப்பது

31. கழுத்து முதல் ஹ்ருதயம் வரை அவ்விடமிருந்து நாபி அங்கிருந்து முழந்தாள் அதிலிருந்து கால் கட்டைவிரல் வரை சேர்ந்து இருப்பது, சேர்க்கப்படுவது என்ற பாவத்தை அறிந்து செய்ய வேண்டும்.

32. மந்திரங்கள், பதங்கள், வர்ணங்கள், தத்வங்கள், புவனங்கள், வ்யாப்யமாகவும், வ்யாபகமாகவும் இருப்பதோடு கர்மம், ஆணவமலம், மாயை ஆகிய பாசங்களால் கட்டப்பட்டிருக்கின்றதாக அறிய வேண்டும்.

33. ஆணவாதி மலங்கள் வ்யாப்யங்கள் வ்யாபகங்களாக கலைகள் ஐந்தும் கருதப்படுகின்றன. ஆகையால் இவ்விடத்தில் கலைகளை ஸம்ஹரித்தால் ஸ்வீகரித்ததாக ஆகும்.

34. சுத்தமான மந்திரவாதிகளால் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும், இங்கு மறுபடியும் உண்டான சமயத்தில் சுத்தங்களாக ஆகின்றன. ஆகையால் எல்லாவற்றும் அதன் சுத்தி வெளிப்படுகின்றன.

35. அவைகளுக்காக ஓம், முதலாகவும் பட் என்ற முடிவோடும் கூடியதீபனத்தை செய்ய வேண்டும். அகோர மூலமந்திரம் சாந்த்யதீத கலை முதலியவற்றை

36. நான்காம் வேற்றுமை முடிவில் இருக்கும்படி உச்சரித்து ஹும்காரத்தையும் உச்சரித்து மூலத்தால் ந்யாஸம் செய்தபின் அதனதன் பீஜாக்ஷரத்தை நினைத்து கிளைகளை அடைய செய்ய வேண்டும்.

37. மும்முறை ஆஹுதி செய்து பாச பந்தனம் செய்து அஸ்திர மந்திரத்தால் சிஷ்யனின் சிரஸை தட்டி சிவமந்திரத்தை மூன்றுமுறை நினைக்க வேண்டும்.

38. பகவானே மலகர்ம மாயையுடன் கூடிய வ்யாபகமான சாந்த்யதீத கலையை சாந்தி கலையில் உள்ள தத்வம் வரையில் வ்யாபகமான பாசத்தை கட்டுப்படுத்துங்கள். (பகவன் சாந்த்ய தீத மலகர்ம ஸமந்விதம், சாந்தி தத்வா தே: வ்யாபகம் பாசம் பந்தபந்த) என்றும்

39. ஹும்பட் என்று முடிவாக மந்திரத்தை உச்சரித்து சூத்திர முடிச்சை செய்ய வேண்டும். அந்தந்த பீஜாக்ஷரத்தை சிவத்தோடு சம்புடிதமாக சிவபெருமானின் பதத்தில் வைக்க வேண்டும்.

40. சாந்தி கலையிலுள்ள ஆணவமலம், தத்வாதி, வ்யாபகம் உடைய பாசத்தை கட்டுப்படுத்துங்கள் என்பதாகக் கூறி சாந்தி கலா, மலதத்வாதி வ்யாகம், பாசம், பந்தபந்த ஹூம்பட் என்பதாக கூறி

41. இவ்வாறாக தனித்தனியாக மேற்கூறியவாறு பாசக்கயிற்றை முடிச்சு போடவும் அந்த சூத்ரத்தை எடுத்து சராவம் என்ற 2 மடக்கால் மேலும் கீழுமாக மூடி

42. சம்பாத ஹோமம் செய்து அந்த சூத்ரத்தை மண்டலத்தில் உள்ள ஈசனிடம் தெரிவித்து ஆத்மாவை ரக்ஷிப்பதாக சிவகும்ப ஸமீபம் வைக்க வேண்டும்.

43. சிவனுடன் கூடிய சிவகும்பத்தில் சிஷ்யனை நமஸ்காரம் செய்வித்து சிஷ்யனுடன் கூடிய ஆசார்யன் யாகசாலையிலிருந்து வெளியேவந்து

44. சிஷ்யர்களுக்கு ஹவிஸையும் பஞ்சகவ்யத்தையும் கொடுத்து பல்துலக்கும் படி செய்து நல்ல பிரதேசத்தில் தனித்தனியாக மெழுகப்பட்ட பூமியில்

45. போகத்தையும் மோக்ஷத்தையும் அனுசரித்து தனித்தனியாக மண்டலத்தின் அருகில் போகத்திற்காக கிழக்கு முகமாகவும் மோக்ஷத்திற்காக வடக்குமுகமாகவும்

46. அடக்கமான கால் கைகளை முயற்சியுடன் அடக்கி முறைப்படி முழங்கால்களையும் மடக்கியவாறு அமர்ந்தவர்களின் வலது கையில் தர்பத்தை எடுத்து

47. உயரே தூக்கிய பவித்ரம் தரித்த வலது கையினால் சிறிதளவு பஞ்சகவ்யத்தை ஹ்ருதய மந்திரத்துடன் ஓர்முறை கொடுக்க வேண்டும்.

48. அதை பருகியபின் மறுபடியும் முயற்சி உடையவர்களுக்கு அவ்வாறே இரண்டாவதுமுறை சிறிதளவு பஞ்ச கவ்யத்தையும் ஹவிஸ்ஸையும் கொடுக்க வேண்டும்.

49. எட்டுப்பிடி அளவு அரச இலையில் ஹவிஸ்ஸை வைத்து முமுக்ஷúகளுக்கும் போகத்தை விரும்புபவர்களுக்கு பிப்பல வ்ருஷ இலை பாத்திரத்திலும் வைத்து கொடுக்க வேண்டும்.

50. அந்தணர் அல்லாதவர்களின் தொடர்பு இருந்தால் போஜனத்திற்கு பிறகு சுத்திக்காக பாலுல்ளமரத்திலுள்ள குச்சியை

51. சுண்டுவிரல் அளவுள்ள பருமனும் நேர்மையானதும் பூச்சி அரிக்காததும் ருசி உள்ளதாகவும் தயார் செய்து மோக்ஷத்தை விரும்புபவன் எட்டு அங்குல அளவாகவும், போகத்தை விரும்புபவன் பனிரெண்டு அங்குல அளவாக வேண்டும்

52. கடவாய்பல் வரை வெளுப்பாக இருக்கும்படி நன்கு சுத்தி செய்து குச்சியையும் கொப்பளிப்பதையும் எந்த திசையில் செய்கிறார் என்பதை அறிந்து சுபஅசுபத்தை அறிக.

53. கொப்பளிப்பது, ஆக்னேயம், தெற்கு, நிருருதி வாயு திக்குகளில் கொப்பளிப்பதை செய்தால் அசுபமாகும். முகத்திற்கு நேர்பகுதி மற்றும் வேறு திசைகளில் கொப்பளித்தால் கர்மவசத்தால் சுபமென்று அறிக.

54. இவ்வாறு அறிந்து ஆசமனம் செய்து சமாதானமடைந்து சிஷ்யர்களை ஸ்வப்னங்கள் அதன் பலன்களை அறிய இரவில் ரøக்ஷயோடு கூடி படுக்க வைக்க வேண்டும்.

55. சயனம் செய்விக்கும் இடத்தை சாணத்தால் மெழுகி தர்ப்பையாலும் விபூதியாலும் ஸம்ஸ்கரிக்கப்பட்ட கிழக்கு தெற்கு ஆகிய திசைகளில் தலையை வைத்து படுப்பதற்கான படுக்கைகளை

56. ஒருவருக்கொருவர் ஸம்பந்தம் இன்றி இருபக்கங்களிலும் தலையணைகளை வைத்து நான்கு தண்ட அளவு இடைவெளியுடன் மறைவாகவும் இருட்டில் இல்லாமலும் ஆக

57. அஸ்திர மந்திரத்தால் நூறுமுறை அபிமந்திரித்து ஜபிக்கப்பட்ட படுக்கைகளில் ஹ்ருதய மந்திரத்தால் முடியப்பட்ட சிகைகளை உடையவர்களாக படுக்க வைத்து கவச மந்திரத்தினால் அபிமந்திரிக்கப்பட்ட

58. வஸ்திரங்களால் சிஷ்யர்களை போர்த்தி எள், கடுகு இவைகளால் அஸ்திரமந்திரத்தால் அபிமந்திரிக்கப்பட்டதாக சயனத்திற்கு வெளியே மூன்று கோடுகளை போட வேண்டும்.

59. ஸ்வப்னம் கண்ட சிஷ்யனின் பலனை அனுசரித்து அவனை பரிகாரமந்திரத்தை ஜபிக்க கூறி எட்டு திக்குகளிலும் இந்திராதிகளுக்கு முறைப்படி பலி கொடுக்க வேண்டும்.

60. சரு போஜனம், பல்துலக்குதல் இவைகளை செய்து ஸ்வப்ன பலத்தை அனுகூலப்ரதிகூல பலனை அறிந்து ஒவ்வொரு ஜாமத்திற்கு நூறு ஆஹூதி செய்ய வேண்டும்.

61. மூலமந்திரத்தால் நூற்றியெட்டு ஆஹுதி பிராயச்சித்தமாக செய்ய வேண்டும். கை கால் சுத்தி செய்து ஆசமனம் செய்து நல்ல தீர்த்தத்தால் ஸ்நானம் செய்து பிறகு ஆசமனம் செய்ய வேண்டும்.

62. பஸ்ம ஸ்நானமாவது செய்து வெள்ளை வஸ்திரம் தருவித்து உடலை சிவமாக செய்யப்பட்டதாக பாவித்து சமஸ்த வழிகளிலும் உள்ள தேகத்தை சிவமாக செய்ய வேண்டும்.

63. சருபோஜனம் பஞ்சகவ்யம் அருந்துதல், பல்துலக்குதல் இவைகளை தானும் செய்து சுத்தனாக ஆசார்யன் உறங்க வேண்டும்.

64. பிறகு மறுதினம் காலையில் செய்யப்பட்ட நித்ய அனுஷ்டானங்கள் உடையவனாக ஆசார்யன் இரவில் கண்ட ஸ்வப்னங்களை சிஷ்யர்களிடம் கேட்டு கெட்ட ஸ்வப்னமாயிருப்பின் பரிகாரம் செய்ய வேண்டும்.

65. காராம்பசுவின் பால், நெய், தேன், அருகம்பில் இவைகளால் நூறு ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும். சுபஸ்வப்னமாயிருப்பின் முன்புபோல் யாக சாலைக்கு சிஷ்யர்களை பிரவேசிக்க செய்ய வேண்டும்.

66. சிஷ்யனை அழைத்து குண்டத்திற்கு அருகில் தன்னுடைய வலது பாகத்தில் அமரச்செய்து அதிவாஸம் செய்யப்பட்ட பாச சூத்ரத்தை சிஷ்யனின் சரீரத்தில் தொங்கும்படி செய்ய வேண்டும்.

67. ஹேபரமேஸ்வரா இந்த குழந்தைக்கு அனுக்ரஹம் செய்கிறேன் என்று பிரார்த்தித்து சிவனிடம் அனுமதி பெற்றவனாக அக்னியில் ஆதார சக்தியை பூஜிக்க வேண்டும்.

68. நிவ்ருத்தி கலையில் அடங்கிய கலைகள் தத்வங்கள் முதலியவைகளையும் ப்ருத்வீதத்வம் க்ஷகாரம் ஹ்ருதய மந்திரம், ஸத்யோஜாதம்

69. காலாக்னி புவனம் கூஷ்மாண்டம், ஹாடகம், பிராம்மம் வைஷ்ணவம் இவைகளையும் ரவுத்ர புவனம் முடிய உள்ள பிரம்மாண்டத்தினுடைய ஆறு புவனங்கள் ஆச்ரிதமாக இருக்கின்றன.

70. கபாலீசர், அஜர், புத்தர், வஜ்ரதேஹர், பிரமர்தனர், விபூதி, அவ்யயர், சாஸ்தா, பீனாகி, த்ரிதசாதிபர் ஆகிய பத்தும் கிழக்கு திக்கிலும்

71. அக்னிருத்ரர், ஹுதாசனர், பிங்களர், காதகர், ஹரர், ஜ்வலநர், தஹநர், பப்ரு, பஸ்மாந்தகர் க்ஷயாந்தகர் ஆகிய பத்துபேர்களும் ஆக்னேய திக்கிலும்

72. யாம்யர், ம்ருத்யுஹரர், தாதா, விதாதா, கர்தரு சம்ஞகர், சம்யோக்தா, வியோக்தா தர்மா, தர்மபதி ஆகிய பத்து பேர்கள் தெற்கு திக்கிலும்

73. நிருருதி மாரணர், ஹந்தா, க்ரூர த்ருஷ்டி, பயாநகர், ஊர்த்துவகேசர், விரூபாக்ஷர், தூம்ர, லோஹிதர், தம்ஷ்ட்ரிணர் ஆகிய பத்து பேரும் நிருருதி திக்கிலும்

74. பலர், அதிபலர், பாசஹஸ்தர், மஹாபலர், ஸ்வேதர், ஜயபத்ரர், தீர்க்கபாகு ஜலாந்தகர் திக்கிலும்

75. மேகநாதர், சுநாதர், இந்த பத்துபேரும் மேற்கு பாகத்திலும் சீக்ரர், லகு, வாயுவேகர், தீக்ஷ்ணர், சூக்ஷ்மர், க்ஷயாந்தகர்,

76. பஞ்சாந்தகர், பஞ்சசிகர், கபர்த்தி, மேகவாகனர் ஆக பத்துபேர் வாயுதிக்கிலும் நிதீசர், ரூபவான், தன்யர், சவும்ய தேஹர், ஜடாதரர்.

77. லக்ஷ்மீத்ருக், ரத்னத்ருக், ஸ்ரீத்ருக், ப்ரஸாதர், ப்ரகாமதர் ஆக பத்துபேர் வடக்கிலும் வித்யாதிபர், ஈசர், ஸர்வக்ஞர், ஞானபுக், வேதபாரகர்

78. சுரேசர், சர்வர், ஜ்யேஷ்டர், பூதபாலர் பலிப்ப்ரியர் ஆகிய பத்துபேர் ஈசானத்திலும், வ்ருஷர், வ்ருஷதரர், அனந்தர், க்ரோதனர், மாருதாசனர்,

79. க்ரசநர், உதும்பரர், ஈசர், பணீந்த்ரர், வஜ்ர தம்ஷ்ட்ரிணர் ஆக பத்துபேர் அதோபுவனம் சம்பு, விபு: கணாத்யக்ஷர், த்ரியக்ஷர், த்ரிதசேஸ்வரர்

80. ஸம்வாஹர், விவாஹர், நபர், லிப்ஸு த்ரிலோசனர் ஆக பத்துபேர் ஊர்த்துவபுவனம். வீரபத்ரர், பத்ரகாளி, இந்தருத்ரர்கள் மேல் உள்ள பிரம்மாண்டத்தில் உள்ள ருத்ரர்கள் ஆவார்கள்.

81. கபாலீசர் முதலான பத்து ருத்ரர்கள் கிழக்கு திக்கிலும், அக்னி முதலான பத்து ருத்ரர்கள் ஆக்னேய திக்கிலும், யாம்யர் முதலான பத்துபேர் தெற்கு திக்கிலும், நிருருதி முதலான பத்து பேர் நிருருதி திக்கிலும்

82. பலர் முதலானவர்கள் மேற்கு பாகத்திலும், சீக்ரர் முதலானவர்கள் வாயு திக்கிலும் நிதீசர் முதலானவர்கள் வடக்கு பாகத்திலும் வித்யாதிபர் முதலானவர்கள் ஈசான திக்கிலும் இருப்பார்கள்.

83. வ்ருஷர் முதலிய ருத்ரர்கள் கீழ்பாகத்திலும் சம்பு முதலான ருத்ரர்கள் ஊர்வத்திலும் இருப்பார்கள். இவ்வாறு நூற்றிஎட்டு புவனங்களுக்கும் நூற்றி எட்டு ருத்ரர்.

