செவ்வாய், 8 அக்டோபர், 2013

படலம் 19: நவ நைவேத்ய விதி

19 வது படலத்தில் நவநைவேத்யமுறை கூறப்படுகிறது. முதலில் ஆடி, மார்கழி, மாசி இந்த மாதங்களை தவிர மற்ற மாதங்களில் நவநைவவேத்ய முறை அனுஷ்டிக்கவும் என காலம் விளக்கப்படுகிறது. ஆசார்யன் அங்குரார்ப்பணம் செய்து நல்ல நட்சத்ர லக்ன முஹூர்த்தம் இவைகளுடைய சிவபக்தர்களுடன் கூடி அஸ்த்ரதேவர் சண்டிகேஸ்வரருடனும் பலவிதமான நாட்டிய, வாத்யங்களுடன் தேவ பூமியை அடைந்து தயிருடன் கூடிய ஹவிஸால் பூத பலி கொடுத்து பலவித காய்கறி சமையல் பொருள்களுடன் தான்ய சங்க்ரஹணம் செய்து கிராம பிரதட்சிணத்துடன் ஆலயத்தை அடையும் என கூறப்படுகிறது. அங்குரார்ப்பணம், அஸ்த்ரதேவர், சண்டீசர் இவர்கள் இல்லாமலும் எல்லா பூஜையும் செய்யலாம் என விளக்கப்பட்டுள்ளது. பிறகு சூர்ணோத்ஸவ முறைப்படி நெல்லை முறைப்படி உரலில் இடித்து அரிசியை தயாரிக்க வேண்டும். பிறகு மிளகு, சீரகம், தேங்காய், வெல்லசர்க்கரை, இவைகளுடன் அரிசியை ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும். ஸ்வாமி அம்பாளுக்கு தண்டுல நிவேதன விதி கூறப்படுகிறது. ஸகல மூர்த்திகளுக்கும் விருஷபம் முதலிய பரிவார தேவதைகளுக்கும் நைவேத்யமுறை கூறப்படுகிறது. அங்கு செய்ய வேண்டிய ஹோமம் செய்யும் முறை பலிகொடுக்கும் முறை உத்ஸவம் செய்யும் முறையும் விளக்கப்படுகிறது. அங்கு பைரவபலி, உலக்கை கிரியையகளின்றி மற்ற எல்லாம் செய்ய வேண்டும். விசேஷமாக வஸ்திரஸ்வர்ண மோதிரம் முதலியவைகளை ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும். யார் முடிவில் இவ்வாறு நவநைவேத்யபூஜை செய்கிறானோ அவன் புண்யமான கதியை அடைகிறான். என்று பலச்ருதி காணப்படுகிறது. இவ்வாறு 19வது படல கருத்து சுருக்கமாகும்.

1. நவ நைவேத்ய லக்ஷணம் பற்றி கூறுகிறேன் என்கிறார். மார்கழி, ஆடி, மாசி மாதங்களை தள்ளுபடி செய்து

2. மற்ற எல்லா மாதங்களிலும், நவநைவேத்ய முறையை கடைபிடிக்க வேண்டும். நிச்சயிக்கப்பட்ட சுபநக்ஷத்திரத்திற்கு முன்தினம் அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும்.

3. அங்குரார்ப்பணம் இல்லாமலும் நல்ல முகூர்த்தத்தில் நல்ல லக்னத்தில் சங்க துந்துபி, நாதம், கீதம் நாட்யம் முதலிய மங்களகரமான சப்தங்கள்

4. பலவிதமான கொடி விதானங்கள், தூப தீப அங்குரங்களுடனும் சிவ பக்தர்கள் புடை சூழ அஸ்த்ர தேவருடன் கூடி

5. சண்டேச்வரனுடன் கூட தேவனுடைய வயல்பூமியை அடைய வேண்டும். சண்டேசர் அஸ்த்ர தேவர் இன்றியும் தேவ÷க்ஷத்ரத்தை அடைந்து

6. தயிருடன் கூடிய ஹவிஸை பூதங்களுக்கு பலிகொடுக்க வேண்டும். பலியை கிழக்கு முதலான எட்டு திசைகளிலும் சந்தனம் புஷ்பம் இவைகளுடன் சேர்ந்ததாக செய்ய வேண்டும்.

7. லக்ஷணத்தோடு கூடினதும் அஸ்த்ர மந்திரத்தினால் பூஜிக்கப்பட்ட அரிவாளோடு கூடி கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ அமர்ந்து ஹ என்று அஸ்த்ர மந்திரத்தை நினைத்து

8. கதிரை (நெல்) அறுத்து மேடையின் மேல் வைக்க வேண்டும். அந்த நெற்கதிருடனும் கூடிய புதிய நெல்லுடன் கூடிய

9. அரிசி முதலானவைகளுடன் பலவித காய்கறி பொருட்களுடனும் தேங்காய் புதிய பாக்குப்பழத்துடனும்

10. மிளகு, வெல்லக்கட்டியுடனும் கரும்பு, பல காய் கனிகள் பலவித உருதுணைப் பொருட்களும் (ஊறுகாய், கறி, கூட்டு முதலியன)

11. தனித்தனியான கிழங்கு பழங்களுடனும், அவ்வாறே பூஜைக்கு உரிய பொருட்களுடனும் ஆச்சர்யமேற்படும் வஸ்துக்கள் பலவித வாத்யங்களிவைகளுடன்

12. நாட்யம், பாட்டு, பலவித கொடிகள், பலவித குடைகள் இவைகளுடன் கூடி நகரம் முதலான பிரதேசங்களை அடைந்து

13. கிராமத்தை வலம் வந்து ஆலயத்தை அடைந்து பூர்ணகும்பம் பலவிதமான தீபங்களுடனும் கூடி

14. வாழைமரம் பலவிதமான மங்களப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட ஆலயத்தை அடைந்து நெற்கதிரிலிருந்து நெல்லை எடுத்து வெய்யிலில் காயவைத்து

15. மூங்கில் முதலானவைகளாலான பாத்திரத்திலோ சாணம் மெழுகப்பட்ட பூமியிலோ மாவினால் கோலமிடப்பட்ட இடத்திலோ வைத்து தீபத்துடன் கூடியதாக

16. சூர்ணோத்ஸவ முறைப்படி நெல்லை குத்தி உமியை நீக்கிசுத்தமான அரிசியை எடுத்து ஜலத்தால் களைந்து சுத்தம் செய்து, மிளகு சீரகம் வெல்லச்சக்கரையுடனும்

17. தேங்காயுடனும் அரிசியை பக்குவம் செய்ய வேண்டும். சுவாமிக்கு ஸ்நபனம் செய்து ஆபரணங்களால் ஸ்வாமியை அலங்கரிக்கவும்

18. நல்ல முகூர்த்தத்தில் பூமியில் நெல்லைப் பரப்பி வஸ்திரத்தை அதன்மேல் வைத்து வாழை இலையை வைக்க வேண்டும்.

19. அஸ்த்ர மந்திரம் கூறி ஜலத்தால் பிரோக்ஷித்து ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை சொல்லிக் கொண்டு கருப்பஞ்சாரினால் நனைத்த பக்குவமான அரிசியை வைத்து

20. கவசாய நம: என்று அவகுண்டனம் செய்து ஹ்ருதயாய நம: என்று பூஜித்து தேனுமுத்திரை காண்பித்து பிரம்ம மந்திரங்களினாலோ அல்லது தத்புருஷ மந்திரத்தாலோ

21. பரமேஸ்வரனுக்கு நைவேத்யம் செய்து தாகசாந்திக்கு தீர்த்தமும் கொடுக்க வேண்டும், மேற்கூரிய மந்திரங்களால் தாம்பூலத்தை சுவாமிக்கு நிவேதிக்க வேண்டும்.

22. புதிய பாக்குப் பழத்துடன் தாம்பூலத்தை தேவிக்கும் நிவேதனம் செய்ய வேண்டும். மற்ற எல்லா ஸகலமூர்த்திகளுக்கு முன்கூறிய விதிப்படி நிவேதிக்க வேண்டும்.

23. அல்லது நைவேத்ய பாத்திரமான ஸ்தாலிகையில் எடுத்து எல்லா மூர்த்தங்களுக்கும் நிவேதிக்க வேண்டும். விருஷபம் முதலிய பரிவார தேவதைகளுக்கு ஹோம கர்மாவுடன் முடிக்க வேண்டும்.

24. நைவேத்யம் செய்து தாம்பூலம் ஸமர்ப்பிக்க வேண்டும். பலிதானம் செய்து அதிதிகளுக்கும் வழங்க வேண்டும்.

25. அன்னமும் தண்டுலமும் நிவேதித்து பிறகு ஹோமமாவது செய்ய வேண்டும். அதன்முடிவில் உத்ஸவம் செய்ய வேண்டும். உத்ஸவமின்றியும் செய்யலாம்.

26. ÷க்ஷத்ர (பைரவஸ்வாமி) பலியின்றியும் உரல் ஸம்ஸ்காரமின்றியும் மற்றகிரியைகளை ஸாமான்யமாக செய்து பிறகு குருவை பூஜிக்க வேண்டும்.

27. வஸ்த்ரம் தங்க மோதிரத்துடன் தட்சிணையை கொடுக்க வேண்டும். இவ்வாறு யார் நவநைவேத்ய விதியை செய்கிறானோ அவன் நல்ல புண்ய கதியை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் நவநைவேத்ய முறையாகிற பத்தொன்பதாவது படலமாகும்.
படலம் 18 : பவித்ரோத்ஸவ விதி

பதினெட்டாவது படலத்தில் ஆவணி மாதத்தில் செய்ய வேண்டிய பவித்ரோத்ஸவ விதி கூறப்படுகிறது. முதல் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய தோஷத்தின் அழிவிற்காக செய்ய வேண்டிய பவித்ரகர்மா விளக்கப்படுகிறது என உத்தரவு ஆகும். பிறகு பவித்ர கர்மா அனுஷ்டிக்காத சமயத்தில் தேசிகன், சாதகன், புத்ரகன், சமயீ இவர்களுக்கு குற்றம் உண்டாகும் என விளக்கப்படுகிறது. எந்த சொல், மனது சரீரம் இவைகளின் செயல்களால் உண்டாகிற பயன்களில் இருந்து காப்பாற்ற படுகிறதோ அந்த பொருளானது, பவித்ரம் என பவித்ர பயனின் பொருள் விளக்கப்படுகிறது. பவித்ர ஸமர்பணகாலம் நிரூபிக்கப்படுகிறது. பவித்ரம் தயாரிக்க நூல் சேரிக்கும் முறை கூறப்படுகிறது. பவித்ரம் செய்யும் முறை அதன் அதிதேவதை விளக்கப்படுகிறது. ஸ்வாயம்புவ லிங்கங்களை அனுசரித்து நூலின் எண்ணிக்கை விளக்கப்படுகிறது. முடிச்சு போடும் முறையும் செஞ்சந்தனங்களால் நூலை அழகு படுத்தலும் கூறப்படுகிறது. தத்வ சம்பந்தமான யக்ஞசூத்திரமாலை, பாகு மாலை பவித்ரம் இவைகளுக்கு அழகுபடுத்தும் முறை கூறப்படுகிறது. பிறகு க்ஷúத்ரலிங்க விஷயத்தில் விருஷபம் ஸ்வாமி, ஆவரண விஷயம், சண்டிகேஸ்வரர், பைரவர் இவர்களுக்கும் சாத்தக் கூடிய பவித்ரத்தின் விளக்கம் கூறப்படுகிறது. பிறகு திக்பாலகர்கள் பைரவர் இவர்களுக்கு வலமாக ஒன்று மட்டும் அர்ப்பணம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு யாகசாலை, விருஷபம் இருக்கும் இடம், கோபுரம் குண்டம் இவைகளுக்கு எல்லா கும்பங்களுக்கும் முப்புரி நூலில் சுற்ற வேண்டும்.

பிறகு பவித்ரஸமர்ப்பணம் முன் தினம் செய்ய வேண்டிய அதிவாச விதி விளக்கப்படுகிறது. முதலில் மண்டபத்தின் லக்ஷணம் கூறப்படுகிறது. மண்டபத்தில் வேதிகை, குண்டம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. மேற்கு திக்கில் மண்டலம் அமைக்கவும் கிழக்கு திக்கில் பவித்ரத்தை வைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு மண்டப பூஜை செய்யும் முறையில் பூஜைக்கு பிறகு செய்ய வேண்டிய ஹோமம் செய்யும் முறை கூறப்படுகிறது. ஹவிஸ் செய்யும் முறையும் பல்குச்சி, முதலிய விரதத்திற்கு அங்கமான பொருள்களின் அதிவாச முறையும் கூறப்படுகிறது. பிறகு அதிவாசத்தில் பவித்ரத்திற்கு செய்ய வேண்டிய சம்ஸ்காரம் கூறப்படுகிறது. பிறகு சம்பாத ஹோமம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. சூரியன் முதலானவர்களுக்கு கந்தபவித்ர ஸமர்ப்பணம் நிரூபிக்கப்படுகிறது. சிவனுக்கு ஆமந்த்ரண பவித்ரம் ஸமர்பணம் கூறப்படுகிறது. அதில் ஆமந்த்ரத்தின் மந்திர விளக்கம் கூறப்படுகிறது. திக் பாலகர்களுக்கும் அஸ்த்ரங்களுக்கும் பைரவர்க்கும் ஆமந்த்ரண பவித்ரம் ஸமர்பிக்கும் முறை சித்தாந்த புஸ்தகம் தனி ஆசார்யன இவர்களுக்கு பவித்ர ஸமர்ப்பண முறை கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் யாகசாலையிலிருந்து வெளியில் வந்து ஆசமனம் செய்து பஞ்சகவ்யம் அருந்தி ஆசமனம் செய்து சிவமந்த்ரம் ஜபித்து தூங்கவும் என்று அதிவாஸநம் செய்யும் முறை பிறகு மறுதினம் பவித்ர ஸமர்ப்பண முறை கூறப்படுகிறது. முதலில் ஆசார்யன் காலையில் ஸ்நான ஸந்த்யா வந்தனம் முடித்து ஸ்வாமியிடம் இருந்து பவித்ரங்களை எடுத்து சண்டிகேஸ்வரருக்காக ஈசானதிக்கில் உள்ள மண்டல பாத்ரத்தில் வைக்கவும்.

