ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

பார்க்க வேண்டிய பத்து கோவிகள் விழுப்புரம் மாவட்டம்-1

அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் :சந்திரமவுலீஸ்வரர்
அம்மன்:அமிர்தாம்பிகை
தல விருட்சம் :வில்வம்
தீர்த்தம் :சூரியபுஷ்கரிணி
பழமை :1800 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :வக்ராபுரி
ஊர் :திருவக்கரை
மாவட்டம் :விழுப்புரம்
மாநிலம் :தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், சுந்தரர்

ஏனவெண் கொம்பினொடும் இளவாமையும் பூண்டுகந்து கூனிள வெண்பிறையும் குளிர்மத்தமும் சூடிநல்ல மானன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன் தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 30வது தலம்.

விழா:சித்ரா பவுர்ணமி - வக்ரகாளியம்மன் வீதியுலா உற்சவம் - 1நாள் திருவிழா சித்திரை வருடபிறப்பு - சந்திர மௌலீசுவரர் தெப்ப உற்சவம் காணும் பொங்கல்,ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, தைபூசம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, கார்த்திகை தீபம், ஆகிய விசேச நாட்களில் கோயிலில் வக்கிர காளியம்மனுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடக்கின்றன. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு , அஷ்டமி நவமி நாட்களில் கோயிலில் பக்தர்கள் வருகை பெருமளவில் இருக்கும்.  

சிறப்பு:மூலவர் மும்முக லிங்கமாக காட்சி தருகிறார். இது வேறு எங்கும் காணமுடியாத அற்புத திருக்காட்சி ஆகும். காளி கோயிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது.இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும்.இதை வக்கராசூரன் பூஜித்துள்ளான். இந்த லிங்கம் கோடை காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் மழைக் காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 263 வது தேவாரத்தலம் ஆகும்.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். அருள்மிகு சந்திர மௌலீசுவரர் திருக்கோயில், திருவக்கரை போஸ்ட்-604 304, விழுப்புரம் மாவட்டம்.போன்:+91 - 413 2688949 
     
தகவல்:இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். சுவாமியின் பிறபெயர்கள்: சந்திரசேகரர், பிறைசூடிய எம்பெருமான் அம்பாளின்  பிறபெயர்கள்: அமிர்தாம்பிகை,வடிவாம்பிகை

பிரார்த்தனை:இங்கு மனநிம்மதி கிடைக்க, கிரக தோசங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, பாவ தோசங்களும் விலக, காரியத் தடைகள் நீங்க சிவனை பிரார்த்திக்கிறார்கள். வக்ர தோசங்கள் , ஜாதக கிரக தோசங்கள், வியாபாரத்தடை, உத்தியோகத் தடை நீங்கவும், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள் இத்தலத்தின் மிக முக்கிய பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மனை வணங்குகின்றனர். நீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாதவர்கள் காளி சன்னதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது வழக்கம். எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

நேர்த்திக்கடன்:திருமணத்தடை உள்ளவர்கள் தாலி காணிக்கை, புடவை சாத்துதல், மாலை சாத்துதல் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். குழந்தை வரம் இல்லாதவர்கள் தொட்டில் கட்டுதல், எடைக்கு எடை காசுபோடுதல்(துலாபாரம்) ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். வியாபார விருத்தி வேண்டுவோர் திருப்பணிகள் செய்தல், மண்டபம் கட்டித்தருதல், ஆகியவற்றையும் செய்கிறார்கள். தவிர சந்தன காப்பு, பால், தயிர், இளநீர்,விபூதி, சந்தனம்,பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி ஆகியவற்றால் ஆன அபிசேகங்கள் நடக்கின்றன. சந்தன அலங்காரமும் வக்கிர காளிக்கு செய்கின்றனர். இந்த தெய்வத்தை குலதெய்வமாக வழிபடுவோர் மொட்டை போடுதல், காதணி விழா நடத்துதல், அங்கபிரதட்சணம்செய்தல், குத்து விளக்கு சரவிளக்கு வாங்கி வைத்தல், நெய்தீபம் ஏற்றுதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமிக்கு 1008 சகஸ்கர கலச அபிசேகம், வக்ர காளிக்கு 1008 சங்காபிசேகம் மற்றும் சித்ரா பவுர்ணமியின் மறுநாள் 1008 பால் குட அபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகின்றது. வஸ்திரம் சாத்துதல், மஞ்சள் தூள், கதம்ப பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம்செய்கிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்துகிறார்கள் மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள். 
     
பெருமை:இந்தியாவில் பஞ்ச முக லிங்கம் கொண்ட சிவதலம் வடக்கில் நேபாளத்திலும், தெற்கில் ஆந்திராவில் உள்ள காளஸ்திரியிலும் உள்ளது. மும்முகத்தில் காட்சி அளிப்பது அருள் சொரியும் திருவக்கரையில் மட்டுமே. இம்முகலிங்கத்திற்கு கிழக்கில் தட்புருட முகமாகவும் வடக்கே வாதேவ முகமாகவும் தெற்கே அகோர முகமாகவும் காட்சி தருகிறார்.தெற்கே உள்ள அகோர முகத்தில் வாயின் இரு ஓரத்திலும் இரு கோரை பற்கள் உள்ளன.இதை பால் அபிசேகம் செய்யும் போது மட்டுமே தெளிவாக பார்க்க முடியும்.