84. எண்பத்தி ஒரு பதமுள்ள வ்யோமவ்யாபி பதந்யாஸத்தில் முடிவில் உள்ள பதத்திலுள்ள ஓம் முதலாக கீழிருந்து மேல் என்றமுறையாக நியாஸிக்க வேண்டும். அதில் நிவ்ருத்தி கலையில் கடைசியில் ஓம் நமோ நம: சிவாய நம: ஓம் என்றும்

85. பத மந்திரங்களில் சர்வத என்ற பதம் பின் சர்வ, சிவ, சூக்ஷ்ம சூக்ஷ்ம, சப்த சப்த, க்ஞானக்ஞான, பிங்க பிங்க என்றும்

86. பதங்க பதங்க, துரு துரு, ஸாக்ஷி ஸாக்ஷி, பூர்வ ஸ்தித பூர்வஸ்தித என்றும்

87. அஸ்துத அஸ்துத, அநர்ச்சிதாநர்ச்சித, ப்ரம்ம விஷ்ணுருத்ரபர, ஸர்வஸாந்தித்யகர என்ற பதங்களையும்

88. ஸர்வ பூத சுகப்ரத, பவோத்பவ, பவ பவ, சர்வ சர்வ, ப்ரதம ப்ரதம என்ற பதங்களையும்

89. முஞ்சமுஞ்ச, யோகாதிபதே, மஹாதேஜ:, ஸத்பாவேச்வர என்ற பதங்களையும்

90. மஹாதேவ என்ற பதம் வரையில் இருபத்தி எட்டு பதங்கள் உள்ளன. நிவ்ருத்தி கலையுடன் தத்வாதிகளுடன் கூடிய புவனங்களை வ்யாபித்துள்ளதாக அறியலாம்.

91. ஓம் ஹ்லாம் நிவ்ருத்தி கலாயை நம: என்று உச்சரித்து நிவ்ருத்தி கலையை பாசசூத்ரத்தில் இருந்து எடுத்து சிவாக்னியில்

92. ஆவாஹநம் செய்து மேற்கூறிய மந்திரபத வர்ணங்களுக்கு மூன்று முறை ஆஹூதி செய்ய வேண்டும். ஆணவம், மாயை, கர்மம் என்ற மூன்று மலங்களுக்கும் இன்ப துன்ப அனுபவம் சரீரத்திலிருந்து தோன்றுகின்றதாக

93. பாவித்து தேவிகர்பத்தை அடைந்த முடிவில்லாத உற்பத்தி ஸ்தானங்களாக கற்பித்து அதில் வியாபித்துள்ள வாகீஸ்வரியை ஆவாஹனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

94. ஓம் ஹாம் வாகீச்வர்யை நம: என்று பூஜித்து, பிறகு ஸ்வாஹாந்தமான மந்திரத்தால் ஓம் வாகீச்வர்யை ஸ்வாஹா என்று மூன்று ஆஹூதி செய்து

95. ஹே தேவேசீ பசு அனுக்ரஹ கார்யத்தில் சான்னித்யமாக இருங்கள். இவ்வாறு பிரார்த்தனை செய்து சிஷ்யனை அஸ்திரமந்திரத்தால் பிரோக்ஷித்து ஹ்ருதய மந்திரத்தினால் தடானம் செய்ய வேண்டும்.

96. ஓம் அஸ்த்ராய பட் என்ற மந்திரத்தால் தன்னுடைய ரேசகத்தால் சிஷ்யனுடைய சரீரத்தில் பிரவேசித்து

97. அஸ்திர மந்திரத்தால் ஹ்ருதயத்தை சேதித்து அங்குச முத்ரையால் ஆகர்ஷணம் செய்து மூல மந்திரத்தால் மூன்று ஆஹுதிகளை செய்ய வேண்டும்.

98. புல்லின் நுனியில் உள்ள பிந்து கட்டுப்பட்டிருப்பது போல பிரணவத்தால் சம்புடிதமாக செய்து ஹாம் என்று உச்சரித்து குழந்தையான சிஷ்யனை சம்ஷார முத்ரையினால்

99. பூரகத்தால் தன் ஸ்ருதயத்தில் வைத்து இருக்கும்படியாக கும்பகம் செய்து மூலமந்திரத்தை ஜபித்து தன்னுடைய த்வாத சாந்தத்தில் சேர்க்க வேண்டும்.

100. சிஷ்ய சைதன்யத்தை உத்பவ முத்ரையால் எடுத்து சிசுவாகிய சிஷ்யனுக்கு எல்லா யோநிகளிலும் தொடர்பு சேர்க்கை உண்டு என்றறிந்து சேர்க்க வேண்டும்.

101. ஸ்வாஹாந்தமான மூல மந்திரத்தால் மூன்று ஆஹூதி செய்து பகவானே எல்லா உற்பத்தி ஸ்தானங்களில் (பகவன் தேவதேவேசசிசோ: ஸர்வாஸு யோநிஷுஸம் யோகம் குருகுரு)

102. தொடர்பு உண்டாக்குவது போல் தீக்ஷõ காலத்தில் மோக்ஷத்தை கொடுங்கள். அனைத்து கர்பத்தின் நிஷ்பத்தியின் பொருட்டு மூலமந்திரத்தால் மூன்று ஆஹுதி செய்ய வேண்டும்.

103. ஹே பகவானே இந்த சிஷ்யனுக்கு கர்பத்திலிருந்து விடுபடும் தன்மையை அப்பொழுதே எல்லா யோனிகளிடமிருந்து விடுபடச் செய்து எப்பொழுதும் சிவத்தை அடைந்திருக்க வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

104. பின்நல்ல ஜனனத்திற்காக மூன்று முறை ஆஹுதி செய்ய வேண்டும். ஹே பகவானே எல்லா கர்பங்களுக்குள்ளும் ஜனனத்தை சிஷ்யனுக்கு செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

105. இவ்வாறு ஜனனத்திற்காகவும் பசுக்களுடைய வளர்ச்சிக்காகவும் மூல மந்திரத்தால் மூன்று ஆஹூதி செய்து சிவனை குறித்து இவ்வாறு சொல்ல வேண்டும்.

106. ஹே பகவானே சிஷ்ய தேஹங்களுக்கு ப்ரவ்ருத்தியை செய்யுங்கள் என்று கர்மாக்களை சேமிப்பதற்கு மூலத்தால் ஆஹூதிசெய்ய வேண்டும். (பகவந் சிஷ்ய தேஹாநாம் ப்ரவ்ருத்திம் குருகுரு)

107. ஹே பகவானே! ஆத்மாவிற்கு பலவித போகங்களை செய்யுங்கள் செய்யுங்கள். லோக தீøக்ஷயில் கர்மாவின் சேமிப்பை இவ்வாறு படித்து (பகவன் ஆத்மன: நாநா போகதம் குருகுரு)

108. முன் செய்த வினைகள் தர்ம வடிவமான கர்ம சேமிப்பை செய்யுங்கள். தேசத்தாலும் காலத்தாலும் உடம்பாலும் விஷயத்தாலும்

109. சஞ்சிதம் ஆகாமி பேதத்தால் பலவகை போகங்களை எண்ணி போகங்களை அனுபவித்தலை அடையாளமுள்ள, ஆத்மாவினிடத்தில் சுக துக்கானுபவங்களை தெரிவித்து

110. மூலத்தால் மூன்று ஆஹுதி தந்து சிவனை பிரார்த்திக்கவும் என்று ஹே பகவன் அனோ: போக நிஷ்பத்திம் ஸர்வத்ர குருகுரு என்று

111. பரம ப்ரீதியோடு உருவத்தை போகங்களில் லயமடைந்ததாக நன்றாக நினைத்து பரமப்ரீதி வடிவமாக மூன்று சிவாஹூதிகள் செய்ய வேண்டும். (பரமப்ரீதி ரூபகம் லயம் குருகுரு)

112. நிர்வாண தீøக்ஷயில் லயத்தை செய்யுங்கள் என்று பிராத்தித்து ஜாதி, ஆயுள், போகம் இம்மூன்றின் சம்ஸ்காரத்திற்காக சுத்திக்காக (ஆத்மாவிற்கு) அணுவிற்கு நிஷ்க்ருதியில் லயத்தை செய்யுங்கள்.

113. ஹ்ருதய மந்திரத்தினால் நூறு ஹோமமும் மூலமந்திரத்தால் மூன்று ஆஹுதியும் செய்ய வேண்டும். எல்லா கார்யங்களையும் சுத்தியையும் தெளிவையும் பிராயச்சித்தமாக செய்ய வேண்டும் (ஹேபகவன் அணோ: யோகாபாவாத் நிஷ்க்ருத்யா ஸர்வகர்மஸுசுத்தம் குருகுரு.

114. ஹே பகவானே என்ற வாக்யத்தை முன்புள்ள பதத்தில் சேர்க்க வேண்டும். இங்கு ஆத்மாவிற்கு போகமில்லாததாலும் மாயை என்ற பாசத்திற்கு வெளியில் விடுபட்டதாக பாவிக்க வேண்டும்.

115. மூலத்தால் மூன்று ஆஹுதிக்கு பின் மலத்தைப் போக்க கூடிய கர்மாவை செய்ய வேண்டும். அனுபவிக்கும் தன்மையையுடைய மலகார்யத்தை நினைத்து அதன் சுத்திக்காக ஆஹுதிகளை

116. ஹ்ருதய மந்திரத்தால் பத்து எண்ணிக்கைகளாக செய்ய வேண்டும். மூலமந்திரத்தால் மூன்று ஆஹூதி செய்ய வேண்டும். இவ்வாறு மலத்தை வெளியிடுதல் கூறப்பட்டு கர்மங்களின்விடுபாடு கூறப்படுகிறது.

117. கர்மாக்களின் விடுபாட்டுத் தன்மை மிகவும் குறைவு உள்ளதாக நினைத்து மூலமந்திரத்தை கூறி மூன்று ஆஹுதி செய்ய வேண்டும்.

118. பகவானே ஆத்மாவின் மாயாமல கர்மங்களின் விடுபாட்டுச் செயலை நிர்வாண தீøக்ஷயில் செய்வாயாக என்று கேட்டு பகவன் மலமாயா கர்மாத்மகம் விச்லேஷம் குருகுரு என்பதாகக் கூறி

119. ஆணவாதி மலங்களில் வியாபித்துள்ள நிவ்ருத்திகலா பாசத்தினுடைய சுத்திக்காக அதன் மூலமந்திரத்தினால் மூன்று ஆஹுதி செய்து

120. ஹே பகவானே இங்கு நிர்ருத்தி கலா சேதனத்தை செய்வாயாக என்று பிரார்த்தித்து இவ்வாறு செய்ய வேண்டும். (ஹே பகவந் இஹ நிவ்ருத்திச் சேதநம் குருகுரு)

121. எல்லா சரீரங்களின் அழிவிலும் ஆத்மாவின் ஒருமைப்பாட்டை அறிந்து அவுஷட் என்று முடிவுள்ள சிவாய அவுஷட் என்று பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

122. ஓம் ப்ரம்மணே நம: என்று ஆவாஹணம் செய்து பூஜைகள் தர்ப்பணங்கள் செய்க, ஹேப்ரம்மன் சப்த ஸ்பர்சவு க்ரஹாண ஸ்வாஹா என்ற மந்திரத்தால்

123. மூன்று ஆஹுதிகள் செய்து சிவாக்ஞையை கேட்க வேண்டும், அனாமயமான பதத்தை அடைந்துள்ள காரணேச! உங்களால் இந்த சிஷ்யனுடைய அனாமயமான பிரம்மாவின் பதத்தை

124. தடையாக உள்ளதாக பாவித்து உன் ஆக்ஞையானது பரமேஸ்வரியினிடமிருந்ததாகும். உங்களின் இந்த ஆக்ஞையால் சுத்த தத்வ முகப்பில் உள்ள பிரம்மாவினிடத்தில் விட்டுவிட்டு

125. நிவ்ருத்தி கலாபாசம் விடுபட்டதால் சுத்த ஸ்படிகம் போன்ற ஆத்ம ஸ்வரூபத்தை தியானித்து மூலமந்திரத்தை உச்சரித்து மூன்று ஆஹுதிகள் கொடுக்க வேண்டும். (ஹே பகவன் அஸ்ய ஆத்மன: நிவ்ருத்தி பாசா துத்தாரம் குருகுரு)

126. அந்த ஆத்மாவிற்கு நிவ்ருத்திகலா பாசத்திலிருந்து விடுபாட்டு தன்மையை ஹே பகவானே செய்வாயாக என்று பூரகத்தால் ஸம்ஹார முத்ரையால்

127. ஆத்மாவை அடைந்து பின் சிஷ்யனின் பாச சூத்ரத்தில் கவச மந்திரத்தினால் வைத்து விட வேண்டும். சிஷ்யனின் ஸ்திதிக்காக சிவமூலமந்திரங்களால் மூன்று ஆஹூதிகள் கொடுக்க வேண்டும்.

128. வாகீச்வர்யை நம: என்று பூஜித்து தர்பணமும் மூன்று ஆஹூதியும் செய்ய வேண்டும். வாகீச்வரியை விஸர்ஜநம் செய்ய வேண்டும்.

129. இதன் பிறகு சிஷ்ய தேஹத்திலிருக்கும் பாச சூத்ரத்தில் பிரதிஷ்டா கலையை சுத்தி செய்வதற்காக பார்க்க வேண்டும். இருபத்தி மூன்று தத்வங்களான ஜலம், நெருப்பு, காற்று, ஆகாயம்

130. கந்தம், ரஸம், ரூபம், ஸ்பர்சம், சப்தம், உபஸ்தம், பாயு, பாதம், பாணி, வாக்கு, நாசி, ஜிஹ்வா, சக்ஷú, தீவக், ஸ்ரோத்ரம் ஆகியவையும்

131. மனம், அஹங்காரம், புத்தி, ப்ரக்ருதி வரை மேலாக இருபத்தி மூன்று தத்வங்கள். இவ்வாறு உள்ள தத்வங்கள் பிரதிஷ்டா கலைக்கு உரிய தத்வங்கள் ஆகும் (பிராம்மண ச்ரேஷ்டர்களே)

132. ள முதல் ட வரையிலான இருபத்தி நான்கு எழுத்துக்களும், சிரோமந்திரம் வாமதேவ மந்திரம், அகோரமந்திரம் இந்த மந்திரங்களும் ஐம்பத்தி ஆறு புவனங்கள் பிரதிஷ்டா கலையில் உள்ளன.

133. அமரேச புவனம், ப்ரபாசன், நைமிசன், புஷ்கரன், அவதி, ஆஷாடி, டிண்டி, முண்டி அவ்வாறே பார பூதியும் லகுலீச்வரர்

134. ஹரிச்சந்திரன் ஸ்ரீசைலம், ஜல்பேசன், ஆம்ராதகேஸ்வரன் மத்யமேசன், மஹாகாளர், கேதாரம், பைரவம் அப்படியே

135. கயா, குரு÷க்ஷத்ரம், நாகலம், நகலம், விமலேசம், அட்டஹாசம்மஹேந்திரன் பீமன் (ஸம்ஞகன்)

136. வஸ்திரா பதம், ருத்ர கோடிம், அவி முக்தம், மஹாலயம், கோகர்ணம், பத்ரகர்ணம், ஸ்வர்ணாக்ஷம், ஸ்தானு

137. சலகண்ட, த்வீரண்டம், மாகோடம், மண்டலேச்வரம் காலஞ்சரன், சங்கு கர்ணன், ஸ்தூலேச் வரன், ஸ்தலேச்வரர்

138. பைஸாசம், ராக்ஷஸ, யாக்ஷம், காந்தர்வம், இந்திரன் ஆகிய புவனங்கள் சவும்யம், ப்ராஜேசம், ப்ரம்மனம் இந்த புவனங்களும்

139. அக்ருதம், க்ருதம், பைரவம், ப்ராம்மம் வைஷ்ணவம், கவுமாரம், அவுமம், ஸ்ரீகண்டம் என ஐம்பத்தி ஆறு புவனங்களாகும்.

140. அமரேசம் முதலிய எட்டு புவனங்கள் அப்தத்வத்திலும், அரிச்சந்திர முதலிய எட்டு புவனங்கள் தேஜஸ்தத்வத்திலும், கயா முதலிய எட்டு புவனங்கள் வாயுதத்வத்திலும் வஸ்திர பதா முதலியவைகள் ஆகாச தத்வத்திலும்

141. சலகண்ட முதலிய எட்டு புவனங்கள் அஹங்கார தத்வத்திலும், பைசாசம் முதலிய எட்டு புவனங்கள் மனஸ் தத்வத்திலும், அக்ருதம் முதலிய எட்டு புவனங்கள் ப்ருக்ருதி தத்வத்திலும், இவ்வாறு ஐம்பத்தி ஆறு புவனங்கள் ப்ரதிஷ்டாகலையுள் அடங்கியுள்ளன.