பிறகு முறைப்படி விசேஷ ஸ்நபனத்துடன் சிவனை பூஜிக்கவும் ஜபத்திற்கு பிறகு அக்னிகார்யம் செய்து பூரணாஹூதிக்கு பிறகு சூரியன் நந்தி முதலானவர்களுக்கு பவித்ரம் கொடுத்து வரிசை கிரமமாக பிரம்மா, கும்பவர்த்தினி இவைகளுக்கு பவித்ரம் கொடுக்க வேண்டும். பிறகு சரீரம் குருபரம்பரை இவர்களுக்கு பவித்ரம் ஸமர்ப்பிக்கவும் பிறகு பகவான் சிவனின் பொருட்டு என் விருப்பப் பயன் பூர்த்தி அடைவதற்காக என்று வேண்டுதல் மூலம் விளக்கப்படுகிறது. அங்கு ஆத்மதத்வாதி தத்வத்ரய பவித்ர ஸமர்ப்பண முறை கூறப்படுகிறது. நான்கு மூன்று இரண்டு ஒன்று மாசமோ 15 தினம் 7,5,3,1 தினங்களிலோ ஆரம்பிக்கப்பட்ட காரியம் முடியும் வரை 1 வேளை உணவுடன் சுத்தமாக முடிந்தவரை அனுஷ்டானம் செய்யவும். இந்த விரத அனுஷ்டானமானது பவித்ரத்தை எடுக்கும் வரை செய்ய வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. பிறகு நான்காவது பவித்ர ஸமர்பண முறையும் பவித்ரோத்ஸவ வரகார்பண விதியும் கூறப்படுகிறது. பிறகு பவித்ராவரோஹண முறை கூறப்படுகிறது. இவ்வாறு பவித்ரோத்ஸவ கிரியைகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறாக 18 வது படல கருத்து தொகுப்பாகும்.

1. ஹே சிறந்த முனிவர்களே! ஆண்டு முழுவதும் செய்யப்பட்ட தீய செயலின் அழிவின் பொருட்டு பவித்ரோத்ஸவத்தை கூறுகிறேன் கேளும்.

2. ஒழுங்குமுறையை கடைபிடிக்காததால் நேர்ந்த பிராயச்சித்தத்தை செய்யத் தவறிய ஆசார்யன் நற்பலனின் குழப்பத்தையடைகிறான் தேசிகன் வியாதியடைகிறான்.

3. புத்ரன் அனுபவிப்புத் தன்மையின்றியும் ஒரே பிறப்பில் சுழலுவதால் ஸமயன் ஸமயஸ்தனின்றி ஆகிறான். மேற்கூறியவை பவித்ர மனுஷ்டிக்காததால் அடைகிறான்.

4. எந்த முறையிலாவது முயற்சியுடன் பவித்ரத்தை கடைபிடிக்க வேண்டும். தினமும் வாக்கு, மனது, உடலிவைகளாலேற்படும் பாபத்தில்

5. விழுவதிலிருந்து எது காப்பாற்றப்படுகிறதோ அது பவித்ரகம் என்ற கிரியையாகும். இதற்கு ஆடி, ஆவணி, புரட்டாசி ஆகிய மூன்று மாதங்கள் உத்தம மத்யம அதமமாகும்.

6. வேறுவிதமாக ஐப்பசி கார்த்திகை மாதமும் கூறப்படுகிறது. ஆடி மாதத்தில் சுக்லபக்ஷ சதுர்தசியில் பவித்ரோத்ஸவம் கூறப்பட்டுள்ளது.

7. மற்ற மாதங்களில் சுக்லகிருஷ்ணபக்ஷங்களில் சதுர்தசி. அஷ்டமிதிதியிலும் பவித்ரோத்ஸவத்தை முறைப்படி செய்ய வேண்டும்.

8. கார்த்திகை தீபோத்ஸவத்திற்கு பிறகு பவித்ரோத்ஸவம் செய்யக் கூடாது. குடும்பமுடையவன் வளர்பிறையிலும், முனிவர்கள் இரண்டு பக்ஷத்திலும் செய்யலாம்.

9. செய்விப்பவன், செய்பவன் இவர்களுக்கு உகந்த நட்சத்ரத்தை கண்டோ காணாமலோ செய்யலாம். பட்டு, பருத்தி இவைகளாலான நூல், முஞ்சை புல்லாலோ இல்லையெனில்

10. தர்ப்பையாலோ, மரவுரி(மரப்பட்டையாலோ) யாலோ நூல்தயாரித்து பவித்ரம் செய்து அதிவாஸம் செய்ய வேண்டும். மூன்றாக உள்ள நூலை மும்மடங்காக சுற்றி அஸ்திர மந்திரத்தினால் சுத்தி செய்ய வேண்டும்.

11. உரோமம் முதலியவைகளை அஸ்திர மந்திரத்தினால் தூய நீரால் அலம்பி ஹ்ருதய மந்திரத்தினால் காயவைத்து அந்த ரோமத்தால் (கம்பளியால்) பவித்ரம் செய்ய வேண்டும்.

12. ஒன்பது நூல்களுக்கு வாமை முதலான ஒன்பது சக்திகள் அதிபர்களாவர். இரண்டு மடங்கான நூல்கள் பத்து முழ அளவினால் அதிகமாகயிருப்பது முதல்

13. நூற்றியெட்டு எண்ணிக்கை வரையுள்ள நூல்கள் உத்தமோத்தமம் ஆகும். பன்னிரண்டுக்கு அதிகமாகி முடிவான பன்னிரண்டு வரை முடிவுள்ளதாக உள்ள

14. நூல்கள் கடைநிலை முறைகளுக்கு ஏற்றதாகும். யவையளவு மெலிந்தான பதினாறு முதல் ஐம்பத்தியொன்று எண்ணிக்கை உள்ளது நடுநிலைக்கேற்றதாகும்.

15. உத்தமமான லிங்கங்களுக்கு எண்பத்தோரு நூல் எண்ணிக்கையுள்ளதாகும். மானுஷ லிங்கங்களுக்கும் அவ்வாறேயாம். ஸ்வாயம்புவம் முதலிய லிங்கங்கள், பாணம், ரத்னம்

16. ஆகிய லிங்கங்களிலும், ஸ்தண்டிலம், மண்டலம் உத்ஸவபிம்பம், மூர்த்தி பிம்பங்களிலும் எல்லா எண்ணிக்கையுள்ளதாகவுமோ சமமாகவோ, சமமின்றியோ ஏற்றுக் கொள்ள வேண்டும்.

17. குடும்பமுள்ளவர்களுக்கும் பரிவார தேவதைகளுக்கும் அவ்வாறே வசதியில்லாத குறைவான லிங்கங்களின் விஷயத்திலும் ஸமமான அளவேயாம்.

18. ஒன்றொன்றாக அதிகரித்து பன்னிரண்டு எண்ணிக்கை வரை நூல்கள், அவ்வாறே நெருக்கமாகவும், புதியதாகவும் பன்னிரண்டு முடிச்சு உள்ளதாகவும் கிரஹிக்க வேண்டும்.

19. ஸம அளவென்ற விஷயத்தில் விரும்பியபடி முடிச்சு போடலாம். முடிச்சின் அளவு ஒன்று முதல் மூன்றங்குல அளவுடையதாக இருக்க வேண்டும்.

20. அறிவாளிகளால் விரும்பிய இடத்தில் முடிச்சுகளை போட வேண்டும். செஞ்சந்தனம் குங்குமப்பூ, கைரிகை, அகில், சந்தனமிவைகளோடு

21. நீலோத்பல கிழங்கு, பச்சை கற்பூரத்துடனும், மஞ்சள் கருஞ்சந்தனத்துடன் ஹ்ருதய மந்திரத்தினால் பூசி அலங்கரித்து அல்லது சிகப்பு நூல்களாலோ

22. மூன்று பவித்ரங்களை ஆத்ம, வித்யா சிவதத்வரூபமாக லிங்க சிரஸில் சமர்ப்பித்து எல்லா தத்வமயமான நான்காவது ஆவுடையாரில் சேர்க்கவும்.

23. பூணூலின் பொருட்டாக சூத்ரமாலை, தோள்பாக பக்க சூத்ர, பவித்ரமாலையை ஸகள விக்ரஹத்திலும் முகலிங்கத்திலும் ஸமர்ப்பிக்க வேண்டும்.

24. முழந்தாள் வரை காந்தியுள்ளதாக வெளியில் தெரியும்படியாக மூன்று முதல் விருப்பப்பட்ட நூல் உள்ளதாக பவித்ரம் ஸமர்ப்பிக்க வேண்டும். யந்திரத்திற்கு லிங்க அளவாகவோ புஷ்பலிங்க அளவாகவோ பவித்ரம் ஸமர்ப்பிக்க வேண்டும்.

25. க்ஷúத்ரலிங்கத்திலும், ஸ்தண்டிலம் முதலியவைகளிலும் விருப்பப்படி பவித்ரம் ஸமர்ப்பிக்க வேண்டும். விருஷபத்திற்கு கொம்பு முதுகு தோள் குளம்பிலுமாக ஒன்றை ஸமர்ப்பிக்க வேண்டும்.

26. எல்லா ஆவரண தேவதைகளுக்கும் ஒரு பவித்ரமாகும். சண்டிகேஸ்வரர்க்கும் பைரவர்க்கும் ஒரு பவித்ரமேயாகும்.

27. ÷க்ஷத்ரபாலர், இந்திரன் முதலான திக்பாலகர்களுக்கு வலமாக ஒரு பவித்ரம் ஆகும். யாகசாலை விருஷபஸ்தான, விமானம், ஆலயம் இவைகளை சேர்ந்த

28. எல்லா காரண தேவதைகளுக்கும் மூவிழை நூலால் சுற்றவும் இவ்வாறு மூர்த்தங்களுக்கு பவித்ர முறையை அறிந்து உத்ஸவத்தின் முன் தினம் அதிவாஸத்தை செய்ய வேண்டும்.

29. ஆலயத்தின் முன்பு அல்லது வலது இடது பக்கத்திலோ மண்டபத்தில் ஐந்து முதல் இருபத்தி நான்கு முழ அளவுள்ளதாக

30. பதினாறு அல்லது பன்னிரண்டு தூண்கள் உடையதாகவும் நடுவில் எல்லா அழகோடு வேதிகையோடு கூடியதான நடுவில்

31. மூன்று பங்கு அளவு நீளமும் இருபது தூணையுடையதும் முன்பே நிர்மாணிக்கப்பட்டதுமான மண்டபத்தில் இரண்டு அல்லது மூன்று முழ அகலமான வேதிகையும்

32. அதைச்சுற்றி நன்கு அமைக்கப்பட்ட ஒன்பது ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையுள்ள குண்டங்களையோ அதே எண்ணிக்கையுள்ள ஸ்தண்டிலத்திலோ வேதிகையுடன் கூடியதாகவோ

33. அமைத்து மேற்கில் மண்டலம் அமைத்து பவித்ரத்தை கிழக்கு நோக்கி வைக்கவும். காலைக்கடன் ஸ்நானம் ஸந்த்யாவந்தனம் மந்திரதர்ப்பணம் முதலியவைகளைச் செய்தவனாகவும்

34. சூர்ய பூஜையுடன் நித்ய பூஜையையும் செய்து சூர்யனை விஸர்ஜனம் செய்து பூத சுத்தியால் மந்திரமய சரீரமுடையவனாக இருந்து கொண்டு

35. யாகத்திற்காக பூமியை ஸ்வீகரித்து, வாயில் வாயிற்காவலர்கள், வாஸ்துநாயகர், லக்ஷ்மீ யாகயாகேஸ்வரர்கள் திக்பாலகர்கள், வினாயகர், ஸப்தகுருக்கள்

36. இவர்களை பூஜித்து வணங்கி வேண்டி அதன்பிறகு மண்டலத்திலும் பரமேஸ்வரனை பூஜித்து முறைப்படி தேவனின் ஸமீபத்தில் நல்ல ஆஸநத்தில் இருந்துகொண்டு

37. பஞ்சாஸனார்ச்சனை ஆரம்பித்து ஆவாஹநம் வரை செய்ய வேண்டும். பஞ்சாம்ருதத்துடன் கூடியதாக விசேஷஸ்னபநத்துடனும்

38. பலவித வாஸனைப் பொருட்களோடும் பலவித பக்ஷண, போஜ்ய, சாதவகைகளோடும் விசேஷமாக பூஜையைச் செய்து குண்ட ஸமீபம் சென்று

39. குண்டஸம்ஸ்காரம் முதல் பூர்ணாஹூதி வரையிலாக ஹோமத்தை செய்யவும், ஸ்மித், நெய், ஹவிஸ், பொறி, எள் கோதுமை முதலான பயிர்வகைகளையும்

40. புரசு, அத்தி, அரசு ஆல் முதலிய சமித்துக்களை கிழக்கு முதலான திசைகளிலும் வன்னி, கருங்காலி, பில்வம், இச்சி முதலிய சமித்துக்களை தென்கிழக்கு முதலான திசைகளிலும்

41. பிரதான குண்டத்தில் புரச சமித்தையும் ஹோமம் செய்க. சிவமூலமந்திரத்தை நூறு அல்லது ஐம்பது ஆவ்ருத்தியும் அங்க மந்திரங்களை சிவமந்திரத்திலிருந்து பத்தில் ஓர் பங்காக ஹோமம் செய்ய வேண்டும்.

42. முன்கூறிய எண்ணிக்கையில் பாதியாக மற்ற குண்டங்களில் தத்புருஷன் முதலானதும் ஹ்ருதயம் முதலானதுமான மந்திரங்களை ஹோமம் செய்ய வேண்டும். ஸ்தாலீபக ஹவிஸ்ஸை செய்து அதை ஹ்ருதய மந்திரத்தினால் மூன்றாக பிரிக்க வேண்டும்.

43. கும்பத்திலுள்ள சிவனின் பாகத்தையும் அக்னிகார்யமாக ஹவிஸ்ஸையும் தேனாலும், நெய்யாலும் கலந்து தன்னுடைய பாகத்தை நெய்யால் மட்டும் கலந்ததாக தயார் செய்து கொள்ள வேண்டும்.

44. ஹ்ருதய மந்திரத்தினால் தேவனின் பாகத்தை பூஜித்து அதை சிவஸமீபம் எடுத்து சென்று ஈச்வரனை பூஜித்து விரதாங்கங்களை தெரிவிக்க வேண்டும்.

45. முறைப்படி தத்புருஷ மந்திரத்தை ஸ்மரித்து கிழக்கில் பற்குச்சியை வைக்க வேண்டும். அகோரமந்திரத்தினால் சுத்தமான பாத்ரத்தில் விபூதியை வைக்க வேண்டும்.

46. மேற்கில் ஸத்யோஜாத மந்திரத்தை நினைத்து சுத்தமான மண்ணை வைக்க வேண்டும். வடக்கில் நெல்லிக்கனியை ஸ்தாபித்து கிழக்கில் ஐந்துவிதமான பக்ஷணங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.

47. தர்பையுடன் கூடியதான எல்லா ஹோமத்ரவ்யங்களையும் மேற்கு திசையிலும், தெற்கு திசையில் தண்டம், ருத்ராக்ஷமாலை, கோவணம், பிøக்ஷ பாத்ரங்களையும்

48. கோரோசனை குங்குமப்பூ, நல்லெண்ணை, ஊசி, சீப்பு, கண்ணாடி, கத்தரிக்கோல், பல், நகம், சுத்தி செய்யும் கருவி, கண்மை இவைகளையும்

49. வேறான மைபாத்ரம் போன்ற பொருட்களை வாமதேவ மந்திரத்தினால் ஸ்தாபிக்க வேண்டும். சுண்ணாம்புடன் கூடிய தாம்பூலத்தை தத்புருஷ மந்திரம் கூறி கொடுக்க வேண்டும்.