எல்லாமே வக்கிரம்: கருவறைக்கும் துவஜஸ்தம்பத்திற்கும் நேராக இல்லாமல் வடபுறமாக சற்று விலகி வக்கிரமாக உள்ளது.பொதுவாக எல்லாக் கோயில்களிலும் நாம் கோபுர வாசலில் இருந்தே சுவாமியை தரிசனம் செய்யலாம். ஆனால் இந்த திருவக்கரை கோயிலிலோ இராஜகோபுரம், கொடிக்கம்பம், நந்தி, திருவக்கரையில் இருக்கும் சுவாமி முதலியன ஒரே நேர்கோட்டில் இல்லாமல் ஒன்றைவிட்டு விலகி, வக்கிர நிலையில் இருக்கிறது.எனவே இங்கு எல்லாமே வக்கிரமாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது.பவுர்ணமி இரவு 12 மணிக்கு - அம்மாவாசை பகல் 12 மணிக்கு ஜோதி தரிசனம் - வக்கிரகாளியம்னுக்கு ஜோதி தரிசனம் காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேசம். வக்ர காளியின் இடது பாகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம் உள்ளது.வரதராஜ பெருமாளுக்கு பிரயோக சக்கரம் வழக்கப்படி இருக்காமல் சக்கரத்தின் அமைப்பு மாறி இருக்கும். குண்டலினி சித்தர் இங்கு ஜீவ சமாதி அடைந்துள்ளார். இங்கு அவரின் சமாதி கோயிலுக்குள்ளேயே உள்ளது. வக்ர காளியின் வலது காதில் சிசு(குழந்தை)குண்டலம் உள்ளது. வக்ர காளி இங்கு சாந்த சொரூபமாக அருள்பாலிக்கிறாள்.

வக்ர சனி: பொதுவாக எல்லாக் கோயில்களிலும் சனி பகவான் வாகனமான காகம் அவருக்கு வலப்புறமாக இருப்பது வழக்கம்.ஆனால் இங்கு வழக்கத்திற்கு மாறாக சனி பகவானுடைய இடது புறத்தில் அமைந்து வக்கிரமாக காட்சி தருகிறது.  அந்த வக்கிர சனியை வணங்குபவர்களுக்கு துன்பம் நீங்கும், இன்பம் பொங்கும். கி.மு.756 ல் கட்டப்பட்ட கோயில் இது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் மயான பூமி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தல வரலாறு: வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம்.எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம்.வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள். சம்காரம் பண்ணியதால் ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் வலது புறம் 5 இடப்புறம் 4 என்ற கணக்கின் படி சுற்றிவர வேண்டும் என்பது ஐதீகம்.

வக்ரகாளியம்மன்: வக்கிரகாளி சந்நிதியினால்தான் இத்திருத்தலம் தற்போது பலருக்கும் தெரிந்திருக்கிறது. இத்தலம் புகழ் பெறக் காரணமே இந்த வக்ரகாளியம்மனே ஆகும். வக்ர சாந்தி திருத்தலம் என்று இத்தலத்திற்கு பெயர். பட்டீசுவரம் துர்க்கை, சிதம்பரம் பிரம்ம சாமுண்டீசுவரி, தில்லை காளி போன்ற அற்புதமான சிற்பங்களைப் போலவே வக்கிரகாளி அம்மனின் திருவுருவமும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.பொதுவாக காளி கோயில் ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து வித்தியாசமானதாக உள்ளது. வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது.சுடர் விட்ட பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம் வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், எட்டுத்திருத்தலங்கள் வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம் , பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்து அந்த தலை மாலையையே மார்பு கச்சாக இடத் தோளிலிருந்து இறங்கி பருத்த தனங்களூடேவந்து படிந்து கீழே தொங்கும் வலக்கையில் சென்று முடிகின்றது.முண்ட மாலையினை அவள் முப்பிரி நூலாக அணிந்திருக்கிறாள்.இக்கோயிலை வலம் வர நினைப்பவர்கள் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும்.
----------------------------------------------------------------------------------------
15. சந்த்யாந்ருத்த மூர்த்தி

தேவர்கள் சிவபெருமானின் உதவியில்லாமல் பாற்கடலைக் கடைந்தனர். அதில் மந்திரமலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு கடைந்தனர்.  இதில் வாசுகியின் வாயையும் வாலையும் தேவர்களும், அசுரர்களும்  இழுக்கும் பொருட்டு  வாசுகி கொடிய ஆலகால விஷத்தைத் துப்பியது அவ்விஷம் அனைவரையும் எதிர்த்தது, எதிர்ப்பட்ட திருமாலும் அதன் முன் உடல் கருகினார். இதனைக் கண்ட தேவர்கள் கைலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமானும் தேவர்களின் துயரைப் போக்க அவ்விஷத்தை உண்டார். அதனால் அவர்க்கு ஒன்றும் நேரவில்லை எனினும் ஒரு விளையாட்டை நிகழ்த்தினார். அவ்விஷம் அவரைத் தாக்கியது போல், மயங்குவது போல் உமா தேவியின் முன்பு மௌனமாய் உறங்குவது போல் இருந்தார்.  இதனைக் கண்ட தேவர்கள் அவரை அர்ச்சித்து அன்று முழுவதும் உறக்கம், உணவின்றி இருந்தனர்.  அந்தத் திதியை நாம் ஏகாதசி என்போம். மறுநாளாகிய துவாதசியில் தேவர்கள் பாராயணஞ் செய்தனர். அதற்கு மேற்ப்பட்ட திதியான திரயோதசியில் சிவயபெருமான் சூலம், உடுக்கை சகிதம் ஒரு சாமகாலம் திருநடனம் செய்தார். அந்த காலத்தை நாம் பிரதோஷம் என்போம். அதாவது பதினைந்து தினங்களுக்கொருமுறை வரும் திரயோதசியை நாம் மாத பிரதோஷம் என்றும், வருடத்திற்கொருமுறை வரும் மகா சிவராத்திரியை வருடப் பிரதோஷம் என்றும், தினசரி மாலை முடிந்து இரவு ஆரம்பிக்கும் நேரத்தையும் நாம் பிரதோஷ காலமாகக கொள்ளலாம்.