142. மஹேச்வர முதல் அரூபின் வரை இருபத்தி ஒன்று பதம் பிரதிஷ்டாகலையில் அடங்கியவன ஆகும் முதலில் மஹேச்வர பதம்இரண்டாவது பரமாத்மன்

143. சர்வ, சிவ, நிதநோத்பவ, நிதன என்ற பதங்களையும்

144. அநிதந, ஓம் ஸுவ: ஓம் புவ: ஓம் பூ: என்ற பதங்களும்

145. தூ தூ தூ தூ, நாநா நாநா, அநாதே, அபஸ்ம என்ற பதங்களும்

146. அதூம, அநக்னே, அரூப, ஜ்யோதி: ஜ்யோதி: என்ற பதங்களும்

147. தேஜ: தேஜ: ப்ரதம ப்ரதம, அரூபின் அரூபின் என்ற பத மந்திரங்களும் இருபத்தி ஒன்று பதங்களாக பிரதிஷ்டாகலையில் அடங்கி உள்ளன.

148. பிரதிஷ்டா கலையில் இவ்வாறு எல்லாம் வியாபித்து இருப்பதை பாவித்து கொள்ள வேண்டும். இவ்வாறு சொல்லப்பட்ட எண்ணிக்கை உடைய தத்வம், வர்ணம் பதம், மந்திரங்கள் பிரதிஷ்டாகலாதிபதியான விஷ்ணுவால்

149. உள்ளடங்கியதாக அந்த கலையை நினைத்து உபாங்கங்களோடு சேர்க்க வேண்டும். குருவானவர் லகுவாக வேண்டும் சுத்தமானதாகவும் பாசத்தை சோதிப்பதாகவும் எண்ண வேண்டும்.

150. பாசத்தையும் பாசசுத்தியாக உள்ள பிரதிஷ்டா கலையில் இருக்கின்ற வர்ண பத தத்வ புவன மந்திரங்களை அப்படியே உச்சரித்து சோதிப்பதில் சுத்தியை நன்றாக செய்ய வேண்டும் என எல்லா போக சேர்க்கைகளும் அடைவதற்காக உபதேசம் செய்யப்பட்டது.

151. ஓம் ஹ்ராம் ஹ்ரீம் என்று நான்காம் வேற்றுமையுடன் கூடிய இரண்டு கலைகளையும் நம: என்ற வாக்யத்துடன் கூடி பூஜித்து மூலமந்திரத்தால் மூன்று ஆஹூதி செய்ய வேண்டும்.

152. பிரதிஷ்டாகலையின் உபஸ்நானம் முதலியவைகளையும் மற்றும் எல்லாக்ரியைகளையும் முன்பு போல் ஆசார்யன் செய்யவேண்டும். சிரோமந்திரத்தினால் பிராயச்சித்தமாக நூறு ஆஹுதி செய்ய வேண்டும்.

153. மஹா விஷ்ணுவிற்கு கப்பம் கொடுப்பது போல் ரசத் தன்மையை கொடுத்து விட்டு வித்யா கலையை சுத்திக்காக அடைய வேண்டும். புருஷ தத்வம் வித்யா கலையில் அடைந்ததாகவும் முதல் தத்வமாகவும் ஆகிறது.

154. ராகம், நியதி, வித்யை, கலா, காலமும், மாயா தத்வமும், ஞ முதல் த வரை உள்ள எழுத்துக்கள் ஏழும் வித்யா கலையில் அடங்கியுள்ளன.

155. சிகாமந்திரம் இருபத்தி ஏழு எண்ணிக்கை உள்ள புவனங்கள் வித்யாகலையில் அடக்கம். வாம புவனம், பீம, உக்ர, பவ, ஈசான, ஏக, வீர இவைகளும்

156. ப்ரசண்ட, உமாபதி, அஜ, அனந்த, ஏகசிவ, க்ரோதேச, ஸம்வர்த்த, ஜ்யோதி, பிங்க இவைகளும்

157. பஞ்சாந்தக, ஏகவீர, சிகேத, மஹாத்யுதி, வாமதேவ, பவ, உத்பவ, ஏக பிங்கள இவைகளும்

158. ஏகேக்ஷண, ஈசான, அங்குஷ்ட மாத்ரக ஆகிய இருபத்தி ஏழு புவனங்கள் வித்யாகலையில் உள்ளன. புருஷ தத்வத்தில் ஆறுபுவனமும், ராகதத்வம், நியதிதத்வம், வித்யாதத்வம், கலா, காலம் ஆகிய தத்வங்களின் முறையே இரண்டு இரண்டு புவனங்களும்

159. மாயா தத்வத்தில் எட்டு புவனமும் இவ்வாறாக புருஷன் முதல் மாயை வரை இருபத்தி ஏழு புவனங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளன. பதமந்திரங்கள் இருபது உள்ளன. அதில் வ்யாபின், வ்யாபின் என்ற பதமும்

160. வ்யோமின், வ்யோமின், அசேதந அசேதந, பரமேஸ்வர பராய

161. ஜ்யோதி ரூபாய, சர்வ யோகாதிக் க்ருதாய, அநிததாய, கோப்த்ரே என்றும்

162. குஹ்யாதி குஹ்யாய ஓம் நமோ நம: ஸத்யோ ஜாத மூர்த்தயே வாமதேவ குஹ்யாய அகோர ஹ்ருதயாய, தத்புருஷவக்த்ராய, ஈசான மூர்த்தாய

163. சிவாய, சர்வ ப்ரபவே ஓம் நம: சிவாய

164. த்யானா ஹாராய என்பதுமாக வித்யா கலையில் உள்ள பதங்கள் கூறப்பட்டுள்ளன. முன்பு கூறப்பட்ட முறைப்படி வர்ணம் தத்வம், புவனம், பதம், மந்த்ரம் இவைகளின் சேர்க்கையை செய்து வித்யா கலையை ஹோமம் செய்ய வேண்டும்.

165. பிராயசித்தமாக சிகா மந்திரத்தால் நூறு ஆஹுதி செய்ய வேண்டும். ருத்ரனிடத்தில் ரூபத்தையும், கந்தத்தையும் எடுத்துக் கொள்ளும் என்று கப்பம் கட்ட வேண்டும்.

166. மூன்று கலைகளுக்கும் உட்பட்ட பவம் என்ற பதத்தை அறிந்து ஆத்மாவை ஸம்சாரத்திலிருந்து கரையேறியவனாக நினைத்து ஆத்ம தத்வத்திற்கு மேல் இருப்பவனாகவும் அறிந்து

167. ஆசார்யன் ஆத்மாவை அனுபவிக்கும் தன்மை உடையவனாகவும், அதிகாரம், மலம் விஷ்டை இவைகளால் கூடியதும் ஐஸ்வர்யத்திற்கு இருப்பிடமானதும் சுத்த இந்திரிய ஸாதனமான போகத்தை உடையவனாகவும் அறிந்து

168. ஒத்துழைப்பு, கலப்பற்ற தன்மை, அடக்கமான ஆற்றல் இவற்றை பரிக்ஷித்து சாந்தி கலையையும் அதற்கு உட்பட்டதான

169. தத்வங்கள் சுத்த வித்யா, ஈச்வர ஸதாசிவ முதலான மூன்று தத்வங்களாகும். க எழுத்துக்கள் மூன்றும், மந்திரங்கள் தத்புருஷம், கவசம் இரண்டுமாகும்.

170. வாமா, ஜ்யேஷ்டா, ரவுத்ரீ, காளீ, கலவிகரனீ, பலவிகரணீ, பலப்ரமதனி மேலும்

171. சர்வபூததமநீ, மனோன்மனீ என்று ஒன்பது புவனங்கள் சுத்த வித்யா தத்வத்தில் இருக்கின்றன. இதே போல் ஈச்வர தத்வத்தில் அனந்த, சூக்ஷ்ம என்ற குறிப்புள்ள புவனமும் மேலும்

172. சிவோத்தம, ஏகநேத்ர, ஏகருத்ர, த்ரிமூர்த்தி, ஸ்ரீகண்ட, சிகண்டர் என்ற எட்டு புவனங்கள் ஈச்வர தத்வத்தில் சாந்தி கலையினுள் அடங்கி உள்ளன.

173. சதாசிவ தத்வத்தில் சாதாக்யம் என்ற புவனம் ஆக சாந்தி கலைக்குரிய பதினெட்டு புவனங்கள் இவ்வாறு அமைந்துள்ளன. அதில் பதினோரு பதமந்திரங்கள் உள்ளன அவையாவன நித்யம் யோகினே என்ற பதமும்

174. யோக பீடஸம்ஸ்தியாய, சாஸ்வதாய, த்ருவாய, அனாச்ரிதாய என்றும்

175. அநாதாய, அனந்தாய, சிவாய, சர்வ வ்யாபிநே என்றும்

176. வ்யோமரூபாயவ்யோம வ்யாபினே என்ற சாந்தி கலையில் பதினொன்று பதங்கள் உள்ளன. நிஷ்க்ருதியாகிய சாந்தியின் பொருட்டு கவச மந்திரத்தால் நூறு ஆஹூதிகள் கொடுக்க வேண்டும்.

177. எல்லாவற்றையும் முன்புபோல் உணர்ந்து புத்தி, அஹங்காரம் இந்த இரண்டையும் காரணேசரான ஈச்வரரிடம் கொடுக்க வேண்டும். பிறகு சாந்த்யதீத கலையினுள் அடங்கிய தத்வம், வர்ணம், மந்திரம், புவனம் எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும்.

178. சாந்த்ய தீதகலையில் சிவதத்வம் மட்டும் சொல்லப்படுகிறது. பதினாறு மந்திரங்கள். ஈசான மந்திரம், அஸ்திர மந்திரம், சிவ மந்திரம் ஆக மூன்று மந்திரங்கள்

179. ஓம் என்ற பதம் சாந்த்ய தீதகலையில் சொல்லப்படுகிறது. புவனங்கள் பதினைந்து அவையாவன: நிவ்ருத்திபுவனம், ப்ரதிஷ்டா புவனம், வித்யா சாந்தி, சாந்தி சாந்த்யதீதம் ஆக ஐந்தும்

180. பிந்துவாகிய சக்தி தத்வத்தில் இந்த ஐந்து புவனங்கள் சொல்லப்படுகின்றன. இதன் பிறகு இந்திகா, ரோசிகா, மோசிகா அவ்வாறே

181. ஊர்த்துவ காமிநீ என்று நாதத்திலிருந்து மேலெழும்பிய புவனங்கள். அவ்வாறே வ்யோமின், வ்யோமரூபா, அனந்தா இதன் பிறகு

182. அநாதா, அனாச்ரிதா என்ற ஐந்து புவனங்களும் சாக்தங்கள் ஐந்தாகவே கருதப்படுகின்றன.

183. இவ்வாறு தத்வமந்திர, பத வர்ண புவனங்கள் கர்ப்பிதமாக உள்ளடங்கி இருப்பது அறிந்து ஓம் ஹ்யைம் ஹெளம் சாந்தி சாந்த்ய தீதாப்யாம் நம: என்று மந்திரத்தை உச்சரித்து

184. மனசால் பூஜைசெய்து மூல மந்திரத்தால் மூன்று ஆஹுதிகள் செய்ய வேண்டும். சாந்த்ய தீத கலையை தன் இருப்பிடத்திற்கு செல்லச் சொல்வதை முன்புபோல செய்ய வேண்டும்.

185. பிராயச்சித்தமாக சிவமந்திரத்தால் நூறு ஆஹுதி செய்ய வேண்டும். அஸ்திர மந்திரத்தால் பூர்ணாஹுதியை பாச சேதத்துக்காக ஹோமம் செய்ய வேண்டும்.

186. பின் நிர் பீஜ தீøக்ஷயில் பூர்ணாஹுதியின் முடிவில் இதை செய்ய வேண்டும். சமயம், சமயாசாரம் இவற்றை பாசாத்மகமான திரோதான சக்தியிடம் கொடுக்க வேண்டும்.

187. ஹே மகேச்வரா ஸமயம், சமயாசார பாச சுத்திம் குருகுரு ஹே மகேச்வரா சமயத்தையும் சமயாசார பாசசுத்தியையும் சிஷ்யனுக்கு செய்யுங்கள் செய்யுங்கள் என்று சொல்லி மஹேச்வரினிடம் கப்பத்தை ஸமர்பிக்க வேண்டும்.

188. சிவ பீஜத்தை உச்சரித்து சதாசிவ பதத்தை மறுபடியும் அடைந்து ஓம் ஹாம் சதாசிவ மனோ க்ருஹாண ஸ்வாஹா என்று மூன்று ஆஹுதிகள் செய்ய வேண்டும்.

189. முன்பு போல் சதாசிவரை விசர்ஜனம் செய்து நிர்மலமான சிஷ்ய ஆத்மாவாக பாச சூத்ரத்தை எடுத்து சிஷ்ய தேஹத்தில் ரேசகத்தால் புகுந்து ஆத்மாவில் வைக்க வேண்டும்.

190. சிஷ்யனுடைய சிரசில் நீரால் பிரோக்ஷணம் செய்து பிறகு சிவாக்னியில் வாகீர்வரியை பூஜித்து தர்ப்பணாஹுதி செய்து பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.

191. சிஷ்யனுக்காக ஹேதேவீ நீர் என்னால் சிரமமடைந்து இங்கு வந்து இருக்கிறீர்கள். தங்களுடைய மூல இடத்திற்கு செல்ல வேண்டும் விக்ஞாபிக்க வேண்டும். சாந்த்யதீத கலையை சக்தி தத்வத்தில் ஒடுங்கியதாக பாவித்து

192. மாயா தத்வம் முடிய உள்ள ஆத்ம தத்வத்தை ஓம் ஹாம் ஆத்மதத்வாய நம: என்று உத்தம ஆசார்யன் எழுந்தருளச் செய்து

193. நம: ஓம் என்ற பிரணவத்தோடும் உச்சரித்து பூஜித்து சன்னிதியில் குறை குற்றங்களின் சுத்தத்திற்காக ஓம் ஹாம் சிவாய ஸ்வாஹா என்று

194. அந்த சப்தத்தை உச்சரித்து நூறு முறை ஹோமம் செய்து மெதுவான உச்சரிப்பால் வித்யா தத்வத்தை அதன் அதிபதியுடன் கூறி நூற்றியெட்டு ஹோமம் செய்து அந்த இடத்திற்குள் எழுந்தருளச் செய்ய வேண்டும்.

195. மந்தி ரோச்சாரண குற்றங்கள் விகல்பங்கள் மந்திர உச்சாரணத்தால் சுத்தமாகின்றதினால் சிவதத்வத்தை எழுந்தருள செய்து சக்தி தத்வத்தை மனசால் தியானிக்க வேண்டும்.

196. மனக் குழப்பங்கள் மாற நூற்றியெட்டு ஆஹூதிகள் செய்க. பிறகு சிவ மந்திரத்தால் சீகாச்சேதம் செய்து விடுவிக்க வேண்டும்.

197. அத்வாக்களினுள் இருந்து சர்வவ்யாபி யாகிற வழிக்கு காரணமான சக்தியை தியானித்து சிகையின் நுனியில் இருக்கிற சுத்தஸ்படிகமான

198. சிஷ்ய சைதன்யத்தை எடுத்து கர்த்தரியை கொண்டு சிகையை எடுத்து சிகா மந்திரத்தால் வைத்து சேதித்த பிறகு சிகாமந்திரத்தால் சிஷ்யனை ஸ்நானம் செய்வித்து

199. குருவானவர் ஆசமநம், சகளீகரணத்தை குருவானவர் செய்து பசுஞ்சாணியால் மூடி ஸ்ருக்கின் நுனியில் வைத்து, சிகையை சிவாக்னியில் ஹோமம் செய்து பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

200. பிறகு வெளியே வந்து ஸ்ருக்ஸ்ருவம், கர்த்தீரி இவைகளை அலம்பி சுத்தம் செய்து ஆசமனம் செய்து சிவனை பார்த்து இவ்வாறு சொல்ல வேண்டும்.