50. வடகிழக்கு திசையில் ஆஸனப்பலகை, குடை பாதுகை, யோகவஸ்திரம் இவைகளை ஸ்தண்டிலத்தில் உள்ள பவித்ர சூத்ர சமீபத்தில் சுற்றிலும் அதிவாஸம் செய்து

51. அஸ்திர மந்திரத்தினால் புரோக்ஷித்து கவச மந்திரத்தினால் அவகுண்டநம் செய்து ஹ்ருதய மந்திரத்தினால் பூஜித்து தேனுமுத்ரையால் அம்ருதீகரணமாக்கி சிவாம்சமாக தெரிவிக்க வேண்டும்.

52. தேவதேவனுக்காக பிரம்ம மந்திரங்களால் பவித்ராரோபணம் செய்ய வேண்டும். வேதிகைக்கு மேல் எட்டு மரக்கால் அளவு நெல்லினால் ஸ்தண்டிலம் அமைக்க வேண்டும்.

53. அதன் பாதியளவு 4 மரக்கால் அரிசியும், எள் பொறியுடன் கூடியதாக ஸ்தண்டிலம் அமைத்து அதில் பாத்திரத்தில் பவித்ரங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

54. பவித்ரங்களை மண்டலம், வேதிகையின் மேல் பாகம் கும்பஸமீபமிவைகளிலோ வைத்து அர்க்யஜலத்தால் புரோக்ஷித்து ஸம்ஹிதா மந்திரத்தினால் அபிமந்திரணம் செய்ய வேண்டும்.

55. மான்தோல் முதலியவைகளால் போர்த்தி அக்னிஸமீபம் வைக்க வேண்டும். ஓர் ஆண்டின் குறைவில்லாத எல்லா கார்யத்திற்கும் ஸாக்ஷியாகவும்

56. ரக்ஷிப்பதற்காகவும், கர்மாவின் பயனையடைய நிச்சயித்தின் இருப்பிடமாகவும் சிவனை நினைத்து, சிவமந்திரம், பிரம்ம அங்க மந்திரங்களால்

57. இருபத்தியொரு முறை ஸம்பாத ஹோமம் செய்து மேற்கூறிய மந்திரங்களால் ஹோமம் செய்ய வேண்டும். சூர்யனுக்குகந்த பவித்ரம் கொடுத்து ஆசமனம் செய்து,

58. யாகசாலை, வ்ருபஸ்தானம் பிரகாரம் கோபுரம், அக்னி ஆகியவர்கள் சேர்ந்த காரணதேவர்களை கவச மந்திரத்தினால் ஐந்து சூத்ரத்தினால் சுற்ற வேண்டும்.

59. நந்தி முதலான மூர்த்திகளுக்கு பிரதட்சிணமாக கந்தபவித்ரம் கொடுக்கவும், முன்பு போல் ஆலயத்தில் நுழைந்து பிரம்மாவிற்கு பவித்ரம் கொடுக்க வேண்டும்.

60. ஹே பகவானே இந்த பவித்ரங்களை ஸம்ஸ்கரிக்கப்பட்டவைகளாக்கி குடத்திலிருக்கும் சிவனின் பொருட்டு அர்ப்பணிக்கிறேன் என்று தெரிவிக்கவும்

61. காப்பாற்றும் பொருட்டு தேவர்களுக்கு கந்த பவித்ரத்தை ஸமர்ப்பித்து முதலில் கும்பத்திற்கும் வர்த்தனிக்கும் ஸமர்ப்பித்து சிவஸமீபமடையவும்.

62. தன்மூர்த்தியான சரீரத்திலும் குரு பரம்பரையிலும் கந்த பவித்ரம் கொடுத்து ஓர் முடிச்சையுடையதும் குறைவான நூலால் நிர்மாணிக்கப்பட்டதும்

63. புகையூட்டப்பட்டு புஷ்பத்துடன் கூடியதும், தேனு முத்ரையால் அம்ருதீகரணம் செய்யப்பட்டதுமான ஆமந்திரண பவித்ரத்தை அஞ்சலி ஹஸ்தமாக எடுத்து,

64. அவன் தலையில் சிவனின் பொருட்டு ஏற்றி ரேசககிரியையால் சிவமந்திரத்தினால் ஸமர்ப்பிக்க வேண்டும். தேவனுடைய சன்னதியில் ஆமந்திரண மந்திரத்தை கூற வேண்டும்.

65. ஹே ப்ரபோ எல்லா கார்யங்களின் குறைகளை சரி செய்பவரே யாகத்தை குறித்து உன்னை, உன்னுடைய விருப்பத்தை அடைய காரணனாக ஆமந்திரணம் செய்கிறேன்.

66. அதன் விருப்பப்பயனை நீவிர் அறிவீர். சித்துக்கும், அசித்துக்கும் தலைவரே எல்லாவிடத்திலும் எப்பொழுதும் சம்போ உனக்கு நமஸ்காரம், எனக்கு அருள்பாலிப்பீராக!

67. என்று ஜபித்து நிவேதித்து தேவனை ஸ்தோத்தரித்து நமஸ்கரித்து க்ஷமாபிரார்த்தனை செய்து திக்பாலகர்களுக்கும் தசாயுதங்களுக்கும் பவித்ரார்ப்பணம் செய்ய வேண்டும்.

68. சருவின் மூன்றாவது பாகத்தை வஹ்நியில் இருக்கும் தேவனுக்கு ஸமர்ப்பித்து அக்னியில் இருக்கும் தேவர்க்கும் முன்பு போல் ஆமந்திரண பவித்ரத்தை கொடுக்க வேண்டும்.

69. ஓம் இந்த்ராய நம: பலிம் ஸங்க்ருஹாண என்பதாகவும் மற்ற மூர்த்திகளுக்கும் முறைப்படி பஹிர் பலியைகொடுக்க வேண்டும்.

70. வடமேற்கு திசையில் பைரவருக்காக பலிகொடுத்து ஆசமனம் செய்து பிராயச்சித்தாஹூதி செய்து பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

71. பூ:, புவ: ஸுவ: பூர்புவஸ்ஸுவ, என்ற பதங்களால் தனித்தனியாகவும் சேர்ந்ததாகவும் ஹோமம் செய்ய வேண்டும். அக்னயேஸ்வாஹா, ஸோமாயஸ்வாஹா அக்னீ÷ஷாமாப்யாம் (பூஸ்வாஹா, புவஸ்வாஹா, ஸுவஸ்வாஹா, பூர்புவஸ்ஸுவ ஸ்வாஹா, ஸ்விஷ்டக்ருதேஸ்வாஹா)

72. ஸ்வாஹா என்றும் முன்பு கூறப்பட்ட தீப நாஹுதி மந்திரங்களால் ஹோமம் செய்து மண்டலத்திலுள்ள சிவனோடு அக்னியிலுள்ள சிவனையும் பிறகு

73. நாடீ ஸந்தாநமுறைப்படி சேர்ந்ததாக பரமேஸ்வரனை பாவிக்கவும். ஸித்தாந்த புஸ்தகத்திலும் தன் ஆசார்யனிடத்திலும் பவித்ரத்தை கொடுத்து

74. யாகசாலையிலிருந்து வெளி வந்து ஆசமனம் செய்து பல்துலக்குதல் பஞ்சகவ்யம் ஹவிஸ் புசித்தலை முறைப்படி செய்ய வேண்டும்.

75. பிறகு ஆசமனம் செய்து சிவமந்திரத்தை நினைத்து கொண்டு படுக்க வேண்டும். பிறகு காலையில் செய்யப்பட்ட ஸ்னானம் ஸந்தியாவந்தனம் மந்திர தர்பணமுடையவனாக

76. விஸர்ஜனம் செய்யப்படாத ஈச்வரனிடமிருந்து பவித்ரங்களை எடுக்க வேண்டும். அவைகளை வடகிழக்கு திசையிலுள்ள மண்டல பாத்ரத்தில் சண்டேஸ்வரனுக்காக ஸமர்ப்பிக்க வேண்டும்.

77. தேவனிடம் அஷ்டபுஷ்பம் சாத்தி லிங்கத்திலிருந்து தேவனை விஸர்ஜனம் செய்க. (நிர்மால்ய பூஜைசெய்க) ஆசமனம், மந்திரநியாஸம், ஸாமான்யார்க்கத்தை கையில் எடுத்துக் கொண்டு

78. நித்யானுஷ்டானங்களையும், செய்து ஆசமனத்தையும், மந்திர விக்ரஹபாவனையும் செய்து கொண்டு வாயில் வாயிற்படி தேவதைகளை பூஜித்து அஸ்திரங்களை கும்பத்தையும் பூஜித்து,

79. திக்பாலகர்களையும் தசாயுதங்களையும் முறைப்படி பூஜிக்க வேண்டும். பிரகாசமாந ஆஸனத்தில் வடக்கு முகமாக நேராக அமர்ந்து

80. பூதசுத்தி விசேஷார்க்யம், திரவ்ய சுத்தி, சிவஹஸ்தபாவனை இவைகளையும் செய்து பஞ்சகவ்ய பூஜையையும் செய்து

81. விசேஷமான ஸ்நபனபூஜையுடன் பஞ்சாம்ருதம், பஞ்சகவ்யத்துடன் கூடியதாக அபிஷேக பூஜைகளை செய்ய வேண்டும்.

82. ஜபம் செய்து ஸமர்ப்பித்து ஆசார்யன் குண்ட ஸமீபத்தையடையவும் குண்டத்தை அஸ்திரமந்திரத்தினால் பிரோக்ஷித்து மேகலை, பரிதி இவைகளிலிருக்கும்

83. தேவர்களை பூஜித்து, முறைப்படி ஸ்ருக்ஸ்ருவாஜயஸம்ஸ்காரம் செய்து, பூர்ணாஹூதி செய்து, சிவனை ஆவாஹித்து, பூஜித்து திருப்தி செய்விக்க வேண்டும்.

84. பிராயச்சித்தாஹுதி செய்து பூர்ணாஹுதி செய்ய வேண்டும். பிறகு சூர்யனுக்கு பவித்ரம் கொடுத்து ஆசமனம் செய்து மந்திரமயசரீரமாக்கி கொண்டு

85. நந்தி முதலானவர்களுக்கு பவித்ரம் கொடுத்து உள்ளே நுழைந்து பிரம்மாவிற்கும், சிவகும்ப வர்த்தநீகும்பத்திற்கும் முறைப்படி பவித்ரம் கொடுக்க வேண்டும்.

86. தேவ சமீபம் சென்று தன் ஆஸனத்தில் அமர்ந்து (விபவாநுசாரமாக) சக்திக்கேற்றவாறு விசேஷ பூஜை செய்து

87. ஸ்வமூர்த்தத்திலும் குரு வரிசைகளில் சிவனை ஸ்மரித்து பவித்ரம் கொடுத்து வர்ஷ, ருது, மாஸ, பக்ஷ, தின நாடீ ப்ராணாதி, விக்ரஹமாயும்

88. எல்லாவித கண் முதலான இந்திரியமுள்ள சரீரம் பொருள், செயலின் காரணமாயும், செய்யப்பட்ட செய்யப்படாத சேர்க்கப்பட்ட விடுபட்டகார்யங்களுக்கு ஒரே ஸாக்ஷியாகவும்

89. பூமியை காப்பவருமான ஈசானனை சுத்தமனதை உடையவன் சரணாகதியாக கூறி ஈச்வர முகத்தை நோக்கி பவித்ரத்தை கையில் உடையவனாக இறைவனை

90. காலாத்மாவான உன்னால் ஹேதேவ என்னால் செய்யப்பட்ட இந்த முறையில் பார்க்கப்பட்டு குறைத்து சேர்த்து, அபஹரித்து மறைத்து இவ்வாறாக என்னால் செய்யப்பட்டதை

91. குறைவானது குறைவில்லாதது, செய்யப்பட்டதும், செய்யப்படாததும் ஆன கிரியை நிறைவுள்ளதாக்கி இந்த சர்வாத்மாவான சம்புவினால் உள்இச்சையால் பவித்ரத்தோடு

92. யாகத்தின் விரதபயனை பூர்த்தி செய்யும் என்று இருமுறை கூறி நியமேஸ்வராய ஸ்வாஹா என்றும் கூறி

93. ஆத்மதத்வாதி பதயே சிவாய நம: என்றும் வித்யாதத்வாதிபதயே சிவாய நம: சிவதத்வாதிபதயே சிவாய நம: என்றும் முக்தி விருப்பத்தையுடைய பதமாக கூற வேண்டும்.

94. அனுபவிப்பதை குறிக்கோளாக உடையவர் சிவதத்வம் முதலாக மூன்று பவித்ரத்தை சிரஸில் ஸமர்ப்பிக்கவும். சிவமந்திரத்தை முதலில் கூறி சிவவித்யா ஆத்ம தத்வத்தையும்

95. கூறி, பிறகு ஸர்வதத்வேஸ்வராய என்று கங்காவதாக பவித்ரத்தையும் ஸமர்ப்பிக்க வேண்டும். புஷ்பாஞ்சலி ஹஸ்தத்தோடு பக்தியோடு ஈச்வரனை விஞ்ஞாபிக்க வேண்டும்.

96. சராசரமான உலகில் எல்லா பிறப்புகளுக்கும் உன் கதி ஸ்திரமாயிருக்கிறது. பூதங்களின் உள்புறம் சஞ்சரிப்பவராக நீர் காணப்படுகிறீர்.

97. கர்மா, மனது, வாக்கு இவைகளால் செய்யக்கூடிய செய்கையானது எனக்கு உன்னிடமிருந்து இன்றி வேறில்லை. மந்திர குறைவு, செயல்குறைவு பொருட்குறைவு ஆகியவைகளுடன்

98. ஜபம், ஹோமம், அர்ச்சனை இவைகளின் குறைவை என்னால் உமக்கு நித்யம் செய்யப்பட்டதாகவுள்ளதை செய்யப்படாததாக எண்ணி வாக்யக் குறைவையும் மேற்கூறியவைகளையும் நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

99. ஸுரேஸ்வர பாபத்தை யழிக்கக் கூடியதாகவும் சுத்தமானது பவித்ரம். எல்லா ஸ்தாவரஜங்கமங்களும் உன்னால் சுத்தியாக்கப்பட்டதாகும்.

100. விரதத்தின் குறைவுப்பட்ட சேர்க்கையால், ஹேதேவ, என்னால் எது துண்டிக்கப்பட்டதோ அவை எல்லாம் உன் உத்தரவினால் நிரப்பப்பட்டு ஒன்றாகச் சேர்ந்ததாக ஆகட்டும்.

