ஞாயிறு, 13 அக்டோபர், 2024

படலம் 75: நோய்களை தீர்க்கும் முறை... இரண்டு

படலம் 75: நோய்களை தீர்க்கும் முறை... இரண்டு...

101. தேன், நெய், தயிர், பொறி, வாழைப்பழம், வடை இவைகளோடு கூடிய அன்னத்தை

102. பலவிதமான, வாத்ய கோஷங்களோடும் நாய்கள் பின்தொடர தீபமில்லாமல் கிராமத்தின் ஆரம்பத்தில் பலி கொடுத்தல் வேண்டும்.

103. ஹே பிராம்மண உத்தமர்களே அதிலும் குறிப்பாக அரண்மனையில் தீங்கு வராமல் காப்பாற்றப்பட வேண்டிய இடத்தில் அகோராஸ்த்ர தேவரின் கொடியோடு மவுன வ்ருதத்தை கடைபிடித்து

104. க்ஷேத்திர பாலர்களுக்கும் ருத்திரர், முதலியவர்களுக்கும் பலி கொடுத்தல் வேண்டும். பிறகு கும்பத்தில் உள்ள புண்ணிய தீர்த்தத்தால் நோயுள்ளவர்களை பிரோக்ஷிக்க வேண்டும்.

105. அகோர மந்திரத்தையும், அகோரஸ்த்ர மந்திரத்தையும் ஜபித்துக் கொண்டு, நோயுள்ளவனுக்கு பிரோக்ஷணம் செய்தும், பிறகு அந்த மந்திரங்களால் அபிமந்திரம் செய்யப்பட்ட விபூதியை அந்த இரண்டு மந்திரங்களையும் தியானித்து கொடுக்க வேண்டும்.

106. பிறகு ஹோம ரøக்ஷயும் கொடுத்தல் வேண்டும். அவர்கள் நோயிலிருந்து விடுபட்டவர்கள் ஆவார்கள். பிறகு கர்த்தா போஜனம் தட்சிணை முதலியவைகளால் ஆசார்யரை சந்தோஷிக்க செய்ய வேண்டும்.

107. ஆசார்யன் ஸந்தோஷம் அடைந்தால், அசையும் பொருள், அசையா பொருள் எல்லாம் மகிழ்ச்சி அடையும், கோயில்களிலும் அகோர தேவதை சிலாவிக்ரஹமாக அமைத்து

108. ஹோமம் பலி முதலியவைகளை செய்தல் வேண்டும். கும்பத்திலும் ஆவாஹித்து பூஜை ஹோமம் முதலியவைகளைச் செய்யலாம்.

109. இப்படி தர்பணம், ஹோமம், முதலியவைகளோடு பூஜை செய்தால் இப்பிறவியில் நோய்களும், எல்லாப் பீடைகளும் அழிந்து விடுகின்றன.

110. பூஜை ஹோமம், பலிமட்டுமாவது தினந்தோறும் செய்ய வேண்டும். எல்லா மனிதர்களுக்கும் இந்த ஹோமம் பலி கூறப்படுகிறது.

111. பூஜையின் முடிவில் ஜபத்தையும் ஹோமத்தையும் செய்ய வேண்டும். அல்லது எல்லா தீங்குகளும் நீங்குவதற்கு ஜபம் மாத்திரமாவது செய்ய வேண்டும்.

112. யானைகளின் நோய் தீருவதற்கு மற்றொரு விதமும் இங்கு கூறப்படுகிறது. தூய்மையான இடத்தையடைந்து பசுஞ்சாணத்தால் மெழுகிவிட வேண்டும்.

113. கோவை பழம் போல் செந்நிறம் உள்ளதும் இரண்டு மரக்கால் கொள்ளளவு உள்ளதுமான கும்பத்தை நூல் சுற்றி இரண்டு மரக்கால் நெல்

114. ஒரு மரக்கால் அரசி அரை மரக்கால் எள்ளு கால் மரக்கால் பொறியுள்ள ஸ்தண்டிலத்தில் ஸ்தாபிக்க வேண்டும்.

115. கும்பத்தின் மேல், ஐந்து தர்பங்களால் கூர்ச்சம் நிர்மாணம் செய்யப்பட்டும் கும்பத்தில் சந்தனம்

116. முப்பழங்களோடும், கீழாநெல்லி, விளாமிச்சவேர், ஏலம், லவங்கம் முதலிய வாசனைப் பொருளின் தூள்களையும், கும்பத்தில் ஸமர்பித்து

117. வஸ்திரம் உடுத்தி ஆதார சக்தி அனந்தாஸனம் தர்ம, ஞான, வைராக்ய ஐச்வர்யம் முதலிய ஆஸனங்களையும் கல்பித்து

118. அதர்மாதி நான்கையும் கல்பித்து அதச்சதனம் (கீழ்இதழ்) ஊர்ச்வச்சதனம் (மேல் இதழ்) இவைகளோடு கூடியும் தண்டு தளம், கர்ணிகை முதலியவைகளோடு

119. கூடிய பத்மாஸனத்தை பூஜித்து முன் சொன்ன தியானத்துடன் கும்பத்தை இறைவனுடைய மூர்த்தமாக நினைக்க வேண்டும்.