201. ஹேபகவானே அத்வசுத்தி சிகோச்சேதம் இவற்றை உங்கள் அனுக்ரஹத்தால் என்னால் செய்யப்பட்டது. சிஷ்யன் மேன்மை அடைய ரக்ஷியுங்கள் என்று சிவபெருமானிடம் தெரிவிக்க வேண்டும்.

202. சிஷ்யனை சேர்த்துக் கொள்ள போகிறேன். இப்போதே விதிப்படி ஆக்ஞை இடுங்கள் அன்றும் இவ்வாறே செய்க என்று அனுமதி பெற்ற குரு மன சந்தோஷத்தோடு அனுக்ரமமாக செய்ய வேண்டும்.

203. சிசுவாகிய சிஷ்யனை அழைத்து சிவாக்னிக்கு முன்பாக சிஷ்யனுக்கு ப்ரோக்ஷணம் சகளீகரணம் செய்து

204. அந்தர்யாகம் நாடீ சந்தானம் மந்திர தர்ப்பணம் இவைகளை செய்ய வேண்டும். சகளீ கரண மந்திரங்களால் ஒவ்வொரு ஆஹுதி கொடுக்க வேண்டும்.

205. சகளீகரண சுத்தியும் செய்து சிவத்திடம் சேர்ப்பிக்க வேண்டும். வித்யாதத்வத்தை காரணமாக கொண்ட ஆசார்யர் பிந்து தத்வத்தை ஆசனத்திலிருந்து கொண்டு

206. இந்திகா, தீபிகா, ரோசிகா, மோசிகா, ஊர்த்துவகாமிநீ சூக்ஷ்மா, சூக்ஷ்மாம்ருதா என்ற கருத்துள்ள பிராசாத மந்திரங்களை நினைத்து பாவித்து

207. பிந்து சக்தி, நாத சக்தி ஆகிய கலைகளினால் இணைக்கப்பட்ட தேஹத்தை உடைய ஆசார்யனாக குருவானவர்.

208. வ்யாபிநி, வ்யோமரூபா, அனந்தா, அநாதா, அநாச்ரிதா என்ற வெளிக்கரணத்தோடு கூடியது.

209. அந்த கரணத்தோடு கூடி சமானமாக இவ்வாறு கற்பித்ததாக ஆத்மதத்வம், உன்மநா ஆகிய எல்லாம் சமமாக நிரம்பிய தேஹத்துடன் கூடியதாக

210. பூரக, கும்பங்களை செய்து நாக்குடன் தொடர்புள்ள இரண்டு உதடுகளை மெல்ல திறந்த முகத்துடன் பற்களை தொடாதராறு (ப்ராசாத மந்திரங்களை உச்சரித்து)

211. நல்ல உயர்ந்த காத்ரமுள்ள குரு தன் ஆத்மாவில் சிசுவாகிய சிஷ்யனைக் கொண்டு ப்ராண வாயுவினால் சுஷும்னாநாடியை ஒன்றாக செய்து சிவ ப்ராசாதத்தை ஜபித்து

212. மந்திரத்துடன் கூடிய சிஷ்யனுடைய சைதன்யத்தை சுத்தஸ்படிக ஸந்நிபமாக நிறைவு செய்து காரணேச்வரர்களை விட்டு யோகத்தால் மந்திரங்களை உச்சரித்து நன்றாக பாவிக்க வேண்டும்.

213. சிஷ்யனை பூரக கும்பத்தால் சிவனிடத்தில் சேர்க்க வேண்டும். வெளியே சென்றுவரும் மனஸை பிராணன், நாதம், சக்தி, கலாத்மகமாக செய்து

214. ஸம்ஹார முத்ரையால் இறந்ததான அழிவை விட்டு ச்ருக் ச்ருவ சமீபத்தில் சுத்தமாக உயர்வாக சிகை கல்பத்தை சிவாக்னியிலிருந்து எடுத்து பரிசுத்தமானதாக அந்த விபூதியை சேர்க்க வேண்டும்.

215. சிஷ்யனின் சரீரத்தில் அஸ்திர மூலமந்திரத்தால் முன்பு போல் சிஷ்யனுக்கு சேர்க்க வேண்டும். அங்கே சிவஸ்வரூபமாக இருந்தாலும் சிவ சமான குணமாக செய்யப்பட்டாலும் அதனால் அனாதி பாசசேர்க் கையால் சர்வக்ஞத்வாதி குணங்கள் சிஷ்யனிடம் இருப்பதற்கு இல்லை.

216. எதுவரை முயற்சியையுடைய சிஷ்யனுக்கு தத்வப்ராப்தியோ அதுவரை பரமேஸ்வர அனுக்ரஹம் உண்டு. சாம்ராஜ்யத்தை அடைந்த உயர்ந்த அரசனுடைய குமாரனுக்கு எப்படி கடமைகள் ஏற்படுகின்றதோ அவ்வாறே சிஷ்யனுக்கும்

217. தன் ஆறு குணங்களை அறியாததால் நூறு வருடமிருந்தும் பிரகாசிப்பதில்லை. வ்யாஹ்ருதி மந்திரத்தால் சிஷ்யனுக்காக ஸ்ருவத்தால் தன் குணத்தையுள்ளதாக ஆறு ஆஹூதிகள் செய்ய வேண்டும்.

218. புத்தி உள்ள ஆசார்யன் கீழ்வரும் இந்த முறைப்படி செய்யவேண்டும். ஸர்வக்ஞன் நித்திய ஸம்போதம், ஸ்வதந்த்ரன் த்ருப்திமான பவ என்றும்

219. அலுப்த ஆனந்த சக்தி இவைகளும், ஹ்ரஸ்வப் ரசாத என்ற ஹாம் எழுத்தை ஆத்மன் என்ற பதத்தையும் ஸ்வாஹா என்ற பதத்தையும் கூடியதாகவும் சொல்ல வேண்டும். ஆத்மன் ஸர்வக்ஞோபவ, ஹிம் ஹாம் ஆத்மன் பரித்ருப் தோபவ, ஹ்ரூம் ஆத்மன் அனாதி போதோபவ, ஹைம் ஆத்மன் ஸ்வதந்த்ரோ பவ, ஹளம் ஆத்மன் அலுப்த சக்திர்பவ ஹ: ஆத்மன் அனந்த சக்திர்பவ என்பதாக ஹோமம் செய்ய வேண்டும்.

220. இவ்வாறு சர்வ பாபங்களையும் போக்கும் நிர்வாண தீக்øக்ஷ சொல்லப்பட்டது. பிறகு நான்கு பிரிவினரான ப்ராம்மணர், க்ஷத்ரியர், வைச்யர், சூத்ரர் இவர்களும் அனுலோமர்களும் இந்த தீக்øக்ஷ செய்து கொள்ள சாஸ்திர சம்மதம் உண்டு.

221. இதற்கு மாறான தவறான பிறப்பினர் தீøக்ஷ செய்து கொள்ள அதிகாரமுள்ளவர்கள் மாப்பிள்ளை, தகப்பனார், மனைவி மோக்ஷத்தை விரும்பும் அனைவரும் தீøக்ஷ பெற யோக்யதை உள்ளவர்கள் ஆகின்றனர்.

222. தீøக்ஷயின் கர்த்தா சிவனாக ஆகிறான். அவர்களுக்கு புத்ரத்வம் என்பது இல்லை. கீழ்தரப்பட்ட வர்ணத்தவர்களுக்கு அவுத்ரீ தீøக்ஷ என்ற மண்டலம் பூஜையுடன் கூடிய தீøக்ஷ இல்லை. ஆனால் அவர்களுக்கு சாக்ஷúஷதீøக்ஷ மட்டும் செய்யலாம்.

இவ்வாறு உத்திரகாமிகாகம மஹாதந்திரத்தில் நிர்வாண தீக்ஷõ முறையாகிய இருபத்திமூன்றாவது படலமாகும்.
படலம் 22: கனவுகள் முறை!

22 வது படலத்தில் கனவுகள் முறைப்பற்றி கூறப்படுகிறது. முதலில் தீட்சைக்கு முன்பும் விருப்பமான செயல்களிலும் உயர்ந்ததான கனவு காணவும் கூறப்படுகிறது. யாமம் என்ற கால முறைப்படி கனவின் பயன் கூறப்படுகிறது. சுபமான பலனை கொடுக்கக் கூடிய சொப்பனங்கள் கூறப்படுகின்றன. பிறகு அசுபமான பலனை கொடுக்கக் கூடிய சொப்பனங்களும் நிரூபிக்க படுகின்றன. கனவில் தேவர்கள், பித்ருக்கள் முனிவர்கள் பிராம்மணர்கள் அரசன் இவர்கள் என்ன கூறுகிறார்களோ அதன் படியே பயனும் கிடைக்கும் என கூறப்படுகிறது. தாது என்ற தோஷத்தை கொடுக்க கூடிய சொப்பனங்களுக்கு சுபம் அசுபம் என்ற அறிவிப்பு இல்லை என கூறப்படுகிறது. இவ்வாறு முன்பு காணப்பட்ட விஷயத்தை உடையவும் முன்பு கேட்கப்பட்ட விஷயத்தை உடையவும் ஆகிய சொப்பனத்திற்கும் நல்லவை, தீயவை என்ற பயன் இல்லை என கூறப்படுகிறது. ஜாதியில், வயதால், பணத்தினாலோ, சுத்தத்தினால், தர்மத்தினால், கல்வியாலோ யார் உத்தமனோ அவனே முதலில் நல்லவை தீயவையோ சொப்பனத்தை ஆசார்யனிடம் தெரிவிக்க யோக்யனாகிறான் என கூறப்படுகிறது. முறையாக ஒரு ஆசார்யன் சிஷ்யர்களின் ஒருவருக்கொருவர் ஆசரிக்க வேண்டிய நியமங்கள் விளக்கப்படுகின்றன. இவ்வாறாக 22வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பிராம்மணோத்தமர்களே! ஸ்வப்னாத்யாயம் பற்றி கூறுகிறேன் கேளும். தீøக்ஷக்கு முன்போ, காம்ய விஷயத்திலோ உத்தமமான ஸ்வப்நத்தை அறிய வேண்டும்

2. அதில் முதல் யாமத்தில் ஸ்வப்நம் ஏற்பட்டால் அந்தந்த காலத்தில் தன்னுடைய பல பாவத்தை கொடுக்கக் கூடியதாக அறிய வேண்டும்.

3. முதல்யாம ஸ்வப்னம் ஒருவருடத்தில் சித்தியாகும். இரண்டாம் யாம ஸ்வப்னம் ஆறுமாதத்தில் ஸித்தியாகும். மூன்றாம் யாமக் கனவு.

4. ஒரு மாதத்தில் ஸித்தியாகும். நான்காம் யாம ஸ்வப்நம் சந்தேஹமின்றி (நிச்சயம்) சீக்கிரமாக பலனைக்கொடுக்கும்.

5. காந்தியுள்ள சூர்யன், நட்சத்ரங்களுடன் கூடிய சந்திரன், பிரதீப்தமான அக்னிஹோத்ரம் ஜ்வாலையுள்ள தீபம்

6. தாய், தந்தை, மனைவி, புத்ரர்கள், ஸஹோதரர்கள், நல்ல ஜனங்கள் இவர்களை ஸ்வப்னத்தில் கண்டால் குறைவில்லாத லட்சுமி கடாக்ஷம் அடைகிறான்.

7. சந்திரன், சூர்யன், நட்சத்ரமிவைகளின் குறைவும், மாறுதலும், அபகரிப்பதாகவும் இவைகளின் தாரணம் போலும் ஸ்வப்னம் கண்டால் ராஜ்யத்தை அடைகிறான்.

8. வெண்மை நிற புஷ்பமாலை, வெண்மை நிறப்பறவைகள், ஸ்வர்ண மயமான பறவைகள் இவைகளை ஸ்வப்னத்தில் தர்சனம் செய்தால் செல்வத்தை அடைகிறான்.

9. கந்தர்வ நகரம், தேவ, கந்தர்வ ஸ்த்ரீகள் (பெண்கள்) ஸ்வப்னத்தில் கண்டால் அதிகமான லட்சுமி கடாக்ஷமடைகிறான்.

10. ஸ்வர்ணமயமான குடை, வெண்மையான மாலையணிந்ததாகவும் மாமரம் முதலிய புனிதமான விருக்ஷம், இவைகளை ஸ்வப்னத்தில் கண்டாலும்.

11. அந்த விருக்ஷங்களில் ஏறுவதாகவும், அவைகளின் பழங்களை பறிப்பதாகவும், அந்த பழங்களை சாப்பிடுவதாகவும் மலை, மாளிகை, குதிரை, யானை.

12. பசு, சிங்கம், காளைகளை தரிசித்தாலும் அவைகளில் ஏறுவதாகவும் ஸ்வப்னம் கண்டாலும் சிம்மா சனம், யானை, பல்லக்கு இவைகளில் ஆரோஹணம் செய்வதாகவும் ஸ்வப்நம் கண்டாலும் சுபமாகும்.

13. ஸூரியன், சந்திரன், அக்னி சமுத்ரம், ஆகாயம், பூமி, மலை, தர்சனத்தாலும், ஆழமான சமுத்ரத்தை தாண்டுவதாகவும், காட்டையும் ஜலத்தையும் தாண்டுவதாகவும்

14. எருமை மாடு, பசுக்களை துன்புறுத்தாமல் பால் கறக்கும் கர்மாவையும், தன்னுடைய இடத்தில், பெண் சிங்கம், பெண் யானை அதன் பந்துக்களுடன்

15. பிரஸவம் ஏற்பட்டதாகி ஸ்வப்நம் கண்டால் அவைகளுக்கு ஸ்வப்ன பலன் ஐஸ்வர்ய மேற்ப்படுத்தல் ஆகும். காராம் பசுவின் பாலை அதன் கன்றுகுட்டி போல் விளையாட்டாக குடிப்பதாக கண்டாலும்

16. தயிர், பக்வமாகாத மாம்ஸம், நல்ல பாயஸ பக்ஷணமும் இவைகள் கிடைத்தாகவும் ஸ்வப்னம் கண்டாலும்

17. அம்ருதம், ரத்தம், கள் இவைகளின் பானமக (குடித்தல்) மீன் சாப்பிடுதலும் அல்லது இவைகளின் தர்சனமும் ருதிர (ரத்த) ஸ்னானமும்

18. பசுமாட்டின் கொம்பினால் அபிஷேகமும், சந்திரகாந்தியால் ராஜ்யாபிஷேகமும் இவற்றை ஸ்வப்னத்தில் தரிசத்தால் சுபமாகும்.

19. பசுமாடு, சிங்கம், யானை இவைகளை சண்டையில் வெற்றியடைந்து பெருவது போலும் சாஸ்திரங்களை படிப்பது போன்றும் அன்னத்தை புசிப்பது போன்றும்

20. நாபியில் புல் மரமுண்டாவதாகவும், புஷ்பம், தீர்த்தம், கேசம் இவைகள் கையில் ஏற்பட்டது போலவும், வெண்மாலை தரித்தாகவும்

21. வெள்ளை வேஷ்டி தரித்த பிராம்மண தர்சனமும், அவர்களின் சுபமான ஆசீர்வாதமும் வெண்மையான பழங்களின் தர்சனமும், விசிறி, கொடி தர்சனமும்

22. தாமரைக்குடையும், மணிகளாலான கண்ணாடியையும், தீபம், சாமரம் ஆயுதம் தாமரைபுஷ்பம் இவைகளையும்

23. சுத்தமான ஜலதர்சனமும் தடாக தர்சனமும், ராஜாதர்சனமும் அவருடன் பேசுவது போல் ஸ்வப்னம் கண்டால் சுபமாகும்.

24. பிரதிமையுடன் கூடிய தேவலாயத்தையும் வெண்மையான பசுவையும் ஸமுத்ரம் (கடல்) ஜலமுள்ள நீர்வீழ்ச்சியையும் ஸ்வப்னத்தில் தர்சனம் செய்தால் செல்வத்தை அடைவான்.