101. ஜபம் செய்து ஈச்வரனிடம் தெரிவித்து நமஸ்கரித்து ஈச்வரனிடமிருந்து நியமமாக பக்தியோடு இருந்து நமஸ்கரிக்க வேண்டும். நான்கு மூன்று இரண்டு ஒரு மாஸமுமோ

102. பதினைந்து தினம் ஏழுநாள், ஐந்து நாள், மூன்று ஒரு தினமாகவோ, பூஜை ஆரம்பித்து முடியும் வரை நியமத்தை கடைபிடிக்க வேண்டும்.

103. ஒருவேளை உணவு முதல் எந்த நியமமுண்டோ அவற்றை சக்திக்குதக்கவாறு கடைபிடித்து ஈச்வரனிடமிருந்து பவித்ராவரோஹணம் செய்யும் வரை விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

104. தசாயுதங்களிடமிருந்தும் திக்பாலகர்களிடமிருந்தும் ஸூத்ரத்தை எடுத்ததாக நினைத்து அக்னியிலுள்ள சிவனிடம் நான்காவது பவித்ரத்தை கொடுத்து வியாஹருதிகளால் ஹோமம் செய்ய வேண்டும்.

105. வஹ்னியை ஸ்விஷ்டக்ருத்ஹோமம் வரை நிறுத்தி ஹோமம் செய்து உள்ளே நுழைந்து தேவனை பூஜித்து குருவிற்கும் ஸித்தாந்த புஸ்தகத்திற்கும்

106. பவித்ரம் கொடுத்து திக்பாலபலி கொடுத்து ஆசார்யன் ஆசமனம் செய்து பிராயச்சித்தாஹுதி செய்து குறைவை நிறைவு செய்யும் பூர்ணாஹூதியை செய்ய வேண்டும்.

107. மண்டலத்திலுள்ள தேவனை பூஜித்து ஈச்வரனை மன்னித்தருள கேட்க வேண்டும். அதன் முடிவில் உணவு, உடை, மற்றும் உபகரணப்பொருட்களால்

108. தீக்ஷிதர்களை பூஜித்து என்னிடம் ஸதாசிவன் அன்பாக இருக்கக் கடவன் என கூற வேண்டும். லிங்கத்திலிருந்து பவித்ரத்தை எடுத்து நிர்மால்ய குழியில் போட்டதும்

109. ஸ்நானம் செய்யப்பட்டு பூஜித்த காலத்தில் அதை நிர்மால்ய குழியில் வைத்துப் பிரதிதினமும் விஸர்ஜனம் செய்யாமலிருக்கவும் அதிகமான தினங்கள் வரை விரத முடிவில் பூஜித்து

110. விரதத்தை தெரிவிக்கிறேன் என்று கூறி எனக்கு பலனை யளிப்பதாக ஆகட்டும் போகத்தை விரும்புபவன் விரதியாகவும் விருப்பத்தில் கர்மாவிற்கு கட்டுப்பட்டவன் என்றும்

111. மந்திர தர்பணம் வரை செய்து பிராயச்சித்தம் அனுஷ்டிக்க வேண்டும். விபூதி கொடுத்து வஹ்னியிலிருப்பவரை சிவனிடம் சேர்க்க வேண்டும்.

112. வஹ்னியிலிருந்து மந்திரத்தை எடுத்து அதை த்வாதசாந்த ஸமீபம் சேர்த்து ஹ்ருதயத்தில் ஸமர்ப்பித்து அக்னியை விஸர்ஜித்து விஷ்டரத்திலிருந்து தேவர்களை விஸர்ஜித்து

113. பரிதிகளையும் பலிகொடுத்ததாக விஸர்ஜித்து ஆசமனம் செய்து சிவகும்ப அஸ்த்ர வர்த்தநீ கும்ப மந்திரங்களை ஸம்ஹரித்து சேர்க்க வேண்டும்.

114. ஈச்வரனிடத்தில் விருப்பத்தை கூறி மன்னித்தருளும் என்று விஸர்ஜனம் செய்து, லோக பாலகர்களை தசாயுதங்களுடன் சேர்ந்ததாக வேண்டும் வாயிற்படியிலுள்ள திவார தேவதைகளையும்

115. சூர்யன் வரை விஸர்ஜனம் செய்து மஹேச்வரனிடமிருந்து பவித்ரங்களை எடுத்து சண்டேசனிடத்தில் ஸமர்ப்பிக்க வேண்டும்.

116. பவித்ரங்களை நிர்மால்யமாகவும் வேறுவிதமாகவும் செய்யப்படாவிடில் அகோர மந்திரத்தை லக்ஷõவர்த்தி செய்து பத்தில் ஓர் பங்கு ஹோமம் செய்க.

117. நித்யபூஜாங்க பவித்ரத்தை புஷ்பம் முதலியவைகளால் கொடுக்க வேண்டும். நித்ய பவித்ரம் கொடுத்தாலும் ஸம்வத்ஸர பவித்ரத்தையும் கொடுக்க வேண்டும்.

உத்தரகாமிக மஹாமந்திரத்தில் பவித்ர சமர்ப்பண முறையாகிற பதினெட்டாவது படலமாகும்.
படலம் 17: ஆடிமாத பூர நட்சத்ர பூஜா முறை

பதினேழாவது படலத்தில் ஆடிமாத பூரநட்சத்ர விளக்கப்படுகிறது. முதலில் ஆடிமாத பூர நட்சத்ரம் கூடிய தினத்திலோ ஐப்பசிமாத பூரநட்சத்திரத்திலோ இங்கு பூஜை செய்க என விளக்கமாக காலம் கூறப்படுகிறது. பிறகு தேவிக்கும், அல்லது ஸ்வாமி, அம்பாளுக்குமோ ரக்ஷõபந்தனம் செய்க. காலையில் கன்னிகைகளுக்கு ஸ்வர்ணங்கள் வஸ்திரம் உணவு இவைகளை கொடுத்து தேவிக்கு பால் நிவேதனம் செய்யவும், எல்லா அலங்கார ஸஹிதமாக தேவியை கிராம பிரதட்சிணம் செய்து ஆஸ்தான மண்டபம் சேர்க்கவும், கிராம பிரதட்சிண சமயத்தில் உப்புடன் கூடிய முளைப்பயறு நிவேதனம் செய்ய வேண்டும். ஆஸ்தான மண்டபத்தில் வலம் வருதல் விதிக்கப்படுகிறது. பிறகு சூர்ணோத்ஸவம் இன்றி அரிசி முதலிய தானம் மட்டுமே செய்க என சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு அஸ்த்ரதேவனுடன் கூடி தேவியை நதி முதலான தீர்த்தங்களுக்கு அழைத்து சென்று தீர்த்தவாரி உத்ஸவபடி செய்ய வேண்டும். தீர்த்த விழாவிற்கு பிறகு தேவியை ஆலயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தீர்த்தோத்ஸவம் இன்றி கிராம பிரதட்சிணம் மட்டும் செய்க என வேறுவிதமாக கூறப்படுகிறது. பிறகு ஸ்வாமிக்கும், தேவிக்கும் கிராம பிரதட்சிண பூர்வமாக தீர்த்தோத்ஸவம் செய்யும் முறை வர்ணிக்கப்படுகிறது. தீர்த்தோத்ஸவத்திற்கு பிறகு ஆலயம் அமைத்து அங்கு ஸ்நபனம் செய்து வாசனையுடன் கூடிய தாம்பூலத்துடன் மஹாஹவிஸ் நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு ஆசார்ய பூஜை செய்க என சுருக்கமாக விளக்கப்படுகின்றது. முடிவில் தேவியின் திருப்தி காரணத்திற்காக இந்த பூர நட்சத்திர பூஜா விதானம் எல்லா தீங்கு நிவிருத்திக்காகவும் எல்லா பாப அழிவிற்காகவும் எல்லா கார்ய சித்திக்காகவும், எல்லா விருப்ப பூர்த்திக்காகவும் செய்ய வேண்டும் என பலஸ்ருதி காணப்படுகிறது. இவ்வாறாக 17வது படல கருத்து தொகுப்பாகும்.

1. ஆஷாடம் என்கிற ஆடிமாதத்தில் பூர நட்சத்திரத்திலோ, ஐப்பசி மாத பூர நட்சத்திரத்திலோ இந்த பூரநட்சத்திர பூஜையை செய்யவும்.

2. தேவிக்கு முன்பு கூறிய முறைப்படி இரவில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். தேவனுக்கும் தேவிக்குமாவது ரக்ஷõபந்தனம் செய்து கன்னிகைகளுக்கு தங்கம் முதலியவைகளையும்

3. வஸ்திரம், உணவு முதலியவைகளை கொடுத்து தேவிக்கு பாலை நிவேதனம் செய்ய வேண்டும். எல்லா அலங்காரத்துடன் கூடியதாக தேவியை கிராம வீதி வலம் செய்ய வேண்டும்.

4. அந்த ஸமயத்தில் முளையிட்ட பாசிபயிரை உரிய இலக்கணமுடையதாக அர்ப்பணிக்க வேண்டும். கிராம பிரதட்சிணத்திற்கு முன்பு நைவேத்யம் கொடுத்தோ கொடுக்காமலோ பூஜிக்க வேண்டும்.

5. ஆஸ்தான மண்டபத்தையடைந்து தட்டி சுற்றுதலை செய்க. சூர்ணோத்ஸவ முறைப்படி மஞ்சட் பொடியையும், நல்லெண்ணையையும்

6. தேவனுக்கும், தேவிக்கும் கொடுத்து பிறகு ஜனங்களுக்கும் கொடுக்க வேண்டும். தாம்பூலம், பலவித காய்கறிகள் அரிசி முதலியவைகளுடன் மஞ்சட் பொடியையும் கொடுக்க வேண்டும்.

7. சூர்ணோத்ஸவமின்றியும் அரிசி முதலியவைகளை அளிப்பதுமின்றியுமாக சக்த்யஸ்திரத்துடன் தேவியை நதி முதலான தீர்த்தங் களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

8. நெல் முதலானவைகளால் இரண்டு ஸ்தண்டிலம் அமைத்து அதில் முன்னதாக சூலாஸ்திரத்தையும் தேவியையும் ஸ்தாபித்து அதற்கு முன்பாகத்தில்

9. ஸ்நபன முறைப்படி அந்த குடங்களை முறைப்படி ஸ்தாபித்து ஹ்ருதய மந்திரத்தினால் ஸத்துமாவு, பழங்களுடன் கூடியதாக பூஜிக்க வேண்டும்.

10. பிறகு அந்த கும்ப தீர்த்தங்களால் அந்த சக்தியஸ்திரத்தை அபிஷேகம் செய்வித்து தீர்த்த மத்தியில் ஜனங்களுடன் கூடி சூலத்துடன் ஸ்நானம் செய்து ஆலயத்தை அடைய வேண்டும்.

11. தீர்த்தவாரி கார்யமின்றி, கிராமவீதி வலம் வரையில் அந்த தினத்தில் அணையா விளக்கு, வாடாதமலை இவைகளுடன் கூடியதாகவும் செய்யலாம்.

12. பலியை கொடுப்பதுடன் கூடியதாக ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். அல்லது இரவிலோ பகலிலோ பலி ஹோமமிவைகளுடன் சேர்ந்ததாகவும்

13. எல்லா அலங்காரத்துடன் பிம்பத்தை வீதிவலம் வரச் செய்து எல்லா ஜனங்களுடன் கூடியதாக செய்ய வேண்டும். பலவகையான இனிமையான பழங்களையும்

14. வெல்லக்கட்டியுடன் கூடிய ஸத்துமாவையும் கொடுக்க வேண்டும். பலவித அப்பங்களுடனும் பலவகையான பழங்களையும்,

15. வெல்லம், பழம் ஸத்து மாவையும் தீர்த்தக் கரையில் ஈசனுக்கு நிவேதித்து, தேவதேவிக்கு முன்பாக புதியதீர்த்தத்தில் தீர்த்தவாரி செய்து

16. அல்லது திரிசூலத்துடன் கூடியாவது தீர்த்தவாரி செய்து பின் ஆலயத்தையடைந்து, பூஜையுடன் கூடியதாக ஸ்நபனம் செய்ய வேண்டும்.

17. பிரபூதஹவிஸ் என்ற பாவாடை நிவேதனம் செய்து, முக வாசனையோடு தாம்பூலத்தையும் நிவேதித்து ஆசார்யனை பூஜிக்க வேண்டும்

18. வஸ்திரம், ஸ்வர்ணம், மோதிரமிவைகளோடு தட்சிணையையும் குருவிற்கு கொடுக்க வேண்டும். எல்லா பாபங்களின் அழிவிற்கும், எல்லா கெட்ட கிரியைகளின் நிவ்ருத்திக்கும்

19. எல்லா விருப்ப பயனை அடைவதற்கும் எல்லா செயலும் சித்திப்பதற்காகவும் தேவிக்கு மகிழ்ச்சியையளிக்கக்கூடிய இந்த ஆடிப்பூர பூஜையை செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகமஹா தந்திரத்தில் ஆடிமாத பழ பூஜா முறையாகிற பதினேழாவது படலமாகும்.
படலம் 16 : ஆனி மாத பழ பூஜை

பதினாறாவது படலத்தில் ஆனிமாதத்தில் செய்யவேண்டிய பழ பூஜாவிதி நிரூபிக்கப்படுகிறது. ஆனிமாத மூல நட்சத்ரம் கூடிய தினத்தில் பழபூஜைசெய்ய வேண்டும் என காலநிரூபணம் ஆகும். பஞ்சாம்ருத ஸஹிதம் விசேஷ ஸ்நபனம் செய்து பாயசநைவேத்யத்துடன் விசேஷ பூஜை செய்து சமித், நெய், அன்னம். இவைகளால் விசேஷ ஹோமம் செய்து பலவித பழத்துடன் கூடிய திரவியங்களால் பூர்ணாஹூதி செய்ய வேண்டும். பிறகு பீடத்திலிருந்து லிங்க சிரஸ்வரை பழங்களால் நிரப்பவேண்டும். அதற்கு முன்பாக இரண்டு வஸ்த்ரத்தால் லிங்கத்தையும் பீடத்தையும் மூடவேண்டும், அடுத்த பூஜா காலத்திலும் அல்லது மறுதினத்திலோ பழங்களை வெளியில் கொண்டு வரவேண்டும் பழபூஜை முடிவில் தேசிகனுக்கு வஸ்த்ரஸ்வர்ணங்களால் பூஜை செய்க என பழ பூஜாவிதியில் செய்யவேண்டிய கார்யங்கள் விளக்கப்படுகிறது முடிவில் பழபூஜா விதானத்தில் கர்த்தாவின் மனோபீஷ்டம் சீக்ரம் ஏற்படும் என பலன் கூறப்படுகிறது. இவ்வாறாக 16வது படலகருத்து தொகுப்பாகும்.