சிவபெருமான் நிருத்தம்(நிருத்தம் - நடனம்) செய்வதைக் கண்ட தேவர்கள் மனம் மகிழ்ந்தனர். தனது கரங்களை சிரத்திற்கு மேல் தூக்கி சிவசிவ என்று   ஆர்ப்பரித்தனர்.  ஆடினர், பாடினர், தேவர்கள் அவர் நடனத்திற்கு ஏற்றவாறு வாத்தியங்களும், விஷ்ணு மிருதங்கமும் வாசித்தனர். பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நடனம்  ஆடியதால் அவரது பெயர் சந்த்யாந்ருத்த மூர்த்தி என்றானது. அவரை தரிசிக்க  மதுரை செல்ல வேண்டும்.  சதாசிவமூர்த்தியின் உச்சியில் அமைந்துள்ள ஈசான  முகத்திலிருந்து தோன்றிய வடிவமே நடராஜமூர்த்தி யாவார். அவரது வடிவமே சந்த்யாந்ருத்த மூர்த்தி போன்ற பல வடிவமாகப் பறந்து விரிந்தது. மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ள இவரை வணங்குவோமானால் நம் தொழில்களை காப்பதுடன் பலகலைகளில் சிறப்பு பெற உதவுவார்.  செந்தாமரையால் அர்ச்சனையும், தேங்காய் சாத நைவேத்தியமும் திங்கள், புதன் கிழமை மாலையில் செய்ய தடங்கள் அகழும், விரோதிகள்  ஒழிவர். நன்மை பாராட்டுவர்.  மதுரை நடராஜ பெருமானுக்கு பன்னீரால் அபிசேகம் செய்தால் கல்வியறிவு  மேன்மையடையும் என்பது ஐதீகம்.
----------------------------------------------------------------------------------------
14. புஜங்கத்ராச மூர்த்தி

தாருவனத்தில் வசித்து வந்த முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவரது துணைவியர்களோ  கற்பே சிறப்புடையது என்றும் வாழ்ந்து வந்தனர். இவர்களை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். பிட்சாடண கோலத்தில் சிவபெருமானும், மோகிணி கோலத்தில்  திருமாலும் அவ்வனம் சென்று  முனிவர்களின் தவத்தையும், துணைவியரின்  கற்பையும் சோதித்தனர்.  இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தவத்தை அழித்தது மோகிணி அவதார மெடுத்த திருமால் என்றும், கற்பை பரிசோதித்தது  பிட்சாடண ரூபம் கொண்ட சிவபெருமான் என்றும்   தங்களது தவ வலிமையால் அறிந்தனர்.  அதனால் கோபம் கொண்டு விஷ மரங்களை குச்சிகளாக்கி  அதை நெய்யில் நனைத்து ஹோமம் வளர்த்து வந்தனர்.  அதிலிருந்து வந்த பல கொடியப் பொருள்களை சிவனின் மீது ஏவினர். சிவனே அவற்றையெல்லாம்  உடை, சிலம்பு, ஆயுதம், சிரோ மாலை, சேனை என்று உருமாற்றி தன்னிடம் வைத்துக்கொண்டார். தாங்கள் ஏவிய பொருள்கள் அனைத்தும் அவருக்கு ஆபரணமாகவும், படையாகவும் மாறியதை அறிந்த  முனிவர்கள்  பெரும் கோபம் கொண்டனர். மேலும் அதிக விஷமுள்ள பாம்புகளை சிவனின் மீது ஏவினர். அந்த பாம்பு  உலகை நாசமாக்கும் பொருட்டு தன்னுடைய  நான்து பற்களில்  கடும் விஷத்துடன்  சிவபெருமானை அடைந்தது  அவரும் அதற்கு சிறிது பயப்படும் படி நடித்து விட்டு தன்னுடலில்   ஏற்கனவே ஆபரணமாக உள்ள பாம்புகளுடன்  சேர்ந்து விடும்படி  கூறி சேர்த்தார். அப்பாம்புகள் அவருடலில் கங்கணம்(கைவளை, காப்பு) காலணி அரைஞான் கயிறு ஆகியவையாக அணிந்து  கொண்டு காட்சிக்  கொடுத்தார்.  தாருவனத்து  முனிவர் ஏவிய பாம்புகள் அவரை அச்சுருத்தியமையால் அவரை புஜங்கத்ராச மூர்த்தி என்றனர். (புஜங்கள் - பாம்பு, திராசம் - பயப்படுதல்)

புஜங்கத்ராச மூர்த்தி யை தரிசிக்க நாம் செல்ல வேண்டி தலம் பெரும்புலியூர் ஆகும். இந்த சிவபெருமான் கோயிலில் தான் சிவன் தன்னுடைய  ஆடையாக  பாம்புகளை அணிந்த படி  காட்சிக் கொடுக்கின்றார். இந்த வடிவத்தையே  நாம் புஜங்கத்ராச மூர்த்தி என்கின்றோம்.  இவரை வணங்கினால்  ராகு தோஷம் நிவர்த்தியடையும்.  இவருக்கு சோமவாரம் அல்லது குருவாரத்தில்  வில்வார்ச்சனையும், சம்பா அன்ன நைவேத்தியமும் கொடுக்க கடன் தொல்லை தீரும். இங்குள்ள சிவபெருமானை மஞ்சள் நீரால் அபிசேகம் செய்ய ராகு கால தோஷம், சர்ப்ப கால தோஷம்  விலகும்.
----------------------------------------------------------------------------------------
13. புஜங்கலளித மூர்த்தி