25. ஸமுத்ரம், நீர்வீழ்ச்சி இவற்றின் நீரை குடிப்பதாக ஸ்வப்னம் ஏற்பட்டால் ராஜ்யமடைகிறான். சங்காபரணமும், ஸ்வேத (வெண்மை) வஸ்த்ர புருஷனையும்

26. அழகும், இளமையுள்ள பெண்களையும், அந்த லக்ஷணமுள்ள லக்ஷ்மியை ஸ்வப்னத்தில் தர்சித்தால் உத்தமமான செல்வத்தை அடைகிறான்.

27. பாம்பை பிடிக்கும் குமாரனையும், யானையையும் ஸ்வப்னத்தில் கண்டால் புத்திரனையடைகிறான். புல்லையும், அதிக தான்யத்தையும், அக்னியுடன் கூடிய வீட்டையும்

28. ஸ்வப்னத்தில் பார்த்தால் லக்ஷ்மியை அடைவான். மின்னலையையும் ஜலமுள்ள பூமியையும் சத்ருநாசனமும், சத்ருக்களை கொல்வதாக வேண்டும்.

29. விவாததூதங்களில் வெற்றியும், யுத்தத்தில் விஜயத்தையும் கண்டால் லக்ஷ்மியை அடைகிறான், பூமியில் சந்திரன் பிரவேசனமும்

30. சுத்தமான ஆகாயம் உணவை அடைவது, இறந்தவன் அக்னியை கிரஹிப்பது இவைகளை கண்டால் அரசத்தன்மையை அடைகிறான்.

31. வீணை முதலிய நரம்பு வாத்யவாதனத்தை மனிதன் ஸ்வப்னம் கண்டால் சுகத்தை அடைகிறான். மரத்தை தாண்டுவதும், அழுவதும் சுபத்தை கொடுக்கும்.

32. அந்நிய ஸ்தீரீகளை ஸ்வப்னத்தில் காண்பது லாபத்தையும் அவர்களின் ஆலிங்கனமும் சங்கிலிகளால் கட்டுண்டு இருப்பது போலும், தான்யம், தனது சரீரம் எரிவது போன்றும்

33. சரீரத்தை விட்டு வெளியில் நிற்பது திசைகள் தாறுமாறாக சுற்றுதல் போன்றும், தானாக வந்த பாம்பினாலோ சிங்கத்தினாலோ (புசிப்பதாக) தன்னை கண்டாலும்

34. பயிர்களின் தர்சனமும் ஹ்ருதயம், தலை இவைகளின் தர்சனமும் ரத்னகற்களாலான பாத்திரத்திலும் வெள்ளி பாத்திரத்திலும் போஜனம் செய்வதும்.

35. ஸ்வர்ணமயமான இலையில் தாமரை இலையில், தயிரன்ன போஜனமும், குதிரையில் (கணைத்தல்) சப்தமும், வெற்றியடை, சாப்பிடு என்ற சப்ததையும் ஸ்வப்னம் கண்டால் சுபமாகும்.

36. முத்ரை, வண்டுகூட்டம், மழை, இவைகளின் ஸ்வப்னதர்சனம் சுபமாகும். பிண்ணாக்கு, விராட்டித்தூள் இவைகளை கண்டால் சுபமாகும். தன் வீடு உயர்ந்ததாகவும் கண்டால் சுபமாகும்.

37. பந்துக்களுடனும், பிரகாசிக்கிறதன்னை வீட்டில் இருப்பவனாகவும் மங்களரமான அங்குரங்களையும், (முளைப்பாலிகை) கல்வி அளிக்கிற சிவாகமத்தையும்

38. ரத்தத்தால் சிகப்பான கால்களையும் (பாதம்) தோலையும் ஸ்வப்னத்தில் ஸ்வப்னத்தில் தர்சனம் செய்தால் சீக்கிரமாக ஐஸ்வர்யத்தையும் பல குழந்தைகளையும் அடைகிறான்.

39. எவனுடைய வலக்கை வெட்டப்பட்டு ரத்தத்துடனாக ஸ்வப்னத்தில் காண்கிறானோ, அவன் புகழையும், ஆயுளையுடைய குழந்தையையும் சீக்கிரமாக அடைகிறான்.

40. எவன் தலையை ரத்தமுடையதாகவும், வெட்டப்பட்டதுமாக ஸ்வப்னம் காண்கிறானோ அவன் க்ஷிப்ராரோக்யமும் பணத்தையும், அபிவ்ருத்தியையும் அடைகிறான்.

41. ஸ்வர்ணமயமாக சரீரத்தை ஸ்வப்னத்தில் தர்சித்தால், ஸர்வாபரண பூஷிதராகவும் ஸ்வப்னத்தில் கண்டால் தனதான்யத்தை அடைகிறான்.

42. கடைவைத்து ஜீவிப்பவனாக தன்னை ஸ்வப்நத்தில் பார்க்கிறவன், கடைவ்யாபார அபிவிருத்தியையும், ஆயுளையுமடைகிறான்.

43. சக்ரம், பூர்ணகும்பம், ஸ்ரீவத்ஸம் ஸ்வஸ்திகம் இவைகளையும், ஸோமபானம், குடிப்பதாகவும் ஸ்வப்ன கண்டால் விருப்பப்பட்ட பலனையடைகிறான்.

44. சிவாகமாதி சப்த சிரவணத்தை ஸ்வப்நத்தில் கண்டால் பணத்தைக் கொடுக்கும், குரு, ஆக்ஞை ஆகமம், தேள், தர்சனமும் சுபமாகும்.

45. தேவஸ்த்ரி, மருத்கணஸ்திரீ, பிராம்மண ஸ்த்ரீ இவர்களோடு பேசுவது போல் ஸ்வப்நம் கண்டால் சுபமாகும். தாம்பூலம், மை, பில்வம், குங்குமம், மண்டலம் இவைகளையும்

46. செங்கல் செய்வது போலும் சுவர், வீடு அமைப்பது போலும், நந்தவனம் அமைப்பது போல் காண்பது சுபமாகும்.

47. செல்லக்கூடாத இடங்களுக்கு செல்வதாகவும் சரீரம் முழுவதும் அம்பு பந்தனமாகவும் பந்துக்களோடு பணத்தை பங்கிட்டுக் கொள்வதாகவும் கன்னிகைக்கு கணவனை அடையச்செய்தலும்

48. ஸ்னாநம் சிவார்ச்சனம், அக்னிதர்பணம், நல்லோர் தர்சனம், கணங்களின் தர்சனம், அறிஞர்களின் தர்சனம், அம்ருதபானம் ஆகாயத்தில் பறப்பது போல் (கனவு)

49. இவ்வாறானவைகளை, ஸ்வப்னத்தில் தர்சித்தால் சுபத்தின் அறிகுறியாகும். பூமி, வஸ்த்ர லாபம், கட்டில், படுக்கை, வஸ்திரம் எரிவதாகவும்

50. ஆஸனம் எரிவதாகவும், படகில் ஏறுவதாகவும் புதிய வெண்மையான ஆடையை தரித்தாகவும் சுத்தமான அன்னம் புசிப்பதாகவும்

51. தேனீ, தாமரை இவை ஜனிப்பதாகவும், பேன் இவைகளை அழிப்பதாகவும் சங்க பத்மநிதி லாபமும் சுபமான ஸ்வப்னமாக கூறப்படுகிறது.

52. பார்த்த பொருள் கிடைக்காததாகவும் அடைந்த (கிடைத்த) பொருள் அபஹரிக்கப்படுவது போலும் ஸ்வப்னம் கண்டால், விருப்பமில்லா அறிகுறியாகும்.

53. லிங்கம், பிரதிமை பின்னமானதாகவும், ராஜா மரணமடைந்ததாகவும் பிண்டிகை அரசி, ராஜ்யத்தின் ஸ்தானங்களின் குழப்பமேற்படுதலை போலும்

54. பந்துக்களின் அழிவையும், புத்ரநாசத்தையும், அக்னிபிரவேசம், கையில் கிடைத்த பொருள் பழம் அழிந்தது போலவும், விபூதி வெல்லம் பழம், காய்கறி இவைகள் கையிலிருந்து நழுவியதாக கனவு கண்டால் விருப்பத்தை தராததாகும்.

55. வெளிதேசத்திற்கு செல்வது போலும், ஜாதியிலிருந்து நழுவதலையும், வியாதி பீடிக்கப்பட்டது போலும், மேல்தூக்கிய விகாரமான பல்லையும், அழுக்குடைய தன்மையையும் கண்டால் அபசகுனம்.

56. தங்கம், வெள்ளி இவைகள் நெருப்பு, மூத்ரம், மலம் இவைகளிலிருந்து வெளிவந்ததாக கண்டால் அசுபமாகும். தலையில் வெண்கலப் பொடியையும் நிர்வாணம், அழுக்குதுணி.

57. எண்ணை தேய்த்துக் கொள்வது போலும், கீழே விழுவது போலும், உயர்ந்த ஊஞ்சலில் ஏறுவது போலும் ஸ்வப்னம் கண்டால் அசுபமாகும். சிகப்பு புஷ்பமரம், சண்டாளன், வேடதர்சனம்

58. பக்வமாம்ஸத்தை புசிப்பது போலும், எண்ணை ரத்தம் இவற்றை கனவில் கண்டாலும் நர்தநமாடுதல், விழுங்குவதாகவும் தனக்கு விவாஹம் (திருமணம்) ஏற்படுவது போலும், பாடுவதுபோலும்

59. நரம்பு மீட்டி வாசிக்கும் வாத்யமல்லாத வாத்யங்களை இசைப்பது குளிப்பது கோமய (பசுமூத்ரம்) ஸ்நானம்

60. முடவன், அன்னம், தாயாரின் மடியில் இருப்பதாகவும் காண்பது அசுபமாகும். (சுடுகாடு) சிதையில் ஏறுவது, மின்னல் விழுவதாக வேண்டும்

61. சூர்யன், சந்திரன், நட்சத்ரங்கள் விழுவதாக ஸ்வப்னம் கண்டால் அசுபமாகும். ஆகாயம் அந்தரிக்ஷம் பூமி இவைகளின் விழுதலை தர்சித்தாலும்

62. தெய்வம், பிராம்மணர்கள், அரசன், குருக்களின் (ஆசார்யர்களின்) கோபம், குமாரியை ஆலிங்கனம் செய்வதாகவும், புருஷர்களின் மைதுனத்தையும்

63. தன்சரீர குறைவையும், விக்கல், வாந்தி எடுத்தலையும் தெற்கு நோக்கி செல்வதாகவும் தொப்பூழ் வியாதி இருப்பதாகவும்

64. வீடுகள் விழுவதாகவும், வீட்டை பெருக்குவதாகவும், பிசாசு, ராக்ஷஸர்கள், குரங்கு மனிதர் இவர்களாலான பீடையையும்

65. பிறரால் உண்டானதும் அதனால் துக்கம் ஏற்பட்டதை போலும், காவியுடை அணிந்ததாகவும் காவியுடை அணிந்த பெண்களுடன் விளையாடுதலை செய்வதாக வேண்டும்

66. அவர்களுடன் ஸ்நேஹம், பானம், குளித்தல், சிவப்பு புஷ்பமாலை தரித்தல் விளையாடுவது நக்குவது வெடிப்பு பசி, தாகத்தால் பரிச்ரமம்

67. நட்சத்ரங்கள் கொடிகள் அருவிகள் செல்லுதலும் மீசை, தாடி கேசவபனம், பிரதாபத்தில் ரஜ்ஜு விடுபடுவதாகவும்

68. நகத்தை நீட்டாக வளர்ப்பதும் ஸ்த்ரீகளை ஸேவிப்பதாகவும் உத்ஸவத்தில் விரூபநரனால் சரீரத்தை ஹிம்சிப்பதையும்

69. பசு, புழு, பறவைகளின் ஸ்தம்பித்தது போலும் மரணத்தையும், தாண்டுவதும், வெடிப்பும் வெளியில் செல்வதுபோலும் ஸ்வப்னம் ஏற்பட்டால் அசுபமாகும்.

70. ஜது பாண்டத்தினால் ஸரஸ்ஸில் விளையாடுவது, நர்த்தனம், செய்வதும் திரவ்ய நாசமாகும். நண்பஹாநியும், நண்பவியோகமும் கருப்பு வஸ்த்ரதாரியும்

71. வெட்டுபட்டகையையும், தாமரையை அபஹரிப்பதும். கிழிந்த கந்தலான வஸ்த்ரத்தையும் கோயில், வீடு, மாடியிலிருந்து இறங்குவது போல் காணும் கனவு அசுபமாகும்.

72. காது, மூக்கு முதலிய இடங்களில் ஸர்ப (பாம்பு) பிரவேசமானது போலும் பருத்தி, எள், கிழங்கு, இரும்பு முதலிய உலோகம் கிடைப்பதுபோலவும்

73. ஸ்வஸ்த புருஷனுக்கு வியாதி ஏற்பட்டது போலும், வியாதிஸ்தன் மரணமடைந்து போலும், கொடி பின்னமானதாகவும், குடைபின்னமானதாகவும் ஸ்வப்னம் கண்டால் அசுபமாகும்.

74. ஒருவரின் தாமரையை தரிப்பது அசுபமாகும். சிரிப்பதும், எள் சாதத்துடன் சாப்பிடுவதும்

75. கீழே தொங்குகிற சிரஸாகவும் அந்த தலையோடு தைலஸ்னானம், செய்வது போலும் பல் உடைந்தது போலும், யானையும், பூமியும், அக்னியால் எரிந்ததாகவும்.

76. மரங்கள், மலை இவைகளின் பீடத்தில் கருப்பிரும்பு, பீடத்தில் இருப்பதாகவும், தேர் கருப்பாக ஆனதாகவும் தேர் கழுதையோடு கூடியதாகவும்

77. வெளியில் செல்வதாகவும், கட்டப்பட்ட கழுத்தாகவும், குள்ளநரி பீடை, ஸர்பபீடனம் நிருத்தம் ஸமஜமில்லததாகவும், நாபிக்கு கீழ் பிரதேசங்களில்

78. புல், மரம், புசுக்கள் உண்டானதாகவும், விளையாடுதாகவும் ருத்ராகாரமாக, கழுதை, குரங்கு, பாம்பு, ஒட்டகம் இவைகளின் போகத்தையும்

79. மற்ற ஸத்வர்களால் இஷ்டமில்லாத சரீரத்தில் பூசுவதும், அசுபமாகும். கோமயலேபனமும், எண்ணை பசையாலும் சேர் குழம்பிய ஜலங்களால் பூசிக்கொள்ளுதல் வேண்டும்.

80. நாக்கு, கைகளின் நகம், ரோமவிச்சேதனம் ஸ்வப்ன தர்சனமும் அசுபமாகும். பாம்பு நம் சரீரத்தின் மேல் ஏறுதலும், நம்மை நுகர்வதும் போல் ஸ்வப்நம் கண்டால் நல்லதல்ல

81. நாய்களாலும், விகாரமான முகமுள்ளவர்களாலும் மிகவும் முகர்ந்ததும், தனக்கு முன் சேர்ந்து இருப்பதாகவும் ஸ்வப்னத்தில் கண்டால் துக்கத்தை அடைகிறான்.

82. எவனுடைய அங்கம் முழுவதும் பிரவிரஜித பிரேதங்களால், குப்புறசயமனமாகவும் ஸ்வப்னம் கண்டால் சமீபவாசியான யமதூதர்களால் இழுக்கிப்படுகிறான்.

83. சிற்றிலவை (இலவமரம்) புரசு, குளிர்ந்த பூவரசு, தேவதாருவிருக்ஷம், புஷ்பங்களோடு கூடியதாகவும் யார் ஏறுவதாக ஸ்வப்னம் காண்கிறானோ

84. இம்மரங்கள் உலர்ந்து வறண்டு போதலையும், பிரமேயமுள்ளவர்கள் தீர்த்தபானமும் செய்வதற்காகவும், வெண்குஷ்டரோகிகள், மஞ்சள் போஜனமும்

85. ரத்த பித்தம், குடிப்பதாகவும் ரத்தக் கலராக இருப்பது போல் தர்சித்தால் அழிவடைகிறான். ஸ்வப்நத்தில் உடைந்தவானத்திலிருந்து இறங்குவது போலும் காண்பது அலக்ஷ்மியைகொடுக்கும்.

86. சூர்ய சந்திர நக்ஷத்ரங்களின், அசுபத்தத் தன்மையை காண்பது அசோபனமாகும். தாமரை ஹவிஸ் கன்னிகை இவர்கள் ஆகாயத்திலிருந்து ஏற்பட்டதாகவோ.