1. ஜ்யேஷ்ட மாதமென்கிற ஆனிமாதத்தில் மூல நட்சத்திரத்தில் இனிமையான பழங்களால் பூஜை செய்ய வேண்டும். ஸ்நபநம் பஞ்சாம்ருதத்துடனும்

2. பாயஸ நிவேதனத்துடன் விசேஷ பூஜையுடனும், சமித்து, நெய், அன்னம் இவைகளுடன் கூடிய விசேஷ ஹோமத்துடனும்

3. பலவிதமான பழங்களுடன் கூடிய பொருட்களால் ஹோமம் செய்து பூர்ணாஹூதி செய்து லிங்கத்தின் தலைபாகம் வரை பழங்களால் நிரப்ப வேண்டும்.

4. பழங்களால் லிங்கம் முழுவதும் மூடியதாகவோ, அல்லது லிங்கம் (பாணம்) தவிர மற்ற இடங்களில் பழங்களை நிரப்பி, கவச மந்திரத்தினால் வஸ்திரத்தினால் லிங்கம் பீடம் இவற்றை போர்த்த வேண்டும்.

5. அடுத்த ஸந்தியா பூஜா வேளையிலோ அடுத்த தினத்திலோ அந்த பழங்களை எடுத்து வெளிக் கொணரவும். பூஜை முடிவில் யஜமானன் ஆச்சார்யனை வஸ்திர தட்சிணைகளால் பூஜிக்க வேண்டும்.

5.5. யஜமானனுக்கு எந்த பயன் விருப்பத்தையளிக்க வல்லதாக உள்ளதோ அந்த பயனை சீக்ரம் அடைவான்.

இவ்வாறு உத்தரகாமிகமஹா தந்திரத்தில் ஆனிமாத பழ பூஜா முறையாகிற பதினாறாவது படலமாகும்.
படலம் 15 : வைகாசி மாத சீத கும்ப விதி!

பதினைந்தாவது படலத்தில் வைகாசி மாசத்தில் செய்யவேண்டிய சீத கும்பவிதியை கூறுகிறார். வைகாசி மாசத்தில் விசாக நட்சத்தரம் கூடிய தினத்தில் சீத கும்ப விதி செய்யவேண்டும் என்று காலம் நிரூபிக்கப்படுகிறது. பின்பு கிராமங்கள் தீயினால் நஷ்டமானாலும் கிரஹங்கள் வக்ரமாக நிற்கும் சமயத்திலும், பிராணிகள் வியாதியால் பீடிக்கப்பட்டாலும், காய்ச்சல் வைசூரி போன்றவைகள் சம்பவித்தாலும், அந்த தோஷங்களின் நிவர்த்திக்காக உத்பாதம் முதலிய தோஷ எல்லா அத்புதகாலங்களிலும் எல்லா அசுப நிவிருத்திக்காகவும் பிராயச்சித்த விஷயத்திலும் சீதகும்பவிதி அனுஷ்டிக்கப்படுகிறது. பிறகு சிவலிங்கத்தின் சிரஸ்ஸுக்கு மேல் முக்காலியை வைக்கவும் என கூறி முக்காலி செய்யவேண்டிய விதியையும் தேவதைகளை பூஜிக்கும் பிரகாரத்தையும் வர்ணிக்கப்படுகிறது. பிரதான கும்ப உபகும்பத்தில் அளவு, லக்ஷணம் கூறப்படுகிறது. பின்பக்கத்தில் திவாரத்துடன் கூடியதுமானபிரதான கும்ப உபகும்பத்திலும் செய்யவேண்டிய ஹோமவிதியும் விளக்கப்படுகிறது. ஹோமகாலத்தில் பசுவின் காம்பில் இருந்து விசேஷமாக பாலை கறக்கவும் என கூறப்படுகிறது. அபிஷேகவிதி நிரூபிக்கப்படுகிறது. அபிஷேகத்திற்கு பிறகு செய்யவேண்டிய நைவேத்யவிதி நிரூபிக்கப்படுகிறது. பலவித வாத்யகோஷங்கள் ஜயசப்தங்கள் ஸ்தோத்ரங்கள் நாட்யவிசேஷங்கள் இவைகளால் ஈசனை சந்தோஷிக்க செய்ய வேண்டும் என கூறப்படுகிறது விருப்பப்பட்ட பயனை அடையும் வரை தினம் தோறும் ஈசனை பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு முதல் தினத்தில் செய்யவேண்டிய விசேஷபூஜையை வர்ணிக்கப்படுகிறது. முடிவில் ஏழுதினம் 14 தினம், 21 நாள், 1 மாதம், இரண்டு, மூன்றுமாதமாகவோ, இவ்விதியை அனுஷ்டிக்க வேண்டும். என கூறப்படுகிறது. பிறகு ஆசார்யர்களுக்கு தட்சிணை கொடுக்கும் விதியும் அவர்களின் உணவிற்காக காய்கறிகளுடன் கூடிய அரிசி முதலியவைகளின் தானவிதியும் கூறப்படுகிறது. தினம்தோறும் பக்தர்கள், முனிவர்கள், ஏழை ஆதரவு அற்றவர்கள், ஆகிய ஜனங்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 15வது படலத்தின் கருத்து தொகுப்பாகும்.

1. பிறகு விசேஷமாக சீதகும்பவிதியை கூறுகின்றேன். வைகாசி மாதத்தில் வருகின்ற விசாக நட்சத்திரத்திலும் பஞ்ச மேற்பட்டபொழுதும் இந்த பூஜை செய்யவேண்டும் என்று கூறப்படுகின்றது.

2. ஸகலவிதமான கெடுதல் நாசமடையவும், எல்லா விதமான வால்நட்சத்ரம் முதலியவைகளின் போக்குவதலின் பொருட்டும் பிராயச்சித்தம் முதலிய கார்யங்களிலும், தீவிபத்துகள் ஏற்படுகின்ற காலத்திலும்

3. ஆடு, மாடு, குதிரை முதலிய நாற்கால் பிராணிகளுக்கு வியாதி, ஜ்வரம், அம்மை முதலியன ஏற்பட்ட காலங்களிலும், அந்தந்த கெடுதல்களை போக்குவதற்காக சீத கும்ப முறையானது கூறப்பட்டது.

4. வேள்விகளுக்கு கூறப்பட்ட மரங்களில் முக்காலியானது எட்டு அங்குலம் முதல் ஒவ்வொரு அங்குலமாக கூட்டி ஓர் முழம் வரையில் செய்து லிங்கசிரஸில் வைக்க வேண்டும்.

5. ஆசார்யன் எப்படி இடைவெளி இருக்க வேண்டுமோ அப்படியே அமைத்து ஜலத்தினால் அலம்பி கால்களை வஸ்த்திரத்தினால் மூடி தென்பாகத்தில் பிரம்மாவை பூஜிக்க வேண்டும்.

6. இடது பக்கத்தில் விஷ்ணுவையும் பின்பக்கத்தில் விருஷப தேவரையும் மூன்று கால்களில் இந்த தேவதைகளையும் பலகையின் மேல் பக்கத்தில் எங்கும் பரவலாக மஹாமாயையும் பூஜிக்க வேண்டும்.

7. இதுபோல் முக்காலியை அமைத்து லிங்கத்தின் தலையில் வைக்கவேண்டும். மண்டபத்தில் எட்டு மரக்கால் நெல் போட்டு ஸ்தண்டிலம் அமைத்து

8. அரிசி எள்ளு பொறி இவைகளை போட்டு கும்பத்தை வைக்கவேண்டும். நான்கு மரக்கால் சிரேஷ்டம் மூன்று மரக்கால் மத்யமம்

9. இரண்டு மரக்கால் அளவு அதமமும் ஆகும். நூல் சுற்றியுள்ளதாயும் வஸ்த்திரமாக கூர்ச்சத்தோடு கோவைப்பழம் ஆக்ருதியோடு

10. தங்கத்தாமரை பஞ்சரத்னங்களோடு சுபமாக பின் பாகத்தில் துவாரம் உடையதாய் தங்க (தண்டுடன்) ஓட்டை உடையதாய்

11. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு நிஷ்க மென்ற அளவினால் நான்கு அங்குல நீளத்தினால் ஊசியின் நுனி துவாரத்தோடு கூடியதாகவும் ஓர் பாத்ரத்தை

12. தேங்காய் முதலிய மூடியோடு கூடியதாக இருப்பதாகவும், மாவிலை வஸ்த்திரம் தங்கம் முதலியவைகளோடு கூடியதாகவும் அதன் முன்பாக உபகும்பமும்

13. அடிப்பாகத்தில் துவாரம் இல்லாததாக திவார பாத்ரத்திற்கு தெற்குபக்கத்தில் வைக்கவேண்டும். பிறகு ஆஸனம் மூர்த்தி பூஜையாக கும்பத்தில் ஆவாஹனம் செய்யவேண்டும்.

14. பஞ்சபிரும்ம மந்திரத்தோடும் கலாமந்திரத்துடன் வித்யா தேகத்தை கல்பித்து ஓங்காரத்துடன் சிவனை ஆவாஹனம் செய்து சந்தனம் முதலியவைகளால் அர்ச்சிக்கவேண்டும்.

15. பிரதான கும்பத்திலும் உபகும்பத்திலும் இந்த கார்யங்களை செய்யவேண்டும், சந்தன குழம்பு அல்லது தேன், பால், இவைகளை எல்லா நன்மைகளின் பொருட்டு சேர்க்க வேண்டும்.

16. பிராயச்சித்தம், அத்புத சாந்தி, பாபங்களை நாசம் அடைய செய்வதற்காக சுத்த ஜலமோ பஞ்ச கவ்யமோ நிரப்ப வேண்டும்.

17. வாஸனையுடன் கூடிய சந்தனம் விபூதியோடு கூடவோ கல்பிக்கவேண்டும். அல்லது சந்தனம் மாத்ரம் ஆசமனீயத்திற்காக கல்பிக்க வேண்டும்.

18. முடி இல்லாததும் ஐந்துக்களற்றதுமான திரவியத்தை உப கும்பத்தில் சேர்க்கவேண்டும். சந்தனம் முதலானவைகளை ஹ்ருதயமந்திரத்தினால் பூஜித்து பிறகு அக்னிகார்யத்தை ஆரம்பிக்கவேண்டும்.

19. ஒன்பது, ஐந்து, ஓர் குண்டங்களில் ஸமித், நெய், அன்னத்தோடு கூடிய எள், பொறி, தேன் ஓஷதிகளோடும்

20. அசோக மரத்தின் ஸமித் இவைகளால் வாருண மந்திரத்தினாலும் அமிருத பீஜத்துடன் கூடிய சிவமந்திரத்தினால் ஸம்புடீகரணம் செய்து

21. ஆப்யதாரண மந்திரத்துடன், ஆயிரம், ஐநூறு, நூற்றெட்டு ஒவ்வொரு திரவியங்களையும் ஹோமம் செய்யவேண்டும்.

22. ஆப்யாணுமந்தர ஸம்புடிதமான மூல மந்திரத்தை முன்கூறிய எண்ணிக்கைப்படி செய்யவும், ஜபம் செய்கின்றவர்களான எண்மர்களால் வாருண மந்திரம் ஜபிக்கத்தகுந்தது.

23. ரிக், யஜுஸ், ஸாம, அதர்வண, என்ற நான்கு வேதக்காரர்களும் ஆப்யாயஸ்வ, என்ற மந்திரத்தை ஜபிக்கவேண்டும், ஸ்நானம் செய்தவர்களாயும் (அடக்கமுள்ளவர்களையும்) ஹவிஸ் அன்னத்தை சாப்பிடுபவர்களுமான பிராமணர்களால்

24. ஒரே மனதை உடையவர்களாயும் சாந்தர்களாயும், ஆசார்யருடைய கட்டளையை செயல்படுபவர்களாயும் சிவ தீøக்ஷயுடன் கூடியவர்களும் மழையை விரும்புவர்களுமான (பிராமணர்களால்)

25. திருக்கோயில் முழுமையும் ஜலத்தினால் மெழுகுவதினால் இரவுபகலாக ஜலமயமாக்க செய்ய வேண்டும். அந்த காலத்தில் பசுவின் மடியிலிருந்து விசேஷமாக பாலை கறக்கவும் செய்யவேண்டும்.

26. ஆயிரம், ஐநூறு, நூறு எண்ணிக்கை அளவாக பாலின் கறவை விழுமானால் நல்ல புஷ்டியான மழை பெய்யும்.

27. ஹோம காலத்தில் தினந்தோறும் பிராமண சிரேஷ்டர்கள் இவ்வாறு செய்யவேண்டும். பூஜாகாலத்திலும், வாருணீதாரணாமந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

28. அமிருதமயமான மூல மந்திரத்தை தியானித்து பிறகு வவுஷட் என்பதை முடிவாக கூறி பூர்ணாஹுதி செய்யவேண்டும். தினந்தோறும் சங்கவாத்ய மங்கள கோஷத்துடன் இவ்வாறு செய்யவேண்டும்.

29. நித்ய பூஜை முடிவில் நைமித்திக பூஜையை ஆரம்பிக்கவேண்டும். நைமித்திகம் பெரியதாக இருப்பின் முதலில் நைமித்திகத்தை செய்யவேண்டும்.

30. அனேகவிதமான வாஸனைகளோடு கூடியதும் குளிர்ச்சியான ஜலத்தோடு கூடியதுமாக ஸ்தாபனம் செய்து தேவ தேவனை அமிருதாப்லாவனத்தை நினைத்துக்கொண்டு

31. சந்தனம் அகில் குங்குமப்பூ பச்சைகற்பூரம் இவைகளை அதிகமாகவும் அந்த க்ஷணத்தில் உண்டான சந்தனம் புஷ்பங்கள் இவைகளால் பூஜித்து

32. காரகிலால் உண்டான தூபங்களாலும் இஷ்டமான நெய்யினால் கல்பிக்கப்பட்ட கற்பூரதிரியோடு கூடிய தீபங்களாலும், உடன் தயார் செய்யப்பட்ட பாயாஸ நிவேதனத்தினாலும்

33. மண்பாண்டத்தில் தயார் செய்த சால்யன்னமும் நூதன பாண்டத்தில் உயர்ந்த நைவேத்யமும் குடிப்பதற்கு யோக்யமான வாஸனையுடன் கூடிய குளிர்ச்சியான தீர்த்தமும்

34. வெள்ளையான வெற்றிலையும் வாசனையோடு கூடிய பாக்கும் கூடிய தாம்பூலங்களினாலும் தாம்பூலத்தோடு கூடிய பாட்டு வாத்யங்கள் நாட்டியங்கள்

35. புதிய நடன சிறப்போடும் ஸ்வரத்தோடு கூடிய வேதங்களாலும் ஸ்தோத்ரங்களாலும் ஜபம்செய்பவர்களால் ஜயஜய சப்தங்களாலும் அனேக நமஸ்காரங்களாலும்

36. விரும்பிய பலனை அடையும்வரை தினந்தோறும் ஈச்வரனை பூஜிக்கவேண்டும். அதன் முடிவில் தினந்தோறும் ஹோம கார்யம் செய்யவேண்டிய முறையும் கூறப்பட்டது.

