செவ்வாய், 21 ஜனவரி, 2014

சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேஸ்வரம்

அவனிபாஜன பல்லவேஸ்வரம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சீயமங்கலம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது. வேலூரிலிருந்து செல்ல சேத்துப்பட்டு வழியாக தேசூர் அடைந்தவுடன் 2 கி.மீ. தொலைவில் சீயமங்கலம். விழுப்புரத்திலிருந்து செல்ல விரும்பினால், திண்டிவனம் சென்று காஞ்சிபுரம் சாலையில் 20 கி.மீ. பயணித்தால் தெள்ளாரினை அடையலாம். அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் சீயமங்கலம் நம்மை வரவேற்கும்.

எந்த தடத்தில் சென்றாலும் வழிநெடுக வறண்ட பூமி தான் என்றாலும் செல்லும் வழியெங்கும் நிலக்கடலை சாகுபடியில் செழித்த வயல்வெளிகளின் மரகத வண்ணம் மனதினை அள்ளும். அதையும் தாண்டி மரங்களற்ற பொட்டல்வெளி, வான்வெளியினையும், மலைமுகட்டினையும் தடையின்றிக் காணச் செய்து நமது பயணத்தினை இனிமையாக்கும்.

சீயமங்கலம், அவனிபாஜன குடைவரையை ஒன்றுமே தெரியாமல் 03.6.2010 அன்று ஒருமுறையும், கொஞ்சம் தெரிந்த பின் 20.6.2010 அன்று மறுமுறையும் சென்று வந்தேன். இவ்விரண்டு முறையும் நிகான் D90 மாடல் காமிராவை பயன்படுதினேன். குடைவரையின் குறை வெளிச்சத்தில் எடுத்த படங்கள் மணிரத்தினம் படங்கள் போல மங்கலாகத் தெரிந்ததால், கெனான் 7D காமிராவுக்கு மாறினேன். எனவே, 16.10.2010 அன்று 7D. கெனான் 5D Mark IIIக்கு மிகக்குறைந்த வெளிச்சமே போதும் என்று கேள்விப்பட்டதால் 19.9.2013 அன்று கடைசி தடவையாக 5D Mark III காமிராவைப் பயன்படுத்தினேன். (செயற்கை வெளிச்சத்தை (Flashgun) தவிர்ப்பது எனது முடிவு). ஒவ்வொரு முறையும் சென்று வரும் போது எதையோ பதிவு செய்யத் தவறி விட்டோமென்ற குற்ற உணர்வு கூட எனது நான்கு முறை படையெடுப்பிற்குக் காரணமாயிருக்கலாமோ என்னவோ!

சீயமங்கலம் குடைவரையை பார்க்க வேண்டும் என்று முதல் முறை திடீரென்றுதான் புறப்பட்டேன். பயணத்தை முன்னதாக திட்டமிடுவதென்பது எனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் எல்லா பயணங்களும் திடீர் பயணங்கள் தான். புத்தகங்களும் கேமராவும் எந்த நேரமும் என்னோடு பயணிக்கும். திட்டமிடக் கூடிய விஷயங்கள், குடவரையின் திசை, சூரிய வெளிச்சத்தின் திசை என்ன? கேமராவுடன் நான் எப்படி செயல்பட வேண்டும்....? என்பவை மட்டுமே. குடைவரை அல்லது கோவில் எந்த திசை நோக்கி அமைந்திருக்கிறதோ அதற்கேற்ப எனது பயணம் காலையிலா அல்லது மாலையிலா என்று மட்டும் முடிவு செய்வது வழக்கம்.

சீயமங்கலம் சிற்றூரின் அமைவிடத்தை தெரிவித்து அக்குடைவரையைக் காண உதவி செய்தவர் அவ்வூரில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் திரு. அன்பழகன் ஆவார். தனது ஊரில் சரித்திரப் பின்னணியுடைய கோவில் ஒன்று இருப்பதையும், அதைக் காண நான் வந்திருப்பதையும் அறிந்து மிகவும் வியப்பிலாழ்ந்தார். கோவில் அர்ச்சகரை வரவழைத்து கோவிலைத் திறக்க ஏற்பாடு செய்து ஒவ்வொரு முறையும் சலிப்பின்றி அத்தனை உதவிகளையும் செய்து தந்தார். டாக்டர் அவர்கள் கையொப்பமிட்டுத் தந்த "மகேந்திரர் குடைவரைகள்" நூலை வாங்கிப் படித்து வந்தார்.

குடைவரை என்றால் என்னவென்றே தெரியாமல் முதன் முதலில் கோவில் வளாகத்தினுள் நுழைந்தேன். காலடியில் பச்சைக் கம்பளம் விரித்தாற் போல் புல்தரை, எதிரே நீலவான பின்னணியில் மரகத உடனுறை தூணாண்டார் திருக்கோவில் வளாகம். நான்கு நிலை கோபுரம் கடந்து சென்றால் கண்முன்னே விரிவது அவனிபாஜன பல்லவேஸ்வர வளாகம்!!

சற்றேறக்குறைய ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதோ நான் நின்று கொண்டிருக்கும் இடம் எத்தனை சீரும் சிறப்புடன் விளங்கியிருக்கும்? சமண, சாக்கிய சமயங்களின் பிடியிலிருந்து விடுதலை கிடைத்த மகிழ்ச்சி மனதில் விரவ, தங்களூரில் எடுப்பிக்கப்பட்டுள்ள புதிய சிவாலயம் நோக்கிச் செல்லும் ஆடவர்கள்; கலகலவென சிரிப்பொலி கட்டியம் கூற, மேனியில் பலவண்ண பட்டாடை மின்ன, வகிடெடுத்து இறுக்கிப் பின்னிய நெடுங்கூந்தலில் செருகி வைத்த மலர்களின் மணம் மெல்லிய காற்றில் மிதந்து வர, விடையேறும் பாகர் பூசனைக்கு தங்கத்தட்டில் தாமரை மலர்களையும், தமது நெஞ்சில் நம்பியின் நினைவையும் சுமந்து செல்லும் அழகு மங்கையர், தங்கள் தாய்மார்களின் கரம் பற்றி நடை பயிலும் சிறார்கள் என எத்தனை வண்ணமயமாய் இவ்வளாகம் ஜொலித்திருக்கும்!!

அரண்மனை மாந்தரின் குதிரை பூட்டிய இரதங்களின் ஒலியும், விரைந்து செல்லும் குதிரைகளின் குளம்போசையும் அடிக்கடி பரபரப்பினை தெரிவிக்கும். பல்லவப் பேரரசர் மகேந்திரரும் தமது வெள்ளைப் புரவியில் கம்பீரமாய் ஆரோகணித்து வந்து இறங்கியிருப்பார் இல்லையா? அவருடன் நரசிம்ம பல்லவரும் உடன் வந்து தானிருப்பாரில்லையா? அந்நேரம் மக்கள் விண்ணை முட்டும்படி எழுப்பிய வாழ்த்தொலி இதோ என் காதில் ஒலிக்கிறது. நான் நிற்கும் இந்த பூமி மட்டுமல்ல... இந்த வளாகம் முழுக்க அப்பேரறிவாளரின் பாதம் பட்டிருக்கும் இல்லையா?

சரி... மீண்டும் தற்காலத்திற்கே திரும்பி வருவோம்! இவ்வளாகம், வடமேற்கில் நுழைவாயில் கோபுரத்தையொட்டி ஒரு மண்டபம், வடபுறம் மேற்குப் பார்வையாய் இரண்டு சிறிய கோவில்கள், தென்புறம் பெரிய பாறையின் மீது அமைந்த சிறிய கோவில், மையப்பகுதியில் பலிமேடை, கொடித்தளம், மற்றும் நந்தி மண்டபத்தினை முன்னதாகக் கொண்டு மேற்குப் பார்வையாய் அவனிபாஜன பல்லவேஸ்வரம். தென்புறப் பாறை மீதேறினால் மேற்கில் ஒரு பேரேரி அமைந்திருப்பதைக் கண்டேன்.

வெளிமண்டபத்தைத் தாண்டி கோவிலுக்குள் சென்றால், அரை இருளினூடே திருநிலை அழகியின் மண்டபம். அதற்கு அடுத்து அடவி மண்டபம். குகைக்கோவில் என்றார்கள், இருள் இருக்கும். சரி... குகையைக் காணோமே என்ற வினாவுடன் வடபுறத்துப் படியேறி முக மண்டபத்தை அடைந்த பின்னர் தான் நான் ஒரு குகைக்கோவிலின் முன் நின்று கொண்டிருக்கிறேன் என்று புரிந்தது. தனியே நிற்கும் குன்றொன்றின் மேற்குப்புறச் சரிவின் கீழ்ப்பகுதியினைக் குடைவித்து அழகியதொரு கோவில் எடுப்பிக்கப்பட்டுள்ளது. குகைக்கோவிலின் முன்புறத்தில் மூன்று பக்கங்களிலும் மண்டபம் ஒன்று எழுப்பியுள்ளார்கள் என்று அறிந்து கொண்டேன்.

கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டம் என மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும் குடைவரை முகப்பில் பெரிய அளவில் இரண்டு முழுத்தூண்களும், பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு அரைத்தூண்களின் இரு மருங்கிலும் உள்ள கோட்டங்களில் வீரர்களின் அழகிய சிற்பம் காணப்படுகிறது.

அர்த்தமண்டபத்திலிருந்து கருவறையை அடைய பக்கவாட்டு அணைவுடன் சிறிய படிக்கட்டுகள். கருவறையின் இரு புறத்திலும் வாயிற்காவலர்கள் நின்றிருக்க கருவறையில் லிங்கத் திருமேனி. வாயிற்காவலர்களின் உடல்மொழி அதிசயமானது. அவர்களின் முகபாவங்களில் உயிர் மின்னியதைக் காண முடிந்தது. மகேந்திரர் உண்மையிலேயே அனுபவித்துதான் இக்குடவரையை அகழ்ந்திருக்க வேண்டும்.

நெடுங்காலமாக என்னுள் தங்கியிருந்த ஒரு கேள்வி இது. ஆதியும் அந்தமும் இல்லாத சிவத்தின் ஆடலுக்கு ஆனந்த தாண்டவம் (நடராஜ வடிவம்) என்றழைக்கப்படும் அந்த அழகிய வடிவத்தினை முதன் முதலில் எவர் அளித்திருப்பார்கள்?

இதற்குச் சரியான விடை அவனிபாஜனத்தில் கிடைத்தது. முகமண்டபத்தின் தென்புறத்து அரைத்தூணில் உள்ள சிறிய கோட்டத்தில் களி நடனம் புரியும் சிவபெருமானின் அற்புதமான சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காணப்படும் அனைத்து ஆனந்த தாண்டவ வடிவங்களுக்கும் இந்தச் சிற்பம்தான் முன்னோடி. இங்குதான் அது சிற்ப வடிவில் முதன்முதலில் பதிவாகியிருக்கிறது என்று டாக்டர் கலைக்கோவன் மூலம் அறிந்து கொண்ட போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மற்றொரு அரைத்தூணில் சிறிய கோட்டத்தில் இருக்கும் நந்தியணுக்கரின் (ரிஷபாந்திகர்) சிற்பமும் மிக அழகானதே. இதில் இறைவன் மற்றும் தேவியின் உடல்மொழி அலாதியானது. மஹேந்திர பல்லவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் விருதுப் பெயர்கள் அனைத்துமே அர்த்தமுள்ளவைதான்!

ஊருக்கு வெளியே நிசப்தமாய் கோவில் வளாகம். மேற்குப் புறத்தில் அழகிய குன்றுகள். கோயிலின் அருகாமையில் பரந்து விரியும் ஏரி. இத்தகைய இனிமையான இடத்தினைத் தனது குடைவரைக்காகத் தேர்வு செய்த மாமன்னர் மகேந்திரர் சிறந்த வடிவமைப்பு, திட்டமிடல், திட்டமிட்டவற்றைச் செயல்படுத்தும் மனோதிடம், கடுமையான உழைப்பு ஆகிய சிறப்பியல்களால் காலம் கடந்து நிற்கின்றார். அவரது காலத்தில் வளர்ந்து கொண்டு வந்த பல்லவப் பேரரசினை பகைவரிடமிருந்து காப்பதோடன்றி விரிவாக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இத்தகைய கலைப்பணிகள் எப்படி சாத்தியமானது என்னும் பெருவியப்போடு கோயிலை விட்டு வெளி வந்தேன்.

திருக்கோயில் வெளிப்புறம்:திரும்பி வருகையில் போதிய வெளிச்சமின்றி மோசமாகப் பராமரிக்கப்பட்டு வரும் அழுக்கடைந்த ஆலய வளாகம் மனதில் ஒரு நெருடலாய் நிழலாடி மனது வலித்தது. முடிந்தவரை பராமரிப்புப் பணிகளைச் செய்து வரும் அர்ச்சகரும், இந்தியத் தொல்பொருள் அளவீட்டுத்துறையும், அரசும் மட்டிலும் என்ன செய்திட இயலும்? தமிழர் ஒரு காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை அவர்தம் கலாச்சாரம் பேசும் சிற்பக் களஞ்சியங்களைக் கொண்டு விளங்கும் கோயில் வளாகங்களை விளைந்த நெல்லை உலர வைக்கும் களமாகவும், சேமிப்புக் கிடங்குகளாகவும், ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் நிலமாகவும் மாற்றிந் தானம் செய்து விட்டு,

மெல்லப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்துப் – பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்ல....

மாக்கள் பின்னே மக்கள் செல்லத் துவங்கி விட்ட நிலை பெரும் கவலையளிக்கிறது. எங்கெங்கோ சுற்றியலைவதை விட்டுவிட்டுப் போற்றிப் புரக்கப்பட வேண்டிய சரித்திரப் பின்னணி பெற்ற கோயில்களை நோக்கி மக்கள் தங்களது உள்முகப் பயணத்தினை துவங்கினால் மட்டுமே இந்த அவல நிலையினை மாறும்.

மாறவேண்டும்.
(6 photos)
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

ஏகாம்பரேஸ்வரர் கோயில்
:தென்னிந்தியாவின் உயரமான கோபுரங்களில் ஒன்றாக ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் திகழ்கிறது. கோபுரத்தின் உயரம் 57 மீட்டர்.தொன்மைமிக்க இந்தக் கோயில் பல்லவ, சோழ மற்றும் விஜயநகர அரசர்களால்
புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள பிருத்வி லிங்கம் தென்னிந்தியாவின்
பஞ்சலிங்கங்களில் ஒன்று என்ற பெருமையுடையது. விசாலமான ஐந்து தாழ்வாரங்களும் ஆயிரங்கால் மண்டபமும் அழகின் சிறப்பு. இத்தலத்து
அம்பாள், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளே இங்கு பிரதானம். ஆணும், பெண்ணும் சமம் என்பதை சிவன், அர்த்தநாரீஸ்வரஅம்சம் மூலமாக உணர்த்தியதைப்போல, இவள் ஆவுடையார் மீது நின்றபடி, சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். இவளது பாதத்தின் முன்பு ஸ்ரீசக்கரம் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

கந்த கோட்டம் சுப்ரமண்யசாமி கோயில்


காஞ்சிநகரம் புராணத்தில் இடம்பெற சுப்ரமணியசாமி கோயிலும் ஒரு காரணம். சிவன், பார்வதி இருவருக்கும் நடுவே முருகன் அமர்ந்திருப்பதுபோல ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலுக்கும் காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவே இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இப்போது காணப்படும் இக்கோயில்
1915இல் கட்டப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

கைலாசநாதர் கோயில்


பல காலகட்டங்களையும் சேர்ந்த கோயில்களில் சிறப்பு வாய்ந்த ஒன்று தான் கைலாசநாதர் கோயில். இது காஞ்சிபுரம் நகர மத்தியிலிருந்து ஏறத்தாழஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. சுவரோவியங்கள், சிற்பங்கள் மற்றும் கட்டுமானக் கலை ஆகியவற்றால் முக்கியத்துவம் பெற்ற கோயில். கி.பி.8 ஆம் நூற்றாண்டில் பல்லவப் பேரரசரால் ராஜசிம்ம பல்லவன் கட்டிய இக்கோயிலை பின்னர் அவரது வழித்தோன்றலான மகேந்திர பல்லவன்மறுசீரமைப்பு செய்தார். மூலவரான கைலாச நாதரைச் சுற்றி 58 லிங்கங்கள்அமைக்கபட்டுள்ளன. இறையருள் குடியிருக்கும் கலைக்கோயில் இது.காஞ்சி சென்றால் கைலாசநாதரைக் கைவிடாதீர்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

ஸ்ரீ வைகுந்த பெருமாள் கோயில்


சிற்பங்கள் செழீத்திருக்கும் கற்கோயில் காஞ்சியின் பெருமை. வரலாற்றில் நிலைக்கும் விதமாக நந்திவர்வ பல்லவன் தலைசிறந்த சிற்பிகளைக்கொண்டு செதுக்கிய கோயில். பிரதான பகுதிகளிலிருந்து சற்று உள்ளடங்கிய ஒரு குறுகிய பாதையின் இறுதியில் இந்த கலைக்கோயில் உள்ளது.வைகுந்த ஏகாதசி இரவில் பக்தர்கள் வழிபடும் முக்கியத்துவம் பெற்றது. இது இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில்பாதுகாக்கப்பட்டு வருகிறது. வைணவ ஆலயம் என்பதால் மதியம் மூடப்பட்டிருக்கும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

காமாட்சி அம்மன் கோயில்


காஞ்சி நகருக்குப் பெருமைதரும் அம்மன் கோயில். அருள் வழங்கும் அருளாலயம். இங்கு அம்மனின் முன்புள்ள ஸ்ரீ சக்கரத்தையே அம்பிகையாக பாவித்து வழிபடுவது மரவு. ஆதி சங்கரர் கோயில் காமாட்சி அம்மன் பின் புரம் அமைந்துள்ளது. இந்தியாவின் மூன்று முக்கியத் தலங்களில் ஒன்றான இது, கோடிமன்னகர்களால் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் மையப்பகுதியில் தங்கக் கோபுரம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு பங்குனி மாதம் 9 ஆவது சந்திர நாளில் நடக்கும் ரதோற்சவம் பிரசித்திப்பெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

வரதராஜப் பெருமாள் கோயில்

காஞ்சி நகரின் கடைசியில் ஹஸ்தகிரி குன்றில் அமைந்துள்ள இந்தக் கோயில் பிரும்மாண்ட தோற்றம் கொண்டது. கலைநுட்பம் செழித்த நூறுதூண்கள் நிறைந்த மண்டபம் ஒன்றும் விஜயநகரப் பேரரசு காலத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வேலைப்பாடுமிக்கவளையங்கள் சங்கிலித் தொடராக நான்கு மூலைகளிலும் தொடர்வது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம். இறையருள் தரிசனமும் கலையெழில் தரிசனமும் கிடைக்கும் பெருமாள் திருத்தலம். வெகு நேர்த்தியான ரதி-மன்மதன் குதிரை வீரர்கள் ஆகிய சிற்பங்கள் அணிகலன்களைப்போலக்
காட்சியளிக்கின்றன. இங்கு வைகாசியில் நிகழும் கருடோத்சவம் காண பக்தர்கள் கூட்டம் திரளும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

மதுராந்தகம் ராமர் கோயில்

ஏரியைக் காத்த ராமர் இவர். மதுராந்தகம் ஏரிக்கரையின் கீழே இந்தக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீராமர், சீதாப்பிராட்டி, இலக்குவன் ஆகிய மூவரும் அருள்பாலிக்கிறார்கள். ஏரியைக் காத்த ராமரின் மற்றொரு திருவுருவமான கருணாகரமூர்த்தியும் இங்கு உருக்கொண்டுள்ளார். சென்னையிலிருந்து தெற்கே செங்கல்பட்டுக்கும் விழுப்புரத்திற்கும் இடையே மதுராந்தகம் உள்ளது.
ஆரத்தி ஏன் எடுக்கப்படுகிறது தெரியுமா..?

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூ றுகின்றோம்.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.
சதுரங்கப்பட்டினம்{சட்ராஸ்}கல்பாக்கம் அருகில் உள்ள மலை மண்டல பெருமாள் கோவில்

http://www.youtube.com/watch?v=RMCbPMgwU1k&feature=share
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 
 
 சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் 
ஆச்சர்யங்கள் இவைகள் தான்." சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்." (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
(19 photos)