87. கிருஹங்களின் (ஆழ்வும்) கிரஹணமும், ராஜாவிற்கு மரணம் மேற்படுமாகும், அசுபமாகும். அசுபங்களின் தர்சனமும், அவைகளால் ஆலிங்கனம் செய்யப்பட்டதும்

88. காக்கை, கழுகு, பருந்து, பிசாசு, ராக்ஷஸர் பிரதிமை விழுவதாகவும் ஸ்வப்னத்தில் தர்சனம் செய்தால் துக்கத்தை அடைகிறான்.

89. விழுந்ததும், மேலெழுந்துமான, கொடி, மலை, காளை, வீடு, பெரியசுவர் இவைகளை ஸ்வப்னத் தில் கண்டால் பிரதானமானவர்க்கு மரணமேற்படும்.

90. அணைந்த தீபம், வண்ணான், தூது செல்பவன், வர்ணம் தீட்டுபவன், மலேச்சர், அந்த்யஜர், கருப்பு பல், துர்முகர் இவர்களை தர்சித்தால்

91. கபால, பைத்ய வேஷ புருஷனையோ, ஸ்த்ரீயையோ, சூலத்துடன் கூடிய மானையோ ஸ்வப்ந முடிவில் தர்சித்தால் உடனே மரணமேற்படும்.

92. கொல்வதாகவும், தற்கொலை செய்து கொள்வதாகவும் கண்டால் அதே பலிதமாகும். குதிரை, ஒட்டகம், கழுதை, எருமை, நாய்

93. ஓநாய், பெண் எருமை, எண்ணை, கெட்ட நிறம், காக்கை, நரி, காளை, பன்றி, பூஜை, ஆந்தை, கருநிற ஸர்ப்பம்

94. கரும்புழு, கரும்பசு, இவைகளை ஸ்வப்னத்தில் தர்சனம் செய்தால் பயமேற்படும். மேற்க்கண்ட பிராணிகளை ஸ்பர்சித்தாலும், கிரஹித்தாலும் ஆரோஹித்தாலும்

95. ஸ்வர்ண விருக்ஷத்தை ஸ்வப்நத்தில் தர்சித்தாலும், மரணமேற்படும், அக்னி, வாஹனம், தேர், குடை முதலியன பின்னமேற்படாது போலும்.

96. விதவையை, பார்த்தல், விதவை சங்கமுமாக தர்சித்தால் தனக்ஷயமேற்ப்படும். தான் எரிந்து புகைவதாகவும் சிரஸை முண்டநமாகவும்

97. அந்நியர்களால் கட்டியதாகவும் சண்டை போட்டதாகவும் தர்சித்தால் பயமேற்படும். கஞ்சி, மது, குடிப்பதாக தர்சித்தால் தனநாச மேற்படும்.

98. அரிசி, பக்வமாம்ஸம், உமி, நெருப்பு, பயறு, உளுந்து, மிளகு, கடுகு இவைகளை ஸ்வப்னத்தில் கண்டால் அசுபமேற்படும்.

99. குண்டங்களில் குதிப்பது, விருப்பமில்லாதவைகள், கேச விகீர்ணத்வம் (தலைமயிரை அவிழ்த்து போட்டுக் கொள்ளுதல்) திரி, நல்லெண்ணை, மை, முதலியவைகளை பூசிக்கொள்வது போல் கனவு கண்டாலும்

100. இருட்டில் படுத்திருப்பதும், பெரிய வழியில் செல்வதாகவும் ஸன்யாஸி பிரேதங்களோடும், முட் புதர்களில் நுழைவதாகவும்

101. (நட்சத்ரத்தை) தாரத்தை பக்ஷிப்பதாகவும், பிணத்தை பக்ஷிப்பதாகவும் சிகப்பு வர்ணத்ரவ்யம் கிருஷ்ணவர்ணமாவதாகஸ்வப்நம் கண்டால் உயர்வில்லை என்பதாகும்.

102. கிருஷ்ண வஸ்த்து சிகப்பு வஸ்துவானால் அசுபமாகும். வேறுவிதமாக ரத்தத்திலிருந்தும், தாமரையிலிருந்து புரசமரத்திலிருந்தும் ரக்த சந்தனத்திலிருந்துமாக கருப்பு பொருள் ஏற்பட்டாலும்

103. அவ்வாறே, வண்ணான், வர்ணம் தீட்டுபவன், தூதன், ம்லேச்சன், பாஷண்டன் இவர்களை கனவில் கண்டால் அவனுக்கு அசுபமேற்படும்.

104. பாம்புப்புற்று தர்சனம், காய்ந்த விஷவ்ருக்ஷ தர்சனம், பூதங்களின் அழுகை, க்ஷணநேரத்தில் மரம் விழுதலும் இஷ்டமில்லாததாகும்.

105. தேவதைகள், பிராம்மணன், பித்ருக்கள், யோகிகள், அரசன் இவர்களுடன் கனவில் யார் பேசுகிறானோ அவன் அவ்வாறே ஆகும். (நடக்கும்)

106. பிராத்திக்கிற கர்ம விபாகம் சுபாசுபத்திற்கும், ஸ்வப்னத்தில் லிங்கம் தர்சித்தால் தாது லிங்கம் தோஷமில்லை.

107. எந்த சிறந்ததாதுவும் தாதுவால் தூஷிக்கப்பட்டும் அந்த விகாரமாக ஸ்வப்நத்தில் பிரத்யக்ஷமாக காண்பது போல் காண்கிறானோ

108. யார் தூங்கியவனாக பொருளை எடுத்து தர்சித்ததை கேட்டதை, அதே சிந்தனை ஸந்ததியாக ஸ்வப்னத்தில் காண்கிறானோ ப்ரத்யக்ஷமாக பிரகாசிப்பது போல் அனுபவிக்கிறான்.

109. சுபாசுபமான இருவகை ஸ்வப்நவிக்ஞானம் ஆகமத்தில் அபிப்ராயமேதுமில்லை. தர்சன தொகுப்பின் ஞானம், ஆகாயம் வியாபித்தது போல் பிரகாசமாகும்.

110. ஸ்வப்நத்தில் சுபாசுபமாக, யார்சமமாக காண்கிறானோ, அவன் ஒருமைப்பாட்டை விடுபட்டவனாகிறான். அது உண்மையாகும், இது ஒன்றும் விசேஷமில்லை.

111. சுபம், அசுபம், ஆனஸ்வப்னங்களை ஆசார்யனிடத்தில் தெரிவிக்க வேண்டும். பிராம்மணாதி வர்ணக்ரமமாகவோ வயதுக்ரமமாகவோ, பொருளாலோ

112. ஒழுக்கத்தினாலோ, தர்மத்திலோ, வித்யையினாலோ யாருக்கு ஸ்ரேஷ்டத்வம் உள்ளதோ அவனிடம் முதலில் தெரிவிக்க வேண்டும்.

113. இந்த வரிசைக்ரமமாகவே தங்களுடைய ஸ்வப்நத்தை தெரிவிக்க வேண்டும். ஆசார்யனுடைய அனுக்ஞையாலே அவைகளின் ஜ்யேஷ்டத்தை அறிய வேண்டும்.

114. பிராம்மண ஸமயதீøக்ஷ ஸம்ஸ்காரத்துடன் கூடியவன், நிர்வாண தீøக்ஷயோடு கூடியவன் சூத்ரனும், ஒரே பாத்தியதையுடைய இருவரும்

115. மேற்கூரியவர்களின் நடுவில் எவனுக்கு நியோகமேற்படுகிறதோ அவனை குருவை ஆச்ரயிக்க வேண்டும். முதலில் ஸமானதீøக்ஷயுடன் இருந்தாலும்

116. எங்கு நியோக மேற்படுகிறதோ, அந்த சிசுவே முன்னதாகவே உத்தம குருவை நமஸ்கரிக்க வேண்டும், ஜாதி முதலியன சமம், ஸ்மஸ்காரஸமமாக இருந்த போதிலும்

117. எந்த தேசிகனுக்கு நியோகமேற்படுகிறதோ அவனே முதலில் குருவை ஆச்ரயிக்க வேண்டும். பரஸ்பர நமஸ்காரமும், இது மாதிரியான கிரமமாக அறிய வேண்டும்.

118. ஜ்யேஷ்டத்வத்திலும் ஸமஸ்காராதிகள், அவர்களுக்கு குரு அனுமதியுடன் செய்க, குருவிற்கு ஸமானமான நமஸ்காரங்கள் காரணமில்லை.

119. ஓர்தேசிக சிஷ்யர்களின் ஆசாரம் கூறப்பட்டுள்ளது. அதிகமாக கூறுவதேன், தேசிகனால் எது கூறப்படுகிறதோ

120 அவ்வாறே ச்ரேயஸ்ஸை விரும்புகிற சிஷ்யர்களால் எப்பொழுதும் அனுஷ்டிக்கப்படவேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாமக மஹாதந்திரத்தில் ஸ்வப்நாத்யாய விதியாகிற இருபத்தியிரண்டாவது படலமாகும்.
படலம் 21: ஸ்தாலீபாகம் முறை

21வது படலத்தில் ஸ்தாலீபாகம் முறை கூறப்படுகிறது. முதலில் (ஸ்தாலியை) நைவேத்ய பாத்ரத்தை தாமிரம் அல்லது மிருத்பாத்ரம் லட்சணத்துடன் கூடினதாக அமைத்துக் கொள்ளவும். என்று பாத்ர அமைப்பு கூறப்படுகிறது. நைவேத்ய பாத்ரத்தின் ஸம்ஸ்கார முறைப்படி சருபாகம் செய்ய லட்சணம் கூறப்படுகிறது. அதில் நெல், அரிசி இவைகளின் அளவு அமைப்பு தயார் செய்யும் முறை அதிக உஷ்ணத்திற்காக நெய் சேர்த்தல், உஷ்ணம் இல்லாததற்கு நெய் சேர்த்தல் ஆகிய சம்பாத ஹோமங்களின் செய்யும் முறை ஆகிய விஷயங்கள் கூறப்படுகின்றன. இவ்வாறு சம்பாத ஹோமம் செய்யப்பட்ட சருவால் ஹோமம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது. பிறகு சருவில் முதல் பகுதி தேவர்களின் நிவேத்யத்திற்கும் 2ம் பகுதி ஹோம கர்மாவிற்கும் 3ம் பகுதி பரிவார தேவதைகளுக்கும் 4ம் பகுதி ஆசார்யனுக்கும் என்று பிரித்து கூறப்படுகிறது. சரு என்றால் எல்லாவற்றையும் ஈச்வரனுக்கு அர்ப்பணம் செய்யவும் என்று சரு பிரிக்கும் முறை முடிவில் பலனை விரும்பும் சாதகர்களில் பிராணாக்நிஹோத்ரம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறாக 21 வது படல கருத்து தொகுப்பாகும்.

1. நைவேத்ய சருகல்பன முறையில் ஸ்தாலீபாகம் செய்யும் முறையை கூறுகிறேன். தாம்ரம் அல்லது மண்மயமானதும் லக்ஷணத்தோடும் கூடிய நைவேத்ய பாத்திரத்தை (ஸ்தாலி)

2. (பாத்திரத்தை) அஸ்த்ர மந்திரத்தினால் அலம்பி சுத்தி செய்து கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்து, நீரீக்ஷணம் பிரோக்ஷணம் அப்யுக்ஷணம், ஸந்தாடனம் செய்து சந்தனத்தை பூசி

3. கவச மந்திரத்தினால் பட்டு நூலை கழுத்தில் சுற்றி சாணத்தால் மெழுகிடப்பட்டதும் அஸ்தர பிரோக்ஷணம் செய்யப்பட்டதுமான மண்டலத்தில்

4. கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்த பாத்திரத்தை மந்திர நியாஸம் செய்த தர்ப்பத்தில் ஷடுத்தாஸனம் பூஜித்து அதன் மேல் மந்திர ரூபமான பாத்திரத்தை வைத்து

5. ஆவரண ஸஹிதமான சிவனை ஆவாஹித்து பூஜை செய்து, புஷ்பம் முதலிய வஸ்துக்களை எடுத்துவிட்டு நெய்பூசி வடிகட்டிய (சுத்தமான) பாலை ஊற்ற வேண்டும்.

6. அடுப்பை அஸ்திரமந்திரத்தால் உல்லேகனம் (கோடிட்டு) செய்து, அஸ்திரத்தால் பிரோக்ஷணம் அவகுண்டனம் செய்து துடைத்து மெழுகி அடுப்பில் தர்மனையும், அதர்மனையும் பூஜை செய்ய வேண்டும்.

7. (அடுப்பின்) வலது இடது பக்கத்தின் மத்தியில் சிவாக்னியை நியஸித்து பிரணவத்தால் ஆஸனம் கற்பித்து பாத்திரத்தை அடுப்பின் மேல் வைக்க வேண்டும்.

8. துவரையை இரண்டு படி அளவிலோ அல்லது ஐந்து உள்ளங்கை அளவிலோ நான்கு படி அளவு அரிசி முதலான திரவ்யங்களை எடுத்து

9. அஸ்த்ரமந்திரம் ஸ்மரித்து தீர்த்தத்தால் கலைந்து சுத்தி செய்து, அகோர மந்திரத்தை ஸ்மரித்து கிழக்கு முகமாக பக்வம் செய்து மத்ய பக்வம் ஆகும் வரை செய்ய வேண்டும்.

10. ஹவிஸ் மிக உஷ்ணமாயிருப்பின் உஷ்ண சமணத்தின் பொருட்டு நெய்யை விடுதலும், குளிர்ச்சியாக இருப்பின் அதைபோக்குவதற்கு நெய்யை விடுதலும் செய்து அன்னத்தை குண்டத்தின் சமீபம் கொண்டு சென்று சிவாக்னியில் ஸம்ஹிதா மந்திரத்தினால் ஸ்வா என்ற பதத்தை முடிவாக கொண்டதாக ஹோமம் செய்து

11. ஹவிஸில் ஹா என்று ஸம்பாத ஹோமம் செய்து ஸுஸ்விந்நோபவ என்று தப்தாபிகாரமும் இரண்டாவது மண்டலத்தில்

12. பிரோக்ஷணம்செய்து பூஜித்து சருபாத்ரத்தை வைத்து சுசீதளோபவ வளஷட் என்ற மந்திரத்தினால் என்று ஆஹுதியை

13. சீதாபீகாரமாகவே செய்து சம்ஹிதா மந்திரத்தினால் ஸம்பாதஹோமம் செய்து, மண்ணாலும் ஜலத்தாலும் பாத்திரத்தை தேய்த்து (சுத்தி செய்து) தேனுமுத்ரையால்

14. அம்ருதீ கரணம் செய்து குண்டத்திற்கு பூர்வ மண்டலத்தில் மேற்கு திக்கில் ஹ்ருதயாதி மந்திரங்களால் பூஜித்து

15. சிவமந்திரத்தால் நூற்றியெட்டு ஆஹுதி ஸம்பாத ஹோமம் முன்பு போல் செய்யவும். இவ்வாறு ஸம்பாதஹோமம் செய்யப்பட்ட சருவால் ஹோமம் செய்ய வேண்டும்.

16. அரிசி, ஜலத்தினாலும் நித்யம் (தினந்தோறும்) சருபாகம் செய்யவும். ஹவிஸ்ஸின் நான்கிலொருபாகம் ஹோம கர்மாவிற்காக ஆகும்.

17. ஹோம சேஷத்தை ஆசார்யனுக்கு கொடுக்கவும். ஐந்து கோத்ரத்தில் தோன்றியவர்களுக்கும் எல்லா ஆகமமும் அறிந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

18. ஹோம சேஷத்தை இதரர்களுக்கு கொடுத்தால் ஹோமமானது (நிஷ்பலமாகும்) பலனளிக்காது. சருசேஷமின்றி ஹோமம் செய்தால் அந்த ஹோமம் இஷ்டத்தை பூர்த்தி செய்யாது.

19. ஹோம கர்மாவிற்கு ஹவிஸ் மூன்றாவது அம்சம் ஆகும். முதல் பாகம் தைவிகம் (சுவாமி) இரண்டாவது பாகம் ஹோமகர்மாவிற்கும்

20. பரிவாரத்திற்கு மூன்றாவது பாகமும், ஆசார்யனுக்கு நான்காவது பாகமும் தனித்தனியாக பாகம் செய்தாலும் எல்லாவற்றையும் ஈசனுக்கு நிவேதிக்கவும்.