37. முதல் நாள் பூர்ணாஹுதிக்கு பிறகு இரண்டு குடத்தையும் எடுத்து தோளிலோ, தலையிலோ வைத்துக் கொண்டு வலம் வந்து

38. ஆலயத்தில் நல்லநாளில் நல்ல கிழமையில் ஆசார்யன், யஜமானன் இருவருடையவும் அனுகூல நட்சத்திரத்தில்

39. நல்ல திதியில் நல்ல லக்னத்திலோ சிவமந்திரத்தை சொல்லிக்கொண்டு துவாரமுள்ள குடத்தை வைத்து அதில் ஒன்பது கும்பத்தில் இருக்கின்ற ஜலத்தை

40. சிவமந்திரம் சொல்லி அமிர்த தாரணையை திரியோடு கூடிய தீபங்களாலும், உடன் தயார் செய்யப்பட்ட பாயாஸ நிவேதனத்தினாலும்

41. கூறியுள்ள காலம் வரையில் தினந்தோறும் மீதி ஜலத்தை விடவும் ஏழுதினம், பதினான்கு தினம் இருபத்து ஓர்நாள், ஓர் மாதம்

42. இரண்டு மாதமோ மூன்று மாதமோ இந்த முறையை செய்யவேண்டும். முதலில் ஆசார்யனை வஸ்த்திரங்கள் பஞ்சாங்க பூஷணங்களால் பூஜிக்கவேண்டும்.

43. அரசன் முதலில் பத்து நிஷ்கம் முதலான தட்சிணையை கொடுக்கவேண்டும். முடிவில் இரண்டு மடங்கு பூஜையையும் தட்சிணையையும் கொடுக்க வேண்டும்.

44. மற்றவர்களான எல்லோருக்கும் பொன் வஸ்திரம் மோதிரங்கள் ஓர் நிஷ்க தட்சிணையோடு கூட சிரத்தையோடு கொடுக்கவேண்டும்.

45. தினந்தோறும் சாப்பாட்டிற்காக அரிசி காய்கறிகளுடன் அரசன் சிரத்தையோடு வெற்றிலை பாக்கும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

46. பக்தர்கள், யோகிகளுக்கும் தினமும் சாப்பாடு போடவேண்டும். பிறகு ஏழைகள் ஜனனங்களுக்கு தினந்தோறும் சாப்பாடு செய்யவேண்டும்.

47. முடிவில் ஸ்னபனம் செய்து மஹாஹவிஸ் நிவேதனம் செய்யவேண்டும்.

இவ்வாறு வைகாசி மாத சீதகும்ப விதியாகிற பதினைந்தாவது படலமாகும்.
படலம் 14 : சித்திரை மாத வஸந்தோத்ஸவ முறை

பதினான்காம் படலத்தில் சித்திரை மாதத்தில் செய்யக் கூடிய வஸந்தோத்ஸவ விதி கூறப்படுகிறது. முதலில் சித்திரை மாசத்தில் வஸந்தோத்ஸவம் செய்ய வேண்டும். அது இஷ்டத்தை (பலத்தை) கொடுக்க கூடியதாகும் என்று சூசிக்கப்படுகிறது. அதில் முதலில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். சூரியன் அஸ்தமன சமயத்தில் ஸ்வாமியை வலம் வரச்செய்து ஸர்வாலங்கார ஸஹிதமாக கிராம பிரதட்சிண பூர்வம் நந்தவனத்தை அடையவும் என்று நந்தவன அலங்காரவர்ணனை கூறப்படுகிறது. நந்தவனத்திலும் செய்ய வேண்டிய உத்ஸவ விதி நிரூபணம் அங்கே வணங்குவதற்காக வஸந்தனும், மன்மதனும் வந்து இருப்பதாக பாவித்து அவ்விருவர்களுக்கும் பூஜை செய்யவேண்டும் என கூறி அந்த பூஜாவிதி வர்ணிக்கப்படுகிறது. பிறகு நாட்யம் வாத்யம் இவைகளால் திவ்யமான பாட்டுகளாலும் காலத்தை போக்கி தேவாலயத்தை அடைந்து ஸ்நபனம் செய்து விசேஷ பூஜை செய்க என்று வஸந்தோத்ஸவத்தில் பூஜை விவரம் கூறப்படுகிறது. உத்ஸவம் செய்பவனுக்கு எல்லா விருப்ப பூர்த்தியும் உத்ஸவ பலனாக ஆகும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 14 வது படல கருத்து தொகுப்பாகும்.

1. இந்த மாதமான சித்திரை மாதத்தில் இஷ்டமான வஸந்தோத்ஸவம் விதிக்கப்பட்டது. முதல் நாள் காப்புக்கட்டி பலவிதமான மரங்களோடு கூடியதும்

2. பலவிதமான மாலைகளோடு கூடியதும் பல விதமான பழங்களோடு கூடியதும், பலவிதமான வாத்யங்களோடும் பலவிதமான பாட்டுக்களோடும் கூடிய

3. பலவிதமான நடனங்களோடும் கூடிய பலவித வாகனங்களோடும் கூடிய பலவித மணத்தோடும் கூடிய பலபூக்களை வாரி இறைக்கப்பட்டதும்

4. கொடிகளோடு கூடியதும் ஜ்வாலையோடு கூடிய தீபங்களால் பிரகாசிப்பதும் ஆஸ்தான மண்டபத்தோடு கூடியும் ஜலக்ரீடா செய்ய வேண்டிய இடத்துடன் கூடியதுமான

5. ஸகலவிதமான அலங்காரத்தோடு கூடிய தேவர்களின் உத்யானவனத்திற்கு கிராமத்தை வலம் வந்து மாலை வேளையில் ஈசனை சேர்ப்பிக்க வேண்டும்.

6. விசேஷமாக ஈச்வரனை அதில் பிரதட்சிண கிரமமாக செய்து சந்தனம், தூபம், மாலைகள் முதலிய உபசாரங்களால் பூசிக்கவேண்டும்.

7. புஷ்ப பாணத்தையுடைய வஸந்தனை தர்சனம் செய்ய வந்திருப்பதாக பாவித்து ஈச்வரனுடைய இடது வலது பக்கம் அனேகவிதமான வாசனை யோடு கூடியதாக முறையோடு

8. தங்கமயமான வஸ்த்திரங்களை உடையவராக அவ்விருவரையும் பூஜிக்கவேண்டும். இரண்டாவது ஸ்தண்டிலத்தில் எல்லாவிதமான புஷ்பங்களோடு கூடியும்

9. நைவேத்யமான பாயஸத்தை வஸ்த்திரத்தினால் மூடி நிவேதனம் செய்யவும் முடிவில் தாம்பூலத்தை நிவேதித்து விசேஷமாக அவர்களை சந்தோஷிக்க செய்ய வேண்டும்.

10. நாட்டியம் இவைகளோடு தேவகானத்தினால் பூசை முடித்து மறுபடி ஈச்வரனை தேவாலயத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

11. சிவனை ஸ்நபனம் செய்து விசேஷமாக பூசை செய்யவேண்டும். இவ்வாறு விசேஷமாக பூசித்து சிரத்தையுடன் சிவாராதனம் செய்யவேண்டும்.

12. இந்த பிரகாரம் எந்த மனிதன் செய்கின்றானோ அவன் எல்லா நன்மைகளையும் இஷ்டங்களையும் அடைகின்றான்.

இவ்வாறு சித்திரை மாத வஸந்தோத்ஸவ முறையைக் கூறும் பதினான்காவது படலமாகும்.
படலம் 13 : சித்திரைமாத மரிக்கொழுந்து பூஜா விதி


பதிமூன்றாவது படலத்தில் சித்திரை மாதம் தமனபூஜாவிதி பிரதிபாதிக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக மரிக்கொழுந்து தோட்டத்தின் அவதாரம் பற்றி விளக்குவது, பூர்வமாக அந்த பூஜா பலனை நிரூபிக்கிறார். பிறகு தமனம் சேகரிப்பது பற்றி கூறுகிறார். ஸாயங்காலத்தில் அதிவாஸ விதியானது விதிக்கப்படுகிறது. காலையில் அனுஷ்டிக்க வேண்டிய விதியும் நிரூபிக்கப்படுகிறது. பவித்ராரோபண விதிப்படி சிவனை பூஜிக்கவும் என்று அனுஷ்டான கிரமம் சூசிக்கப்படுகிறது. முடிவில் ஹே பகவானே அதிகமானதாகவோ குறைவானதாகவோ என்னால் எந்த தமனார்ப்பண கர்மா செய்யப்பட்டதோ அது ஸம்பூர்ணமாகுக என்று பிரார்த்திக்கவும் என கூறுகிறார். தமநபூஜாவிதிக்கு பிறகு சந்தோஷிக்க படுவதான குருபூஜை, தீட்சிதர்களின் திருப்தியையும் செய்ய வேண்டும். கிருஹஸ்தரோ, பிரம்ம சாரியோ யார் இந்த விதியை ஆசரிக்கிறாரோ அவன் சித்திரை மாத ஜபாதி பலசித்தியையும் அடைவான் என நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறாக 13வது படல கருத்து தொகுப்பாகும்.

1. சித்திரை மாதத்தின் நல்ல பலனையளிக்கக் கூடிய தமனாரோபணம் என்னும் மரிக்கொழுந்து சாற்றும் முறையைக் கூறுகிறேன். முன்பு ஒரு சமயம் சிவனின் கோபத்திலிருந்து தமனன் என்ற பைரவர் தோன்றினார்.

2. அவனால் எல்லா தேவர்களும் அரக்கர்களும் பலசாலிகளும் தன்னடக்கம் உடையவர்களாக ஆனார்கள். திருப்தியடைந்த சிவனால் ஸம்ஸாரமாகிய பூமியில் செடியாக ஆவாய் என்று கூறப்பட்டது.

3. தாந்தநுத்வம் என்கிற மரிக்கொழுந்து வடிவத்தையடைந்து என்னுடைய உபயோகத்திற்காக ஆகப்போகிறாய். எந்த தேவர்கள் உன்கொழுந்துகளால் பூஜிக்கப்போகிறார்களோ

4. அவர்கள் மரிக்கொழுந்து மஹிமையால் உயர்ந்த நிலையை அடையப்போகிறார்கள். எந்த மனிதர்கள் மறுபடியும் குறிப்பிட்ட அளவில் மரிக்கொழுந்து சாற்றும் முறையை செய்யப்போகிறார்களோ

5. அவர்களுக்கு சித்திரை மாதத்தின் பூஜா நற்பயன் என்னால் கொடுக்கப்பட்டதாகும். சப்தமீ திதியிலோ திரயோதசீ திதியிலோ மரிக்கொழுந்து சமீபம் சென்று

6. அஸ்திர மந்திரத்தினால் சுத்தம் செய்து, ஸம்ஹிதா மந்திரத்தால் பூஜித்து சிவவாக்யத்தினால் ஹே தாம! என்பதாக விளிவேற்றுமையோடு கூறி

7. நீ பரமேஸ்வரனின் திருவருளால் இங்கு தயாராயிருப்பாய், சிவனின் உத்தரவால், பரமேச்வரனின் பூஜைக்காக கொண்டுவரப்பட்டிருக்கிறாய்.

8. என்று மரிக்கொழுந்தை அபி மந்திரித்து, ஸம்ரக்ஷணம் செய்து ஆலயத்தை அடைய வேண்டும். மரிக்கொழுந்து இருக்குமிடம் வெகுதொலைவில் இருப்பின் வேர் மண்ணுடன் கூடியதாக எடுத்து வந்து

9. மண் நிரப்பிய பாத்ரத்தில் வைத்து நீர் விட்டுக் கொண்டுவர வேண்டும். பிறகு முன்பு கூறிய முறைப்படி வீட்டிலேயே மந்திரங்களை கூறி அபிமந்திரிக்க வேண்டும்

10. மாலை வேளையில் அதிவாஸம் என்னும் முறையை செய்ய வேண்டும். ஸ்நானம் முதலான கடமைகளை முடித்துக்கொண்டு யாகத்திற்கு உபயோகமாக பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு

11. முறைப்படி சூர்யன், சிவன், அக்னி இவர்களை நன்கு பூஜித்து பரமேஸ்வரனுடைய மேற்கில் வேருடனும், மண்ணுடனும் சேர்ந்த தானமருக் கொழுந்தை

12. ஸத்யோஜாதம் அல்லது ஹ்ருதய மந்திரத்தினால் பூஜித்து வடக்கில் வாமதேவம் அல்லது சிரோமந்திரத்தினால் காம்புடன் கூடிய நெல்லிக்கனியை பூஜித்து

13. தெற்கு பக்கத்தில் அகோரம் அல்லது சிகை மந்திரத்தினால் விபூதிக் கிண்ணத்தையும் தத்புருஷம் அல்லது கவச மந்திரத்தினால் கிழக்கில் புஷ்பத்துடன் கூடியதாக பற்குச்சியை வைத்து பூஜித்து

14. வடகிழக்கு பாகத்தில் மூல மந்திரம், காயத்ரி மந்திரத்தினால் பழத்தை சந்தனத்துடன் சேர்ந்ததாக ஸ்தாபித்து ஐந்து பிரிவுகளை உடைய மருக்கொழுந்தை புஷ்பம் அக்ஷதையிவைகளுடன் சேர்ந்ததாக வணங்கி

15. மரிக்கொழுந்து சாற்றுதலுக்காக பரமேஸ்வரனிடன் தெரிவித்து ஹே! பரமேஸ்வரா என்னால் காலையில் நீவிர் அழைக்கப்பட்டுள்ளீர்!

16. உன்னுடைய உத்தரவினால் மரிக்கொழுந்து திருநாள், மிகுந்த பயனை முழுமையுள்ளதாக செய்யவேண்டும் என்று ஈசனின் தலையில் புஷ்பாஞ்சலியை செய்து வணங்கி

17. சிவமந்திரத்தினால் சேர்த்து ஜபம் முதலியவைகளை செய்ய வேண்டும், மீதமுள்ள மருக்கொழுந்து திரவ்யங்களை பாத்ரத்தில் வைத்து அதை தத்புருஷ மந்திரத்தினால் மூடி

18. பவித்ரோத்ஸவ முறைப்படி கவச மந்திரத்தினால் அவகுண்டநம் செய்ய வேண்டும். இவ்வாறு பாதுகாக்கப்பட்டதாக செய்து பரமேச்வரனிடம் தெரிவிக்க வேண்டும்.

19. பிறகு உணவின்றியோ அல்லது ஹவிஸ்ஸைமட்டுமோ, உண்ண வேண்டும். சிவாலயத்தின் முன்பு தியானம், பாட்டு, ஜபம் முதலியவைகளால் விழித்திருந்து

20. காலை ஸ்நானம், காலை கடமைகளை முடித்து அஷ்ட புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும். விசேஷமாக நித்ய, நைமித்திக பூஜையையும் செய்து

21. மீதமானதும், ஐந்து பிரிவுகளையுடையதுமான மருக்கொழுந்துகளால் தேவனை பூஜிக்கவும், அதிலும் மீதமானதை அருகம்புல், புஷ்பம் அக்ஷதை இவைகளுடன் சேர்ந்ததாக அஞ்சலி ஹஸ்தத்தால் எடுத்து

22. ஐந்து முகமுள்ள ஸதாசிவனை எதிர்நோக்கியுள்ளவராக தியானித்து, ஆத்மதத்வ, வித்யாதத்வ, சிவதத்வங்களாலும் அதன் அதிபதிகளான ஈச்வரர்களாலும்

23. பவித்ரம் சேர்ப்பிக்கும் முறைப்படி பரமேச்வரனை பூஜிக்கவும். முன்கூறிய ஆத்ம தத்வங்களுடன், இரண்டு, நான்கு, ஆறு என்ற தான உயிரெழுத்துக்களோடும் (ஆ,ஈ,ஊ,ஒள) ஓம் ஹளம் ஆத்ம தத்வாயநம: ஓம்ஹளம் ஆத்மதத்வாதிபதயே சிவாயநம: என்று

24. ஷ என்ற எழுத்து வரிசையின் முடிவான ஹவும், ம் என்ற எழுத்தும் சேர்ந்ததாக பவித்ர மந்திரத்தினால் அஞ்சலி கொடுக்கவும் நான்காவது அஞ்சலி மந்திரமாவது ஓம் என்றும், சிவ மந்திரத்துடனும்

25. விருப்பத்தைக் கொடுக்கக்கூடிய யாகம் யாகேஸ்வரனின் பொருட்டு பூர்த்தி செய்து சூலபாணி என்ற பதத்தை நான்காம் வேற்றுமை நம: என்ற பதத்துடன் கூடியதாக கூறவும் சூலபாணயே நம: எறு அர்ச்சிக்க வேண்டும்.

26. சிவனை பூஜித்து நமஸ்கரித்து முறைப்படி ஹோமம் செய்து பிறகு விருப்பப்பயனை தெரிவிக்க வேண்டும்.

27. ஹே பகவானே, என்னால் செய்யப்பட்ட இந்த பூஜை குறைவுபட்டோ, கூடுதலாகவோ இருப்பின், என்னுடைய பர்வ அளவு மருக்கொழுந்து சாற்றும் திருவிழா எல்லாவற்றிலும் நிறைவுள்ளதாக ஆகட்டும்.

28. என்று இவ்வாறு மருக்கொழுந்து பூஜையை செய்து ஆசானை பூஜித்து, திருப்தி செய்வித்து, ஆசார்யர்களையும் சிவதீøக்ஷ பெற்றவர்களையும் திருப்தியடைய செய்ய வேண்டும்.

29. மனைவி மக்களுடையவனாக இருந்தாலும் பிரம்மசாரியாக இருந்தாலும் இந்த பூஜையை முறைப்படி செய்கிறானோ அவன் சித்திரை மாதத்திற்கு உண்டான ஜபம் முதலியவைகளின் நற்பயனை அடைகிறான்.

இவ்வாறு சித்திரை மாத மரிக்கொழுந்து சாற்றும் முறையாகிற பதிமூன்றாவது படலமாகும்.
படலம் 12: பங்குனிமாத சந்தன பூஜை

பன்னிரெண்டாவது படலத்தில்: பங்குனி மாதத்தில் செய்யவேண்டிய கந்த பூஜாவிதி கூறப்படுகிறது. முதலில் பங்குனி மாதத்தில் உத்தர நட்சத்திரதினத்தில் கந்த பூஜைசெய்ய வேண்டுமென கால நிரூபணமாகும். விசேஷ ஸ்நபன விசேஷ பூஜையுடன் கந்தபூஜாவிதி அனுஷ்டிக்கவும் எனகூறப்படுகிறது. பிறகு சந்தனத்தில் சேர்க்க வேண்டிய அகில குங்குமம் முதலியவைகளின் கந்தத்ரவ்யங்களின் பிரமாண வசனம். கிருதகம்பள விதிக்கு கூறிய மார்க்கப்படி ஹோமம் செய்க. லிங்கத்திலும் பீடத்திலும் மற்ற எல்லா இடத்திலும் பூசுவதை செய்க. கம்பள வேஷ்டனமின்றி மற்ற எல்லா கர்மாவும் கிருதகம்பள விதி மார்க்கமாக செய்ய வேண்டுமென சூசிக்கப்படுகிறது. எல்லா ரோக சம்பவம், உத்பாத சூசகாத்புதம் காணப்பட்ட சமயம் அபிசாரகிருத தோஷ ஸமயங்களிலும் முன்பு கூறிய தோஷ நிவிருத்திக்காகவும் விருப்பப் பயனையடைவதற்கும் கந்தபூஜா செய்யவும் என்று கந்தபூஜா பலம் நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறாக 12ம் படல கருத்து தொகுப்பாகும்.

1. பங்குனி மாதத்திலே உத்திர நட்சத்திரத்திலே உத்தமமான சந்தனத்தினால் பூஜிக்கவேண்டும். விசேஷ ஸ்நபனத்தோடு கூட விசேஷ ஹோமத்துடன் கூடியதாக இருக்கவேண்டும்.

2. எட்டுபலம் முதல் ஒவ்வொரு பலமாக கூட்டி ஆயிரம் பலம் எடை முடிய சந்தனத்தின் அளவு கூறப்பட்டது அதில் பாதி அகில் சேர்க்கவேண்டும்.

3. அதில் கால்பாகமோ, அதில் பாதியோ குங்கும பூவும் அதில் பாதி கால் பாகத்தில் எட்டில் ஓர் பங்கும் அதில் பாதியோ, கால்பாகமோ மேற்கூறிய திரவ்யம் சேகரித்து

4. பச்சைகற்பூரம் இரண்டு பங்கு பொடி செய்து எல்லா இடத்திலும் தூபம் காண்பிக்கவேண்டும். எல்லா மந்திரங்களாலும் அபிமந்திரணம் செய்யப்பட்டதை அர்பணம் செய்யவேண்டும்.

5. நெய்கம்பள பூஜையில் கூறியபடி ஹோமம் செய்து சந்தனத்தை ஸம்ஸ்கரித்து பீடத்தோடுகூடிய லிங்கத்தை சந்தனத்தினால் சிவமந்தரத்தினால் பூசவேண்டும்.

6. நல்ல வாசனையுள்ள புஷ்ப மாலைகளினால் பீடம் லிங்கம் முதலியவைகளை அலங்கரிக்கவேண்டும். கம்பளி இல்லாமல் (சந்தனத்தினால்) நெய் கம்பளத்தைபோல எல்லாம் நடத்தவேண்டும்.

7. எல்லாவிதமான வியாதி உண்டான காலத்திலும், அத்புதமான காலத்திலும் இஷ்டத்தை அடையும் பொருட்டு ஆபிசாரம் செய்ததினால் ஏற்பட்ட குறை நீங்கவும் இந்த முறையில் செய்யவேண்டும்.

இவ்வாறு பங்குனி மாதம் சந்தனம் சாற்றும் முறையைக் கூறும் பன்னிரண்டாவது படலம்.
படலம் 11: மாசி மாத சிவபூஜா விதி!

பதினொன்றாவது படலத்தில் மாசிமாதத்தில் விதிக்கப்பட்டுள்ள சிவராத்ரி பூஜாவிதி கூறப்பட்டுள்ளது. முதலாவதாக சிவராத்ரி வ்ரதாசரண பலநிரூபணம் மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்தசீ ராத்ரி சிவராத்ரி அந்த தினத்திலே சிவாலயத்தில் சிவலிங்க விஷயமான சிவராத்ரி பூஜா செய்ய வேண்டும் என காலம் நிர்தேசிக்கப்படுகிறது. பிறகு முற்பகலில் ஸ்நான உபவாஸத்துடன் கூடிய சாதகனால் சிரத்தையாக பூஜை செய்ய வேண்டுமென அதிகார நிரூபணம். ராத்ரியில் நான்கு யாமத்திலும் பூஜாவிதி கூறப்படுகிறது. முதல் யாமம், பாயஸாந்நம், இரண்டாம் யாமம் கிருஸரான்னம் மூன்றாம் யாமம் குலான்னம், நான்காம் யாமம், சுத்தான்னம் நிவேதிக்க வேண்டுமென நிவேதனபிரகாரம் சூசிக்கப் படுகிறது. பின்பு பூஜை முடிவில் செய்ய வேண்டிய ஹோமவிதி பிரதிபாதிக்கப்படுகிறது. தான் விரதம் அனுஷ்டிக்க அசக்தனாக இருப்பின் அந்நியனால் தனக்காக வ்ரதாசரணம் செய்ய வேண்டுமென சூசிக்கப்படுகிறது. பிறகு ராத்ரியில் விழித்து ஆசார்ய பூஜை செய்க. வித்த சாட்யமின்றி தட்சிணா தானம் செய்ய வேண்டும். அவ்வாறே லிங்கம் சிவபக்தர்கள், பிராமணர்கள், அதிதிகளிவர்களுக்கு யதாசக்தி பூஜை செய்க. பிறகு சாதக பூஜை நன்கு முறைப்படி முடித்து ஸ்வகிருஹம் சென்று பந்து ஜனங்களுடன் கூட முறைப்படி பாரணம் செய்க என்று சிவராத்திரி பூஜாவிதியில் கிரியாகல்பம் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக பதினாறாவது படல கருத்து தொகுப்பாகும்.

1. பிறகு, பிராமணர்களே, சிவராத்ரி விரதத்தை பற்றி கூறுகின்றேன். விசேஷமாக விரதங்களில் உத்த மோத்தமமானதை நீங்கள் சிரத்தையுடன் கேளுங்கள்.

2. முன்னால் தேவியாலும், பிறராலும், எது அனுஷ்டிக்கப்பட்டதோ (அந்த சிவராத்ரி விரதானுஷ்டத்தால்) என்னோடு கூட தேவி ஸந்தோஷமாயிருந்தால் மற்றவர்கள் விரும்பிய நன்மைகளை அடைந்தார்கள்.

3. விரதம் அனுஷ்டித்தவர்கள் யமன் கட்டளையினால் பாதிக்கப்படுவதில்லை. கிங்கரர்களாலும் பயப்படும்படியான பார்வை உடையவர்களாலும் பார்க்கப்படுவதில்லை. நரகங்களையும் அடைவதில்லை.

4. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதன் முறையை கேளுங்கள் மாசி மாதத்தில் தேய்பிறையில் எந்த தினத்தில் சதுர்த்தசி இருக்கின்றதோ

5. அந்தராத்ரி சிவராத்ரியாகும். எல்லா நல்வினைகளும் சேர்ந்து சுபத்தை கொடுக்கக் கூடியதாகும். அந்த ராத்ரியில் சிவாலயத்தில் சிவலிங்கத்தில் சிவபூஜை செய்யவேண்டும்.

6. ஸ்நானம் செய்து முற்பகலில் நியமமாக உண்ணாமல் விரதமாக இருந்து மிக வேண்டும் சிரத்தையோடு கூட ஸாதகன் உபசாரத்தினால்

7. பிறகு முன்கூறிய முறைப்படி பஞ்ச சுத்தியை முறைப்படி செய்து சிவாஸனம், சிவமூர்த்தி வித்யா தேகம் கல்பித்து பிறகு

8. சிவனை ஆவாஹனம் செய்து ஸன்னிதானம் செய்து பாத்யம் முதலியவைகள் கொடுத்து அர்ச்சிக்க வேண்டும். சந்தனாதி தைலம்பூசி அரிசி மாவினால் தேய்த்து சுத்தி செய்யவேண்டும்.

9. பஞ்சாமிருதத்தினால் பஞ்சகவ்யங்களினால் அந்தந்த முறையோடு அபிஷேகம் செய்யவேண்டும், நெய் முதலியவைகளோடு சந்தன ஜலத்தினால் முறைப்படி அபிஷேகம் செய்யவேண்டும்.

10. ஐந்து அங்கங்களோடு கூடிய பவித்ரங்களாலும் அரிசிமாவினால் மறுபடி இந்த பிரகாரம் நெல்லி முள்ளியினால் தேய்த்து

11. அரிசிமாவினால், தூபம் செய்யப்பட்ட மஞ்மள் பொடியினாலும் அஸ்த்ரமந்திரத்தினால் தேய்த்து ஜலத்தினால் சுத்தம் செய்யவேண்டும்

12. பிறகு ஈச்வரனை இளநீரால் அபிஷேகம் செய்யவேண்டும், பஞ்ச பிரம்ம மந்திரம் ஷடங்க மந்திரம், மூல மந்திரத்தினால் சந்தன ஜலத்தினால் அபிஷேகம் செய்யவேண்டும்.

13. சுத்தமான பஞ்சு ஆடையினால் துடைத்து லிங்கத்தை சுத்தமான ஆடையினால் லிங்கத்தை சுற்றி வஸ்த்ரம் சாத்தவேண்டும்

14. ஒவ்வொரு யாமத்திலும் தனித்தனியாக திரவியங்களாலும் சந்தனம் முதலியவைகளாலும், சந்தனம், அகில், பச்சை கற்பூரம், குங்குமப்பூ முதலியவைகளால் முறைப்படி அர்ச்சிக்கவேண்டும்.

15. மல்லிகைபூ நீலோத்பலம் ஜாதி புஷ்பங்கள் வில்வங்களை அருகம்புல் அரிசி எள்ளும் கூடினதாக நன்கு பூஜிக்க வேண்டும்.

16. குங்குலியம் அகில் சாம்பிராணி மட்டிப்பால் முதலியவைகளினால் தூபம் போட வேண்டும். நல்ல வெண்மையான நூலை நெய்யில் நனைத்து நெய் தீபம் போட வேண்டும்.

17. முதல் யாமத்தில் பாயஸமும் இரண்டாம் ஜாமத்தில் எள்ளு வெல்லம் நெய் கலந்த அன்னமும் மூன்றாம் ஜாம பூஜைக்கு சக்கரை பொங்கலும் நான்காவது ஜாம பூஜைக்கு சுத்தான்னமும் செய்ய வேண்டும்.

18. அதற்கு பிறகு எல்லாவிதமான காய்கறிகளோடும்கூட, நெய், வெல்லத்தோடுகூட, வெற்றிலை பாக்கையும் நிவேதனம் செய்யவேண்டும்.

19. தூபம் தீபாராதனையோடுகூட சிவனின் பொருட்டு அர்ப்பணம் செய்து குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ விசேஷமாக ஹோமம் செய்ய வேண்டும்.