120. கும்பத்தின் நடுவில் பிரணவஸ்வரூபமான வரும், தெற்கு நோக்கியவருமான அகோர மூர்த்தியை ஆசாரியர் அகோர மந்திரத்தை உச்சரித்து பாத்யம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும்.

121. சந்தனம், விளாமிச்சவேர், இவைகளோடு கூடிய தீர்த்தத்தை பாத்யமாகக் கொடுக்க வேண்டும். ஏலம், இலவங்கம் மூன்று வகை பழங்களுடன்

122. தீர்த்தத்தை ஆசமனமாக கொடுத்து பிறகு நீர், பால், தர்பை நுனி, அக்ஷதை புஷ்பம் எள்ளு இவைகளும்

123. யவை, வெண்கடுகு, இவைகளுடன் எட்டு பொருள்களுடன் கூடிய அர்க்யத்தை இங்கு கூறப்பட்டுள்ளது. சந்தனம் கோரக் கிழங்கு கீழாநெல்லி ஆகிய மூன்று சந்தனங்களை சாத்தி,

124. பலவித புஷ்பங்களால் பூஜித்து, தூபதீபம், முதலிய உபசாரம் செய்து அந்த பத்மத்தின் தளத்தில் அகோராஸ்திர மந்திரத்தை உச்சாடனத்துடன்

125. அகோராஸ்திரத்தை பூஜித்து முன் போலவே பாத்யம், ஆசமனம் அர்க்யம் கொடுத்து ஆவரணத்தோடோ, ஆவரணமில்லாமலோ பூஜித்து

126. கிழக்கு திசை முதல் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், க்ரோத பைரவர், உன்மத்த பைரவர்

127. கபால பைரவர், பீஷணபைரவர், ஸம்ஹார பைரவர், என்ற எட்டு பைரவர்களையும் பூஜித்து பத்மத்திற்கு வெளியில் திக்பாலர்களையும் அதற்கு வெளியில் அவரவர்களின் ஆயுதங்களையும்

128. அஸ்த்ராவணம் மட்டுமோ, லோகபாலகர், பைரவர் வரையிலுமோ சந்தனம் முதலியவைகளாலும் தூபம் நெய் தீபம் முதலியவைகளால் உபசாரம் செய்து

129. காய்கறி வகைகளுடன் ஆஜ்யத்தோடு கூடியதுமான நிவேதனத்தை ஈச்வரனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். அகோர தேவர்க்கும் அகோராஸ்த்ரத்திற்கும் பருக நீர் முதலியவற்றை நிவேதிக்க வேண்டும்.

130. பிறகு தாம்பூலம் கொடுத்து நூற்றெட்டு ஆவ்ருத்தி அகோர மந்த்ரத்தையும் அகோராஸ்த்ர மந்த்ரத்தையும் ஜபித்து அதை அந்தந்த தேவதைகளுக்கு ஆசார்யன் ஸமர்பிக்க வேண்டும்.

131. கும்பத்தின் முன் ஐந்து ஸம்ஸ்காரங்கள் சுத்தம் செய்யப்பட்ட மணலாலான ஸ்தண்டிலத்தில் குண்டஸம்ஸ்காரமும் செய்து

132. முன் கூறிய விதம் அக்னியில் இறைவனை ஆவாஹனம் செய்து பாலுள்ள மரத்தின் ஸமித்துகளாலும் ஆஜ்யத்தாலும் அன்னத்தாலும்

133. பொறி, அக்ஷதையோடு கூடிய எள்ளாலும், நூற்றெட்டு ஆவ்ருத்தி ஹோமம் செய்து கடைசியாக அஸ்த்ரரூபமான இறைவனுக்கு தாம்பூலமும் நிவேதனம் செய்து

134. கடைசியில் பூர்ணாஹுதியும் செய்ய வேண்டும். அகோர மந்திரத்தால் ஹோமபஸ்மத்தை எடுத்து அஸ்த்ரமந்திரத்தால் அதை ரட்சிக்கவும் வேண்டும்.