21. பலன் அடைய விரும்பும் சாதர்களால் பிராணாயஸ்வாஹா முதலான மந்திரங்களால் பிராணாக்னி ஹோத்ரம் செய்யவேண்டும். வேறு விதமாக இந்த ஸ்தாலீபாக ஸம்ஸ்காரங்கள் செய்தால் செய்யப்பட்ட ஸம்ஸ்காரங்களின் பலன் மாறுபட்டதாக ஆகும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸ்தாலீபாக முறையாகிற இருபத்தியொன்றாவது படலமாகும்.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

படலம் 20: ஸமய விசேஷ தீட்சா விதி

20 வது படலத்தில் சமய விசேஷ தீட்சாவிதி கூறப்படுகிறது. முதலில் சமயத்தை சார்ந்த தீட்சையை கூறுகிறேன் என்று உத்தரவு இடுகிறார். ஆசார்யன் நித்ய அனுஷ்டானத்தின் சாமான்யார்க்ய பாத்ரத்துடன் யாகசாலை நுழைந்து திவார பூஜை இடையூறுகளை நீக்கி யாகசாலைக்கு காப்புதல் செய்து பூதசுத்தி ஸகளீகரண அந்தர்யாகம் செய்து விசேஷார்க்யம் செய்து அந்த தீர்த்தத்தால் தன்னையும் பொருள்களையும் சுத்தி செய்து பிராதேச மாத்ரம் என்ற (சாண் அளவு) உடைய 36 தர்ப்பங்களால் ஞான கட்கம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. முறைப்படி பஞ்சகவ்யம் செய்து பஞ்சகவ்யத்தால் யாகமண்டபத்தை பிரோட்சித்து பொரி, சந்தனம், வெண்கடுகு, விபூதி, தர்பம் புஷ்பம் அட்சதை ஆகிய ஏழு பொருள்களுடன் கலந்த விகிரம் என்ற திரவ்யத்தை அபிமந்தரித்து மண்டபத்தில் அவைகளை வாரி இறைத்து நிரீக்ஷணம் முதலிய கிரியைகளால், யாகமண்டபத்தை ஸம்ஸ்காரம் செய்து அதுபோல் குண்டத்திற்கும் முறைப்படி கிரியைகள் செய்து மண்டபம் அல்லது வேதிகையில் ஈசானத்திலோ, மேற்கு திக்கிலோ சிவகும்பவர்த்தினியையும் வைத்து சந்தன புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும் என்று கும்பம் வர்த்தனியை ஸ்தாபிக்க வேண்டும் என்று கும்பவர்த்தனி அமைக்கும் முறை விளக்கப்படுகிறது. பிறகு பத்து திக்பாலகர்கள் 10 அஸ்திரங்கள் இவைகளுக்கு பூஜை முறையும் கூறப்படுகிறது. பின்பு உங்களால் உங்களுடைய திக்கில் இடையூறை போக்குவதற்காக பொறுமையாக வேள்வி முடியும் வரை இருக்க வேண்டும். என சிவனுடைய உத்தரவை திக்பாலகர்களிடம் தெரிவிக்க வேண்டும் என கூறப்படுகிறது. மண்டபம் ஸ்தண்டிலத்திலோ லிங்கத்திலோ விசேஷ பூஜையுடன் சிவனை பூஜிக்க வேண்டும். அக்னியில் சிவனை பூஜிக்கவும் என கூறி அந்த பூஜை முறை கூறப்படுகிறது. ஹே பகவானே என்னுடைய சரீரத்தில் நுழைந்து இரக்கத்துடன் அனுக்ரஹம் செய்ய வேண்டும் என்று வேண்டி சிவனிடம் இருந்து உத்தரவை பெற்றவனாக ஆசார்யன் ஆத்மா சிவன் இரண்டையும் சேர்ந்ததாக எண்ணவும் என கூறி சிவசரீர அழைப்பு முறை கூறப்படுகிறது.

மண்டபத்தில் செயலின் சாட்சியாகவும், சிவகும்பத்தில் யாகத்தின் சாட்சியாகவும், அக்னியில் ஹோமத்தின் இருப்பிடமாகவும், சிஷ்ய சரீரத்தில் பாச பந்தத்தை விடுவிக்க கூடியதாகவும், என் சரீரத்தில் அருள்பாலிக்கும் தன்மை உடையவராகவும் ஈஸ்வரன் இருக்கிறார். ஐந்து இருப்பிடத்தை உடைய ஈச்வரனானவன் நானே சதாசிவன் என்று வேற்றுமை இல்லா தன்மையாக தன்னை எண்ணிக் கொள்ளவும் என கூறப்படுகிறது. பிறகு தீட்சைக்காக வாயிலில் இருக்கும் சிஷ்யர்களுக்கு யாக மண்டபத்தை நுழையும் பொருட்டு சிவனிடம் வேண்டுதல் மூலம் அவர் உத்தரவை அடைந்தவனாகவும் கூறப்படுகிறது. பிறகு சிஷ்யர்களுக்கு தீட்சை செய்யும் முறை கூறப்படுகிறது. சிஷ்யனுக்கு கண்ணை கட்டும் துணியால் கண்ணை மறைத்து மண்டல சமீபம் அழைத்து சென்று ருத்திர ஈஸ்வர பதத்தை கொடுக்க கூடியதாகிய சிவஹஸ்தத்தை சிஷ்யன் தலையில் வைத்து அவன் அஞ்சலி ஹஸ்தத்தில் புஷ்பங்களை கொடுத்து கண்ணை மூடிய துணியை நீக்கி ஈஸ்வரனை காண்பித்து புஷ்பசமர்ப்பணம் செய்து புஷ்பம் விழுந்த இடத்தை அனுசரித்து பெயர் சூட்டவும் என கூறப்படுகிறது. பிராம்மண ஜாதிகிரமமாக நான்கு வர்ணத்தவர்களுக்கும், பெண்களுக்கும் பெயர் சூட்டும் விஷயத்தில் விசேஷம் கூறப்படுகிறது. பிறகு அங்கு செய்யக் கூடிய கிரியைகளை விசேஷமாக விளக்கப்படுகிறது. பிறகு நாடி சந்தானம், பிராம்மண தன்மை ஏற்படுத்துதல் ருத்திர தன்மை ஏற்படுத்துதல் இவைகள் கூறப்படுகிறது. ஆசார்யனால் பிராணாயாம முறையினால் சிஷ்ய சரீரத்தில் சிவனை சேர்க்கும் முறை கூறப்படுகிறது. ஆசார்யன் சிஷ்யனுக்கு பூணூல் அணிவிக்கவும். பிறகு நூறு, ஆயிரம் முறை மந்திரஹோமம் செய்து சிவ மந்திரத்தினால் பூர்ணாஹூதி செய்க என ஹோம முறையின் முடிவானது காணப்படுகிறது. இப்பேர்ப்பட்ட ஸம்ஸ்காரத்துடன் கூடியவன் சிவபூஜை ஹோமமுறை அத்யயனம், மந்திரத்தை கேட்டல் ஆகிய விஷயங்களில் தகுதியுடையவனாகிறான். அவன் ருத்திர பதம் அடைகிறான். அவனே நிர்வாண தீட்சைக்கு தகுதியாகிறான். முடிவில் எந்த ஆசார்யன் பிராம்மணர்களின் தீட்சா முறைப்படி சூத்ரனுக்கு தீட்சை செய்கிறானோ அவன் சூத்ர தன்மையை அடைகிறான். இவ்வாறு 20வது படல கருத்து சுருக்கமாகும்.

1. இப்பொழுது சமயத்தை சார்ந்தவர்களின் தீøக்ஷ (ஸமயதீøக்ஷ) கூறுகிறேன் என்கிறார். ஆசார்யன் நித்யானுஷ்டானம் மந்த்ராதி தர்ப்பணம் செய்தவராயும்

2. சூர்ய பூஜை செய்து ஏற்றுக் கொள்ளப்பட்ட மந்திரத்தை உடையவனாகவும் ஸாமான்யார்க்யத்தை கையில் எடுத்துக் கொண்டு யாக மண்டபமடைந்து

3. திவாரத்தை அஸ்த்ர மந்திரத்தினால் பிரோக்ஷணம் செய்து திவாரம் திவாராதிபர்களையும் பூஜிக்க வேண்டும். முதலில் சாந்திகலாத்வாராய நம: என்று

4. கிழக்கு நுழைவு வாயிலில் பூஜித்து தெற்கு நுழைவு வாயிலில் வித்யாகலையையும் மேற்கு நுழைவு வாயிலில் நிவ்ருத்தி கலையையும் வடக்கு நுழைவு வாயிலில் பிரதிஷ்டா கலையையும்

5. கிழக்கில் நந்தி, மஹாகாளர், தெற்கில் பிருங்கி, வினாயகர், மேற்கில் விருஷபர், ஸ்கந்தர், வடக்கில் தேவீ, சண்டேஸ்வரர்களையும்

6. முதலில் ஓம்காரமும் நான்காம் வேற்றுமை பதத்துடயன் நம: என்பதை இறுதியிலும் உள்ளதாக முறைப்படி சேர்த்து நந்தி முதலானவர்களை பூஜிக்க வேண்டும். தோரண தேவதைகளை கடங்கள் அல்லது சுவற்றில் உள்ளதாகவோ பூஜிக்கலாம்.

7. மேற்கு திவாரத்தை அடைந்து புஷ்பம் எறிதலை செய்து அஸ்திர மந்திரத்தால் பூமியை மூன்று முறைப்படி காலால் தட்டி அந்த பூமியிலுள்ள

8. இடையூறுகளை போக்கி மூன்றுமுறை கைதட்டுவதால் ஆகாயத்தின் இடையூறு களையும் மூன்று முறை கைசொடுக்குவதால் வெளியிலுள்ள இடையூறுகளை நீக்கி

9. இடது தூண் பக்கமாக வலது காலால் நுழைந்துகீழ் வாசற்படியில் புஷ்பத்தைப்போட்டு

10. மண்டபமத்தியில் வாஸ்தோஷ்பதே பிரம்மணே நம: என்று சந்தனம் புஷ்பங்களால் வாஸ்து பிரம்மாவை பூஜித்து, யாக மண்டபத்தை அஸ்திரமந்திரத்தால் சுற்றியதாகவும் செய்து

11. கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்து யாகசாலையை ஸம்ரக்ஷணம் செய்து வடக்கு முகமாக அமர்ந்து பூதசுத்தியை செய்ய வேண்டும்.

12. அங்கநியாஸ, கரன்யாசம் செய்து அந்தர் யாகம் செய்ய வேண்டும். விசேஷார்க்யமானது யவை வெண் கடுகு அக்ஷதை

13. தீர்த்தம், எள், தர்ப்பை நுனி, பால், புஷ்பம் இவைகளோடு சேர்ந்ததாக கல்பிக்க வேண்டும். அர்க்ய ஜலத்தால் தன்னையும் பூஜை திரவ்யங்களையும் பிரோக்ஷிக்க வேண்டும்.

14. அஸ்திர மந்திரத்தினால் பிரோக்ஷிச்சு கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்து ஹ்ருதய மந்திரத்தினால் அபிமந்திரித்து சந்தனத்தால் திலகமிட்டு கொள்ள வேண்டும்.

15. சிவஹஸ்த கல்பனம் செய்து அந்த சிவ்ஹஸ்தத்தால் தலை முதல் பாதம் வரை சிவபாவனையாக்கிக் கொண்டு ஞானகட்கத்தை முப்பத்திஆறு, முப்பத்தி இரண்டு

16. தர்ப்பைகளால் ஒரு சாண் அளவும் அஸ்திர மந்திரமாகவும் நிர்மாணித்து பஞ்சகவ்யம் தயார் செய்ய வேண்டும். அதன் செய்முறை விளக்கம் கூறப்படுகிறது.

17. மண்டபத்தின் சுபபாகமான திக்கில் ஒன்பது பாகமாக்கப்பட்ட பூமியில் ஐந்து தத்வம் பூஜிக்கப்பட்ட இடத்தில் ஐந்து பாத்திரங்களை வைக்க வேண்டும்.

18. ஐந்து தத்வங்கள் சிவன், சதாசிவன், வித்யை, காலம், புருஷன் ஆகிய கோஷ்ட பூஜை பெயர்களாகும். சுப்ரதிஷ்டம், சுசாந்தம், தேஜோவத், அம்ருதாத்மகம்.

19. ரத்னோதகம் ஆகியவை பாத்திர பூஜை பெயர்களாகும், பால், தயிர், நெய், கோமூத்ரம், கோசாணம் இவைகளை ஈசானம் முதலிய மந்திரங்களால் அபிமந்திரித்து

20. ஒன்று இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்ற வரிசைப்படி பூஜித்து ஆறு தடவை ஜபத்தால் குசோதகத்தை பூஜித்து அம்ருதீகரணமும் சிவ ஒருமைப்பாடும் செய்ய வேண்டும்.

21. பஞ்சகவ்யத்தால் மண்டபத்தை பிரோக்ஷித்து விகிரங்களை அபிமந்திரிக்கவும் நெற்பொறி, சந்தனம், வெண்கடுகு, விபூதி, புஷ்பம், தர்பம், அக்ஷதை.

22. ஆகிய இந்த விகிரத்தின் காரணமான ஏழு பொருட்களை அஸ்த்ர மந்திரத்தினால் கலந்து மண்டபத்தின் நிருருதி திக்கில் இருந்து மண்டப ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

23. நிரீக்ஷணமும் முதலிய ஸம்ஸ்காரங்களை வடகிழக்குமுகமாக நின்று பூஜித்து முன்பு கூறப்பட்டபடி குண்டத்திற்கும் அஷ்டாதசமஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

24. வடகிழக்கு திசையிலிருந்து ஞானகட்கத்துடன் விகிரங்களை இறைக்க வேண்டும். மண்டபத்தில் ஈசான வேதிகையிலோ மேற்கு திக்கு வேதிகையிலோ

25. தங்கம் முதலியவைகளாலான கும்பத்தில் ஜலம் நிரப்பி மாவிலை, தங்கம், வஸ்த்ரம் முதலியவைகளுடன் கூடியதாக ஸ்தாபித்து

26. விகிர பூஜை முடித்து அஸ்த்ர கும்பங்களுக்கு சலாசனம், ஸ்திராஸநம் கல்பிக்க வேண்டும். மூர்த்தி மந்திரத்தால் சிவமூர்த்தயே நம: என்று சிவகும்பத்தை பூஜிக்க வேண்டும்.

27. வஸ்திரம், நூல், தங்கம், தீர்த்தம் இவைகளுடன் கூடிய வர்த்தனியை பிரத்யங்கமான திவாரத்துடன் கூடியதும் அஸ்த்ர மந்திரத்தினால் பூஜிக்கப்பட்டதாக வைக்க வேண்டும்.

28. சந்தனம், புஷ்பம் இவைகளால் சிவகும்பம் அஸ்த்ரகும்பம் இவைகளை பூஜித்து இந்திரன் அக்னி, யமன், நிருருதி வருணன்.

29. வாயு, ஸோமன், ஈசானன் ஆகிய திக்பாலர்களை கிழக்கு முதலான திசைகளில் பூஜித்து ஈசான திக்கின் தெற்கில் பிரம்மாவையும் நைருதி திக்கின் வடக்கில் விஷ்ணுவையும் பூஜிக்க வேண்டும்.

30. இந்திராதிகளை கடம் அல்லது கலசம் இவைகளிலோ கும்பத்தில் இருப்பதாகவோ பூஜிக்க வேண்டும். அதேபோல் வஜ்ரம் முதலிய தசாயுதங்களையும் பூஜிக்க வேண்டும்.

31. ஹே இந்திரனே! உம்மால் உங்களுடைய திசையில் இடையூறுகளை நீக்குவதற்காக யாக பூஜை முடியும் வரை சிவாக்ஞையால் பொறுமையுடன் இருக்கவேண்டும் என்று

32. எல்லா லோக பாலர்களிடமும் சிவாக்ஞையை முறைப்படி அறிவித்து யாகேஸ்வர அஸ்திரகும்பங்களை வலம் வருதல் வேண்டும்.