20. குண்ட ஸம்ஸ்காரத்துடன் குண்டத்திலோ, பாத்திரத்திலோ அக்னியில் சிவாக்னியை கல்பித்து அக்னி ஹ்ருதயத்தில் சிவாஸனத்தை கல்பித்து

21. அவ்விடத்தில் ஈசனை நன்கு பூஜித்து அந்த ஜ்வாலையாக இருக்கும் அக்னியில், ஸமித், நெய், அன்னம் நெற் பொறி, எள்ளு இவைகளை மூலமந்திரம் ஷடங்க மந்திரங்கள், பஞ்ச பிரம்ம மந்திரங்களால் ஹோமம் செய்யவேண்டும்.

22. சிவமந்திர ஹோமத்தில் பத்தில் ஓர் பாகம் மற்ற மந்திரங்களும் பத்துமுதல் பத்து பத்தாக அதிகபடுத்தி ஐம்பது ஆகுதிவரை செய்யலாம்.

23. இடைவெளி இல்லாத பூர்ணமான பூர்ணாஹூதியை சிவனுக்காக செய்து வணங்கி அந்த விபூதியை ஈசனுக்கு அர்பணம் செய்து நமஸ்கரித்து

24. ஒவ்வொரு ஜாமத்திலும் மறுபடி மறுபடி இந்த பிரகாரம் பூஜிக்க வேண்டும். நாமே செய்ய இயலாவிடில் நமக்காக பிறரால் செய்விக்கப்பட வேண்டும்.

25. இரவை தூக்கம் இல்லாமல் கழித்து, தெளிவான அதிகாலையில் நித்யானுஷ்டானங்களை செய்து பிறகு முறைப்படி ஸ்நபனம் செய்து

26. ஈச்வரனை முன்போல் பூசித்து பிறகு குரு பூஜையை செய்யவேண்டும். பிறகு பணம் இல்லாத்தன்மை இல்லாமல் பிறகு தட்சிணையை (குருவுக்கு) கொடுக்கவேண்டும்.

27. லிங்கம் கட்டிகள், சிவபக்தர்கள், பிராமணர்கள், அதிதிகளையும் இயன்றளவு பக்தியினால் நன்கு பூசை செய்து

28. பந்துக்களோடு கூட ஸாதகன் தனது வீட்டிற்கு சென்று கை, கால்களை சுத்தம் செய்துகொண்டு சாப்பாட்டை (பாரணை) செய்ய வேண்டும்.

இவ்வாறு மாசிமாத சிவராத்ரி பூஜை முறையைக் கூறும் பதினொன்றாவது படலமாகும்.
படலம் 10: மாசி மாத கிருதகம்பள பூஜா முறை

பத்தாவது படலத்தில் மாசிமாதத்தில் செய்ய வேண்டிய கிருதகம்பள பூஜாவிதி கூறப்படுகிறது. முதலில் மாகமாசத்தில் மகாநட்சத்திரத்தில் கிருத கம்பளம் செய்ய வேண்டுமென கால நிர்தேசமாகும். பிறகு கிருத (நெய்) ஸம்பாதநம் அதன் ஸம்ஸ்காரமும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு பஞ்சகவ்ய பஞ்சாம்ருதத்தால் விசேஷ ஸ்நபனம் விசேஷ பூஜை செய்து ஹோமம் செய்க என கூறி அங்கு செய்ய வேண்டிய ஹோம விதி பிரதிபாதிக்கப்படுகிறது காலை மதியத்தில் முன்பு போல் ஸ்நபனத்துடன் விசேஷ பூஜை செய்து ஸர்வாலங்கார யுதமாக ஆலய பிரதட்சிண பூர்வம் ஸம்ஸ்கரிக்கப்பட்ட நெய்யை லிங்கத்தில் பீடம் வரை எல்லா இடத்திலும் பூச வேண்டும். பிறகு கந்தாதிகளால் பூஜித்து கம்பள வேஷ்டநம் செய்ய வேண்டும். பிறகு தாம்பூல சஹிதம் ஹவிஸ் நிவேதிக்க வேண்டும். பிறகு அடுத்த ஸந்த்யா காலத்திலோ மறுதினத்திலோ கம்பளாதிகளை எடுத்து முன்பு போல் பூஜிக்க வேண்டும். முயற்சிக்கு தக்கவாறு ஆசார்யனுக்கு தட்சிணாதானம் கொடுக்க வேண்டும். இந்த பூஜை அங்குரார்ப்பண ஸஹிதமாகவோ, ரஹிதமாகவோ செய்யலாமென சூசிக்கப்படுகிறது. இவ்வாறாக பத்தாவது படல கருத்து சுருக்கமாகும்.

1. மாசி மாதத்தில் மகாநட்சத்திரத்தில் நெய்யில் (நனைத்த) கம்பளியை சாத்தும் பூஜையை செய்ய வேண்டும். புழு, பூச்சி, இல்லாததும் காராம்பசு வினையுடையதும்.

2. ரோமம் இல்லாமலும், சுத்தமாயும், நல்ல மணத்தோடு நூதனமான நெய்யை ஆசார்யன் அஸ்த்ர மந்திரத்தினால் ஸ்தாபிக்க வேண்டும். ஜலத்தில் வருண மூல மந்திரத்தை கூறிக்கொண்டு

3. அந்த நெய்யை குங்குமப்பூ, அகில், மஞ்சள் பொடி, பச்சை கற்பூரம் இவைகளோடு சேர்த்து உருண்டையாக செய்து (இவைகளால் ஸம்ஸ்கரிக்கப்பட்டு)

4. தங்கபாத்ரம் முதலியவைகளில் வைத்து, பஞ்ச பிரும்மந்திரம் ஷடங்க மந்திரம் சிவமந்திரத்தோடு கூட பூஜித்து தூபம் கொடுத்து அபிமந்த்ரணம் செய்ய வேண்டும்.

5. பஞ்சகவ்ய, பஞ்சாமிருதங்களினாலோ விசேஷமாக ஸ்நபனம் செய்ய வேண்டும். விசேஷ பூஜையை செய்து முடிவில் ஸ்தண்டிலத்திலே நெய்யை வைக்க வேண்டும்.

6. புத்திமானானவன் ஹ்ருதய மந்திரத்தை கூறிக்கொண்டு சந்தனம் முதலியவைகளினால் பூஜிக்க வேண்டும். அதற்கு முன் ஸ்தண்டிலத்தில் சிவாக்னியை ஸ்தாபிக்க வேண்டும்.

7. புரச சமித், நெய், அன்னம், எள்ளு, பொரி இவைகளோடு கூடியதாக நூற்றெட்டு தடவை ஹோமம் செய்து முடிவில் பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

8. பவித்ராரோகணமுறைப்படி நெய்யில் ஸம்பாத ஹோமம் செய்து முன்புறத்தில் ஸ்தண்டிலத்தில் வஸ்திரத்தால் மூடப்பட்ட நெய்யை வைக்க வேண்டும்.

9. காலையிலோ மத்தியானத்திலோ கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்தபிறகு ஈசனை ஸ்னபனம் முதலியவைகளோடு பூஜித்து

10. ஸகலவிதமான அலங்காரத்தோடு விசேஷமாக பூஜைகள் செய்து சிவமந்தரத்தை சொல்லிக் கொண்டு நெய்யுடன் கோயில்வலம்வந்து

11. நெய்யால் லிங்கத்தை எல்லா இடத்திலும் பூசி எல்லா பீடங்கள் முடிவுவரை சந்தனம் முதலியவைகளால் பூஜித்து கம்பளியை சுற்றவேண்டும்.

12. ஈஸ்வரனுக்கு வெற்றிலைபாக்குடன் கூடின நிவேதனத்தை கொடுக்க வேண்டும் (அர்பணிக்கவேண்டும்)

13. அடுத்த ஸந்தியா காலத்திலோ மறுநாளிலோ கம்பளி முதலியவைகளை நீக்கிவிட்டு முன்போல ஈசனை பூஜிக்கவேண்டும். அப்படியே ஆசார்யனை பூஜிக்கவேண்டும்.

14. ஆசார்யனுக்கு சக்திக்கு ஏற்றவாறு தட்சிணையை கொடுக்கவேண்டும். பாலிகை தெளிப்பதுடன் கூடவோ, இல்லாமலோ இதை செய்யவேண்டும்.

இவ்வாறு நெய் சேர்த்த கம்பள பூஜை முறை பத்தாவது படலமாகும்.
படலம் 9: மார்கழி, தை மாத சிவபூஜா விதி

ஒன்பதாவது படலத்தில் மார்கழி மாதம், தை மாதம் செய்ய வேண்டிய விசேஷ பூஜாவிதி கூறப்படுகிறது. அதில் முதலில் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் கூடிய தினத்தில் தேவருக்கு கிருதஸ்நான ஸமந்வித ஸ்நபனம் அல்லது கேவல ஸ்நபனம் செய்து, விசேஷமாக கந்தாதிகளால் தேவரை பூஜித்து பலவித கானங்களுடன் கிராம பிரதட்சிணம் செய்து, தேவரை ஆலய பிரவேசம் செய்க. அல்லது ராத்திரியிலும் பகலிலும் பலிஹோமங்களுடன் கூட ஸர்வாலங்காராயுதமாக பேரபிரதட்சிணம் செய்து சூர்ணோத்ஸவத்துடன் தீர்த்தோத்ஸவம் செய்து தேவாலய பிரவேசம் செய்க என்று கூறப்பட்டுள்ளது. பிறகு அங்கு ஸாயங்காலத்தில் விதிக்கப்பட்டுள்ள டோலரோஹணவிதி பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் டோலாகல்பனபிரகாரம் ஊஞ்சலில் தேவதாயஜனம் கூறப்படுகிறது. பிறகு ஊஞ்சலில் பலகை மேல் சிவன், இடப்பாகம் தேவி, மத்தியில் ஸ்கந்தரையும் ஆரோஹிக்க வேண்டும். அங்கு பலவித ந்ருத்யகான வாத்ய ஸஹிதம் ஈசனை சந்தோஷிக்க வேண்டும் என டோலோத்ஸவ விதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு இந்த ஊஞ்சலுத்ஸவம் வேறு காலத்திலும் செய்ய வேண்டும். பிரதி தினமும் செய்யலாமென பக்ஷõந்தரமாக சூசிக்கப்படுகிறது. பேரா ரோஹநத்தோடு டோலாசலனம் இஷ்டமென்று கூறப்பட்டுள்ளது. இந்த பக்ஷத்தில் ஊஞ்சலில் தேவரை ஆரோஹித்து அந்த ஸாந்நியத்தை தியானிக்கவும் என டோலாரோஹன விதி கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் மகா நட்சத்திரத்தில் ஈச, ஈச்வரிக்கு விசேஷமாக நெய்யுடன் கூடிய பாயசத்தை அர்ப்பணிக்கவும் (தை) புஷ்யமாசத்தில் புஷ்ய நட்சத்திரத்தில் தேனபிஷேகம் மஹாஹவிர் நிவேதனம் நிவேதன முடிவில் பேரயாத்ரை செய்ய வேண்டுமென புஷ்யமாஸவிதி கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒன்பதாவது படல கருத்து தொகுப்பாகும்.

1. மார்கழி மாதத்தில் ஆருத்ரா நட்சத்ரத்தில் முன் கூறிய விதிப்படி நெய் அபிஷேகத்தோடு கூட பரமேஸ்வரனை பூஜிக்க வேண்டும்.

2. விசேஷமாக ஸ்நபனம் மட்டும் செய்து சந்தனங்களால் பூஜித்து, பலவித கானங்களால் ஸந்தோஷிக்கச் செய்ய வேண்டும்.

3. கிராம பிரதட்சிணம் செய்து ஸ்வாமியை ஆலயத்தில் பிரவேசிக்க செய்து அல்லது ராத்திரியிலோ, பகலிலோ பலி, ஹோமம் செய்து

4. எல்லா அலங்காரங்களுடன் கூட, பிம்ப பிரதட்சிணம் செய்து சூர்ணோத்ஸவம், தீர்த்த உத்ஸவம் செய்து ஆலய பிரவேசனம் செய்ய வேண்டும்.
ஸாயங்காலத்தில் ஊஞ்சல் உத்ஸவம் செய்ய வேண்டும்.

5. ஸர்வாலங்காரயுதமாக வேண்டும், ஸ்தம்பல க்ஷணத்துடன் கூடிய இரண்டு ஸ்தம்பம் அமைத்து அதன் நடுவில் குறுக்கு ஸ்தம்பம் அமைக்க வேண்டும்.

6. நான்கு முழ அளவுள்ள ஊஞ்சலை அதன் நடுவில் அமைக்க வேண்டும். நான்கு சங்கிலியுடனும், ஊஞ்சல் மேல் விட்டத்தில் மூடக்கூடிய விதான வஸ்திரத்துடன் கூடியதாயும்

7. பல அலங்காரத்துடனும், இரு முழம் அளவுள்ள ஹம்ஸானத்துடன் அமைத்து புண்யாக பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

8. அஸ்திரமந்திர ஜலத்தால் பிரோக்ஷணம் செய்த பலகையில் ஆஸனத்தை கல்பித்து ஹ்ருதய மந்திரத்தால் அன்னப்பறவை தோகைகளாலான ஹம்ஸா ஸனத்தில் ஹம்ஸத்தை பூஜிக்க வேண்டும்.

9. வலது பக்கத்தில் பிரம்மாவையும், இடது பக்கத்தில் விஷ்ணுவையும் விஷ்டரமாகிய ஆஸன பாகத்தில் ருத்திரனையும், பலகையின் மேல் பாகத்தில் சிவனை பூஜிக்க வேண்டும்.

10. இடது பாகத்தில் தேவியையும், நடுவில் ஸுப்ரஹ்மண்யரையும் பூஜிக்க, அல்லது பலகையின் மேல் தேவியை சந்தனம் முதலியவைகளால் அர்ச்சிக்கவு

11. பலவித கானங்களுடனும், பல நிருத்தங்களுடனும், பலவித வாத்யங்களுடனும், கூட ஈஸ்வரனை மகிழ்விக்க வேண்டும்.

12. மற்ற சமயத்திலும் இஷ்டத்தை தரக்கூடிய ஊஞ்சல் உற்சவம் செய்யலாம். எல்லா விருப்பத்தையும் அடைவதற்காக பிரதிதினமும் செய்யலாம்.

13. பிம்பத்தை எழுந்தருளப்பண்ணியுமோ ஊஞ்சலாட்டுவதை செய்ய வேண்டும். இந்த மார்கழி மாதத்தில் மக நட்சத்திரத்தில் விசேஷமான நெய்யுடன்

14. கூடிய பால் பாயாசத்தை தேவியுடன் கூடிய சம்புவிற்கு அர்பணம் செய்யவேண்டும்.

15. தை மாசத்தில் (பூச) புஷ்ய நட்சத்ரத்தில் தேன் அபிஷேகம் செய்க. மஹாஹவிஸ் நிவேதனம் செய்து ஸ்வாமி திருவீதியுலா செய்ய வேண்டும்.

16. முன் கூறியபடி செய்தால் கர்தா விரும்பிய பயனை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் மார்கழிமாத, தை மாத பூஜைமுறையாகிய ஒன்பதாவது படலமாகும்.