காசிப முனிவரின்  மனைவியரான  கத்துருவிற்கும், வினந்தைக்கும்  தங்களில்  அடிகானவர்  யார் என்றப் போட்டி ஏற்பட்டது. அப்படி அழகானவள்  மற்றவளை சிறையில்  அடைக்க  வேண்டும் என்ற  முடிவுடன்  கணவரான  காசிபரை  நாடினார். கணவரோ கத்துருவே  அழகி  என்றுக்கூறினார், இதன் விளைவாக வினத்தை சிறையில்  அடைக்கப்பட்டார். தன்னை விடுவிக்கும் படி கத்துருவை  வேண்டினாள். கத்துருவோ தனக்கு  அமிர்தம்  கொடுத்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும் என்றார். உடன்  வினந்தை தன் மகனான கருடனின் வனத்திற்கு இதைக் கொண்டு சென்றார். கருடனும் தேவலோகம் சென்று போரிட்டு  அமிர்தத்துடன் செல்லும் போது திருமால் கருடனுடன் போரிட்டு வெல்ல முடியாமல் பறவை ராஜனே உன் பெருமைகளைப் போற்றினோம், உனக்கு வேண்டும் வரத்தைக் கேள் என்றார். கருடனே பதிலுக்கு திருமாலே உன் வலிமையை கண்டுகளித்தேன் நீ உனக்கு வேண்டிய இரண்டு வரங்களை கேள் என்றார். திருமாலும் இதுதான் சந்தர்ப்பமென  தனக்கு வாகனமாக இருக்க வேண்டியும், அரவங்களுக்கு அமுதம் கொடுக்காதிருக்கவும் வரம் வாங்கினார்.

கருடனும் அதற்கிசைந்து கொடுத்து விட்டு  அமுதத்துடன் சிறைக்கு வந்து தாயிடம் கொடுத்தார். பின்னர் சிவபூஜை செய்து சிவபெருமானிடம் பலவரங்களைப் பெற்றுப் பின்னர் அன்று முதல் திருமாலின் வாகனமானார். மேலும் கருடன் திருமாலிடம் பெற்ற வரத்தினால் மற்றொரு தாயான கத்துருவின் கட்செவிகளைக் கொன்று கொடுமைப் படுத்தினார். இதனால் கோபம் கொண்ட நாகங்கள் சிவபூஜை செய்து தங்களுக்கு இறவாபுகழும், கருடனிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும் வேண்டினர். உடன் சிவபெருமானும் வேண்டிய வரத்தைக் கொடுத்து விட்டு நாகங்களை தன்னுடலில்  ஆபரணமாக  அணிந்து கொண்டார். இதனையே நாம் என்ன கருடா சௌக்கியமா  என நாகங்கள் கூறுவதாக கொள்வோம். அதற்கு என்ன பொருளெனில் சிறியோரை கூடுதலைவிட  பெரியோரைச் சேருதலே சிறந்தது என்பதாகும்.  பாம்புகளுக்கு அபயமளித்ததால் சிவபெருமானுக்கு புஜங்கலளித மூர்த்தி என்னும் பெயர் ஏற்பட்டது. ( புஜங்கம் - நாகம், லளிதம்- அழகு, ஆபரணம்) புஜங்கலளித மூர்த்தியை நாம் தரிசிக்க கல்லனை அருகேயுள்ள திருப்பெரும்புலியூர் செல்ல வேண்டும். சிவபெருமான் நாகங்களின் மீது நடனமாடிய திருக்கோயில் என்பதால் சிறப்பு பெற்றது. ராகுவின் அதிதேவதையான பாம்புவின் தலமென்பதால் இத்தல மூர்த்தியை வழிபட ராகு கிரகத் தொல்லைகள் விலகும், அவரது பார்வை நம்மீது பட்டு நற்பலன்களைக் கொடுக்கும். இவருக்கு நீலமலர் அர்ச்சனையும், பால், பழம், தேன் கொண்டு நைவேத்தியமும் சோமவாரங்களில் கொடுக்க  சர்ப்ப கால தோஷம் விலகும். பாம்பு பயம் நிவாரணம் பெறும்.  இங்குள்ள இறைவன் பெயர் வியாக்கிரபுரிஸ்வரர் இறைவி பெயர் சௌந்திரநாயகி என்பதாகும். இவர்களுக்கு மஞ்சள் நீரால் அபிசேகம் செய்தாலும் சர்ப்பகால, ராகு தோஷம் விலகும் என்பது கண்கூடாகும்.
----------------------------------------------------------------------------------------
12. இடபாந்திக மூர்த்தி

சதுர்யுகங்கள் இரண்டாயிரம் நான்முகனுக்கு ஒரு நாளாகும். அது நூறு கொண்டது நான்முகனது ஆயுட்காலமாகும், நான்முகனின் ஆயுட்காலமே விஷ்ணுவிற்கு ஒரு நாள் ஆகும். ஆக விஷ்ணுவிற்கு நூறு வயது கழிந்தால் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் அழியும் என்பது  கணக்கு, அழியும் ஊழிகாலத்தில்  உமையுடன் சேர்ந்து திருநடனம் புரிவார் சிவபெருமான். இக்கணக்கினால் தர்மதேவதை வேதனை கொண்டது. தானும் அழிய வேண்டி வருமே என்ன செய்வது  சிவபெருமானிடம்  சரணடைவதுத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று சிவனை சரணடைந்தது. இடபமாக மாறி தர்மதேவதை  சிவனின் முன்பு நின்றது. ஐயனே நான் இறவாமலிருக்க வேண்டும். எப்பொழுதும் தங்கள் வாகனமாக நானிருக்கவும் ஆசி கூறுங்கள் என்றது.கேட்ட வரம் கொடுக்கும் அருட்கடலான சிவபெருமானும் இடபத்தில் தலை மேல் தனது கை வைத்து  தர்மதேவதையே உன் விருப்பம் நிறைவேற்றப்படும்.

 ஆகவே தருமத்தினை உலகிற்கு  உணர்த்த கிருதயுகத்தில் நான்கு கால்களுடனும், திரேதாயுகத்தில் இரண்டு கால்களுடனும் கடைசியாக  கலியுகத்தில் ஒரு காலுடனும் தோன்றி தர்மத்தினை நிலைநாட்டுவாய். மேலும்  எப்பொழுதும் என்னை நீ பிரியாமல் இருப்பாய் எனது வாகனமாகும் பேற்றையும் நீயேப் பெறுவாய் என்று திருவாய் எழுந்தருளினார்.தனது அடியார்களுக்கு காட்சியளிக்கும் சிவபெருமானின்  இடப வாத்திக தரிசன ரகசியம் இதுவேயாகும், இனி இடப வாத்திக மூர்த்தியை சரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் திருவாவடுதுறையாகும். இத்தலம் மயிலாடுதுறையருகே  அமைந்துள்ளது. இங்குள்ள மாசிலாமணிஸ்வரர்  கோயிலில்  அமைந்துள்ள இடபாந்திக மூர்த்தியை வணங்குவோமானால் ஊழிக்காலத்தில் நம்முடைய ஆன்மா சிவபெருமானை   தஞ்சமடையும்  என்பது  ஐதீகம்.  இவருக்கு திங்கள்,வியாழக்கிழமைகளில் வெண்தாமரை அர்ச்சனையும், பசுவின் பால் நைவேத்தியமும் கொடுக்க குரு தோஷ நிவர்த்தியுண்டாகும். மேலும் சிவபெருமானுக்கு வில்வ நீரால் அபிசேகம் செய்தால் மறுபிறவியிலும் சிவனருள் கிடைக்கும்.
----------------------------------------------------------------------------------------
11. இடபாரூட மூர்த்தி

திரிபுர அசுரர்களின் தொல்லை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேயிருந்தது. இனி பொருக்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று நந்தி தேவரின் அனுமதியிடன் சிவபெருமானை தரிசித்தனர். சிவனும்  போரிற்கு வேண்டிய ஆயுதங்களை தயார் நிலையில் வைக்கும் படி ஆணை இட்டார். ஆயுதங்கள் தயாரானதும்  சிவபெருமானும், உமாதேவியும்  தருமதேவதையாகிய வெண்ணிற இடப வாகனத்தில் கைலாய மலையை விட்டு இறங்கி வருகின்றனர்.  இதனைக் கண்ட அனைவரும் சிவதுதி சொல்லத் துவங்கினர். பின்னர் தேவர்களால் செய்யப்பட்ட தேரினைக்கண்ட சிவபெருமான்  இடபவாகனத்தை விட்டு இறங்கி மேருமலையை வில்லாகக் கொண்டு தேர் ஏறியவுடன் தேரின் அச்சு முறிந்தது. இதனைக் கண்ணுற்ற விஷ்ணு சிவன் பால் கொண்ட அன்பினால் இடப உருவமாகி சிவனைத் தாங்கினான். இதனால் விஷ்ணுவிற்கு  தலைகனம் ஏற்பட்டது. தன்னைத் தவிர வேறொருவருக்கும் சிவனைத் தாங்கும் சக்தி இல்லை என்ற எண்ணம் வலுப்பெற்றது.

இதனை அறிந்த சிவபெருமான்  விஷ்ணுவிற்கு பாடம் புகட்ட எண்ணி, தன்கனத்தை அதிகப்படுத்தினார். இதனைத் தாங்காத இடப வாகணமாகிய  விஷ்ணு, இரு செவி, இரு கண்கள், மூக்கு போன்றவை பிதுங்கியும், இரத்தம் வடிந்தும் செயலிழந்து தரையில் வீழ்ந்தார். இதனால் தேவர்கள் பயத்துடன் சிவதுதிகளை சொல்லி அவரை சாந்தப்படுத்தினர். விஷ்ணுவும் மனம்  வருந்தி மன்னிப்பு கேட்டார்.  விஷ்ணு தலைகனம் அழிந்தது. மனம் மகிழ்ந்த சிவபெருமான் பூமியில் இறங்கினார். பின்னர் விஷ்ணுவின் வலிமைகளை மறுபடியும் அழித்தார். விஷ்ணுவிடம் என்ன வரம் வேண்டுமென்றுக் கேட்க, விஷ்ணுவும் சிவபெருமான் வாமபாகத்திலிருந்து அவரைத் தாங்கும் சக்தியை தனக்கு கொடுக்க வேண்டும் என வேண்டினார். அதனை நிறைவேற்றிய சிவபெருமான் விஷ்ணுவின் விருப்பப்படி  அரியாகிய இடத்தை வாகனமாகக் கொண்டு அதன்மேல் ஏறியமர்ந்தார். எனவே சிவபெருமானுக்கு  இடபாரூட மூர்த்தி என்று திருநாமம் உண்டாகிற்று.

இடபாரூட மூர்த்தியை சரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் மயிலாடுதுறையருகேயுள்ள திருவாவடுதுறையாகும். இறைவனது திருநாமம்  கோமூத்திஸ்வரர், மாசிலாமணிஸ்வரர்  என்பதாகும். இங்குள்ள கோமூத்தி தீர்த்தத்தால் இடபாரூடரை அபிசேகம் செய்ய உடல் நோய் தீரும், குழந்தை பாக்கியம் உண்டாகும், திருமந்திர பொருள்  விளங்கும். அருகம்புல் அர்ச்சனையும், தாம்பூல நைவேத்தியமும் பிரதோஷ காலங்களில் கொடுக்க நினைத்தது நடைபெறும். உயர்பதவி கிட்டும். இங்குள்ள சிவனை வில்வ நீரால்  அபிசேகம் செய்ய அடுத்த பிறவியிலும் சிவனின்  அருள் பரிபூரணமாய் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சந்திர கிரகணம்

⭐ சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்க படும் போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும் போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.

⭐ பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.

⭐ சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது
பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மிது படுவதிலிருந்து மறைத்து விடுவதால் ஏற்படுவது ஆகும்.

⭐ சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும் அரை குறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும் கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

⭐ கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.

சந்திர கிரகணம் பற்றி புராணக் கதை :

⭐ சந்திரன் அவர் செய்த பாவ காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்து விடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரை பிடித்து அவரை முடமாக்க நினைக்கிறார்.

⭐ ஆனால் சந்திரன், பகவானை பிரார்த்தித்து ஸ்லோகங்கள் சொல்லவும் இறைவன் சந்திரனுக்கு அருள சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது.

⭐ இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனை பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும்.

⭐ கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் என புராணங்கள் கூறுகிறது. ஆனால் சந்திரனின் கதிர்களின் கதிர் வீச்சில் ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களை பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

⭐ கிரகணம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ள கூடாது.

⭐ கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது.

⭐ ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

⭐ செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.

⭐ கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அது போலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

⭐ கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்து விட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

⭐ ஆலய தரிசனம் செய்து விட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

⭐ கிரகணம் முடியும் பதினைந்து நிமிடங்கள் முன் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

⭐ சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளை கொடுக்கும்.
--------------------------------------------------------------------------------------
ஶ்ரீது₃ர்கா₃ஸப்தஶ்லோகீ ||

| அத₂ ஸப்தஶ்லோகீ து₃ர்கா₃ |ஶிவ உவாச
தே₃வி த்வம்ʼ ப₄க்தஸுலபே₄ ஸர்வகார்யவிதா₄யினீ |
கலௌ ஹி கார்யஸித்₃த்₄யர்த₂முபாயம்ʼ ப்₃ரூஹி யத்னத: ||

தே₃வ்யுவாச ஶ்ருʼணு தே₃வ ப்ரவக்ஷ்யாமி கலௌ ஸர்வேஷ்டஸாத₄னம் |
மயா தவைவ ஸ்னேஹேனாப்யம்பா₃ஸ்துதி: ப்ரகாஶ்யதே ||

ஓம்ʼ அஸ்ய ஶ்ரீது₃ர்கா₃ஸப்தஶ்லோகீஸ்தோத்ரமஹாமந்த்ரஸ்ய நாராயண ருʼஷி: | அனுஷ்டுபா₄தீ₃னி ச₂ந்தா₃ம்ʼஸி | ஶ்ரீமஹாகாலீமஹாலக்ஷ்மீமஹாஸரஸ்வத்யோ தே₃வதா: |
ஶ்ரீதூ₃ர்கா₃ப்ரீத்யர்த₂ம்ʼ ஸப்தஶ்லோகீ து₃ர்கா₃பாடே₂ வினியோக₃: ||

ஜ்ஞானினாமபி சேதாம்ʼஸி தே₃வீ ப₄க₃வதீ ஹி ஸா |
ப₃லாதா₃க்ருʼஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்ச₂தி || 1||

து₃ர்கே₃ ஸ்ம்ருʼதா ஹரஸி பீ₄திமஶேஷஜந்தோ:
ஸ்வஸ்தை₂: ஸ்ம்ருʼதா மதிமதீவ ஶுபா₄ம்ʼ த₃தா₃ஸி |
தா₃ரித்₃ர்யது₃:க₂ப₄யஹாரிணி கா த்வத₃ன்யா
ஸர்வோபகாரகரணாய ஸதா₃(அ)(அ)ர்த்₃ரசித்தா || 2||

ஸர்வமங்க₃லமாங்க₃ல்யே ஶிவே ஸர்வார்த₂ஸாதி₄கே |
ஶரண்யே த்ர்யம்ப₃கே கௌ₃ரி நாராயணி நமோ(அ)ஸ்து தே || 3||

ஶரணாக₃ததீ₃னார்தபரித்ராணபராயணே |
ஸர்வஸ்யார்திஹரே தே₃வி நாராயணி நமோ(அ)ஸ்து தே || 4||

ஸர்வஸ்வரூபே ஸர்வேஶே ஸர்வஶக்திஸமன்விதே |
ப₄யேப்₄யஸ்த்ராஹி நோ தே₃வி து₃ர்கே₃ தே₃வி நமோ(அ)ஸ்து தே || 5||

ரோகா₃னஶேஷானபஹம்ʼஸி துஷ்டா ருஷ்டா து காமான் ஸகலானபீ₄ஷ்டான் |
த்வாமாஶ்ரிதானாம்ʼ ந விபன்னராணாம்ʼ த்வாமாஶ்ரிதா ஹ்யாஶ்ரயதாம்ʼ ப்ரயாந்தி || 6||

ஸர்வாபா₃தா₄ப்ரஶமனம்ʼ த்ரைலோக்யஸ்யாகி₂லேஶ்வரி |
ஏவமேவ த்வயா கார்யமஸ்மத்₃வைரி வினாஶனம் || 7||

|| இதி து₃ர்கா₃ஸப்தஶ்லோகீ ஸம்பூர்ணா ||
--------------------------------------------------------------------------------------
உருத்திராட்சத்தின் முகம் மற்றும் அதன் அதிதேவதை!

உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர்.பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இந்த உருத்திராட்சம் தான்.இதைக் கண்டிகை என்றும் தாழ்வடம் என்றும் கூறுவர்.உருத்திராட்சத்தை தாசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம்.அணிந்தால் நூறு கோடி புண்ணியம்.ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன.நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம்.இலந்தைப்பழ அளவு மத்திபம்.கடலை அளவு அதமம்.புழுக்கள் குடைந்ததும் நசுக்கியதும் நோயுற்றதும் அணியக்கூடாத உருத்திராட்சங்கள் ஆகும்.ஒரே அளவுள்ளதும் உறுதியானதும் பெரியதும் சம முத்துகள் போன்றுள்ளதுமான உருத்திராட்சங்களைப் பட்டுக் கயிற்றில் கோத்து பின் உடலில் அணிய வேண்டும். உருத்திராட்சத்தின் முகம் மற்றும் அதன் அதிதேவதை.

*இருமுக உருத்திராட்சம் அர்த்தநாரிஸ்வரர் உருவம் உடையது.இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.

*மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது.இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.

 *நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம்.இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.

*ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது.இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.

*ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர்.இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன் பக்தியும் அறிவும் செல்வமும் கிடைக்கும்.

*அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.

*ஏழு முக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா.இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும் செல்வமும் கிடைக்கும்.

*எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கையும் ப்ரிதி அடையும்.அதிதேவதை அஷ்டவசு.

*இன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும்.இதன் அதிதேவதை நவசக்தி.

*பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன்.இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படும்.

*பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர்.இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.

*பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம்.இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.

*பதின்மூன்று உருத்திராட்சம் போகத்தையும் சித்தியையும் சுகத்தையும் கொடுக்கிறது.இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.

*உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

* 108 உருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.

* உருத்திராட்சத்தின் அடி பிரம்மா.நாளம் விஷ்ணு.முகம் உருத்திரர்.பிந்து சமஸ்தேவர்கள். அர்ச்சனை ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.உருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம் அதிக புண்ணியம்.தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்.குறிப்பாகச் சிவனடியார்களால் போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம் பதினொரு முகம் பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன்போடு பூஜித்து அணிகின்ற மானிடர்கள் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம்.உருத்திராட்ச தரிசனம் பாவத்தைப் போக்கும்.தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும்.குவிக்கும்.பிறப்பு இறப்பு தீட்டுக்காலங்களில் உருத்திராட்சம் கண்டிப்பாக அணியக்கூடாது.சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்போரும் புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர் பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால் தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர் என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.
--------------------------------------------------------------------------------------
ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹ ருண விமோசன ஸ்தோத்ரம்

1:தேவதா- கார்ய ஸித்யார்த்தம் - ஸபா - ஸ்தம்ப ஸமுத்பவம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!

2:லக்ஷ்ம்யா - லிங்கித வாமாங்கம் பக்தானாம் வர - தாயகம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மா வீரம் நமாமி - முக்தயே!!

3:ஆந்த்ர - மாலா - தரம்,சங்க சக்ராப்ஜா - யுத தாரிணம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!

4:ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம் கத்ருஜ விஷ நாசனம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!

5:ஸிம்ஹ நாதேன மஹதா திக் தந்தி பய நாசனம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!

6:ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம் தைத்யேச்வர விதாரிணம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!

7:க்ரூர க்ரஹை:பீடிதானாம் பக்தானாம் அபய ப்ரதம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!

8:வேத வேதாந்த யக்ஞேசம் ப்ரம்ம ருத்ராதி வந்திதம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!

9:ய இதம் படதே நிதய்ம் ருணமோசன ஸம்க்ஜிதம்!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!!
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹா வீரம் நமாமி ருண முக்தயே!!!
--------------------------------------------------------------------------------------
Balambika Dasakam

1. Velathi langya karune vibhudhendra vandhye,
Leela vinirmitha charachara hrun nivase,
Mala kirreeta mani kundala madithange,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Who is blessed with limitless mercy and saluted by the Lord of heaven,
Who lives in the heart of moving and non moving things, made by her as a sport,
And who is decorated by garlands, crown and gem studded ear globes.

2. Kanjasanadhi mani manju kireeta koti,
Prathyuptha rathna ruchiranchitha pada padme,
Manjeera manjula vinirjitha hamsa naadhe,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Who sits on a golden throne and wears a crown studded with billions of gems,
And wears on her very pretty lotus like feet,
Anklets filled with gems making a sound, which is better than the swan song.

3. Praaleya bhanu kalikaa kalithathi ramye,
Padagra javali vinirjitha moukthikabhe,
Praneswari pramadha loka pathe pragadbhe,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Whose is prettier than the snow, the moon and the flower bud,
Whose anklets emit a shine which beats the luster of pearls,
Who is the expert and who is the queen of the king of Pramadhas.

4. Jangadhibhir vijitha chithaja thooni bhage,
Rambhadhi mardhava kareendra karoru yugme,
Shampa shathadhika sammujwala chela leele,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Whose shanks are like the arrows starting from the quiver,
Whose thighs are like the elephants trunk and beat in prettiness Rambha and other damsels,
And whose attire is hundred times more resplendent than lightning.

5. Manikhya maulika vinirmitha mekhaladye,
Maya vilagna vilasan mani patta bandhe,
Lolambaraji vilasan nava roma jale,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Who wears a girdle made of top quality rubies,
Who shines in a mind entangling and has in her head gear made of jewels,
Who shines in loose cloths and has new magical growth of hair.

6. Nyagrodha pallava thalodhara nimna naabhe,
Nirdhootha haara vilasad kucha chakravake,
Nishkaadhi manju mani bhooshana bhooshithange,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Who has got a sunken navel, which appears like the river of sprouts of Banyan tree,
Who has shining and moving garlands over her pretty breasts.
And who wears ornaments of gold and gems over her body.

7. Kandharpa chapa madha banga kruthadhi ramye,
Broo vallari vividha cheshtitha ramya maane,
Kandharpa sodhara samakruthi phaladese,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Who is so pretty that she defeats the pride of the bow of God of love,
Who quivers her eye brows in a very pretty manner,
And whose forehead has a form which makes one conclude that it is brother of God of love.

8. Mukthavali vilasa dhoorjitha kambhu kande,
Mandasamithanana vinijitha chandra Bimbe,
Bhaktheshta dhana niratha amrutha poorna drushte
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Whose pretty conch shaped neck and wears a gem studded necklace,
Who wins with her pretty gentle smile on her moon like face,
And who has a look full of nectar which satisfies the wishes of devotees.

9. Karnaa vilambi mani kundala ganda bhage,
Karnaantha deerga nava neeraja pathra nethre,
Swarnaaya khadhi guna moukthika shobhi naase,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Whose gem studded ear stud hangs up to her neck,
Who has a lotus leaf like eye extending up to the ears,
And whose nose shines with a stud of pure gold and gem.

10. Lolaamba raji lalitha alaka jhala shobhe,
Malli naveena kalika nava kundha jale,
Balendu manjula kireeta virajamaane,
Balambike mai nidehi Krupakadaksham.

Please shower a merciful glance at me, Oh Balambika,
Who shines with her pretty dangling hair and her dress,
Whose hair is decorated with new buds of jasmine,
And who shines with a crown decorated with a crescent.

11. Balambike Maha Rajni Vaidyanatha priyeswari,
Pahi maam amba kripayaa thwath padam saranam gatha.

Oh great queen Balambika, the darling of Vaidyanatha,
Oh mother be kind enough to protect me,
Who has taken refuge at your feet.
--------------------------------------------------------------------------------------
Kamakshi Ashtaka

1. Mangala Roopini, mathi ani soolini, Manmatha paniyale,
Sangadam neekida saduthiyil vandhidum, sankarri soundhariye,
Kankana paniyan kani mukham kanda nal karpaga kaminiye,
Jaya jaya Sankari gouri krupakari, dukha nivarini Kamakshi.

Victory, victory to the wife of Shiva, the white goddess,
The merciful one, she who removes sorrows and the Goddess Kamakshi,
Who is in her auspicious form, who wears moon,
Who holds the trident, who holds the weapons of love god,
Who is the pretty Sankari who comes speedily to remove sorrow,
And who is the desire fulfilling passionate one and sees the god who wears bracelets.

2. Kan uru malar yena kadir oli katti, kathida vanthiduval,
Thaan uru thava oli thaar oil mathi oli thangiye veesiduval,
Maan uru vizhiyal madhavar mozhiyal, malaigal choodiduval,
Jaya jaya Sankari gouri krupakari, dukha nivarini Kamakshi.

Victory, victory to wife of Shiva, the white Goddess,
The merciful one, she who removes sorrows and the Goddess Kamakshi,
Like the sun showing its rays to the scented flower she will come to save you,
With abundant light of penance she would spread the moon light which she carries,
With her eyes prettier than deer and with divine language she will garland him.

3. Sankari Soundhari Chathrmukhan pothida sabhayil vandavale,
Pongu arimavinil ponnadi vaithu porundhida vandhavale,
Em kulam thazhaithida ezhil vadivudane ezhunda nal durgayala,
Jaya jaya Sankari gouri krupakari, dukha nivarini Kamakshi.

Victory, victory to wife of Shiva, the white Goddess,
The merciful one, she who removes sorrows and the Goddess Kamakshi,
Who is the pretty consort of Shiva who came due to the praise of Brahma in the assembly,
Who kept her golden feet on the rising lion and came to fight,
And is the good Durga Devi who came with a pretty form to protect my clan.

4. Dhana dhana dhandhana thavil oli muzhangida thanmani nee varuvay,
Kana kana Kankana kadir oli vesida kanmani nee varuvay,
Pana pana panpana parai oli koovida panmamani nee varuvay,
Jaya jaya Sankari gouri krupakari, dukha nivarini Kamakshi.

Victory, victory to wife of Shiva, the white Goddess,
The merciful one, she who removes sorrows and the Goddess Kamakshi,
With the dhan Dhan sound of the drum you who is cool, will come,
With the Kan Kan sound of the bangles you our darling, will come,
With Pan pan sound of the mega drum you who is poetic would come.

5. Panchami, Bhairavi Parvatha puthiri, Pancha nal paniyale,
Konjidum kumaranai, gunan migu vezhanai, kodutha nal kumariyale,
Sangadam theerthida samara athu cheytha nal Shakthi enum maye,
Jaya jaya Sankari gouri krupakari, dukha nivarini Kamakshi.

Victory, victory to wife of Shiva, the white Goddess,
The merciful one, she who removes sorrows and the Goddess Kamakshi,
Who is as pretty as the fifth crescent, who is fearful,
Who is the daughter of mountain and who has the five good approaches,
Who is the lady who gave us the lisping Subrahmanya and the very good Ganapathi,
And who is Maya Devi who is the power who fought the war to remove the sorrows.

6. Yenniya padi nee arulida varuvay, em kula deviyale,
Panniya cheyalin palan athu nalamay palgida aruliduvay,
Kannoli athanal karunaye katti kavalaigal theerpavale,
Jaya jaya Sankari gouri krupakari, dukha nivarini Kamakshi.

Victory, victory to wife of Shiva, the white Goddess,
The merciful one, she who removes sorrows and the Goddess Kamakshi,
Oh God of our clan please come to bless us as per our thought,
Oh goddess bless us so that we get proper results for work done,
Oh Goddess who removes our worries just by showing the light of your eye.

7. Idar tharu thollai ini mel illai, endru nee cholliduvay,
Sudar tharu amudhe, sruthigal kori sukhamathu thanthiduvay,
Padar tharu irulil parithiyay vandhu pasha vinai ottiduvay,
Jaya jaya Sankari gouri krupakari, dukha nivarini Kamakshi.

Victory, victory to wife of Shiva, the white Goddess,
The merciful one, she who removes sorrows and the Goddess Kamakshi,
When you are telling that things that create problems will not be there from now,
Oh nectar who gives light, give us pleasures by saying the Vedas,
And you would drive away my bondage of fate by coming as a Garuda

8. Jayajaya Bala Chamundeswari Jayajaya Sri Devi,
Jayajaya Durga Sri Parmeshwari Jayajaya Sridevi,
Jayajaya Jayanthi Mangala Kali Jayajaya Sridevi,
Jaya jaya Sankari gouri krupakari, dukha nivarini Kamakshi.

Victory, victory to wife of Shiva, the white Goddess,
The merciful one, she who removes sorrows and the Goddess Kamakshi,
Victory, victory to Bala Chamunda, victory, victory to Lakshmi,
Victory, victory to consort of Lord Shiva, victory, victory to Lakshmi,
Victory, victory to the victorious Kali who does good, Victory, Victory to Lakshmi.
--------------------------------------------------------------------------------------