33. பிறகு யாகேஸ்வரகும்ப வர்த்தனியை முன்பு போல் ஸ்தாபித்து யாகேஸ்வர கும்பம் அஸ்திர கும்பம் இவைகளுக்கு ஸ்திராஸந பூஜையை செய்ய வேண்டும்.

34. சிவமூர்த்தி வித்யாதேஹம் அங்கபூஜை ஸஹிதமாக சிவ ஆவாஹனம் ஆவரணபூஜை அஸ்திர கும்ப பூஜை செய்து இருவர்களின் ஐக்கிய பாவம் கல்பித்து யோநி முத்ரையை காண்பிக்க வேண்டும்.

35. வலது கை முஷ்டி பாகம் பிண்டிகை உருவமான உமாதேவியாகும். கட்டைவிரல் லிங்க உருவமான சிவரூபமாகும். போகத்திற்காக முதலில் அங்குஷ்ட முத்ரையால் சிவ கும்பத்தையும்

36. பிறகு முஷ்டிபாகத்தால் வர்த்தனியை ஹ்ருதய மந்திரத்தால் ஸ்பர்சிக்க வேண்டும். மோக்ஷத்திற்கு முதலில் முஷ்டி பாகத்தால் சிவகும்பத்தையும்.

37. அங்குஷ்டத்தினால் வர்த்தனி கும்பத்தையும் ஸ்பர்சிக்க வேண்டும். உமா பக ரூபிணியாகவும் லிங்க ரூபம் உடையவராக

38. சங்கரரையும் நமஸ்கரித்து பிரார்த்தனை செய்து இந்த யாகத்திற்கு அதிபதி நீங்கள், தங்கள் மூர்த்தி, ஸ்திரமான மூர்த்தியாகும்.

39. இந்த உம்முடைய ஞான கட்கத்தை உம்முடைய ஆயுதமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் யாகம் நடத்துகின்ற என்னால் உம்முடைய யாகம் பிரவ்ருத்திக்கப்பட்டது.

40. யாகம் முடியும்வரை தாங்கள் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டவும், யாகத்தை ரக்ஷிக்கும் விருப்பமுள்ள ஞானகட்கத்தை யாகேஸ்வரரிடமே ஆசார்யன் வைக்க வேண்டும்.

41. அர்க்ய பாத்ரம் கல்பித்து நிரோதனத்திற்காக அர்க்யம் கொடுத்து அர்க்ய பாத்திரத்தை நிரோதனத்திற்காக அங்கேயே வைக்க வேண்டும்.

42. வர்த்தனீகும்ப தீர்த்தம் சுற்றுதல், விகிர திரவ்யம் இரைத்தல், இவைகளால் யாக மண்டபம் முழுவதும் இடையூறு இல்லாததாக நினைத்து பூஜைக்காக பூமியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

43. மண்டலம் ஸ்தண்டிலம் லிங்கம் இவைகளில் சிவனை பூஜிக்க வேண்டும். விசேஷ பூஜையுடன் அக்னியில் சிவனை பூஜிக்க வேண்டும்.

44. ஹே பகவானே உன் தயவினால் என்னுடைய தேஹத்தில் நீவிர் ஆவிர்பவித்து பக்வமான சிஷ்யர்களுக்கு அனுக்ரஹம் செய்ய வேண்டும்.

45. என்று பிரார்த்தித்து அப்படியே செய்கிறேன் என்று அங்கீகரித்ததாகவும் சிவனிடம் இருந்து உத்தரவு பெற்றதாக நினைத்து ஏழுமுறை மூலமந்திரத்தால் மந்திரிக்கப்பட்ட

46. வெண்மையான தலைப்பாகையை தலையில் வைத்து சிவனுடன் சேர்ந்ததாக நினைத்து பிரார்த்திக்க வேண்டும். பரமேஸ்வரன் எல்லா கர்மாவிற்கும் ஸாக்ஷியாக மண்டலத்தில் இருக்கிறார்.

47. யாகத்தை ரக்ஷிப்பவராக சிவகும்பத்தில் இருக்கிறார். ஹோம அதிகாரியாக அக்னியில் பரவி இருக்கிறார்.

48. சிஷ்யனின் சரீரத்தில் அந்த சிஷ்யனின் பாசத்தை விடுவிப்பவராக இருக்கிறார். அருள்பாலிக்கும் தெய்வமாக என் சரீரத்தில் வியாபித்து இருக்கிறார்.

49. ஐந்துவித இருப்பிடத்தில் இருப்பவரான சதாசிவர் ஸோஹம் பாவனையாக இருக்கிறார். ஆத்மா வெவ்வேறாக இல்லாததாகவும் சிவகுணம் ஸமமானதாக உள்ளதாகவும் பாவிக்க வேண்டும்.

50. சாதனமாகிய ஹ்ருதயம் முதலியவைகள் என்னுடையதாகும். சந்தேகமில்லை. சிவனை ஸ்வதந்த்ரரராக பாவித்து சிவனிடம் விக்ஞாபிக்க வேண்டும்.

51. என்னால் எதற்காக இந்த யாகம் பிரவிருத்திக்கப்பட்டதோ அந்த யாகம் உம்முடைய தாகும். இந்த பசுக்கள் வாசற்படியில் இருக்கும் ஜலத்தைபோல் சாந்தர்களாக இருக்கிறார்கள்.

52. சச்சரவில்லாத அடையாளம் உள்ளதுமான உம் கைகளால் உம்மால் தூண்டப்பட்டதுமான பிரகாசமான விருத்திகளை வெகுகாலமாக அறிந்து

53. யோக்யமான அவச்யமான ஸ்நானம் செய்ததாகவும் அனுஷ்டித்த நித்யானூஷ்டானர் களாகவும் வெண்மையான வஸ்திர உத்தரீயம் உடையவர் களாகவும் உன் பாத பத்மத்தை தர்சிக்க விரும்புவர்களாக

54. உள்ள சிஷ்யர்களின் பிரவேசித்ததற்காக ஹேசங்கரா எனக்கு அனுக்ரஹம் செய்வாயாக என்று கூறி உன் பாதாரவிந்த ஸமீபமாக அந்த சிஷ்யர்களை பிரவேசிக்க செய்கிறேன்.

55. சிவனே நான் சிஷ்ய பிரவேசம் செய்ய மங்கள வார்த்தை கூறும் என்று சிவனை பிரார்த்தித்து சிவன் அவ்வாறே ஆகட்டும் என்று கூறியதாக பாவித்து சிஷ்யப் பிரவேசம் செய்ய வேண்டும்.

56. வாயிற்படியை எதிர்நோக்கி வெளியில் பிரணவமிட்ட தர்பாசனத்தில் சிஷ்யனை நிற்கச் செய்து தான் வடக்கு முகமாக நின்று கொண்டு

57. சிகையின் அடிபாகம் முதல் வலது பாத நகநுனிவரையும், பாத நகநனி முதல் சிகை அடிபாகம் வரை தத்வ ஞான த்ருஷ்டியால் சிஷ்யனை பார்க்க வேண்டும்.

58. இந்த ஆத்மா சிவத்தன்மைக்கு உரியவனாகிறான். விடுவிக்கப்பட்ட பந்த பாசங்களை உடையவனாகிறான். பதி சக்தி பிரவேசத்திற்காக பாசக்கூட்டம் என்வசப்படுகிறது.

59. அப்பொழுது இவனை தாம்ரத்திலிருக்கும் தன்னுடைய குண உதயயோக்யமான ஸ்பர்சத்தால் மணியை போல் காந்தி உடையவனாகவும் செய்து சிவனால் நான் தூண்டப்பட்டவனாகிறேன்.

60. ஸ்பர்சத்தால் நிர்மலமாக்கி சீக்கிரமாக தங்கம் போல் நல்ல குணமுள்ளதான மஸ்தக பூஷணத்தை செய்கிறேன்.

61. தர்பையினால் பிரோக்ஷணம் செய்து சிரஸில் விபூதியால் தாடனம் செய்து தர்பையின் நுனி அடிபாகங்களால் ஹ்ருதயத்தின் மேல்கீழ் பாகமாக

62. பிரவ்ருத்திக்கு காரணமான பாசகூட்டத்தை உல்லேகனம் செய்ய வேண்டும். அந்த சிஷ்யனை ஸகளீகரண பாவனையாக செய்து கண்ணை கட்டி

63. அஸ்த்ர மந்திரத்தினால் பிரோக்ஷித்ததும் கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்ததும் ஆன வெண்மையான வஸ்திரத்தினால் மூலமந்திரத்தை ஸ்மரித்ததாக (கண்ணை கட்டி)

64. சிஷ்யனை அழைத்து சென்று மண்டலத்தில் புஷ்ய ÷க்ஷபம் செய்வித்து சிவமூர்த்தியை காண்பிக்க வேண்டும். சிவமண்டலத்தின் வலதுபக்க மண்டலத்தில் முன்பு போல் செய்ய வேண்டும்.

65. பிரணவத்தை ஸ்தாபித்து உயர்ந்ததான சரீரமுடைய சிஷ்யனை தாரணம் முதலிய பாவனைகளால் சோதித்து அந்த சரீரத்தை ஸகளீகரணம் செய்ய வேண்டும்.

66. தன்னுடைய வலக்கையை சந்தனம் முதலிய வாசனை உடையதாக செய்து ஆஸநம் மூர்த்தி, மூலம் இவைகளுடன் கூடியதாக

67. சிவஹஸ்தமாக பாவித்து போக மோக்ஷமாக ஹ்ருதயத்திலிருந்து புருவம் வரையிலும் பிறகு சிகை வரையிலுமாக

68. எல்லா பாச முடிச்சுகளையும் விடுவிக்கும் பிராஸாத மந்திரத்தை கூறுவதால் ருத்ரேஸ்வர பத வியாப்திகமாக சிரசில் வைக்க வேண்டும்.

69. விசேஷமாக சிஷ்யனுடைய எல்லா அங்கத்தையும் பார்க்க வேண்டும். பிறகு சந்தனம், தூபம், இவைகளால் வாசனை உடைய புஷ்பத்தை அவன் அஞ்சலி ஹஸ்தத்தில்

70. வைத்து ஸர்வாத்மாவான சிஷ்யனால் தனிமையாக பிரார்த்திக்க வேண்டும். சிஷ்யனுடைய நேத்ரத்தை கட்டிய துணியை விலக்கி

71. ஸ்வபாமாகவே தர்சிக்கப்பட்ட ஈசானம் முதலான சிவவக்த்ரங்களை கொண்டு எந்த அங்க பாகம் உள்ளதாகவும் சிவத்தை எதிர்நோக்கியதாகவும் புஷ்பத்தை

72. வெளிப்பட்ட பக்தியாகிற சிவனாகிற தாமரையின் மேல் இருக்கின்ற கிளிபோல் அடைபட்ட அந்த சிஷ்யனை அவனால் முன்பு போடப்பட்ட மண்டல ஸ்தானத்தின் பெயரை சிவபதமுடைய பெயராக வைக்க வேண்டும்.

73. சிவசப்தமான பெயரை பிராம்மணனுக்கு வைத்து க்ஷத்ரிய வைச்ய நான்காம் வர்ணத்தவர்களுக்கு தேவ, கண்ட, கணம் என்று வரிசையாகவும் ஸ்திரீகளுக்கு சக்தி என்று முடிவுடைய பெயராக வைக்க வேண்டும். (ஈசான சிவன் ஈசான தேவன் ஈசான கண்டன் ஈசான கணன் என்பது போல)

74. அல்லது எல்லோருக்கும் எப்பொழுதும் சிவன் என்ற வார்த்தையை முடிவுடையதான பெயரை வைக்க வேண்டும். சிஷ்யனை பிரதட்சிணம் செய்வித்து ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய சொல்லி உபதேசம் செய்ய வேண்டும்.

75. சிஷ்யனை குண்ட சமீபத்தில் தன்னுடைய தென்பாகத்தில் பிரணவாஸநத்தில் அமர்த்தி சிஷ்யனுடைய கையில் தர்பத்தின் அடியை கொடுத்து

76. தர்பை நுனியை தன்னுடைய முழங்கால் இடுக்கில் ஆசார்யன் சேர்த்து கொண்டு சிசுவின் பிராணவாயுவை வெளிக்கொணர்ந்து பிங்களை மத்தியில்

77. தன் தேஹ நாடியில் மூலமந்திரத்தால் சேர்ந்ததாக பாவித்து ஆசார்யன் நாடீசந்தானத்திற்காக மூன்று ஆஹுதி செய்ய வேண்டும்.

78. சிஷ்ய சைதன்ய கிருஹணத்திற்காக ரேசகமும் பூரகமும் செய்ய வேண்டும். மூலமந்திரத்தினால் நூற்றி எட்டு அஹுதியும் அங்க மந்திரத்தினால் பத்து ஆஹுதியும் செய்ய வேண்டும்.

79. சிவமந்திரமான மூலமந்திரத்தால் பூர்ணாஹுதி செய்து பிராயச்சித்த நிமித்தமாக சிவ மூலமந்திரத்தால் நூற்றி எட்டு ஆஹுதி செய்ய வேண்டும்.

80. பிராம்மணாதி வர்ணத்தவர்கள் நான்காவது வர்ணத்தவர்களையும் அவர்களின் குணங்களை அனுசரித்து அவர்களை உத்தாரணம் செய்ய வேண்டும். நான்காவது வர்ணமுள்ள ஜாதித்வத்தை விலக்கி மூலமந்திரத்தால் ஸ்வாஹாந்தமாக

81. மூன்று ஆஹுதி செய்து பிறகு சிவனை நோக்கி இவ்வாறு கூற வேண்டும். உணவு செயல் போன்ற நடத்தையால் யோநி பீஜசரீரத்திலிருந்து

82. சுத்தமான பிராம்மணனாகட்டும், இந்த ஆத்மா ஹே பகவானே பரமேஸ்வரா என கூறவும் ருத்ராம்சம் ஏற்பட்ட சமயத்திலும் மூன்று ஆஹுதி செய்ய வேண்டும்.

83. ஹே பகவானே உன் அனுக்ரஹத்தால் இந்த ஆத்மா ருத்ரனாகட்டும் என்று பிரார்த்தனை செய்து பிரோக்ஷணமும் தாடனமும் செய்ய வேண்டும்.

84. தன் ரேசகத்தால் ஆசார்யன் சிஷ்ய தேஹத்தில் பிரவேசித்து அஸ்திர மந்திரத்தினால் விடுபட்டதாக பாவித்து அங்குச முத்ரையால்

85. சிஷ்ய சைதன்யத்தை ஆகர்ஷித்து த்வாத சாந்த மெடுத்து சென்று உடனே பூஜித்து சிஷ்ய மஸ்தகத்திலிருந்து

86. ஸம்ஹார முத்ரையால் தன் ஹ்ருதயத்தில் பூரகத்தால் பிரவேசிக்க செய்து கும்பகத்தால் சிஷ்யனின் ஒருமைப்பாட்டை ஸ்மரித்து

87. ரேசகத்தால் த்வாதசாந்தத்தில் ஈசானம் முதலான ஸதாசிவர்களை அடைந்து ஆத்மாவை த்வாத சாந்தத்தில் சேர்த்து பிறகு சிவனையும் சேர்த்து

88. ஸம்ஹார முத்ரையால் சிஷ்ய சரீரத்தில் சேர்க்க வேண்டும். மூலமந்திரத்தால் அபிமந்திரிக்கப்பட்ட பூணூலை அணிவிக்க வேண்டும்.

89. நூறு அல்லது ஆயிரம் ஆஹூதி கொடுத்து பூர்ணாஹூதியை சிவமந்திரத்தால் செய்ய வேண்டும். இவ்வாறே சமயதீøக்ஷ பெற்றவன் சிவபூஜை

90. ஹோமம் அத்யயனம், மந்திர சிரவணம், இவைகளால் ஒருவன் யோக்யனாகிறான். ருத்ர பதத்தை அடைகிறான்.

91. பிறகு பிராம்மணன் நிர்வாண தீøக்ஷக்கு அதிகாரம் உள்ளவனாகிறான் பிராம்மண விதானப்படி நான்காம் வர்ணத்தவர்க்கு தீøக்ஷ செய்தால்

92. சந்தேகமின்றி தீøக்ஷ செய்விப்பவனும் நான்காம் வர்ணத்தவருடைய தன்மையை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிகமென்ற மஹாதந்திரத்தில் ஸமயவிசேஷ தீக்ஷõ விதியாகிற இருபதாவது படலமாகும்.