135. போகாங்க பூஜையும், லயாங்க பூஜையும் செய்து அக்னியை விஸர்ஜனம் செய்ய வேண்டும். பிறகு ஹோம கர்மாவை அகோர ரூபியான கும்பத்தில்

136. அர்ப்பணம் செய்து விரும்பியதைப் பிரார்த்தித்துக் கேட்டு உத்தரவு பெற்று பராங் முகார்க்யம் கொடுத்து போகாங்க பூஜைகளை ஒடுக்கிக் கொண்டு

137. லயாங்க பூஜை செய்து உபஸம்ஹரணம் செய்ய வேண்டும். அஸ்த்ர மந்திரத்தையும் அகோர மந்திரத்தையும் மற்ற மந்திரங்களையும் ஹ்ருதய கமலத்தில் சேர்த்து

138. கும்ப தீர்த்தத்தால் நோயுள்ளவனை ஸ்னானம் செய்விக்க வேண்டும். தினந்தோறும் இவ்வாறு அந்த தீர்த்தத்தால் பிரோக்ஷணமும் செய்து கொள்ளலாம்.

139. எல்லாவற்றிற்குமோ யானைகளின் இடம் முதலிய இடங்களிலும் புரோக்ஷித்து அகோர தேவரை விட்டு அகோராஸ்த்ரத்தையாவது பூஜிக்க வேண்டும்.

140. இவ்வாறு ஒரு நாள் அல்லது மூன்று நாட்கள் ஐந்து அல்லது ஏழு நாட்கள் அல்லது பக்ஷம் ஒரு மாதம் அல்லது இரண்டு மூன்று மாதம் தினந்தோறும் இவ்வாறு.

141. தினந்தோறும் செய்தால் அரசன் முதலானவர்களுடைய நோயும் யானை முதலியவைகளுடைய நோயும் தீர்ந்துவிடும்.

142. அரசனும் யானைகளும், நோயின்றி பலம் பொருந்திய சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.

143. இதுவே குதிரை எருமை, ஆடு முதலிய பிராணிகளுக்கு உண்டாகும் நோயைப் போக்கவும் முடியும்

144. யாகத்தில் உபயோகித்து மிச்சமுள்ள பொருள் ஆசார்யனுக்கு கொடுப்பதோடு உணவும், நெய் முதலியவற்றையும் தினம் கொடுக்க வேண்டும்.

145. கடைசியில் சக்திக்கு தக்கவாறு தட்சிணையும் கொடுக்க வேண்டும். இவ்வாறு பகலிலும் இரவிலும் இக்கர்மாவை செய்ய வேண்டும்.

146. ஹோமத்தின் முடிவில் இரவில் தினந்தோறும் யானைக் கொட்டாரத்திலோ குதிரை லாயத்திலோ அல்லது

147. அதன் சமீபத்திலோ ஆஜ்யத்தோடு கூடிய அன்னம் பலியாகக் கொடுக்க வேண்டும். சுத்தமான கோமயத்தால் மெழுகப்பட்ட அஸ்த்ரமந்திரத்தால்

148. அகோர தேவரையும் அகோராஸ்த்ர தேவரையும் பரிவாரத்துடன் சந்தனம் புஷ்பங்களால் பூஜித்து வஜ்ரம் முதல் சக்ரம் வரையிலான ஆயுத ஆவரணத்துடன் கூடிய

149. ஸ்வாஹாந்தமாக பலிதானம் செய்ய வேண்டும். மேற்கிலோ, வடமேற்கிலோ ÷க்ஷத்திரபாலகருக்கு பலிதானம் செய்ய வேண்டும்.

150. அகோரமந்திரமின்றி அகோராஸ்த்ரத்தை மட்டுமாவது நடுவில் வைத்து அஸ்த்ராவண தேவதைகளுக்கும் ருத்திரன் முதலியவர்களுக்கு பலிதானம் செய்ய வேண்டும்.

151. எந்த ராஜ்யத்தில் இவ்விதம் பலிதானம் செய்யப்படுகிறதோ அங்கு ருத்திர பாதங்களால் உண்டான பயமும் நோயின் உபத்ரவமும் நிச்சயம் ஏற்படாது.

152. ஏதேனும் நோய், செய்கிறவனுக்கும் செய்விப்போனுக்கும் உண்டாகுமேயானால் அது உடனே நசித்து விடும். ஐயமில்ல.

153. எந்த அரசனின் ராஜ்யத்தில் அகோரதேவருக்கு அகோரசாஸ்த்ரத்திற்கும் பூஜையும் ஹோமமும் பலிதானமும் நடைபெறுகிறதோ

154. அங்கு ஆயுள் விருத்தியும் நோயற்ற தன்மையும் உண்டாகும். இதற்கு சமமாக நல்லது செய்யக் கூடியது வேறொன்றும் இல்லை ஆகையால் இதை முயற்சியுடன் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் வியாதிநாச விதியாகிற எழுபத்தி ஐந்தாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: